• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
24


கார்த்திக்கின் குரலிலிருந்த வித்தியாசத்தை உணர்ந்த ஈஸ்வரி, மருமகளின் முகம் பார்க்க, அவளின் சோகமுகம் கண்டு, என்னவென்று விசாரித்தார்.

“ப்ச்... ஒண்ணுமில்லை அத்தை” என்றாள் சலிப்புடன்.

“அப்புறம் ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு? குரல்ல ஒரு சலிப்புத்தன்மை வேற. நீ இப்படி இருக்கிற ஆள் கிடையாதே? அழுதியா அவந்தி?” பதில் இல்லாது மருமகளின் அமைதி தொடர, “ப்ச்... அழுதியா கேட்குறேன்ல? பதில் சொல்லமாட்டியா?” என குரலை உயர்த்தி கேட்டதும், மௌனமாகத் தலையை ஆட்டினாள்.

“வாயைத்திறந்து சொல்லு. பெரியவங்ககிட்ட இப்படியா பிஹேவ் பண்றது. உனக்கு வாய் இருக்குதான? ஒண்ணும் ஊமை இல்லையே? கேட்டா கேட்டதற்கு பதில் வரணும்” என்று சத்தம் குறைக்காமல் கேட்டார்.

நீண்டநாள் கழித்து அதிர்ந்த குரலைக் கேட்டு, மிரண்ட அவந்திகாவுக்கு, முதன் முதலாகத் தன்னை உரிமையுடன் அதட்டிய கார்த்திக்கின் நினைவு வந்தது. அதை எண்ணி அழுகையும் வர, ஈஸ்வரியிடம் திரும்பவும் திட்டுவாங்க வேண்டாமென்று அழுகையை அடக்கினாள்.

“புவி! ஏன் அவளைக் கத்துற? அதிக சத்தம் கேட்டா பயப்படுவான்னு உனக்குத் தெரியாதா? எதுவா இருந்தாலும் அமைதியா கேளு பதில் சொல்வா” என்றபடி அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தார் சந்திரன்.

“ஆமா பதில் சொல்றா. நீங்க வேற நான் அமைதியாதான் கேட்டேன்” என்று முடிப்பதற்குள்,

“ஆமா. நான் அழுதேன் தான். உங்க பையன் மட்டும் இப்படிப் பண்ணலாமா? த்ரீ இயர்ஸா, யாரோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு என்கிட்டேயே சொல்றாங்க? எனக்கு எப்படி இருந்திருக்கும். நீங்க போங்க. நான் எங்க மாமாகிட்டேயே போறேன்” என்று அழுதபடி எழுந்து செல்லபோக,

‘என்னது மாமாகிட்டேயா? சுந்தரேசன் ஏற்கனவே மனக்கஷ்டத்தில் இருப்பவர். இவள் வேற அவர்கிட்ட போயி, எதாவது ஏடாகூடமாச்சின்னா? கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?’ என்றெண்ணி, “ஐயோ! அவந்திமா வேண்டாம்” என்று தடுக்க வாயைத் திறந்தவர், கப்பென்று வாய் மூடி அவர்கள் இருவரையும் முறைத்தார்.

அவந்தி தன் மாமா சந்திரன் அருகில் அமர்ந்து, தோள் சாய்ந்திருந்தாள். முதலில் முறைத்த ஈஸ்வரி, அவந்திகாவின் இந்தப் பாசப்பிணைப்பில் நெகிழ்ந்து, தன் குரலை இறக்கி, தெரிந்தாலும் தெரியாததுபோல், “யாரை லவ் பண்றேன்னு சொன்னானா அவந்தி” என்றார்.

“ப்ச்... போங்கத்தை. எனக்கு அழுகை அழுகையா வருது தெரியுமா?” என்றவள் உதடுகள் துடிக்க, அழக்கூடாதென்று அழுகையை கட்டுப்படுத்தினாலும் தன்னை மீறி கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அதைப் பொறுக்க முடியாத ஈஸ்வரி, எழுந்து மருமகள் அருகில் வந்தமர்ந்து, அவள் கண்ணீர் துடைத்துத் தோள் சாய்த்து, “ஸ்... பைத்தியம். இதுக்கெல்லாமா அழுவாங்க.”

