• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
23



சமையல் முடித்து சாப்பிட்டு படுக்கப் போகும்போது “மொழி அவங்களை என்ன பண்ணலாம்?” எனக்கேட்டான்.

“எவங்களை?”

“உன் எதிரிகளை.”

“அவங்களை நீங்க ஏன்?”

“உனக்காகத்தான்மா. பழிவாங்குறது லட்சியம்னு சொல்ற? அதுக்கான ப்ளான் பண்ணியிருக்கியா? ப்ளான்னா எந்த மாதிரி? உன்னைச் சார்ந்தவங்களைக் கொன்ன மாதிரி வெட்டியா? இல்ல துப்பாக்கியாலா? இல்ல அடிச்சேவா? எதுனாலும் சொல்லு செய்திரலாம்.”

“அவங்களைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போகவா? அவங்க அளவுக்கு நாம மிருகமில்லை.”

“பழிவாங்குறதுதான உன்னோட லட்சியம். அதுக்காகத்தான புருஷனையே வேண்டாம்னு வந்து உட்கார்ந்திருக்க? எப்படி செய்யுறதுன்னு சொல்ல வேண்டியதுதான?” என்றதும் அடிபட்ட பார்வை பார்க்க... அவனோ, “ஆமா இப்படிப் பார்த்துட்டேயிரு” என முனகினான்,

“நான்தான் சொன்னேனே இளா அத்தான் வருவாங்க. அவங்க எது செஞ்சாலும் எனக்குச் சம்மதம்னு.”

“ஏன் அவன் ஜெயிலுக்குப் போகமாட்டானா? யாராயிருந்தாலும் கொலை செய்தா களி திங்க வேண்டியதுதான்.”

“ஒருத்தனைக் கொலை செய்தா மட்டும்தான் சாகடிக்க முடியுமா? உயிரோட இருக்கணும். ஆனா, இருக்கக்கூடாது. செஞ்ச துரோகத்தை நினைச்சி காலத்துக்கும் கண்ணீர் விடணும். எனக்கும் கொலைவெறி இருந்ததுதான். இப்ப குறைச்சிக்கிட்டேன்.”

“அப்ப போலீஸ்ல பிடிச்சிக் குடுத்திரலாமா?”

“அடுத்த நாளே வெளியில் வந்திருவாங்க பரவாயில்லையா?”

“அப்ப மிஸ்டர்.இளநாதன் வந்தாதான் சரியாகும்னு நம்புற?”

“நிச்சயமா. அதுல எப்பவும் சந்தேகம் வந்ததில்ல.”

“சரி நீ போய்ப்படு டைமாகுது.”

“நீ... நீங்க...” கோவித்துக் கொண்டானோ என்ற தவிப்பு அவளிடம்.

“மங்கை உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றான் கண்ணடித்து.

“யாருங்க?”

“காத்திரு ஏர்போர்ட்!”

“இளா அத்தான் கிடைச்சிட்டாங்களா?” என்றாள் ஆர்வமாய்.

“ஏய் கற்பனை பண்ணாத. அவர் கிடைச்சா நீ என்னோட வர்றேன்ன பிறகு, நான் எப்படி கூட்டிட்டு வராமல் ஆட்டம் காட்டுவேன். நிம்மதியா தூங்கு போ.”

“ம்... நீங்க?”

அவளின் தயக்கம் உணர்ந்து, “நான் இங்கயே படுத்துக்கறேன். நான் இல்லாத நாள்ல எப்படி படுத்தியோ அதையே பாலோ பண்ணு.”

“தனியா படுத்தாலும் நான் தூங்கினேன்னு பார்த்தீங்களா?”

“பார்க்கலைதான்மா. தேவையில்லாத கற்பனைகளை ஏன் வளர்க்கணும். எப்படியும் இளநாதன் வந்தால்தான் வருவேன்னுட்ட. இப்ப சூழ்நிலையில நான் வெளியில காத்திருக்கலாம். உள்ள வந்தா என்னோட ஒய்ஃப் தானேன்னு மனசு சஞ்சலப்படும். அதிரடியா எதாவது பண்ணிட்டேன்னா!”

