• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
3



மாலை தங்கையின் வீட்டிலேயே எளிமையாக நிச்சயத்தை முடித்து பதினைந்து நாட்களில் திருமண தேதி குறிக்கப்பட, அதுவரை எதிரெதிர் இருந்தும் பார்க்காமல் அமர்ந்திருந்த மணமக்கள் நிமிர்ந்த ஒருவரையொருவர் பார்க்க, பார்வை வீச்சினில் காதல் பிறப்பதற்குப் பதில் மோதலே பிறந்தது.

இருவரும் வெட்டும் பார்வையுடன் திரும்பிக்கொள்ள, அதைப்பார்த்த இருவரின் தங்கைகளும், ‘இதை சரிபண்ண நாங்கதான் ஸ்டெப் எடுக்கணும் போலிருக்கே. கடவுளே! இந்த குருவிங்க தலையில பனங்காயை தூக்கி வைக்குறியே. நாங்க தாங்குவோம்னுதான. ஹ்ம்.. ஓகே நாங்களே காயை பழமாக்குறோம்’ என்றார்கள் மனதினுள்.

“தனியா பேசணும்னா பேசிக்கோங்க” என்றதற்கு முதலில் வேண்டாமென்றும் பின் ஆம் என்றும் தலையை அசைத்து... தனியறைக்குள் ஒருவரையொருவர் குதறும் வெறியுடன் பார்த்திருந்தார்கள்.

“நான்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என இருவரும் ஒரே நேரத்தில் சொல்லி, “ஏன்? ஏன்.. பண்ணிக்க முடியாது? எனக்கென்ன குறையென்று” இருவரும் எகிறினர்.

வெளியிலிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இருவரின் தங்கைகளும், ‘இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்றாங்களா? இல்ல வேணும்னு சொல்றாங்களா? ரெண்டுக்கும் சண்டை போடுதுங்க லூசுங்க’ என நினைக்கையில் பெரியவர்கள் அவர்களை அதட்டி இடத்தைவிட்டு நகர்த்தினார்கள்.

“சொல்லு எனக்கென்ன குறை?” என்று சுபாஷ் கேட்க...

‘ம்.. என்ன நிறைன்னு கேட்டா என்ன சொல்வான்.’ மனதினுள் நினைத்தபடி, “தெரியாது” என்றாள் அவனிடம்.

“ஆனா, உனக்கு என்ன குறைன்னு நான் சொல்லுவேன். என் கலருக்கும் உன் கலருக்கும் மேட்சிங் பார்த்தியா? கருவாச்சி நீ! உன்னை எவன் கட்டிப்பான். ஒழுங்கா போயி மேரேஜ் வேண்டாம்னு சொல்லு.”

“என்னையைப் பார்த்தா கருவாச்சின்ற. நீ என்ன என்னை வேண்டாம் சொல்றது.. நான் ஏற்கனவே வேண்டாம் சொல்லிட்டேன். வீட்லதான் என்னோட பேச்சைக் கேட்க மாட்டேன்றாங்க” என்றாள் கோபத்தில்.

“ஏய், ஏன் முன்னாடியே சொன்ன? நீ எப்படி என்னை வேண்டாம்னு சொல்லலாம்?” ஏனோ அதற்கும் அவனுக்கு கோபம் வந்தது.

‘லூசாபா நீ’ என்பதுபோல் அவள் பார்க்க...

“என்ன லுக்கு?”

“ஆமா உன்னை லுக்கு விட்டுட்டாலும். கல்யாணம் வேண்டாம்ன்றதை யார் முதல்ல சொன்னா என்ன? அதான் நீங்கல்லாம் கிளம்பின உடனே சொல்லிட்டேன். அதுக்கு ஏன் சொன்னன்னு கேட்கிற?” என்றாள் எரிச்சலாக.

“அ..அது பையன் நான் சொல்லி அப்புறம் நீ சொல்லியிருக்கணும்” என்றவன் குரலில் சற்று தடுமாற்றமிருந்ததோ!

“ஓஹ்.. சார் எங்களுக்கு பெர்மிஷன் குடுக்கறீங்களோ? உன்கிட்ட நான் ஏன் பர்மிஷன் கேட்கணும்? நோ வே!”

