- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
18
காலை திருமண சுறுசுறுப்பிலும், வேகத்திலும் அனைவரும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, வித்யாவைக் கேலி செய்யவென்று அவளின் தோழிகளும், சில உறவுப் பெண்களுடன் கீர்த்தியும் மணமகள் அறையைக் கலகலக்க வைத்திருக்க, கார்த்திகாவோ சிறு டென்சனிலேயே இருந்தாள்.
“என்ன அண்ணி முகமே சரியில்ல? எதாவது ப்ராப்ளமா?”
“நத்திங்மா” என்றாள் தன் உணர்வுகளை மறைத்து.
“இல்ல உங்ககிட்ட ஏதோ மிஸ்ஸிங்.”
“அச்சோ அப்படியில்ல வித்தி. சென்னையிலிருந்து ஃப்ரண்ட் வந்துட்டிருக்கேன் சொன்னா. கிளம்பின நேரத்துக்கு இங்க வந்திருக்கணும். அதான் சின்ன பயம்.”
“அக்கா ட்ராபிக் அதிகமாயிருக்கலாம். இல்ல வண்டி ரிப்பேராகியிருக்கலாம். கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம ரிலாக்ஸாயிரு” என்று வித்யாவிடம் திரும்பி, “ஏய் அண்ணி.. எங்க அண்ணா உனக்குத் தனியா எதுவும் ப்ரெசண்ட் பண்ணலையா?” என கேட்டாள்.
“இல்லையே கீர்த்தி. நான் அவங்களைப் பார்த்ததே மூணு நாலு டைம்தான். அதுவுமில்லாம...” யோசித்தவளுக்கு, அண்ணன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஆசிரமத்தில் கீர்த்தியின் பெயரில் வந்த கிஃப்ட் ஆனந்த் கொடுத்ததோ என்று தோன்ற, அதில் என்ன இருந்தது என்று யோசிக்கையில் நினைவு வரவில்லை.
“சொல்லு அண்ணி. அதுவுமில்லாம?”
“ப்ச்... ஒண்ணுமில்ல கீர்த்தி. எனக்குன்னு தனியா எந்த கிஃப்டும் தந்ததில்லை.”
“பொய் சொல்லாத அண்ணி. நீ கிஃப்ட் வாங்கியிருக்க. எனக்குன்னு நினைச்சி தூக்கிப் போட்டுட்ட. சரிதான?”
“ஏய் உனக்கெப்படி?”
“ஐ நோ அண்ணியாரே. அண்ணா என்கிட்ட சாரி கேட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு, பெயர் மாற்றத்துல என் பெயருக்கு கிஃப்ட் அனுப்பினதா சொன்னாங்க. அதான் நீ ஏதோ தப்பானதுன்னு தூக்கிப் போட்டிருப்ப தோணிச்சி.”
“ஆமா கீர்த்தி. இன்னொரு டைம் வந்தா என்ன ஏதுன்னு பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்ன கிஃப்ட்னு கூட மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தாள்.
“வழியாத இந்தா பிடி. என் அண்ணா உனக்குன்னு கொடுத்தது” என்று ஒரு கிஃப்ட் பாக்ஸைக் கொடுத்தாள்.
“எப்போ கீர்த்தி!” ஆச்சர்யத்துடன் அந்த கிஃப்டைப் பிரித்து, அதிலிருந்த பாக்ஸைத் திறக்க செயின் இருந்தது. அதை எடுத்துப் பார்க்கையில் ‘யுஏ’ என்ற இரண்டு எழுத்துகள் பார்க்க ‘N’ போல தோன்றினாலும் “யு” எனக்காட்ட, சின்னதாக ஒரு தங்க நூலிலை நடுவிலிருக்க கண்கள் வியப்பில் விரிந்தது.
“ஜவுளி எடுக்கிறப்ப வரலைல்ல. அந்த டைம்தான் எடுத்திருக்காங்க. AV லெட்டர்ல டாலர் கிடைக்கலன்னு N லெட்டர் நடுவுல தங்க இலை சேர்க்கச்சொல்லி காத்திருந்து வாங்கியிருக்காங்க. நாம ஜுவல்ஸ் எடுத்து வெளில வர்றதுக்கு முன்ன குடுத்தாங்க. நீ போட்டுக்கோ” என்றாள்.
