- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
15
“இதுவரை எவனும் என்னைக் கேள்வி கேட்டதில்ல. ஆனா நீ என்னையே ஆழம் பார்க்குறியா? இந்த ஹாஸ்பிடல் விட்டுப் போகும்போது உன்னைக் கதறவிட்டு அனுப்பலன்னா நான் டாக்டர்.ராகுல் இல்லடா” என்றான் கர்ஜனையாக.
சட்டென்று போனை எடுத்துப் பேசியதில் மறுமுனை அவசரப்பட வேண்டாமென்ற போதும், “இல்ல ஹனி. நான் முடிவு பண்ணிட்டேன். என்ன தைரியமிருந்தா என்னையே சந்தேகப்படுவான். சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாதான் இந்த ராகுல் உலகத்துக்குத் தெரியணும். ஒரு மிடில் க்ளாஸ் பையன் என்னை...” என பற்களைக் கடித்து, “நீ என்ன சொன்னாலும் என்னால சமாதானமாக முடியல ஹனி. அவன் பொண்டாட்டிக்கு இதுவரை குழந்தைக்கு இப்படின்னு சொல்லலதான? இரு குடும்பத்தையேக் கதற விடுறேன்” என்றான் வெறியுடன்.
கார்த்திகாவை குழந்தைக்குப் பால் கொடுக்க வரவழைத்து, இரண்டு நர்ஸ்கள் மூலம் குழந்தையின் பிரச்சனையை பேசவைத்து, அவளைக் கேட்க வைத்தான் ராகுல். வந்த அழுகையை அடக்க வழியில்லாது தங்களறைக்கு வர, அப்பொழுது வித்யா கீர்த்தியுடன் வந்த கணவனிடம் குழந்தையைப் பற்றிக் கேட்க முதலில் மறுத்தவன் பின் நடந்ததைச் சொன்னான்.
சிறியவர்களுக்கும் அந்த விஷயம் தெரியாததாகையால், அவர்களும் அதிர்ந்து அழுதார்கள்.
“அப்ப என் குழந்தை எனக்கில்லையா?” என்று கதற...
“கார்த்திமா குழந்தை நல்லாயிருக்காடா. இவங்க நமக்கே தெரியாம எதோ செய்றாங்க. நான் குழந்தையைக் கூட்டிட்டு வர்றேன்.”
“இல்ல என்னைச் சமாதானப்படுத்த சொல்றீங்க” எனும்போது, இருவரின் தங்கைகளுமே, “ஏன் எங்ககிட்ட சொல்லலை?” என்று கோபம் கொள்ள...
“எல்லாம் சரியானதும் சொல்லலாம்னு இருந்துட்டேன்மா. அவங்க சொன்னது இருபத்து நாலு மணிநேரம். ஆனா, பத்து நாளாகியும் என்ன ஏதுன்னு பதில் சொல்லல. ஏன் பால் குடுக்கிற இவளுக்குத் தெரியாதா தன் குழந்தையோட ஆரோக்யம்?”
அழுது கொண்டிருந்தாலும் கணவன் சொன்னது காதில் விழ, ‘ஆமாம் குழந்தை நார்மலாகத்தானே இருக்கிறாள்’ என்று தோன்ற மனதில் ஒரு நம்பிக்கை வர கண்ணீர் துடைத்து, “அப்ப அந்த நர்ஸ்ங்க ஏன்ங்க அப்படிச் சொன்னாங்க? கொஞ்ச நேரத்துல எப்படிப் பயந்துட்டேன் தெரியுமா?”
“ஒண்ணுமில்லடா. நான் கேள்வி கேட்டதால உன்னை வருத்தியிருக்காங்க” என்று தன் தோள் சாய்த்து, “யார் என்ன சொன்னாலும் நம்ம குழந்தை நார்மல் பேபிதான்மா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரெஸ்ட் எடு. நான் இருக்கேன்ல.” மனைவியின் ம்-ல், “நீங்க ரெண்டு பேரும் அண்ணியோடவே இருங்க. ஆனந்த் மச்சானுக்கு இப்பதான் லீவ் கிடைச்சிதுன்னு வந்திட்டிருக்கேன் சொன்னாங்க. வர்ற டைம்தான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று வெளியே சென்றான்.
ஹாஸ்பிடல் வாயில் செல்லும் பொழுது அன்நோன் நம்பரிலிருந்து போன் வர, ஆனந்தைக் காணும் அவசரத்தில் அதை அலட்சியப்படுத்த திரும்பவும் வர, எடுத்து காதில் வைக்குமுன், “சார் ப்ளீஸ் வச்சிடாதீங்க.” ஒரு பெண்ணின் பதற்றக்குரல் கேட்டது.
