• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
26



“இன்னைக்கு இவன் உயிரோட இருக்கிறான்னா அதுக்கு என் மகனோட உயிரிழப்பும் ஒரு காரணம்.” மகன் என்றதுமே கண்கள் கலங்கியது அவருக்கு. மற்றவர்களின் ஆச்சர்ய விழிப்பில் தன் கலக்கத்தை மறைத்து, “புரியலல்ல? புரியுற மாதிரியே சொல்றேன். அந்தச் சம்பவம் நடந்தப்ப நான் அங்கதான் இருந்தேன். ஆனா எதையும் கவனிச்சிப் பார்க்கிற நிலையிலில்லை.”

“இளங்கதிர்! என் மகன்! பத்து வருடங்கழித்து எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். சந்தோஷத்தோட உச்சியிலிருந்த நேரம். அத்தனை வருஷத்து ஏக்கங்களையும் தீர்த்து வச்சவன். அவன் மட்டுமே எங்க வாரிசுன்னும் ஆனப்ப அவனோட தாத்தா பாட்டியில ஆரம்பிச்சி எல்லாருக்கும் செல்லம். அதுவே சிலநேரம் பிடிவாதம் பிடிக்க வச்சிருச்சி. முன்கோபமும் பிடிவாதமும் இருந்தாலும் தப்பான வழிக்குப் போகமாட்டான். அம்மான்னா அவனுக்கு உயிர். ஃப்ரண்ட்லி கேரக்டர் கூட. என் மகன் வந்த பிறகு, பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியை அப்பாவுடைய சில இடங்கள் வித்து பெருசாக்கினேன்.”

“கதிர் ரொம்ப ஜாலி டைப். அப்பப்ப சின்னதா பிரச்சனைகளை இழுத்துட்டு வருவான். அவனுக்கு சாதகமா தீர்ப்பை எதிர்பார்த்தாலும், எல்லாரும் போனதும் தப்பைச் சுட்டிக்காட்டினா புரிஞ்சி இன்னொரு டைம் செய்யமாட்டான். அதேநேரம் ஏற்கனவே பண்ணினதுக்கு மன்னிப்பும் கேட்கமாட்டான். கொஞ்சம் சண்டியர்தான் என் பையன். சிவாவுக்கு சொல்லவே வேண்டாம். அவளையே அடிக்கடி எடுத்தெறிஞ்சி பேசி அடுத்ததா அவனே சமாதானப்படுத்திருவான். அந்த சண்டியர் மண்ணைக் கவ்வுற ஒரே இடம் அவன் அம்மா மட்டுமே!”

அவரின் அந்த ரசனையில் மற்றவர்களும் ஆழ்ந்து போக, அவ்விடத்தில் இயற்கை சப்தங்களைத் தவிர ஒரே அமைதி.

“கதிர் ப்ளஸ் டூ படிச்ச சமயம், சிவாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போக, மகன் மேல கொஞ்சம் கவனம் வைக்க மறந்துட்டா. சிவா ஓரளவு குணமானப்ப பனிரெண்டாவது எக்ஸாம் முடிஞ்சிருச்சி. அவன் ஒருவித மன இறுக்கத்தோட இருந்ததைப் பார்த்து என்னன்னு கேட்டும் பதில் இல்ல. எப்பவும் ஜாலியாயிருக்கிற பையன் ஒரேடியா அமைதியானதும் எங்களுக்கு வருத்தம்தான். அப்பதான் ஊருக்கு போகலாம்னு அம்மா சொல்ல, எல்லாரும் கிளம்பி கதிர் ரிசல்ட்கு இரண்டு நாட்கள் முன்னாடி மதுரை வந்தோம்.”

“ஊருக்கு வந்த மறுநாள் கோவிலுக்குப் போகலாம்னு ப்ளான் பண்ண சிவாவால வரமுடியாத சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் இருக்கப்போறது பத்து நாள்தான். சொந்த ஊருக்கு எப்பவும் வர்றதில்ல. இருக்கிற நாள்ல உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருறோம். கோவிலுக்கு கிளம்பிட்டு போகாமல் இருக்கக்கூடாது. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.”

“நாங்க கோவிலுக்கு போனப்ப முன்னாடி உள்ள அம்மன் சந்நிதியிலதான், காமாட்சியையும் மாமாவையும் பார்த்தோம். அடையாளம் தெரிஞ்சி ஒரு பத்து நிமிஷம் பேசிட்டிருந்து வீட்டிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ள மலை நோக்கி நடக்க ஆரம்பிச்சிட்டோம். கோவில்ல சாமி கும்பிட்டிட்டு இருந்தப்பதான் கார்மேகத்தைப் பார்த்தேன். அவன் பக்கத்துல நாலஞ்சு பேர் நின்னுட்டிருந்தாங்க. அவனோட அம்மா வழி சொந்தம் நான். தற்செயலான சந்திப்புதான். கதிர் ரிசல்ட் எதிர்பார்த்து ஒரு டென்சன்லயே இருந்ததால அவன்கிட்டயும் அதிகம் பேச முடியல.”

