• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
4



“டேய் தம்பிப்பையா! உன் ரிலேடிவ்ஸ் கூப்பிட நீ வரலாம். என்னை எதுக்குடா இழுத்துட்டு வர்ற?”

“அட சும்மா வாக்கா. ப்ளைட் வந்திருக்கும்.”

“ரொம்ப முக்கியம் போ.” முனகியபடி வந்தவளை ஒரு பார்வை பார்த்து “எப்பவும் காடு கழனின்னு இருக்கியே கொஞ்ச நேரம் ஜாலியா ஊர் சுத்தக் கூட்டிட்டு வந்தா என்ஜாய் பண்ணவியா. அதை விட்டுட்டு...”

“டேய் தம்பி! மதுரையில மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளம்னு எவ்வளவு இடமிருக்கு. அதை விட்டுட்டு...”

“யக்கோவ்! இப்பவே சாமியாராகப் போறியா என்ன. ஏன் அதிசயம் தீம் பார்க் கூட்டிட்டுப் போகச் சொல்லு. இல்லையா, சிட்டியிலேயே பெரிய தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகலாம்னு சொல்லு. இல்லையா, தம்பின்ற உரிமையில் புடவை நகை கேளு. அதை விட்டுட்டு...”

அவனின் வார்த்தை தந்த ஆனந்தத்தில் கண்கலங்க நின்று விட்டாள் அவள்.

பதில் இல்லாமல் போக திரும்பிப் பார்த்தவன், “என்னக்கா அங்கயே நின்னுட்ட? ஏய் என்ன கண்ணெல்லாம் கலங்கிருக்கு?” பதற்றத்துடன் அவளருகில் வந்தான்.

“உன்னால்தான்டா. என்னை உனக்கு இந்த மூணு நாளாதான தெரியும். அதுக்குள்ள என்னடா பாசம் உனக்கு? சிங்கிள் பொண்ணா தனியா இருந்தேன்டா. பாசம்ன்ற பெயர்ல என்னை எமோஷனலா லாக் பண்ற நீ!”

“ஹேய் யக்கா ரொம்ப ஃபீலிங் காட்டாத. உன்கிட்ட எவ்வளவு வேலை வாங்க வேண்டியிருக்கு. அதுக்கான கமிஷன்தான் இதெல்லாம். அதோட வீட்ல நானும் அண்ணனும் மட்டும்தானா... சோ, சண்டை போட அக்கா தங்கை இல்லாம போரடிக்குது. இப்ப அண்ணி வராங்கதான். அவங்க எங்களோட இருக்கமாட்டாங்களே. கல்யாணம் முடிஞ்சி ஒன் வீக்ல ரெண்டு பேரும் வேலை செய்யுற இடத்திற்கு பறந்திருவாங்க. அப்புறம் நானும் அப்பா அம்மாவும்தான்” என்றான் சோகமாக முகம் வைத்து.

“டேய் உன்னை... உன் டைம்பாஸ்காகவும் உன் வேலைக்காகவும் ஆள் தேடுனியா. டேய் தம்பிப்பையா ஓடாத நில்லுடா?”

“எதுக்கு என் மண்டையில ஒரு கொண்டை வளர்த்துக்கிறதுக்கா. அதெல்லாம் நிற்க முடியாது” என்று அவன் ஓட...

“டேய்! எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. ஏய் நில்லு சொல்றேன்ல” என்று அவனை விரட்டிச் செல்கையில் யார் மீதோ மோதி “சாரி” என்று தடுமாறவும், தன்னைப் பிடித்து நிறுத்த தான் மோதிய ஆணின் கை தன்புறம் வருவதை உணர்ந்தவள், “நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள் அவசரமாக.

அவனோ குறும்புடன் “என்ன? மேரேஜ் பண்ணிக்கிறீங்களா?” என்றான் பட்டென்று.

சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அதிர்ச்சியில் மூச்சடக்கி அப்படியே நின்றுவிட்டாள். ‘அவன்தானா? கனவின் நாயகன் இங்கே எப்படி? சொன்னாற்போல் வந்தேவிட்டானா! இதிலிருந்து எப்படித் தப்புவது.’ மனம் யோசனையிலாழ்ந்தது.

“யக்கா வாக்கா அங்க என்ன பண்ற? அண்ணி வந்தாச்சி பாரு” என்று அவளின் கைபிடித்து இழுத்துச் செல்ல... அப்பொழுதுதான் அவளது சுவாசம் நேரானது.

‘இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே. எங்கே?’ என ஞாபகச் சுவடுகளைத் தட்டிப்பார்த்தவனுக்கு நினைவு வர அவனுக்கே ஆச்சர்யம். ஆச்சர்யம் என்பதைவிட அதிசயமாக இருந்தது. கனவில் வருவது நிஜத்தில் நடக்கும் என்பதைக் கிண்டலடித்தவன், இன்று நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான்.

‘அப்படியானால் கனவில் வந்த அனைத்தும் உண்மையாகுமா? அம்மாவிற்கு ஆபத்தென்றது... கடவுளே! நீ சொன்ன மாதிரி நான் இதோ வந்துட்டேன். என் அம்மாவுக்கு எதுவும் அகக்கூடாது.’ முதலில் தாயைப் பார்க்க முடிவு செய்தவன் திரும்பி “ஹேய் பெண்ணே!” என்றழைத்தான். திரும்பிய திருமொழியிடம்... “உன்னோட அந்த வார்த்தைக்கு நான் இன்னொரு டைம் பதில் சொல்றேன். இப்ப பை” என்று சிரித்தபடியே கிளம்பினான்.

“யாருக்கா அது? உன் முகம் அவரைப் பார்த்து ஏன் கலவரமாயிருக்கு? எதாவது பிரச்சனை பண்ணினானா? சொல்லு நம்ம பசங்களை வரச்சொல்லிப் பார்த்திருவோம்.”

“ப்ச்... யாருன்னே தெரியாது” என்றாள் எரிச்சலில்.

“தெரியாமலா பை சொன்னார்.”

“ஆமா. எதாவது கிராக்கு கேஸாயிருக்கும். உன் அண்ணியைக் காண்பிக்கப் போறியா இல்லையா?”

“அதோ வர்றாங்க” என்றதும் நடக்க ஆரம்பிக்க... நினைவுகளோ மோதியவன் மேலேயே நின்றது. கனவில் வந்த அதே உருவம். கனவில் சொன்னதுபோல் முதல்முறை பார்க்கையிலேயே திருமணம் பற்றிப் பேசுகிறான். ‘மொழி ஜாக்கிரதையா இரு.’ தனக்குத்தானே சமாதானம் செய்தாள் அவள்.

“மொழியின் மௌனமொழியை உடைப்பானா? அவள் கனவில் வந்த இளங்கதிரானவன்!”

“ஹாய் அண்ணி! இவங்க திருமொழி. என்னோட அக்கா” என்று பெருமையுடன் அறிமுகப்படுத்த... திருமொழிக்கோ ஆச்சர்யம். அடுத்தடுத்து ஆச்சர்யமளித்துக் கொண்டிருந்தான் அவ்விளைஞன்.

“அக்காவா!” ஆச்சர்யப்பட்டாலும் “நான் சரண்” என தன்னை அறிமுகப்படுத்தினாள் அப்பெண்.

“டேய் தம்பிப்பையா! உன் அண்ணி பெயர் பையன் பெயர் மாதிரியிருக்கு? நம்ம ஊர் சைடு இந்த மாதிரிப் பெயர் வைக்கமாட்டாங்களே. உன் அண்ணனுக்கு இது லவ் மேரேஜா?” என்றாள் அவனிடம் கிசுகிசுப்பாக.

“ஏய் யக்கா. அப்படிலாம் இல்ல. வீட்ல பார்த்த பொண்ணுதான்” என்றான் சிறு அதட்டலாக.

