• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
28



“தந்தையாரே ஒரு ஹெல்ப்?” என்ற கதிரிடம், “என்னடா மகனே தனியா ஹெல்ப் கேட்கிற? மருமகளுக்கு தூது எதுவும் போகணுமா?”

“அப்பா மங்கைக்குத் தூது போகவேண்டாம். மங்கைக்காக கார்மேகம்கிட்ட தூது போகணும்.”

“புரியலடா. அவன்கிட்ட ஏன் போகணும்?”

“மங்கை அன்பு அத்தை கயல் எல்லாரையும் அவன் கடத்திட்டான்ப்ப்பா.”

“கதிர்!”

“மத்தவங்களை எப்படியோ, ஆனா, மங்கையை உங்களாலதான்பா காப்பாத்த முடியும்”. எப்படி என்னவென்று அவரிடம் சொல்ல...

“டேய் மகனே! சிங்கத்தோட குகைக்குப் போய்கூடத் திரும்பலாம். அவனுங்க இடத்துக்குப் போனா... நினைச்சாலே உதறுதுடா.”

“அப்பா ஏன் இப்படிலாம் பயப்படுற. உன் பையனுக்காக இதுகூடப் பண்ணமாட்டியா? வரவர நீ சரியில்லப்பா. அம்மாகிட்ட சொல்லி...” சட்டென்று அவன் வாய்மூடி, பிறகு தன் வாயையும் மூடி தான் போவதாக சைகையில் சொல்லிக் கிளம்பியிருந்தார்.

இப்பொழுதும் உள்ளுக்குள் ஒரு உதறல்தான். அவரின் முகத்திலுள்ள டென்ஷனை மருமகளைக் காணாததால் என்பதாய் கார்மேகம் தவறாக எடுத்துக்கொள்ள, குருவிற்குதானே தெரியும் எதனாலென்று!

குருமூர்த்தியின் நிலை அச்சு பிசகாது செல்வரசிக்கும். மகனைத் தூங்க வைத்து சிறிது நேரத்திற்கெல்லாம் தனக்கு வந்த அழைப்பை எடுத்தவரிடம், ‘நான் இளநாதன் பேசுறேன்’ என்று அவன் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு பதறியவரை சமாதானப்படுத்தி, தன் அப்பா வருவதைச் சொல்லியிருந்தான். பிரகாஷ் அன்புவிற்கு தன் நம்பருடன் எதற்கும் இருக்கட்டுமென்று அம்மாவின் நம்பரையும் தந்திருந்தது தற்பொழுது உபயோகப்பட்டிருந்தது.

குருமூர்த்தி கார்மேகம் உரையாடல் வீடியோவை விட்டு நகர்ந்த கார்த்திக், “கதிர் உங்க ஒய்ஃப் இப்போதைக்கு சேஃப். ஆனா, நிலை எந்த டைம்னாலும் மாறலாம். ஒரு பெரிய தலையை களை எடுக்கிறோம்னா கலவரங்கள் வெடிக்கும். சோ, கைது பண்றது மாதிரியிருந்தா மிட் நைட்தான் பெஸ்ட். அதுக்கு முன்னாடி உங்க எதிர்ல வந்தாலும் கோபத்தை விட்டு நிதானமா நடந்துக்கோங்க. இக்கட்டான சூழ்நிலைனா பகல்ல கூட நம்ம மிஷனை ஆரம்பிச்சிரலாம்.”

“எல்லாத்தையும் சகிச்சிட்டு ரொம்பவே நிதானமாதான் சார் நிற்கிறேன். என் குடும்பத்தோட மிச்சத்தையும் அழிக்க விடமாட்டேன். விதி இதுதான்னா என் கையாலதான் சார் அவனுங்க சாவு.”

“கூல் கதிர். இப்ப நீங்க ஆத்திரத்துல பேசுறீங்க. அவங்களாவே தற்செயலா செத்தா கூட நீங்கதான் செய்திட்டீங்கன்னு உங்களை நான் சந்தேகப்படத் தோணும். எப்பவும் பேசுற வார்த்தைகளை யோசிச்சிப் பேசுங்க.”

“சாரி சார்” எனும்போது தாயிடமிருந்து போன் வர, “அம்மா உங்க மருமகளுக்கு எதுவும் ஆகாது. அந்த காமாட்சி தாயை நம்புறீங்கதான? அப்ப எல்லாம் சரியா நடக்கும். நான் அவளோடதான்மா வருவேன். சித்தியை வருத்தப்பட வேண்டாம் சொல்லுங்க” என்றனுக்குள் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற வேண்டுதல்.

