• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
15



“இதுவரை எவனும் என்னைக் கேள்வி கேட்டதில்ல. ஆனா நீ என்னையே ஆழம் பார்க்குறியா? இந்த ஹாஸ்பிடல் விட்டுப் போகும்போது உன்னைக் கதறவிட்டு அனுப்பலன்னா நான் டாக்டர்.ராகுல் இல்லடா” என்றான் கர்ஜனையாக.

சட்டென்று போனை எடுத்துப் பேசியதில் மறுமுனை அவசரப்பட வேண்டாமென்ற போதும், “இல்ல ஹனி. நான் முடிவு பண்ணிட்டேன். என்ன தைரியமிருந்தா என்னையே சந்தேகப்படுவான். சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாதான் இந்த ராகுல் உலகத்துக்குத் தெரியணும். ஒரு மிடில் க்ளாஸ் பையன் என்னை...” என பற்களைக் கடித்து, “நீ என்ன சொன்னாலும் என்னால சமாதானமாக முடியல ஹனி. அவன் பொண்டாட்டிக்கு இதுவரை குழந்தைக்கு இப்படின்னு சொல்லலதான? இரு குடும்பத்தையேக் கதற விடுறேன்” என்றான் வெறியுடன்.

கார்த்திகாவை குழந்தைக்குப் பால் கொடுக்க வரவழைத்து, இரண்டு நர்ஸ்கள் மூலம் குழந்தையின் பிரச்சனையை பேசவைத்து, அவளைக் கேட்க வைத்தான் ராகுல். வந்த அழுகையை அடக்க வழியில்லாது தங்களறைக்கு வர, அப்பொழுது வித்யா கீர்த்தியுடன் வந்த கணவனிடம் குழந்தையைப் பற்றிக் கேட்க முதலில் மறுத்தவன் பின் நடந்ததைச் சொன்னான்.

சிறியவர்களுக்கும் அந்த விஷயம் தெரியாததாகையால், அவர்களும் அதிர்ந்து அழுதார்கள்.

“அப்ப என் குழந்தை எனக்கில்லையா?” என்று கதற...

“கார்த்திமா குழந்தை நல்லாயிருக்காடா. இவங்க நமக்கே தெரியாம எதோ செய்றாங்க. நான் குழந்தையைக் கூட்டிட்டு வர்றேன்.”

“இல்ல என்னைச் சமாதானப்படுத்த சொல்றீங்க” எனும்போது, இருவரின் தங்கைகளுமே, “ஏன் எங்ககிட்ட சொல்லலை?” என்று கோபம் கொள்ள...

“எல்லாம் சரியானதும் சொல்லலாம்னு இருந்துட்டேன்மா. அவங்க சொன்னது இருபத்து நாலு மணிநேரம். ஆனா, பத்து நாளாகியும் என்ன ஏதுன்னு பதில் சொல்லல. ஏன் பால் குடுக்கிற இவளுக்குத் தெரியாதா தன் குழந்தையோட ஆரோக்யம்?”

அழுது கொண்டிருந்தாலும் கணவன் சொன்னது காதில் விழ, ‘ஆமாம் குழந்தை நார்மலாகத்தானே இருக்கிறாள்’ என்று தோன்ற மனதில் ஒரு நம்பிக்கை வர கண்ணீர் துடைத்து, “அப்ப அந்த நர்ஸ்ங்க ஏன்ங்க அப்படிச் சொன்னாங்க? கொஞ்ச நேரத்துல எப்படிப் பயந்துட்டேன் தெரியுமா?”

“ஒண்ணுமில்லடா. நான் கேள்வி கேட்டதால உன்னை வருத்தியிருக்காங்க” என்று தன் தோள் சாய்த்து, “யார் என்ன சொன்னாலும் நம்ம குழந்தை நார்மல் பேபிதான்மா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரெஸ்ட் எடு. நான் இருக்கேன்ல.” மனைவியின் ம்-ல், “நீங்க ரெண்டு பேரும் அண்ணியோடவே இருங்க. ஆனந்த் மச்சானுக்கு இப்பதான் லீவ் கிடைச்சிதுன்னு வந்திட்டிருக்கேன் சொன்னாங்க. வர்ற டைம்தான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று வெளியே சென்றான்.

ஹாஸ்பிடல் வாயில் செல்லும் பொழுது அன்நோன் நம்பரிலிருந்து போன் வர, ஆனந்தைக் காணும் அவசரத்தில் அதை அலட்சியப்படுத்த திரும்பவும் வர, எடுத்து காதில் வைக்குமுன், “சார் ப்ளீஸ் வச்சிடாதீங்க.” ஒரு பெண்ணின் பதற்றக்குரல் கேட்டது.

