- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
28
“தந்தையாரே ஒரு ஹெல்ப்?” என்ற கதிரிடம், “என்னடா மகனே தனியா ஹெல்ப் கேட்கிற? மருமகளுக்கு தூது எதுவும் போகணுமா?”
“அப்பா மங்கைக்குத் தூது போகவேண்டாம். மங்கைக்காக கார்மேகம்கிட்ட தூது போகணும்.”
“புரியலடா. அவன்கிட்ட ஏன் போகணும்?”
“மங்கை அன்பு அத்தை கயல் எல்லாரையும் அவன் கடத்திட்டான்ப்ப்பா.”
“கதிர்!”
“மத்தவங்களை எப்படியோ, ஆனா, மங்கையை உங்களாலதான்பா காப்பாத்த முடியும்”. எப்படி என்னவென்று அவரிடம் சொல்ல...
“டேய் மகனே! சிங்கத்தோட குகைக்குப் போய்கூடத் திரும்பலாம். அவனுங்க இடத்துக்குப் போனா... நினைச்சாலே உதறுதுடா.”
“அப்பா ஏன் இப்படிலாம் பயப்படுற. உன் பையனுக்காக இதுகூடப் பண்ணமாட்டியா? வரவர நீ சரியில்லப்பா. அம்மாகிட்ட சொல்லி...” சட்டென்று அவன் வாய்மூடி, பிறகு தன் வாயையும் மூடி தான் போவதாக சைகையில் சொல்லிக் கிளம்பியிருந்தார்.
இப்பொழுதும் உள்ளுக்குள் ஒரு உதறல்தான். அவரின் முகத்திலுள்ள டென்ஷனை மருமகளைக் காணாததால் என்பதாய் கார்மேகம் தவறாக எடுத்துக்கொள்ள, குருவிற்குதானே தெரியும் எதனாலென்று!
குருமூர்த்தியின் நிலை அச்சு பிசகாது செல்வரசிக்கும். மகனைத் தூங்க வைத்து சிறிது நேரத்திற்கெல்லாம் தனக்கு வந்த அழைப்பை எடுத்தவரிடம், ‘நான் இளநாதன் பேசுறேன்’ என்று அவன் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு பதறியவரை சமாதானப்படுத்தி, தன் அப்பா வருவதைச் சொல்லியிருந்தான். பிரகாஷ் அன்புவிற்கு தன் நம்பருடன் எதற்கும் இருக்கட்டுமென்று அம்மாவின் நம்பரையும் தந்திருந்தது தற்பொழுது உபயோகப்பட்டிருந்தது.
குருமூர்த்தி கார்மேகம் உரையாடல் வீடியோவை விட்டு நகர்ந்த கார்த்திக், “கதிர் உங்க ஒய்ஃப் இப்போதைக்கு சேஃப். ஆனா, நிலை எந்த டைம்னாலும் மாறலாம். ஒரு பெரிய தலையை களை எடுக்கிறோம்னா கலவரங்கள் வெடிக்கும். சோ, கைது பண்றது மாதிரியிருந்தா மிட் நைட்தான் பெஸ்ட். அதுக்கு முன்னாடி உங்க எதிர்ல வந்தாலும் கோபத்தை விட்டு நிதானமா நடந்துக்கோங்க. இக்கட்டான சூழ்நிலைனா பகல்ல கூட நம்ம மிஷனை ஆரம்பிச்சிரலாம்.”
“எல்லாத்தையும் சகிச்சிட்டு ரொம்பவே நிதானமாதான் சார் நிற்கிறேன். என் குடும்பத்தோட மிச்சத்தையும் அழிக்க விடமாட்டேன். விதி இதுதான்னா என் கையாலதான் சார் அவனுங்க சாவு.”
“கூல் கதிர். இப்ப நீங்க ஆத்திரத்துல பேசுறீங்க. அவங்களாவே தற்செயலா செத்தா கூட நீங்கதான் செய்திட்டீங்கன்னு உங்களை நான் சந்தேகப்படத் தோணும். எப்பவும் பேசுற வார்த்தைகளை யோசிச்சிப் பேசுங்க.”
