• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
18


“அம்மா சீக்கிரம் வாங்க” என கத்திய கிருபாவின் அலறலில்... “என்னடா சத்தம் ஓவராயிருக்கு? காலேஜ் போயிட்டு வந்தா முகம் கைகால் கழுவிட்டு வரச் சொல்லியிருக்கேன்ல.”

“அதெல்லாம் அப்புறமா பார்க்கலாம். நான் அவசரமா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்மா.”

“எதுவாயிருந்தாலும் ஐந்து நிமிஷத்திற்குள்ள யாரும் ஓடிப்போகப் போறதில்ல. முதல்ல முகம் கைகால் கழுவி, ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.”

“இதோ பைவ் மினிட்ஸ்” என்றவன், சீக்கிரத்திலேயே வந்து தாயிடம் ஒரு போட்டோவைக் கையில் கொடுத்து, “இவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்மா. அதுக்கு உங்க சம்மதம் வேணும்” என்றான்.

“என்னடா இப்படி சொல்ற? ஆமா யார் இந்த பொண்ணு?”

“முதல்ல எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்கம்மா?”

“ம்... அழகா சூப்பராயிருக்கா. உன்னை விட பெரிய பொண்ணா தெரியுதேடா” என்றார் மகன் எதோ தன்னிடம் விளையாடுகிறான் என்று தன்மையாகவே.

“பெரிய பொண்ணா இருந்தா என்னம்மா? நான் கூட்டிட்டு வர்றதா முடிவு பண்ணிட்டேன்” என்று சீரியஸாகவே சொல்லும்போது சிவராமன் உள்ளே நுழைந்தார்.

“வந்துட்டீங்களா. உங்க பையன் எதோ ஒரு பொண்ணு போட்டோவைக் காண்பிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்னு சொல்றான். என்னன்னு கேளுங்க?” என்று கணவரிடம் பஞ்சாயத்து வைத்தார்.

“யார்டா அது? உனக்கு என்ன வயசுன்னு நினைவிருக்கா. இப்பவே பொண்ணு போட்டோவோட சுத்துற. அந்தளவுக்கா உன்னை வளர்த்திருக்கோம். பொறுப்பானவன்னு நினைச்சா, இது படிக்கிற வயசுடா. படிச்சி நல்ல வேலைக்கு போய் ஸ்டெடியாகுறதை விட்டுட்டு, பொண்ணு போட்டோவோட சுத்துறியா?” என்றார் பொறுப்பான தந்தையாக.

“அதுவும் இவனோட பெரிய பொண்ணுங்க. இருபத்திரெண்டு வயசிருக்கும்னு நினைக்கிறேன்” என்று ரோகிணி புலம்ப...

“இல்லம்மா. இருபத்தைந்து வயசு. வேலைக்கு போறாங்க” என்று முடிப்பதற்குள், கன்னத்தில் கை வைத்திருக்க... ஓங்கி அடித்திருந்த தாயிடம்... “ஏன்மா அடிச்சிங்க? எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கு. நான் அவங்களை இங்க கூப்பிட்டு வரத்தான் செய்வேன்” என்றான் வீம்பாக.

அடுத்தடுத்த அடிகளாக சிவராமன் அவனை அடித்துத் துவைக்க, “அப்பா எதுக்கு என்னை அடிக்கிறீங்க? இப்படி வயசுப்பையனை அடிக்காதீங்க சொல்லிட்டேன். இது என் லைஃப். எனக்கு பிடிச்சதைச் செய்றேன். அதுல தலையிடாதீங்க?”

அவனின் திமிர் பேச்சில், “ராஸ்கல்.. யாருன்னு சொல்லு அவளையே கேட்கிறேன். ஐந்து வயசுச் சின்னப்பையனோட என்ன பழக்கம்னு.”

“நோ அதெல்லாம் முடியாது. அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்றது எனக்குப் பிடிக்கலை.”

“முதல்ல வீட்டைவிட்டு வெளியில போடா. உன்னை மாதிரி ஒரு பிள்ளை எனக்கு வேண்டாம். இப்படி ஒரு பிள்ளை பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன்” என்று அழுதவர், “உன்னை பொறுப்பானவனா வளர்த்திருக்கிறேன். இவன் என் பிள்ளைன்னு எத்தனை பேர்கிட்ட சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டிருப்பேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா” என்ற தாயை வலியுடன் பார்த்தான். இது தன் தந்தையின் தவறென்று தெரிந்தால் என்ன செய்வார் என்றெண்ணி.

“அம்மா என்னையா வெளில போகச் சொன்னீங்க. அவங்களைப் பார்த்துமா உங்களுக்கு பிடிக்காமல் போச்சி” என்று குனிந்து போட்டோவை எடுத்து, “நீங்களாவது ஒருமுறை பாருங்கப்பா. பார்த்தா கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

அதை தட்டிவிட்ட சிவராமன், “எவ்வளவு பெரிய ரதியா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வேண்டாம்” என்றவர் கண்கள் தன்முன்னே விழுந்து கிடந்த போட்டோவைக் காண, சந்தேகத்தில் கண்ணைக் கசக்கியபடி பார்த்தவர் உதடுகள் அதிர்ச்சியில் “ஹரிப்ரியா” என்று முணுமுணுத்தது.

