• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
30



குருமூர்த்தி எவ்வளவு தடுத்தும் மகனிருக்கும் இடம் கேட்டு வர, திருமொழி அவரைச் சமாளித்து, “அழக்கூடாது” என்ற கட்டளையுடன் ஐசியூவிற்குள் அனுப்பிவைத்தாள்.

மகனின் அந்நிலை பார்த்து மௌனக்கண்ணீர் வடித்தவர், முகம் வருடி நெற்றியில் முத்தமிட்டு, “ராஜா அம்மாவைப் பாருடா. தாயேன்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுடா. உங்கப்பா இங்க வரவேண்டாம்னு சொல்லியும், உன்னை இங்கே கூப்பிட்டு வந்தது என்னோட தப்புதான் ராஜா. நாம என்ன நினைச்சாலும் நடக்குறதுதான் நடக்கும்னு அவர் வாயை அடைச்சிட்டேன். உன்னை இந்தக் கோலத்துல பார்ப்பேன்னு தெரிஞ்சிருந்தா அப்படிச் சொல்லியிருக்க மாட்டேன்.”

“உனக்கு எதாவதுனா அம்மாவால தாங்க முடியாதுடா. நானும் உன்னோடவே வந்திருவேன். நாங்க தவமிருந்து பெத்த பிள்ளைடா நீ. அம்மாவுக்காக வந்திருடா ராஜா. இங்க உன்னை தொல்லை செய்யக்கூடாதுன்னு திரு சொல்லி அனுப்பினா. சீக்கிரமா வா என்ன. அம்மா உனக்காக வெளிய காத்திருப்பேன்” எனும்போது அவன் கண்களிலும் சிறிது நீர் கசிந்ததோ!

அடுத்து இரண்டு நாட்கள் கழித்தே கண்விழித்தாலும் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. தொடர்ந்த இரண்டு வாரங்கள் மருத்துவமனை வாசமிருக்க, டிஸ்சார்ஜாகி வந்த வீட்டைப் பார்த்த சிவகாமி “எவ்வளவு பெரிய வீடு. பழையகாலத்து மாடல்ல... யார் வீடு ராஜா இது?” என்று மகனிடம் கேட்க...

தன் முன் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டிருந்த தங்கள் வீட்டைப் பார்த்திருந்தான் இளநாதன். நிறைய ஆட்கள் வைத்து பெய்ண்ட் செய்து, தோட்டத்தையும் சீரமைத்திருந்தார்கள். ஒவ்வொரு இடங்களிலும் சிறு வயது ஞாபகங்கள். தாத்தா பாட்டி அப்பா அம்மா மாமாவின் குடும்பமென்று அவ்வப்பொழுது சேர்ந்து வாழ்க்கையை வாழ்ந்த நினைவுகள் அவன் கண்களில். மனைவியைப் பார்க்க அவள் கண்களிலும் சந்தோஷக்கண்ணீர்.

அதேபோல் தமிழரசியின் வீடும் தலைகீழாய் மாறியிருந்தது. “உன் வீடு இருக்கும்போது நீ ஏன்கா யார் வீட்லயோ இருக்கணும்” என்று செல்வரசி வீட்டைக் காலி செய்து கொடுத்திருந்தார்.

“இந்த சொத்துக்காக நான் இழந்தது போதும் அரசி. எப்பவும் போல நீயே இரு.”

“இல்லக்கா. இது உன்னோடது. இங்கயிருந்த ஒவ்வொரு நாளும் முள்ளுல இருக்கிற மாதிரிதான். பாவத்தினால் கிடைச்ச வீடு, எனக்கோ, என் பையனுக்கோ, பேத்திகளுக்கோ வேண்டாம்கா. பேராசை பெருநஷ்டம்னு சொல்வாங்க. அதான் சொந்தமாயிருந்த வீடும் போயிருச்சி. அந்தாள் செத்த மறுநாளே வீட்டுக்கு வெள்ளையடிச்சி நேத்து பதினாறாவது நாள் காரியத்தோட பூஜையும் செய்தாச்சிக்கா. இனிமேல் எந்தக் கெட்டதும் உன்னை அண்டாது. நீயும் அத்தானும் சந்தோஷமா வாழ்ந்த வீடுக்கா” என்றார் வந்த கண்ணீரைத் துடைத்து.

