• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
19



“ஹாய் பரி! வாழ்த்து சொல்லமாட்டியா?” தன் முன் நின்றிருந்தவனை முறைத்தாலும், உள்ளம் தேடிய அவளின் தேடலுக்கு ஒரு இதம் எழுந்ததென்னவோ உண்மை.

அவனோ முகம் மலர அவள் கைபிடித்துக் குலுக்கி, “தேங்க்ஸ்” என்றான்.

அவனிடமிருந்து கையை உருவி, “எதுக்கு இந்த டிராமா?” என்றாள் நிதானமாக.

“டிராமாவா? என்ன மிஸஸ்.வசீகரன் உன் புருஷன் வாழ்க்கையில் ஒருபடி மேல போனா சந்தோஷப்பட வேண்டாமோ!” என கிழவி போல் தாடையில் கைவைக்க, கோபத்தை மீறி வந்த புன்னகையை அவன் காணுமுன் அடக்கிக் கொண்டாள்.

“சிரிப்பு வந்தா சிரிச்சிரணும். சில இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்துறதனாலதான் மன அழுத்தம் வருதுன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க” என்றான் புன்னகை மாறாது.

“அஹான்!” என்றவள் புன்னகை முகமாகி, “என்ன விஷயமா வந்தீங்க?” என்க,

“உன்னைப் பார்க்க விஷயம் வேணுமா என்ன?” என்றான் மனம் நிறைந்த மகிழ்வுடன்.

“கண்டிப்பா வேணும். நான் கண்டவன்கிட்டேயும் பல்லைக்காட்டுற ரகமில்லை. அதுவும் துரோகிகளைப் பக்கத்தில் வச்சிருக்க பைத்தியக்காரியும் இல்லை. மெடிக்கல்கு நேரமாகுது கொஞ்சம் வழிவிடுறீங்களா?” என்றவள் முகத்தில் புன்னகை என்பது துளிகூட இல்லாமல் கோபம் மட்டுமே இருந்தது.

“நான் கண்டவனா பரி?” குரலில் அந்தளவு வருத்தமிருந்தது.

அவளோ, “இல்லையா பின்ன” என்று அசால்டாக தோளைக்குலுக்க,

“அந்தக் கண்டவனை, ஏன் உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போன பரி?” என்றான் அழுத்தமாக.

சில நொடிகள் அமைதியாகி பின் நிமிர்ந்து அவன் கண்பார்த்து, “தப்புன்னு தெரிந்தே செய்த தப்பு அது. அதுக்கும் சேர்த்துதான பழிவாங்குனீங்க?” என்று திருப்பிக் கொடுத்தாள்.

“பழிவாங்குனேனா? என்மேல் நீ வச்சிருக்கிற அன்பு தெரியும் பரி. உன் மனசு...”

அவன் பேசும் விஷயத்தின் கனம் தாங்காது, “கொஞ்சம் நிறுத்துறீங்களா? அன்பு, மனசுன்னு உங்க வீட்டுல இல்லாததை ஏன் பேசுறீங்க?” கண்டிப்புடனே கேட்க,

“நீ இல்லைன்னு சொல்ற எல்லாம் என்கிட்ட நிறைய இருக்கே பரி” என்றவன் பார்வையில் அத்தனை கனிவு.

“தூக்கிக் குப்பையில் போட்டுட்டு, வந்த வழி பார்த்துக் கிளம்புங்க” என்று முகத்திலடித்தாற்போல் பேசி அவனை விட்டு விலகி நடந்தாள்.

“பரி” என்று திரும்பவும் அவள் முன் வர, தன் எரிச்சலை முகத்தில் காட்டி, “என்ன என்னை கரெக்ட் பண்ணனுமா?” அவ்வார்த்தையில் ‘இதுகூட நல்லாயிருக்கே’ என்றெண்ணி அவன் முகம் பிரகாசமடைய, அதைச் சற்று ஏளனமாய்ப் பார்த்து, “கரெக்ட் பண்ணி.. சொல்லுங்க கரெக்ட் பண்ணி உங்கப்...” தனக்கே அவ்வார்த்தை அருவருப்பைக் கொடுக்க அதை முகத்தில் காண்பித்து, வார்த்தையை அத்துடன் நிறுத்த, அதற்குள் “ஏய்!” என்று கை ஓங்கியிருந்தான் வசீகரன்.

