• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
15



விளையாட்டைக் கைவிட்டு, “என்மேல் கோவம் இல்லையே?” என குரலை தாழ்த்திக் கேட்க...

“கோபத்துக்கென்ன நிறையவே இருக்கு. அவன்தான் சின்னப்பையன். அவன் சொன்னாலுமே அப்படியென்ன அவசரம் உங்களுக்கு?”

“அவசரம்தான் அவசியமும் கூட. எனக்கு நீ வேணும் ஒய்ஃபா. கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா சரின்னு சொல்லமாட்ட. இப்பன்னு இல்ல எப்பவுமே அதேதான் சொல்வ.”

“நான்தான் ஏற்கனவே லவ் பண்றேன் சொன்னேன்ல” என்றவள் குரலில் தானாகவே ஒரு இறக்கம்.

“உன்னோடது நிஜ லவ் கிடையாது மொழி. இப்ப என்மேல நீ வைக்கிற அன்புக்குப் பெயர்தான் காதல். இதான் உண்மையும் கூட.” அவளின் கண்கள் தானாக தரை பார்க்க... “உன்னை ஹர்ட் பண்றதுக்காகச் சொல்லல. அவரை நீ துக்கம் தீர்க்கும் மருந்தாதான் எதிர்பார்த்த. எதிர்பார்ப்புன்னா தாயைக் காணாமல் தவிக்கும் குழந்தையோடதுதான் உன்னுடையது. கண்டிப்பா காதலனுக்கான தேடல் கிடையாது. அப்படி இருந்திருந்தா உன்னால என்னை ஏத்துக்கிட்டிருக்க முடியாது. உன்கிட்ட அதை பீல் பண்ணியிருந்தா கூட உன்னைவிட்டு விலகியிருப்பேன்.”

அவளின் அமைதி தொடர, “நான் பேசுறதை சரியான கோணத்துல யோசி மொழி. உனக்கு யாரும் எந்தக் கெடுதலும் செய்யலன்றதை புரிஞ்சிக்கோ. என்ன பேச்சையே காணோம்?”

“யோசி யோசி சொல்லிட்டு யோசிக்கவே விடாம தொடர்ந்து கேள்வியா கேட்டா எப்படி?”

“இப்ப யோசிக்க வேண்டாம். நீ தனியாயிருக்கிறதால உனக்கு நிறைய டைம் இருக்கு. நிதானமா யோசி. எதாவதுனா எனக்கு கால் பண்ணு சரியா.”

“ம்...”

“என்ன ம்...”

“ப்ச்.. சரின்னு சொன்னேன்.”

“வேற எதாவது பேசலாமே?” எனும்போது திடீரென பிரேக்கிட்டு கார் நிற்க கதிரின் பின்பக்க தலை காரில் மோதிவிட ‘ஆ’ என்று சத்தமிட்டான்.

அவனின் அலறல் சத்தத்தில், “சாரி சார். நாய் ஒண்ணு குறுக்க வந்திருச்சி” என்றான் டிரைவர்.

“என்னாச்சி?” பதறிய குரலில் கேட்டு, “தலையைத் தேய்த்து விடுங்க. அத்தை மாமாவுக்கு எப்படியிருக்கு?” என்றாள்.

“சீட் பெல்ட் போட்டதால ஒண்ணுமில்ல.”

“அப்ப நீங்க ஏன் போடல? முதல்ல சீட் பெல்ட் போடுங்க” என்றதும் சம்மதித்து அவள் முன்னயே மாட்டிக் காண்பிக்க, “ம்... ஜாக்கிரதையா காரை ஓட்டச் சொல்லுங்க” என்றாள்.

“இதுக்கு நீ என்கூடவே வந்திருக்கலாம். ஏய் சரி சரி முறைக்காத. நீ அங்கயே இரு. வச்சிரவா?”

“ம்... வச்சிருங்க.”

“என்ன ஏர்போர்ட் வச்சிருங்கன்னு இவ்வளவு ஈஸியா சொல்லிட்ட? அதெல்லாம் முடியாது.”

