- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
21
காலைநேர உணவிற்குப்பின் வைஷ்ணவி, வெங்கடேஷ், நேத்ரா வந்தபொழுது, கார்த்திக் அவசர வேலையென்று வெளியே சென்றிருந்தான்.
மாலை ஆறுமணிக்கு திருமண வரவேற்பு, அந்த பெரிய ஏசி மஹாலில் நடைபெறுவதால், அலங்காரம் முதல் சமையல் வரை அனைத்தும் தரமானவர்களாகப் பார்த்து ஒப்பந்தத்தில் விட சந்திரனுடன், சுந்தரேசனும் மேற்பார்வை பார்க்க மண்டபத்திலில் இந்தார்கள்.
மதியத்திற்கு நித்யாவுடன் சேர்ந்து அவந்திகா, வைஷ்ணவி, நேத்ரா சந்தோஷ், என இளைஞர் பட்டாளம் சமையல் செய்ய ஆயத்தமாக, எந்த கவலையும் இல்லாமல் அரட்டை அடுப்படியில் நடக்க, புவனேஸ்வரியின் கண்டிப்பு காற்றில் பறந்துபோனது.
“அவந்தி! கார்த்திக் சார் உன்னை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கறார் போல” என்ற வைஷ்ணவியிடம்,
“ஹ்க்கும் எங்கண்ணன் கண்ணுக்குள்ள வச்சி பார்க்கிறானோ, இல்லையோ, எங்கண்ணி கண்மை வச்சி நல்ல்லா பார்த்துக்கறாங்க” என அண்ணியின் கால்வாரினான்.
“சந்தோஷ்ஷ்...” என அவந்திகா மிரட்ட,
“அண்ணி உண்மை சுடும்...” சொல்லி முடிக்குமுன் சூடான கரண்டியை அவன் கையில் வைத்தாள் அவந்திகா. “ஆ...ஐயோ சூடு. புவன்ஸ் காப்பாத்துங்க” என்றலறினான்.
“என்னடா கத்திட்டிருக்க?”
“சுட்டுருச்சி புவன்ஸ்.”
“சமையல்னா சும்மாவா, சூடு கீடு படத்தான் செய்யும். இதுக்கெல்லாமா கத்துறது?” என்றதும், பல்லைக்கடித்தவன், “புவன்ஸ் சூடு தெரியாம படல. அண்ணி வச்சிட்டாங்க” என்றதும் ஈஸ்வரி மருமகளைப் பார்த்தார்.
“அத்தை உண்மை சுடும்ல. அதான் சுட்டுருச்சி” என்றாள் அப்பாவியாக முகம் வைத்து.
“அம்மா அண்ணி வெரி பேட்மா. பேசாம மூணுவருஷத்துக்கு முன்னாடி பார்த்த, அந்தப் பொண்ணையே நாம முடிச்சிருக்கலாம்” என்றான்.
“சந்தோஷ்! இப்ப ஏன் இந்த பேச்சி?” என தாய் அதட்ட,
“ஏன் முடிச்சிருக்க வேண்டியதுதான. அவ்ளோ பெரிய இவளா அவ” என அவந்தி முகம் சுழித்தாள்.
“அச்சோ! அண்ணி அப்படி சொல்லிராதீங்க. அவங்க அம்மாவோட ஹீரோயின்” என்றதும் “நிஜமாகவா?” என மாமியாரைப் பார்க்க, ‘ம்...’ என தலையசைத்ததும், “அப்புறம் ஏன் என்னை முடிச்சீங்க? உங்க ஹீரோயினையே முடிச்சிருக்கலாம்ல?”
“என்னடா நீ? ஹீரோயின்னா டாப்ல இருப்பாங்க தான. நமக்கு அது செட்டாகுமா?”
“ஏன் உங்களுக்கென்ன குறைச்சல்? இல்ல உங்க பையன் லூசனுக்குத்தான் என்ன குறைச்சல்? நீங்க ஒரு கலெக்டர். உங்க பையன் சிபிஐ ஆபீஸர். எனக்கு எழுதின கவிதையை அவளுக்கு எழுதி கரெக்ட் பண்ணியிருக்கலாம்ல?”
