- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
6
“ஹேய் மொழி என்னாச்சி? ஏய் எழுந்திருமா? ஹெல்ப்” என்று சத்தமிட்டபடியே வீட்டினுள் அவளைத் தூக்கிச் செல்ல அப்பொழுதுதான் அவளின் அத்தை காமாட்சியை அழைத்து வந்தான் பிரஷாந்த்.
“ராஜா என்னாச்சி இந்தப் பொண்ணுக்கு?” கேள்வியுடன் மகனைத் தொடர்ந்த தாய்க்குப் பின்..
“திருமா... திரு என்னாச்சிடா?” என காமாட்சி கண்கலங்கியபடி வர அங்கிருந்தோருக்குள் பரபரப்புடன் ‘யார் இவர்கள்?’ என்ற கேள்வியும்.
தனி அறையில் படுக்கப் போட்டவன் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி முகத்தில் தெளித்தான். அவளிடம் சிறிது அசைவு தெரிய மற்றவர்களைச் சற்று விலகி நிற்கச் சொல்லி காற்றோட்டமாக விட... கண்விழித்தவள் விழிகளோ யாரையோ தேடியலைந்தது.
“திரு என்னாச்சிமா?” என தலையை வருடிவிட,
“அத்... அத்தை நான் பார்த்தேன்.”
“என்னமா பார்த்த?”
“என்னோட இளா அத்தானைப் பார்த்தேன்” என்றாள் “திருமொழியாக மாறியிருந்த மங்கையர்கரசி!”
“என்னமா சொல்ற? நீ சொல்றது நிஜமா?”
“ஆமா அத்தை. இளா அத்தான் வந்துட்டாங்க. என்னோட லட்சியம் கண்டிப்பா நிறைவேறும். அவங்களை எங்க அத்தை?” அவளின் உயிர் தேடி அலைந்தது அவளின் கண்கள்.
“அப்படி யாரும் வரலமா.”
“அத்தை அது யார் இளா? எனக்குமே அந்தப் பெயர் பரிச்சயமா தோணுது” என்றான் பிரஷாந்த்.
“இளா இவளோட முறைப்பையன். அவனுக்காகத்தான் ரொம்ப காலமா காத்திருக்கா” என்றார் அவர்.
தன் பெயரைக் கேட்டதும் மயங்கியவள் எப்பொழுது இளா என்ற பெயரை உச்சரித்தாளோ அப்போதிருந்த அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் கதிர். அவள் கண்களின் சுழற்சியில்தான் அவனும் நிற்கிறான். இருப்பினும் அவனைப் பார்க்கவில்லை அவளின் கண்கள். ஏனோ மனம் வேதனை கொள்ள கதிர் என்றழைக்காத அவளின் இளாவில் ஏதோ இருப்பதாய் உணர்ந்தான்.
அது அவளின் முறைப்பையன் பெயர் என்றதும் ‘அவளின் முறைப்பையன் பெயர் என்னில் பாதியா? அப்படியானால் நான் அவளின் பாதியில்லையா?’ கண்கள் கலங்குவது போல் தோன்ற வெளியே வந்துவிட்டான்.
ஆனால் சிவகாமி அவளைதான் பார்த்திருந்தார். அவள் ‘இளா’ என்றது தன் மகனைத்தான் என்று சந்தோஷப்பட்டவருக்கு அவளின் அடுத்தடுத்த வார்த்தைகள் குழப்பத்தையே கொடுத்தது. இவள் தேடும் இளா தன் பையன் இல்லையென்று உணர்ந்தபோது மகனின் கனவுகள்... அதையும் தாண்டி ஏதோ இருக்கிறதென்றது. அதேநேரம் கணவனின் தமிழ்நாட்டு மறுப்புகள் நினைவு வர அனைத்தையும் ஆராயத்தொடங்கியது மனது.
“அத்தை உங்க பையனைக் கூப்பிடுங்க. நீங்க கூப்பிட்டா வருவாங்க” என காமாட்சியை உலுக்கினாள்.
“இத்தனை வருஷம் உரிமைப்பட்ட நீ கூப்பிட்டே வரலன்னும்போது, நான் எப்படிமா?”
“எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை. இளா அத்தான் சீக்கிரமே வருவாங்க. என் லட்சியமும் நிறைவேறும்” என்றவள் முகத்தினில் திடீர் பளபளப்பு.
“அக்கா” என்று அருகில் வந்த பிரஷாந்தை யோசனையாய் பார்த்தவள், அதன் பின்னே சூழ்நிலை உணர்ந்து சுற்றிலும் பார்த்து, “சாரிடா தம்பி. கல்யாண வீட்ல வந்து நான்.. சாரிடா” என்று மன்னிப்பு கேட்டாள்.
