• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
14



ப்ரேமும், சுபாவும் வீடு வந்து சேர காலை ஐந்தே முக்கால் ஆனது. அவர்கள் வீட்டினுள் நுழைய ஜீவாவின் போன் வர சரியாக இருந்தது. நேரே தன்னறைக்கு செல்லலாம் என நினைத்து வந்தவள், போன் வந்ததும் பேசிவிட்டு அப்பா, அம்மா நலம் விசாரித்து கொஞ்சிவிட்டு, “அம்மா நான் தூங்கவா?” கேட்ட மகளிடம்...

“இருமா காஃபி தர்றேன் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என்று மகளை கவனித்து, மகனிடமும் சற்று நேரம் படுக்கச்சொல்லி, “தேவி சாயங்காலம் ஹாஸ்பிடல் போனா போதும். இப்ப நல்லா தூங்கு” என்றார் மகளிடம்..

சரியென்று தலையாட்டி தன்னறைக்குள் வந்து கதவை மூடியவள் பெட்டில் வந்து விழுந்தாள். ‘வந்தாயிற்று! கணவனைவிட்டு முழுதாக வந்தாயிற்று. அடுத்தது என்ன?’ என்பதே கேள்விக்குறியாய் இருந்தது. ‘இந்த உண்மை வெளியே தெரியும்போது அப்பா, அம்மா, அண்ணனின் முடிவு என்னவாயிருக்கும். ஜீவாவா? சுபாவா? கேட்டா முதல்ல கோபப்பட்டாலும் கண்டிப்பாக பொண்ணுதான் முக்கியம் சொல்வாங்க’ என நினைத்தாள்.

வரதராஜனின் பெண்ணாக கண்டிப்பான தகப்பனாக மட்டுமே தெரிந்த மகளுக்கு, தெரியாமல் போனது அவரது நாட்டாமை குணம். அதாவது நேர்மையான குணம். நியாயமென்று பட்டால் தவறு செய்தது பெத்த பெண்ணாக இருந்தாலும் தண்டனை நிச்சயமென்பதை அறியவில்லை சுபா.’

கல்யாணம் வரை சமாளித்து அதன்பிறகு தன் பிரச்சனைக்கு தீர்வு காணலாமென்று நினைத்தவள் அப்படியே உறங்க, காலை உணவிற்கு அழைக்க கதவைத் தட்டியபிறகே கண்விழித்து கதவைத் திறந்து, “ஏன்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க?” என்ற கேள்வியோடு வர...

“தேவி நான்தான்னு எப்படித் தெரியும்? கதவைத்தான தட்டினேன். கண் தெரியுதாடா?” முகம் முழுக்க சந்தோஷத்துடன் கேட்க... அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தவள் சட்டென உதடுகடித்து, “இல்லம்மா. உங்க ஹைட் வச்சி நீங்கதான்னு குத்துமதிப்பா சொன்னேன்.”

“அம்மா அந்த குத்துக்கு என்ன மதிப்புன்னு கேளுங்க” என்றான் ப்ரேம்.

“அண்ணா என் பக்கத்துல வாயேன்.”

“எதுக்கு வாண்டட்டா வந்து வாங்கிக்கட்டவா. அதுக்கு அந்த சண்முகம் தான் செட்டாகுவாங்க.”

“சம்முகம் எடு அந்த உருட்டுக்கட்டையை. போடு அவன் மண்டையில” என தாயை உள்ளிழுக்க...

“ஏன்டா எங்கம்மா அழகா சண்முகசுந்தரின்னு வச்ச பெயரை நீ சண்முகம்ன்ற. உன் தங்கச்சி சம்முகம்ன்றா உங்களை!” என கை ஓங்கினார்.

ஓங்கிய கையை பிடித்து, “சம்முகம் ரொம்ப அழகுல்லண்ணா?” தாயை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சுபா.

“இல்லையா பின்ன. என்னோட அம்மாவாச்சே.”

