• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
31



மிதமான அலங்காரம் அறையெங்குமென்றால் அதே அளவு மங்கையவளிடமும். அவளை எழிலாகக் காட்டிய புடவையின் நளினங்களுடன் உதட்டோரப் புன்னகையும் போட்டிபோட, அனைத்திற்கும் அச்சாரமாய் கையிலிருக்கும் பால் செம்பு பல கதைகள் கூறியது.

கணவனின் பார்வையில் தெரிந்த உணர்வுகள் அனைத்தும் அவளுக்கும் இடம் பெயர, அதுவரையிருந்த தைரியம் அவளிடமிருந்து விடைபெற, பார்வை தன்னாலே தாழ்ந்தது.

“ஹேய் மொழி! எவ்வளவு அழகாயிருக்க தெரியுமா?” என்றான் மென்மையான குரலில்.

பாலை அங்கிருந்த சின்ன மேஜையில் வைத்து அவனருகில் வந்து காலில் விழபோகையில், “ஹேய் என்ன பண்ற?” என்று பதறி தூக்கப்போக,

“யூஸுவலா எல்லாரும் பண்றதுதான். நீங்க ஆசைப்பட்டதும் கூட. சோ, நிதானமா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க?” என்றாள்.

“எதுக்குமா? நான் சும்மா... ப்ச்.. நீ எழுந்திரு.”

“ம்கூம்... ஆசீர்வாதம் பண்ணப்போறீங்களா? இல்லையா?” என்றாள் மிரட்டலாக.

“ம்... என்ன சொல்லி வாழ்த்தலாம்.” அவன் யோசனையிலாழ,

“என்ன செய்றீங்க?” என்றாள் கேலியாக.

“வெய்ட் ஏர்போர்ட்” என்றதும் அவள் கணவன் காலில் கிள்ள, “ஆ இருடி” என்றவன், “என்னோட எல்லா ஜென்மத்திலும் நீயே என் மனைவியா வந்து, நம் வாழ்வின் எல்லைவரை சந்தோஷமா நிறைவா வாழணும்” என்று ஆசீர்வதித்து மங்கையவளின் தோள்தொட்டு எழுப்பினான்.

“இந்த வாழ்த்து எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. தேங்க்ஸ்.”

“நானும்தான் மங்கை. என் வாழ்க்கையில் நீ வந்ததுதான் பெரிய வரம்” என நெகிழ்ந்து பாலை எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தான். அவள் கணவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொல்ல, அவன் மறுத்து அவளுக்குக் கொடுத்து பின்பே தான் குடித்தான்.

அருகருகே அமர்ந்தும் இருவரும் பேசாமலிருக்க, கைகள் மட்டும் ஒன்றையொன்று தழுவியிருக்க, தோள்கள் இரண்டும் ஒன்றையொன்று உரசியபடியிருந்தது.

“மொழி!”

“ம்... சொல்லுங்க கதிர் அத்தான்?”

அதில் புன்னகை எழ “நீ லவ் பண்றது கதிரைத்தான?”

“அதிலென்ன சந்தேகம். என் புருஷனா அறிமுகமானது கதிர்தான. அவங்களைத்தான் நான் லவ் பண்ணுவேன்.”

“தேங்க்ஸ். எனக்கும் அதுதான் வேணும். நான் கதிராதான் உன்னைக் கவரணும்னு நினைச்சது. கதிராதான் உன்னையும் சந்திச்சேன். என் காதலும் சக்சஸ்! என் மங்கையின் காதலும் சக்சஸ்!” நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தில் இறங்க, சேர்ந்திருந்த கைகளின் இறுக்கம் மங்கையவளின் மனம் சொன்னது.

“ஆர் யூ...” ஆரம்பித்தவன் வாய்மூடி, “இதுக்கு மேல என்ன ரெடியாகணும்?” மங்கையவளோ தன் நாணம் உடைக்க, அந்த மொத்தக் கவிதையையும் தன்னுள் அடக்கி, பல புதுக்கவிதைகள் படைத்தான் இளங்கதிர் அவன்!

“ஐ லவ் யூ அத்தான்!”

கிசுகிசுப்பாய் தன்னுள் இறங்கிய அவ்வார்த்தையில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “லவ் யூ மொழி” என்றான்.

