• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
20



இரத்தம் வழிந்த கையை மறு கையால் அழுத்தியபடி கண்களில் கண்ணீருடன் வந்தவளைப் பார்த்த சுதாகரும் சுபாஷும் அவளை நோக்கி வர... தகப்பன் முன் நின்றவள், “அவங்க... உங்க மருமகனை எங்கப்பா?” என்றாள் தவிப்புடன்.

“இதோ வர்றோம்னு இப்பதான்மா வெளிய போனாங்க. சரி நீ ஏன் இப்படி நிற்கிற? யாராவது எதாவது சொன்னாங்களா? முதல்ல ரெத்தத்தை நிப்பாட்டலாம் வா.” அவரின் தொடர் கேள்வியைக் கேட்க அவள் அங்கில்லாமல் போக, “டேய் என்னன்னு பாருடா. ரெத்தம்டா” என பதறிக் கலங்க... அடுத்த நொடி தங்கையைத் தொடர்ந்திருந்தான் சுபாஷ்.

சுற்றிலும் தேடி கார் பார்க்கிங்கிலும் தேடியவள், கார் அங்கில்லை என்றதும் வேகமாக காம்பௌண்ட் தாண்டி வெளியே செல்ல, அவள் வேறு புறம் திரும்பிய சமயம், கார் ஹாஸ்பிடல் வந்தது.

காரை நிறுத்தி வாசலில் நின்றிருந்த சுதாகரிடம் வந்த சாரகேஷ், “இது உங்க பொண்ணோட நகைகள். மச்சான் குடுக்கச் சொன்னார்” என்று கொடுத்து அவர் பதில் பேசுவதற்குள் டிரைவர் சீட்டிலமர்ந்து காரை எடுத்தான்.

தற்செயலாக திரும்பிய வித்யா காரைக்கண்டு முகம் மலர்ந்து வேகமாக காரின் எதிரே வந்து நிற்க... அவளின் திடீர் வரவில் தடுமாறிய சாரகேஷ் சட்டென வண்டியை நிறுத்தினான். கண்மூடியிருந்த ஆனந்தும் வரலட்சுமியும் அதிர்ந்து “என்னாச்சி?” எனக்கேட்க.. எதிரில் கைநீட்டி அவர்களைப் பார்க்கச் சொன்னான் சாரகேஷ்.

காரிலிருந்தபடி எட்டிப் பார்த்தவர்களுக்கு உள்ளம் பதறியது. கைகளில் இரத்தத்துடன் கணவனைப் பார்த்த சந்தோஷத்தில் மலர்ந்த முகத்தில் அதையும் மீறிய கண்ணீர். கசங்கிய புடவையும் கலைந்த தலையுமாகக் கண்ணீருடன் நின்றவளைக் கண்ட நொடி வேகமாகக் கதவைத் திறந்து மனைவியவளிடம் வந்து நின்று, அதே வேகத்தில் தன்னிடமிருந்த கைக்குட்டை எடுத்து, பிடித்திருந்த கையை எடுத்து அதில் வைத்து அழுத்த, சாரகேஷ் எடுத்து வந்த மெடிக்கல் கிட்டிலிருந்து, பஞ்சில் டிஞ்சர் வைத்து க்ளீன் செய்து ப்ளாஸ்டர் போட்டுவிட்டான்.

அதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை அவள். வார்த்தையில்லா அவனது அன்பில் கணவன் முகத்தையே பார்த்திருக்க, ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வி அவன் முகத்திலென்றால், “எங்க போறீங்க?” என்றாள் வாய்திறந்து.

பதில் சொல்லாமல் அவன் நிற்க... “நான் மிஸஸ்.வித்யானந்த் ஞாபகமிருக்கா? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியிலிருந்தே” என்றபடி கணவன் முகம் பார்க்க, அவனின் சந்தோஷத் தலையாட்டலில், “என்னை இப்படி விட்டுட்டுப் போகத்தான் ஒன்றரை வருஷமா காத்திருந்து தேடி வந்து கல்யாணம் பண்ணனீங்களா?” என கேட்க,

“தியா!” தன்னைப் புரிந்த மகிழ்ச்சி அவன் முகத்தில்.

“என்னை நம்புறியா கேட்ட நீங்க, என்னோட பதிலைக் கேட்காம என்னை நம்பாம விட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்?”

“நீ..நீ உன் அண்ணிகிட்ட...” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தொண்டைக்குள் வார்த்தை திக்க, கலங்கிய கண்களை நாசூக்காகத் துடைத்தபடி, “அதான் நான் மட்டும்...”

