- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
22
கடிதத்தைப் படித்தபின் ராசியிடம் என்ன செய்து தன்னை, தன் காதலை உணர வைக்கலாம் என்ற யோசனைதான் அவனுக்குள்.
திருமணம் நடக்கும் பொழுதும் சரத் அவளையே பார்த்திருக்க, அவன் பார்வைத் தீண்டல் தன்னைத் துளைத்த போதும், அவன்புறம் திரும்பக்கூட இல்லை ராசி.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மன் முன் ராசிக்கு தாலிகட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் சரத். தாலி கட்டும் பொழுதே ‘இவளுடனான தன் வாழ்வு ஜென்மந்தோறும் தொடர வேண்டும்’ என வேண்டி தன்னவளுக்கு தன் மேலுள்ள கோவம் விரைவில் சரியாக ஒரு மனுவும் போட்டான் அந்த தாயிடம்.
ராசியின் வேண்டுதலும் சரத்தினுடையதே. இந்த பந்தம் ஜென்மந்தோறும் நிலைக்க வேண்டினாள். சிவராமனால் திருமணத்திற்கு வரமுடியாமல் போக, ராசியின் வீட்டிற்கு வந்து சின்னச்சின்ன சடங்குகள் முடித்து, பெரியவர்களிடம் ஆசிபெற்றார்கள். சிறிது நேரத்தில் நண்பர்கள் குழுவுடன் சரத் தன் அரட்டையை ஆரம்பித்தான்.
‘இங்க ஒருத்தி கடுப்புல இருக்கேன். இவங்களுக்கு இப்ப அரட்டை ரொம்ப முக்கியம்.’ மனதுக்குள் கணவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் ராசி.
ஓரக்கண்ணால் அவளைப் பார்த்திருந்தவன் அவளருகில் வந்தமர்ந்து தோள்மீது கைபோட்டு, “யூ லுக்கிங் ஸோ ப்யூட்டிஃபுல் பேபி. அப்படியே அசத்துற என்னை.” அவள் கூந்தலில் முகம் புதைத்து, “பூ வாசம் உன் மீது! உன் நேசம் என் மீது! ஷப்பா எப்படி ரைமிங்கா வருதுல்ல.” மனைவியின் முறைப்பை சட்டை செய்யாமல் “என்னடா நான் பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா மாமனைக் கண்டுக்க மாட்டேன்ற. முறைக்கிறதுலயே நேரத்தை ஓட்டாத செல்லம். இன்னும் எவ்வளவோ இருக்கு” என்று சரசமாகக் கண்ணடித்துக் கூறினான்.
ஆட்கள் அதிகம் இருந்ததால் நாகரீகம் கருதி பல்லைக் கடித்தபடி, “இப்ப நகர்ந்து போறீங்களா? இல்லையா?” என்றாள்.
“ராசி! இப்ப நான் உன் புருஷன்றத மறந்துட்டியா?”
“புருஷன்னா இருந்துட்டு போங்க. அதுக்கென்ன பண்ண முடியும். அதான் முறையா லைசன்ஸ் வாங்கியாச்சில்ல. இனி மாத்தவா முடியும்” என்று அவனை கடுப்படித்தாள்.
‘இவளை என்ன செய்யலாம்?’ என அவளையே பார்த்திருக்க...
“இந்த லுக்கெல்லாம் வேண்டாம். பேசாம போயி உங்க அரட்டையைக் கண்டினியூ பண்ணுங்க.”
‘ஓரமா இருந்தவனை கண்ணாலயே கூப்பிட்டு, இப்ப அரட்டையை கன்டினியூ பண்ணச் சொல்றா’ என பல்லைக் கடித்தவன், “எப்படியும் என்கிட்ட மாட்டாமலா போவ. அப்ப வச்சிக்கிறேன் உன்னை.”
“ஆமாமா. இங்க தாலியே கட்டியாச்சாம். இவங்க என்னடானா வச்சிக்கப் போறாங்களாம். போங்க சார் அதுக்கு வேற ஆளைப்பாருங்க” என்று கிண்டலடிக்க,
“ஏன்டா? உனக்கென்ன குறை. நான் வேற ஆளைப் பார்க்கிறதுக்கு. முதல்ல உன்னைப் பார்க்கிறேன்.” கண்கள் அவளை முழுவதுமாக அளவிட்டு கண்ணடித்து, சும்மா நச்சுன்னு இருக்க செல்லம். உன்னைப் பார்த்துட்டு அப்புறம்..” என நிறுத்தினான்.