தமிழரசியின் நினைவுகளும் பழையவற்றை அசை போ சில நிமிட அமைதிக்குப் பின், “அப்ப ஒண்ணு செய்யலாம். நீயும் இங்கேயே இரு” என்றார் தமிழரசி.

“அக்கா வேண்டாமே!”

“இல்லன்னா வீட்டைப் பூட்டிப்போட்டுட்டு வாடிப்பட்டிக்கே போயிருவேன்” என்றார் மிரட்டலாக.

“அக்கா மருமகள் இருக்கா?”

“இருக்கட்டுமே. வீடு போல நம்ம மனசும் பெருசு அரசி.”

பிரியா தன் கணவனுக்கு சரியாகி போலீஸ் கஸ்டடி சென்றதும், தகப்பன் அழைத்ததற்கு வரமறுத்து, “கணவன் செய்த தப்பிற்கு என் அப்பா அம்மா தம்பி ஏன் கஷ்டப்படணும். நான் எதாவது வேலை பார்த்து என் பிள்ளைங்களை வளர்த்திருவேன்” என மருமகள் சொன்னதைச் சொல்ல,

“வேலைக்குப் போறது நல்ல விஷயம்தான். அதுக்குத் தனியா இருக்கணுமா என்ன? நாம எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கிறோம். இதான் என் முடிவு” என்று மறுக்க வழியில்லாமல் செய்தார் தமிழரசி.

கெட்டாலும் மேன் மக்கள்.. மேன் மக்களே!

“இது நம்ம வீடுதான்மா. உங்க பொண்ணு கயல் வீடு. எனக்கு ட்ரீட்மெண்ட் முடியுறது வரை இங்கதான் இருக்கப்போறோம்” என்று சிவகாமியைச் சமாளித்தான் இளங்கதிர்.

வீட்டினுள் கணபதி ஹோமமும் ஆத்மாக்களை சாந்திப்படுத்தும் ஹோமமும் நடந்து கொண்டிருக்க அனைத்து சந்தோஷங்களும் அங்கே கொட்டிக்கிடந்தது.

கயலுக்குள் சிறிதாக உறுத்தல்,,, ‘பிரகாஷ் எங்கே? ஏன் யாரும் அவனைப்பற்றி பேசவில்லை? அண்ணன் ஹாஸ்பிடலில் இருந்ததால் மற்றவை எதுவும் கண்ணில் படாமலேயே போனதா? ஒருவேளை அன்றைய துப்பாக்கிச் சூட்டில் எதாவது... மை காட்!’ மனம் சிறிது அதிரத்தான் செய்தது. எப்படி யாரிடம் கேட்பது என சின்னதாக தவிப்பு அவளுள். அந்த உணர்வுக்குப் பெயர் காதல் கிடையாது. ஒருவர் மேலிருக்கும் நல்ல அபிப்ராயம் மட்டுமே!

“என்ன மதினி எங்க அண்ணனைத் தேடுறீங்களா?”

“உங்கண்ணனா? உனக்கு ஏது அண்ணன்? இருந்த ஒருத்தரும்தான் இப்ப இல்லையே மங்கை?” என்றாள் குழப்பமாக.

“அறிவு அண்ணன் மட்டுமில்ல. பிரகாஷ் கூட எனக்கு அண்ணன்தான் மதினி.”

“மங்கை உனக்குப் புத்திகித்தி கெட்டுப்போச்சா? அவனைப்போய் அண்ணன்னு சொல்ல எப்படி மனசு வந்தது? அவங்க குடும்பம் நமக்குச் செய்ததெல்லாம் மறந்திருச்சா?” என்றாள் கோபமாக.

“இரண்டு பேர் செய்த தப்புக்கு மத்தவங்களை ஏன் தண்டிக்கனும்? சித்திதான் நடந்த எல்லாத்தையும் சொன்னாங்கள்ல?”

