• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
18


சென்னை:

அபிநயாவிற்கான சிகிச்சை அவளுக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் அபிஷேக். மனதளவில் திடமானவளாகவும், தன்னை முக்கியமானவனாகவும் மாற்றிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.

அக்கா குணமாவதில் தன் பங்கு இருக்க வேண்டும். தான் இந்த படிப்பை எடுத்ததே அதற்காகத்தான் என்று தெரிந்த போது ராஜாவின் மேல் அபிஷேக்கிற்கு தனிப் பாசம் வந்தது. அவனுக்குப் படிப்புச் சம்பந்தமான சந்தேகங்களையும் அபிஷேக்கே சொல்லிக் கொடுத்தான்.

ஆராதனாவும், வேதவல்லியும் புது நிறுவனத்துக்கு வேலையில் சேருவதற்கு வந்தவர்கள், வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம், “எம்டியை பார்க்க வேண்டும்” என்று சொல்லவும், தொலைபேசியில் அழைத்துப் பேசி முடித்த அப்பெண், எம்டியின் அறையைக் காண்பித்தாள்.

அனுமதி கேட்டு உள்ளே சென்றவர்களை உட்காரச் சொன்னார் நாராயணன். “முதல் நாள் வேலை ஆரம்பிக்கப் போறீங்க பெஸட் ஆஃப் லக்மா. கம்பெனி ரூல்ஸ் எங்க மேனேஜர் சொல்லித்தருவார். ஒன் இயர் கான்ட்ரேக்ட். அதோட நடுவுல வேலையை விட்டு நின்னா, ஃபைனா நிறைய அமௌண்ட் கட்ட வேண்டி வரும். அதுக்கு சம்மதம் சொல்லி சைன் பண்ணனும். எப்பவும் அதை மறந்துராதீங்க. வேலையில் சின்சியாரிட்டி ரொம்ப முக்கியம். டேக் கேர்” என்றார்.

“இல்ல சார் வேலையை விட்டுப் போகமாட்டோம்.”

“நீ போக மாட்டமா. உன் ப்ரண்ட் எப்படி? இரண்டு மாசத்துல மேரேஜ் வேற...”

“மேரேஜ் லீவ் மட்டும் கொடுத்தா போதும் சார்” என்றாள் வேதா.

மேலாளருக்கு அழைத்துத் தன்னுடைய அறைக்கு வரவழைக்க, வந்த மேலாளரோ இவர்களைப் பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டார்.

”வாப்பா சரண். என்ன அங்கேயே நின்னுட்ட?” என்றதும் திரும்பிப் பார்த்த ஆராதனா, கணவனைப் பார்த்து கண்ணடித்து, ‘எப்புடி’ என்பது போல் பார்த்தாள்.

அதில் திணறியவன், ‘ரௌடி ரௌடி. என்ன அட்டகாசம் பண்றா பாரு. தைரியம்டி உனக்கு” என நினைத்தபடி, “சொல்லுங்க சார்” என்றான்.

அவர் இருவரையும் அறிமுகப்படுத்த, வேதவல்லிக்கு கைகுவித்து வணக்கம் தெரிவித்தவன், ஆராதனாவிடம் கைநீட்ட, பதிலுக்கு அவள் கைகுவித்து வணக்கம் சொல்லி அவனின் மூக்குடைத்து விட்டாள்..

“உன்னையெல்லாம் என்ன பண்ணலாம்?” என்று பார்த்தவனை,

“என்ன வேணும்னா பண்ணிக்கடா மச்சான். என் கலாய்ப்பு தொடரும்.” என்று பதில் பார்வை பார்த்தாள்.

நாராயணனோ தொண்டை கனைத்து, “சரண் பார்த்தது போதும். அவங்களுக்கு கம்பெனி பார்மாலிட்டீஸ் சொல்லிக் கொடுத்து, அக்ரிமெண்ட்ல சைன் வாங்கிரு” என்று அனுப்பி வைத்தார்.

சம்மதம் சொல்லி விடைபெற்றவர்கள் மேலாளர் அறைக்குள் நுழைய, “வெல்கம் டூ கே.என் கம்பெனி என் பொண்டாட்டியே” என்றான் சிரம் தாழ்ந்து.

“அண்ணா! வரவேற்பு பொண்டாட்டிக்கு மட்டும் தானா?”

