• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
15


18 வருடங்களுக்கு முன்

தூத்துக்குடி மாவட்டம் நத்தம் கிராமம். இங்கு விவசாயமே பிரதானம். மல்லி(தனியா), வெங்காயம், மிளகாய் விளைச்சலும் அமோகமாக நடக்கும் இடம். வீடுகள் என்றால் எண்ணிக்கையில் 1500 வீடுகள் இருக்கும் சற்று பெரிய ஊர். இங்கு அரசுப்பள்ளிகள் உண்டு. கடந்த நான்கு வருடமாக ஆங்கிலப் பள்ளி ஒன்று தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது.

ஆறுமுகம், ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரிக்கு குழந்தைகள் கிடையாது. அவளை விட பத்து வயது இளையவன் வெற்றிவேல்.

வெற்றிவேல் அந்த ஊரில் செல்வாக்கான மனிதன். பணத்தினால் மட்டுமல்ல குணத்தினாலும் உயர்ந்தவன். தனலக்ஷ்மி பெயருக்கேற்ற அழகு, குணம், புத்திசாலித்தனம் என ஒருங்கே அமைந்தவள். படிப்பு என்று பார்த்தால் இருவரும் பனிரெண்டு வரை படித்திருந்தார்கள். இவர்கள் திருமணம் பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்திருந்தாலும், திருமணத்திற்குப் பின் காதல் என்ற ஒன்றை மட்டுமே அனுபவிப்பவர்கள்.

இவர்களின் அன்பின் பரிசு சரவணன், அபிநயா. சரவணன் அப்பாவைப் போல் இருந்தாலும் முழுக்க முழுக்க அம்மாவின் குணம். அம்மா பிள்ளை இவன். அபிநயா அம்மாவை ஜெராக்ஸ் எடுத்த உருவம். சின்னவர்களுக்கே உரித்தான சேட்டைகளோடும், பொறுப்போடும் இருப்பவள்.

“ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கேட்ட மனைவியிடம்,

“நான் என்ன பண்ணினேன். இன்னும் ஒண்ணுமே பண்ணலையே?” என்று குறும்பாகக் கேட்ட வெற்றிவேலிடம்,

“சும்மா வேற எதாவது பேசி. பேச்சை மாத்தாதீங்க. நீங்க பிள்ளைங்கலை கொஞ்சம் கண்டிச்சி வைங்க. அம்மா கண்டிப்பு மட்டும் போதாது. அப்பாவோட கண்டிப்பும் அவசியம்ங்க” என்றாள் தனலட்சுமி.

“அதான் நீ இருக்கியேமா. நீ எவ்வளவுதான் கண்டிச்சாலும் ஏன் அடிச்சாலுமே, அடுத்த நிமிஷம் மறந்திருவாங்க. நான் கண்டிச்சா அது அவங்க மனசுல சின்னதா உறுத்திக்கிட்டே இருக்கும். நீ என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா, நான் கண்டிக்கிறது கஷ்டம் தனம். நீ பிள்ளைங்களுக்கு நல்லது தான் சொல்லித்தருவன்னு தெரியும்.”

“போங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிக்கவே மாட்டேன்றீங்க” என்று முகம் திருப்ப,

“புரியுதுமா. அப்பாவோட பாசம் மட்டுமில்லை, கண்டிப்பும் அவசியம் தான். இருந்தாலும் என்னால முடியலை. என்ன பண்ண சொல்ற?”

“என்னவோ பண்ணுங்க” என்றாள் கோவத்தில்.

“அப்ப என்ன வேணும்னா பண்ணலாமா?” கையைத் தேய்த்து நம்பியார் தொணியில் கேட்க,

“என்ன வேணும்னா பண்றதா. புரியலை? இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” என்றபடி அவனை ஏறிட்டவள், அவன் பார்வையின் மாற்றத்தைப் பார்த்து, “என்ன பார்வையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? இது சரியில்லையே.”

“நீதானமா என்னவோ பண்ணுங்கன்னு சொன்ன. அதான் அத்தான் என்ன பண்ணலாம்னு பார்க்கிறேன்.”