அவள் சொல்லுமுன் அந்தச் செயின் வித்யாவின் கழுத்தை அலங்கரிக்க, “நல்லாயிருக்கா கீர்த்தி?” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் கேட்டாள்.
“எங்க அண்ணா செலக்ஷன் என்னைக்கும் சோடை போகாது. உன்னையும் சேர்த்துதான் அண்ணி” என்றதும் செல்லமாய் மணப்பெண் சிணுங்க, “ஹலோ எங்க அண்ணியைக் கேலி பண்றீங்களா? நான் இருக்கும்போது நீங்க மட்டும் எப்படித் தொடரலாம்” என்று அனுவும் சேர்ந்து கொண்டு கேலியைத் தொடர்ந்தாள்.
சில நிமிடங்களில் பெண்ணை மணமேடைக்கு அழைத்துச் செல்ல, ஐயர் சொன்ன மந்திரத்தை கவனமாய் சொல்லிக் கொண்டிருந்தவன், பெண்ணை அழைத்து வந்து அருகில் அமர்த்தியதும், அவளைக் கண்டு புன்னகைக்க, அவளின் பதில் புன்னகையில், “பீவர் குறைஞ்சிருச்சா தியா? இது பொதுயிடமா இருக்கு. இல்லன்னா கழுத்துல கைவச்சிப் பார்த்திருப்பேன்” என்றான்.
‘நல்லவேளை அதைச் செய்யாமவிட்டாங்க’ என நினைத்து, “இப்ப சரியாகிருச்சிங்க. மேரேஜ் முடிஞ்சி தனியா இருக்கிறப்ப பார்த்துக்கோங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றாள் அவனுக்கு உரிமையிருக்கிறது என்ற அர்த்தத்தில்.
“ஹேய் நிஜமாவா?” என்றதும் அவள் விழிக்க, “ஓகே கூல்” என்றான் அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு.
‘உங்களுக்குக் கூலாயிருக்கா. தொட்டு மட்டும் பார்த்திருக்கணும், எல்லார் முன்னாடியும் மானம் போயிருக்கும்.’
“ஏன் அமைதியாகிட்ட?”
“இல்ல புகை கண்ணுல படுது” என மழுப்பினாள்.
“கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தியா.”
‘ம்’ என்ற தலையாட்டல் மட்டுமே அவளிடமிருந்தது.
“அண்ணா எல்லாரும் உங்களைத்தான் பார்க்கிறாங்க.” அனு அண்ணனிடம் ரகசியமாகச் சொல்ல,
“எங்களைப் பார்க்கிறதுக்காகத்தான்மா வந்திருக்காங்க” என்று சிரித்தான்.
அண்ணனவனின் பதிலில் அனு பேந்தப் பேந்த விழிக்க, அதைக் கண்ட கீர்த்தி சிரித்து, “அக்கா பல்ப் பெருசாவே கிடைச்சிருக்கு போல. ம்..” என்ற அனுவின் தலையாட்டலில், “அதான் நான் அந்த ஏரியாவுக்குப் போகாம நின்னுட்டிருக்கேன்” என்றாள் கீர்த்தி.
“உன் அக்கா எங்க கீர்த்தி?”
“பாப்பா அழுதான்னு போனா. கூட்டம் வேறயா அதனால ஆள் இங்க இல்ல போல” என சுற்றிலும் பார்த்தவள் கண்களில் கார்த்திகா பட, “அதோ வந்துட்டாளே” எனும்போது சுபாஷ் கார்த்திகா கையில் குழந்தையுடன் மேடையேறினார்கள்.
“என்ன கார்த்திமா? அதான் ஒண்ணுமில்ல வர்றோம் சொல்லிட்டாங்கள்ல அப்புறமும் ஏன் ஃபீல் பண்ணிட்டிருக்க? கல்யாணத்தை ரசி எல்லாம் சரியாகிரும்.”
“ஏன்னு தெரியலங்க. இந்தக் கல்யாணத்துல என்னால ஒட்டவும் முடியல. அம்மா பார்த்த பையன்தான்னாலும் ஏதோ சரியில்ல தோணுது” என்றாள் சிறு கலக்கத்துடன்.