“ப்ச்.. அதை எதுக்கு பேசுற. விடுக்கா எனக்கு உன் ஹெல்த் தான் முக்கியம். உன்னை அப்படிப் பார்த்ததும் எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலக்கா. சரியா சாப்பிடலையாக்கா. இரு அம்மாகிட்டக் கேட்கிறேன்” என்று எழப்போனவன் கைபிடித்துத் தடுத்தாள்.
“அம்மான்னும் போதே என்னை எப்படி பட்டினி போடுவாங்கன்னு நினைக்கலாம்? தப்புடா தம்பி. அம்மான்ற உறவு இல்லாத என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும். அம்மா எவ்வளவு முக்கிய...” தொண்டைக்குள் அடைத்த துக்கம் கேவலாய் வர கண்கள் அதன் வலியைப் பிரதிபலித்தது.
“திருமா!”
“உண்மைதான அத்தை. கண் முன்னாடி... இப்ப நினைச்சாலும் என் இரத்தம்லாம் கொதிக்குது அத்தை. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். அந்தத் தாயும் பதில் சொல்லணும்” என்றவளின் வலிகள் எல்லாம் வெறியாய் மாறியதோ!
திருமொழியைச் சுற்றிலும் புரியாத நிறைய மர்மங்கள் இருப்பது புரிந்தது சிவகாமிக்கு. ஒன்று மட்டும் புரியவில்லை அவருக்கு. அவர்களின் பிரச்சனைக்கும் தன் மகனுக்கும் என்ன சம்பந்தமென்று. இருப்பினும் அவள்மேல் ஒரு பரிவு வரத்தான் செய்தது. மெல்ல மகனைத் தேடி வந்தவர் அவனைக் கண்டதும் தன் குழப்பம் மறந்தவராய் “என்னடா ராஜா ரொம்ப குழப்பமாயிருக்கா?” என கேட்டார்.
“ஆமாம்மா ரொம்பவே. நல்லாதான்ம்மா பேசிட்டிருந்தா. என்ன நினைச்சாளோ பெயரைக் கேட்டா... இளங்கதிர்னு சொன்னதும் அப்படியே மயங்கிட்டா. இப்ப என்னைதான் இளா கூப்பிடறாளோன்னு சந்தோஷப்பட்டா, அது அவள் அத்தான் பெயர்னு சொல்றா. என்னைப் பார்க்கக்கூட இல்லம்மா. என்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியல. எதோ ஒரு மர்மக்கதைக்குள்ள மாட்டிட்டு முழக்கிற மாதிரியிருக்கு.”
“நான் ஒண்ணு சொல்லவா கதிர்.”
“ம்மா...”
“அந்தப் பொண்ணோட இளா இறந்திருக்கணும். அதை ஏத்துக்காத மனசு அவன் வருவான்ற நம்பிக்கையில் இருக்கலாம். நிஷாந்த் அம்மாகிட்ட பேசினவரைக்கும் அவங்களுக்கு இவளைப்பற்றி முழுசா தெரியலைன்னாலும், திருவும் அவ அத்தையும் ரொம்ப காலமா தனியாதான் இருக்கிறாங்கன்னு தெரியுது. சொந்தம்னு யாரும் இல்லன்னு சொல்றாங்க. நேத்து நைட் கூட கனவுல என்னென்னவோ உளறியிருக்கா. சில நேரம் அமைதி! சில நேரம் ஆர்ப்பரிப்பு! மொத்தத்துல அவ மனசுல எதோ வெளிய சொல்லமுடியா பாரம் இருக்கு. அவளோட கண்ணுல ஒரு அலைப்புறுதல் இருக்கு. அதை இறக்கி வைக்காம அவளால வேற எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. உன்னையும் சேர்த்துதான் சொல்றேன். அவளோட அத்தைகிட்ட தனியா பேசிப்பார்க்கிறேன்.”
“ம்... சரிம்மா. என்ன பிரச்சனைனாலும் சரிபண்ணிடலாம்னு சொல்லுங்க.”
“ராஜா ஒருவேளை அவள் அத்தான் வந்துட்டா.. நீ?”
“நா..நானா.. அவளைப் பார்க்கலம்மா” என்று திணறியவன். “அம்மா.. அப்ப என் கனவு பலிக்காதா?” மனம் எதையோ இழந்தாற்போலிருந்தது கதிருக்கு.
மகனை உணர்ந்தவர், “நல்லதாவே நினைப்போம் கதிர். நல்ல வேளை உங்கப்பா வெளில போயிருக்காங்க. இல்லன்னா சிவா பேக்கப்னு சொல்லிருப்பாங்க. சரியான...”
