• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
16


“என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. அவளை அப்பப்ப பார்த்திட்டிருக்கிற ஒரு சந்தோஷமேனும் வேணும் தம்பி. அது கிடைச்சா போதும்பா. என் பொண்ணோட போட்டோ கிடைக்குமா?” என்றார் தன்னைத்தானே தேற்றி.

“போட்டோ எதுக்கு சார். அதான் நேர்லயே பார்த்து பேசினீங்களே” என்றான் சிரித்தபடி.

“யார் நானா! நான் பார்த்தேனா? நான் எப்போ, அதை நீங்க பார்த்தீங்களா?” என்றார் ஆச்சர்யம் கலந்த பரபரப்புடன்.

“நேத்து காலையில பார்த்தீங்க. உங்க பொண்ணு பேர்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணச்சொல்லி உங்க பொண்ணுகிட்டேயே கேட்டீங்க” என்றான் அவருக்குப் புரியும் விதமாய்.

“தம்பி அ..அது என் பொண்ணா? நேத்து பார்க்கும்போதே ஏதோ ஒரு உணர்வு அவளையே பார்த்திட்டிருக்கணும்னு தோணிச்சி. அதனால்தான் பேச்சை வளர்த்திட்டிருந்தேன்” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

ஒரு போட்டோவைக் கொடுத்து, “இதான் உங்க பொண்ணு” என்றவன், தன் செல்லை எடுத்து லோஜியைக் காண்பித்து, “இவங்க மீனலோஜினி அம்மா. ராசிக்கு எல்லாமே எல்லாமாகவும் இருக்கிறவங்க. இருக்கப்போறவங்க” என்றான்.

போனை பார்த்தே கையெடுத்து கும்பிட்டவர், “என் பொண்ணை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? முன்னப்பின்ன தெரியாத பொண்ணுன்னா வயசுல சின்னவளாயிருந்தாலும் மரியாதையா பேசுவாங்க. உங்களை தப்பா சொல்லலை தம்பி யதார்த்தத்தைச் சொன்னேன்” என்றார் வேகமாக.

“ம்... ரொம்பவே தெரியும்” என்றான் குரலில் குழைவுடன் கண்ணில் கனவுடன்.

அவனை சற்று வித்தியாசமாக பார்த்தவர் எதுவும் பேசாமல் “நான் வர்றேன் தம்பி. ஃபீஸ் நீங்க வாங்கிக்கறீங்களா? இல்லை ரிசப்ஷன்ல கொடுக்கவா?”

அந்நேரம் உள்ளே நுழைந்த மணியிடம் அவர் பொறுப்பை ஒப்படைத்தான். வெளியே சென்றவரை அழைத்து, “நீங்க ராசிகிட்ட இப்போதைக்கு அப்பான்னு சொல்லிக்க வேண்டாம் சார். நானே பக்குவமா பேசி சரி பண்ணி உங்களுக்குச் சொல்றேன்” என்றான்.

“என் பெண்ணை பார்த்துக்கவாவது செய்யலாமா தம்பி?”

“கண்டிப்பா பாருங்க. பேசுங்க.. உங்களை அறிமுகப்படுத்தாம” என்றான் கறாராய்.

எங்கே தன்னால் தன் மகள் மனக்கஷ்டப்படுவாளோ என்ற அவனின் கவலையிலும், அக்கறையிலும் மனம் நெகிழ, “கண்டிப்பா. நானா உண்மையை சொல்லமாட்டேன்” என்றார் அவனுக்கான பதிலாய்.

அவர் சென்றதும், “என்னடா உன் மாமனாருக்கு பொண்ணை பார்க்க நீ அனுமதி கொடுக்கிற. அவர் என்னடான்னா உனக்கு பேவரா பதில் கொடுக்குறாரு. என்ன விஷயம்டா?” என்றான் கேலியாக.

“அவருக்கு நான்தான் மருமகன்னு முடிவு பண்ணிட்டார்டா. அதான்.”

“நடத்து நடத்து. சரி உன்னோட புரொபோசல் எந்த லெவல்ல இருக்கு.”

“வெறும் லுக் மட்டும்தான்டா. ஆனா, எனக்கு இன்னொரு நியூஸ் கலக்ட் பண்ணனுமே நீ போறியா? இல்லை வாசனை அனுப்பவா?”