சுபாஷ் யாரெனக் கேட்பதற்குள், “சார் உங்க குழந்தையைக் காப்பாத்துங்க. என்னன்னு தெரியல நல்லாயிருக்கிற குழந்தை உடம்புல வைரஸ் கிருமி பரவவிட டாக்டர் முடிவு பண்ணிட்டார். இன்னும் ஐந்து நிமிடத்துக்குள்ள போகலன்னா எல்லாமே முடிஞ்சிரும். நான் யார்னு தேடாதீங்க. சப்போஸ் நீங்க கண்டுபிடிச்சிக் கேட்டாலும் டாக்டர்கு ஆதரவாதான் என்னோட பதில் வரும். ப்ளீஸ் டைம் இல்ல சார்” என அவசரமாக போனை கட் செய்து, செல்லை ஸ்விட்ஜ் ஆஃப் செய்து தன் ஆடைக்குள் ஒழித்தபடி பாத்ரூமிலிருந்து வெளியேறினாள் அந்த நிஜ மக்கள் சேவகி.

சில நொடிகள் உலகமே சுழல கண்ணைக் கட்டிவிட்டது போல் நின்றிருந்தவன் மனதில் அப்பெண் சொன்ன நேரமின்மை நினைவு வர, வேகமாக அந்த பெரிய ஹாஸ்பிடலுக்குள் ஓடினான்.

அப்பொழுதுதான் ஆட்டோவை கட் செய்தபடி அவனுக்குக் கையசைத்த ஆனந்த், சுபாஷின் ஓட்டத்தில் என்னவோ என்று பதறி பின்னால் சென்றான்.

மூன்று நர்ஸ்கள் துணையுடன் இரண்டு டாக்டர் என்ற பெயரிலிருந்த ரௌடிகளின் காவலுடனும், சுபாஷின் குழந்தையிருந்த இன்குபேட்டிற்கு சென்று வைரஸை செலுத்தப் போனான் டாக்டர்.ராகுல்.

‘ஆண்டவா! இன்னும் சில வினாடியில எல்லாம் முடிஞ்சிடும். எங்கே இந்தக் குழந்தையோட தகப்பன்? ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு யுகம்னு ஏன் அந்தாளுக்குப் புரியல’ என்று தவிப்புடன் நிற்கையில் அந்த அழையின் கதவு தட்டப்பட, “யாரும் திறக்காதீங்க” என்பதற்குள் அப்பெண் ஏற்கனவே திறந்து வைத்திருந்த கதவு ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.

‘ஷப்பா வந்துவிட்டான்’ என நினைத்தவளுக்கு மனதினுள் இனம்புரியாத நிம்மதி. கதவை திறந்துவிட்டது அருகிலிருப்பவளுக்குக்கூடத் தெரியாமல் நின்றிருந்தாள். அவளுக்குத் தெரியும் அந்த அறையில் சிசிடிவி முடக்கப்பட்டிருப்பது.

சாட்சிகளில்லாமல் செய்யும் தவறுகளுக்கு, கடவுள் ஒருவனே சாட்சி!

“ஏய், யார் கதவைத் திறந்து வச்சது” என்பதற்குள் அவன் முதுகில் அடி விழ, ராகுல் சுதாரிப்பதற்குள் நர்ஸ்களை வெளிவே அனுப்பி, அடுத்த அடியைப் போட்டு குழந்தையைப் பார்க்க, தந்தை என்று தெரிந்ததோ குழந்தைக்கு, தன் பொக்கை வாய் கொண்டு சிரித்தாள் குழந்தை.

குழந்தையின் சிரிப்பை முதல் முறையாக கண்டவனுக்கு உடலில் சொல்ல முடியா உணர்வுகள் எழ, குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்காத ராகுலிடம் திரும்பி, “ஏன்டா இப்படிப் பண்ணின?” என்று அடுத்த அடி அடிப்பதற்குள் அவனை மற்ற இருவரும் தாக்க வர, முடிந்தளவு மூவரையும் சமாளித்தவனால் ஓரளவுக்கு மேல் முடியாமல் போக அவர்களிடம் வசமாக சிக்கியிருந்தான் சுபாஷ்.

“என்னடா ரொம்பத் துள்ளுற? என்னோட இந்த எட்டு வருட சர்வீஸ்ல இதுதான் முதல் முறை. உன் குழந்தையைக் கொன்னுட்டு, உன் குடும்பமே இங்க வந்து ட்ரீட்மெண்ட் பண்ணியதற்கான அடையாளத்தையே அழிச்சிருவேன். நீ யார்கிட்ட போய்க் கேட்டாலும் நோ யூஸ். இப்படியே நின்னா உன் குழந்தை மட்டும்தான் போகும். இல்ல நீயும் போய்ச் சேர்ந்திடுவ” என்றான் மிரட்டலாக.