“ஹலோ அன்னையாரே போதும். தந்தூரி பாவம். அவருக்குள்ள உள்ளதைச் சொல்ல முடியாதப்பவும் நமக்காக கூடவே இருக்கிறாரே அதுக்கே சந்தோஷப்படணும்.”
“உன் அப்பாவை எதுவும் சொல்லிரக்கூடாதே. சீன் மட்டும்தான் அம்மா பிள்ளைன்னு. பாசம்லாம் உன் அப்பா மேலதான்” என்றார் முறைப்பாய். மகனின் சிரிப்பில் “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல. சரி உள்ள வா” என்றார்.
“மொழி இப்ப எப்படியிருக்கு?”
“சரியாகிருச்சி சார்.”
“ஓகே. நிஷா யாருன்னு கேட்டீங்கள்ல? இதுதான் நிஷா ஃபுல் நேம் நிஷாந்த்” என்று தன் பி.ஏவை அறிமுகப்படுத்தினான்.
“நான் யார்னு கேட்கலையே” என்று முறுக்கினாலும் “அண்ணா பெயர் நிஷாந்த் தெரியாது. சாரிண்ணா” என்றாள் நிஷாந்திடம்.
“பரவாயில்லமா. அண்ணன்னு ஆனதுக்கப்புறம் பெயர் எப்படி கேட்கத்தோணும்.”
‘ம்...’ என்று “உன் பெயர் என்னடா தம்பி?” என்றாள்.
சிரித்தபடி “பிரஷாந்த்” என்றான்.
“இவன் பெயரே இப்பதான் தெரியுமா?” என ஆச்சர்யமானான் கதிர்.
“அ..அது ஆமாம் சார்” என சின்னதாக வெட்கப்பட்டு “பார்த்ததிலிருந்து தம்பிப்பையா கூப்பிட்டே பழகிட்டேனா, அதான் பெயர் கேட்கத் தோணல. அப்படியே உங்க பெயரும் சொல்லிருங்க சார். இல்ல அதுக்குத் தனியா கலாட்டா செய்யப்போறீங்க?”
“என் பெயரைச் சொன்னேனேமா” என்றவனுக்குள் குழப்பமே.
“ஓ... எப்ப சொன்னீங்க?” என்றாள் கேள்வியாய்.
“அதைக் கேட்டதும்தான்மா மயங்கிட்ட” என்றான் அவள் முகம் பார்த்து.
“ஓ... அவ்வளவு மோசமாகவா சார் இருந்தது உங்க பெயர்?”
“மோசம்லாம் இல்லமா. கதிர்” என்றான் இளாவை எடுத்து. அவனுக்குப் புரிந்தது இளா என்ற பெயரைக் கேட்டதால்தான் மயங்கிவிட்டாளென்று.
சிறிது நேரத்தில் வீட்டில், ஸ்பீக்கர் ஒரு பக்கம், உறவினர்கள் ஒரு பக்கமென்று பிஸியாக நிச்சயத்திற்கு பெண் வீட்டிற்கு அனைவரும் செல்ல திருமொழியின் மயக்கம் கண்டுகொள்ளப்படாமலே விடப்பட்டது.
நிச்சயத்தாம்பூலம் மாற்றும் பொழுது “ஏன் தாயே? பத்திரிக்கை அடிச்ச பிறகு நிச்சயம் பண்றாங்க? எப்பவும் நிச்சயம் முடிஞ்சிதான பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் பண்ணுவாங்க. என்ன லாஜிக் இது?” என்றான்.
“இதெல்லாம் கிராமப்புறங்கள்ல சகஜம்டா ராஜா. இதான் பொண்ணுன்னு தெரிஞ்சதும் முதல்ல ஜாதகம் பார்த்து, அதுல எல்லா பொருத்தமும் பொருந்தினா, முறையா பெண் பார்க்க பெண் வீட்டுக்குப்போய் இவளை எங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு பூ வச்சிருவாங்க. அதுக்கப்புறம் நிச்சயம் தனியா வைக்கலாமா, கல்யாணத்தோட வைக்கலாமா கேட்டு நிச்சயம் கல்யாணத்தோடனா ஜோசியரைக் கேட்டு டேட் பிக்ஸ் பண்ணி.. இதோ பண்றாங்களே இப்படி செய்திருவாங்க.”
“இன்னொரு காரணம்னு பார்த்தா பையனுக்கோ பொண்ணுக்கோ டைம் கிடைக்காமலும் இருக்கலாம். இதே சிட்டிக்குள்ளனா நாம ரிஷப்சன்னு பொண்ணையும் மாப்பிள்ளையையும் சேர்த்து நிற்க வச்சிருவோம். கிராமங்கள்ல நிச்சயம் முடிஞ்சதும் நிற்க வச்சி விபூதி பூசி ஆசீர்வாதம் பண்ணுவாங்க.”