“ஏன் எப்பப்பாரு ஏர்போர்ட்னு ஏலம் போடுறீங்க? மதுரை ஏர்போர்ட் பிடிச்சிருந்தா அங்க போய் உட்கார்ந்துக்கோங்க.”

“உட்காரலாமே. நீயும் கூட உட்கார்றதாயிருந்தா” என அவளை வம்பிழுத்து அவளை ஒரு வழி செய்தே போனை வைக்கவும் கார் ரிப்பேராகி நின்றது. என்னவென்று டிரைவரிடம் கேட்க...

“தெரியல சார் செக் பண்ணிட்டுத்தான் எடுத்தேன். இன்ஜின்ல எதாவது பிரச்சனையா தெரியல. என்னன்னு பார்க்கிறேன்” என்று கீழே சென்ற சில நிமிடங்களில் “இன்ஜின்லதான் சார் பிரச்சனை. சரி பண்ண எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகிடும் சார்.”

இளங்கதிர் காரைவிட்டு கீழே இறங்கி எந்த இடமென்று சுற்றிலும் பார்க்க வாடிப்பட்டி என்றிருந்தது. “ஏன்பா நாம திண்டுக்கல் வழியாதான வந்தோம். இது மதுரை போற வழின்னு போட்டிருக்கு?” சிவகாமி யோசனையாய் கேட்டார்.

“ஏன் இந்த வழி வந்த?” குருமூர்த்தி கோபமாய் கேட்க,

“சாரி சார். நிஜமாவே எனக்குத் தெரியல. திண்டுக்கல் வழிதான் காரை விட்டேன். எப்படி இந்த ரூட் வந்ததுன்னு நிஜமாவே தெரியல சார்” என்றான் பதற்றத்துடன்.

“என்ன உளறல் டிரைவர் இது? அதெப்படி திண்டுக்கல் விட்ட வண்டி மதுரைப் பக்கம் திரும்பும்?” என்றார் வேகமாக.

“புரியல சார்?” என்று டிரைவர் சொல்ல, சிவகாமிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

கதிருக்குள்ளும் சிறு இடறல். இங்கதான கயல்விழியைப் பார்த்தோம். மனம் இனம் புரியா அவஸ்தையில் சிக்க, “விடுங்கப்பா கார் சரியானதும் கிளம்பிரலாம்” என்றுவிட்டு எதிரில் பார்வை செல்ல, அங்கு ஒரு பெண்ணை யாரோ ஒருவன் வழி மறித்து வம்பு செய்து கொண்டிருந்தான்.

சட்டென்று இளங்கதிருக்கு கோபம் வந்து, “அம்மா இதோ வர்றேன்” என்று நடக்க ஆரம்பிக்க, “ராஜா எங்க போற?” என்ற தாயின் குரல் காற்றில் கலந்தது.

அருகில் சென்றதும்தான் கவனித்தான் அவளை, ‘கயல்விழி’ மனம் உச்சரிக்க, அவளருகில் நின்றிருந்தவனை முறைத்தபடி “என்ன பிரச்சனைமா?” என்றான்.

அதுவரை தன்னிடம் வம்பு செய்தவனைச் சமாளித்துக் கொண்டிருந்தவள் கதிரைக் கண்ட நொடி, இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீருடன், “அண்ணாஆஆ..” என்றலறி அவன் கையை இறுகப் பற்றிக்கொள்ள, அவள் கைமேல் தன் கைவைத்து அழுத்தியவனுக்குள் அவனறியா பாசம் அவள்மேல்.

“என்னடா கலாட்டா பண்ணிட்டிருக்க? ஈவ் டீசிங்னு தூக்கி உள்ள போட்டுறலாமா?”

“நீ யார்டா அதைக் கேட்க? இது எங்களுக்குள்ள உள்ள பெர்சனல்?”

“இப்பதானடா சொன்னா அண்ணன்னு. அப்ப நான் யாரு சொல்லு பார்ப்போம்” என்று அவனின் கையை முறுக்கி, “பெர்சனல் வீதி வரக்கூடாது. வீதி வந்தா அது பப்ளிக். எங்க சொல்லு? பப்ளிக்.”

