- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
4
“டேய் தம்பிப்பையா! உன் ரிலேடிவ்ஸ் கூப்பிட நீ வரலாம். என்னை எதுக்குடா இழுத்துட்டு வர்ற?”
“அட சும்மா வாக்கா. ப்ளைட் வந்திருக்கும்.”
“ரொம்ப முக்கியம் போ.” முனகியபடி வந்தவளை ஒரு பார்வை பார்த்து “எப்பவும் காடு கழனின்னு இருக்கியே கொஞ்ச நேரம் ஜாலியா ஊர் சுத்தக் கூட்டிட்டு வந்தா என்ஜாய் பண்ணவியா. அதை விட்டுட்டு...”
“டேய் தம்பி! மதுரையில மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளம்னு எவ்வளவு இடமிருக்கு. அதை விட்டுட்டு...”
“யக்கோவ்! இப்பவே சாமியாராகப் போறியா என்ன. ஏன் அதிசயம் தீம் பார்க் கூட்டிட்டுப் போகச் சொல்லு. இல்லையா, சிட்டியிலேயே பெரிய தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகலாம்னு சொல்லு. இல்லையா, தம்பின்ற உரிமையில் புடவை நகை கேளு. அதை விட்டுட்டு...”
அவனின் வார்த்தை தந்த ஆனந்தத்தில் கண்கலங்க நின்று விட்டாள் அவள்.
பதில் இல்லாமல் போக திரும்பிப் பார்த்தவன், “என்னக்கா அங்கயே நின்னுட்ட? ஏய் என்ன கண்ணெல்லாம் கலங்கிருக்கு?” பதற்றத்துடன் அவளருகில் வந்தான்.
“உன்னால்தான்டா. என்னை உனக்கு இந்த மூணு நாளாதான தெரியும். அதுக்குள்ள என்னடா பாசம் உனக்கு? சிங்கிள் பொண்ணா தனியா இருந்தேன்டா. பாசம்ன்ற பெயர்ல என்னை எமோஷனலா லாக் பண்ற நீ!”
“ஹேய் யக்கா ரொம்ப ஃபீலிங் காட்டாத. உன்கிட்ட எவ்வளவு வேலை வாங்க வேண்டியிருக்கு. அதுக்கான கமிஷன்தான் இதெல்லாம். அதோட வீட்ல நானும் அண்ணனும் மட்டும்தானா... சோ, சண்டை போட அக்கா தங்கை இல்லாம போரடிக்குது. இப்ப அண்ணி வராங்கதான். அவங்க எங்களோட இருக்கமாட்டாங்களே. கல்யாணம் முடிஞ்சி ஒன் வீக்ல ரெண்டு பேரும் வேலை செய்யுற இடத்திற்கு பறந்திருவாங்க. அப்புறம் நானும் அப்பா அம்மாவும்தான்” என்றான் சோகமாக முகம் வைத்து.
“டேய் உன்னை... உன் டைம்பாஸ்காகவும் உன் வேலைக்காகவும் ஆள் தேடுனியா. டேய் தம்பிப்பையா ஓடாத நில்லுடா?”
“எதுக்கு என் மண்டையில ஒரு கொண்டை வளர்த்துக்கிறதுக்கா. அதெல்லாம் நிற்க முடியாது” என்று அவன் ஓட...
“டேய்! எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. ஏய் நில்லு சொல்றேன்ல” என்று அவனை விரட்டிச் செல்கையில் யார் மீதோ மோதி “சாரி” என்று தடுமாறவும், தன்னைப் பிடித்து நிறுத்த தான் மோதிய ஆணின் கை தன்புறம் வருவதை உணர்ந்தவள், “நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள் அவசரமாக.
அவனோ குறும்புடன் “என்ன? மேரேஜ் பண்ணிக்கிறீங்களா?” என்றான் பட்டென்று.
சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அதிர்ச்சியில் மூச்சடக்கி அப்படியே நின்றுவிட்டாள். ‘அவன்தானா? கனவின் நாயகன் இங்கே எப்படி? சொன்னாற்போல் வந்தேவிட்டானா! இதிலிருந்து எப்படித் தப்புவது.’ மனம் யோசனையிலாழ்ந்தது.
