• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
20



முழு உரிமையை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சின்னச்சின்னதாய் வார்த்தைச் சீண்டல்களில் அவளை வெட்கப்பட வைக்க அவன் காத்திருக்க, இவளோ! ‘என்னவாகிற்று இவளுக்கு? போய்த்தான் தீருவேன் என்பதாய் ஏனிந்த திடீர் மனமாற்றம்? ஒருவேளை அன்பு பற்றித் தெரிந்துவிட்டதோ?’

ஆடை மாற்றி வந்து அருகில் படுத்தவன் அவளின் வழக்கமாக கையைப் பிடித்துக்கொள்ள, கையை வெடுக்கென்று உருவினாள்.

“என்னமா? கை பிடிச்சிக்கலன்னா உனக்குத் தூக்கம் வராதே. எதுவாயிருந்தாலும் ஓரம்கட்டி நிம்மதியா தூங்கு.”

சட்டென்று எழுந்தமர்ந்தவள் கண்கள் சிவப்பேறியிருக்க. “என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும்னு நினைக்கிறீங்க? அவங்களைப் பழிவாங்கணும். என் கண்முன்னால என் குடும்பத்தைக் கொன்னவங்களைப் பழிவாங்கணும். அதுவரை எனக்குத் தூக்கம் வராது.”

“மொழி ஏன் திடீர்னு? நான் பார்த்துக்கறேன்மா நீ தூங்கு.”

“உங்களால் ஒண்ணும் செய்யமுடியாது. அவன் சி.எம்கு நிற்கப்போறானாம். எம்.எல்.ஏவா இருந்தப்பவே எதுவும் செய்ய முடியல. இப்ப சி.எம்னா.? நான் தோத்துட்டேனா? அவனைப் பழிவாங்க முடியாதா? இந்த பதவிக்கே இத்தனை கொலைனா.. சி.எம் ஆனா... நாட்டையே அழிச்சிருவான்.”

“மொழி உன்னைத் தோற்க விடமாட்டேன். அதுக்குள்ள எதாவது பண்ணிரலாம். நீ அமைதியாயிருமா” என்றான் கனிவாய்.

“எப்படி அமைதியா இருக்கிறது? திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமத்துல, சொத்துக்காக சொந்த தங்கச்சி குடும்பத்தை கொன்னுருக்கான் ஒருத்தன். அடுத்து அவன் ரவுடியாகி அரசியல்வாதியாகி... இன்னும் எத்தனையெத்தனை கார்மேகம்! ஜெயராம்களோ! நான் ஊருக்கே போறேன்” என்றாள் அடமாக.

“நீ அங்க போய் என்ன செய்யப்போற மொழி? தனியா போராட முடியும்னு நினைக்கிறியா? எந்த ஆதாரமும் இல்லாமல் போய் நிற்கிறது பைத்தியக்காரத்தனம். தயவு செய்து ஒரு பத்து நாள் வெய்ட் பண்...”

“ஆமா நான் பைத்தியக்காரிதான். நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேன்ல. கண்டிப்பா நான் பைத்தியம்தான். கல்யாணம் குடும்பம்னு என்னை ஒரு பந்தத்துல இழுத்துவிட்டு, என் லட்சியத்தை முழுசா கெடுத்துட்டீங்க. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ” என்று கத்த...

‘ஆமா. இதுக்கு முன்ன ஐ லவ் யூன்னு கத்துன மாதிரிதான்.’ மனதினுள் முனகி, “எந்தப் பைத்தியமும் தன்னைத்தானே பைத்தியம் சொல்லாது” என முடிக்கு முன் தலையணை அவன் மார்பைப் பதம்பார்க்க, “இங்க பார் வன்முறை நல்ல பொண்ணுக்கு அழகில்ல. அதுவும் உனக்கு செட்டே ஆகல. சோ பிரச்சனையிலிருந்து விலகிக்க. உன் கண்முன்ன நீ நினைச்ச எல்லாமே நடக்கும்.”

“நான் இங்கயிருந்தா நிஜமாவே எல்லாத்தையும் விட்டு விலகிருவேன். என்னது எல்லாமே அங்கதான் இருக்கு.”

