- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்? ஏய் வித்தி நீ சொல்லு, கார்த்தி சொல்றது உண்மையா? நைட் வீட்டுக்கு வந்தாரா? நீங்க பேசிட்டிருந்தீங்களா?” என்று சரமாரியாகக் கேள்விகளால் மகளைத் துளைத்தார்.
“அம்மா, அண்ணி சொல்ற அர்த்தத்துல எதுவுமில்லமா” என்றாள் தொய்ந்து போன குரலில்.
“அண்ணி தற்செயலா நடந்திருக்கும். அதையெல்லாம் பெருசு பண்ணாம, என்ன நடந்ததுன்னு பொறுமையா கேட்கலாம்.”
“என்ன பொறுமை சுபா. காலையிலயிருந்து இவரைப் பற்றிக் கேள்விப்படுறதெல்லாம் சரியாவா இருக்கு? நெஞ்சே பதறுது சுபா. இதுக்கு மேல...” என குரல் அடைக்க சரி செய்து, “நீ சொல்லு வித்யா, நேத்து வந்ததை ஏன் சொல்லல? வெளியில தெரிஞ்சா... ப்ச்.. உன் அண்ணனும் கல்யாணத்தை நல்லவிதமா முடிக்கல. நீயும் அவன் தங்கைன்றதை நிரூபிச்சிட்டல்ல” என்றார் கலங்கிய குரலில்.
“அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சி போட்டுப் பேசுறீங்க?” என கேட்ட மகனைத் தடுத்த சுதாகர், “வாணி இப்ப எதுவும் பேசாத. நம்ம பொண்ணு வாழ்க்கை இன்னும் சிக்கலாக்குறது சரியில்ல” என்றார்.
“ஆமா அப்படியொரு அக்கறையிருந்தா பையனைப்பற்றி விசாரிச்சிக் குடுத்திருப்பீங்கள்ல” என்று தன் கோபத்தைக் கணவனிடம் காட்டினார்.
“விசாரிக்கலன்னு உனக்குத் தெரியுமா? விசாரிச்ச பிறகுதான் பத்திரிக்கை அடிச்சதே. அவங்களும் உண்மையைச் சொல்லிதான் பெண் கேட்டதே.”
“ஒரு நிமிஷம் மாமா” என்று இடையிட்ட ஆனந்த், “மேல மேல பேசிட்டு போகவேண்டாம். பிரச்சனை பெருசாகுதே தவிர, யாரும் சமாதானமாகுற மாதிரித் தெரியல. நடந்தது தற்செயலானது. எந்தத் திட்டமும் போட்டு சந்திக்கல. அப்படி பார்த்து பேசணும்னு தோணியிருந்தா உங்ககிட்டயே பெர்மிஷன் கேட்டிருப்பேன். திருட்டுத்தனமா சந்திச்சிருக்கமாட்டேன். என்னை நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம்.”
“ஏன் கார்த்திகா, என்னை விடுங்க இப்ப வந்தவன். உங்க வீட்டுப் பொண்ணைத் தெரியாதா? அவ்வளவு நம்பிக்கையா அவள்மேல” என்று அவளைக் குற்றம் சாட்டி, “இதுக்கு மேல நைட் வந்ததுக்கு விளக்கம் சொல்ல நான் தயாராயில்ல. நீங்க சொல்லுங்க? தாலி கட்டுறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”
“ஹ்ம்... நிறுத்தியிருப்போம்” என்று முணுமுணுக்க... அதை வாணி வாய் திறந்து சொல்லுமுன் வித்யா மயங்கிச் சரிந்தாள்.
அவர்களின் பேச்சுக்கு நடுவே வராமல் என்ன ஏதென்று ஆராயவும் முடியாமல் நின்றிருந்தவளுக்கு, ஏற்கனவே இருந்த காய்ச்சலின் வீரியமும், காலையிலேயே தலைக்குக் குளித்து ஈரம் காயுமுன் மணப்பெண் அலங்காரம் என்று தலை ஈரம் காயாமல் இருந்ததால் வந்த உடல் உஷ்ணமும், காலையிலிருந்து நடக்கும் மனப்போராட்டங்களும் சேர்ந்து சோர்வடையச் செய்ய, தன் தாயும் அண்ணியும் என்ன சொல்வார்கள் என்பதை உணர்ந்த நிமிடம் உணர்வில்லாமல் விழுந்தாள்.