“ஹ்ம்... பண்ணியிருக்கலாம்தான் அப்படி செஞ்சிருந்தா அவ ஏத்துக்கிட்டு இருப்பாள்னு என்ன நிச்சயம்? படிச்சிட்டு லூசுன்னு நினைச்சி கிழிச்சிப் போட்டிருக்கலாம்ல.”
“அதெல்லாம் இவங்களை நேர்ல பார்த்தா, கண்டிப்பா பிடிக்கும்” என்றாள் நம்பிக்கையாக.
“அப்ப ஏன் அவந்தி, உனக்கு மட்டும் என்னை பிடிக்கலைன்ற?” கார்த்திக்கின் திடீர் குரலில் திரும்பிப் பார்க்க, கணவனின் கண்களுள் கட்டுண்டவள், கனக்கச்சிதமான உடையுடன், திடகாத்திர உடலமைப்பில், அழகாய் இருந்தான். பார்த்ததும் மனதில் ஒட்டும் வண்ணம் நின்றிருந்தவனை, ‘இவங்க எப்ப வந்தாங்க?’ என்பதுபோல் பார்த்தாள்.
“ம்...சொல்லு? யாரோ பொண்ணுக்கு பிடிக்கும்னு சொல்ற. நான் தாலிகட்டின ஒய்ஃப், உனக்கு ஏன் பிடிக்கல?”
“அ...அ... அது” என தடுமாற...
“எ...எ... எதுமா?” என்றான் அவளைத் தூண்டும் விதமாக.
“அதான் நீங்க ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணினீங்கள்ல அப்புறம் ஏன் என்னை மேரேஜ் பண்ணுனீங்க? அவளையே முடிச்சிருக்கலாம்ல?” என வேகவேகமாக வார்த்தைகளைக் கொட்டினாள்.
‘அப்ப இதுவரை அந்தப்பெண் இவள்தான்றது தெரியாதா? வீட்ல யாரும் சொல்லலையா? அதான் இந்த குதிகுதிக்கிறாங்களா மேடம்’ என்றெண்ணியவன் மனைவியிடம் வம்பிழுக்கவென்று... “ஹ்ம்... என்ன பண்றது நாம விரும்புறதை விட, நம்மளை விரும்புறது கிடைச்சா, நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. இங்க நான் விரும்பினதும் கிடைக்கல. என்னை விரும்பினதும், தூரமா நின்னு வேடிக்கை காண்பிக்கிது” என்றான் நிதானமாக ஏக்கப் பெருமூச்சுடன்.
கார்த்திக்கின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்க வழியில்லாமல் அனைவரும் சிரிக்க,
‘லூசு! எல்லார் முன்னாடியும் லூசன்றதை நிரூபிக்கிறாங்க பாரு. ஹையோ! மானம் போகுதே’ என உள்ளுக்குள் தவித்து மாமியாரின் பின் ஒழிய, மனைவியின் முகபாவனையைப் பார்த்து சிரித்து விசிலடித்து, அடுப்படிவிட்டு வெளியேறும் போது, “புவன்ஸ் மண்டபம் வரை போயிட்டு வர்றேன்” என்றான்.
“அத்தை சாப்பிட்டுட்டுப் போகச்சொல்லுங்க.”
தன்னிடம் நேரடியாக கேட்காமல் தாயிடம் தூது அனுப்பியதால், கோவத்தில், “அதையும் சேர்த்து அவளையே கொட்டிக்கச் சொல்லுங்க” என்று கிளம்பிவிட்டான்.
“பார்த்தீங்களாத்தை? இதுவே கார்த்திக்னா இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டுப் போவாங்களா? என்மேல கோவம் வந்தால் கூட, அது அக்கறையால வந்ததாதான் இருக்கும். இந்த லூசனை நான் ஏத்துக்கணுமாம். சரியான சிடுமூஞ்சி. ஐ ஹேட் ஹிம்” என்று மாமியாரிடம் பொரிந்தாள்.