“அப்ப நான்?” வாய்வரை வந்த வார்த்தைகளை மென்று “அப்ப இங்க இருக்கமாட்ட?”

‘ம்...’ என்ற தலையசைவில் பெருமூச்சு விட்டவன், தன் செல்லை எடுத்து மற்றவர்கள் செல்லும் ப்ளைட்டில் இடம் கேட்க இருக்கு என்றதும் அதிலேயே புக் செய்து அவளிடம் திரும்பி, “இப்ப ஹேப்பியா மொழி. உன் ஊருக்கு நீ போகப்போற. இப்பவாவது தூங்குறியா?”

“நிஜமா?”

“உன் முன்னாலதான புக் பண்ணினேன்.”

“உங்களுக்கு வருத்தம் இல்லையே?”

“நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற மொழி? எனக்கு வருத்தம் இல்லைன்னா? எப்படிச் சொல்றது?” அவளின் தலை வேறுபுறம் திரும்ப... அவளைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்து, “இப்ப நீ என் ஒய்ஃப். நீ சொல்லு நான் வருத்தப்படணுமா? என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாள்னு சந்தோஷப்படணுமா? எதையும் யோசிக்காம படு. நாளைக்குக் காலையில பத்து மணிக்கு டிக்கெட் போட்டுருக்கேன். குட் நைட்” என்று கண்மூடி படுத்துக்கொண்டான்.

அவளோ கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பல நேரங்களில் இளங்கதிரின் பொறுமை திருவை வியக்க வைக்கிறது. இதோ தன்னுடைய புலம்பலுக்கு இரண்டே நிமிடங்களில் தீர்வு சொல்லி தன் வருத்தத்தை மறைத்து... ‘இவனுடன் வாழ என்ன தடுக்கிறது என்னை?’ தன் மனபாரம் குறைந்தால் மட்டுமே மற்றவை சாத்தியம் என்று தோன்றியது. மெல்ல அவனின் கைபிடித்து கணவன் காணுமுன் கண்மூடினாள்.

அச்செயலில் சின்னதாகச் சிரிப்பு எழ அவளின் தலைகலைத்து “குட் நைட்” என்றான்.

காலை சீக்கிரமே எழுந்த திருமொழி பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பரபரப்புடன் எடுத்து வைக்க, அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தவன். “என்னை விட்டுட்டுப் போறதுல ரொம்பத் தீவிரமாயிருக்க போல?” என்றான்.

கையில் எடுத்த புடவையுடன் அப்படியே நின்றது சில வினாடிகளே.. தன்னை சமாளித்து “நான் வரும்போதே திரும்பிருவேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். நீங்க கூட சம்மதம்னு சொன்னதா நினைவு. இப்ப தடுக்கிறதுல நியாயமே கிடையாது.”

“நான் எப்ப உன்னைத் தடுத்தேன். நீ தாராளமா போகலாம். போகாதன்னு சொல்லி கையைப் பிடிச்சி ஒண்ணும் தடுக்கலையே. ஏன் பிடிச்சி தடுக்கணுமா?”

“இங்க பாருங்க” என விரல் நீட்டியவள் டக்கென்று மடக்கி, “பேக்கிங் முடிஞ்சது நான் கிளம்புறேன்” என்றாள்.

“ஹேய் ஏர்போர்ட் எப்படி பழிவாங்கப் போற?”

“இளா அத்தான் வருவாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கண்டந்துண்டமா.. இல்ல அப்படிப் பண்ணினா சீக்கிரம் செத்திருவாங்க. வேற எதாவது பண்ணுவோம்.”

“அப்ப எல்லாமே மிஸ்டர்.இளநாதன்கிட்டதான் இருக்கு. அப்புறம் அங்க நீ எதுக்கு?”

“ஹலோ நாங்களும் சில ப்ளான்ஸ் வச்சிருக்கோம். முடிஞ்சா தண்டனை இல்லன்னா ஒரேடியா...” எனும்போது அவள் கண்களில் ஒருவித வெறி.

“சரி நீ கிளம்பு” என்றவனுக்குள் யோசனைகள் பல.