“யக்கா வாக்கா அங்க என்ன பண்ற? அண்ணி வந்தாச்சி பாரு” என்று அவளின் கைபிடித்து இழுத்துச் செல்ல... அப்பொழுதுதான் அவளது சுவாசம் நேரானது.
‘இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே. எங்கே?’ என ஞாபகச் சுவடுகளைத் தட்டிப்பார்த்தவனுக்கு நினைவு வர அவனுக்கே ஆச்சர்யம். ஆச்சர்யம் என்பதைவிட அதிசயமாக இருந்தது. கனவில் வருவது நிஜத்தில் நடக்கும் என்பதைக் கிண்டலடித்தவன், இன்று நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான்.
‘அப்படியானால் கனவில் வந்த அனைத்தும் உண்மையாகுமா? அம்மாவிற்கு ஆபத்தென்றது... கடவுளே! நீ சொன்ன மாதிரி நான் இதோ வந்துட்டேன். என் அம்மாவுக்கு எதுவும் அகக்கூடாது.’ முதலில் தாயைப் பார்க்க முடிவு செய்தவன் திரும்பி “ஹேய் பெண்ணே!” என்றழைத்தான். திரும்பிய திருமொழியிடம்... “உன்னோட அந்த வார்த்தைக்கு நான் இன்னொரு டைம் பதில் சொல்றேன். இப்ப பை” என்று சிரித்தபடியே கிளம்பினான்.
“யாருக்கா அது? உன் முகம் அவரைப் பார்த்து ஏன் கலவரமாயிருக்கு? எதாவது பிரச்சனை பண்ணினானா? சொல்லு நம்ம பசங்களை வரச்சொல்லிப் பார்த்திருவோம்.”
“ப்ச்... யாருன்னே தெரியாது” என்றாள் எரிச்சலில்.
“தெரியாமலா பை சொன்னார்.”
“ஆமா. எதாவது கிராக்கு கேஸாயிருக்கும். உன் அண்ணியைக் காண்பிக்கப் போறியா இல்லையா?”
“அதோ வர்றாங்க” என்றதும் நடக்க ஆரம்பிக்க... நினைவுகளோ மோதியவன் மேலேயே நின்றது. கனவில் வந்த அதே உருவம். கனவில் சொன்னதுபோல் முதல்முறை பார்க்கையிலேயே திருமணம் பற்றிப் பேசுகிறான். ‘மொழி ஜாக்கிரதையா இரு.’ தனக்குத்தானே சமாதானம் செய்தாள் அவள்.
“மொழியின் மௌனமொழியை உடைப்பானா? அவள் கனவில் வந்த இளங்கதிரானவன்!”
“ஹாய் அண்ணி! இவங்க திருமொழி. என்னோட அக்கா” என்று பெருமையுடன் அறிமுகப்படுத்த... திருமொழிக்கோ ஆச்சர்யம். அடுத்தடுத்து ஆச்சர்யமளித்துக் கொண்டிருந்தான் அவ்விளைஞன்.
“அக்காவா!” ஆச்சர்யப்பட்டாலும் “நான் சரண்” என தன்னை அறிமுகப்படுத்தினாள் அப்பெண்.
“டேய் தம்பிப்பையா! உன் அண்ணி பெயர் பையன் பெயர் மாதிரியிருக்கு? நம்ம ஊர் சைடு இந்த மாதிரிப் பெயர் வைக்கமாட்டாங்களே. உன் அண்ணனுக்கு இது லவ் மேரேஜா?” என்றாள் அவனிடம் கிசுகிசுப்பாக.
“ஏய் யக்கா. அப்படிலாம் இல்ல. வீட்ல பார்த்த பொண்ணுதான்” என்றான் சிறு அதட்டலாக.
“உங்க சந்தேகம் என்னன்னு சொல்லவா?” என்றதும் திருமொழி திருதிருவென விழித்து அவளைக் காண... “சரண்யா என் பெயர்” என்றாள் புன்னகையுடன்.
“சாரி அண்ணி.”
“நீயேன்டா சாரி கேட்கிற. பொதுவாவே இந்த மாதிரி கேள்வி வரும்தான” என்றாள் திரு.
