• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
26


நாட்கள் செல்லச்செல்ல, “சே... பேசாம விஜி அண்ணியைப் பிடிச்சி ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா விஷயத்தை வாங்குறதை விட்டுட்டு, இப்படி இருந்துட்டியே ராசி” என்று தன்னைத்தானே திட்டினாள்.

“ராசி எனக்கு டைமாகுது கிளம்புறேன்” என்று அவசரமாக கிளம்பியபடி சரத் கீழே வந்தான்.

“இப்ப ஏழரை மணிதான் ஆகுதுபா. கொஞ்சம் வெய்ட் பண்ணினா சாப்பிட்டு கிளம்பிரலாமே?”

“டைம் இல்லம்மா. இந்த கேஸ் கொஞ்சம் பழசுதான். ஆனா, ரீ ஓபன் ஆகுது. கொஞ்சம் ரிஸ்கானது கேர்புல்லா ஹேண்டில் பண்ணனும்.”

அதைக் கேட்டிருந்தவளின் முகம் வாட அறைக்குள் சென்றாள்.

பின்னாலேயே வந்தவன், “என்னமா?” என்றான் மனைவியின் முகவாட்டம் பொறுக்காமல்.

“என்ன கேஸ்?” என்றவள் குரல் வெளியே வரவேயில்லை.

‘ரிஸ்க்னதும் பயந்திட்டா போல’ என நினைத்தவன் அவளருகில் வந்து, “ஒண்ணுமில்லமா. சாதாரண கேஸ்தான்.” அவளின் கோபமான முறைப்பில்... “அது முழுசா எதுவும் சொல்லாமல் ஒரு பெண்ணை தேடச்சொல்லி அரசியல்வாதி ஒருத்தர் சொல்லியிருந்தார். விசாரிச்சப்ப அவர் பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அந்தப் பெண்ணை ஏமாத்தியிருப்பான் போல. அந்தப் பையனுக்கு எதிரா ஆதாரம் இருக்குன்னு போன்ல சொன்னதும் அடியாட்கள் மூலமா தேடியிருக்காங்க கிடைக்கலை. கடைசில என்கிட்ட வந்திருந்தாங்க. நான் விசாரணையில இறங்க, மும்பையில அவளோட அண்ணன் வீட்ல இருந்தா. என்னோட மறைமுக சப்போர்ட்ல அவர் பையனுக்கு தண்டனை கிடைச்சிருச்சி. இவர்கிட்ட மும்பை வரை தேடிப் போனேன் கிடைக்கலன்றதுக்கு ப்ரூஃப் காண்பிச்சி தப்பிச்சிட்டேன். இப்ப இதுல சின்ன பிரச்சனையாகிருச்சி.”

“எ...என்ன பிரச்சனை?” என பதறியவளை தடுத்து... “ஒண்ணுமில்லடா. அவருக்கு இந்த நியூஸ் லீக்காயிருச்சி. திரும்பவும் அந்தப் பெண்ணை தேடுறதுக்கு வேற டிடெக்டிவ் ஏற்பாடு பண்ணினதுல என் வேலையையும் ஸ்மெல் பண்ணி, அந்தப் பெண்ணை தூக்கப்போறாங்க. அதுக்குள்ள நாங்க முந்தணும்.”

அதிர்ந்த முகத்துடன் அனைத்தையும் கேட்டிருந்தவள் சட்டென்று கணவனை இறுக அணைத்து, “அவங்க ரொம்ப மோசமானவங்களாங்க?” பயத்தில் உடல் நடுங்க கேட்டாள்.

“ரொம்ப இல்லமா. ஆனா கொஞ்சோண்டு” என்றதும் பயத்தில் இன்னும் இறுக்கியணைக்க... மனைவியின் பயத்தையும், பரிதவிப்பையும் உணர்ந்தவன் அவளின் முதுகை வருடியபடி, “நீ பயப்படுற மாதிரி எனக்கு ஒண்ணும் ஆகாதுமா.”