“தியா” என்ற அலறலுடன் ஆனந்த் அவளைத் தூக்கி முகத்தைத் தட்ட, அவளின் உடல் அனலாய் கொதித்ததை உணர்ந்து, “சே.. நானாவது உன்னைக் கூட்டிட்டுப் போயிருக்கணும். இவங்களோட பேசி உன்னைக் கவனிக்காமல் விட்டுட்டேன்மா. சாரி தியா” என்றவனின் புலம்பல்கள் அவள் காதில் விழுந்ததோ!
மெல்ல கண் திறந்தவள், உரியவன் கைகளில் தன்னைக் கண்டு கண்களில் அவனை நிறைத்துக் கொண்டு முழுதாய் மயக்கத்திற்குச் சென்றாள்.
தண்ணீர் தெளித்தும் எழவில்லை என்றதும் அனைவருக்கும் சற்று பயம் வர, “சாரகேஷ் காரை எடுத்துட்டு வாங்க” என்றான் ஆனந்த் வேகக்குரலில்.
“இல்ல நா..ங்..களே...” ஆரம்பித்த கார்த்திகா சுதாகரின், “இனிமேல் பொம்பளைங்க யாராவது வாயைத் திறந்தீங்க நடக்கிறதே வேற” என்ற மிரட்டலில் அமைதியாக, சாரகேஷிடம் திரும்பி “பின்பக்கம் காரை எடுத்துட்டு வாங்க தம்பி. முன்னாடினா நிறைய கேள்வி வரும். என் பொண்ணை யாரும் தப்பா பேசுறது எனக்குப் பிடிக்காது” என்று கறாராகச் சொன்னார்.
அதற்குள் கார் கொண்டு வர, வித்யாவைக் காருக்குத் தூக்கிச் செல்லவும், அவனின் வீட்டினர் காரில் ஏற, பின்னால் சுபாஷ் கொண்டு வந்த காரில் ஆண்கள் ஏறிக்கொள்ள, உடன் சுபாஷிணி மட்டும் சென்றார்.
“ஆனந்த் இவள் போட்டிருக்கிற மாலையையும், நகையையும் முதல்ல கழட்டு. அதுவே பாதி டிஸ்டர்பா இருக்கும்” என்றதும் நகையைக் கழட்டியபடி, “எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியில்ல போலம்மா. என்னைத் தேடி வந்ததும் நிலைக்கல. நான் தேடி வந்ததும் இப்படி... இவ என்னைப் புரிஞ்சிப்பாள்லம்மா?” என்றான் மனைவியவளின் முகம் வருடி.
“புரிஞ்சிக்குவாடா. உங்களுக்குள்ள பிரிவுதான்னு இருந்திருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கும். அப்படி நடக்கலன்னும் போதே தெரியலையா, நீங்க சேரணும்னு விதியிருக்கு. எல்லாம் சரியா நடக்கும்” எனும்போது ஆனந்த்கு போன் வர, சுபாஷின் நம்பரைக் கண்டு எடுத்தவனிடம், “மச்சான் லெப்ட்ல கட் பண்ணினா இரண்டாவது பில்டிங் ஹாஸ்பிடல்” என்று சொல்ல... அதை சாரகேஷிடம் சொல்லி முடிக்க கார் மருத்துவாமனை வாயிலில் நின்றது.
இரண்டு கார்களும் அடுத்தடுத்து நிற்க சுபாஷ் வேகமாக ஓடி வந்து, ரிசப்ஷனில் பேசி பெட் ஏற்பாடு செய்து, டாக்டரைப் பார்த்து அவசரம் என்று அழைத்து வர, அதற்குள் வித்யாவை பெட்டில் சேர்த்திருந்தார்கள். டாக்டர் வந்ததும் முதலில் கண்களைப் பார்த்து ட்ரிப்ஸ் ஏற்றச்சொல்லி பரிசோதித்து முடித்தவர், “இப்போதைக்கு பேஷண்ட்கு எதுவுமில்ல. ப்ளட் டெஸ்ட் வந்ததும் பார்க்கலாம்” என்றிட சற்று ஆசுவாச மூச்சு அனைவருக்குள்ளும்.