“எக்ஸாக்ட்லி மொழி. எதுக்கு தப்பே செய்யாம சாரி கேட்கணும். சரி வாங்க டைமாகுது” என்றதும் காரை நோக்கி நடந்தார்கள்.
“அம்மா எங்கேயிருக்கீங்க?” என்று தாயை அழைத்துக் கேட்டான் இளங்கதிர்.
“ஏன்டா முன்னாடி வந்து சர்ப்ரைஸ் குடுக்கப்போற மாதிரி சொல்ற?”
“அட சொல்லுங்க தாயே! நீங்க சென்னையில இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”
“நீ என் பையன்றதை நிரூபிக்கிறடா ராஜா.”
“ஐஸ் வைச்சது போதும். ப்ளீஸ் தாயே அட்ரஸ்.”
“சரி தர்றேன்” என்று வத்தலகுண்டில் உள்ள ஒரு லாட்ஜ் பெயர் சொன்னார். கால் டேக்ஸி டிரைவரிடம் சொல்லி அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தாய் முன் நின்றான்.
“நீ எப்படி இங்க? அப்பா எங்கடா? நீ வந்தது அப்பாவுக்குத் தெரியுமா? இல்லன்னா...”
“அமைதி அமைதி தாயாரே! வந்த புள்ளையை உட்காரக்கூட விடாம முதல்ல எனக்கு டிபன் சொல்லுங்கமா. நேத்து நைட்டிலிருந்து சாப்பிடாததால ரொம்பப் பசிக்குது.”
“என்னது சாப்பிடலையா? ஏன்டா ராஜா நேத்து கேட்டப்ப சாப்பிட்டதா சொன்ன? பொய் சொன்னியா?”
“சாப்பிட உட்கார்ந்து இரண்டு வாய் எடுத்து வச்சேன். அதுக்கு மேல என்னால முடியல. அப்படியே வச்சிட்டு எழுந்துட்டேன். அப்பாகூட சரியா சாப்பிடல.”
“ரெண்டு பேரும்... ப்ச்.. ஏன்டா...”
“நீங்களும்தான் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. முதல்ல டிபன் சொல்லுங்க அன்னையே” என்று அப்படியே கட்டிலில் சரிந்தான். மனதில் வரும் வழியில் நடந்த நிகழ்வுகள் நினைவு வந்தது.
மதுரையிலிருந்து பரவை வழி வத்தலகுண்டு வரும் வழியில், வாடிப்பட்டியில் ஓரிடத்தில் கண்டான் அவளையும், அவளுடனிருந்த பெண்மணியையும். அப்பெண் தன் கனவில் வந்து தன்னை மறந்தாயே என கேட்டவள். அன்றைய முகங்கள் அனைத்தும் தன்னுள் பதிந்து போனதாலோ என்னவோ அப்பெண்ணைப் பார்த்ததும் கண்டுகொண்டான்.
ரொம்ப எளிமையாக, சற்று ஏழ்மையாகத் தெரிந்தார்கள் இருவரும். சந்தோஷங்களைத் தொலைத்த முகங்கள். ‘இவர்களின் சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கத்தான் என்னை அந்த சக்தி அழைத்ததா?’ மனதிற்குள் கேள்வி எழுந்தது. டிரைவரிடம் அவ்விடம் பற்றிக் கேட்டு காரின் வேகத்தைக் குறைத்து அவர்களையே பார்த்திருந்தனுக்கு ஏனோ அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் வேகம். இருவரும் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டு ஒரு தெருவிற்குள் நுழைய அவ்விடத்தை தன் செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அவர்களையும் தான். அவர்களைப் பின் தொடரத்துடித்த மனதை அடக்கி காரை எடுக்கச் சொன்னான்.
‘என்னை மறந்துட்டியா?’ ‘யார் இவள்? ஏன் அப்படிக் கேட்டாள்? என்னால் இவளுக்கு என்ன உதவி தேவைப்படும். ஏழ்மையில் இருப்பதால் பண உதவியாக இருக்குமோ? இல்லை இருக்காது.’ ஏனோ அவர்களைப் பணத்துடன் சம்பந்தப்படுத்த மனம் மறுத்தது. அப்பெண்மணியைப் பார்க்கையில், தாய் மடிதேடும் கன்றாய் துள்ளிக்குதிக்கும் மனதையும் அடக்க வழியில்லை அவனுக்கு.