“நிஜம்தானே” என்பது போல் அவன் முகம் பார்க்க... “நிஜம்தான். என் பொண்டாட்டி பர்ஸ்ட் டைம் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணியிருக்கா, இதுவே என் வேலையை ஜெட் வேகத்துல முடிக்க வைக்கும்” என்று கண்ணடித்தான்.

அவளோ சட்டென்று அவனிடமிருந்து விலக, நேரம் பார்த்தவன் இன்னும் நேரம் இருப்பதால், அவளை சகஜமாக்க எண்ணி “ராசாத்தி” என்றழைத்தான்.

“ப்ச்.. ராசி சொல்லுங்க.”

“சரி ராசாத்தி” என்றான்.

“என்ன நக்கலா? ராசி சொல்லச் சொன்னா திரும்பவும் ராசாத்தி சொல்றீங்க?”

“நீதான ராசாத்தி சொல்லாதீங்க ராசி சொல்லுங்க சொன்ன. அதான் சரி ராசாத்தி சொன்னேன். சரி முறைக்காத ராசாத்தி” என திரும்பவும் வம்பிழுத்து, “ஆமா அன்னைக்கு கேட்கணும்னு நினைச்சேன். என்னை முழுசா பார்த்துட்டியா?” என்றான் குறும்பாய் குரலை இறக்கி அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.

“என்ன சொல்றீங்க. எதை முழுசா பார்த்தியா கேட்குறீங்க?” என்றாள் புரியாமல்.

“அதான்மா போன வாரம். உன் கண்ணு, அதுல முத்தம், அப்புறம் இடுப்பு, டவல், உன் கை வளையல்” என அடுக்க... நினைவு வந்தவளுக்கு முகமோ வெட்கத்தில் சிவக்க, தலை குனிந்தபடி “இல்லையே” என்று அவனைத் தாண்டி வெளியே செல்ல முயன்றாள்.

வேகமாக கைபிடித்திழுத்தவன் மேலேயே வந்து விழ, “ப்ச்.. இந்த பழக்கத்தை விடமாட்டீங்களா. ஏதோ மேனரிசம் மாதிரி எப்பப்பாரு கையைப் பிடிச்சிழுத்து மேல சாய்ச்சிக்கிறதே வேலையா போச்சி.”

“சரி விடு. இனிமேல் கையைப் பிடிச்சிழுக்கல” என்று கையை விட்டதும்... சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள், ‘விடச்சொன்னா என்னை விட்டுருவானா’ என்றவளுக்குக் கோவத்தில் கண்கலங்குவது போல் தோன்ற... அதற்குள் அவளின் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்திருந்தான் அவளின் கள்வன்.

கலங்கிய கண்கள் கணவன் தன்னை அணைத்ததும் மாயமாய் மறைய, “ஹேய் என்ன பண்றீங்க விடுங்க?” என்றபடி திமிறினாள்.

“ஹா! விடுறதுக்கா கல்யாணம் பண்ணியிருக்கேன். அதுவும் உன்னோட விருப்பமே இல்லாமல். அம்மன் முன்னாடி சத்தியம் பண்ணி தாலி கட்டியிருக்கேனாக்கும்” என்று சட்டைக் காலரைத் தூக்க...

அவளோ கண்களால் அவனைக் களவாட, அந்த கண் ஈர்ப்பினில், “உன்னோட இந்த ப்ரௌன் நிற கண் என்னை உன்னிடத்தில் இழுக்குது ராசாத்தி” என்று அந்த கண்களில் அவனிட்ட முத்தங்கள் தன் உடல், உயிர் மொத்தத்தையும் களவாடிச் சென்றது.

“சொல்லு அன்னைக்கு முழுசா பார்த்ததான?” என்றான் மறுபடியும்.

‘அச்சோ! லூசு மாமா! ஏதோ சினிமா பார்த்த மாதிரி பார்த்த தானன்னு கேட்டா, நான் என்ன சொல்றது’ என நினைத்தபடி உதடுகடித்து அமைதியாக நின்றிருந்தாள்.

மனைவியின் முகம் உயர்த்தி, புருவம் தூக்கி அவள் கண்களைப் பார்த்து “லூசுதான் உன்மேல. இப்ப சொல்லு?” என்றான் அவளை அறிந்தவனாய்.

