• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
18


வெளியூரிலிருந்து கோயம்பேடு வரும் பேருந்துகளின் நுழைவாயிலில் இருந்து பேருந்துக்காக பொதுமக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

“இந்த இடத்துல எந்த பிரச்சனையும் இல்லாமல், அந்த அக்யூஸ்டைப் பிடிக்க முடியுமாடா கார்த்திக்?”

“ஸ்ஸ்ஸ்... ட்யூட்டி டைம்ல அதுவும் பப்ளிக் ப்ளேஸ்ல பெயர் சொல்லாத சொல்லியிருக்கேன்ல” என கடிந்தான் கார்த்திகேயன்.

“சாரிடா. பழக்கதோஷம்.”

“எந்த தோஷமும் நுழையக்கூடாது. கண்டிப்பா அவன் வருவான். எந்த கெட்டப்ல என்பதுதான் தெரியாது. அதைக் கண்டுபிடிக்கிறதுலதான் நம்மளோட திறமை இருக்கு. இந்த எழுபது வயது கெட்டப் எனக்கு ஓகேதான?

“ஹ்ம்... ஓகேடா. நீயே சொன்னாலும், உன்னை யங்மேன்னு யாரும் நம்பமாட்டாங்க. இதே மேக்கப்ல அவன் வந்தா எப்படிடா கண்டுபிடிக்கிறது?”

“அதெல்லாம் கண்டுபிடிச்சிரலாம். அவனுக்கு பலவித மேக்கப்போட்டு பல கோணத்துல எடுத்ததை, என் மனசுல அப்படியே பதிய வச்சிருக்கேன். எந்த வேஷத்தில் இருந்தாலும் என்னால அவனை கண்டுபிடிக்க முடியும்” என்றான்.

இருவரும் கோயம்பேடு பேருந்து நுழைவாயிலின் வெளிப்புறமிருந்த ஒரு ஆட்டோவில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுமாறியபடி, அங்கிருந்த வழிப்போக்கன் ஒருவனிடம், “இங்க பெங்களுர் பஸ் எங்க போய்பா ஏறணும்?” என கேட்டார்.

அவன் வழி சொல்லி அனுப்ப, “தாமு அலார்ட்டா இரு. அவன் வந்துட்டான்” என்றபடி கொஞ்சம் மெதுவாக அந்த வழிப்போக்கனிடம் சென்று, “முன்னாடி போறது எங்கண்ணன்பா. அவனுக்கு சரியா கண்ணு தெரியாது. எங்க போறேன்னு சொன்னான் சொல்லுங்க. நானே அவனை விட்டுட்டுப் போயிருறேன்” என்றதும், “ஆமா. இங்க மட்டும் இளமை ஊஞ்சலாடுது. நீங்களும் வயசானவர்தானே. இருந்தாலும் அவர் தம்பின்னு சொல்றீங்க. அவர் பெங்களுர் பஸ் எங்க இருக்குன்னு கேட்டார்” என்றான்.

அவனுக்கு நன்றியுரைத்து எண்பதைப் பின்தொடர்ந்தது எழுபது.

சற்று நேரத்திற்கெல்லாம் அவனிடம் வந்த அவந்திகா, இருவரையும் என் தாத்தா என்று சொல்லி விவரம் கேட்க, அவளுக்குப் பதிலளித்தவன், ‘இதுக்கு மேல இங்க நின்னா இவங்க ஃபேமிலியே வந்து விசாரிப்பாங்க போல. தாங்காதுடா சாமி” என்று ஓடியேவிட்டான்.

நடைபாதையில் பொதுமக்கள் அனேகம் பேரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஒன்றிரண்டு பேராக அனுப்பினர். குற்றவாளிக்குச் சந்தேகம் வந்து தப்பிவிடக்கூடாதென்று.

முன்னாடி சென்ற எண்பது வயசானவர், சுற்றிலும் திரும்பித் திரும்பி பார்த்தபடி வர, அவருக்குத் தன்னை ஏதோ கண்ணுக்குத் தெரியாத வலை சூழ்ந்திருப்பதாக தோன்றியது. ‘சே...சே அப்படிலாம் இல்லை’ என்பது போல் தலையை உலுக்கி நடக்க, அவர்களைத் தொடர்ந்து அவந்திகா சென்று கொண்டிருந்தாள்.