“அடப்பாவி அண்ணா! அப்ப நான் லிஸ்ட்ல இல்லையா?”

“ஹி...ஹி முதல் பிள்ளை நான்தான அந்த அர்த்தத்துல சொன்னேன்.”

“ச்சோ... அதுக்கு ஏன்டி எனக்கு முத்தம் குடுத்த?”

“அது ஜீவா நினைப்பு வந்திருக்கும்மா. அதான் முத்தம் முகம் மாறி வந்திருச்சி.”

“அண்ணா!” என ஒரு விரலால் மிரட்டி, “இதுக்கே இப்படின்னா எப்படி சம்முகம்? வருவா பாருங்க உங்க மருமக அதிரடி ராணி. அவ குடுத்தா இதே வார்த்தை வருதா பார்க்கிறேன்.”

“ஹான்! அவ என்னோட மருமக.”

“ஹேய்! ஹலோ! நான் உங்க பொண்ணு. ஒரு டயலாக் விடுவாங்களே அது என்னண்ணா மறந்திருச்சி?”

“தொப்புள் கொடி உறவு!”

“இதுவும் ஓகேதான். பட், இன்னொன்னு. ஹான்! ரெத்த பந்தம். நான் உங்க ரெத்தம்மா?”

“எதுவாயிருந்தாலும் அவள்தான் என்னோட கடைசிவரை இருக்கப்போறது” என உண்மை நிலவரத்தைச் தாய் சொல்ல.

“சம்முகம் அதுக்குள்ள ஜால்ராவா? ஏன் நான் இங்கயிருந்தா விரட்டி விட்டுருவீங்களா?” என தாயின் எண்ணம் தெரிந்துகொள்ள கேட்டாள்.

“அப்படி எத்தனை நாள் இருப்ப. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு பத்து, பதினைந்து நாள் இருப்பியா? அப்புறம் மருமகன் வீட்டுக்கு போய்த்தான ஆகணும்.”

“ஏன்மா? அதுக்குமேல் இங்கேயே இருக்கேன் சொன்னா?” என தோள்மேல் தலைசாய்த்து விளையாட்டாக கேட்பது போல் கேட்க...

“நீ அப்படி சொல்லமாட்ட. சொன்னா இந்த வீட்டுல இருக்கமாட்ட.”

தாயின் பதிலில் அதிர்ந்தவள், “நான் உங்களுக்கு முக்கியமில்லையா?” என இறங்கிய குரலில் கேட்க... முக்கியம்தான் இல்லன்னு சொல்லமாட்டேன். “எந்த உறவு எங்க இருக்கணுமோ, அங்க இருந்தால்தான் மதிப்பு.”

முதன்முறையாக ‘தாய் வீட்டில் தனக்கென்று ஆதரவு இருக்காதோ? அப்படின்னா அடுத்து நான் என்ன செய்யுறது?’ தனக்குள்ளேயே யோசிக்க ஆரம்பித்தாள்.

“ஆமா. இதென்ன வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டுட்டிருக்க? உனக்கு கிடைச்ச புகுந்த வீட்டு உறவுகள் எல்லாருமே ரொம்ப தங்கமானவங்க. இனி விளையாட்டுக்கு கூட இப்படி கேட்காதே” என தாயாய் கண்டித்தார்.

“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மி தங்கச்சி. ஐம் தாண்டவராயன் பிஎஸ்சி டாப்பர். நல்லாயிருக்கீங்களா? என்னை நியாபகமிருக்கா? கல்யாணத்துக்குப் பிறகு ஒரு போன் கூட பண்ணலையே?” என்று வந்தான் தாண்டவராயன்.

“டேய்! தடிமாடு! வா வா” என்றழைத்தபடி வந்த ராஜன், “அதென்னடா டாப்பர்... டாப்பர்னுட்டு ரொம்ப குதிக்காதடா டாப் கழன்டுக்கப்போகுது.”

