• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
21


காலைநேர உணவிற்குப்பின் வைஷ்ணவி, வெங்கடேஷ், நேத்ரா வந்தபொழுது, கார்த்திக் அவசர வேலையென்று வெளியே சென்றிருந்தான்.

மாலை ஆறுமணிக்கு திருமண வரவேற்பு, அந்த பெரிய ஏசி மஹாலில் நடைபெறுவதால், அலங்காரம் முதல் சமையல் வரை அனைத்தும் தரமானவர்களாகப் பார்த்து ஒப்பந்தத்தில் விட சந்திரனுடன், சுந்தரேசனும் மேற்பார்வை பார்க்க மண்டபத்திலில் இந்தார்கள்.

மதியத்திற்கு நித்யாவுடன் சேர்ந்து அவந்திகா, வைஷ்ணவி, நேத்ரா சந்தோஷ், என இளைஞர் பட்டாளம் சமையல் செய்ய ஆயத்தமாக, எந்த கவலையும் இல்லாமல் அரட்டை அடுப்படியில் நடக்க, புவனேஸ்வரியின் கண்டிப்பு காற்றில் பறந்துபோனது.

“அவந்தி! கார்த்திக் சார் உன்னை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கறார் போல” என்ற வைஷ்ணவியிடம்,

“ஹ்க்கும் எங்கண்ணன் கண்ணுக்குள்ள வச்சி பார்க்கிறானோ, இல்லையோ, எங்கண்ணி கண்மை வச்சி நல்ல்லா பார்த்துக்கறாங்க” என அண்ணியின் கால்வாரினான்.

“சந்தோஷ்ஷ்...” என அவந்திகா மிரட்ட,

“அண்ணி உண்மை சுடும்...” சொல்லி முடிக்குமுன் சூடான கரண்டியை அவன் கையில் வைத்தாள் அவந்திகா. “ஆ...ஐயோ சூடு. புவன்ஸ் காப்பாத்துங்க” என்றலறினான்.

“என்னடா கத்திட்டிருக்க?”

“சுட்டுருச்சி புவன்ஸ்.”

“சமையல்னா சும்மாவா, சூடு கீடு படத்தான் செய்யும். இதுக்கெல்லாமா கத்துறது?” என்றதும், பல்லைக்கடித்தவன், “புவன்ஸ் சூடு தெரியாம படல. அண்ணி வச்சிட்டாங்க” என்றதும் ஈஸ்வரி மருமகளைப் பார்த்தார்.

“அத்தை உண்மை சுடும்ல. அதான் சுட்டுருச்சி” என்றாள் அப்பாவியாக முகம் வைத்து.

“அம்மா அண்ணி வெரி பேட்மா. பேசாம மூணுவருஷத்துக்கு முன்னாடி பார்த்த, அந்தப் பொண்ணையே நாம முடிச்சிருக்கலாம்” என்றான்.

“சந்தோஷ்! இப்ப ஏன் இந்த பேச்சி?” என தாய் அதட்ட,

“ஏன் முடிச்சிருக்க வேண்டியதுதான. அவ்ளோ பெரிய இவளா அவ” என அவந்தி முகம் சுழித்தாள்.

“அச்சோ! அண்ணி அப்படி சொல்லிராதீங்க. அவங்க அம்மாவோட ஹீரோயின்” என்றதும் “நிஜமாகவா?” என மாமியாரைப் பார்க்க, ‘ம்...’ என தலையசைத்ததும், “அப்புறம் ஏன் என்னை முடிச்சீங்க? உங்க ஹீரோயினையே முடிச்சிருக்கலாம்ல?”

“என்னடா நீ? ஹீரோயின்னா டாப்ல இருப்பாங்க தான. நமக்கு அது செட்டாகுமா?”

“ஏன் உங்களுக்கென்ன குறைச்சல்? இல்ல உங்க பையன் லூசனுக்குத்தான் என்ன குறைச்சல்? நீங்க ஒரு கலெக்டர். உங்க பையன் சிபிஐ ஆபீஸர். எனக்கு எழுதின கவிதையை அவளுக்கு எழுதி கரெக்ட் பண்ணியிருக்கலாம்ல?”