“வேறெதுக்கு அழுவாங்க? இது என்னோட வாழ்க்கைப் பிரச்சனையில்லையா?” என்பதுபோல் தலைநிமிர்த்தி பார்த்தாள்.

“அழாம என்ன நடந்ததுன்னு சொல்லு?” என்று மருமகளிடம் விஷயத்தை வாங்கியதும் சிரித்தவர், “சரி. அந்த நியூஸ் பேப்பர்ல, அவங்க நேம் மட்டும்தான் இருந்ததா?”

“ப்ச்... ஆமா அத்தை. என்னோட நேம் தவிர, அவங்க நேம்தான் இருந்தது.”

“யாரோட நேம் தவிர அவந்திமா?” என மருமகளைத் தூண்ட,

“அதான் சொல்றேனே அத்தை. என்னோட நேம் தவி...” என்றவளுக்கு சட்டென்று ஏதோ தோன்றி, மாமியாரின் முகம் பார்க்க, அதிலிருந்த மாயப்புன்னகை விஷயம் சொல்ல, “நானா?” என்றாள் ஆச்சர்யமும் வியப்புமாக.

புவனேஸ்வரி கண்மூடி “ஆம்” என்றார்.

“ஈஸூமா நிஜமாவா? நிஜமாவே அது நான்தானா? நானே தானா?” கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, ஈஸ்வரியின் கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்யூ ஈஸூமா. தேங்க்யூ” என சந்தோஷக் கூச்சலிட்டபடி அவர்கள் அறை நோக்கி ஓட,

“ஹேய்! பார்த்தும்மா. ம்.. கல்யாணம் முடிஞ்ச அன்னையில் இருந்து, உன் வாயில ஈஸூமான்ற வார்த்தை, எப்ப வரும்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன். எவ்வளவு லேட்டா வருது பாரு” என குறைபட்டார்.

“சாரி ஈஸூமா. அது அதிர்ச்சி ப்ளஸ் கோவத்துல அப்படி இருந்துட்டேன். இனி பாருங்க, எப்படி வருதுன்னு” என்று சத்தமாக சொல்லியபடி அறைக்குள் சென்று அந்த பேப்பர்களைப் பார்த்தாள்.

கார்த்திக் வட்டமிட்டிருந்த ‘அவந்திகா அழகப்பன்’ பெயரைப் பார்த்ததும், “கண்டிப்பா என்னை லூசுன்னு நினைச்சிருப்பாங்க. அவங்களை லூசன்னு திட்டிட்டு, நான்தான் லூசா இருந்திருக்கேன். ம்... என்ன பண்ணலாம்?” என்ற யோசனையில் இருக்க, மாமியாரிடம் இருந்து தன் கைபேசிக்கு வந்த தகவலைக் வந்த கண்டு, குதூகலித்தபடி கீழே வந்தவள் அது சம்பந்தமாக, சந்தோஷ் மற்றும் மாமனார், மாமியாரிடமும் பேசி அதன்பின்னே அலுவலகம் கிளம்பினாள்.

அவந்தி சென்ற ஐந்து நிமிடத்திற்குள், சந்தோஷிற்கு நேத்ராவிடமிருந்து அழைப்பு வர, ஒரு ரகசியப் புன்னகை பூத்தவன் “என்ன நேத்தி ரிசல்ட் வந்திருச்சா? நான் எப்ப வரணும். இப்பவே வரவா?” என கேட்டான்.

“ம்... ரிசல்ட் வந்திருச்சி சந்தோஷ். நீங்க வந்து வாங்கிக்கோங்க.”

“நேத்தி! இதுக்குத்தான் போன் போட்டியா? ஏன் கேட்கிறேன்னா, நீ வேற எதாவது பேச வந்து, நான் மாத்தியிருந்தா, அதான் கேட்கிறேன்.”

“ம்ஹூம்.. இல்ல சந்தோஷ்” என்றவளுக்குத்தானே தெரியும், இப்படிவாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என்று, மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருந்தது.

“சரிமா. முதல்ல அங்க வந்து ரிசல்ட் வாங்கிட்டு, அப்புறம் ஆஃபீஸ் போறேன்” என்று போனை வைத்து, “அப்பா நான் வர கொஞ்சம் லேட்டாகும். ஃப்ரண்டைப் பார்த்துட்டு வர்றேன்” என்றான்.