“இல்லண்ணா இவன் பொய் சொல்றான். எப்பப்பாரு பின்னாடி சுத்துவான். ஒன்றரை வருஷமா வரலன்னு நிம்மதியாயிருந்தேன். இன்னைக்குத் திரும்பவும்...” கயல்விழியின் கண்ணீர் கண்டவனுள் இன்னும் கோபம் எழ அடித்துத் துவைத்துவிட்டான் அவனை.

மகன் யாரையோ அடிப்பதைப் பார்த்த சிவகாமி, என்னவோ ஏதோவென்று அருகில் வந்து, “என்னடா ராஜா? நீ பொறுமைசாலியாயிற்றே?” என்று சொன்னாலும் மனதினுள் ‘சின்ன வயது மூர்க்கம் திரும்புகிறதா? இருக்கக்கூடாதே’ என்று தோன்றியது.

“இந்தப் பொண்ணைக் கையைப் பிடிச்சி இழுத்து வம்பு பண்றான்மா. டெய்லி பாலோ பண்றானாம். எவ்வளவு கொழுப்பு இருக்கணும். ஏன்டான்னு கேட்டா பெர்சனல்னு சொல்றான்.” திரும்பவும் இரண்டு அடிகள் போட்டு கயலிடம் திரும்பி “நீ படிச்சவதான?” என கேட்டான்.

“டேய் ராஜா! இவ படிச்சிருக்காள்னு உனக்கெப்படித் தெரியும்? படிக்காமல் கூட இருக்கலாம்ல.”

“அம்மா படிச்சிருக்கா வேணும்னா கேளுங்க” எனவும் சிவகாமி கயலை தன் விழிகளால் கேள்வி கேட்க...

“பி.ஏ பி.எட் முடிச்சி இங்க உள்ள ஸ்கூல்ல டீச்சராயிருக்கேன்.”

“கேட்டீங்களா டீச்சராம். ஒரு கம்ப்ளெய்ண்ட் செய்றதுக்கென்ன?”

“ஏன் கேஸ் அது இதுன்னு, அவங்க பங்குக்கு என்னை அசிங்கப்படுத்தவா?”

“அப்ப ரிலேடிவ்ஸ் யார்கிட்டயாவது சொல்லி கண்டிச்சிருக்கலாமே?”

“எந்த சொந்தத்தைத் தேடச் சொல்ற நீ? சொந்தம்தான நம்ம குடும்பத்தைக் காவு வாங்கியது. என் அண்ணன் நீ என்னோட இருந்திருந்தா கண்டவனெல்லாம் கையைப் பிடிக்க வருவானா? லேடீஸ் மட்டும் தனியா இருக்காங்கன்ற இளக்காரம்தான இவங்களுக்கு” என்றாள் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி.

அதற்குள் இளங்கதிர் அசந்த வேளை அவன் கையிலிருந்தவன் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடியிருந்தான்.

“கதிர் என்னடா சொல்றா இந்தப்பொண்ணு? உன்னை அண்ணன்னு சொல்லி குறை வேற சொல்றா?”

“அண்ணனை அண்ணன்னுதான் சொல்வாங்க” என்றவள் குரலில் அப்பட்டமான உரிமையுணர்வு.

“என்னமா உளர்ற? இவன் நான் பெத்த பையன். எப்படி உனக்கு அண்ணனாவான்?” என்றார் சற்றே கோபமாக.

“அதை வீட்ல வச்சி சொல்றேன்” என்றவளுக்குப் பதிலளிக்கப்போன தாயை தனியே அழைத்துச் சென்று, “அம்மா இந்தப்பொண்ணு மொழி சொன்ன இளாவோட தங்கச்சி. என்னன்னு தெரியல காலையிலிருந்து நான்தான் அவள் அண்ணன்னு சொல்லிட்டிருக்கா” என்றான்.

“காலையிலிருந்துன்னா? அப்ப கோவில்லல்ல இருந்தோம். இவளைப்பற்றி திருவுக்குத் தெரியாதா?”