“ஹ்ம்... பண்ணியிருக்கலாம்தான் அப்படி செஞ்சிருந்தா அவ ஏத்துக்கிட்டு இருப்பாள்னு என்ன நிச்சயம்? படிச்சிட்டு லூசுன்னு நினைச்சி கிழிச்சிப் போட்டிருக்கலாம்ல.”

“அதெல்லாம் இவங்களை நேர்ல பார்த்தா, கண்டிப்பா பிடிக்கும்” என்றாள் நம்பிக்கையாக.

“அப்ப ஏன் அவந்தி, உனக்கு மட்டும் என்னை பிடிக்கலைன்ற?” கார்த்திக்கின் திடீர் குரலில் திரும்பிப் பார்க்க, கணவனின் கண்களுள் கட்டுண்டவள், கனக்கச்சிதமான உடையுடன், திடகாத்திர உடலமைப்பில், அழகாய் இருந்தான். பார்த்ததும் மனதில் ஒட்டும் வண்ணம் நின்றிருந்தவனை, ‘இவங்க எப்ப வந்தாங்க?’ என்பதுபோல் பார்த்தாள்.

“ம்...சொல்லு? யாரோ பொண்ணுக்கு பிடிக்கும்னு சொல்ற. நான் தாலிகட்டின ஒய்ஃப், உனக்கு ஏன் பிடிக்கல?”

“அ...அ... அது” என தடுமாற...

“எ...எ... எதுமா?” என்றான் அவளைத் தூண்டும் விதமாக.

“அதான் நீங்க ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணினீங்கள்ல அப்புறம் ஏன் என்னை மேரேஜ் பண்ணுனீங்க? அவளையே முடிச்சிருக்கலாம்ல?” என வேகவேகமாக வார்த்தைகளைக் கொட்டினாள்.

‘அப்ப இதுவரை அந்தப்பெண் இவள்தான்றது தெரியாதா? வீட்ல யாரும் சொல்லலையா? அதான் இந்த குதிகுதிக்கிறாங்களா மேடம்’ என்றெண்ணியவன் மனைவியிடம் வம்பிழுக்கவென்று... “ஹ்ம்... என்ன பண்றது நாம விரும்புறதை விட, நம்மளை விரும்புறது கிடைச்சா, நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. இங்க நான் விரும்பினதும் கிடைக்கல. என்னை விரும்பினதும், தூரமா நின்னு வேடிக்கை காண்பிக்கிது” என்றான் நிதானமாக ஏக்கப் பெருமூச்சுடன்.

கார்த்திக்கின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்க வழியில்லாமல் அனைவரும் சிரிக்க,

‘லூசு! எல்லார் முன்னாடியும் லூசன்றதை நிரூபிக்கிறாங்க பாரு. ஹையோ! மானம் போகுதே’ என உள்ளுக்குள் தவித்து மாமியாரின் பின் ஒழிய, மனைவியின் முகபாவனையைப் பார்த்து சிரித்து விசிலடித்து, அடுப்படிவிட்டு வெளியேறும் போது, “புவன்ஸ் மண்டபம் வரை போயிட்டு வர்றேன்” என்றான்.

“அத்தை சாப்பிட்டுட்டுப் போகச்சொல்லுங்க.”

தன்னிடம் நேரடியாக கேட்காமல் தாயிடம் தூது அனுப்பியதால், கோவத்தில், “அதையும் சேர்த்து அவளையே கொட்டிக்கச் சொல்லுங்க” என்று கிளம்பிவிட்டான்.

“பார்த்தீங்களாத்தை? இதுவே கார்த்திக்னா இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டுப் போவாங்களா? என்மேல கோவம் வந்தால் கூட, அது அக்கறையால வந்ததாதான் இருக்கும். இந்த லூசனை நான் ஏத்துக்கணுமாம். சரியான சிடுமூஞ்சி. ஐ ஹேட் ஹிம்” என்று மாமியாரிடம் பொரிந்தாள்.

