• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 19

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
19



மனைவியின் அறைக்குள் செந்தூரன் வருகையில் அன்பழகி நேஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். “சரி அண்ணி. உங்க மாமியாரை..” என பல்லைக்கடித்தவள், “காலையில் கவனிச்சுக்குறேன். இதை என்கிட்டயே சொல்றதுக்கென்ன? சரி உங்க அண்ணனை ஊரைவிட்டுத் தள்ளி வச்சிருறேன். சரி உங்க அண்ணனை ஒண்ணும் சொல்லலை. என்னை விட்டு மட்டும் தள்ளி வைக்குறேன். பேபியை நல்லா பார்த்துக்கோங்க. குட் நைட்” என்று வைத்தாள்.

அவள் பேசுவதைக் கேட்டிருந்தவனுக்கு என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடிந்தது. அவளை வம்பிழுக்கவென்று மனம் உந்த மர்மப்புன்னகை ஒன்று அவனிதழில். சட்டென்று கைபேசியை எடுத்து மனைவியின் முதல் நம்பருக்கு அழைத்து அவள் கவனிக்கும் முன் கட்டிலினருகில் சென்று மறைந்து கொண்டான்.

‘செந்தூரா’ பாடல் அறை முழுவதும் எதிரொலிக்க, கேட்ட நொடி அவளிதழில் மோகனப் புன்னகையொன்று உதயமாக, “ரூம்கு வராம எங்கயிருந்து பண்ணுறாங்க?” என்று அறையை விட்டு வெளியே வந்து கீழே பார்க்க, அவரவர் அறைக்கதவுகள் அடைக்கப்பட்டிருக்க, மின்விளக்கு ஒன்றைத் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. அருகிலிருக்கும் அதியனின் அறையிலும் உள்ளே விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அழைப்பாக செந்தூரப்பூவே ஒலிக்க, “பக்கத்துலதான் எங்கேயோ இருக்காங்க. என் ரிங்டோன் கண்டுபிடித்து வம்பிழுக்க விளையாடுறாங்களா? இல்லை மாடியில் எங்கேயாவது..” என்று அங்கேயும் சென்று பார்க்க அவனை அங்கும் காணவில்லை.

கணவனைக் காணாது அறைக்குள் வந்தவளுக்கு தன்னாலேயே பயமும் பதற்றமும் ஒட்டிக்கொள்ள, “எங்கேயிருக்கீங்க செந்தூரா?” என்றவளுக்கு அழுகை வரும்போல் தோன்ற, அப்பொழுதுதான் கட்டிலைப் பார்க்க, அவனோ உறங்கிக் கொண்டிருந்தான். இல்லையில்லை உறங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஒருவித ஆசுவாசம் எழ, “இவ்வளவு நேரம் என்னை அலைய விட்டுட்டு தூக்கம் வருதா உங்களுக்கு?” என்று சுற்றிலும் பார்க்க, மனைவி வரும் அரவத்தை உணர்ந்து அரைக்கண் கொண்டு பார்த்தவன், அவள் தன்னை அடிக்க ஆயுதம் தேடுவது புரிய, “சந்திரமுகி இஸ் பேக்” என்று போர்வையை இழுத்து மூடினான்.

ஆயுதம் எதுவும் கிடைக்காதிருக்கவும் தன் கை இருக்க பயமேன் என்று கணவனருகில் நெருங்கி, “திடீர்னு போர்வை தன்னால வந்து மூடிருச்சா. தூங்குற மாதிரி நடிக்கிறதைப் பார். போன் செய்து என்னை சீட் பண்ணுறீங்கள்ல. உங்களை..” என்று போர்வையை உருவி அடிக்கிறார்போல் செல்ல,

“நல்லா ஆசை தீர அடிச்சிக்கோ அன்பழகி. ஏன்னா?” என்று நிறுத்த,

“என்ன? என்ன ஏன்னா?” என அவளும் வேகத்தோடு கேட்க,

“ஏன்னா? அடிக்குற கைதான் அணைக்குமாம். ஆசை தீர அடிச்சிட்டு, ஆசை தீர்ந்தாலும் அணைச்சிக்கோ” என்றான் கண்ணடித்து.

“என்னது அணைக்கணுமா? அசிங்கமா பேசாதீங்க” என்றாள் கோபம்போல்.

படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவன், “அசிங்கமா? ஹலோ டாக்டர் மேடம்! நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்.”

“மதியம்தான அந்தரங்க உரிமை எடுக்கமாட்டேன் சொன்னீங்க?” என்றாள் இறங்கிய குரலில்.

“ஆனா, நான் உரிமை எடுக்கலையேமா. உன்னைத்தான எடுத்துக்கச் சொல்றேன். அடிக்குறது உன் உரிமைன்னா, அணைக்குறதும் உன் உரிiதான? சோ..” என்க,

‘இவன் இப்படியெல்லாம் பேசுவானா?’ என்பதாய் கணவனைப் பார்த்திருந்தவள், அவன் புருவத்தை உயர்த்தவும், மானசீகமாகத் தலையில் தட்டி, “சோ?” என்றாள் திமிராய்.

அதில் கவரப்பட்டானோ! சட்டென்று அவளை இழுத்துத் தன்மேல் போட, அதை எதிர்பாராதவளோ, “என்ன பண்றீங்க?” என்றபடி கட்டிலில் அவன்மேல் விழ, அவள் கண்களை மட்டுமே பார்த்தபடியிருந்தான் செந்தூரன்.

அதிலெழுந்த கூச்சத்தில் “ஹ்ம்.. என்னை விடுங்க” என அவள் சிணுங்க, “அடிக்க வந்த கைதான் அணைச்சிருக்கு” என்றதும்தான் கவனித்தாள் தான் அவனை கட்டிப்பிடித்திருப்பதை.

வேகமாக அவனிடமிருந்து எழப்பார்க்க, “ரிலாக்ஸ் அன்பழகி” என்று அவளை மெதுவாக நகர்த்தி கட்டிலில் உட்காரவைத்துத் தானும் அமர்ந்து, “நமக்கு இன்னைக்கு முதல் ராத்திரி” என்றான்.

“விளையாடாதீங்க செந்தூரா. டைம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு ஓவரா பண்ணுறீங்க” என்று அழப்போகும் குழந்தையாய் சொல்ல, பக்கென்று சத்தமாகச் சிரித்தவன் அவள் முகம் நோக்கிக் குனிந்து, “நானும் நீயும் சேர்ந்திருக்கும் முதல் இரவு இதுன்னு சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க டாக்டர் மேடம்?” சீண்டலாகக் கேட்டான்.

ஸ்ஸ்.. என்று நாக்கைக் கடித்து நாணம் சுமந்தவளைப் பார்த்தபடி, “என் அன்பழகிகிட்ட கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசை. உன்னோட சம்மதமில்லாமல் நமக்குள்ள எதுவும் சாத்தியமில்லை. சின்னச் சின்ன சீண்டல் தீண்டல்தான் நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாண்டிங் கொண்டு வரும். உனக்குப் பிடிக்கலைன்னா...” அதையும் விட்டுவிடுவதாகச் சொல்ல வந்தவனின் வாய்மூடி, “பிடிச்சிருக்கு” என்று வெட்கத்தில் தலைகுனிந்தாள்.

அவளின் முகம் நிமிர்த்தி நெற்றியில் மென்மையாய் வெகு நிதானமாய் முத்தமிட்டு, “படுத்துக்...” அவனை முடிக்கவிடாமல் ‘ஹக்’ என விடாமல் விக்கல் வந்தது அன்பழகிக்கு.

“விக்கல் வில்லங்கமான நேரத்தில் வந்திருக்கே அன்பழகி” என்று குறும்புப் புன்னகையுடன் சிரிக்க, மனைவியின் அடுத்த ஹக்கில் விக்கலுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டான் செந்தூரன்.

சில நிமிடங்கள் கழித்துத் தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு, “கன்னத்து முத்தத்துக்கே இவ்வளவு அட்டகாசமா? இந்த செந்தூரனின் அழகிடி நீ” என கொஞ்சினான்.

இந்த விக்கல்தான் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறதோ!

மறுநாள் காலை மனமில்லை என்றாலும் கோவிலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் காலையிலேயே எழுந்து குளித்துக் கிளம்பி ஹாலில் அமர்ந்து கைவிரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் பவானி.