அவள் சொல்ல வந்ததின் அர்த்தம் அவனுக்கு எப்படித் தெரியும் என்பதை உணரவில்லை பூரணி. உணர்ந்திருந்தால் பேசி பிரச்சனையை முடித்திருப்பாளோ! வாழ்க்கை அவ்வளவு எளிதல்லவே!

“பேசுற வார்த்தை நமக்குத் தகுதியானதான்னு யோசிச்சிப் பேசு. என்னைத் திட்டி அனுப்பணும்ன்ற காரணத்துக்காக உன்னை நீயே...”

கை ஓங்கியதில் அவன் கோபத்தின் அளவு தெரிந்து சிறிது பயம் எழுந்தாலும் அதை தூசுபோல் தட்டி, “பேசக்கூடாததை எல்லாம் பேச வைக்குறது நீங்கதான். முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க” என்றாள் பிடிவாதமாக.

“அப்படில்லாம் உன்னை ஈஸியா விட்டுட்டுப் போகமுடியாது. திரும்பத்திரும்ப வருவேன் என் மனைவியே! உனக்காக! உனக்காக மட்டும் வருவேன். நீயே தடுத்தாலும் வருவேன். இப்ப உன் குட்டிக்கண்ணனுக்கு ஒரு முத்தம் கொடு” என்று நெற்றியைக் காட்டினான்.

“லூசா நீங்க” என்று அதிர்ந்துபோய் கேட்க,

“ஹேய்! நெற்றியில் கேட்டது உன் குட்டிக்கண்ணன். இதே வசீகரனாயிருந்தா முத்தம் கேட்குற இடமே வேற” என்றான் கண்ணடித்து.

‘ஆத்தாடி!’ என மனதினுள் அலறி, “உங்களை...” என சைக்கிளை ஒரு கையால் பிடித்து, ஒரு கையால் அவன் கழுத்தை நெறிப்பதுபோல் செய்ய, “ஐயோ! கொலை என்னைக் கொல்லப் பார்க்குறா” என்று கத்தியதில் அவனை முறைத்துத் திரும்பி புன்னகையுடன் சைக்கிளை நகர்த்திச் சென்றுவிட்டாள்.

அவள் செல்வதை வெற்றிப் புன்னகையுடன் பார்த்திருந்தான் வசீகரன். அவனுக்குத் தெரிந்தது அவளின் முகமலர்ச்சி.

எதற்கு வாழ்த்து என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. ஒருவித மனநிறைவுடன் அவரவர் இடம் நோக்கிச் சென்றார்கள்.

“என்ன பூரணி முகமெல்லாம் டாலடிக்குது. எதுவும் விசேஷமா?” அப்பொழுதுதான் மருந்தகம் உள் நுழைந்தவளைக் கேட்டாள் சண்முகி.

“அப்படில்லாம் இல்ல சண்மு. எப்பவும் போலதான் இருக்கேன்.”

“பார்த்தா அப்படித் தெரியலையே” என்று தாடையில் கைவைக்க, அது சற்று முன் வசீகரன் செய்ததை நினைவுப்படுத்த இன்னுமே முகத்தில் ஒரு பளிச்சிடல்.

“பார்த்தா தெரியலைன்னா பார்த்துக்கிட்டே இருந்து சொல்லுடா சண்மு” என்றாள் கேலியாக.

“ஹேய் நீதானா இது? நிஜமாவே உன் முகத்துல பல்ப் எறியுது பூரணி. என்ன மச்சானைப் பார்த்தியா?” என்க,

அவளின் மச்சானில் முகம் சுருக்கி, “நான்லாம் யாரையும் பார்க்கலை. பார்க்கணும்ன்ற அவசியமுமில்லை. அந்தப் பைத்தியக்காரன் எனக்கு வேண்டாம்” என்றாள்.

“பார்றா! நாங்க பைத்தியம்னு சொன்னா பெரிய வார் நடக்கும் இங்க. இப்ப மேடமே அதைச் சொல்றாங்க. எல்லாம் அவருக்குச் சரியாகிருச்சின்ற திமிர்” என்றாள் கேலியாகவே.

வசீகரனைப் பார்த்து வந்த மறுநாளே அவனைப்பற்றிய உண்மையைச் சொல்லி தன் நிலையையும் சொல்லிவிட்டாள் பூரணி. தனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், நல்லவிதமாக தெரிந்திருக்கக்கூடாதா என்ற எண்ணம் மட்டுமே சண்முகிக்கு.

“திமிர்தான் இல்லைன்னு சொல்லமாட்டேன். அவங்களுக்கு சரியானாலும் சரியாகலைன்னாலும் ஒண்ணுமில்லை புரியுதா? முதல்ல வேலையைப் பாரு போ” என்று விரட்டினாள்.