மனைவியை திட்டிவிட்டு நகர்ந்தவன், “சே... ஏன்டா இப்படி அடிக்கடி சொதப்புற” என்று அவளை சமாதானப்படுத்த எண்ணி திரும்பி வந்தவனுக்கு, மனைவியின் வார்த்தைகளனைத்தும் காதில் விழ சிரித்தபடி “உண்மையில் லூசன்தான்டா நீ” என திரும்பினான்.
“அச்சோ! இவங்க புருஷன் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலை” என குடும்பமே கார்த்திக், அவந்திக்குத் தெரியாமல் தலையிலடித்துக் கொண்டது வேறு கதை.
மதிய உணவு முடித்து சற்றுநேரம் அனைவரும் ஹாலில் அமர, “ஷப்பா! இனிமேல் இந்த சந்தோஷ் பயலை யார்கிட்டயாவது கோர்த்துவிட்டுட்டா, என் கடமை முடிஞ்சிரும்” என்று ஈஸ்வரி மகனருகில் வந்தமர்ந்தார்.
“ஒய் புவன்ஸ்? உங்க பையன் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா? உடனே முடிக்கணும்னா, இந்த நேத்திக்கு பாருங்க. இல்ல கொஞ்சம் நாள்விட்டு முடிக்கணும்னா, இந்த நித்யா குட்டிக்கு முடிங்க. என்னை விட்டிருங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல. ஐம் எ ஃப்ரீ பேர்ட்” என்றான் வேகமாக.
“ஏன் சந்தோஷ் கல்யாணம்னதும் இப்படி அலர்றீங்க? யாரையாவது லவ் பண்றீங்களா?” நேத்ராவை மனதில் வைத்து அவந்தி கேட்டாள்.
“என்னது லவ்வா? ஏன் அண்ணி காமெடி பண்றீங்க” என்றதும் நேத்ராவின் மனமும் முகமும் சுருங்கியது. “அண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ற தகுதி எனக்கில்லைன்னு தோணுது. நான் ரொம்ப ரொம்ப கெட்டவன்” என்றான் அடுத்தவர்கள் அதிர்வை கவனிக்காமல் நிதானமாக.
சந்தோஷ் என தாய் அதட்ட, “அட, விடுங்கம்மா எல்லாரும் நம்மாளுங்க தான” என்றான்.
“ஏன் சந்தோஷ் உடம்புல எதாவது கோளாறா?” என்ற அவந்திகாவிடம்,
“உடம்புல கோளாறான்னு தெரியல அண்ணி. ஆனா, என் மனசுலதான் கோளாறு. நீங்க நினைக்கிற அளவிற்கு நான் நல்லவனில்ல அண்ணி. நான் ஒரு ட்ரக் அடிக்ட் பெர்சன்” என்றதும் அனைவரும் அதிர சட்டென்று அவந்தியும், நேத்ராவும் “நிஜமா” என்பதுபோல் எழுந்தனர்.
“இப்ப இல்ல. முன்னாடி சின்ன வயசுல” என்றதும்,
‘ஓ...’ சீரான மூச்சிவிட்டு அவந்திகா அமர்ந்தாள்.
அந்த இடத்தைவிட்டு வெளியேறப்போன நேத்ராவை கைபிடித்து, “நீயும் கேட்கலாம் நேத்தி” என தன்னருகில் அமரவைத்தான்.
ஏனோ சந்தோஷின் இந்த உரிமையான தொடுதல் பிடித்திருந்தது. ‘இவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா? இதை அவன் உணரவே இல்லையா? இல்லை மற்றவர்களிடம் சகஜமாக இருப்பதுபோல் செய்கிறானா’ என நினைத்து குழம்பினாள். எதுவாகினும், அவனுடனிருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க எண்ணி அமைதியானாள்.
