- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
4
“மிஸஸ்.பரிபூரணி வசீகரன். ம்... பெயர் பொருத்தம் நல்லாதான் இருக்கு. இவ்வளவு நடந்தும் நீ என் மிஸஸா இருக்கன்னா, உன்னை நான் மிஸ் பண்ணவே கூடாதே மிஸஸ்.பரிபூரணி வசீகரன்” என்று புன்னகைத்தான் அங்கு நடப்பதை கைபேசி வழியாகக் கேட்டும், கண் வழியாகப் பார்த்துமிருந்த வசீகரன்.
“ஷப்பா! என்ன கோபம் வருது உனக்கு? இந்தக் கோபத்தை அன்னைக்கு அவங்ககிட்ட காட்டியிருக்கலாமே மிஸஸ்.பரிபூரணி வசீகரன். அப்படிக் காட்டியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். அது சரி. நான் சரியாயிருந்திருந்தா உனக்கேன் இந்த நிலைமை. இதையே நீயும் நினைச்சிருப்பதான? எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச? பார்த்ததும் பிடிச்சதால கல்யாணத்துக்கு சம்மதிச்சியா? இல்ல உன் அப்பனோட கட்டாயத்துனால சரி சொன்னியா?”
“எது எப்படியோ, இதுக்குக் காரணமான உன் அப்பனையும், என் அப்பனையும் என்னைக்கும் மன்னிக்கமாட்டேன் மிஸஸ்.பரிபூரணி வசீகரன். உனக்கு ஒரு அப்பனா அந்தாளும் எதையும் சரியா செய்யல. ஒரு மாமனாரா என் அப்பனும் நடந்துக்கல. நீ தப்புப் பண்ணிட்ட. இரண்டு பேரையும் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளியிருக்கணும். நீ என்கிட்ட வந்ததும் இருக்கு அவங்களுக்கு.”
அதற்கு மிஸஸ்.பரிபூரணி வசீகரன் அவளின் வசீகரனிடம் வரவேண்டுமல்லவா! பூரணி பூரண சம்மதத்துடன் வருவாளா? இல்லை வசீகரன் அவளை வசீகரித்து தன்வசப்படுத்துவானா?
“ஏன் பூரணி என்கிட்ட சொல்லலை?” என்ற திடீர்க் கேள்வியில், அப்பொழுதுதான் தான் உண்மையை உளறிக் கொண்டிருந்ததை உணர்ந்தவள் அதிர்ந்து தோழியைக் காண, “சொல்லு பூரணி? இவர்கிட்ட சொன்னது உண்மையா? என்ன அமைதியாயிருக்க? வழிப்போக்கன்கிட்ட சொல்வ என்கிட்ட சொல்லமாட்ட அப்படித்தான?” என்றாள் கேட்ட உண்மையினாலான கோபம் குறையாது.
“ஹலோ! யாரை வழிப்போக்கன் சொல்றீங்க? நான் ஒரு டா...”
“டாக்கோ இல்ல டாக்கோட டாக்டரோ? எதுவாயிருந்தாலும் நீங்க வழிப்போக்கன்தான். புரியுதா? எல்லாம் வாங்கிட்டா வெளில போகலாம்” என்றதும், ஏதோ முனகியபடி அவன் வெளியேற, “ஹலோ! இங்க இருக்கிற மீதிப்பொருளை யார் எடுத்துட்டுப் போவாங்க? எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணுங்க” என்றாள் எரிச்சலுடன்.
“கடைசியா வாங்கின இரண்டுக்கும் வேலை கிடையாது. நான் சிங்கிள் பாய்” என்று தான் வாங்கியதைக் கண்டு தானே முகம் சுளித்தபடி சொன்னான்.
“அப்புறம் ஏன்டா இதை வாங்குறேன்ற பெயர்ல இவ்வளவு நேரம் இவளை டார்ச்சர் பண்ணின?” தோழியின் மீதுள்ள கோபமும் சேர அவனிடம் கத்தினாள் சண்முகி.