“அப்ப எனக்கும் மொழிக்கும் இப்படியே பண்ணலாம்மா.”
“பண்ணலாமே! அவள் சம்மதிச்சா?”
“அவள் சம்மதிச்சா இப்பவே கூட பண்ணிடலாம்மா. எங்க...” என பெருமூச்சுவிட்டான்.
“சிவா அங்க என்ன குசுகுசுன்னு சத்தம்?” என்ற குருவின் அதட்டலில்...
“ஒண்ணுமில்லங்க மாமா. சும்மா பேசிட்டிருந்தேன்” என்று ஒரு காமெடியைப் போட... அருகிலிருந்தவர்கள் சிரித்ததும் அவரின் முறைப்பைப் பார்த்து வாய் மூடியவர்கள்தான் அதன்பின் திறக்கவேயில்லை.
இரவு பெண் வீட்டில் உணவு முடித்து மற்றவர்கள் பையன் வீடு செல்ல, இரவு லாட்ஜ் சென்று காலை வருவதாகச் சொல்லி குருமூர்த்தி குடும்பத்தினர் சென்றார்கள்.
அவ்விரவில் கனவுகளுக்கும் பஞ்சமில்லாமல் போனதோ!
காலை நான்கு மணிக்கெல்லாம் திருமண விட்டில் மேளச்சத்தம் கேட்க, சின்னச்சின்ன ஆர்ப்பாட்டங்களுடன் விடியல் தன்னுடைய ஒளியை வெளிப்படுத்தியது.
தனது திருமணத்திற்கென்று நிஷாந்த் தன் தாயுடன் சேர்த்து, திருமொழிக்கும் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்திருந்தான். அதனுடன் நகையும் சேர்த்து அவளிடம் கொடுத்த பத்மினியிடம் திருமொழி மறுக்க... “நீ அம்மா அண்ணன்னு பாசத்துலதான கூப்பிடுற?” என்றார்.
“ஏன்மா இப்படி?” என்றாள் வருத்தமாக.
“அப்ப இதைக் கட்டிக்கோ. இல்லன்னா சின்னவனைக் கூப்பிடுவேன்.”
“ஹான்! அவன் வந்தா எனக்கென்ன பயமா?”
“என்ன சத்தம் இங்க? என்னைத் தேடுனீங்களா என்ன?”
“ஆமாடா. உன் அக்காவுக்கு நாம வாங்கிக்கொடுத்தப் புடவை வேண்டாமாம். நகை குடுத்தா அதையும் போடமாட்டாளாம்.”
“எதுக்குடா தம்பிப்பையா இதெல்லாம்? என்கிட்ட இருக்கிறதே போதும்டா. நானும் அத்தையும்தான் வீட்ல. தோட்டத்துல வருமானம் வருது. அதனால தேவைக்கு அதிகமாகவே இருக்குடா.”
“நான் உன்கிட்ட இல்லன்னு எப்ப சொன்னேன். இது அண்ணன் கல்யாணத்துக்காக தங்கைக்குக் கொடுக்கிறது. மறுத்தா அண்ணன் மனசுதான் கஷ்டப்படும். உனக்கு அதுதான் வேணுமா?”
“ப்ச்... என்னடா. அப்படியே இருந்தாலும் இந்தப் புடவைக்கு ஜாக்கெட் தைக்கலைல்ல. அதனால உன்கிட்டயே இருக்கட்டும்” என எஸ்கேப்பாக.
“ஹேய் யக்கா! நீ இப்படிலாம் செய்வன்னுதான் உனக்கேத் தெரியாம அத்தையைப் பிடிச்சி நீ ரெகுலரா தைக்கிற இடத்துல குடுத்து இப்போ உள்ள ட்ரெண்ட்கு ஏத்தமாதிரி தைச்சி, வாங்கிட்டே வந்தாச்சி. அவாய்ட் பண்ணக் காரணம்லாம் தேடியலையாத ஓகே.”
“ஏன்டா என்னை இம்சை பண்ற. புடவை சரிடா.. நகை எதுக்கு?”
“அது பத்துவோட ஆசை” என்று தாயைக் காண்பித்தான்.
“உன்னை... முதுகுல போட்டா தெரியும்” என்று பத்மினி அவனை அடிக்க வர...
“கோவிச்சிக்காதீங்க பத்து” என தாயைக் கொஞ்சி நகையைத் திருவின் கையில் திணித்து, நைசாக தாயுடன் நழுவிவிட்டான் பிரஷாந்த்.
ஆள் பாதி! ஆடை பாதி என்பார்கள். இரண்டு அழகும் சேர்ந்து மங்கையர்கரசியை மங்கையர்கு எல்லாம் அரசியாக்கிக் காண்பித்ததோ!