“எந்த ஃப்ரண்டைடா சொல்ற? இரண்டு நாள் முன்னாடி மதியம் பார்க்கப் போனியே அந்த ஃப்ரண்டா?”

‘ம்...’ என முறைத்தபடி, “உங்க சந்தேகம் சரியாகவும் இருக்கலாம். இருந்தாலும், இப்ப நோ பதில். பை” என்றபடி வெளியேறி, மருத்துவமனை சென்று நேத்ராவை சந்தித்தான்.

சந்தோஷித் தன் எதிரில் அமரவைத்த நேத்ரா, “என்ன சந்தோஷ், உங்களுக்கு கொஞ்சம் கூட ரிசல்ட் பற்றிய பயமே இல்லையா? கூலா இருக்கீங்க” என கிண்டலடிக்க,

அவளின் கண்களை நேருக்குநேர் சந்தித்து, “வேற எப்படி இருப்பேன்னு நினைச்ச நேத்தி? இங்க வந்து உன்னைச் சந்திக்கிறது வரை, ஹை டென்சன்ல இருந்ததென்னவோ உண்மைதான். உன் முகத்தைப் பார்த்ததும் தெரிஞ்சிருச்சி, உன் கையில் இருக்கிற ரிசல்ட் பேப்பர்ல நெகடிவ் போட்டிருக்குன்னு” என நிதானமாக சொன்னான்.

அவன் கண்களின் நேரடி சந்திப்பில், வந்த மயக்கத்தை மறைத்து, “ஆமா சந்தோஷ். எல்லாமே நெகடிவ்னு தான் வந்திருக்கு” என்றாள் சந்தோஷக் குரலில்.

“என்னுடைய பிரச்சனை சால்வ் ஆனதுல, என்னைவிட நீதான் அதிக சந்தோஷமாயிருக்க போல?”

“இருக்காதா பின்ன. நீங்க என்ன வேற யாரோவா?” என வாய்விட்ட பின்னே அதை உணர்ந்தவள், வெளியிட்ட வார்த்தையை அழிக்கவா முடியும். தான் பேசிய வார்த்தையை, அவன் கவனித்தானா என பார்த்தவள், அவன் கவனம் தன்னிடம் இல்லாமல், ஏதோ யோசனையில் இருப்பதை எண்ணி சற்று ஆசுவாசமாகி, “எ..என்ன யோசனை சந்தோஷ்?” என்றாள் மெதுவாக.

அவளின் உளறலை கண்டுகொண்டாலும், சற்று நேரம் விளையாட எண்ணி கவனியாதது போல் இருந்தவன், “ஓகே நேத்தி. அப்ப எங்க வீட்ல பார்த்திருக்கிற பொண்ணுக்கு ஓகே சொல்லிருறேன்” என எழுந்தான்.

அவனின் உடனடி பதிலில், தன் முகத்திலுள்ள அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியபடி பார்த்தாள். ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தாலும், மனம் மரண வலியை அனுபவித்தது. மெல்ல அதிர்ச்சியிலிருந்து விலகி, மரியாதை நிமித்தமாக எழுந்து, “ஓகே சந்தோஷ். ஆல் தி பெஸ்ட்” என்று மருத்துவ அறிக்கையை அவன் கையில் கொடுத்து கலங்கிய கண்களை மறைத்து, மனதால் அடக்கி, வாழ்த்துச் சொன்னாள்.

அவளின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும், கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு, எகிறிக்குதித்து வானம் தொடும் அளவு ஆசை. இதுவரை நேத்ராவை வேறுமாதிரி எண்ணாததால், அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா? தன்னுள் இருக்கும் அதே உணர்வு அவளுள் இருக்குமா? என்னதான் அண்ணி அவளுக்கு உங்களைப் பிடிக்குமென்று சொல்லியிருந்தாலும், அவளிடம் பேசும் முன் ரிசல்ட் தனக்குப் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்ற பயத்தில் வந்தான்.

