- Joined
- Aug 31, 2024
- Messages
- 713
- Thread Author
- #1
2
“போன வாரம் ரெண்டு நாள் லீவுல வந்திருந்தேன்டா குட்டீஸ். மகன் வந்திருக்கானேன்ற ஆசையில ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செஞ்சித்தர நானும் சும்மா வளைச்சி வாங்கிட்டேன். அப்புறம் தூக்கம் வரல. வயிறு ஃபுல் டைட்டுன்றதால உருளவும் முடியாம, புரளவும் முடியாம திணறி, சரி மொட்டை மாடியில போய் படுத்துக்கலாம்னு செல்போனும் கையுமா போயிட்டேன்.”
“உங்களுக்குத் தெரியுமா? எங்கப்பா சுதாகரனும், அத்தையும் அதான் உங்க சுபாஷிணி அம்மா ரெண்டுபேரும் கூடப்பிறந்த பாசமலர்கள். அதனாலதான் என் பெயரைக் கூட தங்கை நியாபகமா சுபாஷ்னு வச்சிட்டாங்க. தங்கச்சி தன்னைவிட்டு தூரம் போகக்கூடாதுன்னு செங்கல்பட்டுலயும், மதுராந்தகத்துலயும் டிவி ப்ரிட்ஜ் இன்னும் வீட்டுக்குத் தேவையான பொருட்களும் சேர்ந்த ஷோரூம் வச்சிருந்த எங்க மாமாவை முடிச்சாங்க.”
“அப்பவே அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வீடுகட்டி மாடிக்கு நடுவுல ஒரு குறுக்கு சுவர் கட்டி தங்கை குடும்பத்தை அங்கேயே வச்சிட்டார். இவங்க பாசத்துல பொங்கிப்போன எங்க மாமா எதையோ பேசி ரெண்டு குடும்பத்துக்கும் பகையை உண்டாக்கிட்டார். அப்போதிருந்து இப்பவரைக்கும் அந்த குடும்பத்து பொண்ணுங்க என்னை திரும்பிக்கூட பார்க்காதுங்க. நான் பார்க்க மாட்டேன்றது வேற விஷயம்” என்றான் அந்த நேரத்திலும் தன்னை நல்லவனாக்கி.
“இப்ப என்ன பிரச்சனைன்னா, நான் தூங்கப் போனேன்லயா, அன்னைக்கு நைட் ரெண்டு மணியிருக்கும். அப்ப என்மேல யாரோ தண்ணீரை தெளிச்சாங்க. யார்டா அது இவ்வளவு தைரியமான்னு வரிஞ்சிக்கட்டிட்டு எழுந்தா, அது நம்ம வர்ணபகவான். சரியா போச்சி போன்னு சொல்லி போனை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போயி கட்டில்ல படுத்துட்டேன். நல்ல தூக்கம் வேறயா. அப்படியே கண் அசர்றேன் யாரோ காலை என்மேல போட்டு, ஏய், ரொம்பக் குளிருது.. என்னை கட்டிப்பிடிச்சிக்கோன்னு ஒரு குரல் காதோரத்தில் கேட்டுது.”
“பார்ரா நம்ம கனவுல கூட பொண்ணு வருதேன்னு சந்தோஷத்துல, கனவுதானேன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது பெண்கள் மென்மையானவங்கன்னு சொல்வாங்க. அந்த கனவுப்பெண்ணும் அவ்வளவு ஷாப்ட்” என்று ரசித்தவன் மனதினுள் முதல் தடவை உணர்ந்த அந்த அனுபவம் இன்னும் உடலில் சில்லென்று இருந்தது.
“கட்டிப் பிடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு, ஏய் நீ எப்படி என்னைவிட ஹைட்டான? பட், இந்த குளிருக்கு இதான் சூப்பராயிருக்குன்னு முழுவதும் என்னுடன் ஒண்டினாள் அக்கனவுப்பெண்.”
“ஆனாலும் பசங்களா, அந்த கனவு கனவாவே இருந்திருக்கலாம். விதி ரூம்போட்டு விளையாடிச்சி!”
‘ப்ச்.. ப்ச்..’ என பிள்ளைகளின் பல்லி ஒலி சப்தங்கள் அவன் காதில் விழ, முகத்தை அப்பாவியாய் வைத்து அடுத்ததைத் தொடர்ந்தான்.