“நீ தப்பா நினைச்சாலும் அதான்மா உண்மை. ஏன் தனு இங்க வேலைக்கு வர்றத சொல்லவே இல்ல?” என்று மனைவியிடம் கேட்டான்.

“தோணலை. அதனால சொல்லலை?” என்றாள் தோள்குலுக்கி.

“என்ன பதில் இது? ஏன்மா நீயாவது சொல்லிருக்கக் கூடாது?”

“எங்க சொல்ல விட்டா. அதுக்குத்தான் செக் வச்சிட்டாளே. மீறி பண்ணினா எங்க நட்புக்கு முற்றுப்புள்ளி வச்சிருவேன்னு சொல்லிட்டா. அதை விடமுடியாதே அண்ணா. அதான் சொல்லலை” என்றாள்.

சரண் அவர்கள் தொடர்பான அலுவலக ஊழியர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக் கடைசியில், “இவங்க வசந்தி அக்கா. இவங்க தான் உங்களுக்கு வேலை சொல்லித்தரப் போறாங்க” என்று வசந்தியுடன் அனுப்பினான்.

ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் சக்தியின் அருகிலேயே வேலைக்கான இடம் ஒதுக்கப்பட்டது. வசந்தி மூலமும், சக ஊழியர்கள் மூலமும் சரணைப் பற்றி ஒரு நாளிலேயே நிறைய தெரிந்து கொண்டாள். ‘கம்பெனியின் முக்கிய அங்கமே தன் கணவன்தான். அவன் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தால் கூட அவனால் பெரிய அளவு சாதிக்க முடியும். சாதிக்கக் கூடியவன்தான்’ என்று கணவனை நினைத்து பெருமைப்பட்டாள்.

மாலையில் அவர்களை சரணே கூப்பிட்டுச் செல்லலாம் என்று நினைத்து வர, அவளோ ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள்.

“ஹேய் தனு! என்னோட வருவன்னு பார்த்தா ஆட்டோ வரச் சொல்லியிருக்க. அங்கிள் நான் வேலை செய்யுற கம்பெனின்னு தெரியும்ல. அப்புறம் ஏன் வந்தீங்க?” என்று சேகரையும் கேட்டான்.

“அதை உன் திருநெல்வேலிகிட்ட கேட்டுக்க. வரச்சொல்லி, வரலன்னா யாரு உன் ஒய்ஃப்கிட்ட மாட்டிட்டு அவஸ்தைப்படுறது.”

சரண், ஆராதனாவையே பார்க்க, “இப்படிப் பார்த்தா நாங்க மயங்கிடுவோமா! அங்கிள் ஸ்டார்ட் பண்ணுங்க” என்று சொல்லி, கணவனைப் பார்த்து புருவம் தூக்கி, ‘எப்புடி’ என்பது போல் பார்த்துக் கிளம்பினாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பழி வாங்குறாங்களாமாம்” என்றபடி சிரித்தான்.

அப்பொழுது வெளியே வந்த சக்தியும், ஷோபியும், “என்ன சார் தெரிஞ்சவங்களா?” என்று கேட்க,

“ம்... ரொம்பத் தெரிஞ்சவங்க” என்று சிரித்தபடி காரில் ஏறிச் சென்றான்.

“என்ன சக்தி லெட்டர்லாம் வைக்கிறாருன்னு சொல்ற? உன்னைக் கண்டுக்கிட்டது மாதிரியே தெரியலையே. எதுக்கும் பாருடி. வேற யாராவது இருக்கப் போறாங்க” என்று அக்கறையுடன் சொன்னாள் நல்ல தோழியாய்.

“அப்படில்லாம் இருக்காது ஷோபி. இத்தனை நாள்ல இன்னைக்கு சிரிச்சாவது பேசிருக்காரே. வா போகலாம்” என்றதும் கிளம்பினார்கள்.

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் கணவனை கால்வாருதல், கலாய்த்தல் என்று அவளின் வேலையைச் செய்ய, சரண் அதை ரசிப்பதையே தன் பொழுது போக்காக மாற்றிக் கொண்டான்.

வேதவல்லியின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்த பொழுது தான் ஆராதனா ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தாள். அது சக்தி! அவளின் பார்வை தன் கணவன் மேல் படிவதையும், அடிக்கடி அவன் அறை அருகில் சென்று, அவனறியாமல் அவனைப் பார்ப்பதையும் கவனித்தாள்.

