• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
25


சரத்தின் முன் கோபமாக அமர்ந்தவர் “என் பேத்திக்கு என்னாகிற்று சரத்?” என்றார் நேரடியாக.

அதில் சற்று தடுமாறியவன், “லோஜிம்மா! ராசிக்கா? அவளுக்கு ஒண்ணுமில்லையே. ஏன் கேட்குறீங்க?”

“நான் கேட்டது நேரடிக் கேள்வி. அதுக்கு சரியான பதில் சொல்லு. மழுப்பல் வேண்டாம்” என்றார் அழுத்தமாக.

“லோஜிம்மா ப்ளீஸ் வேண்டாம். அவ என் ஒய்ஃப். அப்படியே அவளுக்கு பிரச்சனைனாலும், நான் பார்த்துக்கிட்டு சும்மாயிருப்பேன்னு நினைக்கிறீங்களா?”

“அந்த நம்பிக்கை இருந்ததால தான், அவளை உனக்கு கல்யாணம் பண்ணினேன். இப்ப சொல்லு என்ன பிரச்சனை?”

அவரின் உடல்நிலை கருதி அவன் அமைதியடைய, “நீ என்ன நினைச்சிட்டிருக்க? ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்ததால, நீ சொல்றதைக் கேட்டு மண்டையைப் போட்டுருவேன்னா?”

“லோஜிம்மா!” என அதிர்ந்து எழுந்தவனை நோக்கி,

“ஆமா நான்தான். வீடு பால்காய்ச்சின அன்னையிலிருந்து என் பேத்தி எப்படியிருந்தா தெரியுமா உனக்கு? எதையும் வெளியில சொல்லாம தனக்குள்ளேயே அழுதிட்டு, ஒரு வாரம் கழிச்சி பொறுக்க முடியாம நான் கேட்டப்ப சொல்றா. சரத்கு என்னைப் பிடிக்கல ஆச்சி. ஏன் என்னைப் பிடிக்கல. சின்ன வயசுல நடந்த கல்யாணத்தாலயா? அதை கேட்டப்ப எனக்கு செத்திரலாம் போலிருக்குன்னு சொன்னா.”

“சொல்லு இந்த வார்த்தையைக் கேட்கவா அவளை கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துறேன்? மூணுமாசம் பழகின உனக்காக தன்னுடைய உயிரைக்கூட துச்சமா நினைச்சா. அப்படி என்னடா காதல் உன்னோடது. ஒரே வார்த்தையில அவளை சாகடிச்சிட்டியேடா! பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லையா விடு. எதுக்கு ஒரு பொண்ணோட மனசைக் கலைச்சி அவளைக் காயப்படுத்தணும். அன்னைக்கே வீட்ல நீ பேசினதையும், ஹாஸ்பிடல்ல அவகிட்ட உருகுனதையும் பார்த்து தான் வம்படியா இந்த கல்யாணத்தை முடிச்சேன். கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிரும்னு நினைச்சேன். ஆனா, அவளுக்குள்ள எதோ ப்ராப்ளம் இருக்குன்னு புரியுது. இப்ப சொல்லு என்ன பிரச்சனை?”

தன்னால் அவள் எந்தளவிற்கு மனதில் காயப்பட்டிருக்கிறாள் என்பது தெரியத் தெரிய, மனைவியின் கஷ்டங்களை மனம் உணர கண்கலங்க நின்றிருந்தான் சரத்.

“இன்னுமா சொல்ல மனசு வரல?” என்று அவனை திட்ட ஆரம்பிக்க,

“நான் சொல்றேன் ஆச்சி” என்று உள்ளே வந்தாள் விஜி. டாக்டரைப் பார்த்ததும் ராசியை அனுப்பிவிட்டு சரத்திடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று வந்தவள், லோஜியின் வார்த்தைகளில் உள்ளே நுழைந்தாள்.

“ஆச்சி முதல் தப்பு சரத் அண்ணா, என் ஹஸ்பண்டோடதுனா. இரண்டாவது தப்பு உங்களோடது” என்று அவர் மேலேயே குற்றத்தை திருப்பி, தனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்ல, அதைக் கேட்டிருந்தவர் முகம் இறுகி வியர்க்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்திருந்தவன், “லோஜிம்மா! இப்ப பிரச்சனையை சரிபண்ணியாச்சி. நீங்க கவலைப்படாதீங்க. நீங்க எப்பவும் எங்களுக்கு வேணும்.”