“உங்க சந்தேகம் என்னன்னு சொல்லவா?” என்றதும் திருமொழி திருதிருவென விழித்து அவளைக் காண... “சரண்யா என் பெயர்” என்றாள் புன்னகையுடன்.

“சாரி அண்ணி.”

“நீயேன்டா சாரி கேட்கிற. பொதுவாவே இந்த மாதிரி கேள்வி வரும்தான” என்றாள் திரு.

“எக்ஸாக்ட்லி மொழி. எதுக்கு தப்பே செய்யாம சாரி கேட்கணும். சரி வாங்க டைமாகுது” என்றதும் காரை நோக்கி நடந்தார்கள்.

“அம்மா எங்கேயிருக்கீங்க?” என்று தாயை அழைத்துக் கேட்டான் இளங்கதிர்.

“ஏன்டா முன்னாடி வந்து சர்ப்ரைஸ் குடுக்கப்போற மாதிரி சொல்ற?”

“அட சொல்லுங்க தாயே! நீங்க சென்னையில இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

“நீ என் பையன்றதை நிரூபிக்கிறடா ராஜா.”

“ஐஸ் வைச்சது போதும். ப்ளீஸ் தாயே அட்ரஸ்.”

“சரி தர்றேன்” என்று வத்தலகுண்டில் உள்ள ஒரு லாட்ஜ் பெயர் சொன்னார். கால் டேக்ஸி டிரைவரிடம் சொல்லி அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தாய் முன் நின்றான்.

“நீ எப்படி இங்க? அப்பா எங்கடா? நீ வந்தது அப்பாவுக்குத் தெரியுமா? இல்லன்னா...”

“அமைதி அமைதி தாயாரே! வந்த புள்ளையை உட்காரக்கூட விடாம முதல்ல எனக்கு டிபன் சொல்லுங்கமா. நேத்து நைட்டிலிருந்து சாப்பிடாததால ரொம்பப் பசிக்குது.”

“என்னது சாப்பிடலையா? ஏன்டா ராஜா நேத்து கேட்டப்ப சாப்பிட்டதா சொன்ன? பொய் சொன்னியா?”

“சாப்பிட உட்கார்ந்து இரண்டு வாய் எடுத்து வச்சேன். அதுக்கு மேல என்னால முடியல. அப்படியே வச்சிட்டு எழுந்துட்டேன். அப்பாகூட சரியா சாப்பிடல.”

“ரெண்டு பேரும்... ப்ச்.. ஏன்டா...”

“நீங்களும்தான் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. முதல்ல டிபன் சொல்லுங்க அன்னையே” என்று அப்படியே கட்டிலில் சரிந்தான். மனதில் வரும் வழியில் நடந்த நிகழ்வுகள் நினைவு வந்தது.

மதுரையிலிருந்து பரவை வழி வத்தலகுண்டு வரும் வழியில், வாடிப்பட்டியில் ஓரிடத்தில் கண்டான் அவளையும், அவளுடனிருந்த பெண்மணியையும். அப்பெண் தன் கனவில் வந்து தன்னை மறந்தாயே என கேட்டவள். அன்றைய முகங்கள் அனைத்தும் தன்னுள் பதிந்து போனதாலோ என்னவோ அப்பெண்ணைப் பார்த்ததும் கண்டுகொண்டான்.

ரொம்ப எளிமையாக, சற்று ஏழ்மையாகத் தெரிந்தார்கள் இருவரும். சந்தோஷங்களைத் தொலைத்த முகங்கள். ‘இவர்களின் சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கத்தான் என்னை அந்த சக்தி அழைத்ததா?’ மனதிற்குள் கேள்வி எழுந்தது. டிரைவரிடம் அவ்விடம் பற்றிக் கேட்டு காரின் வேகத்தைக் குறைத்து அவர்களையே பார்த்திருந்தனுக்கு ஏனோ அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் வேகம். இருவரும் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டு ஒரு தெருவிற்குள் நுழைய அவ்விடத்தை தன் செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அவர்களையும் தான். அவர்களைப் பின் தொடரத்துடித்த மனதை அடக்கி காரை எடுக்கச் சொன்னான்.