நடந்த எதுவும் தெரியாது விழித்து எழுந்த பிரகாஷ் சார்ஜிலிருந்து செல்லை எடுத்து ஸ்விட்ஜ் ஆன் செய்த சில நிமிடங்களில் கதிரிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள் இருப்பதைப் பார்த்து ‘ஒருவேளை கயல் கடத்தப்பட்டது தெரிஞ்சிருச்சோ’ என்றபடி கால் செய்தான்.

“பிரகாஷ் எங்க போயிட்ட? நேத்திலிருந்து செல் ஸ்விட்ஜ் ஆஃப். எந்த நேரத்திலும் அலார்டா இருக்க வேண்டாமா? இப்படியா அசால்டா இருக்கிறது. உங்கண்ணன் கயலையும் அத்தையையும் எங்க வச்சிருக்கான்னு சொல்லு?”

“இளா அமைதியாயிரு. நானும் நைட்லயிருந்து தேடிட்டிருக்கேன். எங்க வச்சிருக்கான்னு தெரியல.”

“உனக்கு நைட்டே தெரியும்தான. என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. அப்படிச் சொல்லியிருந்தா மங்கையையும் அன்புவையும் கடத்தாமல் பார்த்திருப்போம்ல. ஏன் இப்படிப் பண்ணிட்ட?” என்றான் கோபமாய்.

“இளா என்ன சொல்ற?”

“ஆமா இப்பக்கேளு. காலையில தோட்டத்துக்குப் போனவங்களைக் காணோம். சோழவந்தான் சைடு போன கார் அப்படியே வேற ரூட்ல இடம்மாறிருச்சி. நாங்களும் மதுரை முழுக்க சல்லடை போட்டாச்சி. உங்க வீடு மட்டும்தான் பாக்கி. அங்க தேடத்தான் இப்ப ப்ளான்.”

“நான் வெய்ட் பண்றேன் இளா” என்று போனை கட் செய்து யோசனையுடன் தாயிடம் வந்தான்.

“தம்பி என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரியிருக்கீங்க?” என்று ப்ரியா கேட்க...

அண்ணன் செய்வதைச் சொல்லி அவளின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாது, “ஒண்ணுமில்ல அண்ணி. சின்ன ப்ராப்ளம் சீக்கிரம் சரியாகிடும்” என்றான்.

“உங்க அண்ணனாலயா?”

“சேச்சே.. அப்படிலாம் இல்லண்ணி. அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?”

“அப்ப சொல்லமாட்டீங்க? சரி நானே கேட்கிறேன். எதாவது பொண்ணு பிரச்சனையா?” பிரகாஷின் அமைதி தொடர, “நீங்க சொல்லுங்க அத்தை. யார் அந்த பொண்ணு?”

“என் நாத்தனார் பொண்ணுமா ப்ரியா. பெயர் கயல்விழி. இவனுக்காக நான் பார்த்திருக்கிற பொண்ணு. அவளையும் என் அக்காவையும்தான் கடத்திட்டாங்க.”

“அத்தை அந்த வீட்ல பார்த்தீங்களா?”

“நேத்து நைட் அங்கவச்சிதான் பார்த்துப் பேசிட்டு வந்தேன் அண்ணி. அங்கயிருந்திருந்தா கொஞ்சமாவது படபடப்பு இருந்திருக்குமே. அவன் நார்மலாயிருந்தான்.”

“புதுசா தப்பு செய்றவங்களுக்குதான் தம்பி படபடப்பு இருக்கும். அவசியம் இல்லன்னா உங்க அண்ணா அந்த வீட்டுக்குப் போகமாட்டார்.”

“அண்ணி!”

“நிஜம் தம்பி. காரணமில்லாமல் அங்க போகமாட்டார். வேணும்னா அத்தையைக் கேளுங்க. நீங்க தேடுறவங்க அங்கதான் இருக்கணும். காலையில பெரியவ ஏதோ சைன் வாங்கணும்னு அங்க போயிருந்தா. வந்து ஏதோ சொன்னா நான்தான் எப்பவும் நடக்கிற பஞ்சாயத்தா இருக்கும்னு சரியா கவனிக்கல. லீவு டைம்ல பிள்ளைங்களுக்கு அங்கதான் விளையாட்டு. அதான் எதோ வித்தியாசமா உணர்ந்திருப்பாங்க போல.”