“கடைசியா இப்ப நடக்கிற பிரச்சனைக்கு காரணம் என்மேல் உள்ள அன்பா?”

“ஆமா. எனக்காக செத்திரலாம் தோணுது சொன்னதா சொன்னீங்க. இதே உங்களுக்குன்னா, யோசிக்கக்கூட மாட்டா செத்திருவா. அப்படிப்பட்டவ உங்களை எதுக்காகவும் ஏமாற்றவோ, கஷ்டப்படுத்தவோ விரும்பலை. அதான் தன்னையே கஷ்டப்படுத்திக்கிட்டா. இனி நான் பார்த்துக்கறேன் லோஜிம்மா. சீக்கிரமே என்னைப் புரிஞ்சிக்குவா.”

திருமணத்தன்று தான் செய்த அறிவுரைகளுக்கு, “நீங்க சொல்லி நான் என்னைக்கு மறுத்திருக்கேன்” என்ற பேத்தியின் வார்த்தைகள் காதில் கேட்டது. “அவகிட்ட என் பாசத்தைக் காண்பிச்சி கஷ்டப்படுத்திட்டேனா சரத். என்னாலதான் இன்னும் கஷ்டப்பட்டாளா?” அழுகையில் தேம்பியவரிடம்...

“இல்ல லோஜிம்மா. அது உங்க நியாயமான ஆசைதான். இன்னும் ஒன் மன்த்ல கம்ளீட்டா குணமாகிருவா. நாங்க நல்லா வாழ்றதையும் பார்ப்பீங்க. உங்க பேத்தியோட குழந்தைகளை நீங்க நல்லபடியா வளர்க்க வேண்டாமா.”

‘இதெல்லாம் நடக்குமா?’ என பார்வையால் வினவியவரின் கண்ணீர் துடைத்து, “கண்டிப்பா நடக்கும். மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம ப்ரீயா இருங்க. நான் இருக்கிறதுவரை என் ராசாத்திக்கு எதுவும் வரவிடமாட்டேன். நான் ஏற்கனவே சொன்னதுதான், அவ எனக்கு ரொம்ப முக்கியம்! என்னை விட!”

“அந்த நம்பிக்கை என் பையன்மேல இப்பவும் இருக்குபா.”

“இனிமேலும் இருக்கும். சரி வாங்க. உங்களை வீட்டுல விட்டுட்டுப் போறேன். விஜிமா நீயும் கிளம்பு” என்றவன் “ரொம்ப நன்றிமா. நீ இருக்கிற சூழ்நிலையில உன்னை ரொம்பபே அலைக்கழிக்கிறேன்” என்றான்.

“விடுங்கண்ணா. அத்தைக்காக இதைக்கூட என் குழந்தை பொறுத்துக்காதா. அப்புறம் விவரம் தெரிஞ்சி, எங்கத்தைக்கு ஏன் ஹெல்ப் பண்ணலைன்னு கேட்டா நான் என்ன சொல்றது.”

“விஜிமா மாசமாயிருக்கியா?”

“டூ லேட் ஆச்சி. இவ்ளோ நேரம் அதைத்தான் சொன்னேன்.”

“உனக்கு வாய் ஜாஸ்தி” என்று கர்ப்பிணிகளுக்கான சின்னச்சின்ன அறிவுரைகள் சொல்லியபடி வர கிளம்பினார்கள்.

ராசியிடம் கொஞ்சம் தெளிவு வந்திருந்தது. தனக்குத்தான் சிகிச்சை என்றதும் டாக்டரிடம் தன் மனக்குழப்பங்களைக் கேட்டு தானே தெளிவுபடுத்திக் கொண்டாள். ஒரே அறையில் இருந்தால் மனைவிக்கு தன்னைக் காணும் பொழுது குற்றவுணர்ச்சி வருமென்று லோஜியுடன் தங்க வைத்தான் சரத்.

டிடெக்டிவ் வேலை உயிருக்கு ஆபத்தானது என்பது மூளையில் பதிந்த நாள் முதல் நேரடியாக கேட்காவிட்டாலும், மெசேஜ் மூலமாக எப்பொழுது, எங்கிருக்கிறான் என்று கேட்டு அக்கறை காண்பிக்க ஆரம்பித்து, கணவனே அறியாமல் சின்னச்சின்ன உதவிகள் செய்து வைத்தாள். அதில் காதல் இருந்ததா என்றால் தெரியாது? ஆனால், கண்டிப்பாக கடமை கிடையாது. ஒரு மனைவிக்கான தேடல், தவிப்பு அக்கறை, அன்பு இருந்தது எனலாம். சரத் சொன்னதுபோல் திருமணத்திற்குப் பின் காதல் செய்வது சிறந்தது, நிலையானது என்றே தோன்றியது.

