• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
17

மறுநாள் காலையிலேயே கல்லூரியைக் கட்டடித்து அக்காவைத் தேடி வந்த கிருபா குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்து, “ஹாய் அக்கா! எப்படியிருக்கீங்க?” என்றான் சிரித்தபடி.

‘அக்காவா? யார்ரா அது? நம்ம பயலுங்க அவ்வளவு சீக்கிரத்துல அக்கான்னு யாரையும் கூப்பிட மாட்டானுங்களே’ என்றெண்ணியபடி நிமிர்ந்து பார்க்க, அரும்பு மீசையில் சிரித்த முகமாய் நின்றிருந்தவன் கண்ணில்பட, “யார்பா நீ?” என்றாள் யோசனையுடன்.

“என்னக்கா நீங்க. நான் கிருபா நீங்க கிரின்னு கூப்பிடுங்க” என... ‘கிரி’ என்ற பெயரைக் கேட்டதும் கண்ணில் ஒரு பாசத்துடன் இருக்கையை விட்டு எழுந்தவள், “உனக்கு என்ன வேணும்? அக்கௌண்ட் ஓபன் பண்ணனுமா?” என்றாள் அன்பாக.

“அதெல்லாம் அப்பா பண்ணிட்டாங்கக்கா. நான் அமௌண்ட் போட வந்தேன்” என்று நூறு ரூபாயைக் கொடுத்து சலானுடன் புக்கையும் கொடுத்தான். அக்காவின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து, “என்னடா நூறு ரூபாய்னு பார்க்கறீங்களா? அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். எதாவது அர்ஜெண்ட்கு தேவைப்படும்னு கொடுப்பாங்க. நான்தான் கையிலிருந்தா செலவாகிரும்னு சேமிக்க வந்துட்டேன்” என்றான் பவ்யமாக.

“ம்... நல்ல பாலிசி தான்” என்று வங்கிப் புத்தகத்தில் அப்பா பெயர் சிவராமனையும், இவனையும் பார்த்தவள், ஹரிப்ரியா என்ற பெயரை அதனுடன் சம்பந்தப்படுத்த மறந்து, வேலையை முடித்துக் கொடுத்து அனுப்பினாள்.

தினமும் இதுவே தொடர்கதையாக, கிரியின் மேல் வந்த அன்பை தடுக்கவில்லை ராசி. நல்ல குணம். பொறுப்பான பையன் என்பதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு அது உடன்பிறப்பால் வந்ததை ராசி அறியவில்லை.

அதே போல் சிவராமனும் பையன் பெயருக்கு பணம் போடுவதாக சொல்லி, சொந்த மகளை சொந்தமாக்க முடியாமல் மூன்றாம் மனிதராய் பார்த்துச் செல்வார்.

இடையில் ஒருமுறை ராசியிடம் அவளின் அப்பா பற்றிய பேச்செடுக்க... “அப்பா பற்றி பேசுனீங்கன்னா உங்களை அத்து விட்டிருவேன்” என அத்துடன் வாய்மூடிக் கொண்டான் சரத்.

அந்த வாரம் இறுதியில் வேலை முடித்து விமானத்தில் மதுரை வந்து மஞ்சுவின் வீட்டைத் தட்டினான் சரத். முதலில் மணியை அனுப்புவதாக இருந்தவன் தனக்கும் ராசிக்கும் இடையில் யாரும் வேண்டாமென்று முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் செய்தான்.

கதவைத் திறந்த மஞ்சு முதலில் விழித்தாலும், பின் “வாங்க” என்று வரவேற்று, “என்ன திடீர்னு? வீட்டு விஷயமா அனுப்பினாங்களா?” என்றாள்.

“இல்லங்க அண்ணி. உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும். நான் வந்தது அவங்களுக்குத் தெரியாது.”

‘அண்ணி’ என்ற அழைப்பிலேயே அமிழ்ந்தவள், அவனை அங்கிருந்த ஷோஃபாவில் அமரவைத்து, “என்னை என்ன சொல்லி கூப்பிட்டீங்க?”