“கோவில்லதான்மா பார்த்தேன். மங்கைக்குத் தேவையான முக்கிய பொருள் இருக்கு. நீயா என்னைத்தேடி வருவன்னு சொன்னா. ஆனா கார் கூட வழிமாறி இந்தப்பக்கம்...” யோசனையாய் நிறுத்தினான்.

“ஓ...” என்று குழப்பத்துடன் கயலைப் பார்த்தார்.

“வீட்டுக்கு வந்து அத்தையைப் பாருண்ணா. உனக்கு அவங்கன்னா உயிர்ணா. நமக்கு நிறைய நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தது அவங்கதான். என் இளா அண்ணனா வரவேண்டாம். இவங்க பையனா வாண்ணா. ப்ளீஸ்ணா!” என்றாள் கெஞ்சுதலாய்.

கதிர் தாயைக் காண, சிவகாமி கணவனைக் கண்டார். ‘உன் பையன் வேணுமா? வேண்டாமா?’ அவரின் பதற்றக் குரல். முதல்முறையாக உள்ளுக்குள் ஏதோ பிசைவது போலிருக்க என்ன செய்வதென்று, நடந்தது அனைத்தையும் யோசித்தவருக்கு காரண காரியங்களன்றி எதுவும் நடக்காது என்பது புரிந்தது. ‘சென்றுதான் பார்க்கலாமே!’ என்ற உந்துதல் எழ கணவனை எப்படிச் சமாளிப்பதென்ற எண்ணமும் வந்தது.

“ராஜா கார் ரெடியாகுறதுக்குள்ள நாம போயிட்டு வந்திரலாம்.”

“தாயே! தந்தையாருக்குத் தெரிஞ்சது அடுப்புல போட்டு பொரிச்சி எடுத்துருவாங்க.”

“தெரிஞ்சாதானடா மகனே. இப்பப்பாரு நம்ம ஆக்டிங்க” என்று ரோட்டை க்ராஸ் செய்து அவர் முன் நின்று கையைச் சுரண்டி, “எங்களுக்குப் போரடிக்குது. அப்படியே கொஞ்சம் ரௌண்ட் அடிச்சிட்டு வரட்டுமா?”

“தனியாவா?”

“சேச்சே.. தெரியாத இடத்துல தனியா எப்படிப் போறது. பையனையும் என்னோட இழுத்துட்டு போகப்போறேன்.”

“அப்ப நான் வேண்டாமா சிவா.” நாயகன் கமல் அவர் கண்களில் தெரிய...

அதை உணர்ந்தவரோ, “வேண்டாம் வேண்டாம். டிரைவர் எதாவது கேட்டா என்ன செய்றது? ஏற்கனவே இருட்டப்போகுது. கார்ல உட்கார்ந்திருங்க வந்திருவோம்.”

“சரி என்னைக் கழட்டிவிட முடிவு பண்ணிட்டீங்க. பார்த்து பத்திரமா போங்க. ரொம்ப தூரம் போகவேண்டாம் சிவா.”

“சரிங்க. கார் சரியானதும் போன் பண்ணுங்க. மறந்துட்டுப் போயிறாதீங்க. நாங்க ரெண்டு பேருமே விவரமில்லாத பிள்ளைங்க.”

“விட்டா உலகத்தையே வித்திருவ. நீ விவரமில்லாதவளா? கொடுமைதான் போ” என்றார் சிரித்தபடி.

கணவனை முறைத்து மகனிடம் செல்ல டிரைவர் எதோ கேட்டதும் குருமூர்த்தி திரும்ப, ஒரு மூன்று நிமிட நடையில் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள் கயல்விழி.

கதவு திறக்கும் ஓசையில் “கயல் நான் சொன்னதை வாங்கிட்டு வந்தியா? சிக்கிரம் வா. இருட்டுறதுக்குள்ள குழம்புக்கு அரைக்கணும்” என்ற கணீர்க்குரலில் சில நொடிகள் கதிரின் புலன்கள் கூசிச்சிலிர்த்ததோ!

“நீங்க சொல்லாததையும் வாங்கிட்டு வந்திருக்கேன் அத்தை” என்று அங்கிருந்து இரும்புக் கட்டிலில் இருவரையும் அமரச்செய்து அடுப்படி சென்று, “அத்தை தெரிஞ்சவங்களைக் கூட்டிட்டு வந்திருக்கேன்” எனவும் அவர் ஆச்சர்யமாக “நீயா கயல் கூட்டிட்டு வந்த?” என கேட்டார்.

“ஆமா அத்தை. என்னை ஒருத்தன் அடிக்கடி டார்ச்சர் பண்ணிட்டிருந்தான்ல. எங்கயோ போயிட்டான்னு நிம்மதியாயிருந்தேன். இப்ப திரும்பவும் வந்து டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டான். ஆனா, அவன் இனிமேல் நம்ம இருக்கிற திசைக்கே வரமுடியாமல் பண்ணிட்டாங்க அண்ணா” என்றாள் பெருமையாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இதுவரை யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை கயல்விழி. அப்படிப்பட்டவள் கூப்பிட்டு வந்தவர்களை முதல்முறையாக ஆர்வமுடன் எட்டிப்பார்த்து கைகழுவி வந்தவர் காதில், “ஏன் தாயாரே! உங்க பிறந்த வீடும் இதே சைஸ்தான?” என்றான் கிண்டலாக.

“டேய் மகனே! என் பிறந்த வீட்டை இழுத்த சரிவராது. அப்புறம் கோவிச்சிக்கிட்டு போயிருவேன் சொல்லிட்டேன்.”

“தாயே! யாரோ அப்பா அம்மா இல்லாத புள்ளையைத் திட்டாதீங்கன்னு சொன்னதா ஞாபகம். அப்படியில்லையா? தந்தையார்கிட்ட பொய் சொன்னீங்களா? இதோ போனைப் போடுறேன்” என்றான் பொய்யாய் மிரட்டி.

“டேய்.. டேய் ஏன்டா நீ வேற. கார் வேண்டாம் சிவா. நாம ப்ளைட்ல போயிரலாம்னு உங்கப்பா கூட்டிட்டுக் கிளம்பிருவாங்க. வரவர ரொம்பப் பேசுறடா மகனே” என்றாள் சின்னதாய் அடித்தபடி.

“ஹா..ஹா அந்த பயம் இருக்கட்டும் அன்னையாரே!”

செல்லமாய் மகனிடம் செல்லம் கொஞ்சும் சிவகாமியையம், சத்தமாகவே சிரித்த இளங்கதிரையும், அதையும் தாண்டிய பரிச்சயமான அவனது குரலையும் ஆராய்ந்தபடி வந்தவர், “வாங்க. கயல் எல்லாம் சொன்னா. ரொம்ப நன்றிங்க” என்றவர் கண்கள் மட்டும் கதிரிடமே!

“வணக்கம். நான் சிவகாமி. இது என் பையன் கதிர்” என எழுந்து தங்களை அறிமுகப்படுத்தினார்.

“நான் தமிழரசி. இவ கயல்விழி.”

“உங்க பொண்ணா?”

“ஆமாங்க.”

“அத்தை சொன்னா” என்றார் கேள்வியாய்.

‘எல்லாரிடமும் அம்மா என்று சொல்பவள், இவர்களிடம் மட்டும் ஏன் அத்தை என்று சொன்னாள்?’ என மருமகளைப் பார்த்தார். அவளோ கதிரைப் பார்த்துக் கொண்டிக்க சிவகாமியிடம் திரும்பியவர், “இவள் என் நாத்தனார் பொண்ணு. உறவுகள் எதுவும் இல்லாம தனியா இவளோட நின்னப்ப, அத்தை மருமகள் உறவு சரிப்படாதுன்னு அம்மா பொண்ணுன்னு சொல்லியிருக்கேன்.”

