- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
15
விவேகானந்தனின் ஒன்றுவிட்ட தங்கை மகள் திருமணம், திருவண்ணாமலையில் வைத்திருந்தார்கள். அவரால் செல்ல முடியாததால், மனைவியை போகச்சொல்ல, “சாதனாவிற்கு லாஸ்ட் செமஸ்டர். இப்ப என்னால் முடியாது” என்று மறுத்தவரிடம்...
“நமக்கும் சொந்த பந்தம்னு ஆளுங்க வேணும் வந்து” என்றார் விவேகானந்தன்.
“சென்னையில இருக்கிற நீங்க போகாம, பெங்களுர்ல இருக்கிற என்னை வரச்சொல்றீங்களே எப்படிங்க முடியும்?” என வந்தனா தன் தரப்பைச் சொல்ல...
“ஸ்கூல்ல ஆன்வல்டே பங்ஷன் இருக்குதுமா. நானில்லன்னா எப்படி? சாதனா எக்ஸாம்னால தான் பங்ஷனுக்கே நான் வேண்டாம்னேன். அதே நேரம் அந்த பங்ஷனும் முக்கியம். கொஞ்சம் சிரமம் பார்க்காம வர்றியா? ஜீவாகிட்டச் சொல்லி ப்ளைட் டிக்கட் போடச் சொல்றேன். இல்லன்னா காருக்கு டிரைவர் போட்டுட்டு வா.”
“நானெப்படிங்க தனியா? சரி விடுங்க. நான் பிள்ளைங்க வந்ததும் கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்றேன்.” யோசனையாக இருந்த தாயிடம் வந்த சாதனாவிற்கு வந்தனா விஷயத்தைச் சொல்லி “நீயும் வர்றியா சாதுமா?” என்றதுதான் தாமதம்...
“என்ன விளையாடுறீங்களா? நான் செமஸ்டருக்கு படிச்சிட்டிருக்கேன். இந்த நேரத்துல லீவ் எடுக்கச் சொல்லி எப்படி நீங்க என்கிட்ட சொல்லலாம்?” என வானத்துக்கும், பூமிக்கும் எகிறிக் குதித்தாள்.
“என்னை என்னடி பண்ணச்சொல்ற?”
“ஒண்ணும் பண்ண வேண்டாம். நீங்க அண்ணாவைக் கூட்டிட்டுப் போங்க.”
“அப்ப நீ?”
“தனியா இருந்துக்கறேன். எனக்கென்ன பயமா? என்னைப் பார்த்துத்தான் மத்தவங்க பயப்படணும். ஹா...ஹா...” என வில்லிபோல் சிரிக்க...
“சகிக்கல” என வந்தனா முகம் சுழித்தாள்.
“இது கூடதான் சகிக்கல” என்று தாயின் முகச்சுழிப்பைக் காண்பித்தாள்.
“ப்ச்... போ சாதுமா. நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற காமெடி பண்ணிட்டிருக்க.”
“என்னது காமெடியா? ஐம் சீரியஸ் வந்துமா.”
அந்த நேரம் அங்கே வந்த ஜீவா, “யாருக்கு சீரியஸ்?” என்றான்.
“ஹான்.. கண்டிப்பா இங்க உள்ளவங்களுக்கு இல்லை. அண்ணா நீயும், அம்மாவும் திருவண்ணாமலை போயிட்டு வாங்க. அத்தை பொண்ணு கல்யாணமாம் கண்டிப்பா போகணும்னு டாட் ஆர்டர் போட்டாச்சி. அம்மாவை மட்டும் தனியா எப்படி அனுப்ப முடியும். எனக்கோ எக்ஸாம் டைம். ஆனா, நீதான் லீவே எடுக்காத ஆளாச்சே கொஞ்சம் அம்மாகூட போயிட்டு வாண்ணா?”
“ஹேய்! உன்னை தனியா விட்டுட்டா. நோ வே?”
“எனக்கு துணைக்கு வித்யாவை கூப்பிட்டுக்கறேன்.”
“என்னது வயசுப்பிள்ளைங்க ரெண்டு பேரும் தனியா வீட்லயா? அதுவும் முடியாது” என்றான்.
“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றணா?”