ஆனந்திக்கு மாரடைப்பு வந்ததை இருவருக்குமே தெரியாமல் மறைத்து விட்டான் வசீகரன். தினகரனையும் சண்முகியிடம் சொல்லவிடாமல் தடுத்துவிட்டான். ஏனென்று கேட்ட தினகரனுக்கும் காரணம் சொல்லவில்லை.

தொடர்ந்த நாட்களில் அவனின் அடுத்தடுத்த படையெடுப்பு எதற்கும் மசியவில்லை மிஸஸ்.பரிபூரணி வசீகரன்.

தன் வீட்டில் நுழைந்தவனைப் பரபரப்பாய் வரவேற்றார்கள் மலையரசன் மைதிலி தம்பதி. வசீகரன் குணமானதை ஜனனி ஏற்கனவே சொல்லியிருந்தாள். அதைக் கேள்விப்பட்டதும் சந்தோஷத்தில் சின்ன மகளிடம் அடுத்து என்ன செய்வதென்று கேட்க, “உங்க பொண்ணு இங்க இருக்கணும்னா யார்கிட்டேயும் எனக்காகப் பேச வேண்டாம்” என்று தடையிட்டுவிட்டாள்.

மகளின் பேச்சை மீறியிருப்பார்தான் மலையரசன். அவருக்கு அது பெரிதில்லை. ஏனோ இப்பொழுது அவள் போக்கில் விட முடிவெடுத்துவிட்டார்.

வசீகரனைப் பார்க்கும் வரை மலையரசனுமே எதுவும் புரியா நிலையில்தான் இருந்தார். பார்த்த நிமிடமோ அனைத்தையும் மறந்தார் என்பதே நிஜம்! அவனை வீட்டினுள் கண்டதும் அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. அதிலும் அவனின் ‘வணக்கம் மாமா’ என்ற அழைப்பில் மயங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

“வா..வாங்க உட்காருங்க” என்று அங்கிருந்த மரநாற்காலியை எடுத்துப்போட்டு, “மைதிலி காப்பி போடு” என்று மனைவியை அவசரப்படுத்த, “அதெல்லாம் வேண்டாம் மாமா. தண்ணீர் மட்டும் கொடுங்க அத்தை” என்று மைதிலியிடம் பேச, திருதிருவென விழித்தபடி மெல்ல நகர்ந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, காத்திருந்து வாங்கிக் குடித்தவன், “நான் எதுக்கு வந்திருக்கேன்னு நேரடியாகவே சொல்லிடுறேன். முதல்ல எங்க குடும்பத்தை நீங்க மன்னிக்கணும்” என்றான் கையெடுத்துக் கும்பிட்டு.

பதறிய மலையரசனோ, “என்ன தம்பி மன்னிப்பெல்லாம்? முதல்ல கையைக் கீழ இறக்குங்க” என்றார்.

“என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லாம உங்க பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் முடிச்சது தப்புதான் மாமா. பையன் மேல உள்ள பாசத்துல கொஞ்சமும் யோசிக்காம செய்துட்டாங்க. என்னதான் நஷ்டஈடு கொடுத்தாலும் உங்களுக்குதான் அதிக பாதிப்பு. உண்மையைச் சொல்லணும்னா.. விஷயம் தெரிஞ்சப்ப, என்ன அப்பா இவர்னு உங்க மேல கோபமாதான் இருந்தேன். அன்னைக்கு உங்க பொண்ணு சார்பா பேசினதைப் பார்த்து கோபமெல்லாம் குறைஞ்சிருச்சி. உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சி. வந்து பார்க்கவும் செய்துட்டேன் கிளம்புறேன் மாமா” என்று இருக்கையை விட்டு எழ,

‘என்ன மகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை’ என்ற பரிதவிப்புடன் அவனைக் கண்டார் மலையரசன்.

அதை உணர்ந்தவனோ, “கண்டிப்பா என் மனைவியை விட்டுரமாட்டேன் மாமா. இப்ப என்மேல ரொம்ப கோபத்துல இருக்கா. அது சரியானதும் கூட்டிட்டுப் போறேன்.”

“எ..என்ன.. ஏன் கோபம்?” என்றார் தயங்கியபடி.