“கல்யாணம் நடந்துட்டதா நினைச்சி வாங்கிட்டேன்ங்க. இப்பதான் எனக்குக் கல்யாணம் ஆகலைன்றதே நினைவு வருது. இதை வச்சி நான் என்ன செய்ய? அதை நீங்களே...”
“டேய்ய்ய்!!!” என்ற அலறலில், எங்கே அடித்து விடுவாளோ என்று பதறி நகர்ந்தவன், ‘பாசத்துக்காக மனுஷன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு’ என மனதில் அண்ணனவனைத் திட்டி, “ஏன்ங்க இத்தனை ஆங்காரம்? நீங்களே சேல் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்களே எதோ கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஆள் கிடையாதுங்க. இப்ப நான் கிளம்புறேன். தேவைன்னா வர்றேன்” என்று நகர ஆரம்பிக்க,
“வர்றேனா? வந்த உன்னைக் கொல்லுவேன். ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு” என்று அவனை விரட்டி, “நீ சொல்லு பூரணி?” என நின்றாள்.
“அ..அது...”
“அந்த அது எதுவாயிருந்தாலும் சொல்லு. இன்னும் மறைச்சி என்ன செய்யுறதா உத்தேசம்? அவ்வளவுதான் நம்மளோட நட்பு இல்ல?” என்றாள் கோபம் குறையாது.
“சண்மு!” எனும்போது ஆட்கள் வர, “ஆள் வர்றாங்க பாரு. அப்புறமா பேசலாம்டா” என்றும் தோழியவள் தன்னை முறைப்பதைக் கண்டு என்ன செய்வதென்று புரியாது சின்ன பெருமூச்சுடன் வியாபாரத்தைக் கவனித்தாள்.
மதியம்போல் வினோத் வந்திருந்ததால் கடையைப் பார்த்திருக்கச் சொல்லி அங்கிருந்த அறைக்குள் வந்து உணவு முடித்து சற்று ஆசுவாசமாக அமர, “இப்ப சொல்லு? கல்யாணத்தை மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது? உன் ஹஸ்பண்ட் கொடுமைக்காரரா? அதனாலதான் வந்துட்டியா?”
“ம்கூம்” என்று முனகலாய் வார்த்தை வெளியிட,
“தண்ணி, சிகரெட்னு...”
“இல்ல சண்மு” என்றாள் சலிப்பாய். ‘அப்படியிருந்தால் கூட விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கலாமே’ என்ற எண்ணம் வராமலில்லை.
“அப்ப ரொம்ப வசதியா? நீ மிடில்க்ளாஸ்னு விட்டுட்டாரா?”
“ப்ச்.. வசதிதான். அதுக்காக மல்டி மில்லியனர் கிடையாது. பணத்துக்குப் பின் ஓடுற ரகமுமில்லை.”
“ஒருவேளை கல்யாணத்துக்கு முன்ன வேற பொண்ணை விரும்பியிருந்ததால உன்னைப் பிடிக்கலையோ?” யோசிப்பதுபோல் முகத்தைத் தூக்கினாள்.
“அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.”
“அப்ப பொம்பளைப் பொறுக்கியா?” என்றாள் பட்டென்று.
“அடியேய்ய்.. லவ்வுக்கே வழியில்லைன்றேன். இதுல பொண்ணுங்களைப் பொறுக்க வேண்டியதுதான் பாக்கி.”
“அப்ப நீயா சொல்லமாட்ட? ஏய்! ஒருவேளை அவனா இவன்?” அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் பொருட்டு வாயில் வந்ததையெல்லாம் கேட்டாள்.
முடிந்த மட்டும் முறைத்து “போடி லூசு” என்றாள்.
“அப்ப பைத்தியமாடி உன் புருஷன்?” என்றாள் கோபமாக. எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதிலே வந்தால் அவளும்தான் என்ன செய்வாள்.. கோபத்தில் கேட்டேவிட்டாள். கேட்டபின் தன் தவறு புரிய மன்னிப்பு கேட்க வாய் திறக்கையில், “சண்மு ப்ளீஸ். அப்படிலாம் சொல்லாத” என்ற பூரணியின் வார்த்தையில் அதிர்ந்துவிட்டாள்.