“எனக்கு வராதுன்னு சொல்லாம ஒரு கவிதை சொல்லுங்களேன். உங்களுக்கு சூப்பரா வரும்னு தெரியும். உங்க மொழிக்காக அத்தான்.”

“இந்த டைம் இது தேவையா?”

“இதுதான் அதுக்கு ஏத்த டைம். எனக்கே எனக்காகன்னு சொல்வீங்கள்ல.” சில நிமிட அமைதி இருவருக்குள்ளும்.



கவி எழுதச் சொல்கிறாள் - என்

கவிதைப் பெண்ணிவள்!

ஒரு கவிதையே கவிதை கேட்கிறதே!

அடடே ஆச்சர்யக்குறி போட்டு

ஒரு வரியில் முடிக்க - நீ

ஹைக்கூ கவிதையல்ல பெண்ணே!

என் கனவுக் கவிதை நீ!

உனை எண்ணி கவி வடிக்கக்

கனவாகிப் போனதென் எழுத்துக்களோ!

வார்த்தைகளின்றித் தவித்தேனடி பெண்ணே!

வரம் தரும் தேவதையாய் - என்

வாழ்வை மலரச் செய்ய

வந்தாயே! எனக்கே எனக்காக!

உனக்கில்லா கவியா?

இதோ உனக்கே

உனக்கான கவிதை!

“எப்படி என் அவசரக் கவிதை?” என்றான்.

“சூப்பர் போங்க. தெரியாது தெரியாதுன்னு சொல்லியே எல்லாத்தையும் சொல்லிருறதுதான் உங்க ஸ்பெஷல்.” கண்மூடி கணவன் தோளில் படுத்து நெஞ்சை வருடியவளுக்கு, ஏதோ உறுத்த வேகமாக எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தாள்.

“என்னாச்சி மங்கை?” எழப்போனவனை அப்படியே இருக்கச்சொல்லி அவன் உடலின் காயங்களைத் தேட, சின்னதாக தளும்பு கூட இல்லை. மனைவியின் பார்வை போன இடம் கண்டவன் அவளின் கண்டனப் பர்வையில், “அ..அது...”

“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? இந்த இரண்டு வார ஹாஸ்பிடல் வாசம் எதுக்கு? ஏன் எல்லாரையும் கதற வச்சி அல்லாட விட்டீங்க? நான் பார்த்த அந்த துப்பாக்கிச் சம்பவம் ,அதைத் தொடர்ந்த உங்க ட்ரீட்மெண்ட், எப்படிப் பொய்யாச்சி?” என்றாள் பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கறார் குரலில்.

“ஹேய் சைலன்டா கேளுமா. இங்க வா சொல்றேன்” என்றான் அமைதியாக.

“முடியாது இப்படியே சொல்லுங்க” என்று அந்த மேஜையில் சாய்ந்து நிற்க...

“சரி விடு நான் வர்றேன்.” அவளருகில் உரசினாற்போல் நின்று விலகப்போன அவளின் கோவம் உணர்ந்து பிடித்து நிறுத்தி, “ஏன் இந்தக் கோவம் மங்கை?” என்றான்.

“கோவம் வராம? அந்த டைம் நான் எப்படித் துடிச்சிருப்பேன். எங்க எனக்கு இல்லாமலே போயிருவீங்களோன்னு எவ்வளவு கண்ணீர் விட்டிருப்பேன். அந்த வலி உங்களுக்கெப்படித் தெரியும். கண்மூடி ரசிச்சிட்டிருந்தீங்களா அதை?” குமுறிய அழுகையை அடக்க முடியாமல் போக, அவளின் கண்ணீர் துடைத்தவனின் கையைத் தட்டிவிட்டாள்.

மறுபடியும் கண்ணீர் துடைத்து, “இந்தக் கண்ணீருக்காகத்தான் மங்கை. கண்ணீர் கூட ஒரு சில நேரங்களில் நமக்கு மருந்துதான் தெரியுமா?”

“எனக்குக் கண்ணீர் மருந்தா?” புரியா பார்வையை கணவன்மேல் செலுத்தினாள்.