மகனோ தந்தையின் அதிர்ச்சியை சற்று குரூரத்துடன் பார்த்திருக்க, போட்டோவை கையிலெடுத்தவர், “இந்த பொண்ணையாடா சொன்ன? சொல்லுடா இவளா நீ சொன்ன பொண்ணு?”

“இந்த பொண்ணைத் தான்ங்க சொன்னான்.”

“இல்ல இது தப்பு” என்றார் குரல் நடுங்க.

“எதுப்பா தப்பு? அவங்களுக்கு அப்பா, அம்மா கிடையாது. ஒரு பாட்டி மட்டும்தான். பேசுறதுக்கு ரொம்ப ஸ்வீட். ஸோ பிடிச்சிருந்தது. அதான் அம்மாகிட்ட கேட்டேன்” என்றான் அசால்ட்டாக அவர் மனம் வலிக்க வேண்டுமென்றே.

“இல்ல நீ தப்பு பண்ற. அந்தப் பொண்ணை உனக்கெப்படி தெரியும்?” எனும்போதே முகமெல்லாம் வியர்த்தது.

“அதுவா அவங்க வேலை செய்யுற பேங்குக்கு ஒரு டைம் போயிருந்தேன். அப்ப பழக்கமாச்சி.”

“நீ பொய் சொல்ற. அவ நல்ல பொண்ணு. அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை கூட பார்த்துட்டேன்.”

“இந்த பொண்ணை உங்களுக்குத் தெரியுமாங்க? நீங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தீங்களா? இதென்ன புதுக்கதை? அவளுக்கு நீங்க ஏன் மாப்பிள்ளை பார்க்கணும்?” ரோகிணி கணவனை கேள்விகளால் குடைய...

“ப்ச்... அம்மா அப்பா கதையை விடுங்க. நீங்க சம்மதம்னு சொல்லுங்க நான் அழைச்சிட்டு வர்றேன். அவங்களை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான்.

இவர்களின் வாக்குவாதத்தில் அவன் அந்தப்பெண்ணை வாங்க போங்க என்பதை கவனிக்க மறந்திருந்தனரா, இல்லை அது வித்தியாசமாக படவில்லையா தெரியவில்லை.

“இல்ல ரோகிணி வேண்டாம். இவன் அவளை கூட்டிட்டு வரக்கூடாது.”

“நானும் கூட்டிட்டு வாடான்னு சொல்லலையே. ஆமா ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது?”

“அது ஒண்ணுமில்லை. நீ..நீ ஒத்துக்காத” என்று பதட்டத்துடன் சொன்னார்.

அவரைக் கேள்வியாய் பார்த்த ரோகிணி, “ஏன்? அவளை நீங்க கூட்டிட்டு வரப்போறீங்களா?” என ஒரு மாதிரிக் குரலில் வினவ...

“ரோகிணீஈஈ..” என்று மனைவியின் கன்னத்தில் பளார் என்று வைக்க... தாயின் இந்த வார்த்தையை எதிர்பார்த்திராத கிரி தந்தையின் அடியில் ‘அப்பா’ என்றலற போனவன் அதை மனதோடு நிறுத்தி, கழகத்திற்கு பின் வழி பிறக்குமென்ற நம்பிக்கையில் அமைதியானான்.

“அடிங்க ஏன் நிறுத்திட்டீங்க? ஒரு பொண்ணுக்காக அப்பனும், மகனும் போட்டி போடுறீங்களே! அறிவில்லை உங்களுக்கு” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டார்.

“வேண்டாம் ரோகிணி. அவளைப்பற்றி அப்படில்லாம் சொல்லாத. உன் வார்த்தைக்கான அர்த்தம் தப்பாயிருக்கு. அப்புறம் நான் மனுஷனாயிருக்க மாட்டேன்.”

“ஓஹ்ஹோ.. இப்பனாப்ல இருக்குறேன்றீங்களா? அப்படி என்ன அந்த பொண்ணு ஸ்பெஷல். என்னை விட?” என்றவர் குரல் கோபத்தின் உச்சியிலிருந்தது.

“ஆமா. அவள் ஸ்பெஷல் தான். எல்லாரையும் விட. உன்னை விட. இல்ல உனக்கு முன்னாடியிருந்தே எனக்கு ஸ்பெஷல் தான்.” ரோகிணியின் குழப்ப முகம் பார்த்து... “என்ன புரியலையா? புரியாது எப்படி புரியும் நான்தான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஏன்னா அவ நான் பெத்த பொண்ணு!. ஆமா, நான் பெத்த பொண்ணு. அவளைப் போய் என்னோட சே...” என்று கண்மூடி கீழே அமர்ந்து அழுதார்.

அப்பாவின் வாய்மூலமாக வந்த உண்மையில், அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்தாற் போலிருந்த தாயைத் தட்டி “அம்மா” என்று அசைக்க...

அதிர்ச்சியிலிருந்தவர், “உங்கப்பா என்னடா சொல்றாங்க? இது அவர் பொண்ணா? எப்படிடா? அப்ப நான் யாரு? நீ யாரு?” கணவனிடம் திரும்பி, “உண்மையைச் சொல்லுங்க. இது உளறல் தான. பையனை திருத்தணும்னு தான இப்படி உங்கமேலயே பழி போட்டுக்கிட்டீங்க?” என்றார் பொறுமையாக சற்று கணவன் மேலுள்ள நம்பிக்கையுடன்.

