• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
22


கடிதத்தைப் படித்தபின் ராசியிடம் என்ன செய்து தன்னை, தன் காதலை உணர வைக்கலாம் என்ற யோசனைதான் அவனுக்குள்.

திருமணம் நடக்கும் பொழுதும் சரத் அவளையே பார்த்திருக்க, அவன் பார்வைத் தீண்டல் தன்னைத் துளைத்த போதும், அவன்புறம் திரும்பக்கூட இல்லை ராசி.

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மன் முன் ராசிக்கு தாலிகட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் சரத். தாலி கட்டும் பொழுதே ‘இவளுடனான தன் வாழ்வு ஜென்மந்தோறும் தொடர வேண்டும்’ என வேண்டி தன்னவளுக்கு தன் மேலுள்ள கோவம் விரைவில் சரியாக ஒரு மனுவும் போட்டான் அந்த தாயிடம்.

ராசியின் வேண்டுதலும் சரத்தினுடையதே. இந்த பந்தம் ஜென்மந்தோறும் நிலைக்க வேண்டினாள். சிவராமனால் திருமணத்திற்கு வரமுடியாமல் போக, ராசியின் வீட்டிற்கு வந்து சின்னச்சின்ன சடங்குகள் முடித்து, பெரியவர்களிடம் ஆசிபெற்றார்கள். சிறிது நேரத்தில் நண்பர்கள் குழுவுடன் சரத் தன் அரட்டையை ஆரம்பித்தான்.

‘இங்க ஒருத்தி கடுப்புல இருக்கேன். இவங்களுக்கு இப்ப அரட்டை ரொம்ப முக்கியம்.’ மனதுக்குள் கணவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் ராசி.

ஓரக்கண்ணால் அவளைப் பார்த்திருந்தவன் அவளருகில் வந்தமர்ந்து தோள்மீது கைபோட்டு, “யூ லுக்கிங் ஸோ ப்யூட்டிஃபுல் பேபி. அப்படியே அசத்துற என்னை.” அவள் கூந்தலில் முகம் புதைத்து, “பூ வாசம் உன் மீது! உன் நேசம் என் மீது! ஷப்பா எப்படி ரைமிங்கா வருதுல்ல.” மனைவியின் முறைப்பை சட்டை செய்யாமல் “என்னடா நான் பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா மாமனைக் கண்டுக்க மாட்டேன்ற. முறைக்கிறதுலயே நேரத்தை ஓட்டாத செல்லம். இன்னும் எவ்வளவோ இருக்கு” என்று சரசமாகக் கண்ணடித்துக் கூறினான்.

ஆட்கள் அதிகம் இருந்ததால் நாகரீகம் கருதி பல்லைக் கடித்தபடி, “இப்ப நகர்ந்து போறீங்களா? இல்லையா?” என்றாள்.

“ராசி! இப்ப நான் உன் புருஷன்றத மறந்துட்டியா?”

“புருஷன்னா இருந்துட்டு போங்க. அதுக்கென்ன பண்ண முடியும். அதான் முறையா லைசன்ஸ் வாங்கியாச்சில்ல. இனி மாத்தவா முடியும்” என்று அவனை கடுப்படித்தாள்.

‘இவளை என்ன செய்யலாம்?’ என அவளையே பார்த்திருக்க...

“இந்த லுக்கெல்லாம் வேண்டாம். பேசாம போயி உங்க அரட்டையைக் கண்டினியூ பண்ணுங்க.”

‘ஓரமா இருந்தவனை கண்ணாலயே கூப்பிட்டு, இப்ப அரட்டையை கன்டினியூ பண்ணச் சொல்றா’ என பல்லைக் கடித்தவன், “எப்படியும் என்கிட்ட மாட்டாமலா போவ. அப்ப வச்சிக்கிறேன் உன்னை.”

“ஆமாமா. இங்க தாலியே கட்டியாச்சாம். இவங்க என்னடானா வச்சிக்கப் போறாங்களாம். போங்க சார் அதுக்கு வேற ஆளைப்பாருங்க” என்று கிண்டலடிக்க,

“ஏன்டா? உனக்கென்ன குறை. நான் வேற ஆளைப் பார்க்கிறதுக்கு. முதல்ல உன்னைப் பார்க்கிறேன்.” கண்கள் அவளை முழுவதுமாக அளவிட்டு கண்ணடித்து, சும்மா நச்சுன்னு இருக்க செல்லம். உன்னைப் பார்த்துட்டு அப்புறம்..” என நிறுத்தினான்.