“சாரி சார்” எனும்போது தாயிடமிருந்து போன் வர, “அம்மா உங்க மருமகளுக்கு எதுவும் ஆகாது. அந்த காமாட்சி தாயை நம்புறீங்கதான? அப்ப எல்லாம் சரியா நடக்கும். நான் அவளோடதான்மா வருவேன். சித்தியை வருத்தப்பட வேண்டாம் சொல்லுங்க” என்றனுக்குள் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற வேண்டுதல்.
நடந்த எதுவும் தெரியாது விழித்து எழுந்த பிரகாஷ் சார்ஜிலிருந்து செல்லை எடுத்து ஸ்விட்ஜ் ஆன் செய்த சில நிமிடங்களில் கதிரிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள் இருப்பதைப் பார்த்து ‘ஒருவேளை கயல் கடத்தப்பட்டது தெரிஞ்சிருச்சோ’ என்றபடி கால் செய்தான்.
“பிரகாஷ் எங்க போயிட்ட? நேத்திலிருந்து செல் ஸ்விட்ஜ் ஆஃப். எந்த நேரத்திலும் அலார்டா இருக்க வேண்டாமா? இப்படியா அசால்டா இருக்கிறது. உங்கண்ணன் கயலையும் அத்தையையும் எங்க வச்சிருக்கான்னு சொல்லு?”
“இளா அமைதியாயிரு. நானும் நைட்லயிருந்து தேடிட்டிருக்கேன். எங்க வச்சிருக்கான்னு தெரியல.”
“உனக்கு நைட்டே தெரியும்தான. என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. அப்படிச் சொல்லியிருந்தா மங்கையையும் அன்புவையும் கடத்தாமல் பார்த்திருப்போம்ல. ஏன் இப்படிப் பண்ணிட்ட?” என்றான் கோபமாய்.
“இளா என்ன சொல்ற?”
“ஆமா இப்பக்கேளு. காலையில தோட்டத்துக்குப் போனவங்களைக் காணோம். சோழவந்தான் சைடு போன கார் அப்படியே வேற ரூட்ல இடம்மாறிருச்சி. நாங்களும் மதுரை முழுக்க சல்லடை போட்டாச்சி. உங்க வீடு மட்டும்தான் பாக்கி. அங்க தேடத்தான் இப்ப ப்ளான்.”
“நான் வெய்ட் பண்றேன் இளா” என்று போனை கட் செய்து யோசனையுடன் தாயிடம் வந்தான்.
“தம்பி என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரியிருக்கீங்க?” என்று ப்ரியா கேட்க...
அண்ணன் செய்வதைச் சொல்லி அவளின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாது, “ஒண்ணுமில்ல அண்ணி. சின்ன ப்ராப்ளம் சீக்கிரம் சரியாகிடும்” என்றான்.
“உங்க அண்ணனாலயா?”
“சேச்சே.. அப்படிலாம் இல்லண்ணி. அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?”
“அப்ப சொல்லமாட்டீங்க? சரி நானே கேட்கிறேன். எதாவது பொண்ணு பிரச்சனையா?” பிரகாஷின் அமைதி தொடர, “நீங்க சொல்லுங்க அத்தை. யார் அந்த பொண்ணு?”
“என் நாத்தனார் பொண்ணுமா ப்ரியா. பெயர் கயல்விழி. இவனுக்காக நான் பார்த்திருக்கிற பொண்ணு. அவளையும் என் அக்காவையும்தான் கடத்திட்டாங்க.”
“அத்தை அந்த வீட்ல பார்த்தீங்களா?”
“நேத்து நைட் அங்கவச்சிதான் பார்த்துப் பேசிட்டு வந்தேன் அண்ணி. அங்கயிருந்திருந்தா கொஞ்சமாவது படபடப்பு இருந்திருக்குமே. அவன் நார்மலாயிருந்தான்.”
“புதுசா தப்பு செய்றவங்களுக்குதான் தம்பி படபடப்பு இருக்கும். அவசியம் இல்லன்னா உங்க அண்ணா அந்த வீட்டுக்குப் போகமாட்டார்.”
“அண்ணி!”