கண்ணீர் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தவர், “நான் சொன்னது உண்மைதான். நீ எனக்கு இரண்டாவது மனைவி. என்னோட முதல் மனைவி சங்கீதாவுக்கு பிறந்தவள் தான் இந்தப்பொண்ணு. இவளுக்கு நாலு வயசிருக்கும் போதுதான் சங்கீதா இறந்துட்டா. அப்புறம் தான் உன்னைப் பார்த்து பிடிச்சதும் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.”

“நான் இரண்டாவதா? ஏன் இந்த துரோகம்? இதை ஏன் கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லல?”

“துரோகம்னு பெரிய வார்த்தை சொல்லாதமா. ஒருத்தி இருக்கும்போதே இன்னொருத்தியோட வாழ்றதுக்குப் பெயர்தான் துரோகம்” என்றார் சிவராமன்.
“ஓ... துரோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா. சரி அதை விடுங்க. இந்தப் பொண்ணு இத்தனை வருஷம் எங்கிருந்தா. இப்ப எப்படி கிடைச்சா? ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்களா? இது தெரியாம உங்களை ராமன்னு உயர்வா நினைச்சிட்டிருந்திருக்கேனே! என் புத்தியை என்ன பண்ணலாம்.”

“அம்மா ப்ளீஸ். உங்க புருஷன் பண்ணின தப்புக்கு அக்காவை ஏன் பேசுறீங்க? அவங்க நல்லவங்கம்மா. அவங்களுக்கு அப்பான்னு ஒருத்தர் உயிரோட இருக்காரா இல்லையான்றதே இப்ப வரைக்கும் தெரியாது.”

“அக்காவா! என்னடா நீ இவ்வளவு நேரம் பேசியதென்ன? இப்ப அக்கான்ற?”

“அம்மா தயவு செய்து கொஞ்சம் அமைதியா இங்க வந்து உட்காருங்க” என்று ஷோபாவில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து, “நான் இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்னு தான் சொன்னேன். இவங்களை லவ் பண்றதாகவோ, கல்யாணம் பண்ணப் போறதாகவோ சொல்லவே இல்லையேம்மா.”

“கிரி” என்ற தாயின் மலர்ந்த முகம் பார்த்தவன்...

“கிரிதான்ம்மா உங்க பையன் எப்பவும் தப்பு பண்ணமாட்டேன். ஆனா, நீங்க இவர் பண்ணியதை வச்சி அக்காவை தப்பா நினைக்காதீங்கம்மா. அவங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சிதுன்னா நீங்களே போய் கூட்டிட்டு வருவீங்க.”

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுடா?”

ராசியின் அம்மா இறந்ததில் ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடிக்க... கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைக் கூட உணராது அமர்ந்திருந்த தாயின் கண்ணீரை துடைத்து, “இப்ப சொல்லுங்கம்மா? அக்கா மேல என்ன தப்பிருக்கு. அதுவு...”

அவனைத் தடுத்து, “நான் என் பொண்ணைப் பார்க்கணும் கூட்டிட்டுப் போறியா?” என்றார்.

“தேங்க்ஸ்மா. நீங்க இந்த முடிவுதான் எடுப்பீங்கன்னு தெரியும். ஆனா, அக்கா என்ன முடிவெடுப்பாங்க தெரியாதே. அப்பான்னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு சொல்றவங்க, அம்மாவா நீங்க போயி நின்னா ஏத்துப்பாங்களா தெரியலையே!”

“அதை நான் பார்த்துக்கறேன். வா போகலாம்.”

“இப்பவேவா. பேங்க் க்ளோஸ் பண்ணியிருப்பாங்கமா?”

“ஏன்? அவளுக்குன்னு வீடு இருக்குல்ல...” கிரி ‘ம்’ என்றதும், “அப்ப வா போகலாம்.”

“ஒரு நிமிஷம்மா. போன் பண்ணிட்டு வர்றேன்” என்று சரத்திற்கு போன் செய்து விஷயம் சொல்லி, “அக்காவை இப்பவே பார்க்கணும் சொல்றாங்க மாம்ஸ்” என...

“ரொம்ப சந்தோஷம் கிரி. கூட்டிட்டுப் போ” என்றான்.

“நீங்கதான் கொஞ்ச நாளாகட்டும்னு சொன்னீங்க?”

“ஆமா நான்தான் சொன்னேன். அப்ப சந்தர்ப்பம் சரியில்லை. இப்ப தன்னாலயே கிடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் விடணும். அதுவுமில்லாம இன்னும் காத்திருந்து என்ன செய்யப்போறோம். எப்பன்னாலும் இதை சந்திச்சித்தான ஆகணும். மாற்றம் வரும்னு நம்புவோம். தைரியமா போ நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும்” என்று போனை வைத்தான்.

தாயிடம் சென்றவன் “வாங்கம்மா போகலாம்” என்றான்.

“போன் யாருக்கு உன் அக்காவுக்கா?”