மருத்துவமனை வாசலிலேயே சின்ன தவிப்புடன் ,ஸ்டெதஸ்கோப்பை வாயில் வைப்பதும், எடுப்பதுமாக குழந்தையின் தவிப்பில் இருந்தவளைப் பார்த்ததும் புரிந்தது அவளின் மனம். பெண் பார்த்தாயிற்று என்றதும் அதிர்ந்த முகமும், கலங்கிய கண்களும், அவளின் நிலையை சொல்ல, சந்தோஷ் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.

விடைபெற்று வாசல்வரை சென்றவன் திரும்பி அவளிடமே வர, மனதின் சோகம் முகத்திற்கு வராமல், “என்ன சந்தோஷ்?” என்றாள்.

“நேத்தி என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியும்தான?”

“இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு. வசதி இருந்து உங்க ஒய்ஃப் சம்மதிச்சா, பதினாறு பெத்துக்கலாம். அதேமாதிரி, பதினாறு செல்வமும் உங்களுக்கு கிடைக்கணும்னு, எப்பவும் கடவுளை வேண்டிக்குவேன்” என்றாள் உள்ளார்ந்த குரலில்.

அதில் வசீகரிக்கப்பட்டவன், அவளருகில் வந்து, “எனக்கு பதினாறு வேண்டாம். ரெண்டு இல்ல மூணு குழந்தைபோதும் நேத்தி. அதுவும் நீ பெத்துக் கொடுக்கிறதா இருந்தா” என்றான் மெல்லிய குரலில்.

அவன் கல்யாண செய்யப்போவதாகச் சொன்னதில் இருந்தே, இன்னும் வெளிவராதவள், குழந்தை பற்றிக் கேட்டதும், தன் மனதிற்கு சரியென்று பட்டதை வெளிப்படையாக சொன்னாள். பதிலுக்கு அவன் சொன்னதை அரைகுறையாகக் கேட்டவள், அவனின் கேள்வியை தன் மூளையில் முழுமையாகப் பதித்து அதன் அர்த்தம் புரிந்ததும், “சந்தோஷ்ஷ்!” என்றாள் ஆச்சர்யமாக.

சிரித்தபடியே, “சொல்லு நேத்தி? எனக்கு பெத்துக் கொடுப்பியா? எனக்கு மனைவியா, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு, அம்மாவா இருக்க உனக்கு சம்மதமா?” என்று மலர்ந்த முகத்துடன் இருகையையும் நீட்ட, சற்றும் யோசிக்காமல் அவனின் கைகளில் கட்டுண்டவள், கண்கள் கண்ணீரைப் பொழிந்தது. சும்மாவா! கனவில் மட்டுமே முடியும் என நினைத்த வாழ்க்கையாயிற்றே நேத்ராவிற்கு!

“ஸ்ஸ்... நேத்தி ஹேப்பி என்டிங்ல நோ அழுகை.”

“போங்க சந்தோஷ். இது சந்தோஷ கண்ணீர்.”

“என்னது சந்தோஷைக் கண்ணீர் விடவைக்கப் போறியா? அப்ப நீதான் என் ஒய்ஃப்” என அதிரடி கலாட்டாவில் இறங்கினான்.

“ச்சோ... சந்தோஷ கண்ணீர் சொன்னேன்.” பின் தான் இருக்கும் இடமறிந்து அவனை விட்டுவிலகி, “நீங்க கிளம்புங்க” என்றாள்.

“ஓகே ரைட். அதுக்கு முன்னாடி, நம்ம மேரேஜை இன்னும் ஒன் ஆர் டூ இயர்ஸ் கழிச்சி வச்சிக்கலாமா?”

“எனக்கு நீங்க கிடைச்சதே போதும் சந்தோஷ். எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருக்க நான் தயார்.”

“அடிப்பாவி! எத்தனை வருஷம் ஆனாலுமா? அத்தனை வருஷம் காத்திருக்கிற பொறுமை எனக்கில்லமா. அப்புறம் நாளைக்கு ஈவ்னிங் ட்யூட்டி முடிஞ்சதும் நேரே வீட்டிற்கு வந்திரு.”

“ஏன்? எதாவது விசேஷமா?”