“நீங்க மட்டும்... என்ன நீங்க மட்டும்? அப்ப உங்க லைப்கு நான் வேண்டாமா? ஒரு விஷயம் முழுசா கேட்காம வந்தா இப்படிதான். நான் அப்படிப் பேசினா எதாவது காரணமிருக்கும்னு ஏன் உங்களுக்குத் தோணல? அப்படி உங்களை விட்ருவேன்னு எப்படி நினைக்கலாம்? ஏன்டி அப்படிப் பேசுறன்னு ஏன் உரிமையா கேட்கத் தோணல? என்னைப் பார்த்தா மத்தவங்க சொல்கேட்டு ஆடுற மாதிரியிருக்கா?” என்று கண்களைக் கசக்கினாள்.

அவளைத் தொடர்ந்து வந்த அனைவரும் ‘ஆ’வென பார்த்திருக்க...

“ஹேய் செல்லம் தப்புதான் சாரி. அழாத ப்ளீஸ். நான் எப்பவோ செய்த தப்புக்கு நீயும் தண்டனை அனுபவிக்கிறது பிடிக்கல. நம்ம வீட்டுக்குப் போலாமா மிஸஸ்.வித்யானந்த்?” என்றான்.

“அப்ப என்னை விட்டுத் தனியா போகலாம்ன்ற ப்ளான்ல இருக்கீங்களா? அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது.”

அவ்வளவு நேரமிருந்த மனபாரம் இறங்கி புன்னகைக்க, “இந்தச் சிரிப்புக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன்” என்று மாமியாரிடம் சென்று, “வாங்கத்தை போகலாம்” என்றாள்.

“ஹேய் அண்ணி! கலக்கிட்டீங்க” என்று கட்டியணைத்த அனு நன்றி சொல்ல...

“உங்கண்ணன் சொன்னதும் வண்டியைக் கட்டிட்டுக் கிளம்பினவங்கதான நீங்கள்லாம். வீட்டுக்கு போயி கவனிச்சிக்கிறேன்” என்று எச்சரிக்கை அனுப்பினாள்.

“தாராளமா கவனிச்சிக்கோங்க. நீங்க கவனிக்கலன்னாதான் ஃபீல் பண்ணுவேன்” என்றாள் சிரித்தபடி.

வித்யாவின் மனமோ, ‘இந்த உறவுகளே போதும்’ என்றது.

அவர்களிடம் வந்த சுதாகர், “நீங்க கிளம்புங்க. மத்ததை போன்ல பேசிக்கலாம்” என, அதையே சுபாஷும் சொன்னான்.

வாணி அவர்களிடம் மன்னிப்பு கேட்க... வரலட்சுமி அவர் கைபிடித்து, “உங்க பயம் நியாயமானதுதான். என் பையன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. அதைவிட அதிகமா என் மருமகள் மேல” என்றார் வித்யாவைப் பார்த்தபடி.

“ஹேய் அண்ணி! ஹேப்பி மேரீட் லைப்” என்று வித்யாவின் கன்னத்தில் கீர்த்தி முத்தமிட்டாள்.

“ஏம்மா மச்சினிச்சி, உன் அண்ணன் காதுல புகை வருதா பாரு” என்று சாரகேஷ் கிண்டல் செய்ய...

“வரட்டும்னுதான கிஸ் பண்றதே” என்றதும் ‘அப்படியா’ என்பதாய் ஆனந்த்தின் பார்வையிருக்க... ‘அப்படியேதான்’ என பதில் பார்வை கொடுத்தாள் பாவையவள். சிரிப்பும் கிண்டலுமாய் சில நிமிடங்கள் நீடிக்க, அந்த சந்தோஷமான சூழ்நிலையை ரசித்திருந்தான் ஆனந்த்.

அதைப் பார்த்திருந்த கார்த்திகாவிற்கு, அவர்களின் சந்தோஷத்தில் தான் இல்லாமல் தனித்திருப்பது என்னவோ போலிருக்க, இத்தனைக்குப் பிறகும் பிடிவாதம் பிடிப்பது முட்டாள்தனமென்று புரிந்தது.