“தேங்க்யூ அண்ணி” என்றான் அவர்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்.

“வாங்கண்ணா” என்ற தாயின் குரலில் பிரகாஷ் திரும்பிப் பார்த்தான்.

“எதாவது நியூஸ் கிடைச்சிதாம்மா. மதுரை சுற்று வட்டாரம் தாண்டி எங்கயும் போகல. உங்க வீட்டைத் தவிர எல்லா இடமும் தேடியாச்சின்னு பையன் சொல்றான்.”

“அதுதான்ணா தப்பு. முதல்ல எங்க வீட்ல தேடியிருக்கணும்.”

“இங்கேயா?”

“இங்கயில்ல. இது என் அக்கா வாழ்ந்த வீடு. எங்க வீடு அடுத்த தெருவிலிருக்கு. அதுக்கடுத்த தெருவில்தான் தேவநாதன் அண்ணா வீடு. அங்கதான் தேடியிருக்கணும் சொல்றேன்.”

“அம்மா யார் இவர்? நம்ம வீட்டு விஷயத்தைப்பற்றிப் பேசுறீங்க?”

“நான் யாரா? ஏன் மாப்பிள்ளை தம்பி, என் பொண்ணைக் கட்டிக்கிறதா ஐடியாயில்லையா?” என்றார் கேலியாக.

“உங்க பொண்ணை நானா? நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது சார். நீங்க வேற இடம் பாருங்க.”

“ஏன்மா தங்கச்சி? என் பொண்ணு கயல்விழி இவருக்கு உயிர்னு சொன்ன? இப்ப என்னடான்னா...”

“கயலா? அவள் எப்படி உங்க... நீங்க கதிர் அப்பாவா!” என்றான் ஆச்சர்யமாய்.

“கண்டுபிடிச்சிட்டியே. அப்படியே என் பொண்ணையும் மருமகளையும் கண்டுபிடிச்சிக் கொடுத்திரு.”

“கண்டிப்பா மாமா. அவனுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச்சொல்லுங்க.”

“நாம பேசுறதை பையன் கேட்டுட்டிருக்கான். கொஞ்ச நேரத்துல வந்திருவான்.”

“நானுமே உங்களோட சேர்ந்திருக்கேனே” என்ற கார்மேகத்தின் குரலில் அனைவரும் அதிர்ந்து திரும்ப, “ஹா..ஹா என்ன கூட்டணிலாம் பலமாயிருக்கு. ஆனா மச்சான்! நடிப்புல சிவாஜி தோத்துட்டார் போங்க. உங்க மருமகளை ஒப்படைக்கதான் அவளை இங்க கூட்டிட்டு வந்தான் ஜெய். அதுல என்ன ஒரு சிக்கல்னா நீங்க சொன்ன எல்லாமே சரியாயிருந்தது. ஆனா, அன்பு கூட அந்தப்பொண்ணை கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே பசங்க பார்த்ததா சொன்னதை மறந்துட்டோம்.”

“ரத்தினம் பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க பையனுக்கு கல்யாணம் முடிஞ்சதா சொன்னீங்க. அப்புறம் எப்படி அவன் கல்யாணத்துக்கு முன்னாடி அன்பு கூட இங்க சுத்தினாள்? திடீர்னு ஒரு சந்தேகம் வந்து ஒருத்தனுக்கு போனைப்போட்டு விசாரிச்சா, ரத்தினம் பையன் கல்யாணத்துக்கு மறுநாள் உங்க பையன் அவள் கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டினானாம். இது நடந்தப்ப எங்க வீட்டு சாரும் கூடயிருந்திருக்கார் போல.”

மகனிடம் திரும்பி, “என்கிட்ட சொல்லவிடாம அவனை மிரட்டியிருக்க ம்... நீயெல்லாம் என் மகனா பிறக்காமலே இருந்திருக்கலாம்டா. எல்லாரும் சேர்ந்து ரொம்பத் தப்புப் பண்ணிட்டீங்க” என்றபடி குருமூர்த்தியின் செல்லைப் பிடுங்கி ஸ்விட்ஜ் ஆப் செய்து, அடியாள் ஒருவனை அனுப்பி அவரை சோதித்து எதுவுமில்லையென்றதும், “நல்லா செக் பண்ணு. வீடியோ டெலிகாஸ்டாகுதுன்னா கேமராயிருக்கு” என்று அவன்மேல் எரிந்து விழுந்து, “என்ன மச்சான் எதாவது பண்ணினால்தான் தருவீங்களா?” என்று கைநீட்டினான்.