“கார்த்தி! மாப்பிள்ளையும் அவங்க வீட்டுக்காரங்களும் ரொம்ப நல்லவங்க. சென்னை பெங்களுர்னு எல்லா இடத்திலும் விசாரிச்சாச்சி. யாரும் எந்தக் குறையும் சொல்லல. அதைவிட உண்மையை நேருக்கு நேர் பேசுறார். எதையும் மறைக்க முயற்சிக்கல. ஓகே.”
‘அப்படி என்ன உண்மையோ?’ என நினைத்தாலும் கேட்காமல், “ம்.. சரிங்க மாம்ஸ்” என்று சிரித்தாள்.
“இதுதான் கருவாச்சி உனக்கழகு” என்று அவளைக் கடுப்படித்து செல்லமாய் ஒரு இடியையும் பெற்றுக் கொண்டான்.
கெட்டிமேளங்கள் ஒலிக்க, சொந்தங்களின் அட்சதையுடனும், வாழ்த்துடனும், வித்யா சுதாகரை, வித்யானந்தாக மாற்றிக்கொண்டான் ஆனந்த்ராஜ்.
தாலி கட்டும்பொழுது இருவருக்குள்ளும் ஒரு நிறைவு இருக்க, அதோடு வித்யாவின் கழுத்தின் சூடு தாலிகட்டுகையில் குனிந்த பொழுது தன் கைகளில் மூச்சுக்காற்றாய் பட்டது. நெற்றிப் பொட்டு வைக்கும் பொழுது அவளின் முகம் கண்டிட, புன்னகை மாறா அவளின் முகம் சிறு நிம்மதியைக் கொடுத்தாலும், தாலி கட்டிய தைரியத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் கழுத்தில் கை வைக்கப்போக, கழுத்தில் கிடந்த கனத்த மாலையும், நகைகளும் அவனின் எண்ணத்தைத் தடை செய்தது.
அவளுக்குத் தான் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக இன்னும் நெருங்கியமர்ந்து, “பீவர் குறைஞ்சிருச்சி சொன்ன? ஆனா குறையல போலிருக்கே. தாலிதான் கட்டியாச்சில்ல வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.
வியப்பாய் விழிவிரித்து கணவனைக் காண, “என்னடா போலாமா?” காதலில் உருகத் தெரியாது செயலில் காண்பித்த அந்நேசத்தில் கண்கலங்கியது வித்யாவிற்கு.
“நான் சொன்னேன்ல. பாரு கண்கலங்குது. வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று கைபிடிக்க, அதன் சூடு அவனைத் தாக்கியது. அதற்குள் கணவன் கைபிடித்து, “இப்ப வேண்டாம். எல்லாரும் போனதும் போகலாம். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றாள்.
‘முடியுமா?’ என்பதாய் அவன் பார்க்க, ‘முடியும்’ என்பதாய் கண்மூடித்திறந்தாள்.
அடுத்தடுத்த சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அவ்வப்பொழுது தன்னைப் பார்த்த கணவனிடம், தனக்கு எதுவுமில்லையென்று கண்களால் சொல்லியபடியிருக்க, அருகிலிருந்தவர்களுக்கு அவர்களின் பேச்சும் பார்வையும் வித்தியாசமாகயிருக்கவும், என்னவென்று கேட்ட தாயை வருத்தப்பட வைக்க விரும்பாது “ஒண்ணுமில்லம்மா” என்றுவிட்டான்.
தாலிகட்டு முடிந்ததுமே சுபாஷும், தணிகாசலமும் பந்தி நடக்குமிடம் சென்று கவனிக்க ஆரம்பிக்க, சுதாகர் சில முக்கியமான உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்க, சுபாஷிணி மணமக்களை வரவேற்பதற்காக வீட்டிற்குச் சென்றிருந்தார். குழந்தையை படுக்கப்போட வாணி வாங்கிச் செல்ல, கார்த்திகாவோ மணமக்களின் முகபாவம் பார்த்து சற்று குழம்பினாள்.
அவளின் குழப்பத்தை அதிகப்படுத்தி ஜாதகம் எனும் ரிங் மாஸ்டரின் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க, செங்கல்பட்டில் நுழைந்தது அந்தக் கார்.