“இந்தாங்க மச்சான் தண்ணி. நீங்களும் தங்கச்சியும் முதல்ல முகம் கழுவி ஃப்ரெஷாகுங்க.” சாரகேஷ் கேன் தண்ணீரை ஆனந்திடம் கொடுக்க, அதை வாங்கி முகம் கழுத்தென்று கழுவி, மனைவியிடம் வந்தவன் அவளின் ஒரு கையில் தண்ணீர் ஊற்ற, முகம் கழுவியதும் அவள் குடிக்கத் தண்ணீர் கேட்க... “கேன் வாட்டர் வேண்டாம் தியா. அம்மா அனுவுக்கு வச்சிருக்கிற தண்ணி குடுங்க” என்று தாயிடம் கேட்டு வாங்கிக் கொடுத்தான்.

மகளிடம் வந்த சுதாகர் நகையை நீட்ட, அதையும் தாயையும் அண்ணியையும் ஒரு பார்வை பார்த்தவள். “எனக்கு இது வேண்டாம்ப்பா. இவங்களுக்கும் வேண்டாம்ன்றதாலதான உங்ககிட்ட குடுத்துட்டு கிளம்பினாங்க. நாங்க கிளம்பறோம்ப்பா” என்றவள் கணவனிடம் திரும்பி, “போகலாமாங்க?” எனக்கேட்க. வாணியும், கார்த்திகாவும் தங்கள் தவறை எண்ணி தலைகவிழ்ந்தார்கள்.

“வித்திமா” என்ற அப்பாவிடம்... “ப்ளீஸ்ப்பா. எனக்கு எப்ப வாங்கிக்கணும்னு தோணுதோ அப்ப வந்து கேட்டு வாங்கிக்கறேன்ப்பா. வர்றேன்மா. வர்றேன்ணா. வர்றேன் கீர்த்தி” என்று கார்த்தியைப் பார்த்தவள், “கிளம்புறேன் அண்ணி” என்றாள்.

நாத்தனாரின் அவ்வார்த்தைப் பிரிவில் மனம் கலங்க வித்யாவைப் பார்த்தாள் கார்த்திகா.

“பச்சையம்மா பை” என்று ஆனந்த் சொல்ல... அவளோ அவனை முறைத்தாள்.

“மச்சான் யாரை அப்படி சொன்னீங்க?” என்ற சுபாஷிடம், “எல்லாம் உங்க அத்தை பெத்த பெரிய பொண்ணைதான்” என்று சிரித்து, “பச்சை மிளகாய் சாப்பிட்ட காரத்துல கொஞ்சம் மிச்சம் இருக்கு. சோ, பழைய சோத்துக்கு உப்பு சேர்த்து கடிச்சிக்கோங்க சுபாஷ்” என்று அறிவுரை சொல்லி, “பச்சையம்மாள்ன்ற பச்சைப்புள்ளையை உங்க கையில ஒப்படைக்கிறேன் சுபாஷ். அதில் வர்ற கண்... சாரி தண்ணீர் கூட பச்சைக்கலர்லதான் வரணும்” என்று வராத கண்ணீரைச் சுண்டிவிட... ஆனந்தின் பாவனையில் அனைவரும் சிரித்தார்கள்.

சுபாஷிடம் வந்த கார்த்தி, “என்னை டீஸ் பண்றாங்க கேட்டுட்டுப் பல்லைக் காட்டுறீங்களா?” என்று முறைக்க...

“பச்சையம்மா பேர் அழகாயிருக்கு கார்த்தி. கருவாச்சியை விட்டுட்டு இதை வச்சிக்கிறேன்” என மனைவியைக் கலாய்த்து, “மச்சான் உங்க பெயர் செலக்ஷன் சூப்பர்” என்றான்.

“சுபாஷ் அதுக்காக பச்சை உடம்புக்காரியான பச்சையம்மா, பச்சையா திட்டினாலும் வாங்கிக்கணும். வர்றேன் பச்சை மிளகாய். ஓ.. சாரி பச்சையம்மா” என்று காரிலேறி, “குட்டி மருமகளே பை” என்று மாமியாரின் கையிலிருந்த குழந்தைக்கு சொன்னான்.

அதுவரை கணவனின் இந்த அதிரடி கலக்கல் முகத்தையே பார்த்திருந்தவள், அவன் உள்ளே உட்காருவதை உணர்ந்ததும், மாமியாரின் தோளில் சாய்ந்து கண்மூட... அங்கே சுபாஷை கார்த்திகா துரத்துவது கண்ணில்பட்டது. சின்னப் புன்னகையுடன் “வண்டியை எடுங்க சாரகேஷ்” என்று மனைவியிடம் திரும்பி, “இங்க கூட தோள் இருக்கு. சாய்ந்தால் ஒண்ணும் சொல்லமாட்டேன்.” மறைமுகமாக மனைவியை அழைத்தான்.