“துக்கமோ சந்தோஷமோ இந்தப் பதினைந்து வருஷமா, நீ அழுது கண்ணீர் வடிச்சது கிடையாதுதான?” அவளின் குழப்பத்துடனான சம்மதமான தலையசைவில்... “காரணம் கண்முன்ன பார்த்த நம்பமுடியாத சம்பவங்களின் தாக்கம். உன் கோவம், அழுகை எல்லாமே லட்சியம்ன்ற பெயர்ல மனசுக்குள்ள புதையல் மாதிரிப் புதைஞ்சிருச்சி. அந்த சம்பவம் நடந்து ஹாஸ்பிடல்ல உனக்கு ட்ரீட்மெண்ட் நடந்தப்ப டாக்டர் சொன்னதை, சித்தி அம்மாகிட்ட சொல்லியிருக்காங்க.”

ட்ரீட்மெண்ட் எடுத்தால் தன் கோபம் குறைந்துவிடுமென்று சிகிச்சை எடுக்காதது நினைவில் வந்தது திருமொழிக்கு.

“அந்த டைம் ட்ரீட்மெண்ட்கு நீ ஒத்துழைக்கலை. அடிபட்டா கூட ‘ஆ’ன்னு சத்தம் போட்டு வலியைப் பொறுத்து பின்ன அதை கண்டுக்கவே மாட்டியாம். நிஷா கல்யாணத்தோட கோபத்துலதான் உன்னை வெளிப்படுத்தின. அங்கேயும் கண்ணீர் மிஸ்ஸிங். நம்ம கல்யாணத்தோடவும் சண்டை போட்டியே தவிர கண்ணீர்... ம்கூம்... துக்கம்தான் அப்படின்னா... அதீத சந்தோஷம் உன் அம்மா தம்பி உயிரோட உனக்குக் கிடைத்த நிமிடங்கள். அப்பவும் சந்தோஷத்தை வெளிக்காட்டின உன் மனசு, கண்ணீரை மறைச்சிருச்சி.”

“டாக்டர் சொன்னதையும் தாண்டி சில புக்ஸ் படிச்சி, சிலரோட பேட்டிகள் பார்த்தேன். எல்லாமே உன் கண்ணீர்தான் உனக்கான மருந்துன்னு சொல்லிச்சி. அதுவரை நீ எதிலும் முழுமனசா ஈடுபடமாட்ட. ஒரு மனைவியை அழாம பார்த்துக்கணும்ன்ற கணவனுக்கான மரபை மீறி, உன்னை எப்படி அழ வைக்கலாம்னு யோசிச்சேன்.”

“கார்த்திக் சார் இந்த ஆபரேஷன் ஆரம்பிச்சப்ப, உங்களைக் கடத்தப்போறதா இன்பார்ம் கிடைச்சது. எல்லாருக்கும் பாதுகாப்பு குடுத்தாலும் அதையும் மீறி எல்லாம் நடந்திருச்சி. அடுத்து என்னன்னு யோசிச்சி அப்பாவை கார்மேகம் வீட்டுக்கு அனுப்பிட்டு, உங்களைத் தேடி கார்மேகம் வீட்டிலிருந்த ஒருத்தனைப் பிடிச்சி விசாரிச்சப்ப... அத்தையையும் கயலையும் கடத்தி நேரா வீட்டிற்கு கொண்டு வந்து வச்சவன், உங்களைக் கடத்தினப்ப நேரடியா வீட்டுக்குக் கொண்டு வராம மதுரையையே சுத்தி நம்ம வீட்லயே வைத்திருக்கிறதா சொன்னான்.”

“சிபிஐகு கேஸ் போனது ஜெயராமுக்குத் தெரியாது. அதனால முழு பாதுகாப்பு போடல. அதே டைம் அசால்டாகவும் இருக்கல. அப்பாவோட சேர்த்து வீட்ல உள்ள எல்லாரும் அவன் கையில் சிக்கினதும், தற்காப்புக்கு துப்பாக்கிச் சூடு ஓகேன்னு கார்த்திக் சார் அவங்க டீம்கு சொல்லிட்டிருந்தப்பதான், எனக்கு அந்த ஐடியா தோணிச்சி. உடனே அவர்கிட்ட பேசி உன் நிலையையும் எடுத்துச் சொன்னேன். அங்க பார் மொழி...” என்று மேலே காட்டினான்.


“கொழுப்பு உங்களுக்கு. கொசுவர்த்தி சுருள்லாம் வேண்டாம்” என்றதும் சத்தமாக சிரித்தான்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“இது எப்படி சரி வரும்னு நினைக்கிறீங்க கதிர்?”