“இன்னொரு காரணம் அவனைப்பற்றி எதுவும் நல்லதா கேள்விப்பட்டது கிடையாது. அவன் விருப்பப்பட்டு கேட்ட பொண்ணை, அவனோட அண்ணன் முறையில் உள்ளவருக்குக் குடுத்த ஆத்திரத்துல, அந்தப் பொண்ணோட தங்கச்சியை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டதா அப்பா சொல்வாங்க. அவன் கூடயிருந்தது யாருன்னு கேட்டப்ப ரெண்டு பேரை பையன்னு சொல்லி இன்னும் ரெண்டு பேரைக் காண்பித்து, வியாபார ஒப்பந்தம் போடுறதுக்கு முன்ன அம்மனை வேண்டிக்க வந்ததா சொன்னாங்க.”

“அவங்க போனதும் பையன் போனை வெறிச்சி பார்த்திட்டிருந்தான். என்னடான்னு கேட்டதுக்கு ஒரே அழுகை. அவன் பிறந்ததிலிருந்து எதுக்காகவும் அழுதது கிடையாது. முதல்முறை என் கண்முன்னால கதறி அழுதப்ப நான் துடிச்சிப் போயிட்டேன். பத்து வருஷம் தவமிருந்து பெத்த புள்ள, அந்த அழுகை அழுதப்ப என்னால ஆறுதல் சொல்ல முடியல. முடிஞ்சளவு சமாதானப்படுத்தி தேத்தி கேட்டப்பதான் தெரிஞ்சது, அவன் மனசளவுல எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கான்னு.”

“ஸ்கூல்ல ஒரு பொண்ணு அவன்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண, இவன் அவளை அடிச்சி திட்டியிருக்கான். இவன் க்ளாஸ் பசங்க அவள்கிட்ட கதிர் பொண்ணுங்ககிட்ட பேசவோ சுத்தவோ மாட்டான்னு விளையாட்டா சொல்ல, அவள் இவனை லவ் பண்ணவைக்கிறேன்னு பெட் கட்டி கதிர்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கா. ஒரே க்ளாஸ் பொண்ணு அடிக்கடி பாடத்தில் டௌட் கேட்க இவன் க்ளியர் பண்ணினதால, கதிர் அவளை லவ் பண்றதா தப்பா நினைச்சி அந்தப் பசங்களுக்கு முன்னாடி சொல்லிட்டா. அவங்க அவளை கேலி பண்ணி கதிரை உயர்த்திப் பேச நடந்த அவமானத்தைத் தாங்க முடியாம கதிரைப் பழிவாங்கக் காத்திருந்திருக்கா.”

“சின்னச்சின்னதா அவனைச் சீண்டி நீ ஆம்பளையில்லன்றதாலதான் என்னை லவ் பண்ணலன்னு காயப்படுத்துற வார்த்தைகளை யூஸ் செய்திருக்கா. நிறைய டைம் மத்த பசங்க முன்னாடியும் இது நடக்க, அதனால படிப்புல கவனம் சிதறிருச்சி. எப்பவும் சிவாகிட்ட ஓபனா பேசுறவன் தன்னோட அவமானத்தை சொல்லாம மறைச்சிட்டான். எக்ஸாம் முடிச்சி வெளியில் வந்தும் மாறல. சிவா.. பையன் என்ன படிச்சா நல்லாயிருப்பான்னு நிறைய கனவு கண்டு அதைப் பையனிடமும் பகிர்ந்துக்க... முதல்முறையா குற்றவுணர்வு அவனுக்கு. அதுவரை யாரோ ஒருத்தி சொன்னதை நினைச்சி உழன்றவன், தாயின் எதிர்பார்ப்பைக் குழைச்சிட்டோம்னு மனசளவுல இன்னும் அடிவாங்கிட்டான்.”

“எல்லாம் சொல்லி முடிச்சி நான் பரீட்சையில பெயிலாகிட்டேன்ப்பான்னு அழுதான். நான் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் சமாதானமாகல. சாரிப்பா நான் தப்புப் பண்ணிட்டேன். சாரிம்மான்னு அருவி நோக்கி ஓட ஆரம்பிக்கவும், எனக்கு ஏதோ விபரீதமா பட அவனைப் பின்தொடர்ந்து எங்க போற கதிர்? இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கறேன்னு சொல்லி அவன் பின்னாடி போனேன். அந்த நேரம் அங்க நிறைய அலறல் சத்தம் கேட்டது. அது இன்னும் என்னை அச்சத்திற்குள்ளாக்க, என் கவனம் என் பையன்கிட்ட இருந்ததால வேறெதையும் கவனிக்கல. அதுக்குள்ள தப்பு பண்ணிட்டேன்மா. என்னை மன்னிச்சிருங்கம்மா. நான் உங்களுக்கு வேண்டாம்மான்னு என் கண்ணு முன்னால...” சொல்லக்கூட முடியாமல் தேம்பி அழுதுவிட்டார் குருமூர்த்தி.