“ப்..பூரணி நி..நிஜமாவேவா? எப்படி?” என்றாள் திணறலாய்.
“ம்.. எல்லாம் என் தலையெழுத்து.”
“கல்யாணத்துக்கு முன்ன இருந்தே அவர் அப்படித்தானா? இல்ல கல்யாணத்துக்கப்புறமா?”
“கல்யாணத்துக்கு முன்னயிருந்தே அப்படித்தான்.”
“ஓ.. அன்னைக்கு நீ சொன்ன சிஸ்டர் கதை உன்னோடதுதானா?”
“ம்..” என தலையசைத்தாள்.
“எல்லாம் விடு. உன் அப்பா எப்படி சம்மதிச்சாங்க?”
“இப்படின்னு தெரியாது. வசதி பார்த்து சம்மதிச்சிட்டாங்க. உனக்கு எங்க வீட்டைப்பற்றித் தெரியுமே சண்மு” என்றாள் குரல் கமற.
“ஆமா. நீ எனக்கு என்ன சொல்றியோ அது மட்டும்தான் எனக்குத் தெரியும். அப்பா கொஞ்சம் பெருமையடிக்கிற ஆள்னு சொல்லியிருக்க. உங்கம்மா அப்பாவுக்கேத்த தப்பாத மனைவி. உன்கிட்ட அன்பைக்காட்ட மறுக்கிறவங்க. என்னை உங்க வீட்டுக்கு வரவிடமாட்ட. அதனால அதிகம் உங்க வீட்டைத் தெரியாது. உன் அக்கா ஜனனிகிட்ட பேசலாம்னு போனா அவள் போடுற சீன்ல பயந்து ஓடியிருவேன். அவளும் காதல் கல்யாணம்னு போயிட்டா.”
“அதைவிடு படிப்பு வேலைன்னு எல்லா இடத்திலும் நாம ஒண்ணாதான் இருக்கோம். எனக்குத் தெரியாம எப்ப கல்யாணமாச்சிது? மிஸஸான நீ எப்படி திரும்பவும் மிஸ் ஆன?” என்று தோழியை ஆழ்ந்து பார்த்தாள்.
“இரண்டு வருஷம் முன்ன நீ உங்க ஊர் கோவில் திருவிழாவுக்குப் போனவ ஒரு மாசம் அங்கேயே இருந்துட்ட. அப்ப நடந்ததுதான் இது.”
“தெளிவா சொல்லு பூரணி?” என்றாள் சண்முகி.
“அண்ணி என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க” என்று ஐஸ்வர்யாவிடம் அடமாக நின்றிருந்ததை நினைத்துப் பார்த்தான் வசீகரன். நிறைய கெஞ்சிய பின்னரே சொல்லத் தயாரானாள். அதுவும் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு.
சில நொடி கண்மூடிய பரிபூரணி, “அப்பா ஒரு வரட்டு கௌரவம் பிடிச்சவர்ன்றது உனக்கேத் தெரியும். வெளில யாராவது ஒருத்தர் எப்படியிருக்கீங்க கேட்டுட்டா போதும் தன்னோட புகழ்பாட ஆரம்பிச்சிருவாங்க.”
முதலில் இரும்பு வியாபாரம்தான் செய்து கொண்டிருந்தார் மலையரசன். திடீரென்று என்ன நினைத்தாரோ அதை விட்டுவிட்டு, தாங்களிருந்தது வாடகை வீடு என்பதால் சிறிதளவு சேவல், கோழி வாங்கி வளர்த்து அதில் லாபம் பார்க்க ஆரம்பித்தார். சம்பாதிக்கும் பணம் வாடகை, சாப்பாடுக்கே சரியாகிவிட, கொஞ்சம் இருப்பு இருந்தாலும் சேர்த்து வைக்கத் தோன்றாது அவருக்கு. அதற்காகவே ஒரு செலவை உருவாக்கி காலி செய்வார்.