“இரு சாதுமா நான் வித்யா அம்மாகிட்ட அனுமதி வாங்கி அவளை இங்க வரச்சொல்லிட்டு, அப்படியே உங்களுக்கு துணைக்கு வேலைக்கு வருவாங்கள்ல அந்தம்மாவையும், அவங்க பொண்ணையும் வரச்சொல்லிடுறேன்” என்று சொன்னதைச் செய்யவும் செய்தார் வந்தனா.
“அண்ணா நீ போறது கல்யாணத்துக்கு..” என முடிக்காமல் நிறுத்த...
“ஆமா கல்யாணத்துக்கு.. அதுக்கென்ன?”
“அதுக்கென்னவா! எதாவது சூப்பர் ஃபிகர் கிடைச்சா மில்ஹயா சொல்லி ஒரு போனைப்போடு என்ன?”
“கிடைக்கும்ன்ற?” கண்கள் பளிச்சிட தங்கையிடம் கேட்டு, “கிடைச்சா கண்டிப்பா சொல்றேன்.”
பின் இரவு டிராவலிற்காக தன்னுடைய இன்னோவா காருக்கு டிரைவர் ரெடி செய்து அம்மாவும், பையனும் கிளம்பினார்கள்.
விடியற்காலையிலேயே சென்னையிலுள்ள தங்கள் விட்டிற்கு வந்தவர்களுக்கு, மாலையில் ரிசப்ஷன் அட்டெண்ட் செய்து மறுநாள் காலை திருமணம் முடிந்ததும் நேராக பெங்களுர் செல்வது அவர்களின் ப்ளானாக இருந்தது. பின் குளித்துத் தயாராகி திருவண்ணாமலை நோக்கி கிளம்பினார்கள்.
செங்கல்பட்டு தாண்டி ஹைவேயில் பயணம் செய்து கொண்டிருக்க, இவர்களின் காருக்கு முன்னால் ஸ்கார்பியோவும், அதற்கு முன் ஒரு மினிலாரி கம்பி ஏற்றிக்கொண்டு சென்றது. ஸ்கார்பியோ வேகம் ஏறி ஏறி இறங்க, இது சரிவராது என்று நினைத்த டிரைவர் இரண்டையும் முந்திச் செல்லும் எண்ணத்திலும், பைபாஸ் தானே என்ற தைரியத்திலும் ஸ்கார்பியோவைத் தாண்டும் வேளையில், லாரியை க்ராஸ் செய்து ஸ்கார்பியோவும் முன்னேற, சட்டென்று இன்னோவாவை ஒடித்து வளைத்து ஸ்கார்பியோவை தாண்டி முன்னாடி சென்று, ஒரு விபத்தைத் தவிர்த்திருந்தார் டிரைவர். தாண்டிச் சென்றபின் இன்னோவா வேகம் குறைந்தது.
“என்ன டிரைவர் கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா?” என்று டிரைவரிடம் சொல்லியபடி மகனிடம் திரும்ப, அவன் திரும்பி அந்த காரையே பார்த்தபடியே, “டிரைவர் காரை இதே ஸ்பீடுலயே ஓட்டுங்க” என்றான்.
“என்னடா ஜீவா அங்க என்ன பார்க்கிற?” என்ற தாய்க்கு, முகம் முழுக்க மின்னலடிக்க பின்னால் வந்த ஸ்கார்பியோவைக் காண்பித்து, “உங்களோட மருமகள்” என்றான் தன் தாயின் அதிர்வை உணராமல். ஒரு இளைஞனுடன் முகத்தில் சன்னமான கோபத்துடனும் பேசிக்கொண்டு வந்தவளையே பார்த்திருந்தவன் பார்வைகள் மட்டும் அவளிடமே நிலைத்திருக்க... ‘கட்டுனா இவளைக் கட்டணும்டா’ என மனம் அடித்துச் சொன்னது.
“ஜீவா அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகியிருந்தா? யார் என்ன ஏதுன்னு தெரியாம உங்க மருமகள்னு சொல்றது தப்பு” என்றார் கண்டிப்பாக.
அவளிடமிருந்த பார்வையை விலக்காமலேயே, “அம்மா கண்டிப்பா அவளுக்கு கல்யாணமாகியிருக்காது” என்று உறுதியாகச் சொன்னான். அதற்கு மேல மகனிடம் எதுவும் சொல்ல முடியாமல் தாய் அமைதியாக, அப்பொழுது சாதனா போன் செய்து, “எங்கயிருக்...” என தங்கை முடிக்குமுன்...