மனைவியைத் தனியே பார்க்க ஆனந்த் நினைக்க, அவன் எண்ணம் புரிந்தாற்போல் சுபாஷிணி மற்றவர்களுடன் வெளியே செல்ல, அவளருகில் சென்று பெட்டின் ஓரம் அமர்ந்தபடி அவளைக் காண, மூன்று நாட்கள் காய்ச்சலிலும் காலை வரை புன்னகையுடனிருந்த முகம் வாடிப்போயிருந்தது.
“நான் உன் லைப்ல வராமலே போயிருக்கலாம் தியா. பாரு நிம்மதியா இருந்த உன்னை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருக்கேன். ரெண்டு டைம் அடிபட்டும் உன்னைத் தேடி வருவேனா? எனக்கெல்லாம் எதுக்கு கல்யாண ஆசை. ப்ளீஸ் தியா எனக்காக வந்திரு. நீயும் என்னைப் புரிஞ்சிக்கலன்னா மொத்தமா உடைஞ்சிருவேன். யார் என்ன வேணும்னா சொல்லட்டும், அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. நான் உன்னை விரும்புறது நிஜம். அது என்னைக்கும் மாறாது” என்று அவளின் ஒரு கையை எடுத்து முத்தமிட்டு, “ஐ லவ் யூ தியா” என்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தையுடன் கார்த்திகாவும், வாணியும் வர. அவர்களைக் கண்ட சுபாஷ் தாயிடம் எதுவும் சொல்ல முடியாது, “நீ ஏன் இங்க வந்த? வீட்ல பண்ணின பிரச்சனை போதாதுன்னு இங்க வந்தியா? நல்லாதானடி இருந்த? இப்ப என்னாச்சி? இதுல உன் மாமியாரும் கூட்டணி.”
“ஏன் இப்படிப் பேசுறீங்க? சாதனா பொய் சொல்லமாட்டாங்க. அதுவும் மண்டபத்துல அத்தனை பேர் முன்னாடி கோபப்படுறாள்னா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட யோக்யதை அப்படியிருக்கு.”
“திரும்பத்திரும்ப தப்புப் பண்ற கார்த்தி. தீர விசாரிக்காம தீர்ப்பெழுதக்கூடாது. படிச்சவள்தான நீ? அதை விடு என்னை நம்பமாட்டியா?”
“இவள் கேட்கிறதுல என்னடா தப்பு. அந்தப் பொண்ணு சொன்னதைக் கேட்டு நானே ஆடிப்போயிட்டேன்.”
“தப்பு செய்யாதவங்கன்னு யாரும் கிடையாதும்மா. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் ஏன் தண்டிக்கணும்? அதுவும் இப்ப நம்ம வீட்டு மாப்பிள்ளை. இவ என்னவோ பேய் புகுந்த மாதிரி கத்துறா” என்று மனைவியைக் குற்றம் சாட்டினார்.
“பேய் மாதிரிக் கத்துறேனா? நீங்க ஆம்பளைதான அப்படித்தான் பேசுவீங்க. நான் யாருக்காகக் கத்தினேன்? எனக்காகவா? சொல்லுங்க எனக்காக என் சுயநலத்துக்காக பண்றேனா? அடிக்கலாம் கை ஓங்குறீங்க.” வந்த அழுகையை இடமறிந்து அடக்கினாள்.
“கார்த்தி வேண்டாம். பச்சை உடம்புக்காரின்னு பார்க்கிறேன். இல்ல...”
“இல்லன்னா என்ன பண்ணுவீங்க?” அடக்கி வைத்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்க...
“ச்சீ.. போடி. உன்னை இந்த மாதிரி நினைச்சிக்கூட பார்க்கல. ஒரே நாள்ல...”
“ஒரே நாள்ல... சொல்லுங்க? ஒரே நாள்ல பிடிக்காம போய்ட்டேனா?”
“விட்டுரு கார்த்தி. கோபத்துல ஆமாம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னா, காலத்துக்கும் உன்னால அதைத் தாங்கிக்க முடியாது.” மனைவியின் அதிர்ந்த முகம் பார்த்து, “சாரி கார்த்தி. நான் அந்த மாதிரி நடந்திடக்கூடாதுன்னு சொன்னேன்” என்று அவளைத் தொட வர...
