• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
22


திருமண மண்டபம் முழுவதும் ஆள்கள் நிறைந்திருக்க, முந்தின நாள் வரவேற்பு வைத்து மறுநாள் காலையில் அபிஷேக், அபிநயா திருமணம் இனிதாக நடந்து முடிந்திருந்தது.

மாலையில் சரவணன், ஆராதனா கல்யாண வரவேற்பு களைகட்டியது. விருந்தினரை வரவேற்கஅபிஷேக், அபிநயா” ஜோடி நிற்க, அவர்களிடம் வந்த ராஜா, “அக்கா நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுக்குப் போயிட்டன்னா, எனக்கு யார் சாப்பாடு ஊட்டிவிடுவாங்க? தாலாட்டுப் பாடுவாங்க. பேசாம மச்சான்கிட்ட சொல்லி வரதட்சணையா என்னையும் கூட்டிட்டுப் போக்கா” என்றான்.

“டேய்! நீ படிக்க ஊட்டிக்குப் போனியே அப்ப நானாடா வந்து ஊட்டிவிட்டேன்? தாலாட்டுப் பாடினேன்.”

“அதெல்லாம் இறந்தகாலம். நீ நிகழ்காலத்துக்கு வந்து பதில் சொல்லுக்கா” என நின்றான்.

“எல்லாம் நேரம்டா. அந்த ராணியைச் சொல்லணும். உன்னைக் கண்டிச்சி வளர்க்க சொன்னா கேட்டாங்களா?”

“என்னடா நியாகுட்டி. அத்தையை அன்போட அழைக்கிற.”

“ஹான்! உங்க பையனை நான் வரதட்சணையா கூட்டிட்டுப் போகணுமாம்.”

அப்பொழுது அங்கே வந்த தேவி, “ஏன்டா அசோக்? நான் வரதட்சணை ஏதும் கேட்கலையே. நீ எனக்குத் தெரியாம கேட்டியா என்ன?”

“அச்சச்சோ! இல்லம்மா. எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது சொல்லிட்டேன். எனக்கு இந்த பிஃப்டி கேஜியே போதும்மா” என்று மனைவியின் இடையில் கைபோட்டு தன்னருகே இழுத்துக்கொண்டான்.

“மச்சான் அப்ப என் நிலைமை அவ்ளோ தானா?” என்று சோகமாய் சொல்ல, அப்பொழுது ஒரு பெண் சத்தமாக சிரித்தாள். திரும்பிப் பார்த்த ராஜா கண்ணில் ஒரு குட்டி தேவதை பட்டாள்.

அவன் பார்வையில் தவறாக நினைத்து விட்டானோ என்றெண்ணி, “சாரி. கேலி பண்ணிச் சிரிக்கலை. நீங்க சொன்ன பாவனை பிடிச்சிருந்தது. அதான் சிரிச்சிட்டேன். சாரி” என்றாள் திரும்பவும்.

அவளின் வெளிப்படையான பேச்சு மற்றவர்களுக்குப் பிடிக்க, “யார் இந்தப் பொண்ணு” என அபிநயா பார்த்தாள்.

அவளின் பின்னால் வந்தவர், “ஹலோ! நான் ராகவன்” என்றதும், சந்தோஷத்தில் மூவரின் முகமும் மலர்ந்தது.

“அங்கிள் நீங்கதானா? உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். உங்களாலதான் எங்க அண்ணியைக் காப்பாத்த முடிஞ்சதுன்னு அண்ணன் சொல்லியிருக்கான். எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க. க்ரேட் அங்கிள்” என்றாள் பாராட்டுதலாக.

“இது என்னமா பெரிய விஷயம். ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி.”

“ராஜா, அண்ணாகிட்ட அங்கிளைக் கூட்டிட்டுப் போ” என்று அனுப்பினாள்.

வரவேற்பு மேடை வந்து மணமக்களைப் பார்த்து, “உங்க ஜோடிப்பொருத்தமும் சூப்பர். குணப்பொருத்தமும் சூப்பர்” என்றதும், சரணும், ஆராதனாவும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தார்கள்.