“அப்புறம்” என்ற வார்த்தையில் அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க...

அதை உணர்ந்தவன், “அப்புறமும் உன்னையே பார்க்கிறேன் செல்லம்” என்றவன் அவள் அடிக்க வருமுன் எழுந்து ஓடினான்.

அவன் வார்த்தையின் அர்த்தத்திலும், அவன் சொன்ன விதத்திலும் வெட்கம் பிடுங்க தலையைக் குனிந்து சமாளித்தாள். அவளிடம் வந்த ப்ரீகுட்டி ராசிக்கு முத்தமிட நிமிர்ந்தவள், “என்னடா திடீர் முத்தம்?” என்று குழந்தையை தூக்கப்போக...

“அத்தை கீழே இறக்கி விடுங்க. மாமா உங்களுக்கு முத்தம் குடுக்கச் சொல்லிட்டு, அத்தைகிட்ட ஒண்ணு வாங்கிட்டு வந்து காண்பின்னு சொன்னாங்க” என்ற குழந்தையை ராசி தடுப்பதற்குள் சரத்திடம் சரணடைய, மனைவியைப் பார்த்துக் கொண்டே குழந்தையின் கன்னம் தொட்டு விளையாட அனுப்பிவிட்டு, அந்த விரல்களுக்கு முத்தமிட்டு அவளுக்கு அனுப்பினான்.

ஓர் இனம்புரியா தவிப்பு அவளுள் தோன்றி, அவளையும் அறியாமல் மெல்லிய சிரிப்புடன் ஒரு கிறக்கப்பார்வை கணவன் மேல் விழுந்தது. அந்த பார்வையில் கிறங்கியவன் கண்களில் கனவுகளுடன் அவள்புறம் வர... அதற்குள் சுதாரித்தவள் வேகமாக உள்ளே அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் பின்னே சென்றவனை, “மாம்ஸ் ஒரு நிமிஷம். அக்கா கூட அப்பறமா ஓடிப்பிடிச்சி விளையாடுங்க. இப்ப நான் கிளம்பறேன் அம்மாவை நைட் வந்து கூப்பிட்டுக்கறேன்.”

அவர்களின் சூழ்நிலை புரிந்தவன் “நான் யார்கூடவாவது அனுப்பி வைக்கிறேன்டா.”

“இல்ல வேண்டாம் மாம்ஸ். நானே வந்து கூப்பிட்டுக்கறேன்” என்று கிளம்பினான்.

அவன் சென்றதும் மணியிடம் வந்தவன் மஞ்சுவை மதுரைக்கு ட்ரெய்ன் ஏற்றிவிடச் சொன்னான். மஞ்சுவிற்கும் அன்று சரத் மதுரை வந்து தன்னிடம் பேசியதை ராசியிடம் சொல்ல மறந்து போனது. சொல்லியிருந்தால் ஒருவேளை ராசியின் பிரச்சனைக்கு முதலிலேயே முடிவு வந்திருக்குமோ என்னவோ!

இரவில் பேத்தியிடம் வந்த மீனலோஜினி, “ராசிமா இந்த கல்யாணம் கட்டாய கல்யாணம்னு நீ நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது என் பேத்தி விருப்பப்பட்ட கல்யாணம்.”

“ஆனா, அம்மாஆச்சி! சரத்கு என்னைப் பிடிக்கலையே” என்று வருத்தத்துடன் சொல்ல...

“அவனுக்கு உன்னைப் பிடிக்கும்னு உனக்கும் தெரியும். பிடிக்கலன்னாலும் இனிமேல் பிடிக்கவை. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேளு. கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டாலும் சரி. இல்ல பழசை மறந்துட்டு புதுசா வாழ்க்கையை ஆரம்பிச்சாலும் சரி. இப்ப உங்களுக்கு கல்யாணமாகிருச்சி ராசிமா. உங்க வாழக்கையை நல்லபடியா ஆரம்பிங்க. சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லணும் சரியா?” என்றார் அவள் தலை வருடி.

“அம்மாஆச்சி நீங்க ஓவர் ஸ்பீட் போறீங்க. நீங்க சொல்லி நான் என்னைக்கு மறுத்திருக்கேன். நீங்க கேட்டது சீக்கிரம் கிடைக்கும்” என்று லோஜிக்கு முழு நம்பிக்கை அளித்தாள்.

“ம்.. இது நல்ல பொண்ணுக்கு அழகு” என்று அவர்களுக்கான அறைக்கு அனுப்பினார்.