“பொண்டாட்டிகிட்ட கேட்கிற கேள்வியா இது” என்றாள் நிமிர்ந்து.

“பொண்டாட்டிகிட்டத்தான் கேட்க முடியும். பொண்டாட்டிட்ட மட்டும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. எதுவாயிருந்தாலும் சொல்லு?”

“ஆமான்னு சொன்னா, என்ன செய்யப்போறீங்க?”

“எதுவும் செய்யப்போறதா நான் சொல்லலையே. அப்பவே சொல்லியிருந்தா நான் எஸ்ஸாகியிருப்பேனே!”

“உங்களை!” என்று அவனை போட்டு அடிக்க, அடித்து முடித்ததும், தான் அதிக உரிமை எடுக்கிறோமோ என்ற எண்ணம் எழ, “சாரிங்க” என்றாள்.

“நீ ஏன் என்னை விலக்கி வைக்கிற ராசாத்தி” என்றான் குரலில் வலியுடன். “உன்னோட மாமா, ஹரின்ற வார்த்தைகளை நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா” என்று அவளை அணைத்து தன் ஏக்கத்தை இதழ்களால் முகமெங்கும் முத்தமிட்டுத் தணிக்க... அந்த முத்தத் திணறலில் சிக்கியவள் தன் வசமிழக்க, அந்த மோன நிலையை செல்போன் கலைத்ததில் இருவரும் விலக, அவன் முகம் காண வெட்கப்பட்டு ராசி வெளியே ஓடினாள்.

அவளின் வெட்கம் பார்த்தவனோ கையிலுள்ள போனைத் தூக்கி கட்டிலில் எறிந்து வெளியே செல்லப் போனவன், லோஜியை எண்ணி தன்னை சீர்படுத்தி, ஹாலில் வைத்திருந்த பேக்கை எடுத்து லோஜியிடம் கிளம்புவதாகச் சொன்னான்.

சமையலறையில் இருந்து “டிபன் ரெடியாகிருச்சி சாப்பிட்டு போப்பா” என்றார்.

“நா..நான் சாப்பிட்டுட்டேன்மா” என்றவன் கண்கள் மனைவியை முழுங்க. அவளோ நகத்திலுள்ள நெய்ல்பாலிஷை நிதானமாக பிய்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்த லோஜிக்கும் மனதிலுள்ள பாரம் இறங்கி மகிழ்ச்சி பொங்கியது.

“சரிம்மா நான் கிளம்புறேன்” என்றவன் ராசி தன்னைப் பார்ப்பாளா என பார்த்திருக்க, அவள் தலை நிமிரவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருக்க வேகமாக கிளம்பி வெளியே சென்றான்.

“ராசிமா புருஷன் வேலைக்குப் போகும்போது சந்தோஷமா அனுப்புறதில்லையா? அட்லீஸ்ட் ஒரு தலையாட்டல்” என மீனலோஜினி கடிய...

லோஜியிடம் ஒரு மன்னிப்பு பார்வை செலுத்தி ஹால் தாண்டி வாசல் சென்றவள் வெளியே பைக்கை எடுத்துக் கொண்டிருந்தவனைக் காண, திரும்பவில்லை என்றதும், ‘பாருங்க மாமா.. ஒருமுறை திரும்பி என்னைப் பாருங்க மாமா ப்ளீஸ்’ என்று மனதினுள் வேண்டினாள்.

கண்ணாடியில் அவளின் பதற்ற முகம் பார்த்தவன் உதட்டில் முறுவலுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி அவள்புறம் திரும்பி, அவனின் டாமின் அவஸ்தையை ரசித்து கண்ணடித்து ‘பை’ என்று கிளம்பினான்.

“ஆஹா! இந்த ஜெர்ரி பாய் வரவர ரொமாண்டிக் பாயாகிட்டு வர்றான் டோய்!” என கௌண்ட் கொடுத்தவள், தன் மாற்றத்தை நினைத்து தனக்குள்ளேயே சிரித்தாள். மறந்ததாக, மறைந்ததாக, மறித்ததாக தான் நினைத்த காதல் கண்கட்டி வித்தை காட்டி தன் முன்னே கைகொட்டி சிரித்தது உன்னை விடேன் என்று.