“அப்புறம்” என்ற வார்த்தையில் அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க...
அதை உணர்ந்தவன், “அப்புறமும் உன்னையே பார்க்கிறேன் செல்லம்” என்றவன் அவள் அடிக்க வருமுன் எழுந்து ஓடினான்.
அவன் வார்த்தையின் அர்த்தத்திலும், அவன் சொன்ன விதத்திலும் வெட்கம் பிடுங்க தலையைக் குனிந்து சமாளித்தாள். அவளிடம் வந்த ப்ரீகுட்டி ராசிக்கு முத்தமிட நிமிர்ந்தவள், “என்னடா திடீர் முத்தம்?” என்று குழந்தையை தூக்கப்போக...
“அத்தை கீழே இறக்கி விடுங்க. மாமா உங்களுக்கு முத்தம் குடுக்கச் சொல்லிட்டு, அத்தைகிட்ட ஒண்ணு வாங்கிட்டு வந்து காண்பின்னு சொன்னாங்க” என்ற குழந்தையை ராசி தடுப்பதற்குள் சரத்திடம் சரணடைய, மனைவியைப் பார்த்துக் கொண்டே குழந்தையின் கன்னம் தொட்டு விளையாட அனுப்பிவிட்டு, அந்த விரல்களுக்கு முத்தமிட்டு அவளுக்கு அனுப்பினான்.
ஓர் இனம்புரியா தவிப்பு அவளுள் தோன்றி, அவளையும் அறியாமல் மெல்லிய சிரிப்புடன் ஒரு கிறக்கப்பார்வை கணவன் மேல் விழுந்தது. அந்த பார்வையில் கிறங்கியவன் கண்களில் கனவுகளுடன் அவள்புறம் வர... அதற்குள் சுதாரித்தவள் வேகமாக உள்ளே அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவள் பின்னே சென்றவனை, “மாம்ஸ் ஒரு நிமிஷம். அக்கா கூட அப்பறமா ஓடிப்பிடிச்சி விளையாடுங்க. இப்ப நான் கிளம்பறேன் அம்மாவை நைட் வந்து கூப்பிட்டுக்கறேன்.”
அவர்களின் சூழ்நிலை புரிந்தவன் “நான் யார்கூடவாவது அனுப்பி வைக்கிறேன்டா.”
“இல்ல வேண்டாம் மாம்ஸ். நானே வந்து கூப்பிட்டுக்கறேன்” என்று கிளம்பினான்.
அவன் சென்றதும் மணியிடம் வந்தவன் மஞ்சுவை மதுரைக்கு ட்ரெய்ன் ஏற்றிவிடச் சொன்னான். மஞ்சுவிற்கும் அன்று சரத் மதுரை வந்து தன்னிடம் பேசியதை ராசியிடம் சொல்ல மறந்து போனது. சொல்லியிருந்தால் ஒருவேளை ராசியின் பிரச்சனைக்கு முதலிலேயே முடிவு வந்திருக்குமோ என்னவோ!
இரவில் பேத்தியிடம் வந்த மீனலோஜினி, “ராசிமா இந்த கல்யாணம் கட்டாய கல்யாணம்னு நீ நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது என் பேத்தி விருப்பப்பட்ட கல்யாணம்.”
“ஆனா, அம்மாஆச்சி! சரத்கு என்னைப் பிடிக்கலையே” என்று வருத்தத்துடன் சொல்ல...
“அவனுக்கு உன்னைப் பிடிக்கும்னு உனக்கும் தெரியும். பிடிக்கலன்னாலும் இனிமேல் பிடிக்கவை. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேளு. கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டாலும் சரி. இல்ல பழசை மறந்துட்டு புதுசா வாழ்க்கையை ஆரம்பிச்சாலும் சரி. இப்ப உங்களுக்கு கல்யாணமாகிருச்சி ராசிமா. உங்க வாழக்கையை நல்லபடியா ஆரம்பிங்க. சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லணும் சரியா?” என்றார் அவள் தலை வருடி.
“அம்மாஆச்சி நீங்க ஓவர் ஸ்பீட் போறீங்க. நீங்க சொல்லி நான் என்னைக்கு மறுத்திருக்கேன். நீங்க கேட்டது சீக்கிரம் கிடைக்கும்” என்று லோஜிக்கு முழு நம்பிக்கை அளித்தாள்.