சுபாஷ் யாரெனக் கேட்பதற்குள், “சார் உங்க குழந்தையைக் காப்பாத்துங்க. என்னன்னு தெரியல நல்லாயிருக்கிற குழந்தை உடம்புல வைரஸ் கிருமி பரவவிட டாக்டர் முடிவு பண்ணிட்டார். இன்னும் ஐந்து நிமிடத்துக்குள்ள போகலன்னா எல்லாமே முடிஞ்சிரும். நான் யார்னு தேடாதீங்க. சப்போஸ் நீங்க கண்டுபிடிச்சிக் கேட்டாலும் டாக்டர்கு ஆதரவாதான் என்னோட பதில் வரும். ப்ளீஸ் டைம் இல்ல சார்” என அவசரமாக போனை கட் செய்து, செல்லை ஸ்விட்ஜ் ஆஃப் செய்து தன் ஆடைக்குள் ஒழித்தபடி பாத்ரூமிலிருந்து வெளியேறினாள் அந்த நிஜ மக்கள் சேவகி.
சில நொடிகள் உலகமே சுழல கண்ணைக் கட்டிவிட்டது போல் நின்றிருந்தவன் மனதில் அப்பெண் சொன்ன நேரமின்மை நினைவு வர, வேகமாக அந்த பெரிய ஹாஸ்பிடலுக்குள் ஓடினான்.
அப்பொழுதுதான் ஆட்டோவை கட் செய்தபடி அவனுக்குக் கையசைத்த ஆனந்த், சுபாஷின் ஓட்டத்தில் என்னவோ என்று பதறி பின்னால் சென்றான்.
மூன்று நர்ஸ்கள் துணையுடன் இரண்டு டாக்டர் என்ற பெயரிலிருந்த ரௌடிகளின் காவலுடனும், சுபாஷின் குழந்தையிருந்த இன்குபேட்டிற்கு சென்று வைரஸை செலுத்தப் போனான் டாக்டர்.ராகுல்.
‘ஆண்டவா! இன்னும் சில வினாடியில எல்லாம் முடிஞ்சிடும். எங்கே இந்தக் குழந்தையோட தகப்பன்? ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு யுகம்னு ஏன் அந்தாளுக்குப் புரியல’ என்று தவிப்புடன் நிற்கையில் அந்த அழையின் கதவு தட்டப்பட, “யாரும் திறக்காதீங்க” என்பதற்குள் அப்பெண் ஏற்கனவே திறந்து வைத்திருந்த கதவு ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.
‘ஷப்பா வந்துவிட்டான்’ என நினைத்தவளுக்கு மனதினுள் இனம்புரியாத நிம்மதி. கதவை திறந்துவிட்டது அருகிலிருப்பவளுக்குக்கூடத் தெரியாமல் நின்றிருந்தாள். அவளுக்குத் தெரியும் அந்த அறையில் சிசிடிவி முடக்கப்பட்டிருப்பது.
சாட்சிகளில்லாமல் செய்யும் தவறுகளுக்கு, கடவுள் ஒருவனே சாட்சி!
“ஏய், யார் கதவைத் திறந்து வச்சது” என்பதற்குள் அவன் முதுகில் அடி விழ, ராகுல் சுதாரிப்பதற்குள் நர்ஸ்களை வெளிவே அனுப்பி, அடுத்த அடியைப் போட்டு குழந்தையைப் பார்க்க, தந்தை என்று தெரிந்ததோ குழந்தைக்கு, தன் பொக்கை வாய் கொண்டு சிரித்தாள் குழந்தை.
குழந்தையின் சிரிப்பை முதல் முறையாக கண்டவனுக்கு உடலில் சொல்ல முடியா உணர்வுகள் எழ, குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்காத ராகுலிடம் திரும்பி, “ஏன்டா இப்படிப் பண்ணின?” என்று அடுத்த அடி அடிப்பதற்குள் அவனை மற்ற இருவரும் தாக்க வர, முடிந்தளவு மூவரையும் சமாளித்தவனால் ஓரளவுக்கு மேல் முடியாமல் போக அவர்களிடம் வசமாக சிக்கியிருந்தான் சுபாஷ்.