பாபுவும் மறுநாள் வருவதாக சொல்லி குடும்பத்துடன் கிளம்பினான்.

ரோகிணியை கிரி வந்து அழைத்துச் செல்ல, மீனலோஜினி, பாஸ்கர், சாந்தி மூவரும் சரத்தின் வீட்டிற்குச் சென்றார்கள்.

அறைக்குள் நுழையும் முன் ஆயிரத்தெட்டு யோசனைகள் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்து, ‘இந்த முடிவு சரிவருமா? அசிங்கமாச்சே!’ என்ற எண்ணம் ஆழப்பதிந்தது.

ஹேய் ராசாத்தி ரோசாப்பூ வாவாவா!

அடி ஏய் சீமாட்டி பூச்சூடி வாவாவா!

தேவதையே திருமகளே!

தேவதையே திருமகளே!

மாங்கனியே மணமகளே!

மாலை சூடும் குணமகளே!

ராசாத்தி ரோசாப்பூ வாவாவா”

பாடியபடியே ராசியின் அருகில் வர, அவளோ சட்டென்று பால் டம்ளரை அவன்புறம் நீட்டினாள். அதை ஒரு கையிலும் அவளை ஒரு கையிலும் சரத் பிடிக்க...

அவனை தடுத்து, “நானே வர்றேன்” என்று கட்டிலில் அமர... பால் டம்ளரைப் பார்த்தவன் முதலில் அதிர்ந்தாலும், பின் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இப்ப எதுக்கு இந்த சிரிப்பு சிரிக்கிறீங்க. பார்த்து வாய் சுளுக்கிக்கப் போகுது” என்று உதடு சுழித்தாள்.

“ஹா..ஹா.. வாய் சுளுக்கினா உன் வாயால சரிபண்ணிருடா செல்லம்.”

“அ..அதெப்படி முடியும்” என்று வேகமாய் கேட்க...

“முடியாதுன்னு எதுவும் இல்லமா. இரேன் சின்ன சாம்பிள் காட்டுறேன்” என்று டம்ளரை ஒரு கையில் பிடித்தபடி அவளை நெருங்கி அமர, அவனின் நெருக்கத்தை தவிர்க்க அவள் பின்னால் நகர... விடாமல் அவளை நெருங்கியவன், “ம்ம்.. பூ வாசனை சும்மா ஆளைத் தூக்குது” என்றபடி அவளின் முகத்தைப் பிடித்து, “எங்க போற? சுளுக்கை எடுக்கத்தான் டெமோ” என்று அவளின் இதழ்களை நெருங்குகையில்... விவரம் புரிந்து அவன் முகத்தை நகர்த்தி படக்கென எழுந்தவள் “எ...என்ன பண்றீங்க?” என படபடத்தாள்.

“சுளுக்குக்கு ஷாம்பிள் காட்ட வந்தேன். அதுக்குள்ள ஏன் எழுந்திட்ட?”

“ப்ச்.. நான் கேட்டது ஏன் சிரிச்சீங்கன்னு. என்னை டைவர்ட் பண்றீங்க நீங்க” என்று சற்று கோவமாகவே கேட்டாள்.

“ராசி இங்க வாயேன். ஒண்ணும் செய்யமாட்டேன். இங்க வா” எனவும் மெல்ல தயங்கி தயங்கி அவனைவிட்டு நான்கடி தள்ளி அமர... “இவ்வளவு தள்ளி உட்கார்ந்தா நான் காண்பிக்கிறது எப்படி தெரியும்? சரி சரி முறைக்காத. பர்ஸ்ட் நைட்கு பால் கொண்டு வருவாங்க கேள்விப்பட்டிருக்கேன். இதென்னமா புதுசா பூஸ்ட் கொண்டு வந்திருக்க? இதைப்பார்த்து சிரிக்காம என்ன செய்யுறது சொல்லு?” என அப்பாவியாகக் கேட்டான்.

“பூஸ்டா!” என ஆச்சர்யப்பட்டவளுக்குமே சிரிப்பு வர, சட்டென்று சிரித்து, ‘ஹையோ! அம்மாஆச்சி ஒரு சம்பிரதாயத்தையே எனக்காக மாத்திருக்கீங்களே. ஸோ ஸ்வீட்’ என மனதினுள் கொஞ்சினாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஏன் லோஜிம்மா பூஸ்ட் கொடுத்துவிட்டாங்க தெரியுமா? ஏன்னா நான் உன்னைப் புரிஞ்சவன். உனக்குப் பிடிக்காதது எதையும் செய்யமாட்டேன்ற அர்த்தத்தில்” என்றான் அவள் கண்நோக்கி நிதானமாக.

கோவத்தில் வேகமாக எழுந்தவள், “என்னைப் புரிஞ்சவன்னு சொல்லாதீங்க சொல்லிட்டேன். என்னைப் புரிஞ்சிருந்தா... ப்ச் விடுங்க வேற பேசலாம்” என்றவள் உள்ளுக்குள் ஆர்ப்பரித்த கோவத்தை அடக்கிக்கொண்டாள்.

கையிலிருந்த பூஸ்டை ஓரம்கட்டி, “வேற பேசிக்கலாமா?” என்றான் அவளின் நிலை புரியாமல்.

“ம்.. பேசிக்கலாம்” என்றவளை... கைபிடித்திழுத்து தன் மேலேயே விழவைத்து, “என்ன பேசணும் ராசி?” என்றான் கிசுகிசுப்பாக.

“ப்ச்.. எதுக்கு இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறீங்க. இப்படி பேசினா நான் மயங்கிருவேன்னு யார் சொன்னது?” என்றாள் குரலை உயர்த்தி.

“அப்ப நீ மயங்கலையா?” என்று அவள் கன்னத்தில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான். அதில் உரைந்தவள் மனம் கொஞ்சமே இளகினாற்போல் தோன்ற மறுகன்னத்திலும் முத்தமிட்டு அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அவளும் அவனுக்கு மறுப்பு தெரிவிக்காமல் உடன்பட்டாள்.

“ஹேய் செல்லம்! என்மேல உள்ள கோவம் போயிருச்சா?” என்று காதைக்கடிக்க...

“இல்லை” என்றாள் ஒற்றை வார்த்தையாய்.

சட்டென்று அவளிடமிருந்து விலகியவன் “இப்ப என்ன சொன்ன?”

“ம்... நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்.”

“ராசி விளையாடாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. என் மேல உனக்குள்ள கோவம் போகலையா?” அவளின் மௌன மொழியே உண்மை சொல்ல, வந்த கோவத்தை அடக்கி நிதானமாக, “அப்புறம் ஏன் இப்படி?” என்று தங்களின் நெருக்கத்தைக் காண்பித்து, “சொல்லு கோவமா இருக்கிறவ சண்டை போடாம இதென்ன நான் தொட்டதும் ஒண்ணும் சொல்லமாட்டேன்ற? இது உன்னோட கேரக்டர் கிடையாதே” என்றான் வேகமாகவே.

“ஏன்னா நீங்க என்னோட ஹஸ்பண்ட். ஹஸ்பண்டோட ஆசையை நிறைவேத்துறது ஒரு நல்ல மனைவியோட கடமைனு அம்மாஆச்சி சொல்லி அனுப்பினாங்க” என்றாள் அவனைவிட நிதானமாக.

“ஓ... அப்ப ஒரு ஒய்ஃபா நான் என்ன செஞ்சாலும் தாங்கிப்ப. திருப்பி எதுவும் சொல்லமாட்ட செய்யவும்மாட்ட அப்படித்தான?”

“கண்டிப்பா. உங்களுக்கு பிடிக்காட்டியும், இப்ப நான் உங்க ஒய்ஃப். உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடக்கிறது என்னோட கடமையில்லையா” என்றாள் பதிலுக்கு.

“நான் உன்னைப் பிடிக்கலைன்னு எப்ப சொன்னேன்?”

“ஓ.. அதை என் வாயால கேட்கணும்னு ஆசையிருக்கா என்ன?” என்றாள் நக்கலாக.

“ராசிமா! நான் ஐ லவ் யூ சொல்லமாட்டேன் சொன்னேன். நீ எனக்கு சொல்லக்கூடாது சொன்னேனா. அப்புறம் ஒய்ஃப் கடமைன்னு சொன்னல்ல, எனக்கு ஒரு ஐ லவ் யூ சொல்லு பார்க்கலாம்” என்றவன் மனதினுள், அப்படியாவது அவளை முதலில் சொல்ல வைத்து பதிலுக்கு தான் சொல்லிவிடலாம் என்ற எண்ணம்தான்.

“நானா! நான் அந்த வார்த்தையை யூஸ் பண்ணவே மாட்டேன். காதல் மனைவியா உங்களோட வாழ்வேனா தெரியாது. ஆனா, ஒரு நல்ல ஒய்ஃபா இருப்பேன். என்ன நெக்ஸ்ட் மூவ் பண்ணப்போறீங்களா? இல்ல நான் மனசு மாறுறது வரை வெய்ட் பண்ணப்போறீங்களா? நான் மனசு மாறுறதுன்றது நடக்காத ஒண்ணு. நடக்காத ஒரு விஷயத்துக்காக காத்திருக்க நீங்க ரெடின்னா, எனக்கெந்த ப்ராப்ளமும் இல்லை” என்று நக்கலாகவே பதிலளித்து கட்டிலின் மறுபுறம் சென்று படுத்தாள்.

அவளையே வெறித்திருந்தவனுக்கு முதலில் ஒன்றும் சரிவர புரியாமல் என்ன செய்வது என குழம்பியவன், அவள் வார்த்தைகளை திரும்பவும் மனதினுள் ஓடவிட்டு, அதில் எதைக் கண்டானோ முகம் பளிச்சிட, ராசியினருகில் வந்து படுத்தவன் அவளைத் தன்புறம் பார்க்க திருப்பி, “ஹேய்! நிஜமாதான சொன்ன? நெக்ஸ்ட் மூவ் போகலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன். நீ எப்படி” என்று கண்ணடித்தான்.

சில கணங்கள் அவனை அதிர்ந்து பார்த்தவள் ‘ஏற்கனவே முடிவு செய்தது தானே’ என்று நினைத்தாலும், “நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள்.

“ம்... கேளுமா” என்றபடி அவளை அணைக்க...

“இப்ப நான் அக்கா பொண்ணுன்றது தெரியலையா? அக்கா பொண்ணை உங்க பொண்ணா நினைக்கிற நல்லவராச்சே நீங்க? அதென்னது, ஆங்... தாய்மாமா தாய்க்கு சமானம்னு டயலாக் விட்டது யார் சார்?” என்றாள் கேலியாகவே.

“அதான யாருப்பா அந்த நல்லவன்” என்று சுற்றிலும் தேடிவது போல் நடித்து, “நீ என்னோட அக்கா பொண்ணா என் கண்முன்னாடி வளர்ந்திருந்தா அப்படி நினைச்சிருப்பேனா இருக்கும். நீ எனக்கு அறிமுகமானது ராசியா. அதுவும் 25 வயசுப் பொண்ணா. இப்ப வந்த சொந்தம்தான் அக்கா பொண்ணு. ஆனா, நீ எனக்கு எப்பவும் பழைய ராசிதான்.”

“அப்ப மணி அண்ணாகிட்ட விட்ட டயலாக்கெல்லாம்.”

அவள் முகத்தை விரல்களால் வருடியபடி, “அதை மறந்திருமா. அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணினவங்கள்லாம் லவ் பண்ணிட்டா குடும்பம் நடத்துறாங்க. இல்லைல்ல. போகப் போகத்தான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி நேசிக்க ஆரம்பிக்கிறாங்க. அது மாதிரி நாமளும் செய்யலாம்.”

“அப்ப நிஜமாவே என்னைப் பிடிக்காமலா இருந்தீங்க? அதை எப்படி மறக்கிறது?” என்றாள் மனதில் ஒருவித வலியுடன்.

“வேற வழியில்லைமா. உன்னைப் பிடிக்காது சொல்லல ராசி. இப்ப நம்மளோடதும் அரேஞ்ச்ட் மேரேஜ்தான?” ‘ம்’ என்றவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பொய்யாகக்கூட உன்னை காதலிக்கிறேன்னு சொல்லலையே என்று. காலையில் மீனலோஜினி தன்னிடம் கேட்கப்போகும் கேள்விக்கு நல்ல பதிலாக சொல்ல வேண்டுமென்று தான் அவனை வம்பிழுத்து அருகில் வரவழைத்தாள். ஆனாலும், எதையோ இழந்தது மனசு.

என்னவென்று புரியாமல் விழித்தவள் விழிகளில் முத்தமிட்டு, “உன் கண் என்னை மயக்குது ராசாத்தி” என்றான் கிறக்கமாய்.

“ப்ச்... ராசாத்தி சொல்லாதீங்க. கால் மீ ராசி. ராசாத்தின்னு கூப்பிடுற உரிமையை நான் உங்களுக்கு தர்றதா இல்லை” என்றாள்.