மனைவியை திட்டிவிட்டு நகர்ந்தவன், “சே... ஏன்டா இப்படி அடிக்கடி சொதப்புற” என்று அவளை சமாதானப்படுத்த எண்ணி திரும்பி வந்தவனுக்கு, மனைவியின் வார்த்தைகளனைத்தும் காதில் விழ சிரித்தபடி “உண்மையில் லூசன்தான்டா நீ” என திரும்பினான்.

“அச்சோ! இவங்க புருஷன் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலை” என குடும்பமே கார்த்திக், அவந்திக்குத் தெரியாமல் தலையிலடித்துக் கொண்டது வேறு கதை.

மதிய உணவு முடித்து சற்றுநேரம் அனைவரும் ஹாலில் அமர, “ஷப்பா! இனிமேல் இந்த சந்தோஷ் பயலை யார்கிட்டயாவது கோர்த்துவிட்டுட்டா, என் கடமை முடிஞ்சிரும்” என்று ஈஸ்வரி மகனருகில் வந்தமர்ந்தார்.

“ஒய் புவன்ஸ்? உங்க பையன் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா? உடனே முடிக்கணும்னா, இந்த நேத்திக்கு பாருங்க. இல்ல கொஞ்சம் நாள்விட்டு முடிக்கணும்னா, இந்த நித்யா குட்டிக்கு முடிங்க. என்னை விட்டிருங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல. ஐம் எ ஃப்ரீ பேர்ட்” என்றான் வேகமாக.

“ஏன் சந்தோஷ் கல்யாணம்னதும் இப்படி அலர்றீங்க? யாரையாவது லவ் பண்றீங்களா?” நேத்ராவை மனதில் வைத்து அவந்தி கேட்டாள்.

“என்னது லவ்வா? ஏன் அண்ணி காமெடி பண்றீங்க” என்றதும் நேத்ராவின் மனமும் முகமும் சுருங்கியது. “அண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ற தகுதி எனக்கில்லைன்னு தோணுது. நான் ரொம்ப ரொம்ப கெட்டவன்” என்றான் அடுத்தவர்கள் அதிர்வை கவனிக்காமல் நிதானமாக.

சந்தோஷ் என தாய் அதட்ட, “அட, விடுங்கம்மா எல்லாரும் நம்மாளுங்க தான” என்றான்.

“ஏன் சந்தோஷ் உடம்புல எதாவது கோளாறா?” என்ற அவந்திகாவிடம்,

“உடம்புல கோளாறான்னு தெரியல அண்ணி. ஆனா, என் மனசுலதான் கோளாறு. நீங்க நினைக்கிற அளவிற்கு நான் நல்லவனில்ல அண்ணி. நான் ஒரு ட்ரக் அடிக்ட் பெர்சன்” என்றதும் அனைவரும் அதிர சட்டென்று அவந்தியும், நேத்ராவும் “நிஜமா” என்பதுபோல் எழுந்தனர்.

“இப்ப இல்ல. முன்னாடி சின்ன வயசுல” என்றதும்,

‘ஓ...’ சீரான மூச்சிவிட்டு அவந்திகா அமர்ந்தாள்.

அந்த இடத்தைவிட்டு வெளியேறப்போன நேத்ராவை கைபிடித்து, “நீயும் கேட்கலாம் நேத்தி” என தன்னருகில் அமரவைத்தான்.

ஏனோ சந்தோஷின் இந்த உரிமையான தொடுதல் பிடித்திருந்தது. ‘இவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா? இதை அவன் உணரவே இல்லையா? இல்லை மற்றவர்களிடம் சகஜமாக இருப்பதுபோல் செய்கிறானா’ என நினைத்து குழம்பினாள். எதுவாகினும், அவனுடனிருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க எண்ணி அமைதியானாள்.