‘ஸ்... வந்துட்டாருப்பா! இவ்வளவு நேரம் இங்க சிங்கிளாதான, அம்மாவும், பிள்ளைகளும் சீன் ஓட்டிட்டிருந்தாங்க. அப்பல்லாம் ஆளைக்காணோம். கரெக்டா நான் கலக்கலா என்ட்ரி குடுக்கலாம்னு நினைச்சா, என்னைக் கலாய்க்க இவர் என்ட்ரி குடுக்கிறாரு’ என மனதினுள் பொங்கியவன் வெளியே அமைதியாக நின்றான்.

அதற்குள் சுபா, “நல்லாயிருக்கேன் தாண்டவ்ணா. உங்களையெல்லாம் ரொம்ப நல்லாவே நியாபகமிருக்கு. மறக்கிற ஆளா நீங்க? எத்தனை வருட அண்ணன், தங்கை பந்தம். போன்தான இனிமேல் நேர்லயே பேசிக்கலாம்.”

“ஷப்பா... இந்த வார்த்தையைக் கேட்கிறதுக்காகவே, பாப்பாவை நம்மகூட வச்சிக்கலாம். தாண்டவராயன்ற பெயரைக்கூட டீசன்டா தாண்டவ் சொல்ல கேட்டு எவ்வளவு நாளாச்சி. இதெல்லாம் நம்ம தங்கச்சியால தான் முடியும். ரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி.”

“யுவர் ஆல்வேஸ் வெல்கம் தாண்டவ்ணா.”

“ஆமா. தடிமாடுக்குப் பேரு தாண்டவ். நீ குடுக்கிற இடத்துல நிஜமாகவே தாண்டவம் ஆடிறப்போறோன்” என மகளிடம் சொல்லி, “சாப்பிட வந்தியாடா? ஏன் லேட்டு?” என்று தாண்டவிடம் கேட்டார்.

“ஹ்ம்... அதுக்குத்தான் வந்திருக்கோம்” என்ற தாண்டவராயனுக்குத் தெரியும், எவ்வளவுதான் அவனை கிண்டலடித்தாலும் அவனை கவனிப்பதில் எப்பொழுதும் கவனம் சிதறமாட்டார் ராஜன். முடிந்த அளவு உழைப்பவர்களை தங்களுக்கு முன்னரே கூட சாப்பிட வைப்பது அவரின் நற்பண்புகள்.

அப்பா, அம்மா கிராமத்தில் இருக்க ஒரு டிகிரி முடித்ததோடு சென்னையில் வேலைக்காக வந்தவனை, வேலை வெறுத்து ஒதுக்க, சந்தர்ப்ப வசமாக ராஜனின் கண்ணில்பட, அவனின் நற்குணங்கள் தெரிந்த ராஜன், தானே டிரைவிங் கற்றுக்கொள்ள வைத்து, தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார். நான் படித்தவன் இந்த வேலை செய்யமாட்டேனென்று மமதை எதுவுமில்லாமல், ராஜனின் விசுவாசியானான். சுபாவின் முயற்சியால் கரஸ்பாண்டன்ட் கோர்ஸில் மேற்படிப்பு படித்து முடித்து ராஜனின் கம்பெனியிலேயே வேலையும் செய்கிறான். இருந்தாலும் டிரைவர் வேலையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. மற்ற வேலைக்காரர்களை விட, குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன். சுபாவின் தீவிர நலம் விரும்பி. ஏன்னா அவள் ஒருத்திதான் அவனோட பெயரை டீசன்டாக அழைப்பவள்.

“ சாயங்காலம் பாப்பாவ ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகணும்” என்றதும் சம்மதமாக தலையசைத்துச் சென்றான் தாண்டவ்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா, அம்மாவுடன் மருத்துவமனை சென்று, டாக்டர்.கேசவை சந்திக்க, சுபாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவர், “எப்பயிருந்துமா கண் தெரியுது?” என்று நேரடியாக கேட்க... அதை எதிர்பார்த்திராதவள் சட்டென்று திணற...