‘அவர்களுக்கு எதாவது பிரச்சனையா? ஏன் அவர்கள் முகம் அப்படியிருந்தது? ஏன் நான் அவர்களைப் பற்றியே சிந்திக்கிறேன்?’ தன் தலையை யாரோ வருடுவது தோன்ற கண்விழித்து தாயைக் கண்டவன் அவரைத் தன்னருகில் அமர வைத்து தாயின் மடியில் தலைவைத்து கையை இறுகப் பற்றிக்கொண்டான்.
“என்னடா ராஜா கையெல்லாம் ஜில்லுன்னு இருக்கு? ஒரு நைட்தான பார்க்கல. அதுக்காக இப்படியா? சரி வா சாப்பிடலாம்” என்று எழப்போனவர் கையை விடாமல் பிடித்து “கொஞ்ச நேரம் இப்படியே உட்காருமா. எனக்கு உன்கூடவே இருக்கணும்” என்றான் கண்திறக்காமலே எதிலிருந்தோ தப்பிப்பது போல்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து மகனின் தோளில் மெள்ளத் தட்டிக்கொடுக்க அப்படியே தூங்கினான். அவன் முகம் பார்த்தவருக்கு மெல்லிய புன்னகை எழுந்தது. மகனின் இந்த மாற்றம் சந்தோஷமே. சின்ன வயதில் அவனின் பிடிவாதங்களும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும் அதிகம். அதே நேரம் பாசமும் அதிகம் உள்ளவன். மகனின் பிடிவாத குணம் எடுத்தெறிந்து பேசுவது அனைத்தும் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்திருந்த பொழுது கரைந்து காணாமல் போனது.
அதன்பின் படிப்பில் பின்தங்கியிருந்தவன் அனைத்தையும் கற்றான். தன்னை மீறிய ஒரு நிதானம் மகனின் செய்கையில். இன்றும் இனிய இளங்கதிராய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.
“டேய் தம்பிப்பையா! உன் ரிலேடிவ்ஸ் கூப்பிட நீ வரலாம். என்னை எதுக்குடா இழுத்துட்டு வர்ற?”
“அட சும்மா வாக்கா. ப்ளைட் வந்திருக்கும்.”
“ரொம்ப முக்கியம் போ.” முனகியபடி வந்தவளை ஒரு பார்வை பார்த்து “எப்பவும் காடு கழனின்னு இருக்கியே கொஞ்ச நேரம் ஜாலியா ஊர் சுத்தக் கூட்டிட்டு வந்தா என்ஜாய் பண்ணவியா. அதை விட்டுட்டு...”
“டேய் தம்பி! மதுரையில மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளம்னு எவ்வளவு இடமிருக்கு. அதை விட்டுட்டு...”
“யக்கோவ்! இப்பவே சாமியாராகப் போறியா என்ன. ஏன் அதிசயம் தீம் பார்க் கூட்டிட்டுப் போகச் சொல்லு. இல்லையா, சிட்டியிலேயே பெரிய தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகலாம்னு சொல்லு. இல்லையா, தம்பின்ற உரிமையில் புடவை நகை கேளு. அதை விட்டுட்டு...”
அவனின் வார்த்தை தந்த ஆனந்தத்தில் கண்கலங்க நின்று விட்டாள் அவள்.
பதில் இல்லாமல் போக திரும்பிப் பார்த்தவன், “என்னக்கா அங்கயே நின்னுட்ட? ஏய் என்ன கண்ணெல்லாம் கலங்கிருக்கு?” பதற்றத்துடன் அவளருகில் வந்தான்.
“உன்னால்தான்டா. என்னை உனக்கு இந்த மூணு நாளாதான தெரியும். அதுக்குள்ள என்னடா பாசம் உனக்கு? சிங்கிள் பொண்ணா தனியா இருந்தேன்டா. பாசம்ன்ற பெயர்ல என்னை எமோஷனலா லாக் பண்ற நீ!”