“அச்சோ! உங்களை... நான் என்ன அர்த்தத்துல சொன்னா, நீங்க என்ன அர்த்தத்துல எடுத்துக்கறீங்க. எது சொன்னாலும் அதை டபுள் மீனிங்ல எடுத்துப் பேசுறது. பிள்ளைங்க வரப்போறாங்க கொஞ்சம் தள்ளியே இருங்க என்று அவனை கைகளால் தள்ளிவிட்டாள்.

“ம்... பேசுறதுக்குக் கூட உரிமையில்லப்பா இந்தக் காலத்துல” என்று சலித்துக் கொண்டவனிடம், பிள்ளைகள் ஓடி வந்து, “அப்பா, அம்மா வாங்க” என்று இழுத்தனர்.

“எங்கடா வரணும்? எனக்கு வேலை இருக்கு. அப்பாவைக் கூப்பிட்டுப் போங்க” என்றதும், சின்னக்குட்டி அம்மாவிடம், “அம்மா ப்ளீஸ்” என்று சொன்ன அழகில் மயங்கி, “சரி வாங்க போகலாம்” என்று அவர்கள் சென்ற இடம் வீட்டின் பின்புறம் உள்ள பெரிய கிணறு.

“இங்க என்னடா தம்பி அதிசயம் இருக்கு?” என்று கேட்ட தந்தைக்கு கிணற்றிற்குள் கை காண்பித்து, “பாருங்கப்பா” என்றான்.

“ஒண்ணும் தெரியலையேடா?”

“அப்பா கால் வைத்து இறங்குவோமே அங்க. ஆமாடா அதுக்கு இப்ப என்ன?”

“அச்சோ! அம்மா நீங்க பாருங்க” என்றதும் அங்கிருந்த குருவிக் கூட்டைப் பார்த்தவள், பையனே சொல்லட்டும் என்று தெரிந்தே தெரியாதது போல் நடிக்கும் கணவனைப் பார்த்தபடி, “தெரியலடா” என்றாள்.

கணவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, நாக்கைப் பல்லால் கடித்து தலையை அசைத்து, ‘வந்தேன்னா பாருங்க’ என்பது போல் பாவனை செய்தாள்.

“அதுல குருவி கூடு கட்டியிருக்கும்மா” என்று அவர்களின் காதலைக் கலைத்தான்.

“ஆமா. ஆமாடா. தம்பி எனக்குத் தெரியல பாரேன். இரு நல்லா பார்க்கிறோம்” என்று எட்டிப் பார்த்து, “அட ஆமாடா குட்டி. குருவிக் கூடு” என்றாள்.

“சூப்பரா கட்டியிருக்குல்லம்மா. ஏன் கிணத்துல கட்டியிருக்கு? வீட்லதான கட்டணும்?” அவனின் சந்தேகத்திற்கு கணவனைப் பதில் சொல்லச் சொல்லிக் கண்ணைக் காட்ட,

“வாங்கடா குட்டீஸ். நான் வீட்டுக்குள்ள போயி கதை சொல்றேன். அம்மா சமையல் பண்ணட்டும். சரியா?”

“சரிப்பா” என இருவரும் அவன் மேல் தாவ, வீட்டில் வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் வெற்றிவேல் உட்கார, இருவரும் மடியில் இருபக்கமும் ஏறி உட்கார்ந்து, “ம்... சொல்லுங்கப்பா. ஈகர்லி வெய்டிங் பார் யுவர் ஸ்பேரோ ஸ்டோரி” என்றதும் பையனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தபடி, “நீ இங்கிலீஸ் சூப்பரா பேசுறடா” என்றான்.

“அப்பா அது அப்புறமா பேசலாம். முதல்ல குருவிக்கதை சொல்லுங்க?”

“ஆமா அப்பா. சொல்லுங்க?” என்று தன் மழலைக் குரலில் மிழற்றினாள் குழந்தை.

“அதுவா நமக்குன்னு ஒரு வீடு கட்டியிருக்கோம்ல. அது மாதிரி அதுக்குத் தேவையான வீட்டை அது கட்டிக்கிருச்சி.”