“அண்ணின்னு சொன்னேன். ஏன் தெளிவா சொல்லணுமா? ராசியோட பாட்டிக்கு நீங்க மருமகள்னா, ராசியோட மாமாவுக்குக்கு நீங்க முறைப்பொண்ணுன்னா, ராசிக்கு நீங்க சித்தின்னா எனக்கு அண்ணிதான?”

“ஷப்பா! உண்மையை சொல்லட்டுமா. எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு சுத்தமா புரியல. இதுல நான் உங்களுக்கு எப்படி அண்ணியாவேன்?”

“சரி இப்படி சொன்னா புரியுதா பாருங்க. ராசியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, லோஜினி அம்மாவுக்கு பையன் முறையாகி, உங்களுக்கு முறைப்பையன் முறையாகிருவேன்ல” என்றான் தெளிவாய்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்தவள், “நிஜமாவா! நீங்க பொய் சொல்லலையே?”

“ஏங்க.. பொண்ணு விஷயத்துல பொய் சொல்ற அளவுக்கு மோசமா வளரலங்க” என்று ரோஷமாக சொன்னவன். என்னை உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையாக்குறீங்களா?” என கேட்டான்.

“உங்களைவிட ஒரு பெஸ்ட் மாப்பிள்ளை எங்க பொண்ணுக்கு கிடைக்காது. அதே போல எங்க பொண்ணு மாதிரி உங்களுக்கும் கிடைக்கவே கிடைக்காது” என தீர்க்கமாக சொல்லியவள், “ஆனா, அத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே?”

“இன்னும் நான் அவங்ககிட்ட கேட்கவேயில்லயே அண்ணி. அவங்கன்னு இல்லை இன்னும் யார்கிட்டேயும் சொன்னதில்ல. உங்ககிட்ட பேசிட்டு ஒரு சின்ன விஷயம் கலக்ட் பண்ணிட்டு, அதைப் பொருத்து ப்ரொபோஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன். நான் இங்க வந்ததே, ராசியோட மாமா எப்ப எப்படி இறந்தாங்கன்றதை தெரிஞ்சிக்கத்தான்.”

“ரொம்ப சந்தோஷம் தம்பி. புருஷன்னு சொல்லாம மாமான்னு சொன்னதுக்கு.” பத்து வருடத்திற்கு முன்னர் கிரியின் திருமண பேச்சை ஆரம்பித்ததிலிருந்து, திருமணத்திற்குப் பின் அவர்களது மனநிலை சொல்லி முடித்து, “ராசாத்தி இந்த வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ள அவளுக்காக வீடு காலி பண்ணி சென்னைக்கு குடியேற நினைச்சாங்க. அங்க வீடு வாங்கி பத்திரம் முடிக்க போன அத்தான் திரும்பி வரும்போது, டோல்கேட் ஒண்ணுல ஒரு பொண்ணை காப்பாத்தப் போனதுல அந்தப் பொண்ணோட சேர்த்து இவங்களையும் குத்திட்டாங்க.”

மஞ்சு சொல்லும்போதே உண்மை தெரிந்தவன் சொல்லி முடித்ததும், “அண்ணி அவர் பெயர் கிரிதரனா?” என்றான் வேகமாக.

“ஆமா, உங்களுக்கெப்படி?” என்றாள் யோசனையாய்.

“அ..அந்தப்பொண்ணு என்னோட அக்கா பொண்ணுதான்” என்றான் உணர்ச்சி மேலீட்டால்.

“இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கல” என்று மஞ்சு சொல்ல... “நானும்தான்” என்றான் சரத்.

“இப்பவும் உங்க முடிவு மாறலையே?” என்றாள் எதுவும் மாறிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில்.

“இல்ல அண்ணி. இப்பத்தான் ஸ்ட்ராங்காயிருக்கு ராசியை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு. நான் கிளம்பறேன்” என்றவனை சாப்பிட வைத்து அனுப்பினாள் மஞ்சு.

காலை ஆறு மணிக்கெல்லாம் ராசியின் வீட்டு அலாரம் அடிக்க அதற்காகவே காத்திருந்தாற்போல் கதவைத் திறந்து, “ஹாய்” என்று சொல்லி திருதிருவென விழித்தாள் வெளியே நின்றிருந்தவனைப் பார்த்து. “சாரி நான் தீபான்னு...”