“ம்... அப்படித்தான் வச்சிக்கோயேன்” என்றதும் நேத்ரா சம்மதிக்க சந்தோஷ் கிளம்பினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அன்று முழுவதும் ஒருவித மகிழ்ச்சியுடன், தனக்கான முக்கியமான வேலையையும் சேர்த்து செய்து கொண்டிருந்தவளை, சுந்தரேசன் அழைக்க, “சொல்லுங்க மாமா” என எதிரில் அமர்ந்தாள்.

“எப்ப பொறுப்பெடுத்துக்கப் போற?” என்றார் நேரடியாக.

“ம்... இன்னும் ஒருவருஷம் கழித்து மாமா.”

“அவந்திமா உனக்குக் கல்யாணமாகிருச்சி.’”

“ஸோ வாட் மாமா?”

“இன்னும் நீ குழந்தையில்லை” என கொஞ்சம் வருத்தமாக சொல்ல,

“ம்... தெரியும் மாமா. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று தன் விளையாட்டைக் கைவிட்டு, “இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ல பொறுப்பெடுத்துக்கறேன். அதுவரை நீங்க பாருங்க. அதுக்கு அப்புறமும் நீங்க என்கூடதான் இருக்கிறீங்க என்பது ரொம்ப முக்கியம். எஸ்கேப்பாகலாம்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ரிடையர்ட்மெண்ட் கொடுக்கிற ஐடியாவெல்லாம் அவந்திக்கு கிடையாது” என்றாள்.

“நல்லா பேசக் கத்துக்கிட்டமா. டியூட்டர் யாரு கார்த்திக்கா?”

“நோ நோ எக்ஸ் விவசாயத்துறை அமைச்சர் மிஸ்டர்.சந்திரகுமாரான, என்னோட மாமனார்கிட்ட தான்” என்று கண்சிமிட்டினாள்.

“நல்ல டியூட்டர்தான்” என்று சத்தமாகச் சிரித்தவரை, அமைதியாகப் பார்த்து, “அத்தை எப்படியிருக்காங்க மாமா? கௌஷிக்கைப் போய் பார்த்தீங்களா?” என்றாள்.

அதுவரை சிரித்துக் கொண்ருந்தவரின் முகம் புன்னகையைத் தொலைக்க, “தெரியாதும்மா. நீ சொன்ன என்ற ஒரே காரணத்துக்காகத் தான், அவளை மட்டும் கார்த்திக் தம்பி உதவியோட, ஜாமீன்ல எடுத்து வீட்லயும் சேர்த்திருக்கேன். ஆனா, என்னைக்கு உன்னைக் கடத்திட்டுப்போய், தன் ஆசையை தீர்த்துக்க நினைச்சாளோ, அப்பவே என்னைப் பொறுத்தவரை அவ செத்துட்டா.”

“மாமா!” என அதிர,

“ஏன் இந்த அதிர்ச்சி? விடும்மா. மனசு விட்டுருச்சி. இனி ஒட்டவைக்க முடியாது. அப்புறம் கௌஷிக் பண்ணினது சின்ன தவறு கிடையாது? அதை அவன் இப்ப உணர்ந்திருந்தாலும், இப்ப அனுபவிக்கிற தண்டனைதான், அவனுக்கே அவனை முழுமையாக உணர்த்தும் என்பது என் எண்ணம். சரி வேலையைப் பாரும்மா” என்றார்.

மாலை வீட்டினுள் நுழையும்போதே, “நித்யா காஃபி தர்றியா? பேஷ்வாஷ் பண்ணிட்டு வர்றேன். ஈஸூமா இன்னும் வரலையா?” கேள்விகளுடன் தன்னறைக்கு செல்லபோக,

“அண்ணி! நீங்க கீழ வரும்போது காஃபி ரெடியாயிருக்கும். அம்மான்னு இல்ல, இன்னும் யாருமே வரல. அம்மா வர லேட்டாகும்னு போன் பண்ணிட்டாங்க” என்றாள்.

“இதோ டென் மினிட்ஸ்ல ரெப்ரெஷாகி வரேன்” என்று சீக்கிரமே தயாராகி கீழே வந்தவள் முன், காஃபி நீட்ட, அதை வாங்கியபடி, ‘அப்ப நான்தான் அவசரப்பட்டு சீக்கிரம் வந்திட்டேனா? ம்...’ என யோசித்தவள் “நித்யா எனக்கொரு ஹெல்ப் பண்ணனுமே?”