ஏர்பேக்குடன் வெளியே வந்தவளை தமிழரசியுடன் சேர்ந்து மற்றவர்களும் கேள்வியாய் பார்த்தனர்.

“எங்க கிளம்பிட்ட?” என்றார் காமாட்சி.

“நானும் உங்களோட வர்றேன் அத்தை.” அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்க்கவும், “சித்தி எப்பவும்போல மொழி உங்களோடவே இருக்கட்டும்” என்றான் இளங்கதிர்.

“ஏன்பா இவ ஏதாவது பழிவாங்குறேன்னு... ஏற்கனவே ரெண்...” என ஆரம்பித்து நிறுத்தினார்.

“சே..சே அப்படிலாம் இல்ல சித்தி. கொஞ்ச நாளைக்கு உங்களோடவே இருக்கணும் ஃபீல் பண்றா.”

“எது அவளோட அம்மாவை விட்டுட்டு என்னோடவா?”

“அதானே!” என்பதாய் அனைவரும் அவனைக் காண... “அவங்க பழைய மாதிரியே இருக்கட்டும் சித்தி. இப்போதைக்கு அதுதான் எல்லாருக்கும் நல்லது. சில விஷயங்கள் வெளிப்படையா சொல்ல முடியாது சித்தி. என்னை நம்பிப்போங்க. உங்க மருமகளை அப்படியே விட்றமாட்டேன்” என்று தமிழரசியிடம் வந்தவன், “என் ஒய்ஃப்கிட்ட எதுவும் கேட்காதீங்க அத்தை. சின்ன மனசஞ்சலம் மட்டும்தான். சில காரணங்களுக்காக அங்க இருக்கிறதும் நல்லதுதான்.”

“ஆனா அண்ணா...?”

“ஸ்ஸ்.. எதுவும் பேசக்கூடாது. நீங்க எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க போதும். வாங்க சாப்பிட்டுக் கிளம்பலாம்.”

உணவு முடித்து இரண்டு காரில் கிளம்ப தன்னருகே அமைதியாக அமர்ந்திருந்தவளிடம், “மேடமோட ஆசையை நிறைவேத்தியாச்சி. இப்ப ஹேப்பிதான? என்ன மொழி பேசாம சைலண்ட்டாயிருக்க?” என வம்படியாக பேச்சுக் கொடுத்தான்.

“சாரி!”

“கேட்கல?”

“சாரீஈஈஈ... சொன்னேன். இப்ப கேட்டுச்சா?”

“யா பட் எதுக்கு?”

“சொல்லணும் தோணிச்சி” என்றவள் குரல் இறங்க...

“ஓகே அக்செப்ட் பண்ணியாச்சி.” அதன் பின் எந்த வார்த்தையும் இல்லை அவர்களிடம். அவன் முகம் பார்க்க பின் குனிய என்றிருந்தவளிடம் “என்னமா? ஏன் முகத்தை முகத்தைப் பார்க்கிற?”

கணவனின் கரிசனமான வார்த்தையில் “அ..அது உங்களுக்குக் கோபமாயில்லையா?”

“தெரியல.”

‘என்ன பதில்’ என்பதாய் அவனைக் காண... “நிஜமாவே தெரியலமா. கோபம் சின்ன வயசுல நிறைய வரும். பயங்கரமா சண்டை போடுவேன். அப்புறம் அப்படியே அடங்கிருச்சி. இப்ப நானே நினைச்சாலும் கோபப்பட முடியல. அதுவும் உன்கிட்ட...” தனக்குள் குற்றவுணர்ச்சி தாக்க அமைதியாக வந்தாள்.

ப்ளைட் செக்கிங் செல்லுமுன் பிரஷாந்திடம் ஆயிரத்தெட்டு அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வீடு வந்தவனை குருமூர்த்தி பிடித்துக்கொண்டார்.

“ஏன்டா மருமகளை ஊருக்கு அனுப்பின? முன்னாடியே சொல்லியிருந்தா பேசி சமாதானப்படுத்தியிருப்பேன்ல. இங்க பார்டா கண்ணா நீ தமிழ்நாடு போகக்கூடாதுன்னுதான் மருமகளை இங்க வரவழைச்சது. அவளை உன்னோடவே வைக்க முடியலையாடா?”