“கார்மேகம். இங்க வரும்போதே உயிருக்கு ஆபத்து வரும்னு தெரியும். சரிவிடு வச்சிருந்து என்ன செய்யப்போறேன்” என்று பேண்டிலிருந்த பட்டன் சைஸ் கேமராவைப் பிய்த்துக் கொடுக்க...

“ம்... எல்லாம் ப்ளான்!”

“என் பையன் பண்ணுவான்டா ப்ளான். அவனை நீங்க யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. அவனைக் கொன்னு தூக்கிரலாம்னு நினைச்சா உங்களைவிட முட்டாள் யாரும் கிடையாது. செத்துப் பிழைச்சவன்டா என் பையன்” என்றார் நிமிர்வாக.

“அப்பவே செத்திருந்தா அடுத்த சாவு வந்திருக்காது. சரிவிடுங்க. ஒண்ணு ரெண்டோட நிறுத்தணும் நினைச்சேன். கடவுளோ! ஏன்டாப்பா உனக்கு கும்பலா வெட்டித்தான பழக்கம்ன்றார் போல. டேய் பசங்களா! இவங்களைக் கார்ல ஏத்தி பெரிய வீட்டிற்குக் கூட்டிட்டுப்போங்க” என்று கட்டளையிடடார்.

இரண்டு கார்களில் அவர்களை ஏற்றி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த அந்த பெரிய வீட்டின் காம்ளெண்டிற்குள் கார் நுழைந்து, சற்று தூரம் சென்று போர்டிகோவில் நின்றது. வீட்டைச் சுற்றிலும் ஆட்களிருந்தால் சந்தேகம் வருமென்று, அதிகம் ஆட்களை வெளியே நிறுத்தாமல் உள்ளே நிற்க வைத்திருந்தார்கள்.

அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில், இரண்டு கார் டிக்கியிலிருந்தும் இருவர் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து மறைவான இடத்தில் நிற்கையில், ஒருவரை இன்னொருவர் அதிர்வுடன் பார்த்து, “நீங்க போலீஸா?” என கேட்டார்கள்.

“நான் நிஷாந்த். அன்பு அண்ணன்.”

“நான் அப்பு. அப்புசாமி பிரகாஷ் ப்ரண்ட். வாங்க உள்ள போகலாம்.”

“வெய்ட் நான் மச்சானுக்கு சொல்லிருறேன்” என்று கதிருக்கு மெசேஜ் அனுப்பி பதுங்கியபடி உள்ளே சென்றார்கள்.

“செத்துட்டாள்னு சந்தோஷப்பட்ட மங்கையர்கரசி. ஹ்ம்.. எப்படினாலும் என் கையாலதான் நீ சாகணும்னு இருக்கு” என்ற ஜெய்யின் திமிரான வார்த்தையில்,

“உன் கையால சாகணும்னா அன்னைக்கே செத்திருப்பேன். இத்தனை காலம் இருந்திருக்கேன்னா அது உன்னை பழிவாங்கதான். அதுதான் என் லட்சியமும் கூட” என்றாள் அலட்சியமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“அட ஏன்மா நீ வேற. கல்யாணம் முடிச்சதும் புருஷனுடன் போனமா குழந்தை குட்டின்னு பெத்துட்டு நிம்மதியா இருந்தோமானு இருக்காம... லட்சியம் அது இதுன்னுட்டு. இது என் இடம் நீ எப்படித் தப்பிக்கிற எவன் வருவான்னு பார்க்கிறேன்.”

“நான் ஏன் தப்பிக்கணும்? இது என் அத்தை வீடு. நீதான் வெளில போகணும் ரெடியாயிரு” என்றாள் சற்றுத் திமிராகவே.

“ஹா.. அப்புறம்?”

“எவன் வருவான்னு கேட்டல்ல. எங்க இளா அத்தான் வருவாங்க. அவங்க மூலமாதான் உனக்குத் தண்டனை” என்றவளுக்குள் அந்த நிமிடம் வரை கூட இளநாதன் எப்படியும் வருவான் என்ற நம்பிக்கை.