‘என்னை மறந்துட்டியா?’ ‘யார் இவள்? ஏன் அப்படிக் கேட்டாள்? என்னால் இவளுக்கு என்ன உதவி தேவைப்படும். ஏழ்மையில் இருப்பதால் பண உதவியாக இருக்குமோ? இல்லை இருக்காது.’ ஏனோ அவர்களைப் பணத்துடன் சம்பந்தப்படுத்த மனம் மறுத்தது. அப்பெண்மணியைப் பார்க்கையில், தாய் மடிதேடும் கன்றாய் துள்ளிக்குதிக்கும் மனதையும் அடக்க வழியில்லை அவனுக்கு.

‘அவர்களுக்கு எதாவது பிரச்சனையா? ஏன் அவர்கள் முகம் அப்படியிருந்தது? ஏன் நான் அவர்களைப் பற்றியே சிந்திக்கிறேன்?’ தன் தலையை யாரோ வருடுவது தோன்ற கண்விழித்து தாயைக் கண்டவன் அவரைத் தன்னருகில் அமர வைத்து தாயின் மடியில் தலைவைத்து கையை இறுகப் பற்றிக்கொண்டான்.

“என்னடா ராஜா கையெல்லாம் ஜில்லுன்னு இருக்கு? ஒரு நைட்தான பார்க்கல. அதுக்காக இப்படியா? சரி வா சாப்பிடலாம்” என்று எழப்போனவர் கையை விடாமல் பிடித்து “கொஞ்ச நேரம் இப்படியே உட்காருமா. எனக்கு உன்கூடவே இருக்கணும்” என்றான் கண்திறக்காமலே எதிலிருந்தோ தப்பிப்பது போல்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்து மகனின் தோளில் மெள்ளத் தட்டிக்கொடுக்க அப்படியே தூங்கினான். அவன் முகம் பார்த்தவருக்கு மெல்லிய புன்னகை எழுந்தது. மகனின் இந்த மாற்றம் சந்தோஷமே. சின்ன வயதில் அவனின் பிடிவாதங்களும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும் அதிகம். அதே நேரம் பாசமும் அதிகம் உள்ளவன். மகனின் பிடிவாத குணம் எடுத்தெறிந்து பேசுவது அனைத்தும் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்திருந்த பொழுது கரைந்து காணாமல் போனது.

அதன்பின் படிப்பில் பின்தங்கியிருந்தவன் அனைத்தையும் கற்றான். தன்னை மீறிய ஒரு நிதானம் மகனின் செய்கையில். இன்றும் இனிய இளங்கதிராய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மடியில் மகனின் அசைவு தெரிய “ரிலாக்ஸாகிட்டியா ராஜா? என்ன பிரச்சனை உனக்கு?”

“என்னென்னு தெரியலம்மா. அன்னைக்குக் கனவுல வந்தவங்கள்லாம் இப்ப நிஜத்துல நேர்ல வர்றாங்க. இன்னைக்கே இரண்டு பெண்களைப் பார்த்தேன். ஏதோ ஒரு வகையில் அவங்க என்னைப் பாதிக்கிறாங்கம்மா.”

“உன் மூலமா அவங்களுக்கு எதாவது நல்லது செய்யணும்னு, அந்தத் தாய் நினைச்சி வரவழைச்சிருக்கலாம்.”

“நமக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லையேம்மா. அவங்களை யார்னு எனக்குத் தெரியாது. அப்படியிருக்கிறப்ப, எங்கேயோ இருந்த நம்மை ஏன்மா?” என்றான் கேள்வியாய்.

“எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கும்டா. இல்லன்னா உன் கனவுல வந்த பொண்ணு உனக்குத்தான்னு இருந்து, அவளைச் சுற்றியுள்ள பிரச்சனையிலிருந்து விடுவிக்க உன்னால்தான் முடியும்னு அந்தத்தாய் நினைச்சிருக்கலாம்.”