“ஐயோ! ஏன் இப்படிப் பேசுறீங்க?”

“உண்மையைச் சொன்னேன்மா. நீ உள்ள போ. சித்தி வெளியில படுத்துக்க பாய் தலகாணி குடுங்க” என்றான் சத்தமாக.

“அத்தை தேவதானம்பட்டி போயிருக்காங்க.”

“எப்ப? சாப்பிடும்போது நம்மளோடதான இருந்தாங்க?”

“நீங்க பாத்ரூம்ல இருந்த சமயம் பிரஷாந்த் வந்து கூட்டிட்டுப் போயிட்டான். காலையில வர்றதா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. நான்தான் மறந்துட்டேன்.”

“ஹ்ம்.. அவங்க ப்ளான்லாம் நல்லாதான் போடுறாங்க. இங்கதான் எந்த மாற்றமும் இல்லையே. சரி பாய் இல்லன்னா பெட்ஷீட் குடு?”

“உள்ள ஹால்ல படுக்கலாம்ல?”

“வேணாம் இதுவே பெஸ்ட். சப்போஸ் உன் கனவுல நான் வநதால் கூட அடிச்சி வெளில அனுப்பிரு. அட பாய் இங்கயிருக்குதா. பார்றா எல்லாம் செட்டா எடுத்து வச்சிருக்காங்க. கதவை உள்ள பூட்டிக்கோ. குட் நைட்” என்று பாயைப்போட்டு பெட்ஷீட் விரித்து, தலையணை போட்டு அப்படியே கால்மேல் கால்போட்டவன் வாயாலே மியூசிக் போட்டு...

காற்றுக்குத் தூதுவிட்டு கவிதைகள் பாடச்சொல்லு

நிலவுக்குத் தூதுவிட்டு தீபங்கள் ஏற்றச்சொல்லு

யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை

கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை

மெல்ல கதவடைத்து உள்ளே வந்தமர்ந்து நகம் கடித்தபடி கதவையே பார்த்திருந்தாள் திருமொழி.

மார்புக்குத் திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே.

என் வயதையும்
வதைக்காதே.

எல்லா மொழிக்கும்
கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை!

பாடலின் வரிகளும் இடையிலான வரிகளைக் கேட்ட மங்கையவளோ சடாரென கதவைத் திறக்க, இளங்கதிர் அவளைக் காண, அவளோ கண்களால் ‘ஏன்?’ என்பதாய்ப் பார்த்தாள்.

கண்ணால சொல்லுற
கையால சொல்லுற

ஓகேன்னு மட்டும்
சொல்ல மாட்டேன்னுற

நீ ஓகேன்னு மட்டும்
சொல்ல மாட்டேன்னுற

“என்ன மேடம் தூக்கம் வரலையா? ஐயாவோட பாட்டைக் கேட்க ஆவலாய் வந்திருக்கீங்க போல?”

“ஆமா பாட்டைக் கேட்டு வர்றாங்க. இப்படிக் கத்திக்கிட்டிருந்தா எப்படி தூங்குறதாம்?”

“என் பாட்டைக் குறை சொல்கிறாயா?” என் திறமையைக் காட்டுகிறேன் பார்.

பாட்டும் நானே..

பாடும் இளங்கதிரும் நானே

தூங்கும் உனை நான்

வெளியே வரவைத்தேனே!

பாட்... ‘ம்..ம்..’ வாய் திறக்க முடியாமல் திணற...

“அடுத்த லைன் வெளியில வந்தது குரல்வளையைக் கடிச்சிக் குதறிருவேன் ஜாக்கிரதை. பக்கத்துல உள்ளவங்க என்னமோ ஏதோன்னு பார்த்துட்டு பயந்து போறாங்க. முதல்ல உள்ள வாங்க.”

“ம்கூம்.. நான் மாட்டேன்” என வீம்பு செய்ய...