“இல்லம்மா மாமாவுக்கு. உங்க மருமகனாகப் போகிறவர்மா.” தாயின் அதிர்ந்த முகத்தைக் கண்டு, “போற வழியில எல்லாம் சொல்றேன் கிளம்புங்க” என்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கிருபா கல்லூரி விட்டு வரும்பொழுது அப்பா தன் நண்பனுடன் பேசியபடி வீட்டை நோக்கி வருவதைப் பார்த்தவன், தாயிடம் பேச்சை ஆரம்பிக்க இதுதான் தருணம் என்பதை உணர்ந்து சரியாக காய் நகர்த்தி தனக்கு சாதகமான பதிலை வென்றான். அதன்பின் தாயோ, மகனோ சிவராமன் புறம் திரும்பவே இல்லை.

வெளியே சென்றவர்கள் கதவை நெருங்கும் முன் பின்னால் சென்று மனைவியின் கையைப் பிடித்து, “ரோகிணி என்னை மன்னிச்சிரு. நான் பண்ணினது பெரிய தப்புதான். அந்த உறுத்தல் இருந்ததால தான் அவளை கண்டுபிடிக்க டிடெக்டிவ் தேடிப்போனேன்.”

அவர் பேசப்பேச கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை ரோகிணிக்கு. “முதல்ல கையை விடுறீங்களா” என்று பல்லைக்கடிக்க...

“ரோகிணி தயவு செஞ்சி நான் என்ன சொல்றேன்னு...”

“கையை விடுங்க முதல்ல” என அதட்ட, அவர் கையை எடுத்ததும், “நாலே வயசு பச்சைப் புள்ளையைப் போய்... ச்சீய்..” என்று மேலே எதுவும் பேசாமல் பேச மனமில்லாமல் மகனின் கையைப் பிடித்து வெளியே சென்றார்.

மனைவியின் ‘ச்சீய்..’ என்ற உச்சக்கட்ட அருவருப்பில், அந்த உதாசீனத்தில் மனம் சுக்கல் சுக்கலாய் உடைய அப்படியே அமர்ந்தார் சிவராமன்.

தந்தையின் நிலையைப் பார்த்த கிரிக்கோ பரிதாபம் எழுந்தாலும், ‘தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பது நியாயமே’ என்றெண்ணி தாயுடன் சென்றான்.

“போயிட்டீங்களா! என்னை மன்னிக்காமலே போயிட்டீங்களா. நீங்களே என்னை மன்னிக்க மறுக்கும்போது, என் பொண்ணு எப்படி என்னை மன்னிப்பா? நான் பாவி” என்று அரற்றியவருக்கு ஆறுதல் சொல்லக்கூட நாதியில்லாமல் போனது தான் அவருக்கான தண்டனையோ!

மாலை ஆறு மணியளவில் வீடு வந்து ரெஃப்ரஷாகி வந்தமர்ந்தவள் கையில் மீனலோஜினி பூஸ்ட் கொடுக்க, அவளோ “சோ ச்வீட் அம்மாஆச்சி” என்று கொஞ்சினாள்.

“கொஞ்சல் ஓவராயிருக்கு ராசிமா. ஸ்வீட் ச்வீட்டாகுது. ப்ரீகுட்டி கூட சேர்ந்து நீயும் ரொம்ப கெட்டுப் போயிட்ட போ. இரு எனக்கு காஃபி எடுத்துட்டு வர்றேன்.”

“உங்களுக்குத்தான் ப்ரஷர் இருக்குல்ல. காஃபி குடிக்கக்கூடாது சொன்னா கேட்குறீங்களா. வர வர நீங்கதான் ப்ரீகுட்டி மாதிரி அடம்பிடிக்கிறீங்க. இதுல என்னை அவளோட ஒப்பிட்டு பேசுறீங்களா?” எனும்போது காலிங்பெல் அடிக்க, பூஸ்ட் க்ளாஸைக் கையில் வைத்திருந்தபடியே கதவு திறக்கச் சென்றாள்.

“ஒரு நாளைக்கு ரெண்டு வேலைதான்டா ராசிமா குடிக்கிறேன். அதுக்குமா இந்த அலப்பறையைக் கூட்டுற.”

“ஓகே. பட் அரை டம்ளர் குடிக்கணும்” என்றபடி கதவு திறக்க...

கிச்சனிலிருந்தபடியே, “அடிப்பாவி! அப்ப ஒரு நாளைக்கு ஒரு க்ளாஸ் காஃபிதானா. அதை இரண்டு வேளைக்கு ஷேர் பண்ணி குடிக்கணும்ன்ற. நல்லா ப்ளான் பண்ற நீ” என சந்தோஷமாய் சலித்தார்.

“ஹா..ஹா.. எஸ் லோஜி டார்லிங்” என்று சிரித்து ஒரு மிடறு குடித்தபடி திரும்ப... அவளையே பார்த்திருந்த ரோகிணியைப் புரியாத பார்வை பார்த்தவள், அருகில் நின்றிருந்தவனைக் கண்டதும் வாய்க்குள்ளிருந்த பூஸ்டை தொண்டைக்குள் இறக்கி, “ஹேய்! கிரி வாவா. என் வீடு உனக்கெப்படித் தெரியும்? இவங்க யாரு உன்னோட அம்மாவா? பார்த்தாலே தெரியுது. வணக்கம்மா. நான் ராசி. வாங்க உள்ள வாங்க” என்று வரவேற்றாள்.