“அதுக்காகப் போறேன் சொல்றவளை தடுக்கவாப்பா முடியும். அவ எனக்கு டைம்லாம் குடுக்கலப்பா. சொன்னா புரிஞ்சிக்கோ. பதினைந்து வருஷமா மனசுல ஊறிப்போன லட்சியம் பெருசா, பதினைந்து நாள் முன்ன வந்த புருஷன் பெருசான்னு வாக்குவாதம் பண்ண நான் தயாரா இல்லப்பா. அவள் நினைச்சிருந்தா இந்த ரிசப்ஷன்கு வராமலே இருந்திருக்கலாம். இல்ல கட்டாயத்தாலி தானன்னு தூக்கிப் போட்டிருக்கலாம். ஏன்பா செய்யல? அவளுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. அதே நேரம் அவ வாழ்க்கையில் நடந்ததை மறக்கவும் முடியல. இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கிறா. அதான் அங்கேயே இருக்கட்டும்னு அனுப்பிட்டேன்.”

“அப்ப உன் நிலை?”

“பார்க்கலாம்பா!” என்று நகர குருவிற்கோ தவிக்கும் நிலை. மருமகள் அங்கேயிருந்தால் கண்டிப்பாக மகன் அங்கு செல்வான் என்பது உறுதி. அவரும் அதே இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில்தான் இருந்தாரோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மதுரை விமான நிலையம் இறங்கி வாடகை காரில் செல்லும்பொழுது அவர்களை ஒரு கார் தொடர்ந்தது.

தமிழரசியையும் கயலையும் வாடிப்பட்டியில் இறக்கிவிட வீட்டிற்கு அழைத்தவரிடம் திருமொழி பேசும் முன், “அக்கா மச்சான் உன்னைப் பார்த்துக்கச் சொல்லி என்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவைப் பார்க்காமல் இருக்கிறது நல்லது” என்றான்.

‘என்ன பாவம் செய்தேன்?’ என்பதாய் அடிபட்டப் பார்வை தமிழரசியிடம். கயல் அவனைத் திட்ட வாயெடுக்கையில் மகளைக் காண்பித்து அமைதிப்படுத்தி, “நீ கிளம்புமா மங்கை. உன்னைப் பார்த்துக்கத்தான் உன் தம்பி இருக்கானே. இதைவிடப் பெருசென்ன இருக்கு” என்றார் மகனை அழுத்தமாகப் பார்த்தபடி.

அவனோ வெறுப்பெனும் போர்வைக்குள் அமர்ந்து, “அதான் சொல்லிட்டாங்கள்ல வாக்கா போகலாம்” என்றான்.

“பிரஷாந்த் ஏன்டா அவளை இழுக்கிற? தாயும் பிள்ளையும் பேசிட்டுதான் வரட்டுமே” என்றார் பத்மினி.

“டைமாகுதுமா. இன்னொரு நாள் வந்து சாவகாசமா பேசிக்கட்டும்” என்று அவளை காருக்கு இழுத்துச் செல்ல, அவர்கள் சென்றதும் தன்னையறியா ஒரு பெருமூச்சி தமிழரசியிடம்.

அவர்களைப் பின்தொடர்ந்த காரிலிருந்து ஒருவன் வாடிப்பட்டியில் இறங்கிக்கொள்ள, அதேபோல் தேவதானம்பட்டியில் ஒருவனும், அணைப்பட்டியில் ஒருவனுமாக இறங்கிக் கொண்டார்கள்.

“யார் இவர்கள்?”

‘கணவனுக்கு போன் செய்யவா?’ என யோசிக்கையிலேயே, “அக்கா மச்சான் லைன்ல இருக்காங்க” என்று போனைக் கொடுத்து பிரஷாந்த் நகர்ந்தான்.

“ஹேப்பியா இருக்கியா மொழி?” அவளின் ‘ம்’ல்... “சரி ஹெல்த் பார்த்துக்கோ. பழிவாங்குறேன்னு ஏடாகூடம் எதுவும் பண்ணிராத. எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்.”

“ம்...”

“உன்னோட இந்த பெரிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியுறதுக்குள்ள நாளே ஓடிரும்.