“அதுவா குணமானதைச் சொல்லாம அவள்கிட்டப் பழைய மாதிரி பேசினேன்ல அதுக்காக. இப்ப நீங்க இல்லை யார் சொன்னாலும் கேட்கமாட்டா. அதனால அவளை நான் பார்த்துக்குறேன். அவளைப்பற்றிய கவலையை விட்டுருங்க. இப்ப நான் கிளம்புறேன். வர்றேன் மாமா. வர்றேன் அத்தை” என்று கிளம்ப,

அவன் வெளியேறிய நொடி, “உங்க பொண்ணுக்கு என்ன பைத்தியமா? அவரே வந்து கூப்பிடுறப்ப போறதுக்கென்ன?” மைதிலி கத்த,

“எல்லாருக்கும் தன்மானம் இருக்கும் மைதிலி” என்று மனைவியை அவர் அடக்குவது வசீகரனுக்குக் கேட்க, தனக்கு வேலையில்லாமல் செய்த மாமனாருக்கு ஒரு சபாஷ் போட்டு புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றவன் முன் வந்து நின்றாள் அஞ்சுகா.

“ஹாய்! எப்படியிருக்கீங்க?” என்றான்.

“என்னை விசாரிக்கிறது இருக்கட்டும். உங்க அம்மாவுக்கு எப்படியிருக்கு?”

“இப்ப சரியாகிருச்சி. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாச்சி. உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றான் யோசனையாக.

“அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டிருந்ததைக் கேட்டேன்.”

“ஓ.. பரிகிட்ட இதைச் சொல்ல வேண்டாம்.”

“ஏன் சார்? தெரிஞ்சா உடனே அவங்களைப் பார்க்கக் கிளம்பிருவா” என்றாள்.

“வருவாள்தான். ஆனா, அவளுக்காகப் பேசப்போய்தான் அப்படி ஆகிருச்சின்ற உண்மை தெரிஞ்சா, என்மேல் உள்ள கோபம் இன்னும் அதிகமாகும். தன்னால்தானோன்னு குற்றவுணர்ச்சியிலும் துடிப்பா. போதும் நாங்க அவளை கஷ்டப்படுத்தினது” என்றவன் குரல் இறங்கயிருந்தது.

இப்படியே ஒவ்வொரு காரணமா கண்டுபிடிச்சா எப்படி சார்? எப்பதான் சேர்றதுக்கு வழிவகுக்கப் போறீங்களோ” என்றாள் ஆற்றாமையுடன்.

“சீக்கிரமே உங்க தோழியை அழைச்சிட்டுப் போயிருறேன்” என்றான் புன்னகையுடன்.

“சரி வீட்டுக்கு வாங்க. அப்பா உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்க.”

“இப்ப வேண்டாம் அஞ்சுகா. எங்க வீட்டு சார்பா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க. நேர்ல பார்க்கிறப்ப நானே சொல்லிடுறேன். இப்ப கிளம்புறேன்” என்று சென்றுவிட்டான்.

‘வாவ்! லைவா ஒரு லவ் ஸ்டோரி பார்க்கிற அஞ்சு. ரிசல்ட் என்ன வருதுன்னு பார்க்க வெய்ட்டிங்’ என்றாள் மனதினுள்.

“என்னடா கண்ணா! எப்படிப் போகுது உன் கஜினி முகமது படையெடுப்பு?” சிரித்தபடி கேலியாய் கேட்டார் ஆனந்தி.

“ப்ச்.. எப்பவும்போல தோல்வியில்தான்மா முடியுது. தினமும் அவளுக்குத் தரிசனம் தர்றேன். எட்டிக்கூட பார்க்க மாட்டேன்றா” என்றான் கவலையாய்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“நான் வந்து சமாதானப்படுத்தவா வசீ?”

“வேண்டாம்மா. உங்க உடல்நிலை அவளுக்குத் தெரியாது. என்கிட்டப் பேசுற மாதிரி உங்களை எடுத்தெறிஞ்சி பேசிட்டா, அது சரிவராது. பதிலுக்கு நான் எதாவது பேசிட்டா, பக்க விளைவுகள் அதிகமாகிரும்.”

“பெரியவங்ககிட்ட அப்படிப் பேசமாட்டாள்டா. உன்னைப் பேசுறாள்னா உன்மேல உள்ள உரிமையினால. இல்லைன்னா இந்நேரம் உன்னை யாரோவா தூக்கிப் போட்டுட்டு, அவள் வாழ்க்கையைப் பார்த்திருப்பா. உரிமைக்கும் தன்மானத்துக்கும் இடையில அல்லாடுறாடா” என்று யதார்த்தத்தைச் சொன்னார்.