“யாருக்கு பாப்பா இவ்வளவு ஸ்பீட் வரவேற்பு?”

“நான் சொல்லியிருந்தேன்ல அம்மாஆச்சி. பேங்க்ல கிரின்ற பெயர்ல ஒரு பையனை மீட் பண்ணினேன்னு. அவனும் அவங்க அம்மாவும் வந்திருக்காங்க.”

‘ஓ...’ என்றபடி வேகமாக வந்து “வாங்க” என்றழைக்க... உள்ளே வந்த ரோகிணியின் பார்வை மட்டும் ராசியை விட்டு விலகவில்லை.

அந்தப் பார்வையை ராசி உணர்ந்த போதும் எதுவும் கேட்கவில்லை. ஏதோ இனம்புரியாத படபடப்பு நெஞ்சில் வந்தது. “பேசிட்டிருங்க காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று லோஜி எழ... அவரின் கைபிடித்து, “நான் எடுத்துட்டு வர்றேன். நீங்க பேசிட்டிருங்க” என்று நகர ஆரம்பித்தவள்... கையைப் பிடித்து “எங்களை மன்னிச்சிருமா” என்றார் ரோகிணி.

ரோகிணி மன்னிப்பு கேட்டதும் என்னவென்று புரியாமல், “என்னம்மா. எதுக்கு மன்னிப்பு? அதுவும் என்னை முதல்முறை இப்பத்தான் பார்க்கறீங்க. என்ன கிரி உங்கம்மா சாரி கேட்கறாங்க. நீ சைலண்டா இருக்க?”

“அ..அது அக்கா. அம்மா, அப்பா” என உளற...

ரோகிணியிடம் திரும்பியவள், “உங்க பையனோ, அவங்கப்பாவோ கூட தவறா எதுவும் பேசினதில்லையே. அப்புறம் ஏன்?” என்று குழம்பினாள்.

“ஆனா, என் புருஷன் மன்னிக்க முடியாத தப்பை பண்ணியிருக்காரேமா. அதான் அவர் சார்புல நான் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு மன்னிப்போட எங்க பாவமெல்லாம் சரியாகிடாதுதான். ஆனா, எனக்கு இதைத்தவிர வேறெதுவும் தெரியலை” என்று, யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் ராசியின் காலில் விழுந்தார்.

“அச்சோ!” என்று பதறி விலகியவள், “என்ன பண்றீங்க? ஆச்சி இவங்க என்ன பண்றாங்க பாருங்க. சீக்கிரம் வாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை. கிரி என்ன பார்த்துட்டு நிற்கிற? வந்து அவங்களைத் தூக்கு” என்றலற... அதைப் பார்த்திருந்த கிரிக்குமே அம்மாவின் இந்த முடிவு எதிர்பார்த்திராதது.

லோஜியும், கிரியும் ரோகிணியைத் தூக்கி அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைக்க... செய்வதறியாமல் பித்து பிடித்தாற்போல் தலையில கைவைத்து அமர்ந்திருந்த ராசி, “எ..என்ன காரியம் பண்ணிட்டீங்கம்மா? சின்னப்பொண்ணு என்னோட கால்ல நீங்க போய்...” என்றவள் கண்கள் கலங்க, “ஏற்கனவே என்ன பாவம் செய்தேனோ! என் வாழ்க்கையே ஒரு விசித்திரமா மாறி இப்பத்தான் ஒழுங்காயிருக்கு. நீங்க என் கால்ல விழுந்து இன்னொரு பாவத்தை சுமக்க வச்சிட்டீங்களே!”

“அச்சோ! அப்படில்லாம் இல்லமா. பாவம் நீ பண்ணலமா. என்னையறியாம நான்தான் உனக்கு பாவம் செஞ்சிருக்கேன். அதுக்கான பிராயசித்தம் தான் இது.”

“நீங்க சொல்ற எதுவும் எனக்கு புரியல. நீங்க என்ன பண்ணுனீங்க? அப்படியே பண்ணியிருந்தாலும், தெரியாம நடந்ததுக்கு நீங்க எப்படி பொறுப்பாவீங்க? என்ன அம்மாஆச்சி இவங்க இப்படில்லாம் பேசிட்டிருக்காங்க” என லோஜியிடம் முறையிட்டாள்.

அருகில் அமர்ந்திருந்தவள் தோளணைத்து, “என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்கலாம் ராசிமா” என்று அவளை ஆறுதலாய் பிடிக்க...

“நாங்க யார்னு தெரிஞ்சா எங்ககிட்ட இப்படி பேசிட்டிருப்பியா தெரியாது. எங்களை உனக்கு பிடிக்காமல் போயிரும். எங்களை வெறுத்துடாதம்மா” என்று அவள்முன் மண்டியிட்டார் ரோகினி.

“கடவுளே! ஏன் இப்படி பண்றீங்க. முதல்ல எழுந்து உட்காருங்க” என்று தன்னருகில் அமரவைத்து, “யார் என்ன பண்ணியிருந்தாலும் உங்களை நான் வெறுக்க மாட்டேன். தைரியமா சொல்லுங்கம்மா.”

“நா..நான் உங்கப்பாவோட ஒய்ஃப்” என்று ஒருவழியாக சொல்லி முடித்தார்.