“அதான் எங்களுக்குத் தெரியுமேப்பா. அது நம்ம வீட்டு மாடியில கட்டாம, ஏன் கிணத்துல கட்டியிருக்குகன்னு கேட்டா? போங்கப்பா. நாங்க அம்மாகிட்டவே கேட்டுக்கறோம்” என்று மகன் இறங்கி ஓட, மகளும் ஒடினாள்.

“அம்மா, அம்மா” என்று இருவரும் தாயின் புடவையைப் பிடித்து இழுக்க, ஏற்கனவே கணவனின் சொதப்பல் பேச்சிக்களைக் கேட்டதால் அவனை முறைத்தாள்.

கண்களால் மன்னிப்புக் கேட்டவன், “நான் காய் கட் பண்றேன். நீ அதுக்குள்ள அவங்களுக்கு சொல்லிக் கொடுத்துரு. நல்ல பிள்ளைல” என்றான் கெஞ்சலாக.

“ம்க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.” நொடித்தபடி சென்றவள் மகன், மகளிடம் அமர்ந்து, “நம்ம வீட்ல நாலுபேர் இருக்கோம்ல?” என ஆரம்பிக்க,

“அம்மா! தாத்தா, பாட்டி சேர்க்கலை?”

“அவங்க ரெண்டு பேரும் தான் அத்தை கூட இருக்காங்களேடா.”

“ஆமால்ல. சரிம்மா சொல்லுங்க?” என்றனர்.

“வீட்டுக்குள்ள நாம சத்தமா பேசிக்குவோம். நீங்க ரெண்டுபேரும் ஓடியாடி விளையாடுவீங்க தான?” கவனமுடன் கேட்கும் குழந்தைகளைப் பார்த்தபடி, “உங்க காதுல யாராவது வந்து திடீர்னு கத்தினாலோ, இல்ல உன்னை விளையாட விடாம பிடிச்சிட்டு இருந்தாலோ, எப்படி பீல் பண்ணுவ?” என்ற தாயின் கேள்விக்கு,

“கோவமாகவும், எரிச்சலாகவும் வரும். இதையேன்ம்மா சொல்றீங்க? குருவிக்கூட்டைப் பற்றி சொல்லுங்கம்மா? என்று காரியத்தில் கண்ணாக இருக்க,

“இருடா. அதுக்குத்தான் வர்றேன். வீட்டுல கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சி வந்திருக்கும் போது, நாம யாராவது கத்தினாலோ, ஓடினாலோ, இல்லை பாப்பாவோ, நீயோ அழுதீங்கன்னா குருவிங்க பயந்துக்கும் தான? குருவியோட குஞ்சுங்க அழுதா அவங்க அம்மாவால எப்படி தாங்கிக்க முடியும். இப்ப கிணறுன்னா எந்த தொந்தரவும் இல்லாம பாதுகாப்பா இருக்கும்ல. அதான் விஷயம்.”

“அம்மா எனக்கு ரெண்டு சந்தேகம்.”

“கேளுப்பா. என்ன சந்தேகம் உனக்கு?”

“குருவி கிணத்துல இருக்கும் போது, நாம தண்ணீர் இறைப்போமே, அப்ப அதுக்கு டிஸ்டர்பா இருக்காதா? அப்புறம், ம்... வந்து...” என யோசித்தவன், “ஹான்! குருவியோட குட்டி சின்னதா தான இருக்கும். உள்ள விழுந்துராதா?”

“நீ சொல்றதும் சரிதான். ஆனா, தண்ணீர் இறைக்கும் போது, அது அங்க இருக்கிறதால எதிர் பக்கத்துல இருந்துதான் தண்ணீர் இறைப்போம். கொஞ்ச நேர வேலை அது. சீக்கிரமே முடிஞ்சிரும். அடுத்தது, குருவி உள்ள விழாதான்னு தான கேட்ட? அது ஒரு குறிப்பிட்ட பருவம் வரை கழிச்சி தான் பறக்கவே ஆரம்பிக்கும். அதுவரை அவங்க அம்மா பாதுகாப்புல இருக்கும். அதனால கீழே விழாது சரியா?”

“இப்ப அம்மா மடியில குழந்தையா இல்லாம, வளர்ந்து நடக்கிறோமே அப்படியாமா?” என கேட்டான் மகன்.