அதுக்கு முன்னரே பிரகாஷ் அப்புவின் பேச்சில் தெரிந்திருந்ததை சொல்லவில்லை கயல்விழி.

“பாவம் ஓரிடம், பழி ஓரிடம் எதுக்கு மதினி? அதை விடுங்க நீங்க ஏன் அண்ணனைத் தேடுறீங்க?

“ப்ச்... நான் யாரையும் தேடல. தேட வேண்டிய அவசியமும் இல்ல.”

“டீச்சர் நீங்க பொய் சொல்லலாமா?”

“கறை படுறதால நல்லது நடந்தா கறை நல்லதுதான்” என்றாள் விளம்பரபாணியில்.

“ஹா..ஹா வந்தீங்களா வழிக்கு. சொல்லுங்க மதினி ஏன் தேடுறீங்க?”

“மங்கை தப்பா எந்த அர்த்தத்திலும் கிடையாது.” புரிந்ததாய் திருவின் பார்வையிருக்க... “அன்னைக்கு நீ மயங்கி விழுந்தப்ப உங்க குடும்பத்தாலதான்னு ரொம்பத் திட்டிட்டேன். போகும்போது போனா திரும்புவேனா தெரியாது சொல்லிட்டுப் போனாங்க. இப்ப வரை பார்க்கல. ஒரு குற்றவுணர்ச்சி மங்கை. நல்லாயிருக்கிறதா தெரிஞ்சா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன்.”

“ஆனா, மதினி கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்ததா கேள்விப்பட்டிருக்கீங்கள்ல. அங்க பாருங்க” என்று கண் காண்பித்த இடத்தைப் பார்க்க, காம்பௌண்ட் கேட் அருகில் வந்து கொண்டிருந்தான் பிரகாஷ். நெற்றியில் காயத்திற்காகப் போட்ட ப்ளாஸ்டருடன் கையில் சின்னதாய் கட்டு. இருந்தும் புன்னகை மாறாது தெரிந்தவர்களுடன் பேசிவிட்டு நடந்து வந்தான்.

“என்ன கட்டு மங்கை?” கயல் அமைதியாகக் கேட்க,

“அன்னைக்கு நமக்கு ஆதரவா நின்னதால, அவங்க அண்ணன் கொடுத்த பரிசு. நெத்தியில வெட்டுக்காயம் தையல் போட்டு பிரிச்சாச்சி. கையில சின்னதா ப்ராக்சர். அவங்க அப்பாவுக்குக் கொள்ளிவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அவங்க உறவுல யாரோதான் வச்சிருக்காங்க.”

“ஓ...”

“ஆமா மதினி. அந்தாள் சாகுறதுக்கு முன்ன பொண்டாட்டி புள்ளையை பழி கொடுக்கப் பார்த்தவர். அவர் கணக்குப்படி நாங்க செத்தாச்சின்னு முடிச்சிட்டாங்களாம். அறிவு அண்ணன் இருந்தா இப்படித்தான் இருந்திருப்பாங்கள்ல. ரொம்ப கேரிங் டைப்.”

“ரொம்ப புகழ்ற அவரை. உன்னால எல்லாத்தையும் ஈஸியா மறக்க முடியுது. என்னால முடியல மங்கை. சரி நான் உள்ள போறேன்” என்று நகர, அருகில் வந்த பிரகாஷ் முகம் சுருங்கியது.

“சரியாகிரும்ணா. உங்களைத் தேடுற அளவுக்கு வந்திருக்காங்களே.”

“நிஜமாவே என்னைத் தேடுனாளா மங்கை?”

“ஆமாண்ணா. என்ன இத்தனை வருஷமா அடக்கி வச்சிருந்த கோபமெல்லாம் உங்களைப் பார்த்ததும் வெளிப்படுது. அவங்க அளவுல இது சரிதான். நான் கூட கோபத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தியிருக்கேன். அவங்களுக்கு அதற்கான சந்தர்ப்பமே கிடைச்சதில்ல.”

“வேணும்னா கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகலாமா?”

“ஏன் இந்தக் கொலைவெறி? அப்புறம் நார்மலாயிருக்கிறவங்க மலையேறி மாரியாத்தாளாகிருவாங்க. தேவையா உங்களுக்கு?”

