- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
22
“அம்மாவா? யாரைச் சொல்றீங்க எம்.எல்.ஏ சார்? அந்த வார்த்தை தவறி வந்திருச்சி நினைக்கிறேன். சீக்கிரம் வாயைக் கழுவிருங்க. அது அசிங்கமான வார்த்தை” என்றார் கேலியாக.
வந்த கோபத்தை அடக்கி, “அம்மா ஏன் இப்படிப் பேசுறீங்க? எனக்கு ஒரு விஷயம் தெரியணும். அதை க்ளியர் பண்ண உங்களாலதான் முடியும்” என்றான்.
“ம்... கேளுங்க சார். தெரிஞ்ச வரை சொல்றேன்.”
கைபேசியிலுள்ள புகைப்படத்தைக் காண்பித்து, “இது மங்கைதான?” என்றான்.
உள்ளுக்குள் தோன்றிய அதிர்வை மகனறியாமல் மறைத்து, “யார் சொன்னது இது மங்கைன்னு? அவங்களைத்தான் குடும்பத்தோட...” குரலில் சின்ன தடுமாற்றம் அவருக்கு.
“நாங்க எதுவும் செய்யலன்னு எத்தனை தடவை சொல்றது.”
“இதே வாய்தான் நாங்கதான் செஞ்சோம்னு சொல்லிச்சி.”
“ப்ச்... மத்த கதை எதுக்கு. இவள் மங்கைதான? நீங்க கூட இவகிட்ட பேசிட்டிருந்தீங்களாமே பொண்ணுங்க சொன்னாங்க?”
“நீ இப்ப என்கிட்டக் கேட்டியே அதே மாதிரிதான் சந்தேகம் வந்து இந்தப் பொண்ணுகிட்ட விசாரிச்சேன். அவ அவளோட அப்பா அம்மாகிட்டக் கூட்டிப்போயி நிறுத்தி இவங்ககிட்ட கேளுங்கன்னு சொல்லிட்டா. எனக்குத்தான் ஒரு மாதிரியாகிருச்சி.”
தாயை நம்பாமல், “பொய் சொல்லலையே? என்கிட்டயிருந்து அவளைக் காப்பாத்த நடிக்கிறீங்களா? அப்படித்தான்னு தெரிஞ்சது அவ்வளவுதான்” என எச்சரித்தான்.
“உங்ககிட்ட பொய் சொல்ல முடியுமா சார். நீங்கதான் ரொம்பப் பெரிய அரசியல்வாதியாச்சே” என்றாவர் குரலில் ஏளனம் மட்டுமே.
மேலும் பேசப் போனவரைக் கைநீட்டி தடுத்து, “இவளை எங்க பார்த்தீங்கன்னு சொல்லுங்க?”
உள்ளுக்குள் பயம் பரவ ‘விடமாட்டான் போலவே’ என நினைத்து “தெரியாது மறந்திருச்சி. அப்படியேத் தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். மங்கை மாதிரியிருக்கிறதால இந்தப்பொண்ணை நீ கொன்னுட்டன்னா?”
“வேண்டாம் பெத்தவளாச்சேன்னு பார்க்கிறேன். நான் என்ன கொலை பண்றதைக் குலத்தொழிலாவா வச்சிட்டிருக்கேன். மங்கை இல்லன்னு தெரிஞ்சா விட்டுரப்போறேன்.”
“டேய் ஜெய்! எங்கம்மா எனக்குச் சின்ன வயசுலயே காது குத்திட்டாங்க. நீ இவளை விட்டுருவியா? கொலை பண்றத குலத்தொழில் இல்லதான். அந்தக் கொலையை மூலதனமா வச்சிதான் இவ்வளவு பேரோடயும் புகழோடயும் நிற்கிற. என் அக்கா முக ஜாடையில் யாரைப் பார்த்தாலும் உனக்கு மங்கையாகத்தான் தோணும். அதே மாதிரி எத்தனை பெண்களைக் கொன்னு புதைச்சியோ யார் கண்டா?”
சிறு அதிர்வு அவனுக்குள் வந்துபோகத்தான் செய்தது.
“நீயெல்லாம் நல்ல மகனாகவும் இல்ல. நல்ல சகோதரனாகவும் இல்ல. நல்ல புருஷனாகவும் இல்ல. நல்ல தகப்பனும் இல்ல. சுயநலம் பிடிச்ச ஈவு இரக்கமற்ற மருகம் நீ” என்றார் ஆவேசமாக.
“ஏய்” என தாயின் கழுத்தைப்பிடித்த சில வினாடிகளில் ‘ஆ’ என்ற அலறல் ஜெயராமிடமிருந்து. தாயின் கழுத்திலிருந்து கையை உதறியபடி தன்முன் நின்றிருந்த தம்பியை முறைத்தான்.
“என்னடா வலிக்குதா? அதெப்படிடா வலிக்கும்? எருமை மாடுங்களுக்கு என்ன அடிச்சாலும் வலிக்காதாமே!”
“டேய்ய்ய்...”
“ஏய் சும்மா கத்தாத. பெத்த தாயை அழ வைக்கிற நீயெல்லாம் ஆம்பளைன்னு வெளில சொல்லிராத. இன்னொரு டைம் என் அம்மா மேல கைபட்டுச்சி உயிரோட உன்னைக் கொளுத்திருவேன். உன் தம்பிதான் நான். உன்னோட ரவுடித்தனத்துல கொஞ்சமாவது என்கிட்டயிருக்கும்ன்றதை மறந்திராத. நீங்க வாங்கம்மா” என செல்லும்போதே...
“தம்பி மங்கை போட்டோ இந்தப் பயல்கிட்ட மாட்டியிருக்குடா” என்றார் சின்ன பயத்துடன்.
சடனாக நின்றவன், “எப்படிமா?” என்றான்.
“தெரியலப்பா. அது மங்கை இல்லன்னு சொல்லியிருக்கேன். அதையெல்லாம் உன் அண்ணன் நம்பமாட்டான். அவளைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள எப்படியாவது காப்பாத்துபா?”
“நான் இருக்கேன்மா. என் தங்கச்சி மேல எவனும் கைவைக்க முடியாதுமா. அதுக்கு அவன் உயிரோடிருக்கமாட்டான்.”
மகனின் முகம் வருடி, “தப்பிப் பிறந்துட்டடா தம்பி” என்றார் நெகிழ்வுடன்.
“உங்க பையன்மா. எப்படி தப்பா போவேன்? யூ டோண்ட் ஒர்றிமா. வரப்போற மருமகளை நினைச்சி கனவு கண்டுட்டே தூங்குங்க.”
“படவா! அதை நீ அதைச் செய்.”
தங்களுக்குள் ரகசியம் பேசிச் செல்லும், தாயையும், தம்பியையும் பார்த்திருந்த ஜெயராம் மங்கையின் புகைப்படம் பார்த்து ‘நீ மங்கையா இல்லாட்டியும் உயிரோடிருக்கக்கூடாது.’ ஒருவித வன்மம் தலைதூக்க... ‘நீங்க சொல்லலன்னா அவளைக் கண்டபிடிக்க முடியாதா? ரெண்டே நாள்ல கண்டு பிடிக்கிறேன்.’
எந்தெந்தத் திருமணத்திற்குச் சென்றானோ அங்குள்ள கல்யாண வீடியோ போட்டோ அனைத்தையும் பார்க்க ஏற்பாடு செய்தான்.
இரவு தனியே படுத்த திருவிற்கு தூக்கம் என்பது தூரம் போய் கேலி செய்ய... ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து தனித்திருக்கும் எண்ணம் அவளுள். கணவனின் கைபிடித்து தூங்கிய தினங்கள் கண்முன் வந்து ஆட்டம் காட்ட, மனதிலோ நிம்மதியில்லாமல் போனது. அத்தையுடனும் படுக்க யோசித்தவளுக்கோ தேவையில்லாத நினைவுகள் பல.
“இளா அத்தான் சீக்கிரம் வந்திருங்க. அப்பதான் என் வாழ்வுக்கு விமோசனம் கிடைக்கும். என்னோட வாழ்க்கையே உங்க வரவுலதான் இருக்கு. ப்ளீஸ் வந்திருங்க.” விடாத வேண்டுதல் இளநாதனின் செவிகளில் விழுந்திருக்குமா!
மறுநாள் காலை தன்முன் நின்றிருந்தவனை கோபத்துடனும் வெறுப்புடனும் பார்த்த பிரஷாந்த், “என்ன முடிவு பண்ணிட்டீங்க போல. டேட்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சா?” நிதானமாகக் கேட்க...
“என்ன முடிவு பண்ணி என்ன டேட் பிக்ஸ் பண்ணனும்ன்ற அன்பு?”
“ம்.. என் சாவுக்குதான்.”
“ஓ... டேட் பிக்ஸ் பண்ணிக் கொல்ற அளவுக்கு பெரிய அப்பாடக்கரா நீ?” என்றான் கேலியாய்.
“அப்பாடக்கர்தானாம். அதுவும் இந்த அப்பாடக்கருக்காக பதினைந்து வருஷமா உன் அப்பனும் அண்ணனும் காத்திருக்கானுங்க.”
“மரியாதை பெயருக்குக் கூட இல்லையே அன்பு.”
“அருணாச்சலம் பையனுக்கு யார் யாரை எப்படி நடத்தணும்னு தெரியும்.”
“ஹ்ம்... ஓகே. என்னைக் கூட தெரிஞ்சி வச்சிருக்க போல?”
“துரோகியை தெரிஞ்சி வச்சிருக்கலாம். ஒட்டி உறவாடத்தான் கூடாது.”
“ம்...குட். நல்லா பேசுற அன்பு. ஆனா, பழிவாங்குறேன்னு இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? உன் அக்காவும் சொல்றாளே தவிர எதுவும் செஞ்ச மாதிரி தெரியலையே?”
“எ..என் அக்கா... ஏய் உனக்கெப்படித் தெரியும்?” என்றவனுக்குள் பயம் முளைவிட்டது. தன்னை மட்டுமே தெரியும் என்ற தைரியமாக இருந்தவனுக்கு அக்கா பற்றி தெரிந்துவிட்டதில் அவளுக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயமே!
“என்னடா முழிக்கிற? மங்கை மட்டுமில்ல.. உன் அம்மா, கயல், இளா எல்லாரையும் தெரியும்.”
“என்ன இளா அத்தான் உயிரோட இருக்காங்களா?”
“ஹேய் ரியாக்ஷனைக் குறைடா அன்பு. இப்ப சொல்லு எப்படி உன்னை மட்டும் சாகடிக்கிறது? மொத்தமா முடிச்சரலாமா?”
“ஏய் யார் மேலயாவது கை வச்ச கொன்னுருவேன்.”
“டேய் அடங்குடா. சின்னப்பையன்றதை அடிக்கடி நிரூபிக்கிற. ஒண்ணு பண்ணலாம்டா தம்பி... பேசாம என்னோட கூட்டு சேர்ந்திறேன்.”
“எதுக்கு நானே எல்லாரையும் பழிகொடுக்கக் கூட்டிட்டு வரணுமா? முதல்ல இளா அத்தான் எங்கன்னு சொல்லு?”
“இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாறடி ஞானத்தங்கமே!”
“ஐயோ முதல்ல பாடுறதை நிறுத்துறியா? எரிச்சலா வருது.”
“ஓகே. அப்ப நாம ஃப்ரண்ட்ஸ்” என்று புன்னகைத்தான்.
“இப்ப உனக்கு என்ன வேணும்? என் குடும்பத்தை விட்ரு ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக.
“ஏன்டா குடும்பத்தை விட்ரு விட்ருனா எப்படி விட முடியும்? கொலை பண்றவனாயிருந்தா இப்படியா சாவகாசமா வந்து பேசிட்டிருப்பான். தெரிஞ்ச உடனே யாருமறியாம போட்டுத் தள்ளிட்டுப் போயிரமாட்டான்.” அன்புவின் குழப்ப முகம் பார்த்து... “என்ன அன்பு ரொம்பக் குழப்புறேனா? என்னைக் கார்மேகம் பையனா பார்க்காம செல்வரசி பையனா பாருடா. உன் கூடப்பிறந்தவனா பாரு. அறிவுக்கும் எனக்கும் ஒரு வயசுதான்டா வித்தியாசம்.”
அறிவு என்ற பெயர் கேட்டதுமே, “அவனைத்தான் வெட்டி வீசிட்டிங்களேடா. சொத்து வேணும்னு கேட்டிருந்தா என் தாத்தாவும் அப்பாவுமே குடுத்திருப்பாங்களே. அத்தனை பேரையும்... உங்க யாரையும் சும்மாவிடமாட்டேன்” என்று ஆத்திரத்தில் பிரகாஷின் சட்டையைப் பிடித்தான்.
கலங்கிய கண்களுடன், “சேற்றில்கூட செந்தாமரை பூக்கும் அன்பு. அதை பூஜைக்கும் பயன்படுத்துவாங்க. இப்பவும் சொல்றேன் என்னை உன் சித்தி பையனா பாருடா. உங்களைக் கொல்லணும்னு நினைச்சிருந்தா, முதல்ல உன்னையும், போன வருஷமே என் கண்ணுல சிக்கின பெரியம்மாவையும், கயலையும், உன் அண்ணன் கல்யாணத்துல பார்த்த மங்கையையும், என்னால எதுவும் செய்ய முடியாது நினைச்சியா?”
சட்டென்று அவன் சட்டையிலிருந்து அன்பு கையை எடுக்க...
“அவங்களை வளர்த்தது கார்மேகம். என்னை வளர்த்தது என் அம்மா குடும்பம். அது உன் குடும்பமும் கூட அன்பு. தப்புன்றதை கனவுல கூட நினைக்கமாட்டேன். நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க தெரியாது. ஆனா, பெரியம்மா கயல் இந்த ஒரு வருஷமா என்னோட பாதுகாப்புலதான் இருக்காங்க. இது அவங்களுக்கே தெரியாது. இப்ப உள்ள பிரச்சனை வேறடா. மங்கை ஜெயராம் கண்ணுல பட்டுட்டா.”
“எ..எப்படி? இருக்காது?” என்றான் தடுமாற்றமாக.
“மங்கை யார் என்னன்றதைத் தீவிரமா தேடிட்டிருப்பான். ஏன் இப்ப கண்டுபிடிச்சிருக்கவும் செய்யலாம்.”
“எ..என்ன சொல்றீங்க?”
“கவனம் தேவை சொல்றேன். இந்நேரம் நீங்க அலார்ட் ஆகியிருக்கலாம். ஆனா, சின்ன வயசுலயே கொலைக்கு அஞ்சாதவன். இப்ப பவரும் இருக்கு. முதல்ல அவள் புருஷனை வரச்சொல்லு?”
“அவளுக்குக் கல்யாண...”
“தெரியும் நான் அங்கதான் இருந்தேன்.”
“நம்பமுடியல!”
“கஷ்டம்தான் அன்பு. என்னை நம்பினா கெட்டுப்போகமாட்ட. என்னடா.. உங்க குடும்பத்தை நம்பினதாலதான கெட்டுப்போயிட்டோம்னு நினைக்கிறது புரியுது. என்னை நம்பலாம் அன்பு. எந்த நேரம் எந்த உதவினாலும் கேட்கலாம். இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருப்பேன். அப்புறமா அம்மா ஒய்ஃப் கூட்டிட்டு யு.எஸ் போயிருவேன்.”
“உங்களுக்குக் கல்யாணமாகல கேள்விப்பட்டேன்?”
“இதுவரையில்ல. இனிமேல் உங்க எல்லார் சம்மதத்தோட உங்க முன்னாடிதான் நடக்கும். நீங்க ஓகே சொன்னால்தான் கல்யாணம். நிறைய குழப்புறேன்ல சீக்கிரமே புரியும் அன்பு. ஓகே நான் கிளம்புறேன். என் அண்ணன் ஆளுங்க பார்த்தா எனக்குதான் முதல்ல சங்கு. இது என் நம்பர்... இவனை எதுக்கு கூப்பிடணும் நினைக்காத அன்பு. அறிவு இடத்துல என்னை வச்சிப்பாரு. துரோகம் பண்ணமாட்டேன்.”
“அண்ணா!”
“தேங்க்ஸ்டா. உன் நம்பிக்கையை எப்பவும் காப்பாத்துவேன்.”
“இளா அத்தான் எங்க?”
“உன் அண்ணி கயல்கிட்டக் கேளு தெரியும். எனக்கும் சின்னதா சந்தேகம் இருக்கு க்ளியர் பண்ணிட்டு சொல்றேன்.”
“கயல் மதினி எப்ப அண்ணியானாங்க?” என்றான் யோசனையாய்.
“என் கல்யாணத்தோட தெரியும். நெக்ஸ்ட் மீட் பண்ணவோம்” என்று வேகமாக செல்ல, ஏதோ புரிவதுபோல் தெரிந்தாலும் செல்பவனையே புதிராய் பார்த்திருந்தான் அன்பு.