“டேய்! குழந்தைகள் உயிரைப் பணயமா வச்சி ஹாஸ்பிடல் நடத்துறதுக்குப் பதில் வேறெதாவது செய்து சம்பாதிக்கலாம்டா. என் குழந்தைக்கு எதாவது ஆச்சிது, நீ ஹாஸ்பிடல் நடத்த முடியாது. என்ன மிடில் க்ளாஸ் பேமிலிதான என்ன செய்தாலும் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைச்சியா? வேண்டாம்.. வச்சிக்காத ஒதுங்கிப் போறோம்ன்றதுக்காக எதுவும் தெரியாத புள்ளப்பூச்சின்னு நினைக்காத. எங்களுக்கும் ரௌடிஸம் பண்ணத் தெரியும்” என்றான் அழுத்தமாய்.

“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப உன் கண் முன்னாடி உன் குழந்தையை சாகடிக்கப்போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ” என்று ஊசி மருந்துடன் குழந்தையை நோக்கிச் செல்ல... சுபாஷின் “வேண்டாம்டா” என்ற அலறல் எதுவும் காதில் விழாமல், குழந்தை சுவாசிக்கும் காற்றில் ஊசி ஏற்றப்போக...

“டேய் குழந்தையோட முகத்தைப் பாருடா. பச்சைக் குழந்தை பாவம்டா” என்றான் கதறியபடி.

“ம்... குழந்தை முகத்தைப் பார்த்தா உன் முகம்தான் தெரியுது மிஸ்டர். என்ன பண்றது உனக்குப் பொண்ணா பிறந்திருச்சே” என்றான் உச்சுக்கொட்டியபடி.

“பின் விளைவுகள் ரொம்ப அதிகமாயிருக்கும் டாக்டர். சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கேள்விப்பட்டிருப்பியே?”

“ஹா..ஹா அது மிரள்றப்பப் பார்க்கலாம். இப்ப இவனுங்ககிட்டயிருந்து இந்த சாது எப்படி தப்புதுன்னு பார்க்கலாம்” என்று ஊசியை அருகில் கொண்டு சென்ற அடுத்த நொடி ‘ஆ’ என்ற அலறலுடன் தூரம்போய் விழுந்தான்.

“டேய் எவன்டா அது?” கத்தியபடி எழுந்த டாக்டர் யாரென்று பார்க்க, சட்டையை ஏற்றிவிட்டு அடுத்த அடி கொடுக்கத் தயாராக நின்றிருந்தான் ஆனந்த்.

அவனைப் பார்த்த சந்தோஷத்தில் சுபாஷிற்கும் சற்று பலமேறியிருக்க... “என்ன பிரச்சனை மாப்ள?” என்று ஆனந்த் கேட்க... “குழந்தையைக் கொல்லப் பார்க்கிறான் மச்சான்” என்றான் கோபத்தில்.

“என்னது! குழந்தையைக் கொல்லவா?” கோபத்தில் திரும்பியவன் எழப்போன டாக்டருக்கு இன்னுமின்னும் அடிகளிட... சுபாஷைப் பிடித்திருந்தவனில் ஒருவன் அவனை அடிக்க வர... ஒருவன் தன்னிடமிருந்து சென்று விட்டதால் மற்றவனை ஈசியாகச் சமாளித்தான் சுபாஷ்.

“டாக்டருக்குப் படிச்சிட்டு குழந்தையைக் கொல்லப் பார்க்கிறியா? நீயெல்லாம் என்ன மனுஷன்டா. மாப்ள முதல்ல போலீஸ்கு போன் செய்யுங்க” என்றதும் சுபாஷ் முயற்சிக்க அதைத் தடுக்க வந்தவர்களை இருவருமாக அடித்துப்போட்டு போலீஸ்கு போன் செய்ய அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலீஸ் வந்து டாக்டரை அரஸ்ட் செய்ய, அந்த ஊசியின் மருந்து அரசாங்க மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போலீஸ் விசாரணையெல்லாம் முடியுமுன் கார்த்திகாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ஆண்கள் போலீஸ் பிரச்சனையைச் சமாளிக்க, குழந்தை பற்றிய பிரச்சனைகள் யாவும் கார்த்திகாவிற்குத் தெரியாமலேயே போனது. தெரிந்திருந்தால் சில தவறுகளைச் செய்யாமல் இருந்திருப்பாளோ!