“என்ன அண்ணி ஹெல்ப்னு சொல்லிட்டு. எதுவா இருந்தாலும் ஆர்டர் போடுங்க.”

“ஆர்டர்தான படிச்சி முடி போடுறேன்.” என்ன என்பதுபோல் விழித்த நித்யாவிடம், “ம்... நான் சொல்ற பையனை மறுக்காம மேரேஜ் பண்ணிக்கனும்.”

“மேரேஜா? சான்ஸே இல்லண்ணி.”

‘என்னடா இது? ஆ..ஊன்னா மேரேஜ் வேண்டாம்னு அண்ணன், தங்கை இருவரும் அலப்பறையக் கூட்டுறாங்க. ஒருத்தரை மலையேத்தியாச்சி, இனி இவளை வேறயா’ மனதினுள் நொடித்தவள், “ஆர்டர் போடச்சொல்லி அனுமதி கொடுக்கிறதுக்கு முன்னாடி, மறுத்துப் பேசுறதை யோசிச்சிருக்கணும். நீ வார்த்தை மாறமாட்டேன்னு நினைக்கிறேன்.” நித்யாவின் அமைதியைப் பார்த்து, “மௌனம் சம்மதம்னு எடுத்துக்கறேன்” என்று காஃபி டம்ப்ளரை அவள் கையில் திணித்து தன்னறைக்கு செல்ல எழுந்திரித்தாள்.

“அண்ணி! ஏதோ ஹெல்ப் கேட்டீங்க?”

“ம்... மறந்திருச்சி. நியாபகம் வந்தா சொல்றேன்” என்று தங்கள் அறைக்கு வந்தவளுக்கு, காலையில் வேண்டா வெறுப்பாக போயிட்டு வர்றேன் என்ற கணவனின் முகம் வந்தது. கார்த்திக்கின் புகைப்படத்தைக் கையிலெடுத்து, “எவ்வளவுக்கு எவ்வளவு ஷாப்டா இருந்தீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கோவம் வருதுங்க உங்களுக்கு. என்னை மேரேஜ் பண்ணிக்க மூணு வருஷம் காத்திருந்தீங்களா? நான் ரொம்ப லக்கி கார்த்திக். சின்ன வயசிலிருந்து மனசளவுல நான் பட்ட கஷ்டமெல்லாம், பனி மாதிரி விலகிப்போயிருச்சி, உங்களோட வரவால. இன்னும் ஒருநாள் காத்திருங்க. உங்க மூணுவருஷ தவ வாழ்க்கையை. முடிவுக்கு கொண்டு வந்திடுறேன்” என்றாள்.

இரவு அனைவரும் வந்ததும் இரவு உணவு முடியவும் கார்த்திக் தங்கள் அறைக்குச் செல்ல, நித்யாவுடன் சேர்ந்து மற்ற வேலைகளை முடித்து, கார்த்திக் தவிர மற்றவர்களிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள்.

“அதெல்லாம் இத்தனை வருஷத்து பழக்கத்தை மாத்த முடியாது” என அடம்பிடித்த மாமியாரிடம்,

“ப்ளீஸ் ஈஸூமா! ப்ளீஸ் உங்க அவந்திக்காக” என கெஞ்சிக் கொஞ்சி சம்மதம் கேட்க, “சும்மா சொன்னேன்டா. எனக்கு கார்த்திக் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உன்னோட சந்தோஷமும் முக்கியம். யூ என்ஜாய் பேபி” என தட்டிக்கொடுத்து அனுப்பினார்கள்.

அறைக்குள் அவள் நுழைந்ததும், “காலையில் ஏன் அழுத?” என்ற கேள்வியோடு வரவேற்றான் கார்த்திக்.

“அழுதேனா? நானா? எப்போ?”

“ஆமா. மூணு வார்த்தைக்குள்ள முந்நூறு கேள்வி கேட்டிரு” என முனகி, “ம்... அவுட் ஹவுஸ்ல இருந்து திரும்பும்போது.”

“அப்ப பார்த்தீங்களா? ஏன் அப்பவே கேட்கல?”

“தேவையில்லாம அழுறியேன்னு கோவமும் வருத்தமும் வந்தது. அதான் வெளியே கிளம்பிட்டேன்.”

