- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
மனைவியின் அறைக்குள் செந்தூரன் வருகையில் அன்பழகி நேஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். “சரி அண்ணி. உங்க மாமியாரை..” என பல்லைக்கடித்தவள், “காலையில் கவனிச்சுக்குறேன். இதை என்கிட்டயே சொல்றதுக்கென்ன? சரி உங்க அண்ணனை ஊரைவிட்டுத் தள்ளி வச்சிருறேன். சரி உங்க அண்ணனை ஒண்ணும் சொல்லலை. என்னை விட்டு மட்டும் தள்ளி வைக்குறேன். பேபியை நல்லா பார்த்துக்கோங்க. குட் நைட்” என்று வைத்தாள்.
அவள் பேசுவதைக் கேட்டிருந்தவனுக்கு என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடிந்தது. அவளை வம்பிழுக்கவென்று மனம் உந்த மர்மப்புன்னகை ஒன்று அவனிதழில். சட்டென்று கைபேசியை எடுத்து மனைவியின் முதல் நம்பருக்கு அழைத்து அவள் கவனிக்கும் முன் கட்டிலினருகில் சென்று மறைந்து கொண்டான்.
‘செந்தூரா’ பாடல் அறை முழுவதும் எதிரொலிக்க, கேட்ட நொடி அவளிதழில் மோகனப் புன்னகையொன்று உதயமாக, “ரூம்கு வராம எங்கயிருந்து பண்ணுறாங்க?” என்று அறையை விட்டு வெளியே வந்து கீழே பார்க்க, அவரவர் அறைக்கதவுகள் அடைக்கப்பட்டிருக்க, மின்விளக்கு ஒன்றைத் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. அருகிலிருக்கும் அதியனின் அறையிலும் உள்ளே விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அழைப்பாக செந்தூரப்பூவே ஒலிக்க, “பக்கத்துலதான் எங்கேயோ இருக்காங்க. என் ரிங்டோன் கண்டுபிடித்து வம்பிழுக்க விளையாடுறாங்களா? இல்லை மாடியில் எங்கேயாவது..” என்று அங்கேயும் சென்று பார்க்க அவனை அங்கும் காணவில்லை.
கணவனைக் காணாது அறைக்குள் வந்தவளுக்கு தன்னாலேயே பயமும் பதற்றமும் ஒட்டிக்கொள்ள, “எங்கேயிருக்கீங்க செந்தூரா?” என்றவளுக்கு அழுகை வரும்போல் தோன்ற, அப்பொழுதுதான் கட்டிலைப் பார்க்க, அவனோ உறங்கிக் கொண்டிருந்தான். இல்லையில்லை உறங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று ஒருவித ஆசுவாசம் எழ, “இவ்வளவு நேரம் என்னை அலைய விட்டுட்டு தூக்கம் வருதா உங்களுக்கு?” என்று சுற்றிலும் பார்க்க, மனைவி வரும் அரவத்தை உணர்ந்து அரைக்கண் கொண்டு பார்த்தவன், அவள் தன்னை அடிக்க ஆயுதம் தேடுவது புரிய, “சந்திரமுகி இஸ் பேக்” என்று போர்வையை இழுத்து மூடினான்.
ஆயுதம் எதுவும் கிடைக்காதிருக்கவும் தன் கை இருக்க பயமேன் என்று கணவனருகில் நெருங்கி, “திடீர்னு போர்வை தன்னால வந்து மூடிருச்சா. தூங்குற மாதிரி நடிக்கிறதைப் பார். போன் செய்து என்னை சீட் பண்ணுறீங்கள்ல. உங்களை..” என்று போர்வையை உருவி அடிக்கிறார்போல் செல்ல,
“நல்லா ஆசை தீர அடிச்சிக்கோ அன்பழகி. ஏன்னா?” என்று நிறுத்த,
“என்ன? என்ன ஏன்னா?” என அவளும் வேகத்தோடு கேட்க,
“ஏன்னா? அடிக்குற கைதான் அணைக்குமாம். ஆசை தீர அடிச்சிட்டு, ஆசை தீர்ந்தாலும் அணைச்சிக்கோ” என்றான் கண்ணடித்து.