“என்னடா ரொம்பத் துள்ளுற? என்னோட இந்த எட்டு வருட சர்வீஸ்ல இதுதான் முதல் முறை. உன் குழந்தையைக் கொன்னுட்டு, உன் குடும்பமே இங்க வந்து ட்ரீட்மெண்ட் பண்ணியதற்கான அடையாளத்தையே அழிச்சிருவேன். நீ யார்கிட்ட போய்க் கேட்டாலும் நோ யூஸ். இப்படியே நின்னா உன் குழந்தை மட்டும்தான் போகும். இல்ல நீயும் போய்ச் சேர்ந்திடுவ” என்றான் மிரட்டலாக.
“டேய்! குழந்தைகள் உயிரைப் பணயமா வச்சி ஹாஸ்பிடல் நடத்துறதுக்குப் பதில் வேறெதாவது செய்து சம்பாதிக்கலாம்டா. என் குழந்தைக்கு எதாவது ஆச்சிது, நீ ஹாஸ்பிடல் நடத்த முடியாது. என்ன மிடில் க்ளாஸ் பேமிலிதான என்ன செய்தாலும் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைச்சியா? வேண்டாம்.. வச்சிக்காத ஒதுங்கிப் போறோம்ன்றதுக்காக எதுவும் தெரியாத புள்ளப்பூச்சின்னு நினைக்காத. எங்களுக்கும் ரௌடிஸம் பண்ணத் தெரியும்” என்றான் அழுத்தமாய்.
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப உன் கண் முன்னாடி உன் குழந்தையை சாகடிக்கப்போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ” என்று ஊசி மருந்துடன் குழந்தையை நோக்கிச் செல்ல... சுபாஷின் “வேண்டாம்டா” என்ற அலறல் எதுவும் காதில் விழாமல், குழந்தை சுவாசிக்கும் காற்றில் ஊசி ஏற்றப்போக...
“டேய் குழந்தையோட முகத்தைப் பாருடா. பச்சைக் குழந்தை பாவம்டா” என்றான் கதறியபடி.
“ம்... குழந்தை முகத்தைப் பார்த்தா உன் முகம்தான் தெரியுது மிஸ்டர். என்ன பண்றது உனக்குப் பொண்ணா பிறந்திருச்சே” என்றான் உச்சுக்கொட்டியபடி.
“பின் விளைவுகள் ரொம்ப அதிகமாயிருக்கும் டாக்டர். சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கேள்விப்பட்டிருப்பியே?”
“ஹா..ஹா அது மிரள்றப்பப் பார்க்கலாம். இப்ப இவனுங்ககிட்டயிருந்து இந்த சாது எப்படி தப்புதுன்னு பார்க்கலாம்” என்று ஊசியை அருகில் கொண்டு சென்ற அடுத்த நொடி ‘ஆ’ என்ற அலறலுடன் தூரம்போய் விழுந்தான்.
“டேய் எவன்டா அது?” கத்தியபடி எழுந்த டாக்டர் யாரென்று பார்க்க, சட்டையை ஏற்றிவிட்டு அடுத்த அடி கொடுக்கத் தயாராக நின்றிருந்தான் ஆனந்த்.
அவனைப் பார்த்த சந்தோஷத்தில் சுபாஷிற்கும் சற்று பலமேறியிருக்க... “என்ன பிரச்சனை மாப்ள?” என்று ஆனந்த் கேட்க... “குழந்தையைக் கொல்லப் பார்க்கிறான் மச்சான்” என்றான் கோபத்தில்.
“என்னது! குழந்தையைக் கொல்லவா?” கோபத்தில் திரும்பியவன் எழப்போன டாக்டருக்கு இன்னுமின்னும் அடிகளிட... சுபாஷைப் பிடித்திருந்தவனில் ஒருவன் அவனை அடிக்க வர... ஒருவன் தன்னிடமிருந்து சென்று விட்டதால் மற்றவனை ஈசியாகச் சமாளித்தான் சுபாஷ்.
“டாக்டருக்குப் படிச்சிட்டு குழந்தையைக் கொல்லப் பார்க்கிறியா? நீயெல்லாம் என்ன மனுஷன்டா. மாப்ள முதல்ல போலீஸ்கு போன் செய்யுங்க” என்றதும் சுபாஷ் முயற்சிக்க அதைத் தடுக்க வந்தவர்களை இருவருமாக அடித்துப்போட்டு போலீஸ்கு போன் செய்ய அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலீஸ் வந்து டாக்டரை அரஸ்ட் செய்ய, அந்த ஊசியின் மருந்து அரசாங்க மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது.