கணவன் சென்றதும் அவன் பின்னே தன் மனமும் செல்ல உடல் மட்டும் வீட்டிற்குள் வந்தது. “பாப்பா” என்றழைத்த லோஜிக்கு பதிலில்லாமல் போக, அவளின் கவனத்தை தன்புறம் திருப்ப லோஜி ராசியின் கைபிடித்திழுத்தார்.

“உங்களுக்கு இதே வேலையா போச்சி” என்றபடி கையைத் தட்டிவிடத் திரும்பியவள், ‘ஸ்...’ என நாக்கைக் கடித்து “லோ..லோஜி” என வாய் தந்தியடிக்க...

“லோ..லோஜி தான். பின்னாடியே லோ லோன்னு வர்றேன். எதுமா எனக்கு வேலையா போச்சி?”

“ஹி..ஹி அம்மாஆச்சி சாரி. அ..அது உங்கள இல்ல நீங்க.. சே.. இல்ல நான்... உங்க மகன், ஹையோ.. ஆபீஸ்கு கிளம்பறேன்” என்று வார்த்தைகளில் தடுமாறி வேகமாக மாடியேறிச் செல்லும் பேத்தியை மனம் குளிரப் பார்த்திருந்தார் மீனலோஜினி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
வேலைக்கு கிளம்பியவளுக்கு விஜியிடம் பேசி முடிவு எடுக்க வேண்டிய வேலை நினைவு வர, அதற்கு முன் கணவனுக்கு மெசேஜ் அனுப்பி பதிலுக்காகக் காத்திருக்க, பதிலில்லை. ஏற்கனவே ரிஸ்கான வேலை என்றதில் பயந்திருந்தவள், அடுத்த மெசேஜ் அனுப்ப எதிர்தரப்பு மௌனம் அவளை பயத்திலாழ்த்தியது. இருந்த பதற்றத்தில் மெசேஜ் சென்டானதும் வரும் சத்தம் அவளருகிலிருந்து வந்ததை கவனிக்க மறந்து, நேரத்தை விரயமாக்காமல் கணவனின் நம்பருக்கு அழைத்தாள்.

ஹேய் ராசாத்தி ரோசாப்பூ வாவாவா!
அடி ஏய் சீமாட்டி பூச்சூடி வாவாவா!
கண்கள் இமை மூடும்போதும்!
உனதன்பு எனதன்பைத் தேடும்!
மஞ்சம் இரண்டான போதும்!
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்!
தூர இருந்தும்
அருகில் இருப்போம்!
தனித்து இருந்தும்
இணைந்து இருப்போம்!

வசனத்தோடு சேர்ந்த பாடலுடன் தன்னருகே கட்டிலில் கிடந்த மொபைலைப் பார்த்தாள். அந்த பாடல் ரிங்டோன் தனக்கானது என்றதும் முகம் மலர போனை எடுத்து பார்த்தவள் அசந்தே போனாள்.

முகப்பில் மீனலோஜினியின் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க மடியில் குழந்தையுடனும், இடதுபுறம் சரத்தும் வலதுபுறம் ராசியும் ஒருவரையொருவர் மெய்மறந்து ரசித்தபடி கண்களால் காதல் பேசியது போலிருந்தது சேவியர் எடுத்து சரத்திற்கு அனுப்பியிருந்த அந்த அரிய புகைப்படம். அதையே பார்த்திருந்தவளுக்கு ப்ரீகுட்டியின் இருப்பிடத்தில் தங்களுக்கேயான ஒரு குழந்தை லோஜியின் மடியில். அந்த கற்பனை காட்சியிலேயே மனம் லயித்திருந்தால்.