அநேக பேர் இரவே வந்து சென்றிருந்ததாலும், காலையில் வந்தவர்களும் முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுக் கிளம்பிட, முக்கிய உறவினர்களும் நட்புகள் சிலர் மட்டுமே அங்கு. அவர்களும் அங்கங்கு நின்றிருக்க மணமக்களருகில் கீர்த்தி, அனு, சாரகேஷ், வரலட்சுமியுடன் சில நட்புகள் மட்டுமே நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் தோழிக்கு வழி சொல்லியபடி நின்றிருந்த கார்த்திகா மண்டப வாசலில் வந்து நின்ற காரைக் கண்டதும், கைகாண்பித்து அருகில் சென்று அவர்களை வரவேற்று குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
பதிலுக்குத் தோழியை அணைத்த சாதனா, “ஹேய் கார்த்தி! நீதான் கல்யாணப் பொண்ணு மாதிரியிருக்க” என்று கேலி செய்தாள்.
“ஆமாமா. நீ கூட கல்யாணப் பொண்ணோட தோழி மாதிரிதான் இருக்க என்றதும் அவள் முறைக்க... “வாங்கண்ணா. அப்பா அம்மா கூட்டிட்டு வரலையா?” என்று பிரேமிடம் கேட்டாள்.
“இல்லமா. அம்மாவுக்கு டிராவல் பண்ண உடம்பு ஒத்துழைக்கல. அதனால அப்பா எங்களை போயிட்டு வரச்சொல்லிட்டாங்க.”
“பரவாயில்லண்ணா. சாது அப்பாவுக்கு எப்படியிருக்கு?”
“நார்மலா இருக்காங்க கார்த்தி.” மணமேடை நோக்கி நடந்தபடி குழந்தையைப் பற்றி விசாரிக்க, குழந்தை தூங்குவதாக கார்த்தி சொன்னதும், “சரி போகும்போது பார்த்துக்கறேன்” என்றபடி மேடையேற, ஆனந்த் நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்க, வித்யாவை சாதனாவிற்கு அறிமுகப்படுத்தினாள் கார்த்தி.
“வித்யாவா உன் நாத்தனார் பெயர்! ஹேய் கார்த்தி, பெங்களுர்ல இருக்கிற என் ஃப்ரண்ட் நேம் கூட வித்யாதான். அவளும் நானும் செம க்ளோஸ்” என்று புன்னகையுடன் சொல்லி, “ஹாய்! கங்க்ராட்ஸ் புதுப்பொண்ணு” என்று கொண்டு வந்த கிஃப்டைக் கொடுத்தாள்.
வித்யா பதிலுக்கு நன்றி சொல்ல... கார்த்திகாவிடம் இருந்த குழந்தை அவள் தகப்பனிடம் தாவ, பிரேமிடம் குழந்தையைக் கொடுத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்த ஆனந்தின் புறம் திரும்பினாள். இதுவரை கார்த்திகா ஆனந்தை முறை சொல்லி அழைத்திராததால், அந்தத் தயக்கம் அப்படியே இருக்க, அதை உணர்ந்த கீர்த்தி “அண்ணா ஒரு நிமிஷம்” என்றாள்.
பேசிக் கொண்டிருந்தவர்களை அனுப்பி வைத்து, “சொல்லுமா?” என்று திரும்பியவன் கார்த்தியைப் பார்த்துப் புன்னகைத்து, அருகிலிருந்தவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தம் “வாங்க” என்ற போது அவர்கள் முகம் பார்த்ததும் சின்ன அதிர்வு வந்தாலும், “ஹாய் பிரேம். நான் எதிர்பார்க்கவேயில்ல. ஹவ் ஆர் யூ?” என்றான் சந்தோஷமாகவே.
சின்னதாக தயக்கம் பிரேமிற்குள் இருந்தபோதும், “பைன் ஆனந்த். நீங்க?” என சபை மரியாதைக்குக் கேட்டான்.
“அவங்க நல்லாதான் இருக்காங்க. நீ எப்படி நல்லாயிருக்க?” என்று ஒருமையில் கேட்டு, அனைவரின் அதிர்ந்த முகம் காணாது, “கார்த்தி உன் நாத்தனாருக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்கல. போயும் போயும் இவன்தானா கிடைச்சான்” என கோபத்தில் கேட்டாள்.