“ஹேய் மொழி என்னாச்சி? ஏய் எழுந்திருமா? ஹெல்ப்” என்று சத்தமிட்டபடியே வீட்டினுள் அவளைத் தூக்கிச் செல்ல அப்பொழுதுதான் அவளின் அத்தை காமாட்சியை அழைத்து வந்தான் பிரஷாந்த்.
“ராஜா என்னாச்சி இந்தப் பொண்ணுக்கு?” கேள்வியுடன் மகனைத் தொடர்ந்த தாய்க்குப் பின்..
“திருமா... திரு என்னாச்சிடா?” என காமாட்சி கண்கலங்கியபடி வர அங்கிருந்தோருக்குள் பரபரப்புடன் ‘யார் இவர்கள்?’ என்ற கேள்வியும்.
தனி அறையில் படுக்கப் போட்டவன் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி முகத்தில் தெளித்தான். அவளிடம் சிறிது அசைவு தெரிய மற்றவர்களைச் சற்று விலகி நிற்கச் சொல்லி காற்றோட்டமாக விட... கண்விழித்தவள் விழிகளோ யாரையோ தேடியலைந்தது.
“திரு என்னாச்சிமா?” என தலையை வருடிவிட,
“அத்... அத்தை நான் பார்த்தேன்.”
“என்னமா பார்த்த?”
“என்னோட இளா அத்தானைப் பார்த்தேன்” என்றாள் “திருமொழியாக மாறியிருந்த மங்கையர்கரசி!”
“என்னமா சொல்ற? நீ சொல்றது நிஜமா?”
“ஆமா அத்தை. இளா அத்தான் வந்துட்டாங்க. என்னோட லட்சியம் கண்டிப்பா நிறைவேறும். அவங்களை எங்க அத்தை?” அவளின் உயிர் தேடி அலைந்தது அவளின் கண்கள்.
“அப்படி யாரும் வரலமா.”
“அத்தை அது யார் இளா? எனக்குமே அந்தப் பெயர் பரிச்சயமா தோணுது” என்றான் பிரஷாந்த்.
“இளா இவளோட முறைப்பையன். அவனுக்காகத்தான் ரொம்ப காலமா காத்திருக்கா” என்றார் அவர்.
தன் பெயரைக் கேட்டதும் மயங்கியவள் எப்பொழுது இளா என்ற பெயரை உச்சரித்தாளோ அப்போதிருந்த அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் கதிர். அவள் கண்களின் சுழற்சியில்தான் அவனும் நிற்கிறான். இருப்பினும் அவனைப் பார்க்கவில்லை அவளின் கண்கள். ஏனோ மனம் வேதனை கொள்ள கதிர் என்றழைக்காத அவளின் இளாவில் ஏதோ இருப்பதாய் உணர்ந்தான்.
அது அவளின் முறைப்பையன் பெயர் என்றதும் ‘அவளின் முறைப்பையன் பெயர் என்னில் பாதியா? அப்படியானால் நான் அவளின் பாதியில்லையா?’ கண்கள் கலங்குவது போல் தோன்ற வெளியே வந்துவிட்டான்.
ஆனால் சிவகாமி அவளைதான் பார்த்திருந்தார். அவள் ‘இளா’ என்றது தன் மகனைத்தான் என்று சந்தோஷப்பட்டவருக்கு அவளின் அடுத்தடுத்த வார்த்தைகள் குழப்பத்தையே கொடுத்தது. இவள் தேடும் இளா தன் பையன் இல்லையென்று உணர்ந்தபோது மகனின் கனவுகள்... அதையும் தாண்டி ஏதோ இருக்கிறதென்றது. அதேநேரம் கணவனின் தமிழ்நாட்டு மறுப்புகள் நினைவு வர அனைத்தையும் ஆராயத்தொடங்கியது மனது.
“அத்தை உங்க பையனைக் கூப்பிடுங்க. நீங்க கூப்பிட்டா வருவாங்க” என காமாட்சியை உலுக்கினாள்.
“இத்தனை வருஷம் உரிமைப்பட்ட நீ கூப்பிட்டே வரலன்னும்போது, நான் எப்படிமா?”
“எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை. இளா அத்தான் சீக்கிரமே வருவாங்க. என் லட்சியமும் நிறைவேறும்” என்றவள் முகத்தினில் திடீர் பளபளப்பு.
“அக்கா” என்று அருகில் வந்த பிரஷாந்தை யோசனையாய் பார்த்தவள், அதன் பின்னே சூழ்நிலை உணர்ந்து சுற்றிலும் பார்த்து, “சாரிடா தம்பி. கல்யாண வீட்ல வந்து நான்.. சாரிடா” என்று மன்னிப்பு கேட்டாள்.