“ஆமால்ல” என்று பிரகாஷ் சத்தமாகச் சிரிக்க...

வெகு நேரமாகியும் மங்கை உள்ளே வராததால் அவளை அழைக்க வந்த கயல்விழி கடுப்பாகி நின்றுவிட்டாள். “மங்கை அண்ணன் கூப்பிடறான் உள்ள வா” என்றாள் அந்த கடுமை தொனி மாறாமல்.

“நீங்களும் வாங்கண்ணா.” திருமொழி பிரகாஷையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

தன் வீட்டிலுள்ள அனைவரும் அவனை பகை பாராட்டாது சகஜமாகப் பேச, பகைவரையும் மன்னிக்கும் தன் குடும்பத்தாரை என்ன செய்வதென்று சொல்லமுடியாத கோபம் அவளுள்ளே சுழன்றது.

“கயல்மா என்ன யோசனை?”

“அம்மா எனக்கு சில விஷயம் புரியமாட்டேன்னுது.” தன் குழப்பத்தைச் சிவகாமியிடம் சொல்ல...

“உன் மனசைத் தொட்டு சொல்லு கயல்? பிரகாஷுக்கும் உங்க வீட்டுப் பிரச்சனைக்கும் ஒரு சதவீதமாவது சம்பந்தமிருக்கா?”

“இல்லம்மா” என்றாள் குரல் இறங்க.

“மூளைக்குப் புரியுறதை, மனசு ஏற்கலதான கயல். எதிரியோட பையன் எப்படி நல்லவனாவான்? அவன் குணம்தான இவனுக்கும் இருக்கும் நினைக்கிற. ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறதில்லைன்னு டீச்சர் உனக்குத் தெரியாதா கயல்? அந்த ஜெயராம் பொண்ணுங்களைக் கூட இதே மாதிரிதான் பார்க்குறியா?” என்றார்.

“சேச்சே.. அவங்க சின்னக் குழந்தைங்கம்மா.”

“ஜெயராமோட நேரடி இரத்த சம்பந்தமுள்ள குழந்தைகளை மன்னிக்க முடியுற உன்னால, ஏன் பிரகாஷை மன்னிக்க முடியல? இவ்வளவுக்கும் அவன் நல்லதைத் தவிர எதுவும் செய்யல” என்று கயலை சிவகாமி குற்றம் சாட்டினார்.

“அம்மா அவன் என் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சுத்தினான்மா. சரியான இரிடேட்டிங் பெலோ” என்றாள் கடுப்பாக.

“காதலிக்கச் சொல்லிச் சுத்தலையே கயல். அங்கங்க போய்ப்பாரு காதல்ன்ற பெயர்ல என்னென்ன அநியாயம் நடக்குதுன்னு. என்னைக் கல்யாணம் பண்ணினா, உன்னைப் பாதுகாப்பா பார்த்துக்குவேன்னு எவனும் சொல்லமாட்டான். அவன் அப்பா, அண்ணன்கிட்டயிருந்து உன்னைப் பாதுகாக்க கல்யாணம்தான் சரியான வழின்னு நினைச்சது தப்பில்லையே. அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு கயல்.”

“எனக்கு எதுவுமே பிடிக்கலம்மா. கல்யாணம்னாலே அலர்ஜியாயிருக்கு. அதுவும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டினு... அவங்களை நினைச்சாலே அந்த கார்மேகம் செய்த கொடுமைதான் ஞாபகம் வருது. அந்த வீட்டுப்பையனை எப்படிம்மா? அந்தளவுக்கு என் மனசு பக்குவப்பட்டது கிடையாது.”

“சரிமா. அவன் வேண்டாம். வேற பார்க்கிறோம் சம்மதிக்கிறியா?” முடியாதென்பதாய் கயல் தலையசைக்க, “ஏன்மா?” என்றார் சிவகாமி.

“அதான் சொன்னேனேம்மா, எனக்கு கல்யாணம் பிடிக்கல. நிறைய குழப்பமாயிருக்கு.”