காலை திருமண சுறுசுறுப்பிலும், வேகத்திலும் அனைவரும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, வித்யாவைக் கேலி செய்யவென்று அவளின் தோழிகளும், சில உறவுப் பெண்களுடன் கீர்த்தியும் மணமகள் அறையைக் கலகலக்க வைத்திருக்க, கார்த்திகாவோ சிறு டென்சனிலேயே இருந்தாள்.
“என்ன அண்ணி முகமே சரியில்ல? எதாவது ப்ராப்ளமா?”
“நத்திங்மா” என்றாள் தன் உணர்வுகளை மறைத்து.
“இல்ல உங்ககிட்ட ஏதோ மிஸ்ஸிங்.”
“அச்சோ அப்படியில்ல வித்தி. சென்னையிலிருந்து ஃப்ரண்ட் வந்துட்டிருக்கேன் சொன்னா. கிளம்பின நேரத்துக்கு இங்க வந்திருக்கணும். அதான் சின்ன பயம்.”
“அக்கா ட்ராபிக் அதிகமாயிருக்கலாம். இல்ல வண்டி ரிப்பேராகியிருக்கலாம். கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம ரிலாக்ஸாயிரு” என்று வித்யாவிடம் திரும்பி, “ஏய் அண்ணி.. எங்க அண்ணா உனக்குத் தனியா எதுவும் ப்ரெசண்ட் பண்ணலையா?” என கேட்டாள்.
“இல்லையே கீர்த்தி. நான் அவங்களைப் பார்த்ததே மூணு நாலு டைம்தான். அதுவுமில்லாம...” யோசித்தவளுக்கு, அண்ணன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஆசிரமத்தில் கீர்த்தியின் பெயரில் வந்த கிஃப்ட் ஆனந்த் கொடுத்ததோ என்று தோன்ற, அதில் என்ன இருந்தது என்று யோசிக்கையில் நினைவு வரவில்லை.
“சொல்லு அண்ணி. அதுவுமில்லாம?”
“ப்ச்... ஒண்ணுமில்ல கீர்த்தி. எனக்குன்னு தனியா எந்த கிஃப்டும் தந்ததில்லை.”
“பொய் சொல்லாத அண்ணி. நீ கிஃப்ட் வாங்கியிருக்க. எனக்குன்னு நினைச்சி தூக்கிப் போட்டுட்ட. சரிதான?”
“ஏய் உனக்கெப்படி?”
“ஐ நோ அண்ணியாரே. அண்ணா என்கிட்ட சாரி கேட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு, பெயர் மாற்றத்துல என் பெயருக்கு கிஃப்ட் அனுப்பினதா சொன்னாங்க. அதான் நீ ஏதோ தப்பானதுன்னு தூக்கிப் போட்டிருப்ப தோணிச்சி.”
“ஆமா கீர்த்தி. இன்னொரு டைம் வந்தா என்ன ஏதுன்னு பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்ன கிஃப்ட்னு கூட மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தாள்.
“வழியாத இந்தா பிடி. என் அண்ணா உனக்குன்னு கொடுத்தது” என்று ஒரு கிஃப்ட் பாக்ஸைக் கொடுத்தாள்.
“எப்போ கீர்த்தி!” ஆச்சர்யத்துடன் அந்த கிஃப்டைப் பிரித்து, அதிலிருந்த பாக்ஸைத் திறக்க செயின் இருந்தது. அதை எடுத்துப் பார்க்கையில் ‘யுஏ’ என்ற இரண்டு எழுத்துகள் பார்க்க ‘N’ போல தோன்றினாலும் “யு” எனக்காட்ட, சின்னதாக ஒரு தங்க நூலிலை நடுவிலிருக்க கண்கள் வியப்பில் விரிந்தது.
“ஜவுளி எடுக்கிறப்ப வரலைல்ல. அந்த டைம்தான் எடுத்திருக்காங்க. AV லெட்டர்ல டாலர் கிடைக்கலன்னு N லெட்டர் நடுவுல தங்க இலை சேர்க்கச்சொல்லி காத்திருந்து வாங்கியிருக்காங்க. நாம ஜுவல்ஸ் எடுத்து வெளில வர்றதுக்கு முன்ன குடுத்தாங்க. நீ போட்டுக்கோ” என்றாள்.