‘ஸோ ஸ்வீட் கார்த்திக்’ என மனதினுள் ரசித்து, “அதுக்காக சாப்பிடாமலே கிளம்புவீங்களா? உடம்பு என்னத்துக்கு ஆகிறது?”

“ம்க்கும்... ரொம்பத்தான் அக்கறை. ஏன் அழுதேன்னு சொல்லு?”

“ஒண்ணுமில்லங்க. பழைய நினைப்பு வந்ததும் பார்க்கணும்னு தோணிச்சி. அதான் போனேன். அதுக்காக, உங்கமேல அக்கறையில்லன்னு சொல்வீங்களா?” என்று கண்ணைக் கசக்கினாள்.

அதைப் பொறுக்காமல் சட்டென தன்னுடன் சேர்த்தணைத்து, “ஹேய் அழகி! இப்ப ஏன் அழற? எப்பவும் உன் கண்ணுலயிருந்து கண்ணீர் வரக்கூடாது. நீயா எதையாவது நினைச்சி கற்பனை பண்ணிக்காத. நான் உன்னோட கார்த்திக்தான்! உனக்கே உனக்கு மட்டுமானவன்! புரியுதா?”

அவந்திகா சம்மதமாக தலையசைத்ததும், நெற்றியில் முத்தமிட்டுத் தன் அணைப்பில் இருந்தவளை, “ஏய் அழகி! இப்படியே இருந்தா, உன் இடுப்பு மச்சம் என்னை இம்சை செய்யும். நானும் அகிம்சையில் இருந்து, இம்சைக்கு மாறிடுவேன். அப்புறமா என்னை கோவிச்சி பலனில்லை. இப்பவே சொல்லிட்டேன்.”

“கா..கார்த்திக் என்..னோட இ..இ..இடுப்புல...”

அவளின் கேள்வியை ஒருவாறு அனுமானித்தவன், “என்னம்மா புரியல?” என்றான் கேலியை வெளியே காட்டாமல்.

“சே... இது வேற இப்பத்தான் திக்குது. என்..னோட இடுப்..புல மச்சமிருக்கிறது உங்களுக்கெப்படி தெரியும்?” திருமணமான அன்று சி.என்னின் கவிதையைப் படித்தது மனதில் இருக்க, அதை என்றாவது கணவனிடம் கேட்க வேண்டுமென்று எண்ணி இருந்தவள், இன்று திணறினாலும் கேட்டேவிட்டாள்.

“ஏன்டா இடுப்பை இத்தனை தூரம் இழுக்கிற?” என்றவன் தன்னுடைய அணைப்பை இறுக்கி, “கோயம்பேடுல துப்பாக்கி குண்டு உன்மேல பட்ட அன்னைக்கு, உன்னை நான்தான் தூக்கிட்டுப் போனேன்.”

“ம்... தெரியும் கெஸ் பண்ணினேன்” என்று அவனின் தழும்பை கைகளால் வருடி, “முதல்ல சிறுவாபுரியில பார்த்தப்ப நியாபகம் வரலை. ஆனா, எங்கேயோ இந்தத் தழும்பை பார்த்திருக்கேன்னு தோணிச்சி. அப்புறம் நாராயணனா வந்து தாலிகட்டினப்ப, என்னை தூக்குனீங்க பாருங்க, அப்பத்தான் அது நீங்கன்னு தெரிஞ்சது.”

“இவ்வளவு தெரிஞ்சுமா, என்னைவிட்டு விலகின?”

“அது நீங்க என்னை நம்பலைன்னு” என்றவள் வார்த்தைகள் வெளியில் வரவில்லை.

“ம்... புரியுது.”

“ப்ச்... புரியுறது இருக்கட்டும், என் கேள்விக்கு ஆன்ஸ்வர் பண்ணுங்க.”

“எந்தக் கேள்விடா?” என வம்பிழுத்தான்.