அதேதான்டா கண்ணா. உனக்குப் புரியுதாடா குட்டிமா?”

“ம்... புரியுது” என்று தலையாட்டினாள் அபிநயா.

கணவனைப் பார்த்தவளிடம், ‘இந்த விளக்கம் போதும்’ என்று சொல்ல, ‘சரி’ என்று தலையாட்டியவளோ உள்ளுக்குள், ‘ஷப்பா! தெரியாத விஷயத்தைக் கூட, தெரிந்தா மாதிரி எப்படில்லாம் காட்டிக்க வேண்டியிருக்கு.’

இரவு சாப்பிட்டு முடித்த பிள்ளைகளை பக்கத்து அறையில் தூங்க வைத்து கணவனிடம் வந்தாள்.

“பிள்ளைங்க தூங்கிட்டாங்களா?”

“ம்... தூங்க வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீங்க இன்னும் என்ன பண்றீங்க?”

“எல்லாம் உனக்காகத் தான்டி செல்லம்.”

“ஏன் நான் இல்லன்னா தூக்கம் வராதோ?” அவன் கொஞ்சலில் கேட்க, இவள் கிண்டலில் பதிலளித்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“தெரிஞ்சிக்கிட்டே கேட்கிறியே.” அவளின் கைபிடித்துத தன் பக்கத்தில் படுக்க வைத்து, கைகளை மனைவியின் மேல் விளையாட விட,

“ப்ச்...” என்று கையைத் தட்டி, “இதானே வேண்டாங்குறது. இது கார்த்திகை மாதம் நினைவிருக்கா. இந்த மாசம் முழுக்க நான் விரதம். இன்னும் பதினைந்து நாள்தான் இருக்கு. ஒழுங்கா, சமத்தா படுத்து தூங்குங்க. குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டியிருக்கு. அத்தையும் மாமாவும் வர்றேன்னு சொல்லியிருக்காங்க” என்றாள்.

“இன்னும் பதினைந்து நாளா முடியாதுமா. கோவிலுக்குத்தான? பதினோரு நாள், ஒன்பது நாள், ஏழு நாள் கூட விரதம் இருக்கலாம் தப்பில்லை” என்றான்.

“இந்த வியாக்ஞானமெல்லாம் நல்லா பேசுவீங்களே. இதுக்குத்தான் பிள்ளைங்களோட போயி படுக்கிறது. அதுக்கும் விடமாட்டேன்றீங்க. என்கூட தான் இருக்கணும்னு அடம்.” கணவனின் காதலை மனதினுள் ரசித்து வெளியில் சலித்தாள்.

“சரி விடு நான் அமைதியா இருக்கேன். கைமட்டும் உன்மேல போட்டுக்கறேன்” என்று அனுமதி கேட்க,

அவனைப் பற்றி தெரியுமாதலால், “போட்டுக்கோங்க. ஆனா, கை அங்க இங்க அசையக் கூடாது” என்றாள்.

“சரிமா நீ சொன்னதை செய்யுறேன்” என்று பவ்யம் காட்ட,

சிறிது நேரத்தில் கை அவள் வயிற்றுப் பகுதியில் விளையாட நெளிந்தவள், “என்ன பண்றீங்க? விடுங்க.. விடுங்க சொல்றேன்ல. அப்புறம் நான் பிள்ளைங்களோட ரூம்கு போ...” சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களைப் பற்ற, “ம்..ம்கூம்... விரதம். வேண்டாம்” என்ற முனகல்களின் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து அவள் கணவனுடன் ஐக்கியமானாள்.

கணவனின் கையில் தலைவைத்து, அவன் மேல் கைபோட்டுப் படுத்திருந்தவள், “வேண்டாம்னு சொல்லச் சொல்ல இப்படியா பண்ணுவீங்க? இத்தனை நாள் விரதம் போச்சி. இன்னைக்குத் தான் கடைசி சொல்லிட்டேன். என்னவோ பண்ணி என்னை மயக்குறீங்க. சே... எவ்வளவு கட்டுப்பாடோட இருந்தேன். எல்லாம் போச்சி உங்களால.”

“ஏன்டி புலம்புற?”