அவனுக்குமே ‘நாம் ஏன் அப்படி சொன்னோம்’ என்றே தோன்றியது. ‘நாம சொல்ல நினைச்சதைத்தான இவ சொல்லியிருக்கா. அப்புறம் ஏன் சண்டை போடணும்.’ தன்னையே சமாதானப்படுத்தி அவளிடம் மன்னிப்பு கேட்டு, “சரி இப்ப போய்ச் சொல்லு” என்றான் அமைதியாக.

“என்னது இப்ப போய் சொல்லவா? என்னாலல்லாம் முடியாது. வேணும்னா நீ போய் சொல்லிக்கோ.”

“நான் போய் சொன்னா ஊரே குமுறியடிச்சிடும். இதான் உனக்கு வேணுமா?” என்றான் ஆத்திரத்தில்.

“இப்ப என்ன பண்றது?” கார்த்திகாவின் குரல் இறங்கி வந்தது.

“எனக்கும் எதுவும் புரியல. உன் போன் நம்பர் குடேன். எனக்கு எதாவது ஐடியா வந்தா சொல்றேன்.”

“போன் நம்பர்லாம் உனக்குத்தர முடியாது போ.”

“ஏய்.. சே.. லூசு நாம சேர்ந்து வாழ வாழ்க்கை ப்ளான் பண்ணவா நம்பர் கேட்டேன். எப்படி கல்யாணத்தை நிறுத்தலாம்னுதான. தரலன்னா போ.. போயி மணமேடையில உட்காரு. நான் வந்து தாலி கட்டுறேன்” என்றான் நக்கலாய்.

“எங்க வந்து கட்டித்தான் பாரேன். கொன்னுருவேன் உன்னை” என பதிலுக்கு அவனை வம்பிழுத்தாள்.

“அப்ப போன் நம்பர் தா” என்றதும் அவள் நம்பரை சொல்ல தன் செல்லில் பதிந்து வைத்தான் “கருவாச்சி” என்று. அந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்து, “இன்னும் பதினைந்து நாள்தான் சீக்கிரம் ப்ளான் பண்ணு. நான் வர்றேன் சாரி போறேன்” என்று வெளியே சென்றான்.

அவளோ, ‘பையன் அவனாலயே நிறுத்த முடியலயாம். நான் நிறுத்தணுமாம் இடியட். என்னைப் பார்த்து கருவாச்சின்றான். நான் என்ன அப்படியா இருக்கேன்.’ கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, ‘இல்லையே நான் கருப்பே கிடையாதே. மாநிறத்துக்கும் மேலதான இருக்கேன் அவன் கண் என்ன நொள்ளைக்கண்ணா! இதுக்குமேல கலரா வேணுமா அவனுக்கு?’

நிச்சயத்துக்கென்று போட்ட மேக்கப்பிலும் அந்த பட்டுப்புடவையிலும் இன்னும் அழகாக கலராகவே தெரிந்தாள் கார்த்திகா.

செல்போனிலுள்ள அவன் போன் நம்பரைப் பார்த்து, “என்னையவா கருவாச்சின்ற. இந்த கருவாச்சிதான்டா உன் பொண்டாட்டி. மகனே என் கையில சிக்கின, சிக்கன் கறிதான் நீ. ஒழுங்கா என்னை வேண்டாம்னு நீயே ஓடிப்போயிரு” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னக்கா ஒரே ரொமான்ஸ்தான் போலிருக்கு. கண்ணாடி முன் நின்னு அழகு பார்த்திட்டிருக்க” என்ற கீர்த்திகாவின் குரலில் ஏகத்திற்கும் கிண்டல்.

“வேண்டாம்டி ஏற்கனவே அவன் என்னை ஓவரா டென்சனாகிட்டு போயிருக்கான். இதுல நீ வேற எதாவது சீன் கிரியேட் பண்ணாத” என தங்கையை விரட்டினாள்.

இரவு பனிரெண்டு மணியளவில் போனடிக்க, தூக்கத்தில் போனை எடுத்து காதில் வைத்தபடி ‘ஹலோ’ என்றாள்.

