- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
14
ப்ரேமும், சுபாவும் வீடு வந்து சேர காலை ஐந்தே முக்கால் ஆனது. அவர்கள் வீட்டினுள் நுழைய ஜீவாவின் போன் வர சரியாக இருந்தது. நேரே தன்னறைக்கு செல்லலாம் என நினைத்து வந்தவள், போன் வந்ததும் பேசிவிட்டு அப்பா, அம்மா நலம் விசாரித்து கொஞ்சிவிட்டு, “அம்மா நான் தூங்கவா?” கேட்ட மகளிடம்...
“இருமா காஃபி தர்றேன் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என்று மகளை கவனித்து, மகனிடமும் சற்று நேரம் படுக்கச்சொல்லி, “தேவி சாயங்காலம் ஹாஸ்பிடல் போனா போதும். இப்ப நல்லா தூங்கு” என்றார் மகளிடம்..
சரியென்று தலையாட்டி தன்னறைக்குள் வந்து கதவை மூடியவள் பெட்டில் வந்து விழுந்தாள். ‘வந்தாயிற்று! கணவனைவிட்டு முழுதாக வந்தாயிற்று. அடுத்தது என்ன?’ என்பதே கேள்விக்குறியாய் இருந்தது. ‘இந்த உண்மை வெளியே தெரியும்போது அப்பா, அம்மா, அண்ணனின் முடிவு என்னவாயிருக்கும். ஜீவாவா? சுபாவா? கேட்டா முதல்ல கோபப்பட்டாலும் கண்டிப்பாக பொண்ணுதான் முக்கியம் சொல்வாங்க’ என நினைத்தாள்.
வரதராஜனின் பெண்ணாக கண்டிப்பான தகப்பனாக மட்டுமே தெரிந்த மகளுக்கு, தெரியாமல் போனது அவரது நாட்டாமை குணம். அதாவது நேர்மையான குணம். நியாயமென்று பட்டால் தவறு செய்தது பெத்த பெண்ணாக இருந்தாலும் தண்டனை நிச்சயமென்பதை அறியவில்லை சுபா.’
கல்யாணம் வரை சமாளித்து அதன்பிறகு தன் பிரச்சனைக்கு தீர்வு காணலாமென்று நினைத்தவள் அப்படியே உறங்க, காலை உணவிற்கு அழைக்க கதவைத் தட்டியபிறகே கண்விழித்து கதவைத் திறந்து, “ஏன்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க?” என்ற கேள்வியோடு வர...
“தேவி நான்தான்னு எப்படித் தெரியும்? கதவைத்தான தட்டினேன். கண் தெரியுதாடா?” முகம் முழுக்க சந்தோஷத்துடன் கேட்க... அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தவள் சட்டென உதடுகடித்து, “இல்லம்மா. உங்க ஹைட் வச்சி நீங்கதான்னு குத்துமதிப்பா சொன்னேன்.”
“அம்மா அந்த குத்துக்கு என்ன மதிப்புன்னு கேளுங்க” என்றான் ப்ரேம்.
“அண்ணா என் பக்கத்துல வாயேன்.”
“எதுக்கு வாண்டட்டா வந்து வாங்கிக்கட்டவா. அதுக்கு அந்த சண்முகம் தான் செட்டாகுவாங்க.”
“சம்முகம் எடு அந்த உருட்டுக்கட்டையை. போடு அவன் மண்டையில” என தாயை உள்ளிழுக்க...
“ஏன்டா எங்கம்மா அழகா சண்முகசுந்தரின்னு வச்ச பெயரை நீ சண்முகம்ன்ற. உன் தங்கச்சி சம்முகம்ன்றா உங்களை!” என கை ஓங்கினார்.
ஓங்கிய கையை பிடித்து, “சம்முகம் ரொம்ப அழகுல்லண்ணா?” தாயை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சுபா.
“இல்லையா பின்ன. என்னோட அம்மாவாச்சே.”
“அடப்பாவி அண்ணா! அப்ப நான் லிஸ்ட்ல இல்லையா?”
“ஹி...ஹி முதல் பிள்ளை நான்தான அந்த அர்த்தத்துல சொன்னேன்.”
“ச்சோ... அதுக்கு ஏன்டி எனக்கு முத்தம் குடுத்த?”
“அது ஜீவா நினைப்பு வந்திருக்கும்மா. அதான் முத்தம் முகம் மாறி வந்திருச்சி.”