விழித்தவளின் விழியழகில் விரும்பியே விழுந்தவன், “ஏன் எனக்கு ஹாய் சொல்லமாட்டியா?” என்றான் அவளின் கண்களைக் கண்டு.

‘ம்..ம்கூம்.. ம்..’ என அங்குமிங்கும், மேலும் கீழும் தலையாட்டி, “சொ..சொல்லலாமே! தப்பில்லையே! ஹாய் உள்ள வாங்க” என்றாள் அசடுவழிய.

அவளின் அசட்டுத்தனத்தை ரசித்து சிரித்தபடி உள்ளே செல்ல, தன் தலையிலேயே மெல்ல தட்டி, “லூசு மாதிரி உளறுற ராசி” என்றாள். “தலையில தட்டாத ராசி. தலை வலிக்கும்” என்றான் அவளைப் பார்க்காமலேயே.

சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க, அவனோ அடுப்படி நோக்கி சென்று கொண்டிருக்க... ‘இவங்க என்னைப் பார்த்தாங்களா? பார்க்கலையா?’ என்றபடி சரத்தைக் கண்டாள்.

“என்னைப் பார்க்கிறதை விட்டுட்டு வந்தவங்களை கூப்பிடு. போ” என்றவன், “லோஜிமா எங்கயிருக்கீங்க?” என உள்ளே சென்றான்.

அவனையே பார்த்திருந்தவள் உதட்டைப் பிதுக்கி மெச்சுதலாய் தலையாட்ட, தீபா வரவும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

அதற்குள் சரத் வெளியே சென்று பயணப்பையை ஓட்டுனரின் உதவியுடன் உள்ளே வைத்து கால்டேக்ஸியை அனுப்பி உள்ளே வந்தான். வந்தவர்களை பல் தேய்க்கச்சொல்லி காஃபி கொடுத்து சற்றுநேரம் ஓய்வெடுக்க அனுப்பிய லோஜியிடம்...

“அம்மாஆச்சி இப்ப தீபாவை தூங்கவிட்டீங்கன்னா சாயங்காலம் தான் முழிச்சிப்பாங்க. ஏன்னா அவங்க கும்பகர்ணின்னு அவங்களே சொல்லியிருக்காங்க” என்றாள்.

“ச்சோ.. அப்படில்லாம் இல்ல பாட்டி. சும்மா அவளை கலாட்டா பண்ண சொன்னேன். ப்ரியா இரு உன்னை தனியா கவனிச்சிக்கறேன்” என்று ராசியை மிரட்டினாள்.

அவளோ தோள்குலுக்கி “நல்லா கவனிச்சிக்கோங்க. யார் வேண்டாம்னு சொன்னது” என்றாள் அசால்டாக.

“சரிமா நைட் ட்ராவல் பண்ணிருக்கீங்க. போய்ப்படுங்க. ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட எழுப்பறேன்” என்ற லோஜி வேலைக்கு வந்த பெண்ணிடம் இரண்டு நாளைக்கு அதிகப்படி வேலையிருக்குமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

கிளம்ப எழுந்த சரத்திடம் வந்த ராசி ஒரு பாக்ஸை நீட்டி, “ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றாள்.

“என்ன ராசி காலையிலேயே ஸ்வீட்?”

“அவளுக்கு மேனேஜரா ப்ரமோஷன் கிடைச்சிருக்குபா. இதுக்காகவே எக்ஸாம்கு விழுந்து விழுந்து படிச்சான்னா பாரேன்” என்றார் பெருமையாக.

‘இவ்வளவு சின்ன வயசுல மேனேஜர் போஸ்டிங்.’ ராசியை எண்ணுகையில் பெருமையாக இருந்தாலும் அவளை கலாட்டா பண்ண எண்ணி, “லோஜிம்மா விழுந்ததுல அடி எதுவும் படலையே” என்ற சரத்திற்கு செல்லமாக ஒரு அடி போட்டு,” உனக்கும் எங்க பாப்பா மாதிரி வாய் கொஞ்சம் ஜாஸ்திதான்” என்றபடி உள்ளே சென்றார் லோஜி.