“ஏய் என்ன தூக்கமா?” என்ற குரலில் பதறியடித்து எழுந்தமர்ந்து செல்லைப் பார்த்தாள். “தூங்கு மூஞ்சி” என்ற நம்பரிலிருந்து வந்திருந்தது. ‘ப்ச்... இவனா!’ என இவள் நினைக்க, அவனோ “ஏன்டி இங்க ஒருத்தன் தூக்கம் வராம கல்யாணத்தை நிறுத்த என்ன செய்யலாம்னு ப்ளான் பண்ணிட்டிருக்கான். நீ தூங்குறியா. ஒழுங்கா மாடிக்கு வா” என்று அதட்டினான்.

“ஏய் வேண்டாம். எதோ பொண்டாட்டி மாதிரி டி போடுற கொன்னுருவேன் உன்னை” என்றாள் கோபமாக.

“அப்ப மேலதான் நான் இருக்கேன். தைரியமிருந்தா வா வந்து கொல்லு” என எகத்தாளம் பேசினான்.

“அங்கேயே இரு வர்றேன்.” போனை வைத்து எழுந்து பின்வாசல் திறந்து மாடியேறி வர, “வா வா உட்காரு” என்று அவன் தரையைத் தட்ட... “ஆமா வந்த உட்கார்ந்து காதல் காவியம் படைக்கப் போறாங்க.” மனம் முணுமுணுக்க அவனை வெறித்தபடியே நின்றிருந்தாள்.

“சரிதான் நீ வரமாட்டே. சொல்லு என்ன முடிவு பண்ணியிருக்க?”

“நல்லா தூங்கிட்டிருந்தவளை எழுப்பி என்ன முடிவு பண்ணியிருக்கன்னா, என்ன சொல்றது. எதைப்பற்றியும் நான் எந்த முடிவும் பண்ணல. ஆம்பளை நீயே பார்த்துக்கோ.”

“அப்ப உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா?”

“இஷ்டம் கேட்க எங்க சந்தர்ப்பம் குடுத்த நீ. அதான் மொத்தமா முடிச்சிட்டியே.”

“ஏன் என்னடி? என்னவோ உன்னை ரேப் பண்ணின மாதிரி முடிச்சிட்டேன்ற” என அலறினான் சுபாஷ்.

“லூசு என்ன பேச்சு பேசுற? கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?” வார்த்தைகளில் அவள் எகிறினாள்.

“நாங்க வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா” என்ற திடீர் குரல்களில் இருவரும் அதிர்ந்து திரும்பினார்கள்.

“ஹேய் கூல் கூல் நாங்கதான்” என்று வந்த இருவரின் தங்கைகளையும் பார்த்தவர்கள் மனம் சற்று அமைதியடைய, “இந்நேரத்துல நீங்க எப்படி இங்க? யார்டான்னு பயந்திட்டோம்” என்றார்கள் இருவரும்.

“ம்க்கும்.. இதுக்கு மட்டும் ஒற்றுமை பிச்சிக்கிது. நீங்க என்னவோ சத்தமில்லாமல் பேசினதா நினைப்பா. இவ என்னடான்னா போன்ல சொல்ல வேண்டிய பதிலை நேராவே மாடிக்கு பாஸ் பண்ற மாதிரி சத்தமா சொல்றா. அதான் என் மாமா பொண்ணையும் துணைக்கழைச்சிட்டு வந்தேன். சரி என்ன ப்ராப்ளம்?” என்றாள் கீர்த்தி.

“ப்ராப்ளமா! அப்படில்லாம் ஒ..ஒண்ணுமில்லையே” என இருவரும் சொல்ல...

“ஓஹ்ஹோ! அப்ப ரொமான்ஸ் சீன் ஓடுதா” என இளையவர்கள் அதை வைத்தே வாக்கியத்தை மாற்றிப்போட...

“ஏய்! ச்சீ.. என்ன பேசுறீங்க? அதுவும் இந்த மூஞ்சியை” என சுபாஷ் இளக்காரமாகச் சொன்னான்.

“ஆமா.. அங்க அழகு ரொம்ப பொங்கி வழியுது போய் பிடிச்சிக்கோங்க” என்று தன் பங்கிற்கு அவனை நக்கலடித்தாள்.

“அப்ப இந்த நேரத்துல மாடி மீட்டிங் எதுக்கு?”

“சும்மாதான்.”

“அப்ப எங்ககிட்ட சொல்லமாட்டீங்க அப்படித்தான?”