இரவில் கணவனின் ஐ லவ் யூவை ராசாத்தி மிஸ் செய்தாள். தன்னிடம் ஐ லவ் யூ சொல்லமாட்டேன் என்றவன் தினமும் உறக்கத்தில் சொல்கிறான். அதன் மாயம் என்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. நாளாக நாளாக புதிதாக ஒருவித ஏக்கம் மனதினுள் புகுந்து அவளை இம்சித்தது.

சரத்தோ அவளை அவளே உணர்ந்து வரும் நாளுக்காகக் காத்திருந்தான். தான் எதாவது அதிரடி செய்யப்போய் அது எதிர்ப்புறமாக பாய்ந்து விட்டால் என்ன செய்வதென்ற குழப்பம் அவனுக்கு. அவளின் உதவிகள் தெரிந்த போதும் தெரியாதது போல் காட்டிக் கொள்வதே பெரும்பாடாக இருக்க, மனைவியின் மாமா ப்ளீஸையும், உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் உரிமையாக அழைக்கும் ஹரியையும் மிஸ் செய்தான்.

இப்பொழுதுமே மணியிடம் பேசிய வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறினான் அது வேறுமாதிரியான பிரச்சனைகளை இழுத்துவிடக் கூடாதென்று. மனைவியின் மெசேஜிற்காக, அவள் தன்னைத் தேடவேண்டும் என்பதற்காக சற்று நேரம் கழித்தே வருவான். ஏனென்றால், அவனின் பாசக்கார டாம் அரை மணிநேரத்திற்குள் ஐம்பது மெசேஜ் தட்டிவிடுவாளே அதை ரசிக்கத்தான். சரத் பதில் மெசேஜ் அனுப்பாவிட்டால் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பும், மனைவியின் தவிப்பு அவனுக்கு பூஸ்ட் குடித்த மாதிரி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அன்று ஞாயிறு காலையிலேயே அழகாக ஆடை அணிந்து வந்த ப்ரீகுட்டியை “டார்லிங் ஈஈஈ..” என்று தூக்கி கொஞ்சியபடி, “என்னடா சர்ச் கிளம்பியாச்சா?”

“ஆமா அத்தை நீங்களும் வர்றீங்களா? ஜாலியா போயிட்டு வரலாம்.”

சில வினாடி யோசனைக்கு பின், “டன் பேபி. வர்றேன் வெய்ட் பண்ணு” என்று தலைவாரி சின்னதாக மேக்கப் செய்து, வெள்ளை நிற சுடிதார் டாப்பில் கருப்பில் டிசைனும், பேண்ட் அன்ட் சால் ப்ளாக்கிலும் அணிந்து ஹாலுக்கு வந்தாள்.

காலையில் ஜாக்கிங் போய் வந்த சரத் அவளைப் பார்த்து அசையாது நின்றிருந்தான். “டார்லிங் அத்தை ரெடி” என வெளியே வந்தவளும் அப்படியே நிற்க, ஒரு பெருமூச்சுடன் மாடியேறினான்.

லோஜி காலையிலேயே விஜியைப் பார்த்துவிட்டு வர்றேன் என்று, இவர்களுக்கு தனிமையளித்து சென்றுவிட, ஜாக்கிங் முடித்து வந்தவனுக்கு காஃபி கொடுத்து, சர்ச் போவதை சொல்லிவிட்டு வர எண்ணி, குழந்தைக்கு போகோ சேனல் போட்டுவிட்டு, கணவனுக்கு காஃபி இல்லங்க பூஸ்ட்... “இப்பல்லாம் பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை பொண்டாட்டின்ற டயலாக் ஓடுது.”

பூஸ்டுடன் மாடியேறியவள் அறைக்குள் அவனில்லை என்றதும் சுற்றிலும் தேட குளியலறையிலிருந்து வந்த சத்தம் அவனிருப்பை சொல்லியது. பூஸ்டை ஓரம் வைத்து எப்படி சொல்லிவிட்டு செல்வதென்று குழம்பியபடி நிற்க... பாத்ரூமிலிருந்து வந்த சரத்தைக் கவனிக்கவில்லை. அவளின் யோசனையின் நடுவே, “ராசாத்தி” என்ற குரலில் அவசரமாக திரும்பினாள்.