பார்த்திருந்தவர்கள் மனமும் கலங்க, கயல்விழியின் கண்களில் கண்ணீர். சிறிது நேரம் அழுதவர் கண் துடைத்து, “பத்து வருஷம் பிள்ளையில்லாம தவமாய் தவமிருந்த பெத்த பையன். உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவுனால ஒரே நிமிஷத்துல... என் உயிரான மகன் என் எதிர்லயே... செத்துட்டேன் நான்.”

“என் பையன் விழுந்த அதே நேரம் இன்னொரு பையன் கத்தியபடி விழுந்தது கண்ணில்பட்டாலும், என் மூளை எதையும் யோசிக்கிற நிலையிலில்லை. வேகமா அந்தப் பள்ளத்துல பார்த்தா வெறும் இருட்டு. கண்ணைப் பறிக்கிற இடி மின்னல். செல்போன் சிக்னல் இல்ல. அங்கயிங்க அலைபாய்ந்து கிடைச்ச சிக்னல்ல அப்பாவை கான்டாக்ட் பண்ணி, அவர் தெரிஞ்சவங்க சிலரோட சேர்த்து டாக்டரையும் கூட்டிட்டு வந்தார். மழை இருட்டு அந்தப் பள்ளத்துல சில மணிநேரமா சல்லடை போட்டுத் தேடின பிறகு கிடைச்சது இரண்டு உடல்கள்.”

மற்றவர்கள் அனைவரும் அப்படியே அசையாது அமர்ந்திருக்க...

“இருட்டுல எது என் பையன்னு தெரியல. ஹாஸ்பிடல் கொண்டு போயி சேர்த்ததுல இரண்டு பேருமே சீரியஸாயிருந்தாங்க. அந்த இன்னொரு பையன், உடல் முழுக்க கீறி முகத்துல நிறைய காயமாகி அடையாளம் தெரியாம இருந்தான். ரெண்டு பேருமே பிழைக்குறது கஷ்டம். நீங்க நினைச்சா அந்த இன்னொரு பையனைக் காப்பாத்தலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.”

“அந்தப் பையன்கிட்ட போனேன். அத்தனை அடிகளையும் வலிகளையும் மீறி துடிச்சிட்டிருந்தான். என் குடும்பத்தைக் அழிச்சவங்களைப் பழிவாங்கணும். என்னைக் காப்பாத்துங்கன்னு ஒரே அரற்றல். மயக்க மருந்து போட்டும் அவனோட உடல்ல மாற்றமில்லை. ஏதோ ஒரு சக்திதான் அவனைப் பேச வச்சதோன்னு இப்பவும் எனக்குத் தோணும். அவன்கிட்ட சாதாரணமா விசாரிச்சப்பதான் தெரிஞ்சது நல்ல வசதியான வீட்டுப்பையன். பெயர் இளநாதன்னு. தனக்கு எதுவும் ஆகுறதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லிடணும்ன்ற வெறியில, ரெண்டே நிமிஷத்துல அவன் மொத்த குடும்பத்தைப் பற்றியும் சொல்லி தன்னையும் காப்பாத்தச் சொல்லி மயங்கிட்டான்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“அவனுக்கு அவசர சிகிச்சை நடந்தப்ப என் பையன்கிட்ட போனேன். அவனோட கடைசி கட்டத்துல நின்னுட்டிருந்தான். மூளை மட்டுமே துடிச்சிட்டிருக்க மற்ற உறுப்புகளனைத்தும் செயலிழந்திருச்சி. டாக்டர் என்கிட்ட ஒண்ணு சொன்னார். ப்ரைன் ட்ரான்ஸ்ப்ளாண்ட் ஆபரேஷன் பற்றி. இதுவரை அப்படியொரு ஆபரேஷன் உலகத்துல எங்கேயும் நடந்ததில்ல. அதனால ஒரு உயிர் பிழைக்கும்னா முதல் முயற்சி செய்யலாம் சார். அதுக்குத் தேவையான டெஸ்ட் எடுத்து பார்த்தாச்சி. யாரோ ஒரு பையன் மூலமா உங்க பையன் வாழ்ந்திட்டிருப்பார். உங்களுக்கு சம்மதமா கேட்டார்.”

