- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
14
மறுநாளே டிஸ்சார்ஜ் ஆனதும் ஈஸ்வரியிடம் கண்களால், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என விடைபெற்று நேத்ராவுடன் தன் வீட்டிற்கு வந்தாள் அவந்தி.
இரண்டு நாட்கள் எந்த பிரச்சனையுமில்லாமல் இனிதே நகர்ந்தது.
இந்த இரண்டு நாட்களில், வனஜா பூவனமாக மாறி அவந்திமேல் அன்பு மழை பொழிய, கௌஷிக் அதே மழையை கொஞ்சம் மாற்றி ஜொள்ளாக நேத்ராமேல் பொழிந்தான். தாய் மகன் இருவரின் கூத்தில் இரு இளம் பெண்களுக்கும் ஜலதோஷம் பிடிக்காததே பெரிய விஷயம்.
இதுவரை அன்று சவாலாக சொன்ன கல்யாண பேச்சை எடுக்கவேயில்லை. ‘ஒருவேளை இப்போதைக்கு வேண்டாம்னு விட்டுட்டாங்களா? இல்லை விட்டுப்பிடிக்கிறாங்களா?’ என மனதில் கேள்விகள் குடைந்தது.
விட்டால் இனிமேல் பிடிக்க முடியாதென்று, மூன்றாம் நாள் காலையிலேயே, தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள் தாயும், மகனும். அவந்திகாவிடம் வந்த வனஜா தன்னுடைய போன் ஒர்க் ஆகவில்லை என்றும் கணவரிடம் அவசரமாகப் பேச வேண்டுமென்றும் நயமாக பேசி கைபேசியைக் கேட்டார்.
‘வேலையை ஆரம்பிச்சிட்டாங்க போல.’ சிலவினாடி யோசித்து அதன்பின் கொடுத்தாள்.
சற்று நேரம் கழித்து வந்த கௌஷிக், “அவந்தி உன்னோட லேப்டாப் கொடு. என்னோடதுல வைரஸ் அட்டாக்காகி இருக்கு. வைரஸ் க்ளீன் பண்ணியும், இன்னும் ஏதோ ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு அர்ஜெண்டா ஒரு மெயில் அனுப்பணும். முடிச்சதும் தந்திடுறேன்” என்றான் தந்திரமாக.
மாமன் மகனின் தந்திரம் அறியாதவளா அவந்தி. ஏன்? எதுக்கென்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டே தூக்கிக் கொடுத்தாள்.
அவந்தியிடமிருந்து நேத்ராவின் புறம் பார்வையை திருப்பியவன் “உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா, உங்களோட மொபைல் கொஞ்சம் தர்றீங்களா?” என கேட்டான்.
“அவங்களோடது எதுக்கு கௌஷிக். என்னோடது அத்தை வச்சிருக்காங்க பாரு. அதை வாங்கிக்கோ.”
‘ப்ச்... இவ வேற நடுவுல வந்து..’ என நினைத்தவன்... “அம்மா எப்ப முடிக்கிறாங்களோ தெரியாது. எனக்கு இப்ப அர்ஜெண்டா வேணும்.”
“நான் எதுக்கு தரணும்?” என நேத்ரா மறுக்க,
“ப்ளீஸ் நேத்ரா!” என்று அவளிடம் கெஞ்சிவது போல் கொஞ்சி கவிழ்க்க எண்ணினான்.
‘அடப்பாவி! இப்படி லுக் விட்டா, நான் ஓகே பண்ணிருவேன்னு நினைச்சான் போல’ என நினைத்தவளுக்கு, தன் நினைவே தனக்கு அருவருப்பாக, அவனிடம் போனைத் தந்தாள். அதன்பிறகு அந்த பொருட்கள் அவர்களிடம் திரும்பி சென்றடையாததோடு, அவர்களுக்கே தெரியாமல் வீட்டுக் காவலில் முடக்கப்பட்டார்கள்.
கௌஷிக்கிற்கு நேத்ராவை மிகவும் பிடித்திருந்தது. அதைவிட அவந்தியால் வரப்போகும் சொத்தும் முக்கிய இடம் பெற, அவளா? இவளா? என தாமரையிலைத் தண்ணீராக தத்தளித்துக் கொண்டிருந்தவன், கடைசியில் வேறு வழியில்லாமல் அவந்தியை திருமணம் செய்து, சொத்தை தன் பெயருக்கு மாற்றி, அதன்பின் விவாகரத்து செய்து நேத்ராவை தனது துணையாக்கிக் கொள்ளலாம் என்றெண்ணினான்.