டிவியில் முக்கியச் செய்தியாக வெளி வந்து, அதுவரை மனதிற்குள் புழுங்கிய சிலரும் தைரியமாக கம்ப்ளைய்ண்ட் கொடுக்க, ஹாஸ்பிடலின் பெயர் பெரியளவில் அடிபட்டு கடைசியில் சீல் வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட டாக்டரையும் அவனின் மனைவியையும் கைது செய்தது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே குழந்தை விஷயத்தில் பயந்திருந்த கார்த்திகாவிற்கும் வாணிக்கும் இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

வீட்டிற்கு வருமுன்னே பெரியவர்கள் ஆனந்திடம் நன்றி சொல்லிப் பாராட்ட அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும், “தேங்க்ஸ் மச்சான். நீங்கயில்லன்னா இப்ப இந்தக் குடும்பம் எந்த நிலையில இருந்திருக்கும்ன்றதைக் கற்பனை பண்ணக்கூட முடியல. அந்த ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் மாத்திட்டீங்க” என்றான் சுபாஷ்.

“என்ன நீங்க ஓவரா புகழ்றீங்க? நான் இல்லன்னா வேற யாராவது வந்திருக்கப் போறாங்க. இதுக்குப் போய்ட்டு, சரி கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று பேச்சை மாற்ற...

“அச்சோ! வீட்டுக்கு வந்தவரைக் கவனிக்காம, அம்மா தண்ணி கொண்டு வாங்க” என்றதும், இவர்கள் பேசுவது கேட்காத தூரத்திலிருந்த வாணி மகனின் சத்தமான அழைப்பில், மகளை அழைத்து தண்ணீர் கொண்டு போகச்சொல்ல... ஆனந்த் இருப்பானென்று தயங்கி வேறு வழியில்லாமல் தண்ணீர் எடுத்துச் சென்று அண்ணனிடம் நீட்ட, “தண்ணீர் எனக்கில்ல வித்திமா. மச்சானுக்குக் குடு” எனும்போது சுபாஷிற்கு போன் வர, பேசிவிட்டு வருவதாகச் சொல்லி அவன் நகர்ந்தான்.

தண்ணீரை வாங்கிப் பருகியபடி வித்யாவையே பார்த்திருந்தவன் நன்றி சொல்லி வாங்க... பதிலுக்கு வித்யாவும் நன்றி தெரிவித்தாள். எதற்கென்பதாய் அவன் பார்வையிருக்க... “பாப்பாவைக் காப்பாத்திக் குடுத்ததுக்கு” என்றாள்.

“வித்யா ஒண்ணு சொல்லட்டுமா?” என்றான் சின்னக்குரலில். என்னவென்ற அவள் கேள்வியாய் புருவம் தூக்க, “இதற்கான கிரெடிட் எல்லாம் உன் அண்ணனுக்குதான். அவர் சந்தேகப்பட்டுக் கண்டுபிடிக்கலன்னா இதெல்லாம் சாத்தியமேயில்ல. அதைவிட முகம் காட்டாத யாரோ ஒரு நர்ஸ் சொல்லலன்னா அந்த ஸ்பாட்கு உன் அண்ணனால போயிருக்கவே முடியாது. இதுல கடைசி பங்குதான் என்னோடது.”

தான் செய்ததைக்கூட சாதாரணமாகக் காட்டிக் கொண்டவன் மேல் முதல் முறையாக வித்யாவிற்கு மதிப்புடன் சேர்த்து ஒரு ஈர்ப்பும் வரத்தான் செய்ததோ!

‘ஆனந்த் மச்சான் வர்றார் கூட்டிட்டு வர்றேன். கார்த்தியைப் பார்த்துக்கோங்க’ என்று அண்ணன் சொல்லிச் சென்ற சில நிமிடங்களில் தான் மட்டுமாக வெளியே வருகையில் சுபாஷ் அவளைக் கடந்து எங்கேயோ ஓட, அண்ணனின் அந்த ஓட்டத்தின் காரணம் புரியாமல் நின்றிருக்கையில், சுபாஷைத் தேடி வந்த ஆனந்த் சுற்றிலும் பார்த்தும் அவளைக் கவனிக்காமல் அண்ணன் சென்ற இடம் நோக்கி ஓட, ஏதோ பிரச்சனையென்று புரிபட அவன் பின்னே வித்யாவும் சென்றாள்.

குழந்தையை வைத்திருக்கும் அறைக்கு அவன் செல்ல, போன வேகத்தில் டாக்டரை மிதித்ததைப் பார்த்தவள் சில நொடிகள் அரண்டுவிட்டாள். அதன் பின்னே தன் அண்ணன் அவர்களிடம் மாட்டியிருப்பது புரிய, அண்ணன் சொன்ன காரணத்தில் இவள் விக்கித்து நிற்க, ஆனந்த் கோபத்தில் டாக்டரையும் அவனுடனிருந்தவர்களையும் அடி பின்னிவிட்டு, போலீஸ்கு போன் செய்யச் சொல்லி அனைத்தையும் தீர்த்தவன் இப்பொழுது எதுவும் செய்யாதவனாய் பேசுகிறான் என்று தோன்ற, மனதில் சுகமான சுமையாய் ஏதோ ஏறுவது போலிருந்தது.

