• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
15



விவேகானந்தனின் ஒன்றுவிட்ட தங்கை மகள் திருமணம், திருவண்ணாமலையில் வைத்திருந்தார்கள். அவரால் செல்ல முடியாததால், மனைவியை போகச்சொல்ல, “சாதனாவிற்கு லாஸ்ட் செமஸ்டர். இப்ப என்னால் முடியாது” என்று மறுத்தவரிடம்...

“நமக்கும் சொந்த பந்தம்னு ஆளுங்க வேணும் வந்து” என்றார் விவேகானந்தன்.

“சென்னையில இருக்கிற நீங்க போகாம, பெங்களுர்ல இருக்கிற என்னை வரச்சொல்றீங்களே எப்படிங்க முடியும்?” என வந்தனா தன் தரப்பைச் சொல்ல...

“ஸ்கூல்ல ஆன்வல்டே பங்ஷன் இருக்குதுமா. நானில்லன்னா எப்படி? சாதனா எக்ஸாம்னால தான் பங்ஷனுக்கே நான் வேண்டாம்னேன். அதே நேரம் அந்த பங்ஷனும் முக்கியம். கொஞ்சம் சிரமம் பார்க்காம வர்றியா? ஜீவாகிட்டச் சொல்லி ப்ளைட் டிக்கட் போடச் சொல்றேன். இல்லன்னா காருக்கு டிரைவர் போட்டுட்டு வா.”

“நானெப்படிங்க தனியா? சரி விடுங்க. நான் பிள்ளைங்க வந்ததும் கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்றேன்.” யோசனையாக இருந்த தாயிடம் வந்த சாதனாவிற்கு வந்தனா விஷயத்தைச் சொல்லி “நீயும் வர்றியா சாதுமா?” என்றதுதான் தாமதம்...

“என்ன விளையாடுறீங்களா? நான் செமஸ்டருக்கு படிச்சிட்டிருக்கேன். இந்த நேரத்துல லீவ் எடுக்கச் சொல்லி எப்படி நீங்க என்கிட்ட சொல்லலாம்?” என வானத்துக்கும், பூமிக்கும் எகிறிக் குதித்தாள்.

“என்னை என்னடி பண்ணச்சொல்ற?”

“ஒண்ணும் பண்ண வேண்டாம். நீங்க அண்ணாவைக் கூட்டிட்டுப் போங்க.”

“அப்ப நீ?”

“தனியா இருந்துக்கறேன். எனக்கென்ன பயமா? என்னைப் பார்த்துத்தான் மத்தவங்க பயப்படணும். ஹா...ஹா...” என வில்லிபோல் சிரிக்க...

“சகிக்கல” என வந்தனா முகம் சுழித்தாள்.

“இது கூடதான் சகிக்கல” என்று தாயின் முகச்சுழிப்பைக் காண்பித்தாள்.

“ப்ச்... போ சாதுமா. நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற காமெடி பண்ணிட்டிருக்க.”

“என்னது காமெடியா? ஐம் சீரியஸ் வந்துமா.”

அந்த நேரம் அங்கே வந்த ஜீவா, “யாருக்கு சீரியஸ்?” என்றான்.

“ஹான்.. கண்டிப்பா இங்க உள்ளவங்களுக்கு இல்லை. அண்ணா நீயும், அம்மாவும் திருவண்ணாமலை போயிட்டு வாங்க. அத்தை பொண்ணு கல்யாணமாம் கண்டிப்பா போகணும்னு டாட் ஆர்டர் போட்டாச்சி. அம்மாவை மட்டும் தனியா எப்படி அனுப்ப முடியும். எனக்கோ எக்ஸாம் டைம். ஆனா, நீதான் லீவே எடுக்காத ஆளாச்சே கொஞ்சம் அம்மாகூட போயிட்டு வாண்ணா?”

“ஹேய்! உன்னை தனியா விட்டுட்டா. நோ வே?”

“எனக்கு துணைக்கு வித்யாவை கூப்பிட்டுக்கறேன்.”