“ஹேய் யக்கா ரொம்ப ஃபீலிங் காட்டாத. உன்கிட்ட எவ்வளவு வேலை வாங்க வேண்டியிருக்கு. அதுக்கான கமிஷன்தான் இதெல்லாம். அதோட வீட்ல நானும் அண்ணனும் மட்டும்தானா... சோ, சண்டை போட அக்கா தங்கை இல்லாம போரடிக்குது. இப்ப அண்ணி வராங்கதான். அவங்க எங்களோட இருக்கமாட்டாங்களே. கல்யாணம் முடிஞ்சி ஒன் வீக்ல ரெண்டு பேரும் வேலை செய்யுற இடத்திற்கு பறந்திருவாங்க. அப்புறம் நானும் அப்பா அம்மாவும்தான்” என்றான் சோகமாக முகம் வைத்து.
“டேய் உன்னை... உன் டைம்பாஸ்காகவும் உன் வேலைக்காகவும் ஆள் தேடுனியா. டேய் தம்பிப்பையா ஓடாத நில்லுடா?”
“எதுக்கு என் மண்டையில ஒரு கொண்டை வளர்த்துக்கிறதுக்கா. அதெல்லாம் நிற்க முடியாது” என்று அவன் ஓட...
“டேய்! எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. ஏய் நில்லு சொல்றேன்ல” என்று அவனை விரட்டிச் செல்கையில் யார் மீதோ மோதி “சாரி” என்று தடுமாறவும், தன்னைப் பிடித்து நிறுத்த தான் மோதிய ஆணின் கை தன்புறம் வருவதை உணர்ந்தவள், “நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள் அவசரமாக.
அவனோ குறும்புடன் “என்ன? மேரேஜ் பண்ணிக்கிறீங்களா?” என்றான் பட்டென்று.
சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அதிர்ச்சியில் மூச்சடக்கி அப்படியே நின்றுவிட்டாள். ‘அவன்தானா? கனவின் நாயகன் இங்கே எப்படி? சொன்னாற்போல் வந்தேவிட்டானா! இதிலிருந்து எப்படித் தப்புவது.’ மனம் யோசனையிலாழ்ந்தது.
“யக்கா வாக்கா அங்க என்ன பண்ற? அண்ணி வந்தாச்சி பாரு” என்று அவளின் கைபிடித்து இழுத்துச் செல்ல... அப்பொழுதுதான் அவளது சுவாசம் நேரானது.
‘இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே. எங்கே?’ என ஞாபகச் சுவடுகளைத் தட்டிப்பார்த்தவனுக்கு நினைவு வர அவனுக்கே ஆச்சர்யம். ஆச்சர்யம் என்பதைவிட அதிசயமாக இருந்தது. கனவில் வருவது நிஜத்தில் நடக்கும் என்பதைக் கிண்டலடித்தவன், இன்று நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான்.
‘அப்படியானால் கனவில் வந்த அனைத்தும் உண்மையாகுமா? அம்மாவிற்கு ஆபத்தென்றது... கடவுளே! நீ சொன்ன மாதிரி நான் இதோ வந்துட்டேன். என் அம்மாவுக்கு எதுவும் அகக்கூடாது.’ முதலில் தாயைப் பார்க்க முடிவு செய்தவன் திரும்பி “ஹேய் பெண்ணே!” என்றழைத்தான். திரும்பிய திருமொழியிடம்... “உன்னோட அந்த வார்த்தைக்கு நான் இன்னொரு டைம் பதில் சொல்றேன். இப்ப பை” என்று சிரித்தபடியே கிளம்பினான்.
“யாருக்கா அது? உன் முகம் அவரைப் பார்த்து ஏன் கலவரமாயிருக்கு? எதாவது பிரச்சனை பண்ணினானா? சொல்லு நம்ம பசங்களை வரச்சொல்லிப் பார்த்திருவோம்.”
“ப்ச்... யாருன்னே தெரியாது” என்றாள் எரிச்சலில்.
“தெரியாமலா பை சொன்னார்.”
“ஆமா. எதாவது கிராக்கு கேஸாயிருக்கும். உன் அண்ணியைக் காண்பிக்கப் போறியா இல்லையா?”