“தாயே இதெல்லாம் அதிகம் சொல்லிட்டேன். இதென்ன சினிமாவா பொண்ணுக்காக உயிரைக்கொடுத்து சண்டை போட. அதுவும் இதுவரை பழகியேயிராத முன்னப்பின்னப் பார்த்தறியாத பெண்ணிற்காக. சான்ஸேயில்ல.”

“இதுவரை பழகலன்னா என்னடா மகனே. இனிமேல் பழகலாம்ல. நீயும் அவளை நேர்ல பார்த்துட்டேன்னு சொல்ற. அப்புறமென்ன... எது எப்படியோ உன் பேரைச் சொல்லி நான் ஊர் சுத்திப்பார்க்க வந்துட்டேன். இப்பவாவது வா சாப்பிடலாம்” என்றார்.

காலையில் கண்விழித்த குருமூர்த்திக்கு அருகில் மனைவியில்லாதது சோம்பலாக இருக்க மகனைப் பார்க்கவென்று அவனைத் தேடிச் சென்றார். உள்ளே அவனில்லாமல் போக... ‘அதுக்குள்ள எழுந்துட்டானா? தாய் இல்லாதது அவனுக்குமே வருத்தம்தானே’ என நினைத்தவர் மகனுக்காக உருகி “கதிர்.. கதிர் எங்கயிருக்க? டேய் மகனே காலங்கார்த்தால உங்கப்பன்கிட்ட விளையாடாத.”

அவன் அறையில் சுற்றிலும் பார்த்து பால்கனியெல்லாம் தேடி கீழே வந்தவர் அங்கும் இல்லையென்றதும் ஜாகிங் போயிருப்பான் என்று உள்ளே வர... மகனின் ஜாகிங் ஷுவை உள்ளே கண்டவருக்கு ஏதோவொரு நெருடல் மனதினுள். மகனைத் தேடி திரும்பவும் அவனின் அறைக்குச் சென்றார். அங்கிருந்த சின்ன மேஜையின் மேலிருந்த காகிதம் வாவென்று அழைப்பதாய் தோன்ற, சிறு நடுக்கத்துடனேயே அக்கடிதத்தை எடுத்துப் படிக்க... முகம் அதிர்ந்து வியர்வை அரும்ப ஆரம்பித்தது.

“நோ இது நடக்கக்கூடாது. இது தப்பு. எனக்கு என் பையன் வேணும். என் பையனை வளர்த்து யாரோ ஒருவனுக்கு குடுக்கவா.” நேராகத் தன்னறைக்குச் சென்றவர் போனை எடுத்து முக்கியமான நபரின் நம்பரை அழுத்த, எதிர் முனையில் நிதானமாக எடுத்தவரைக் கடிந்து பேச முடியாமல் கோபத்தை அடக்கி, தன்னுடைய முக்கியமான சந்தேகங்களைக் கேட்க... எதிரிலிருந்தவர் என்ன சொன்னாரோ... திரும்பத் திரும்பத் தன் சந்தேகமனைத்தையும் கேட்டுத் தெளிவு பெற்றார். பின் பிளைட் டிக்கட் பார்க்க மறுநாள்தான் கிடைத்தது.

“டேய் தம்பிப்பையா! என்னடா காலையிலையே போன்?” என கொட்டாவி விட்டபடி கேட்டாள்.

“வயசுப் பொண்ணு இன்னுமா தூங்கிட்டிருக்க? கல்யாணத்துக்கு இரண்டு நாள்தான் இருக்கு தெரியும்ல.”

“அதுக்கு நான் என்ன பண்றது. என்னவோ என் கல்யாணத்துக்கு தூங்கிட்டிருந்த மாதிரி கேட்கிற. அது உன்னோட வீட்டு விசேஷம். உன்னோட பிரச்சனையில நடுவுல என்னை ஏன்டா இழுக்கிற?”