இடுப்பில் துண்டுடன், கழுத்தில் சின்ன செயினுடனும், தலையில் ஈரத்துடனும் சரத் நின்றிருக்க, அவளோ கணவனையே விழியகற்றாமல் பார்த்திருக்க, அவளை ‘தொடவா, விடவா’ என்று யோசித்தவன், ‘தள்ளியே இருந்தால் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது’ என்றெண்ணி தைரியத்தை வரவழைத்து, “ராசாத்தி சாரி. வெரி வெரி சாரி” என்றவாறு கட்டியணைத்தான்.

சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் நின்றவள், கைகள் திரும்ப அவனை அணைக்கவில்லை என்றாலும் தடுக்கவுமில்லை. “ஐ மிஸ் யூ ராசாத்தி” என்றான் அவளின் கழுத்தோரம் முகம் புதைக்க... மேனி சிலிர்த்து கண்மூடி அதை அனுபவித்தாலும் ‘ஐ மிஸ் யூ! ஐ லவ் யூவா மாறுவது எப்பொழுது?’ என்று மனம் கேட்டது.

சில நிமிடங்கள் கழித்தும் தன் அணைப்பிற்கு மனைவியிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக மனதினுள் சற்று வலிக்கத்தான் செய்தது. எப்படியும் அவளை சரிசெய்தே தீருவேனென்று, “உன்னை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல. ரியலி சாரிமா. நான் ஏதோ சூழ்நிலையில...”

அந்த வார்த்தையிலிருந்த வலியின் தடுமாற்றத்தைப் பார்த்து... ஸ்ஸ்ஸ்... என அவன் வாயில் விரல் வைத்து, “போதும் எத்தனை சாரிதான் கேட்பீங்க. நீங்க சொன்ன மாதிரி கல்யாணத்துக்குப் பின்னான லைஃப்ல லவ் வந்தா அது ஜென்மத்துக்கும் நிலையான பந்தமாயிருக்கும். நாம முன்னாடி உள்ளதை மறந்து இனிமே நடக்கிறதை நல்லவிதமா மாத்திக்கலாம் ஓகே.”

“அப்ப என்னை எப்ப லவ் பண்ண ஆரம்பிப்ப ராசி?” என்றான் பரிதாபமாக.

“ம்... பார்க்கலாம். கொஞ்சம் டைம் கொடுங்க.”

“எத்தனை நாள் ராசாத்தி?” என்றதும் தன்னை முறைத்த மனைவியிடம்... “நீதான டைம் கேட்ட. அதான் எத்தனை நாள் கேட்டேன். இது தப்பா?” என்று அப்பாவித்தனம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்தாற்போல் கேட்க...

“உங்களை...” என்று பல்லைக்கடித்தாள்.

“என்னை...” என்று அவன் கேட்டதும், முகத்தில் நாணம் தானாய் புக, “ச்சீ... போ” என்று அவனை விட்டு விலக ஆரம்பித்தாள்.

அவளைத் தடுத்து, “அதுக்கு முதல் அச்சாரமா ஒண்ணு தந்திடுறேன்” என்று முகம் நோக்கிக் குனிய, விழிகள் தெறிக்குமளவிற்கு கணவனையே பார்த்திருக்க, அந்த அழகிய விழிகளில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அதற்குமேல் தாங்க முடியாதவளாய், தள்ளிவிட்டு விலகி ஓடினாள். வாசலருகில் சென்றவளுக்கு ஏதோ வித்தியாசம் தெரிய திரும்பி தன் கையையும், அவன் முகத்தையும் பார்த்து, அப்படியே கீழே பார்த்தவள், “ஹையோ! கடவுளே! கடவுளே! கடவுளே!” என ரோபோட் போல் சொல்லி கண்மூடினாள்.

“என்னாச்சி இவளுக்கு? எதுக்கு அண்ணாமலை குஷ்பூ மாதிரி இத்தனை டைம் கடவுளைக் கூப்பிடுறா?” என்றவன் அவள் கை பார்க்க, அவனின் இடுப்பில் இருந்த துண்டு அவள் கையில். அவனை விட்டு விலகும்போது கை வளையலில் பட்டு கூடவே சென்றிருந்தது.