அப்பொழுதுதான் அந்த நெருடல் அதிகமானது. சொல்லாமலேயே சொல்கிறது அகமும் முகமும் அவன் காதலை. ‘ஆனால், அன்று ஏன்? என்ன காரணம்?’ ரொம்ப ஆராயாமல் விஜிக்கு போன் செய்து முதலில் நலம் விசாரித்தவள், “அண்ணி அன்னைக்கு எங்க வீடு பால்காய்ச்சினப்ப, அண்ணா என்கிட்ட சரத்தை ப்ரபோஸ் பண்ணச் சொன்னதுக்கு இவங்க மாட்டேன்னு மறுத்தாங்களே அது ஏன்? இப்ப யோசிச்சா வேறெதுவோ இருக்குது போலவே!”

“அ..அது ராசி” என தயங்க...

“சும்மா சொல்லுங்கண்ணி. முன்னாடி மாதிரி உணர்ச்சிவசப்பட மாட்டேன்.”

“அது சரத் அண்ணாமேல எந்த தப்பும்...” விஜி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அண்ணி ஒரு நிமிஷம் அப்படியே வெய்ட் பண்ணுங்க. போன் வருது உங்கண்ணா போனை விட்டுட்டு போயிட்டாங்க. எதாவது இம்பார்டண்ட் காலா இருக்கப்போகுது” என்று அதை அட்டெண்ட் செய்து காதில் வைக்க...

“என்னடா? எங்களை சுத்தல்ல விட்டா உன்னை கண்டுபிடிக்க மாட்டோம்னு நினைச்சியா. அந்த பொண்ணை கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லி, மும்பையிலிருந்தே கேஸை ரன் பண்ணி தண்டனை வாங்கி கொடுத்துட்டு என்கிட்ட நல்லவன் வேஷம் போட்டல்ல. உன் திருட்டுத்தனம் தெரிஞ்சிருச்சிடா. உன்னோட பெர்சனல் நம்பரைக் கண்டுபிடிச்சப்பவே என்னைப்பற்றித் தெரிஞ்சிருக்குமே நான் எவ்வளவு பெரிய ஆள்னு. என் கண்ணுல மாட்டுற செகண்ட் நீ சமாதிடா” என்று போனை வைத்தான்.

அந்த மிரட்டல் வார்த்தைகளின் வீரியம் இம்மி பிசகாமல் ராசியைத் தாக்க, பேச்செழாமல் சிலையாய் சமைந்திருந்தாள்.

நீண்ட நேரமாக சத்தம் எதுவுமில்லை என்றதும் விஜி, “ராசி” என்றழைத்து பதிலில்லாமல் போக, “என்னாச்சி இந்த பொண்ணுக்கு? ராசி.. ஏய் ராசி? என்ற கத்த போன் மூலம் வந்த சத்தத்தில் அதிர்விலிருந்து வெளியே வந்தவள் கண்கள் அருவியாய் கொட்ட “அ...அண்ணி எனக்கு பயமாயிருக்கு” என்று கதறினாள்.

“ராசி என்ன பிரச்சனைமா? அண்ணா போன்ல பேசினது யாரு?” எனும்போது சரத்தின் போனில் இன்னொரு கால் வர... அதையே வெறித்திருந்தவள், ‘ஆன் செய்யவா.. வேண்டாமா’ என யோசித்ததில் விஜியை மறந்திருந்தாள். விஜியோ போனை கட்செய்து லோஜிக்கு அழைக்க ஆரம்பித்தாள்.

இங்கே போனை காதில் வைத்ததும் தாறுமாறாக எகிறிய இதயம்... “ராசாத்தி” என்ற ஒரு வார்த்தையில் அடங்கி சந்தோஷத்தில் அழுகை வந்தது. அழுகையை கட்டுப்படுத்தி “மா..மாமா எங்க போய்ட்டீங்க? உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. நீங்க சேஃப்தான?”

“என்னமா ஏன் அழற? செல்லை மறந்துட்டேன். நீ அந்த நம்பருக்குத்தான் காண்டாக்ட் பண்ணுவ. பயந்திரக்கூடாதேன்னு தான் உனக்கு ட்ரை பண்ணினா பிஸின்னு வந்தது. அதான் இந்த செல்லுக்கு அழைச்சேன். மனைவியின் அழுகை நிற்காமல் வரவும், ராசாத்தி கூல்மா” என்று சமாதானப்படுத்தியும் அழுகை குறையாதிருக்க, ‘இவ வேலைக்காமாட்டா’ என நினைத்தவன், “ராசி அழுகையை நிறுத்துறியா? ஏன் அழற?” என்று அதட்டல் போட்டான்.