“அப்ப உன் புருஷன் வரமாட்டான்னு சொல்லு.”

“உன் நக்கல் புரியுது ஜெயராம். கண்டிப்பா வருவாங்க பார். உனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிருச்சி ஜெயராம். அவங்க கையில நீ மாட்டிப்பாரு தெரியும். இளா அத்தானாவது பொறுமைசாலி. என் புருஷனுக்கு இயல்பிலேயே கோவம் அதிகமாம். இதுவரை பார்க்கலதான். உன் மூலமா பார்த்துக்கறேன். ஏன்னா எனக்காகத்தான் அவங்க இங்க வந்ததே!”

“ம்... குட். அவ்வளவு லவ்வோ?”

“லவ்வோ லவ்! உனக்கெல்லாம் அதுக்கு அர்த்தம் கூட தெரியாதே!”

“அட அந்த கருமத்தைத் தெரிஞ்சி, நான் என்ன செய்யப்போறேன். விடுமா. உன்னைக் கண்டுபிடிக்க என் தடைகளை உடைத்து வரப்போற என் புது எதிரியைப் பார்க்க நானும் வெய்ட் பண்றேன்” என்றவன் அன்புவிடம் திரும்பி, “என்னடா தம்பி இன்னும் கையெழுத்துப் போடாமலிருக்க? டேய் பசங்களா! இப்படி இரண்டு கையையும் பிடிச்சிக்கிட்டா என் தம்பியால எப்படி கையெழுத்துப் போடமுடியும். ஒரு கையை விடுங்கடா” என... அவர்கள் விட்டதும், “நீ போடு தம்பி” என்றான்.

அதற்குள் கார்மேகம் உள்ளே நுழைய, அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களைப் பார்த்த மங்கையும் அன்பும் திகைத்து விழித்தார்கள்.

“மா..மாமா நீங்க எப்படி இங்க? இங்க ஏன் மாமா வந்தீங்க?” என்றாள் பதற்றத்துடன்.

“நான் ஆசைப்பட்டாமா வந்தேன். நீயில்லன்னதும் கதிர் பயலுக்கு குளிர் விட்டிருச்சி. உங்க மருமகளைப் போய் காப்பாத்துங்க தந்தையாரேன்னுட்டான்மா. நீயும் வாடா கூப்பிட்டா, சிங்கத்தோட குகைக்குள்ள எலி போகலாம்.. புலி போகக்கூடாதுன்னு பஞ்ச் டயலாக் வேற அந்த பேட் பாய்கு” என்றார் சலிப்பாக.

அந்த நிலையிலும் அவரை முறைத்து, “அவங்க சொன்னதை சரியா செய்யாம மாட்டிக்கிட்டு, என் புருஷனைத் திட்டுறீங்களா?” என்றாள்.

“நான் சரியாதான்மா செய்தேன். இந்த லூசுப்பசங்க இவ்வளவு தெளிவாயிருப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்.”

“வில்லன்னா சும்மாவா மாமா. அவங்களுக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல. நாம எப்பவும் அலார்ட்டாயிருக்க வேண்டாமா?”

“அப்பா! மாமனாரும் மருமகளும் நம்மளை வச்சி காமெடி பண்றாங்களாம். டேய்! முதல்ல இந்தாளு வாயில ப்ளாஸ்டர் போட்டு கட்டிப்போடுங்கடா. எப்பப்பாரு லொட லொடன்னுட்டு.” குருமூர்த்தியின் நடிப்பில் ஏமாந்த கோபம் அவனுக்கு.

அதைப் புரிந்தவருக்கோ சின்னதாய் புன்னகை.

“ஏய்! எதுக்கு சித்தியைக் கட்டுற? அவங்க உன் அம்மா.”

“எல்லாம் ஒரே ரெத்தம்தான” என நக்கலாகப் பதிலளித்தவன், அப்பொழுதுதான் மனைவியைக் காண சின்ன அதிர்வு அவனுள். “இவளை ஏன்? பிள்ளைங்க இருக்காங்கப்பா!.”

“இவளுக்கு உன்மேல பாசமில்லடா. இந்த இடத்தை அவங்களுக்கு காட்டிக்குடுத்ததே இவள்தான். உயிரோட இருந்தால்தான வேற பொண்ணு பார்க்கக்கூடாது. செத்துட்டா மறுநாள் நீ புதுமாப்பிள்ளைடா.”