“இதுவரை எவனும் என்னைக் கேள்வி கேட்டதில்ல. ஆனா நீ என்னையே ஆழம் பார்க்குறியா? இந்த ஹாஸ்பிடல் விட்டுப் போகும்போது உன்னைக் கதறவிட்டு அனுப்பலன்னா நான் டாக்டர்.ராகுல் இல்லடா” என்றான் கர்ஜனையாக.
சட்டென்று போனை எடுத்துப் பேசியதில் மறுமுனை அவசரப்பட வேண்டாமென்ற போதும், “இல்ல ஹனி. நான் முடிவு பண்ணிட்டேன். என்ன தைரியமிருந்தா என்னையே சந்தேகப்படுவான். சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாதான் இந்த ராகுல் உலகத்துக்குத் தெரியணும். ஒரு மிடில் க்ளாஸ் பையன் என்னை...” என பற்களைக் கடித்து, “நீ என்ன சொன்னாலும் என்னால சமாதானமாக முடியல ஹனி. அவன் பொண்டாட்டிக்கு இதுவரை குழந்தைக்கு இப்படின்னு சொல்லலதான? இரு குடும்பத்தையேக் கதற விடுறேன்” என்றான் வெறியுடன்.
கார்த்திகாவை குழந்தைக்குப் பால் கொடுக்க வரவழைத்து, இரண்டு நர்ஸ்கள் மூலம் குழந்தையின் பிரச்சனையை பேசவைத்து, அவளைக் கேட்க வைத்தான் ராகுல். வந்த அழுகையை அடக்க வழியில்லாது தங்களறைக்கு வர, அப்பொழுது வித்யா கீர்த்தியுடன் வந்த கணவனிடம் குழந்தையைப் பற்றிக் கேட்க முதலில் மறுத்தவன் பின் நடந்ததைச் சொன்னான்.
சிறியவர்களுக்கும் அந்த விஷயம் தெரியாததாகையால், அவர்களும் அதிர்ந்து அழுதார்கள்.
“அப்ப என் குழந்தை எனக்கில்லையா?” என்று கதற...
“கார்த்திமா குழந்தை நல்லாயிருக்காடா. இவங்க நமக்கே தெரியாம எதோ செய்றாங்க. நான் குழந்தையைக் கூட்டிட்டு வர்றேன்.”
“இல்ல என்னைச் சமாதானப்படுத்த சொல்றீங்க” எனும்போது, இருவரின் தங்கைகளுமே, “ஏன் எங்ககிட்ட சொல்லலை?” என்று கோபம் கொள்ள...
“எல்லாம் சரியானதும் சொல்லலாம்னு இருந்துட்டேன்மா. அவங்க சொன்னது இருபத்து நாலு மணிநேரம். ஆனா, பத்து நாளாகியும் என்ன ஏதுன்னு பதில் சொல்லல. ஏன் பால் குடுக்கிற இவளுக்குத் தெரியாதா தன் குழந்தையோட ஆரோக்யம்?”
அழுது கொண்டிருந்தாலும் கணவன் சொன்னது காதில் விழ, ‘ஆமாம் குழந்தை நார்மலாகத்தானே இருக்கிறாள்’ என்று தோன்ற மனதில் ஒரு நம்பிக்கை வர கண்ணீர் துடைத்து, “அப்ப அந்த நர்ஸ்ங்க ஏன்ங்க அப்படிச் சொன்னாங்க? கொஞ்ச நேரத்துல எப்படிப் பயந்துட்டேன் தெரியுமா?”
“ஒண்ணுமில்லடா. நான் கேள்வி கேட்டதால உன்னை வருத்தியிருக்காங்க” என்று தன் தோள் சாய்த்து, “யார் என்ன சொன்னாலும் நம்ம குழந்தை நார்மல் பேபிதான்மா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரெஸ்ட் எடு. நான் இருக்கேன்ல.” மனைவியின் ம்-ல், “நீங்க ரெண்டு பேரும் அண்ணியோடவே இருங்க. ஆனந்த் மச்சானுக்கு இப்பதான் லீவ் கிடைச்சிதுன்னு வந்திட்டிருக்கேன் சொன்னாங்க. வர்ற டைம்தான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று வெளியே சென்றான்.
ஹாஸ்பிடல் வாயில் செல்லும் பொழுது அன்நோன் நம்பரிலிருந்து போன் வர, ஆனந்தைக் காணும் அவசரத்தில் அதை அலட்சியப்படுத்த திரும்பவும் வர, எடுத்து காதில் வைக்குமுன், “சார் ப்ளீஸ் வச்சிடாதீங்க.” ஒரு பெண்ணின் பதற்றக்குரல் கேட்டது.