தண்ணீர் குடித்து முடித்து அவளிடம் நீட்ட, அதை வாங்காமல் நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவளின் சிந்தனை இங்கில்லை என்றதும் கேலி செய்யத் தோன்றிய மனதை சூழ்நிலை உணர்ந்த அடக்கி, “வித்யா” என்றழைத்தான்.

‘ம்...’ என திருதிருவென்று அவள் பார்க்க...

“ம்... செம்பு” என்றதும் அவனிடமிருந்து வாங்கியவளுக்குப் புதிதாய் ஒரு படபடப்புடன் புதிதாக ஒரு வெட்க உணர்வு. அவள் நடவடிக்கையில் வந்த மாற்றத்தைப் பார்த்தவனுக்கு, முதல் முறையாகத் தன்னைக்கண்டு முகம் சிவக்கும் பெண்மேல் தான் வைத்தது காதல்தானா என அலைமோதியிருந்த மனதிற்கு ஆம் என்பதாய் உள்மனம் சொல்லி உணர்த்தியதோ அவள் மேலுள்ள காதலை!

தான் மணம் முடிப்பதாக இருந்த பெண்ணிடமும், தான் காதலிப்பதாகச் சொல்லி தன்னை மறுத்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று இவளிடம் தன்னை முழுதாக இழுப்பது புரிய, முன்னரும் நடந்த தவறு தன் செயலால்தான் என்பதும் மறுப்பதற்கில்லை. பழையவற்றை தெரிந்தும் தனக்காக அவள் வரவேண்டுமென்பது அவனது எண்ணமாகயிருக்க, அதைப்பற்றி அவளிடம் பேசவேண்டுமென்று நினைத்தாலும், தற்பொழுது முடியாதென்பதால், தயங்கியபடி நின்றிருந்தவளிடம், “நீ போமா. அத்தை தேடப்போறாங்க” என்றதும் சம்மதமான தலையாட்டலுடன் அவள் செல்ல சுபாஷ் பேசி முடித்து வந்தான்.

“நான் கிளம்புறேன் மாப்ள” என எழுந்தவனிடம்... “மாப்ள எதுக்கு மச்சான்? பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க” என்றான்.

“அதுவும் சரிதான். ஆனா நான் எப்பவும் மச்சான்தான்” என்றான்.

“கண்டிப்பா. அந்த முறையை நான் மாத்துறதாயில்ல. சரி வாங்க சாப்பிட்டுப் போகலாம்.”

“இப்போதைக்கு பசியில்ல சுபாஷ். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இப்ப பாப்பா எங்கே?” என்றான்.

“அத்தை வீட்லயிருக்கா. வாங்க போகலாம்” என்று அங்கே செல்ல, குழந்தை வித்யாவின் கையிலும், கீர்த்தி அவளருகிலுமிருக்க, கார்த்தி தூங்கிக்கொண்டிருந்தாள்.

வித்யாவும் குழந்தையும் மட்டுமே ஆனந்தின் கண்ணில் பட, சட்டென்று போனை எடுத்து போட்டோ க்ளிக் செய்து அதை வால்பேப்பராக வைத்துக்கொண்டான்.

சுபாஷ் அதைக்கண்டும் காணாது, “கார்த்தி எங்க கீர்த்தி? அவளைக் கூட்டிட்டு வா” என்றான்.

“அவ தூங்குறா மாம்ஸ். எழுப்பிட்டு வரவா?”

“இல்லமா தூங்குறவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நான் குழந்தையை மட்டும் பார்த்துட்டுக் கிளம்புறேன்” என்று குழந்தையினருகில் வந்து தரையில் அமர்ந்தவன் பாக்கெட்டிலிருந்த எடுத்த நகை பாக்ஸிலிருந்த செயினை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டு, மெல்ல குழந்தையின் கன்னம் தொட... “ரொம்ப ஷாஃப்டா இருக்கா சுபாஷ். அனுவுக்கு குழந்தை பிறந்தாலும் இப்படித்தான இருக்கும்?” என்றான் குழந்தையின் மேலிருந்த பார்வை மாறாமல்.

“உங்களுக்குப் பிறந்தாலும் இப்படிதான் மச்சான்” என்று வேகமாகச் சொல்ல, அதே வேகத்தில் ஆனந்த் வித்யா இருவரும் ஒருவரையொருவர் நேராகப் பார்க்க... அவனின் கண்களில் மின்னிய புன்னகையில் பாவையவளோ வெட்கத்தில் தலைகவிழ்ந்தாள்.