“எங்க டாக்டர் இன்னும் மங்கலாகத்தான் தெரியுதுன்றா” என தாய் சொல்ல... சுபாவைப் பார்த்தவர் பார்வையில் ‘எதற்கிந்தப் பொய்?’ என்ற கேள்வி நிற்க... அதில் தலைகவிழ்ந்தாள் சுபா.

“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில இருங்க. செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றதும் ராஜனும், சுந்தரியும் வெளியே சென்றதும்...

“ஏன்மா கண் தெரியும்னு வீட்ல சொல்லல? எத்தனை நாளா தெரியும்?”

“டாக்டர்! உங்களுக்கு?”

“அனுபவஸ்தன்மா. எத்தனை வருஷம், எத்தனை விதமான ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கேன். என்னை ஏமாத்த முடியும்னு தோணுதா?”

“சாரி டாக்டர். ஏமாத்தணும்னு நினைக்கல. எனக்கு ஒன் வீக்கா கண் தெரியும். அண்ணா கல்யாணம் வருது. அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸ் கிஃப்டா எனக்கு கண்ணு தெரியும்னு சொல்லி அசரடிக்கணும்னு நினைச்சிருக்கேன் டாக்டர்.”

“கல்யாணத்துக்கு எத்தனை நாள்மா இருக்கு?”

“இன்னும் பதினைந்து நாள் டாக்டர்.”

“அத்தனை நாள் இப்படியேதான் இருக்கப்போறியா?” சம்மதமாய் சுபா தலையசைக்க, ஆனா, “நான் உனக்காகன்னு ரிப்போர்ட்டை மாற்றி எழுத முடியாதேமா?”

“ரிப்போர்ட் மாத்த வேண்டாம் டாக்டர். உண்மையையே சொல்லுங்க. என்ன கொஞ்சம் லேட்டா” என்றாள்.

“புரியலமா?”

“டாக்டர்! பத்துநாள் கழித்து, அதாவது கல்யாணத்துக்கு முந்தின நாள், இன்னொரு செக்கப்கு கூட்டிட்டு வாங்க அப்ப ரிப்போர்ட் தர்றேன், அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு கண் தெரியும்னு சொல்லிருங்க. நான் மேரேஜ் முந்தினநாள் தான் வீட்ல உண்மையை சொல்லப்போறேன்.”

“இதுதான் காரணமா? இதுல வேறெந்த பிரச்சனையும் இல்லையே?”

“நோ டாக்டர்” என உடனே மறுத்து, “அப்படில்லாம் எதுவும் கிடையாது” என்றாள்.

“சரிம்மா உனக்காக பண்றேன். இதுல எதுவும் ப்ராப்ளம் வந்தா அது உன் பொறுப்பு. அதை நீதான் சமாளிக்கணும். இதனால எனக்கோ ஹாஸ்பிடலுக்கோ எந்த பிராப்ளமும் வந்துவிடக்கூடாது” என கொஞ்சம் எச்சரிக்கையும் செய்து, சுபாவின் பெற்றோரை அழைத்து அவள் சொன்னதை அப்படியே சொல்ல...

நன்றி தெரிவித்து வெளியே வந்தவர்கள், உடனே மருமகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, சுந்தரி மகனுக்கு சொன்னார். விவேகானந்தன் சென்னையிலிருப்பதால், அவ்வப்பொழுது மருமகளை வந்து பார்த்துச் சென்றார். ஏனோ மாமனாரின் வரவு சுபாவிற்கு மனதிற்கு இதத்தையே தந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
நாட்கள் வேகமாய் உருண்டோட திருமண நாளிற்கு சில தினங்களே இருக்க, ப்ரேம்-சாதனாவின் காதல் தூதை செல்போன் சரியாகவே செய்தது. ஆனால், ஜீவா மனைவிக்கு அனுப்பிய தூதுதான் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. வந்த தூதுகளையெல்லாம் துரத்தியடிக்கும் வேலையை சுபா சுபமாகவே செய்தாள்.