நேத்ராவிற்கு இந்த விஷயங்கள் தெரியக்கூடாது என்பதற்காக, திருமணத்திற்கு முந்தின தினம், அவள் சந்தேகப்படாதவாறு அப்புறப்படுத்த எண்ணி, அதன்பின் அதற்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தான். வனஜாவிற்கு திருமணத் திட்டத்தை மட்டும் சொன்னவன், நேத்ராவை தாயிடமிருந்து மறைத்தான்.
மறுநாள் காலையில் அவந்தியைப் பார்க்க சந்தோஷ் வர, சந்தேகமாய் வேலைக்காரர்களும், வனஜாவும் பார்த்தனர்.
‘ஏன்டா சந்தோஷ், நீயென்ன அவ்வளவு கேவலமாவா இருக்க? இருபத்தாறு வயசுப் பையனுக்கே உண்டான கலையோட, சூப்பராயிருக்கன்னு, எங்க வீட்டு சூப்பர் ஸ்டார், எங்கம்மா சொன்னாங்களே!’ என்றபடி வீட்டினுள் நுழையப் போனான்.
அவனுக்கென்ன தெரியும், இதுவரை அவந்தியைப் பார்க்கவென்று பையன்களோ, ஏன் பெண்களுமே வந்ததில்லை என்று. வீட்டைவிட்டு வெளியே சென்றால் அவளின் எல்லை அளவிட முடியாதது. ஏனெனில் வெளியே சென்றால் அவளுக்கு அவளே ராணி. அந்த நினைவில்தான் கார்த்திக்கிடம் திருமணத்திற்கே கேட்டிருந்தாள். அதே எல்லை திரும்ப வீட்டினுள் நுழையும் பொழுது, கேட்டோடு முடிந்துவிடும். முடித்து விட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்பது வனஜாவின் கட்டளை.
புதிதாக அவந்திகாவித் தேடி வயசுப்பையன் வரவும், வாசல்வரை வந்த சந்தோஷை வனஜா தடுத்தார்.
“ஹையோ! ஆன்ட்டி எதுக்கு வேண்டாம் விடுங்க” என்று சொல்லவும்,
‘ஏன் இப்படி சொல்கிறான்?’ என்று புரியாமல் விழித்த வனஜா புதிராய் அவனைக்காண,
“என்ன பார்க்குறீங்க? முதல் தடவையா உங்க வீட்டுக்கு வர்றேன்னு, ஆரத்தியெல்லாம் எடுத்து வரவேற்க வேண்டாம். அந்தளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. நானே வலது காலை எடுத்து வச்சி உள்ளே வர்றேன்” என்று உள்ளேயும் வந்திருந்தவனை,
வனஜா கோவத்தில் முறைத்து, “யார் நீ? சொல்லச் சொல்லக் கேட்காம உள்ள வர்ற?” என்று உறுமினார்.
‘இதுக்கெல்லாம் அசந்தா குமார்-ஈஸ்வரிக்கு நம்பர் டூ ப்ரொடக்டா எப்படியிருக்க முடியும்’ என்றெண்ணி, “ஆன்ட்டி நான் அவந்திகா ஃப்ரண்ட். இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தேன். அவங்க வேண்டாம்னுதான் சொன்னாங்க. பட், எனக்கொரு பைவ் மினிட்ஸ் அவங்ககிட்ட பேசணும். அவங்க ரூம் எது நான் பார்த்துட்டு வந்திடுறேன்.”
“அதெல்லாம் இப்ப பார்க்க முடியாது. அவ ஆஃபீஸ் வர ஆரம்பிச்சதும் தாராளமா பார்த்துக்கோ.”
“ஆன்ட்டி பைவ் மினிட்ஸ்தான்” என வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க,
கீழே கேட்ட சத்தத்தில் மாடியிலிருந்து எட்டிப் பார்த்த நேத்ரா கண்களில் சந்தோஷ் விழுந்தான்.