இவர்களின் மௌன நாடகத்தைப் பார்த்திருந்தாள் கீர்த்தி. நேற்று வரை அவன் பேச்சை எடுத்தால் யாரோ என்பதாய் இருந்தவளின் இச்செய்கை, மாமன் மகளின் மனமாற்றத்தைச் சொல்லியது.

“ஹாய் பாப்பு! உனக்கு தாய்மாமா இல்லன்னு ஃபீல் பண்ணக்கூடாது. உனக்கு இருக்கிற ஒரே தாய்மாமன் நான்தான். இனிமேல் எல்லா சீரும் நான்தான் செய்வேன். சரியா” என்று குழந்தையிடம் பேசியவன் சுபாஷிடம் திரும்பி, “என்னை பஸ் ஸ்டாப்ல விட்ருங்க சுபாஷ்” என்றான்.

“தேங்க்யூ அண்ணா” என்று கீர்த்தி கண்கலங்க...

கீர்த்தியின் தலையில் கைவைத்து, “உன்னோட பிள்ளைக்கும் நான்தான் தாய்மாமன். அந்த உரிமையை யாருக்கும் யாருக்காகவும் விட்டுக் குடுக்குறதாயில்ல” என்றான்.

“நானும் என் பிள்ளைங்களுக்கு வரப்போற தாய்மாமன் சீரை விடுறதாயில்ல. வர்ற வரவை யாராவது வேணாம் சொல்வாங்களா அண்ணா? நான் உங்களோட வரவையும் சேர்த்துதான் சொன்னேன்” என்றாள் சந்தோஷமாக.

“ஹா..ஹா எங்க வராத சொல்லிப்பாரு. என் மருமகளை விட்டே அடிப்பேன்.”

அவர்களின் சிரிப்பையும் உரிமைப் பேச்சையும் புன்னகையுடனும் சற்று பொறாமையுடனும் பார்த்திருந்தாள் வித்யா.

“அண்ணா உங்காளு காதுல புகை வருது” என்று கிசுகிசுக்க...

“வந்தா சந்தோஷம்தான் தங்கச்சி. இன்னைக்குதான் ஜந்துவா பார்த்ததிலிருந்து மாறி மனுஷப்பயலா பார்க்கிறா. அப்படியே கன்டினியூ பண்ணட்டும்.”

“ம்... அவளோட பார்வையைப் பார்த்தா அதையும் தாண்டில்ல தெரியுது.”

“அப்படின்ற! அதுவும் நல்லதுக்குதான். அப்புறம் அண்ணன் மனைவி அண்ணி ஞாபகமிருக்கட்டும்” என்று மறைமுக எச்சரிக்கை விடுத்தான்.

“என்னது அண்ணியா? ஹ்ம்.. மிரட்ட வேற செய்றீங்க. சரி போங்க நான் அப்படியே கூப்பிடுறேன்.”

“தட்ஸ் குட். பை கீர்த்தி. பை மிஸஸ்.வித்யானந்த்” என்றதும் வித்யா அவனை முறைக்க, அவனோ புன்னகைத்து “பெரியவங்க வந்ததும் சொல்லிருங்க” என்று சென்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவன் செல்வதையேப் பார்த்திருந்த வித்யாவிடம் வந்தவள், “ஏய் அண்ணி, பிடிக்கல பிடிக்கல சொல்லி ரொமாண்டிக் லுக் விடுற? நீ சரியான கேடி” என்று கேலி செய்தாள்.

“ஏய் என்ன புதுசா அண்ணின்ற? ஒழுங்கா வித்யான்னே கூப்பிடு.”

“இது ஆனந்த் அண்ணாவோட ஆர்டர். மீற முடியாது மீறினால் தண்டிக்கப்படுவேனாம்.”

“ஓ...”

“ம்... வேற வழியில்ல அண்ணி. எனக்கு அண்ணா வேணும். அதான் உன்னை சாரி உங்களை அண்ணி சொல்றேன்.”

“இதெல்லாம் ஓவர் கீர்த்தி. மரியாதையெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன்.”

“அது கஷ்டம்தான். அண்ணி மட்டும் ஓகே ங்க கொஞ்சம் ஓவர்தான். சரி எங்க அண்ணாவைப் பிடிச்சிருக்கா?”

“தெரியல கீர்த்தி. பிடிச்ச மாதிரியும் இருக்கு பிடிக்காத மாதிரியும் இருக்கு.”

“ஹேய் அண்ணி! இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத. அவரைப் பார்த்த உன் பார்வையில தெரியுது உனக்கும் அவரைப் பிடிச்சிருக்குன்னு.”

“குழந்தை தூங்கிட்டா. நான் படுக்கப்போட்டுட்டு வர்றேன். நீ சமையலை ஆரம்பி நான் வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன்” என்று அவள் பேச்சை மாற்ற...