“அண்ணா!” என ஒரு விரலால் மிரட்டி, “இதுக்கே இப்படின்னா எப்படி சம்முகம்? வருவா பாருங்க உங்க மருமக அதிரடி ராணி. அவ குடுத்தா இதே வார்த்தை வருதா பார்க்கிறேன்.”
“ஹான்! அவ என்னோட மருமக.”
“ஹேய்! ஹலோ! நான் உங்க பொண்ணு. ஒரு டயலாக் விடுவாங்களே அது என்னண்ணா மறந்திருச்சி?”
“தொப்புள் கொடி உறவு!”
“இதுவும் ஓகேதான். பட், இன்னொன்னு. ஹான்! ரெத்த பந்தம். நான் உங்க ரெத்தம்மா?”
“எதுவாயிருந்தாலும் அவள்தான் என்னோட கடைசிவரை இருக்கப்போறது” என உண்மை நிலவரத்தைச் தாய் சொல்ல.
“சம்முகம் அதுக்குள்ள ஜால்ராவா? ஏன் நான் இங்கயிருந்தா விரட்டி விட்டுருவீங்களா?” என தாயின் எண்ணம் தெரிந்துகொள்ள கேட்டாள்.
“அப்படி எத்தனை நாள் இருப்ப. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு பத்து, பதினைந்து நாள் இருப்பியா? அப்புறம் மருமகன் வீட்டுக்கு போய்த்தான ஆகணும்.”
“ஏன்மா? அதுக்குமேல் இங்கேயே இருக்கேன் சொன்னா?” என தோள்மேல் தலைசாய்த்து விளையாட்டாக கேட்பது போல் கேட்க...
“நீ அப்படி சொல்லமாட்ட. சொன்னா இந்த வீட்டுல இருக்கமாட்ட.”
தாயின் பதிலில் அதிர்ந்தவள், “நான் உங்களுக்கு முக்கியமில்லையா?” என இறங்கிய குரலில் கேட்க... முக்கியம்தான் இல்லன்னு சொல்லமாட்டேன். “எந்த உறவு எங்க இருக்கணுமோ, அங்க இருந்தால்தான் மதிப்பு.”
முதன்முறையாக ‘தாய் வீட்டில் தனக்கென்று ஆதரவு இருக்காதோ? அப்படின்னா அடுத்து நான் என்ன செய்யுறது?’ தனக்குள்ளேயே யோசிக்க ஆரம்பித்தாள்.
“ஆமா. இதென்ன வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டுட்டிருக்க? உனக்கு கிடைச்ச புகுந்த வீட்டு உறவுகள் எல்லாருமே ரொம்ப தங்கமானவங்க. இனி விளையாட்டுக்கு கூட இப்படி கேட்காதே” என தாயாய் கண்டித்தார்.
“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மி தங்கச்சி. ஐம் தாண்டவராயன் பிஎஸ்சி டாப்பர். நல்லாயிருக்கீங்களா? என்னை நியாபகமிருக்கா? கல்யாணத்துக்குப் பிறகு ஒரு போன் கூட பண்ணலையே?” என்று வந்தான் தாண்டவராயன்.
“டேய்! தடிமாடு! வா வா” என்றழைத்தபடி வந்த ராஜன், “அதென்னடா டாப்பர்... டாப்பர்னுட்டு ரொம்ப குதிக்காதடா டாப் கழன்டுக்கப்போகுது.”
‘ஸ்... வந்துட்டாருப்பா! இவ்வளவு நேரம் இங்க சிங்கிளாதான, அம்மாவும், பிள்ளைகளும் சீன் ஓட்டிட்டிருந்தாங்க. அப்பல்லாம் ஆளைக்காணோம். கரெக்டா நான் கலக்கலா என்ட்ரி குடுக்கலாம்னு நினைச்சா, என்னைக் கலாய்க்க இவர் என்ட்ரி குடுக்கிறாரு’ என மனதினுள் பொங்கியவன் வெளியே அமைதியாக நின்றான்.
அதற்குள் சுபா, “நல்லாயிருக்கேன் தாண்டவ்ணா. உங்களையெல்லாம் ரொம்ப நல்லாவே நியாபகமிருக்கு. மறக்கிற ஆளா நீங்க? எத்தனை வருட அண்ணன், தங்கை பந்தம். போன்தான இனிமேல் நேர்லயே பேசிக்கலாம்.”