“சாதுமா மில்ஹயா! மில்ஹயா!” என்றான்.
“அண்ணா அதுக்குள்ளயா பொண்ணு பார்த்துட்ட?”
“பார்த்துக்கிட்டேயிருக்கேன்” என தங்கையிடம் சொல்ல, பின்னால் வந்த ஸ்கார்பியோவிற்கு வழிவிடாமலே இவர்கள் இன்னோவா சென்றது.
ஆனந்த் ஏற்கனவே சுபாவுடன் உள்ள மனஸ்தாபத்தினால் சாலையில் அதிகம் கவனம் வைக்காதவன், இன்னோவா அவனை இன்னும் இன்சல்ட் செய்ய... அதேநேரம் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் முன் ஒரு வயதானவர் சாலையைக் கடப்பதற்காக வர, அவர் மேல் மோதாதிருக்கும் பொருட்டு திடீரென்று சடன்ப்ரேக் போட்டு நிறுத்தினான் லாரி டிரைவர்.
இதையறியாத இந்த எதிர்பாராத திடீர் நிறுத்தத்தில், ஆனந்த் குனிய ஸ்கார்பியோ கம்பியினுள் போய் சொருகி அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.
ஜீவா அதைப் பார்த்த அதிர்ச்சியில் போனை கீழேவிட, வந்தனா காரை ஓரம்கட்டச் சொல்ல, “பைபாஸில் நிறுத்த முடியாதுமா” என்ற டிரைவரிடம்... “நீங்க முதல்ல ஓரமா நிறுத்துங்க மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்” என்று காரை நிறுத்தியதும் இறங்கி ஓடியவன், அங்கு கண்ட காட்சியில் அவன் தேடி வந்த உறவைப் பார்த்து உயிர் உறைந்தது. மூன்று நிமிடங்களுக்கு முன் தான் பார்த்து ரசித்து, கட்டினா இவளைக் கட்டணும்டா என்று எண்ணியதெல்லாம் நினைவு வர, அடுத்து என்ன செய்வது என்பதைக்கூட யோசிக்க முடியாதவனாய் சிலையாய் நின்றிருந்தவான் ஜீவா.
தாய் வந்து உலுக்கி “ஜீவா” என்றதும் சுயநினைவு வந்தவன் தன்னவளைக் காப்பாற்ற செயலில் இறங்கினான். ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, ஓடப்போன லாரி டிரைவரை தன் கார் டிரைவர் பிடித்திருக்க, அவனின் மேல் தவறில்லை என்பதால் லாரியை மட்டும் தள்ளி நிறுத்தச் சொல்ல, லாரியை நகர்த்தியதும், தன்னவளைத் தேடிச்சென்று ஓட்டுனர் இருக்கை ஜன்னல் வழியாக உள்ளிருந்து திறக்க, அவன்மேல் பொத்தென்று சாய்ந்தான் ஆனந்த்.
அவனை டிரைவர் சீட்டில் சாய்ந்தாற்போல் அமர வைத்து, சுபா இருந்த பகுதி வந்து கதவைத் திறந்து அவளுக்கு உயிர் இருக்கிறதா என்பதற்காக, சுவாசத்தை பார்த்து உயிருடன் இருப்பதை உறுதி செய்ததும்தான் மூச்சை விட்டான்.
ஐந்து நிமிடங்கள் முன் அழகாய், தேவதையாய் பார்த்த முகம், நிமிடத்தில் விபத்தில் சிக்கி சிதைந்திருந்தது. முகம் முழுவதும் இரத்தக்கறைகள், இன்னும்கூட ஒருசில இடங்களில் நிற்காமல் இரத்தம் வந்து கொண்டிருந்தது. தாய் கொடுத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்து, இரத்தம் வரும் இடத்தில் கொஞ்சம் அழுத்திப்பிடித்தான். ஏனோ அந்த நிலையில் அவளைப் பார்த்தும், வெறுத்துப்போகத் தோன்றவில்லை. தங்களின் திருமணத்திற்குப் பின் இப்படி நடந்திருந்தால், என் மனைவியை விட்டுட்டுப் போயிருப்பேனா என்ற எண்ணமே வந்தது ஜீவாவிற்கு.