“என்ன நியூஸ்னு சொல்லு பார்த்துக்கலாம்.”

“இது என்னோட பெர்சனல். ஐ மீன் ராசியோட ஹஸ்.. சாரி மாமா எப்படி எப்ப இறந்தாங்கன்னு தெரியணும்.”

“ஓ... திரும்பவும் மதுரை போகணுமா?”

“ஆமாடா. லோஜிம்மா, ராசி தவிர விஷயம் தெரிஞ்ச ஒரே ஆள் மஞ்சு அண்ணிதான்.”

“என்னது அண்ணியா! இது எப்ப?” என்று வாய் திறந்தவனின், வாய் மூடி “ராசியை எப்ப எனக்கானவள்னு ஆக்கினேனோ அப்பல்லயிருந்து.” குழப்பமாக பார்த்த நண்பனிடம், “அதை அப்புறமா விவரமா சொல்றேன்” என்றான்.

“அது சரிடா. நாங்கள்லாம் போனா டீடெய்ல்ஸ் கிடைக்காது. நீ போனா ஒருவேளை உண்மையை சொல்ல சான்ஸ் இருக்கு. ஏன்னா ராசி ஃபேமிலி மேல ரொம்ப அக்கறையுள்ளவங்க. நான் சாதாரணமா போயி விசாரிச்சப்பவே உறவுமுறை தவிர எங்களுக்குள்ள எதுவுமில்லன்னு சொன்னாங்க. ஆனா, ராசிகூட பேசினதை வச்சிப்பார்த்தா ரொம்ப க்ளோஸ்னு தோணுது. அவங்க குடும்பத்துல எத்தனை பேர்னு கூட விசாரிக்க முடியல. இந்த லட்சணத்துல நீ ஃபேமிலி டீடெய்ல்ஸ் கேட்கிற. எப்படிடா?”

“ப்ச்... அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ போறியா இல்லையா சொல்லு?”

“போறேன்டா. என்ன விஜிதான் கடிக்கிறா. அடிக்கடி லாங் டூரான்னு.”

“ஏன்டா உன்னை மும்பை, கல்கத்தான்னா அனுப்பறேன். நம்ம ஊர் சைடுதான.”

“ம்க்கும்.. அப்படியே வடக்க அனுப்பிடப்போற. போடா எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலமும் அரைகுறைன்னு அனுப்புறதில்ல. தமிழ்நாட்டுலயே சுத்த விடுற.”

“வெளி மாநிலமோ, வெளிநாடோ அனுப்பினா உன்னைக் கொன்னுருவேன்னு தங்கச்சி சொல்லியிருக்காடா. என்னால உன் உயிருக்கு ஏன் ஆபத்து வரணும்னு அனுப்பறதில்லை” என்றதும், மணி பல்லைக்கடிப்பது சரத்திற்கு கேட்டது.

“ரெண்டுபேரும் என்னவோ பண்ணி தொலைங்க. இப்ப நான் கிண்டி வரை போக வேண்டியிருக்கு” என்று கிளம்பினான்.

மதுரை வேலை முடிந்ததும் அடுத்தடுத்து என்ன எப்படி பேசி சம்மதிக்க வைப்பதென்று யோசிக்கலானான். யோசனையின் நடுவே போன் வர எடுத்து பேசிய சரத் உள்ளே வரச் சொல்ல, வாட்டசாட்டமாக இளம் வயது பையன் ஒருவன் வந்து நின்றான். பார்த்து பழகினாற்போல் முகத்தோற்றம் கொண்டவனை “உட்காருப்பா” என்றான் சரத்.

“ஹலோ சார் நான் கிருபா” ஷார்ட்டா கிரி சொல்வாங்க. இப்ப வந்துட்டுப் போனாரே சிவராமன் அவரோட பையன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி அதன்பின் அமர்ந்தான்.

‘ஓ...’ என்ற சரத்திற்குள், ‘பார்றா! திடீர்னு ஒரு மச்சினன் வந்து நிற்கிறான். நமக்கு நல்ல நேரம்தான் போல. நாம நினைக்காதது எல்லாமே நடக்குது’ என நினைக்க...