அதே சமயம் அவந்திகா, புவனேஸ்வரியின் கண்கள் அதை படம்பிடிக்கத் தயங்கவில்லை.



“அப்ப நான் நைன்த், அண்ணன் ப்ளஸ்டூ படிச்சிட்டிருந்தான். அண்ணனுக்கு டாக்டராகணும்னு ஆசை. ஏன் லட்சியம்னுகூட வச்சிக்கலாம். என்னோட நடவடிக்கையால எல்லாம் மாறிருச்சி. அவனோட டாக்டராகணும்ற ஆசையை மாத்தினது நான். அப்பா அரசியல் கன்ஸ்ட்ரக்ஷன்னு பிஸியா இருந்தாங்க. அம்மாவுக்கு போஸ்டிங் காஞ்சிபுரத்தில். அவங்களால எங்களை சரிவர கவனிக்க இயலாத டைம். இதுல யாரையும் குறைசொல்ல முடியாது. நாங்க படிச்சது சென்னையில் ஹாஸ்டலோட சேர்ந்த, பெரிய தனியார் பள்ளியில். கண்ணுக்குத் தெரிஞ்சி எவ்வளவு நல்லது இருக்கோ, கண்ணுக்குத் தெரியாம அவ்வளவு கெட்டதும் இருக்கும். வீக்லி ஒன்டைம்தான் வீட்டுக்குப்போறது. ஹாஸ்டல் பசங்க மூலமாதான் ட்ரக்ஸ் பழக்கம் ஏற்பட்டுச்சி. அதுல இருந்து சின்னச்சின்ன பொய்ல ஆரம்பிச்சி நிறைய மறைக்க ஆரம்பிச்சேன். அண்ணன் ப்ளஸ் டூன்றதால படிப்புல கான்சென்ட்ரேட் பண்ண, அது எனக்கு இன்னும் வசதியா போய் வீட்டுக்குப் போறதையும் அவாய்ட் பண்ணினேன். கூடிய சீக்கிரமே அது அண்ணன் மூலமா முடிவுக்கும் வந்திருச்சி.”

“ஒருநாள் போதைமருந்து விஷயமா, எனக்கும், இன்னும் இரண்டு பசங்களுக்கும் ஹாஸ்டலுக்குள்ள சண்டையாக, ட்ரக்ஸ் கொடுக்கறவனை ஒன்றிரண்டு டைம் பார்த்திருந்ததால, நானே வாங்கிக்கறேன்னு சொல்லி, ஹாஸ்டலைவிட்டு வெளியே போயிட்டேன். அங்க இங்கன்னு அலைஞ்சி, ஹாஸ்டல்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, அவங்களை கண்டுபிடிச்சி போனா பணம் கேட்டாங்க. என்கிட்ட இல்லன்னதும், யார் என்னன்னு விசாரிச்சப்ப வீட்டுக்கு தெரியக்கூடாதுன்னு, தப்பான அட்ரஸ் சொன்னேன். அவங்களும் இவன் எதுக்கும் தேறமாட்டான்னு சொல்லி விரட்டியடிசசாங்க. நான் போகாம அடம்பிடிச்சி கேட்டதும் கோவத்துல சின்னப்பையன்னு விட்டா எங்களையே முறைக்கிறியான்னு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