“ஷப்பா... இந்த வார்த்தையைக் கேட்கிறதுக்காகவே, பாப்பாவை நம்மகூட வச்சிக்கலாம். தாண்டவராயன்ற பெயரைக்கூட டீசன்டா தாண்டவ் சொல்ல கேட்டு எவ்வளவு நாளாச்சி. இதெல்லாம் நம்ம தங்கச்சியால தான் முடியும். ரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி.”
“யுவர் ஆல்வேஸ் வெல்கம் தாண்டவ்ணா.”
“ஆமா. தடிமாடுக்குப் பேரு தாண்டவ். நீ குடுக்கிற இடத்துல நிஜமாகவே தாண்டவம் ஆடிறப்போறோன்” என மகளிடம் சொல்லி, “சாப்பிட வந்தியாடா? ஏன் லேட்டு?” என்று தாண்டவிடம் கேட்டார்.
“ஹ்ம்... அதுக்குத்தான் வந்திருக்கோம்” என்ற தாண்டவராயனுக்குத் தெரியும், எவ்வளவுதான் அவனை கிண்டலடித்தாலும் அவனை கவனிப்பதில் எப்பொழுதும் கவனம் சிதறமாட்டார் ராஜன். முடிந்த அளவு உழைப்பவர்களை தங்களுக்கு முன்னரே கூட சாப்பிட வைப்பது அவரின் நற்பண்புகள்.
அப்பா, அம்மா கிராமத்தில் இருக்க ஒரு டிகிரி முடித்ததோடு சென்னையில் வேலைக்காக வந்தவனை, வேலை வெறுத்து ஒதுக்க, சந்தர்ப்ப வசமாக ராஜனின் கண்ணில்பட, அவனின் நற்குணங்கள் தெரிந்த ராஜன், தானே டிரைவிங் கற்றுக்கொள்ள வைத்து, தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார். நான் படித்தவன் இந்த வேலை செய்யமாட்டேனென்று மமதை எதுவுமில்லாமல், ராஜனின் விசுவாசியானான். சுபாவின் முயற்சியால் கரஸ்பாண்டன்ட் கோர்ஸில் மேற்படிப்பு படித்து முடித்து ராஜனின் கம்பெனியிலேயே வேலையும் செய்கிறான். இருந்தாலும் டிரைவர் வேலையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. மற்ற வேலைக்காரர்களை விட, குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன். சுபாவின் தீவிர நலம் விரும்பி. ஏன்னா அவள் ஒருத்திதான் அவனோட பெயரை டீசன்டாக அழைப்பவள்.
“ சாயங்காலம் பாப்பாவ ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகணும்” என்றதும் சம்மதமாக தலையசைத்துச் சென்றான் தாண்டவ்.
மாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா, அம்மாவுடன் மருத்துவமனை சென்று, டாக்டர்.கேசவை சந்திக்க, சுபாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவர், “எப்பயிருந்துமா கண் தெரியுது?” என்று நேரடியாக கேட்க... அதை எதிர்பார்த்திராதவள் சட்டென்று திணற...
“எங்க டாக்டர் இன்னும் மங்கலாகத்தான் தெரியுதுன்றா” என தாய் சொல்ல... சுபாவைப் பார்த்தவர் பார்வையில் ‘எதற்கிந்தப் பொய்?’ என்ற கேள்வி நிற்க... அதில் தலைகவிழ்ந்தாள் சுபா.
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில இருங்க. செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றதும் ராஜனும், சுந்தரியும் வெளியே சென்றதும்...
“ஏன்மா கண் தெரியும்னு வீட்ல சொல்லல? எத்தனை நாளா தெரியும்?”
“டாக்டர்! உங்களுக்கு?”
“அனுபவஸ்தன்மா. எத்தனை வருஷம், எத்தனை விதமான ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கேன். என்னை ஏமாத்த முடியும்னு தோணுதா?”
“சாரி டாக்டர். ஏமாத்தணும்னு நினைக்கல. எனக்கு ஒன் வீக்கா கண் தெரியும். அண்ணா கல்யாணம் வருது. அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸ் கிஃப்டா எனக்கு கண்ணு தெரியும்னு சொல்லி அசரடிக்கணும்னு நினைச்சிருக்கேன் டாக்டர்.”
“கல்யாணத்துக்கு எத்தனை நாள்மா இருக்கு?”
“இன்னும் பதினைந்து நாள் டாக்டர்.”
“அத்தனை நாள் இப்படியேதான் இருக்கப்போறியா?” சம்மதமாய் சுபா தலையசைக்க, ஆனா, “நான் உனக்காகன்னு ரிப்போர்ட்டை மாற்றி எழுத முடியாதேமா?”
“ரிப்போர்ட் மாத்த வேண்டாம் டாக்டர். உண்மையையே சொல்லுங்க. என்ன கொஞ்சம் லேட்டா” என்றாள்.
“புரியலமா?”
“டாக்டர்! பத்துநாள் கழித்து, அதாவது கல்யாணத்துக்கு முந்தின நாள், இன்னொரு செக்கப்கு கூட்டிட்டு வாங்க அப்ப ரிப்போர்ட் தர்றேன், அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு கண் தெரியும்னு சொல்லிருங்க. நான் மேரேஜ் முந்தினநாள் தான் வீட்ல உண்மையை சொல்லப்போறேன்.”
“இதுதான் காரணமா? இதுல வேறெந்த பிரச்சனையும் இல்லையே?”
“நோ டாக்டர்” என உடனே மறுத்து, “அப்படில்லாம் எதுவும் கிடையாது” என்றாள்.
“சரிம்மா உனக்காக பண்றேன். இதுல எதுவும் ப்ராப்ளம் வந்தா அது உன் பொறுப்பு. அதை நீதான் சமாளிக்கணும். இதனால எனக்கோ ஹாஸ்பிடலுக்கோ எந்த பிராப்ளமும் வந்துவிடக்கூடாது” என கொஞ்சம் எச்சரிக்கையும் செய்து, சுபாவின் பெற்றோரை அழைத்து அவள் சொன்னதை அப்படியே சொல்ல...
நன்றி தெரிவித்து வெளியே வந்தவர்கள், உடனே மருமகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, சுந்தரி மகனுக்கு சொன்னார். விவேகானந்தன் சென்னையிலிருப்பதால், அவ்வப்பொழுது மருமகளை வந்து பார்த்துச் சென்றார். ஏனோ மாமனாரின் வரவு சுபாவிற்கு மனதிற்கு இதத்தையே தந்தது.
ப்ரேமும், சுபாவும் வீடு வந்து சேர காலை ஐந்தே முக்கால் ஆனது. அவர்கள் வீட்டினுள் நுழைய ஜீவாவின் போன் வர சரியாக இருந்தது. நேரே தன்னறைக்கு செல்லலாம் என நினைத்து வந்தவள், போன் வந்ததும் பேசிவிட்டு அப்பா, அம்மா நலம் விசாரித்து கொஞ்சிவிட்டு, “அம்மா நான் தூங்கவா?” கேட்ட மகளிடம்...
“இருமா காஃபி தர்றேன் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என்று மகளை கவனித்து, மகனிடமும் சற்று நேரம் படுக்கச்சொல்லி, “தேவி சாயங்காலம் ஹாஸ்பிடல் போனா போதும். இப்ப நல்லா தூங்கு” என்றார் மகளிடம்..
சரியென்று தலையாட்டி தன்னறைக்குள் வந்து கதவை மூடியவள் பெட்டில் வந்து விழுந்தாள். ‘வந்தாயிற்று! கணவனைவிட்டு முழுதாக வந்தாயிற்று. அடுத்தது என்ன?’ என்பதே கேள்விக்குறியாய் இருந்தது. ‘இந்த உண்மை வெளியே தெரியும்போது அப்பா, அம்மா, அண்ணனின் முடிவு என்னவாயிருக்கும். ஜீவாவா? சுபாவா? கேட்டா முதல்ல கோபப்பட்டாலும் கண்டிப்பாக பொண்ணுதான் முக்கியம் சொல்வாங்க’ என நினைத்தாள்.
வரதராஜனின் பெண்ணாக கண்டிப்பான தகப்பனாக மட்டுமே தெரிந்த மகளுக்கு, தெரியாமல் போனது அவரது நாட்டாமை குணம். அதாவது நேர்மையான குணம். நியாயமென்று பட்டால் தவறு செய்தது பெத்த பெண்ணாக இருந்தாலும் தண்டனை நிச்சயமென்பதை அறியவில்லை சுபா.’