“சாரி சார். இது டிடெக்டிவ் ஆஃபீஸ்னு தெரியும். ஆனா, எங்கப்பாவுக்கு இங்க என்ன வேலைன்னு தெரியல. சமீபத்துல கொஞ்ச நாளாவே முகமே சரியில்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தாங்க. என்னன்னு கேட்டா பதிலில்லை. தற்செயலா இந்தபக்கம் வந்தப்ப அப்பாவை பார்த்தேன். அவர் முகத்துல ஒரு தெளிவு இருந்தது. அப்பாவோட பிரச்சனை சரியாகிருச்சின்னு தோணுது. அப்பா ஹேப்பியா இருக்காங்கன்றதே எனக்கும் சந்தோஷம். காரணம் நான் தெரிஞ்சிக்கலாமா?” என்றான்.

அவன் பேசுவதைக் கேட்ட சரத்திற்கு ராசியின் தம்பியென்ற எண்ணமே இனித்தது. அவனின் அக்கறையான பேச்சி கவர, அவனிடம் உண்மையை சொல்வதில் தவறில்லை என்று, “நான் சொல்றதை எப்படி எடுத்துப்பன்னு தெரியல. பொதுவா எங்களை நம்பி கேஸ் ஒப்படைக்கிறவங்க பற்றிய டீடெய்ல்ஸ் யாருக்கும் சொல்லமாட்டோம். இதை உன்கிட்ட சொல்றதுக்கு காரணமிருக்கு. அது ராசி.”

இடையில் பேச வந்தவனை தடுத்து, “ராசி யார்னு சொல்றேன் தவறா எதுவும் கற்பனை பண்ணிக்காத. நான் சொல்றதை ஜீரணிச்சி, மன்னிச்சி, ஏத்துக்கணும். ஜீரணிக்கிறது நான் சொல்லப்போற விஷயத்தை. மன்னிக்கிறது உங்க அப்பாவை. ஏத்துக்கிறது உன் அக்கா ராசியை.”

“அக்காவா!!” என அதிர்ந்து இருக்கையிலிருந்து எழுந்தவனை, தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து அவனை அமர்த்தி, டேபிளில் அமர்ந்த சரத், கிரிக்கு புரிகிறார்போல் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்தெடுத்து நிதானமாக சொன்னான்.

கேட்டபடி அமர்ந்திருந்த கிருபாவுக்கு பேச்சே வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு ஒரு அக்கா. அதுவும் அப்பாவின் முதல் சம்சாரத்தின் மகள் என்று தெரிந்தும் கோபம் வரவில்லை. அக்காவின் அனுபவத்தைக் கேட்டதும் தன் அப்பாவின் மேலிருந்த மதிப்பு தன்னாலேயே கீழிறங்கியது. ஒரு மனிதனின் சுயநலத்தால் ஒரு பெண்ணின் வாழ்வே கேள்விக்குறியாய் இருக்கிறதே.

அவனையே பார்த்திருந்த சரத்திற்கு பதில் சொல்ல நிமிர்ந்தவன்... சரத் கொடுத்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து, “நீங்க சொன்னதுல முதல்ல இந்த விஷயத்தை ஜீரணிக்க முயற்சிக்கிறேன். இரண்டாவது வாய்ப்பே இல்லை. மூணாவது கண்டிப்பா அவங்க என்னோட அக்காதான். இனி அவங்க என்னோட பொறுப்பு. எங்கம்மாகிட்ட பக்குவமா பேசி அக்காவை ஏத்துக்க வைக்க வேண்டியது என்னுடைய வேலை” என்றான் தெளிவாக.

“உங்கப்பா...” என்ற சரத்தை தடுத்து... “இல்ல சார் மனுசன்னா கொஞ்சமாவது மனசாட்சி இருக்கணும். அதுவும் நாலு வயசுக் குழந்தையை அம்போன்னு விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சி தேடினா அவர் நல்லவராயிருவாரா? எனக்கு நல்ல அப்பாவா இருந்தவர், நல்ல மனுசனா இருக்க மறந்திட்டாரே சார். கேட்கிற எனக்கே கஷ்டமாயிருக்கே. அனுபவிச்ச அவங்களுக்கு எப்படியிருக்கும்” என்றான் கண்கள் கலங்க.