வைப்ரேட்டிலுள்ள அவந்தியின் போன் சத்தம் கேட்டு எடுத்தவள், ப்ளூடூத்தை காதில் சொருகி, “சொல்லு விஷ்ணு”” என்றாள் மெல்லிய குரலில்.

“அவந்தி! நீ ஏன் உள்ள போற? அவுட் ஆஃப் போகஸ் பண்ணிக்கலாம். நான் சைடுலதான் நிற்கிறேன் பாரு” என்று அவள் திரும்பி அவனைக் கண்டதும் தலையசைத்து, “அவங்க ஸ்பாட்கிட்ட நெருங்கிட்டாங்க. நீ இப்ப நான் இருக்கிற இடத்துக்கு வந்திரு” என்றான்.

“விஷ்ணு, அதான் பொதுமக்கள் ஒருசிலரா இருந்தாலும், போக வர்றதா இருக்காங்க தான? என் கணிப்பு சரின்னா, என் முன்னாடி போற ரெண்டு வயசானவங்கள்ல, முதல்ல போறவன் அக்யூஸ்ட். செகண்ட் போலீஸா இருக்கும். நான் சேஃபா அவங்களைப் பின் தொடர்றேன்.”

“அவந்தி சொன்னா புரிஞ்சிக்கோ. அங்க என்ன வேணும்னா நடக்கலாம். தள்ளி வா.”

“அவனுக்கு ஏன் விஷ்ணு பயப்படணும்? அவனென்ன அவ்வளவு பெரியவனா?” என கேள்வி கேட்டாள்.

“ஆமா. இப்ப வந்து கேளு. நீ எதுவும் பேசவேண்டாம். நான் சொல்றதை மட்டும் கேளு. அவன் இப்ப உள்ள போறதே பாம் வைக்கத்தான்.”

“ஐயோ! என்ன சொல்ற?”

“ஏய்! கத்தாத அமைதியா சொல்றதைக் கேளு. அவனுக்கு போதைக் கடத்தல்லயும் சம்பந்தமிருக்காம். அதை நோண்டுனப்பதான், சிபிஐக்கு இந்த மேட்டர் சிக்கியிருக்கு. இது ஒரு அமைப்பாம். என்னைக்குத்தான் இவனுங்க திருந்தப் போறாங்களோ தெரியல” என சலித்தவன், “பாம் வச்சிட்டு, முதல்ல போற பஸ்ல எஸ்கேப்பாகிடுறது அவன் ப்ளான். போலீஸ் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. நீ வேற நடுவுல புகுந்து சொதப்பிராத தாயே. வெளில வா” என்றான்.

அவன் சொன்ன சொதப்பல் வேலையை செவ்வனே செய்தாள் அவந்திகா.

“இல்ல விஷ்ணு நான் தள்ளியே நடக்கிறேன்” என்று குரலை இறக்கிப் பேசினாள்.

“நான் சொல்லி என்னைக்கு கேட்டுருக்க. சரி வைக்கிறேன். பார்த்துப் போ! என்னைத் தாண்டி நீ போயிட்டா, உன்னை வாட்ச் பண்றது கஷ்டம்” என்று வைத்தான்.

சரியாக இருபாதைகள் பிரியும் இடத்திற்கு முன், அந்த எண்பது வயதானவரை, முன்னால் சென்று கொண்டிருந்த இருவர் திரும்பி மடகினர். அதே சமயம் மற்ற புறங்களில் இருந்தும் நிறைய பேர் சுற்றி வளைக்க, பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தன் சூழ்நிலை புரிந்து, ஓட யத்தனியத்த எண்பதை, எழுபது தடுத்தது, தன் தடிமுனையில் வைத்திருந்த துப்பாக்கியால்.

பின்னால் வந்த அவந்திகா எழுபது வயது நாராயணனை நோக்கி ஓடிவர, அவளையும் போலீஸ் என நினைத்தான் அந்த எண்பது வயது குற்றவாளி.

யாரோ ஒருவர் விட்டுச் சென்றிருந்த குழந்தை, நாராயணன் பின்னால் நின்றிருந்தது. அதைப் பார்த்த அவந்திகா, குழந்தைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாதென்றே, குழந்தையை நோக்கி வந்தாள்.