“அதிக அவகாசமில்லாத அந்த நேரத்துல அவசர முடிவெடுக்க வேண்டிய கட்டாயம். என் பையனை எப்படியும் இழந்துதான் ஆகணும்ன்ற உண்மை முகத்திலடிச்சது. அவனுக்கு எதாவதுனா சிவா... அவ.. அவ உயிரோட இருக்கமாட்டா. என்ன செய்றது புரியாத நிலையில, என் அப்பா ஒரு ஐடியா சொல்ல எனக்கும் சரின்னுபட்டது. அதோட வேற வழியும் கிடையாது. என் பையனால ஒருத்தன் வாழ்றான்றதோட, அவனையே என் பையனாக்கிட்டா? அவன் சொன்னதை வச்சிப் பார்த்தப்ப, அவன் குடும்பம் மொத்தமும் இல்லாம தனி மனுஷனா நிற்கிறான். அவனுக்குமே ஒரு நல்ல லைப் கிடைக்கட்டுமேன்ற எண்ணம் வந்தது.”

“உடனே ஆபரேஷனுக்கு சம்மதிச்சாலும் ஒரு கண்டிஷன் போட்டேன். முதல் முயற்சி நூறு சதவீதம் சாத்தியமா தெரியாது. சப்போஸ் உயிர் பிழைச்சாலும் அவனுக்குப் பழையவை எதுவும் ஞாபகம் இருக்கக்கூடாது சொன்னேன். அதை தானே பார்த்துக்கறதாகவும். ஆபரேஷன் சக்சஸானா பையன் க்ளீன் ஸ்லேட்டா வருவான். அதுல நீங்க பதியுறதுதான் எல்லாம். அதைத் தொடர்ந்து ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கும் ரெடி செய்யலாம் சொன்னார்.”

(ப்ரெய்ன் ட்ரான்ஸ்ப்ளாண்ட்: இதுவரை உலகிலேயே எங்கும் நடத்தப்படாதது. இது இன்னும் ஆராய்ச்சியில் மட்டுமே இருக்கிறது. இவ்வாராய்ச்சி விலங்குகள் அளவிற்கே நடத்தப்பட்டதாக கேள்வி. இன்றுவரை மனிதர்களை வைத்து நிரூபிக்கப்படவில்லை. கதையின் அவசியத்திற்காக நான் மனிதனிடமும் உபயோகித்திருக்கிறேன். விஞ்ஞானத்துல நாம் முன்னேற்றத்தைக் காட்டலாம் தப்பில்லை. நாகரீகத்தில்தான், அதீத முன்னேற்றம் ஆபத்தை விளைவிக்கும்.)

கயல்விழிக்குப் புரிந்தது. அவர் ஏன் தன் பையன்தான் என அடித்துப் பேசினாரென்று. அவள் தன் அண்ணனைக் காண அவனோ நன்றியாய் அவரைப் பார்த்திருந்தான். ‘ஏன் என் பழைய நினைவுகளை அழித்தீர்கள்?’ என்று சண்டையிடவில்லை இளநாதன். அது அவன் குணமும் கிடையாதே!

“சிவா கேட்டதுக்கு பெயிலாகிட்டதால உன் முகத்தில் முழிக்கப் பயப்படுறான். பாஸானதும்தான் உன்னைப் பார்ப்பேன் பேசுவேன் சொல்றான்னு என்னென்னவோ பேசி அவளை சமாதானப்படுத்தி, இவன்கிட்டேயும் உயரத்திலிருந்து கீழ விழுந்துட்ட. அதனால எல்லாம் மறந்திருச்சி. இப்படி உன் அம்மா பார்த்தா தாங்கமாட்டாள்னு சொல்லி, இரண்டு மாசம் ஹாஸ்பிடல்லயும், மீதி எட்டு மாசம் அவனுக்காக தனி டீச்சர் வச்சி பத்து முடிச்சிருந்த பையனை தாயைக் காரணம் காட்டி பனிரெண்டாவது எழுத வச்சோம்.”

“கதிரோட அத்தனை வீடியோஸ் போட்டு தாய்க்கும் அவனுக்கும் எங்க குடும்பத்துக்கும் இருக்கும் உறவு பற்றிச் சொல்லி, அவனோட கோபம் பிடிவாத குணத்தை நியாபகப்படுத்தாம, நீ ரொம்ப பொறுமைசாலி ஜாலி டைப்னு சொல்லி வச்சேன். ப்ளஸ் டூ எழுதி முடிக்கவும் சிவாகிட்ட கூட்டிட்டுப் போனோம். நல்ல மார்க் எடுக்க ஹைதராபாத்லயே பெஸ்ட் காலேஜ்ல தொழில்நுட்ப கல்வி படிக்க வச்சேன்.”