“அண்ணன் என்னைக் காணோம்னு ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டிருக்கான். அவனுங்க பதில் சொல்லாம முனகினதும், கொஞ்சம் சத்தம்போட்டு விஷயத்தை வாங்க, நிஜமா சொல்லு என் தம்பியாடான்னு கேட்டு, அவங்க ஆமாம்னு சொன்னதும் யார் என்னன்னு விசாரிக்க, அவங்களுக்கு அரைகுறையா தெரிஞ்ச விஷயத்தை கேட்டு, ஸ்கூல் யூனிபார்ம் சொல்லி வழியெல்லாம் விசாரிச்சி என்னைக் கண்டுக்கிட்ட டைம் நான் அரை உயிரா இருந்தேன்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“என்னை அந்த நிலையில பார்த்தப்ப, அவன் அழுத அழுகை, என் கண்முன்னே நிற்குது. வந்த கோவத்துல அந்த ரவுடிங்களை அடிக்கப்போக, அவனுங்க இரண்டுபேர், இவனோ சின்னப்பையன். கோவத்துல பலமும் அதிகமிருந்திருக்கும்னு நினைக்கிறேன். முடிஞ்சளவுக்கு அவங்களை அடிச்சி என்னைத் தூக்கிட்டு நகரும்போது, ஒருத்தன் எங்களை நோக்கி வந்தான். அண்ணனை தட்டி கைநீட்ட, அண்ணன் நிமிர்ந்து பார்க்கும்போது, முகத்தை அடிக்குறமாதிரி வந்தவனோட அடி இடம் மாறி, நாடியில் பட்டுருச்சி. அவனை ஒரு உதைவிட அதற்குள் கூட்டம் கூட, ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க.

“ஹாஸ்டல்ல ஊருக்குப்போறதா சொல்லி, ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்குத்தான், வீட்டுக்கு தகவல் சொல்லி அப்பா, அம்மா அலறியடிச்சிட்டு வந்தாங்க. ஹ்ம்... நிறைய கவுன்சிலிங் கொடுத்து சீக்கிரமே ரெகவரானேன்.”

“அதனோட பாதிப்புதான் அண்ணனுக்கு இந்த போதைமருந்துன்னு ஒண்ணு இல்லாமலே பண்ணனும்னு. இனிமேல் இதை காரணமாவச்சி எந்த குழந்தைகளும் பாதிக்கக்கூடாதுன்னு தான், தன்னுடைய டாக்டர் படிப்பு கனவை தூக்கிப்போட்டு, இதையே லட்சியமாக்கிட்டான். ஒரே இடத்திலிருந்து வேலை பார்க்க நினைச்சவனை, இப்ப ஒவ்வொரு நாளும் யாரையாவது பிடிக்கப்போறேன்னு, ஊர் ஊரா காடுகளுக்குள்ள சாப்பாடில்லாம, தூக்கமில்லாம சுத்தும்போது, என்னால்தான்ற குற்றவுணர்ச்சி என்னை சாகடிக்குது. எப்படி அந்த சின்ன வயசுல பழகினேன்னு இப்பவரை தெரியல. அதுக்கப்புறம் எங்கண்ணன் என்ன சொல்றானோ, அதைத்தான் செய்வேன். அதனாலதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்” என்றான்.

சந்தோஷ் சொல்லி முடித்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

‘என்ன மிஸ்டர் சி.என். நீங்க அவ்ளோ நல்லவரா என்ன?’ மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்த சி.என்னை விரட்ட மனமில்லை அவளுக்கு. அந்த பதினேழு வயதில், பொறுப்பான அண்ணனாய் தன் தம்பியின் உயிர் காத்து, தாயிடமும் பொறுமையாக சொன்னவனைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

அழுகுரல் கேட்டு திரும்பியவர்களுக்கு, ஈஸ்வரியின் அழுகை மனதை உலுக்க, ஆளாளுக்கு சமாதானப்படுத்த விழைந்தார்கள்.

“என்னாலதான் என் பையனுக்கு அந்த நிலைமை. அப்பா, அம்மா யாராவது ஒருத்தர் கூடவே இருந்திருக்கலாம். இது முடியாதுன்னும் போது ஹாஸ்டல்ல சேர்க்காம, வீட்டுலயே ஆள்வச்சி கவனிச்சிருக்கலாம். பெரிய ஸ்கூல்னு பார்த்த எங்களுக்கு, அங்க உள்ள பலதரப்பட்ட பசங்களோட குணம் தெரியாம போயிருச்சி. அரைகுறை உயிரோட இவனைத் தூக்கிட்டு வந்ததா சொன்னப்ப, என் உயிரே போயிருச்சி. என்ன சம்பாதிச்சி, என்ன புண்ணியம்? என் பிள்ளைங்க கூட இருந்து வளர்க்க முடியலையே. சரி வேலையை விட்டுரலாம்னு வீட்ல சொன்னா, சந்தோஷ் இனி தப்பு பண்ணமாட்டான். அதனால, உங்க வேலையை விடவேண்டாம்னு பிடிவாதமா சொல்லிட்டான் சி.என்.”