இருவரையும் பார்த்தவன், “சொல்லலாமே! தப்பில்லையே! இப்ப எங்க மேரேஜை நிறுத்தணும். அதைப்பற்றித்தான் பேசிட்டிருக்கோம்” என்றான்.

“சரி நிறுத்தின பிறகு?” தங்கைகளின் எதிர் கேள்வியில், இருவரும் திருதிருவென விழிக்க...

“உங்களுக்கென்ன மாம்ஸ்.. ஆம்பளை எப்படின்னாலும் பொண்ணு கிடைச்சிரும். எங்கக்காவைப் பத்தி யோசிச்சீங்களா? நீங்க பண்ணின கூத்தை ஊரே வேடிக்கை பார்த்திச்சிதே. அது உங்களுக்கு புரியவேயில்லையா?”

“அ..அது யாராவது அவளை புரிஞ்சவன் வருவான்.”

“எப்படி நீங்க அவளை சிக்க வச்சிட்டு எஸ்கேப்பாகுற மாதிரியா?” அவர்களின் கேள்வியில் ஒரு குற்றவுணர்ச்சி வந்தது சுபாஷிற்கு.

“அந்த புரிஞ்சிக்கிட்டவனா நீங்க ஏன் இருக்கக்கூடாது? முன்னாடி நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்லாம சொல்லிக்காட்டி வர்றவன் கல்யாணம் பண்ணிப்பானா? பண்ணினாலும் எங்கக்காவை சந்தோஷமா வச்சிருப்பானா?” கேள்விகளை சூடாகவே கேட்டாள் கீர்த்திகா.

“அ..அது” என தடுமாறி, “நீ என்னையவே குறை சொல்ற. உங்க அக்காவுக்கு கூடத்தான் இந்தக் கல்யாணம் பிடிக்கலை.” பாலை கார்த்தியின் புறம் தள்ளிவிட்டான்.

“அது ஒரு லூசு. ப்ராக்டிகலா யோசிக்கத் தெரியல” என்றதும் அவன் சிரிக்க, கார்த்திகாவோ தங்கையை முறைத்தாள்.

“அண்ணா சீரியஸாவே இந்தக் கல்யாணத்தை நிறுத்தணுமா?” என்றாள் வித்யா.

இருவரும் சேர்ந்தாற்போல் “ஆமாம்” என்றார்கள்.

“சரி கீர்த்தி அதைத்தவிர வேறு வழியில்லை. இதுங்க தேறாத கேஸ். சோ, அண்ணா அண்ணி ரெண்டுபேரும் மாடியிலிருந்து கீழே குதிச்சிருங்க. ஆட்டோமேடிக்கா கல்யாணம் நின்னுரும்” என்றாள் கோபத்தில்.

“ஏய் லூசுங்களா கல்யாணத்தை நிறுத்த வழிகேட்டா, சாக வழி சொல்றீங்க” என இருவரும் கத்த...

“இது பிடிக்கலைன்னா சரி. நீ வேலைக்குப் போறீங்கள்ல அண்ணா, அப்படியே போயிருங்க. திரும்ப வரக்கூடாது. வந்தால்தான கல்யாணம் நடக்கும்.”

“வித்யாமா அப்பா பத்திதான் உனக்குத் தெரியுமே. அப்புறம் ஏன் இப்படி?”

“அதுக்காக எத்தனை காலத்துக்கு பயப்படுவ. இப்ப கல்யாணம் வேண்டாம்னு எங்ககிட்ட சொல்ற மாதிரி, தைரியமா எனக்கு பிடிச்ச பொண்ணோட ஓடிப்போறேன்னு லெட்டர் எழுதிவச்சிட்டுப் போண்ணா. லெட்டரும் தமிழ்ல இருக்கணும்.”

அதான் முக்கியம் என்பதுபோல் பேசிய தங்கையை எரிப்பதுபோல் பார்த்து, “வேணும்னா இதோ இவளை அந்த மாதிரி எழுதி வச்சிட்டுப் போகச்சொல்லு” என்றான் கடுப்பில்.

“ஏய் வேண்டாம். நானா உன் வீட்டுக்குள்ள வந்து உன் பெட்ரூம்ல படுத்தேன். தப்பு செஞ்சது நீ. அப்ப நீதான போகணும்.” அவனை குற்றம் சாட்டினாள் கார்த்திகா.