“அதுக்காக அப்படியே விடமுடியாது கயல். இரண்டே நாள்ல ஒரு முடிவு சொல்லு. நல்ல பையனா பார்க்கலாம்.”

“நான் யோசிச்சி சொல்றேன்ம்மா.”

“குட்” என்று தலைவருடியவருக்குள் குழம்பிய குட்டை தெளிவாகும் என்ற எண்ணம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஹேய் ஏர்போர்ட்! ஓஹோ ஹோ ஹோ கிக்கு ஏறுதேன்னு பாடத்தோணுது. உனக்குத் தோணலையா?” என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.

பூஜை ஆரம்பித்ததிலிருந்து கணவன் அடித்த லூட்டியில் நொந்து போயிருந்தாள் மங்கையவள். அவளை அங்கேயிங்கே நகரவிடாமல் செய்து, நகர்ந்தால் கீழே விழுவது போல் நடிக்க பதற்றத்தில் அவனைப் பிடித்த மனைவியை ரசித்து, சின்னச்சின்ன சில்மிஷங்கள் செய்து அவளை அவஸ்தைக்குள்ளாக்கி இருந்தான்.

“என்னாச்சிங்க உங்களுக்கு? இத்தனை நாள் அவ்வளவு நல்லவனாயிருந்துட்டு, இப்ப ப்ளேபாய் ரேஞ்சுக்கு ஆட்டம் போடுறீங்க?”

“உனைக் காணும் பொழுதெல்லாம், காதலும் காமமும் ஒன்றாகக் கலந்து, எனை உன்மத்தம் கொள்ள வைக்கிறதடி பெண்ணே!” என நாடகத்தமிழில் பேசினான்.

“என்னவோ சரியில்லங்க.”

“ம்... சரியில்லதான். என் மனதும் உடலும். எத்தனை நாளைக்கு இந்த சன்னியாசி வாழ்க்கைன்னு கேட்டு என்னை என்னவோ பண்ணுது. அதான்...”

“ஓ... அதனாலதான் ஐயா காலையிலிருந்து தடுமாறித் தடுமாறி என் மேல விழுற மாதிரி விழுந்து, அங்கங்க டச் பண்றீங்களா?” என்றாள் முறைப்பாக.

“அது உன் அழக்குல தடுமாறிடா செல்லம்” என்று வடிவேலு லுக் விட்டு, “அங்கங்க டச் பண்ணினேனே தவிர, அங்கங்களை டச் பண்ணலையேடா” என்று அதே லுக்கை மங்கையவளுக்கு அனுப்ப...

சட்டென்று வெட்கம் சூழ, “அச்சோ! லூசு அத்தான்! டபுள் மீனிங் பேசுறீங்க. நீங்கள்லாம் எப்படி இத்தனை நாள் சும்மாயிருந்தீங்க தெரியல?” என சின்னக்குரலில் அவனைத் திட்டினாள்.

“அது செல்ஃப் கண்ட்ரோல் பேபி. ஒய்ஃப் தானன்னு பாயத்துடிக்கிற மனசையும், உடலையும் அடக்கி ஆள்பவன்தான் சிறந்த புருஷன். எனக்குன்னு வந்த பிறகு எங்க போயிடப் போறாள்ன்ற மிதப்பு வேற. ஹ்ம்... எத்தனை சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணியிருக்கேன்” என்று ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டான்.

“அடப்பாவி! உங்களை உலகமகா நல்லவன்னு நினைச்சேன்” என்று வாய் திறக்க,

திறந்த வாய் மூடி, “பொண்டாட்டிகிட்ட மட்டும் எல்லா புருஷனும் நல்லவனாயிருக்க முடியாது. இருக்கவும் கூடாது” என்றான் கண்ணடித்து.

“அதுக்காக இப்படியா ஓவரா வழிவீங்க?”

“ஹேய் உன்கிட்டதானடி. ஐ’ம் எ பக்கா ஜென்டில்மேன் யூ நோ!”

“எஸ். மை மேன்” என்றாள் வசீகரமாய்.