சட்டென்று தலை நிமிர்ந்து மற்றவர்களைப் பார்க்க, அவர்களின் அடக்கப்பட்ட சிரிப்பில் கணவனை முறைத்து, “நான் உங்க பேச்சி காய்” என்று மாமியாரின் தோள் சாய...

“நான் உன் பேச்சி இலை” என்றான் பட்டென்று.

சாய்ந்த வாக்கிலேயே ‘என்ன பதில்’ என்பதாய் ஒரு லுக்விட... “எத்தனை நாள் பழத்தையே சொல்றது. இலை பூ கிளை வேர்லாம் என்ன பாவத்த செஞ்சது.” சற்று கேலி தொணியில் தெனாவெட்டாய் கேட்க... பார்த்திருந்தவளின் விழிகளில் ஒருவித மாற்றம் நடைபெற, அதைக் கண்டவன், “இப்பவாவது இடம் மாற்றிக்கலாமே” என்றான். அவன் தோள் சாய்ந்திடத் துடித்த மனதை வெட்கம் தடுக்க விழிகள் தாழ்ந்தது.

“அண்ணி அண்ணனுக்கு ஏதோ ஆகிருச்சி. முன்னாடி அண்ணன் இப்படிலாம் கிடையாது. இப்ப இருக்கிறதுக்கு ஆப்போசிட்டாதான் நடந்துப்பாங்க.”

“ஓ... இப்ப மட்டும் எப்படி?”

“எல்லாம் உன்னைப் பார்த்ததாலயா இருக்கும் தங்கச்சி. எங்க கல்யாணம் முடிஞ்ச இத்தனை நாள்ல, அடிக்கடி சந்திக்கலன்னாலும் இவரை சிரிச்ச மாதிரி இப்பதான் பார்க்கிறேன்னா பாரேன். எங்க சிரிச்சா என் தங்கச்சியைக் கட்டிக்கச் சொல்லிடுவேனோன்னு மனுஷன் முகம் முழுக்க மிளகாயைப் பூசிக்கிட்டார். ஆக்சுவலா பச்சையம்மான்னு உங்க அண்ணிக்கு இவர் வச்ச பெயரை ஆண்பாலுக்கு மாற்றி பச்சையப்பன்னு மச்சானுக்கு வச்சிருக்கணும்” என்றான் சிரிக்காமல்.

“சாரகேஷ் இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்.”

“இவங்க சொல்றது நிஜம்தான் அண்ணி. எனக்கு விவரம் தெரிஞ்சி இவ்வளவு ஜாலியா இப்பதான் பார்க்கிறேன்” என்று தன் பங்கிற்கு அண்ணன் கால்வாரினாள்.

“பொண்டாட்டிடா!” என்றபடி சாரகேஷ் மனைவியைத் தொடுவதற்கு வர... “ஹலோ பாதை முன்னாடி” என்று கணவன் முகம் திருப்பினாள் அனு.

தன் முகத்தை வித்யா கணவன் புறம் திருப்ப, அவளின் சோர்ந்த தோற்றம் கண்டு கழுத்தில் கைவைத்துப் பார்த்து, “இன்னும் ஹீட் குறையல. கொஞ்சம் கண்மூடித் தூங்குமா. போற வழியில் ஹாஸ்பிடல் போயிட்டு போகலாம்” என்றான்.

“மறுபடியும் ட்ரிப்ஸ் வேண்டாம்ங்க” என கெஞ்ச... “சரி டேப்லட் வாங்கிக்கலாம்” என்றதும் அவன் போன் வாங்கி கீர்த்திக்கு மெசேஜ் அனுப்ப, வந்த பதிலில் திரும்பவும் மெசேஜ் அனுப்ப சில நிமிடங்கள் கழித்து வந்த பதிலில் அவளுக்கு நன்றி சொல்லி, செல்லை கணவனிடம் கொடுத்து தோள் சாய்ந்து, “அண்ணா நான் ஒரு அட்ரஸ் சொல்வேன். அங்க போயிட்டு போகலாம்” என சாரகேஷிடம் அட்ரஸ் சொன்னாள்.

“அங்க எதுக்குமா?” என பதறிய மாமியாரிடம், “ஒரு சின்ன வேலை அத்தை முடிஞ்சதும் கிளம்பிடலாம்.”