சுபாஷ் யாரெனக் கேட்பதற்குள், “சார் உங்க குழந்தையைக் காப்பாத்துங்க. என்னன்னு தெரியல நல்லாயிருக்கிற குழந்தை உடம்புல வைரஸ் கிருமி பரவவிட டாக்டர் முடிவு பண்ணிட்டார். இன்னும் ஐந்து நிமிடத்துக்குள்ள போகலன்னா எல்லாமே முடிஞ்சிரும். நான் யார்னு தேடாதீங்க. சப்போஸ் நீங்க கண்டுபிடிச்சிக் கேட்டாலும் டாக்டர்கு ஆதரவாதான் என்னோட பதில் வரும். ப்ளீஸ் டைம் இல்ல சார்” என அவசரமாக போனை கட் செய்து, செல்லை ஸ்விட்ஜ் ஆஃப் செய்து தன் ஆடைக்குள் ஒழித்தபடி பாத்ரூமிலிருந்து வெளியேறினாள் அந்த நிஜ மக்கள் சேவகி.
சில நொடிகள் உலகமே சுழல கண்ணைக் கட்டிவிட்டது போல் நின்றிருந்தவன் மனதில் அப்பெண் சொன்ன நேரமின்மை நினைவு வர, வேகமாக அந்த பெரிய ஹாஸ்பிடலுக்குள் ஓடினான்.
அப்பொழுதுதான் ஆட்டோவை கட் செய்தபடி அவனுக்குக் கையசைத்த ஆனந்த், சுபாஷின் ஓட்டத்தில் என்னவோ என்று பதறி பின்னால் சென்றான்.
மூன்று நர்ஸ்கள் துணையுடன் இரண்டு டாக்டர் என்ற பெயரிலிருந்த ரௌடிகளின் காவலுடனும், சுபாஷின் குழந்தையிருந்த இன்குபேட்டிற்கு சென்று வைரஸை செலுத்தப் போனான் டாக்டர்.ராகுல்.
‘ஆண்டவா! இன்னும் சில வினாடியில எல்லாம் முடிஞ்சிடும். எங்கே இந்தக் குழந்தையோட தகப்பன்? ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு யுகம்னு ஏன் அந்தாளுக்குப் புரியல’ என்று தவிப்புடன் நிற்கையில் அந்த அழையின் கதவு தட்டப்பட, “யாரும் திறக்காதீங்க” என்பதற்குள் அப்பெண் ஏற்கனவே திறந்து வைத்திருந்த கதவு ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.
‘ஷப்பா வந்துவிட்டான்’ என நினைத்தவளுக்கு மனதினுள் இனம்புரியாத நிம்மதி. கதவை திறந்துவிட்டது அருகிலிருப்பவளுக்குக்கூடத் தெரியாமல் நின்றிருந்தாள். அவளுக்குத் தெரியும் அந்த அறையில் சிசிடிவி முடக்கப்பட்டிருப்பது.
சாட்சிகளில்லாமல் செய்யும் தவறுகளுக்கு, கடவுள் ஒருவனே சாட்சி!
“ஏய், யார் கதவைத் திறந்து வச்சது” என்பதற்குள் அவன் முதுகில் அடி விழ, ராகுல் சுதாரிப்பதற்குள் நர்ஸ்களை வெளிவே அனுப்பி, அடுத்த அடியைப் போட்டு குழந்தையைப் பார்க்க, தந்தை என்று தெரிந்ததோ குழந்தைக்கு, தன் பொக்கை வாய் கொண்டு சிரித்தாள் குழந்தை.
குழந்தையின் சிரிப்பை முதல் முறையாக கண்டவனுக்கு உடலில் சொல்ல முடியா உணர்வுகள் எழ, குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்காத ராகுலிடம் திரும்பி, “ஏன்டா இப்படிப் பண்ணின?” என்று அடுத்த அடி அடிப்பதற்குள் அவனை மற்ற இருவரும் தாக்க வர, முடிந்தளவு மூவரையும் சமாளித்தவனால் ஓரளவுக்கு மேல் முடியாமல் போக அவர்களிடம் வசமாக சிக்கியிருந்தான் சுபாஷ்.