‘பார்றா! நம்மாளுக்கு நிறைய கேர்ள்ஸ் ஃபேன்ஸ் இருக்காங்க போலிருக்கே. பெரிய ஆளுதான் மேனேஜர் சார் நீங்க. உங்க மேல நிறைய கம்ப்ளைண்ட்ஸ் வேற. எல்லா பொண்ணுங்களையும் அக்கா, தங்கைன்னு கூப்பிட்டு அரள வைக்கிறீங்களாம். என்கிட்ட மட்டும் எப்படி சார் கவுந்தீங்க? இந்த சக்தி வேற நல்லா கலரா பார்க்க லுக்கா இருக்கா. அவளை ஏன் உங்களுக்குப் பிடிக்கல?”

“லூசு ஆரா! உன் ஹஸ்பண்ட் அவளை லவ் பண்ணியிருக்கணும்னு எதிர்பார்க்குறியா? எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கிறதில்லை. உனக்கு சரணைப் பிடிச்சிருக்கு. அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. கல்யாணமும் ஆகிருச்சி. அப்புறம் என்ன நினைப்பு இது. ஒழுங்கா அந்தப் பொண்ணை திருத்துற வழியைப் பாரு” என்று மனசாட்சி சொல்ல, தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

ஒருநாள் சரணையே பார்த்துக் கொண்டிருந்த சக்தியிடம் வந்தவள். “என்ன சக்தி லவ்வா?” என்றதும், அவள் வந்ததைக் கவனிக்காத சக்தி அதிர்ச்சியில், “ஆ... இல்.. ஆமா ஆராதனா” திணறியபடியே சொன்னவள், “உங்களுக்கு எப்படி?” என்றாள்.

“அதான் இந்த ரூம் தாண்டி உங்க பார்வை எங்கேயும் போக மாட்டேன்னுதே. ஒன் சைடா?”

“என்ன? எனக்குப் புரியலை?”

“இல்ல ஒன் சைட் லவ்வான்னு கேட்டேன்?”

“இல்ல டூ சைட்தான்.”

இப்பொழுது ஆராதனா அதிர்ந்தாள். ‘இல்ல அப்படிலாம் இருக்காது. இந்தப் பொண்ணு ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கா’போல. என்னடா ஆராவுக்கு வந்த சோதனை?’ என்று தன்னையே நொந்து என்று, “எப்ப? எப்படி ஆரம்பித்தது?” என்று விளக்கம் கேட்டாள்.

“அதை நீங்க ஏன் கேட்குறீங்க?”

“இப்படியே தூரத்துல இருந்து எத்தனை நாள் பார்த்துட்டு இருப்பீங்க. என்னால முடிஞ்ச எதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு தான்.”

சக்தி தன் காதல் கதையை ஆராதனாவிடம் சொல்ல, ஹையோ!”’ என்று தலையிலடித்துக் கொள்ளலாம் என்றிருந்தது அவளுக்கு. அந்த பூ விஷயம் சொல்லும் போது அப்படியே அவளை அறைய வேண்டும் போலிருந்தது. சக்தி சொன்னது இதுதான். ‘ஒரு நாள் மேனேஜர் சிவகுமார் சார் பக்கத்துல இருக்கும் போதே பூ வச்சிட்டுப் போனார்’ என்றதும் ஆராவிற்குப் புரிந்தது. இது அந்த சிவகுமாரின் வேலை என்று.

சக்தியிடம் திரும்பி, “கொஞ்சம் பொறுமையா இருங்க. எனக்குத் தெரிஞ்சி நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களோனு தோணுது. இது என் கருத்துதான்” என்றாள்.

“ஷோபி கூட இதேதான் சொன்னா.”

“எதுக்கும் உங்க கனவுகளை கட்டுக்குள்ள வையுங்க. எந்த முடிவா இருந்தாலும் பாசிட்டிவா ஏத்துக்கணும். மனம் தளரக் கூடாது” என்று அவளை யோசிக்க விட்டு நகர்ந்தாள்.

சக்திக்குமே அவளின் இத்தனை நாள் அவன் பின் சுத்தியதற்கு பெயர் காதல் தானா? இல்லை சலனமா? என்று குழம்ப ஆரம்பித்தாள். உண்மையான காதலாக இருந்திருந்தால், இந்த குழப்பத்திற்கு அங்கு என்ன வேலை. சக்தியின் குழப்பமே அது காதல் இல்லை என்றானது.

வேதவல்லியின் திருமணம் திருநெல்வேலியிலும், வரவேற்பு சென்னையிலும் வைப்பதால், சரணால் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.