“ஹேய் ஏர்போர்ட்” என சந்தோஷக் கூச்சலிட்டு “ஷப்பா! உண்மை ரெண்டாவது டைம் வெளிவருது. பேசாம இவங்களையெல்லாம் கழட்டிவிட்டுட்டு எதாவது ரூம்ல போயி செட்டிலாகிரலாமா?” அப்பட்டமான தாபம் அவன் குரலில்.

அதுவரை வாயாடியவள் அக்குரல்தனில் தானும் இழுக்கப்பட்டு “அ..அத்தான் அது தப்பு” என்றாள்.

“தப்பு நமக்குள்ள சரி மொழி. ப்ளீஸ் போலாமா?”

“பகல்ல தப்பு அத்தான்.”

“பகலை இருட்டாக்கிரலாம்” என்றவன் அவளை நெருங்கி தன்னுடன் சேர்த்தணைத்து, “ஆர்...” ஆரம்பிக்கையிலேயே கணவன் வாய் மூடி “நைட் வரை வெய்ட் பண்ணுங்க” என்று 144 தடை உத்தரவு போட்டாள்.

ஹ்ம்... என சிணுங்கி, “சரி ஒரு கிஸ்ஸாவது கொடு” என சலிப்பாகத் திரும்ப, அவன் முகம் திருப்பி சின்னச்சின்னதாய் மென்மையாக முத்தங்களிட்டு, “பச்சைப்புள்ள ஏமாந்திரக்கூடாதுன்னுதான் முத்தம் கொடுத்தேன். அதுவும் பர்ஸ்ட் டைமா” என்று நகரப்போனவளை விடாது நிறுத்தி... “மென்மை முத்தம் தாண்டி வன்மை முத்தம் ஒண்ணு கொடு மொழி” என்றான் கிறங்கலாய்.

இனியும் இங்கிருப்பது சரியில்லையென்று பட, தன்னை இறுக்கிய கைகளை வலுக்கட்டாயமாய் விடுவித்தபடி, “வன்மைதான... இந்தாங்க” என்று கன்னத்தைக் கடித்துவிட்டு ஓட, “ஹேய் சீட்டர்!” கன்னம் தடவியபடி கதிர் பின் தொடர,

“இதுக்குதான்பா புதுசா கல்யாணமானவங்க இருக்கிற ஏரியா பக்கம் போகக்கூடாது சொல்வாங்க” என்றபடி நிஷாந்த் அங்கு நின்றான்.

“உனக்கென்னவோ வருஷக்கணக்கான மாதிரி பேசுற?”

“என்ன மச்சான் பண்றது. புது இடத்துல கம்முன்னு டீசண்டா இருக்கச்சொல்லி ஆர்டர் போட்டா, என்னதான் செய்யுறது?”

“அதுவும் சரிதான். அப்ப பொண்டாட்டி பேச்சைக் கேளு.”

“நான் கேட்டு நல்ல பையனாதான் இருக்கேன். நீங்க இப்படி செய்தா எப்படி கேட்கிறதாம்?”

“நீ பேமிலி மேன். நான் ப்யூர்லி பேச்சுலர். சோ, சின்னஞ்சிறுசுங்களைக் கண்டுக்காத ஓகே.” அசால்டாகச் சொல்லி அலட்டலாக நடையிட்டுச் சென்றான்.

“இந்த அசிங்கம் உனக்குத் தேவையா?” என்று சரண்யா வர,

“ஹி..ஹி பார்த்துட்டியா? இதை எனக்கு நானே சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ சொல்லிட்ட.”

“ம்... இங்க உங்களுக்கென்ன வேலை. பார்த்து பார்க்காத மாதிரி போறதை விட்டுட்டு...”

“சரண்!”

“என்ன வழியுறீங்க? நாம இங்க நின்னுட்டிருக்கிறதைப் பார்த்து, அடுத்த ஆள் வந்து கிண்டலடிக்கவா. முதல்ல ஹாலுக்கு வாங்க” என்று அழைத்துச் செல்லவும், “போடி உனக்கு ரொமான்ஸே வரலை.” முனகியபடி பின்னே செல்ல, கணவனின் முனகலில் சின்னப் புன்னகையுடன் நடந்தாள்.