“புரியுதும்மா” என்கையில், “இங்கதான் இருக்கீங்களா? நான் வீடு முழுக்கத் தேடிட்டு வர்றேன்” என்று வந்த தினகரனைக் கண்டு, “ஆமா பத்து ஏக்கர் நிலத்தை வளைச்சிப் போட்டு பெரிய பேலஸ் கட்டி வச்சிருக்கோம். அதனால பையன் திணறிப்போய்க் கண்டுபிடிச்சிருக்கான்” என்றான் கிண்டலாக.

“போதும் உன் கலாய்ப்பு. சித்தி உங்களுக்கு சரியாகிருச்சில்ல. வாங்க போகலாம்” என்றான்.

“எங்கடா?”

“எனக்குப் பொண்ணு பார்க்கத்தான் சித்தி.” அசால்டாக குண்டை தூக்கிப்போட,

“என்னது பார்க்கவா? பார்க்கவா இல்ல பார்த்து வச்சதைப் பார்க்கக் கூப்பிடுறியாடா?” என்றார்.

“ஏதோ ஒண்ணு. என் சார்பா வந்து பொண்ணு கேளுங்க. மாட்டேன்னு அடம்பிடிப்பா இருந்தாலும் உங்க பேச்சு சாமர்த்தியத்தால சம்மதிக்க வையுங்க.”

“யார்டா அது என் பையனை வேண்டாம் சொல்றவ? அழகு, அறிவு, வசதின்னு எதுல குறை உனக்கு?” என்றார் கோபமாக.

“அதுதான் குறைன்னு சொல்றா சித்தி” என்றானவன்.

“லூசா அவள்?”

“லூசு அவள் கிடையாது சித்தி. நம்ம குடும்ப லட்சணம் அப்படி” என்றான் சலிப்பாக.

“என்ன கெட்டுப் போயிட்டோமாம்” என்றார் கோபம் குறையாது.

“டேய்! எதையும் தெளிவா சொல்றதில்லையா” என தம்பியவனைக் கடிந்து, “அம்மா அவள் பரியோட பெஸ்ட் ஃப்ரண்ட். இரண்டு பேரும் சேர்ந்துதான் மெடிக்கல் வச்சி நடத்துறாங்க. பரியோட நிலை தெரிஞ்சதிலிருந்து அவளுக்கு நல்லது நடந்தால்தான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வர்ற வரனையெல்லாம் தட்டி விட்டுட்டிருக்கா. இவன்கிட்ட கேட்டேன் பிடிச்சிருக்கு சொன்னான். அவள் என்னன்னா உன் குடும்ப சங்காத்தமே வேண்டாம் சொல்றா” என்றான் தம்பியின் சார்பாக.

“ஹையா இரண்டாவது லவ் ஸ்டோரியா?” என்று வந்தாள் ஐஸ்வர்யா.

“நோ அண்ணி. ஒன் சைட் லவ் ஸ்டோரி” என்றான் சோகமாக.

“டேய் கொழுந்தா! போட்டோ இருக்கா?

“இருக்குதே” என்றவன் கைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காண்பிக்க, பூரணியும் சண்முகியும் அருகருகே நின்று மருந்து கொடுப்பது போலிருந்தது.

“பொண்ணு கருப்பாயிருந்தாலும் முகலட்சணமா இருக்கா. அவசரத்துல எதுவும் முடிவெடுத்து பின்னால வருத்தப்படக்கூடாது கொழுந்து” என்ற ஐஸ்வர்யாவிடமிருந்து போனை வாங்கிய ஆனந்தி மருமகளை மட்டுமே பார்த்திருந்தார்.

“முன்னைக்கு இப்ப கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கா வசீ. அப்ப ரொம்ப ஒல்லியா இருப்பா. இப்ப அழகோட கொஞ்சம் உடம்பும் வச்சிருக்கு. சொந்தக்கால்ல இருக்கிற சந்தோஷம் அவள் முகத்துல தெரியுது” என்று மருமகளை ரசித்தார் ஆனந்தி.

“ஆமாம்மா சொந்த உழைப்புனாலே தன்னம்பிக்கை வந்திருது” என்று தாய் வார்த்தையைப் பின்பற்ற, தினகரனோ இருவரையும் முறைத்து, “சித்தி நான் உங்க மருமகளைப் பார்க்கச் சொல்லலை. மருமகளா வரப்போறவளைப் பார்க்கச் சொன்னேன்.”