“ஹ்ம்.. பேச்சை மாத்துற. பார்த்துக்கறேன்” என்றாள் எச்சரிக்கையாய்.

அதற்குள் கார்த்திகா எழுந்து வர, குழந்தையின் கழுத்திலிருந்த செயினைப் பார்த்துக் கேட்க... “ஆனந்த் அண்ணா போட்டாங்கக்கா. இவளுக்குத் தாய்மாமன் சீர் அதுக்குள்ள வந்திருச்சி பாரு. லக்கி குட்டி நம்ம பாப்பா” என்று வித்யாவிடம் திரும்பி, “வித்தி.. சாரி அண்ணி அண்ணா சொன்னது கேட்டிச்சிதான? சீரெல்லாம் சிறப்பா வந்து சேரணும்” என்றாள் அதிகாரமாய்.

“ஹான்! என் மருமகளுக்குத்தான சரியாவே செய்வோம்” என்றாள் பதிலுக்கு.

“கீர்த்தி என்ன பேச்சிது? சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னா அதையே பிடிச்சிக்கிறதா?”

“இல்லக்கா. அது வந்து...”

“ப்ச்.. விடு கீர்த்தி” என்றாள் கார்த்திகா. கார்த்திகாவிடம் ஆனந்தைப் பற்றின நிறைய விஷயங்கள் பகிரப்படாமலே போனது கூட அவளின் விட்டேத்தியான பேச்சிற்குக் காரணமாயிருக்கலாம். அதனால்தானோ என்னவோ ஆனந்தைப் பற்றின புரிதல் இல்லாமலே போனது அவளிடம்.

குழந்தை பிறப்பு அதைத் தொடர்ந்த பிரச்சனைகள் என்று நாட்கள் ஓடியிருக்க, இன்னும் பதினைந்து நாட்களேயிருந்தது திருமணத்திற்கு. மண்டபம் பார்த்து பத்திரிக்கை அடித்ததைத் தவிர திருமணத்திற்கென்று எதுவுமே செய்திருக்காததால், திருமண வேலையைத் துரிதப்படுத்தினார்கள். திருமணப்புடவை நகை எடுக்க மாப்பிள்ளை வீட்டார் சென்னை வரச்சொல்ல... முதலில் மறுத்தாலும் பின்னர் சம்மதித்தார்கள்.

மறு வெள்ளிக்கிழமை திருமணம் என்றிருக்க, இந்த வெள்ளியன்று சென்னை வந்தார்கள் சுதாகர் குடும்பத்தினர். கார்த்திகாவிற்குத் துணையாக சுபாஷிணி, தணிகாசலம் வீட்டிலிருக்க, சுபாஷிற்கு விடுமுறை கிடைக்காததால் மூவராகச் செல்ல வேண்டாமென்று கீர்த்தி அழைத்து வந்திருந்தார்கள்.

தி.நகரிலுள்ள அந்த பெரிய ஜவுளிக்கடை வர, அந்த இடத்திற்கேயான பரபரப்பு மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது.

“ஏன் கீர்த்தி, கோவில்ல ஆயிரம் தலை பார்த்தா புண்ணியம்னு சொல்வாங்கள்ல? இங்க வந்தா அதுக்கும் மேலையே இருக்குதே, இதைப்பற்றி நீ என்ன நினைக்கிற?”

கொலைவெறியாய் மாமன் மகளிடம் திரும்பி முறைத்தவள், “அது கோவில் அண்ணி! இது கும்பல் பன்னி!” என்று பல்லைக்கடித்தாள்.

“ஏய், மரியாதை மரியாதை. அப்புறம் உன் பாசக்கார அண்ணனுக்கு நீதான் பதில் சொல்லணும்” என்றாள் நக்கலாக.

“ஐயோ அண்ணி! உன் அறிவுக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் அவார்ட் குடுக்கலன்னு தெரியல? என் அண்ணனுக்காகத்தான் உன்னைப் பொறுத்துக்கறேன். இல்ல...”

“அவார்ட்கு நீ பரிந்துறை செய்டா செல்லம். ஆஸ்கார் என்ன உலகத்தையே தூக்கி என் கையில குடுத்திருவாங்க” என்றாள் கண்ணடித்து.

“ஐயோ! உடம்பெல்லாம் புல்ல்ல்லா அரிக்குதே” என்று கையை சொறிந்து காண்பிக்க...

“கூல் பேபி கூல்” என்று அவள் கையைத் தடவிவிட... அதற்குள் அவர்கள் இருப்பிடம் கேட்டு வந்த வரலட்சுமி சுதாகரிடம், “அண்ணா, நாகேஷ்வரராவ் ரோட்ல ஃப்ரண்டோட ரிலேடிவ் கடை இருக்கு. சமீபத்துலதான் ஆரம்பிச்சாங்க. அங்க நிறைய கலெக்ஷன்ஸ் இருக்குது. அங்க போயிடலாம்” என்றார்.