ஜீவா குழப்பத்திலாழ்ந்தான். ஏன் என்ற எண்ணமும், அவனின் குழப்பங்களும் திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு ராஜ் மூலமாக முடிவுக்கு வந்தது. ஆனால், காரணம்தான் புரியாமல் குழம்பினான் ஜீவா.

தங்கையின் திருமணத்திற்கு தனக்கான பிரத்தியேகமான பரிசு வாங்க கிளம்பி அங்கிருந்த பெரிய மால்கு சென்றவனை, தற்செயலாக ராஜ் பார்த்து சிரித்தபடி ஜீவாவினருகில் வந்தான். என்ன தைரியமிருந்தால் என்னைப் பார்த்துச் சிரிச்சதுமில்லாமல், நெருங்கி வேற வர்றான். இவன்கிட்டப் பேசினால் தன்னுடைய கோபத்தை கண்ட்ரோல் செய்ய முடியாதென்று எண்ணியவனாய் விலகிச்செல்ல...

ஜீவாவின் எண்ணத்தை உணர்ந்தவனாய் அவனெதிரில் வந்து நின்றான் ராஜ். அவன் முகம் பார்க்காமல் திரும்பவும் ஜீவா விலக... “சார் ப்ளீஸ் ஒரு பைஃவ்; மினிட்ஸ் உங்களோட பேசணும். தெரியும் உங்க கோபம் என்மேல எவ்வளவு இருக்குதுன்னு” என்ற ராஜ் குரலில் அவ்வளவு வறுத்தம்.

“அதான் தெரியுதுல்ல. உன்மேல கொலை வெறியில இருக்கேன் வம்பு பண்ணாம கிளம்பிடு. பப்ளிக்ல பிரச்சனை வேண்டாம்னு பார்க்கிறேன்” என்று கோபத்தோடு கர்ஜித்தவனை, அதே சிரித்த முகத்தோடு பார்த்தான் ராஜ்.

“என்னடா சிரிக்கிற? இவ்வளவு தைரியமாகவும் என்னெதிர்ல வந்து நிற்கிற?”

“சாரி சொல்றதுக்கு எதிர்ல வந்துதான் சார் ஆகணும்” என்றான் அவனும் அசராமல்.

“உன்னோட சாரி எனக்குத் தேவையில்லை?”

“ஆனா, எனக்கு உங்களோட மன்னிப்பு கண்டிப்பா தேவை சார். இனி என்னால எந்தப் பிரச்சனையும் உங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வராது. சாதனாகிட்ட சாரி கேட்டேன் சொல்லிருங்க. அப்படியே வாழ்த்துச் சொன்னேன்னும் சொல்லிருங்க” என நடக்க ஆரம்பித்தான்.

“ஏய்! நில்லு சாதனாவுக்கு கல்யாணம்னு உனக்கெப்படி தெரியும்?”

“உங்க ஒஃய்ப் சொன்னாங்க சார். அவங்கதான் சுபான்னு தெரியாம உங்களைப் பத்தி தப்பா பேசி வாங்கிக் கட்டிக்கிட்டேன். நீங்க ரொம்ப நல்லவர் சார். கண்ணு தெரியாத பொண்ணுக்கு கண்ணாயிருந்து பார்த்துப்பேன்னு சொன்னதுமில்லாம, அவங்களுக்கு திரும்பவும் பார்வை வரவச்சிருக்கீங்க. சிரித்தபடியே அப்படியே கண்ணால எரிக்குறாங்க சார் உங்க ஒய்ஃப். உங்க மேரேஜ் லைஃப் காலத்துக்கும் நீடிச்சி, நீங்க ரெண்டுபேரும் ரொம்ப ஹேப்பியா இருக்கணும் சார். எதுக்காகவும், யார்கிட்டயும் உங்களை விட்டுக்குடுக்காம பேசுறது, உங்கமேல அவங்களுக்கிருக்கிற காதலைச் சொல்லுது. வாழ்த்துக்கள் சார். ஒரு ப்ரண்டா என்னை மன்னிச்சி எப்பவாவது நாம சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைச்சா நின்னு ஒரு வார்த்தை பேசுங்க சார். அது போதும் எனக்கு. நான் வர்றேன்” என்று சென்றான் ராஜ்.