“நீயெல்லாம் ஒரு அக்காவா? ஒரு தூக்கத்துக்காக நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தமேயில்லன்னு சொல்ற?”

“டேய்! இன்னும் ஐந்து மணியே ஆகல. இத்தனை வருஷமா எந்த அக்காவைடா இப்படி டார்ச்சர் பண்ணின? வழி சொன்ன பாவத்துக்காக என்னை இந்தப்பாடு படுத்துற. இது சரியில்ல சொல்லிட்டேன்.”

“அதெல்லாம் சரிதான். வழி சொன்னவளை வாழ்க்கைத் துணையாக்கினாதான் தப்பு. அக்காவாக்கினது தப்பில்ல” என்றான் கெத்தாக.

“அடி.. படவா! சுண்டெலிக்கு பேண்ட் சர்ட் போட்ட மாதிரி இருந்துட்டு வாழ்க்கைத் துணை வரை பேசுறியா? இரு உன் அப்பா அம்மாகிட்ட போட்டுக்குடுக்குறேன். முதல்ல வேலையைப் பார்த்து செட்டிலாகிற வழியைப் பாரு. அப்புறமா பொண்ணு தேடலாம்.”

“அட விடுக்கா. பேசாம நீ கல்யாணம் முடிச்சி சீக்கிரமே ஒரு பொண்ணைப் பெத்துக்கொடு. நான் வேண்டாம்னு சொல்லாம கட்டிக்கிறேன்.”

“நான் அந்தக் கையைக் கொஞ்சம் வெட்டிக்கிறேன்” என பட்டென்று சொல்ல... “ஆத்தாடி” என்றலறினான் அவன்.

“அப்படியே வாயை மூடிக்கோ. என் பொண்ணு உனக்குக் கேட்குதா. கொன்னுருவேன்டா. சரி காலையிலயே எதுக்கு இத்தனை அர்ச்சனை என்கிட்ட வாங்கிக்கட்டிக்கிற? இவ்வளவு காலையில என் நினைப்பு வருதுன்னா எதாவது ஹெல்ப் வேணுமாடா?”

“ம்..ம்கூம்” என்ற முனகல் குரல் அவனிடமிருந்து வர...

“என்னடா யாராவது தந்த அல்வாவை வாயில் போட்டு அடைச்சிக்கிட்டியா? வாயைத் திறந்து பதில் பேசு முதல்ல” என்று ஒரு அதட்டல் போட்டாள்.

“நீதான என் வாயை மூடச்சொன்ன. அப்புறம் இப்படிப் பேசினால் எப்படியாம்?”

“ஓ... அவ்வளவு நல்லவனா நீ. நம்பிட்டேன்டா பையா நம்பிட்டேன். விளையாடாம விஷயத்துக்கு வா.”

“நீ வீட்டுக்கு வாக்கா. நீ வந்தா அம்மா கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க.”

“கொஞ்சம்தானா!”

“ஹேய் அக்கா போதும் விளையாட்டு. சீக்கிரம் வா கிளம்பலாம்.”

“கிளம்பாலாமா?”

“பின்ன உன்கிட்டப் பேச ஆரம்பிச்ச நேரத்துக்கு உன் வீட்டு வாசலுக்கே வந்துட்டேன்ல. நீதான் இன்னும் படுக்கையை விட்டே எழலை” என்றான் சடைப்பாக.

சட்டென்று செல்லை ஆஃப் செய்து வெளியே வர அந்த விடியாத வேளையில் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து “தேடி வர்றளவுக்கு எதாவது அவசரமாடா தம்பி? நான் எப்பவும் போல விளையாடுறேன். சாரிடா” என்றாள் சிறு குற்றவுணர்வுடன்.