“சார் மனசு எவ்வளவு இறுகியிருந்தாலும், கண்முன் இன்னொரு இழப்பை அவள் மனம் ஏற்காது. அதுவும் அவள் உயிரான நான்னா கண்டிப்பா மன இறுக்கம் உடையும்.”

“இதுல அவங்களுக்கு அதிர்ச்சியில எதாவது ஆகிருச்சின்னா?”

“அம்மா சொல்வாங்க சார். சாகணும்னு விதியிருந்தா அவனுக்கு இதுதான்னு காரணம் தேவையில்ல. சும்மா தண்ணீர் குடிக்கிறப்ப நெஞ்சடைச்சி செத்தவனும் இருக்கான். அம்மனே உன்னை இங்க அழைச்சிட்டு வந்திருக்குன்னா உன்னை பழிகுடுக்க இல்லை. உன்னால யாருக்கோ நல்லது நடக்கன்னு சொன்னாங்க. அப்ப நம்பலை சார். இப்ப நம்புறேன். மங்கைக்கு ஒண்ணும் ஆகாதுன்றதுல சின்னதா கூட மாற்றி யோசிக்கத் தோணல. என் ஒய்ஃப் சின்ன வயசு மங்கையா, எல்லா உணர்வுகளும் உள்ள பெண்ணா கிடைக்கணும். அதுக்குதான் உங்க ஹெல்ப் கேட்டேன்.”

“ஓகே கதிர். உங்க நம்பிக்கை பலிக்கட்டும். ஆல் தி பெஸ்ட்.”

“அவருக்கு ஒரு நன்றியைப் போட்டுட்டு, எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டரை கான்டாக்ட் பண்ணி, சிபிஐ ஆபரேஷன்னு சொல்லி ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் அவசரச்சிகிச்சைன்னு எல்லாமே பக்காவா ரெடி பண்ணிட்டோம்.”

“அப்ப அன்னைக்கு உடம்பெல்லாம் இரத்தம் எப்படி? நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?”

“ம்... ப்ளட் கலர் சாயம் திக்கா ரெடி பண்ணி, உடம்பில் இருபுறமும் வச்சிக் கட்டி எங்க குண்டு பட்டாலும், உடம்பைத் துளைக்காம ப்ளட் வர்றமாதிரி ரெடி பண்ணியிருந்தோம். நீ வந்தப்ப நான் இளநாதன்னு உண்மையைச் சொல்ல நீ மயங்கி விழுந்துட்ட. ஒரு பதட்டம் வந்தாலும் உன்னை என்ன செய்யன்னுதான் தோணிச்சி. துப்பாக்கி சத்தம் கேட்டு நீ முன்னாடி வர்றதா ஒருத்தர் இன்பார்ம் பண்ணவும், கார்மேகம் என்னை துப்பாக்கியில மடக்கவும் சரியாயிருந்தது. என் நிலை பார்த்து அழுது கத்துவன்னு பார்த்தா, பெண்கள் ரெண்டு பேரும் சேர்ந்து அந்தாள சோலிய முடிச்சிட்டீங்க? ஹா..ஹா அதுவும் கவரைக் க்ளௌஸா போட்டு துப்பாக்கிக் குண்டை உண்டிவில்லுல வச்சி... செம போ”

“ஐயோ! எப்படித் தெரியும்? ஏன் கேஸ் போடல? என்னை அரஸ்ட் பண்ணுவாங்களா? எனக்கு அவரைக் கொன்னதுல கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லைங்க. மனசுல ஒரு அமைதிதான் வந்தது.”

“புரியுதுமா. வீடே சிபிஐ கண்ட்ரோல்ல இருக்கும்போது இதெப்படி தெரியாமல் போகும். ஆனாலும், செம டேலண்ட் நீ. ஒரு துப்பாக்கியோட வேகத்தை சாதாரண உண்டிவில்லுல கொண்டு வந்த பாரு. மொத்த டீமும் உன்னைப் பாராட்டினாங்க. அந்த தோட்டா அவங்க என்னை நோக்கிச் சுட்டது.”

“அப்ப கேஸை எப்படி மாத்தினாங்க?”