“அதோ வர்றாங்க” என்றதும் நடக்க ஆரம்பிக்க... நினைவுகளோ மோதியவன் மேலேயே நின்றது. கனவில் வந்த அதே உருவம். கனவில் சொன்னதுபோல் முதல்முறை பார்க்கையிலேயே திருமணம் பற்றிப் பேசுகிறான். ‘மொழி ஜாக்கிரதையா இரு.’ தனக்குத்தானே சமாதானம் செய்தாள் அவள்.
“மொழியின் மௌனமொழியை உடைப்பானா? அவள் கனவில் வந்த இளங்கதிரானவன்!”
“ஹாய் அண்ணி! இவங்க திருமொழி. என்னோட அக்கா” என்று பெருமையுடன் அறிமுகப்படுத்த... திருமொழிக்கோ ஆச்சர்யம். அடுத்தடுத்து ஆச்சர்யமளித்துக் கொண்டிருந்தான் அவ்விளைஞன்.
“அக்காவா!” ஆச்சர்யப்பட்டாலும் “நான் சரண்” என தன்னை அறிமுகப்படுத்தினாள் அப்பெண்.
“டேய் தம்பிப்பையா! உன் அண்ணி பெயர் பையன் பெயர் மாதிரியிருக்கு? நம்ம ஊர் சைடு இந்த மாதிரிப் பெயர் வைக்கமாட்டாங்களே. உன் அண்ணனுக்கு இது லவ் மேரேஜா?” என்றாள் அவனிடம் கிசுகிசுப்பாக.
“ஏய் யக்கா. அப்படிலாம் இல்ல. வீட்ல பார்த்த பொண்ணுதான்” என்றான் சிறு அதட்டலாக.
“உங்க சந்தேகம் என்னன்னு சொல்லவா?” என்றதும் திருமொழி திருதிருவென விழித்து அவளைக் காண... “சரண்யா என் பெயர்” என்றாள் புன்னகையுடன்.
“சாரி அண்ணி.”
“நீயேன்டா சாரி கேட்கிற. பொதுவாவே இந்த மாதிரி கேள்வி வரும்தான” என்றாள் திரு.
“எக்ஸாக்ட்லி மொழி. எதுக்கு தப்பே செய்யாம சாரி கேட்கணும். சரி வாங்க டைமாகுது” என்றதும் காரை நோக்கி நடந்தார்கள்.
“அம்மா எங்கேயிருக்கீங்க?” என்று தாயை அழைத்துக் கேட்டான் இளங்கதிர்.
“ஏன்டா முன்னாடி வந்து சர்ப்ரைஸ் குடுக்கப்போற மாதிரி சொல்ற?”
“அட சொல்லுங்க தாயே! நீங்க சென்னையில இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”
“நீ என் பையன்றதை நிரூபிக்கிறடா ராஜா.”
“ஐஸ் வைச்சது போதும். ப்ளீஸ் தாயே அட்ரஸ்.”
“சரி தர்றேன்” என்று வத்தலகுண்டில் உள்ள ஒரு லாட்ஜ் பெயர் சொன்னார். கால் டேக்ஸி டிரைவரிடம் சொல்லி அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தாய் முன் நின்றான்.
“நீ எப்படி இங்க? அப்பா எங்கடா? நீ வந்தது அப்பாவுக்குத் தெரியுமா? இல்லன்னா...”
“அமைதி அமைதி தாயாரே! வந்த புள்ளையை உட்காரக்கூட விடாம முதல்ல எனக்கு டிபன் சொல்லுங்கமா. நேத்து நைட்டிலிருந்து சாப்பிடாததால ரொம்பப் பசிக்குது.”
“என்னது சாப்பிடலையா? ஏன்டா ராஜா நேத்து கேட்டப்ப சாப்பிட்டதா சொன்ன? பொய் சொன்னியா?”
“சாப்பிட உட்கார்ந்து இரண்டு வாய் எடுத்து வச்சேன். அதுக்கு மேல என்னால முடியல. அப்படியே வச்சிட்டு எழுந்துட்டேன். அப்பாகூட சரியா சாப்பிடல.”
“ரெண்டு பேரும்... ப்ச்.. ஏன்டா...”