“எதுக்காக இந்தப் பதற்றம்? தலைபோற எந்தக் காரியமும் இல்ல. என்னவோ தெரியல நேத்து ஏதேதோ கனவு. உன்னை என்கிட்டயிருந்து பிரிக்கிற மாதிரி. மனசெல்லாம் எதையோ இழந்த ஃபீல். உன்னைப் பார்த்தே ஆகணும்னு எழுந்ததும் வந்துட்டேன். என்னோடவே இருந்திருக்கா. அத்தையை நான் பார்த்துக்கறேன்” என்றான் கெஞ்சலாய்.

அவனின் வார்த்தையில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்பு அவளைக் கட்டி போட்டபோதும், அவனிடம் அதைக் காட்டாது, “என்னடா தம்பிப்பையா காலையிலயே வந்து ஐஸ் வைக்கிற. நான்லாம் அவ்வளவு ஒர்த் இல்லடா” என்றாள்.

“உன்னோட வேல்யூ என்னன்னு எனக்குத் தெரியும்.”

“ஹ்ம்.. அப்புறம்?”

“அப்புறம் எதுவுமில்ல. இந்தப் பேச்செல்லாம் விடு. கல்யாணம் முடியுறது வரை என்னோடவே இருக்கிற. ஓகே” என்றான் ஆர்வத்தில்.

அவனின் ஆர்வம் புரிந்தாலும் உறவில்லாத வீட்டிற்கு எப்படிச் செல்வதென்ற குழப்பம் அவளுள். “உன்னோட வந்துட்டா தோட்டம் துரவெல்லாம் யார் பார்த்துப்பாங்க? நான் இல்லன்னா இங்க எந்த வேலையும் நடக்காது. நாளை மறுநாள்தான கல்யாணம் நாளைக்கு சாயங்காலம் வந்திருறேன்.”

“காரணம் எதுவும் சொல்லாதக்கா. இந்த ரெண்டு நாளைக்கு மட்டும் அத்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு என்னோட வா” என பிடிவாதமாக நின்றான் அவன்.

“அவங்களைத் தனியா விட்டுட்டு எப்படிடா. வயசானவங்கடா” என்றாள் தட்டிக்கழிக்கும் எண்ணத்துடன்.

“என்னைப் பார்த்தா வயசானவள்னு சொல்ற? இன்னும் நாற்பத்தைந்து கூட ஆகல. உன் சின்ன வயசுலெல்லாம் இதை யார் பார்த்துக்கிட்டாங்களாம். நான் பார்த்துக்கறேன். நீ கூட்டிட்டுப் போடா” என்றார்.

“அப்புறம் என்னக்கா மேலிட உத்தரவு.. அதுவும் ஒரு யங் லேடி அனுமதி கிடைச்சிருச்சி. எந்த எஸ்கேபிசமும் இல்லாம சீக்கிரம் கிளம்பி வா. நான் வெய்ட் பண்றேன்.”

“இருந்தாலும் ரொம்ப அடம்பிடிக்கிறடா நீ.”

“உனக்கு தம்பியாகிட்டேன்ல அதான் இந்த அடம். இல்லன்னா தாலி கட்டுற டைம்கு நீ வந்து நிற்ப.

“சரி உள்ள வா... ஓ.. நீ உள்ள வந்தா ப்ராப்ளம் கிரியேட்டாகும்ல. அப்ப கொஞ்சம் விலகி நில்லு வாசல் பெருக்கித் தண்ணீர் தெளிச்சிரணும்” என்றதும் சற்று முகச்சுணக்கம் வந்ததோ அவனுக்கு.

அதைக் கண்டவள், “வீட்டுக்குள்ள வரத்தான் செய்வேன்னு அடம் பண்ணமாட்டியாடா. யார் எது சொன்னாலும் நீ எனக்குத் தம்பிதான். என் தம்பி என் வீட்டுக்கு வர்றதுல யாருக்காவது பிரச்சனைன்னா அவங்க எனக்குத் தேவையில்ல. நீ உள்ள வா. உன் வீட்டுக்கு வர்ற உரிமை எனக்கு இருக்குதுன்னா... என் வீட்டுக்கு வர்ற முழு உரிமையும் உனக்கிருக்கு” என்றாள்.