“இருந்தாலும்...”

“எல்லாமே இருக்கு அத்தை” என்று திரும்பவும் கணவனின் தோள்சாய்ந்து கண்மூடியபடி, கணவனே அறியா வண்ணம் மெல்லியதாக முத்தமிட்டாள்.

அவன் அறியமாட்டான் என்று கொடுத்த முத்தத்தை துல்லியமாக உணர்ந்தவனோ, அவள் முகம் நிமிர்த்தி ‘நிஜமா?’ கண்களால் கேட்டு... ‘ம்’ என்றவளின் சம்மதமான விழி மூடலில் “தேங்க்ஸ்” என அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் உச்சரித்து நெற்றியில் முத்தமிட்டான்.

அதில் வெட்கம் வர, சட்டென்று கணவன் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொள்ள, ஏனோ என்றுமில்லாத நிம்மதி அவனுக்குள். தன்னைப் புரிந்த, தான் நேசித்த, தன்னை இக்கனம் நேசிக்கும் மனைவியவளாளோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மருத்துவமனைக்கு பணம் செலுத்தி வீட்டிற்கு வந்தவர்களிடம் சுபாஷிணி, “எங்க மாப்பிள்ளையும் பெண்ணும்?” எனக் கேட்க...

“அம்மா அண்ணா அண்ணியைக் கூட்டிட்டு சென்னைக்கு கிளம்பிட்டாங்க” என்றாள் கீர்த்தி.

“ஏன் யாராவது எதாவது சொன்னீங்களா என்ன?” என்று அண்ணியையும் பெரிய மகளையும் பார்த்தார்.

“எல்லாம் நீங்க பெத்த பச்சையம்மாவாலயும், என்னைப் பெத்த பச்சை மிளகாயாலயும்தான் அத்தை” என சுபாஷ் கடுப்புடன் சொல்ல...

“இதென்னடா பச்சை பச்சைன்னுட்டிருக்க?” என்று சுபாஷிணி அதட்டல் போட்டார்.

“ம்... உங்க பையன் வச்ச பேருமா” என்றதும் அவர் விழிக்க... “ஆனந்த் அண்ணாவைச் சொல்றேன். செம ஜாலி டைப். உங்க பெரிய பொண்ணை எப்படிக் கலாய்ச்சார் தெரியுமா? ஹையோ அதை நீங்க பார்க்காம விட்டுட்டீங்கம்மா.” கீர்த்தி சவுண்ட் ஜாஸ்தி கொடுத்து, அக்கா மீதான தன் கோபத்தையும் காட்டினாள்.

“விளையாட்டு வேண்டாம் கீர்த்தி” என மகளை அதட்டி, “என்னண்ணா, எதாவது பிரச்சனையா?”

“பிரச்சனையா! நீ வேறம்மா, என் பொண்ணு ஹாஸ்பிடல்லயிருந்து அவ புருஷனைத் தேடி ஓடினா பாரு ஒரு ஓட்டம்” என்று சந்தோஷமாக ஆரம்பித்து மகளின் அந்நிலை கண்முன் தோன்ற முகம் வேதனையைக் காட்டியது.

“அண்ணா!”

“கையில ரெத்தத்தோட அவ புருஷன் கார் முன்னாடி நின்னு அவள் பேசின பேச்சிருக்கே, என் பொண்ணா இதுன்னு திறந்த வாய் மூடாம பார்த்தேன். அவ்வளவும் பேசிட்டு மருமகனையும் முறைச்சிட்டு காருக்குள்ள போய் உட்கார்ந்துட்டா.” சந்தோஷமாகச் சொல்லி, “இனி அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை சுபா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தங்கமா பார்த்துப்பாங்க. இல்லன்னா என் பொண்ணு பார்த்துப்பா” என்றார் பெருமையாக.

வீட்டிலிருந்த உறவினர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து, வெளியில் கேட்டவர்களுக்கு, ‘ஏதோ கிரகம் மாறுதாம் அதனால அவசரமா மாப்பிள்ளை வீடு அனுப்பியாச்சி’ என்று சொல்ல, நம்ப முடியாது பார்த்தவர்களிடம், ‘அட நம்புங்கடா’ ரேஞ்சில் நின்றிருந்தார்கள்.

தாங்கள் வந்திறங்கிய இடம் கண்ட ஆனந்திற்கு, ‘இது முக்கியமா?’ என்று தோன்றினாலும் மனைவியின் மனக்கலக்கத்தைக் குறைக்க இதுதான் சரியென்று முடிவு செய்தான்.