“நான் அழல மாமா. கண்ணீர் அதுவா வருது. என்னால ஸ்டாப் பண்ண முடியல” என்றாள் அழுகையினூடே.

இந்த வசனத்தைக் கேட்டதும் தான் தோன்றியது, திருச்சியில் மங்கலாக தன்னருகில் ஒரு பெண் நின்று சாகக்கிடந்த கிரியிடம் பேசிக்கொண்டிருந்தது. அன்றே போட்ட முடிச்சி. முகத்தில் முறுவல் தோன்ற இப்பொழுது அனைத்தும் முழுமையானது போலிருந்தது. அவளை சமாதானப்படுத்த “சரிமா என்ன பிரச்சனைன்னு சொல்லு?”

“அது..” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல...

“குரைக்கிற நாய் கடிக்காதுமா.”

“குரைக்கிற நாய் கடிக்காமலிருக்கலாம். ஆனா, மனுஷன் கடிப்பான்” என்றாள் மனிதனின் குணமறிந்து.

“அந்த அரசியல்வாதி என்னை நெருங்க முடியாதபடி முற்றுப்புள்ளி வச்சாச்சிமா. அந்த பெண்ணையும் சேஃபா ஊருக்கு அனுப்பியாச்சி” என்றான் ஆறுதலாய்.

“நிஜமாவா!”

“என்னை நம்பலையா? சரி இப்ப என்ன பண்ணனும்ன்ற?”

“உங்களை நம்பாமலா. இப்ப நீங்க வீட்டுக்கு வர்றீங்களா?” என்றாள் ஏக்கத்துடன்.

“ஏன்மா நீ பேங்குக்கு போகலையா?” என பதில் கேள்வி கேட்க...

“நான் லீவ் சொல்லிருறேங்க.”

“சரிமா நான் வர்றேன்” என்றான்.

“ட்ராவல்ல இருக்கீங்களா? இல்லன்னா கொஞ்ச நேரம் என்கிட்ட பேசிட்டிருக்கீங்களா?” கெஞ்சுதலாக கேட்க...

மனைவியின் பயம் உணர்ந்தவன், “ட்ராவல்ல இல்லமா. மணியும் நானும்தான் வந்தோம். நான் உனக்கு போன் பேசணும்னு வெளில வந்திருக்கேன். சரி என்ன பேசணும் என் ராசாத்திக்கு?”

“ஹ்ம்.. ராசாத்தி சொல்லாதீங்க சொல்லிருக்கேன்” என சிணுங்க.

அவளின் சிணுங்களை நேரில் காண முடியவில்லையே என நினைத்தவன், “வாய்ஸ் கேட்டா சொல்லாதீங்க சொன்ன மாதிரி தெரியலையே. இன்னும் வேணும்னு கேட்கிற மாதிரி இருக்குது. நிஜமா ரா..சா..த்..தி” என்று ஒவ்வொரு எழுத்தாய் அழுத்தி சொல்ல...

“ஹ்ம்.. போங்க மாமா. நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்ல.”

“அப்ப நீ என்ன நினைக்கிற செல்லம்?”

“ச்சோ! உங்களை! வேற எதாவது பேசுங்க.”

“சரிமா. அப்படியே எழுந்து வார்ட்ரோப்ல பர்ஸ்ட் ரைட்சைடு சின்னதா ப்ளுகலர் ஃபைல் இருக்கும். அதுலயிருக்கிற பேப்பரை படிச்சிப்பாரு.”

“அதுல என்னயிருக்கு?”

“படிச்சிப் பாருமா தெரியும்.”

“ம்... ஓகே” என்றவள் அதை பிரித்துப் படிக்கப்படிக்க கண்களில் ஆனந்தமாய் நீர் வழிந்தது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top