அவனிடமிருந்து விலகி, “இப்ப வந்த உறவுக்காக, கட்டின பொண்டாட்டியைக் கைவிட்டுட்டீங்கள்ல” என்றாள் கணவன் கண் பார்த்து.
“ஏய் கார்த்தி. நான் என்ன பேசினா, நீ என்ன...”
‘ப்ச்...’ என கையை நீட்டி அவன் பேச்சைத் தடுத்து அங்கிருந்து நகர... அவளைத் தொடரப்போனவனை சுதாகரும் சுபாஷிணியும் தடுத்து தனியே அழைத்து வந்தார்கள்.
“பாருங்கப்பா ஒண்ணுமில்லாத விஷயத்தை, முழுசா விசாரிக்காம என்னலாம் பேசுறா. அவர் இல்லன்னா நாம இப்படியாப்பா நிற்போம். ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்திருக்கார். இப்படின்னு தெரிஞ்சிருந்தா வருத்தப்பட்டாலும் பரவாயில்லன்னு நடந்ததை அவள்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பேன்பா.”
“சுபாஷ் அமைதியாயிரு. கார்த்திகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எது பேசினாலும் பதில் பேசாத. அவள் நினைக்கிறதைப் பேசட்டும்” என்றார் சுதாகர்.
“அப்பா நீங்க... வித்யா வாழ்க்கைப்பா?”
“தெரியும்டா. அதனால்தான் இந்த அமைதி” என, புரியாமல் விழித்த மகனிடம். ஜாதகத்தைப் பற்றிச் சொல்லி, “ஐயர் சொல்லி தேதி குறிச்சிட்டாலும் சின்னதா பயம்தான். காரணம், அவர் வாழ்க்கையில நடந்ததை மாப்பிள்ளை சொல்லிட்டதால, அப்படி என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு அசால்டா இருந்துட்டோம். இது நாங்க எதிர்பார்க்காதது. பிரச்சனைக்கு நடுவுலதான் அவங்க கல்யாண வாழ்க்கை ஆரம்பிக்கும்ன்றப்ப, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி நடத்தினாலும் இதேதானே நிலை.”
“ஆமா சுபாஷ். இப்ப நாம சொல்ற எதையும் கார்த்தியால புரிஞ்சிக்க முடியாது. அண்ணியையும் சேர்த்துதான். அதனாலதான் நாங்க இடையில வரல.”
“சுபா சொன்னதுதான் சுபாஷ். நாங்க நடுவுல வந்திருந்தா மாப்பிள்ளைக்கு ஆதரவா வரணும். அப்படி வந்திருந்தா மருமகளை கைவிட்ட மாதிரியாகிடும். அதுமட்டுமில்லாம கார்த்தியோட கோபம் இன்னும் அதிகமாயிருக்கும். எல்லை மீறிடாம கொஞ்சம் பொறுத்துப் போடா” என பக்குவமாக எடுத்துச் சொன்னார் சுதாகர்.
“ஆனா அப்பா, அதான் தெளிவா சொல்றோமே. அதுகூட ஏன் புரியல?”
“கெட்ட நேரம்னு வந்தா கண்முன்னே நடக்கிற நல்லது கூட கெட்டதாதான் தெரியும். சீக்கிரமே தான் செய்ற தவறைப் புரிஞ்சிக்குவா” என்று மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
கார்த்தியும் வாணியும் வித்யா அறைக்குள் வர, அவர்களைக் கண்ட ஆனந்த் வெளியே செல்ல, மாமியாரும் மருமகளும் அவனை முறைத்தபடி நின்றார்கள்.
‘பார்த்து! நீங்க முறைக்குற முறைப்புல கண்ணு வெளில வந்து குதிச்சிடுவேன்னு நிற்குது’ என்று சொல்ல நினைத்தவன், “விட்ரா விட்ரா ஆனந்து! ஆபீஸ்ல எத்தனை முறைப்பையும் கடுப்பையும் பார்த்திருப்போம்” என்று அவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிச் சென்றான்.