சில நொடிகள் அமைதியானவள், “அதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க?” என்றாள் எந்தவித சலனமுமில்லாமல் தெளிவாகவே. “நீங்க என்னை விட்டுட்டு வந்தால்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னீங்களா?” என்றாள் அது மாதிரி இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன். ராசிக்குமே ரோகிணியை பார்த்த உடனே பிடித்துவிட்டது. அது தப்பாகிவிடக் கூடாது என்று மனதில் தோன்றியது.

“இல்லம்மா இல்ல. உங்கப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சதோ, அவங்க இறந்து கையில் ஒரு குழந்தை இருந்ததோ எனக்குத் தெரியாதுமா. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தெரியும். தெரிஞ்ச உடனேயே உன்னைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு வந்துட்டேன். பொண்டாட்டி இல்லை கையில் குழந்தையிருக்குன்னு சொல்லியிருந்தா, கண்டிப்பா நான் உன்னை என் பொண்ணா வளர்த்திருப்பேன்மா. ஒரு பச்சைப் புள்ளைய அநாதையாக்கி நான் சுகமா வாழ்ற அளவுக்கு மனசாட்சி இல்லாதவள் கிடையாதுமா” என்றார் அழுகையினூடே.

ரோகிணியின் தோளணைத்து, “உங்களைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சிருச்சி. கிரியையும் எனக்கு பிடிக்கும். அதுக்கு முதல் காரணம் அவனோட பெயர்தான். இல்லன்னா அவன்கிட்ட கூட பழகியிருப்பேனா தெரியாது. அது எங்க மாமா, அதாவது அம்மாஆச்சியோட பையன் பெயர்.”

“சொன்னான்மா எல்லாத்தையும் சொன்னான். நீ குழந்தையிலிருந்து பட்ட கஷ்டம் எல்லாமே சொன்னான்” என்றார் ரோகிணி.

“அவனுக்கு எப்படி?” என்றவள் கிரியைப் பார்க்க...

“ஹலோ! சொல்லுங்க. நான் இங்கதான் இருக்கேன்” என்று போன் பேசுவது போல் மெல்ல அந்த இடத்தைவிட்டு நழுவினான்.

பல்லைக் கடித்தபடி, “உன்னை அப்புறம் பார்த்துக்கறேன்” என்று ரோகிணியின் பக்கம் திரும்பி, “முதல்ல அவனோட அம்மாவா பிடிச்சிருந்தது. இப்ப என்னோட அம்மாவா பிடிச்சிருக்கு. அதனால கில்டியா ஃபீல் பண்ணாதீங்க. இத்தனை வருஷம் உங்க பொண்ணு வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சதா நினைச்சிக்கோங்க தட்ஸ் ஆல்” என்று அவரின் குற்றவுணர்ச்சியைக் குறைக்க வழியும் சொன்னாள்.

“ரொம்ப நன்றிமா. உன் அம்மாவா என்னை ஏத்துக்கிட்டதுக்கு. உன்னோட இத்தனை வருஷம் சேர்ந்திருக்க முடியாமல் போயிருச்சி பாரு” என வருத்தப்பட்டவர், ராசியின் கன்னத்தில் முத்தமிட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டார். லோஜி கொடுத்த காஃபியை வாங்கியபடி, அவர் காலைத்தொட்டு வணங்கி, தன் பெண்ணை கண்ணாக வளர்த்ததற்கு நன்றி சொன்னார் மனதார.

“இவ என்னோட பேத்தி. அதனால உன் நன்றிக்கு அவசியமேயில்லைமா. முதல்ல காஃபியைக் குடி” என்றார் மனதிலும் பெரியவராய்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சற்று நேரத்திற்கெல்லாம் கிரி, சரத்துடன் வர, இருவரையும் ஒருசேர பார்த்தவளுக்கு, ‘இவங்க ரெண்டு பேருக்கும் என்ன கனெக்ஷன்? என்னைப்பற்றிய உண்மை சரத் சொல்லியிருப்பாங்களோ?’ என்ற எண்ணத்தை இருவரும் உண்மையென்று நிரூபித்தார்கள்.

“பாட்டி மாம்ஸ்கு ஒரு காஃபி” என்று கேட்ட கிரி தாயிடம் திரும்பி, “சரத் மாமா” என்று வாயசைத்து சொன்னான். சரத்தையும் ராசியையும் பக்கத்தில் வைத்துப் பார்த்த ரோகிணிக்கு மனம் நிறைந்தது நல்ல பொருத்தமென்று.

“என்னது மாம்ஸா! இதென்ன புதுசா இருக்கு” என்பது போல் ராசி கிரியைப் பார்த்தாள்.

“உங்களுக்கு முன்னாடி எனக்கு மாம்ஸ் தான்கா அறிமுகம்” என்று சிவராமன் தொட்டு தானும் சென்றதைச் சொல்ல...

ராசியின் கோபம் ஒட்டுமொத்தமாக சரத்தினிடம் திரும்பியது. “அப்ப அன்னைக்கு அம்மாஆச்சி சொன்னதா சொன்னது பொய் இல்லையா” என கேட்டாள்.