“ப்ச்... அடம்பிடிக்காம வாங்க. உங்களை நான் எதுவும் செய்யமாட்டேன்.”

“நீ எதுவும் செய்யமாட்ட. நான் எதாவது செய்துட்டா?”

“நீங்க அவ்வளவு நல்லவன் கிடையாது. சோ, ப்ளீஸ் கம்.”

“அப்ப நான் நல்லவனாகுறேன்” எனவும், மனைவியின் முறைப்பில் “எல்லா பெண்களுக்கும் நல்லவனைத்தான் பிடிக்குமாம்.”

திடீரென்று திருமொழி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“என்ன தேடுற ஏர்போர்ட்?”

“இல்ல. அவசரத்தேவைக்கு வேணும்னு இங்க ஒரு கம்பு வச்சிருந்தேங்க. எங்க போச்சிது தெரியல.”

அவள் சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் தானும் தேடியபடி, “இரு நான் பார்க்கிறேன். ஆமா. ஏன் இப்பக் கேட்கிற? இதோ இருக்கே” என்று எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஒரு நல்லவனை அடிக்கிறதுக்கு” என்றதில் நீட்டிய கம்பை தூக்கி விட்டெறிய, “அதைவிட்டா கையில்லையா” என விரட்ட... அவளைத் தாண்டி வீட்டினுள் நுழைந்தவன் அவளிடமிருந்து தப்பித்தபடியே கதவைப் பூட்டி அப்படியே நின்றான். சிரிப்புடனேயே அடிக்கக் கை ஓங்கியவள் கணவன் பார்வைதனில் உறைந்து போக... “ஹேய் மங்கை அடிக்கலையா?” ஹஸ்கியாகக் கேட்ட குரலில், ‘ஹான்’ என விழித்தபடி நின்றாளவள்.

அவள் கையைப் பிடித்து, “இப்படி அந்தரத்துல நிற்காம அப்படியே அடிக்கணும்” என்று தன் கன்னத்தில் வைத்தான்.

“நா..நான் தூங்கப்போறேன்” என்று கையை உருவிச்செல்ல, தன்னிடமிருந்து விலகிய கையை பிடித்து நிறுத்த முயற்சித்ததில் அவளின் கால்கள் தடுமாற, மற்றொரு கையையும் பிடித்து நிறுத்தி, “என்ன அவசரம் மங்கை? நான் உன் புருஷன்தான்.”

‘அதான பயமாயிருக்கு. மத்தவனாயிருந்தா தொட்டா வெட்டிரலாம். தாலி கட்டினவனை...’ தன்னை மீறிய பயம் அவளுக்குள். தன் காதலை உணர்ந்ததால் வந்த தடுமாற்றமோ! “கொஞ்சம் விடுறீங்களா? எனக்கு ஒரு மாதிரியிருக்கு.”

“அடிப்பாவி! எங்கெங்கயோ கை வச்ச மாதிரி இத்தனை சீனா? கையைத்தானடி பிடிச்சேன். இப்படி இடுப்பைப் பிடிச்சேனா?” என்று அவளின் இடது கையைவிட்டு, தன் வலக்கையால் அவளின் இடுப்பை வளைத்து, “இப்படிக் கட்டிப்பிடிச்சேனா?” முடியு முன் அவளை மொத்தமாய் அள்ளியணைத்து, “இல்ல இப்படிக் கிஸ்தான் பண்ணினேனா?” நெற்றி கன்னம் என்று முத்தமிட்டு, “இந்த நல்லவனைப் பிடிச்சிருக்கா?” என்றான் கிசுகிசுப்பாய்.

அந்த அணைப்பில் திணறியவள் பலம் கொண்ட மட்டும் அவனை விலக்கி தன்னறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.