“அத்தை அதான் சரியாகிருச்சே. அப்புறமென்ன?”

“அதனால ஒண்ணுமில்லம்மா. இப்ப கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். அந்த பழக்கம் திரும்ப வந்திருச்சின்னா, ஒரு பொண்ணோட லைப் ஸ்பாய்லாகிரும்னு, இல்லாத ஒண்ணை நினைச்சி எங்களை கஷ்டப்படுத்துறான்.

“புவன்ஸ் ஒய் க்ரையிங் பேபி?”

“போடா. நீ கல்யாணம் பண்ணிப்பேன்னு என்னைக்கு சொல்றியோ, அப்பதான் இந்தக் கண்ணீர் நிற்கும்.

“அத்தை அதெல்லாம் பண்ணிப்பாங்க. இது என்னோட பொறுப்பு இல்ல சந்தோஷ்?”

“அதான் இல்லன்னு சொல்லிட்டீங்களே அண்ணி. அப்புறம் என்ன?”

“ம்... நக்கலு” என்றவள் “நல்லா யோசிங்க சந்தோஷ். உங்க அண்ணனாலதான் டாக்டராக முடியலை. அவங்க ஒய்ஃப் எனக்கும் அந்த தகுதியில்லை. பேசாம ஒரு டாக்டரை மேரேஜ் பண்ணி, உங்கண்ணனோட ஆசையை நிறைவேற்றலாமே?”

தாயின் மடியிலிருந்து சட்டென்று எழுந்தவனுக்கு அண்ணனின் ஆசை என்றதும், “நான் இந்த கோணத்துல யோசிக்கவேயில்ல அண்ணி. நான் இனிமேல் யோசிக்கிறேன்.”

“கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாமா?”

“கண்டிப்பா அண்ணி.”

அதுவரை அவர்களின் உரையாடலை கேட்டிருந்த ஈஸ்வரி, அவந்தியை அணைத்து நன்றி சொன்னார்.

இப்படிக் கேட்கவேண்டும் என்று நினைக்கவில்லை அவந்திகா. திடீரென்று அதுவே வாய் வார்த்தையாக வர, அது அனைவருக்கும் சாதகமாகவே அமைந்து, ஒரு நல்ல காரியத்திற்கு வித்திட்டது.

நேத்ராவிற்குள் பலவித யோசனைகள், சந்தோஷின் சிறுவயது கஷ்டத்திற்கு அவன் பொறுப்பில்லை என்றாலும், ‘திருமணத்திற்கு டாக்டர் பார்க்கச் சொன்னதும், சந்தோஷ்கு ஏன் என் நியாபகம் வரல? அப்ப என்னோடது ஒன்சைட் லவ்வா? ஒன்சைட் லவ் என்பது வேல்யூவே இல்லாத குப்பையாச்சே’ என மனதினுள் கலங்கினாள்.

‘என்ன இருந்தாலும் சந்தோஷ் ஓர் எட்டாத சூரியன். அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி அனைவரும் நல்ல பொஸிஷனில், நல்ல பேக்ரௌண்டுடன் இருக்க, தனக்கு அவந்தியின் தோழி, மிடில்க்ளாஸ் பேமிலியில் இருந்து வந்த டாக்டர் என்ற ஒன்றைத் தவிர, எந்த ஒரு அடையாளமும்ம் இல்லாதவள். அவனெங்கே, நானெங்கே?’ என்றே தோன்றியது. தோன்றிய மறுநிமிடம் தன் ஆசைகளை தனக்குள்ளேயே புதைத்து மூடினாள்.