“என்னது வயசுப்பிள்ளைங்க ரெண்டு பேரும் தனியா வீட்லயா? அதுவும் முடியாது” என்றான்.

“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றணா?”

“இரு சாதுமா நான் வித்யா அம்மாகிட்ட அனுமதி வாங்கி அவளை இங்க வரச்சொல்லிட்டு, அப்படியே உங்களுக்கு துணைக்கு வேலைக்கு வருவாங்கள்ல அந்தம்மாவையும், அவங்க பொண்ணையும் வரச்சொல்லிடுறேன்” என்று சொன்னதைச் செய்யவும் செய்தார் வந்தனா.

“அண்ணா நீ போறது கல்யாணத்துக்கு..” என முடிக்காமல் நிறுத்த...

“ஆமா கல்யாணத்துக்கு.. அதுக்கென்ன?”

“அதுக்கென்னவா! எதாவது சூப்பர் ஃபிகர் கிடைச்சா மில்ஹயா சொல்லி ஒரு போனைப்போடு என்ன?”

“கிடைக்கும்ன்ற?” கண்கள் பளிச்சிட தங்கையிடம் கேட்டு, “கிடைச்சா கண்டிப்பா சொல்றேன்.”

பின் இரவு டிராவலிற்காக தன்னுடைய இன்னோவா காருக்கு டிரைவர் ரெடி செய்து அம்மாவும், பையனும் கிளம்பினார்கள்.

விடியற்காலையிலேயே சென்னையிலுள்ள தங்கள் விட்டிற்கு வந்தவர்களுக்கு, மாலையில் ரிசப்ஷன் அட்டெண்ட் செய்து மறுநாள் காலை திருமணம் முடிந்ததும் நேராக பெங்களுர் செல்வது அவர்களின் ப்ளானாக இருந்தது. பின் குளித்துத் தயாராகி திருவண்ணாமலை நோக்கி கிளம்பினார்கள்.

செங்கல்பட்டு தாண்டி ஹைவேயில் பயணம் செய்து கொண்டிருக்க, இவர்களின் காருக்கு முன்னால் ஸ்கார்பியோவும், அதற்கு முன் ஒரு மினிலாரி கம்பி ஏற்றிக்கொண்டு சென்றது. ஸ்கார்பியோ வேகம் ஏறி ஏறி இறங்க, இது சரிவராது என்று நினைத்த டிரைவர் இரண்டையும் முந்திச் செல்லும் எண்ணத்திலும், பைபாஸ் தானே என்ற தைரியத்திலும் ஸ்கார்பியோவைத் தாண்டும் வேளையில், லாரியை க்ராஸ் செய்து ஸ்கார்பியோவும் முன்னேற, சட்டென்று இன்னோவாவை ஒடித்து வளைத்து ஸ்கார்பியோவை தாண்டி முன்னாடி சென்று, ஒரு விபத்தைத் தவிர்த்திருந்தார் டிரைவர். தாண்டிச் சென்றபின் இன்னோவா வேகம் குறைந்தது.

“என்ன டிரைவர் கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா?” என்று டிரைவரிடம் சொல்லியபடி மகனிடம் திரும்ப, அவன் திரும்பி அந்த காரையே பார்த்தபடியே, “டிரைவர் காரை இதே ஸ்பீடுலயே ஓட்டுங்க” என்றான்.

“என்னடா ஜீவா அங்க என்ன பார்க்கிற?” என்ற தாய்க்கு, முகம் முழுக்க மின்னலடிக்க பின்னால் வந்த ஸ்கார்பியோவைக் காண்பித்து, “உங்களோட மருமகள்” என்றான் தன் தாயின் அதிர்வை உணராமல். ஒரு இளைஞனுடன் முகத்தில் சன்னமான கோபத்துடனும் பேசிக்கொண்டு வந்தவளையே பார்த்திருந்தவன் பார்வைகள் மட்டும் அவளிடமே நிலைத்திருக்க... ‘கட்டுனா இவளைக் கட்டணும்டா’ என மனம் அடித்துச் சொன்னது.