சுற்றிலும் போலீஸ் துப்பாக்கியும் கையுமாக நிற்க, குற்றவாளியோ நிலைமையின் தீவரம் உணர்ந்ததுமே, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து மற்றவர்களை மிரட்டி நகரச் சொன்னான். அதே நேரம் குழந்தையைப் பார்த்து பதறியபடி ஓடிவந்த அவந்திகாவைப் பார்த்ததும், ‘பயமில்லாதவளா இந்த போலீஸ்காரி’ என சற்றே ஆச்சர்யப்பட்டு, “என்னைப் பிடிக்கப் பொம்பள புள்ளைய கூட்டிட்டு வந்திருக்கீங்களேடா. பொட்டப்பசங்களா” என்று எகத்தாளமாக பேசிநான்.

மற்றவர்கள் அவன் என்ன பேசுகிறான் என உணருமுன், அவந்திகாவை நோக்கிச்சுட, இதை அறியாதவள் குழந்தையைத் தூக்குவதற்குக் குனிய, குண்டு திசைமாறியது. அது சைலன்ஸர் துப்பாக்கியாதலால், துப்பாக்கி சத்தம் அவள் காதில் விழவில்லை. விழுந்திருந்தால், ஒருவேளை சுதாரித்திருப்பாளோ என்னவோ!

பின்னால் வந்தவளை அறியாததால், தன்னைத்தான் சுட்டான் என்பதில் சுதாரித்த நாராயணன், அவன் காலில் சுட, தங்கள் அமைப்பை எண்ணி மனம் தளராமல் நின்றவன், நாராயணனைக் குறிவைத்ததும் உஷாராகி கீழே குனிந்தான்.

அதேநேரம் இடதுபக்க தோளில், குழந்தையை தூக்கியபடி, அவந்திகா எழுந்து நிற்க, அந்தக் குண்டு அவளின் வலதுபக்க மார்பிற்கு மேல் பாய்ந்து துளைத்தது.

“அம்மாஆஆஆ...” என்ற அலறல் சத்தம் பின்னால் கேட்க, பெண்ணின் குரலில் பதறிய நாராயணன் குற்றவாளி அசந்த சமயம் நெற்றியில் குறிவைத்து சுட, அவன் அந்த இடத்திலேயே உயிரை விட்டான்.

அவன் இறந்ததை உறுதிப்படுத்தி சத்தம் வந்த திசையில் திரும்ப, குழந்தையை மெல்ல கையிலிருந்து இறக்கியபடி, கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள் அவந்திகா. அதை அவள் கண் சொருகலில் கண்டவன், ஓடிச்சென்று தாங்கிப் பிடித்துக் கையில் ஏந்தியதில், பொய் தாடி உருவ, அவனின் நாடியில் உள்ள தழும்பு அவள் கண்களில் பட்டது. அவனைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது அவன் ஒரு இளைஞன் என்று. அவன் கண்களின் தீவிர பாவனை, ‘ஐயோ!’ என்று பரிதாபமாக மாறி, பின் பார்வையை நேர்படுத்தியதையும் பார்த்தபடி மயங்கினாள்.

“எல்லாரும் என்ன பண்ணிட்டிருந்தீங்க? குழந்தையோட வர்ற குடும்பத்தை, உள்ளே அலோ பண்ணக்கூடாது சொல்லியிருந்தேன்ல? பின்னாடியே ஒரு பொண்ணும் வந்திருக்கா. இது தெரியாம அவனை ரௌண்டப் பண்ணியிருக்கீங்க? எப்படி இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்தீங்க தெரியல? இனி கேஸ் அது இதுன்னு என் தலைதான் உருளும்” என தன் கீழ் இருந்தவர்களை சத்தமிட்டு, மற்றவர்களின் தலைகுனிதலில் எரிச்சலானவன், “இவன்கிட்ட எதாவது தடயம் இருக்குதான்னு பாருங்க” என்று ஆணையிட்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
பின் அவளைத் தூக்கி அங்கிருந்த அவசர ஊர்திக்குக் கொண்டு செல்லும் பொழுதுதான் கவனித்தான், அவளின் சுடிதார் டாப் தூக்கியிருந்ததை. அவளது வயிறு மற்றும் இடுப்பின் எலுமிச்சம் பழகலர் அவனது கண்களுக்கு விருந்தாகி, அங்கிருந்த சின்ன மச்சம் என்னைப்பார் ரசி என்றது. சில வினாடிகளேனும் அவனின் நிலையையும் மீறி ரசித்தவன், தன்னைத் தானே மானசீகமாக தலையில் அடித்து, அவசர ஊர்தியில் படுக்கவைத்து அடுத்தவர் பார்க்குமுன் ஆடையை சரிசெய்தான்.