“ஹேய் ஏர்போர்ட்! விடு நான் கெட்டவனாகவே இருந்திருறேன்” என சத்தமாகச் சொல்ல, அவளிடமிருந்து பதிலில்லை என்றதும் அங்கு ஓரமாகயிருந்த மடக்குக் கட்டிலை எடுத்துப்போட்டுப் படுத்தவனின் கால்கள், முட்டிக்குக் கீழ் பாதி வெளியே தொங்கியது.

“மொழி கட்டில் ஏன் சின்னதாயிருக்கு? உன் ஹைட்டுக்கு ஏத்த மாதிரி வாங்குனியா? ஏன் பதில் பேசமாட்டேன்ற? இங்க பார் மொழி என் கால் வலிச்சா நீதான் அமுக்கிவிடணும். மொழி இந்தக் கட்டில் குத்துது பாரேன். மொழி சிங்கிள் காட்தான். அதுக்காக திரும்பிப் படுக்க முடியாத அளவாவா இருக்கணும். வீட்டுக்கு வந்த மருமகனை இப்படி டார்ச்சர் பண்ணக்கூடாது. இந்தியத் தொல்லைக்காட்சியில் முதல்முறையாக கணவனை டார்ச்சர் செய்த மனைவின்ற புகழ் உனக்குத்தான் போ. மொழி ஹையோ கால் வலிக்குதுடி. என்னன்னு பார்க்கமாட்டியா? போடி புருஷன் மேல கொஞ்சமும் கோவம் வரல உனக்கு” என்றான் சலிப்பாக.

உள்ளே அவளோ விழுந்து விழுந்து சிரித்தாள். ‘காமெடி பண்ணினா கோவம் வருமா கதிர் அத்தான். இது தெரியாமல் போச்சே.’ அவள் கணவனின் அலம்பல்கள் அதிகமாகிக் கொண்டே போனது.

“மொழி போ நான் கார்லயே படுத்துக்கறேன். உன் கனவுல பேய் பிசாசோட கொசுவும் வந்து பிடுங்கட்டும். அப்ப என்னைக் கூப்பிடுவதான அப்ப இருக்கு உனக்கு. போ நான் போயிட்டேன்” என்று கதவருகில் சென்றவன் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தான்.

அறை வாயிலில் இரு கைகளையும் குறுக்கே கட்டி, சின்னப் புன்னகையுடன் பார்வையைத் தன்மேல் பதித்து கண்களும் சேர்ந்து கேலிப்புன்னகை செய்தபடி நிற்கக்கண்டு, மங்கையின் மணாளவன் மயங்கித்தான் போனானோ! ‘என்ன பொண்ணுடா! சே இது நிறைய சினிமாவுல சொல்லிட்டாங்க. நாம வேற யோசிக்கலாம்’ என்று அவசரமாக யோசித்தவனுக்கு மனைவியின் பெயருக்கான அர்த்தம் விளங்க ‘என்ன மங்கைடா!’ என்றான் மனதினுள்.

இமைக்காமல் அவன் பார்த்த பார்வைதனில் மங்கையவளோ நாணம் வந்து தலைகுனிந்து, “உள்ள வந்து படுங்க” என்று மென்குரலில் அழைத்தாள்..

ஆச்சர்யத்தில் கதிரின் பார்வை விரிய மனதிற்குள் ஒரு அசத்தலான புன்னகை. “உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே? உள்ள இருக்கிறது பெரிய கட்டில் கிடையாது. ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணனும்?”

“பரவாயில்லை நான் இந்த சிங்கிள் கட்டில்ல படுத்துக்கறேன்” என்றதில் கதிரின் ஆர்வம் வடிய, கணவன் முகம் பார்த்தவளுக்கோ அளவிட முடியாத சிரிப்பு. அடக்கியும் அடங்காமல் அடம்பிடித்து வெளியே வந்தது.