“சாரி!”

“சாரியா... ம் ரொம்ப தாராளமா கிடைக்குது. சரி பிரஷாந்தை வீட்டுக்கு அனுப்பிரு.”

“ம்...”

“ஏன்னு கேட்கமாட்டியா?”

“அவன் வீட்டுக்கு அவன் போறதுக்கு ஏன் கேள்வி கேட்கணும்?”

“உன் தம்பி பற்றிப் பேசினா மட்டும் ஆயிரத்தெட்டு க்ராஸ் கொஸ்டின் கேளு. எனக்கு எப்பவும் ‘ம்’ மட்டும்தான். ஹ்ம்..” என்ற பெருமூச்சி அவனிடம்.

‘ஏன் இந்த ஏக்கம்?’ கேட்கத் தோன்றினாலும் “வச்சிரவா?” என்றாள்.

“கட் பண்றதுலயே இரு. பை டேக் கேர்” என்று போனை வைத்தான்.

“ஆமா இவங்களை கட் பண்ணிட்டு பட்டத்து ராணியாகப் போறோம். வச்சிரவா கேட்டா உடனே கட் பண்ணிருறதா. பேட் பாய்!” மனதிற்குள் திட்டி போனை பிரஷாந்திடம் கொடுத்து, “நீ வீட்டுக்குக் கிளம்புடா. அப்பாவும் அம்மாவும் தனியா இருப்பாங்க.”

“ஏன் நீ தனியாயிருக்க மாட்டியா?”

“ப்ச்.. நானும் அவங்களும் ஒண்ணா? அவங்க உன்னைப் பெத்தவங்கடா. அண்ணனும் இங்க இல்லன்றப்ப நீதான துணையாயிருக்கணும்.”

‘உனக்குதான்கா என் துணை தேவைப்படும்’ என நினைத்தாலும், “சரி புரியுது. நான் வந்த கார் வெளியிலதான் நிற்குது. கிளம்புறேன்.”

அவன் சென்றதும் “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு திரு” என்றார் காமாட்சி.

“அத்தை...”

மருமகளின் தயக்கம் உணர்ந்து “நான் எதுவும் கேட்கல. உன் புருஷன் அனுமதியோடதான் உன் அம்மாகிட்டக் கூட போகாம இங்க வந்திருக்க. உன்னை நல்லா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. ரெஸ்ட் எடு திரு. மதியம் பூப்பறிக்க ஆள் வந்திருவாங்க.”

“அம்மா வந்துட்டா உங்களை விட்டுருவேனா அத்தை. அம்மா முக்கியம்தான் அதே அளவு எனக்கு நீங்களும் முக்கியம் அத்தை.”

“நீ என்னை விட்டுருவன்னு சொல்லல திரு. அம்மா ரொம்ப வருஷம் கழிச்சி கிடைச்சிருக்காங்கள்ல அதான் சொன்னேன். ஸ்... வேற எதுவும் பேச வேண்டாம் போய் படு.”

“என்ன அத்தை டல்லாயிருக்கீங்க?” கயல் கேட்க,

“அன்புவை நினைச்சா மனசெல்லாம் படபடன்னு வருது கயல். பெத்த தாய்னு தெரிஞ்சும்... என்ன தப்புப் பண்ணிணேன் தெரியலையேமா. இதுல மங்கை வேற புருஷனோட வாழாம... யாரோ செஞ்ச பாவம் என் பிள்ளைங்க அதிலிருந்து வெளில வரமுடியாம அல்லாடுறாங்க. பழிவாங்கப் போறாளா அவ. எப்படிப் பழிவாங்குவா? ஒண்ணுமில்லாமல் இருந்தப்பவே அவனுங்க யாருக்கும் பயப்படல. இப்ப உச்சாணிக் கொம்புல இருக்காங்க. இப்பவும் அவங்க தேடுதல் லிஸ்ட்லதான் நாம இருக்கோம். இதுல அவங்க கண்ணுல இவள் பட்டாள்னா... எந்த நம்பிக்கையில் மருமகன் இங்க அனுப்பினார் தெரியலையே?”

“அத்தை அமைதியாயிருங்க. அண்ணா அனுப்பிருக்கான்னா எதாவது காரணமிருக்கும்.”