“என்னது அணைக்கணுமா? அசிங்கமா பேசாதீங்க” என்றாள் கோபம்போல்.
படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவன், “அசிங்கமா? ஹலோ டாக்டர் மேடம்! நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்.”
“மதியம்தான அந்தரங்க உரிமை எடுக்கமாட்டேன் சொன்னீங்க?” என்றாள் இறங்கிய குரலில்.
“ஆனா, நான் உரிமை எடுக்கலையேமா. உன்னைத்தான எடுத்துக்கச் சொல்றேன். அடிக்குறது உன் உரிமைன்னா, அணைக்குறதும் உன் உரிiதான? சோ..” என்க,
‘இவன் இப்படியெல்லாம் பேசுவானா?’ என்பதாய் கணவனைப் பார்த்திருந்தவள், அவன் புருவத்தை உயர்த்தவும், மானசீகமாகத் தலையில் தட்டி, “சோ?” என்றாள் திமிராய்.
அதில் கவரப்பட்டானோ! சட்டென்று அவளை இழுத்துத் தன்மேல் போட, அதை எதிர்பாராதவளோ, “என்ன பண்றீங்க?” என்றபடி கட்டிலில் அவன்மேல் விழ, அவள் கண்களை மட்டுமே பார்த்தபடியிருந்தான் செந்தூரன்.
அதிலெழுந்த கூச்சத்தில் “ஹ்ம்.. என்னை விடுங்க” என அவள் சிணுங்க, “அடிக்க வந்த கைதான் அணைச்சிருக்கு” என்றதும்தான் கவனித்தாள் தான் அவனை கட்டிப்பிடித்திருப்பதை.
வேகமாக அவனிடமிருந்து எழப்பார்க்க, “ரிலாக்ஸ் அன்பழகி” என்று அவளை மெதுவாக நகர்த்தி கட்டிலில் உட்காரவைத்துத் தானும் அமர்ந்து, “நமக்கு இன்னைக்கு முதல் ராத்திரி” என்றான்.
“விளையாடாதீங்க செந்தூரா. டைம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு ஓவரா பண்ணுறீங்க” என்று அழப்போகும் குழந்தையாய் சொல்ல, பக்கென்று சத்தமாகச் சிரித்தவன் அவள் முகம் நோக்கிக் குனிந்து, “நானும் நீயும் சேர்ந்திருக்கும் முதல் இரவு இதுன்னு சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க டாக்டர் மேடம்?” சீண்டலாகக் கேட்டான்.
ஸ்ஸ்.. என்று நாக்கைக் கடித்து நாணம் சுமந்தவளைப் பார்த்தபடி, “என் அன்பழகிகிட்ட கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசை. உன்னோட சம்மதமில்லாமல் நமக்குள்ள எதுவும் சாத்தியமில்லை. சின்னச் சின்ன சீண்டல் தீண்டல்தான் நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாண்டிங் கொண்டு வரும். உனக்குப் பிடிக்கலைன்னா...” அதையும் விட்டுவிடுவதாகச் சொல்ல வந்தவனின் வாய்மூடி, “பிடிச்சிருக்கு” என்று வெட்கத்தில் தலைகுனிந்தாள்.
அவளின் முகம் நிமிர்த்தி நெற்றியில் மென்மையாய் வெகு நிதானமாய் முத்தமிட்டு, “படுத்துக்...” அவனை முடிக்கவிடாமல் ‘ஹக்’ என விடாமல் விக்கல் வந்தது அன்பழகிக்கு.
“விக்கல் வில்லங்கமான நேரத்தில் வந்திருக்கே அன்பழகி” என்று குறும்புப் புன்னகையுடன் சிரிக்க, மனைவியின் அடுத்த ஹக்கில் விக்கலுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டான் செந்தூரன்.
சில நிமிடங்கள் கழித்துத் தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு, “கன்னத்து முத்தத்துக்கே இவ்வளவு அட்டகாசமா? இந்த செந்தூரனின் அழகிடி நீ” என கொஞ்சினான்.
இந்த விக்கல்தான் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறதோ!
மறுநாள் காலை மனமில்லை என்றாலும் கோவிலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் காலையிலேயே எழுந்து குளித்துக் கிளம்பி ஹாலில் அமர்ந்து கைவிரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் பவானி.
“என்ன பவிக்குட்டி? விரல்ல விடாது ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க? காலையிலேயே எங்க கிளம்பிட்ட?” என்றவள் அப்பொழுதுதான் கவனித்தாள் பவானி வெளியே செல்லக் கிளம்பியிருப்பதை.
“கோவிலுக்கு அண்ணி” என்றாள் ஆராய்ச்சியை விடாது.
“இன்னைக்குக் காலேஜ் இல்லையா?
“இருக்கு. நான்தான் லீவ் எடுத்துட்டேன்.”
“நேத்து லீவ் எடுத்ததுல ஒரு அர்த்தமிருக்கு. இன்னைக்கு ஏன்?” என்றாள் யோசனையாய்.
“கோவில் போகணும்” என தலைகவிழ்ந்து மென்மையாக உரைத்தாள் பவானி.
“சொல்லியிருந்தா நானும் கிளம்பியிருப்பேன்ல பவிமா? கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் வர்றேன்” என்றபடி வந்தார் ராகினி.
“நீங்க ஏன்மா? நான் இந்த எலிக்குட்டியை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று வெளியே செல்லக் கிளம்பி வந்திருந்தான் அதியன்.
தாயும் மகளும் அவனை ஆராய்ச்சியாய்ப் பார்க்க, “என்ன பார்வை எல்லாம் ஒரு தினுசா வருது? இவள் வந்ததிலிருந்து உங்க இரண்டு பேர் பார்வையும் சரியில்லை. நான் எதுவும் செய்யலை சரியா?” என்றான்.
“நீ எதுவும் செய்ததா நானும் சொல்லலையேடா. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு நீயே வான்டடா வர்ற. சரி பிழைச்சிப்போ. அப்படி எங்க பார்வையில் என்ன சரியில்லை?” என்றார் ராகினி.
“அது தெரிஞ்சா நான் சொல்லமாட்டேனா?” தெனாவட்டாகப் பதிலளிக்க,
“அப்படியே சொல்லிரகில்லிர போற. போடா” என்று தம்பியைத் திட்டி, “ஏன் பவிக்குட்டி? காலேஜ் போயிட்டு வந்து கோவிலுக்குப் போயிருக்கலாம்ல?” என்றாள் அன்பழகி.
“நான்தான் போகச் சொன்னேன்” என்பதாய் மனைவியினருகில் வந்தமர்ந்தான் செந்தூரன். ஏனென கணவனைப் பார்க்க, “கழுத்துல கட்டியிருக்கிற கயிறை கோவில் உண்டியல்ல போட்டுட்டு வரச்சொன்னேன்” என்றானவன்.
“என்ன?” என்ற அதிர்வுக்குரல் ராகினி அன்பழகியிடமிருந்து வர,
“ஏன் இப்படியொரு ரியாக்ஷன்? நேத்து நைட் பேசினப்ப என்னைப் பழிவாங்க தனக்குத்தானே கட்டிக்கிட்டதா சொன்னா. அதான் ஃப்யூச்சர் பாதிக்கப்படக்கூடாதுன்னு கழட்டச் சொன்னேன். கோவில்ல போய் கழட்டுறேன் அண்ணான்னு சொன்னதும் எனக்கும் சரின்னு பட்டுது. இதிலென்ன” என்பதுபோல் சாதாரணமாகவே சொன்னான் செந்தூரன்.
சட்டென்று பவானியைக் கேள்வியாய்ப் பார்க்க, “அ..ஆமா அண்ணி” என்றதும், தம்பியைப் பார்க்க, அவனோ கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
“பவி! அப்ப அதை நீயே கட்டிக்கிட்டியா?”
“ஆமாம் அத்தை” என்றவள் குரல் சற்று திணறியதோ!
“அப்ப கூடயிருந்த பையன் யாரு?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தார்.
“அ..அது என்னோட ஃப்ரண்ட் அத்தை” என்றாள்.
“ஸ்கூல் காலேஜ் எல்லாமே கேர்ள்ஸ். அதைத் தாண்டி யாரோடவும் பேசவோ பழகவோ உங்க சித்தி விடலை. கண்காணிக்க எப்பவும் ஆளிருக்கும். பாய்ஸ் கேர்ள்ஸ்னு ஃப்ரண்ட் யாரும் கிடையாதுன்னு நீயே என்கிட்ட சொல்லியிருக்கிறப்ப, எப்படி ஒரு பையன் ஃப்ரண்ட்னு வருவான்? அதையும் தாண்டி அந்த நண்பன் யாரு? அவனை நான் பார்த்தே ஆகணும்” என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டார் ராகினி.
“அத்தை கேட்கிறது சரிதானே பவிமா? யார் அந்த புது நண்பன்?” என கேட்டவனுக்குமே அப்பொழுதுதான் ஏதோ ஒன்று மறைக்கடுவது புரிந்தது.
“சொல்லு பவிக்குட்டி? எங்களுக்குத் தெரியாமல் யாரு?” என்றாள் அன்பழகியும்.
“அவளைப் போட்டு ஏன் படுத்துறீங்க” என்ற அதியன், தாய் சகோதரியின் கேள்விப் பார்வையில், “எலிக்குட்டி திணறுறதால அந்த டாபிக் வேண்டாமேன்னு...” முனகியபடியே எழுந்தவன். “எனக்குக் கொஞ்சம் வெளில வேலையிருக்கு. வர்றேன்மா” என விட்டால் போதுமென்று வாசல் நோக்கிச் செல்ல, அங்கே அவனின் நண்பன் ராகேஷ் தங்கை ரசிகாவுடன் வந்தான்.
“டேய் ராக்கி! ஊர்லயிருந்து எப்ப வந்த? இவ்வளவு காலையிலேயே வந்திருக்க? அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டியேடா” என்று அணைக்க வர, அவனைத் தள்ளிவிட்டு தங்கையை உள்ளே அழைத்துச் சென்றான்.
ராகினியும் அன்பழகியும் அவர்களை வரவேற்க, “என்னாச்சி இந்த ராக்கிக்கு? தள்ளிவிட்டுட்டுப் போறான்” என்று அவர்களுடன் உள்ளே வந்தான் அதியன்.
“அக்கா இவனை என்கிட்டப் பேச வேண்டாம் சொல்லுங்க. சின்னச் சின்ன விஷயத்தையும் என்கிட்ட மறைக்காம சொன்னவன், அவன் லைஃப்ல நடந்த முக்கியமான விஷயத்தை என்கிட்டயிருந்து மறைச்சிட்டான்” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.
“அப்படி எந்த முக்கியமானதும் என் வாழ்க்கையில் நடக்கலையேடா” என புரியாது கேட்டான்.
“ஓ.. சார் கல்யாணம் செய்தது முக்கியமானதில்லையா?” என்றான் பட்டென்று.
“என்னது கல்யாணமா?” அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் எழ, பவானி மட்டும் தவிப்புடன் அமர்ந்திருக்க, அந்நேரம் நடைபயிற்சி சென்று வந்த சதாசிவமும் அகிலனும், “எதுக்கு இப்படித் திகைச்சுப்போய் நிற்குறீங்க?” என்றனர்.
மனைவியின் அறைக்குள் செந்தூரன் வருகையில் அன்பழகி நேஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். “சரி அண்ணி. உங்க மாமியாரை..” என பல்லைக்கடித்தவள், “காலையில் கவனிச்சுக்குறேன். இதை என்கிட்டயே சொல்றதுக்கென்ன? சரி உங்க அண்ணனை ஊரைவிட்டுத் தள்ளி வச்சிருறேன். சரி உங்க அண்ணனை ஒண்ணும் சொல்லலை. என்னை விட்டு மட்டும் தள்ளி வைக்குறேன். பேபியை நல்லா பார்த்துக்கோங்க. குட் நைட்” என்று வைத்தாள்.
அவள் பேசுவதைக் கேட்டிருந்தவனுக்கு என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடிந்தது. அவளை வம்பிழுக்கவென்று மனம் உந்த மர்மப்புன்னகை ஒன்று அவனிதழில். சட்டென்று கைபேசியை எடுத்து மனைவியின் முதல் நம்பருக்கு அழைத்து அவள் கவனிக்கும் முன் கட்டிலினருகில் சென்று மறைந்து கொண்டான்.
‘செந்தூரா’ பாடல் அறை முழுவதும் எதிரொலிக்க, கேட்ட நொடி அவளிதழில் மோகனப் புன்னகையொன்று உதயமாக, “ரூம்கு வராம எங்கயிருந்து பண்ணுறாங்க?” என்று அறையை விட்டு வெளியே வந்து கீழே பார்க்க, அவரவர் அறைக்கதவுகள் அடைக்கப்பட்டிருக்க, மின்விளக்கு ஒன்றைத் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. அருகிலிருக்கும் அதியனின் அறையிலும் உள்ளே விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அழைப்பாக செந்தூரப்பூவே ஒலிக்க, “பக்கத்துலதான் எங்கேயோ இருக்காங்க. என் ரிங்டோன் கண்டுபிடித்து வம்பிழுக்க விளையாடுறாங்களா? இல்லை மாடியில் எங்கேயாவது..” என்று அங்கேயும் சென்று பார்க்க அவனை அங்கும் காணவில்லை.
கணவனைக் காணாது அறைக்குள் வந்தவளுக்கு தன்னாலேயே பயமும் பதற்றமும் ஒட்டிக்கொள்ள, “எங்கேயிருக்கீங்க செந்தூரா?” என்றவளுக்கு அழுகை வரும்போல் தோன்ற, அப்பொழுதுதான் கட்டிலைப் பார்க்க, அவனோ உறங்கிக் கொண்டிருந்தான். இல்லையில்லை உறங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று ஒருவித ஆசுவாசம் எழ, “இவ்வளவு நேரம் என்னை அலைய விட்டுட்டு தூக்கம் வருதா உங்களுக்கு?” என்று சுற்றிலும் பார்க்க, மனைவி வரும் அரவத்தை உணர்ந்து அரைக்கண் கொண்டு பார்த்தவன், அவள் தன்னை அடிக்க ஆயுதம் தேடுவது புரிய, “சந்திரமுகி இஸ் பேக்” என்று போர்வையை இழுத்து மூடினான்.
ஆயுதம் எதுவும் கிடைக்காதிருக்கவும் தன் கை இருக்க பயமேன் என்று கணவனருகில் நெருங்கி, “திடீர்னு போர்வை தன்னால வந்து மூடிருச்சா. தூங்குற மாதிரி நடிக்கிறதைப் பார். போன் செய்து என்னை சீட் பண்ணுறீங்கள்ல. உங்களை..” என்று போர்வையை உருவி அடிக்கிறார்போல் செல்ல,
“நல்லா ஆசை தீர அடிச்சிக்கோ அன்பழகி. ஏன்னா?” என்று நிறுத்த,
“என்ன? என்ன ஏன்னா?” என அவளும் வேகத்தோடு கேட்க,
“ஏன்னா? அடிக்குற கைதான் அணைக்குமாம். ஆசை தீர அடிச்சிட்டு, ஆசை தீர்ந்தாலும் அணைச்சிக்கோ” என்றான் கண்ணடித்து.
“என்னது அணைக்கணுமா? அசிங்கமா பேசாதீங்க” என்றாள் கோபம்போல்.
படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவன், “அசிங்கமா? ஹலோ டாக்டர் மேடம்! நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்.”
“மதியம்தான அந்தரங்க உரிமை எடுக்கமாட்டேன் சொன்னீங்க?” என்றாள் இறங்கிய குரலில்.
“ஆனா, நான் உரிமை எடுக்கலையேமா. உன்னைத்தான எடுத்துக்கச் சொல்றேன். அடிக்குறது உன் உரிமைன்னா, அணைக்குறதும் உன் உரிiதான? சோ..” என்க,
‘இவன் இப்படியெல்லாம் பேசுவானா?’ என்பதாய் கணவனைப் பார்த்திருந்தவள், அவன் புருவத்தை உயர்த்தவும், மானசீகமாகத் தலையில் தட்டி, “சோ?” என்றாள் திமிராய்.
அதில் கவரப்பட்டானோ! சட்டென்று அவளை இழுத்துத் தன்மேல் போட, அதை எதிர்பாராதவளோ, “என்ன பண்றீங்க?” என்றபடி கட்டிலில் அவன்மேல் விழ, அவள் கண்களை மட்டுமே பார்த்தபடியிருந்தான் செந்தூரன்.
அதிலெழுந்த கூச்சத்தில் “ஹ்ம்.. என்னை விடுங்க” என அவள் சிணுங்க, “அடிக்க வந்த கைதான் அணைச்சிருக்கு” என்றதும்தான் கவனித்தாள் தான் அவனை கட்டிப்பிடித்திருப்பதை.
வேகமாக அவனிடமிருந்து எழப்பார்க்க, “ரிலாக்ஸ் அன்பழகி” என்று அவளை மெதுவாக நகர்த்தி கட்டிலில் உட்காரவைத்துத் தானும் அமர்ந்து, “நமக்கு இன்னைக்கு முதல் ராத்திரி” என்றான்.
“விளையாடாதீங்க செந்தூரா. டைம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு ஓவரா பண்ணுறீங்க” என்று அழப்போகும் குழந்தையாய் சொல்ல, பக்கென்று சத்தமாகச் சிரித்தவன் அவள் முகம் நோக்கிக் குனிந்து, “நானும் நீயும் சேர்ந்திருக்கும் முதல் இரவு இதுன்னு சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க டாக்டர் மேடம்?” சீண்டலாகக் கேட்டான்.
ஸ்ஸ்.. என்று நாக்கைக் கடித்து நாணம் சுமந்தவளைப் பார்த்தபடி, “என் அன்பழகிகிட்ட கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசை. உன்னோட சம்மதமில்லாமல் நமக்குள்ள எதுவும் சாத்தியமில்லை. சின்னச் சின்ன சீண்டல் தீண்டல்தான் நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாண்டிங் கொண்டு வரும். உனக்குப் பிடிக்கலைன்னா...” அதையும் விட்டுவிடுவதாகச் சொல்ல வந்தவனின் வாய்மூடி, “பிடிச்சிருக்கு” என்று வெட்கத்தில் தலைகுனிந்தாள்.
அவளின் முகம் நிமிர்த்தி நெற்றியில் மென்மையாய் வெகு நிதானமாய் முத்தமிட்டு, “படுத்துக்...” அவனை முடிக்கவிடாமல் ‘ஹக்’ என விடாமல் விக்கல் வந்தது அன்பழகிக்கு.
“விக்கல் வில்லங்கமான நேரத்தில் வந்திருக்கே அன்பழகி” என்று குறும்புப் புன்னகையுடன் சிரிக்க, மனைவியின் அடுத்த ஹக்கில் விக்கலுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டான் செந்தூரன்.
சில நிமிடங்கள் கழித்துத் தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு, “கன்னத்து முத்தத்துக்கே இவ்வளவு அட்டகாசமா? இந்த செந்தூரனின் அழகிடி நீ” என கொஞ்சினான்.
இந்த விக்கல்தான் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறதோ!
மறுநாள் காலை மனமில்லை என்றாலும் கோவிலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் காலையிலேயே எழுந்து குளித்துக் கிளம்பி ஹாலில் அமர்ந்து கைவிரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் பவானி.
“என்ன பவிக்குட்டி? விரல்ல விடாது ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க? காலையிலேயே எங்க கிளம்பிட்ட?” என்றவள் அப்பொழுதுதான் கவனித்தாள் பவானி வெளியே செல்லக் கிளம்பியிருப்பதை.
“கோவிலுக்கு அண்ணி” என்றாள் ஆராய்ச்சியை விடாது.
“இன்னைக்குக் காலேஜ் இல்லையா?
“இருக்கு. நான்தான் லீவ் எடுத்துட்டேன்.”
“நேத்து லீவ் எடுத்ததுல ஒரு அர்த்தமிருக்கு. இன்னைக்கு ஏன்?” என்றாள் யோசனையாய்.
“கோவில் போகணும்” என தலைகவிழ்ந்து மென்மையாக உரைத்தாள் பவானி.
“சொல்லியிருந்தா நானும் கிளம்பியிருப்பேன்ல பவிமா? கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் வர்றேன்” என்றபடி வந்தார் ராகினி.
“நீங்க ஏன்மா? நான் இந்த எலிக்குட்டியை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று வெளியே செல்லக் கிளம்பி வந்திருந்தான் அதியன்.
தாயும் மகளும் அவனை ஆராய்ச்சியாய்ப் பார்க்க, “என்ன பார்வை எல்லாம் ஒரு தினுசா வருது? இவள் வந்ததிலிருந்து உங்க இரண்டு பேர் பார்வையும் சரியில்லை. நான் எதுவும் செய்யலை சரியா?” என்றான்.
“நீ எதுவும் செய்ததா நானும் சொல்லலையேடா. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு நீயே வான்டடா வர்ற. சரி பிழைச்சிப்போ. அப்படி எங்க பார்வையில் என்ன சரியில்லை?” என்றார் ராகினி.
“அது தெரிஞ்சா நான் சொல்லமாட்டேனா?” தெனாவட்டாகப் பதிலளிக்க,
“அப்படியே சொல்லிரகில்லிர போற. போடா” என்று தம்பியைத் திட்டி, “ஏன் பவிக்குட்டி? காலேஜ் போயிட்டு வந்து கோவிலுக்குப் போயிருக்கலாம்ல?” என்றாள் அன்பழகி.
“நான்தான் போகச் சொன்னேன்” என்பதாய் மனைவியினருகில் வந்தமர்ந்தான் செந்தூரன். ஏனென கணவனைப் பார்க்க, “கழுத்துல கட்டியிருக்கிற கயிறை கோவில் உண்டியல்ல போட்டுட்டு வரச்சொன்னேன்” என்றானவன்.
“என்ன?” என்ற அதிர்வுக்குரல் ராகினி அன்பழகியிடமிருந்து வர,
“ஏன் இப்படியொரு ரியாக்ஷன்? நேத்து நைட் பேசினப்ப என்னைப் பழிவாங்க தனக்குத்தானே கட்டிக்கிட்டதா சொன்னா. அதான் ஃப்யூச்சர் பாதிக்கப்படக்கூடாதுன்னு கழட்டச் சொன்னேன். கோவில்ல போய் கழட்டுறேன் அண்ணான்னு சொன்னதும் எனக்கும் சரின்னு பட்டுது. இதிலென்ன” என்பதுபோல் சாதாரணமாகவே சொன்னான் செந்தூரன்.
சட்டென்று பவானியைக் கேள்வியாய்ப் பார்க்க, “அ..ஆமா அண்ணி” என்றதும், தம்பியைப் பார்க்க, அவனோ கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
“பவி! அப்ப அதை நீயே கட்டிக்கிட்டியா?”
“ஆமாம் அத்தை” என்றவள் குரல் சற்று திணறியதோ!
“அப்ப கூடயிருந்த பையன் யாரு?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தார்.
“அ..அது என்னோட ஃப்ரண்ட் அத்தை” என்றாள்.
“ஸ்கூல் காலேஜ் எல்லாமே கேர்ள்ஸ். அதைத் தாண்டி யாரோடவும் பேசவோ பழகவோ உங்க சித்தி விடலை. கண்காணிக்க எப்பவும் ஆளிருக்கும். பாய்ஸ் கேர்ள்ஸ்னு ஃப்ரண்ட் யாரும் கிடையாதுன்னு நீயே என்கிட்ட சொல்லியிருக்கிறப்ப, எப்படி ஒரு பையன் ஃப்ரண்ட்னு வருவான்? அதையும் தாண்டி அந்த நண்பன் யாரு? அவனை நான் பார்த்தே ஆகணும்” என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டார் ராகினி.
“அத்தை கேட்கிறது சரிதானே பவிமா? யார் அந்த புது நண்பன்?” என கேட்டவனுக்குமே அப்பொழுதுதான் ஏதோ ஒன்று மறைக்கடுவது புரிந்தது.
“சொல்லு பவிக்குட்டி? எங்களுக்குத் தெரியாமல் யாரு?” என்றாள் அன்பழகியும்.
“அவளைப் போட்டு ஏன் படுத்துறீங்க” என்ற அதியன், தாய் சகோதரியின் கேள்விப் பார்வையில், “எலிக்குட்டி திணறுறதால அந்த டாபிக் வேண்டாமேன்னு...” முனகியபடியே எழுந்தவன். “எனக்குக் கொஞ்சம் வெளில வேலையிருக்கு. வர்றேன்மா” என விட்டால் போதுமென்று வாசல் நோக்கிச் செல்ல, அங்கே அவனின் நண்பன் ராகேஷ் தங்கை ரசிகாவுடன் வந்தான்.
“டேய் ராக்கி! ஊர்லயிருந்து எப்ப வந்த? இவ்வளவு காலையிலேயே வந்திருக்க? அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டியேடா” என்று அணைக்க வர, அவனைத் தள்ளிவிட்டு தங்கையை உள்ளே அழைத்துச் சென்றான்.
ராகினியும் அன்பழகியும் அவர்களை வரவேற்க, “என்னாச்சி இந்த ராக்கிக்கு? தள்ளிவிட்டுட்டுப் போறான்” என்று அவர்களுடன் உள்ளே வந்தான் அதியன்.
“அக்கா இவனை என்கிட்டப் பேச வேண்டாம் சொல்லுங்க. சின்னச் சின்ன விஷயத்தையும் என்கிட்ட மறைக்காம சொன்னவன், அவன் லைஃப்ல நடந்த முக்கியமான விஷயத்தை என்கிட்டயிருந்து மறைச்சிட்டான்” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.
“அப்படி எந்த முக்கியமானதும் என் வாழ்க்கையில் நடக்கலையேடா” என புரியாது கேட்டான்.
“ஓ.. சார் கல்யாணம் செய்தது முக்கியமானதில்லையா?” என்றான் பட்டென்று.
“என்னது கல்யாணமா?” அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் எழ, பவானி மட்டும் தவிப்புடன் அமர்ந்திருக்க, அந்நேரம் நடைபயிற்சி சென்று வந்த சதாசிவமும் அகிலனும், “எதுக்கு இப்படித் திகைச்சுப்போய் நிற்குறீங்க?” என்றனர்.