“மை காட்! டேய் ஹரி! மானம் போயிட்டிருக்குடா ஓடு ஓடு” என வாய்மொழியாக சொல்லி, வேறு துண்டு எடுத்து சுற்றியபடி, “ஹேய் லூசு! சம்பந்தப்பட்ட என்கிட்ட சொல்லாம, கடவுளை தொந்தரவு பண்ணிட்டிருக்க” என்று அவளருகில் வந்து, “போதும் கண்ணைத்திற” என்றான்.

வெட்கம் அவளை விழுங்க, “ம்கூம் மாட்டேன்” என்றவள் முகத்திலுள்ள கையை சரத் எடுக்க, மெல்ல ஓரக்கண்ணால் பார்த்து பின் முழுவதும் பார்த்தவள் வாய்விட்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் சரத். விடாது சிரித்தவள் சிரிப்பினூடே, “பூஸ்ட் வச்சிருக்கேன் குடிச்சிருங்க. நான் ஜெபி கூட சர்ச் போயிட்டு வர்றேன்” என்று ஓடினாலும் சிரிப்பு மட்டும் ஓய்ந்த பாடில்லை.

ஜெபியும், சேவியரும் அவளின் சிரிப்பைக் கண்டு விசாரிக்க “ஒண்ணுமில்லண்ணா. சும்மா டிவியில ஒரு காமெடி” என மழுப்பினாள்.

“நம்புற மாதிரி இல்லையே. போகோ சேனல்ல பீம் இந்தளவுக்கு சிரிப்பை வரவைக்கிறானா என்ன?”

‘ம்..ம்கூம்’ தலையை மாற்றி மாற்றி ஆட்டிக் கொண்டிருந்தவள் அதேநேரம் உள்ளே வந்த லோஜியிடம், ஜெபியுடன் செல்வதாக கூறி கிளம்ப, தன்னைத் துளைக்கும் பார்வையில் கண்கள் தானாக திரும்பி மாடிக்குச் சென்றது.

ஒய்ட் கலர் பேண்ட், ப்ளாக் சர்ட் தன்னுடைய ட்ரஸ்கு மேட்சாக, ஹேண்ட்சம் லுக்கில் நின்றிருந்தவனை ரசனையாக பார்த்த கண்கள், தற்செயலாக இடுப்பிற்கு செல்லும் பொழுது துண்டு நினைவு வர தன்னை மீறி சிரித்து விட்டாள். என்ன முயன்றும் சிரிப்பையடக்க முடியவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு முகம் மலர வாய்விட்டு சிரிக்கும் ராசியை மற்றவர்கள் மனம் நிறைய பார்க்க, அவளின் வாழ்க்கையை சரத் நல்லபடியாக மாற்றுவான் என்ற நம்பிக்கை முழுதாக வந்தது லோஜிக்கு.

“என்னப்பா பண்ணின, என் பேத்தி இப்படி சிரிக்கிறா?” என்று மகனிடம் கேட்டார்.

தர்மசங்கடமாக நெளிந்த கணவனைப் பார்த்த ராசி, வாய் பொத்தி சிரிப்பையடக்கி, “சாரி” என்று கண்களால் கேட்க, அவனும் கண்களாலேயே “பரவாயில்லை” என்று தலையாட்டினான்.

இதற்கு மேல் நின்றால் சரிவராதென்று, “வாங்கண்ணா என்னோட கார்லயே போயிரலாம்” என்றபடி வெளியேறினாள்.

அவர்கள் சென்றதும், கீழிறங்கி வந்த சரத்திடம், “என்ன மாயம் பண்ணினடா மகனே. ராசி இப்படி சிரிக்கிறா? எதாவது காமெடி பண்ணினயா என்ன?”

“அவ இப்படி சிரிக்கணும்னா மாயம், காமெடின்னு என்ன அதுக்கு மேல எதாவது இருந்தா அதையும் பண்ணவேன்ம்மா. என் ராசாத்தி எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருந்தா போதும். அவளோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்” என்றான் உணர்ந்து.

வெளியே சென்ற ராசி காரினருகில் சென்றதும் கையிலிருந்த சாவி எங்கோ விழுந்திருப்பதைப் பார்த்து தேடியதில் வீட்டு வாசலருகில் கிடந்ததை எடுக்கும் பொழுதுதான் இருவரின் பேச்சையும் கேட்டது. கணவனின் வார்த்தைகளில் பொய் இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது.

