• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
19


மூன்று கார்கள் வரிசையாக வர, செக்யூரிட்டி கேட் திறந்ததும் நுழைவாயில் சென்று முதல் கார் நின்றதும், ஆரத்தி எடுப்பதற்காக ஈஸ்வரி வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.

கார் நின்றதும் கீழே இறங்கி “வா அவந்தி” என கார்த்திக் அழைக்க, ஒருவித முக இறுக்கத்துடன், கண்ணயர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு ‘ஏன் இவள் முகத்தில் சந்தோஷமில்லை?’ என்ற குழப்பம் வந்தது. ‘தனியாக பேசி சரிசெய்யலாம்’ என்றெண்ணி, மனைவியை மெல்ல தொட்டு “அவந்தி வீடு வந்திருச்சி” என்றான்.

கண் திறந்தவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி, முதன்முறையாக கார்த்திக்கின் குடும்பத்தை சந்திக்க வந்தபொழுது, ‘என்ன கார்த்திக் நீங்க சொன்ன இடத்துல ஒரு மினி பங்களாதான் இருக்கு’ என்றாளே அங்கேதான் வந்திருந்தார்கள். அப்பொழுதே தெரிந்தது அவர்கள் இருந்தது அவுட்கௌஸ் என்று. அதற்கும் கார்த்திக்கை முறைக்க, அவனோ அன்று சிரித்த அதே சிரிப்பையே பதிலாக்கினான்.

“பொய்யைத் தவிர எதுவுமே என்கிட்ட சொல்லலைல நீங்க? ஒரு விஷயத்துலயும் உண்மையாயில்ல, என்னை நம்பவுமில்ல, இதுல நீங்க போலீஸ் வேற!” என வார்த்தையால் அவனைக் கடித்தாள்.

அவள் தான் கோவிலுக்கு தாமதமாக வந்ததால் தான் கோவப்படுகிறாளோ என்றெண்ணி, “அவந்தி ப்ளீஸ் எதுக்கு கோவப்படுற? நான் வேணும்னேலா...” அவனை முடிக்கவிடாமல் கைதூக்கி நிறுத்தி, “இப்ப நான் இங்க வந்ததுக்கு காரணம் அத்தைதான். இது நிரந்தரமான்னு தெரியாது. எனக்குப் பிடிக்காதது நடந்தாலோ, ரொம்ப உரிமை எடுத்தாலோ, நான் எங்க வீட்டுக்குக் கிளம்பிருவேன்” என்றாள் சற்று மிரட்டலாகவே.

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, என்ன செய்வதென்று தெரியாமல் “சரி வா” என்று சற்று இறுகிய முகத்துடனே சென்றான். அவன் பின்னே சென்றவள் கணவனை விட்டு மூன்றடி தள்ளி நின்றாள்.

“அவந்தி ஏன் இவ்வளவு இடைவெளி?” என்ற வைஷ்ணவி கார்த்திக்கின் அருகில் நெருக்கமாக நிறுத்த, தன்மீது உரசியவளை பார்த்து சிநேகமாக சிரித்தவனை, முறைத்து விலகி நின்றாள் அவனின் அழகி.

புவனேஸ்வரி வந்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தார்.

“வலது காலை உள்ளே வச்சி வாங்கண்ணி. தங்களின் வரவு என்றும் நல்வரவே!” என்று சந்தோஷ் பூத்தூவி வரவேற்றான்.

சில வினாடிகள் வியந்தவள் முகம் தன்னால் மலர, சந்தோஷைப் பார்த்து புன்னகைத்தாள் அவளின் புன்னகையில் ஒருவன் கடுப்பாவதை அறியாமல். தற்செயலாக கணவன் முகம் பார்த்தவளுக்கு, அவனது காண்டான முகம் தெரிய, ‘மவனே மாட்டுனியா! இரு உன்னை ஒருவழி பண்றேன்’ என மனதினுள் எண்ணி, “என்ன சந்தோஷ் பூவெல்லாம்?”

“அழகான எங்க அண்ணியோட வரவேற்புக்குத்தான்.”

“தேங்க்ஸ் சந்தோஷ்.”

“தேங்க்ஸை அப்புறம் பார்த்துக்கறேன்,. இப்ப, யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் அண்ணி” என தலைதாழ்ந்து வரவேற்க, சட்டென்று சிரித்தாள்.

“வாசல்லயே எல்லாத்தையும் பேச வேண்டாம். உள்ள வாங்க” என்றவர், “நித்யாமா, பொண்ணு மாப்பிள்ளைக்கு பால்பழம் ரெடி பண்ணியாச்சா? நான் சொன்னமாதிரி செஞ்சியா?”

“இதோ, நீங்க வந்ததைப் பார்த்ததும் ரெடி பண்ணிட்டேன்ம்மா” என்றபடி வந்தாள் நித்யா. சந்திரகுமார், புவனேஸ்வரியின் வளர்ப்பு மகள்.

பால் பழம் கொடுத்து முடித்ததும், “நான் கமிஷனர் ஆஃபீஸ் வரை போயிட்டு வர்றேன்மா. திரும்பி வர நேரமானாலும் ஆகலாம்” என்று தன் அறைக்குச் சென்று தயாராகி வந்தவன், தாய் தந்தையிடம் சொல்லி மனைவியிடம் திரும்ப, அவளோ அப்பொழுதுதான் அக்கறையாக நேத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ‘இவளை... வந்து கவனிச்சிக்கறேன்’ என்று சென்றான். செல்லும் கணவனையே பார்த்திருந்தவள் சின்ன பெருமூச்சுடன் திரும்பினாள்.