“ஜீவா அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகியிருந்தா? யார் என்ன ஏதுன்னு தெரியாம உங்க மருமகள்னு சொல்றது தப்பு” என்றார் கண்டிப்பாக.

அவளிடமிருந்த பார்வையை விலக்காமலேயே, “அம்மா கண்டிப்பா அவளுக்கு கல்யாணமாகியிருக்காது” என்று உறுதியாகச் சொன்னான். அதற்கு மேல மகனிடம் எதுவும் சொல்ல முடியாமல் தாய் அமைதியாக, அப்பொழுது சாதனா போன் செய்து, “எங்கயிருக்...” என தங்கை முடிக்குமுன்...

“சாதுமா மில்ஹயா! மில்ஹயா!” என்றான்.

“அண்ணா அதுக்குள்ளயா பொண்ணு பார்த்துட்ட?”

“பார்த்துக்கிட்டேயிருக்கேன்” என தங்கையிடம் சொல்ல, பின்னால் வந்த ஸ்கார்பியோவிற்கு வழிவிடாமலே இவர்கள் இன்னோவா சென்றது.

ஆனந்த் ஏற்கனவே சுபாவுடன் உள்ள மனஸ்தாபத்தினால் சாலையில் அதிகம் கவனம் வைக்காதவன், இன்னோவா அவனை இன்னும் இன்சல்ட் செய்ய... அதேநேரம் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் முன் ஒரு வயதானவர் சாலையைக் கடப்பதற்காக வர, அவர் மேல் மோதாதிருக்கும் பொருட்டு திடீரென்று சடன்ப்ரேக் போட்டு நிறுத்தினான் லாரி டிரைவர்.

இதையறியாத இந்த எதிர்பாராத திடீர் நிறுத்தத்தில், ஆனந்த் குனிய ஸ்கார்பியோ கம்பியினுள் போய் சொருகி அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.

ஜீவா அதைப் பார்த்த அதிர்ச்சியில் போனை கீழேவிட, வந்தனா காரை ஓரம்கட்டச் சொல்ல, “பைபாஸில் நிறுத்த முடியாதுமா” என்ற டிரைவரிடம்... “நீங்க முதல்ல ஓரமா நிறுத்துங்க மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்” என்று காரை நிறுத்தியதும் இறங்கி ஓடியவன், அங்கு கண்ட காட்சியில் அவன் தேடி வந்த உறவைப் பார்த்து உயிர் உறைந்தது. மூன்று நிமிடங்களுக்கு முன் தான் பார்த்து ரசித்து, கட்டினா இவளைக் கட்டணும்டா என்று எண்ணியதெல்லாம் நினைவு வர, அடுத்து என்ன செய்வது என்பதைக்கூட யோசிக்க முடியாதவனாய் சிலையாய் நின்றிருந்தவான் ஜீவா.

தாய் வந்து உலுக்கி “ஜீவா” என்றதும் சுயநினைவு வந்தவன் தன்னவளைக் காப்பாற்ற செயலில் இறங்கினான். ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, ஓடப்போன லாரி டிரைவரை தன் கார் டிரைவர் பிடித்திருக்க, அவனின் மேல் தவறில்லை என்பதால் லாரியை மட்டும் தள்ளி நிறுத்தச் சொல்ல, லாரியை நகர்த்தியதும், தன்னவளைத் தேடிச்சென்று ஓட்டுனர் இருக்கை ஜன்னல் வழியாக உள்ளிருந்து திறக்க, அவன்மேல் பொத்தென்று சாய்ந்தான் ஆனந்த்.

அவனை டிரைவர் சீட்டில் சாய்ந்தாற்போல் அமர வைத்து, சுபா இருந்த பகுதி வந்து கதவைத் திறந்து அவளுக்கு உயிர் இருக்கிறதா என்பதற்காக, சுவாசத்தை பார்த்து உயிருடன் இருப்பதை உறுதி செய்ததும்தான் மூச்சை விட்டான்.