சென்னை வரும் வழியில் கார்த்திகாவிற்கு போன் செய்த சாதனாவிடம், அவள் நடந்ததைச் சொல்ல, அப்பொழுதுதான் தான் சொன்ன உண்மையின் விபரீதம் சாதனாவிற்குப் புரிந்தது. பிரேம் தங்கைக்கு போன் செய்து நடந்ததைச் சொல்லி, மனைவியின் முறைப்பை அலட்சியம் செய்து அவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாது வீடு வர, மாலையில் அண்ணன் வீடு வந்த சுபஸ்ரீதேவி தன் நாத்தனாரைக் கேள்விகளால் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் ஆனந்த் வித்யா மற்றவர்களைக் காரிலேயே இருக்கச் சொல்லி பிரேம் வீட்டு வாசல் வர...

“என்ன பண்ணி வச்சிருக்க சாது? ஒரு கல்யாணத்துல போய்... கடவுளே! உன்னை ஒரு பக்குவமான பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா...”

“அண்ணி!” என்று அதிர...

“என்ன அண்ணின்ற? அந்த ஆனந்த் நல்லவனா இல்லாமலிருந்தா அப்பாவும், அண்ணனும் எனக்குப் பார்த்திருப்பாங்களா? எல்லாம் விசாரிச்சிதான பேசவே ஆரம்பிச்சிருப்பாங்க. ஆக்சிடெண்ட்... அது ஒத்துக்கறேன் தப்புதான். அந்த டைம் பயத்துலயோ இல்ல தன்னையறியாமலேயோ கூட அப்படி செய்திருக்கலாம். அதுக்கு நாம வச்ச பெயர் சுயநலம்.”

“அண்ணி அவனை ஏன் நீங்க நியாயப்படுத்துறீங்க? கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நேரத்துல உங்களை அந்த நிலையில விட்டுட்டுப் போனவன் நல்லவனா?” தன் அண்ணி அவனுக்கு ஆதரவாகப் பேசுவதால் வந்த கோபம் அவளிடம்.

“சாதுமா நீ பார்த்ததான என் முகம் எவ்வளவு மோசமா இருந்ததுன்னு. முகமும் சரியில்லாம கண்ணும் தெரியாத ஒருத்தியை யார் ஏத்துப்பாங்க?”

“ஏன் என் அண்ணன் இல்ல?”

“உன் அண்ணன் வேற. எல்லாரும் அப்படியிருக்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. அதனால கெட்டவங்களாகிடுவாங்களா? ஏன் நீயே உன் அண்ணன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சொன்னதுக்கு சண்டை போட்டு கல்யாணம் முடிஞ்சி கூட உடனே பார்க்க வரலதான?

“அ..அது” என்று திணற.

“பதில் சொல்ல முடியலைல்ல. இதுவே கல்யாணத்துக்குப் பிறகு ஒய்ஃப்கு இப்படியாகியிருந்தா இந்த மாதிரி விட்டுட்டுப் போயிருக்கமாட்டாங்களோ என்னவோ! என்னோட வாழ்க்கை உன் அண்ணனோடன்னு இருக்கிறப்ப ஆனந்தை குறை சொல்லி என்னாகப்போகுது? சர்ஜரிலாம் பண்ணி நான் இப்ப குறையில்லாம நல்லாதான் இருக்கேன். அந்த நேரம் உன் அண்ணன் வரலன்னாலும் எங்கப்பா, அம்மா, அண்ணா மூணுபேரும் நல்லாதான் பார்த்திருந்திருப்பாங்க. இதான் நிஜம். இதான் ப்ராக்டிகல்.”

“அதே மாதிரி நீ அவரைப் பிடிக்கலன்னு நேரே சொல்லியிருந்தா அப்பவே விலகியிருப்பார். வீடு வரை வந்து பிரச்சனையாகியிருக்காது. வீட்டுக்கு வந்தப்பவும் அவரை நீ நேரடியா மறுக்கலன்றது ஒரு பாய்ண்ட். என் அடையாளம் மாறினதால, நான்தான் அவர் மறுத்த பொண்ணுன்னு தெரியாம என்கிட்ட வந்து உன்னைப் பெண் கேட்டார். அப்பதான் என்னை வெளிப்படுத்தி, நீ அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்றதை உறுதியா சொல்லவும் அடுத்த செகண்ட் மன்னிப்பு கேட்டு, இனி உங்க லைப்ல நான் வரமாட்டேன்னு போயிட்டார்.”