‘புரியுது’ என்பதாய் சிவகாமி தலையசைக்க, “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்றதும் சிவகாமி மறுக்கவும், “முதல்முறையா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. காஃபி கூட குடிக்கலன்னா எப்படி?” என்று உள்ளே சென்றார்.

தமிழரசியைக் கண்ட கண்கள் அங்குமிங்கும் எங்கும் விலகாததுடன் ஆச்சர்யம் கூட. தமிழரசி! மங்கையர்கரசி! பெயர் பொருத்தம் தொட்டு முகப்பொருத்தமும் இருந்தது. அப்படியே தாயை உரித்துப் பிறக்கவில்லை என்றாலும் ஓரளவு உருவ ஒற்றுமை இருந்தது. முகத்தில் ஒரு தெளிவு. எதற்கும் வளையமாட்டேன் என்பதாய் உடலில் ஒரு நிமிர்வு.

‘இவங்கதான் கயல் சொன்ன மங்கைக்கு முக்கியமான பொருளா? ஏன் இவங்களை பொண்ணோட சேர்த்து வைக்கக்கூடாது? கனவில் கயல்விழி கேட்ட என்னை மறந்துட்டியாவிற்கு இதுதான் நல்ல வழி. அந்த இளா உயிரோடிருந்தா கயலை அவள் அண்ணனோட சேர்த்த மாதிரியும் இருக்கும்’ என நினைத்தவனுக்கு கயலைப் பார்த்தபொழுது இல்லாத தடுமாற்றம் அவள் கையைப் பிடித்தபொழுதுதான் வந்தது. ஆனால், தமிழரசியோ பார்த்த பார்வையிலேயே ஒரு தாக்கத்தை தனக்குள் ஏற்படுத்துவதை உணர்ந்தான்.

“நீங்க ஊருக்கு போறீங்களாண்ணா?”

“ஆமாம்மா. இங்க வந்து நாலு நாள் மேலாகிருச்சி. கம்பெனியில அப்பாவும் நானும் இல்லன்னா சரிவராது.”

“அப்ப மங்கையை கூட்டிட்டுப் போகலையா?”

“இப்போதைக்கு இங்க இருக்கட்டும். சீக்கிரமே வந்து கூட்டிட்டுப் போயிருவேன். திடீர் கல்யாணம்ல சின்ன தடுமாற்றம் இருக்கு. அதை சரிபண்ணிட்டுக் கூட்டிட்டுப் போகணும். அவ தம்பி அதுவரை பத்திரமா பார்த்துப்பான். உனக்கு ஆட்சேபணை இல்லன்னா போன் நம்பர் தரமுடியுமா?”

“என் அண்ணனுக்குக் கொடுக்கிறதில் எனக்கென்ன ஆட்சேபணை இருக்கப்போகுது. சொல்றேன் நோட் பண்ணிக்கோ” என்று நம்பர் சொல்ல அதைத் தன் கைபேசியில் பதிந்தான் கதிர்.

“டேய் மகனே! உனக்கு இப்படி ஒரு தங்கச்சி எப்படிடா? உனக்கப்புறம் குழந்தை கிடையாதுன்னு ஹாஸ்டபிடல்ல சொல்லிட்டாங்களே. ஒருவேளை உன் அப்பா சைக்கிள் கேப்புல...”

“அம்மாஆஆ..” என்ற அலறலில் சிவகாமி அவன் வாய்மூட, “என்னாச்சி?” என்று வந்த தமிழரசியிடம் தாயின் கையை நகர்த்தி, “சும்மாதான் ஆன்ட்டி. அம்மாவும் நானும் எப்பவும் இப்படித்தான்” என தாயின் தோளணைத்தான்.

சற்று பொறாமையுடனேதான் பார்த்திருந்தாள் கயல்விழி. அவர்களின் பாசம் அவளை ஏதோ செய்தது. லேசாக கண்ணைக் கரிப்பதுபோல் தோன்ற அறைக்குள் நுழைந்தாள். தாய் தந்தை இறந்து அண்ணன் கண்முன்னே இருந்தும் தன்னை அடையாளம் தெரியாதிருப்பது ஈட்டியாய் தைக்க சில நிமிடங்கள் கண்ணீர் விட்டவள்... “கயல்” என்ற தமிழரசியின் குரலில், “இ..இதோ வர்றேன் அத்தை” என முகம் துடைத்து வந்தாள்.