“ரொம்பப் பொறுமைசாலி. முன்னயிருந்த கோபக்கார மகனை விட, இந்த கதிரை சிவாவுக்குப் பிடிச்சது. எப்படிங்க இப்படி ஆளே மாறிட்டான்னு அடிக்கடி சொல்வா. உண்மை தெரிஞ்ச மூணே பேர் நான் அப்பா டாக்டர்.அமல்ராஜ். ட்ரீட்மெண்ட்ல கதிர் இல்லன்னாலும் டாக்டர்கிட்ட அப்பப்ப எதாவது வித்தியாசமா நடந்தா சொல்லி கேட்டுப்பேன். தமிழ்நாடு வந்தா பழைய ஞாபகம் வந்திருமோன்னு பயத்துல இங்க வரவிடவேயில்ல. இது என் ஒய்ஃப்கு ரொம்ப வருத்தம்தான். என்னோட அத்தனைத் தடைகளையும் மீறி, சிவாவும், கதிரும் தமிழ்நாடு வந்தப்ப டாக்டர்.அமல்ராஜ்கிட்ட கேட்டேன்.”

“தொண்ணூற்றைந்து சதவீதம் அவனுக்கு நினைவு வராது. அதையும் மீறினால் கடவுளோட சித்தம்னு சொல்லிட்டார். எனக்குமே அது உறுத்திட்டேதான் இருந்தது. ஏன்னா சாகும்போது அவனுக்குள்ளயிருந்த வெறி அப்படி! கடவுள் சித்தம்போல... தமிழ்நாடு விட்டுக் கிளம்ப முயற்சித்தும் முடியாமல், கதிர் அவசரமா திருமொழியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்பதான் தெரிஞ்சது.. அந்தப்பொண்ணுதான் இவனோட முறைப்பொண்ணுன்னு. விதியை மாற்ற யாரால் முடியும்? அவன் சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாலும், அன்னைக்கு நடந்த அனைத்தையும் நடத்துனது கார்மேகம்னு தெரிஞ்சதும், அவன்கிட்ட என் பையனை மோதவிட்டு எதாவது ஆச்சிதுன்னா, அந்த பயம்தான் எனக்கு.”

“எப்படியோ கயல் மட்டும் என் அண்ணன்தான்னு கடைசிவரை நின்னா. அவ நினைச்சிருந்தா எல்லார்கிட்டேயும் சொல்லி நிரூபிச்சிருக்கலாம். தன் அண்ணன் உயிரோட இருக்கிறதே போதும்ன்ற எண்ணம் அவளுக்கு. சிவா கயலை தத்தெடுக்கலாம்னு சொன்னப்ப எனக்கும் மறுக்கத்தோணல. அவள் அண்ணன் உறவோட இருக்கட்டும் நினைச்சேன். இவன்தான் இளநாதன்றது எவ்வளவு நிஜமோ... அதே அளவு இவன் இளங்கதிர்ன்றதும் நிஜம். அவன் இல்லன்னா இன்னைக்கு இவன் இல்லை” எனும்போது அனைவருக்கும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

“நீ சொல்லுமா கயல் எதாவது தப்பா சொல்லிருக்கேனா? இவன் என் பையன்தான?” என்றார் நேராகப் பார்த்து.

“அப்பா” என்றாள் வார்த்தைக்கு வலிக்காமல்.

ஒரே வார்த்தை ஒட்டு மொத்த சந்தோஷத்தை அள்ளித்தருமா? இதோ ‘அப்பா’ என்ற வார்த்தை அவரை எல்லையில்லா மகிழ்ச்சி கொள்ள வைக்க, “இன்னொரு முறை சொல்லுமா?” என்றார் ஆசையாக.

“என்னை மன்னிச்சிருங்கப்பா. நீங்க செஞ்ச எதுவும் தப்பே கிடையாது. இளநாதன்றது எவ்வளவு உண்மையோ, அவனுக்குள்ளயிருக்கிற இளங்கதிரும் உண்மைதான். நீங்க க்ரேட்பா. நான் இதுவரை யார்கிட்டேயும் சொன்னதில்ல. ஐ லவ் யூப்பா. என் அண்ணனை வாழ வச்ச தெய்வத்துக்கு தேங்க்யூ சோ மச்” என்றாள் ஆத்மார்த்தமாக.

“அப்பான்னு சொல்லிட்டு, தெய்வம், தேங்க்யூலாம் சொல்வாங்களா?”

“எனக்கு என் அப்பா எப்பவும் தெய்வம்தான். அப்பாவுக்கு அப்புறம்தான் தெய்வமே தெரியுமா?”

“முதல்ல கண்ணீரைத் துடை.”