“ஹாய் அக்கா! நான் ரியா ராகவன். அப்பா வாயைத் திறந்தாலே உங்க ரெண்டு பேர் புராணம் தான். உங்களைப் பார்க்கணும்னு ஆசையில அப்பாகூட கிளம்பி வந்திட்டேன்” என்றாள் பெண்.

“இப்ப ப்ளஸ் டூதான? அது முடிச்சி என்னமா பண்ணப்போற?”

“தெரியாதுக்கா. அந்த டைம் என்ன தோணுதோ தயங்காம செய்வேன். அதுக்காக இப்ப இருந்தே மண்டையை உடைச்சிக்க மாட்டேன்” என்று சிரித்தாள்.

“அங்கிள் உங்க பொண்ணோட யதார்த்தமான பேச்சு எனக்குப் பிடிச்சிருக்கு. படிச்சி முடிச்சி மாப்பிள்ளை பார்க்கும் போது எங்க ராஜாவுக்கு உங்க பொண்ணைக் கொடுத்துருங்க” என்று தடாலடியாக ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள்.

சுற்றியிருந்த பெரியவர்கள், “ஆரா இருபது வயசுப் பையனுக்கு கல்யாணப் பேச்சித் தேவையா?” என்று முறைத்தனர்.

ராகவன் சற்றும் யோசிக்காமல், “உங்க வீட்டு மருமகளா வரணும்னா என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்மா. எந்தக் காலத்திலும் நான் மறுக்கமாட்டேன். பிள்ளைங்க விருப்பம் பொருத்து செய்யலாம்” என்றார் முழுமனதுடன்.

ஆராதனாவிடம் வந்த ராஜா, “அண்ணி செம ஸ்பீடு நீங்க” என்றான்.

“நீ லுக்கு விட்டதுலேயே தெரிஞ்சிதேடா. அதான் அப்ளிகேஷன் போட்டு வச்சிருக்கேன். முதல்ல லைஃப்ல செட்டிலாகு. அதுக்கு முன்னால அவ சின்னப்பொண்ணு. போன் பண்றேன், மெசேஜ் அனுப்புறேன்னு தெரிஞ்சது, மவனே, அப்ளிகேஷனைக் கிழிச்சிப்போட்டுருவேன்” என்றாள்.

“அச்சோ! அண்ணி நான் சின்னப்பையன். எனக்கு இன்னும் வருஷமும், வயசும் இருக்கு. இனிமேல் அந்தப் பொண்ணை எங்க கல்யாண டைம்லதான் பார்ப்பேன்னு, உங்களுக்கு வாக்குறுதி தர்றேன்” என்று சத்தியம் செய்து கொடுத்தான்.

அவர்களின் பேச்சு அருகிலிருந்த சரணுக்கும், அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்த ரியாவுக்கும் கேட்டது. அவளின் மனதில் நிம்மதி தோன்ற, தானும் அந்த சத்தியத்துக்குக் கட்டுப்பட முடிவெடுத்தாள்.

“தனு! ஏழு வருஷம் கழிச்சி நடக்கப்போற கல்யாணத்துக்கு, இப்பவே அப்ளிகேஷன் போடுறியே? உன்னோட உடன்பிறப்புக்கு என்ன பண்ணப்போற? என்றவனிடம் “அதுவா மச்சான். என்னையே பார்த்துட்டு இருக்காம முகம் திருப்பி பாருங்க. ஒரு பேமிலி வர்றாங்கல்ல, அவங்க தான் கீத்துவோட உட்பி பேமிலி” என்றாள்.

“ஹேய் தனு! எப்படி இதெல்லாம்?”

“அது அப்படித்தான் மச்சான். ஆனா, வரவழைச்சதோட என்னோட வேலை முடிஞ்சது. இனி டேட் பிக்ஸ் பண்றது, இத்யாதிகள் எல்லாம் உங்களோடது.”