“என்னங்க மேடம், ஏக்கப் பெருமூச்சி பெருசா வருது?”

“ப்ச்... நீ வேற சும்மாயிரு வைஷு.”

“ஏன் அவந்தி? கார்த்திக் சார் மேல உள்ள லவ் என்னாச்சி? ஏன் இந்தக் கோவம்?”

“வைஷு ப்ளீஸ். இந்த பேச்சை விடுறியா?” என்றவள் பேச்சை மாற்ற எண்ணி நேத்ராவிடம் திரும்பி, “நேத்ரா வேலை கிடைச்சாச்சி. அடுத்து கல்யாணம் தான?” என கேட்டாள்.

“கல்யாணம்! ம்... பார்க்கலாம்” என்றவள் கண்கள் சந்தோஷை ஒரு வினாடியேனும் தொட்டு மீண்டது.

மற்றவர்கள் அதை கவனிக்கவில்லை. அவளையே பார்த்திருந்த அவந்திகாவின் கண்கள் அதைக் கண்டுகொண்டன. சந்தோஷைப் பார்த்தபொழுது, நேத்ராவின் கண்களில் தோன்றிய ஒருவித மயக்கம், ‘அடிப்பாவி! கௌஷிக்கை கரெக்ட் பண்ண வந்திருக்கியான்னு கேட்டதுக்கு பதிலா, சந்தோஷை கரெக்ட் பண்ண வந்தியா கேட்டிருக்கணும் போலருக்கே. தப்புப் பண்ணிட்டியே அவந்தி’ என மனதிற்குள் தன்னையே திட்டினாள்.

உணவு முடித்து கிளம்பும் பொழுது, சந்தோஷிடம் வந்த வெங்கடேஷ் நன்றி சொன்னான்.

“ஏன்? எதற்கு?” என்ற சந்தோஷிடம்,

“நேத்ராவைப் பாதுகாத்ததுக்கு” என்றான்.

“ஹா...ஹா அதுக்கு தேங்க்ஸா? என்னோட கடமை” என்றான் அவந்திகாவை மனதில் வைத்து.

அதைக் கேட்டிருந்த நேத்ராவிற்கோ மனம் குதூகலித்தது. அவனைத் தாண்டுகையில் “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்றாள்.

“நீயுமா? எதுக்கு நேத்தி?”

“எல்லாத்துக்கும்” என்று சற்று தள்ளிச் சென்றவள் “சந்தோஷ்” என்றழைக்க, திரும்பியவனைக் கண்டு தலைசாய்த்து, ஒரு கண்மூடி விரல் நீட்டி, அவனைப் போலவே, “டிஸ்ஸூ” என்றாள்.

அவளின் செய்கையில், அந்த அழகில் சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றவன் பின் சுதாரித்து சிரித்தபடி, “ஹேய் நேத்தி.. எனக்கேவா. ஓகே பை” என்று அண்ணியிடம் வந்தவன், “சரியான விளையாட்டுப் பொண்ணு அண்ணி. இவள்லாம் டாக்டர்னா நம்பவா முடியுது” என்று தன்னறைக்குச் சென்றான்.

செல்லும் அவனின் செயலில், எதுவும் புரியாமல் அவந்திகா விழித்தாள்.

அதுவரை அங்கிருந்த சுந்தரேஷனும், விஷ்ணுவால் தனியாளாகப் பார்த்துக்கொள்ள முடியாதென்று கிளம்பினார்.

அனைவரும் சென்றதும் மதியம் சமையலுக்கு நித்யாவிடமும், அவளுக்குத் துணையாக நின்றிருந்த வேலைக்காரப் பெண்ணிடமும், சொல்லிவிட்டு மருமகளிடம் புவனேஸ்வரி வந்தமர, எதிரிலிருந்த இருக்கையில் வந்தமர்ந்தார் சந்திரகுமார்..

“சாரி மாமா. சாரி அத்தை. நான் எப்படி உங்களையெல்லாம் அடையாளம் தெரியாமல் போனேன்னு தெரியலை.”

“ப்ச்... அதையெல்லாம் விடும்மா. உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?”

“ம்... பிடிச்சிருக்கு. இதைவிட அவுட்ஹவுஸ் ரொம்ப பிடிச்சிருந்தது மாமா” என்றாள் தலைகவிழ்ந்தவாறு.

அவளின் நிலை புரிந்தவர்கள், “தப்பான எண்ணத்துல இதெல்லாம் பண்ணலம்மா. விவரம் தெரிஞ்சா நீ புரிஞ்சிப்பன்னு தான் சொல்லல. இந்த சி.என் ட்யூட்டி அப்படி. அவன் எப்ப எங்கயிருக்கான், என்ன பண்றான் எதுவுமே தெரியாது. சொல்லவும் மாட்டான். அவன் வேலை சக்ஸஸ் ஆனா மட்டும்தான் எங்ககிட்ட வாயே திறப்பான்.”

“நீங்க கூடதான் எதுவுமே சொல்லல?” என குறைபட்டாள்.

“நான் என்னடா பண்றது? நீயே கண்டுபிடிப்பன்னு நினைச்சேன். பட், நீ அவ்வளவு ஷார்ப் இல்ல போ.”

‘எங்க கண்டுபிடிக்க? நான்தான் நானாவே இல்லையே!’ என மனதினுள் நினைத்தவள், காலையில் இருந்து தனக்கிருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, “அத்தை உங்க பையன் பெயர் கார்த்திகேயன் தான? இல்ல..?” என கேள்வியாய் இழுத்தாள். அதிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறோமோ என்றெண்ணி.

“ஆமாமா” என்று அவள் மனதிலுள்ள உறுத்தலைத் தடுத்து, “உங்க மாமாவோட அப்பா பெயர் நாராயணன். அவர் இறந்த மறுமாசம் கார்த்திக் பிறந்தான். இவங்களுக்கு அப்பா பெயரை வைக்கணும்னு ஆசை. எனக்கு கார்த்திகேயன் வைக்கணும்னு ஆசை. நாராயணன் கொஞ்சம் ஓல்ட் நேம் என்றதால ஸ்கூல்கு அதை வச்சிட்டு, கூப்பிடுறதுக்கு கார்த்திகேயன்ற நேம் வச்சோம். அப்ப சி.என் எதுக்குன்றியா? அவனோட க்ளாஸ் பையனுக்கும் இவனுக்கும் ஒரே இன்ஷியல்ல நேம். அந்தப் பையன் முதல்ல சேர்ந்ததால, அவனை அவங்க மிஸ் நாராயணன்னும் இவனை இன்ஷியலோட சி.என்னும் கூப்பிட, அதை கேலி பண்ண ஆரம்பிச்ச நாங்களும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஸோ, உனக்கு மட்டும்தான் அவன் கார்த்திக்” என்றதும் சற்றுமுகம் மலர்ந்தது.

அவளை ஆதுரமாக வருடிக்கொடுத்து, “அவந்திமா ரெண்டுபேரும் உங்களுக்குள்ள பிரச்சனைகளை பேசித் தீர்த்துப்பீங்களோ? பேசாம தீர்ப்பீங்களோ? இல்லை சண்டை போட்டு தீர்ப்பீங்களோ தெரியாது. உங்க பிரச்சனை உங்களைத் தாண்டி, அதாவது உங்க பெட்ரூம் தாண்டி, மூணாவதா ஒருத்தர் காதுக்கும் போகக்கூடாது. ஓகேவா?”

சம்மதமாக தலையசைத்தாலும், ‘அந்த லூசனை நான் மன்னிக்கவேற செய்யணுமா? எப்ப அவங்க என்னை நம்பலையோ, அப்பவே எங்களுக்குள்ள எதுவுமில்லை’ என மனதிற்குள் பொருமினாள் அவந்திகா.

“முதல்ல இந்த சேலையை மாத்தி, நைட்டி போட்டுக்கம்மா வயிறு வலிக்கப்போகுது” என அக்கறையாக சொன்ன மாமியாரின் வார்த்தைகளில் அடங்கினாலும், “அத்தை விஷயம் தெரிஞ்சி யாராவது பார்க்க வந்தா?” என கேட்டாள்.

“அது என்னோட பிரச்சனை. அதை நான் சமாளிச்சிப்பேன்” என்றவரை அணைத்து, “நீங்க ஒரு கலெக்டர். அப்படியிருந்தும், எப்படி அத்தை, எங்க வீட்ல வந்து எனக்கும் வேலை பார்த்து, எங்கத்தையோட வார்த்தைகளையும் வாங்கி, இப்ப நினைச்சா இன்னும் கஷ்டமாயிருக்கு” என கண்கலங்கினாள்.

“ப்ச்... அவந்தி அழக்கூடாது. கலெக்டர்னா வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா என்ன? உனக்காக! என் பையனுக்காக! இதைக்கூடச் செய்யலன்னா நானெல்லாம் என்ன அம்மா சொல்லு?”

“உனக்காகன்னா? என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியாதே அத்தை?” என கேள்வியாய் நோக்கினாள்.

“அட நீ வேறம்மா. உங்கத்தை உன்னோட தீவிர ரசிகை” என்றதும் கலங்கிய கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. “ஆமாம்மா. உன்னை எப்படியாவது மீட் பண்ணனும்னு நினைப்பா. ஆனா, டைம் கிடைக்கல. தமிழ்நாட்டுல போஸ்டிங் கிடைச்ச பின்னாடி. உன்னைச் சந்திச்சே தீருவேன்னு. ஒத்தைக்கால்ல நின்னா தெரியுமா? நான்தான் கால் வலிக்கப் போகுதுடா புவி. ரெண்டு கால்லயும் நில்லுன்னு சொன்னேன்” என்றவரின் பாவனையில் சட்டென்று சிரித்தாள் அவந்திகா.

“கார்த்திக் சென்னை வந்தது தெரிந்ததும், உன்னை பார்க்கச் சொல்லிட்டிருந்தேன் அவந்திமா. அவன் என்னடான்னா, நான் இந்த கேஸை முடிச்சிட்டுத்தான் மீட் பண்ணுவேன்னுட்டான். அதுக்கப்புறம் விதிவசத்தால் நீயே வரவும், அவனால மறுக்க முடியல. உடனே சம்மதிச்சி, எங்களையும் வரச்சொல்லிட்டான். மெடிக்கல் லீவோட ட்ரான்ஸ்பரும் கேட்டிருந்தேன். இங்கே சென்னை கலெக்டர் ரிடையர்டானதால எனக்கு கிடைச்சது” என்றார் புவனேஸ்வரி.