“என்னால வர முடியாது. ரிசப்ஷன் புல்லா அட்டெண்ட் செய்வேன்” என்று அவர்களிடம் சொல்ல அவனின் சூழ்நிலை தெரிந்ததால் சம்மதித்தார்கள்.

வேதவல்லியின் திருமணம் பெரியவர்களின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஊரிலேயே திருமணம் வைத்ததால், ஆராதனாவின் வீட்டினர் வரவேற்புக்கு வரவில்லை என்றதும், அனைவரிடமும் சொல்லி தோழியுடனே சென்னை வந்தாள்.


முகிலன் அழைத்ததால் சரண் வீட்டிலும், வேதவல்லி அழைத்ததால் ராணியும் வரவேற்புக்குக் கிளம்பினார்கள். தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு வேதவல்லி திருமணத்திற்கு முன்னரே பத்திரிக்கை வைத்திருந்தாள்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அலுவலகத்தில் இருந்து வருபவர்களை சரணும், ஆராதனாவும் வரவேற்றுக் கொண்டிருக்க, தான் வாங்கிக் கொடுத்த புடவையில், அதற்கேற்ப அலங்காரத்துடன், முகம் முழுக்க சந்தோஷத்துடன், தன்னருகே நின்றிருந்தவளை ரசித்தபடியே வரவேற்றுக் கொண்டிருந்தான் சரண்.

இருவரையும் ஒருசேரப் பார்த்த தெரியாதவர்கள், “செம ஜோடி” என்று சொல்ல, தெரிந்தவர்கள் ‘ரெண்டு பேருக்கும் செம பொருத்தம்’ என்று மனதினுள் நினைத்தததை வெளியில் சொல்லாமல் சென்றனர்.

வெற்றி, ராணி, அபிநயா, ராஜா நால்வரும் வர அறிமுகப்படுத்த மனைவியைத் தேட அவள் உள்ளே சென்றிருந்தாள். வந்தவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று வேதவல்லிக்கு அறிமுகப்படுத்தினான். பின் “எங்கமா உன் ப்ரண்ட்?” என்று கேட்க,

“இதோ வந்துட்டேங்க” என்று மேடை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஆராதனா.

அவளைப் பார்த்த வெற்றிவேல் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் பட அபிநயாவிற்கும் ஆச்சர்யம்.

இவர்களின் ஆச்சர்ய அதிர்ச்சியில் ஆராதனா, சரண் கூப்பிட்டதும் ‘இதோ வந்துட்டேங்க’ என்று உரிமையாக சொன்னதைக் கவனிக்கவில்லை.

ஆனால், ராஜா கவனித்திருந்தான் யாரிடமும் சொல்லவில்லை. ராஜாவிற்கு அவளை அங்கு பார்த்தது ஆச்சர்யமே. அதுவும் அவர்கள் விடுதியில் இருக்கிறாள் என்பது புதுச் செய்தி ராஜாவுக்கு.

ராணியோ, “வாம்மா ஆராதனா. பொண்ணு அவளா, நீயான்ற அளவுக்கு சூப்பரா இருக்க” என்று சொல்ல சங்கோஜப்பட்டவளை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

வெற்றிவேலுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டும், சில சந்தேகம் ஆராவிடம் கேட்டு தெளிவு பண்ண வேண்டும் என நினைத்தவர் ராணியின் விடுதியில் இருப்பது தெரிந்ததால், பின்னர் விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

அபிநயாவை உட்கார வைத்து வரவேற்க கிளம்பினான் சரண். அண்ணனையும், அவனுடன் நின்ற ஆராதனாவையும் பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவிற்கு அவர்களின் அந்நியோன்யம் கண்ணில் பட்டது. அருகில் வந்த ராஜா அக்காவின் பார்வை சென்ற இடத்தை பார்த்து, “ஜோடிப் பொருத்தம் சூப்பர்ல” என்றான்.

“என்னடா இப்படிச் சொல்ற?” என்ற அக்காவிடம், ‘அன்று பீச்சில் பார்த்து ப்ரீஸ் ஆனது. இப்பொழுது அவனின் அழைப்பிற்கு அவளின் பதில்’ என்று தெரிந்ததைச் சொல்ல, “கன்பார்ம் தானாடா எனக்கே அப்படித் தான்டா தோணுது” என்றாள்.

“இருக்கா இதோ வர்றேன்” என்று கிளம்பினான்.