விவேகானந்தனின் ஒன்றுவிட்ட தங்கை மகள் திருமணம், திருவண்ணாமலையில் வைத்திருந்தார்கள். அவரால் செல்ல முடியாததால், மனைவியை போகச்சொல்ல, “சாதனாவிற்கு லாஸ்ட் செமஸ்டர். இப்ப என்னால் முடியாது” என்று மறுத்தவரிடம்...
“நமக்கும் சொந்த பந்தம்னு ஆளுங்க வேணும் வந்து” என்றார் விவேகானந்தன்.
“சென்னையில இருக்கிற நீங்க போகாம, பெங்களுர்ல இருக்கிற என்னை வரச்சொல்றீங்களே எப்படிங்க முடியும்?” என வந்தனா தன் தரப்பைச் சொல்ல...
“ஸ்கூல்ல ஆன்வல்டே பங்ஷன் இருக்குதுமா. நானில்லன்னா எப்படி? சாதனா எக்ஸாம்னால தான் பங்ஷனுக்கே நான் வேண்டாம்னேன். அதே நேரம் அந்த பங்ஷனும் முக்கியம். கொஞ்சம் சிரமம் பார்க்காம வர்றியா? ஜீவாகிட்டச் சொல்லி ப்ளைட் டிக்கட் போடச் சொல்றேன். இல்லன்னா காருக்கு டிரைவர் போட்டுட்டு வா.”
“நானெப்படிங்க தனியா? சரி விடுங்க. நான் பிள்ளைங்க வந்ததும் கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்றேன்.” யோசனையாக இருந்த தாயிடம் வந்த சாதனாவிற்கு வந்தனா விஷயத்தைச் சொல்லி “நீயும் வர்றியா சாதுமா?” என்றதுதான் தாமதம்...
“என்ன விளையாடுறீங்களா? நான் செமஸ்டருக்கு படிச்சிட்டிருக்கேன். இந்த நேரத்துல லீவ் எடுக்கச் சொல்லி எப்படி நீங்க என்கிட்ட சொல்லலாம்?” என வானத்துக்கும், பூமிக்கும் எகிறிக் குதித்தாள்.
“என்னை என்னடி பண்ணச்சொல்ற?”
“ஒண்ணும் பண்ண வேண்டாம். நீங்க அண்ணாவைக் கூட்டிட்டுப் போங்க.”
“அப்ப நீ?”
“தனியா இருந்துக்கறேன். எனக்கென்ன பயமா? என்னைப் பார்த்துத்தான் மத்தவங்க பயப்படணும். ஹா...ஹா...” என வில்லிபோல் சிரிக்க...
“சகிக்கல” என வந்தனா முகம் சுழித்தாள்.
“இது கூடதான் சகிக்கல” என்று தாயின் முகச்சுழிப்பைக் காண்பித்தாள்.
“ப்ச்... போ சாதுமா. நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற காமெடி பண்ணிட்டிருக்க.”
“என்னது காமெடியா? ஐம் சீரியஸ் வந்துமா.”
அந்த நேரம் அங்கே வந்த ஜீவா, “யாருக்கு சீரியஸ்?” என்றான்.
“ஹான்.. கண்டிப்பா இங்க உள்ளவங்களுக்கு இல்லை. அண்ணா நீயும், அம்மாவும் திருவண்ணாமலை போயிட்டு வாங்க. அத்தை பொண்ணு கல்யாணமாம் கண்டிப்பா போகணும்னு டாட் ஆர்டர் போட்டாச்சி. அம்மாவை மட்டும் தனியா எப்படி அனுப்ப முடியும். எனக்கோ எக்ஸாம் டைம். ஆனா, நீதான் லீவே எடுக்காத ஆளாச்சே கொஞ்சம் அம்மாகூட போயிட்டு வாண்ணா?”
“ஹேய்! உன்னை தனியா விட்டுட்டா. நோ வே?”
“எனக்கு துணைக்கு வித்யாவை கூப்பிட்டுக்கறேன்.”
“என்னது வயசுப்பிள்ளைங்க ரெண்டு பேரும் தனியா வீட்லயா? அதுவும் முடியாது” என்றான்.
“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றணா?”