தனக்காக அவர்களின் வேலையையும், தொழிலையும், இரண்டாம்பட்சமாக கருதியவர்களின் இந்த பாசத்திற்குத் தான் தகுதியானவளா என்றே தோன்றியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்தவளுக்கு, தன் தாய் தந்தையே தனக்குக் கிடைத்தாற்போன்ற அமைதி எழுந்தது மனதினுள். ‘நானாக சென்றிருக்காவிட்டாலும், கார்த்திக் என்னை வந்து சந்தித்திருப்பானோ? அந்த சந்திப்பில் சி.என்னாக அறிமுகமாகிருப்பான?! இல்லை சிஐடி ஆஃபீஸராகவா? இல்ல கார்த்திக்காகவா?” மனம் குழம்பியது.

குழம்பிய குட்டையில் மீன் கிடைப்பதற்குப் பதில், குட்டை மேலும் கலங்குவது தெரிய, அதிகம் ஆராயாது அப்படியே விட்டாள்.

புவனேஸ்வரிக்கு, ‘மூன்று வருடங்கள் முன் இருந்தே, என் மகனின் காதலி நீதான்’ என்று தான் சொல்வதைவிட, அதை தன் மகன் வாயிலாக கேட்டறியட்டும் என்று மறைத்தார்.

ஏனென்று கேட்ட சந்திரனுக்கும் வேண்டாமென்று ஜாடையில் சொல்லி புரியவைத்தார்.



ஊடகங்கள் அனைத்திற்கும் செய்தி கொடுத்து, மற்றவர்களின் அளப்பறிய பாராட்டுக்களையும் பெற்று, அனைத்தையும் முடித்து வர, இரவு பத்தானது கார்த்திக்கிற்கு. அவனின் வரவிற்காக காத்திருந்தவர்கள் வந்ததும் வாழ்த்துச் சொல்ல, அவன் மனைவியோ, கண்களால் மட்டுமே சொல்லி கைகொடுக்க மறுத்தாள்.

“ஏன்டா அழகி நான் அழுக்கா இருக்கேன்னு பார்க்கிறியா? இதோ வர்றேன்” என்று கீழே இருந்த அறையில் குளித்து, ஆடைமாற்றி வந்து கைகொடுக்க, கையை தட்டிவிட்டவள் மாமியாரின் பின்புறம் மறைந்தாள்.

“ப்ச்... ஏன் கையைத் தட்டி விடுற? நான் உன் ஹஸ்பண்ட்தான?” திரும்பவும் மனைவியின் முறைப்பில், “என்னவோ தெரியல. ரொம்ப முறைக்கிற. கொஞ்சம் நேரம் கழிச்சி பார்த்துக்கறேன்” என்றான் அவர்களுக்கான இரவினை மனதில் வைத்து.

“ஆஹா! ரெண்டுபேரும் ஆரம்பிச்சிட்டீங்களா? முதல்ல சாப்பிட்டு வந்து சண்டைபோடுங்க” என்றழைக்க இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி சென்றனர்.

அனைவரும் உண்டு முடிந்ததும் தன் அறைக்குள் சென்ற கார்த்திக், “புவன்ஸ் வாட் இஸ் திஸ்?” என்று கத்தினான்.

அவனின் கத்தலில், என்னவோ ஏதோவென்று அனைவரும் மாடியேறி அவன் அருகில் வந்து நிற்க,

“நீங்க என்னை இப்படிப் பழிவாங்குவீங்கன்னு, நினைச்சே பார்க்கல புவன்ஸ்? யூ டூ டாட்?” என்றான் தகப்பனிடம் திரும்பி.

அவன் என்ன சொல்கிறான், சொல்ல வருகிறான் என்று புரியாதவர்கள் பேந்த பேந்த விழிக்க,

“என்ன இப்படி முழிச்சா, நீங்க செஞ்ச தப்பு இல்லைன்னு ஆகிருமா? இப்படிப் பண்ணிட்டீங்களே?” என கோபத்துடன் கத்தினான்.

இதுவரை கணவனை அன்பாகவே பார்த்த அவந்திகா, அவனின் குரலில் தெரிந்த கோவத்தில் முதல்முறையாக பயந்து, மாமியாரின் பின்னால் ஒதுங்கினாள்.

“ஏன்டா கத்துற? என்ன கோபம் உனக்கு? எதுவாயிருந்தாலும் மெல்ல சொல்றதில்லையா? அவந்தி பயப்படுறா பாரு. நீ என்னன்னு சொன்னால்தான தெரியும்?” என திருப்பிக் கேட்க,

“ஓ... சொல்லலன்னா தெரியாதோ?” என ஏளனமாகக் கேட்டு, “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?” என்றான்.

“இது தெரியாதா? இன்னைக்கு பிப்ரவரி இருவது.”

“ம்... அப்புறம்?” என கார்த்திக் எடுத்துக்கொடுக்க,

“அப்புறம், இன்னைக்குத்தான்டா உனக்கு கல்யாணமும் ஆகிருக்கு.”

“அப்படி வாங்க வழிக்கு. இன்னைக்கு எங்க கல்யாண நாள்னு தெரியுதுல்ல. அப்ப இன்னைக்கு நைட்டைத்தான, பர்ஸ்ட் நைட் சொல்வாங்க. என் ரூமை, என் அழகியோட ஷேர் பண்ணிக்கப்போற முதல்நாள். நானும் ஆவலோட இங்க வந்து பார்த்தா, என் பெட்ரூம்ல எந்த சேஞ்சசும் இல்ல. பூ எங்க? பழம் எங்க? எத்தனை படங்கள்ல பார்த்திருக்கேன். ஆனா எனக்கு... ஒண்ணுமேயில்லையா” என ஏறியிருந்த குரலை இறக்கி ஏக்கத்தோடு கேட்டான்.

‘அடப்பாவி லூசா! இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்! ச்சோ... அதுவும் எல்லார் முன்னாடியும்!’ சற்று வெட்கத்துடனும், சன்னமான கோவத்துடன் அவந்தி கணவனை முறைத்தாள்.

“அடப்பாவி அண்ணா! இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என அவந்தியின் மனதிலுள்ளதை சந்தோஷ் கேட்டு, “இதுக்கு இத்தனை சீனா?” என்றான்.

“யா...யா..” என்ற கார்த்திக்கின் தலைக்குலுக்களில்,

ஈஸ்வரி குறுக்கிட்டு, “டேய்! ரொம்ப அலையாத. அவந்திக்காகத்தான் தள்ளிவச்சேன்” என்றார்.

“ஏன்.. ஏன்.. ஏன்? என் அழகிக்கு என்ன?” என்று வேகமாக அவள் நெற்றி கழுத்தென்று கைவைத்துப் பார்க்க, ஏற்கனவே அவனின் பர்ஸ்ட் நைட் கலாட்டாவில் அரண்டிருந்தவள், கணவனின் கையைத் தட்டிவிட்டு மாமியாரிடம் மேலும் ஒண்டினாள். “பீவர் இருந்தமாதிரி தெரியலையே. அப்புறமென்ன புவன்ஸ்?”

“உன்னைச் சொல்லித் தப்பில்லடா. மூணுவருஷம் முன்னாடி நீ கேட்டப்பவே, வயசைக் காரணம் காட்டாம உனக்கு முடிச்சிருக்கணும் லேட் பண்ணினோம் பாரு. ஏன் சொல்லமாட்ட? அதான் இந்த அழிச்சாட்டியம் பண்ற.”

‘என்னது மூணுவருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்துக்கு கேட்டாங்களா?’ என அதிர்ச்சியாகி, ‘இவங்ககிட்ட மாட்டினோம் .அவ்ளோதான். வேண்டாம் அவந்தி எஸ்கேப்பாகுற வழியைப்பாரு’ என்று மனம் சொல்ல, “நா...நான் அத்தைகூட தான் படுக்கப்போறேன்” என்றாள் தைரியமாய்.

‘என்னது அம்மாகூடவா? எனக்கு வில்லங்கம் வெளியே இல்ல. என் பக்கத்துலயே இருக்கு’ என்றெண்ணி தாயை முறைத்து, மனைவியின் அதிர்வு முகம் பார்த்து, “உனக்கு நான் தாலி கட்டினேனா? இல்ல உங்கத்தையா? ஒழுங்கா நம்ம ரூம்கு வா. இல்ல நடக்கிறதே வேற” என மிரட்டி உள்ளே சென்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

இப்படி மடக்கினால்தான் தன்னுடன், தன்னறையில், தன்னருகில் இருப்பாளென்று அவனுக்கேயான குறும்பில் மனைவியை மிரட்டிவிட்டுச் சென்றான்.

அவந்திகாவிற்கோ இத்தனை வருட தைரியம், எங்கேயோ சென்று மறைய மிரண்டு விழித்தாள்.

“அவன் கிடக்கிறான்டா. சும்மா உன்னை மிரட்டிட்டுப் போறான். இதுக்கெல்லாம் பயந்திராதே. அப்பா பிள்ளைங்க எல்லாம், இப்படித்தான் வெட்டி ஜம்பம் பேசியே நாளை ஓட்டுவாங்க. மத்தபடி வேலைக்காக மாட்டாங்க. நீ தைரியமா போமா.”

“அத்தை எனக்கு பயமாயிருக்கு. நான் உங்களோ...”

“அவந்தி! நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். எதுவா இருந்தாலும் உங்க ரூம்குள்ளேயே முடிச்சிக்கோங்க. நீ எவ்வளவு தைரியசாலி. அதுவும் ஜர்னலிஸ்ட் வேற. உள்ள போ” என சன்னமாக மிரட்ட,

“அண்ணி! அம்மா என்ன சொல்றாங்கன்னா, அண்ணா உங்க கால்ல விழுந்தாலும், வெளியே காட்டாம கெத்தாயிருக்கணுமாம். “

“அண்ணி! அண்ணா ரொம்ப நல்லவங்க. ஒண்ணும் பண்ணமாட்டாங்க. தைரியமா போங்க” என்று நித்யா தன் பங்கிற்கு அண்ணனின் பெருமை பாடினாள்.

அனைவரும் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி கீழே சென்றார்கள்.

உள்ளே நுழைந்தவளின் பயத்தைப் பார்த்து உறுத்து விழித்தவன், “ஏன்டி என்னைப் பார்த்தா, வில்லன் மாதிரியிருக்கா? என்னவோ புலி குகைக்குள்ள போற எபக்ட் கொடுத்துட்டு வர்ற?” கடுப்பாக வினவியவனிடம்,

“இந்த ‘டி’ சொல்ற வேலையெல்லாம் வேண்டாம். எனக்குப் பிடிக்கலை” என்றாள் முகம் திருப்பி.

“ஓ... அந்த கௌஷிக் சொல்லலாம். கட்டின புருஷன் நான் சொல்லக்கூடாதா? சரிவிடு சொல்லலை” என்று உடனே ஒத்துக்கொண்டவன், “செல்லம் இங்கே வாயேன்” என அருகே அழைத்தான்.

“ம்கூம்... மாட்டேன்” என்று கட்டிலின் மறுபுறம் தயங்கி நிற்க,

“சரிவிடு. என் பொண்டாட்டிதான. நானே வர்றேன்” என்று அவளை நோக்கி நகர,

சட்டென்று விரல்நீட்டி, “இங்க பாருங்க. எதுவா இருந்தாலும் அங்கேயே நின்னு பேசுங்க. இப்படிப் பக்கத்துல வர்றதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்” என தன் பயத்தை மறைத்து சொன்னாள்.

“என் பொண்டாட்டி பக்கத்துல வர்றதுக்கு, உன் பர்மிஷன் தேவையில்லைன்னு நானும் சொல்லிட்டேன். என்னைத் தடுக்காதே.”

‘இதென்னடா வம்பாபோச்சி’ என்றெண்ணி, “அப்ப நான் யாரு?” என்றாள் வீம்பாக.

தனக்குள்ளே புன்னகைத்தபடி, “நீ என் பொண்டாட்டி” என்றான்.

“நான்தான் வராதீங்க சொல்றேன்ல?” சற்று கோபமாக சொல்ல,

“அதான் உன்னோட பர்மிஷன் தேவையில்லை சொன்னேன்ல” என்றான் அதே கோபத்துடன்.

“ச்சோ! உங்க பொண்டாட்டி நான்தான. இப்ப நான்தான கிட்டவராதீங்க சொல்றேன்” என்றதும் கார்த்திக் சத்தமாகச் சிரித்தான்.

அர்த்தம் புரியாமல் விழித்தவள், அர்த்தம் புரிந்ததும், ‘ராஸ்கல்! உன் பொண்டாட்டி நான்தான்னு, என் வாயாலேயே சொல்ல வச்சிட்டாங்க. இடியட்!’ என மனதினுள் திட்டினாள்.

“சரி சரி திட்டினதெல்லாம் போதும். வா இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்” என்றான்.

“திரும்பவும் முதல்ல இருந்தா!” என்று வாயைத் திறந்தாள் அவந்திகா.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்தவளுக்கு, தன் தாய் தந்தையே தனக்குக் கிடைத்தாற்போன்ற அமைதி எழுந்தது மனதினுள். ‘நானாக சென்றிருக்காவிட்டாலும், கார்த்திக் என்னை வந்து சந்தித்திருப்பானோ? அந்த சந்திப்பில் சி.என்னாக அறிமுகமாகிருப்பான?! இல்லை சிஐடி ஆஃபீஸராகவா? இல்ல கார்த்திக்காகவா?” மனம் குழம்பியது.

குழம்பிய குட்டையில் மீன் கிடைப்பதற்குப் பதில், குட்டை மேலும் கலங்குவது தெரிய, அதிகம் ஆராயாது அப்படியே விட்டாள்.

புவனேஸ்வரிக்கு, ‘மூன்று வருடங்கள் முன் இருந்தே, என் மகனின் காதலி நீதான்’ என்று தான் சொல்வதைவிட, அதை தன் மகன் வாயிலாக கேட்டறியட்டும் என்று மறைத்தார்.

ஏனென்று கேட்ட சந்திரனுக்கும் வேண்டாமென்று ஜாடையில் சொல்லி புரியவைத்தார்.



ஊடகங்கள் அனைத்திற்கும் செய்தி கொடுத்து, மற்றவர்களின் அளப்பறிய பாராட்டுக்களையும் பெற்று, அனைத்தையும் முடித்து வர, இரவு பத்தானது கார்த்திக்கிற்கு. அவனின் வரவிற்காக காத்திருந்தவர்கள் வந்ததும் வாழ்த்துச் சொல்ல, அவன் மனைவியோ, கண்களால் மட்டுமே சொல்லி கைகொடுக்க மறுத்தாள்.

“ஏன்டா அழகி நான் அழுக்கா இருக்கேன்னு பார்க்கிறியா? இதோ வர்றேன்” என்று கீழே இருந்த அறையில் குளித்து, ஆடைமாற்றி வந்து கைகொடுக்க, கையை தட்டிவிட்டவள் மாமியாரின் பின்புறம் மறைந்தாள்.

“ப்ச்... ஏன் கையைத் தட்டி விடுற? நான் உன் ஹஸ்பண்ட்தான?” திரும்பவும் மனைவியின் முறைப்பில், “என்னவோ தெரியல. ரொம்ப முறைக்கிற. கொஞ்சம் நேரம் கழிச்சி பார்த்துக்கறேன்” என்றான் அவர்களுக்கான இரவினை மனதில் வைத்து.

“ஆஹா! ரெண்டுபேரும் ஆரம்பிச்சிட்டீங்களா? முதல்ல சாப்பிட்டு வந்து சண்டைபோடுங்க” என்றழைக்க இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி சென்றனர்.

அனைவரும் உண்டு முடிந்ததும் தன் அறைக்குள் சென்ற கார்த்திக், “புவன்ஸ் வாட் இஸ் திஸ்?” என்று கத்தினான்.

அவனின் கத்தலில், என்னவோ ஏதோவென்று அனைவரும் மாடியேறி அவன் அருகில் வந்து நிற்க,

“நீங்க என்னை இப்படிப் பழிவாங்குவீங்கன்னு, நினைச்சே பார்க்கல புவன்ஸ்? யூ டூ டாட்?” என்றான் தகப்பனிடம் திரும்பி.

அவன் என்ன சொல்கிறான், சொல்ல வருகிறான் என்று புரியாதவர்கள் பேந்த பேந்த விழிக்க,

“என்ன இப்படி முழிச்சா, நீங்க செஞ்ச தப்பு இல்லைன்னு ஆகிருமா? இப்படிப் பண்ணிட்டீங்களே?” என கோபத்துடன் கத்தினான்.

இதுவரை கணவனை அன்பாகவே பார்த்த அவந்திகா, அவனின் குரலில் தெரிந்த கோவத்தில் முதல்முறையாக பயந்து, மாமியாரின் பின்னால் ஒதுங்கினாள்.

“ஏன்டா கத்துற? என்ன கோபம் உனக்கு? எதுவாயிருந்தாலும் மெல்ல சொல்றதில்லையா? அவந்தி பயப்படுறா பாரு. நீ என்னன்னு சொன்னால்தான தெரியும்?” என திருப்பிக் கேட்க,

“ஓ... சொல்லலன்னா தெரியாதோ?” என ஏளனமாகக் கேட்டு, “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?” என்றான்.

“இது தெரியாதா? இன்னைக்கு பிப்ரவரி இருவது.”

“ம்... அப்புறம்?” என கார்த்திக் எடுத்துக்கொடுக்க,

“அப்புறம், இன்னைக்குத்தான்டா உனக்கு கல்யாணமும் ஆகிருக்கு.”

“அப்படி வாங்க வழிக்கு. இன்னைக்கு எங்க கல்யாண நாள்னு தெரியுதுல்ல. அப்ப இன்னைக்கு நைட்டைத்தான, பர்ஸ்ட் நைட் சொல்வாங்க. என் ரூமை, என் அழகியோட ஷேர் பண்ணிக்கப்போற முதல்நாள். நானும் ஆவலோட இங்க வந்து பார்த்தா, என் பெட்ரூம்ல எந்த சேஞ்சசும் இல்ல. பூ எங்க? பழம் எங்க? எத்தனை படங்கள்ல பார்த்திருக்கேன். ஆனா எனக்கு... ஒண்ணுமேயில்லையா” என ஏறியிருந்த குரலை இறக்கி ஏக்கத்தோடு கேட்டான்.

‘அடப்பாவி லூசா! இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்! ச்சோ... அதுவும் எல்லார் முன்னாடியும்!’ சற்று வெட்கத்துடனும், சன்னமான கோவத்துடன் அவந்தி கணவனை முறைத்தாள்.

“அடப்பாவி அண்ணா! இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என அவந்தியின் மனதிலுள்ளதை சந்தோஷ் கேட்டு, “இதுக்கு இத்தனை சீனா?” என்றான்.

“யா...யா..” என்ற கார்த்திக்கின் தலைக்குலுக்களில்,

ஈஸ்வரி குறுக்கிட்டு, “டேய்! ரொம்ப அலையாத. அவந்திக்காகத்தான் தள்ளிவச்சேன்” என்றார்.

“ஏன்.. ஏன்.. ஏன்? என் அழகிக்கு என்ன?” என்று வேகமாக அவள் நெற்றி கழுத்தென்று கைவைத்துப் பார்க்க, ஏற்கனவே அவனின் பர்ஸ்ட் நைட் கலாட்டாவில் அரண்டிருந்தவள், கணவனின் கையைத் தட்டிவிட்டு மாமியாரிடம் மேலும் ஒண்டினாள். “பீவர் இருந்தமாதிரி தெரியலையே. அப்புறமென்ன புவன்ஸ்?”

“உன்னைச் சொல்லித் தப்பில்லடா. மூணுவருஷம் முன்னாடி நீ கேட்டப்பவே, வயசைக் காரணம் காட்டாம உனக்கு முடிச்சிருக்கணும் லேட் பண்ணினோம் பாரு. ஏன் சொல்லமாட்ட? அதான் இந்த அழிச்சாட்டியம் பண்ற.”

‘என்னது மூணுவருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்துக்கு கேட்டாங்களா?’ என அதிர்ச்சியாகி, ‘இவங்ககிட்ட மாட்டினோம் .அவ்ளோதான். வேண்டாம் அவந்தி எஸ்கேப்பாகுற வழியைப்பாரு’ என்று மனம் சொல்ல, “நா...நான் அத்தைகூட தான் படுக்கப்போறேன்” என்றாள் தைரியமாய்.

‘என்னது அம்மாகூடவா? எனக்கு வில்லங்கம் வெளியே இல்ல. என் பக்கத்துலயே இருக்கு’ என்றெண்ணி தாயை முறைத்து, மனைவியின் அதிர்வு முகம் பார்த்து, “உனக்கு நான் தாலி கட்டினேனா? இல்ல உங்கத்தையா? ஒழுங்கா நம்ம ரூம்கு வா. இல்ல நடக்கிறதே வேற” என மிரட்டி உள்ளே சென்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

இப்படி மடக்கினால்தான் தன்னுடன், தன்னறையில், தன்னருகில் இருப்பாளென்று அவனுக்கேயான குறும்பில் மனைவியை மிரட்டிவிட்டுச் சென்றான்.

அவந்திகாவிற்கோ இத்தனை வருட தைரியம், எங்கேயோ சென்று மறைய மிரண்டு விழித்தாள்.

“அவன் கிடக்கிறான்டா. சும்மா உன்னை மிரட்டிட்டுப் போறான். இதுக்கெல்லாம் பயந்திராதே. அப்பா பிள்ளைங்க எல்லாம், இப்படித்தான் வெட்டி ஜம்பம் பேசியே நாளை ஓட்டுவாங்க. மத்தபடி வேலைக்காக மாட்டாங்க. நீ தைரியமா போமா.”

“அத்தை எனக்கு பயமாயிருக்கு. நான் உங்களோ...”

“அவந்தி! நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். எதுவா இருந்தாலும் உங்க ரூம்குள்ளேயே முடிச்சிக்கோங்க. நீ எவ்வளவு தைரியசாலி. அதுவும் ஜர்னலிஸ்ட் வேற. உள்ள போ” என சன்னமாக மிரட்ட,

“அண்ணி! அம்மா என்ன சொல்றாங்கன்னா, அண்ணா உங்க கால்ல விழுந்தாலும், வெளியே காட்டாம கெத்தாயிருக்கணுமாம். “

“அண்ணி! அண்ணா ரொம்ப நல்லவங்க. ஒண்ணும் பண்ணமாட்டாங்க. தைரியமா போங்க” என்று நித்யா தன் பங்கிற்கு அண்ணனின் பெருமை பாடினாள்.

அனைவரும் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி கீழே சென்றார்கள்.

உள்ளே நுழைந்தவளின் பயத்தைப் பார்த்து உறுத்து விழித்தவன், “ஏன்டி என்னைப் பார்த்தா, வில்லன் மாதிரியிருக்கா? என்னவோ புலி குகைக்குள்ள போற எபக்ட் கொடுத்துட்டு வர்ற?” கடுப்பாக வினவியவனிடம்,

“இந்த ‘டி’ சொல்ற வேலையெல்லாம் வேண்டாம். எனக்குப் பிடிக்கலை” என்றாள் முகம் திருப்பி.

“ஓ... அந்த கௌஷிக் சொல்லலாம். கட்டின புருஷன் நான் சொல்லக்கூடாதா? சரிவிடு சொல்லலை” என்று உடனே ஒத்துக்கொண்டவன், “செல்லம் இங்கே வாயேன்” என அருகே அழைத்தான்.

“ம்கூம்... மாட்டேன்” என்று கட்டிலின் மறுபுறம் தயங்கி நிற்க,

“சரிவிடு. என் பொண்டாட்டிதான. நானே வர்றேன்” என்று அவளை நோக்கி நகர,

சட்டென்று விரல்நீட்டி, “இங்க பாருங்க. எதுவா இருந்தாலும் அங்கேயே நின்னு பேசுங்க. இப்படிப் பக்கத்துல வர்றதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்” என தன் பயத்தை மறைத்து சொன்னாள்.

“என் பொண்டாட்டி பக்கத்துல வர்றதுக்கு, உன் பர்மிஷன் தேவையில்லைன்னு நானும் சொல்லிட்டேன். என்னைத் தடுக்காதே.”

‘இதென்னடா வம்பாபோச்சி’ என்றெண்ணி, “அப்ப நான் யாரு?” என்றாள் வீம்பாக.

தனக்குள்ளே புன்னகைத்தபடி, “நீ என் பொண்டாட்டி” என்றான்.

“நான்தான் வராதீங்க சொல்றேன்ல?” சற்று கோபமாக சொல்ல,

“அதான் உன்னோட பர்மிஷன் தேவையில்லை சொன்னேன்ல” என்றான் அதே கோபத்துடன்.

“ச்சோ! உங்க பொண்டாட்டி நான்தான. இப்ப நான்தான கிட்டவராதீங்க சொல்றேன்” என்றதும் கார்த்திக் சத்தமாகச் சிரித்தான்.

அர்த்தம் புரியாமல் விழித்தவள், அர்த்தம் புரிந்ததும், ‘ராஸ்கல்! உன் பொண்டாட்டி நான்தான்னு, என் வாயாலேயே சொல்ல வச்சிட்டாங்க. இடியட்!’ என மனதினுள் திட்டினாள்.

“சரி சரி திட்டினதெல்லாம் போதும். வா இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்” என்றான்.

“திரும்பவும் முதல்ல இருந்தா!” என்று வாயைத் திறந்தாள் அவந்திகா.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top