ராஜ் சொல்லச் சொல்ல தன் அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் நின்றிருந்தவன், அவன் சென்றதும், ‘தேவிக்கு கண் தெரியுமா? எப்போதிருந்து? ஏன் மறைச்சா? யாரோ ஒரு மூணாவது மனுஷன் சொல்லி கட்டின புருஷனுக்குத் தெரியுது. ஏன் என்கிட்ட சொல்லல?’ கண்ணை கட்டிக்கொண்டு வந்தது ஜீவாவிற்கு.

‘ஒரு வேளை சர்ப்ரைஸா சொல்லலாம்னு நினைச்சிருப்பாளா? சர்ப்ரைஸ்னா இத்தனை நாளா எப்படி முடியும்? யாருக்குமே இதுவரை தெரியலையே. அப்ப அந்த கண் செக்கப்ல தெரிஞ்சிருக்குமே எப்படி மிஸ்ஸாச்சி. இல்ல இவன் பொய் சொல்றானா? இல்லையே இவன் பொய் சொல்லல. அவன் கண் உண்மை பேசுது. பேச்சில தெளிவிருக்கு.’ உடனே மாமனாருக்கு போன் செய்து மருத்துவமனையில் நடந்ததை விசாரிக்க, மகளின் மேலுள்ள அக்கறையில் என்பதால் அவர் சொல்ல, நடந்ததை ஒருவாறு யூகித்தான் ஜீவா.

திருமணத்திற்கு முந்திய தினம் சென்னை வந்திறங்கி சிறிது நேரத்தில் தாயிடம் நண்பனைப் பார்க்கப்போவதாக அனுமதி கேட்டு, ஹாஸ்பிடல் வந்து டாக்டரிடம் விசாரிக்க...

“என்ன ஜீவா இப்ப ஹேப்பியா? உங்க ஒய்ஃப் உங்ககிட்ட சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் அன்னைக்கே சொல்லலாம்னு கேட்டேன். எனக்கு ஒரு வாரமா கண் தெரியும், சஸ்பென்ஸா வச்சிருக்கேன்னு சொல்லி, என்னையும் கொஞ்சம் சமாளிக்கச் சொன்னாங்க. நீங்க ரிப்போர்ட் வாங்கத்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்றவர் எழுந்து சென்று சுபாவின் மெடிக்கல் ரிப்போர்ட்ஸை அவனிடம் கொடுத்தார்.

மனதினுள் பெரிய அடியாக இருந்தாலும், ரிப்போர்ட்டை வாங்கியவன் அவளை விட்டுக்கொடுக்காமல், “ஆமா டாக்டர் ரிப்போர்ட் வாங்கிட்டு, ஒண்ணு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். இனிமேல் கண்ணுக்கு எதுவும் ப்ராப்ளம் வராதே?” என சற்று கவலையுடனும் கேட்டான்.

“கண்டிப்பா வராதுப்பா. அதிகமா வெளிச்சம் பார்க்கிறது, கொஞ்ச நாளைக்கு கம்மியா இருந்தா போதும். அதுவும் போகப்போக சரியாகிடும்.”