“ஹேய்! க்ரேட் நியூஸ். கங்க்ராட்ஸ் ராசி” என்று கைநீட்ட... நீட்டிய கையை பற்றிக்குலுக்கி “தேங்க்யூ சரத்” என்றவள் கையை விட மனமில்லாதவன், “முன்னாடியே ஏன் சொல்லலை? எப்ப ஜாய்ண்ட் பண்ணப்போற? போஸ்டிங் எங்க?” என்றான் விடாமல்.

“அது இன்னும் ஒன் வீக்ல ஜாய்ண்ட் பண்ணனும். எங்க ப்ராஞ்ச்லயே கிடைச்சா நல்லாயிருக்கும்னு கேட்டிருந்தேன். எங்க மேனேஜருக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருந்ததால, விஆர்எஸ் வாங்கிட்டார். அதனால இங்கேயே போஸ்டிங் போட்டுட்டாங்க. இந்த மன்த் என்டிங்ல ஆடிட்டிங் வேற வருது. ஸோ, கொஞ்சம் டென்சனும் இருக்கு.”

“பயம் எதுக்கு ராசி. எதாவது தவறு பண்ணிருவோம்னா. ஏற்கனவே கணக்கெல்லாம் பினிஷிங் டைம்ல இருக்கும். நீ தைரியமாயிரு. இன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா ராசி?”

“இல்லங்க. இன்னைக்கு செகன்ட் சாடர்டே. ரெண்டு நாள் தீபாவோட சேர்ந்து சென்னையை சுத்தப்போறேன். நீங்க வர்றீங்க தான?” என்றவளுக்குள் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது.

அவளின் எதிர்பார்ப்பை மறுத்து, “இல்லமா எனக்கு வேலையிருக்கு. உனக்கு தெரியும்தான நேத்து வேளச்சேரி ஏரியாவுல ஒரு குழந்தை காணோம்னு நியூஸ் வந்திச்சே?”

“ம்.. பார்த்தேன்” என்றவளிடம், “அந்த குழந்தை காணாமல் போனது ஃபேக் நியூஸா, இல்ல உண்மையான்னு விசாரிக்கச் சொல்லியிருந்தேன். உண்மைதானாம். அதனால எங்க சார்புலயும் ஒரு தேடுதல் வேட்டை. போலீஸ்கும் ஹெல்பாயிருக்கும். அதே சமயம் பெண்குழந்தை வேற பெத்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்ல. நான் கிளம்புறேன் ராசி” என்று அதுவரை பிடித்திருந்த கையை விடுவிக்க மனமில்லாமல், அவளது மனதையும் கிளறிவிட்டுச் சென்றான் இனிமையாக.

‘ஷப்பா... என்ன ஆளுடா மாமா நீ!’ என மனம் கௌண்ட் கொடுக்க... அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்துரைக்க அதை ஏற்று நன்றி சொல்லி சிரித்தபடியே சென்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சனி, ஞாயிறு இரு தினங்களும் சென்னையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பார்த்து வர, இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை தீபாவிற்கு. திங்களன்று யோகேஷ் சரத்துடன் வெளியே சென்றிருக்க.. தீபா சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை அடுக்கினாள்.

“நான் ஹெல்ப் பண்ணவா?” என்ற ராசியை... “என்ன கேள்வி ப்ரியா. உள்ள வா. ஆனா, உன்னோட ஹெல்ப் எனக்கு தேவைப்படாது. மேக்சிமம் எல்லாமே பினிஷ்ட் தான். ரெண்டு நாளா சுத்தினதுல உன்கிட்ட தனியா பேச டைம் கிடைக்கல. கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்.”

“சரி தீபா. உங்க அப்பா, அம்மா உங்களை சென்டாஃப் பண்ண வரலையா?”

“இல்ல. வந்தா அம்மா அழுவாங்க. அவங்களுக்கு இப்ப நான் ஒரே பொண்ணு. தூரத்துல குடுக்க வேண்டாம்னாலும், வீடு தேடி வந்தவங்களை மறுக்க முடியாம சம்மதிச்சிட்டாங்க. அதுவுமில்லாம அப்பாக்கு தோட்டத்துல பயிர் எடுக்கிறதால ஆளுங்களை தனியாவிட்டு வரமுடியாதுன்னு வரல.”

