- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
31
மிதமான அலங்காரம் அறையெங்குமென்றால் அதே அளவு மங்கையவளிடமும். அவளை எழிலாகக் காட்டிய புடவையின் நளினங்களுடன் உதட்டோரப் புன்னகையும் போட்டிபோட, அனைத்திற்கும் அச்சாரமாய் கையிலிருக்கும் பால் செம்பு பல கதைகள் கூறியது.
கணவனின் பார்வையில் தெரிந்த உணர்வுகள் அனைத்தும் அவளுக்கும் இடம் பெயர, அதுவரையிருந்த தைரியம் அவளிடமிருந்து விடைபெற, பார்வை தன்னாலே தாழ்ந்தது.
“ஹேய் மொழி! எவ்வளவு அழகாயிருக்க தெரியுமா?” என்றான் மென்மையான குரலில்.
பாலை அங்கிருந்த சின்ன மேஜையில் வைத்து அவனருகில் வந்து காலில் விழபோகையில், “ஹேய் என்ன பண்ற?” என்று பதறி தூக்கப்போக,
“யூஸுவலா எல்லாரும் பண்றதுதான். நீங்க ஆசைப்பட்டதும் கூட. சோ, நிதானமா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க?” என்றாள்.
“எதுக்குமா? நான் சும்மா... ப்ச்.. நீ எழுந்திரு.”
“ம்கூம்... ஆசீர்வாதம் பண்ணப்போறீங்களா? இல்லையா?” என்றாள் மிரட்டலாக.
“ம்... என்ன சொல்லி வாழ்த்தலாம்.” அவன் யோசனையிலாழ,
“என்ன செய்றீங்க?” என்றாள் கேலியாக.
“வெய்ட் ஏர்போர்ட்” என்றதும் அவள் கணவன் காலில் கிள்ள, “ஆ இருடி” என்றவன், “என்னோட எல்லா ஜென்மத்திலும் நீயே என் மனைவியா வந்து, நம் வாழ்வின் எல்லைவரை சந்தோஷமா நிறைவா வாழணும்” என்று ஆசீர்வதித்து மங்கையவளின் தோள்தொட்டு எழுப்பினான்.
“இந்த வாழ்த்து எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. தேங்க்ஸ்.”
“நானும்தான் மங்கை. என் வாழ்க்கையில் நீ வந்ததுதான் பெரிய வரம்” என நெகிழ்ந்து பாலை எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தான். அவள் கணவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொல்ல, அவன் மறுத்து அவளுக்குக் கொடுத்து பின்பே தான் குடித்தான்.
அருகருகே அமர்ந்தும் இருவரும் பேசாமலிருக்க, கைகள் மட்டும் ஒன்றையொன்று தழுவியிருக்க, தோள்கள் இரண்டும் ஒன்றையொன்று உரசியபடியிருந்தது.
“மொழி!”
“ம்... சொல்லுங்க கதிர் அத்தான்?”
அதில் புன்னகை எழ “நீ லவ் பண்றது கதிரைத்தான?”
“அதிலென்ன சந்தேகம். என் புருஷனா அறிமுகமானது கதிர்தான. அவங்களைத்தான் நான் லவ் பண்ணுவேன்.”
“தேங்க்ஸ். எனக்கும் அதுதான் வேணும். நான் கதிராதான் உன்னைக் கவரணும்னு நினைச்சது. கதிராதான் உன்னையும் சந்திச்சேன். என் காதலும் சக்சஸ்! என் மங்கையின் காதலும் சக்சஸ்!” நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தில் இறங்க, சேர்ந்திருந்த கைகளின் இறுக்கம் மங்கையவளின் மனம் சொன்னது.
“ஆர் யூ...” ஆரம்பித்தவன் வாய்மூடி, “இதுக்கு மேல என்ன ரெடியாகணும்?” மங்கையவளோ தன் நாணம் உடைக்க, அந்த மொத்தக் கவிதையையும் தன்னுள் அடக்கி, பல புதுக்கவிதைகள் படைத்தான் இளங்கதிர் அவன்!
“ஐ லவ் யூ அத்தான்!”
கிசுகிசுப்பாய் தன்னுள் இறங்கிய அவ்வார்த்தையில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “லவ் யூ மொழி” என்றான்.