‘விட்டா இவ பேசிட்டேயிருப்பா’ என்றெண்ணி அவளின் வாய் மூட, சில வினாடிகளில் அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விழ... அதில் அதிர்ந்தவன் அவளை விட்டு விலகி, “சாரி ராசி புருஷன்ற உரிமையில, சாரிமா” என்று அவளைவிட்டு விலகப்போனவன் கைபிடித்து,

“ஒண்ணுமில்லங்க. ஏதோ பழைய நியாபகம்” என்றாள் பிடித்த கையை விடாமல்.

“பழசுக்கும், புதுசுக்கும் நடுவுல குழம்ப வேண்டாம் ராசி. உன் மனம் தெளிவான பின்னாடி பார்த்துக்கலாம்.”

“அதான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேன்ல” என அதன் பிறகும் அவன் முகம் தெளியாமலிருக்க, ‘அச்சோ! வேலைக்காக மாட்டாங்க போலிருக்கே. அப்ப லோஜிக்கு நான் குடுத்த நம்பிக்கை என்னாகுறது’ என்றவள் பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே அவனை இழுத்து தன்மேல் போட்டு அவன் வாயை மூட... அவளின் விருப்பம் அறிந்தவனோ தன்னுடைய தயக்கத்தை கைவிட்டு தங்களின் தாம்பத்தியத்தை ஆரம்பித்து வைத்தான் சுகமாக.

காலையில் சீக்கிரமே விழித்தவள் கணவனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து சட்டென்று விலகி அவனையே பார்த்திருந்தாள். ‘என்னை! என் காதலை மதிக்காமல் காலில் போட்டு நசுக்கியவன். கடைசி வரை என் காதலை உணராதவன். இப்பொழுது நான் இவன் மனைவி. படுக்கையிலும் கூட!’ வேதனையான புன்னகை ஒன்று வந்தது அவள் இதழ்களில்.

என்ன முயன்றும் இரவு தான் நடந்து கொண்ட விதத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை அவளால். ஆண் அவனே வேண்டாம் என்று எழ அவனை வலுக்கட்டாயமாக இழுத்தது, இதயத்திற்குள் ஈட்டி சொருகினாற் போலிருந்தது. தன்மீதே அருவருப்பு தோன்றி உடலெல்லாம் எரிந்தது. தன்னைத்தானே கேவலப்படுத்தி முதலிரவு நடத்தினாற்போன்ற எண்ணம் ஆழப்பதிந்தது. அதற்கு ஒரே காரணம் லோஜி.

‘வேறு யாரையாவது திருமணம் செய்கிறாயா?’ என லோஜி கேட்டதும், அவருக்காக சம்மதித்தாலும் மனதில் எழுந்த வலி, ‘என் பையன் சரத்தைக் கட்டிக்கோ’ என்றதும் கொஞ்சம் குறைந்தது. ஆனால், தன் காதல் வாழ்க்கை. சரத்துடன் சேர்ந்து வாழ தான் பார்த்துப் பார்த்து கட்டிய கனவுக்கோட்டை என்றுமே இல்லாமல் கானலாய் போனதை நினைத்து மனதிற்குள் குமைந்தாள்.

தன் காதலை தூக்கியெறிந்து கடமை மனைவியாக வாழ முடிவு செய்தாள் தன் அம்மாஆச்சிக்காக. தன்னைப் புரிந்த ஒரே ஆத்மா. எங்கே திருமணமே வேண்டாமென்று இருந்து விடுவேனோ என்று பயந்து, சரத்தைத் தவிர யாரையும் தன்னால் நினைக்க முடியாது என்பதை உணர்ந்து அவனையே தனக்கு மணமுடித்த ஒரு நல்ல பெண்மணி. கண்மூடித் திறந்து சின்ன பெருமூச்சுடன் அவன் கைகளை தன்னிடமிருந்து விலக்கி எழப்போக...

அவளை விடாமல் சேர்த்தணைத்து, “ஐ லவ் யூ ராசாத்தி” என்றான் உளறலாய்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தவள் புரிந்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று அவன் முகம் பார்க்க, அவனோ தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தூங்குவதைப் பார்த்து தான் கேட்டது உண்மையா என்று குழம்ப ஆரம்பிக்க, இல்லையென்றது அடுத்தடுத்த நாள் வந்த நிகழ்வுகள். அந்த குழப்பத்தினூடே எழுந்து வேகமாக குளியலறை சென்றவள் ஷவர் முன் நின்று தன் மேலுள்ள எரிச்சலைப் போக்க முயன்றும் முடியவில்லை. தன் கண்ணீரை அந்த தண்ணீருடன் கலக்கவிட்டாள் ராசி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top