அவனின் வார்த்தைகளில் சில நிமிடம் சரத்தே வாயடைத்துப் போனான் அவனின் நிதானமான பேச்சைக்கண்டு. “அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” என்றான் கிரியை நோக்கி.

“ம்... செய்யணும் சார். நிறைய செய்ய வேண்டியிருக்கு. முதல்ல என்னோட அக்காவை மீட் பண்ணனும். பண்ணலாமா?”

“ஷ்யூர். ஆனா...” என நிறுத்தியவனிடம்..

“ஆனா, என்ன சார்? நான் யார் என்னன்றதை சொல்லக்கூடாது அப்படித்தான?” சம்மதமாக தலையசைத்த சரத்திடம், “நான் சொல்ல மாட்டேன் சார். தெரிய வைப்பேன் நான்தான் அவங்க தம்பின்னு தெரிய வைக்கிறேன்.”

“ம்... குட். உன்மேல் எனக்கு நம்பிக்கையிருக்கு. இதோ உன் அக்கா போட்டோ. உங்கப்பாவுக்கு ஒரு காப்பி கொடுத்துட்டு, ஃபைல்ல வைக்கிறதுக்கு ஒண்ணு வச்சிருந்தேன்.”

புகைப்படத்தையே கனிவுடன் பார்த்திருந்தவன், “இந்த போட்டோவை அப்பா பார்த்திருந்தா எனக்கு வேண்டாம் சார். வேற போட்டோ வேணும் தர முடியுமா?”

“ஏன்? இந்த போட்டோவுக்கு என்ன?” என கேள்வியாய் பார்த்தவனிடம்...

“நீங்க கொடுங்க சார். நான் பண்ணப்போற ட்ரிக்ல எங்கப்பா ஆட்டோமேடிக்கா அம்மாகிட்ட உண்மையை ஒத்துக்குவாங்க. நான் அதை பயன்படுத்தி அம்மாவை கன்வின்ஸ் பண்ணிருவேன்.”

“நான் நினைச்சதைவிட நீ செம ஸ்பீடுதான் போ. எப்படியோ ராசி சந்தோஷமாயிருந்தா போதும்.”

விசித்திரமாக அவனைப் பார்த்து, “எங்கக்காவை லவ் பண்றீங்களா சார்?” என்றான் நேரடியாக நெத்தியடியாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இந்த நேரடி தாக்குதலில் வியந்தே போனான் சரத். பின், “ஏன் நான் லவ் பண்ணக்கூடாதா? உன் அக்காவை எனக்குத் தரமாட்டேன்னு சொல்லிருவியா என்ன?” என மிரட்டி, “உன் அக்காவை என்னைவிட யார் நல்லா பார்த்துப்பாங்க. உங்கக்கா ஒரு டாம். அவளை சமாளிக்க என்னால மட்டும்தான் முடியும்” என்று கிரியைப் பார்த்து கண்ணடிக்க...

“மாம்ஸ்! இதெல்லாம் ஓவர். எங்கக்கா டாமா இருங்க நான் மாட்டி விடுறேன்.”

அவனின் மாம்ஸில் கிரியின் சம்மதம் கிடைத்தவன், “போ போய் சொல்லு. எனக்கென்ன பயமா?” என்றவன், “டேய் மாப்ள! இருந்தாலும் பார்த்து போட்டுக்குடு. உங்கக்கா சரியான சண்டைக்காரி. பின்னி எடுத்திருவா.”

“அது அந்த பயம் இருக்கட்டும் எப்பவும்” என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.

அப்பொழுது சரத்தின் கைபேசி அடிக்க அதை கிரியிடம் காண்பிக்க “டாம்” என்றிருந்ததைப் பார்த்து சிரித்தாலும், சரத்தின் குடும்பத்தினருடன் சிரித்தபடி டிஸ்ப்ளேயில் மின்னிக்கொண்டிருந்த அக்காவையே பார்த்திருந்தான் கிரி. ஸ்பீக்கரில் போட்டு “ஹாய் ராசி! என்ன திடீர்னு போன் பண்ணியிருக்க?”