‘சே... எந்த நேரத்துல, அதுவும் ஒரு பொண்ணோட இடுப்பை, சே... ரொம்ப மோசமாகிட்டடா கார்த்திக். அதுவும் சாகக்கிடக்கிற பொண்ணோட இடுப்பை ரசிக்கிற அளவிற்கா? நீ எல்லாம் மனுசனே இல்ல. மனிதாபிமானம் இருக்கிற இடத்தில், இந்த சாக்கடை புத்தி எங்க இருந்து வந்தது? நீ இப்படின்னு உன் அம்மாவுக்குத் தெரிஞ்சது..’ என தன்னையே நொந்தான்.

இடையைப் பார்த்தவனால், அவளின் முகத்தைக் காண இயலவில்லை. முகமெல்லாம் துப்பட்டாவினால் மறைத்திருந்தாள் ஸ்கூட்டியில் வந்ததால்.

அவந்திகாவை, நாராயணன் கையில் பார்த்த விஷ்ணு, அருகில் வருவதற்குள் வண்டி கிளம்பிவிட அதனைப் பின் தொடர்ந்து சென்றான்.

நேராக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து அது சம்பந்தப்பட்ட வேலையை முடிக்கவும், மேலதிகாரியின் அழைப்பில் ‘ஹ்ம்... இந்தப் பொண்ணால இதைவேற சமாளிக்கணுமே’ என்றெண்ணி அவருக்குப் பதில் சொல்லும் இடத்தில் தான் இருப்பதால், பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்து வேகமாகக் கிளம்பினான்.

அதே நேரம் விஷ்ணு மருத்துவமனை வர, விவரமறிந்து சுந்தரேசனுக்கு போன் செய்தவன் அவர் வந்ததும், மற்றதை அவர்கள் பார்த்தார்கள்.

தன் மேலதிகாரி முன் நின்றிருந்தவனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக்கொண்டிருந்தார் அந்த உயரதிகாரி. “கிடைச்ச ஒருத்தனையும் சுட்டு கொன்னுட்டு வந்துட்டியே. இவனைக் கண்டுபிடிக்க எத்தனை நாள் சாப்பிடாம, தூங்காம முழிச்சிட்டு இருந்திருக்கோம். கிடைச்ச வாய்ப்பை இல்லாமலேயே பண்ணிட்டு வந்துட்டியே?”

“சார்! அந்தப் பொண்ணு, குழந்தையைக் காப்பாத்துறேன்னு குறுக்க வராம இருந்திருந்தா, பிடிச்சிருக்கலாம்னு சொல்லி சமாளிக்க என்னால முடியும். ஆனா, எங்க கவனக்குறைவுலதான் அந்த குழந்தையே அங்க வந்தது. ஸோ, என்னோட டீமால நடந்தத் தப்பை நானே சரிபண்றேன். போதை மருந்தோட, அந்த அமைப்பையும் சேர்த்தே கூண்டோட மடக்கிக் காட்டுறேன். இது ப்ராமிஸ்” என நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான்.

“கிழிச்ச. கையில கிடைச்சவனை விட்டுட்டு க்ரூப்போட பிடிக்கப் போறானாம் இடியட்” என்றார் அவர்.

“சார் ஒரு சந்தர்ப்பம் போதும். நான் முடிக்கிறேன்” என்றவனை, ஒரு மாதிரியாகப் பார்த்து, “சந்தர்ப்பமா? சாவகாசமா விட்லபோயி உட்காரு மேன். யூ ஆர் சஸ்பெண்ட்” என்றார்.

“சார்” என முதலில் அதிர்ந்தவன் பின் சிரித்து உங்க, “சஸ்பென்ஷனுக்கு தேங்க்யூ சார்” என்றான் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்து. ‘இந்த சஸ்பெண்ட் முடியுறதுக்குள்ள அவங்கள்ல ஒரு க்ரூப்பையாவது கூண்டோட பிடிக்கிறேன்’ என மனதில் நினைத்தான்.