“அவங்க கிளம்புறாங்க பாரு.”

‘போகாதே அண்ணா’ என்பதைக் கண்களால் மொழிய, அவளின் பாஷை மற்றவர்களுக்குப் புரிந்ததோ!

“கயல் என்ன பண்ற? போயிட்டு வர்றேன் சொல்றாங்க பாரு” என்றார் அழுத்தமான குரலில்.

“டேய் மகனே! பேசாம இந்தப் பொண்ணை நாமளே கூட்டிட்டுப் போயிரலாமா? பார்த்தா பாவமா இருக்குடா. அவ அத்தை எனக்கு சம்பந்தின்னு ஆகிருச்சி. அப்ப இவள் உனக்கு தங்கை முறைதான்.”

“அம்மா...” எனும்போது பிரஷாந்திடமிருந்து போன் வர, இளங்கதிரின் முகம் பிரகாசமாகி, “உன் மருமகள்தான்மா” என்றான்.

“இது அவ தம்பி நம்பர்தான?”

“ஆனா, பேசப்போறது உன் மருமகள்தான் பார்க்குறியா?”

“வேண்டாம் சாமி. நீ பேசி முடி நான் உள்ள உட்கார்றேன்.”

“மச்சான்! எப்படி என் அக்காவை உங்க பொண்டாட்டியாக்குனீங்க? காலைல வரை அவ்வளவு அடம்பிடிச்சவ, இப்ப என்னை போன் பண்ணச்சொன்னா எங்க தப்பா எடுத்துக்குவேனோன்னு சுத்திச் சுத்தி வர்றா. ஆனா, போன் தரச்சொல்லியும் கேட்கமாட்டேன்றா.”

“அது ஒய்ஃப் சைக்காலஜிடா. நீ போய் அவள்கிட்டக் கொடு. கூடிய சீக்கிரமே உன்னோட சேர்த்து உன் அக்காவுக்கும் பெரிய சர்ப்ரைஸ் ஒண்ணு குடுக்கிறேன்” என்று கயலைப் பார்த்தான்.

இளங்கதிரின் புரிதலை உணர்ந்து சந்தோஷத்தில், “தேங்க்ஸ்” என்றாள்.

சின்னப்புன்னகையை அவளிடம் கொடுத்து, “மாப்ள போனை உன் அக்காகிட்டக் கொடு” என்றான்.

அதே நேரம் தமிழரசியும் சிவகாமியும் பேச ஆரம்பித்தார்கள். தமிழரசி தன் குடும்பத்தைப்பற்றி வாயே திறக்கவில்லை. மருமகளுடன் வந்த பிறகான வாழ்க்கையை மட்டுமே சொன்னார்.

சிவகாமியோ கதிர் பிறந்தது முதல் இப்பொழுது வரையிலானதை அப்படியே சொல்ல, கயல்விழிக்கு மனதினுள் ஏதோ நெருடியது. இவன் தனது அண்ணன்தான் என்பதில் மாற்றமில்லை அவளிடம். அதேபோல் சிவகாமியும் பொய் எதுவும் சொல்லவில்லை. அவர் கதிரைப் பார்த்த பார்வையில் ஒரு தாய்க்குண்டான அத்தனை பெருமிதம் தெரிந்தது. ‘மறுஜென்மம் என்பது உண்மையா?’ ஆராயத் தோன்றியது கயல்விழிக்கு.

“மச்சான், அக்கா உங்ககிட்டப் பேசலையாம். நாம மட்டும் பேசிக்கலாம்” என்றதும் தம்பியவனை திருமொழி முறைக்க...

“டேய் விளையாடாம குடு. அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல.”

“ஐயனே! இது அநியாயமன்றோ!”

“நியாய அநியாயங்கள் பார்த்தால், மங்கையவள் உள்ளத்தில் காதல் வரவைப்பது எப்படியாம்?”