“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்? ஏய் வித்தி நீ சொல்லு, கார்த்தி சொல்றது உண்மையா? நைட் வீட்டுக்கு வந்தாரா? நீங்க பேசிட்டிருந்தீங்களா?” என்று சரமாரியாகக் கேள்விகளால் மகளைத் துளைத்தார்.
“அம்மா, அண்ணி சொல்ற அர்த்தத்துல எதுவுமில்லமா” என்றாள் தொய்ந்து போன குரலில்.
“அண்ணி தற்செயலா நடந்திருக்கும். அதையெல்லாம் பெருசு பண்ணாம, என்ன நடந்ததுன்னு பொறுமையா கேட்கலாம்.”
“என்ன பொறுமை சுபா. காலையிலயிருந்து இவரைப் பற்றிக் கேள்விப்படுறதெல்லாம் சரியாவா இருக்கு? நெஞ்சே பதறுது சுபா. இதுக்கு மேல...” என குரல் அடைக்க சரி செய்து, “நீ சொல்லு வித்யா, நேத்து வந்ததை ஏன் சொல்லல? வெளியில தெரிஞ்சா... ப்ச்.. உன் அண்ணனும் கல்யாணத்தை நல்லவிதமா முடிக்கல. நீயும் அவன் தங்கைன்றதை நிரூபிச்சிட்டல்ல” என்றார் கலங்கிய குரலில்.
“அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சி போட்டுப் பேசுறீங்க?” என கேட்ட மகனைத் தடுத்த சுதாகர், “வாணி இப்ப எதுவும் பேசாத. நம்ம பொண்ணு வாழ்க்கை இன்னும் சிக்கலாக்குறது சரியில்ல” என்றார்.
“ஆமா அப்படியொரு அக்கறையிருந்தா பையனைப்பற்றி விசாரிச்சிக் குடுத்திருப்பீங்கள்ல” என்று தன் கோபத்தைக் கணவனிடம் காட்டினார்.
“விசாரிக்கலன்னு உனக்குத் தெரியுமா? விசாரிச்ச பிறகுதான் பத்திரிக்கை அடிச்சதே. அவங்களும் உண்மையைச் சொல்லிதான் பெண் கேட்டதே.”
“ஒரு நிமிஷம் மாமா” என்று இடையிட்ட ஆனந்த், “மேல மேல பேசிட்டு போகவேண்டாம். பிரச்சனை பெருசாகுதே தவிர, யாரும் சமாதானமாகுற மாதிரித் தெரியல. நடந்தது தற்செயலானது. எந்தத் திட்டமும் போட்டு சந்திக்கல. அப்படி பார்த்து பேசணும்னு தோணியிருந்தா உங்ககிட்டயே பெர்மிஷன் கேட்டிருப்பேன். திருட்டுத்தனமா சந்திச்சிருக்கமாட்டேன். என்னை நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம்.”
“ஏன் கார்த்திகா, என்னை விடுங்க இப்ப வந்தவன். உங்க வீட்டுப் பொண்ணைத் தெரியாதா? அவ்வளவு நம்பிக்கையா அவள்மேல” என்று அவளைக் குற்றம் சாட்டி, “இதுக்கு மேல நைட் வந்ததுக்கு விளக்கம் சொல்ல நான் தயாராயில்ல. நீங்க சொல்லுங்க? தாலி கட்டுறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”
“ஹ்ம்... நிறுத்தியிருப்போம்” என்று முணுமுணுக்க... அதை வாணி வாய் திறந்து சொல்லுமுன் வித்யா மயங்கிச் சரிந்தாள்.
அவர்களின் பேச்சுக்கு நடுவே வராமல் என்ன ஏதென்று ஆராயவும் முடியாமல் நின்றிருந்தவளுக்கு, ஏற்கனவே இருந்த காய்ச்சலின் வீரியமும், காலையிலேயே தலைக்குக் குளித்து ஈரம் காயுமுன் மணப்பெண் அலங்காரம் என்று தலை ஈரம் காயாமல் இருந்ததால் வந்த உடல் உஷ்ணமும், காலையிலிருந்து நடக்கும் மனப்போராட்டங்களும் சேர்ந்து சோர்வடையச் செய்ய, தன் தாயும் அண்ணியும் என்ன சொல்வார்கள் என்பதை உணர்ந்த நிமிடம் உணர்வில்லாமல் விழுந்தாள்.