கல்யாணம் வரை சமாளித்து அதன்பிறகு தன் பிரச்சனைக்கு தீர்வு காணலாமென்று நினைத்தவள் அப்படியே உறங்க, காலை உணவிற்கு அழைக்க கதவைத் தட்டியபிறகே கண்விழித்து கதவைத் திறந்து, “ஏன்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க?” என்ற கேள்வியோடு வர...
“தேவி நான்தான்னு எப்படித் தெரியும்? கதவைத்தான தட்டினேன். கண் தெரியுதாடா?” முகம் முழுக்க சந்தோஷத்துடன் கேட்க... அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தவள் சட்டென உதடுகடித்து, “இல்லம்மா. உங்க ஹைட் வச்சி நீங்கதான்னு குத்துமதிப்பா சொன்னேன்.”
“அம்மா அந்த குத்துக்கு என்ன மதிப்புன்னு கேளுங்க” என்றான் ப்ரேம்.
“அண்ணா என் பக்கத்துல வாயேன்.”
“எதுக்கு வாண்டட்டா வந்து வாங்கிக்கட்டவா. அதுக்கு அந்த சண்முகம் தான் செட்டாகுவாங்க.”
“சம்முகம் எடு அந்த உருட்டுக்கட்டையை. போடு அவன் மண்டையில” என தாயை உள்ளிழுக்க...
“ஏன்டா எங்கம்மா அழகா சண்முகசுந்தரின்னு வச்ச பெயரை நீ சண்முகம்ன்ற. உன் தங்கச்சி சம்முகம்ன்றா உங்களை!” என கை ஓங்கினார்.
ஓங்கிய கையை பிடித்து, “சம்முகம் ரொம்ப அழகுல்லண்ணா?” தாயை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சுபா.
“இல்லையா பின்ன. என்னோட அம்மாவாச்சே.”
“அடப்பாவி அண்ணா! அப்ப நான் லிஸ்ட்ல இல்லையா?”
“ஹி...ஹி முதல் பிள்ளை நான்தான அந்த அர்த்தத்துல சொன்னேன்.”
“ச்சோ... அதுக்கு ஏன்டி எனக்கு முத்தம் குடுத்த?”
“அது ஜீவா நினைப்பு வந்திருக்கும்மா. அதான் முத்தம் முகம் மாறி வந்திருச்சி.”
“அண்ணா!” என ஒரு விரலால் மிரட்டி, “இதுக்கே இப்படின்னா எப்படி சம்முகம்? வருவா பாருங்க உங்க மருமக அதிரடி ராணி. அவ குடுத்தா இதே வார்த்தை வருதா பார்க்கிறேன்.”
“ஹான்! அவ என்னோட மருமக.”
“ஹேய்! ஹலோ! நான் உங்க பொண்ணு. ஒரு டயலாக் விடுவாங்களே அது என்னண்ணா மறந்திருச்சி?”
“தொப்புள் கொடி உறவு!”
“இதுவும் ஓகேதான். பட், இன்னொன்னு. ஹான்! ரெத்த பந்தம். நான் உங்க ரெத்தம்மா?”
“எதுவாயிருந்தாலும் அவள்தான் என்னோட கடைசிவரை இருக்கப்போறது” என உண்மை நிலவரத்தைச் தாய் சொல்ல.
“சம்முகம் அதுக்குள்ள ஜால்ராவா? ஏன் நான் இங்கயிருந்தா விரட்டி விட்டுருவீங்களா?” என தாயின் எண்ணம் தெரிந்துகொள்ள கேட்டாள்.
“அப்படி எத்தனை நாள் இருப்ப. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு பத்து, பதினைந்து நாள் இருப்பியா? அப்புறம் மருமகன் வீட்டுக்கு போய்த்தான ஆகணும்.”
“ஏன்மா? அதுக்குமேல் இங்கேயே இருக்கேன் சொன்னா?” என தோள்மேல் தலைசாய்த்து விளையாட்டாக கேட்பது போல் கேட்க...
“நீ அப்படி சொல்லமாட்ட. சொன்னா இந்த வீட்டுல இருக்கமாட்ட.”
தாயின் பதிலில் அதிர்ந்தவள், “நான் உங்களுக்கு முக்கியமில்லையா?” என இறங்கிய குரலில் கேட்க... முக்கியம்தான் இல்லன்னு சொல்லமாட்டேன். “எந்த உறவு எங்க இருக்கணுமோ, அங்க இருந்தால்தான் மதிப்பு.”