“நீ சொல்ற தேங்க்யூகு அர்த்தம் தெரியுது மேன். யூ கன்டினியூ.”

“வேலையையா சார்” என்றான் கிண்டலாய்.

‘ம்...’ என முறைத்து, “சஸ்பெண்ட் ஆர்டரைச் சொன்னேன் மேன்.”

“ஓகே சார்” என்று அவருக்கு பெரிய சல்யூட் வைத்து, நேரே மருத்துவமனை சென்றவன், மருத்துவரைப் பார்த்து அந்த பெண்ணின் நிலையை விசாரித்தான். அவர் சொன்ன நேர்மறையான பதிலில் முகம் மலர்ந்தவன், அடுத்து அவர் சொன்ன, “அந்தப் பொண்ணு மீடியாவைச் சேர்ந்த அவந்திகா அழகப்பன்” என்றதில் அதிர்ந்தே போனான்.

“என்ன டாக்டர் சொல்றீங்க? அந்தப்பொண்ணு அவந்திகாவா?” என்றவன் ஒரு வினாடி நேரம்கூட அந்த இடத்தில் நில்லாது, வேகமாக ஐசியூ சென்றான்.

யாரும் அறியாமல் வெளியில் இருந்து அவளைக்கண்டு “அவந்திகா” என அவளின் பெயரை உச்சரித்தான் வாய்விட்டு. முகத்தில் சுவாசத்திற்காக வைத்திருந்த, ட்யூப்கள் அனைத்தும் முக்கால்வாசி முகம் மறைத்திருந்ததால், அவளைத் தெளிவாக்க காண முடியவில்லை கார்த்திக்கினால். அவளின் நிலைகண்டு மனதிற்குள் உடைந்தவன் வீட்டிற்கு வந்து தாயின் மடியில் படுத்து நடந்ததைச் சொன்னான்.

அவன் வெளியிடாத அதிர்ச்சியை, அவர் முகத்தில் காண்பித்து, அவள் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தார்.

சற்று நேரம் கழித்து எழுந்தவன், “அம்மா எனக்கு அவந்திகா வேணும். என்னோட முக்கியமான ரெண்டு வேலையை முடிச்சதும், என் சார்பா பொண்ணு கேட்குறீங்க” என்று தாயிடம் சொல்லி பதிலை எதிர்பாராது சென்றான்.

அதன்பின் அவனது வேலைகள் அனைத்தும் வடக்கே அமைய, முதலில் பாம் வைத்த குழுவைச் சுற்றி வளைத்துப் பிடிக்க, அது தினமீனிலும் வந்தது. சந்திரகுமாரின் அரசியல் (அரசியலில் நிரந்தர வெற்றியென்று யாருக்கும் கிடையாதே) தோல்விக்குப் பின், புவனா கன்ஸ்ட்ரக்ஷனை சந்திரனும், சந்தோஷும் மேலும் விரிவுபடுத்த, கடந்த மூன்று வருடங்களாக குடும்பமே வடக்கே தங்கிவிட்டது.



சி.என் போதை மருந்து கும்பலைப் பிடிக்க, மூன்று வருடங்களுக்கு முன் சுத்த ஆரம்பித்தவன், எட்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வந்தான். ஆறு மாதங்களுக்கு முன்னர், கௌஷிக்கின் மேலுள்ள சந்தேகம் வலுப்பெற, அவன்மூலம் அனைவரையும் கைது செய்தபின், அவந்திகாவைச் சந்திக்க எண்ணியிருந்தான். அதன்பொருட்டு சி.என்னாகவே தினம் ஒரு கவிதை என்று அவளுக்கு அனுப்பி, அன்புத்தொல்லையை ஆரம்பித்து வைத்தான். காடுகளில் சுத்தினாலும், தினமும் தபாலில் கவிதை சேர்வதுபோல் தயார் செய்து வைத்திருந்தான்.