“இதுக்கு நான் வெளியவே படுத்துப்பேன்” என்று கதவைத் திறக்கப் போனவனை ஓடிப்போய் தடுத்தவள், “எனக்குப் பயமாயிருக்கு. உங்க கையைப் பிடிச்சிக்கிட்டுத் தூங்கவா?” என தலைசாய்த்துக் கேட்க.,

மனைவியின் அச்செய்கையில் மயங்கி ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ மனமதில் சந்தோஷ சிறகு விரித்தாட, ‘ரொம்ப வீம்பு செய்தா வேலைக்காகாது.’ நினைத்த நொடி “ம்.. நீ பயப்படுவியேன்னு வர்றேன்” என்றான் கெத்தாய்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
வெளியில் விரித்திருந்த பாய் தலையணையை எடுத்து உள்ளே போட்டாள்.

“அதை காலையில எடுத்திருக்கலாமே மங்கை?”

“இல்லங்க. நாம படுக்கலன்னா பாய் பெட்ஷீட் எதுவாயிருந்தாலும் மடிச்சிரணும். இப்ப வந்திரலாம்னு அப்படியே விடக்கூடாது. அப்படியே போட்டா காத்து கருப்பு அதுல தங்கும்னு பெரியவங்க சொல்வாங்க.”

“அதுவும் இது கிராமம் வேறயா. இருக்கா இல்லையான்றதைத் தாண்டி ஏதோ இருக்குது. சில விஷயங்கள் மூடப்பழக்கவழக்கங்களா தோணலாம். ஒரு நல்ல பழக்கவழக்கம்னு நினைச்சாவது அதை அக்செப்ட் பண்ணிக்கலாமே. என்ன கெட்டுடப்போறோம். எதிர்வாதம் பண்ணி எதையும் சாதிக்கப் போறதில்லையே. பெரியவங்க சொன்ன இட்டுக்கதைகள்ல கூட கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு நல்லது இருக்கும்.”

“ஓகேமா நான் ஒத்துக்கறேன்.”

“சரி படுங்க. லைட் ஆஃப் பண்ணிட்டு வர்றேன். உங்களுக்கு பால் எடுத்துட்டு வரவா?”

“ஸ்பெஷல்னா ஓகே! சாதா பால்னா.. ம்கூம்...” என தலையசைக்க... கணவனை முறைத்து விளக்கை அணைத்து வர கட்டிலில் இடம் ரொம்பவே கம்மியாகயிருந்தது.

“என்ன ஏர்போர்ட், பேசாம இவனை கார்லயே படுக்க விட்டிருக்கலாம் தோணுதா?”

“ம்... ம்கூம்” என தலையசைத்தாள்.

“படுமா என் கற்புக்கு நானே கியாரண்டி.”

“வாட்?”

“அட வா புள்ள!” அவளின் கைபிடித்து இழுத்து படுக்க வைக்க...

‘என்னது புள்ளயா? அட அத்தான். ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துட்டு ஊர்ல இல்லாத வாய் பேசுறீங்க?’

“அதெல்லாம் இருக்கிற வாயாலதான் பேசுறோம்” என்றதில் சட்டென்று உள் மனதிற்கு கேட் போட்டு அவன் கையை விடாமல் பிடித்தபடி கண்களை மூட... மனதின் கேட் மெல்ல திறந்து, “பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துலயிருந்தா பத்திக்குமாமே? ஏன் பத்திக்கல?” என கேட்டாள்.

“ம்... நெருப்புன்னு சொன்னா பத்திக்காது. கொளுத்திப் போட்டால்தான் எப்படிப் பத்திக்குதுன்னு தெரியும். கொளுத்திப் போடுறதுன்னா, ரொமான்ஸ் பண்றது. பத்திக்க நான் ரெடி” என்றான் அவளின் அதிர்ந்து விழித்த கண்பார்த்து.

அவளோ தன் மனதின் கேட்டை இழுத்து மூடி கண்களையும் மூட, சின்னதாகச் சிரிப்ப அவனுள்.

சில நிமிடங்கள் கரைந்த பொழுது, “ஒண்ணு கேட்கட்டுமா?” என்றாள்.

“கேளுமா!”

“அது நா..நான் உங்களை லவ் பண்றேனோன்னு பயமாயிருக்கு.”