“தற்செயலா உன் அண்ணனை சந்திச்சப்ப அவங்க திட்டினதைக்கூட பெருசா எடுக்காம மன்னிப்பு கேட்டு, உன் கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு போயிருக்கார். இதுக்கும் மேல என்ன வேணும்? நீ சொல்லு எந்த வகையிலயாவது உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்காரா?”

இல்லையென்ற நாத்தனாரின் தலையாட்டலில்... “நீ குழம்பியது மட்டுமில்லாம, உன் ஃப்ரண்டையும் குழப்பி சண்டைபோட்டு. ஒரு விசேஷம் நடக்குற, அதுவும் கல்யாண பந்தத்துல அடியெடுத்து வச்ச அன்னைக்கே மணப்பெண்ணை மயக்கம் போட்டு பெட்ல சேர்த்திருக்காங்க. இதுக்காக யாருக்கு என்ன பதில் சொல்லப்போற? என்ன பதில் சொல்ல முடியும்? இன்னொருத்தர் வாழ்க்கையில் குறுக்கிட நாம யார் சாது? முதல்ல என்கூட வந்து அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு, ஆரம்பிச்ச நீயே அந்தப் பிரச்சனையை முடிச்சி வச்சிட்டு வந்திரு” என்றாள் அழுத்தமாக.

“அண்ணா ரெண்டு பசங்களையும் நீ பார்த்துக்கோ. நாங்க போயிட்டு நைட் வந்திடுறோம்” என்று அண்ணனிடம் பொறுப்பை ஒப்படைத்தாள்.

“தேவிமா நான் பார்த்துக்கறேன். நீ எதுக்கு?” என்ற அண்ணனிடம், “என்னை வைத்து ஆரம்பிச்ச பிரச்சனையை நானும் சேர்ந்தே முடிச்சிடுறேன்ணா” என்று நாத்தனாரின் கையைப் பிடித்து இழுத்தபடி வாசல் நோக்கித் திரும்ப, வாசலில் நின்றிருந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியுடன் கலந்த ஆச்சர்யத்துடன், “ஆனந்த்!” என்றாள் சுபஸ்ரீதேவி.

தனக்குள்ளிருந்த குற்றவுணர்ச்சி அவளின் பேச்சில் மறைந்திருக்க, சின்னப் புன்னகையுடன் நட்பாகத் தலையசைக்க... ‘இங்க ஏன்?’ என்பதாய்ப் பார்த்தவளிடம்... “நான் உங்களை மறுத்தப்ப பெண்பாவம் பொல்லாதுன்னு அம்மா சொன்னாங்க. அதுக்கப்புறம் எல்லாம் புரிஞ்சி வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டாலும், இதோ.. இன்னைக்கு உணர்றேன், பெரியவங்க எதையும் சும்மா சொல்லிரலன்னு.”

“என் வாழ்க்கையில ரெண்டு நல்ல பெண்களை மிஸ் பண்ணினது கூட, என் மனைவிக்காகன்னு புரியுது. உங்ககிட்ட மன்னிப்பு கேட்டால்தான் எங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும்னு இவ நினைக்கிறா. எல்லார் முன்னாடியும் கேட்கிறேன் என்னை மன்னிச்சிருங்க சுபா” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஆனந்த் ப்ளீஸ் கையை இறக்குங்க. அதான் ஏற்கனவே கேட்டாச்சே. பின்ன ஏன்?”

“இப்ப எங்க திருப்திக்காக அக்கா” என்ற வித்யாவைப் பார்த்த தேவி, “அதெல்லாம் வேண்டாம்மா. வெளியவே நிற்கிறீங்க. உள்ள வாங்க. சாதுமா குடிக்க எதாவது எடுத்துட்டு வா” என்று அவளை விரட்ட...

“இல்ல நாங்க கிளம்புறோம்” என்றவர்களை வலுக்கட்டாயமாக வீட்டினுள் வரவழைத்து உட்காரச்சொல்லி, “இப்ப உடம்பு சரியாகிருச்சா?” என்றாள்.

“எங்க சரியாக சுபா. அங்க நடந்த பிரச்சனையில இவளை விட்டுட்டுப் போறேன்னதும் ட்ரிப்ஸ்லாம் கழட்டி விட்டெறிஞ்சி கையிலயிருந்து கொட்டின ரெத்தத்தைக்கூட அலட்சியப்படுத்தி வந்துட்டா. வீட்டுக்கு போறதுக்குள்ள ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிடனும்” என்று மனைவியின் கையை மெல்ல வருடிக்கொடுக்க... வித்யாவோ அவஸ்தையில் நெளிந்தாள்.