“நிஜம் தம்பி. காரணமில்லாமல் அங்க போகமாட்டார். வேணும்னா அத்தையைக் கேளுங்க. நீங்க தேடுறவங்க அங்கதான் இருக்கணும். காலையில பெரியவ ஏதோ சைன் வாங்கணும்னு அங்க போயிருந்தா. வந்து ஏதோ சொன்னா நான்தான் எப்பவும் நடக்கிற பஞ்சாயத்தா இருக்கும்னு சரியா கவனிக்கல. லீவு டைம்ல பிள்ளைங்களுக்கு அங்கதான் விளையாட்டு. அதான் எதோ வித்தியாசமா உணர்ந்திருப்பாங்க போல.”
“தேங்க்யூ அண்ணி” என்றான் அவர்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்.
“வாங்கண்ணா” என்ற தாயின் குரலில் பிரகாஷ் திரும்பிப் பார்த்தான்.
“எதாவது நியூஸ் கிடைச்சிதாம்மா. மதுரை சுற்று வட்டாரம் தாண்டி எங்கயும் போகல. உங்க வீட்டைத் தவிர எல்லா இடமும் தேடியாச்சின்னு பையன் சொல்றான்.”
“அதுதான்ணா தப்பு. முதல்ல எங்க வீட்ல தேடியிருக்கணும்.”
“இங்கேயா?”
“இங்கயில்ல. இது என் அக்கா வாழ்ந்த வீடு. எங்க வீடு அடுத்த தெருவிலிருக்கு. அதுக்கடுத்த தெருவில்தான் தேவநாதன் அண்ணா வீடு. அங்கதான் தேடியிருக்கணும் சொல்றேன்.”
“அம்மா யார் இவர்? நம்ம வீட்டு விஷயத்தைப்பற்றிப் பேசுறீங்க?”
“நான் யாரா? ஏன் மாப்பிள்ளை தம்பி, என் பொண்ணைக் கட்டிக்கிறதா ஐடியாயில்லையா?” என்றார் கேலியாக.
“உங்க பொண்ணை நானா? நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது சார். நீங்க வேற இடம் பாருங்க.”
“ஏன்மா தங்கச்சி? என் பொண்ணு கயல்விழி இவருக்கு உயிர்னு சொன்ன? இப்ப என்னடான்னா...”
“கயலா? அவள் எப்படி உங்க... நீங்க கதிர் அப்பாவா!” என்றான் ஆச்சர்யமாய்.
“கண்டுபிடிச்சிட்டியே. அப்படியே என் பொண்ணையும் மருமகளையும் கண்டுபிடிச்சிக் கொடுத்திரு.”
“கண்டிப்பா மாமா. அவனுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச்சொல்லுங்க.”
“நாம பேசுறதை பையன் கேட்டுட்டிருக்கான். கொஞ்ச நேரத்துல வந்திருவான்.”
“நானுமே உங்களோட சேர்ந்திருக்கேனே” என்ற கார்மேகத்தின் குரலில் அனைவரும் அதிர்ந்து திரும்ப, “ஹா..ஹா என்ன கூட்டணிலாம் பலமாயிருக்கு. ஆனா மச்சான்! நடிப்புல சிவாஜி தோத்துட்டார் போங்க. உங்க மருமகளை ஒப்படைக்கதான் அவளை இங்க கூட்டிட்டு வந்தான் ஜெய். அதுல என்ன ஒரு சிக்கல்னா நீங்க சொன்ன எல்லாமே சரியாயிருந்தது. ஆனா, அன்பு கூட அந்தப்பொண்ணை கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே பசங்க பார்த்ததா சொன்னதை மறந்துட்டோம்.”
“ரத்தினம் பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க பையனுக்கு கல்யாணம் முடிஞ்சதா சொன்னீங்க. அப்புறம் எப்படி அவன் கல்யாணத்துக்கு முன்னாடி அன்பு கூட இங்க சுத்தினாள்? திடீர்னு ஒரு சந்தேகம் வந்து ஒருத்தனுக்கு போனைப்போட்டு விசாரிச்சா, ரத்தினம் பையன் கல்யாணத்துக்கு மறுநாள் உங்க பையன் அவள் கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டினானாம். இது நடந்தப்ப எங்க வீட்டு சாரும் கூடயிருந்திருக்கார் போல.”