‘அவள் வேண்டாமே’ என மனம் முரண்ட, “அப்பா அம்மாவையும் இவளையும் விட்ருவோம். வீட்டுக்குள்ளயே இருக்கட்டும்” என்றான்.

“இவங்களை விட்டா நாம போலீஸ்லதான் இருக்கணும். உனக்கு சம்மதமா?” என்ற தகப்பனின் கோவத்தில் பதில் பேசாமல் ஊமையாகிப் போனான்.

கணவனையேதான் பார்த்திருந்தாள் ப்ரியா. ‘உன்னுடன் வாழ்ந்த அர்த்தமில்லா வாழ்விற்கு இதுவும் ஒருவகை விடுதலைதான்’ என்பதான பார்வை. குழந்தைகளை எண்ணி மனம் வலிக்க, அவர்களுக்காகவாவது மனம் இறங்குவானா என்றால், தகப்பனின் அறிவுரையில் அவள்புறம் திரும்பவில்லை. கசந்த முறுவல் அவள் முகத்தில்.

“தேவநாதன் மாமா நல்ல ரசனைவாதிதான். என்னமா வீட்டைக் கட்டியிருக்கார். திருமலைநாயக்கர் மஹால் மாதிரி அங்கங்க பெரிய தூண். இப்ப கட்டிப்போடவும் வசதியாயிருக்கு.”

“இதெல்லாம் உனக்குத்தான்டா ஜெய்.”

“யார் சொத்தை யார் உரிமை கொண்டாடுறது? பொன்னாசை, பெண்ணாசை ரெண்டுலயும் விழுந்தவன் வாழ்ந்ததா சரித்திரமேயில்ல எம்எல்ஏ சார்.”

அன்புவின் கோபத்தைப் பார்த்து, “ஹ்ம்... நண்டு சிண்டெல்லாம் எவ்வளவு பெரிய டயலாக் பேசுது. அன்பு உங்களுக்கெல்லாம் இன்னொரு சர்ப்ரைஸ் காண்பிக்கவா? நானே இப்பதான் பார்த்தேன். அதிர்ச்சியில் வாயடைச்சிட்டேன்னா பாரு. ஸ்ரீராம் கமுக்கமா இருந்துட்டியேடா” என்றதும் அவனுக்கு ஓரளவு புரிந்தது.

“க..கயலை என்னடா பண்ணினே?” கோபத்தில் கத்தினான்..

“டேய்! ச்சீ.. அத்தைப் பொண்ணுடா. ஒண்ணும் செய்யல. வேணும்னா உன் அண்ணியைக் கொன்னுட்டு, அவளைக் கட்டிக்கவா? வாரிசுப் பிரச்சனையில்ல பாரு.”

“அதுக்கு நீ உயிரோட இருக்கணும். அடிபட்ட அவங்க எல்லாருக்குள்ளயும் ஒரு வன்மம் இருக்கு. அதைச் சீண்டி சின்னாபின்னமாகிராத. அயோக்கியன் உனக்கு பிரியா அண்ணி கிடைச்சதே அதிர்ஷ்டம்டா. அதை விரட்டின...”

“உங்க சாபம் எங்களை ஒண்ணும் பண்ணாது. ஜெய்கு ஜெயம் மட்டுமே! என்ன பெரியம்மா சரிதானே” என்று அப்பொழுதுதான் உள்ளே வரவழைக்கப்பட்ட தமிழரசியைப் பார்த்துக் கேட்டான்.

“ஆணவத்துல ஆடின எல்லாரும், இருந்த இடமில்லாமல் போனதா சரித்திரங்கள் உண்டு ஜெயராம்.”

“எல்லாரும் என் அழிவை எதிர்பார்க்குறீங்க. அப்ப கயலைக் கட்டிக்கிட்டா அவளோட தாலிபாக்கியம் என்னைக் காப்பாத்தும்ல” என்றதில் “டேய்” என அனைவரும் சத்தமிட...

“வேண்டாம் ஜெய். கயல் விஷயத்துல தலையிட்ட உன்னைக் கொன்னுருவேன்.” பிரகாஷின் கோபத்தை திருமொழி யோசனையாய் பார்த்தாள்.

“அவள் உன் தம்பிக்கு நான் பார்த்த பெண்” என்றார் செல்வரசி.