“என்ன பவிக்குட்டி? விரல்ல விடாது ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க? காலையிலேயே எங்க கிளம்பிட்ட?” என்றவள் அப்பொழுதுதான் கவனித்தாள் பவானி வெளியே செல்லக் கிளம்பியிருப்பதை.

“கோவிலுக்கு அண்ணி” என்றாள் ஆராய்ச்சியை விடாது.

“இன்னைக்குக் காலேஜ் இல்லையா?

“இருக்கு. நான்தான் லீவ் எடுத்துட்டேன்.”

“நேத்து லீவ் எடுத்ததுல ஒரு அர்த்தமிருக்கு. இன்னைக்கு ஏன்?” என்றாள் யோசனையாய்.

“கோவில் போகணும்” என தலைகவிழ்ந்து மென்மையாக உரைத்தாள் பவானி.

“சொல்லியிருந்தா நானும் கிளம்பியிருப்பேன்ல பவிமா? கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் வர்றேன்” என்றபடி வந்தார் ராகினி.

“நீங்க ஏன்மா? நான் இந்த எலிக்குட்டியை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று வெளியே செல்லக் கிளம்பி வந்திருந்தான் அதியன்.

தாயும் மகளும் அவனை ஆராய்ச்சியாய்ப் பார்க்க, “என்ன பார்வை எல்லாம் ஒரு தினுசா வருது? இவள் வந்ததிலிருந்து உங்க இரண்டு பேர் பார்வையும் சரியில்லை. நான் எதுவும் செய்யலை சரியா?” என்றான்.

“நீ எதுவும் செய்ததா நானும் சொல்லலையேடா. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு நீயே வான்டடா வர்ற. சரி பிழைச்சிப்போ. அப்படி எங்க பார்வையில் என்ன சரியில்லை?” என்றார் ராகினி.

“அது தெரிஞ்சா நான் சொல்லமாட்டேனா?” தெனாவட்டாகப் பதிலளிக்க,

“அப்படியே சொல்லிரகில்லிர போற. போடா” என்று தம்பியைத் திட்டி, “ஏன் பவிக்குட்டி? காலேஜ் போயிட்டு வந்து கோவிலுக்குப் போயிருக்கலாம்ல?” என்றாள் அன்பழகி.

“நான்தான் போகச் சொன்னேன்” என்பதாய் மனைவியினருகில் வந்தமர்ந்தான் செந்தூரன். ஏனென கணவனைப் பார்க்க, “கழுத்துல கட்டியிருக்கிற கயிறை கோவில் உண்டியல்ல போட்டுட்டு வரச்சொன்னேன்” என்றானவன்.

“என்ன?” என்ற அதிர்வுக்குரல் ராகினி அன்பழகியிடமிருந்து வர,

“ஏன் இப்படியொரு ரியாக்ஷன்? நேத்து நைட் பேசினப்ப என்னைப் பழிவாங்க தனக்குத்தானே கட்டிக்கிட்டதா சொன்னா. அதான் ஃப்யூச்சர் பாதிக்கப்படக்கூடாதுன்னு கழட்டச் சொன்னேன். கோவில்ல போய் கழட்டுறேன் அண்ணான்னு சொன்னதும் எனக்கும் சரின்னு பட்டுது. இதிலென்ன” என்பதுபோல் சாதாரணமாகவே சொன்னான் செந்தூரன்.

சட்டென்று பவானியைக் கேள்வியாய்ப் பார்க்க, “அ..ஆமா அண்ணி” என்றதும், தம்பியைப் பார்க்க, அவனோ கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

“பவி! அப்ப அதை நீயே கட்டிக்கிட்டியா?”

“ஆமாம் அத்தை” என்றவள் குரல் சற்று திணறியதோ!

“அப்ப கூடயிருந்த பையன் யாரு?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தார்.

“அ..அது என்னோட ஃப்ரண்ட் அத்தை” என்றாள்.

“ஸ்கூல் காலேஜ் எல்லாமே கேர்ள்ஸ். அதைத் தாண்டி யாரோடவும் பேசவோ பழகவோ உங்க சித்தி விடலை. கண்காணிக்க எப்பவும் ஆளிருக்கும். பாய்ஸ் கேர்ள்ஸ்னு ஃப்ரண்ட் யாரும் கிடையாதுன்னு நீயே என்கிட்ட சொல்லியிருக்கிறப்ப, எப்படி ஒரு பையன் ஃப்ரண்ட்னு வருவான்? அதையும் தாண்டி அந்த நண்பன் யாரு? அவனை நான் பார்த்தே ஆகணும்” என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டார் ராகினி.

“அத்தை கேட்கிறது சரிதானே பவிமா? யார் அந்த புது நண்பன்?” என கேட்டவனுக்குமே அப்பொழுதுதான் ஏதோ ஒன்று மறைக்கடுவது புரிந்தது.

“சொல்லு பவிக்குட்டி? எங்களுக்குத் தெரியாமல் யாரு?” என்றாள் அன்பழகியும்.

“அவளைப் போட்டு ஏன் படுத்துறீங்க” என்ற அதியன், தாய் சகோதரியின் கேள்விப் பார்வையில், “எலிக்குட்டி திணறுறதால அந்த டாபிக் வேண்டாமேன்னு...” முனகியபடியே எழுந்தவன். “எனக்குக் கொஞ்சம் வெளில வேலையிருக்கு. வர்றேன்மா” என விட்டால் போதுமென்று வாசல் நோக்கிச் செல்ல, அங்கே அவனின் நண்பன் ராகேஷ் தங்கை ரசிகாவுடன் வந்தான்.

“டேய் ராக்கி! ஊர்லயிருந்து எப்ப வந்த? இவ்வளவு காலையிலேயே வந்திருக்க? அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டியேடா” என்று அணைக்க வர, அவனைத் தள்ளிவிட்டு தங்கையை உள்ளே அழைத்துச் சென்றான்.

ராகினியும் அன்பழகியும் அவர்களை வரவேற்க, “என்னாச்சி இந்த ராக்கிக்கு? தள்ளிவிட்டுட்டுப் போறான்” என்று அவர்களுடன் உள்ளே வந்தான் அதியன்.

“அக்கா இவனை என்கிட்டப் பேச வேண்டாம் சொல்லுங்க. சின்னச் சின்ன விஷயத்தையும் என்கிட்ட மறைக்காம சொன்னவன், அவன் லைஃப்ல நடந்த முக்கியமான விஷயத்தை என்கிட்டயிருந்து மறைச்சிட்டான்” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.

“அப்படி எந்த முக்கியமானதும் என் வாழ்க்கையில் நடக்கலையேடா” என புரியாது கேட்டான்.

“ஓ.. சார் கல்யாணம் செய்தது முக்கியமானதில்லையா?” என்றான் பட்டென்று.

“என்னது கல்யாணமா?” அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் எழ, பவானி மட்டும் தவிப்புடன் அமர்ந்திருக்க, அந்நேரம் நடைபயிற்சி சென்று வந்த சதாசிவமும் அகிலனும், “எதுக்கு இப்படித் திகைச்சுப்போய் நிற்குறீங்க?” என்றனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“அப்பா அதிக்குக் கல்யாணம் ஆகிருச்சின்னு இந்த ராகேஷ் சொல்றான்பா” என்றாள் அன்பழகி.

“என்ன உளறல் இது? அதி நமக்குத் தெரியாமல் செய்யமாட்டான்” என்றார் சதாசிவம்.

சம்பந்தப்பட்டவனோ எதிரிலிருந்த பவானியை கொலைவெறியில் முறைக்க, கண்களால் மன்னிப்பு கேட்டு குனிந்து கொண்டாள் பவானி.

“டேய் அதி! அப்ப வீட்டுக்கு இன்னும் சொல்லலையா? அப்பா ஒரு நிமிஷம்” என்ற ராகேஷ் தன் தங்கையின் கைபேசியை வாங்கி உள்ளே சென்று தேவையானதை எடுத்து, “இதைப் பாருங்க” என்று காண்பிக்க, அதில் பவானியின் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டிருந்தான் அதியன்.

“அதீஈஈ” என்றலறிய சதாசிவம், “என்ன வேலை பார்த்திருக்க?” என்று அவனை அடிக்க நெருங்க, அவரைத் தடுத்தார்கள் ராகினியும் அன்பழகியும்.

கைபேசி செந்தூரன் கைக்கு வர திகைத்து தங்கையைப் பார்க்க குனிந்த தலை நிமிராது கண்களில் கண்ணீர் சொட்ட, ஆடைக்குள் கிடந்த தாலியை சுடிதாருக்கு மேல் இறுக்கமாகப் பிடித்து நின்றிருந்தாள். என்ன செய்வதென்று புரியாது தங்கையினருகில் வந்தவன், “என்ன பவிமா இதெல்லாம்? நேத்து கேட்டப்ப சொல்லியிருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்யட்டும்?” ஆதங்கத்தில் தங்கையிடமே கேட்டான்.

“கோவிலுக்குப் போகலாம் வாங்கண்ணா” என்றாளவள் சொன்ன சொல் மாறாது.

“நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்துப் பேசு பவி” என்றவன் குரல் சற்றே உயர, “அண்ணா” என்று அவன் தோள்சாய்ந்து அழுதவள், “இது ப்ளான் செய்து கட்டினதில்லை. தெரியாமல் நடந்த ஒரு விபத்து. இதுல அவங்களைக் குற்றவாளியாக்க விரும்பலைண்ணா. நாம போய் உண்டியல்ல கழட்டி போட்டுட்டு வந்திரலாம்ணா” என்றாள் அழுகையினூடே.

“ஏன்மா அப்படிப் பேசுற? அவன் கட்டினது நிஜம்தானே?” என கேட்டார் சதாசிவம்.

“நிஜம்தான். ஆனா, பொய்” என்று தெளிவாகக் குழப்பினாள் அவர்களை.

“இவள்தான் அங்கிள் பொய் சொல்லுறா. இவங்க கல்யாணம் நடந்ததை நேர்ல பார்த்த சாட்சியே நான்தான். நான் எடுத்த போட்டோதான் இது” என்றாள் ரசிகா.

‘எனக்கு வில்லியே இவள்தான். தவறான நேரத்துல க்ளிக் பண்ணி சரியான நேரத்துல போட்டுக் கொடுத்திட்டா. இடியட்’ என்று ரசிகாவை மனதிற்குள் அரைத்து எடுத்தான் அதியன்.

அவள் இவர்களைப் பழிவாங்கவென்று இங்கு வரவில்லை. கோவில் சென்ற இடத்தில் எதேச்சையாக இவர்களைக் கண்டு அதிர்ந்து, ‘இல்லை இல்லைன்னு சொல்லி தாலியே கட்டிட்டான் இந்த அதியன்’ என்று பழக்க தோஷத்தில் நிழற்படமும் எடுத்திருந்தாள். அவளின் அண்ணன் முன்தின இரவு அதைக் காணும் வரை அவளுக்கு எடுத்ததே மறந்திருந்தது. ராகேஷ் காலையிலேயே விஷயத்தை அன்பழகிக்குக் தெரிவித்துவிட்டான். அவள்தான் வீட்டினர் வெளியே செல்லுமுன் வரச்சொல்லியிருந்தாள்.

“பொய்யின்னு எதை வைத்துச் சொல்ற பவி. இந்தப் பொண்ணுதான் நேர்ல பார்த்தேன்னு சாட்சியோட சொல்றாளே?” என்றார் சதாசிவம்.

“கண்ணால பார்க்கிறதெல்லாம் உண்மையாகிராது மாமா. என்னோட தப்புக்கு உங்க பையன் வாழ்க்கையைப் பலிகொடுக்கிறது பாவம். நான் உதவி கேட்டதுக்காக வந்து இப்ப சிக்கல்ல மாட்டிக்கிட்டாங்க.”

“புரியுற மாதிரி சொல்றியா? எனக்கென்னவோ இவன் உன்னை மிரட்டியிருப்பான் தோணுது. அப்படி எதுவுமிருந்தா மறைக்காம சொல்லிருமா” என்றார் ராகினி.

“அம்மா!” என்று பல்லைக் கடித்தவனுக்கு பவானியின் இந்நிலை அவனை அசைத்ததோ! “ஆமாம்னு ஒத்தை வார்த்தையில் முடிச்சிட்டு உட்காரேன் எலிக்குட்டி. சும்மா என்னைக் காப்பாத்த விளக்கம் கொடுத்திட்டிருக்க?” என்று அவளைத் திட்டி கொஞ்சம் நிமிர்வுடன், “இந்த எலிக்குட்டி கழுத்துல நான்தான் தாலி கட்டினேன். சந்தர்ப்ப சூழ்நிலை அப்படியாகிருச்சி” என முடிக்குமுன் அவன் கன்னத்தில் அடி விழுந்தது.

அடுத்த அடி விழுமுன், “அத்தை என்ன செய்றீங்க? நான்தான் சார் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு சொல்றேன்ல. என்னை நம்பமாட்டீங்களா? அப்படிப் பார்த்தா காரணகர்த்தாவான என்னைத்தான நீங்க அடிக்கணும்? உங்களோட கோபம் குறையுற வரை என்னை அடிங்க” என்று அதியனை மறித்தாற்போல் நின்றாள்.

இதையெல்லாம் கண்ட செந்தூரனோ தளர்ந்து போய் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து தங்கையையே வெறித்திருந்தான். அவனின் அந்தக் கோலம் மனைவியைப் பாதிக்க, “அண்ணா முதல்ல எல்லாரையும் உட்கார வை. என்ன நடந்ததுன்னு பேசி முடிவெடுக்கலாம்” என்று அகிலனிடம் கூறி கணவனருகில் சென்றமர்ந்தாள்.

அகிலன் அனைவரையும் சமாதானப்படுத்தி அமரவைத்து சமையலறை சென்று தாய் கலந்து வைத்திருந்த தேநீரை சூடுபடுத்தி அனைவருக்கும் எடுத்து வந்து கொடுத்து, குடித்து முடித்ததும், “என்ன நடந்ததுன்னு சொல்லு பவானி?” என்றான் கரிசனத்துடன்.

“அது அத்தான்! அண்ணியைக் கூட்டிட்டு வர்றேன்னு அண்ணன் சொன்னதும் ஆசையா, ஆவலோட ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். ஆனா, அண்ணன் விவாகரத்து நோட்டீஸ்ல கையெழுத்து வாங்கினது, அதுவும் அவங்க மனசைக் காயப்படுத்தி அழவைத்து வாங்கினதை என்னால தாங்கிக்க முடியலை. அண்ணனைப் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. அண்ணி அனுபவிச்ச வலியை அண்ணன் அனுபவிக்கணும்ன்ற தன்னிலையில்லா கோபம். எதிர்பாராவிதமா நான் தாலியோட புருஷன் இல்லாமல் வந்து நின்னா எப்படியிருக்கும்?”

“காலேஜ்மேட் ஒருத்திகிட்ட ஹெல்ப் கேட்டேன். முதல்முறையா நான் நட்புன்னு சொல்லிக் கேட்டதால அவளும் சரி சொல்லிட்டா. காலையில் புடவை கட்டிட்டு யாருக்கும் தெரியாம கோவிலுக்குப் போனா அவள் வரலை. திடீர்னு என்ன செய்யுறதுன்னு தெரியாம விழிச்சப்ப, அவளோட அண்ணன் வந்து தாலியைக் கொடுத்துட்டு போயிட்டார். அண்ணியைக் கூப்பிடலாமா நினைத்த நொடி அதைக் கைவிட்டுட்டேன்.”

“ஏன்?” என்றாள் அன்பழகி.

“நான் செய்யுறதை தப்புன்னு கண்டிச்சி என்னோட பேசாமல் போயிட்டா. அதான் கூப்பிடலை. ரொம்ப குழப்பத்துல இருந்தப்ப யாரோ ஆதின்னு கூப்பிட, எனக்கு சட்டுன்னு உங்க தம்பி ஞாபகம்தான் வந்தது. உடனே யோசிக்காம அவங்களைக் கூப்பிட்டேன்.”

“அவன் மட்டும் உன்னைத் திட்டமாட்டானா?” என்றார் ராகினி.

“அது சாருக்கு அண்ணனைப் பிடிக்காது. அண்ணன் மேல உள்ள கோபத்தை இப்படித் தணிச்சிக்கட்டுமேன்ற எண்ணம்தான். சாரிண்ணா” என்றாள் அண்ணனிடம்.

“நான் செஞ்சதுக்கான எதிர்வினையை சந்திச்சித்தான ஆகணும். நீ சொல்லு” என்றான் செந்தூரன்.

“அவசரம்னு சொல்லி வரவழைத்து விஷயத்தைச் சொன்னதும் ரொம்ப திட்டிட்டாங்க. அண்ணிக்கு நீங்க தம்பிதான? அவங்களை அழ வச்சவங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? சும்மா தோள்ல கைபோட்டு போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டா போதும்னு அதையிதை சொல்லி சம்மதிக்க வச்சிட்டேன்.”

“கூட்டம் இல்லாததால கொஞ்சம் பயமில்லை. ஒரு மாலையை நான் கழுத்துல போட்டு இன்னொண்ணை அவங்க கையில வச்சிக்க சொல்லிட்டேன். தாலியைக் கயிறில் கோர்த்து ஏற்கனவே முடிச்சி போட்டு வச்சிருந்தேன். சாமி கும்பிட்டுட்டு தாலியைக் கழுத்தை நோக்கித் தூக்கும்போது மாலையில் சிக்கிருச்சி. அதை சரிசெய்ய தாலிக்கயிறை சாரைப் பிடிச்சிக்கச் சொல்ல, கையிலிருந்த மாலையோட தாலியையும் அவர் பிடிச்சிருக்க, குனிந்து தாலியை மாலையிலிருந்து பிரிச்சிட்டிருந்தேன்.”

“அ..அப்பதான் யாரோ ஒருத்தர் அதியன் சார் மேல மோத, அதுல தடுமாறி தாலியைக் கழுத்துல போட்டுட்டாங்க” என்றவள் குரல் மெலிந்து வர, “ஒரு நிமிஷம் பயத்துல என்ன செய்யுறதுன்னே புரியாம முழிச்சேன். சார்தான், தெரியாம நடந்ததுக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இது நீ போட்டுக்கிட்டதாவே இருக்கட்டும் சொன்னவங்க, கொஞ்சம் திரும்புன்னு சொல்லவும், என்னன்னு பார்க்க, கயிறு முடிச்சி சரியா போடாமல் இரண்டு முடிச்சி உருவி, முதல் முடிச்சி உருவுற ஸ்டேஜ்ல இருக்குன்னு சொல்ல, நான் வேண்டாம்னு மறுக்குறதுக்குள்ள அவங்களே எல்லா முடிச்சையும் போட்டுட்டாங்க” என்றதும் அனைவரும் அதியனைப் பார்க்க,

“அது ஜஸ்ட் ஹெல்ப்” என்றவன் குரலும் இறங்கியது. கட்டும்போது சாதாரணமாகத் தெரிந்தது, பவானி அதை விவரிக்கையில் அதியனுக்குத் தன் தவறு புரிகிறதோ!

பதற்றம் அதிகமாகி “என்கிட்ட சொல்லியிருந்தா நானே செய்திருப்பேனே சொன்னதுக்கு, பின்னால் உள்ள கயிறுல எப்படி முடிச்சி போடுவன்னு பெருமையா சொல்றாங்க. அதை முன்ன கொண்டு வந்து கட்ட முடியாதான்னு இழுத்து காண்பிச்சப்ப, சரிவிடு விபத்துல்லாம் இப்படித்தான் நடக்கும்னு முடிச்சிட்டாங்க. அதுக்கப்புறம்தான் சார் முகம் தெரியாமல் செல்ஃபி எடுத்து அதை உங்ககிட்டக் காண்பித்தது” என்று முடித்தாள்.

“இவ்வளவு டீடெய்லா சொல்லணுமா தாயி” என்றான் அதியன்.

“பின்ன? உங்க மேல தப்பில்லைன்னு தெரிய வேண்டாமா சார்? அந்தத் தாலிக்குக் கூட உங்ககிட்டயிருந்து பணம் வாங்கி என் க்ளாஸ்மேட்கிட்ட கொடுத்திருக்கேன். உண்மையைச் சொன்னால் அவங்களும் புரிஞ்சிக்குவாங்கள்ல” என்றாள் அவளும் பெருமையாய்.

‘ம்க்கும்.. மொத்தமா முடிச்சிட்டு, என்மேல தப்பில்லைன்னு சொல்றாளாமாம்! அட போ எலிக்குட்டி’ என்று சோர்வாய் அமர்ந்திருந்தான்.

“அடேய் தம்பி! சத்தமில்லாமல் வேலையை முடிச்சிட்டு சாமியார் மாதிரி சீன் போடுற பாரு” என்று அகிலன் தம்பியைச் சீண்டினான்.

“அதி நடந்தப்ப வேணும்னா அது ஆக்சிடெண்டா தெரியலாம். இப்ப இவள் சொன்னதை யோசித்துப்பாரு. சாமி சன்னிதானத்துல இவள் கழுத்துல தாலியைக் கட்டியிருக்க. இந்த அப்பாவியும் உனக்குப் பிரச்சனை வராமலிருக்க கோவில்ல போயி தாலியைக் கழட்டுறேன்னு நிற்கிறா. கொஞ்சம் யோசிடா” என்ற அன்பழகி பவானியிடம், “இப்பவும் கழட்டுற முடிவுலதான் இருக்கியா?” என கேட்டதும், ஆமென்று அவள் தலையசைக்க, “சரி. இதைக் கழட்டினதும் வேற கல்யாணம் செய்துக்குறியா? உன் அண்ணனை மாப்பிள்ளை பார்க்கச் சொல்லவா?” என்றாள்.

“வேண்டாம் அண்ணி” என்றாள் வேகமாக.

“ஏன்?” என்று ஆழம்பார்க்க,

“அ..அது கொஞ்ச வருஷம் கழித்து வேணும்னா...”

“அப்பக்கூட கன்பார்மா சொல்லலை. கல்யாணம் செய்துக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணு. இப்பவே உன்னோட நானும் கோவிலுக்கு வர்றேன்” என்று தன் கையை நீட்டினாள்.

“இல்லை. முடியாது. நான் சத்தியம்லாம் செய்யமாட்டேன் அண்ணி” என்று கத்தினாள்.

“சத்தியம் செய்துதான் ஆகணும். அப்பதான் என் தம்பி எந்தவித குற்றவுணர்வும் இல்லாம கல்யாணம் செய்துக்குவான்” என்றாள் தானும் குரலை உயர்த்தி.

அன்பழகியின் வாக்குவாதம் எதை நோக்கிப் போகிறதென்று உணர்ந்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தார்கள்.

“உங்க தம்பிக்கு நாளைக்கேனாலும் முடிச்சி வையுங்க. அவங்களைப் பொறுத்தவரை இது ஒரு ஆக்சிடெண்ட்தான்” என்றாள்.

“அப்ப உன்னைப் பொறுத்தவரை? சொல்லு பவானி? உன்னைப் பொறுத்தவரை என்ன?” என்று அவள் கோபத்தை மேலும் கிளறி அவ்வளவுதான் என்பதாய் அமைதியாகிவிட்டாள்.

அன்பழகியின் நெருக்கடியும் பவானி என்ற அழைப்பும் ஆத்திரத்தைக் கிளப்பி நிலையில்லாது தவிக்க வைக்க, “என்னைப் பொறுத்தவரை அது கல்யாணம்தான். அது மட்டும்தான் கடைசிவரை. இந்தத் தாலியைக் கழட்டலாம். நடந்ததை மாற்ற முடியாதே? அதை என்ன செய்ய முடியும் உங்களால்? என் மனசுல அந்த நிமிடங்கள் பதிஞ்சி போயிருச்சி. நானே நினைத்தாலும் அதை அழிக்க முடியாது அண்ணி.”

“வேற கல்யாணம் செய்தா என் அம்மா மாதிரி நான் மாறலாம். இன்னொரு ராஜேஸ்வரியா மாற விரும்பலை அண்ணி. அந்த நிலைக்கு என்னைத் தள்ளிராதீங்க ப்ளீஸ். இந்தக் கல்யாணம் நம்மளைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அப்படியே இருக்கட்டும் அண்ணி” என்றாள் விடாது கொட்டும் கண்ணீரைத் துடைத்தபடி.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
30
அடடா கல்யாணம் ஆக்ஸிடெண்ட்டா நம்பிட்டோம் நம்பிட்டோம்...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அடடா கல்யாணம் ஆக்ஸிடெண்ட்டா நம்பிட்டோம் நம்பிட்டோம்...
நம்பிக்கை அதானே எல்லாம்.
 
Member
Joined
Sep 12, 2024
Messages
35
பவானி இப்ச்... செம்ம போ
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top