“அவங்க ஆள் சுட்டதுல குறி தவறி, அவங்களே சுட்டுக்கிட்டதா முடிச்சாச்சி. கோவத்துல ஜெயராம் என்னை சுட, அதான் சந்தர்ப்பம்னு போலீஸ் அவனை சுட்டுட்டாங்க. ப்ளான்படி ஆம்புலன்ஸ் ஏத்தினதும் அங்கிருந்த நர்ஸ் எனக்கு மயக்க ஊசி போட்டாங்க. அது ஏன்னா... ஒருவேளை உன் அழுகை தாங்காது நானே எழுந்து உண்மையை சொல்லிட்டா? நைட் விழிப்பு வர கண்திறந்து பார்த்தா நீ புலம்பிட்டிருக்க.”

“அப்ப நைட் என்கிட்ட பேசினது கனவில்லையா? எழுந்து பார்த்தப்ப கட்டில்ல இருந்தீங்க. எப்படி அவ்வளவு ரியலா?”

“கனவில்லை பெண்ணே நிஜம்! அதுவும் நீ கடைசி பேசினதுல சிரிப்பு வந்தது பாரு. நல்லவேளை என் முகத்தைப் பார்க்காமல் போயிட்ட. நீ தூங்கினதும் உனக்கு ஆறுதலா பேசினேன். ஐசியூல இருந்தபடியே போலீஸ்கும் ஹெல்ப் பண்ணிட்டு அப்படியே அப்பாவையும், நிஷாவையும் ஹைதராபாத் அனுப்பினேன். அடுத்த நாலாவது நாள்ல ஜெயராமை நீதிபதி முன்ன நிறுத்தி ஆதாரத்தோட நிரூபிக்க, அதிலும் என்னை சூட் பண்ணின வீடியோ, டாக்டர் ரிப்போர்ட், அதோட சேர்த்து இத்தனை வருஷம் அவன் செய்திருக்கும் தில்லுமுல்லு எல்லாம் சேர்த்து உடனடி தீர்ப்பு. அவனும் எதையும் மறுக்கலன்றது ஆச்சர்யம்தான்.”

“கார்த்திக் சாருக்குதான் தேங்க்ஸ் பண்ணனும். நீ சொல்லி நான் கேட்கிறதான்ற நெட்டு இல்லாம, க்ரேட் மேன். அப்புறம் போட்ட நாடகத்தை சரியா பண்ணனும். அதே நேரம் நம்ம வீடும் ரெடியாகணும். செல்வரசி அத்தை வீட்டு சாவுத்தீட்டும் போகணும். அதான் நேத்து பதினாறாம் நாள் காரியம் பண்ணி மற்ற பூஜையெல்லாம் அந்த வீட்டுல நடந்தது. இன்னைக்கு நம்ம வீட்ல பூஜை ரெடி செய்தோம்.”

“இதுக்குத்தான் நான் இளா அத்தானைத் தேடினேன். என்னைக் கோவிச்சிக்கிட்டீங்களே!”

“அப்ப கதிர் புத்திசாலி இல்லன்றியா?”

“எஸ் கொஞ்சம்.”

“உன்னை...” அவளைப் பிடித்து தன்னுள் அணைக்க, அவர்கள் கண்விழித்தபோது இன்னும் விடியாதிருக்க நேரமும் தெரியவில்லை.

“இன்னும் விடியலையா? ரொம்ப நேரம் தூங்கின மாதிரி தோணுது. வெளிய மழை மேகமாயிருக்கா பாருங்க.”

“அப்படித்தான் போல. இரு பார்க்கிறேன்” என்று கதவு திறக்க சூரிய வெப்பம் மூஞ்சில் அடித்தது. “ஹேய் விடிஞ்சிருச்சி மொழி. எப்படியும் பத்து மணியிருக்கும் நினைக்கிறேன்.”

“நமக்கு ஏன் தெரியல?”

“நம்மாளுங்க ஏதோ வேலை பண்ணியிருக்காங்க. நான் குளிச்சிட்டு கீழ போறேன். நீ சீக்கிரம் ரெடியாகி வா.”

“இல்லங்க வேண்டாம். நானும் வர்றேன் சேர்ந்தே போகலாம்.”

“நம்ம வீடுதான்மா நீ மெள்ள வா.”

“ம்கூம்... எனக்குக் கூச்சமாயிருக்குங்க.”

“நாம சேர்ந்து போனா இன்னுமே கேலி பண்ணுவாங்க.”

“அது நீங்க பக்கத்துல இருந்தா அவ்வளவா தெரியாது” என்றதும் சம்மதித்து அவன் குளித்து வர, அடுத்து அவளும் குளித்து ஆடைமாற்றி வந்து தலை துவட்டினாள்.