“உங்க ஹஸ்பண்ட் எங்க?” என இழுத்தவளிடம்...

“மாமா ரெண்டு நாளைக்கு முன்னாடி குழந்தை காணாமல் போன கேஸ்ல குழந்தையை கண்டுபிடிச்சிட்டாங்களாம்.

“குழந்தை கிடைச்சிருச்சா. தேங்க் காட்.”

“ஆமா ப்ரியா. அந்த குழந்தையை ஒப்படைக்கும் போது அதையெல்லாம் பார்க்கணும். அந்த திகில் அனுபவம் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சிக்கணும்னும் ஆசை. அதான் ஹரி மாமா கூட்டிட்டுப் போயிருக்காங்க.”

“தீபா என்ன பெயர் சொன்னீங்க?”

“ஹரி!”

“யார் சரத்தா?”

“ம்... ஆமா அவங்கதான். ஃபுல் நேம் ஹரிசரத். உனக்கு இதுவரை சொல்லலையா?” என கேள்வியாகப் பார்த்து, “உங்க ரெண்டு பேருக்கும் பெயர் பொருத்தம் சூப்பர். ஹரி-ஹரிப்ரியா. பேசாம எங்க மாமாவை கல்யாணம் பண்ணிக்கோ ராசி. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் தான்னு நினைக்கிறேன். மாமா உன்னை நல்லா பார்த்துப்பாங்க ராசி.”

“ம்கூம்... இல்ல அது சரிவராது. நீங்க வேற பேசுங்க” என்றாள் வேகமாக.

“ஹ்ம்.. உங்க ரெண்டு பேருக்கும் எல்லா பொருத்தமும் இருக்குன்னு நினைச்சேன். என்ன பண்றது காலத்துக்கும் இப்படியே தனிமையிலேயே வாழணும்ன்றது மாமாவோட தலையெழுத்து போல” என்று ராசியை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் அவள் வார்த்தையின் எதிரொலிக்காக.

உதட்டை பல்லால் கடித்தபடி, “ஏன் தனியா இருக்கணும்?” என மெதுவான குரலில் கேட்க...

“அதான் சொன்னேனே அவங்க தலையெழுத்துன்னு. அதை நம்மளால மாத்தவா முடியும். முதல்ல எங்கக்காவை இக்கட்டான சூழ்நிலையில கட்டிக்கிட்டாங்க. அவளும் போயிட்டா. சரி அவரா விரும்புற பொண்ணு உன்னை கட்டிக்கிட்டா அவங்க லைஃப் நல்லாயிருக்கும்னு நினைச்சேன். நீ சொல்றதைப் பார்த்தா அதுக்கும் சான்ஸ் இல்லன்னு தோணுது. சரி அதைவிடு ஏன் என்னை வாங்க போங்க சொல்ற. உன்னைப் பார்த்தா எங்கக்காவைப் பார்க்கிற மாதிரி இருக்கு. அவளை அக்கான்னு சொன்னதில்லை. அந்த ஃபீல் இன்னுமே இருக்கு. ஆனா, உன்னை கூப்பிடணும்னு தோணுது. கூப்பிடவா?” என்றாள் மென்மையாக.

“என்ன தீபா நீங்க. நீங்க என்னோட ஒன் இயர் சீனியர். நீங்க போய் என்னை? சும்மா ப்ரியான்னே கூப்பிடுங்க. இந்த நேம் சொல்லி கூப்பிடுறது ஃபேமிலிலன்னு பார்த்தா நீங்களும், உங்க அப்பா, அம்மாவும் தான். மத்தபடி ஸ்கூல், காலேஜோட முடிஞ்சிருச்சி.”

“ஒண்ணு சொல்லட்டுமா ப்ரியா. உன்னோட கண்ணைப் பார்த்தா எங்கக்கா நியாபகம் தான் வருது. எனக்கு விவரம் தெரிஞ்சி எங்க ரிலேடிவ்ஸ்லயே அவளுக்கு மட்டும்தான் கண் உன்னை மாதிரி ப்ரௌன் கலர்ல இருக்கும். ஒரு சின்ன சேஞ்ச் அவளுக்கு இடது கண்ணுல புள்ளியா ப்ளாக்கலர்ல மச்சம் இருக்கும். ஹ்ம்.. எங்கக்காவுக்கு மட்டும் மாமா மேல அந்த நினைப்பு வராமல் இருந்திருந்தா, மாமாவும் யாரையாவது கல்யாணம் முடிச்சி சந்தோஷமா இருந்திருப்பாங்க.”

“என்ன விஷயம், எப்படி இறந்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா தீபா?”

“இதுல மறைக்க என்னயிருக்கு ப்ரியா. சின்ன வயசிலிருந்து மாமா மேல ஆசை வளர்ந்திருந்திருக்கா. ஹரி மாமாவுக்கு தூக்கி வளர்த்த பாசம் மட்டும்தான். அக்காக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்கலாமான்னு ஜாதகம் பார்க்க போனப்ப மூணு மாசத்துல செத்துருவான்னு சொல்லிட்டாங்க. அதே நேரம் அக்கா மாமாவை விரும்புறது தெரிஞ்சி மாமாகிட்ட அம்மா சாகப்போறவளை சுமங்கலியாய் அனுப்புன்னு கேட்டு கெஞ்சிருக்காங்க. அதுக்கு மாமா ஒரு வார்த்தை கேட்டாங்களாம் பாரு அம்மாகிட்ட...”

சரத் தன் அக்காவிடம் என்ன சொல்லியிருப்பான் என்பதை தெரிந்து கொள்ள, “எ...என்ன கேட்டாங்க?” என்றாள் ஆர்வத்தில்.

“உங்க பொண்ணு என் பொண்ணு இல்லையாக்கான்னு கேட்டிருக்காங்க.”

‘வாட் எ மேன்யா!’ என்று ராசி மனதிற்குள் வியக்க, ராசிக்குள் அவனை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. தீபா சொல்லச் சொல்ல அவள் மனதில் மலையளவு உயர்ந்தான் சரத்.

ராசியை கவனிக்காத தீபா, “அம்மா ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டாங்களாம். எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அம்மா சொல்லக் கேட்ட எனக்கே அதைத் தாங்க முடியலையே. வேற வழியே இல்லாம தாலி கட்டின மாமா நிலையை நினைச்சிப் பார் ப்ரியா. ப்ச்... விதி அவங்களுக்குள்ள முடிச்சிப்போட்டு, அந்த முடிச்சும் பத்து நாளைக்குள்ள அறுந்து எங்கக்கா உயிரைப் பறிச்சிருச்சி.”

“உங்கக்கா எப்படி இறந்தாங்க தீபா?”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி மாமா இறந்திட்டதா கனவு கண்டு பயத்துல முழிச்சவ, யார்கிட்டேயும் சொல்லாம திருச்சிக்கு மாமா படிச்ச காலேஜ்கு கிளம்பிட்டா. அப்ப மாமா திருச்சியில பி.காம் படிச்சிட்டு அப்படியே சி.ஏ பண்ணிட்டிருந்தாங்க. திருச்சி போற வழியில விராலிமலை டோல்கேட்ல யாரையோ பார்த்து மாமான்னு நினைச்சி இறங்கிப் போயிட்டா. இவ தனியா போறதைப் பார்த்த ஒருத்தர், இவகிட்ட மூணுபேர் வம்பிழுக்கிறதைப் பார்த்து இவளைக் காப்பாத்த வந்தவரும், இவளும் சேர்ந்து...” என முடிக்காமல் நிறுத்தி அழுகையில் குரல் தளும்ப...

“ரெண்டு பேரையும் சாகுற அளவு அடிச்சிப் போட்டாலும், தான் சாகுறதுக்குள்ள அந்த மூணு பேரையும் சாகடிச்சிட்டாங்க எங்க மாமா” என்றாள் ராசி கண்ணீர் வழிய சற்று பெருமையுடன்.

சட்டென்று அழுகையை நிறுத்தி “ப்ரியா உனக்கு எப்படி?” என தடுமாற...