அவள் சொல்லுமுன் அந்தச் செயின் வித்யாவின் கழுத்தை அலங்கரிக்க, “நல்லாயிருக்கா கீர்த்தி?” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் கேட்டாள்.
“எங்க அண்ணா செலக்ஷன் என்னைக்கும் சோடை போகாது. உன்னையும் சேர்த்துதான் அண்ணி” என்றதும் செல்லமாய் மணப்பெண் சிணுங்க, “ஹலோ எங்க அண்ணியைக் கேலி பண்றீங்களா? நான் இருக்கும்போது நீங்க மட்டும் எப்படித் தொடரலாம்” என்று அனுவும் சேர்ந்து கொண்டு கேலியைத் தொடர்ந்தாள்.
சில நிமிடங்களில் பெண்ணை மணமேடைக்கு அழைத்துச் செல்ல, ஐயர் சொன்ன மந்திரத்தை கவனமாய் சொல்லிக் கொண்டிருந்தவன், பெண்ணை அழைத்து வந்து அருகில் அமர்த்தியதும், அவளைக் கண்டு புன்னகைக்க, அவளின் பதில் புன்னகையில், “பீவர் குறைஞ்சிருச்சா தியா? இது பொதுயிடமா இருக்கு. இல்லன்னா கழுத்துல கைவச்சிப் பார்த்திருப்பேன்” என்றான்.
‘நல்லவேளை அதைச் செய்யாமவிட்டாங்க’ என நினைத்து, “இப்ப சரியாகிருச்சிங்க. மேரேஜ் முடிஞ்சி தனியா இருக்கிறப்ப பார்த்துக்கோங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றாள் அவனுக்கு உரிமையிருக்கிறது என்ற அர்த்தத்தில்.
“ஹேய் நிஜமாவா?” என்றதும் அவள் விழிக்க, “ஓகே கூல்” என்றான் அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு.
‘உங்களுக்குக் கூலாயிருக்கா. தொட்டு மட்டும் பார்த்திருக்கணும், எல்லார் முன்னாடியும் மானம் போயிருக்கும்.’
“ஏன் அமைதியாகிட்ட?”
“இல்ல புகை கண்ணுல படுது” என மழுப்பினாள்.
“கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தியா.”
‘ம்’ என்ற தலையாட்டல் மட்டுமே அவளிடமிருந்தது.
“அண்ணா எல்லாரும் உங்களைத்தான் பார்க்கிறாங்க.” அனு அண்ணனிடம் ரகசியமாகச் சொல்ல,
“எங்களைப் பார்க்கிறதுக்காகத்தான்மா வந்திருக்காங்க” என்று சிரித்தான்.
அண்ணனவனின் பதிலில் அனு பேந்தப் பேந்த விழிக்க, அதைக் கண்ட கீர்த்தி சிரித்து, “அக்கா பல்ப் பெருசாவே கிடைச்சிருக்கு போல. ம்..” என்ற அனுவின் தலையாட்டலில், “அதான் நான் அந்த ஏரியாவுக்குப் போகாம நின்னுட்டிருக்கேன்” என்றாள் கீர்த்தி.
“உன் அக்கா எங்க கீர்த்தி?”
“பாப்பா அழுதான்னு போனா. கூட்டம் வேறயா அதனால ஆள் இங்க இல்ல போல” என சுற்றிலும் பார்த்தவள் கண்களில் கார்த்திகா பட, “அதோ வந்துட்டாளே” எனும்போது சுபாஷ் கார்த்திகா கையில் குழந்தையுடன் மேடையேறினார்கள்.
“என்ன கார்த்திமா? அதான் ஒண்ணுமில்ல வர்றோம் சொல்லிட்டாங்கள்ல அப்புறமும் ஏன் ஃபீல் பண்ணிட்டிருக்க? கல்யாணத்தை ரசி எல்லாம் சரியாகிரும்.”
“ஏன்னு தெரியலங்க. இந்தக் கல்யாணத்துல என்னால ஒட்டவும் முடியல. அம்மா பார்த்த பையன்தான்னாலும் ஏதோ சரியில்ல தோணுது” என்றாள் சிறு கலக்கத்துடன்.