“இது சந்தோஷத்துல வந்தது. சரி நீங்க உங்க பையனைக் கொஞ்சுங்க. நான் வச்சிருறேன்.”

“மிஸ்.கயல்விழி ஒரு நிமிஷம்” என்ற கார்த்திக், “உங்களை விசாரிக்க இரண்டு ஆபீஸர்ஸ் வருவாங்க. நீங்க அவங்க கேள்விகளுக்கு நடந்ததை அப்படியே சொல்லிருங்க.”

“சரிங்க சார்” என்று போனை வைத்தாள்.

“மகனிடம் திரும்பி சின்னப்பொண்ணு அவள் என்னைப் புரிஞ்சிக்கிட்டா. உன்னோட பதில் என்ன கதிர்?”

“அப்பா! இப்பவும் கதிர்தான் சொல்றீங்க. அதுல சின்ன இடறல் கூட வரல. அப்புறம் எப்படி நான் மாறுவேன்? நான் இளநாதன்றது நீங்க சொல்றதுக்கு முன்னாடியே தெரியும்பா” என்றான்.

“கதிர்!” அதிர்வாய் அவனைக் காண...

“இன்னைக்குக் காலையிலதான்ப்பா தெரியும். இப்பவரை உங்களை அப்பான்னு அதே கதிர்தான்ப்பா கூப்பிடுறேன். பெத்தால்தான் அப்பா அம்மான்னு இல்லப்பா. வளர்ப்புக்கு அதைவிட இரண்டு மடங்கு சக்தியிருக்கு.”

“கதிர்.. அம்மா?”

“அம்மாவுக்கு நான் எப்பவுமே ராஜாதான்பா. இந்த உண்மை எந்தக்காலத்திலும் அவங்களுக்குத் தெரியாது.”

“இது போதும்டா எனக்கு” என்று மகனின் தோளணைத்துக் கொண்டார்.

“கதிர்.. மேக்சிமம் அவங்களுக்கு எதிரா நேர்ல பார்த்த சாட்சிகளே இருக்காங்க. இன்னும் கொஞ்சம்தான். நாளைக்குள்ள கேஸ் டீடெய்ல்ஸை சரிபண்ணி நேரடியா அரஸ்ட் வாரண்ட் வாங்கிரலாம். உங்க ஒய்ஃப் பத்தி ஸ்மெல் பண்ணிட்டாங்க நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எங்க ஆட்கள் உங்களைச் சுற்றிதான் இருக்காங்க. அன்பு நீயும்தான். எங்கேயும் போகாம இன்னைக்கு இவங்களோட எங்க கண்காணிப்புலயே இரு. ஓகே கதிர்.. நான் கிளம்புறேன். எந்த டைம் எது வேணும்னா நடக்கலாம். திரும்பவும் சொல்றேன் ஜாக்கிரதை” என எச்சரித்துச் சென்றான் கார்த்திக்.

வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “சிவா நாம ஊருக்குப் போகும்போது, கயல் நம்ம பொண்ணா நம்மளோட வருவா. உனக்குச் சந்தோஷம்தான?” என்றார் குரு.

“மாமா என்ன சொல்றீங்க? கயல் எப்படி அங்க? அப்ப அம்மா?”

“உன் அம்மாவை நீ கூப்பிட்டுக்கோமா. அதான் ஹைதராபாத் வரலன்னு சொல்லிட்டியே. இங்கேயே உன் அம்மா அத்தையோட இரு” என்றார் அழுத்தமாக.

சட்டென கணவன் புறம் திரும்பி ‘அவ்வளவுதானா?’ என்று பார்த்தாள்.

‘உன் முடிவைதான் திரும்ப சொல்றோம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல மொழி. வா போகலாம்’ என்பதை முகத்தில் காட்டினான்.

‘போ வர முடியாது’ என்று கண்கள் எரித்து விடுவதாய் பார்த்தது.

இரவில் அன்புவுடன் குருமூர்த்தி வெளித்திண்ணையில் படுக்க, சிவகாமி காமாட்சியை அறையில் படுக்கச் சொன்னதற்கு இருவரும் மறுத்து ஹாலில் படுக்க, அறைக்குள் இளநாதனும் மங்கையர்கரசியும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“என்ன மங்கை நாளைக்குக் கிளம்பட்டுமா?”

“ம்...”

“சரி ஏன் நிற்கிற படு.”

“ம்...” அதே ஒற்றை வார்த்தை.

“உனக்கு எத்தனை சர்ப்ரைஸ் குடுக்கிறேன். அட தேங்க்ஸ் வேண்டாம்பா. ஒரு கிஸ்ஸாவது குடுக்கலாம்ல” என அப்பாவியாய் கேட்டான்.