“ரொம்ப நல்லது வித்யா. எங்க சாதனா பேச்சால உங்களுக்குள்ள பிரிவு வந்திருமோன்னுதான் பயந்துட்டிருந்தேன். உங்க புரிதலுக்கு ஒரு சல்யூட்.”

“அச்சோ ஏன்கா நீங்க வேற. ஒருத்தர் நம்மகிட்ட பேசுறதையும் நடந்துக்குறதையும் வச்சி அவங்களை ஜட்ஜ் பண்ண முடியலன்னா எப்படி? முதல்ல இவங்களைப் பிடிக்கல. அப்புறம்தான் பிடிச்சது” என்றாள் சிறு வெட்கத்துடன்.

“ஓ... பார்த்ததும் பிடிக்கல. பார்க்கப் பார்க்கத்தான் பிடிச்சிதா?” என்று பிரேம் இடைபுக... மணமக்கள் இருவருக்கும் அசட்டுச் சிரிப்பு வர, சில நிமிடங்கள் அவர்களைக் கேலி செய்து கொண்டிருக்கையில் சாதனா ஜுஸுடன் வர, அதை எடுத்துக் கொடுத்தபடி நாத்தனாருக்கு தேவி கண்காண்பித்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க ராஜ் சார். சாரி வித்யா” என்றாள் மனதார.

“பரவாயில்ல அண்ணி” என்றதில் சாதனா வாயடைத்துப்போக, தேவியும் பிரேமும் அவளை ஆவலாய் ஏறிட, “நீங்க என் அண்ணியோட பெஸ்ட் ஃப்ரண்ட். அதுவும் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்னு நம்புற அளவுக்கு பெஸ்ட். அதனாலதான் உங்களை அண்ணி சொன்னேன். நாங்க வந்தது அக்காகிட்ட மன்னிப்பு கேட்கத்தான். ஏன்னா இவங்களால கஷ்டப்பட்டது அக்கா மட்டும்தான். பட், உங்ககிட்ட இவங்க மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டாங்க” என்றாள் நேரடியாக.

‘அடிப்பாவி!’ என்று சாதனா பார்வையிருக்க...

“காலையிலிருந்து கார்த்தி அண்ணி அன்லிமிட்டடா போயிட்டிருக்காங்க. நிறைய வார்த்தைகள் விட்டுட்டாங்க. இன்னும் முழுசா மலையிறங்கலன்னு நினைக்கிறேன். முடிஞ்சா நீங்க இறக்கிவிடுங்க. இல்லன்னா என் அண்ணன்தான் பாவம். இதுவரை அண்ணியை ஒரு வார்த்தை கூட திட்டினதில்ல. இன்னைக்கு நடந்த களேபரத்துல, அதுவும் சேஷமமா நடந்திருச்சி.”

“அப்புறம் தேவிக்கா, இவங்களுக்காக உங்க அண்ணன் மனைவிகிட்ட கேள்வி கேட்டதுக்கு நன்றி. நீங்க சொன்னதுதான், இவங்க வந்து பெண் கேட்டப்பவே நடந்த உண்மையைச் சொல்லிட்டாங்க. அதான் உண்மையைச் சொல்லிட்டாரேன்னு, உடனே எங்க வீட்ல என்னைத் தூக்கிக் கொடுத்திடல. நல்லா விசாரிச்சிதான் பத்திரிக்கை அடிக்கவே போனாங்க. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க?”

“ஆனந்த், ரியலி வித்யா சூப்பர் செலக்ஷன் போங்க. புதுமணத் தம்பதியருக்கு என்னோட வாழ்த்துகள். சாரி திடீர்னு வந்ததால கிப்ட் பண்ணக்கூட எதுவுமில்ல.”

“அண்ணி ஒரு நிமிஷம்” என்று சாதனா உள்ளே சென்று ஒரு புடவையுடன் மஞ்சள் குங்குமம் வைத்து எடுத்து வந்து, “எதுவுமே சொல்லாம வாங்கிக்கணும். இதை வாங்கிக்கிட்டா கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்ணுவேன்” என்றதும் வாங்கி விடைபெற்று வீடு வந்து சேர மணி ஏழாகிவிட்டது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top