“நீங்களும்தான் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. முதல்ல டிபன் சொல்லுங்க அன்னையே” என்று அப்படியே கட்டிலில் சரிந்தான். மனதில் வரும் வழியில் நடந்த நிகழ்வுகள் நினைவு வந்தது.
மதுரையிலிருந்து பரவை வழி வத்தலகுண்டு வரும் வழியில், வாடிப்பட்டியில் ஓரிடத்தில் கண்டான் அவளையும், அவளுடனிருந்த பெண்மணியையும். அப்பெண் தன் கனவில் வந்து தன்னை மறந்தாயே என கேட்டவள். அன்றைய முகங்கள் அனைத்தும் தன்னுள் பதிந்து போனதாலோ என்னவோ அப்பெண்ணைப் பார்த்ததும் கண்டுகொண்டான்.
ரொம்ப எளிமையாக, சற்று ஏழ்மையாகத் தெரிந்தார்கள் இருவரும். சந்தோஷங்களைத் தொலைத்த முகங்கள். ‘இவர்களின் சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கத்தான் என்னை அந்த சக்தி அழைத்ததா?’ மனதிற்குள் கேள்வி எழுந்தது. டிரைவரிடம் அவ்விடம் பற்றிக் கேட்டு காரின் வேகத்தைக் குறைத்து அவர்களையே பார்த்திருந்தனுக்கு ஏனோ அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் வேகம். இருவரும் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டு ஒரு தெருவிற்குள் நுழைய அவ்விடத்தை தன் செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அவர்களையும் தான். அவர்களைப் பின் தொடரத்துடித்த மனதை அடக்கி காரை எடுக்கச் சொன்னான்.
‘என்னை மறந்துட்டியா?’ ‘யார் இவள்? ஏன் அப்படிக் கேட்டாள்? என்னால் இவளுக்கு என்ன உதவி தேவைப்படும். ஏழ்மையில் இருப்பதால் பண உதவியாக இருக்குமோ? இல்லை இருக்காது.’ ஏனோ அவர்களைப் பணத்துடன் சம்பந்தப்படுத்த மனம் மறுத்தது. அப்பெண்மணியைப் பார்க்கையில், தாய் மடிதேடும் கன்றாய் துள்ளிக்குதிக்கும் மனதையும் அடக்க வழியில்லை அவனுக்கு.
‘அவர்களுக்கு எதாவது பிரச்சனையா? ஏன் அவர்கள் முகம் அப்படியிருந்தது? ஏன் நான் அவர்களைப் பற்றியே சிந்திக்கிறேன்?’ தன் தலையை யாரோ வருடுவது தோன்ற கண்விழித்து தாயைக் கண்டவன் அவரைத் தன்னருகில் அமர வைத்து தாயின் மடியில் தலைவைத்து கையை இறுகப் பற்றிக்கொண்டான்.
“என்னடா ராஜா கையெல்லாம் ஜில்லுன்னு இருக்கு? ஒரு நைட்தான பார்க்கல. அதுக்காக இப்படியா? சரி வா சாப்பிடலாம்” என்று எழப்போனவர் கையை விடாமல் பிடித்து “கொஞ்ச நேரம் இப்படியே உட்காருமா. எனக்கு உன்கூடவே இருக்கணும்” என்றான் கண்திறக்காமலே எதிலிருந்தோ தப்பிப்பது போல்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து மகனின் தோளில் மெள்ளத் தட்டிக்கொடுக்க அப்படியே தூங்கினான். அவன் முகம் பார்த்தவருக்கு மெல்லிய புன்னகை எழுந்தது. மகனின் இந்த மாற்றம் சந்தோஷமே. சின்ன வயதில் அவனின் பிடிவாதங்களும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும் அதிகம். அதே நேரம் பாசமும் அதிகம் உள்ளவன். மகனின் பிடிவாத குணம் எடுத்தெறிந்து பேசுவது அனைத்தும் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்திருந்த பொழுது கரைந்து காணாமல் போனது.
அதன்பின் படிப்பில் பின்தங்கியிருந்தவன் அனைத்தையும் கற்றான். தன்னை மீறிய ஒரு நிதானம் மகனின் செய்கையில். இன்றும் இனிய இளங்கதிராய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.