“தியா” என்ற அலறலுடன் ஆனந்த் அவளைத் தூக்கி முகத்தைத் தட்ட, அவளின் உடல் அனலாய் கொதித்ததை உணர்ந்து, “சே.. நானாவது உன்னைக் கூட்டிட்டுப் போயிருக்கணும். இவங்களோட பேசி உன்னைக் கவனிக்காமல் விட்டுட்டேன்மா. சாரி தியா” என்றவனின் புலம்பல்கள் அவள் காதில் விழுந்ததோ!
மெல்ல கண் திறந்தவள், உரியவன் கைகளில் தன்னைக் கண்டு கண்களில் அவனை நிறைத்துக் கொண்டு முழுதாய் மயக்கத்திற்குச் சென்றாள்.
தண்ணீர் தெளித்தும் எழவில்லை என்றதும் அனைவருக்கும் சற்று பயம் வர, “சாரகேஷ் காரை எடுத்துட்டு வாங்க” என்றான் ஆனந்த் வேகக்குரலில்.
“இல்ல நா..ங்..களே...” ஆரம்பித்த கார்த்திகா சுதாகரின், “இனிமேல் பொம்பளைங்க யாராவது வாயைத் திறந்தீங்க நடக்கிறதே வேற” என்ற மிரட்டலில் அமைதியாக, சாரகேஷிடம் திரும்பி “பின்பக்கம் காரை எடுத்துட்டு வாங்க தம்பி. முன்னாடினா நிறைய கேள்வி வரும். என் பொண்ணை யாரும் தப்பா பேசுறது எனக்குப் பிடிக்காது” என்று கறாராகச் சொன்னார்.
அதற்குள் கார் கொண்டு வர, வித்யாவைக் காருக்குத் தூக்கிச் செல்லவும், அவனின் வீட்டினர் காரில் ஏற, பின்னால் சுபாஷ் கொண்டு வந்த காரில் ஆண்கள் ஏறிக்கொள்ள, உடன் சுபாஷிணி மட்டும் சென்றார்.
“ஆனந்த் இவள் போட்டிருக்கிற மாலையையும், நகையையும் முதல்ல கழட்டு. அதுவே பாதி டிஸ்டர்பா இருக்கும்” என்றதும் நகையைக் கழட்டியபடி, “எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியில்ல போலம்மா. என்னைத் தேடி வந்ததும் நிலைக்கல. நான் தேடி வந்ததும் இப்படி... இவ என்னைப் புரிஞ்சிப்பாள்லம்மா?” என்றான் மனைவியவளின் முகம் வருடி.
“புரிஞ்சிக்குவாடா. உங்களுக்குள்ள பிரிவுதான்னு இருந்திருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கும். அப்படி நடக்கலன்னும் போதே தெரியலையா, நீங்க சேரணும்னு விதியிருக்கு. எல்லாம் சரியா நடக்கும்” எனும்போது ஆனந்த்கு போன் வர, சுபாஷின் நம்பரைக் கண்டு எடுத்தவனிடம், “மச்சான் லெப்ட்ல கட் பண்ணினா இரண்டாவது பில்டிங் ஹாஸ்பிடல்” என்று சொல்ல... அதை சாரகேஷிடம் சொல்லி முடிக்க கார் மருத்துவாமனை வாயிலில் நின்றது.
இரண்டு கார்களும் அடுத்தடுத்து நிற்க சுபாஷ் வேகமாக ஓடி வந்து, ரிசப்ஷனில் பேசி பெட் ஏற்பாடு செய்து, டாக்டரைப் பார்த்து அவசரம் என்று அழைத்து வர, அதற்குள் வித்யாவை பெட்டில் சேர்த்திருந்தார்கள். டாக்டர் வந்ததும் முதலில் கண்களைப் பார்த்து ட்ரிப்ஸ் ஏற்றச்சொல்லி பரிசோதித்து முடித்தவர், “இப்போதைக்கு பேஷண்ட்கு எதுவுமில்ல. ப்ளட் டெஸ்ட் வந்ததும் பார்க்கலாம்” என்றிட சற்று ஆசுவாச மூச்சு அனைவருக்குள்ளும்.
மனைவியைத் தனியே பார்க்க ஆனந்த் நினைக்க, அவன் எண்ணம் புரிந்தாற்போல் சுபாஷிணி மற்றவர்களுடன் வெளியே செல்ல, அவளருகில் சென்று பெட்டின் ஓரம் அமர்ந்தபடி அவளைக் காண, மூன்று நாட்கள் காய்ச்சலிலும் காலை வரை புன்னகையுடனிருந்த முகம் வாடிப்போயிருந்தது.
“நான் உன் லைப்ல வராமலே போயிருக்கலாம் தியா. பாரு நிம்மதியா இருந்த உன்னை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருக்கேன். ரெண்டு டைம் அடிபட்டும் உன்னைத் தேடி வருவேனா? எனக்கெல்லாம் எதுக்கு கல்யாண ஆசை. ப்ளீஸ் தியா எனக்காக வந்திரு. நீயும் என்னைப் புரிஞ்சிக்கலன்னா மொத்தமா உடைஞ்சிருவேன். யார் என்ன வேணும்னா சொல்லட்டும், அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. நான் உன்னை விரும்புறது நிஜம். அது என்னைக்கும் மாறாது” என்று அவளின் ஒரு கையை எடுத்து முத்தமிட்டு, “ஐ லவ் யூ தியா” என்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தையுடன் கார்த்திகாவும், வாணியும் வர. அவர்களைக் கண்ட சுபாஷ் தாயிடம் எதுவும் சொல்ல முடியாது, “நீ ஏன் இங்க வந்த? வீட்ல பண்ணின பிரச்சனை போதாதுன்னு இங்க வந்தியா? நல்லாதானடி இருந்த? இப்ப என்னாச்சி? இதுல உன் மாமியாரும் கூட்டணி.”
“ஏன் இப்படிப் பேசுறீங்க? சாதனா பொய் சொல்லமாட்டாங்க. அதுவும் மண்டபத்துல அத்தனை பேர் முன்னாடி கோபப்படுறாள்னா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட யோக்யதை அப்படியிருக்கு.”
“திரும்பத்திரும்ப தப்புப் பண்ற கார்த்தி. தீர விசாரிக்காம தீர்ப்பெழுதக்கூடாது. படிச்சவள்தான நீ? அதை விடு என்னை நம்பமாட்டியா?”
“இவள் கேட்கிறதுல என்னடா தப்பு. அந்தப் பொண்ணு சொன்னதைக் கேட்டு நானே ஆடிப்போயிட்டேன்.”
“தப்பு செய்யாதவங்கன்னு யாரும் கிடையாதும்மா. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் ஏன் தண்டிக்கணும்? அதுவும் இப்ப நம்ம வீட்டு மாப்பிள்ளை. இவ என்னவோ பேய் புகுந்த மாதிரி கத்துறா” என்று மனைவியைக் குற்றம் சாட்டினார்.
“பேய் மாதிரிக் கத்துறேனா? நீங்க ஆம்பளைதான அப்படித்தான் பேசுவீங்க. நான் யாருக்காகக் கத்தினேன்? எனக்காகவா? சொல்லுங்க எனக்காக என் சுயநலத்துக்காக பண்றேனா? அடிக்கலாம் கை ஓங்குறீங்க.” வந்த அழுகையை இடமறிந்து அடக்கினாள்.
“கார்த்தி வேண்டாம். பச்சை உடம்புக்காரின்னு பார்க்கிறேன். இல்ல...”
“இல்லன்னா என்ன பண்ணுவீங்க?” அடக்கி வைத்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்க...
“ச்சீ.. போடி. உன்னை இந்த மாதிரி நினைச்சிக்கூட பார்க்கல. ஒரே நாள்ல...”
“ஒரே நாள்ல... சொல்லுங்க? ஒரே நாள்ல பிடிக்காம போய்ட்டேனா?”
“விட்டுரு கார்த்தி. கோபத்துல ஆமாம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னா, காலத்துக்கும் உன்னால அதைத் தாங்கிக்க முடியாது.” மனைவியின் அதிர்ந்த முகம் பார்த்து, “சாரி கார்த்தி. நான் அந்த மாதிரி நடந்திடக்கூடாதுன்னு சொன்னேன்” என்று அவளைத் தொட வர...