“திடீர்னு பண்ணாம ப்ளான் போட்டா பண்ணுவாங்க. சரி நீங்க இப்ப ப்ரீயா இருந்தா பேங்க் வரைக்கும் வரமுடியுமா?”

நேரம் பார்த்தவன் மணி ஒன்பது முப்பது என்றிருக்க, “பத்து மணிக்கெல்லாம் வேலைக்குப் போகணுமேமா” என்றான்.

“இப்ப எங்கயிருக்கீங்க? ஆஃபீஸ்லதான இன்னும் அரை மணிநேரம் இருக்கு உடனே கிளம்பி வரமுடியுமா? முடியாதா?” என உத்தரவு போட...

“ஆர்டர்லாம் பலமாயிருக்கு. என்னமா? எதாவது பிரச்சனையா?”

“கூப்பிட்டா இதோ வர்றேன்னு சொல்லணும். அதைவிட்டுட்டு நோண்டி நோண்டி கேள்வி கேட்கக்கூடாது. இஷ்டமிருந்தா வாங்க இல்லன்னா என் பிரச்சனையை நானே பார்த்துக்கறேன். முடிஞ்சா சீக்கிரம் வந்து காப்பாத்திகோங்க” என்று பொறிந்துவிட்டு போனை வைத்தாள்.

“மாம்ஸ் எதோ பிரச்சனை போலிருக்கு. நானும் உங்களோட வரட்டுமா?” சரத் அசையாமலிருப்பதைப் பார்த்தவன், “என்ன மாம்ஸ் நான் எதுவும் நடந்தரக்கூடாதுன்னு துடிக்கிறேன். நீங்க என்னடான்னா அசால்ட்டா இருக்கீங்க. அதுவும் சீக்கிரம் வந்து காப்பாத்த சொல்றாங்க. நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை” என்றான் ஆவேசமாக.

“தம்பி எதுக்கு உணர்ச்சிவசப்படுற. இளம் வயசுல்ல அதான் வேகம் அதிகமாயிருக்கு. இவ்வளவு நேரம் உங்கக்காவைப் பற்றி க்ளாஸ் எடுத்தேனே அதை மூளையில் ஃபிக்ஸ் பண்ணலை போலிருக்கே. உங்கக்கா காப்பாத்த கூப்பிட்டது அவளை இல்ல” என்று நிறுத்த...

“பின்ன?” என்றான் கேள்வியாய்.

“பின்ன இல்ல. அவள் பின்னி எடுக்கப்போற ஆளை. அதாவது அவகிட்ட மாட்டிக்கிட்ட பையனை. நல்லா கவனிச்சியா வந்து காப்பாத்துங்க சொல்லலை. வந்தா காப்பாத்திப்பீங்க ரேஞ்ல காப்பாத்திக்கோங்க சொன்னா.”

“வாட்!” என்றவனை... “ஹான், அப்படியே வாயைத் திறந்துட்டு வா. அங்க போனதும் தன்னால மூடிருவ. சரி பைக்லயா வந்த?” கிரி தலையை ஆட்டியதும், “அப்ப சரி என்னை பாலோ பண்ணு” என்றழைத்துச் சென்றான்.

அங்கு அவனின் செல்ல டாம் அவன் கூற்றை முற்றிலும் உண்மையாக்கிக் கொண்டிருந்தாள். வங்கியின் வாசலிலேயே ஒருத்தனை துவைத்துக் கொண்டிருந்தாள். அவனும் இவளின் அடிக்காகவே பிறந்தாற்போல் நின்று நிதானமாக வாங்கிக் கொண்டிருந்தான்.

வேகமாக பைக்கிலிருந்து இறங்கிய சரத் பின்னால் வந்தவனைப் பார்த்து ‘நல்லா பாருடா மடையா! யாரைக் காப்பாத்தணும்’ என்ற அர்த்தப் பார்வை பார்த்து வேகமாக ஓடினான்.

அவனோ தன் அக்காவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவளின் அதிரடியை அழகாய் ரசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த அடிக்கு ஓங்கிய கையை பின்னிருந்து பிடித்திழுக்க...