‘ஹான்!’ என அவள் வாய் திறக்க,

“ஹேய் வாய் மூடு. வாய்க்குள்ள நானே போய் படுத்துக்குவேன் போலவே” என்றதும் படக்கென்று வாய்மூடி முகம் சுருக்கி முறைக்க, “என்ன லுக்கு? வந்து படு” என்று கைபிடித்திழுக்க... கட்டிலில் அமர்ந்திருந்தவனுடன் அவளும் பெட்டில் விழுந்தாள்.

“என்ன பண்றீங்க? விடுங்க” என விலகப்போனவள் கையைத் தட்டிவிட்டு தன்மேலேயே விழவைக்கவும், “கொஞ்சம் சத்தமா பேசினாலும் வெளில உள்ளவங்களுக்கு அப்படியே கேட்கும்” என்றாள் மறைமுக மிரட்டலாய்.

“அவ்வளவுதான ஏர்போர்ட். வெளில எதுவும் கேட்காம பண்ணிரலாம்.” கண்ணிமைக்கும் நேரத்தில் தன்மேல் இருந்தவளைச் சரித்து அவள் மேல் அவன் வர... விழிகள் வியப்பாய்! சற்றுக் காதலாய்! சிறு முறைப்பாய் கணவனைக் காண... “சத்தம் வெளியில கேட்கக்கூடாதுல்ல ஏர்போர்ட்?”

ஏதோ ஏடாகூடம் செய்யப்போகிறான் என்று பார்க்கையிலே தன் முகம் நோக்கிக் குனிவது தெரிந்து சட்டென்று கண்மூட, மூடிய விழிகளில் முத்தமிட்டதும் மங்கையவள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள்!

“ஹேய் சத்தம் வெளியில கேட்கலதான?” காதோரம் ஹஸ்கியாகக் கேட்டு முத்தமொன்றை வைக்க, கை கணவனவன் சட்டைக்காலரை இறுக்கியது. கன்னங்களில் முத்தமிட்டு அவள் முகம் பார்க்க... கண்திறவா வெட்கத்தில் சிவந்த முகத்தில், சின்னதாக வளைந்த இதழ்ப்புன்னகை. அப்புன்னகை தனை தனக்குள்ளே அடக்க எண்ணியவன் இதழில் முத்தமிட, மூடிய விழிகள் திறந்து தன்னால் மூடிக்கொண்டது. இதழில் சிலநொடிப் பயணத்தில் வெளி வந்தவன், “ஆர் யூ ரெடி பேபி” என்றான் ஹஸ்கியாக.

மூடிய விழிகளைத் திறவாமலேயே, “ம்... ஆனா பால் இல்லையே” என்றாள் மெல்லிசையாக.

“அது எதுக்குடா இப்ப?”

“பால் பழம்னு வச்சி உங்க கால்ல விழுந்து, நீங்கதான சொன்னீங்க?”

“அவள் வாய்மூடி அதுக்கெல்லாம் அவசியமில்ல மொழி. செகண்ட் நைட்கு வச்சிக்கலாம்.”

“அச்சோ! எனக்கு அவசியமாச்சே” என்றபடி தன் மேல் பட்டும் படாமலிருந்தவனை அருகில் தள்ளிவிட்டு எழுந்தமர்ந்து, “நீங்க தள்ளிப்படுங்க. என்னை தப்பு செய்ய வைக்கப் பார்க்குறீங்களா?” என்றாள் இதுவரையிருந்த மனநிலை மாறி.

“உன்னை ஒண்ணும் தப்பு செய்ய வைக்கல. நான்தான் தப்பு செய்யலாம்னு பார்த்தேன் போதுமா.”

“தப்புன்னு தெரியுதுல்ல தள்ளிப்போங்க” என்றாள் திரும்பவும்.

“இல்லன்னு சொன்னா சரி சொல்லப்போற மாதிரிதான். போடி” என்று சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தான்.

கழுத்திற்குக் கீழ் தெரிந்த மச்சம் தொட்டுப் பார்த்தவள், ‘எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி மச்சம்? இப்படியும் இருக்குமா? குரல் கூட ஒத்துப்போகுதோ? சேச்சே... நாமதான் ரொம்ப குழப்பிக்கிறோம்.’ கணவன் திரும்பிப் படுத்திருப்பதைக் கண்டு மெல்லிய புன்னகையுடன் அவனைச் சீண்ட எண்ணி, “ஏங்க இளா அத்தான்னு சொன்னாதான் உங்களை லவ் பண்ணுவேன்னு நினைச்சீங்களா? கதிர்ன்ற பெயர்ல கூட ஒரு கதிர்வீச்சி இருக்குதுன்னு நினைக்கிறேன். ஹலோ இந்தப்பக்கம் திரும்புறீங்களா. அட உங்களைத்தான்ங்க. கதிர் அத்தான் திரும்பிப்பாருங்க. அடப்பாருங்கன்னா” என்று சீண்டலைத் தொடர்ந்தாள்

அப்பொழுதும் அவன் திரும்பாதிருக்க, “இ..ளா அ..த்..தான்” என்ற மெல்லிய உச்சரிப்பில் வேகமாகத் திரும்பவும், “இல்லங்க. எங்க இளா அத்தான் மாதிரி மச்சம் எப்படின்னு யோசிக்கிறேன்” என்றாள் கண்களில் சிரிப்புடன்.