அவர்கள் அருகில் சென்ற சரண், அவர்களை வரவேற்று வீட்டுப் பெரியவர்களிடம் அழைத்து வந்து, “மாமா எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்?” என்று கேசவனிடம் கேட்க,

“இன்னும் மூனுமாசம் கழிச்சி வச்சிக்கலாம் சரவணா” என்றதும் செல்வலட்சுமி மற்றும் அனைவரும் சம்மதமாக தலையாட்டினார்கள்.

மாப்பிள்ளையிடம் வந்து, “என்ன ப்ரதர் கீர்த்தனாவைப் பார்த்திருக்கீங்களா? பார்க்கணுமா?” என்ற சரணிடம்,

“எங்க ப்ரதர்? பொண்ணு போட்டோன்னு ப்ளஸ் டூல எடுத்த யூனிபார்ம் போட்ட போட்டோவைக் கொடுத்தாங்க. சரி ஒரு வருஷம் கழிச்சிதான் கல்யாணம்னு சொன்னோமே, பொண்ணையாவது ஒரு தடவை காட்டுவாங்கன்னு பார்த்தா... ம்... எங்க? எனக்கு கல்யாணத்தன்னைக்குத் தான் காட்டுவாங்க போல தெரியுது” என்று ஏக்கப்பெருமூச்சு விட்டான்.

“ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க. பொண்ணோட வர்றேன்” என்று கீர்த்தனாவைத் தேட கிடைக்காததால், மனைவியை கைபேசியில் அழைத்தான். அவனின் அருகிலேயே இன்னொரு கைபேசியில்,

எந்தன் உயிரே எந்தன் உயிரே

கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்

நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே.

சொல்லாமல் என்னை எடுத்தாய்

பதிலாக உன்னைக் கொடுத்தாய்.

உலகத்தின் பூக்களே

உயிரிலே பூத்ததே.

உன்னருகே நானிருந்தால்

தினம் உன்னருகே நானிருந்தால்.

பாடல் முடியும் வரை கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா, முடியும் வேளையில் எடுக்க, எதிரில் கட்டானது. திரும்பிவள் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனின் பார்வையில் வெட்கப்பட்டு, “என்ன பார்க்குறீங்க?” என்றாள்.

அவளருகில் வந்த சரண், “தனு இந்த ரிங்டோன்” என்றவன் அவளின் கைபேசியை வாங்கி தன் எண்ணுக்கு அழைத்தான். அதிலும் அந்த பாடலே ரிங்டோனாக வர, “நமக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப ஒர்க் அவுட் ஆகுது செல்லம்” என்றான்.

“ம்...” என்று ஆமோதிப்பாக தலையசைத்தாள். அவளுக்குமே ஆச்சர்யம் தான் ‘எப்படி?’ என்று.

பின் சுதாரித்து, “கீர்த்தி எங்க?” என்று கேட்டு, சில நிமிடங்களில் சரண் ஆராதனாவுடன் வந்தான்.

“இதான் பொண்ணா ப்ரதர்?” என்று ஆராதனாவை நோக்கி செந்தில் கைகாட்ட,

“அடப்பாவி! விட்டா என்னையே காலி பண்ணிருவ போல. உன் ஆளப் பார்க்கச் சொன்னா, என் ஆளக் கைகாட்டுறீங்க?” என்றான்.

“ஹா...ஹா... ப்ரதர் கைநீட்டுனது உங்க மனைவியைப் பார்த்து இல்லை. பின்னாடி வந்த என் ஆளப் பார்த்து” என்று சத்தமாகச் சிரித்தான்.

“பேருக்கு ஏத்தமாதிரி தான்யா வேலையும் செய்யுறீங்க” என்றான் அவனின் செந்தில் பெயரைக் குறிப்பிட்டு.

கீர்த்தனாவிடம் கைநீட்டி, “ஹாய்! ஐம் செந்தில். சென்னை ஐஎல்சி பேங்க்ல மேனேஜரா இருக்கேன்” என்று கைநீட்டினான்.