“ஹாய்! நேத்தி! இங்க பாரு. உங்க மேடமை பார்க்க விடமாட்டேன்றாங்க” என்றதும், ‘நேத்தி’ என்ற அழைப்பில் அசையாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க...
அதேநேரம் வீட்டினுள் நுழைந்த கௌஷிக், இதைப் பார்த்து, ‘நேத்ரா எனக்கு மட்டும்தான். அவ எப்படி இவனை பார்க்கலாம்?’ என்றும் எண்ணமிடும்போதே,
நேத்ரா கௌஷிக்கை கவனிக்க, ‘மை காட்! இவ்வளவு நேரம் சந்தோஷைப் பார்த்திருந்ததை கவனிச்சிருப்பானோ? இப்படியா தன்னை மறந்து நிற்பேன். கவனிச்சிருந்தாலும், இல்லன்னாலும் அதை இப்பவே மாத்தியாகணும். இல்ல எல்லா ப்ளானும் சொதப்பலாகிடும்’ என்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து, “என்ன சந்தோஷ் சார் சத்தம்? மேடம்லாம் யாரையும் பார்க்கிற நிலைமையில இல்ல. தூங்கிட்டிருக்காங்க. இப்ப நீங்க போகலாம்” என்றாள்.
“ஹேய்! பொய் சொல்லாத. காலையில ஒன்பது மணிவரைக்குமா தூங்குறாங்க? அதுவும் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறவங்க. இதை நம்ப நான் ஒண்ணும் கேனையனில்ல. ஓகே.”
“அதெல்லாம் தெரியாது. நீங்க அவங்களைப் பார்க்க முடியாது.”
“ஹேய்! என்ன பேசிட்டிருக்க. அவங்க யார் தெரியுமா? அவங்க என்...” என்றதும் அவனை முடிக்கவிடாமல் எங்கே கோவத்தில் உளறிவிடுவானோ என்று ,சட்டென்று கன்னத்தில் அறைந்து விட்டாள். அவன் சொல்ல வந்ததோ, ‘அவங்க என் தோழி’ என்பது மட்டுமே.
“ஏய்! ஏன் என்னை அடிச்ச?” என்று கோவத்தில் அடித்த கையை பிடித்து பின்புறம் வளைத்து தன்புறம் இழுத்துக் கொண்டான்.
“ஏய்! விடு” என்று முகத்தை கோவமாக வைத்திருந்தாலும், அவனின் அருகாமையில் ஒரு இதம் பரவுவதை உணர்ந்தாள். ஆனால், அது எதையும் உணராது அவன் பிடி இறுகியிருக்க,
நேத்ராவிற்கு சந்தோஷின் மேல் எதுவும் இன்ட்ரஸ்ட் இருக்குமோ! என சந்தேகித்த கௌஷிக், அவளின் ஒரே அடியில் தன்மனம் தெளிவாக, சந்தோஷிடமிருந்து அவளை விடுவிக்கப் போராடினான்.
அதேநேரம், “சந்தோஷ் என்ன காரியம் பண்றீங்க? முதல்ல அவங்ககிட்ட இருந்து கையை எடுங்க” என்றபடி அவந்தி கீழே இறங்கிவர முயற்சித்தாள்.
“நீங்க இறங்க வேண்டாம். நாங்களே மேலே வர்றோம்” என நேத்ராவையும் இழுத்துக் கொண்டே சென்றான். அவந்தியிடம் சென்றவன் எடுத்த எடுப்பிலேயே, “இவ உங்களுக்கு நர்ஸா? இல்ல இந்த வீட்டு அடியாளா? உங்களை மீட்பண்ண விடமாட்டேன்றா?” ல்ப்வத்தில் சிடுசிடுத்தான்.
“அதுக்கு இப்படியா வயசுப்பொண்ணை கையை பிடிச்சி முறுக்குவீங்க?”
“சரி தப்புதான் விட்டுட்டேன். பட், அப்ப இவள் என்னை அடிச்சது தப்பில்லையா?”
“ஹேய்! அவள் இவள் சொல்றதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்” என்று நேத்ரா எகிறினாள்.
“பார்றா! இவங்க பெரிய மகாராணி மங்கம்மா. அவங்க இவங்க சொல்றாங்க. சர்தான் போடி” என்றான் அசால்ட்டாக.
அதில் நிஜமாகவே கோவம் வந்தவள், “வேண்டாம் என்கிட்ட விளையாடாத? எதாவது ஊசியை எடுத்து உனக்குப் போட்டு க்ளோஸ் பண்ணிருவேன்” என்றாள் ஆத்திரமாக.
“இங்க பாருங்க சிஸ்டர். சந்தோஷை நீங்க அடிச்சது தப்பு. சாரி கேளுங்க” என அவந்திகா சொன்னாள்.
“அதெல்லாம் முடியாது மேம். அவங்க பேசின பேச்சி அப்படி” என மறுத்தாள்.
“அவர் என்னோட கெஸ்ட். என்னைப் பார்க்க வந்தவரை தடுத்ததும் இல்லாமல், அடிச்சி அசிங்கப்படுத்திருக்கீங்க. முதல்ல மன்னிப்பு கேளுங்க சிஸ்டர்.”
“அவ ஏன் மன்னிப்பு கேட்கணும். நான் செய்ய நினைச்சதை அவள் செய்றா” என்று இடைபுகுந்தான் கௌஷிக்.
“உனக்கும் சந்தோஷ்கும் என்ன பகை? நீ ஏன் அவங்க மன்னிப்பு கேட்கணும்னு நினைச்ச?” என்று அவந்தி செக் வைக்க,
நேத்ராவை கைபிடித்து இழுத்து வந்த கோவத்தில் இருந்தவன், “எங்களுக்குள்ள என்ன பகை. அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த பொண்ணை கைபிடிச்சி இழுக்கிறான். அதைப் பார்த்திட்டிருக்கச் சொல்றியா?”
“அவமேல உனக்கென்ன கௌஷிக் அக்கறை? ஏய்.. சிஸ்டர் நீ என்னைப் பார்த்துக்க வந்தியா? இல்ல இந்த கௌஷிக்கை கரெக்ட் பண்ண வந்தியா?” என நேத்ராவிடம் பாய்ந்தாள்.
“மேம் நீங்க ஓவரா பேசுறீங்க. நான் யாரையும் கரெக்ட் பண்ண வரல. உங்க ப்ரண்ட் வேணும்னா, என்னைக் கரெக்ட் பண்ண வந்திருப்பாரோ என்னவோ. யாருக்குத் தெரியும்” என்றாள் எரிச்சலில்.
“ஹலோ! அப்படி ஒரு நினைப்பிருந்தா, அதை இப்பவே மறந்திரு. எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியாவே இல்ல. அடுத்த ஜென்மத்துல பண்றதாயிருந்தா உன்னைத் தேடி வர்றேன்” என பதிலடி கொடுத்தான்.
அவன் கண்களின் தீவிரத்தில், ‘உண்மை பேசுகிறான்’ என உணர்ந்த நேத்ராவிற்கு உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பித்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தவளை தடுத்து, டாக்டர் ரஞ்சனுக்கு போன் செய்து பேசி முடித்து, நேத்ராவிடம் நீட்டி, “டாக்டர் பேசுறாங்க பேசு” என்றான்.
“ஹலோ டாக்டர். எஸ் டாக்டர். ஓகே டாக்டர். இதோ வந்திடுறேன்” என போனை சந்தோஷிடம் கொடுத்தவள், “டாக்டர் என்னை இப்பவே கிளம்பி ஹாஸ்பிடல் வரச்சொன்னாங்க. நான் கிளம்பறேன். அவந்தி மேடம் உங்களுக்கு இன்னைக்கு பதினோரு மணிக்கு தையல் பிரிக்கிறாங்களாம். முதல்ல நான் போறேன். நீங்க கௌஷிக் சாரோட பின்னாடி வாங்க. நான் போய் என்னோட திங்ஸ் பேக் பண்ணிட்டு வர்றேன் சந்தோஷ் சார்” என்று அறைக்குள் செல்லுமுன், கௌஷிக்கிடம் ஒரு சோகப்பார்வையை வீசிச் சென்றாள்.
அதற்கு சற்றும் குறையாமல் பதில் பார்வை பார்த்திருந்தான் கௌஷிக். அதைக்கண்டு மற்ற இருவரும் உள்ளுக்குள் நகைத்தனர்.