ஐந்து நிமிடங்கள் முன் அழகாய், தேவதையாய் பார்த்த முகம், நிமிடத்தில் விபத்தில் சிக்கி சிதைந்திருந்தது. முகம் முழுவதும் இரத்தக்கறைகள், இன்னும்கூட ஒருசில இடங்களில் நிற்காமல் இரத்தம் வந்து கொண்டிருந்தது. தாய் கொடுத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்து, இரத்தம் வரும் இடத்தில் கொஞ்சம் அழுத்திப்பிடித்தான். ஏனோ அந்த நிலையில் அவளைப் பார்த்தும், வெறுத்துப்போகத் தோன்றவில்லை. தங்களின் திருமணத்திற்குப் பின் இப்படி நடந்திருந்தால், என் மனைவியை விட்டுட்டுப் போயிருப்பேனா என்ற எண்ணமே வந்தது ஜீவாவிற்கு.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அப்பொழுது அங்கிருந்த செல்போன் இசைக்க எடுத்து காதில் வைத்த வினாடி, “தேவிமா கோவிலுக்கு போயாச்சா? இல்ல ட்ராவல்லதான் இருக்கீங்களா? நீ வேண்டாம்னு சொல்லச் சொல்ல கேட்காம அனுப்பிட்டோமா மனசுல ஒரு வகையான பயம். வயிறெல்லாம் பிசையுற மாதிரி, என்னவோ அசம்பாவிதம் நடக்கப்போற மாதிரி பயம்டா” என்றவர் கொஞ்சம் தயங்கியவாறு, “பாப்பா! அம்மா அடிக்கடி சொல்றாங்க நினைக்காத, என்னதான் கட்டிக்கப் போறவன்னாலும் இடைவெளிவிட்டு பழகணும் பாப்பா. உனக்கு சொல்லத் தேவையில்லை .ஆனா, பையனைப்பற்றி முழுசா தெரியாதுல்லமா. இருந்தாலும் பெத்தவளாச்சே அதான்” என மன்னிப்பாய் சொன்னார்.

‘கட்டிக்கப்போறவன்’ என்றதுமே ஜீவாவிற்கு மனம் தளர்ந்தது. இன்னொருத்தனுக்கு சொந்தமாகப்போற பொண்ணா! இல்லையென்றது மனம்! நிஜம் என்றது நிகழ்காலம்!

“தேவிமா என்னடா எதுவும் பேசமாட்டேன்ற? அம்மா மேல கோபமா? நீ வேண்டாம்னு சொல்லியும் அனுப்பிட்டோம்னு?”

விருப்பமில்லாமல் தான் இந்த இளைஞனுடன் வந்திருக்கிறாள் என்பதில் ஏனோ அவன் மனம் நிம்மதியுற்றது. எதிரில் வருங்கால மாமியார் தவிப்புடன் இருப்பதை எண்ணி, “ஆன்ட்டி” என்றழைத்த ஜீவாவின் குரல் வெளிவராமல் தொண்டையடைத்து வாய் குழற...

“யார்? யார் போன்ல? தேவி தேவிமா” என சுந்தரி பதற, அதற்குள் மகனிடமிருந்து போனை வாங்கி தனியே சென்று, முதலில் ஒன்றுமில்லை என்று சொல்லி சுந்தரியை சமாதானப்படுத்தி, பின் விபத்தைப்பற்றி சொன்னார் வந்தனா.

தாய் போனுடன் நகர்ந்ததும், “தேவி” என்றழைத்தான் ஜீவா அவனின் ஜீவனுக்காக. அவனின் தேவி மெல்ல கண்திறக்க முயன்று முடியாமல் போக மயங்கினாள்.