“மிஸஸ்.பரிபூரணி வசீகரன். ம்... பெயர் பொருத்தம் நல்லாதான் இருக்கு. இவ்வளவு நடந்தும் நீ என் மிஸஸா இருக்கன்னா, உன்னை நான் மிஸ் பண்ணவே கூடாதே மிஸஸ்.பரிபூரணி வசீகரன்” என்று புன்னகைத்தான் அங்கு நடப்பதை கைபேசி வழியாகக் கேட்டும், கண் வழியாகப் பார்த்துமிருந்த வசீகரன்.
“ஷப்பா! என்ன கோபம் வருது உனக்கு? இந்தக் கோபத்தை அன்னைக்கு அவங்ககிட்ட காட்டியிருக்கலாமே மிஸஸ்.பரிபூரணி வசீகரன். அப்படிக் காட்டியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். அது சரி. நான் சரியாயிருந்திருந்தா உனக்கேன் இந்த நிலைமை. இதையே நீயும் நினைச்சிருப்பதான? எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச? பார்த்ததும் பிடிச்சதால கல்யாணத்துக்கு சம்மதிச்சியா? இல்ல உன் அப்பனோட கட்டாயத்துனால சரி சொன்னியா?”
“எது எப்படியோ, இதுக்குக் காரணமான உன் அப்பனையும், என் அப்பனையும் என்னைக்கும் மன்னிக்கமாட்டேன் மிஸஸ்.பரிபூரணி வசீகரன். உனக்கு ஒரு அப்பனா அந்தாளும் எதையும் சரியா செய்யல. ஒரு மாமனாரா என் அப்பனும் நடந்துக்கல. நீ தப்புப் பண்ணிட்ட. இரண்டு பேரையும் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளியிருக்கணும். நீ என்கிட்ட வந்ததும் இருக்கு அவங்களுக்கு.”
அதற்கு மிஸஸ்.பரிபூரணி வசீகரன் அவளின் வசீகரனிடம் வரவேண்டுமல்லவா! பூரணி பூரண சம்மதத்துடன் வருவாளா? இல்லை வசீகரன் அவளை வசீகரித்து தன்வசப்படுத்துவானா?
“ஏன் பூரணி என்கிட்ட சொல்லலை?” என்ற திடீர்க் கேள்வியில், அப்பொழுதுதான் தான் உண்மையை உளறிக் கொண்டிருந்ததை உணர்ந்தவள் அதிர்ந்து தோழியைக் காண, “சொல்லு பூரணி? இவர்கிட்ட சொன்னது உண்மையா? என்ன அமைதியாயிருக்க? வழிப்போக்கன்கிட்ட சொல்வ என்கிட்ட சொல்லமாட்ட அப்படித்தான?” என்றாள் கேட்ட உண்மையினாலான கோபம் குறையாது.
“ஹலோ! யாரை வழிப்போக்கன் சொல்றீங்க? நான் ஒரு டா...”
“டாக்கோ இல்ல டாக்கோட டாக்டரோ? எதுவாயிருந்தாலும் நீங்க வழிப்போக்கன்தான். புரியுதா? எல்லாம் வாங்கிட்டா வெளில போகலாம்” என்றதும், ஏதோ முனகியபடி அவன் வெளியேற, “ஹலோ! இங்க இருக்கிற மீதிப்பொருளை யார் எடுத்துட்டுப் போவாங்க? எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணுங்க” என்றாள் எரிச்சலுடன்.
“கடைசியா வாங்கின இரண்டுக்கும் வேலை கிடையாது. நான் சிங்கிள் பாய்” என்று தான் வாங்கியதைக் கண்டு தானே முகம் சுளித்தபடி சொன்னான்.
“அப்புறம் ஏன்டா இதை வாங்குறேன்ற பெயர்ல இவ்வளவு நேரம் இவளை டார்ச்சர் பண்ணின?” தோழியின் மீதுள்ள கோபமும் சேர அவனிடம் கத்தினாள் சண்முகி.