“ப்ச்.. அதை எதுக்கு பேசுற. விடுக்கா எனக்கு உன் ஹெல்த் தான் முக்கியம். உன்னை அப்படிப் பார்த்ததும் எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலக்கா. சரியா சாப்பிடலையாக்கா. இரு அம்மாகிட்டக் கேட்கிறேன்” என்று எழப்போனவன் கைபிடித்துத் தடுத்தாள்.
“அம்மான்னும் போதே என்னை எப்படி பட்டினி போடுவாங்கன்னு நினைக்கலாம்? தப்புடா தம்பி. அம்மான்ற உறவு இல்லாத என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும். அம்மா எவ்வளவு முக்கிய...” தொண்டைக்குள் அடைத்த துக்கம் கேவலாய் வர கண்கள் அதன் வலியைப் பிரதிபலித்தது.
“திருமா!”
“உண்மைதான அத்தை. கண் முன்னாடி... இப்ப நினைச்சாலும் என் இரத்தம்லாம் கொதிக்குது அத்தை. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். அந்தத் தாயும் பதில் சொல்லணும்” என்றவளின் வலிகள் எல்லாம் வெறியாய் மாறியதோ!
திருமொழியைச் சுற்றிலும் புரியாத நிறைய மர்மங்கள் இருப்பது புரிந்தது சிவகாமிக்கு. ஒன்று மட்டும் புரியவில்லை அவருக்கு. அவர்களின் பிரச்சனைக்கும் தன் மகனுக்கும் என்ன சம்பந்தமென்று. இருப்பினும் அவள்மேல் ஒரு பரிவு வரத்தான் செய்தது. மெல்ல மகனைத் தேடி வந்தவர் அவனைக் கண்டதும் தன் குழப்பம் மறந்தவராய் “என்னடா ராஜா ரொம்ப குழப்பமாயிருக்கா?” என கேட்டார்.
“ஆமாம்மா ரொம்பவே. நல்லாதான்ம்மா பேசிட்டிருந்தா. என்ன நினைச்சாளோ பெயரைக் கேட்டா... இளங்கதிர்னு சொன்னதும் அப்படியே மயங்கிட்டா. இப்ப என்னைதான் இளா கூப்பிடறாளோன்னு சந்தோஷப்பட்டா, அது அவள் அத்தான் பெயர்னு சொல்றா. என்னைப் பார்க்கக்கூட இல்லம்மா. என்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியல. எதோ ஒரு மர்மக்கதைக்குள்ள மாட்டிட்டு முழக்கிற மாதிரியிருக்கு.”
“நான் ஒண்ணு சொல்லவா கதிர்.”
“ம்மா...”
“அந்தப் பொண்ணோட இளா இறந்திருக்கணும். அதை ஏத்துக்காத மனசு அவன் வருவான்ற நம்பிக்கையில் இருக்கலாம். நிஷாந்த் அம்மாகிட்ட பேசினவரைக்கும் அவங்களுக்கு இவளைப்பற்றி முழுசா தெரியலைன்னாலும், திருவும் அவ அத்தையும் ரொம்ப காலமா தனியாதான் இருக்கிறாங்கன்னு தெரியுது. சொந்தம்னு யாரும் இல்லன்னு சொல்றாங்க. நேத்து நைட் கூட கனவுல என்னென்னவோ உளறியிருக்கா. சில நேரம் அமைதி! சில நேரம் ஆர்ப்பரிப்பு! மொத்தத்துல அவ மனசுல எதோ வெளிய சொல்லமுடியா பாரம் இருக்கு. அவளோட கண்ணுல ஒரு அலைப்புறுதல் இருக்கு. அதை இறக்கி வைக்காம அவளால வேற எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. உன்னையும் சேர்த்துதான் சொல்றேன். அவளோட அத்தைகிட்ட தனியா பேசிப்பார்க்கிறேன்.”
“ம்... சரிம்மா. என்ன பிரச்சனைனாலும் சரிபண்ணிடலாம்னு சொல்லுங்க.”
“ராஜா ஒருவேளை அவள் அத்தான் வந்துட்டா.. நீ?”
“நா..நானா.. அவளைப் பார்க்கலம்மா” என்று திணறியவன். “அம்மா.. அப்ப என் கனவு பலிக்காதா?” மனம் எதையோ இழந்தாற்போலிருந்தது கதிருக்கு.
மகனை உணர்ந்தவர், “நல்லதாவே நினைப்போம் கதிர். நல்ல வேளை உங்கப்பா வெளில போயிருக்காங்க. இல்லன்னா சிவா பேக்கப்னு சொல்லிருப்பாங்க. சரியான...”