தனக்குள் வந்த சிரிப்பை மறைத்து, “நான்தான் உன் இளா அத்தான்னு சொல்றேன். நீதான் நம்பமாட்டேன்ற” என்றான் முறைப்பாய்.

“நம்புற மாதிரி சொல்லுங்க.”

அவளின் கையைத் தன் கைக்குள் கொண்டு வந்து “இந்தக் கையைப் பிடிச்சா எந்த கூட்டத்திலிருந்தாலும் என் மங்கைன்னு சொல்லிருவேன்” என்றான் உணர்ந்து.

“ஒய்ஃப் கைபிடிச்சா எல்லாரும்தான் சொல்வாங்க. இப்ப கண்மூடி உங்க கையை நான் பிடிச்சா, நீங்கதான்னு நான் ஈஸியா சொல்லிருவேன்” என்றாள் கெத்தாக.

“இவளை...” சட்டென்று அவளைத் தன்புறம் இழுத்து அழுத்தமாக முத்தமிட்டு, “படுத்துத் தூங்குடி” என்று கண்மூடிப் படுக்க... அவனுக்கு இரண்டு அடிகள் போட்டு திரும்பிப் படுக்கப்போகையில், கைகள் அவனுக்குள் இருக்கக் கண்டவள் ‘கேடி’ என திட்டிக்கொண்டே அமைதியாக உறங்க. கண்மூடி அதை ரசித்தபடியே கதிர் உறங்கினான்.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்த திரு பச்சைத் தண்ணீரை தலைக்கு ஊற்றி, அவசரமாக தலை துவட்டி காதோரம் முடியெடுத்து நடுவில் பின்னலிட்டு, அடியில் ஹேர்பேன்ட் மாட்டி வேகமாக கிளம்புகையில் எழுந்த காமாட்சி, “நான் போயி மோட்டர் போட்டு தண்ணீர் விட்டுட்டு வர்றேன் திரு. மாமா அத்தை இருக்காங்கள்ல வீட்லயிரு” என்றார்.

“உங்களுக்கென்ன சின்ன வயசா? எப்பவும் செய்றதுதான அத்தை. அவங்க எழுந்துட்டா காஃபி போட்டுக் குடுத்திட்டிருங்க. அதுக்குள்ள வந்திருறேன்” என்று டார்ச் எடுத்து வெளியே செல்ல,

“திரு மோட்டர் ரூம் சாவி விட்டுட்டுப் போற பாரு.” சாவி எடுத்துக் கொடுத்து, “பார்த்துப்போ பூச்சி கிடக்கப்போகுது” என்றார்.

“சரிங்கத்தை” என்று வாசல் தாண்டுகையில், “அக்கா இரு நானும் வர்றேன்.” தம்பியவன் குரலில் நின்று, “தூங்குடா நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

“நீ வாசல் தெளிச்சப்பவே எழுந்துட்டேன். குளிக்கப் போறேன்னு அங்கயிங்க நடந்ததுல தூக்கம் கலைஞ்சிருச்சிக்கா. இனி படுத்தாலும் தூக்கம் வராது. அதனால நானும் வர்றேன்.”

“சரிடா காலங்கார்த்தால ரொம்பப் பேசாம வா போகலாம். அத்தை தம்பிப்பையனையும் கூட்டிட்டுப் போறேன். என்னைத் தேடாம வேலையைப் பாருங்க. சீக்கிரமே வந்திருவோம்” என்று வழியில் அவளை நலம் விசாரித்தவர்களையும், அவள் நலம் விசாரித்தவர்களையும் பற்றிப் பேசியபடி சென்றார்கள்.

இவ்வளவு நேரமாகுது ஆளையே காணோம். வாசலுக்கும் ரோட்டுக்குமாய் காமாட்சி அல்லாடினார்.

“என்ன சித்தி பதற்றமாயிருக்கீங்க?” என்று இளங்கதிர் வர...

“கதிர் ஆறரைக்கெல்லாம் வரவேண்டிய திரு, ஏழரையாகியும் வரல. இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பா. ஏன்னு தெரியல கொஞ்சம் பயமாயிருக்கு” என்று ஒரு குண்டை அசராமல் அவன் தலையில் போட்டார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top