- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
26
நாட்கள் செல்லச்செல்ல, “சே... பேசாம விஜி அண்ணியைப் பிடிச்சி ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா விஷயத்தை வாங்குறதை விட்டுட்டு, இப்படி இருந்துட்டியே ராசி” என்று தன்னைத்தானே திட்டினாள்.
“ராசி எனக்கு டைமாகுது கிளம்புறேன்” என்று அவசரமாக கிளம்பியபடி சரத் கீழே வந்தான்.
“இப்ப ஏழரை மணிதான் ஆகுதுபா. கொஞ்சம் வெய்ட் பண்ணினா சாப்பிட்டு கிளம்பிரலாமே?”
“டைம் இல்லம்மா. இந்த கேஸ் கொஞ்சம் பழசுதான். ஆனா, ரீ ஓபன் ஆகுது. கொஞ்சம் ரிஸ்கானது கேர்புல்லா ஹேண்டில் பண்ணனும்.”
அதைக் கேட்டிருந்தவளின் முகம் வாட அறைக்குள் சென்றாள்.
பின்னாலேயே வந்தவன், “என்னமா?” என்றான் மனைவியின் முகவாட்டம் பொறுக்காமல்.
“என்ன கேஸ்?” என்றவள் குரல் வெளியே வரவேயில்லை.
‘ரிஸ்க்னதும் பயந்திட்டா போல’ என நினைத்தவன் அவளருகில் வந்து, “ஒண்ணுமில்லமா. சாதாரண கேஸ்தான்.” அவளின் கோபமான முறைப்பில்... “அது முழுசா எதுவும் சொல்லாமல் ஒரு பெண்ணை தேடச்சொல்லி அரசியல்வாதி ஒருத்தர் சொல்லியிருந்தார். விசாரிச்சப்ப அவர் பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அந்தப் பெண்ணை ஏமாத்தியிருப்பான் போல. அந்தப் பையனுக்கு எதிரா ஆதாரம் இருக்குன்னு போன்ல சொன்னதும் அடியாட்கள் மூலமா தேடியிருக்காங்க கிடைக்கலை. கடைசில என்கிட்ட வந்திருந்தாங்க. நான் விசாரணையில இறங்க, மும்பையில அவளோட அண்ணன் வீட்ல இருந்தா. என்னோட மறைமுக சப்போர்ட்ல அவர் பையனுக்கு தண்டனை கிடைச்சிருச்சி. இவர்கிட்ட மும்பை வரை தேடிப் போனேன் கிடைக்கலன்றதுக்கு ப்ரூஃப் காண்பிச்சி தப்பிச்சிட்டேன். இப்ப இதுல சின்ன பிரச்சனையாகிருச்சி.”
“எ...என்ன பிரச்சனை?” என பதறியவளை தடுத்து... “ஒண்ணுமில்லடா. அவருக்கு இந்த நியூஸ் லீக்காயிருச்சி. திரும்பவும் அந்தப் பெண்ணை தேடுறதுக்கு வேற டிடெக்டிவ் ஏற்பாடு பண்ணினதுல என் வேலையையும் ஸ்மெல் பண்ணி, அந்தப் பெண்ணை தூக்கப்போறாங்க. அதுக்குள்ள நாங்க முந்தணும்.”
அதிர்ந்த முகத்துடன் அனைத்தையும் கேட்டிருந்தவள் சட்டென்று கணவனை இறுக அணைத்து, “அவங்க ரொம்ப மோசமானவங்களாங்க?” பயத்தில் உடல் நடுங்க கேட்டாள்.
“ரொம்ப இல்லமா. ஆனா கொஞ்சோண்டு” என்றதும் பயத்தில் இன்னும் இறுக்கியணைக்க... மனைவியின் பயத்தையும், பரிதவிப்பையும் உணர்ந்தவன் அவளின் முதுகை வருடியபடி, “நீ பயப்படுற மாதிரி எனக்கு ஒண்ணும் ஆகாதுமா.”
“நிஜம்தானே” என்பது போல் அவன் முகம் பார்க்க... “நிஜம்தான். என் பொண்டாட்டி பர்ஸ்ட் டைம் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணியிருக்கா, இதுவே என் வேலையை ஜெட் வேகத்துல முடிக்க வைக்கும்” என்று கண்ணடித்தான்.
அவளோ சட்டென்று அவனிடமிருந்து விலக, நேரம் பார்த்தவன் இன்னும் நேரம் இருப்பதால், அவளை சகஜமாக்க எண்ணி “ராசாத்தி” என்றழைத்தான்.