அதே சமயம் அவந்திகா, புவனேஸ்வரியின் கண்கள் அதை படம்பிடிக்கத் தயங்கவில்லை.
“அப்ப நான் நைன்த், அண்ணன் ப்ளஸ்டூ படிச்சிட்டிருந்தான். அண்ணனுக்கு டாக்டராகணும்னு ஆசை. ஏன் லட்சியம்னுகூட வச்சிக்கலாம். என்னோட நடவடிக்கையால எல்லாம் மாறிருச்சி. அவனோட டாக்டராகணும்ற ஆசையை மாத்தினது நான். அப்பா அரசியல் கன்ஸ்ட்ரக்ஷன்னு பிஸியா இருந்தாங்க. அம்மாவுக்கு போஸ்டிங் காஞ்சிபுரத்தில். அவங்களால எங்களை சரிவர கவனிக்க இயலாத டைம். இதுல யாரையும் குறைசொல்ல முடியாது. நாங்க படிச்சது சென்னையில் ஹாஸ்டலோட சேர்ந்த, பெரிய தனியார் பள்ளியில். கண்ணுக்குத் தெரிஞ்சி எவ்வளவு நல்லது இருக்கோ, கண்ணுக்குத் தெரியாம அவ்வளவு கெட்டதும் இருக்கும். வீக்லி ஒன்டைம்தான் வீட்டுக்குப்போறது. ஹாஸ்டல் பசங்க மூலமாதான் ட்ரக்ஸ் பழக்கம் ஏற்பட்டுச்சி. அதுல இருந்து சின்னச்சின்ன பொய்ல ஆரம்பிச்சி நிறைய மறைக்க ஆரம்பிச்சேன். அண்ணன் ப்ளஸ் டூன்றதால படிப்புல கான்சென்ட்ரேட் பண்ண, அது எனக்கு இன்னும் வசதியா போய் வீட்டுக்குப் போறதையும் அவாய்ட் பண்ணினேன். கூடிய சீக்கிரமே அது அண்ணன் மூலமா முடிவுக்கும் வந்திருச்சி.”
“ஒருநாள் போதைமருந்து விஷயமா, எனக்கும், இன்னும் இரண்டு பசங்களுக்கும் ஹாஸ்டலுக்குள்ள சண்டையாக, ட்ரக்ஸ் கொடுக்கறவனை ஒன்றிரண்டு டைம் பார்த்திருந்ததால, நானே வாங்கிக்கறேன்னு சொல்லி, ஹாஸ்டலைவிட்டு வெளியே போயிட்டேன். அங்க இங்கன்னு அலைஞ்சி, ஹாஸ்டல்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, அவங்களை கண்டுபிடிச்சி போனா பணம் கேட்டாங்க. என்கிட்ட இல்லன்னதும், யார் என்னன்னு விசாரிச்சப்ப வீட்டுக்கு தெரியக்கூடாதுன்னு, தப்பான அட்ரஸ் சொன்னேன். அவங்களும் இவன் எதுக்கும் தேறமாட்டான்னு சொல்லி விரட்டியடிசசாங்க. நான் போகாம அடம்பிடிச்சி கேட்டதும் கோவத்துல சின்னப்பையன்னு விட்டா எங்களையே முறைக்கிறியான்னு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
“அண்ணன் என்னைக் காணோம்னு ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டிருக்கான். அவனுங்க பதில் சொல்லாம முனகினதும், கொஞ்சம் சத்தம்போட்டு விஷயத்தை வாங்க, நிஜமா சொல்லு என் தம்பியாடான்னு கேட்டு, அவங்க ஆமாம்னு சொன்னதும் யார் என்னன்னு விசாரிக்க, அவங்களுக்கு அரைகுறையா தெரிஞ்ச விஷயத்தை கேட்டு, ஸ்கூல் யூனிபார்ம் சொல்லி வழியெல்லாம் விசாரிச்சி என்னைக் கண்டுக்கிட்ட டைம் நான் அரை உயிரா இருந்தேன்.”