“நான் ஹெல்ப் பண்ணவா?” என்று அருகில் வந்தவன், “ம்... பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா?” சொல்லி கண்ணடிக்க,

“கல்யாணத்தன்னைக்கு இந்த ஆட்டம்தான ஆடுனீங்க மச்சானும் மச்சினனும்.”

“ஹா..ஹா அது ரைமிங்கா வந்திச்சி. இப்ப நான் செக் பண்ணிச் சொல்றேன்” என்று தலையில் கைவைத்துக் கூந்தல் வருட, அந்த சுகம் வேண்டுமென்பதாய் அவளும் கண்மூடினாள். அந்தக் கிறக்கம் அவனுள் போதையேற்ற, கணவனின் தேடல்கள் ஆரம்பமானதோ! தன்னை ஆக்கிரமித்திருந்த கணவனின் தோளில் அடிபோட்டு திரும்பவும் குளித்து வந்தாள்.

அவனோ, “ஹேய் மொழி! தலை துவட்ட ஹெல்ப் பண்ணவா?” என்று கண்ணடித்தான்.

“கொன்னுருவேன் உங்களை. நீங்க தலை துவட்டுற லட்சணம்தான் தெரியுதே. போய் குளிச்சிட்டு வாங்க. நான் அதுக்குள்ள ரெடியாகிருறேன்” என மிரட்டி அனுப்பினாள்.

இருவரும் ரெடியாகி வாசல் திறக்கையில், “நான் வரல. நீங்க போங்க” என மங்கையவள் மறுக்க... “நீதான சேர்ந்து போகலாம்னு சொன்ன?” என கேட்டான்.

“அது எனக்கு வெட்கமாயிருக்கு. வெளிய உள்ளவங்களை எப்படி பேஸ் பண்றது தெரியல. நான் இங்கேயே இருக்கேனே!”

“இங்கயிருந்தா தேடி வந்து கிண்டல் பண்ணுவாங்க. எதுவாயிருந்தாலும் நான் டீல் பண்றேன். என் பின்னாடி வா” என்று ஹாலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பழங்காலக் கடிகாரத்தில் மணி பார்க்க ஒன்றைக் காட்டியது.

“அச்சோ! போச்சி. எல்லாம் உங்களாலதான். எல்லாரும் கிண்டலடிக்கப் போறாங்க” என திருமொழி அரற்றினாள்.

“சேச்சே அதெல்லாம் மாட்டோம் மொழி. நீங்க நைட் டிபன்கு வருவீங்கன்னுதான் பார்த்தோம். அதான் லஞ்ச்கே வந்துட்டீங்களே!” சரண்யா அவளின் கால்வாரியபடி வர...

“அண்ணி நீங்கதான் ஏதோ பண்ணிட்டீங்க?”

“ஹலோ! என்ன என்னைச் சொல்ற? நோ-மா நம்ம டீம் மெம்பர்ஸ்” என்று இளையவர்கள் அனைவரையும் சேர்த்தாள்.

“அடப்பாவிங்களா! யாருக்கும் சொல்லாதீங்க சொன்னா, ரெண்டு சின்னப் பொண்ணுங்களையும் தவிர எல்லா எருமைங்களும் இங்கயிருக்கீங்க.”

“ஹேய் மங்கை! மீ யுவர் எல்டர் ப்ரதர். சோ, மரியாதை கொடு.”

“அதெல்லாம் யாருக்கும் கிடையாது.”

“எனக்குக் கூடவா” என்று ப்ரியா வர,

“நீங்களும் இதுல கூட்டுதான. உங்களுக்கும் கிடையாது” என்றாள் வீம்பாக.

“மங்கை யாரோ வெளியில வர வெட்கமாயிருக்கு. நான் பேசமாட்டேன் நீங்கதான் பேசணும்னு சொன்னாங்க. உனக்கு யார்னு தெரியுமா?” குனிந்து மனைவிக்கு மட்டும் கேட்கும் விதமாகச் சொல்லி ஓடினான்.

“கதிர்ர்ர்... உன்னைக் கொல்றேன் பாரு” என்று அவனை விரட்ட... அதைப் பார்த்தவர்கள் மனம் அந்த அழகில் மயங்கித்தான் போனதோ! பெரியவர்கள் மனம் குளிர்ந்து சந்தோஷக்கண்ணீர் வந்தது.