“புலம்பாம என்ன செய்யச் சொல்றீங்க? இனி சின்னதா எதாவது நடந்தாலும் சாமி குத்தமோன்னு தோணும். சின்னதா காய்ச்சலோ, தலைவலியோ வந்தா கூட மனசு இதையே நினைச்சி பயப்படும்.”

“அதெல்லாம் சாமி கண்டுக்காது. இனி நான் உன்னை எதுவும் பண்ணமாட்டேன். விரதம் இருக்கேன் சரியா. அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சிக்கிட்டு கஷ்டம்தான். பரவாயில்லை நான் சமாளிக்கிறேன்” என்றான்.

அருகில் இன்னும் நெருங்கியவள், “கோவமா?” என்று கேட்க,

“ஆமா, ரொம்ப.”

“எங்க என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க?”

அவளைப் பார்த்தவன் சிரித்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்தாள். “பனிரெண்டு வயசுப் பையனுக்கு அம்மான்னா யாரும் நம்ப மாட்டாங்கடி.”

சட்டென்று வந்த கோவத்தில், “எப்ப எதைப் பேசணும்னு இல்லையா? யாரும் நம்பணும்னு அவசியமில்லை. இது நமக்கான நேரம் அடுத்தவங்களைப் பற்றி ஏன் பேசறீங்க” என்று கொஞ்சம் தணிந்தவள், “நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்வேன். ஆனா கோபப்படக் கூடாது. இப்பவே சொல்லணும்னு தோணுது.”

“சொல்லுலே என்னலே மச்சாங்கிட்ட கேக்கப்போறவ?”

கணவனின் பேச்சில் சிரித்தவாறு, “நான் ஒரு வேலை செத்துட்டேன்னா...” அவளை முடிக்க விடாது வாய் மூடியவன், “ஏய் என்னடி பேசுற? கொஞ்சமாவது அறிவிருக்கா? பேசுறாளாம் பேச்சி. சாவப்பத்தி பேசுற வயசா இது” என்று கண்டித்தான்.

“ஷப்பா! என்ன கோவம் வருது பாரு. நெருப்புன்னா வாய் வெந்துடாதுங்க. நான் சொல்ல வர்றதைக் கேட்குறீங்களா?”

“ம்... சொல்லு?” முகம் இறுகக் கூறியவனிடம்…

“ ஒரு வேளை நான்...” ஆரம்பித்தவள் கணவனின் முறைப்பில், ”சரி அதை விட்டுட்டே சொல்றேன். அந்த மாதிரி எதாவது நடந்தா, நம்ம பிள்ளைங்கல நல்லபடியா படிக்க வச்சி, ஒழுக்கமான பிள்ளைங்களா வளர்க்கணும். பிள்ளைங்களைக் கெடுக்கிற எந்த விஷயமும் நீங்களும் பண்ணக்கூடாது. அவங்களையும் செய்யாம பார்த்துக்கணும். ரெண்டு பேரும் பொறுப்பானவங்க தான் ஆனாலும், வளர்ப்பு நல்லா இருக்கணும்ல.”

‘இப்ப எதுக்கு அதெல்லாம்?’ என கேள்வியாய் நோக்க,

“இல்லங்க. யாருக்கு எப்ப என்ன நடக்கும்னு தெரியாதில்லையா.”

“நீ சொன்னது எனக்கு நடந்தா?” சட்டென்று அவன் வாயைப் பொத்தியவள் கண்களிலிருந்து கண்ணீர் வர, “அப்படி எதுவும் நடக்காது. நடந்தா என் கடைசி நிமிஷமும் அதுதான். நான் கடவுள்கிட்ட வேண்டுவதே என் ஆயுளையும் சேர்த்து நீங்க வாழணும்னுதான்” என்றாள்.

அவளை இழுத்து அணைத்தவன், “அதான் நீ இருக்கியேடி. இந்த பேச்சை விடுறியா?” அவன் மனதினுள், ‘இத்தனை வருடத்தில் இது மாதிரி தன்னிடம் பேசியதில்லை’ என்ற நினைவு வந்தது. அதை ஒதுக்கி, “அப்புறம்” என்றான்.

“என்ன அப்புறம்?”