“ம்.. இது நல்ல பொண்ணுக்கு அழகு” என்று அவர்களுக்கான அறைக்கு அனுப்பினார்.
பாபுவும் மறுநாள் வருவதாக சொல்லி குடும்பத்துடன் கிளம்பினான்.
ரோகிணியை கிரி வந்து அழைத்துச் செல்ல, மீனலோஜினி, பாஸ்கர், சாந்தி மூவரும் சரத்தின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அறைக்குள் நுழையும் முன் ஆயிரத்தெட்டு யோசனைகள் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்து, ‘இந்த முடிவு சரிவருமா? அசிங்கமாச்சே!’ என்ற எண்ணம் ஆழப்பதிந்தது.
ஹேய் ராசாத்தி ரோசாப்பூ வாவாவா!
அடி ஏய் சீமாட்டி பூச்சூடி வாவாவா!
தேவதையே திருமகளே!
தேவதையே திருமகளே!
மாங்கனியே மணமகளே!
மாலை சூடும் குணமகளே!
ராசாத்தி ரோசாப்பூ வாவாவா”
பாடியபடியே ராசியின் அருகில் வர, அவளோ சட்டென்று பால் டம்ளரை அவன்புறம் நீட்டினாள். அதை ஒரு கையிலும் அவளை ஒரு கையிலும் சரத் பிடிக்க...
அவனை தடுத்து, “நானே வர்றேன்” என்று கட்டிலில் அமர... பால் டம்ளரைப் பார்த்தவன் முதலில் அதிர்ந்தாலும், பின் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இப்ப எதுக்கு இந்த சிரிப்பு சிரிக்கிறீங்க. பார்த்து வாய் சுளுக்கிக்கப் போகுது” என்று உதடு சுழித்தாள்.
“ஹா..ஹா.. வாய் சுளுக்கினா உன் வாயால சரிபண்ணிருடா செல்லம்.”
“அ..அதெப்படி முடியும்” என்று வேகமாய் கேட்க...
“முடியாதுன்னு எதுவும் இல்லமா. இரேன் சின்ன சாம்பிள் காட்டுறேன்” என்று டம்ளரை ஒரு கையில் பிடித்தபடி அவளை நெருங்கி அமர, அவனின் நெருக்கத்தை தவிர்க்க அவள் பின்னால் நகர... விடாமல் அவளை நெருங்கியவன், “ம்ம்.. பூ வாசனை சும்மா ஆளைத் தூக்குது” என்றபடி அவளின் முகத்தைப் பிடித்து, “எங்க போற? சுளுக்கை எடுக்கத்தான் டெமோ” என்று அவளின் இதழ்களை நெருங்குகையில்... விவரம் புரிந்து அவன் முகத்தை நகர்த்தி படக்கென எழுந்தவள் “எ...என்ன பண்றீங்க?” என படபடத்தாள்.
“சுளுக்குக்கு ஷாம்பிள் காட்ட வந்தேன். அதுக்குள்ள ஏன் எழுந்திட்ட?”
“ப்ச்.. நான் கேட்டது ஏன் சிரிச்சீங்கன்னு. என்னை டைவர்ட் பண்றீங்க நீங்க” என்று சற்று கோவமாகவே கேட்டாள்.
“ராசி இங்க வாயேன். ஒண்ணும் செய்யமாட்டேன். இங்க வா” எனவும் மெல்ல தயங்கி தயங்கி அவனைவிட்டு நான்கடி தள்ளி அமர... “இவ்வளவு தள்ளி உட்கார்ந்தா நான் காண்பிக்கிறது எப்படி தெரியும்? சரி சரி முறைக்காத. பர்ஸ்ட் நைட்கு பால் கொண்டு வருவாங்க கேள்விப்பட்டிருக்கேன். இதென்னமா புதுசா பூஸ்ட் கொண்டு வந்திருக்க? இதைப்பார்த்து சிரிக்காம என்ன செய்யுறது சொல்லு?” என அப்பாவியாகக் கேட்டான்.
“பூஸ்டா!” என ஆச்சர்யப்பட்டவளுக்குமே சிரிப்பு வர, சட்டென்று சிரித்து, ‘ஹையோ! அம்மாஆச்சி ஒரு சம்பிரதாயத்தையே எனக்காக மாத்திருக்கீங்களே. ஸோ ஸ்வீட்’ என மனதினுள் கொஞ்சினாள்.