- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
16
“என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. அவளை அப்பப்ப பார்த்திட்டிருக்கிற ஒரு சந்தோஷமேனும் வேணும் தம்பி. அது கிடைச்சா போதும்பா. என் பொண்ணோட போட்டோ கிடைக்குமா?” என்றார் தன்னைத்தானே தேற்றி.
“போட்டோ எதுக்கு சார். அதான் நேர்லயே பார்த்து பேசினீங்களே” என்றான் சிரித்தபடி.
“யார் நானா! நான் பார்த்தேனா? நான் எப்போ, அதை நீங்க பார்த்தீங்களா?” என்றார் ஆச்சர்யம் கலந்த பரபரப்புடன்.
“நேத்து காலையில பார்த்தீங்க. உங்க பொண்ணு பேர்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணச்சொல்லி உங்க பொண்ணுகிட்டேயே கேட்டீங்க” என்றான் அவருக்குப் புரியும் விதமாய்.
“தம்பி அ..அது என் பொண்ணா? நேத்து பார்க்கும்போதே ஏதோ ஒரு உணர்வு அவளையே பார்த்திட்டிருக்கணும்னு தோணிச்சி. அதனால்தான் பேச்சை வளர்த்திட்டிருந்தேன்” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
ஒரு போட்டோவைக் கொடுத்து, “இதான் உங்க பொண்ணு” என்றவன், தன் செல்லை எடுத்து லோஜியைக் காண்பித்து, “இவங்க மீனலோஜினி அம்மா. ராசிக்கு எல்லாமே எல்லாமாகவும் இருக்கிறவங்க. இருக்கப்போறவங்க” என்றான்.
போனை பார்த்தே கையெடுத்து கும்பிட்டவர், “என் பொண்ணை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? முன்னப்பின்ன தெரியாத பொண்ணுன்னா வயசுல சின்னவளாயிருந்தாலும் மரியாதையா பேசுவாங்க. உங்களை தப்பா சொல்லலை தம்பி யதார்த்தத்தைச் சொன்னேன்” என்றார் வேகமாக.
“ம்... ரொம்பவே தெரியும்” என்றான் குரலில் குழைவுடன் கண்ணில் கனவுடன்.
அவனை சற்று வித்தியாசமாக பார்த்தவர் எதுவும் பேசாமல் “நான் வர்றேன் தம்பி. ஃபீஸ் நீங்க வாங்கிக்கறீங்களா? இல்லை ரிசப்ஷன்ல கொடுக்கவா?”
அந்நேரம் உள்ளே நுழைந்த மணியிடம் அவர் பொறுப்பை ஒப்படைத்தான். வெளியே சென்றவரை அழைத்து, “நீங்க ராசிகிட்ட இப்போதைக்கு அப்பான்னு சொல்லிக்க வேண்டாம் சார். நானே பக்குவமா பேசி சரி பண்ணி உங்களுக்குச் சொல்றேன்” என்றான்.
“என் பெண்ணை பார்த்துக்கவாவது செய்யலாமா தம்பி?”
“கண்டிப்பா பாருங்க. பேசுங்க.. உங்களை அறிமுகப்படுத்தாம” என்றான் கறாராய்.
எங்கே தன்னால் தன் மகள் மனக்கஷ்டப்படுவாளோ என்ற அவனின் கவலையிலும், அக்கறையிலும் மனம் நெகிழ, “கண்டிப்பா. நானா உண்மையை சொல்லமாட்டேன்” என்றார் அவனுக்கான பதிலாய்.
அவர் சென்றதும், “என்னடா உன் மாமனாருக்கு பொண்ணை பார்க்க நீ அனுமதி கொடுக்கிற. அவர் என்னடான்னா உனக்கு பேவரா பதில் கொடுக்குறாரு. என்ன விஷயம்டா?” என்றான் கேலியாக.
“அவருக்கு நான்தான் மருமகன்னு முடிவு பண்ணிட்டார்டா. அதான்.”
“நடத்து நடத்து. சரி உன்னோட புரொபோசல் எந்த லெவல்ல இருக்கு.”
“வெறும் லுக் மட்டும்தான்டா. ஆனா, எனக்கு இன்னொரு நியூஸ் கலக்ட் பண்ணனுமே நீ போறியா? இல்லை வாசனை அனுப்பவா?”
“என்ன நியூஸ்னு சொல்லு பார்த்துக்கலாம்.”
“இது என்னோட பெர்சனல். ஐ மீன் ராசியோட ஹஸ்.. சாரி மாமா எப்படி எப்ப இறந்தாங்கன்னு தெரியணும்.”
“ஓ... திரும்பவும் மதுரை போகணுமா?”
“ஆமாடா. லோஜிம்மா, ராசி தவிர விஷயம் தெரிஞ்ச ஒரே ஆள் மஞ்சு அண்ணிதான்.”