“எனக்கு வராதுன்னு சொல்லாம ஒரு கவிதை சொல்லுங்களேன். உங்களுக்கு சூப்பரா வரும்னு தெரியும். உங்க மொழிக்காக அத்தான்.”
“இந்த டைம் இது தேவையா?”
“இதுதான் அதுக்கு ஏத்த டைம். எனக்கே எனக்காகன்னு சொல்வீங்கள்ல.” சில நிமிட அமைதி இருவருக்குள்ளும்.
கவி எழுதச் சொல்கிறாள் - என்
கவிதைப் பெண்ணிவள்!
ஒரு கவிதையே கவிதை கேட்கிறதே!
அடடே ஆச்சர்யக்குறி போட்டு
ஒரு வரியில் முடிக்க - நீ
ஹைக்கூ கவிதையல்ல பெண்ணே!
என் கனவுக் கவிதை நீ!
உனை எண்ணி கவி வடிக்கக்
கனவாகிப் போனதென் எழுத்துக்களோ!
வார்த்தைகளின்றித் தவித்தேனடி பெண்ணே!
வரம் தரும் தேவதையாய் - என்
வாழ்வை மலரச் செய்ய
வந்தாயே! எனக்கே எனக்காக!
உனக்கில்லா கவியா?
இதோ உனக்கே
உனக்கான கவிதை!
“எப்படி என் அவசரக் கவிதை?” என்றான்.
“சூப்பர் போங்க. தெரியாது தெரியாதுன்னு சொல்லியே எல்லாத்தையும் சொல்லிருறதுதான் உங்க ஸ்பெஷல்.” கண்மூடி கணவன் தோளில் படுத்து நெஞ்சை வருடியவளுக்கு, ஏதோ உறுத்த வேகமாக எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தாள்.
“என்னாச்சி மங்கை?” எழப்போனவனை அப்படியே இருக்கச்சொல்லி அவன் உடலின் காயங்களைத் தேட, சின்னதாக தளும்பு கூட இல்லை. மனைவியின் பார்வை போன இடம் கண்டவன் அவளின் கண்டனப் பர்வையில், “அ..அது...”
“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? இந்த இரண்டு வார ஹாஸ்பிடல் வாசம் எதுக்கு? ஏன் எல்லாரையும் கதற வச்சி அல்லாட விட்டீங்க? நான் பார்த்த அந்த துப்பாக்கிச் சம்பவம் ,அதைத் தொடர்ந்த உங்க ட்ரீட்மெண்ட், எப்படிப் பொய்யாச்சி?” என்றாள் பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கறார் குரலில்.
“ஹேய் சைலன்டா கேளுமா. இங்க வா சொல்றேன்” என்றான் அமைதியாக.
“முடியாது இப்படியே சொல்லுங்க” என்று அந்த மேஜையில் சாய்ந்து நிற்க...
“சரி விடு நான் வர்றேன்.” அவளருகில் உரசினாற்போல் நின்று விலகப்போன அவளின் கோவம் உணர்ந்து பிடித்து நிறுத்தி, “ஏன் இந்தக் கோவம் மங்கை?” என்றான்.
“கோவம் வராம? அந்த டைம் நான் எப்படித் துடிச்சிருப்பேன். எங்க எனக்கு இல்லாமலே போயிருவீங்களோன்னு எவ்வளவு கண்ணீர் விட்டிருப்பேன். அந்த வலி உங்களுக்கெப்படித் தெரியும். கண்மூடி ரசிச்சிட்டிருந்தீங்களா அதை?” குமுறிய அழுகையை அடக்க முடியாமல் போக, அவளின் கண்ணீர் துடைத்தவனின் கையைத் தட்டிவிட்டாள்.
மறுபடியும் கண்ணீர் துடைத்து, “இந்தக் கண்ணீருக்காகத்தான் மங்கை. கண்ணீர் கூட ஒரு சில நேரங்களில் நமக்கு மருந்துதான் தெரியுமா?”
“எனக்குக் கண்ணீர் மருந்தா?” புரியா பார்வையை கணவன்மேல் செலுத்தினாள்.