“ஹலோ அன்னையாரே போதும். தந்தூரி பாவம். அவருக்குள்ள உள்ளதைச் சொல்ல முடியாதப்பவும் நமக்காக கூடவே இருக்கிறாரே அதுக்கே சந்தோஷப்படணும்.”
“உன் அப்பாவை எதுவும் சொல்லிரக்கூடாதே. சீன் மட்டும்தான் அம்மா பிள்ளைன்னு. பாசம்லாம் உன் அப்பா மேலதான்” என்றார் முறைப்பாய். மகனின் சிரிப்பில் “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல. சரி உள்ள வா” என்றார்.
“மொழி இப்ப எப்படியிருக்கு?”
“சரியாகிருச்சி சார்.”
“ஓகே. நிஷா யாருன்னு கேட்டீங்கள்ல? இதுதான் நிஷா ஃபுல் நேம் நிஷாந்த்” என்று தன் பி.ஏவை அறிமுகப்படுத்தினான்.
“நான் யார்னு கேட்கலையே” என்று முறுக்கினாலும் “அண்ணா பெயர் நிஷாந்த் தெரியாது. சாரிண்ணா” என்றாள் நிஷாந்திடம்.
“பரவாயில்லமா. அண்ணன்னு ஆனதுக்கப்புறம் பெயர் எப்படி கேட்கத்தோணும்.”
‘ம்...’ என்று “உன் பெயர் என்னடா தம்பி?” என்றாள்.
சிரித்தபடி “பிரஷாந்த்” என்றான்.
“இவன் பெயரே இப்பதான் தெரியுமா?” என ஆச்சர்யமானான் கதிர்.
“அ..அது ஆமாம் சார்” என சின்னதாக வெட்கப்பட்டு “பார்த்ததிலிருந்து தம்பிப்பையா கூப்பிட்டே பழகிட்டேனா, அதான் பெயர் கேட்கத் தோணல. அப்படியே உங்க பெயரும் சொல்லிருங்க சார். இல்ல அதுக்குத் தனியா கலாட்டா செய்யப்போறீங்க?”
“என் பெயரைச் சொன்னேனேமா” என்றவனுக்குள் குழப்பமே.
“ஓ... எப்ப சொன்னீங்க?” என்றாள் கேள்வியாய்.
“அதைக் கேட்டதும்தான்மா மயங்கிட்ட” என்றான் அவள் முகம் பார்த்து.
“ஓ... அவ்வளவு மோசமாகவா சார் இருந்தது உங்க பெயர்?”
“மோசம்லாம் இல்லமா. கதிர்” என்றான் இளாவை எடுத்து. அவனுக்குப் புரிந்தது இளா என்ற பெயரைக் கேட்டதால்தான் மயங்கிவிட்டாளென்று.
சிறிது நேரத்தில் வீட்டில், ஸ்பீக்கர் ஒரு பக்கம், உறவினர்கள் ஒரு பக்கமென்று பிஸியாக நிச்சயத்திற்கு பெண் வீட்டிற்கு அனைவரும் செல்ல திருமொழியின் மயக்கம் கண்டுகொள்ளப்படாமலே விடப்பட்டது.
நிச்சயத்தாம்பூலம் மாற்றும் பொழுது “ஏன் தாயே? பத்திரிக்கை அடிச்ச பிறகு நிச்சயம் பண்றாங்க? எப்பவும் நிச்சயம் முடிஞ்சிதான பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் பண்ணுவாங்க. என்ன லாஜிக் இது?” என்றான்.
“இதெல்லாம் கிராமப்புறங்கள்ல சகஜம்டா ராஜா. இதான் பொண்ணுன்னு தெரிஞ்சதும் முதல்ல ஜாதகம் பார்த்து, அதுல எல்லா பொருத்தமும் பொருந்தினா, முறையா பெண் பார்க்க பெண் வீட்டுக்குப்போய் இவளை எங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு பூ வச்சிருவாங்க. அதுக்கப்புறம் நிச்சயம் தனியா வைக்கலாமா, கல்யாணத்தோட வைக்கலாமா கேட்டு நிச்சயம் கல்யாணத்தோடனா ஜோசியரைக் கேட்டு டேட் பிக்ஸ் பண்ணி.. இதோ பண்றாங்களே இப்படி செய்திருவாங்க.”
“இன்னொரு காரணம்னு பார்த்தா பையனுக்கோ பொண்ணுக்கோ டைம் கிடைக்காமலும் இருக்கலாம். இதே சிட்டிக்குள்ளனா நாம ரிஷப்சன்னு பொண்ணையும் மாப்பிள்ளையையும் சேர்த்து நிற்க வச்சிருவோம். கிராமங்கள்ல நிச்சயம் முடிஞ்சதும் நிற்க வச்சி விபூதி பூசி ஆசீர்வாதம் பண்ணுவாங்க.”