“அவளுக்கு என்னடா கருப்பு வைரம். ஐஸ்வர்யா சொன்னதையும் கொஞ்சம் யோசி. அதுக்கும் முன்ன உன் குடும்பத்தைப் பார். அவங்களை மீறி உன்னால அவளைக் கல்யாணம் பண்ண முடியுமா? தேவையில்லாம ஒரு பொண்ணு மனசைக் கலைக்காத” என்றார் கண்டிப்புடன்.

“சித்தி உண்மையிலேயே அவளை எனக்குப் பிடிச்சிருக்கு. அவளுடைய அந்த குணம் யாருக்கு வரும் சித்தி. நட்புக்காக இவ்வளவு பண்றவ கணவனுக்காக எவ்வளவு செய்வா? அந்த அன்பை நான் அனுபவிக்கணும்ன்ற சுயநலம்தான். கருப்பு என்ன சித்தி பெரிய கருப்பு. நான் கலராயிருக்கேன் போதாதா?”

“அது சரிடா. நீ தலைகீழா நின்னாலும் உன் குடும்பத்தினர் இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. உன்னுடைய வற்புறுத்தலுக்காக முடிச்சாலும் அந்தப் பொண்ணை நிம்மதியாயிருக்க விடுவாங்களா? நீ எப்பவும் அவளோடவே இருக்க முடியாது” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.

“ஹாஹா சித்தி சித்தி அவளை பூரணி அண்ணி நினைச்சீங்களா? அவளைத் தொட நினைச்சாலே பிரிச்சி மேய்ஞ்சிருவா. நம்ம குடும்பத்துக்கு அப்படியொருத்தி இருந்தால்தான் அம்மா மாதிரி, ஸ்வாதி அண்ணி மாதிரி ஆளுங்க அடங்குவாங்க. கொசுறு நியூஸ் என்னன்னா, உங்க மேலயும், ஐஸ் அண்ணி மேலயும் கோபமாயிருக்கா” என்றான் புன்னகையுடன்.

“உண்மை தெரியாதில்லையா தினா” என்றார் அவள் சார்பாய்.

“இப்பவரை தெரியப்படுத்தலை. வந்தா புரிஞ்சிக்குவா சித்தி” என்று அவரின் வருத்தம் கலைந்தான்.

“அவளுக்கேப் பிடிக்கலைன்றப்ப எப்படி முடிப்ப கொழுந்து?”

“நேரா அவள் அப்பா கால்ல விழுந்துர வேண்டியதுதான் அண்ணி. வீட்டுல பார்க்கிற பையன்றப்ப மறுக்க சான்ஸ் கம்மி.”

“ஆனா, ஒண்ணை மறந்துட்ட கொழுந்து. வீட்டுல பார்த்து மறுத்த பையன்கள்தான் அதிகம்னு நீதான சொன்ன” என்றாள் குசும்பாய்.

“அண்ணி” என பல்லைக்கடித்தவன், “அவளுக்கு என்னைப் பிடிக்கும். நம்ம குடும்பத்தைப் பிடிக்காது. குடும்பத்துக்காகவே என்னை வேண்டாம் சொல்றா. எனக்கேத்த எள்ளுருண்டையோ, இலந்தைப்பழமோ கிடைக்கும். உங்களை மாதிரி ஊத்தப்பம் வேண்டாம்னு மறுத்துட்டா. பூரணியவே உங்க வீட்டுக்கு அனுப்பமாட்டேன். நான் எப்படி வருவேன்றா” என்றான் கவலையுடன்.

“மற்றதை விடு கொழுந்து. நாம எவ்வளவு பேசியிருக்கோம். அதுல நீ ஊத்தப்பம் ஆன கதையைச் சொல்லவேயில்லை. மறைச்சிட்ட பார்த்தியா?” வருத்தப்படுவது போல் நடித்தாள்.

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன்...”

“சீரியஸானா என்ன செய்யணும்னு டாக்டர் உனக்குத் தெரியாதா? எனக்கு ஊத்தப்பம் கதைதான் முக்கியம். இதுக்காகவே அவளை நான் பார்க்கணும்டா. என்னைக் கூட்டிட்டுப் போய் இன்ட்ரோ கொடு” என்றவள் மாமியாரிடம் திரும்பி, “அத்தை அந்தப் பொண்ணுதான் நம்ம வீட்டு கடைசி மருமகள். அவள் இருந்தா அந்த இடமே களேபரமாகவும் கலகலப்பாகவும் இருக்கும்னு தோணுது. பெயர் என்ன கொழுந்து?” என்றாள் தினகரனிடம் திரும்பி.