திடீரென்று புது வீட்டில் மணியிடம் பேசியது நினைவு வந்தது. ஐ லவ் யூ சொல்லமாட்டேன். உயிரே போனாலும் எனும்போது அதில் என்னயிருந்தது. சில வினாடிகள் மூளையை தட்டி அன்று பேசிய வார்த்தைகளை கண்முன் கொண்டு வந்தவளுக்கு கிடைத்த விடை, ‘வலி.’ ‘ஆம். வலிதான் அந்த குரலில். ஏன்? எதற்காக அந்த வலி? என்ன..’ என நினைத்தவளுக்கு ஏதோ இருக்கிறதென்று தோன்றியது. அந்த ஏதோவை யாரிடம் கேட்பது என யோசிக்க, “மணி அண்ணா! எஸ் கரெக்ட்” என முடிவெடுத்தவளுக்குத் தெரியாது அதற்கு முன் நடக்கப்போகும் விபரீதங்கள்.

நேரே சர்ச் சென்று ப்ரேயர் ஹாலில் அமர்ந்தவளுக்குள் ஒருவகையான அமைதி. சாமிகளும், கும்பிடும் விதமும் வேறுபட்டாலும் வேண்டுதல் ஒன்றல்லவா! ‘நடப்பவை நன்மைக்கேன்னு நினைக்கிறேன். எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக்கொடு இறைவா!’ என மனமுருக வேண்டி அமைதியாக வெளியில் வர, வந்தும் அமைதி தொடர்ந்தது.

“என்ன ராசி சைலண்ட்டா வர்ற?”

“சாமி எல்லாம் ஒண்ணுதான். அதுதான் நம்மளோட நம்பிக்கை. உருவங்களும், பெயர்களும் தான் வேறு வேறு. இதை நம்ம ஜனங்க எப்படிலாம் புரிஞ்சி என்னென்ன அட்டகாசம் பண்றாங்க பாரு. எங்க சாமிதான் பெருசுன்னு சொல்லி.”

“உண்மைதான் ராசி. என்னோட ஸ்கூல் டைம்ல, இந்துக்கள் சம்பிரதாயம்னு அந்த மூணுநாள் கோவிலுக்குள்ள போக மாட்டீங்க. எனக்குமே அந்த பாதிப்பு உண்டு. உடல் சுத்தமா இருக்கும் போதுதான் சர்ச் போகணும்னு. அந்த டைம்ல வீட்ல விழுகுற திட்டைக் கூட வாங்கிப்பேன் சர்ச் போகமாட்டேன்.”

“ஹேய் சூப்பர் ஜெபி. குழந்தையிலிருந்து பெரியவங்க வரை இப்பல்லாம் மதம்னு ஒண்ணு மட்டும்தான் கண்ணுல தெரியுது. அதையும் தாண்டி பகுத்தறிவுன்னு ஒண்ணு இருக்குறதையே மறந்திட்டு கண்மூடிக்கிறாங்க.”

“ம்.. ப்ரண்ட்ஸ்கிட்ட கத்துக்கிட்டது தான் ராசி. சரி காலையிலேயே அப்படி என்ன சிரிப்பு?”

“ப்ச்.. ஜெபி அண்ணா இருக்காங்க.”

“ஏய், அவங்க பக்கத்துலயா இருக்காங்க. கார்கிட்ட போயாச்சி நீ சொல்லு?”

“ஹேய்! இது பப்ளிக் மா பப்ளிக். என்னோட மேட்டர் எங்களுக்கேயான பெர்சனல்.”

“பார்றா, பெர்சனலாம்ல. இருந்தாலும் வாழ்த்துகள் ராசி உன்னோட மனமாற்றம் தெரியுது. ஐம் சோ ஹேப்பி” என்று தோளணைத்து சொன்னாள்.

அடுத்து வந்த இரண்டு வாரங்களில் மணியை சந்திக்க நேரம் கிடைக்காமல் இருவரின் வேலை நேரமும் தடுத்தது. அதற்குள் ராசியின் சிகிச்சையும் நல்ல முறையில் முடிய, எந்தவித கோபமோ, வெறுப்போ இல்லாமல் மனம் வெற்றுக்காகிதமாய் இருந்தது.

அதில் காதலும் காணாமல் போயிருந்தது. அப்படித்தான் நினைத்திருந்தாள் அச்சம்பவம் நிகழும் வரை!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top