“ஹா..ஹா இதென்ன வித்தியாசமான பயம்?”

“அ..அது இளா அத்தான் வராமலே போயிட்டா!”

சட்டென்று நின்றது கதிரின் சிரிப்பு. கையை அவளிடமிருந்து உருவ முயற்சிக்க... அவன் எண்ணம் புரிந்தவளோ பிடித்திழுத்து, “ப்ளீஸ் இருக்கட்டுமே” என்றாள் கெஞ்சலாக.

ஏனென்று தெரியாத ஒரு சோகம் அவன் மனதினுள். ஒரு கையை அவளுக்குக் கொடுத்து இன்னொரு கையை தலைக்குக் கொடுத்து வெறித்தபடி படுத்திருந்தான்.

“சாரி!” மெல்லிய குரலில் அவள் கேட்க...

“அப்ப இளநாதன்னு ஒருத்தன் இல்லாமலே போனா, நம்ம லைஃப் அவ்வளவுதான்ல மொழி?”

“எனக்கு என்ன சொல்றது தெரியலங்க. இத்தனை வருஷ தவம் ஒரு கல்யாணத்துல கலையுறதும் பிடிக்கல. அதே நேரம் உங்களை தவிக்கவிட்டு தனியா இருக்கவும் பிடிக்கல. நெஞ்சோரத்துல அப்பப்ப உங்க லைஃபைக் கெடுத்திட்டேனோன்ற வலியும் இருக்கு. இதையெல்லாம் மீறி இளா அத்தான் வந்திருவாங்கன்ற நம்பிக்கை முழுசாயிருக்கு.”

“ஒருவேளை இளநாதன் உயிரோட வந்து எதுவுமே செய்யலன்னா? அதாவது உன்னை மாதிரி அவர்கிட்ட லட்சியம் எதுவும் இல்லன்னா?”

“இருக்கும். இல்லாமல் போயிராது. அந்த சத்தம் இன்னும் என் காதுக்குள்ள கேட்டிட்டிருக்கு.”

“உன் நம்பிக்கை பலிக்கட்டும் மங்கை.”

“என் நம்பிக்கை பலிக்கலன்னா இன்னொரு அட்டெம்ட் பண்ணிருவேன்.”

“புரியல மங்கை. என்ன அட்டெம்ப்ட்?”

“நான் சொன்னா நீங்க என்னை வெறுத்துர மாட்டீங்களே?” அவள் கண்களில் புதிதாக ஒரு கலக்கம்.

“உன்னை வெறுக்கிறதா சான்ஸேயில்ல. என்ன கொலையா பண்ணிருக்கப்போற?” என்றான் சாதாரணமாக.

“அதான் நிஜம்” என்றதில் கதிர் அதிர்ந்து நம்பமுடியாமல் எழுந்தமர... கணவனின் அதிர்வில் மனம் சற்று சுணங்கினாலும், சில நிஜங்கள் இவனுக்கும் தெரிந்திருப்பது நல்லதுதான் என்றது மனது.

“நான் இரண்டு முறை கார்மேகம், ஜெயராமை கொலை பண்ண முயற்சி செய்தேன்” என்றாள் தான் செய்தது தவறில்லை என்பதாய்.

‘ஷப்பா! கொலை முயற்சிதானா?’ மனம் சற்று அதிர்வைக் குறைக்க “என்னால நம்பமுடியல மொழி. நீ எப்படி? அன்னைக்கு அவனைச் சாகடிக்குறது பிரச்சனையில்ல. ஆனா, வாழும்போதே சாகணும் சொன்னியே? இப்ப கேட்டப்ப கூட அதைத்தான சொன்ன?”

“அ..அது அவங்களை நேர்ல பார்த்தப்ப என் குடும்பத்தை அழிச்சிட்டு எப்படி அவன் உயிரோட இருக்கலாம்ன்ற ஆத்திரத்துல செஞ்சேன். அப்புறம் நிதானமா யோசிச்சப்ப ஏன் அவனைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போகணும். செஞ்ச கொலைக்கு அவன்தான போகணும்?”