“ஆமா. எங்களுக்கு ஆசை பாரு போவியா” என்று எரிச்சலில் அவன் பேச...

“மாம்ஸ் அதெப்படி கரெக்டா பெட்ரூம் போனீங்க? அதுவும் கட்டி வேற பிடிச்சிருக்கீங்க. எங்க அக்கா எப்படி?” கீர்த்தி அவனை உசுப்பேற்றினாள்.

“செம ஷாஃப்ட்” என்றான் அந்த நினைவில் தன்னை மீறி.

“அக்கா நான் வளர்த்தியான கதை தெரியுமா?”

“கீர்த்திமா அது நீன்னு நினைச்சி...” கீர்த்திகாவும், வித்யாவும் ஒருவரையொருவர் அர்த்தப்பார்வை பார்க்க, அதைப் புரிந்தவளோ கோபத்தில் முகம் கடுகடுத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“சரி கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு, அக்கா நீ எனக்கொரு பதில் சொல்லு?”

“எல்லாம் நேரம்டி நண்டு சிண்டெல்லாம் நிற்கவச்சி கேள்வி கேட்குது. ம் என்ன பதில் சொல்லணும்?”

“உனக்கு வேற யாரோடவாவது மேரேஜாகி அவன் உன்னை இவரோட சேர்த்து சந்தேகப்பட்டா என்ன பண்ணுவ? நாம சொல்லாம எப்படி தெரியும்னு நீ கேட்கலாம். நம்மளைச் சுற்றியிருக்கிறவங்க எல்லாம் சும்மாயிருப்பாங்களா. போட்டுக்குடுத்து சந்தோஷப்பட மாட்டாங்க” என்றாள் நிதர்சனத்தை உணர்த்திவிடும் நோக்குடன்.

“சர்ரி.. இப்ப எங்களை என்னதான் செய்யச்சொல்றீங்க?” இருவரும் ஒருசேரக் கேட்க...

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. காரணம் தேடலாம். இல்லன்னா நாமளே உருவாக்கலாம்” என்று சீரியஸாகவே பதில் சொன்னார்கள்.

“ஹ்ம்.. ஒருவாரம் போயிருச்சி குட்டீஸ்களா பத்திரிக்கையடிச்சி எல்லா இடத்திலும் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் ஒன் வீக்தான் இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல” என உருக்கமாக பேசினான்.

“அண்ணா இன்னும் ஒன் வீக் இருக்குல்ல பார்த்துக்கலாம் விடுங்க” என்றனர்.

“எதை பார்த்துக்கலாம்? என்னுடைய கல்யாணத்தையா?”

“அண்ணா சமீபத்துல எதிர்நீச்சல்னு ஒரு படம் போட்டாங்க. அதுல வலுக்கட்டாயமா ஹீரோயினை அதுவும் பைத்தியமாயிருந்து குணமான ஹீரோயினை, ஹீரோவுக்கு கட்டி வைக்க ட்ரை பண்றப்ப அவர் ஃப்ரண்ட்ஸ்கிட்ட புலம்புவார். அவங்க அதிலிருந்து தப்பிக்க ஒரு ஐடியா சொல்வாங்க” என்று நிறுத்தினர்.

“டேய் கண்ணா என்ன ஐடியாடா?” என்றான் ஆர்வமாய்.

“அந்த பொண்ணுதான்னு முடிவான பிறகு தப்பிக்க வழியேயில்ல. பேசாம கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணிக்கோன்னு சொல்வாங்க.” கொலைவெறியாய் வெறித்தவனை கண்டுகொள்ளாது, “அதுமாதிரி நீங்களும் ட்ரை பண்ணுங்களேன். கார்த்திகா அக்காவும் நல்லவங்கதான்.”

வந்த கொலை வெறியை கண்ணோடு நிறுத்தி, “இதெல்லாம் ஒரு ஐடியான்னு சொல்றியாடா?”

காதலிக்கும் ஆசையில்லை


கடவுள் வந்து சொன்னாலும்

ஏமாந்த இளிச்சவாய் நானில்லை போடா

பாடியபடி சாக்லேட்டை அவர்கள் கையில் கொடுத்து, “சே..உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க. என்னைச் சொல்லணும்” என்று நடந்தவனை,

“அண்ணா கார்த்திக்கா வர்றாங்க. வாங்க பேசி தீர்த்துக்கலாம்” என்றதும் திரும்பியவன் அப்படியே நின்றான். கீர்த்திகா, வித்யாவுடன் கார்த்திகாவும் வந்து கொண்டிருந்தாள்.

தலைக்குக் குளித்து காதோர முடிகள் பறக்காமலிருக்க நடுவில் க்ளிப்போட்டு, விரியவிட்ட முடிகளை காற்று கலைத்து ஆடவைக்க, அமைதியான, அதிர்ந்த பேசாத முகம். எந்தவித பந்தாவோ, முக சிடுசிடுப்போ இல்லாத அடக்கமான தோற்றம். அன்றிரவு தன்னிடம் நெருங்கி வந்து கட்டிக்கொண்ட அவளின் மென்மை, ஏனோ இப்பொழுதும் அவளின் அணைப்பில் இருப்பதுபோல் தோன்ற, மனம் போகும் திசையை எண்ணி தன்னைத்தானே திட்டியபடி, “இல்ல குட்டீஸ் இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்று சென்றான்.

“கல்யாணத்தன்னைக்கா அண்ணா?” என்றவர்களின் கேலியை காதில் வாங்காமல், “நடந்தால்தான.. அப்ப பார்க்கலாம்” என வேகமாக நடந்தான். அதற்குள் பெண்கள் மூவரும் அருகில் வந்து சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்தார்கள்.

“அக்கா, அண்ணா புலம்பிட்டே போறாங்க. நீங்க ஏன் எதுவுமே சொல்லல” என கேட்டனர்.

“ஏன்டா பசங்களா, என்னை என்ன நினைச்சீங்க? புலம்பித்தள்ள நான் சுபாஷ் இல்ல கார்த்திகா” என்றாள் கெத்தாக.

“கார்த்திக்கா, அண்ணா கல்யாணத்தை நிறுத்த ஏற்பாடு பண்றாங்களாம்.”

“பண்ணிக்கட்டும் எனக்கென்ன?” கூலாக அவர்களிடம் சொல்லி நகர்ந்தாலும், மனதிற்குள் ஏதோ ஒரு சங்கடம். ‘அவனுக்கு பிடிக்காத அளவிற்கா நான் இருக்கேன். எப்படி என்னை கருவாச்சி சொல்றான். நான் ஒண்ணும் கருப்பில்லையே! ப்ச்.. பார்க்கலாம். இன்னும் ஒருவாரம் இருக்கே.’ மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அதன்பின் சுபாஷிணி வர குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும் மாலை வரை இருந்தே சென்றனர். விடுமுறை நாள்களில் அந்த ஆசிரமத்திற்கு வருவது சிறியவர்களின் வழமையென்றால், சுபாஷிணி அந்த ஆசிரமத்தில் முக்கிய பொறுப்பிலிருப்பவர்.

பலதரப்பட்ட மனிதர்களையும், அவர்களின் சோகங்களையும் பார்த்தவருக்கு சுபாஷைப்பற்றி கணிப்பது பெரிய விஷயமல்ல. அதிலும் அண்ணன் மகன் என்ற தகுதியே அவனுக்கு கூடுதல் தகுதியாய். இருவருக்கும் முடிச்சிப்போட பெரியவர்கள் நினைக்கையில், அவர்களாகவே வந்து மாட்டிக்கொண்டார்கள்.

சுபாஷ் தாம்பரம் அருகிலுள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியில் மேனேஜர் வேலையிலிருக்கிறான். நிதமும் செங்கல்பட்டு டூ தாம்பரம் ட்ராபிக் தாண்டி வந்து செல்வது சுபாஷிற்கு சரிவராமல் போக, அங்கேயே நண்பர்களுடன் தனியாக தங்கியிருந்து விடுமுறை நாள்களில் மட்டும் வீட்டிற்கு வருவான்.

கார்த்திகா பொறியியல் முடித்து ஆறுமாதங்கள் மட்டுமே வேலைக்குச் சென்றாள். பின் அவர்களின் ஷோரூமை பார்த்துக்கொண்டு தன் அப்பாவிற்கு எல்லாமாகவும் இருக்கிறாள்.

“சார் இந்த நிலம்தான் நாம பார்க்க வந்தது. நம்ம கம்பெனிக்கு இந்த இடம் கரெகட் சாய்ஸ்னு தோணுது. மேலிடத்துல பேசி சொல்லுங்க. அட்வான்ஸ் போட்டு ஒரு அக்ரீமெண்ட் போட்டுடலாம்.”

“ம்.. போடலாம். பக்கத்துல ஆசிரமம் இருக்குதுபோல. இதனால அதுக்கு எந்த பாதிப்பும் வராதே?”

“நோ சார். நாம கட்டப்போறது கழிவுப்பொருள் வெளியேற்றுவது சம்பந்தப்பட்ட தொழில் கிடையாது. ஐடி கம்பெனி.”

“இல்ல நடராஜ். நம்மளால அவங்க ஃப்ரீயா இருக்க முடியாது. சென்னை உரகடம் பக்கத்துல ஒரு இடம் இருக்கிறதா ஃப்ரண்ட் சொன்னான். அதையும் பார்க்கலாம். இரண்டையும் சேர்த்து நம்ம ஒபீனியனையும் சொல்லி எம்.டிக்கு மெய்ல் பண்ணிடுறேன். சரி நான் அப்படியே ஆசிரமத்தைப் பார்த்துட்டு ஒரு அரை மணிநேரத்துல வந்திடுறேன். நாம சேர்ந்தே பெங்களுர் கிளம்பலாம்” என்றதும் அவனின் ஜுனியர் சம்மதமாக தலையசைத்தான்.

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் தங்கை திருமணத்திற்கு உரிமையாய் போய் நிற்க முடியாத தன் நிலையை எண்ணி வருத்தம் வர, இப்பொழுதே சென்றால் தாய் ஏற்பது கடினம். எப்படி செல்வதென்று யோசித்தபடி காலார நடந்தான்.

“ஹேய் இதுங்க ரெண்டும் திருந்தாதுங்க. பேசாம என் அத்தை மகளான உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நானே பையனா பிறந்திருக்கலாம். நம்ம வீட்டுப் பெரியவங்க ஆசையாவது கொஞ்சம் நிறைவேறும்” என்றாள் வித்யா சலிப்பாக.

“ம்க்கும்... ஏன்மா மாமன் மகளே! இப்ப ஒரு சட்டம் வந்திருக்கே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் விருப்பப்பட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு. அதை ஏன் நாம முயற்சிக்கக்கூடாது? ஒரு பேமிலில இதை நடத்திருக்காங்கபா. நியூஸ், ஃபேஸ்புக், வாட்சப், ட்விட்டர்னு ஹாட் நியூஸா உலாவந்தது. என்ன உனக்கு ஓகேவா?” என்றாள் கண்ணடித்து.

அவளுக்கு இரண்டு அடிகள் போட்டு, “ஏய்.. ச்சீய்.. எருமை. அவனுங்களும் அவனுங்க கேவலமான சட்டமும். அதை ஒத்துக்கிட்டு கல்யாணம் செஞ்சு வச்சவங்களை என்ன சொல்றது. பார்க்கவே அருவருப்பாயிருந்தது. எதெதுக்கு ஆதரவா சட்டம் போடணும்ன்ற விவஸ்தை கெட்டவங்க. இப்ப கள்ளக்காதலுக்கு ஆதரவா சட்டம் போட்டிருக்காங்க. அடுத்து லிவிங் டுகெதர் ஆதரிச்சி சட்டம் வரும். அதுக்கடுத்து கற்பழிப்பு தப்பில்லைன்னு சட்டம் வரும். இன்னும் எத்தனை கேவலமான சட்டங்கள் வருமோ!”

“வெளிநாட்டுல உள்ளவன்லாம் இந்தியாவை மதிப்பா பார்த்த காலம் போய், இப்ப இந்தியாவை நாமளே தூற்றிப் பேசுற மாதிரியாகிருச்சி. பாரு ஒளிஞ்சி மறைஞ்சி தப்புப் பண்ணினவனெல்லாம் இப்ப பப்ளிக்கா தப்புப் பண்ணுறான். சட்டம் போடுறது ஆண்கள்ன்றதாலதான் இப்படிலாம் பண்றாங்களோன்னு தோணுது.”

“நிஜம்தான். நம் நாட்டு சட்டங்கள் சரியில்ல. தண்டிக்கிற விஷயங்களுக்கு மன்னிப்பை வரமாக கொடுத்த மாதிரி பண்ணியிருக்காங்க. தண்டனை கடுமையா இருந்தால்தான தப்புகள் நடக்காது.”

“அதைவிடு. எப்படியும் மாமா பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போற. அந்த முகம் தெரியாதவனோடான உன் கல்யாணம், உன் கணவன் பற்றிச் சொல்லு கேட்போம்?”

“ம்... இப்ப இது ரொம்ப முக்கியமா?”

“முக்கியமில்லதான். இருந்தாலும் நம்ம கூடப்பிறந்ததுங்க அடிச்ச லூட்டியிலயிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னுதான்.”

“அப்ப நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”

“நான் உன்னோட ஜுனியர்மா. சீனியர் நீ சொல்லு. உன் மேரேஜ் அப்புறமா நான் சொல்றேன்” என்றாள்.

“பெருசால்லாம் எதுவுமில்லடா. சின்னதா கூட கெட்ட பழக்கங்கள் இல்லாதவனா இருக்கணும். எந்தவித எதிர்பார்ப்புமில்லாத... ஐ மீன் நகை பணம்னு அலையாது, என்னை மட்டும் நேசிக்கத் தெரிந்தவனா இருக்கணும். பெத்தவங்களையும் பெண்களையும் மதிக்கணும். அதே நேரம் சுயசிந்தனை உள்ளவனாகவும் இருக்கணும். முக்கியமா பொண்டாட்டியை சந்தேகப்படக்கூடாது. அப்புறம் எங்க கல்யாணத்துல என் ஹஸ்பண்டா என்னை சைட்டடிக்கணும். நான் அவங்களைப் பார்க்கலைன்னாலும்...”

“அதென்ன பார்க்கலைன்னாலும்?”

“அது கல்யாணப் பொண்ணுன்னா வெட்கமிருக்காதா” என்று வெட்கப்பட,

“அடிப்பாவி! அப்புறம்?”

“அப்புறம் என்ன, அவங்க என்னைப் பார்க்கிறதை நான் உணரனும். இன்னும் சின்னச்சின்னதா...”

வித்யா சொல்லச் சொல்ல அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தற்செயலாகக் கேட்டதாக இருந்தாலும், அவ்விடம் விட்டு நகரவில்லை அவன் கால்கள். அவளின் துருதுரு கண்கள். அமைதியான அழகும் அவனை அழகாய் இம்சித்ததோ! திருமணத்திற்கும் தனக்கும் ராசியில்லை என்றிருந்தவன் கண்கள் மீண்டும் ஒரு பெண்ணிடம் சிக்குண்டு அவளின் நியாயமான ஆசைகளை ரசிக்கவும் செய்தது.

“இதுதான் என்னோட கணவனுக்கான குவாலிபிகேஷன்” என்று முடித்தாள்.

“ததாத்சு மாமன் மகளே! போதும் இனிமேல் நான் தாங்கமாட்டேன். நல்லதே நடக்கட்டும். நல்லதாகவே நடக்கட்டும்!” என்ற கீர்த்தியின் காதில் வித்யா எதுவோ சொல்ல...

“ஹா..ஹா மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசுதான் போ!”

“கீர்த்தி சொன்னா சரியாத்தானிருக்கும்” என்று கீர்த்தியிடம் கைநீட்டியவள், பின் மடக்கி தன் தோளை தானே தட்டிக்கொண்டாள்.

வித்யா கீர்த்தியென்று தன்னைத்தானே தட்டிக்கொண்டதைக் கண்டவனோ, “கீர்த்தி! நைஸ் நேம். எனக்கு உன் மேலிருப்பது சலனம் இல்லாம விருப்பம்னு தெரிஞ்சதுன்னா, கண்டிப்பா உன்னைக் கரம்பிடிக்க வருவேன்” என்றான் வித்யாவைப் பார்த்து.


வித்யாவைக் கீர்த்தியென்று முடிவுகட்டிச் சென்றவனுக்கு உண்மை தெரியும் பொழுது அவனின் முடிவு!
 
Last edited:

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top