“கல்யாணம் நடந்துட்டதா நினைச்சி வாங்கிட்டேன்ங்க. இப்பதான் எனக்குக் கல்யாணம் ஆகலைன்றதே நினைவு வருது. இதை வச்சி நான் என்ன செய்ய? அதை நீங்களே...”
“டேய்ய்ய்!!!” என்ற அலறலில், எங்கே அடித்து விடுவாளோ என்று பதறி நகர்ந்தவன், ‘பாசத்துக்காக மனுஷன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு’ என மனதில் அண்ணனவனைத் திட்டி, “ஏன்ங்க இத்தனை ஆங்காரம்? நீங்களே சேல் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்களே எதோ கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஆள் கிடையாதுங்க. இப்ப நான் கிளம்புறேன். தேவைன்னா வர்றேன்” என்று நகர ஆரம்பிக்க,
“வர்றேனா? வந்த உன்னைக் கொல்லுவேன். ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு” என்று அவனை விரட்டி, “நீ சொல்லு பூரணி?” என நின்றாள்.
“அ..அது...”
“அந்த அது எதுவாயிருந்தாலும் சொல்லு. இன்னும் மறைச்சி என்ன செய்யுறதா உத்தேசம்? அவ்வளவுதான் நம்மளோட நட்பு இல்ல?” என்றாள் கோபம் குறையாது.
“சண்மு!” எனும்போது ஆட்கள் வர, “ஆள் வர்றாங்க பாரு. அப்புறமா பேசலாம்டா” என்றும் தோழியவள் தன்னை முறைப்பதைக் கண்டு என்ன செய்வதென்று புரியாது சின்ன பெருமூச்சுடன் வியாபாரத்தைக் கவனித்தாள்.
மதியம்போல் வினோத் வந்திருந்ததால் கடையைப் பார்த்திருக்கச் சொல்லி அங்கிருந்த அறைக்குள் வந்து உணவு முடித்து சற்று ஆசுவாசமாக அமர, “இப்ப சொல்லு? கல்யாணத்தை மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது? உன் ஹஸ்பண்ட் கொடுமைக்காரரா? அதனாலதான் வந்துட்டியா?”
“ம்கூம்” என்று முனகலாய் வார்த்தை வெளியிட,
“தண்ணி, சிகரெட்னு...”
“இல்ல சண்மு” என்றாள் சலிப்பாய். ‘அப்படியிருந்தால் கூட விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கலாமே’ என்ற எண்ணம் வராமலில்லை.
“அப்ப ரொம்ப வசதியா? நீ மிடில்க்ளாஸ்னு விட்டுட்டாரா?”
“ப்ச்.. வசதிதான். அதுக்காக மல்டி மில்லியனர் கிடையாது. பணத்துக்குப் பின் ஓடுற ரகமுமில்லை.”
“ஒருவேளை கல்யாணத்துக்கு முன்ன வேற பொண்ணை விரும்பியிருந்ததால உன்னைப் பிடிக்கலையோ?” யோசிப்பதுபோல் முகத்தைத் தூக்கினாள்.
“அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.”
“அப்ப பொம்பளைப் பொறுக்கியா?” என்றாள் பட்டென்று.
“அடியேய்ய்.. லவ்வுக்கே வழியில்லைன்றேன். இதுல பொண்ணுங்களைப் பொறுக்க வேண்டியதுதான் பாக்கி.”
“அப்ப நீயா சொல்லமாட்ட? ஏய்! ஒருவேளை அவனா இவன்?” அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் பொருட்டு வாயில் வந்ததையெல்லாம் கேட்டாள்.
முடிந்த மட்டும் முறைத்து “போடி லூசு” என்றாள்.
“அப்ப பைத்தியமாடி உன் புருஷன்?” என்றாள் கோபமாக. எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதிலே வந்தால் அவளும்தான் என்ன செய்வாள்.. கோபத்தில் கேட்டேவிட்டாள். கேட்டபின் தன் தவறு புரிய மன்னிப்பு கேட்க வாய் திறக்கையில், “சண்மு ப்ளீஸ். அப்படிலாம் சொல்லாத” என்ற பூரணியின் வார்த்தையில் அதிர்ந்துவிட்டாள்.