“தம்பி பொண்டாட்டி, தன் பொண்டாட்டின்னு யாரோ சொன்னதைக் கேள்விப்பட்டிருக்கியா ஸ்ரீராம்?”

“ஜெய் நீ ரொம்ப ஓவரா போற” என்று சீறினான் தம்பியவன்.

“ச்சீய்.. நிறுத்துறீங்களா? என்ன நினைச்சிட்டிருக்கீங்க? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னை ஏலம் போடுறீங்க. முதல்ல வரப்போற என் அண்ணன் இளநாதனுக்குப் பதில் சொல்லு ஜெயராம். அப்புறம் பார்க்கலாம்” என்றாள் குரலுயர்த்தி.

“மதினி இளா அத்தான் வந்துட்டாங்களா?”

“ம்... எப்பவோ!”

மங்கைக்குள் ஒரு நிம்மதியெழ, ஜெயராம்குள் சின்னதாக கிலிபிடித்தது. ‘கனவில் சொன்னாற்போல் வந்துவிட்டானா?’

“என்ன ஜெயராம் பேச்சைக்காணோம்? வெளில காட்டலன்னாலும் உள்ளுக்குள்ள சின்ன உதறல்தான்ல. அதான் என் அண்ணன்.”

அவர்களின் வாக்குவாதங்களின் நடுவே நிஷாந்தும் அப்புவும் படுத்தவாக்கில் ஒவ்வொருவரின் கட்டாக அவிழ்க்க, மங்கை அன்புவிடம் அடியாட்கள் இருந்ததால் செல்ல முடியவில்லை.

“என்னடா கையெழுத்துப் போட்டுட்டியா? இல்ல உன்னைக் கொன்னு கைநாட்டு வச்சிக்கவா?”

“என் குடும்பத்துல மிச்சமுள்ளவங்க இன்னும் இருக்காங்களே அவங்ககிட்ட வாங்கல?”

“அன்புப் பயலே இவங்கள்லாம் ஏற்கனவே செத்தவங்கடா. கொஞ்ச நேரத்துல அதை உண்மையாக்கப் போறேன். அதனாலதான் உன்கிட்ட மட்டும் கையெழுத்து வாங்குறேன்.”

“அன்பு கையெழுத்துப் போடு” என்ற தமிழரசியின் குரலில், சட்டென்று கோவம் எழ... “நீங்க சொன்னதுக்காகவே போடமாட்டேன். கொல்லப் போறாங்கன்னு தெரிஞ்சும் என்னை விட்டுட்டுப் போனவங்கதான நீங்க” என தாய் மேலிருக்கும் கோபத்தைக் காட்டினான்.

“ஏன்டா புரியாம பேசுற...”

“அன்பு என்ன பேசுற? அவங்க நம்ம அம்மாடா.”

“நீ சும்மாயிருக்கா. இத்தனை வருஷமா என் மனசுக்குள்ள ரணமா அறுத்திட்டிருக்கிற கேள்விக்கா இது” என்றவன் கண்கள் கலங்கியது.

“அன்பு நான் உன்னைக் காப்பாத்தத்தான் வந்தேன். கயல் என் காலைப் பிடிக்கலன்னா உன்னைக் காப்பாத்துறதுல என் உயிர் போனாலும் பரவாயில்லன்னு வந்திருப்பேன். அவனுங்ககிட்ட சிக்கின உன்னை உயிரோட விடமாட்டாங்கன்றப்ப, கயலோட உயிர் எனக்குப் பெருசா தெரிஞ்சதுப்பா. இவ ஒருத்தியாவது நம்ம குடும்பத்துல மிஞ்சட்டும்னுதான் போனேன்” என்றார் கனத்த மனதுடன்.

“அத்தை!” கயல் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘தான் பெற்ற பிள்ளையை ஆபத்தில் விட்டு தன்னைக் காப்பாற்றினாரா?’ என்றெண்ணியவள் கண்கள் கலங்க, “ஏன் அத்தை எனக்காக... ஐம் சாரி அன்பு. உன்னோட கோவத்துக்குக் காரணம் நான்தான்னு தெரியாது. எதுவாயிருந்தாலும் தண்டனையை எனக்குக் கொடுத்து அத்தையை ஏத்துக்கடா” என்றாள் கண்ணீருடன்.

“கயல் புரிஞ்சிக்காதவன்கிட்ட ஏன் கெஞ்சுற?”