“வந்துட்டியா!” என்றவளுக்கு மனதில் ஒரு திருப்தி வந்தது. அதை மறைத்து, “டைம்கு வந்திருவீங்களே. இப்பதான் ஆரம்பிச்சேன். முதல்ல கையை விடுங்க. இவனை...” என்று எகிறியவளை...

“வரச்சொல்லி எனக்கு போன் பண்ணினதான. அப்புறம் நான் வர்றதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?”

“ம்... நீங்கதான் தயங்குனீங்களே” என்றாள் தயக்கமாக.

“தயங்குனா, நான் வரமாட்டேன்னு நினைச்சியா?”

“இல்ல. கண்டிப்பா வருவீங்கன்னு தெரியும். ஆனா, எப்பன்னு காத்திருக்க பொறுமையில்ல. அதான் நானே” என குரலைத் தழைத்து இழுத்தாள்.

“சரி என்ன பிரச்சனை? இவன் என்ன வம்பு பண்ணினான்?” என்று தப்பிக்கப் போனவனை தன் மறுகையால் பிடித்திருக்க அவனைப் பார்த்தபடி, “ம்.. சொல்லு ராசி?”

“கையை விடுங்க சொல்றேன்.”

“பரவாயில்லை சொல்லு.”

‘ப்ச்..’ என சலித்தவள், “இவன் என்னோடதான் வேலை செய்றான். டெய்லி பார்த்திட்டு இருப்பான். எனக்கு இர்ரிடேட்டிங்கா இருந்தது. அதனால ஒருநாள் ப்யூன் டீ கொடுத்திட்டிருந்தானா, அதுல ஒண்ணை எடுத்து இவன் மூஞ்சில ஊத்திட்டேன்” என்றதும் சரத் கிரூபாவைப் பார்க்க... அவனோ, “அடிப்பாவி” ரேஞ்சிற்கு பார்த்திருந்தான்.

“ம்... அப்புறம்” என்று சரத் ஆரம்பிக்க...

“அப்புறம் கொஞ்சநாள் பக்கத்துலயே வரல. மறுபடியும் ஆரம்பிச்சிட்டான். சரி முன்னாடி மாதிரி பனிஷ் பண்ண வேண்டாம்னு அமைதியாயிருந்தா அதையே இவன் அட்வான்டேஜா எடுத்துட்டு வாங்க பழகலாம்னு கூப்பிடுறான். அதான் உடனே போன் பண்ணினேன். அதுக்குள்ள இவன் என்னடான்னா கல்யாணம் வரை போயிட்டான்” என்றாள் கோபமாக.

“என்னது கல்யாணத்துக்கு கேட்டானா?!” என்று செம காண்டுடன் அவன் புறம் திரும்பிய சரத், “ஏன் சார் கூடவே வேலை பார்க்கிற பொண்ணுகிட்ட போய் தப்பா பிஹேவ் பண்றீங்க.”

“தப்பால்லாம் இல்ல சார்” என...

“பொய் சொல்லாத” என்று ராசி அவனை அடிக்கப்போக... அவனின் கையைவிட்டு ராசியை தன்னருகிலிருந்து நகரவிடாமல் நிறுத்திக் கொண்டான்.

“இப்படித்தான் சார். என்ன பேசுறேன்னு முழுசா கூட கேட்காம அடிக்கிறாங்க. இதையே நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ணினா இவங்களால தாங்க முடியுமா சொல்லுங்க?”

“எங்க ரியாக்ட் பண்ணித்தான் பாரேன். அதுக்கு நீ உயிரோட இருக்கமாட்ட கொன்னுருவேன் உன்னை” என்றான் ஆத்திரமாய்.

இது ராசி மனதினுள் சொல்லிய வசனம். அதையே சரத் சொல்ல அவனையே பார்த்திருந்தாள். அவளின் பார்வை தன்னிடம் பாய்வதை உணர்ந்த போதும், பிரச்சனையை முடிப்பதற்காக அமைதியாக நின்றான்.

“பார்த்தீங்களா நீங்களும் அவசரப்படுறீங்க. நான் அந்தமாதிரி கிடையாது சார். சாதாரணமா பேசி கல்யாணம் பண்ணிக்க கேட்கத்தான் பார்த்தேன். முதல்ல கோபத்துல டீயை ஊத்திட்டாங்க. அதுலயே அவங்க நெருப்புன்னு தெரிஞ்சது. அது அவங்க மேல இன்னும் நல்ல மதிப்பை உண்டாக்கிடுச்சி, கொஞ்சநாள் கழிச்சி பேசிக்கலாம்னு இப்ப ஆரம்பிச்சேன், மொத்தமா என்னை முடிச்சிட்டாங்க” என்றான் முதுகை நிமிர்த்தி எழுந்தபடி.

“நீங்க போங்க சார். இத்தோட இவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற நினைப்பையும் இங்கேயே விட்டுட்டுப் போங்க” என்று அவனை அனுப்ப...

“ம்க்கும்.. நாங்க பார்த்ததுக்கே அந்த அடியாம். இங்க ஒருத்தன் சமாதானம்ன்ற பெயர்ல அணைச்சிப் பிடிச்சிட்டிருக்கான் அதைக் கண்டுக்கவேயில்லை” அவர்களுக்கு கேட்குமாறு முணகியபடி சென்றான்.

அதுவரை இதை உணராதவள் உணர்ந்ததும் சட்டென்று சரத்தைவிட்டு விலகி, ‘சே... அவனை அடிச்சதுக்கு அப்பப்ப சமாதானம்ன்ற பெயர்ல என் கையை பிடிச்சிழுக்கிற இவனை அடிச்சிருக்கலாம்’ என தோன்றியது.

“என்ன.. என்னை அடிச்சிருக்கலாம்னு தோணுதா?” என்றதும்... ராசி உதட்டைப் பல்லால் கடிக்க... “என்ன பழக்கம் இது?”

‘உதட்டைக் கடிக்கிறதைச் சொல்கிறானோ?’ என சட்டென்று விடுவித்து அவனைப் பார்த்தாள்.

அவளையே பார்த்திருந்தவன் அதை ரசித்து அவளின் உதட்டைப் பார்த்தபடி, “நான் இதைச் சொல்லலை” என்றதும்... அவனின் பார்வை போன இடமும், வார்த்தைகளும் வெட்கத்தை முகத்தில் அள்ளித் தெளித்தது.

அவளின் முகத்தில் தோன்றிய வெட்கத்தை ரசித்தபடி, “எதையும் முழுசா விசாரிக்காம தண்டனை கொடுக்கிறதை சொன்னேன். இனிமே எதையும் செய்யுறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சி செய். உடனடி தண்டனை தப்புமா. இல்லன்னா என்கிட்டயாவது சொல்லு.”

‘ஓஓஓ’ என அவள் இழுக்கையிலேயே எதுவோ வரப்போகிறது என்று தெரிய... “ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சா, என்னோட சின்ன மூளை சூடாகி வெடிச்சிராதா மாமா” என்றாள் கண்ணடித்து.

அவள் உணராமல் சொன்ன “மாமா” என்ற அழைப்பில் அந்தரத்தில் ரெக்கையில்லாமல் பறந்தவன், இருசக்கர வாகன சத்தத்தில் கீழே வந்து, இன்னும் இவளுடன் பேசினால் தான் எதாவது உளறிடுவோமோ என்று, “உன்னை..” என அவள் தலையில் தட்டி” உள்ளே போ. எனக்கு ஆஃபீஸ் டைமாகிருச்சி” என்று அவளை அனுப்பினான்.

அவள் உள்ளே சென்றதும், “என்ன மாம்ஸ் கண்ணுல கனவு பறக்குது?” என்றபடி அருகில் கிரி வர...

“உங்கக்கா என்னை மாமா சொல்லிட்டாடா” என்றான் அவனை கட்டிக்கொண்டு சந்தோஷமாக.

அவனை விலக்கி “உணர்ச்சிவசப்பட்டு அவளையறியாம சொல்லிட்டா மாம்ஸ்” என்றான் கிரி.

“ம்... அவ தெரியாமதான் சொன்னா. ஆனா, அது அவளோட ஆழ் மனசுல உள்ளது. அதை வெளிய கொண்டு வரணும். உன்னோட போன் நம்பர் கொடு போட்டோவை நான் அனுப்பி வைக்கிறேன்” என்று நம்பர் வாங்கி அவனை அனுப்பி தானும் சென்றான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top