சம்மதமாக தலையாட்டி அசடுவழிய சிரித்தவன், “டேய்! உங்கக்கா இந்த டீடெய்ல்ஸ்லாம் உன்கிட்ட கேட்டாளா. இல்ல இதை இப்ப கண்டிப்பா சொல்லியே தீரணுமா என்ன. அவளைப் பாருடா பார்வையாலேயே தொவைச்சி தோரணம் கட்டுறா. அதனால நான் கிளம்பறேன்” என்று எழ,

“ஒரு நிமிஷம் சரத்த் சார்” என்று பெயரை அழுத்தி, “வீட்டுக்கு வந்தவங்களை வெறும் வயித்தோட அனுப்புறது தப்பு. நானே ஸ்பெஷலா காஃபி எடுத்துட்டு வர்றேன். அதுக்குள்ள எங்கேயும் எஸ்கேப் ஆகிரக்கூடாது” என்று ஆணையிட்டு உள்ளே சென்றவள் ஏற்கனவே பால் சூடாகவே இருந்ததால் விரைவில் காஃபியுடன் வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

“தேங்க்யூ!” சொல்லி கிரி ஒரு மடக்கு குடிக்க...

அவனையே பார்த்திருந்த சரத், “என்னடா காஃபியில உப்பா இல்ல மிளகாய்பொடியா?”

“அதை எப்படி மாம்ஸ் சொல்லுவேன். ஸ்பெஷல் காஃபின்னதும் நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, அக்கா சுகர்தான் போட்டிருக்கா” என்று கலங்கிய கண்களை மறைத்தான். காரணம் அவனின் பாசமலர் ‘சொல்லாதே’ என்று கண்களால் அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள். சரத் கிரியின் முகபாவனையைப் பார்த்தவன், ராசியைக் கவனிக்காமல் விட்டான்.

“ஷப்பா! அப்ப நான் குடிக்கலாம்ன்ற?”

“ம்..ம்... தைரியமா குடிங்க” என்று சைகை காட்ட... குடிக்கப் போனவன், ஏதோ நினைவு வந்தவனாக, க்ளாஸை கீழே இறக்கி, “ஏன்டா நீ என்கிட்ட பொய் சொல்லலையே?” என்றான்.

சட்டென்று அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் பார்க்க... “ஒய் டௌட் மாம்ஸ்? நீங்க குடிங்க” என்றான் மனதிலுள்ளதை மறைத்து.

ஒரு மடக்கு காஃபியை குடித்தவனுக்கு நம்பி குடித்ததால் சட்டென்று காஃபி உள்ளே இறங்க, கத்தப் போனவன் கிரியிடம் திரும்பி, “யூ டூ ப்ரூடஸ்.”

“ஒய் ப்ளட் மாம்ஸ்? சேம் ப்ளட்” என்றான்.

“இது சேம் இல்லடா சேம் சேம்.”

சரத்திடம் க்ளாஸை வாங்கியபடி “நான் என்ன பண்றது? உண்மையை சொல்ல வந்தா கண்ணாலேயே மிரட்டுறாங்க. ப்யூச்சர்ல நீங்க ரொம்ப பாவம் மாம்ஸ்” என்று வராத கண்ணீரைத் துடைத்தான்.

“உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற லொள்ளு இருக்கே. உங்களை...” என்று அடிக்கத் துரத்த. மூவரும் அங்குமிங்கும் ஓடி விளையாடுவது சிறு குழந்தைகளை நியாபகப்படுத்த, பெரியவர்கள் வியப்புடனும், விருப்பத்துடனும் பார்த்திருந்தனர். அதன்பின் “ராசிமா போதும் நைட் டிபன் ரெடி செய்யலாம்” என்று அவளை நிறுத்தி இரவு உணவு முடித்து அனைவரும் விடைபெற்றார்கள்.

வீட்டிற்குள் தாயும் மகனும் நுழையும் பொழுது லைட்கூட போடாமல் அவர்கள் சென்றபோது அமர்ந்திருந்தது போலவே அமர்ந்து இருட்டை வெறித்துக் கொண்டிருந்த சிவராமனை சிறிதளவேனும் கூட ரோகிணி எட்டிப் பார்க்கவில்லை. விளக்கைப் போட்டு அவரவர் அறைக்குள் நுழைய...

லைட் வெளிச்சத்தில் எழுந்தவர் மனைவியிடம், “ரோகிணி பாப்பா என்ன சொன்னா?” என்றார் ஏக்கமாக.

“அவ என்னோட பொண்ணு அதனால என்னை எதுவும் சொல்லாம ஏத்துக்கிட்டா. ஆனா, உங்களை பார்க்க அவ விரும்பல. தயவுசெஞ்சி அவகிட்ட பேசுறேன்னு சொல்லி அவளை கஷ்டப்படுத்தாதீங்க” என்று உள்ளே சென்று கதவடைத்தார். தன்னுடைய மனக்கதவையும் சேர்த்தே.

காலையில் வேலைக்கு தயாராகிய ராசிக்கு, போன் வர எடுத்தவளை ஹலோ சொல்லவிடாமல், “ஹாய்! ராசி கங்க்ராட்ஸ்” என்று வாழ்த்தினான் சரத்.

“தேங்க் யூ.”

“பர்ஸ்ட் டே அதே பேங்க்ல மேனேஜர் போஸ்ட். ஸோ, பயப்பட வேண்டியதில்லை. இல்ல பயமாயிருக்குன்னா சொல்லுமா நான் துணைக்கு வர்றேன்” என கிண்டலடிக்க...