அதைக் கேட்டிருந்த திருவிற்கு வெட்கம் வர, “அக்கா நீயே பேசு. உங்க இம்சையைத் தாங்குற வயசு எனக்கு கிடையாது. நான் அத்தையைக் கூட்டிட்டு வெளியில போறேன்.” அவர்கள் வெளியேறினர்.

“சொல்லு ஏர்போர்ட் எப்படியிருக்க?”

“ம்...”

“அட பார்றா. என் ஒய்ஃப் பெரிய டயலாக் பேசிட்டா. எனக்கு இவ்வளவு பெரிய டயலாக்லாம் பேசுறதுக்கு வராது. அதனால சின்னதா பேசு.”

“ம்...”

“சேம் டயலாக். புருஷன் பேச்சை மட்டும் கேட்டுராத” என்றதும் அவள் அமைதியாக... “என்ன ஏர்போர்ட் போன் பண்ணியிருக்க?”

“நான் எங்க பண்ணினேன். தம்பிப்பையன்தான் என்கிட்ட கொடுத்தான்.”

“ஓ... அப்ப நீ என்னைத் தேடல?”

“ஆமா.”

“நம்பியாச்சி. நான்தான் உன்னைத் தேடினேன்.”

“எதுக்கு தேடுனீங்க?”

“ஆர் யூ ரெடி பேபி” என்றான் சிரிப்புடன்.

‘ஹ்ம்..’ என்ற சிணுங்கலே பதிலாய் கிடைக்க இன்னும் சத்தமான சிரிப்பு அவனிடம்.

அந்த சத்தத்தில் திரும்பிய தமிழரசிக்கு ஏதோ ஒரு தவிப்பு. ஏன் எதனால் என்று புரியவில்லை. அவனையே பார்த்திருந்தவர் சிவகாமி ஏதோ சொல்லவும் கவனத்தை அவரிடம் திருப்பினாலும் மனம் முழுவதும் உழன்று கொண்டிருந்தது.

“ச்சோ.. சிரிக்காதீங்க. தலைவலி எப்படியிருக்கு?”

பின் தலையைத் தொட்டுப்பார்த்தவன், “இப்ப வலியில்லை. சரியாகிருச்சி. நீ என்னையே நினைச்சிட்டிருக்காம நிம்மதியா சாப்பிட்டுத் தூங்கு.”

அவளோ சம்மதமாகத் தலையாட்ட, “தலையசைச்சியா? ம்.. கூட மிஸ்ஸிங் போல. அப்புறம் ஏர்போர்ட் ஒரு ரகசியம் சொல்லவா?”

‘மாட்டேன்னு சொன்னா சரின்னு விடுற மாதிரிதான்.’ மனதினுள் நினைத்து “சொல்லுங்க?” என்றாள்.

“இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட்...” தொடராமல் அவன் நிறுத்தினான்.

கேட்டிருந்தவளுக்கோ இதயத்துடிப்பு அதிகரிக்க “எ..என்ன பர்ஸ்ட்?” என்றாள் திணறலாக.

“பயந்துட்டியா? இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் கிஸ்ஸிங் டே. அம்மா தாண்டி ஒரு பொண்ணுக்கு... அதிலும் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்த நாள். அதை இன்னைக்கு நைட் செலப்ரேட் பண்ணலாம் நினைச்சேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவன், “ஆனா, பாரு அப்பா அம்மாகிட்ட வந்து சிக்கிட்டேன்” என்றான் சத்தமாகவே.

கணவனின் வார்த்தைகள் யாவும் காது வழி சென்று மனசெல்லாம் தித்திக்க பேசத்தெரியாமல் எதாவது உளறிவிடுவோமென்று, “நா..நான் வச்சிருறேன். ஊருக்குப் போனதும் போன் பண்ணுங்க. நான் வெய்ட் பண்ணுவேன்” என போனை வைக்கையில்... கணவனின் “ஹேய் ஏர்போர்ட்” என்ற கிண்டலில் புன்னகைத்து கட் செய்தாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top