அதுவரை அவனை ரசித்துக் கொண்டிருந்த கீர்த்தனா, அவன் பெயரைக் கேட்டதும், “அச்சோ! அத்தான். நான் செந்தில்ன்ற பேர் உள்ளவங்களைக் கல்யாணம் பண்ணமாட்டேன். எல்லாரும் என்னைக் கிண்டலடிப்பாங்க” என்றாள்.

“அடிப்பாவி! பேரையா கட்டிக்கச் சொன்னோம். ஆளைத்தான? என்று ஆராதனா ஆரம்பிக்க,

“செந்தில்ன்ற பேர் வச்சதுக்கு அவர்தான் பயப்படணும். நீ இப்பவே கவுண்டமணி மாதிரி கௌண்ட் கொடுக்குற. உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கப் போறாரேன்னு நாங்க பயத்துல இருக்கோம்.”

“ஓ... அப்படீன்றீங்க. அப்ப எனக்கு ஓகே.”


“ஷப்பா! நான் ஒரு நிமிஷம் ஆ...ஆடிப்போயிட்டேன்” என்று செந்தில் சொன்னதும் சிரிப்பொலி கிளம்பியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஒருவழியா கீத்துகிட்ட மாட்ட ஒரு ஆள் கிடைச்சாச்சா?” என்று வேதவல்லி வந்தாள்.

“என்னடா ஒரு ஆள் குறையுதேன்னு பார்த்தேன். ஒருத்தரைக் கலாய்க்கணும்னா ஆஜராகிருவீங்களே.”

“அப்ப என்னைக் கணக்குல சேர்க்கலையா” என்று அபிநயா வர,

கீர்த்தனாவோ, “வாங்க வாங்க. இப்ப உங்க நேரம் நான் மாட்டிக்கிட்டேன். ஸ்டார்ட் மியூசிக்” என்றாள்.

“அதெப்படி அக்கா, தங்கச்சி ரெண்டு பேருக்கும் முருகன் பெயர்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்கு. தவம் எதுவும் இருந்தீங்களா என்ன?”

“தெரியலையேமா.” என்று கோரஸ் குரல்கள் வந்தது.

இவர்களின் கலாட்டாவின் நடுவில் வந்த சக்தி, “சாரி ஆரா. டைம் ஆகிருச்சி” என்றாள்.

அவளை முறைத்த ஆராதனாவிடம், “ப்ளீஸ் முறைக்காத ஆரா. நிஜமாகவே லேட்டாகிருச்சி.”

“இட்ஸ் ஓகே சக்தி. எங்கடி உன்னில் பாதியானவனைக் காணோம்?”

“அதை உனக்கே மட்டுமானவன்கிட்ட கேளு” என்று பதிலுக்கு கேலி செய்தாள் சக்தி.

கணவனைத் திரும்பிப் பார்த்த ஆராதனாவிடம், “அவங்களோட பாதி எங்கடா போவான். அங்க நல்லா பாரு” என்றதும் திரும்பியவள், சக்தியின் பின்னால் நின்றிருந்த சிவாகுமாரைப் பார்த்து, “கடைசி வரை இப்படியேத்தான் இருக்கப் போறீங்களா சார்?” என்றாள்.

“அப்படில்லாம் இல்லங்க ஆராதனா. ரெண்டு வருஷமா தெரியாம சுத்தியே பழகிட்டேனா. பழக்க தோஷம் விடமாட்டேன்னுது.”

“கல்யாணத்துலயாவது பக்கத்துல வந்து நிற்க முயற்சி பண்ணுங்க சார். இல்லன்னா, கேப்ல யாராவது வந்து கெடா வெட்டிரப் போறாங்க.”

“அச்சச்சோ! நான் இனி இவள் பக்கத்துலயே நிற்கிறேன்” என்று சக்தியின் அருகில் அவள் தோள்மீது கைபோட்டு நின்றான்.