“அதான் சொன்னேனே மாமான்னு. அவர்தான் என்னோட காட்பாதர். அவர் இல்லைன்னா ராசின்னு ஒருத்தி இல்லாமலே போயிருந்திருப்பா. விதி அவரோட எனக்கு தப்பான உறவுல முடிச்சி போட்டிருச்சி. அதே விதிதான் இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பத்தைக் கொடுத்தது. நீங்க சொன்னதுக்கு ஒருவாரம் முன்னாடி தான் நான் இவங்க வீட்டுக்கு வந்தேன் அதுவும் மருமகளா” என்றாள்.

“ப்ரியா” என்று அதிர்ந்த தீபாவைப் பார்த்து...

“அதுவும் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே” என்றதும் தீபாவின் அதிர்ச்சி இன்னும் அதிகரிக்க... “எனக்குன்னு யாருமில்லைன்னதும் ஒரு சின்ன விஷயத்தினால என் சித்திதான் பொறுப்பை சுமக்க பயந்து இப்படி ஒரு காரியம் பண்ணிட்டாங்க. மனைவியா கூட்டிட்டு வந்தவளை மாமா மகளா பார்த்தாங்க. எனக்கு அந்த வயசுல விவரம் பத்தாது தீபா. அதுக்கு காரணம் நான் வளர்ந்த விதம் அப்படி.”

“சித்தியோட கண்ட்ரோல் அப்படி. தன் அக்கா பொண்ணை யாரும் தப்பா ஒரு வார்த்தை சொல்லி தன்னோட வளர்ப்பை குறை சொல்லக்கூடாதுன்னு. ஸ்கூல்ல மத்த பிள்ளைங்க எதையெதையோ பேசினாலும் படிப்புதான் முக்கியம்னு சித்தி சொல்லி கொடுத்ததும், யார்கிட்டேயும் பேசக்கூடாதுன்னு சொல்லி அனுப்பியதும் மத்தவங்ககிட்டயிருந்து விலக்கி வச்சிருந்தது. வீட்ல மட்டும் தம்பி தங்கையோட விளையாடுவேன். எனக்குன்னு ஒரு வட்டம் அது படிப்பு மட்டும்தான். இங்க வந்த உடனே நானும் பெரிய பொண்ணாயிட்டேன். என் மனபாரம் இவங்களுக்கு ஏற, எனக்காக ஊரையே காலி செய்ய முடிவு பண்ணி, மாமா சென்னைக்கு போயிட்டு திரும்பி வர்ற வழியிலதான் இந்த சம்பவம் நடந்தது. எல்லாம் என்னால தான்.. என்னோட ராசி போல” என்று அழ ஆரம்பித்தாள்.

“ப்ரியா ப்ளீஸ் அழாத இதை நான் எதிர்பார்க்கல. ஷாக்காயிருக்கு. எப்படி உங்க சித்திக்கு மனசு வந்தது?” என்று ராசியின் கண்ணீர் துடைக்க...

“அவங்களை குறை சொல்லி என்ன ஆகப்போகுது தீபா. என்னைப் பெத்தவனே வேண்டாம்னு தூக்கிப் போட்டப்ப பதினோரு வருஷமா நல்லது கெட்டது சொல்லிக்குடுத்து, தன்னோட பிள்ளைங்களுக்கு சமமா பார்த்துக்கிட்டாங்க. அந்த நன்றி எப்பவும் எனக்கு உண்டு. என் விதி இதுதான்னும் போது அவங்களாலதான் என்ன செய்ய முடியும். ஒருநாள் நைட் சித்தப்பாகூட பேசினதைக் கேட்டேன், நான் செய்யுற பாவம் என்னை மட்டும் சேரட்டும். என் அக்கா பொண்ணு நல்லா வாழ்ந்தா போதும்னு சொல்லிட்டிருந்தாங்க. அந்த டைம்ல எதுவும் புரியல.. பின்னாடி ஒருநாள் ஏன் அப்படிப் பண்ணினாங்கன்னு யோசிச்சப்ப புரிஞ்சது. அந்த மனசு யாருக்கு வரும் சொல்லுங்க. கண்டிப்பா அவங்களை ஒருநாள் போய் பார்த்து நன்றி சொல்லணும். என்னால அவங்களுக்கிருக்கிற குற்றவுணர்ச்சி போனாதான், மனசளவுல அவங்க ப்ரீயா இருப்பாங்க தீபா.”