‘ம்க்கும்...’ உதட்டைச் சுழித்து, “நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்” என விலகப் போனவளை, இறுக்கிப் பிடித்து, “முதல்முறை உன்னைத் தூக்கிட்டுப் போனப்ப, உன்னோட சுடிதார் டாப் சுருண்டு மேல போயிருந்திச்சி” என்றதும் அவந்திகா கணவனை முறைக்க, “ஹேய் அழகி! இப்படிலாம் பார்க்காத? நானா வேணும்னுலாம் பார்க்கல. நம்புடா ப்ராமிஸ். உயிருக்கு போராடிட்டிருக்கிற பொண்ணுகிட்ட போய் யாராவது மிஸ்பிஹேவ் பண்ணுவாங்களா? அதுவும் நான் இந்தமாதிரி காரியம் செய்வேனா?” ஆனாலும்...” என சற்று நிறுத்தி இடைவெளிவிட்டான்.

“என்ன ஆனாலும்?” வலுக்கட்டாயமாக அவனை விட்டு விலகியபடி கேட்டாள்.

“ஆனாலும், அந்த நேரம் கொஞ்சம் கெட்டவனாகிட்டேன் தான். உன்னோட இடுப்பு மச்சத்தை பார்த்ததும். ஒரு செகண்ட் மயங்கிட்டேன்னா பாரேன்!” என்றான் கண்ணடித்தபடி.

பொய்யாய் கணவனை முறைத்து, “அப்ப நீங்க பார்த்திருக்கீங்க. இல்லையா?”

“ம்... த்ரீ செகண்ட்தான்டா. பட், இப்பபாரு அதைப் பார்க்க உரிமை இருந்தும் தனிமையில் தவிக்கிறேன்” என ஏக்கக்குரலில் சொன்னான்.

‘தெரியுமே! சரியான லூசன். ஏன் தனிமையில தவிக்கணும்? ஒய்ஃபை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியலை? ரொமான்ஸ் வெறும் வார்த்தையிலதான் இருக்கு’ என்று மனதிற்குள் நினைத்ததை வெளியிடாமல், “ஹ்ம்... எங்க அத்தை கல்யாணத்தன்னைக்கே சொன்னாங்க. ம்... நானும் வெய்ட் பண்றேன்” என ராகமிழுத்து படுக்கச்சென்றாள்.

“ஏய் நில்லு? என்ன நீ அடிக்கடி அம்மா சொன்னாங்க. அம்மா சொன்னாங்கன்னு சொல்ற? அப்படி என்னதான் சொன்னாங்க?”

“அதை அவங்ககிட்டேயே கேட்டுக்கோங்க.”

“உன்னை...” என பல்லைக்கடித்து மறுபுறம் படுத்தான்.

சிறிது நேரம் தூக்கமில்லாமல் அருகிலிருக்கும் மனைவியையும் நெருங்க முடியாமல் உழன்றவன், “ஹ்ம்... முன்னாடி காலத்துல எல்லாம், தலைவனை எண்ணி தலைவிதான் வாடுவாங்கன்னு படிச்சிருக்கேன். இங்க என்னடான்னா, அப்படியே ரிவர்ஸ்ல நடக்குது. கலிகாலம்ன்றது இதுதானோ?” சன்னமான குரலில் புலம்பியபடியே தூங்கிப் போனான்.

திரும்பிப் படுத்திருந்தாலும் கணவனின் அசைவுகளுடன், அவன் புலம்பலும் கேட்டு, “இருந்தாலும் என் புருஷன் இம்புட்டு நல்லவனா இருக்கக்கூடாது.” அவனின் அவஸ்தையை ரசித்து அவனின் உறக்கத்தை உறுதி செய்து, கணவனன் அகில் சென்று கடிகாரத்தையே பார்த்திருந்தவள், நேரம் சரியாக பனிரெண்டைக் காட்ட, கலைந்த நெற்றி முடியை விலக்கி, தன் முதல் முத்தத்தை பதித்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்” என்றாள்.

மனைவியின் முதல் முத்தத்தில், சித்தம் தடுமாறும் நிலையில் அவனில்லையே. மெல்ல மீசையை திருகியதும், அவனிடம் அசைவை உணர்ந்து விலகுமுன், அவன் கைவளைவிற்குள் இருந்தாள்.

“அந்தப்பொண்ணு நீதான்டி செல்லம்” என்று உறக்கத்தில் உளறியவனை, உற்சாகமாக கட்டிக்கொண்டாள் அவனின் அழகி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top