“சண்முகி!” என்றான் மெய்மறந்து.

“அத்தை முத்திப்போச்சி. சீக்கிரமே முடிச்சி எங்க ஜோதியில ஐக்கியமாக்கிருங்க” என்க, அதற்குப் பதில் சொல்ல வாயெடுத்த தினகரன் வாய்மூடி வெளியே இழுத்துச் சென்றான் வசீகரன்.

மருந்தகம் உள் நுழைந்த பூரணியை சண்முகியின் பதற்றமான நிலை வரவேற்க, தோழியைக் கண்டதும் “பூரணி இன்ஸ்பெக்ஷன் வர்றதா போன் வந்தது. சர்டிபிகேட், பில்புக் தேடிப்பார்க்குறேன் கிடைக்கலை. நைட் இங்கதான் பார்த்த ஞாபகம். நீ பார்த்தியா?” என்றாள்.

“டிரால இருக்கும் சண்மு. பதற்றப்படாம தேடிப்பாரு. ஆட்கள் வர ஆரம்பிச்சா சிக்கலாகிரும்.”

“அது வேற திக்குன்னு இருக்கு.”

“எங்கேயும் போயிருக்காது. நாம தேடலாம்” என்று தன் பங்கிற்குத் தேட சண்முகியின் பதற்றம் தற்பொழுது பூரணிக்குள். “எவ்வளவு தேடியும் கிடைக்கலை சண்மு. ஒருவேளை வீட்டிலிருக்குமோ?”

“நீ கொண்டு போனியா?”

“அச்சோ இல்லை சண்மு. வீட்டுக்கு எடுத்துட்டுப் போற பழக்கம் நமக்கில்லையே. அப்புறம் எப்படி?”

“நமக்கு நேரமில்லை பூரணி. டி.பார்ம் சர்டிபிகேட் இல்லை பில் புக் காண்பிக்கலைன்னா லைசன்ஸ் கேன்சல் பண்ணி சீல் வச்சிட்டுப் போயிருவாங்க. அதைச் சரிபண்ணணும்னா... காட்! நினைச்சாலே கண்ணைக் கட்டுது.”

“அதுக்கு முன்ன நமக்குத் தெரியாம எதாவது காலாவதியான மருந்து இருக்கா பாரு. ஒண்ணு கிடைச்சாலும் அவ்வளவுதான் சண்மு” என்றாள் தவறாக எதுவும் நடந்துவிடக் கூடாதென்று.

“அதெல்லாம் பிரச்சனையில்லை.”

“அப்ப வினோத்கிட்ட கேட்கலாம். இன்னைக்கு அவனுக்கு ஆஃப் ட்யூட்டின்னு சொன்னான். இரு போன் பண்றேன்” என்று பூரணி அவனை அழைக்க, அழைப்பு சென்றதே தவிர எடுக்க ஆளில்லை. அவன் எடுக்கவில்லை என்றதும் பதற்றம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

“சைலண்ட்ல போட்டிருப்பான் பூரணி. நான் அவன் வேலை செய்யுற ஹாஸ்பிடல் போயி பார்த்துட்டு வர்றேன். எப்படியும் அவங்க வர்றதுக்குள்ள வந்திருவேன் பூரணி. கிருஷ்ணா மெடிக்கல்லயிருந்து எனக்கு இன்பர்மேஷன் வந்தா உனக்கு ஷேர் பண்றேன். உனக்கு கால் வந்தா எனக்கு சொல்லு. ஜாக்கிரதை பூரணி” என்று ஆயிரத்தெட்டு பத்திரம் சொல்லிக் கிளம்பினாள் சண்முகி.

‘இவள் வேற விட்டா குழந்தையாக்கி இடுப்புல தூக்கி வச்சிக்குவா’ என சலித்தபடி புன்னகையுடன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள்.

மருத்துவமனையிலிருந்து தோழிக்கு அழைத்து வினோத் அங்கு இல்லையென்று சொல்லிய சண்முகிக்கு இதுவரையில்லாத பயம் எழுந்தது.

அடுத்த பத்தாவது நிமிடம் பூரணி சண்முகிக்கு அழைத்து, “கிருஷ்ணா மெடிக்கல்லயிருந்து இன்னும் பதினைந்து நிமிடத்திற்கெல்லாம் கிளம்பிருவாங்களாம் சண்மு” எனவும், “விடுமா பார்த்துக்கலாம்” என்று அவளுக்கு ஆறுதலாகப் பேசி வைக்கையில், அருகில் வந்து நின்றது ஒரு கார்.

பயத்தில் சட்டென்று விலகியவள் திட்ட வாய் திறக்க, “சாரி சாரி சண்முகி” என்றபடி தினகரன் வந்தான்.

“ஊஃப் நீங்களா? பார்த்து வர்றதில்லையா?” என்றாள்.

“பார்த்து வர்றது இருக்கட்டும். கார் வர்றதைக்கூடக் கவனிக்காத அளவு என்ன டென்ஷன் உனக்கு?

“அ..அது..” சொல்லவா வேண்டாமா என யோசிக்கையிலேயே, “என்ன சண்மு? என் சண்மு பேசுறதுக்குத் திணறுவாள்னு இப்பதான் பார்க்கிறேன்” என்றான் கிண்டலாக.

“ப்ச்.. உங்ககிட்ட வாயடிக்க நேரமில்லை நகருங்க” என்றாள்.

“சண்மு என்னன்னு சொல்லு? என்னால எதாவது செய்ய முடியுமா பார்க்கிறேன்.”

அவனிடம் உதவி கேட்கத் தன்மானம் தடுத்தாலும், மெடிக்கல் இருவருக்கும் சம்பந்தப்பட்டதாயிற்றே! அதனால் அவனிடம் பிரச்சனையைச் சொல்ல, பிரச்சனையை உள்வாங்கியவன், “இப்போதைக்கு அவங்களை சமாளிக்கலாம் வா” என்றழைத்துச் செல்கையிலேயே வசீகரனுக்கும் செய்தி அனுப்ப, அவனிடமிருந்து பதில் வரவும் அமைதியாக வந்தவன், நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்த சண்முகியைப் பார்த்து “சண்மு” என்றான் மென்மையாக.

“ஹான்!” என்று நிமிர, “ரிலாக்ஸ்மா” என்று அவள் தலையில் கைவைத்து “ஒண்ணும் ஆகாது” என்றான்.

கண்கலங்கப் பார்த்தவள் “இப்படி ஒரு சிக்கல் வந்தது இதுதான் முதல்முறை. எப்படி மிஸ்ஸானது தெரியலை. நாங்க எப்பவும் ஜாக்கிரதையாதான் இருப்போம். எங்க இரண்டுபேர் பெயரிலும் இருக்கிறதால பில்லிங் சைன் எங்கள்ல யாராவதுதான் பண்ணுவோம். பில் இருந்தாலாவது கொஞ்சம் சமாளிச்சிக்கலாம். அதென்னவோ சொல்லி வச்ச மாதிரி எங்க இரண்டு பேரோட சர்டிபிகேட்டும் பில் புக்கும் காணோம்” என்றாள்.

“பார்த்துக்கலாம் சண்மு” என்றவன் ஏதோ ஒரு யோசனையில் பூரணி வீட்டிற்கு காரை விட, அதற்குள் வினோத் சண்முகிக்கு போன் செய்து அதிக முறை அழைத்த விவரத்தைக் கேட்க, அவனிடம் விஷயத்தை சொல்லிக் கேட்டார்கள்.

அவர்களின் பதற்றம் உணர்ந்தவனோ, தவறு தன்மேல்தான் என்பதை ஒத்துக்கொண்டு, முன்தின இரவு யாரென்று தெரியாத ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருந்ததால், திருட்டு பயத்தில் முக்கியமானதை எல்லாம் இரவே பூரணியின் வீட்டில் ஜனனியிடம் கொடுத்து சென்றதைச் சொன்னான்.

அங்கு சென்று ஜனனியிடம் வாங்கி மருந்தகம் செல்ல, அங்கு அதிகாரி ஒருவர் பூரணியைத் திட்டிக் கொண்டிருப்பதைக் கண்டதும் வேகமாக வந்து மருந்தகச் சான்றிதழையும், குறிப்புப் புத்தகத்தையும் அவர்களிடம் நீட்ட, அவர்கள் அதை சரிபார்த்து ‘கடைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. எல்லாம் சரியாக உள்ளது’ என்றுவிட்டுச் சென்றனர்.


ஆசுவாசமூச்சுவிட்டுத் திரும்புகையில் அங்கிருந்த வசிகரனைப் பார்த்த பூரணி, “உங்களுக்கு இங்க என்ன வேலை? முதல்ல இங்கேயிருந்து போங்க” என்றாள் எரிச்சலில்.
 
Last edited:

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top