“ஆமா மதினி. என்கிட்ட ஏன் கெஞ்சுறீங்க? என் சார்புல என் அம்மாகிட்ட என்னை மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சுங்க. என்னை மன்னிச்சிருங்கம்மா. கண்ணால் காண்பது பொய்னு புரிஞ்சிக்கிட்டேன். இதோம்மா கையெழுத்து போடுறேன்” என்று போட்டான்.

“ஷப்பா சென்டிமெண்ட் சீனாயிருந்தாலும் எங்க வேலை முடிஞ்சது” என்று பேப்பரைக் கையில் வாங்கி, “டேய் அப்படியே மங்கையர்கரசி அன்புவோட சேர்த்து இவங்களை கட்டி வாயில் ப்ளாஸ்டர் போடு. எல்லாருக்கும் இந்த உலகத்திலிருந்து விடுதலை கொடுக்கிறேன்” என்று வீட்டைப்பூட்டி அங்கிருந்த லாரி ஒன்றின் மூலம் கொண்டு வரப்பட்ட ட்யூப்பை ஜன்னல் வழியே விட்டு, அதிலிருந்த பெட்ரோல் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கொட்டியதும், தீப்பெட்டி கொளுத்தி உள்ளே போட அது கப்பென்று பற்றிக்கொண்டது.

“ஜெய் கரண்ட் லீக்காகி வீடு எறிஞ்சிட்டதா சொல்லிரலாம். எலும்பு எதுவும் மிஞ்சினா இங்க வேலை பார்த்தவங்கன்னு கேஸை முடிச்சிரலாம்.”

“ஓ... முடிச்சிரலாமே!” என்ற குரலில் அப்பாவும் மகனும் திரும்ப அங்கோ கண்களுள் வெறியுடன் நின்றிருந்தான் இள(ங்கதிர்)நாதன்.

ஜெயராம் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கயிறு அவிழ்த்திருந்தவர்கள். மற்றவர்களின் கயிறை அவிழ்த்து விடுவிக்க, வேகமாக கயலிடம் வந்த மங்கை, “இளா அத்தான் வந்துட்டதா சொன்னது உண்மையா?” என்றாள்.

“உன் காத்திருப்பும், காதலும் தோற்றுப்போகல மங்கை. என் இளா அண்ணன் வந்துட்டான். உன்மேல டபுள் மடங்கு காதல் அவனுக்கு.”

“என்ன உளர்றீங்க மதினி? என்னைப் பார்த்திராத, நான் உயிரோட இருக்கிறது தெரியாத ஒருத்தர், என்னை எப்படி? அதுவுமில்லாம நான் கதிர் மனைவி.”

“நீ கூடதான் ரொம்ப வருஷமா பார்த்திராத ஒருத்தருக்காகக் காதலோட காத்திருந்த? உன் காலேஜ் முழுக்க உனக்கும் இளாவுக்கும்தான் கல்யாணம்னு தெரியும். பாரு என் அண்ணன்தான் உனக்கு ஜோடியாகணும்னு விதியிருக்கு. எங்கம்மா ஆசையும் நிறைவேறிருச்சி” என்றாள் சீண்டலாக.

பதில் சொல்ல வாயெடுத்தவள் அங்கு கொட்டிய பெட்ரோல் வாசனையில் நிலைமை உணர, அனைவருக்குள்ளும் ஒருவித படபடப்பு.

‘அம்மா’ என்று தாயிடம் வந்த அன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

அவனை எழுப்பி தோள்சாய்த்து, “பேசுறது அப்புறம். முதல்ல வெளில போகணும்” எனும்போது பின்கதவு வழியாக இருவர் வர, மற்றவர்கள் பயந்து ஒதுங்க... “எங்களைப் பார்த்து பயப்படாதீங்க. நாங்க சிபிஐ ஆபீஸர்ஸ். ப்ளீஸ் க்விக்கா வாங்க” எனும்போது தீப்பற்றிக்கொள்ள ஆரம்பிக்க வேகமாக பின்கதவு வழியாக அங்கிருந்த தோட்டம் சென்று சிபிஐ டீம் பாதுகாப்பில் இருக்க... சிபிஐ மறுத்தும் பிரகாஷும், அன்புவும் காம்பவுண்ட் உட்புறம் வழியாகவே முன் பகுதிக்குச் சென்றார்கள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top