“அப்ப எனக்கும் மொழிக்கும் இப்படியே பண்ணலாம்மா.”
“பண்ணலாமே! அவள் சம்மதிச்சா?”
“அவள் சம்மதிச்சா இப்பவே கூட பண்ணிடலாம்மா. எங்க...” என பெருமூச்சுவிட்டான்.
“சிவா அங்க என்ன குசுகுசுன்னு சத்தம்?” என்ற குருவின் அதட்டலில்...
“ஒண்ணுமில்லங்க மாமா. சும்மா பேசிட்டிருந்தேன்” என்று ஒரு காமெடியைப் போட... அருகிலிருந்தவர்கள் சிரித்ததும் அவரின் முறைப்பைப் பார்த்து வாய் மூடியவர்கள்தான் அதன்பின் திறக்கவேயில்லை.
இரவு பெண் வீட்டில் உணவு முடித்து மற்றவர்கள் பையன் வீடு செல்ல, இரவு லாட்ஜ் சென்று காலை வருவதாகச் சொல்லி குருமூர்த்தி குடும்பத்தினர் சென்றார்கள்.
அவ்விரவில் கனவுகளுக்கும் பஞ்சமில்லாமல் போனதோ!
காலை நான்கு மணிக்கெல்லாம் திருமண விட்டில் மேளச்சத்தம் கேட்க, சின்னச்சின்ன ஆர்ப்பாட்டங்களுடன் விடியல் தன்னுடைய ஒளியை வெளிப்படுத்தியது.
தனது திருமணத்திற்கென்று நிஷாந்த் தன் தாயுடன் சேர்த்து, திருமொழிக்கும் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்திருந்தான். அதனுடன் நகையும் சேர்த்து அவளிடம் கொடுத்த பத்மினியிடம் திருமொழி மறுக்க... “நீ அம்மா அண்ணன்னு பாசத்துலதான கூப்பிடுற?” என்றார்.
“ஏன்மா இப்படி?” என்றாள் வருத்தமாக.
“அப்ப இதைக் கட்டிக்கோ. இல்லன்னா சின்னவனைக் கூப்பிடுவேன்.”
“ஹான்! அவன் வந்தா எனக்கென்ன பயமா?”
“என்ன சத்தம் இங்க? என்னைத் தேடுனீங்களா என்ன?”
“ஆமாடா. உன் அக்காவுக்கு நாம வாங்கிக்கொடுத்தப் புடவை வேண்டாமாம். நகை குடுத்தா அதையும் போடமாட்டாளாம்.”
“எதுக்குடா தம்பிப்பையா இதெல்லாம்? என்கிட்ட இருக்கிறதே போதும்டா. நானும் அத்தையும்தான் வீட்ல. தோட்டத்துல வருமானம் வருது. அதனால தேவைக்கு அதிகமாகவே இருக்குடா.”
“நான் உன்கிட்ட இல்லன்னு எப்ப சொன்னேன். இது அண்ணன் கல்யாணத்துக்காக தங்கைக்குக் கொடுக்கிறது. மறுத்தா அண்ணன் மனசுதான் கஷ்டப்படும். உனக்கு அதுதான் வேணுமா?”
“ப்ச்... என்னடா. அப்படியே இருந்தாலும் இந்தப் புடவைக்கு ஜாக்கெட் தைக்கலைல்ல. அதனால உன்கிட்டயே இருக்கட்டும்” என எஸ்கேப்பாக.
“ஹேய் யக்கா! நீ இப்படிலாம் செய்வன்னுதான் உனக்கேத் தெரியாம அத்தையைப் பிடிச்சி நீ ரெகுலரா தைக்கிற இடத்துல குடுத்து இப்போ உள்ள ட்ரெண்ட்கு ஏத்தமாதிரி தைச்சி, வாங்கிட்டே வந்தாச்சி. அவாய்ட் பண்ணக் காரணம்லாம் தேடியலையாத ஓகே.”
“ஏன்டா என்னை இம்சை பண்ற. புடவை சரிடா.. நகை எதுக்கு?”
“அது பத்துவோட ஆசை” என்று தாயைக் காண்பித்தான்.
“உன்னை... முதுகுல போட்டா தெரியும்” என்று பத்மினி அவனை அடிக்க வர...
“கோவிச்சிக்காதீங்க பத்து” என தாயைக் கொஞ்சி நகையைத் திருவின் கையில் திணித்து, நைசாக தாயுடன் நழுவிவிட்டான் பிரஷாந்த்.
ஆள் பாதி! ஆடை பாதி என்பார்கள். இரண்டு அழகும் சேர்ந்து மங்கையர்கரசியை மங்கையர்கு எல்லாம் அரசியாக்கிக் காண்பித்ததோ!