“கார்த்தி! மாப்பிள்ளையும் அவங்க வீட்டுக்காரங்களும் ரொம்ப நல்லவங்க. சென்னை பெங்களுர்னு எல்லா இடத்திலும் விசாரிச்சாச்சி. யாரும் எந்தக் குறையும் சொல்லல. அதைவிட உண்மையை நேருக்கு நேர் பேசுறார். எதையும் மறைக்க முயற்சிக்கல. ஓகே.”
‘அப்படி என்ன உண்மையோ?’ என நினைத்தாலும் கேட்காமல், “ம்.. சரிங்க மாம்ஸ்” என்று சிரித்தாள்.
“இதுதான் கருவாச்சி உனக்கழகு” என்று அவளைக் கடுப்படித்து செல்லமாய் ஒரு இடியையும் பெற்றுக் கொண்டான்.
கெட்டிமேளங்கள் ஒலிக்க, சொந்தங்களின் அட்சதையுடனும், வாழ்த்துடனும், வித்யா சுதாகரை, வித்யானந்தாக மாற்றிக்கொண்டான் ஆனந்த்ராஜ்.
தாலி கட்டும்பொழுது இருவருக்குள்ளும் ஒரு நிறைவு இருக்க, அதோடு வித்யாவின் கழுத்தின் சூடு தாலிகட்டுகையில் குனிந்த பொழுது தன் கைகளில் மூச்சுக்காற்றாய் பட்டது. நெற்றிப் பொட்டு வைக்கும் பொழுது அவளின் முகம் கண்டிட, புன்னகை மாறா அவளின் முகம் சிறு நிம்மதியைக் கொடுத்தாலும், தாலி கட்டிய தைரியத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் கழுத்தில் கை வைக்கப்போக, கழுத்தில் கிடந்த கனத்த மாலையும், நகைகளும் அவனின் எண்ணத்தைத் தடை செய்தது.
அவளுக்குத் தான் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக இன்னும் நெருங்கியமர்ந்து, “பீவர் குறைஞ்சிருச்சி சொன்ன? ஆனா குறையல போலிருக்கே. தாலிதான் கட்டியாச்சில்ல வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.
வியப்பாய் விழிவிரித்து கணவனைக் காண, “என்னடா போலாமா?” காதலில் உருகத் தெரியாது செயலில் காண்பித்த அந்நேசத்தில் கண்கலங்கியது வித்யாவிற்கு.
“நான் சொன்னேன்ல. பாரு கண்கலங்குது. வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று கைபிடிக்க, அதன் சூடு அவனைத் தாக்கியது. அதற்குள் கணவன் கைபிடித்து, “இப்ப வேண்டாம். எல்லாரும் போனதும் போகலாம். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றாள்.
‘முடியுமா?’ என்பதாய் அவன் பார்க்க, ‘முடியும்’ என்பதாய் கண்மூடித்திறந்தாள்.
அடுத்தடுத்த சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அவ்வப்பொழுது தன்னைப் பார்த்த கணவனிடம், தனக்கு எதுவுமில்லையென்று கண்களால் சொல்லியபடியிருக்க, அருகிலிருந்தவர்களுக்கு அவர்களின் பேச்சும் பார்வையும் வித்தியாசமாகயிருக்கவும், என்னவென்று கேட்ட தாயை வருத்தப்பட வைக்க விரும்பாது “ஒண்ணுமில்லம்மா” என்றுவிட்டான்.
தாலிகட்டு முடிந்ததுமே சுபாஷும், தணிகாசலமும் பந்தி நடக்குமிடம் சென்று கவனிக்க ஆரம்பிக்க, சுதாகர் சில முக்கியமான உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்க, சுபாஷிணி மணமக்களை வரவேற்பதற்காக வீட்டிற்குச் சென்றிருந்தார். குழந்தையை படுக்கப்போட வாணி வாங்கிச் செல்ல, கார்த்திகாவோ மணமக்களின் முகபாவம் பார்த்து சற்று குழம்பினாள்.
அவளின் குழப்பத்தை அதிகப்படுத்தி ஜாதகம் எனும் ரிங் மாஸ்டரின் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க, செங்கல்பட்டில் நுழைந்தது அந்தக் கார்.