முதன்முறையாக ‘தாய் வீட்டில் தனக்கென்று ஆதரவு இருக்காதோ? அப்படின்னா அடுத்து நான் என்ன செய்யுறது?’ தனக்குள்ளேயே யோசிக்க ஆரம்பித்தாள்.
“ஆமா. இதென்ன வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டுட்டிருக்க? உனக்கு கிடைச்ச புகுந்த வீட்டு உறவுகள் எல்லாருமே ரொம்ப தங்கமானவங்க. இனி விளையாட்டுக்கு கூட இப்படி கேட்காதே” என தாயாய் கண்டித்தார்.
“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மி தங்கச்சி. ஐம் தாண்டவராயன் பிஎஸ்சி டாப்பர். நல்லாயிருக்கீங்களா? என்னை நியாபகமிருக்கா? கல்யாணத்துக்குப் பிறகு ஒரு போன் கூட பண்ணலையே?” என்று வந்தான் தாண்டவராயன்.
“டேய்! தடிமாடு! வா வா” என்றழைத்தபடி வந்த ராஜன், “அதென்னடா டாப்பர்... டாப்பர்னுட்டு ரொம்ப குதிக்காதடா டாப் கழன்டுக்கப்போகுது.”
‘ஸ்... வந்துட்டாருப்பா! இவ்வளவு நேரம் இங்க சிங்கிளாதான, அம்மாவும், பிள்ளைகளும் சீன் ஓட்டிட்டிருந்தாங்க. அப்பல்லாம் ஆளைக்காணோம். கரெக்டா நான் கலக்கலா என்ட்ரி குடுக்கலாம்னு நினைச்சா, என்னைக் கலாய்க்க இவர் என்ட்ரி குடுக்கிறாரு’ என மனதினுள் பொங்கியவன் வெளியே அமைதியாக நின்றான்.
அதற்குள் சுபா, “நல்லாயிருக்கேன் தாண்டவ்ணா. உங்களையெல்லாம் ரொம்ப நல்லாவே நியாபகமிருக்கு. மறக்கிற ஆளா நீங்க? எத்தனை வருட அண்ணன், தங்கை பந்தம். போன்தான இனிமேல் நேர்லயே பேசிக்கலாம்.”
“ஷப்பா... இந்த வார்த்தையைக் கேட்கிறதுக்காகவே, பாப்பாவை நம்மகூட வச்சிக்கலாம். தாண்டவராயன்ற பெயரைக்கூட டீசன்டா தாண்டவ் சொல்ல கேட்டு எவ்வளவு நாளாச்சி. இதெல்லாம் நம்ம தங்கச்சியால தான் முடியும். ரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி.”
“யுவர் ஆல்வேஸ் வெல்கம் தாண்டவ்ணா.”
“ஆமா. தடிமாடுக்குப் பேரு தாண்டவ். நீ குடுக்கிற இடத்துல நிஜமாகவே தாண்டவம் ஆடிறப்போறோன்” என மகளிடம் சொல்லி, “சாப்பிட வந்தியாடா? ஏன் லேட்டு?” என்று தாண்டவிடம் கேட்டார்.
“ஹ்ம்... அதுக்குத்தான் வந்திருக்கோம்” என்ற தாண்டவராயனுக்குத் தெரியும், எவ்வளவுதான் அவனை கிண்டலடித்தாலும் அவனை கவனிப்பதில் எப்பொழுதும் கவனம் சிதறமாட்டார் ராஜன். முடிந்த அளவு உழைப்பவர்களை தங்களுக்கு முன்னரே கூட சாப்பிட வைப்பது அவரின் நற்பண்புகள்.
அப்பா, அம்மா கிராமத்தில் இருக்க ஒரு டிகிரி முடித்ததோடு சென்னையில் வேலைக்காக வந்தவனை, வேலை வெறுத்து ஒதுக்க, சந்தர்ப்ப வசமாக ராஜனின் கண்ணில்பட, அவனின் நற்குணங்கள் தெரிந்த ராஜன், தானே டிரைவிங் கற்றுக்கொள்ள வைத்து, தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார். நான் படித்தவன் இந்த வேலை செய்யமாட்டேனென்று மமதை எதுவுமில்லாமல், ராஜனின் விசுவாசியானான். சுபாவின் முயற்சியால் கரஸ்பாண்டன்ட் கோர்ஸில் மேற்படிப்பு படித்து முடித்து ராஜனின் கம்பெனியிலேயே வேலையும் செய்கிறான். இருந்தாலும் டிரைவர் வேலையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. மற்ற வேலைக்காரர்களை விட, குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன். சுபாவின் தீவிர நலம் விரும்பி. ஏன்னா அவள் ஒருத்திதான் அவனோட பெயரை டீசன்டாக அழைப்பவள்.