சரியாக பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வர, இருவரையும் ஏற்றிக்கொண்டு, முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்று முதலுதவி செய்து சென்னை அரசு மருத்துவமனை சென்றார்கள். ஆனந்திற்கு அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் என டாக்டர்கள் சொன்னதால், அவனையும் அவர்களுடனேயே ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

சுபாவின் செல்போனிலேயே பேசிய ராஜனும், சுந்தரியும் ஆம்புலன்ஸ் வரும்முன்னே ஜி.ஹெச் வந்து தெரிந்தவர்கள் மூலமாக பேசி, ஆம்புலன்ஸ் வந்ததும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சுபாவிற்கு சிகிச்சை ஆரம்பித்தார். அதிலேயே மற்றவர்களுக்குத் தெரிந்தது அவரின் வசதியும், செல்வாக்கும். பெண்ணை அந்த நிலையில் பார்த்த சுந்தரி மயக்கம் போட்டு விழ, ஜீவா அவரைத் தனியாக அட்மிட் செய்து, ட்ரிப்ஸ் ஏற்ற வந்தனா பார்த்துக்கொண்டார்.

ராஜன் மகளிடம் தன் பாசத்தை வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும், அவருக்கு மகளென்றால் உயிர். மகளைப் பார்த்தவர் மயங்கி விழுந்த மனைவியை கவனிக்க மறந்தார்.

அதற்குள் ப்ரேம் வர, உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும், அங்கேயே கண்ணீருடன் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான் தங்கை நலனுக்காக.

இரு ஆண்களையும் சமாதானப்படுத்தினாலும், அவர்கள் தங்கள் வேதனையிலேயே சுழல, அவர்களை விட்டு தாயினருகே வந்தமர்ந்த ஜீவா கண்கள் தன்னாலேயே கண்ணீரைப் பொழிந்தது. “அம்மா மூனு நிமிஷத்துக்குள்ள என்னெல்லாம் நடந்துருச்சிமா. அதிலும் அவளுக்கு அடுத்தவாரம் மேரேஜ்னு கேள்விப்பட்டதும் என்னால முடியலம்மா.”

“ஜீவா என்ன சொல்ற? அடுத்தவாரம் கல்யாணமா?” அதிர்ந்து கேட்க... ‘ஆம்’ என சம்மதமாக தலையாட்டிய மகனின் நிலை தெரிந்தவரால் என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்று தெரியவில்லை. மகனிடம் திரும்பி “ஜீவா இதுக்கெல்லாம் கலங்கலாமா? இந்தப் பொண்ணுதான் உனக்குன்னு இருந்தா மாத்தவா முடியும்.”

“அம்மா” என்று ஆவலாய் தாயை நிமிர்ந்து பார்க்க...

“இப்போதைக்கு அவங்களுக்கு நம்மால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவோம். அப்பாவுக்கு போன் பண்ணி கல்யாணத்துக்கு போகமுடியலன்னு சொல்லிடுறியா?”

“இப்ப இருக்கிற மனநிலையில என்னால பேச முடியாதும்மா.

“சரிப்பா நான் சொல்லிருறேன்” என்று கணவனுக்கு போன் செய்து நடந்ததை விவரிக்க, கொஞ்சம் வருத்தமிருந்தாலும், “உயிரை விட பெரிய விஷயம் எதுவுமில்ல வந்துமா. கல்யாணம் தான விடு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்” என்றவர் மருத்துவமனை பெயர் கேட்டு, தன் வேலைகளின் நடுவே அங்கு வந்து, சுபாவையும் பார்த்து ஆண்களுக்கு ஆறுதல் சொல்லி, “நைட் வீட்டுக்கு வந்திருங்க. நான் ஸ்கூல் பங்க்ஷன் முடிஞ்சதும் வந்திருறேன்” என மனைவி, மகனிடம் கூறி கிளம்பிச்சென்றார்.