“ம்... உங்கப்பா உயிரோட இருக்காங்களா ப்ரியா?”

“ஹ்ம்.. இப்ப இருக்காரா தெரியாது. இருந்தாலும், இல்லாட்டியும் ஒண்ணுதான். எனக்கு என்னோட அம்மாஆச்சி மட்டும்தான் கடைசிவரை.”

“அப்ப கல்யாணம்?”

கல்யாணம் என்றதும் சரத்தின் முகம் நினைவில் வர அதை உதறி, “ப்ச்... சான்ஸ் இல்ல தீபா. என்னதான் இல்லைன்னாலும், அது செல்லாத கல்யாணமா இருந்தாலும் எனக்கு மேரேஜானது நிஜம்தான. அதுக்காக அதைக் காரணம்னு சொல்ல வரல. எனக்கு அம்மாஆச்சி முக்கியம். அவங்களை கடைசிவரை பார்த்துக்குவேன்னு மாமாவுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். ப்ராமிஸ் பண்ணலன்னாலும் பார்த்துக்குவேன்றது வேற. இருந்தாலும் கல்யாணம்னா பயம் இருக்கு.”

“எங்க மாமா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க ப்ரியா. பாட்டியையும் சேர்த்துத்தான்.”

சட்டென்று சிரித்தவள் “ம்... தெரியும். பார்க்கலாம் விதி எனக்கு என்ன வச்சிருக்குன்னு. அப்புறம் இதுவரை நான் யார்கிட்டேயும் என்னைப்பற்றிச் சொன்னதில்ல. ஸோ, நீங்களும் இத்தோட நான் சொன்னதை மறந்திடுங்க.”

“கண்டிப்பா என் ஹஸ்பண்ட்கிட்ட கூட சொல்லமாட்டேன் போதுமா.”

இரவு விமானத்திற்கு லோஜியை வேண்டாமென்று சரத்தின் காரிலேயே சென்று வழியனுப்புகையில் யோகேஷிடம் ராசி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ஹரியிடம் வந்த தீபா, “மாமா ப்ரியா ரொம்ப நல்ல பொண்ணு. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. கல்யாண விஷயத்துல உங்க ஜாதி.”

“உனக்குத் தெரியுமா பாப்பா?”

“கேள்வியிலேயே உங்களுக்குத் தெரியும்னு தோணுது. என்கிட்ட சொல்லக்கூடாது சொன்னா. நீங்க யாரு, உங்க பவர் என்னன்னு தெரியல புள்ளைக்கு. உங்களை அவளுக்கு பிடிச்சிருக்கு மாமா. இருந்தாலும் தயங்குறா சீக்கிரமே மேரேஜ் பத்திரிக்கையை எதிர்பார்க்கிறேன்” என்றவளுக்குத் தெரியுமா சரத்தின் சத்தியம். அதை விட்டு ராசியை கைபிடிப்பானா!”

யோகேஷ், தீபா விமானத்திற்கு நேரமாக, இவர்களைவிட்டு நகர்ந்து சென்று திரும்பிய தீபா இருவரின் ஜோடியைப் பார்த்து விரல் வைத்து “சூப்பர்” என்றாள் இருவருக்குமாய். அதில் தோன்றிய கன்னச்சிவப்பை மறைக்க “வாங்க போகலாம்” என்று குனிந்தபடி நகர்ந்தவளை சரத் பிடித்திழுத்தான்.

அவன் மேலேயே விழுந்தவள் சுதாரித்து ‘ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை’ என்பதுபோல் அவனை முறைக்க...

அவனோ தன் கன்னத்தில் போட்டபடி, அவளைத் தாண்டிய டிராலியைக் காட்டினான்.

“உங்களை..” என்றவள் வேகமாக நடந்து காரை நோக்கிச் சென்றாள்.

“ஹ்ம்.. நல்லதுக்கு காலமே இல்லப்பா” தோள்குலுக்கி அவள் பின்னே சென்றான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top