“ப்ச்.. ராசி சொல்லுங்க.”
“சரி ராசாத்தி” என்றான்.
“என்ன நக்கலா? ராசி சொல்லச் சொன்னா திரும்பவும் ராசாத்தி சொல்றீங்க?”
“நீதான ராசாத்தி சொல்லாதீங்க ராசி சொல்லுங்க சொன்ன. அதான் சரி ராசாத்தி சொன்னேன். சரி முறைக்காத ராசாத்தி” என திரும்பவும் வம்பிழுத்து, “ஆமா அன்னைக்கு கேட்கணும்னு நினைச்சேன். என்னை முழுசா பார்த்துட்டியா?” என்றான் குறும்பாய் குரலை இறக்கி அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
“என்ன சொல்றீங்க. எதை முழுசா பார்த்தியா கேட்குறீங்க?” என்றாள் புரியாமல்.
“அதான்மா போன வாரம். உன் கண்ணு, அதுல முத்தம், அப்புறம் இடுப்பு, டவல், உன் கை வளையல்” என அடுக்க... நினைவு வந்தவளுக்கு முகமோ வெட்கத்தில் சிவக்க, தலை குனிந்தபடி “இல்லையே” என்று அவனைத் தாண்டி வெளியே செல்ல முயன்றாள்.
வேகமாக கைபிடித்திழுத்தவன் மேலேயே வந்து விழ, “ப்ச்.. இந்த பழக்கத்தை விடமாட்டீங்களா. ஏதோ மேனரிசம் மாதிரி எப்பப்பாரு கையைப் பிடிச்சிழுத்து மேல சாய்ச்சிக்கிறதே வேலையா போச்சி.”
“சரி விடு. இனிமேல் கையைப் பிடிச்சிழுக்கல” என்று கையை விட்டதும்... சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள், ‘விடச்சொன்னா என்னை விட்டுருவானா’ என்றவளுக்குக் கோவத்தில் கண்கலங்குவது போல் தோன்ற... அதற்குள் அவளின் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்திருந்தான் அவளின் கள்வன்.
கலங்கிய கண்கள் கணவன் தன்னை அணைத்ததும் மாயமாய் மறைய, “ஹேய் என்ன பண்றீங்க விடுங்க?” என்றபடி திமிறினாள்.
“ஹா! விடுறதுக்கா கல்யாணம் பண்ணியிருக்கேன். அதுவும் உன்னோட விருப்பமே இல்லாமல். அம்மன் முன்னாடி சத்தியம் பண்ணி தாலி கட்டியிருக்கேனாக்கும்” என்று சட்டைக் காலரைத் தூக்க...
அவளோ கண்களால் அவனைக் களவாட, அந்த கண் ஈர்ப்பினில், “உன்னோட இந்த ப்ரௌன் நிற கண் என்னை உன்னிடத்தில் இழுக்குது ராசாத்தி” என்று அந்த கண்களில் அவனிட்ட முத்தங்கள் தன் உடல், உயிர் மொத்தத்தையும் களவாடிச் சென்றது.
“சொல்லு அன்னைக்கு முழுசா பார்த்ததான?” என்றான் மறுபடியும்.
‘அச்சோ! லூசு மாமா! ஏதோ சினிமா பார்த்த மாதிரி பார்த்த தானன்னு கேட்டா, நான் என்ன சொல்றது’ என நினைத்தபடி உதடுகடித்து அமைதியாக நின்றிருந்தாள்.
மனைவியின் முகம் உயர்த்தி, புருவம் தூக்கி அவள் கண்களைப் பார்த்து “லூசுதான் உன்மேல. இப்ப சொல்லு?” என்றான் அவளை அறிந்தவனாய்.
“பொண்டாட்டிகிட்ட கேட்கிற கேள்வியா இது” என்றாள் நிமிர்ந்து.
“பொண்டாட்டிகிட்டத்தான் கேட்க முடியும். பொண்டாட்டிட்ட மட்டும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. எதுவாயிருந்தாலும் சொல்லு?”
“ஆமான்னு சொன்னா, என்ன செய்யப்போறீங்க?”
“எதுவும் செய்யப்போறதா நான் சொல்லலையே. அப்பவே சொல்லியிருந்தா நான் எஸ்ஸாகியிருப்பேனே!”
“உங்களை!” என்று அவனை போட்டு அடிக்க, அடித்து முடித்ததும், தான் அதிக உரிமை எடுக்கிறோமோ என்ற எண்ணம் எழ, “சாரிங்க” என்றாள்.