“ஏய்! மச்சான் பாவம்” என்று கதிருக்குப் பரிந்து வந்த அண்ணன்கள் தம்பியையும் சேர்த்து விரட்ட, சில நிமிடங்களில் அவ்வீடு சிறுவயது பழைய நினைவுகளைக் கிளறிச்சென்றது.

அந்த நிமிடங்கள் நிகழ்வுகள் யாவற்றையும் பொக்கிஷப்படுத்திய பிரகாஷின் கேமராவில் தன்னவளையும் சேர்த்து அனைத்தும் பதிவாகியது.

அவன் முடிவு செய்துவிட்டான் இனி இந்தியா திரும்புவதில்லையென்று. வாழ்க்கையில் தோற்றுப்போன உணர்வு அவனிடம். இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. அதனாலேயே ஒவ்வொரு நிகழ்வையும் கேமராவுடன் சேர்த்து தன்னுள்ளும் பத்திரப்படுத்தினான்.

ஓடிக்கலைத்து கதிர் அமர, அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்து, “ஷப்பா முடியல” என்று தன் மூச்சை சீர்படுத்தினாள்.

சட்டென பிரகாஷின் பார்வை கயலிடம் பாய்ந்தது. தற்செயலாக அவளும் அவனைக் காண, ‘ஏன் இந்நேரம் அவனைப் பார்த்தோம்’ என்ற படபடப்பு அவளுள்.

“விளையாடியது போதும் சாப்பிட வாங்க” என்று தமிழரசி அழைக்க, நமக்கு சோறுதான் முக்கியம் என்பதாய் ஓடி சென்ற வேலையை முடித்து அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.

“டேய் மகனே! ஊருக்குக் கிளம்பலையா? பாவம்டா உன் அப்பா. ஹோட்டல் சாப்பாடு பிடிக்கலன்னு ஃபீல் பண்றாங்க.”

“சிவா! நான் எப்ப...” என்பதாய் அவர் மனைவியைக் காண,

“ஏன் தாயாரே! நீங்கதானே தமிழ்நாடு வந்தே தீருவேன்னு, உங்க புருஷனை ஏமாத்தி இங்க வந்தீங்க. அப்பறமென்ன டயலாக்?”

“வேண்டாம்டா மகனே. என்னையவே குறை சொல்றியா? நான் அடம்பிடிச்சி வந்ததாலதான் என் மருமகள் திரு உனக்குக் கிடைச்சா. இன்னும் அவள் ரிலேடிவ்ஸ்லாம் கிடைச்சாங்க. ஞாபகமிருக்கட்டும். இதுக்கே நீ எனக்குக் கோவில் கட்டணும்” என்றார் சட்டமாக.

“அது நுறு சதவீதம் உண்மைதான் தாயே! நீங்க இல்லன்னா... இந்த... என் குடும்பம் கிடைக்காம சீரில்லாமல் போயிருக்கும். சொன்னாலும் சொல்லாட்டியும் கோவில் கட்டணும்தான்” என்றான் கலங்கிய குரலில்.

“டேய் ராஜா! என்னடா என்னென்னவோ பேசுற? நான் சும்மா கேலி செய்தா நீ கண்கலங்குற?” என்றவர் கண்களும் கலங்க, தாயின் தோள்சாய்ந்து “லவ் யூமா” என்றான் மனதார.

மகனின் தலைவருடி “என்னடா ராஜா எமோஷனலாகுற? நான் இல்லன்னா வேற யார் மூலமாவது அந்தத்தாய் காமாட்சி இந்த நல்லதை செய்திருக்கப் போறா. அதுக்குப் போய் கண்கலங்குவாங்களா? நான் தவமிருந்து பெத்த பிள்ளைடா நீ...” விவரம் தெரிந்தவர்கள் சிவாவை பரிதாபமாகப் பார்த்தனரோ!


“நான் உங்களை அம்மாவா பெற தவம் இருக்கலைமா. நிறைய புண்ணியம் பண்ணியிருக்கேன்னு மட்டும் தெரியும்” என உணர்ந்து சொல்ல, குருவும் மகனருகில் வந்து அவனைக் கட்டிக்கொள்ள, சுற்றிலும் அமைதி நிலவ அவர்கள் மூவரின் அன்பு மட்டுமே அங்கே!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top