அவந்திகாவை மூடியிருந்த முகத்துடன் முதல்நாள் பழ குடோனில் பார்த்தபொழுது, ஏதோ ஒன்று அவளின்பால் இழுத்தது. அதை ஏதோ வயசுக்கோளாறு என்றெண்ணியவன், அடுத்த வாரம் அவளே வந்து தரிசனம் கொடுத்ததோடு அல்லாமல், திருமணம் செய்யக்கேட்டதும் கால் தரையில் பரவவில்லை. மூன்றாண்டுகளாக மனதினுள் வாழ்பவளாயிற்றே. பேப்பர் படித்த பொழுதுதான், ‘அந்தப்பெண் அவந்திகாவா?’ என்ற யோசனையிலிருக்க, அவளே வந்து அப்படிக் கேட்டதும், சம்மதித்தது மட்டுமல்லாமல், தாய்க்கு அழைத்து இரு தினங்களுக்குள் சென்னைக்கு வரச்சொல்லிவிட்டான்.

அவரும் சம்மதித்தவர் அவசரமாக மருத்துவ விடுப்பு எடுத்து தங்களது வீட்டிற்கு வர, அங்கேயிருந்த விருந்தினர் அறையில் தங்கினார்கள். அதன்பின்னரே அவந்திகாவின் வருகை நடந்தது.

சிறுவாபுரியில் இன்ஸ்பெக்டர் பரத்திற்கு வலைவிரிக்க, அங்கே அவந்திகாவைக் காணவும், ‘நான்தான் சி.என்னு சொல்லிரலாமா?’ என்ற ஆவலில் பேச வந்தவனுக்கு, அப்பொழுதுதான் பரத் வழக்கு அவந்திகா மூலம் வெளிவந்தது நினைவு வந்தது.

அதையே அவளும் சொல்ல, அவளிற்கும் பாதுகாப்பு தேவை என்று உணர்ந்தவன், அவளறியாமல் இருவரை அனுப்பினான். விஷ்ணு காவலர்கள் உதவியை நாடிய பொழுது, அவர்கள் அலட்சியமாக இருந்ததற்கு காரணம் அங்கு சிபிஐ சுற்றி வளைத்திருந்ததால் தான். அவந்திகா அனுப்பிய மெசேஜைப் படித்த கார்த்திக் அதிர்ந்து, அவளைத் தன்னுடன் வைத்துக் கொள்ளவே உள்ளே அழைத்தான். அதற்குள் பரத் முந்திவிட, அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும், இதயத்தை பிழிந்தெடுத்தாற்போல், உயிர்வலியை அனுபவித்தான் கார்த்திக்.

இரண்டாவது முறையாக, வழியும் இரத்தக் கறையுடன் தன்னைக் கண்டதும் முகம் மலர்ந்தவளைக் காண, தான் முன்னரே உஷாராக இருந்திருக்காமல் போனோமே என்று கலங்கினான். அதேநேரம் அவனின் அழகி தன்னை திருமணம் செய்ய கேட்டதும், இனிமேல் அவளைப் பிரிய முடியாதென்றே தாலியைக் கட்டினான். அவந்திகாவை மருத்துவமனையில் சேர்த்து, ஆபத்து இல்லை என்றதும் நேரே சென்ற இடம்காவல் நிலையம். பரத்தை தன் ஆத்திரம் தீருமட்டும் அடித்து, ஏற்கனவே உள்ள கொலையுடன், அவந்திகாவை திட்டமிட்டு கொலை செய்ய பார்த்ததையும் சேர்த்து, அவனிடம் போதைப்பொருள் எடுத்ததாக நிரூபித்து வழக்கு மேல் வழக்கு போட்டு வெளியே வரமுடியாதளவிற்கு சிக்கவைத்த பின்பே நிம்மதியானான்.

அடுத்து சொத்திற்காக தன் மனைவியின் தாலியை அறுத்ததைக் கேள்விப்பட்டதும், கௌஷிக்கையும் இனிமேல் விட்டுவைக்க கூடாதென்று முழுமூச்சாக இறங்க, நடுவில் தாயிடமும், தம்பியிடமும் அவந்திகா சம்பந்தப்பட்ட ஒருசில பொறுப்புகள் கொடுத்தான்.

குற்றவாளி ஒருத்தர் மற்றவரிடம் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல், வலைவிரித்து ஒரே நேரத்தில் அனைவரையும் பிடித்தான். பின் அவந்திகாவிடம் சொன்னது போல், முகூர்த்த நேரத்திற்கு தன் உண்மை அடையாளத்துடன் வந்து சேர்ந்தான்.

நடப்புகள் முடிய வீடும் வந்து சேர்ந்தார்கள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top