“தலையெல்லாம் பாரமாயிருக்கு கயல்மா. நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம். எல்லாரும் நல்லாயிருக்கணும்னு நினைச்சது தப்பா? இல்ல தம்பி சகவாசம் சரியில்ல நம்மளோட இருந்தா திருந்திருவான்னு வீட்டுக்குள்ள உறவாட விட்ட, உன் மாமா தப்பா? நயவஞ்சகர்களுக்குத்தான் நாடே சப்போர்ட் பண்ணுது. செத்துட்டாங்கன்னு நினைச்ச பிள்ளைங்க பக்கத்துல இருந்தும்...”

கதறி அழுத அத்தையைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “அண்ணா எல்லாத்தையும் சரி பண்ணிருவான். எனக்கு முழு நம்பிக்கையிருக்கு. நீங்க படுங்கத்தை. நான் கடைக்குப் போயி மாத்திரை வாங்கிட்டு அப்படியே நைட் சமையலுக்கு வாங்கிட்டு வர்றேன்.”

பணம் எடுத்துக்கொண்டு வாசல் செல்லப்போகையில் “கயல்” என்ற தமிழரசியின் அழைப்பில் திரும்ப... “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க” என்றார்.

“ஏன் அத்தை இந்த டைம் இந்த கேள்வி?”

“மங்கை உன்னோட இளையவ கயல்.”

“கல்யாணத்துக்கும் வயசுக்கும் சம்பந்தமில்லைன்னு டீச் பண்ற உங்களுக்குத் தெரியாதா? எனக்கென்னவோ பிடிக்கலை அத்தை. எப்பவுமே பழி கொடுக்கப்போற ஆடு ஃபீல்தான் வருது. என்னைக்காவது அடையாளம் கண்டுபிடிச்சி அவனுங்க வரும்போது, நான் மட்டும்னா பரவாயில்ல. புருஷன் பிள்ளைன்னு... வேண்டாம் அத்தை. நான் எந்த ஆசையும் வளர்த்துக்கிறது கிடையாது. நீங்க படுங்க வர்றேன்” என்று விறுவிறுவென்று செல்ல... அவள் செல்வதைத் திகைத்தபடி பார்த்திருந்தார் தமிழரசி.

“அண்ணா ஒரு தலைவலி மாத்திரை தாங்க” என்று மருந்துக்கடையில் வாங்கி காசுகொடுத்து நகர,

“நாலு நாள் எங்க போயிருந்த கயல்?” என்ற கேள்வியுடன் அவளை மறித்தாற்போல் நின்றிருந்தான் பிரகாஷ்.

‘யார் நீ?’ என்பதாய் அவள் பார்வையிருக்க...

“எங்க போயிருந்தீங்க கேட்டேன்?”

“ஹலோ! இப்படி லூசுத்தனமா பேசுறதை நிறுத்துறீங்களா? நாங்க எங்க போனா உங்களுக்கு என்ன சார் வந்தது? நானும் ரொம்ப ஹார்சா பேசவேண்டாம் பார்த்தா ரொம்பத்தான் ஓவரா போறீங்க.”

“டேய் நண்பா! நல்லவேளை இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. கடை பாதிக்குமேல மூடியிருக்கு. மத்த நாளாயிருக்கணும் உன்னோட மானம் வானம் தொட்டிருக்கும்டி.”

“அப்பு” என்று பல்லைக்கடித்து, “உங்க மேல உள்ள அக்கறையில்தான் கேட்டேன்” என்றான் கயலிடம்.

“என்மேல அக்கறை காட்ட நீங்க யார் சார்? கண்டவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு என்ன இருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் நகர்றீங்களா?”

“கயல் ப்ளீஸ் உன்னைப் பாதுகாக்கிறது என்னோட கடமை.”

“என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சிதான் பேசுறீங்களா?” பற்களைக் கடித்தபடி கடிந்தவள், அப்புவிடம் திரும்பி, “உங்க தங்கையாயிருந்தா இப்படித்தான் நடுரோட்டுல ஒருத்தனை பேசவிட்டுக் கேட்டுட்டிருப்பீங்களா? பக்கத்து பக்கத்து வீடுகள்தான் சொந்தங்களை விட பெருசுன்னு சொல்வாங்க. ஆனா, நீங்க இந்தப் பொறுக்கியோட சேர்ந்து என்னை ரோட்ல கேவலப்படுத்துறீங்க?”

“கயல் தப்பா எதுவுமில்லமா. நான் என்ன சொல்ல வர்றேன்னா...”

திணறிய நண்பனை கையமர்த்தி, “இவன் எப்பவும் உன் நலம்விரும்பிதான் கயல். இப்பக் கூட வேண்டாம்தான் சொன்னான். நான்தான் கேட்டே ஆகணும்னு வந்தேன்.”

“யார் சார் நீங்க? என்ன லவ்வா? அதுக்கு நான் சரிப்படமாட்டேன். சோ, சீன் கிரியேட் பண்ணாம பாதையை விட்டு விலகுங்க.”

திரும்பவும் அவளை வழிமறித்து, “கேள்விக்குப் பதில் கயல்?”

“வேண்டாம். லிமிட் தாண்டிப் பண்றீங்க. இங்கயிருந்து போகலன்னா ஊரைக்கூட்டுவேன்” என விரல்நீட்டி மிரட்டினாள்.

“எதை வேணும்னாலும் கூட்டு கயல். இப்படிச் சொல்லாமல் எங்கேயும் போகாத. நீ இல்லாத இந்த நாலு நாளும் உனக்கும், உன் அத்தைக்கும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பைத்தியக்காரன் மாதிரி சுத்திட்டிருக்கேன் தெரியுமா?”

‘ஸ்ஸ்..’ என தலையைப் பிடித்து திரும்பவும் மெடிக்கல் சென்று, “இன்னொரு தலைவலி மாத்திரை கொடுங்கண்ணா” என்று வாங்கி நடக்க... அவளைத் தொடர்ந்தவனிடம் கோபமாகத் திரும்பியவள், “உங்களுக்கு என்கிட்ட என்ன வேணும்?” என்றாள்.

“உன் பாதுகாப்பு!” பட்டென்று விழுந்த வார்த்தையில், சட்டென்று வாயடைத்துப் போனாள் கயல்விழி.

“கயல் லவ் பண்ணுன்னு உன் பின்னால சுத்துறளவுக்கு பொறுக்கி கிடையாது. உங்க ரெண்டு பேரோட பாதுகாப்புக்காக மட்டும்தான். அதுக்காக லவ் இல்லையா கேட்டுறாத. ஏன்னா நிறைய.. ரொம்ப ரொம்பவே இருக்கு.”

ஒரு அலுப்பு வர, “எனக்கு எதிலும் இன்ட்ரெஸ்ட் கிடையாது. என் பின்னாடி சுத்தினா நேரம்லயிருந்து எல்லமே வேஸ்ட்.”

“கயல் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ. நான் தப்பானவன் கிடையாது. நடந்த தப்பை சரிபண்ணதான் முயற்சி பண்றேன்.”

“புரியல?”

“புரியும்போது புரியும். இப்ப சொல்லு கயல்? எங்க போனீங்க?”

சொல்லக்கூடாதென்று நினைத்தாள்தான் இருந்தும் சொன்னாள். “ஹைதராபாத்ல என் அண்ணன் கல்யாண ரிசப்ஷன்.”

“ஓ... நல்லபடியா முடிஞ்சிதா?”

“ம்...”

“சரி கயல் ஜாக்கிரதை! எதுவானாலும் அப்புகிட்டச் சொல்லு. ஏன் சொல்லணும் நினைக்காத கயல்.”

அவனின் கெஞ்சல் மொழி எதுவும் புரியாவிட்டாலும் சரியென்று தலையசைத்து நடக்க ஆரம்பித்தாள்.

“கயல் ஐ லவ் யூ சொல்ல ஆசைதான். பட், இப்பயில்ல” என்று கண்சிமிட்டிச் சிரிக்க, தன்னை மீறி அவளின் முகம் புன்னகைத்து அச்சிரிப்புடனே நடக்க... ‘யாகூ’ என குதித்தான் பிரகாஷ்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top