“ஹாய் அண்ணி வெல்கம் டூ சென்னை. எப்படியிருக்கீங்க?” என்று அனு வரவேற்று நலம் விசாரித்தாள்.

“நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?” சம்பிரதாயக் கேள்விகள், கீர்த்தியின் கேள்விகள் என்று அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உருவானது.

“கீர்த்திமா பக்கத்துல இருக்கிற செங்கல்பட்டுதான்னாலும், சென்னைக்கு இதுவரை நாம வரவேயில்லல்ல. பாரு ஜவுளிக்கடையை ஜவுளிக்கடல்னு ஏன் சொல்றாங்கன்னு இங்க வந்து பார்த்ததும்தான் தெரியுது.”

“ஆமா அண்ணி. சென்னை ஹெட் ஆஃப் தி சிட்டியா இருக்குன்னா சும்மாவா! இப்ப அண்ணா வந்தா எப்படியிருக்கும்?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

“என் அண்ணாவா? அவங்களுக்குத்தான் லீவ் இல்ல சொன்னாங்கள்ல.” தெரிந்தே ஏன் கேட்கிறாள் என்ற குழப்பம் வித்யாவிற்கு.

“ஹையோ என் அறிவே. நான் சொன்னது எங்க அண்ணாவை. அதாவது மிஸ்டர்.வித்யாவை. வந்தா சூப்பராயிருக்கும்ல” என்றாள் குதூகலமாக.

“லூசா நீ!” என்பதாய் அவளை ஒரு பார்வை பார்த்து, “பெங்களுர்ல இருக்கிறவங்க இங்க எப்படி வருவாங்க?” என்றாள்.

“எனக்கென்னவோ வருவாங்கன்னுதான் தோணுது.” கீர்த்தி ஆருடம் சொல்ல...

“என்னாச்சி இவளுக்கு? நம்மகிட்ட போட்டு வாங்குறாளா, இல்ல நிஜமாவே அவங்க வந்திருக்காங்களா” என்று சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டாள்.

“ஹேய் அண்ணி! வருவாங்க தோணுதுன்னுதான் சொன்னேன். வந்துட்டதை மறைச்சி கிடையாது. வேண்டாம் வேண்டாம்னுட்டு பார்வை எப்படி சுழன்றடிக்குது. ம்..” என்றாள் கேலியாக.

“ஸ்.. கீர்த்தி” என்று அவள் வாய்மூட... அனுவின் “சொல்லு அண்ணா” என்றதில் சடனாக வித்யாவின் தலை அவள் புறம் திரும்ப... “ஓ.. சரிண்ணா” என்று அனு போனை வைக்க... “அண்ணாவா போன்ல?” எனக்கேட்டாள் கீர்த்தி.

“அண்ணன்தான்பா. புடவை எடுக்க எல்லாரும் வந்தாச்சா விசாரிச்சாங்க” என்ற அனு, “கீர்த்தி பெரியவங்க புடவை பார்க்கட்டும் நாம ஒரு ஜுஸ் குடிச்சிட்டு வரலாமா? என்னோட பேபிக்கு வயிறு பசிக்குது போல” என்றாள் பாவமாக.

“ஏன் கூடாது. நான் ரெடி. நானும் பேபிதான்” என்று வித்யாவைப் பார்க்க, அவளோ அப்பாவைப் பார்க்க... “மாசமா இருக்கிற புள்ள பசியில இருக்கக்கூடாது. நீங்க போயிட்டு சீக்கிரம் வாங்க” என்றதும் மூவரும் நான்காவது மாடியிலுள்ள கேன்டீன் சென்றார்கள். அங்கே தனியாக ஓரிடம் பார்த்து வித்யாவை உட்காரவைத்து, “நாங்க ஆர்டர் பண்ணிட்டு வர்றோம் அண்ணி” என்று நகர்ந்தார்கள்.

அவர்கள் நகர்ந்த மறு நிமிடம் தன்னருகில் யாரோ அமர்வது தெரிய வேகமாகத் திரும்பியவளை நோக்கி, “வெல்கம் மிஸஸ்.வித்யானந்த்” என்று கண்ணடித்தான் ஆனந்த்.

அவனின் கண்சிமிட்டலும், அந்த மிஸஸ்.வித்யானந்துடனான சிரிப்பும் அவளின் பேச்சை மறக்க வைத்து, அவனை மட்டுமே பார்க்க வைத்ததோ! ஏதோ ஒன்று கண்கள் அவனைவிட்டு அகலவில்லை.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top