“என்னது அண்ணியா! இது எப்ப?” என்று வாய் திறந்தவனின், வாய் மூடி “ராசியை எப்ப எனக்கானவள்னு ஆக்கினேனோ அப்பல்லயிருந்து.” குழப்பமாக பார்த்த நண்பனிடம், “அதை அப்புறமா விவரமா சொல்றேன்” என்றான்.
“அது சரிடா. நாங்கள்லாம் போனா டீடெய்ல்ஸ் கிடைக்காது. நீ போனா ஒருவேளை உண்மையை சொல்ல சான்ஸ் இருக்கு. ஏன்னா ராசி ஃபேமிலி மேல ரொம்ப அக்கறையுள்ளவங்க. நான் சாதாரணமா போயி விசாரிச்சப்பவே உறவுமுறை தவிர எங்களுக்குள்ள எதுவுமில்லன்னு சொன்னாங்க. ஆனா, ராசிகூட பேசினதை வச்சிப்பார்த்தா ரொம்ப க்ளோஸ்னு தோணுது. அவங்க குடும்பத்துல எத்தனை பேர்னு கூட விசாரிக்க முடியல. இந்த லட்சணத்துல நீ ஃபேமிலி டீடெய்ல்ஸ் கேட்கிற. எப்படிடா?”
“ப்ச்... அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ போறியா இல்லையா சொல்லு?”
“போறேன்டா. என்ன விஜிதான் கடிக்கிறா. அடிக்கடி லாங் டூரான்னு.”
“ஏன்டா உன்னை மும்பை, கல்கத்தான்னா அனுப்பறேன். நம்ம ஊர் சைடுதான.”
“ம்க்கும்.. அப்படியே வடக்க அனுப்பிடப்போற. போடா எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலமும் அரைகுறைன்னு அனுப்புறதில்ல. தமிழ்நாட்டுலயே சுத்த விடுற.”
“வெளி மாநிலமோ, வெளிநாடோ அனுப்பினா உன்னைக் கொன்னுருவேன்னு தங்கச்சி சொல்லியிருக்காடா. என்னால உன் உயிருக்கு ஏன் ஆபத்து வரணும்னு அனுப்பறதில்லை” என்றதும், மணி பல்லைக்கடிப்பது சரத்திற்கு கேட்டது.
“ரெண்டுபேரும் என்னவோ பண்ணி தொலைங்க. இப்ப நான் கிண்டி வரை போக வேண்டியிருக்கு” என்று கிளம்பினான்.
மதுரை வேலை முடிந்ததும் அடுத்தடுத்து என்ன எப்படி பேசி சம்மதிக்க வைப்பதென்று யோசிக்கலானான். யோசனையின் நடுவே போன் வர எடுத்து பேசிய சரத் உள்ளே வரச் சொல்ல, வாட்டசாட்டமாக இளம் வயது பையன் ஒருவன் வந்து நின்றான். பார்த்து பழகினாற்போல் முகத்தோற்றம் கொண்டவனை “உட்காருப்பா” என்றான் சரத்.
“ஹலோ சார் நான் கிருபா” ஷார்ட்டா கிரி சொல்வாங்க. இப்ப வந்துட்டுப் போனாரே சிவராமன் அவரோட பையன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி அதன்பின் அமர்ந்தான்.
‘ஓ...’ என்ற சரத்திற்குள், ‘பார்றா! திடீர்னு ஒரு மச்சினன் வந்து நிற்கிறான். நமக்கு நல்ல நேரம்தான் போல. நாம நினைக்காதது எல்லாமே நடக்குது’ என நினைக்க...
“சாரி சார். இது டிடெக்டிவ் ஆஃபீஸ்னு தெரியும். ஆனா, எங்கப்பாவுக்கு இங்க என்ன வேலைன்னு தெரியல. சமீபத்துல கொஞ்ச நாளாவே முகமே சரியில்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தாங்க. என்னன்னு கேட்டா பதிலில்லை. தற்செயலா இந்தபக்கம் வந்தப்ப அப்பாவை பார்த்தேன். அவர் முகத்துல ஒரு தெளிவு இருந்தது. அப்பாவோட பிரச்சனை சரியாகிருச்சின்னு தோணுது. அப்பா ஹேப்பியா இருக்காங்கன்றதே எனக்கும் சந்தோஷம். காரணம் நான் தெரிஞ்சிக்கலாமா?” என்றான்.
அவன் பேசுவதைக் கேட்ட சரத்திற்கு ராசியின் தம்பியென்ற எண்ணமே இனித்தது. அவனின் அக்கறையான பேச்சி கவர, அவனிடம் உண்மையை சொல்வதில் தவறில்லை என்று, “நான் சொல்றதை எப்படி எடுத்துப்பன்னு தெரியல. பொதுவா எங்களை நம்பி கேஸ் ஒப்படைக்கிறவங்க பற்றிய டீடெய்ல்ஸ் யாருக்கும் சொல்லமாட்டோம். இதை உன்கிட்ட சொல்றதுக்கு காரணமிருக்கு. அது ராசி.”