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுமா?”

“பர்ஸ்ட் டைம் எப்பன்னா, காலேஜ் செகண்ட் இயர்ல சீஃப் கெஸ்டா ஜெயராம் வந்திருந்தான். அவனைப் பார்க்கிறதை என்னால தடுக்கவும் முடியல. காரணம் நான் சில ப்ரோக்ராம்கு ஹெட்டாயிருந்தேன். நேருக்கு நேர் நிற்கலன்னாலும் மேடையில் அவன் இருந்தது, அந்த அயோக்கியனுக்குக் கிடைத்த பாராட்டு, என்னால ஜீரணிக்க முடியல. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, பக்கத்துல உள்ள மெடிக்கல் ஷாப் கோகிலாவோட கசினோடதுன்ற நினைவு வந்துச்சி. அவள்கிட்ட போன் செய்து கெஞ்சின கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு பையன் டேப்லட் கொடுக்க அதை கூல்ட்ரிங்ஸ்ல ஆட் பண்ணிட்டேன். அவன் குடிக்கப்போற டைம் டான்ஸ் ஆடின ஒரு பொண்ணு மயங்கி விழுந்துட்டா. சோ, திட்டம் ப்ளாப்! அவன் சேஃப்!”

“செகண்ட் டைம். எம்.எல்.ஏக்கு ஓட்டு கேட்டு அப்பாவும் பையனும் வர்றதைப் பார்த்ததும் எல்லையில்லாத கோபம் வந்தாலும், எதுவும் செய்யத்தோணல. திரும்பத்திரும்ப அவன் சொன்ன நம்பினோர் கைவிடப்படார்ன்ற வார்த்தைகளால, ஒரு வெறி வந்தது. என்ன செய்யலாம்னு சுத்திலும் பார்த்து வில் அம்பு ரெடி செய்து, அதுல சின்னதா ஷார்ப்பா உள்ள கத்தியை பிட் பண்ணி விஷ மூலிகைச்சாறு தடவி, நெஞ்சிலடிக்க குறி பார்த்தேன்.”

“அப்பன் பையன் ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நிற்க, கார்மேகத்திற்கு குறி பார்த்தேன். சரியாதான் போச்சி அந்த நேரம் பார்த்து கார்மேகம் விலக ஜெயராம் கையை உரசிட்டுப் போயிருச்சி. அதுவும் ப்ளாப்பாகிருச்சி. அன்னைக்கு நியூஸ் ஃபுல்லா கொலை முயற்சி. மயிரிழையில் உயிர் தப்பி விஷம் முறிக்க தீவிர சிகிச்சைன்னு போட, நான் செஞ்சதை எதிர்க்கட்சி சதின்னு அவனுக்கு சாதகமாக்கி நிறைய ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சிட்டான். அப்புறம் அவனை நேர்ல பார்க்கிற சந்தர்ப்பம் அமையல. நிஷாந்த் அண்ணா கல்யாணத்தோடதான் பார்த்தேன்.”

“ஆக நீ செய்த கெட்டது அவனுக்கு நல்லதா அமைஞ்சிருச்சி.”

“ப்ச்... நான் ஒண்ணும் கெட்டது செய்யல. அசுரனை அழிக்கிறதுக்குப் பெயர் கொலை கிடையாது. அது வதம்!”

“வாஸ்தவம்தான்!”

“உங்களுக்கு என்மேல வெறுப்பு வரலையா?”

“நீ செஞ்சதுக்கான காரணம் தெரியலன்னா கோபப்படலாம். உன்னுடைய இழப்பு அதிகம் மங்கை. உன்னோட ஒரிஜினாலிட்டி இல்லாம திருமொழின்ற பெயர்ல ஒழிஞ்சி வாழவச்சது அவங்கதான. இந்தக் கோவம்கூட இல்லன்னா எப்படி? உன்னோட சூழ்நிலைதான உன் அம்மாவுக்கும் கயலுக்கும். ஏன் அவங்க தன்னோட கோபத்தை வெளிப்படுத்தல?”