அநேக பேர் இரவே வந்து சென்றிருந்ததாலும், காலையில் வந்தவர்களும் முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுக் கிளம்பிட, முக்கிய உறவினர்களும் நட்புகள் சிலர் மட்டுமே அங்கு. அவர்களும் அங்கங்கு நின்றிருக்க மணமக்களருகில் கீர்த்தி, அனு, சாரகேஷ், வரலட்சுமியுடன் சில நட்புகள் மட்டுமே நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் தோழிக்கு வழி சொல்லியபடி நின்றிருந்த கார்த்திகா மண்டப வாசலில் வந்து நின்ற காரைக் கண்டதும், கைகாண்பித்து அருகில் சென்று அவர்களை வரவேற்று குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
பதிலுக்குத் தோழியை அணைத்த சாதனா, “ஹேய் கார்த்தி! நீதான் கல்யாணப் பொண்ணு மாதிரியிருக்க” என்று கேலி செய்தாள்.
“ஆமாமா. நீ கூட கல்யாணப் பொண்ணோட தோழி மாதிரிதான் இருக்க என்றதும் அவள் முறைக்க... “வாங்கண்ணா. அப்பா அம்மா கூட்டிட்டு வரலையா?” என்று பிரேமிடம் கேட்டாள்.
“இல்லமா. அம்மாவுக்கு டிராவல் பண்ண உடம்பு ஒத்துழைக்கல. அதனால அப்பா எங்களை போயிட்டு வரச்சொல்லிட்டாங்க.”
“பரவாயில்லண்ணா. சாது அப்பாவுக்கு எப்படியிருக்கு?”
“நார்மலா இருக்காங்க கார்த்தி.” மணமேடை நோக்கி நடந்தபடி குழந்தையைப் பற்றி விசாரிக்க, குழந்தை தூங்குவதாக கார்த்தி சொன்னதும், “சரி போகும்போது பார்த்துக்கறேன்” என்றபடி மேடையேற, ஆனந்த் நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்க, வித்யாவை சாதனாவிற்கு அறிமுகப்படுத்தினாள் கார்த்தி.
“வித்யாவா உன் நாத்தனார் பெயர்! ஹேய் கார்த்தி, பெங்களுர்ல இருக்கிற என் ஃப்ரண்ட் நேம் கூட வித்யாதான். அவளும் நானும் செம க்ளோஸ்” என்று புன்னகையுடன் சொல்லி, “ஹாய்! கங்க்ராட்ஸ் புதுப்பொண்ணு” என்று கொண்டு வந்த கிஃப்டைக் கொடுத்தாள்.
வித்யா பதிலுக்கு நன்றி சொல்ல... கார்த்திகாவிடம் இருந்த குழந்தை அவள் தகப்பனிடம் தாவ, பிரேமிடம் குழந்தையைக் கொடுத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்த ஆனந்தின் புறம் திரும்பினாள். இதுவரை கார்த்திகா ஆனந்தை முறை சொல்லி அழைத்திராததால், அந்தத் தயக்கம் அப்படியே இருக்க, அதை உணர்ந்த கீர்த்தி “அண்ணா ஒரு நிமிஷம்” என்றாள்.
பேசிக் கொண்டிருந்தவர்களை அனுப்பி வைத்து, “சொல்லுமா?” என்று திரும்பியவன் கார்த்தியைப் பார்த்துப் புன்னகைத்து, அருகிலிருந்தவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தம் “வாங்க” என்ற போது அவர்கள் முகம் பார்த்ததும் சின்ன அதிர்வு வந்தாலும், “ஹாய் பிரேம். நான் எதிர்பார்க்கவேயில்ல. ஹவ் ஆர் யூ?” என்றான் சந்தோஷமாகவே.
சின்னதாக தயக்கம் பிரேமிற்குள் இருந்தபோதும், “பைன் ஆனந்த். நீங்க?” என சபை மரியாதைக்குக் கேட்டான்.
“அவங்க நல்லாதான் இருக்காங்க. நீ எப்படி நல்லாயிருக்க?” என்று ஒருமையில் கேட்டு, அனைவரின் அதிர்ந்த முகம் காணாது, “கார்த்தி உன் நாத்தனாருக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்கல. போயும் போயும் இவன்தானா கிடைச்சான்” என கோபத்தில் கேட்டாள்.