“நீ ஏன் என்னை விலக்கி வைக்கிற ராசாத்தி” என்றான் குரலில் வலியுடன். “உன்னோட மாமா, ஹரின்ற வார்த்தைகளை நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா” என்று அவளை அணைத்து தன் ஏக்கத்தை இதழ்களால் முகமெங்கும் முத்தமிட்டுத் தணிக்க... அந்த முத்தத் திணறலில் சிக்கியவள் தன் வசமிழக்க, அந்த மோன நிலையை செல்போன் கலைத்ததில் இருவரும் விலக, அவன் முகம் காண வெட்கப்பட்டு ராசி வெளியே ஓடினாள்.
அவளின் வெட்கம் பார்த்தவனோ கையிலுள்ள போனைத் தூக்கி கட்டிலில் எறிந்து வெளியே செல்லப் போனவன், லோஜியை எண்ணி தன்னை சீர்படுத்தி, ஹாலில் வைத்திருந்த பேக்கை எடுத்து லோஜியிடம் கிளம்புவதாகச் சொன்னான்.
சமையலறையில் இருந்து “டிபன் ரெடியாகிருச்சி சாப்பிட்டு போப்பா” என்றார்.
“நா..நான் சாப்பிட்டுட்டேன்மா” என்றவன் கண்கள் மனைவியை முழுங்க. அவளோ நகத்திலுள்ள நெய்ல்பாலிஷை நிதானமாக பிய்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரையும் பார்த்த லோஜிக்கும் மனதிலுள்ள பாரம் இறங்கி மகிழ்ச்சி பொங்கியது.
“சரிம்மா நான் கிளம்புறேன்” என்றவன் ராசி தன்னைப் பார்ப்பாளா என பார்த்திருக்க, அவள் தலை நிமிரவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருக்க வேகமாக கிளம்பி வெளியே சென்றான்.
“ராசிமா புருஷன் வேலைக்குப் போகும்போது சந்தோஷமா அனுப்புறதில்லையா? அட்லீஸ்ட் ஒரு தலையாட்டல்” என மீனலோஜினி கடிய...
லோஜியிடம் ஒரு மன்னிப்பு பார்வை செலுத்தி ஹால் தாண்டி வாசல் சென்றவள் வெளியே பைக்கை எடுத்துக் கொண்டிருந்தவனைக் காண, திரும்பவில்லை என்றதும், ‘பாருங்க மாமா.. ஒருமுறை திரும்பி என்னைப் பாருங்க மாமா ப்ளீஸ்’ என்று மனதினுள் வேண்டினாள்.
கண்ணாடியில் அவளின் பதற்ற முகம் பார்த்தவன் உதட்டில் முறுவலுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி அவள்புறம் திரும்பி, அவனின் டாமின் அவஸ்தையை ரசித்து கண்ணடித்து ‘பை’ என்று கிளம்பினான்.
“ஆஹா! இந்த ஜெர்ரி பாய் வரவர ரொமாண்டிக் பாயாகிட்டு வர்றான் டோய்!” என கௌண்ட் கொடுத்தவள், தன் மாற்றத்தை நினைத்து தனக்குள்ளேயே சிரித்தாள். மறந்ததாக, மறைந்ததாக, மறித்ததாக தான் நினைத்த காதல் கண்கட்டி வித்தை காட்டி தன் முன்னே கைகொட்டி சிரித்தது உன்னை விடேன் என்று.
கணவன் சென்றதும் அவன் பின்னே தன் மனமும் செல்ல உடல் மட்டும் வீட்டிற்குள் வந்தது. “பாப்பா” என்றழைத்த லோஜிக்கு பதிலில்லாமல் போக, அவளின் கவனத்தை தன்புறம் திருப்ப லோஜி ராசியின் கைபிடித்திழுத்தார்.
“உங்களுக்கு இதே வேலையா போச்சி” என்றபடி கையைத் தட்டிவிடத் திரும்பியவள், ‘ஸ்...’ என நாக்கைக் கடித்து “லோ..லோஜி” என வாய் தந்தியடிக்க...
“லோ..லோஜி தான். பின்னாடியே லோ லோன்னு வர்றேன். எதுமா எனக்கு வேலையா போச்சி?”
“ஹி..ஹி அம்மாஆச்சி சாரி. அ..அது உங்கள இல்ல நீங்க.. சே.. இல்ல நான்... உங்க மகன், ஹையோ.. ஆபீஸ்கு கிளம்பறேன்” என்று வார்த்தைகளில் தடுமாறி வேகமாக மாடியேறிச் செல்லும் பேத்தியை மனம் குளிரப் பார்த்திருந்தார் மீனலோஜினி.