“என்னடா ரொம்பத் துள்ளுற? என்னோட இந்த எட்டு வருட சர்வீஸ்ல இதுதான் முதல் முறை. உன் குழந்தையைக் கொன்னுட்டு, உன் குடும்பமே இங்க வந்து ட்ரீட்மெண்ட் பண்ணியதற்கான அடையாளத்தையே அழிச்சிருவேன். நீ யார்கிட்ட போய்க் கேட்டாலும் நோ யூஸ். இப்படியே நின்னா உன் குழந்தை மட்டும்தான் போகும். இல்ல நீயும் போய்ச் சேர்ந்திடுவ” என்றான் மிரட்டலாக.
“டேய்! குழந்தைகள் உயிரைப் பணயமா வச்சி ஹாஸ்பிடல் நடத்துறதுக்குப் பதில் வேறெதாவது செய்து சம்பாதிக்கலாம்டா. என் குழந்தைக்கு எதாவது ஆச்சிது, நீ ஹாஸ்பிடல் நடத்த முடியாது. என்ன மிடில் க்ளாஸ் பேமிலிதான என்ன செய்தாலும் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைச்சியா? வேண்டாம்.. வச்சிக்காத ஒதுங்கிப் போறோம்ன்றதுக்காக எதுவும் தெரியாத புள்ளப்பூச்சின்னு நினைக்காத. எங்களுக்கும் ரௌடிஸம் பண்ணத் தெரியும்” என்றான் அழுத்தமாய்.
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப உன் கண் முன்னாடி உன் குழந்தையை சாகடிக்கப்போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ” என்று ஊசி மருந்துடன் குழந்தையை நோக்கிச் செல்ல... சுபாஷின் “வேண்டாம்டா” என்ற அலறல் எதுவும் காதில் விழாமல், குழந்தை சுவாசிக்கும் காற்றில் ஊசி ஏற்றப்போக...
“டேய் குழந்தையோட முகத்தைப் பாருடா. பச்சைக் குழந்தை பாவம்டா” என்றான் கதறியபடி.
“ம்... குழந்தை முகத்தைப் பார்த்தா உன் முகம்தான் தெரியுது மிஸ்டர். என்ன பண்றது உனக்குப் பொண்ணா பிறந்திருச்சே” என்றான் உச்சுக்கொட்டியபடி.
“பின் விளைவுகள் ரொம்ப அதிகமாயிருக்கும் டாக்டர். சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கேள்விப்பட்டிருப்பியே?”
“ஹா..ஹா அது மிரள்றப்பப் பார்க்கலாம். இப்ப இவனுங்ககிட்டயிருந்து இந்த சாது எப்படி தப்புதுன்னு பார்க்கலாம்” என்று ஊசியை அருகில் கொண்டு சென்ற அடுத்த நொடி ‘ஆ’ என்ற அலறலுடன் தூரம்போய் விழுந்தான்.
“டேய் எவன்டா அது?” கத்தியபடி எழுந்த டாக்டர் யாரென்று பார்க்க, சட்டையை ஏற்றிவிட்டு அடுத்த அடி கொடுக்கத் தயாராக நின்றிருந்தான் ஆனந்த்.
அவனைப் பார்த்த சந்தோஷத்தில் சுபாஷிற்கும் சற்று பலமேறியிருக்க... “என்ன பிரச்சனை மாப்ள?” என்று ஆனந்த் கேட்க... “குழந்தையைக் கொல்லப் பார்க்கிறான் மச்சான்” என்றான் கோபத்தில்.
“என்னது! குழந்தையைக் கொல்லவா?” கோபத்தில் திரும்பியவன் எழப்போன டாக்டருக்கு இன்னுமின்னும் அடிகளிட... சுபாஷைப் பிடித்திருந்தவனில் ஒருவன் அவனை அடிக்க வர... ஒருவன் தன்னிடமிருந்து சென்று விட்டதால் மற்றவனை ஈசியாகச் சமாளித்தான் சுபாஷ்.
“டாக்டருக்குப் படிச்சிட்டு குழந்தையைக் கொல்லப் பார்க்கிறியா? நீயெல்லாம் என்ன மனுஷன்டா. மாப்ள முதல்ல போலீஸ்கு போன் செய்யுங்க” என்றதும் சுபாஷ் முயற்சிக்க அதைத் தடுக்க வந்தவர்களை இருவருமாக அடித்துப்போட்டு போலீஸ்கு போன் செய்ய அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலீஸ் வந்து டாக்டரை அரஸ்ட் செய்ய, அந்த ஊசியின் மருந்து அரசாங்க மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது.