• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
19



சொன்னதுபோல் பத்து நிமிடத்தில் கேசரியுடன் ஹாலிற்கு வர அங்கு இருந்தவனைப் பார்த்ததும் முகம் பிரகாசிக்க, “மாமா நீங்க எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க? ஒரு வழியா வெளிமாநிலம் உங்களை விரட்டி அனுப்பிருச்சா. ஆமா, அத்தை எங்க?” என்று படபடத்தாள்.

“ஹேய்! வெய்ட் வெய்ட். முதல்ல வாழ்த்துக்கள் ராசிமா. அம்மா சொன்னாங்க. எனக்கு ஒரு போன் செஞ்சி சொல்லணும்னு தோணலைல உனக்கு.”

“சாரி மாமா. அம்மாஆச்சி உங்ககிட்ட சொல்லிருவாங்க தான. அதான் நான் சொல்லல. எப்படியும் வீட்டு நியூஸ் அப்டேட்டா உங்களை வந்து சேர்ந்திரும்னு தெரியும். அதான் சாரி” என்று காதைப் பிடிக்க...

“சாரின்னு கேட்க உன்னோட காதைப் பிடிக்கணும் பாப்பா. என்னோட காதை இல்லை.”

“ஹி..ஹி ஜஸ்ட் மிஸ்ஸாகிருச்சி” என அசடுவழிய சிரித்தவளிடம்... “அதுசரி. உன்னை மன்னிக்கிறது இருக்கட்டும், உன் அத்தைதான் கொஞ்சம் டெரரா இருக்கா. வந்ததும் வம்பு வேண்டாம்னுதான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு உங்களைப் பார்க்க ஓடிவந்தேன்.”

“குட் மாமா. உங்களோட இந்த அக்கறைதான் எப்பவும் பிடிச்ச விஷயம்.”

“ரொம்ப ஐஸ் வைக்க வேண்டாம். நான் இல்லாத இந்த ஆறுமாசத்துல என்ன நடந்தது. உடனே ஆடு, மாடு, கோழின்னு ஆரம்பிச்சிராத. சொல்லு” என்று விவரம் கேட்க...

“முதல்ல கேசரி சாப்பிடுங்க. எல்லா நியூஸ{ம் இம்மி பிசகாம உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும்ன்றது தெரியாத அளவிற்கு குழந்தை கிடையாது மாமா.”

“ஐ திங்க், உன்கிட்ட கொஞ்சம் வளர்ச்சி ப்ளஸ் சேஞ்சஸ் தெரியுது.”

“யூ திங்க் என்ன சேஞ்சஸ் மாமா?” என்று யோசிப்பது போல் முகத்தை வைத்தாள்.

“ம்.. இந்த வாய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா வளர்ந்திருக்கு. முகத்துல சம்திங் டிபரண்ட் தெரியுது. என்ன காரணம்? யார் காரணம் தெரிஞ்சிக்கலாமா?”

அதற்குச் சொந்தக்காரனான சரத், “அதை நான் சொல்றேன்” என்று வர... அவனைக் கண்டவள் முகம் தாமரையாய் மலர்வதைக் கண்ட பாபு பார்த்தும் பார்க்காது போலிருந்தான். போன் பேசும் பொழுதெல்லாம் லோஜி சரத்தையும், ராசியையும் சேர்த்து வைப்பதை பேசுவதே வாடிக்கையான ஒன்றாயிற்றே. யாரென்று அறிமுகமாகும் முன்னே சரத்தை அறிந்து கொண்டான் பாபு. சரத்துடன் லோஜியும் வந்து பாபுவை வரவேற்று நலம் விசாரித்தார்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, “ஏதோ நான் சொல்றேன்னு வந்தீங்களே” என்று பாபு சரத்திற்கு எடுத்துக்கொடுக்க...

“அதுவா! உங்க மருமகளுக்கு புதுசா அம்மா தம்பி கிடைச்சிருக்காங்க. அதோட அவங்களுக்கு அடிச்சி திட்டி விளையாட ஹரிசரத்னு ஒரு பொம்மை கிடைச்சிருக்கு” என்றாள்.

அதில் கோபம் வந்தவள், “உங்களை! நான் அடிச்சித் திட்றேனா” என்று பக்கத்திலிருந்த சின்ன பூஜாடியை விசிறியடிக்க... அதை லாவகமாகப் பிடித்து, “பார்த்தீங்களா. நான் சொல்லல. அதை நிரூபிக்கிறா பாருங்க” என்றவன் ராசியின் முறைப்புக்கு பழியாகும் முன், “ஹலோ ப்ரதர் நான் ஹரிசரத் மேட் இன் மேலூர். மதுரை டிஸ்ட்ரிக்ட். யுவர்ஸ் ஃப்ரண்ட்னு டிடெக்டிவ் ஏஜென்ஸி வச்சி நடத்துறேன்” என்று பாபுவின் காதில் எதோ சொல்ல...

“நிஜமாவா!” என ஆச்சர்யப்பட்டு, “குட் ஜாப் வாழ்த்துக்கள்” என்றான்.

“சரி எனக்கு டைமாகுது. நான் கிளம்பறேன். லோஜிமா வர்றேன் பை ராசி” என்று கிளம்ப...

“சரத் சார் ஒரு நிமிஷம்” என்றபடி கேசரி எடுத்து வந்து அவன் கையில் திணித்தாள்.

“ராசாத்தி நம்பி சாப்பிடலாம்ல?”

அந்த ராசாத்தியில் மனம் மயங்கினாலும், “என்ன நக்கலா? நீங்க ஒண்ணும் சாப்பிட வேண்டாம் போங்க” என அதைப் பிடுங்கப் பார்க்க...

“ஹேய்! ஓகே ஓகே நம்புறேன்” என்று வேகவேகமாக ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்க... ‘சூடு’ என்று ராசி சொல்வதற்குள் வாயில் வைத்ததும் “ஸ்ஸ்ஆஆஆ... ஃப்பூ” என ஊதினான்.

“அச்சோ! எதுக்கிந்த அவசரம்? பார்த்து சாப்பிடமாட்டீங்களா” என வேகமாக தண்ணீர் எடுத்து வந்து, “இந்த தண்ணீரைக் குடிங்க” என்ற அக்கறையான அன்பில் திணறித்தான் போனான். அந்த அன்பில் கண்கள் கலங்கியதோ அதை மறைத்து அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் அம்மா, தம்பி, சாந்தி, தீபா அனைவரும் போனிலேயே வாழ்த்து தெரிவித்தார்கள்.

பத்து நாட்கள் கடந்த வேளையில் வங்கியின் ஆடிட்டிங் நேரம் என்பதால் அனைத்து கணக்குகள், வைப்பு நிதி, சேமிப்பு என அனைத்தையும் முடித்து, இன்று மார்ச் முப்பத்தி ஓன்று ஆடிட்டிங் நாள் ராசி ஆடிட்டரை எதிர்நோக்கியிருக்க... அங்கு வந்தவனைப் பார்த்து அசந்து, அயர்ந்து நின்றாள்.

அவள் முன் சொடுக்கு போட்டு, ‘என்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்த... ‘சரத் ஆடிட்டரா?’ என்ற மலைப்பிலிருந்தவளுக்கு அன்று தீபா சொன்னது நினைவு வந்தது. ‘திருச்சியில பி.காம் படிச்சிட்டே சி.ஏ பண்ணிட்டிருந்தாங்க. சே.. உனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாகிருச்சி ராசி’ என தன்னையே திட்டி அவனுக்கு பதிலாக, “ம்..ம்கூம் நான்... நீங்க... நான் எதிர்பார்க்கலை வெல்கம் சார்” என்றாள் சொல்ல வந்ததை திக்கித்திணறி சொல்லியபடி.

மெல்லிய தலையசைப்போடு சரத் அதை ஏற்க இடம் கருதி இருவருமே அதன்பின் வேலையில் ஆழ்ந்து, கணக்குகள் அனைத்தும் சரிபார்க்க நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மதியம் இடைவேளையிலும் சாப்பிடாமலேயே வேலை பார்த்த சரத்திற்கு தன் சாப்பாட்டைக் கொடுக்க... அவனோ முதலில் மறுத்தாலும் அவளின் முறைப்பைப் பார்த்து வாங்கிக்கொண்டான். மனதிற்குள் ‘இவங்களை சமாளிக்க ஒரு முறைப்பு போதும் போலிருக்கே’ என நினைத்தது வேறு கதை.

ஆடிட்டிங் முடிய மாலை லேட்டானது. அனைத்தையும் முடித்த சரத்திற்கு ராசியை தானே அழைத்துச் செல்லலாம் என்றபோதும் இப்போதைய சூழ்நிலை அதற்கு ஒத்துவராமல் போக அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான். சரத் கிளம்பிய பின்னும் இதர வேலைகள் முடிய இன்னுமே லேட்டானது ராசிக்கு.