அவனிடமிருந்து விலகி, “இப்ப வந்த உறவுக்காக, கட்டின பொண்டாட்டியைக் கைவிட்டுட்டீங்கள்ல” என்றாள் கணவன் கண் பார்த்து.
“ஏய் கார்த்தி. நான் என்ன பேசினா, நீ என்ன...”
‘ப்ச்...’ என கையை நீட்டி அவன் பேச்சைத் தடுத்து அங்கிருந்து நகர... அவளைத் தொடரப்போனவனை சுதாகரும் சுபாஷிணியும் தடுத்து தனியே அழைத்து வந்தார்கள்.
“பாருங்கப்பா ஒண்ணுமில்லாத விஷயத்தை, முழுசா விசாரிக்காம என்னலாம் பேசுறா. அவர் இல்லன்னா நாம இப்படியாப்பா நிற்போம். ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்திருக்கார். இப்படின்னு தெரிஞ்சிருந்தா வருத்தப்பட்டாலும் பரவாயில்லன்னு நடந்ததை அவள்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பேன்பா.”
“சுபாஷ் அமைதியாயிரு. கார்த்திகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எது பேசினாலும் பதில் பேசாத. அவள் நினைக்கிறதைப் பேசட்டும்” என்றார் சுதாகர்.
“அப்பா நீங்க... வித்யா வாழ்க்கைப்பா?”
“தெரியும்டா. அதனால்தான் இந்த அமைதி” என, புரியாமல் விழித்த மகனிடம். ஜாதகத்தைப் பற்றிச் சொல்லி, “ஐயர் சொல்லி தேதி குறிச்சிட்டாலும் சின்னதா பயம்தான். காரணம், அவர் வாழ்க்கையில நடந்ததை மாப்பிள்ளை சொல்லிட்டதால, அப்படி என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு அசால்டா இருந்துட்டோம். இது நாங்க எதிர்பார்க்காதது. பிரச்சனைக்கு நடுவுலதான் அவங்க கல்யாண வாழ்க்கை ஆரம்பிக்கும்ன்றப்ப, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி நடத்தினாலும் இதேதானே நிலை.”
“ஆமா சுபாஷ். இப்ப நாம சொல்ற எதையும் கார்த்தியால புரிஞ்சிக்க முடியாது. அண்ணியையும் சேர்த்துதான். அதனாலதான் நாங்க இடையில வரல.”
“சுபா சொன்னதுதான் சுபாஷ். நாங்க நடுவுல வந்திருந்தா மாப்பிள்ளைக்கு ஆதரவா வரணும். அப்படி வந்திருந்தா மருமகளை கைவிட்ட மாதிரியாகிடும். அதுமட்டுமில்லாம கார்த்தியோட கோபம் இன்னும் அதிகமாயிருக்கும். எல்லை மீறிடாம கொஞ்சம் பொறுத்துப் போடா” என பக்குவமாக எடுத்துச் சொன்னார் சுதாகர்.
“ஆனா அப்பா, அதான் தெளிவா சொல்றோமே. அதுகூட ஏன் புரியல?”
“கெட்ட நேரம்னு வந்தா கண்முன்னே நடக்கிற நல்லது கூட கெட்டதாதான் தெரியும். சீக்கிரமே தான் செய்ற தவறைப் புரிஞ்சிக்குவா” என்று மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
கார்த்தியும் வாணியும் வித்யா அறைக்குள் வர, அவர்களைக் கண்ட ஆனந்த் வெளியே செல்ல, மாமியாரும் மருமகளும் அவனை முறைத்தபடி நின்றார்கள்.
‘பார்த்து! நீங்க முறைக்குற முறைப்புல கண்ணு வெளில வந்து குதிச்சிடுவேன்னு நிற்குது’ என்று சொல்ல நினைத்தவன், “விட்ரா விட்ரா ஆனந்து! ஆபீஸ்ல எத்தனை முறைப்பையும் கடுப்பையும் பார்த்திருப்போம்” என்று அவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிச் சென்றான்.