“ப்..பூரணி நி..நிஜமாவேவா? எப்படி?” என்றாள் திணறலாய்.
“ம்.. எல்லாம் என் தலையெழுத்து.”
“கல்யாணத்துக்கு முன்ன இருந்தே அவர் அப்படித்தானா? இல்ல கல்யாணத்துக்கப்புறமா?”
“கல்யாணத்துக்கு முன்னயிருந்தே அப்படித்தான்.”
“ஓ.. அன்னைக்கு நீ சொன்ன சிஸ்டர் கதை உன்னோடதுதானா?”
“ம்..” என தலையசைத்தாள்.
“எல்லாம் விடு. உன் அப்பா எப்படி சம்மதிச்சாங்க?”
“இப்படின்னு தெரியாது. வசதி பார்த்து சம்மதிச்சிட்டாங்க. உனக்கு எங்க வீட்டைப்பற்றித் தெரியுமே சண்மு” என்றாள் குரல் கமற.
“ஆமா. நீ எனக்கு என்ன சொல்றியோ அது மட்டும்தான் எனக்குத் தெரியும். அப்பா கொஞ்சம் பெருமையடிக்கிற ஆள்னு சொல்லியிருக்க. உங்கம்மா அப்பாவுக்கேத்த தப்பாத மனைவி. உன்கிட்ட அன்பைக்காட்ட மறுக்கிறவங்க. என்னை உங்க வீட்டுக்கு வரவிடமாட்ட. அதனால அதிகம் உங்க வீட்டைத் தெரியாது. உன் அக்கா ஜனனிகிட்ட பேசலாம்னு போனா அவள் போடுற சீன்ல பயந்து ஓடியிருவேன். அவளும் காதல் கல்யாணம்னு போயிட்டா.”
“அதைவிடு படிப்பு வேலைன்னு எல்லா இடத்திலும் நாம ஒண்ணாதான் இருக்கோம். எனக்குத் தெரியாம எப்ப கல்யாணமாச்சிது? மிஸஸான நீ எப்படி திரும்பவும் மிஸ் ஆன?” என்று தோழியை ஆழ்ந்து பார்த்தாள்.
“இரண்டு வருஷம் முன்ன நீ உங்க ஊர் கோவில் திருவிழாவுக்குப் போனவ ஒரு மாசம் அங்கேயே இருந்துட்ட. அப்ப நடந்ததுதான் இது.”
“தெளிவா சொல்லு பூரணி?” என்றாள் சண்முகி.
“அண்ணி என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க” என்று ஐஸ்வர்யாவிடம் அடமாக நின்றிருந்ததை நினைத்துப் பார்த்தான் வசீகரன். நிறைய கெஞ்சிய பின்னரே சொல்லத் தயாரானாள். அதுவும் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு.
சில நொடி கண்மூடிய பரிபூரணி, “அப்பா ஒரு வரட்டு கௌரவம் பிடிச்சவர்ன்றது உனக்கேத் தெரியும். வெளில யாராவது ஒருத்தர் எப்படியிருக்கீங்க கேட்டுட்டா போதும் தன்னோட புகழ்பாட ஆரம்பிச்சிருவாங்க.”
முதலில் இரும்பு வியாபாரம்தான் செய்து கொண்டிருந்தார் மலையரசன். திடீரென்று என்ன நினைத்தாரோ அதை விட்டுவிட்டு, தாங்களிருந்தது வாடகை வீடு என்பதால் சிறிதளவு சேவல், கோழி வாங்கி வளர்த்து அதில் லாபம் பார்க்க ஆரம்பித்தார். சம்பாதிக்கும் பணம் வாடகை, சாப்பாடுக்கே சரியாகிவிட, கொஞ்சம் இருப்பு இருந்தாலும் சேர்த்து வைக்கத் தோன்றாது அவருக்கு. அதற்காகவே ஒரு செலவை உருவாக்கி காலி செய்வார்.