“இரு சாதுமா நான் வித்யா அம்மாகிட்ட அனுமதி வாங்கி அவளை இங்க வரச்சொல்லிட்டு, அப்படியே உங்களுக்கு துணைக்கு வேலைக்கு வருவாங்கள்ல அந்தம்மாவையும், அவங்க பொண்ணையும் வரச்சொல்லிடுறேன்” என்று சொன்னதைச் செய்யவும் செய்தார் வந்தனா.
“அண்ணா நீ போறது கல்யாணத்துக்கு..” என முடிக்காமல் நிறுத்த...
“ஆமா கல்யாணத்துக்கு.. அதுக்கென்ன?”
“அதுக்கென்னவா! எதாவது சூப்பர் ஃபிகர் கிடைச்சா மில்ஹயா சொல்லி ஒரு போனைப்போடு என்ன?”
“கிடைக்கும்ன்ற?” கண்கள் பளிச்சிட தங்கையிடம் கேட்டு, “கிடைச்சா கண்டிப்பா சொல்றேன்.”
பின் இரவு டிராவலிற்காக தன்னுடைய இன்னோவா காருக்கு டிரைவர் ரெடி செய்து அம்மாவும், பையனும் கிளம்பினார்கள்.
விடியற்காலையிலேயே சென்னையிலுள்ள தங்கள் விட்டிற்கு வந்தவர்களுக்கு, மாலையில் ரிசப்ஷன் அட்டெண்ட் செய்து மறுநாள் காலை திருமணம் முடிந்ததும் நேராக பெங்களுர் செல்வது அவர்களின் ப்ளானாக இருந்தது. பின் குளித்துத் தயாராகி திருவண்ணாமலை நோக்கி கிளம்பினார்கள்.
செங்கல்பட்டு தாண்டி ஹைவேயில் பயணம் செய்து கொண்டிருக்க, இவர்களின் காருக்கு முன்னால் ஸ்கார்பியோவும், அதற்கு முன் ஒரு மினிலாரி கம்பி ஏற்றிக்கொண்டு சென்றது. ஸ்கார்பியோ வேகம் ஏறி ஏறி இறங்க, இது சரிவராது என்று நினைத்த டிரைவர் இரண்டையும் முந்திச் செல்லும் எண்ணத்திலும், பைபாஸ் தானே என்ற தைரியத்திலும் ஸ்கார்பியோவைத் தாண்டும் வேளையில், லாரியை க்ராஸ் செய்து ஸ்கார்பியோவும் முன்னேற, சட்டென்று இன்னோவாவை ஒடித்து வளைத்து ஸ்கார்பியோவை தாண்டி முன்னாடி சென்று, ஒரு விபத்தைத் தவிர்த்திருந்தார் டிரைவர். தாண்டிச் சென்றபின் இன்னோவா வேகம் குறைந்தது.
“என்ன டிரைவர் கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா?” என்று டிரைவரிடம் சொல்லியபடி மகனிடம் திரும்ப, அவன் திரும்பி அந்த காரையே பார்த்தபடியே, “டிரைவர் காரை இதே ஸ்பீடுலயே ஓட்டுங்க” என்றான்.
“என்னடா ஜீவா அங்க என்ன பார்க்கிற?” என்ற தாய்க்கு, முகம் முழுக்க மின்னலடிக்க பின்னால் வந்த ஸ்கார்பியோவைக் காண்பித்து, “உங்களோட மருமகள்” என்றான் தன் தாயின் அதிர்வை உணராமல். ஒரு இளைஞனுடன் முகத்தில் சன்னமான கோபத்துடனும் பேசிக்கொண்டு வந்தவளையே பார்த்திருந்தவன் பார்வைகள் மட்டும் அவளிடமே நிலைத்திருக்க... ‘கட்டுனா இவளைக் கட்டணும்டா’ என மனம் அடித்துச் சொன்னது.
“ஜீவா அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகியிருந்தா? யார் என்ன ஏதுன்னு தெரியாம உங்க மருமகள்னு சொல்றது தப்பு” என்றார் கண்டிப்பாக.
அவளிடமிருந்த பார்வையை விலக்காமலேயே, “அம்மா கண்டிப்பா அவளுக்கு கல்யாணமாகியிருக்காது” என்று உறுதியாகச் சொன்னான். அதற்கு மேல மகனிடம் எதுவும் சொல்ல முடியாமல் தாய் அமைதியாக, அப்பொழுது சாதனா போன் செய்து, “எங்கயிருக்...” என தங்கை முடிக்குமுன்...