“அம்மா கயலோட வாழ்க்கைக்காக சராசரி லைஃப் வாழ்ந்திருப்பாங்க. கயல் அம்மாவுக்காகப் பார்த்திருக்கலாம். நேர்ல பார்த்த எல்லாருக்குள்ளேயும் அந்த நெருப்பானது இருக்கத்தான் செய்யும்.”

“புரியுது மங்கை. ரொம்பல்லாம் விளக்க வேண்டாம். அமைதியா தூங்கு.”

தன்னைப் புரிந்த கணவனின் அன்பில் தனக்கு மட்டும் ஏனிந்த போராட்டமென்று மனதினுள் சிறு வலியெடுக்கத்தான் செய்தது.

“ஆமா நீங்க என்னைப் பார்க்கவா வந்தீங்க?” கணவனின் இல்லையென்ற தலையாட்டலில் எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாத ஏமாற்ற உணர்வு அவளுள். “அப்ப இங்க ஏன் வந்தீங்க?” வருத்தத்தையும் மீறின கோபம் எட்டிப்பார்த்தது.

“அப்பா மதுரையில இடம் வாங்கியிருந்திருப்பாங்க போல. ரொம்ப வருஷமா அதைக் கவனிக்காததால, வேற யாரோ எடுத்துக்கப் பார்க்கிறதா கேள்விப்பட்டு சரிபண்ண அனுப்பினாங்க. சீக்கிரமே முடிஞ்சிட்டா உனக்கும் ஃப்ரீ.”

தனக்காக வரவில்லையென்றதில் எதையோ இழந்த தவிப்பு. ஒருவேளை பொய்யோ என்ற எண்ணமும் வர எதையெதையோ நினைத்தபடி, “நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்” என்றாள்.

“ஹ்ம் இருந்திருக்கலாம்தான். பட், டூ லேட்மா. இனி யோசிச்சி என்ன பண்ணமுடியும். உன்கிட்ட மட்டும்தான் ஆர் யூ ரெடி பேபி கேட்க முடியும்” என்றான் சோகமாய்.

“உங்களைத் திருத்தவே முடியாது” என்று சிரித்தபடி இரண்டு அடிகள் போட, மனம் சிறிது லேசானது போலிருந்தது.

காலை ஏழு மணிக்கெல்லாம் கதிரைத் தேடி வந்த பிரஷாந்த் அவனை கிளம்பச் சொல்ல, “எங்கடா?” என்ற அக்காவிடம், “எதுக்காக இங்க வந்தாங்களோ அதைச் செய்ய வேண்டாமா?”

‘அப்ப நிஜமாகவே வேற வேலையாகத்தான் வந்தாங்களா? நைட் தன்னை வம்பிழுக்கவே சொல்கிறான்’ என நினைத்தது தவறென்று புரிய மனம் கலங்க தன்னைச் சமாளித்து “சரி கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க டிபன் ரெடி செய்றேன் சாப்பிட்டுக் கிளம்பிரலாம்” என்றாள்.

“இல்லக்கா ஒருத்தரை மீட் பண்றதா சொல்லிட்டோம். சீக்கிரம் போனால்தான் பார்க்க முடியும். அப்புறம் இப்படி சோகத்தைப் பிழியாத மச்சான் வந்தது உனக்காக! உனக்காக மட்டும்தான்! அப்ப யாரைப் பார்க்கப்போறோம்னு கேட்காத. ஒண்ணே ஒண்ணு சொல்றேன்கா. உன் லட்சியம் நிறைவேற நாள் கணக்குதான் இருக்கு.”

“தம்பிப்பையா!”

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான். சீக்கிரமே நல்ல செய்தியோட வர்றோம்” என்றதும் அவளுக்கு அவன் சொல்ல வருவதின் அர்த்தம் புரிய இனம்புரியா பயம் திருவின் மனதை இம்சை செய்தது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top