ப்ரியாவிடம் வந்த திருமொழி, “ஒரு ஹெல்ப் வேணும். ரொம்ப வருஷமாகிட்டதால எனக்கு இங்க யாரையும் அவ்வளவா தெரியல. இது மத்தவங்ககிட்ட கேட்கவும் கூச்சமாயிருக்கு” என்றாள் சின்ன நெளிதலோடு.

‘மத்தவங்ககிட்ட கேட்க முடியாததை என்னிடம் கேட்கிறாளா இந்தப்பெண்!’ ஆச்சர்யத்துடன் மனதிற்குள்ளும் ஓர் நிம்மதியெழுந்தது. ‘தன் கணவன் அவர்களுக்கு செய்த கொடுமையையும் தாண்டி தன்னை உறவாக ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.’ சின்னப் புன்னகையுடன், “என்ன ஹெல்ப்மா செய்யணும்?” என கேட்டாள்.

“அ..அது எப்படி சொல்றது தெரியல. யாருக்கும் தெரியாம நைட் சில அரேஞ்ச்மெண்ட் பண்ணனும். தனி ரூம்...” முழுதாகச் சொல்ல முடியாமல் வெட்கமும், தடுமாற்றமும், தயக்கமுமாக தலைகவிழ்ந்து நின்றிருந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள் ப்ரியா.

திருமொழியின் முகம் நிமிர்த்த, தன்னைப் பார்க்க முடியாமல் அலைபாய்ந்த கண்களைக் கண்டதில் சின்னதாய் புன்னகை எழ, “பர்ஸ்ட் நைட் அரேஞ்ச்மெண்டா? கல்யாணம் எப்ப முடிஞ்சது?” என்றாள்.

“ஒன்றரை மாசமாகுது.”

“ஓ... ஏன் இவ்வளவு நாள்? தப்பா கேட்கல மங்கை. உங்க ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அப்புறம் ஏன்னுதான்...”

“அது.. லட்சியம், பழிவாங்கல்னு என்னை நானே தப்பா கைட் பண்ணி, அதனால்தான் இவ்வளவு பிரச்சனையும்.”

“தப்பில்லையே மங்கை. நம்மை அடிச்சவனையே திருப்பியடிக்கலன்னா நமக்குத் தூக்கம் வராதுன்றது இயற்கை. அப்படியிருக்கிறப்ப உன் கண்முன்னே நடந்த சம்பவம், உன்னை எந்தளவு பாதிச்சிருக்கும். உன்னுடைய பழிவாங்கல் தப்பில்லை மங்கை. இனிமேல் நீ உன் வாழ்க்கையைப் பார். எந்த ரூம்னு சொல்லு? நைட் பக்காவா ரெடியாகியிருக்கும்.”

“அச்சோ! பெருசால்லாம் வேண்டாம். மத்தவங்க கவனத்தை ஈர்க்காத மாதிரி ரொம்பவே சிம்ப்ளா. இந்தாங்க அமௌண்ட்” என்று பணம் கொடுத்தாள்.

“ஏன் நான் செய்யமாட்டேனா?”

“இல்லை” என தடுமாறினாள். ‘எப்படி சொல்வது? உன் வீட்டுப் பணம் எந்த வகையிலும் என்னை தொடக்கூடாதென்று.’

“இங்க பார் மங்கை. அவரை நீ அண்ணனா ஏத்துக்கணும்னு எப்பவும் சொல்லமாட்டேன். என் அப்பா அம்மாவை அத்தை மாமாவா ஏத்துக்கிட்டு, என்னை அந்த முறையில் அண்ணின்னு கூப்பிடு. இல்லையா அக்கா சொன்னாலும் ஓகே” என்றாள்.

திருவின் திருதிரு விழியில், அவளை அதிகம் குழப்ப விரும்பாது, “அவரோட பணம்னு என்கிட்ட எதுவுமில்லை மங்கை. அப்படியே இருந்தாலும் அதை உன் விஷயத்துல யூஸ் பண்ணமாட்டேன். என்னைக்கும் என்னால உன் சுயமரியாதை கெடாது. நீ போ...”