“அவந்தி எப்ப இருந்து நீ புத்திசாலியான?”

“அவங்க எப்பவும் புத்திசாலிதான் வைஷு. உன்னோட சேர்ந்ததால வேணும்னா கொஞ்சம் டல்லடிக்கலாம்” என்றான் அவள் கணவன்.

“வைஷு எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்?” என்ற அவந்தியை, என்னவென்று வைஷ்ணவி கேள்வியாய் பார்க்க, “இல்ல உன் ஹஸ்பண்ட்கு பேசத் தெரியும்னு இதுவரை சொல்லவேயில்லை?” எண்ணி எண்ணி பேசும் வெங்கடேஷை அவந்திகா கிண்டலடிக்க,

“அது அவந்தி எப்பவாவது ஒரு டைம் லைட்டா” என இருவிரல்களை மேலும் கீழுமாக வைத்து காண்பித்தாள்.

“அதென்ன லைட்டா பீர் அடிப்பாங்கன்னு சொல்ற மாதிரியிருக்கு?”

“அச்சோ! நானா? பீரா? நான் அம்மாபிள்ளை. அம்மாவுக்கு தெரிஞ்சது நான் காலி.”

“இவங்க இப்படித்தான் அவந்தி. சந்தைக்குப்போகணும். ஆத்தா வையும். காசு குடு பரட்டைன்ற, டயலாக் பேசுற சப்பாணி ரேஞ்சில பேசிட்டிருப்பாங்க.”

“ஹ்ம்... எல்லாம் நேரம். நீ நடத்துமா” என்று மட்டுமே சொல்ல முடிந்தது வெங்கடேஷால்.

“சரி சரி எல்லாரும் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் நாலுமணிக்கெல்லாம் ப்யூட்டிஷியன் வந்திருவாங்க. அவந்தி குட்டியா ஒரு தூக்கம் போடு” என்று அவளுடன் வைஷ்ணவி, நேரத்ராவை அனுப்ப, சந்தோஷுடன் வெங்கடேஷை அனுப்பினார்.

மாலை மண்டபமே விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. மிகச்சிலரையே அழைத்திருந்தாலும், அனைவர் சார்பிலும் வந்த அந்த மிகச்சிலரே, மிகப்பெரிய கூட்டமானது.

மணமக்களாய் நின்றிருந்த கார்த்திகேயன்-அவந்திகா இருவர் ஜோடியும் மற்றவர் கண்படும் அளவிற்கு பொருத்தமாக மனதைக் கவர்ந்தார்கள். “என்ன இருந்தாலும் நீ சூப்பர்தான் அழகி.” மனைவியிடம் குனிந்து காதோரம் கிசுகிசுத்தான்.

நாணமெனும் பூக்கள் நங்கையவளின் முகத்தில் பூத்து, அவளையே ரசத்திருந்த கார்த்திக்கை கிறக்கப்பார்வை பார்க்க வைத்தது. “ஹேய் அழகி! இது ஸ்டேஜ்” என்றதும் புரியாமல் நிமிர்ந்து பார்த்தவளுக்கு கணவனின் காதல் பார்வையில், வெட்கம் வந்து தலைகவிழ்ந்தாள். “நாம தனியா இருக்கும்போது இப்படிப் பார்த்தா நல்லாயிருக்கும்.”

‘ம்...’ என முறைத்தவள், “ஆள் வர்றாங்க. வந்தவங்களைப் பாருங்க பாஸ்” என்றாள்.

இதன்பின் சந்தர்ப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று சந்தோஷை கண்களுள் நிரப்பிக்கொண்டு, அவன் பார்க்காத சமயம், அவனையே கவனித்திருந்தாள் நேத்ரா.

தனக்காக ஒருத்தி உருகாமல் உருகுவது தெரியாமல், அண்ணனின் திருமண வரவேற்பில் எல்லாமாக நின்றிருந்தான் சந்தோஷ்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top