இடையில் பேச வந்தவனை தடுத்து, “ராசி யார்னு சொல்றேன் தவறா எதுவும் கற்பனை பண்ணிக்காத. நான் சொல்றதை ஜீரணிச்சி, மன்னிச்சி, ஏத்துக்கணும். ஜீரணிக்கிறது நான் சொல்லப்போற விஷயத்தை. மன்னிக்கிறது உங்க அப்பாவை. ஏத்துக்கிறது உன் அக்கா ராசியை.”
“அக்காவா!!” என அதிர்ந்து இருக்கையிலிருந்து எழுந்தவனை, தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து அவனை அமர்த்தி, டேபிளில் அமர்ந்த சரத், கிரிக்கு புரிகிறார்போல் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்தெடுத்து நிதானமாக சொன்னான்.
கேட்டபடி அமர்ந்திருந்த கிருபாவுக்கு பேச்சே வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு ஒரு அக்கா. அதுவும் அப்பாவின் முதல் சம்சாரத்தின் மகள் என்று தெரிந்தும் கோபம் வரவில்லை. அக்காவின் அனுபவத்தைக் கேட்டதும் தன் அப்பாவின் மேலிருந்த மதிப்பு தன்னாலேயே கீழிறங்கியது. ஒரு மனிதனின் சுயநலத்தால் ஒரு பெண்ணின் வாழ்வே கேள்விக்குறியாய் இருக்கிறதே.
அவனையே பார்த்திருந்த சரத்திற்கு பதில் சொல்ல நிமிர்ந்தவன்... சரத் கொடுத்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து, “நீங்க சொன்னதுல முதல்ல இந்த விஷயத்தை ஜீரணிக்க முயற்சிக்கிறேன். இரண்டாவது வாய்ப்பே இல்லை. மூணாவது கண்டிப்பா அவங்க என்னோட அக்காதான். இனி அவங்க என்னோட பொறுப்பு. எங்கம்மாகிட்ட பக்குவமா பேசி அக்காவை ஏத்துக்க வைக்க வேண்டியது என்னுடைய வேலை” என்றான் தெளிவாக.
“உங்கப்பா...” என்ற சரத்தை தடுத்து... “இல்ல சார் மனுசன்னா கொஞ்சமாவது மனசாட்சி இருக்கணும். அதுவும் நாலு வயசுக் குழந்தையை அம்போன்னு விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சி தேடினா அவர் நல்லவராயிருவாரா? எனக்கு நல்ல அப்பாவா இருந்தவர், நல்ல மனுசனா இருக்க மறந்திட்டாரே சார். கேட்கிற எனக்கே கஷ்டமாயிருக்கே. அனுபவிச்ச அவங்களுக்கு எப்படியிருக்கும்” என்றான் கண்கள் கலங்க.
அவனின் வார்த்தைகளில் சில நிமிடம் சரத்தே வாயடைத்துப் போனான் அவனின் நிதானமான பேச்சைக்கண்டு. “அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” என்றான் கிரியை நோக்கி.
“ம்... செய்யணும் சார். நிறைய செய்ய வேண்டியிருக்கு. முதல்ல என்னோட அக்காவை மீட் பண்ணனும். பண்ணலாமா?”
“ஷ்யூர். ஆனா...” என நிறுத்தியவனிடம்..
“ஆனா, என்ன சார்? நான் யார் என்னன்றதை சொல்லக்கூடாது அப்படித்தான?” சம்மதமாக தலையசைத்த சரத்திடம், “நான் சொல்ல மாட்டேன் சார். தெரிய வைப்பேன் நான்தான் அவங்க தம்பின்னு தெரிய வைக்கிறேன்.”
“ம்... குட். உன்மேல் எனக்கு நம்பிக்கையிருக்கு. இதோ உன் அக்கா போட்டோ. உங்கப்பாவுக்கு ஒரு காப்பி கொடுத்துட்டு, ஃபைல்ல வைக்கிறதுக்கு ஒண்ணு வச்சிருந்தேன்.”
புகைப்படத்தையே கனிவுடன் பார்த்திருந்தவன், “இந்த போட்டோவை அப்பா பார்த்திருந்தா எனக்கு வேண்டாம் சார். வேற போட்டோ வேணும் தர முடியுமா?”
“ஏன்? இந்த போட்டோவுக்கு என்ன?” என கேள்வியாய் பார்த்தவனிடம்...
“நீங்க கொடுங்க சார். நான் பண்ணப்போற ட்ரிக்ல எங்கப்பா ஆட்டோமேடிக்கா அம்மாகிட்ட உண்மையை ஒத்துக்குவாங்க. நான் அதை பயன்படுத்தி அம்மாவை கன்வின்ஸ் பண்ணிருவேன்.”
“நான் நினைச்சதைவிட நீ செம ஸ்பீடுதான் போ. எப்படியோ ராசி சந்தோஷமாயிருந்தா போதும்.”
விசித்திரமாக அவனைப் பார்த்து, “எங்கக்காவை லவ் பண்றீங்களா சார்?” என்றான் நேரடியாக நெத்தியடியாக.