ஆனந்தின் தாயும், தங்கையும் பதறியபடி வர, அவனுக்கு எதுவுமில்லை என்றவுடன் கொஞ்சம் நிம்மதியானார்கள். சுபாவை நினைத்துதான் அவரின் வருத்தமே. ஆனந்த் போலீஸிடம் லாரி திடீரென நிறுத்தியதுதான் விபத்துக்கு காரணமென்று, தங்களுள் நடந்த வாக்குவாதங்களை சொல்லாமல் மறைத்து, போலீஸ்கு அதையே வாக்குமூலமாகவும் கொடுத்தான். லாரி டிரைவரும், ஏன் ஜீவாவுமே அந்த சம்பவத்தைப் பார்த்திருந்ததால் ஆனந்த் சொன்னதையே எழுதிக்கொண்டார்கள்.

ஐசியூ மாற்றியதும் சுபாவை பார்க்க சென்ற ஆனந்த், அவள் முகம் தூரத்திலிருந்து பார்க்கவே அருவருப்பைக் காட்ட அதை தன் முகத்தில் காட்டினான். பின் அங்கிருந்த நர்ஸிடம் விசாரிக்க, “அவங்களுக்கு முகம் முழுக்க கம்பி குத்தியிருக்கு. கண் ரெண்டும் தெரிய சான்ஸே இல்லை” என்றதும் ‘எப்படிடா இந்த பட்டிக்காடை திருமணம் செய்வது’ என்று நினைத்திருந்தவன், இதையே காரணமாக்கி விலகிவிட முடிவு செய்து, “அம்மா வாங்க போகலாம்” என்று தாயை அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தவனை,

ராஜன் மறித்து, “என்ன தம்பி. ஒண்ணுமே சொல்லாமல் போறீங்க?” என்று ஆனந்தைப் பார்த்து கேட்டார்.

“என்ன சார் சொல்லணும்னு நினைக்கிறீங்க?”

“சார்” என்ற வார்த்தையிலேயே அவனின் மனதைப் புரிந்து கொண்டார் அனுபவஸ்தனான ராஜன். இருப்பினும் அவனிடம், “நல்லதை சொல்லணும்னு நினைக்கிறேன்” என்றார்.

“அதையெல்லாம் என்னால சொல்ல முடியாது சார்” என்றான் அசட்டையாக.

எதிர்பாராத விதமாக ப்ரேம் அவனின் சட்டையைப் பிடித்து, “எங்கடா ஓடப்பார்க்கிற? என்னடா பண்ணின என் தங்கச்சிய? உன்னை நம்பித்தானடா அனுப்பினேன்? நீ முழுசா வந்துட்ட. அவளை என்னடா பண்ணின? ஒரு சின்ன காயம் கூட படாமல் வளர்ந்தவடா. இந்த வலியை அவ எப்படிடா தாங்குவா? ஐயோ என்னால அவளை இந்த நிலையில பார்க்க முடியலடா. என் பழைய தங்கச்சியை திருப்பிக் குடுத்துட்டுப் போடா.” வந்த கண்ணீரை சட்டையில் துடைத்தபடி ஆனந்தை கேட்டுக்கொண்டிருந்தான்.

ப்ரேம், அப்பா என்ன விஷயமாக ஆனந்திடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதை கவனிக்கவில்லை. கவனமெல்லாம் தங்கையின் மேலேயே பதிந்திருக்க, தற்செயலாகத் திரும்பியவன் கண்ணில் ஆனந்த் வெளியே செல்லப்போவது உறைக்க, அவனை நன்றாக பார்த்த ப்ரேம் ஒரு சின்ன காயத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றதும், இவன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்று தோன்ற, அந்த கோபத்தில்தான் வந்து சட்டையைப் பிடித்தான்.

“பதில் சொல்லுடா? உன்கூட வரமாட்டேன்னு சொன்னவளை, கட்டிக்கப் போறவனாச்சேன்னு வலுக்கட்டாயமா அனுப்பி வச்சா, அவள் முகத்தை சிதைச்சி கொண்டு வந்திருக்கியேடா. பத்திரமா கூட்டிட்டு வர்றேன்னு சொன்னதாலதான அனுப்பினோம்” என்று கோபமும், ஆத்திரமும், அழுகையுமாக கேட்டான்.