“என்ன நக்கலா. பயம் அதுவும் எனக்கு, அதுதான் என்னைப் பார்த்து பயந்து ஓடும்னு உங்களுக்குத் தெரியாதா சார்ர்” என்றாள்.

“நான் உன்னைப் பார்த்து ஓடுற மாதிரியா ராசி?”

“உங்களை... நல்லவேளை பக்கத்துல இல்ல. இருந்தீங்க...”

“இருந்திருந்தா?”

“இருந்தா நாலு போடு போட்டிருப்பேன்.”

“இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போகல தாராளமா நாலு என்ன கூடவே போட்டுக்க.”

“சரத் இங்கேயா இருக்கீங்க?” என்று முகமலர்ச்சியுடன் சுற்றிலும் பார்த்தவளுக்கு, யாரும் இல்லையென்றதும் சற்று ஏமாற்றம் பரவ...

“உன்னோடவே தான் ராசி இருக்கேன்! உன்னோடவே தான் இருப்பேன்! எப்பொழுதும்!” என்று காதோரம் கேட்ட குரலில், சடாரென்று திரும்பியவள் அவ்வளவு அருகில் சரத்தை எதிர்பாராததால் கால் தடுமாறி பிடி கிடைக்காமல் கைகள் அலைபாய சட்டென்று அவளை இழுத்து தன்னுடன் தன் பிடியிலேயே நிறுத்தினான்.

அவன் அவ்வாறு செய்தது சில வினாடிகளில், “ப்ளீஸ் கையை எடுக்கிறீங்களா?” என்றபடி கூச்சத்தில் நெளிய,

“எடுத்தா விழுந்துரமாட்டியா ராசாத்தி?” என்றான் ஒரு மாதிரிக்குரலில்.

“ப்ச்... உங்க இடது கையைச் சொன்னேன்” என்றபோதுதான் கவனித்தான் விழப்போகிறாள் என்றதும், ஒரு கையால் பிடிக்காக அலைபாய்ந்தவளின் கையை மேலே பிடித்து, மறுகையால் அவள் கீழே விழாமலிருக்க இடுப்பில் கைகொடுத்து அணைத்து பக்கத்தில் நிறுத்தியிருந்ததை. ‘ஷப்பா, கீழே விழாமல் காப்பாற்றி விட்டோம்’ என்ற நினைவே சரத்திற்கு. அவன் உணராத போதும், அதை அவள் உணர்ந்து கூச்சத்தில் சொல்ல...

“ஓ... சரி.. சாரி ராசி கவனிக்கலை. இதோ எடுக்குறேன்” என்று இடுப்பிலிருந்த கையை எடுக்க... காலை தரையில் சரியாக ஊன்றாமலே நின்றிருந்ததால் திரும்பவும் தடுமாறியவளை இடுப்பில் கை கொடுத்து தன்னுடன் இழுத்து, “விட்டா விழுந்திருறியே ராசாத்தி. என்ன பண்ணலாம்?” என்றான் அப்பாவியாய்.

கண்கள் பளிச்சிட, “இப்ப என்ன சொன்னீங்க?” என்றாள் எதையோ அறியும் ஆர்வத்தில்.

‘எதுக்கு இந்த எபெக்டு?’ என நினைத்தவன், “விட்டா விழுந்துருவியே சொன்னேன்.”

“இல்லங்க. பெயர் சொல்லி கூப்பிட்டீங்க.”

“ம்ம்ம்... ராசாத்தி. ராசாத்தி தான நீ? ஏன் பிடிக்கலையா?”

“ம்... பிடிச்சிருக்கு” என தலையை அசைத்தவள் தன்னை நிலைப்படுத்தி “இப்ப கையை எடுங்க. நான் சரியா நின்னுட்டேன்” என்றாள்.

“எடுக்கணுமா?” என்றவன் குரல் குழைந்து வர...

“எடுங்க மாமா! எனக்கு கூச்சமாயிருக்கு” என்று சிணுங்கினாள்.

அவளின் சிணுங்கல் மொழியில் சிதறியவன் அவளை விடாமலேயே, “உன்னோட மேனேஜர் ப்ரமோஷன்கு ட்ரீட் குடுக்கலையே செல்லம். எப்ப தர்றதா ஐடியா?”

“எப்ப வேணும் சொல்லுங்க?”

“இப்ப.”

“ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க கேசரி செஞ்சி தர்றேன். இப்ப விடுறீங்களா?” என உள்ளே போன குரலில் வினவ...

“வெறும் கேசரி மட்டும்தானா?”

“வேறென்ன வேணும்? விடுங்க மாமா” என்றாள் புரியாதவளாய்.

“ஹ்ம்... வேறென்ன வேணும்ன்றதை தேவைப்படுறப்போ மொத்தமா கேட்காமலேயே வாங்கிக்கறேன். இப்ப விட்டே ஆகணுமா?” என்றவன் குரல் இன்னும் இறங்க... அவள் மௌனமாக தலையசைக்க... “என்ன ராசாத்தி சத்தத்தையே காணோம். வெறும் காத்துத்தான் வருதா?”

“ச்சோ... போங்க” என்று அவனை விலக்கி ஓட, பின்னாலேயே அவனின் சிரிப்புக்குரல் துரத்தியது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top