“இல்ல. இன்னைக்கு கடைசி நாளுன்னு சொன்னியே. அத்தானைக் கவனிக்கிறது.”

“கவனிச்சிட்டா போச்சி.” சொல்லி முடித்து நாக்கைக் கடித்தவளை

“தனம்! செல்லம் சூப்பர்டி” என்று அவளை அணைத்தான்.

காலையில் எழுந்து தலைக்குக் குளித்து, குழந்தைகளை எழுப்பி பல்தேய்க்க வைத்து, பால் கொடுத்து, “குளிக்க ரெடியாகுங்க. அதுக்குள்ள அம்மா சமையல் முடிச்சிட்டு வந்திடுறேன்” என்று கணவனிடம் சென்றவள், அவனை ரசித்து, “சரியான கேடி” என்றாள்.

“யாருமா கேடி? நானா?”

“ஆமா. நீங்கதான்.”

“கேடி என்ன பண்ணுவான் தெரியும்ல” என்றபடி அவளைத் தொட வந்தவனை விட்டு விலகி, “இங்க பாருங்க. நான் குளிச்சிட்டேன். போயி நல்ல பிள்ளையா குளிச்சிட்டு தோட்டத்துக்குப் போயி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிட்டு வாங்க.”

“அந்த பயம் இருக்கட்டும்.”

“நீங்க என்ன சிங்கமா? புலியா உங்களைப் பார்த்து பயப்பட. நீங்க என்னைத் தொடமாட்டீங்கன்னு தெரியும்” என்று கண்ணடித்துச் சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், ‘நீ என் மனைவியா வர குடுத்து வச்சிருந்திருக்கேன். நீ இல்லாத வாழ்க்கை முடியாதுடி. என்ன வார்த்தை சொல்லிட்ட. அந்த அளவு என்னோட ஒவ்வொரு அசைவுலயும் நீ இருக்கிற. ஐ லவ் யூ தனம்.’ தனக்குள்ளே சொன்னான்.

குளித்து வந்தவனிடம், “தோட்டத்துக்கு தண்ணீர் விட்டுட்டு சீக்கிரம் சாப்பிட வாங்கங்க. நீங்க வந்த பிறகுதான் நான் சாப்பிடுவேன்” என்றாள் சத்தமாக.

“அதான் தெரிஞ்ச விஷயமாச்சே” என்று ஆடை மாற்றியவன் மனைவியின் அருகில் வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் காலையில் இருந்தே, உள்ளூர ஒரு இனம் புரியாத உணர்வு வந்து இம்சை செய்தது. அது நல்லதற்கா கெட்டதற்கா தெரியவில்லை அவனுக்கு.

“என்ன பார்வையெல்லாம் மாறுது. ஐயாவுக்கு வேப்பிலை அடிக்கணுமோ?”

“ஆமாடி ஆத்தா. அப்பத்தான் இந்த தனம் மேல உள்ள பைத்தியம் தெளியும்.”

“அதெல்லாம் தெளிய வேண்டாம். முதல்ல கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு.”

“சரி நான் போயிட்டு வர்றேன். எதோ சொல்லணும்னு நினைச்சேனே... ஹான்! ஐ லவ் யூ தனம்” என்றான்.

“அதைக் கேட்டவள் வெட்கத்தில் முகம் சிவக்க தலைகுனிந்து, “அதைத் தமிழ்லயும் சொல்லலாம்” என்றாள்.

அவளிடம் நெருங்கி “நா ன் உன் னைக் கா த லிக் கி றேன்.” நிறுத்தி நிதானமாகச் சொல்ல,

“நானும்தான்” என்றவள், “போங்க எனக்கு வெட்கமா இருக்கு” என்ற மனைவியின் வெட்கத்தை ரசித்தபடி அவளை இழுத்து அணைத்தான். அந்த அணைப்பில், ‘நீதான் எனக்கு எல்லாம்’ என்பதை உணர்ந்தாள்.

“அச்சோ நான் விரதம்ங்க.”

“அதனாலென்ன? நான் கட்டித்தான பிடிச்சேன். இதெல்லாம் சாமி கணக்குல வராது” என்று இதழில் கதை எழுதியே விலகிச் சென்றான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top