பிரேமின் கையைத் தட்டிவிட்டவன், “நான் ஒண்ணும் பண்ணல. இது ஜஸ்ட் ஆக்ஸிடண்ட். ஆக்ஸிடண்ட்தான்” என்று அழுத்திச் சொல்லி, “கார்ல போகும்போது பேசிப்பார்த்தேன்..” என நிறுத்தி, “உங்கவீட்டுப் பொண்ணுக்கும், எனக்கும் செட்டாகாதுங்க. அவள் சரியான படிச்ச பட்டிக்காடு” என்றான்.

அதைக் கேட்டு வந்த கோபத்தில் ஜீவா எழ, அதற்குள் ப்ரேம் “கொன்னுருவேன்டா. என் தங்கச்சியைப்பற்றி எதாவது சொன்னா கொன்னுருவேன். ஏன்டா? ஒரு பொண்ணு அடக்க ஒடுக்கமா, பண்போட, ஒழுக்கமானவளா வளர்ந்தா உங்களுக்கு பட்டிக்காடா? அல்ட்ரா மாடர்னா ட்ரஸ் போட்டுட்டு, அரைகுறை தமிழ் பேசிட்டு, உங்கமேல விழுந்து பல்லைக் காட்டினால்தான் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா?” ஆத்திரத்துடன் கத்தினான்.

“ஆனந்த் ஏன் இப்படில்லாம் பேசுற? உனக்கும் ஒரு தங்கையிருக்கா நியாபகமிருக்கட்டும்” என அவனின் தாய் அதட்ட...

“அம்மா நீங்க சும்மாயிருங்க. அதுக்காக இவளை நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமா?”

“எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசியிருக்கலாம். தப்பு பண்றடா, பெண்பாவம் பொல்லாததுடா ஆனந்த்.”

“நான் தப்பு பண்ணலம்மா. இவ நல்லாயிருக்கும் போதே எனக்கு பிடிக்கல. இதுல முகம், முகம் விடுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணி சரிபண்ணிக்கலாம். ஆனா, கண் போனா போனதுதான். நான் ஒரு சராசரி வாழ்க்கையை வாழணும்னு நினைக்கிறேன். இவளைக்கட்டினா, இவ பின்னாடி சுத்துறதுக்கே என்வாழ்க்கையில பாதிநாள் முடிஞ்சிரும். நான் ப்ராக்டிகலா பேசுறேன்மா. வெளிப்படையா சொல்லணும்னா, ஒரு குருடியை கல்யாணம் பண்ணிட்டு என்னால வாழ்க்கை நடத்த முடியாது” என்றான் வேகமாக.

“டேய்!” என்றபடி ப்ரேம் அடிக்க கையை ஓங்க, அதற்குள் ஜீவா அவனை அடித்து, சட்டையைப் பிடித்திழுத்து சுவரோடு சுவராய் சாய்த்து, “உன்னை மாதிரி ஒருத்தன் என் தேவிக்கு வேண்டாம்டா ராஸ்கல்” என்றான் மதமிஞ்சிய ஆத்திரத்துடன். “பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருண்டுடாதுன்னு தெரியலை பாரு உனக்கு” என குரலில் கேலியையும் கலந்தவன், “நீயில்லன்னா அவளோட வாழ்வு அப்படியே அஸ்தமனமாகிடும்னு நினைச்சியா? நானிருக்கேன்டா. அவளை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன். அவளுக்கு பார்வையில்லன்னா என்ன எனக்கு ரெண்டு கண் இருக்குதுல்ல, என் கண்ணால அவளை பார்க்க வச்சி, நான் பார்த்துக்குவேன்டா மகாராணியா. அடுத்த வாரம்தான கல்யாணம்..” என்றவன் ராஜனின்புறம் திரும்பி, “மாமா உங்க பொண்ணை நான் கட்டிக்கிறேன்” என்றான் பட்டென்று.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top