“அது சா..சாரி.”

“பச்... நீயே வச்சிக்கோ.”

சட்டென சிரித்து “தேங்க்ஸ் அண்ணி” என்றாள்.

“நானும் தேங்க்ஸ்” என்றதும் திரு புரியாமல் பார்க்க, “உன் அண்ணின்ற அழைப்புக்குதான்” என்றாள் சந்தோஷமாக.

“ஹேய் ஹலோ! உங்க அப்பா அம்மாவை, என் மாமா அத்தையா தத்தெடுத்துக்கிட்டேன்” என்று புருவம் தூக்கி, “அண்ணி இந்த அரேஞ்ச்மெண்ட் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். ப்ளீஸ்” என்றாள்.

“டூ லேட்மா. எங்களுக்கும் தெரிஞ்சிருச்சி” என்று சரண்யாவும் கயலும் வந்தனர்.

“சுத்தம்” என்றாள் சத்தமாக.

“ஹா..ஹா ரொம்ப சலிச்சிக்காத மொழி. நாங்களும் ஹெல்ப் பண்றோம்.”

“ஹலோ! இதுல எதுக்கு இத்தனை ஹெல்ப்?”

“எதுக்கு இத்தனையா? ஹேய் ரூம் அவங்க ரெடி பண்ணினா, உன்னை யார் பார்க்கிறது?”

“ம்... என் புருஷன்தான் அண்ணி” என்றாள் பட்டென்று.

“அடிப்பாவி!” என்று வாயில் கைவைத்து, “முத்திப்போச்சி மொழி. நான் உன்னை அலங்காரம் பண்றேன்னு சொல்ல வந்தேன்.”

“சொல்றதை இப்படித் தெளிவா சொன்னா கேட்டுக்க மாட்டோமா” என்றாள் கெத்தாக.

“சரண்யா நான் சின்னப்பொண்ணு. எனக்கு இந்த மாதிரி டபுள் மீனிங்லாம் செட்டாகாது. எதுவாயிருந்தாலும் நீங்களே பாருங்க” என்று சரண்யாவிடம் சொல்லி கயல்விழி நகர,

“மதினி” என்ற திருவின் அழைப்பில், “யார்கிட்டேயும் சொல்லல தாயே. நீ நடத்து” என சிரிக்க, அப்புன்னகை மற்ற மூவரையும் தொத்தியது

அன்று பூஜை முடிந்ததும் செல்வரசி குடும்பத்தையும் சேர்த்து அனைவரையும் அங்கேயே தங்கிவிடச் சொல்ல... மற்றவர்களின் மறுப்பு எடுபடாமல் போக, வீடே திருவிழாக்கோலம் கொண்டது. வீட்டைச்சுற்றி சரவிளக்குகளும் ட்யூப்லைட் வெளிச்சங்களும் அவர்களின் இல்லத்தை உயிர்ப்புடன் காண்பிக்க, மூன்று நாட்களுக்கு சமையலுக்கென்று ஆட்கள் வைத்து பிரமாதப்படுத்தினார்கள்.

தமிழரசியின் வரவை உணர்ந்த உறவுகளும் அண்டை வீட்டினரும், அவருடன் பேசி நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள என்று அன்றைய பொழுதுகள் யாவும் இனிமையாகவே கழிந்தது.

இரவு உணவு முடித்து நிஷாந்த் கதிருடன் பேசியபடி செல்போனையும் வாட்சையும் வாங்கி ஒரு இருட்டு அறையில் விட்டுச் சென்றான்.

“ஏய் நிஷா என்ன பண்ற?” என்றதில் தன் குரல் தனக்கே எதிரொலிக்க அந்த அறையிலிருந்த வித்தியாசமான இனிய மணம் வேறேதோ கதை பேச, சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பில் மனம் குறுகுறுத்தது.

அதே நேரம் கதவு திறக்கப்பட, அவ்வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தவளின் முகம் தெரியாமல் போக, கதவைத் தாழிட்டு மின்விளக்கினைப் போட்டவளைப் பார்த்து அசந்துபோய் நின்றிருந்தான் இளங்கதிரானவன்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top