“சாதுமா மில்ஹயா! மில்ஹயா!” என்றான்.
“அண்ணா அதுக்குள்ளயா பொண்ணு பார்த்துட்ட?”
“பார்த்துக்கிட்டேயிருக்கேன்” என தங்கையிடம் சொல்ல, பின்னால் வந்த ஸ்கார்பியோவிற்கு வழிவிடாமலே இவர்கள் இன்னோவா சென்றது.
ஆனந்த் ஏற்கனவே சுபாவுடன் உள்ள மனஸ்தாபத்தினால் சாலையில் அதிகம் கவனம் வைக்காதவன், இன்னோவா அவனை இன்னும் இன்சல்ட் செய்ய... அதேநேரம் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் முன் ஒரு வயதானவர் சாலையைக் கடப்பதற்காக வர, அவர் மேல் மோதாதிருக்கும் பொருட்டு திடீரென்று சடன்ப்ரேக் போட்டு நிறுத்தினான் லாரி டிரைவர்.
இதையறியாத இந்த எதிர்பாராத திடீர் நிறுத்தத்தில், ஆனந்த் குனிய ஸ்கார்பியோ கம்பியினுள் போய் சொருகி அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.
ஜீவா அதைப் பார்த்த அதிர்ச்சியில் போனை கீழேவிட, வந்தனா காரை ஓரம்கட்டச் சொல்ல, “பைபாஸில் நிறுத்த முடியாதுமா” என்ற டிரைவரிடம்... “நீங்க முதல்ல ஓரமா நிறுத்துங்க மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்” என்று காரை நிறுத்தியதும் இறங்கி ஓடியவன், அங்கு கண்ட காட்சியில் அவன் தேடி வந்த உறவைப் பார்த்து உயிர் உறைந்தது. மூன்று நிமிடங்களுக்கு முன் தான் பார்த்து ரசித்து, கட்டினா இவளைக் கட்டணும்டா என்று எண்ணியதெல்லாம் நினைவு வர, அடுத்து என்ன செய்வது என்பதைக்கூட யோசிக்க முடியாதவனாய் சிலையாய் நின்றிருந்தவான் ஜீவா.
தாய் வந்து உலுக்கி “ஜீவா” என்றதும் சுயநினைவு வந்தவன் தன்னவளைக் காப்பாற்ற செயலில் இறங்கினான். ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, ஓடப்போன லாரி டிரைவரை தன் கார் டிரைவர் பிடித்திருக்க, அவனின் மேல் தவறில்லை என்பதால் லாரியை மட்டும் தள்ளி நிறுத்தச் சொல்ல, லாரியை நகர்த்தியதும், தன்னவளைத் தேடிச்சென்று ஓட்டுனர் இருக்கை ஜன்னல் வழியாக உள்ளிருந்து திறக்க, அவன்மேல் பொத்தென்று சாய்ந்தான் ஆனந்த்.
அவனை டிரைவர் சீட்டில் சாய்ந்தாற்போல் அமர வைத்து, சுபா இருந்த பகுதி வந்து கதவைத் திறந்து அவளுக்கு உயிர் இருக்கிறதா என்பதற்காக, சுவாசத்தை பார்த்து உயிருடன் இருப்பதை உறுதி செய்ததும்தான் மூச்சை விட்டான்.
ஐந்து நிமிடங்கள் முன் அழகாய், தேவதையாய் பார்த்த முகம், நிமிடத்தில் விபத்தில் சிக்கி சிதைந்திருந்தது. முகம் முழுவதும் இரத்தக்கறைகள், இன்னும்கூட ஒருசில இடங்களில் நிற்காமல் இரத்தம் வந்து கொண்டிருந்தது. தாய் கொடுத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்து, இரத்தம் வரும் இடத்தில் கொஞ்சம் அழுத்திப்பிடித்தான். ஏனோ அந்த நிலையில் அவளைப் பார்த்தும், வெறுத்துப்போகத் தோன்றவில்லை. தங்களின் திருமணத்திற்குப் பின் இப்படி நடந்திருந்தால், என் மனைவியை விட்டுட்டுப் போயிருப்பேனா என்ற எண்ணமே வந்தது ஜீவாவிற்கு.