“காலையில ஏழுமணியிருக்கும் மழை பெய்ததால் நேரம் தெரியல. வெளியில் ஹாலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக எழுந்திருக்கேன், ஒரு பொண்ணு என்னை கட்டிப்பிடிச்சிப் படுத்திருக்கா. ஒரு செகண்ட் அரண்டே போயிட்டேன். யாரது என் பெட்ரூம்லன்னு பார்த்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. ஐயோ! இவ எப்படி என் ரூம்ல? வீடு ஒரே மாதிரி இருக்கிறதால மாத்தி வந்து படுத்துட்டாளோன்னு நான் பார்க்க, ஒரு பையனோட படுத்திருக்கோமேன்னு உறுத்தலில்லாம ஹாயா படுத்து தூங்குறா. அவளை எழுப்பலாம்னு போனா, அதுக்குள்ள மறுபடியும் பெல் அடிச்சது.”
“அம்மா யார் பெல் அடிக்கிறாங்க பார்க்கலாம்லன்னு கைலியை கட்டுனபடியே கதவைத் திறந்தபடி கட்டி முடிச்சிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன், அத்தையும் மாமாவும் அவங்க சின்னப் பொண்ணும். என்னடா பெரிய உலக அதிசயமா இருக்கு, நம்ம வீட்டுக்கு இவங்க வர்றாங்களா? அப்ப பகையை முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்களான்னு நினைப்பு பலவிதத்துல ஓடுது.”
“ஆனா, வந்தவங்க என்னை அந்த காஸ்ட்யூம்ல கொலை வெறியோட பார்க்க, நான் பெரிய இவனாட்டம் வாங்கத்தை. வாங்க மாமான்னுட்டு, அப்பா யார் வந்திருக்கா பாருங்கன்னு சௌண்ட் குடுக்க, எங்கப்பா ஜாகிங் முடிச்சிட்டு பக்கத்து வீட்டுக்குள்ள நுழையுறாங்க. அப்பவாவது நான் சுதாரிச்சிருக்கணும். எங்கே விதிதான் டன்டனக்கா டான்ஸ் ஆடுச்சே!”
அப்பாவைப் பார்த்து, “அப்பா அங்க எங்க போறீங்க? நம்ம வீடு இங்கயிருக்குன்னு” பாசத்தோட அழைக்க, போற வர்ற ஜனங்க நிற்க ஆரம்பிச்சிட்டாங்க.
அப்பத்தான் அடுத்த ஏழரை ஆரம்பிச்சது. “ஹேய் கீர்த்தி நைட்டே வந்தாச்சா. அதெப்படிடி திடீர்னு ஹைட்டான. குளிருக்கு சூப்பரா உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டேன்னு சொன்னப்பத்தான் நைட் என்னோட ரூம்ல நடந்தது கனவில்ல, நிஜம்னு தெரிஞ்சது.”
“ஓ மை காட்!” என பிள்ளைகள் எக்கோ கொடுக்க...
“அடக்கிரகமேன்னு அவளைப் பார்த்து, நீ எப்படி எங்க வீட்ல, என் ரூம்குள்ளன்னு சொல்லும் போதே அவளோட அதிர்ச்சி முகத்தால எனக்குள்ள ஏதோ இடறிடுச்சி.”
“என்னது? நான் உன் ரூம்லயா? நீ யாரு? நீ இங்க என்ன பண்ற? கீர்த்தி நீதான நைட் என்னோட படுத்திருந்த? அப்படின்னு அவளோட தங்கச்சிகிட்ட கேட்டாள்.”
“அக்கா நாங்க இப்பத்தான் வீட்டுக்கே வர்றோம்” என்று அசராமல் அக்காவின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாள் அவளின் பாசமலர்.
“சட்டென்று கால் நழுவ தள்ளாடி சுவற்றில் சாய்ந்தவள் பார்வை குற்றச்சாட்டோடு என் மேலேயே இருக்க.. எனக்குமே ஒண்ணும் புரியல. மாமா என்னை செவுடுகாட்டி ஒண்ணு விட்டார் பாருங்க. அப்பத்தான் தெரிஞ்சது...”
“என்ன.. என்ன தெரிஞ்சது அண்ணா?” அதுவரை சாக்லேட்டிற்காக காத்திருந்தவர்கள் கதையில் மூழ்கி ஆர்வத்தில் கேட்க...
“ம்.. என்னை அடிச்சிட்டார்ன்றது தான்.”