நேரம் இரவு எட்டைக் காட்ட ஸ்கூட்டியை எடுக்கப் போனவளுக்கு காற்று இல்லாமலிருந்த சக்கரம் தெரிய அதை சிறிது தூரம் தள்ளிச் செல்ல முடியுமென்று தோன்றவில்லை. “இனி நைட்டானா.. தெரிஞ்ச ஆட்டோ இல்லன்னா கார்ல வாங்க. தனியா ஸ்கூட்டியில வராதீங்க.” ஏனோ, அன்று சரத் சொன்னது நினைவு வந்தது. காலையிலிருந்தே வேலை செய்ததில் உடலெல்லாம் வலிக்க, இதையும் தள்ளிச் செல்வது சாத்தியப்படாதென்று தோன்ற, வாட்ச்மேனிடம் சொல்லி அங்கேயே விட்டு பஸ்ஸ்டாப் வந்தாள்.

வந்த சில வினாடிகளில் தன்னை உரசினாற்போல் ஒரு பைக் வந்து நிற்க, பதறி விலகியவளைப் பார்த்து... “என்ன ராசாத்தி பயந்துட்டியா நானே தான் சரத். ஆமா, ஸ்கூட்டி எங்க? என்றவனுக்குக் தானே தெரியும் காற்றைப் பிடுங்கியது யாரென்று.

மாலை வரும்பொழுதே சற்று இருட்ட ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே அவளின் களைப்பு கவனத்தில் பட்டதால் அவளை தனியே ஸ்கூட்டியில் அனுப்ப வேண்டாமென்று காற்றைப் பிடிங்கிவிட்டான். அவள் வருகைக்காக காத்திருந்தவன் சில வினாடிகளில் அவள் கண்முன் நின்றான்.

“டயர்ல காத்து இல்ல ஹரி. காத்துதான் ப்ராப்ளமா இல்ல பஞ்சரான்னு தெரியல. அதான் பஸ்ஸுக்காக வெய்ட் பண்றேன். ஆமா, நீங்க என்ன இந்தபக்கம்?” என்றபடி கொட்டாவி விட்டாள்.

அவளின் ஹரியில் சுணங்கியவன், “உனக்கு எப்படியும் லேட்டாகும்னு தெரியும் ராசாத்தி. தனியா போவியே அதான் உனக்கு துணையா வரலாம்னு” என இழுக்க...

‘என்னது துணையாவா? எனக்கா? நோவே! என எகிறினால் என்ன செய்வது, வாய்விட்டாயிற்றே எப்படி சமாளிப்பது?’ என அவன் முழித்தான்.

“தேங்க்ஸ்ங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என சோர்ந்தாற்போல் சொன்னதும்...

“என்னடா ஹெவி ஒர்க்கா? ரொம்ப டல்லா தெரியுற?” என்றான் அக்கறையாக.

“ம்... இந்த மன்த் புல்லா ஆடிட்டிங்காகன்னு ரொம்ப வேலை பார்த்ததுல, மெண்டலி டயர்டா இருந்தது. இப்ப அது முடிஞ்சதும் மைண்ட் ப்ரீயாகிருச்சி. உடம்பு டல்லாகிருச்சி.”

‘சே... இதுல நான் வேற’ என்று தன்னையே நொந்தவன், “ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுமா. நான் காரை எடுத்துட்டு வர்றேன்.”

“ப்ச்... மாமா பத்து நிமிஷ ட்ராவல்தான. எனக்குத் தூக்கமா வருது. என்னை ட்ராப் பண்ண மாட்டீங்களா?” என்றவள் குரலில் ஏகத்திற்கும் சோர்வு தெரிந்தது.

“நீ இருக்கிறதைப் பார்த்தா பைக்ல உட்கார்ந்துருவியாமா?” என அவளின் நிலையை எண்ணி கவலைப்பட...

“ம்... ஐ வில் மேனேஜ்.”

“சரி உட்கார்ந்து என்னை நல்லா பிடிச்சிக்கோ. பார்த்துமா ஸ்லிப் ஆகிறாத.”

“பயப்பட வேண்டாம் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.

சரத் வராமல் போயிருந்தால் அவளின் உடல் சோர்வையும மீறி மூளையும், மனமும் விழிப்புடன் இருந்திருக்கும். அந்த விழிப்பு அவளை வீடு வரை அழைத்துச் சென்றிருக்கும். ஆனால், சரத்தைக் கண்டவளுக்கு மனம் நிம்மதியாக, உடல் தன் சோர்வைக்காட்ட, மூளை ‘ஹப்பா வந்துவிட்டான்’ என்று ஓய்வெடுக்க ஆரம்பித்தது. பைக்கில் ஏறி அமர்ந்து அவனின் இடைசுற்றி பிடித்துக் கொண்டாள்.

சரத்திற்கு மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை. உடல் சிலிர்த்து உணர்வுகள் மேலெழும்பி மனம் கிறங்கவில்லை. மாறாக அவளின் அந்த சோர்ந்த நிலைதான் கண்முன் நின்று அவனை கவலை கொள்ளவைத்தது. ரொமான்ஸிற்காகத் தான் பைக் எடுத்து வந்தான். அவள் நிலை பார்த்ததும் கார் எடுத்து வராமல் போனோமே! என்று தன்னையே நொந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஏறி அமர்ந்த ஒரு நிமிடத்திற்கெல்லாம் அவன் முதுகில் சாய்ந்து கண்மூடியவள் ஜில்லென்ற காற்றில் கண்ணயர... அவளை கண்ணாடியில் பார்த்தவன், “ராசாத்தி தூங்காத. விழுந்திடப்போற? சேலை கட்டினதால ஒன்சைடா வேற உட்கார்ந்திருக்க” என்றான் பதற்றமாய்.

அதில் கலைந்தவள், “இல்ல மாமா நீங்க போங்க. நான் தூங்கல” என்று திரும்பவும் முதுகில் சாய...

“சரிமா என்னைப் பிடிச்சிக்கோ” என்றவன் ஒருகையால் வண்டியைப் பிடித்து, மறுகையால் ராசியையும் பிடித்து மெல்லவே வண்டியை ஓட்டி வீடு வந்து சேர இருபது நிமிடங்களானது.

வெளியே பதற்றத்துடன் நின்றிருந்த லோஜி அவர்களருகில் வந்து, “என்னாச்சிப்பா. அவ வண்டியை எங்க? ஏன் இப்படி இருக்கிறா?”

“பயப்பட ஒண்ணுமில்லம்மா. டயர்ட் தான். அதான் பைக்ல உட்கார்ந்ததும் தூங்கிட்டா. அவளோட ஸ்கூட்டில காத்து இல்லம்மா. பஸ்ஸுக்கு நிற்கும்போது நான் பார்த்து கூட்டிட்டு வந்தேன்” என்றவன் மனம் அவனையே கடிந்தது பொய் சொல்வதற்காக.

“ராசி.. ராசிமா.. ராசாத்தி” எல்லா அழைப்பிற்கும்... “ம்.. என்னை விடுங்க நான் தூங்கணும்” என்ற பதிலே வர, லோஜி பிடிக்க அவளை மெல்ல கீழே இறங்க வைத்து, பைக்கை ஸ்டாண்ட் போட்டு வருவதற்குள்... லோஜியின் தோளில் சாய்ந்து “அம்மாஆச்சி குட்நைட்” என்றாள்.

“பாப்பா உள்ள வா. இதென்ன பழக்கம் நின்னுகிட்டே தூங்குறது. நீ இன்னும் சின்னக்குழந்தை இல்ல. எப்பயிருந்து இப்படி ஒரு சோம்பேறியான?” அமைதியான குரலில் கண்டித்தார்.

மெல்ல தலை நிமிர்ந்தவள் கண்கள் அரைத் தூக்கத்திலிருக்க சரத்தின் புறம் கைநீட்டி, “இவங்களைப் பார்த்த பிறகுதான். என்னை அவங்க பார்த்துப்பாங்க அம்மாஆச்சி. நீங்க நிம்மதியா தூங்குங்க நானும் தூங்குறேன்” என்று திரும்பவும் தோள்சாய...

அவளின் வார்த்தையில் அவளின் நேசத்தின் ஆழம் உணர்ந்தான். தன்னை அவளுக்கு உணர்த்த எண்ணியவன், அவளின் ஆழமான நேசத்தில் கரைந்தே போனான். இந்த அன்பை என்றும் இழந்துவிடக்கூடாதே என்ற தவிப்பும் வந்து சேர்ந்தது.

லோஜினி ஒன்றும் சொல்லாமல் அவனை ஆழமாகப் பார்க்க...

“நீங்க தப்பா எடுத்துக்காதீங்கம்மா” என்றவன், சட்டென்று ராசியை கைகளில் ஏந்தி அவளது அறையில் படுக்க வைத்து, “டிபன் வேண்டாம்மா வலுக்கட்டாயமா கொடுத்து செரிக்காம தொண்டையிலேயே நின்னு வாமிட் வர சான்ஸ் இருக்கு. லேசான சூடுல பால் மட்டும் கொடுங்க போதும்” என்றதும் சில நிமிடங்களில் பூஸ்டுடன் வந்த லோஜியை சரத் கேள்வியாய் பார்த்தான்.

“பூஸ்ட் தான் குடிப்பா. பால் பிடிக்காதுப்பா” என்று அவனின் பார்வைக்கு விளக்கமளித்தார்..

மெல்ல சிரித்தவன் அவளை தூக்கி சாய்ந்தாற்போல் உட்கார வைக்கச் சொல்லி மெல்ல குடிக்க வைத்து, சில நிமிடங்கள் அமரவைத்தே படுக்க வைத்தார்கள். அவளின் உறக்கத்தை உறுதி செய்து கிளம்பியவனிடம்...

“என் பேத்தியை பத்திரமா கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிபா” என்றார்.

என்னம்மா நீங்க? அவ.. அவள் எனக்கு ரொம்ப முக்கியம்மா. என்னை விட.” அழுத்தமாக சொல்லி “பார்த்துக்கோங்க நான் வர்றேன்” என்று லோஜி மேலே எதுவும் கேட்க இடம் கொடுக்காமல் சென்றான்.

காலையில் எப்பொழுதும் போலில்லாமல் சற்று தாமதமாக எழுந்தவளுக்கு சரத்தின் பைக்கில் ஏறியது நினைவு வந்தது. அதன்பின் எதுவும் நினைவில் இல்லை. பல்தேய்த்து முகம் கழுவி வெளியே வந்தவளிடம் பூஸ்ட் நீட்ட, “தேங்க்யூ அம்மாஆச்சி” என்றபடி வாங்கினாள்.

“குளிக்கலையாமா?”

“இதோ குடிச்சிட்டுப் போறேன் அம்மாஆச்சி. அந்த அக்கா போயிட்டாங்களா?”

“அவ அப்பவே வேலையை முடிச்சிட்டு போயிட்டா.”

“அம்மாஆச்சி நேத்து ஒரு பெரிய சர்ப்ரைஸ் தெரியுமா. பேங்க் ஆடிட்டிங்கு ஆடிட்டரா சரத் வர்றாங்க. ஒரு செகண்ட் என்னால நம்பவே முடியலை. இது நம்ம சரத்தான்னு தோணிச்சிது. அப்புறம் புல்லா வேலை இழுத்தடிச்சிருச்சா, நைட் ஸ்கூட்டி வேற காலை வாரிடுச்சி. பஸ்ஸுக்காக நிற்கும் போது சரத் வந்தாங்க. அவங்க பைக்ல வந்தது நினைவிருக்கு. அப்புறம் என்ன நடந்தது தெரியல. சேலை கூட மாத்தாம படுத்திருக்கேன்.”

ராசியின் எதிரில் வந்தமர்ந்து அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து, “நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா? பிடிச்சிருக்குன்னா எனக்கோ, மத்தவங்களுக்கோ பிடிக்கிற மாதிரி கிடையாது. அவன் உனக்கு புருஷனா வர்ற அளவுக்கு பிடிச்சிருக்கா?”

சில வினாடிகள் யோசித்தவள், “ம்... பிடிச்சிருக்கு அம்மாஆச்சி” என்றாள் தன் உள்ளத்தை மறைக்காமல்.

“எந்த அளவுக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”

“எந்த அளவுக்குன்னா, என்னை விட, எனக்கு அவங்க முக்கியம்ன்ற அளவுக்கு.” சின்ன மாற்றம் தான். ஒரே அர்த்தம். தெளிவாக சொன்னவளிடம்... “சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா உத்தேசம்? என்றார்.

“அ..அது அவங்க இதுவரை பிடிச்சிருக்குன்னு சொல்லலையே அம்மாஆச்சி.”

“சொல்லலைன்னா உனக்குத் தெரியாதா?”

“தெரியும்தான். அதுக்காக பொண்ணு நான் போய் சொல்ல முடியுமா?”

“ஈகோ பார்க்கிறியா பாப்பா?”

“அச்சோ! இல்ல அம்மாஆச்சி. எனக்கு அவங்களையும் தெரியும். அவங்களுக்கு என்னையும் தெரியும். இதுல ஈகோன்னு எதுவுமில்லை. ஆனா, அவங்க என்கிட்ட முதல்ல சொன்னா நல்லாயிருக்கும்னு ஒரு ஃபீல். நீ சொல்லலாமேன்னு கேட்காதீங்க, பொண்ணு நான் சொல்றதோட ஒரு ஆணா கெத்தா என் முன்னாடி வந்து ஐ லவ் யூ ராசாத்தின்னு சொன்னா அதுல ஒரு கிக் இருக்கும்ல” என்றாள் கண்ணடித்து.

“உனக்கு கிக் வேணுமா. நான் சொல்லவா ஒரு கிக்” என்றார்.

“என்ன கிக் அம்மாஆச்சி?”

“நேத்து நைட் நடந்ததுடா” என்றார் வந்த சிரிப்பை அடக்கி.

“நைட்டா” என ராசி வாய் திறக்க...

“ம்.. நைட்தான். உன்னை கூட்டிட்டு வந்தது, உன்னை தூக்கிட்டுப் போயி தூங்க வச்சது எல்லாமே சரத் தான். அதுக்கு நன்றி சொன்னா, என்னம்மா நீங்க, அவ அவள் எனக்கு ரொம்ப முக்கியம் என்னை விட” என்று சரத்தைப்போல் பேசி, இன்னைக்கு அதையே என்னை விட எனக்கு அவங்க முக்கியம்னு நீ சொல்ற. இந்த கிக் போதுமா பாப்பா.”

“ஹையோ! லோஜி சூப்பர் நியூஸ். ஐம் ஸோ ஹேப்பீ” என்று கத்தியபடி லோஜிக்கு முத்தமிட்டாள்.

“ச்சீ எச்சி பண்ணாத சொல்லியிருக்கேன்ல” என்றார் முறுவலுடன்.

“அப்படியா.. இதோ எக்ஸ்ட்ரா வாங்கிக்கோங்க” என்று சந்தோஷத்துடனேயே வேலைகளையும் முடித்து, வங்கிக்குக் கிளம்பிச் செல்ல... அங்கு இருந்தவரைப் பார்த்து இருந்த சந்தோஷமெல்லாம் வடிந்தது.

‘யார் உங்களை வரச்சொன்னது? எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கலை. ப்ளீஸ் கிளம்பறீங்களா? என்னை என் லைஃபை விட்டு போயிடருங்க’ என்றெல்லாம் கத்த வேண்டும் போல் தோன்றியது. இடமறிந்து அடக்கியவள் தன்னுடைய கேபின் செல்ல யத்தனிக்கையில்...

“என்னை மன்னிச்சிருமா. ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுமா, உனக்கு நான் பெரிய துரோகம் பண்ணியிருக்கேன் தான். இல்லைன்னு சொல்லல. அதை உணர்ந்து உன்னை தேடினப்ப நீ எங்க இருக்கேன்னே தெரியலமா.”

“இதை நான் நம்பணுமா?”

“நம்பினாலும், இல்லைன்னாலும் இதான்மா நிஜம்.”

“சாரி சார். எனக்கு எந்த ஆராய்ச்சிக்கும் நேரம் இல்ல. ஆளுங்க வர்ற டைம்...” என்று நிறுத்தினாள் ‘கிளம்புங்க’ என்பதை சொல்லாமலேயே.

“புரியுதுமா. அதுக்காக உன்னைவிட்டு ஒரேயடியா போக மாட்டேன். அப்படி போயிருந்தா நான் செத்துட்டேன்னு நினைச்சிக்கோ” என்றபடி வெளியேறினார்.

ராசிக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேகமாக உள்ளே வந்தவள் தலையில் கைவைத்து கண்மூடியபடி இருக்க, மனமோ உலைக்களனென கொதித்தது. ‘நாலு வயசுல விட்டுட்டு பதினாறு வயசுல வந்து தேடினா எப்படி கிடைப்பா அந்த பொண்ணு? சித்தின்னு ஒருத்தி இல்லாமல் போயிருந்தா என் கதி என்னவாகியிருக்கும்? பெண் என்ற ஒரே தகுதிக்காக பச்சைக் குழந்தைகளைக் கூட சீரழிக்கிற ஆண்கள் மத்தியில் நான் மாட்டியிருந்தா, நான் செத்து பல வருஷம் ஆகியிருக்குமே. நீங்க சாவைப் பற்றிப் பேசுறீங்க.’

‘சித்திக்கப்புறம் மாமா, அம்மாஆச்சி இல்லாம அந்த டீன் ஏஜ் வயசுல தவறியிருந்தா, இப்ப எதாவது தப்பான இடத்துல இருந்திருப்பேன். இல்ல அனாதையா அலைஞ்சிட்டிருந்திருப்பேன். தேடுனாராம்... தேடி என்னாகப் போகுது. வேண்டாம்னு விட்டுட்டுப் போனவர் தான. திரும்பி வந்தா மன்னிச்சி மறந்து ஏத்துக்கணுமா? போயா நீயும் வேண்டாம் உன்னோட அப்பா போஸ்டிங்கும் வேண்டாம். நீ எனக்கு செஞ்ச ஒரே நல்லது ஒரு அம்மாவும், தம்பியும் தந்தது. அதுக்காகலாம் உன்னை என் அப்பாவா ஏத்துக்க முடியாது. ஏத்துக்கவும் மாட்டேன். நீ என் லைஃப்கு வேண்டாம் போயிரு” என்று கண்ணீர் வழிய கண்மூடி அமர்ந்திருந்தவள் கண்ணீரை ஒருகரம் துடைக்க திடுக்கிட்டு விழித்தவள் கண்முன் சரத்தைக் கண்டதும், “மாமா” என எழுந்தவள் இடம் கருதியும், தன் பதவி கருதியும் அமைதியானாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“நான் இருக்கும் போது நீ ஏன்மா அழற? எப்பவும் இந்த கண்கள் அன்பைத்தான் பொழியணும். கண்ணீரை இல்லை.”

“ஆனா, அவர்.. அவரை என் முன்னாடி வரவேண்டாம் சொல்லுங்க. என்னால அவரை மன்னிச்செல்லாம் ஏத்துக்க முடியாது.”

“ராசாத்தி! என்னடா கூல்” என்றவனுக்கு சில நிமிடங்களுக்கு முன் சிவராமனிடமிருந்து அழைப்பு வர, அவனிடம் மகளைப் பார்க்க வந்ததையும், அவள் அவரை மறுத்து அனுப்பியதையும் சொல்லி, “அவ மனசு கஷ்டப்படுவா வந்து கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு போங்க” என்றிருந்தார்.

அங்கு விரைந்து வந்த சரத் அவர் சொல்லை நிரூபிப்பதுபோல் ராசி அமர்ந்திருந்திருந்ததைப் பார்த்தான். “இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது ராசாத்தி. நீ மன்னிக்கலைன்னும் போது அவர் வந்தாலும் கண்டுக்காம போயிடு. அதை விட்டுட்டு என்னோட செல்லம் அழலாமா?”

“நானா நான் எங்க அழுதேன். அது என்னைக் கேட்காம தன்னாலயே வருது. என்னால ஸ்டாப் பண்ண முடியல. பாருங்க சிரிக்கிறேன்” என்று பற்களைக் காட்ட... இந்த வார்த்தையை எங்கோ ரொம்ப நெருக்கமாக கேட்ட நினைவு சரத்திற்கு. “நீ சிரிக்கிற தான். ரொம்ப சிரிக்காத உன் மாமா பயந்திரப் போறேன்” என்றான் போலியாய் பயப்படுவது போல்.

“ஐயோடா! பயப்படுற ஆளைப்பாரு” என்று முகம் சுழிக்க...

சிரித்தபடி “முகம் கழுவிட்டு வா. நான் கிளம்பணும்” எனவும், முகம் கழுவி வந்தவளிடம், “இப்ப தான் இந்த டாம் அழகாயிருக்கா” என்றான்.

“என்னது டாமா? உங்களை நில்லுங்க. எங்க ஓடுறீங்க?”

“ஈவ்னிங் போன் பண்ணுடா. வந்து மொத்தமா வாங்கிக்கறேன். இப்ப எனக்கு டைமாகிருச்சி” என்று ஒட...

“ஹையோ மாமா! நான் டாமா. நீங்கதான் ஜெர்ரி பாய்” என்று சிரித்தபடியே வேலையிலாழ்ந்தாள்.

மறுவாரம் குடித்தனம் செல்ல வீட்டினர் அனைவரையும் அழைத்திருந்தான் சரத். ராசி, மணி, பாபு குடும்பங்கள் மட்டுமே குடித்தனம் போக அழைத்திருந்த குடும்பங்கள். தீபாவோ “உங்க மேரேஜ் இன்விடேஷன் அனுப்புங்க வந்து கலக்கிருறேன்” என்று தன்னால் வரமுடியாததை சொன்னாள்.

ஞாயிறு காலை ஐந்து மணிக்கெல்லாம் “ம்கூம்! இல்ல! மாட்டேன்! முடியாது! சான்ஸ் இல்ல!” என்று ராசியின் அத்தனை இல்லைகளுக்கான மறுப்பையும் தகர்த்து அவளையே பால் காய்க்க வைத்த பொறுமை சாரி பெருமை சரத்தையே சாரும். வந்திருந்த அனைவருக்கும் பாலைக் கொடுக்க அதற்கு சரத் உதவி செய்ய, பார்த்திருந்த அனைவருக்கும் அடுத்து இவர்களுக்கு முடிச்சி போட வேண்டியதுதான் என்ற எண்ணம் தலைதூக்கியது.

மணி தன் மனைவி விஜியை அறிமுகப்படுத்தவும், “ஹாய் அண்ணி” என்றாள்.

விஜி திரும்பி கணவனை முறைக்க.

“ராசிமா நீ அண்ணின்னு தான சொன்ன, எதோ நீ ஆன்ட்டின்னு சொன்ன மாதிரி என்னை முறைக்கிறா பாரு.”

“ஹா..ஹா அண்ணா அவங்க வேற விஷயமா உங்களை முறைக்கிறாங்க. ஐ திங்க் என் விஷயத்துல நீங்க எதோ சொதப்பியிருக்கீங்க. அதான் முறைக்கிறாங்க கரெக்டா அண்ணி” என்றவளுக்கு கையால் திருஷ்டி கழித்து “ரொம்ப சரி” என்றாள் விஜி.

“அது ராசி” என இழுத்தவனிடம்... “ஒண்ணும் சொல்ல வேண்டாம் அண்ணா. முதல்ல பாலைக் குடிங்க. வீட்டுக்குப் போயி மொத்தமா வாங்கிக்கோங்க” என்றாள்.

“ஹ்ம்... அதுதான் தினசரி வேலையாச்சேமா” என்றான் வருத்தத்துடன்.

“ஹா..ஹா மணி அண்ணா அடி வாங்குறதை வேலையாகவே ஆக்கிட்டீங்களா. குட் ப்யூச்சர்ல ரொம்ப பெரிய ஆளா வருவீங்க” என ஜோசியம் சொன்னாள்.

“தங்கள் வாழ்த்திற்கு நன்றி தங்கையே. டேய் ஹரி! நீயும் கத்துக்கோ. தங்கச்சி சொல்ற ப்யூச்சர் ப்ளான் உனக்கும் சேர்த்துத்தான்” என்றதும் சரத் ராசியைப் பார்க்க... அவளோ வெட்கத்தில் கன்னம் சிவக்க மெல்ல நகர்ந்து சமையலறைக்குள் ஓடினாள்.

“டேய் மாப்ள! இதெல்லாம் நல்லாயில்லை” என்ற பாஸ்கரிடம்...

“எதை நல்லாயில்லைன்னு சொல்றீங்க?” பாபு கேட்க...

“ஹான்.. எங்க பொண்ணை சைட்டடிக்கிறதைச் சொல்றாங்க. அப்படித்தான” என்று சாந்தி சொன்னதும், ‘ஆம்’ என்ற தலையாட்டல் பாஸ்கரிடமிருந்து வந்தது.

பாபுவின் மனைவி சௌந்தர்யாவோ “எப்ப கல்யாணம்?” என்று பட்டென்று அங்கேயே கேட்க... அது சுபசகுனமாக தோன்ற அனைவரின் மனமும் அடுத்து உடனே சரத்-ராசியை திருமண கோலத்தில் காணத்தோன்றியது.

“ஆமா சீக்கிரம் ரெடி பண்ணனும்” என்று மீனலோஜினி பதில் சொல்ல... “வீடு சூப்பராயிருக்கு. கீழ ஒண்ணு மேல ரெண்டு பெட்ரூம் ஹால் கிச்சன்னு” என்று சௌந்தர்யா சிலாகிக்க அவர்களின் பேச்சி திருமணத்தை விட்டு திசைமாறியது.

மற்றவர்களின் கேலி கிண்டலை ரசித்தவனால் திருமணம் என்பதை ரசிக்க இயலவில்லை. ஆளை விடுங்க என்று வெளியே வந்தவனைத் தொடர்ந்து வந்த மணி, “என்னடா எப்ப சொல்லப்போற?” என்றான்.

“எதைடா எப்ப சொல்லப்போறேன்ற? புரியுற மாதிரி பேசமாட்டியா?”

“ம்... ராசியைப் பிடிச்சிருக்குன்னு” நண்பனை கூர்மையாகப் பார்த்தான்.

“அதான் அவளையே வந்து சொல்ல வைக்கிறேன்னு சொல்லியிருக்கேன்ல.”

“சரி மேரேஜ் பண்ணிட்டு சொல்ல வை.”

“ப்ச்.. அதெல்லாம் ஹஸ்பண்ட்னு ஒரு கட்டாயத்துல சொல்றதுடா. இப்ப சொல்றது ரியலா என்மேல அவளுக்குள்ள காதலைச் சொல்லும். மத்த எல்லாமே அப்புறம்தான்” என்றான் முடிவாக.

“அதை இன்னும் மறக்கலையாடா. அது விளையாட்டுப் பேச்சு. அதுக்கு நீ இவ்வளவு இம்பார்டண்ட் குடுக்கணும்னு அவசியமில்லைன்னு சொன்னேனேடா?”

“ம்கூம் நான் முடிவு பண்ணினது பண்ணினது தான். இதுல எந்தவித மாற்றமும் இல்லடா” எனும்போது தான்... ரோகிணியும், கிரியும் இன்னும் வரலையே என்று அவர்களைத் தேடி வெளியே வந்த ராசி சரத்தும், மணியும் பேசியதை கேட்க நேரிட, அதைத் தொடர்ந்து வந்த வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்தாள் மனதளவில்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top