“ரொம்பத்தான் தைரியம்” என்றதும் அனைவரும் கேலி செய்ய, அவர்களின் கலாட்டாக்களுடனும், அரட்டைக் கச்சேரிகளுடனும் திருமண வரவேற்பு நல்லபடியாக முடிந்து, அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

“மாமா கிளம்பலாமா?” என்று கேசவனிடம் சரண் கேட்க,

“கிளம்பலாம்பா சரவணா. எல்லாமே சரியா ரெடி பண்ணிட்டேன்.

“என்ன ரெடியாகிருச்சி? எங்க கிளம்பறீங்க?” என்று அனைவரும் கேள்வியாய் கேட்க,

“எங்க ஹனிமூன் கிளம்பறோம். ஊட்டி, கொடைக்கானல்னு கற்பனைக் குதிரையை ஓட்டாதீங்க. நாங்க போற இடம் நீங்க யாரும் கெஸ் பண்ணாத இடம். தூத்துக்குடி மாவட்டம் நத்தம் கிராமம். எங்க ஊருக்கு எங்க வீட்டுக்கு. எங்கம்மா வாழ்ந்த, வாழ்ந்திட்டு இருக்கிற ஊருக்கு” என்றான்.

அருகே வந்த வெற்றிவேல் மகனைக் கட்டியணைத்து, “அதைவிட வேற நல்ல இடம் இருக்காதுடா தம்பி” என்றார்.

“அதான்பா அங்க ஒரு இரண்டு வாரம் இருந்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம். யாருக்கெல்லாம் விருப்பமிருக்கோ, அவங்க ஒருவாரம் கழிச்சி வாங்கப்பா” என்றான்.

“ஏன்?” என்ற கோரஸ் குரல்கள் கேட்கவும்,

“சே... ஒருவாரம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன். அதுக்கும் ஏன்னு கேள்வியா?” என்றான் சலிப்பாக.

“அண்ணா நாங்களும் வர்றோம்” என்ற தங்கையிடம்,

“நீ இப்ப அசோக் கூட போயிட்டு, ஒன் வீக் கழிச்சி வாம்மா. மாப்பிள்ளை வீட்டு சார்புல எதாவது சம்பிரதாயம் இருக்கும். அங்கேயும் ரிலேடிவ்ஸ் இருப்பாங்க. அத்தையால பதில் சொல்ல முடியுமா? புரிஞ்சிக்கடா” என்றான் மென்மையாக.

“இல்ல நானும் வருவேன். எனக்கு அம்மாவோட ஆசீர்வாதம் வேணும். நீ கூப்பிட்டுப் போவியா? மாட்டியா? ஏய் அண்ணி? என்ன ஒண்ணும் சொல்லாம நிற்கிற? என்னைக் கூப்பிட்டுப் போகலாம்னு சொல்லு” என்றவால் குரல் கலங்க பிடிவாதமாக இருந்தாள்.

சரணோ அபிஷேக்கைப் பார்க்க, அவன் அப்பா, அம்மாவைப் பார்க்க, அவர்கள் தலையசைத்து சம்மதம் தெரிவித்ததில் சந்தோஷிக்க, “ஆனா, ஒன் கண்டிஷன்” என்று ஒரு க் வைத்தனர்.

“என்னம்மா ட்விஸ்ட் வைக்கிறீங்க?”

“அந்த ஊர் ரொம்ப அழகா இருக்கும்னு அப்பா சொன்னாங்க. அதனால, ரெண்டு நாள் கழிச்சி நானும் வருவேன். சம்மதம்னா நீங்க போகலாம். ரிலேடிவ்ஸ்கிட்ட என்னால சமாளிக்க முடியும்” என்றார்.

“நாங்களும் வருவோம்” என்று தொடர் குரல்கள் வர, சரணின் குடும்பமும், ஆராதனாவின் குடும்பமும் என்று மூன்று கார்களில் தூத்துக்குடி நோக்கி பயணப்பட்டார்கள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top