“துக்கமோ சந்தோஷமோ இந்தப் பதினைந்து வருஷமா, நீ அழுது கண்ணீர் வடிச்சது கிடையாதுதான?” அவளின் குழப்பத்துடனான சம்மதமான தலையசைவில்... “காரணம் கண்முன்ன பார்த்த நம்பமுடியாத சம்பவங்களின் தாக்கம். உன் கோவம், அழுகை எல்லாமே லட்சியம்ன்ற பெயர்ல மனசுக்குள்ள புதையல் மாதிரிப் புதைஞ்சிருச்சி. அந்த சம்பவம் நடந்து ஹாஸ்பிடல்ல உனக்கு ட்ரீட்மெண்ட் நடந்தப்ப டாக்டர் சொன்னதை, சித்தி அம்மாகிட்ட சொல்லியிருக்காங்க.”
ட்ரீட்மெண்ட் எடுத்தால் தன் கோபம் குறைந்துவிடுமென்று சிகிச்சை எடுக்காதது நினைவில் வந்தது திருமொழிக்கு.
“அந்த டைம் ட்ரீட்மெண்ட்கு நீ ஒத்துழைக்கலை. அடிபட்டா கூட ‘ஆ’ன்னு சத்தம் போட்டு வலியைப் பொறுத்து பின்ன அதை கண்டுக்கவே மாட்டியாம். நிஷா கல்யாணத்தோட கோபத்துலதான் உன்னை வெளிப்படுத்தின. அங்கேயும் கண்ணீர் மிஸ்ஸிங். நம்ம கல்யாணத்தோடவும் சண்டை போட்டியே தவிர கண்ணீர்... ம்கூம்... துக்கம்தான் அப்படின்னா... அதீத சந்தோஷம் உன் அம்மா தம்பி உயிரோட உனக்குக் கிடைத்த நிமிடங்கள். அப்பவும் சந்தோஷத்தை வெளிக்காட்டின உன் மனசு, கண்ணீரை மறைச்சிருச்சி.”
“டாக்டர் சொன்னதையும் தாண்டி சில புக்ஸ் படிச்சி, சிலரோட பேட்டிகள் பார்த்தேன். எல்லாமே உன் கண்ணீர்தான் உனக்கான மருந்துன்னு சொல்லிச்சி. அதுவரை நீ எதிலும் முழுமனசா ஈடுபடமாட்ட. ஒரு மனைவியை அழாம பார்த்துக்கணும்ன்ற கணவனுக்கான மரபை மீறி, உன்னை எப்படி அழ வைக்கலாம்னு யோசிச்சேன்.”
“கார்த்திக் சார் இந்த ஆபரேஷன் ஆரம்பிச்சப்ப, உங்களைக் கடத்தப்போறதா இன்பார்ம் கிடைச்சது. எல்லாருக்கும் பாதுகாப்பு குடுத்தாலும் அதையும் மீறி எல்லாம் நடந்திருச்சி. அடுத்து என்னன்னு யோசிச்சி அப்பாவை கார்மேகம் வீட்டுக்கு அனுப்பிட்டு, உங்களைத் தேடி கார்மேகம் வீட்டிலிருந்த ஒருத்தனைப் பிடிச்சி விசாரிச்சப்ப... அத்தையையும் கயலையும் கடத்தி நேரா வீட்டிற்கு கொண்டு வந்து வச்சவன், உங்களைக் கடத்தினப்ப நேரடியா வீட்டுக்குக் கொண்டு வராம மதுரையையே சுத்தி நம்ம வீட்லயே வைத்திருக்கிறதா சொன்னான்.”
“சிபிஐகு கேஸ் போனது ஜெயராமுக்குத் தெரியாது. அதனால முழு பாதுகாப்பு போடல. அதே டைம் அசால்டாகவும் இருக்கல. அப்பாவோட சேர்த்து வீட்ல உள்ள எல்லாரும் அவன் கையில் சிக்கினதும், தற்காப்புக்கு துப்பாக்கிச் சூடு ஓகேன்னு கார்த்திக் சார் அவங்க டீம்கு சொல்லிட்டிருந்தப்பதான், எனக்கு அந்த ஐடியா தோணிச்சி. உடனே அவர்கிட்ட பேசி உன் நிலையையும் எடுத்துச் சொன்னேன். அங்க பார் மொழி...” என்று மேலே காட்டினான்.
“கொழுப்பு உங்களுக்கு. கொசுவர்த்தி சுருள்லாம் வேண்டாம்” என்றதும் சத்தமாக சிரித்தான்.
Last edited: