- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
சொன்னதுபோல் பத்து நிமிடத்தில் கேசரியுடன் ஹாலிற்கு வர அங்கு இருந்தவனைப் பார்த்ததும் முகம் பிரகாசிக்க, “மாமா நீங்க எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க? ஒரு வழியா வெளிமாநிலம் உங்களை விரட்டி அனுப்பிருச்சா. ஆமா, அத்தை எங்க?” என்று படபடத்தாள்.
“ஹேய்! வெய்ட் வெய்ட். முதல்ல வாழ்த்துக்கள் ராசிமா. அம்மா சொன்னாங்க. எனக்கு ஒரு போன் செஞ்சி சொல்லணும்னு தோணலைல உனக்கு.”
“சாரி மாமா. அம்மாஆச்சி உங்ககிட்ட சொல்லிருவாங்க தான. அதான் நான் சொல்லல. எப்படியும் வீட்டு நியூஸ் அப்டேட்டா உங்களை வந்து சேர்ந்திரும்னு தெரியும். அதான் சாரி” என்று காதைப் பிடிக்க...
“சாரின்னு கேட்க உன்னோட காதைப் பிடிக்கணும் பாப்பா. என்னோட காதை இல்லை.”
“ஹி..ஹி ஜஸ்ட் மிஸ்ஸாகிருச்சி” என அசடுவழிய சிரித்தவளிடம்... “அதுசரி. உன்னை மன்னிக்கிறது இருக்கட்டும், உன் அத்தைதான் கொஞ்சம் டெரரா இருக்கா. வந்ததும் வம்பு வேண்டாம்னுதான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு உங்களைப் பார்க்க ஓடிவந்தேன்.”
“குட் மாமா. உங்களோட இந்த அக்கறைதான் எப்பவும் பிடிச்ச விஷயம்.”
“ரொம்ப ஐஸ் வைக்க வேண்டாம். நான் இல்லாத இந்த ஆறுமாசத்துல என்ன நடந்தது. உடனே ஆடு, மாடு, கோழின்னு ஆரம்பிச்சிராத. சொல்லு” என்று விவரம் கேட்க...
“முதல்ல கேசரி சாப்பிடுங்க. எல்லா நியூஸ{ம் இம்மி பிசகாம உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும்ன்றது தெரியாத அளவிற்கு குழந்தை கிடையாது மாமா.”
“ஐ திங்க், உன்கிட்ட கொஞ்சம் வளர்ச்சி ப்ளஸ் சேஞ்சஸ் தெரியுது.”
“யூ திங்க் என்ன சேஞ்சஸ் மாமா?” என்று யோசிப்பது போல் முகத்தை வைத்தாள்.
“ம்.. இந்த வாய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா வளர்ந்திருக்கு. முகத்துல சம்திங் டிபரண்ட் தெரியுது. என்ன காரணம்? யார் காரணம் தெரிஞ்சிக்கலாமா?”
அதற்குச் சொந்தக்காரனான சரத், “அதை நான் சொல்றேன்” என்று வர... அவனைக் கண்டவள் முகம் தாமரையாய் மலர்வதைக் கண்ட பாபு பார்த்தும் பார்க்காது போலிருந்தான். போன் பேசும் பொழுதெல்லாம் லோஜி சரத்தையும், ராசியையும் சேர்த்து வைப்பதை பேசுவதே வாடிக்கையான ஒன்றாயிற்றே. யாரென்று அறிமுகமாகும் முன்னே சரத்தை அறிந்து கொண்டான் பாபு. சரத்துடன் லோஜியும் வந்து பாபுவை வரவேற்று நலம் விசாரித்தார்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, “ஏதோ நான் சொல்றேன்னு வந்தீங்களே” என்று பாபு சரத்திற்கு எடுத்துக்கொடுக்க...
“அதுவா! உங்க மருமகளுக்கு புதுசா அம்மா தம்பி கிடைச்சிருக்காங்க. அதோட அவங்களுக்கு அடிச்சி திட்டி விளையாட ஹரிசரத்னு ஒரு பொம்மை கிடைச்சிருக்கு” என்றாள்.
அதில் கோபம் வந்தவள், “உங்களை! நான் அடிச்சித் திட்றேனா” என்று பக்கத்திலிருந்த சின்ன பூஜாடியை விசிறியடிக்க... அதை லாவகமாகப் பிடித்து, “பார்த்தீங்களா. நான் சொல்லல. அதை நிரூபிக்கிறா பாருங்க” என்றவன் ராசியின் முறைப்புக்கு பழியாகும் முன், “ஹலோ ப்ரதர் நான் ஹரிசரத் மேட் இன் மேலூர். மதுரை டிஸ்ட்ரிக்ட். யுவர்ஸ் ஃப்ரண்ட்னு டிடெக்டிவ் ஏஜென்ஸி வச்சி நடத்துறேன்” என்று பாபுவின் காதில் எதோ சொல்ல...
“நிஜமாவா!” என ஆச்சர்யப்பட்டு, “குட் ஜாப் வாழ்த்துக்கள்” என்றான்.
“சரி எனக்கு டைமாகுது. நான் கிளம்பறேன். லோஜிமா வர்றேன் பை ராசி” என்று கிளம்ப...
“சரத் சார் ஒரு நிமிஷம்” என்றபடி கேசரி எடுத்து வந்து அவன் கையில் திணித்தாள்.
“ராசாத்தி நம்பி சாப்பிடலாம்ல?”
அந்த ராசாத்தியில் மனம் மயங்கினாலும், “என்ன நக்கலா? நீங்க ஒண்ணும் சாப்பிட வேண்டாம் போங்க” என அதைப் பிடுங்கப் பார்க்க...
“ஹேய்! ஓகே ஓகே நம்புறேன்” என்று வேகவேகமாக ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்க... ‘சூடு’ என்று ராசி சொல்வதற்குள் வாயில் வைத்ததும் “ஸ்ஸ்ஆஆஆ... ஃப்பூ” என ஊதினான்.
“அச்சோ! எதுக்கிந்த அவசரம்? பார்த்து சாப்பிடமாட்டீங்களா” என வேகமாக தண்ணீர் எடுத்து வந்து, “இந்த தண்ணீரைக் குடிங்க” என்ற அக்கறையான அன்பில் திணறித்தான் போனான். அந்த அன்பில் கண்கள் கலங்கியதோ அதை மறைத்து அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
சற்று நேரத்தில் அம்மா, தம்பி, சாந்தி, தீபா அனைவரும் போனிலேயே வாழ்த்து தெரிவித்தார்கள்.
பத்து நாட்கள் கடந்த வேளையில் வங்கியின் ஆடிட்டிங் நேரம் என்பதால் அனைத்து கணக்குகள், வைப்பு நிதி, சேமிப்பு என அனைத்தையும் முடித்து, இன்று மார்ச் முப்பத்தி ஓன்று ஆடிட்டிங் நாள் ராசி ஆடிட்டரை எதிர்நோக்கியிருக்க... அங்கு வந்தவனைப் பார்த்து அசந்து, அயர்ந்து நின்றாள்.
அவள் முன் சொடுக்கு போட்டு, ‘என்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்த... ‘சரத் ஆடிட்டரா?’ என்ற மலைப்பிலிருந்தவளுக்கு அன்று தீபா சொன்னது நினைவு வந்தது. ‘திருச்சியில பி.காம் படிச்சிட்டே சி.ஏ பண்ணிட்டிருந்தாங்க. சே.. உனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாகிருச்சி ராசி’ என தன்னையே திட்டி அவனுக்கு பதிலாக, “ம்..ம்கூம் நான்... நீங்க... நான் எதிர்பார்க்கலை வெல்கம் சார்” என்றாள் சொல்ல வந்ததை திக்கித்திணறி சொல்லியபடி.
மெல்லிய தலையசைப்போடு சரத் அதை ஏற்க இடம் கருதி இருவருமே அதன்பின் வேலையில் ஆழ்ந்து, கணக்குகள் அனைத்தும் சரிபார்க்க நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மதியம் இடைவேளையிலும் சாப்பிடாமலேயே வேலை பார்த்த சரத்திற்கு தன் சாப்பாட்டைக் கொடுக்க... அவனோ முதலில் மறுத்தாலும் அவளின் முறைப்பைப் பார்த்து வாங்கிக்கொண்டான். மனதிற்குள் ‘இவங்களை சமாளிக்க ஒரு முறைப்பு போதும் போலிருக்கே’ என நினைத்தது வேறு கதை.
ஆடிட்டிங் முடிய மாலை லேட்டானது. அனைத்தையும் முடித்த சரத்திற்கு ராசியை தானே அழைத்துச் செல்லலாம் என்றபோதும் இப்போதைய சூழ்நிலை அதற்கு ஒத்துவராமல் போக அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான். சரத் கிளம்பிய பின்னும் இதர வேலைகள் முடிய இன்னுமே லேட்டானது ராசிக்கு.
நேரம் இரவு எட்டைக் காட்ட ஸ்கூட்டியை எடுக்கப் போனவளுக்கு காற்று இல்லாமலிருந்த சக்கரம் தெரிய அதை சிறிது தூரம் தள்ளிச் செல்ல முடியுமென்று தோன்றவில்லை. “இனி நைட்டானா.. தெரிஞ்ச ஆட்டோ இல்லன்னா கார்ல வாங்க. தனியா ஸ்கூட்டியில வராதீங்க.” ஏனோ, அன்று சரத் சொன்னது நினைவு வந்தது. காலையிலிருந்தே வேலை செய்ததில் உடலெல்லாம் வலிக்க, இதையும் தள்ளிச் செல்வது சாத்தியப்படாதென்று தோன்ற, வாட்ச்மேனிடம் சொல்லி அங்கேயே விட்டு பஸ்ஸ்டாப் வந்தாள்.
வந்த சில வினாடிகளில் தன்னை உரசினாற்போல் ஒரு பைக் வந்து நிற்க, பதறி விலகியவளைப் பார்த்து... “என்ன ராசாத்தி பயந்துட்டியா நானே தான் சரத். ஆமா, ஸ்கூட்டி எங்க? என்றவனுக்குக் தானே தெரியும் காற்றைப் பிடுங்கியது யாரென்று.
மாலை வரும்பொழுதே சற்று இருட்ட ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே அவளின் களைப்பு கவனத்தில் பட்டதால் அவளை தனியே ஸ்கூட்டியில் அனுப்ப வேண்டாமென்று காற்றைப் பிடிங்கிவிட்டான். அவள் வருகைக்காக காத்திருந்தவன் சில வினாடிகளில் அவள் கண்முன் நின்றான்.
“டயர்ல காத்து இல்ல ஹரி. காத்துதான் ப்ராப்ளமா இல்ல பஞ்சரான்னு தெரியல. அதான் பஸ்ஸுக்காக வெய்ட் பண்றேன். ஆமா, நீங்க என்ன இந்தபக்கம்?” என்றபடி கொட்டாவி விட்டாள்.
அவளின் ஹரியில் சுணங்கியவன், “உனக்கு எப்படியும் லேட்டாகும்னு தெரியும் ராசாத்தி. தனியா போவியே அதான் உனக்கு துணையா வரலாம்னு” என இழுக்க...
‘என்னது துணையாவா? எனக்கா? நோவே! என எகிறினால் என்ன செய்வது, வாய்விட்டாயிற்றே எப்படி சமாளிப்பது?’ என அவன் முழித்தான்.
“தேங்க்ஸ்ங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என சோர்ந்தாற்போல் சொன்னதும்...
“என்னடா ஹெவி ஒர்க்கா? ரொம்ப டல்லா தெரியுற?” என்றான் அக்கறையாக.
“ம்... இந்த மன்த் புல்லா ஆடிட்டிங்காகன்னு ரொம்ப வேலை பார்த்ததுல, மெண்டலி டயர்டா இருந்தது. இப்ப அது முடிஞ்சதும் மைண்ட் ப்ரீயாகிருச்சி. உடம்பு டல்லாகிருச்சி.”
‘சே... இதுல நான் வேற’ என்று தன்னையே நொந்தவன், “ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுமா. நான் காரை எடுத்துட்டு வர்றேன்.”
“ப்ச்... மாமா பத்து நிமிஷ ட்ராவல்தான. எனக்குத் தூக்கமா வருது. என்னை ட்ராப் பண்ண மாட்டீங்களா?” என்றவள் குரலில் ஏகத்திற்கும் சோர்வு தெரிந்தது.
“நீ இருக்கிறதைப் பார்த்தா பைக்ல உட்கார்ந்துருவியாமா?” என அவளின் நிலையை எண்ணி கவலைப்பட...
“ம்... ஐ வில் மேனேஜ்.”
“சரி உட்கார்ந்து என்னை நல்லா பிடிச்சிக்கோ. பார்த்துமா ஸ்லிப் ஆகிறாத.”
“பயப்பட வேண்டாம் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.
சரத் வராமல் போயிருந்தால் அவளின் உடல் சோர்வையும மீறி மூளையும், மனமும் விழிப்புடன் இருந்திருக்கும். அந்த விழிப்பு அவளை வீடு வரை அழைத்துச் சென்றிருக்கும். ஆனால், சரத்தைக் கண்டவளுக்கு மனம் நிம்மதியாக, உடல் தன் சோர்வைக்காட்ட, மூளை ‘ஹப்பா வந்துவிட்டான்’ என்று ஓய்வெடுக்க ஆரம்பித்தது. பைக்கில் ஏறி அமர்ந்து அவனின் இடைசுற்றி பிடித்துக் கொண்டாள்.
சரத்திற்கு மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை. உடல் சிலிர்த்து உணர்வுகள் மேலெழும்பி மனம் கிறங்கவில்லை. மாறாக அவளின் அந்த சோர்ந்த நிலைதான் கண்முன் நின்று அவனை கவலை கொள்ளவைத்தது. ரொமான்ஸிற்காகத் தான் பைக் எடுத்து வந்தான். அவள் நிலை பார்த்ததும் கார் எடுத்து வராமல் போனோமே! என்று தன்னையே நொந்தான்.