“ சாயங்காலம் பாப்பாவ ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகணும்” என்றதும் சம்மதமாக தலையசைத்துச் சென்றான் தாண்டவ்.
மாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா, அம்மாவுடன் மருத்துவமனை சென்று, டாக்டர்.கேசவை சந்திக்க, சுபாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவர், “எப்பயிருந்துமா கண் தெரியுது?” என்று நேரடியாக கேட்க... அதை எதிர்பார்த்திராதவள் சட்டென்று திணற...
“எங்க டாக்டர் இன்னும் மங்கலாகத்தான் தெரியுதுன்றா” என தாய் சொல்ல... சுபாவைப் பார்த்தவர் பார்வையில் ‘எதற்கிந்தப் பொய்?’ என்ற கேள்வி நிற்க... அதில் தலைகவிழ்ந்தாள் சுபா.
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில இருங்க. செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றதும் ராஜனும், சுந்தரியும் வெளியே சென்றதும்...
“ஏன்மா கண் தெரியும்னு வீட்ல சொல்லல? எத்தனை நாளா தெரியும்?”
“டாக்டர்! உங்களுக்கு?”
“அனுபவஸ்தன்மா. எத்தனை வருஷம், எத்தனை விதமான ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கேன். என்னை ஏமாத்த முடியும்னு தோணுதா?”
“சாரி டாக்டர். ஏமாத்தணும்னு நினைக்கல. எனக்கு ஒன் வீக்கா கண் தெரியும். அண்ணா கல்யாணம் வருது. அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸ் கிஃப்டா எனக்கு கண்ணு தெரியும்னு சொல்லி அசரடிக்கணும்னு நினைச்சிருக்கேன் டாக்டர்.”
“கல்யாணத்துக்கு எத்தனை நாள்மா இருக்கு?”
“இன்னும் பதினைந்து நாள் டாக்டர்.”
“அத்தனை நாள் இப்படியேதான் இருக்கப்போறியா?” சம்மதமாய் சுபா தலையசைக்க, ஆனா, “நான் உனக்காகன்னு ரிப்போர்ட்டை மாற்றி எழுத முடியாதேமா?”
“ரிப்போர்ட் மாத்த வேண்டாம் டாக்டர். உண்மையையே சொல்லுங்க. என்ன கொஞ்சம் லேட்டா” என்றாள்.
“புரியலமா?”
“டாக்டர்! பத்துநாள் கழித்து, அதாவது கல்யாணத்துக்கு முந்தின நாள், இன்னொரு செக்கப்கு கூட்டிட்டு வாங்க அப்ப ரிப்போர்ட் தர்றேன், அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு கண் தெரியும்னு சொல்லிருங்க. நான் மேரேஜ் முந்தினநாள் தான் வீட்ல உண்மையை சொல்லப்போறேன்.”
“இதுதான் காரணமா? இதுல வேறெந்த பிரச்சனையும் இல்லையே?”
“நோ டாக்டர்” என உடனே மறுத்து, “அப்படில்லாம் எதுவும் கிடையாது” என்றாள்.
“சரிம்மா உனக்காக பண்றேன். இதுல எதுவும் ப்ராப்ளம் வந்தா அது உன் பொறுப்பு. அதை நீதான் சமாளிக்கணும். இதனால எனக்கோ ஹாஸ்பிடலுக்கோ எந்த பிராப்ளமும் வந்துவிடக்கூடாது” என கொஞ்சம் எச்சரிக்கையும் செய்து, சுபாவின் பெற்றோரை அழைத்து அவள் சொன்னதை அப்படியே சொல்ல...
நன்றி தெரிவித்து வெளியே வந்தவர்கள், உடனே மருமகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, சுந்தரி மகனுக்கு சொன்னார். விவேகானந்தன் சென்னையிலிருப்பதால், அவ்வப்பொழுது மருமகளை வந்து பார்த்துச் சென்றார். ஏனோ மாமனாரின் வரவு சுபாவிற்கு மனதிற்கு இதத்தையே தந்தது.