மகனிடம் திரும்பி, “என்கிட்ட சொல்லவிடாம அவனை மிரட்டியிருக்க ம்... நீயெல்லாம் என் மகனா பிறக்காமலே இருந்திருக்கலாம்டா. எல்லாரும் சேர்ந்து ரொம்பத் தப்புப் பண்ணிட்டீங்க” என்றபடி குருமூர்த்தியின் செல்லைப் பிடுங்கி ஸ்விட்ஜ் ஆப் செய்து, அடியாள் ஒருவனை அனுப்பி அவரை சோதித்து எதுவுமில்லையென்றதும், “நல்லா செக் பண்ணு. வீடியோ டெலிகாஸ்டாகுதுன்னா கேமராயிருக்கு” என்று அவன்மேல் எரிந்து விழுந்து, “என்ன மச்சான் எதாவது பண்ணினால்தான் தருவீங்களா?” என்று கைநீட்டினான்.
“கார்மேகம். இங்க வரும்போதே உயிருக்கு ஆபத்து வரும்னு தெரியும். சரிவிடு வச்சிருந்து என்ன செய்யப்போறேன்” என்று பேண்டிலிருந்த பட்டன் சைஸ் கேமராவைப் பிய்த்துக் கொடுக்க...
“ம்... எல்லாம் ப்ளான்!”
“என் பையன் பண்ணுவான்டா ப்ளான். அவனை நீங்க யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. அவனைக் கொன்னு தூக்கிரலாம்னு நினைச்சா உங்களைவிட முட்டாள் யாரும் கிடையாது. செத்துப் பிழைச்சவன்டா என் பையன்” என்றார் நிமிர்வாக.
“அப்பவே செத்திருந்தா அடுத்த சாவு வந்திருக்காது. சரிவிடுங்க. ஒண்ணு ரெண்டோட நிறுத்தணும் நினைச்சேன். கடவுளோ! ஏன்டாப்பா உனக்கு கும்பலா வெட்டித்தான பழக்கம்ன்றார் போல. டேய் பசங்களா! இவங்களைக் கார்ல ஏத்தி பெரிய வீட்டிற்குக் கூட்டிட்டுப்போங்க” என்று கட்டளையிடடார்.
இரண்டு கார்களில் அவர்களை ஏற்றி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த அந்த பெரிய வீட்டின் காம்ளெண்டிற்குள் கார் நுழைந்து, சற்று தூரம் சென்று போர்டிகோவில் நின்றது. வீட்டைச் சுற்றிலும் ஆட்களிருந்தால் சந்தேகம் வருமென்று, அதிகம் ஆட்களை வெளியே நிறுத்தாமல் உள்ளே நிற்க வைத்திருந்தார்கள்.
அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில், இரண்டு கார் டிக்கியிலிருந்தும் இருவர் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து மறைவான இடத்தில் நிற்கையில், ஒருவரை இன்னொருவர் அதிர்வுடன் பார்த்து, “நீங்க போலீஸா?” என கேட்டார்கள்.
“நான் நிஷாந்த். அன்பு அண்ணன்.”
“நான் அப்பு. அப்புசாமி பிரகாஷ் ப்ரண்ட். வாங்க உள்ள போகலாம்.”
“வெய்ட் நான் மச்சானுக்கு சொல்லிருறேன்” என்று கதிருக்கு மெசேஜ் அனுப்பி பதுங்கியபடி உள்ளே சென்றார்கள்.
“செத்துட்டாள்னு சந்தோஷப்பட்ட மங்கையர்கரசி. ஹ்ம்.. எப்படினாலும் என் கையாலதான் நீ சாகணும்னு இருக்கு” என்ற ஜெய்யின் திமிரான வார்த்தையில்,
“உன் கையால சாகணும்னா அன்னைக்கே செத்திருப்பேன். இத்தனை காலம் இருந்திருக்கேன்னா அது உன்னை பழிவாங்கதான். அதுதான் என் லட்சியமும் கூட” என்றாள் அலட்சியமாக.