வரவேற்றுக் கொண்டிருந்த ஆராதனா கணவனிடம், “இந்த கல்யாணம் ரிசப்ஷன் எல்லாம் சூப்பரா இருக்குல்லங்க. நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லை” என்று கண்களில் நிராசையுடன் சொன்ன மனைவியைப் பார்த்தான் சரண்.

அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் மனதில் எழுந்தது. “தனு! குட்டிமா தனியா இருக்கா பாரு. போயி கம்பெனி கொடு. நான் வர்றேன்” என்று அனுப்பினான்.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அபிநயா, ‘அப்பாவைக் காணோமே. வந்தா கிளம்பலாமே’ என்று தேட எழுந்தவள், அருகில் வந்து கொண்டிருந்தவர் மேல் விழப்போக, அதற்குள் அவர் விழுந்திருந்தார்.

அபிநயா பயந்து பின் எழ கைகொடுக்க, வேகமாக வந்த ஆராதனாவும் கைகொடுத்து எழுப்பி, “ஐம் சாரி சார்” என்றாள்.

எழுந்தவர், “நீ ஏன்மா சாரி கேட்கிற? இடிச்சது அந்தப் பொண்ணு.”

“அவங்க சார்புலதான் சார் நான் கேட்டேன்.”

அப்பொழுது அருகில் வந்த சரணுக்கு நடந்த விஷயங்கள் புரிபட, அமைதியாகத் தங்கையுடன் நின்றான்.

“அதெல்லாம் முடியாதும்மா” என்றவரிடம்,

“நீங்க யாருக்குச் சொந்தம்?”

“நான் சமையல் கான்ட்ராக்டரைப் பார்க்க வந்தேன்.”

“பார்த்தாச்சில்ல கிளம்புங்க.”

“என்ன கிளம்பணுமா? அந்தப் பொண்ணு மன்னிப்பு கேட்கவே இல்ல” என நிலையாக நின்றார்.

அண்ணனிடம் தடுக்கச் சொல்லி அபிநயா சொல்ல, “அவனுக்கு நேரம் சரியில்ல குட்டிமா. அதான் அவகிட்ட வாய் கொடுத்துட்டான். ஒரு ரௌடி இருக்கும்போது இன்னொரு ரௌடிக்கு அங்க என்ன வேலை. வேடிக்கை மட்டும் பார்” என்று சிரித்தபடி சொல்ல அவள் நினைத்தது உண்மை என்றானது.

“மன்னிப்பு கேட்கலன்னா நீங்க உயிரோட இருக்க மாட்டீங்களோ? நீ இப்ப கிளம்பல, என்கிட்ட வாங்கிக்கட்டுனவங்க இந்தக் கூட்டத்துல இருக்காங்க. வேணும்னா அவங்களைக் கேட்டுப்பார். போங்க சார்” என விரட்ட அவளை முறைத்தவனைப் பார்த்து, “போறியா இல்ல” என்று கையை ஓங்க ஓடி வந்து பிடித்தான் சரண்.

“ஏன்டி இந்த கைதூக்குற வேலையை விட மாட்டியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, அவளைத் திட்டிக் கொண்டே சென்றான் அந்த ஆசாமி.

“அண்ணா, இவங்க ரொம்ப நாள் பழக்கமா? ஏன் நிச்சயத்துக்கு கூப்பிட்டு வரல?” என கேட்டவள், ஆராதனாவிடம் திரும்பி “தேங்க்ஸ்” என்றாள்.

“தேங்க்ஸ் எதுக்கு? எனக்கு முன்னாடியே தெரியும்” என்று அவனை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவள், “உங்க நிச்சயத்தோட ஒரு பிரச்சனையா அலைஞ்சாங்கல்ல, அது என்னோட பிரச்சனை தான்” என்றாள்.

“ஓ... அது நீங்கதானா? அந்த டைம் அண்ணா நார்மலாவே இல்ல. ரொம்ப குழம்பிப்போய் இருந்தாங்க.”

“ஓ..” என்றாள் அவனைப் பார்த்தபடியே.

“நான் பேசுறது உங்களுக்குப் புரியுதா?” என்ற அபிநயாவின் கேள்விக்கு,

“புரியாமலா உங்க அண்ணன்கிட்ட கேட்ட கேள்விக்கும் நானே பதில் சொல்றேன்” எனவும் அவர்களுள் ஒரு நல்ல நட்பு உருவானது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top