“ம்க்கும்.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா” என பிள்ளைகள் முனகி மேலே சொல்லச் சொல்லி சைகை செய்தார்கள்.
“அந்தப் பொண்ணு கண்ணுல தண்ணீரோட என்னை பார்வையிலேயே எரிக்கிறாள்னா, இங்க என்னோட கன்னம் அடியால எரியுது. ஆனாலும், அவளோட கண்ணீர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சி. அத்தை என்கிட்ட வந்து இங்க என்ன பண்றன்னு கேட்டாங்க.”
“அதை நான் கேட்கணும் அத்தை. எங்க வீட்ல நீங்க என்ன பண்றீங்க? ஏன் உங்க பொண்ணு என் பெட்ரூம்ல வந்து படுத்தாள்னு கேட்டுட்டேன். அவ்வளவுதான்! தவளை தன் வாயால கெடும்னு உள்ள பழமொழிக்கு சரியான சாம்பிள் பீஸ் நான்தான்.”
“என்னடா சொல்ற? நைட்புல்லா ஒரே பெட்லயான்னு?” பக்கத்து வீட்டம்மா டௌட் கேட்க, நானும் யாயான்னு கூலா பதில் சொல்லி செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டேன்.”
அதன்பின் அனைத்தும் அவன் நினைவுகளில் ஒடியது.
“சுபாஷ் தூக்கக் கலக்கத்துல ஏதோ உளறுறன்னு தெரியுது. இது உங்க வீடு கிடையாது. எப்படி உள்ள வந்த? என்றார் சுபாஷிணி.
“என்ன அத்தை உளர்றீங்க? இது எங்க வீடு” என்று உரிமையாக சொன்னான்.
“அத்தை வீட்டைத்தான் தன் வீடுன்னு பையன் உரிமை கொண்டாடுறான்பா” என கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது.
அதுவரை வீட்டுக்கு வெளியே என்னவோ என்று பார்த்துக் கொண்டிருந்த சுபாஷின் அப்பா சுதாகர் பல்லைக்கடித்தபடி கோபத்தை அடக்கி, “என்ன பண்ணிட்டிருக்கன்னு புரியுதாடா? இது நம்ம வீடு இல்ல. நல்லா பாரு” என்றார் கடுமையான குரலில்.
சுற்றிலும் பார்த்தவன் அவர்களின் குடும்ப போட்டோவைப் பார்த்து அப்படியே நிற்க, தொண்டைக்குள் எச்சில் விழுங்கியபடி, “அப்பா! சாரிப்பா. நான் நம்ம வீட்டுக்குள்ள வர்றதா நினைச்சி பக்கத்துல வீட்ல..” வார்த்தைகள் ததிங்கினத்தோம் போட ரொம்பவே திணறினான்.
“பாவம் பையன். எத்தனை நாள் தெரியாம வந்திச்சோ தெரியலையே?” கூட்டம் அவனுக்காக வருத்தப்பட்டு கிசுகிசுத்தது கூட்டம்.
“வாடா” என்று சுதாகர் வீட்டுக்கு இழுத்துப் போகுமுன் வழிமறித்த சுபாஷிணி, “என் பொண்ணுக்கு ஒருவழியை சொல்லிட்டு போங்க” என்றார்.
“என்னமா? என்ன அர்த்தத்துல பேசுறன்னு புரியல? என்ன வழியை சொல்லணும்?” புரியாமல் அவர் கேட்க...
“அர்த்தம் வேணுமா? உங்க பையன் பண்ணின அனர்த்தத்துக்கு அர்த்தத்தை நான் எங்க போய் தேடுறது. இவ்வளவு ஆனதுக்கப்புறம் என் பொண்ணை எப்படி வெளியில கல்யாணம் பண்ணிக் குடுக்க முடியும்? ஒழுங்கா உங்க பையனையே மேரேஜ் பண்ணிக்கச் சொல்லுங்க. இல்லன்னா நடக்கிறதே வேற” என்றார் கோபத்தில்.
அதுவரை அதிர்ச்சியிலிருந்த கார்த்திகா கண்ணீர் துடைத்தபடி, “அம்மா நான் எந்த தப்பும் பண்ணல. எனக்கெதுக்கு இந்த தண்டனை. தப்பு செஞ்சது இவன். அவனுக்கு தண்டனை குடுக்கிறதை விட்டுட்டு தாம்பூலம் நீட்டுறீங்க. நான்லாம் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
“போன வாரம் ரெண்டு நாள் லீவுல வந்திருந்தேன்டா குட்டீஸ். மகன் வந்திருக்கானேன்ற ஆசையில ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செஞ்சித்தர நானும் சும்மா வளைச்சி வாங்கிட்டேன். அப்புறம் தூக்கம் வரல. வயிறு ஃபுல் டைட்டுன்றதால உருளவும் முடியாம, புரளவும் முடியாம திணறி, சரி மொட்டை மாடியில போய் படுத்துக்கலாம்னு செல்போனும் கையுமா போயிட்டேன்.”
“உங்களுக்குத் தெரியுமா? எங்கப்பா சுதாகரனும், அத்தையும் அதான் உங்க சுபாஷிணி அம்மா ரெண்டுபேரும் கூடப்பிறந்த பாசமலர்கள். அதனாலதான் என் பெயரைக் கூட தங்கை நியாபகமா சுபாஷ்னு வச்சிட்டாங்க. தங்கச்சி தன்னைவிட்டு தூரம் போகக்கூடாதுன்னு செங்கல்பட்டுலயும், மதுராந்தகத்துலயும் டிவி ப்ரிட்ஜ் இன்னும் வீட்டுக்குத் தேவையான பொருட்களும் சேர்ந்த ஷோரூம் வச்சிருந்த எங்க மாமாவை முடிச்சாங்க.”
“அப்பவே அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வீடுகட்டி மாடிக்கு நடுவுல ஒரு குறுக்கு சுவர் கட்டி தங்கை குடும்பத்தை அங்கேயே வச்சிட்டார். இவங்க பாசத்துல பொங்கிப்போன எங்க மாமா எதையோ பேசி ரெண்டு குடும்பத்துக்கும் பகையை உண்டாக்கிட்டார். அப்போதிருந்து இப்பவரைக்கும் அந்த குடும்பத்து பொண்ணுங்க என்னை திரும்பிக்கூட பார்க்காதுங்க. நான் பார்க்க மாட்டேன்றது வேற விஷயம்” என்றான் அந்த நேரத்திலும் தன்னை நல்லவனாக்கி.
“இப்ப என்ன பிரச்சனைன்னா, நான் தூங்கப் போனேன்லயா, அன்னைக்கு நைட் ரெண்டு மணியிருக்கும். அப்ப என்மேல யாரோ தண்ணீரை தெளிச்சாங்க. யார்டா அது இவ்வளவு தைரியமான்னு வரிஞ்சிக்கட்டிட்டு எழுந்தா, அது நம்ம வர்ணபகவான். சரியா போச்சி போன்னு சொல்லி போனை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போயி கட்டில்ல படுத்துட்டேன். நல்ல தூக்கம் வேறயா. அப்படியே கண் அசர்றேன் யாரோ காலை என்மேல போட்டு, ஏய், ரொம்பக் குளிருது.. என்னை கட்டிப்பிடிச்சிக்கோன்னு ஒரு குரல் காதோரத்தில் கேட்டுது.”
“பார்ரா நம்ம கனவுல கூட பொண்ணு வருதேன்னு சந்தோஷத்துல, கனவுதானேன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது பெண்கள் மென்மையானவங்கன்னு சொல்வாங்க. அந்த கனவுப்பெண்ணும் அவ்வளவு ஷாப்ட்” என்று ரசித்தவன் மனதினுள் முதல் தடவை உணர்ந்த அந்த அனுபவம் இன்னும் உடலில் சில்லென்று இருந்தது.
“கட்டிப் பிடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு, ஏய் நீ எப்படி என்னைவிட ஹைட்டான? பட், இந்த குளிருக்கு இதான் சூப்பராயிருக்குன்னு முழுவதும் என்னுடன் ஒண்டினாள் அக்கனவுப்பெண்.”
“ஆனாலும் பசங்களா, அந்த கனவு கனவாவே இருந்திருக்கலாம். விதி ரூம்போட்டு விளையாடிச்சி!”
‘ப்ச்.. ப்ச்..’ என பிள்ளைகளின் பல்லி ஒலி சப்தங்கள் அவன் காதில் விழ, முகத்தை அப்பாவியாய் வைத்து அடுத்ததைத் தொடர்ந்தான்.
“காலையில ஏழுமணியிருக்கும் மழை பெய்ததால் நேரம் தெரியல. வெளியில் ஹாலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக எழுந்திருக்கேன், ஒரு பொண்ணு என்னை கட்டிப்பிடிச்சிப் படுத்திருக்கா. ஒரு செகண்ட் அரண்டே போயிட்டேன். யாரது என் பெட்ரூம்லன்னு பார்த்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. ஐயோ! இவ எப்படி என் ரூம்ல? வீடு ஒரே மாதிரி இருக்கிறதால மாத்தி வந்து படுத்துட்டாளோன்னு நான் பார்க்க, ஒரு பையனோட படுத்திருக்கோமேன்னு உறுத்தலில்லாம ஹாயா படுத்து தூங்குறா. அவளை எழுப்பலாம்னு போனா, அதுக்குள்ள மறுபடியும் பெல் அடிச்சது.”
“அம்மா யார் பெல் அடிக்கிறாங்க பார்க்கலாம்லன்னு கைலியை கட்டுனபடியே கதவைத் திறந்தபடி கட்டி முடிச்சிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன், அத்தையும் மாமாவும் அவங்க சின்னப் பொண்ணும். என்னடா பெரிய உலக அதிசயமா இருக்கு, நம்ம வீட்டுக்கு இவங்க வர்றாங்களா? அப்ப பகையை முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்களான்னு நினைப்பு பலவிதத்துல ஓடுது.”
“ஆனா, வந்தவங்க என்னை அந்த காஸ்ட்யூம்ல கொலை வெறியோட பார்க்க, நான் பெரிய இவனாட்டம் வாங்கத்தை. வாங்க மாமான்னுட்டு, அப்பா யார் வந்திருக்கா பாருங்கன்னு சௌண்ட் குடுக்க, எங்கப்பா ஜாகிங் முடிச்சிட்டு பக்கத்து வீட்டுக்குள்ள நுழையுறாங்க. அப்பவாவது நான் சுதாரிச்சிருக்கணும். எங்கே விதிதான் டன்டனக்கா டான்ஸ் ஆடுச்சே!”
அப்பாவைப் பார்த்து, “அப்பா அங்க எங்க போறீங்க? நம்ம வீடு இங்கயிருக்குன்னு” பாசத்தோட அழைக்க, போற வர்ற ஜனங்க நிற்க ஆரம்பிச்சிட்டாங்க.
அப்பத்தான் அடுத்த ஏழரை ஆரம்பிச்சது. “ஹேய் கீர்த்தி நைட்டே வந்தாச்சா. அதெப்படிடி திடீர்னு ஹைட்டான. குளிருக்கு சூப்பரா உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டேன்னு சொன்னப்பத்தான் நைட் என்னோட ரூம்ல நடந்தது கனவில்ல, நிஜம்னு தெரிஞ்சது.”
“ஓ மை காட்!” என பிள்ளைகள் எக்கோ கொடுக்க...
“அடக்கிரகமேன்னு அவளைப் பார்த்து, நீ எப்படி எங்க வீட்ல, என் ரூம்குள்ளன்னு சொல்லும் போதே அவளோட அதிர்ச்சி முகத்தால எனக்குள்ள ஏதோ இடறிடுச்சி.”
“என்னது? நான் உன் ரூம்லயா? நீ யாரு? நீ இங்க என்ன பண்ற? கீர்த்தி நீதான நைட் என்னோட படுத்திருந்த? அப்படின்னு அவளோட தங்கச்சிகிட்ட கேட்டாள்.”
“அக்கா நாங்க இப்பத்தான் வீட்டுக்கே வர்றோம்” என்று அசராமல் அக்காவின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாள் அவளின் பாசமலர்.
“சட்டென்று கால் நழுவ தள்ளாடி சுவற்றில் சாய்ந்தவள் பார்வை குற்றச்சாட்டோடு என் மேலேயே இருக்க.. எனக்குமே ஒண்ணும் புரியல. மாமா என்னை செவுடுகாட்டி ஒண்ணு விட்டார் பாருங்க. அப்பத்தான் தெரிஞ்சது...”
“என்ன.. என்ன தெரிஞ்சது அண்ணா?” அதுவரை சாக்லேட்டிற்காக காத்திருந்தவர்கள் கதையில் மூழ்கி ஆர்வத்தில் கேட்க...
“ம்.. என்னை அடிச்சிட்டார்ன்றது தான்.”
“ம்க்கும்.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா” என பிள்ளைகள் முனகி மேலே சொல்லச் சொல்லி சைகை செய்தார்கள்.
“அந்தப் பொண்ணு கண்ணுல தண்ணீரோட என்னை பார்வையிலேயே எரிக்கிறாள்னா, இங்க என்னோட கன்னம் அடியால எரியுது. ஆனாலும், அவளோட கண்ணீர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சி. அத்தை என்கிட்ட வந்து இங்க என்ன பண்றன்னு கேட்டாங்க.”
“அதை நான் கேட்கணும் அத்தை. எங்க வீட்ல நீங்க என்ன பண்றீங்க? ஏன் உங்க பொண்ணு என் பெட்ரூம்ல வந்து படுத்தாள்னு கேட்டுட்டேன். அவ்வளவுதான்! தவளை தன் வாயால கெடும்னு உள்ள பழமொழிக்கு சரியான சாம்பிள் பீஸ் நான்தான்.”
“என்னடா சொல்ற? நைட்புல்லா ஒரே பெட்லயான்னு?” பக்கத்து வீட்டம்மா டௌட் கேட்க, நானும் யாயான்னு கூலா பதில் சொல்லி செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டேன்.”
அதன்பின் அனைத்தும் அவன் நினைவுகளில் ஒடியது.
“சுபாஷ் தூக்கக் கலக்கத்துல ஏதோ உளறுறன்னு தெரியுது. இது உங்க வீடு கிடையாது. எப்படி உள்ள வந்த? என்றார் சுபாஷிணி.
“என்ன அத்தை உளர்றீங்க? இது எங்க வீடு” என்று உரிமையாக சொன்னான்.
“அத்தை வீட்டைத்தான் தன் வீடுன்னு பையன் உரிமை கொண்டாடுறான்பா” என கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது.
அதுவரை வீட்டுக்கு வெளியே என்னவோ என்று பார்த்துக் கொண்டிருந்த சுபாஷின் அப்பா சுதாகர் பல்லைக்கடித்தபடி கோபத்தை அடக்கி, “என்ன பண்ணிட்டிருக்கன்னு புரியுதாடா? இது நம்ம வீடு இல்ல. நல்லா பாரு” என்றார் கடுமையான குரலில்.
சுற்றிலும் பார்த்தவன் அவர்களின் குடும்ப போட்டோவைப் பார்த்து அப்படியே நிற்க, தொண்டைக்குள் எச்சில் விழுங்கியபடி, “அப்பா! சாரிப்பா. நான் நம்ம வீட்டுக்குள்ள வர்றதா நினைச்சி பக்கத்துல வீட்ல..” வார்த்தைகள் ததிங்கினத்தோம் போட ரொம்பவே திணறினான்.
“பாவம் பையன். எத்தனை நாள் தெரியாம வந்திச்சோ தெரியலையே?” கூட்டம் அவனுக்காக வருத்தப்பட்டு கிசுகிசுத்தது கூட்டம்.
“வாடா” என்று சுதாகர் வீட்டுக்கு இழுத்துப் போகுமுன் வழிமறித்த சுபாஷிணி, “என் பொண்ணுக்கு ஒருவழியை சொல்லிட்டு போங்க” என்றார்.
“என்னமா? என்ன அர்த்தத்துல பேசுறன்னு புரியல? என்ன வழியை சொல்லணும்?” புரியாமல் அவர் கேட்க...
“அர்த்தம் வேணுமா? உங்க பையன் பண்ணின அனர்த்தத்துக்கு அர்த்தத்தை நான் எங்க போய் தேடுறது. இவ்வளவு ஆனதுக்கப்புறம் என் பொண்ணை எப்படி வெளியில கல்யாணம் பண்ணிக் குடுக்க முடியும்? ஒழுங்கா உங்க பையனையே மேரேஜ் பண்ணிக்கச் சொல்லுங்க. இல்லன்னா நடக்கிறதே வேற” என்றார் கோபத்தில்.
அதுவரை அதிர்ச்சியிலிருந்த கார்த்திகா கண்ணீர் துடைத்தபடி, “அம்மா நான் எந்த தப்பும் பண்ணல. எனக்கெதுக்கு இந்த தண்டனை. தப்பு செஞ்சது இவன். அவனுக்கு தண்டனை குடுக்கிறதை விட்டுட்டு தாம்பூலம் நீட்டுறீங்க. நான்லாம் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.