“நீ சொல்லிட்டல்லக்கா இனி பாரு” என்று உள்ளே வந்தவனுக்கு அந்த இருவருக்குமான இந்த ஓட்டு வீடு நிறைவாகத்தான் இருந்தது.

அரைமணி நேரத்திற்கெல்லாம் தயாராகி வந்தவளிடம் “கூட ரெண்டு நாளைக்கு ட்ரஸ் எடுத்து வச்சிக்கிட்டியா?” என்றான்.

“ஏன்டா அத்தனை நாளைக்கு அங்க எனக்கென்ன வேலை? கல்யாணம் முடிஞ்சதும்தான் வந்திருவேனே.”

“அதெல்லாம் முடியாது. நான் எப்ப விடுறேனோ, அப்பதான் இங்க வரமுடியும்.”

“அத்தை நான் கிளம்புறேன். விட்டா இவன் பேசிட்டேயிருப்பான். நாளைக்கு சாயங்காலம் வந்திருங்க. இல்லன்னா இவனை அனுப்பிவிடுறேன்” என்று அவன் பைக் பின்னால் அமர, இருவரும் சண்டையிட்டபடி செல்லும் அழகைப் பார்த்திருந்த காமாட்சியின் கண்களுக்கு, அவர்கள் நிஜ உடன்பிறப்பு போலவே தெரிந்தது.

சிவகுரு இன்டஸ்ட்ரீஸ் சென்ற குருமூர்த்தி மேனேஜரை வரவழைத்து மறுநாள் வெளியூர் போவதால் பார்த்துக் கொள்ளச் சொல்லி, நாளையே மகன் வந்துவிடுவான் என்றிருந்தார். பின் முக்கிய வேலைகளை முடித்து இரவு வீட்டிற்கு வந்து கிளம்பும் ஏற்பாடுகள் செய்தார்.

மறுநாள் காலையில் ஒலித்த செல்போன் ரிங் சத்தத்தில் எழுந்த கதிர் பெயரைப் பார்க்காமலேயே காதில் வைக்க, “எங்கேயிருக்கீங்க ரெண்டு பேரும்” என்ற கர்ஜனைக் குரலில்... “அப்பாஆஆ..” என அலறியடித்து எழுந்தமர்ந்து “நா..நான் மட்டும்தான்ப்பா” என்றான் திணறியபடி.

“பொய் பேசாத கதிர். எப்படியும் உன் அம்மாகிட்டப் போயிருப்பன்னு தெரியும். எங்கயிருக்கீங்கன்னு சொல்லு?”

கதிரின் குரலில் தாய் எழுந்து யாரென்று கேட்கவும், “அப்பா கால் பண்ணிருக்காங்க. கண்டுபிடிச்சிட்டாங்க நினைக்கிறேன். எங்கயிருக்கீங்க கேட்கிறாங்க” என்றான்.

உள்ளுக்குள் எழுந்த பயத்தை உதறி போனை வாங்கி, “வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலிருக்கிற லாட்ஜ்ல தங்கியிருக்கோம்ங்க. நீங்க எப்படியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? சாப்பிட்டீங்களா? நேத்து உங்க போன் ஏன் ஸ்விட்ஜ் ஆஃப்னு வந்தது? எதுவாயிருந்தா என்னங்க நீங்க இங்க வரப்போறீங்கன்றதே சந்தோஷம்தான்” என்றார் ஒன்றும் அறியாதவராய்.

மனைவியின் இந்த நாடகத்தை உணர்ந்தவரோ, எதாவது சொல்லிவிடுவோமோ என்ற எண்ணத்தில் பட்டென்று போனை கட் செய்தார் குருமூர்த்தி.

கணவரின் கோபம் உணர்ந்த சிவகாமி அவரை சமாளிக்கத் தேவையான உத்திகளை மனதிற்குள் ஓட்டிக் கொண்டிருந்தார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top