“தேங்க்யூ டாக்டர்” என்று அவரிடமிருந்து விடைபெற்று வந்தவன், ‘சஸ்பென்ஸ் இதுவரைக்கும் சொல்லல. வீட்லயிருந்து வர்றதுக்கு ஒன் வீக் முன்னாடியே பார்வை வந்திருக்கு. எப்பயிருந்து தெரிந்திருக்கும்?’ என யோசித்தவனுக்கு, அந்த மழைநாள் நினைவு வர, அதைத் தொடர்ந்த சம்பவங்கள்... சட்டென்று மூளையில் மின்னல் வெட்டியது ராஜ்.

‘எஸ் அன்னைக்கே அவளுக்கு கண் தெரிஞ்சிருக்கு. அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தன்னிடம் ஒரு விலகல். ஏன்? அவனைத்தான் அவளுக்கு பிடிக்காதே. ஒரு வேளை அவனை அந்த ராஜை தேவிக்கு பிடித்திருக்குமோ? சே... சே... என்னடா ஜீவா உன்னோட ஒய்ஃப் பற்றி உனக்குத் தெரியாது?” மனம் கேள்வி கேட்டது.

ஜீவா மறந்த ஒன்று மனைவியிடம் இன்னும் உண்மையைச் சொல்லவில்லை. அதனால், கணவன் என்று யாரை அந்த நிமிடம் நினைத்திருப்பாள் என்பதை மறந்திருந்தான். அது நினைவு வந்திருந்தால், ஒரு வேளை மனைவியை சமாதானப் படுத்தியிருப்பானோ என்னவோ! சென்னை சென்ற பின்னும் கூட மனைவி போனில் பேசுவதே அரிது. என்றாவது சந்தர்ப்பவசமாக போன் பேசினாலும், ஒரு சுவாரசியமில்லாமல் எப்படியிருக்கீங்க? சாப்பிட்டீங்களா? என்ற ஃபார்லமலான கேள்விகளே வரும். மனைவி மீதான குழப்பத்துடனேயே வீடு வந்து சேர்ந்தான்.

“எங்கடா போயிருந்த?” என்ற தந்தையின் கேள்விக்கு, “எங்க போனாலும் சொல்லிட்டு போகணுமா டாட்? நான் எங்கேயோ போயிட்டு வர்றேன்” என்று மனைவியின் மேலுள்ள எரிச்சலை அவரிடம் காட்டினான்.

“ஜீவா என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா பேசுற? எதாவது ப்ராப்ளமா? கையில எதோ ஃபைலோட வந்திருக்கியே. அதான் என்னதுன்னு கேட்டேன்” என அவனிடம் தன்மையாகப் பேசினார்.

“ஐம் சாரி டாட். ஐம் ஸோ சாரி. ஏதோ தெரியாம, யார் மேலயோ உள்ள கோபத்தை உங்ககிட்டப் போயி” என கண் கலங்கியவனை... தன்னுடன் சேர்த்தணைத்து, “நீ இப்படியெல்லாம் இருந்ததில்லையேடா? தேவியோட எதுவும் பிரச்சனையா?”

“இல்ல டாட். நான் ஏதோ...” திணறியவனை, “சரி மண்டபத்துக்கு கிளம்பணும். அதுக்கும் முன்னாடி கோவில் போயி பூஜை பண்ணனும்னு அம்மா சொன்னாங்க. தேவியும் வரணும்” என்றார்.

“வேண்டாம் டாட். அவளுக்கு பார்வை அரைகுறையா தான் தெரியுது. கல்யாண டைம்ல எதுலயாவது இடிச்சிக்கிட்டாள்னா? நாம அங்க போயே பார்த்துக்கலாம்” என்றான் மனைவியைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை சொல்லாமல்.

“நீ சொல்றதும் சரிதான்” என ஒத்துக்கொண்டு, தாய் தங்கை வந்ததும் கோவிலுக்குச் சென்று, மற்றவர்கள் மனதில் மகிழ்ச்சியுடனும், ஜீவா மனதில் குழப்பத்துடனும் திருமண மண்டபம் சென்றார்கள்;.

மண்டபம் வந்தும் மனைவி கண்ணில் படவில்லையே என நினைத்தவனின் எண்ணம் புரிந்தவராக அருகில் வந்த சுந்தரி, “தேவி தலைவலின்னு வீட்டுலயிருக்கா. ரிசப்ஷன் ஆரம்பிக்கும் போது கார் அனுப்பிவிடுங்கம்மான்னு சொல்லியிருக்கா. வேணும்னா நீங்க வீட்டுக்குப்போயி பார்க்குறீங்களா?”

“இல்லத்தை நான் இங்க வந்ததும் பார்த்துக்கறேன். மண்டபத்துல வேலையிருக்கு. அதையும் பார்க்கணும். இல்லன்ன யாராவது ஏதாவது சொல்லுவாங்க” என்றான் இடையிட்டு.

சரியாக வரவேற்புக்கு வந்த மனைவியிடம், சற்று நேரம் சாதாரண நலவிசாரிப்புகள் விசாரித்து தனியே வந்தவன், வைத்தகண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பார்வையில் என்னயிருந்தது? என சுபா குழம்பித்தான் போனாள். அவனின் பார்வை பாசத்திலோ, நேசத்திலோ இருந்ததுபோல் தெரியவில்லை! மாறாக ஒரு குற்றம் சாட்டும் பார்வை! தவறிழைக்காமல் ஏனிந்த தண்டனையென்ற பார்வை! ஏனிந்த பாராமுகம் என சற்று ஏக்கத்துடன் தன்னைத் தொட்ட பார்வை!

அந்தப் பார்வையைக் காண முடியாமல், அவளினுள் ஒரு தடுமாற்றம். ‘ஏன் இப்படிப் பார்க்கிறான்? ஒருவேளை போனில் சரியாகப் பேசவில்லையென்ற கோபமாக இருக்குமோ?’ மறந்தும் உண்மை தெரிந்திருக்குமோ? என எண்ணவில்லை சுபா. அவனைக் கவனியாதவள் போல் கணவனைத் தாண்டிச் சென்றாள்.

அவள் எங்கு சென்றாலும் ஜீவாவின் பார்வை அவளைச் சுற்றியே வந்தது. யாருமறியாத நேரம் பார்த்து நடப்பதும், யாராவது வந்தால் சற்று தடுமாறுவது போல் நடப்பதும், ‘ஏனிந்த நாடகம் தேவி?’ என அவளின் செய்கையில் அவனுக்கு மன வருத்தமே மிஞ்சியது. ‘யாருக்காக நடிக்கிறாய்? என்னை விலக்கவா? விலக்க நான் செய்த தவறென்ன?’

ஏனோ அவள் மேலிருந்த கோபம் வருத்தமாக மாறி அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. மனைவியின் உடல்மெலிவு அவன் கண்ணுக்குத் தப்பவில்லை. தன்னையும் வருத்திக் கொண்டிருக்கிறாள் என்றே தோன்றியது. திருமணம் முடிந்ததும் நேரடியாகப் பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று முடிவு செய்தான்.

முடிந்தளவு கணவனின் பார்வையில் படாமலேயே இருந்தாலும், மற்றவர்கள் அவளையும், மாமியார் வீட்டினரையும் தவறாக எண்ணாதிருக்க மாமியார், நாத்தனாருடன் அதிக நேரமிருந்தாள். அதிக நேரம் மண்டபத்திலேயே இருந்த ஜீவா, ஒரு மணிபோல் வீட்டிற்குச் சென்றவனுக்கு மனைவியின் பாராமுகம் வந்து தூக்கத்தைக் கெடுத்தது.

‘எப்படி? என்னைவிட்டு உன்னால் விலகிப்போக முடியுது சுப்பு. உன்னைப் பார்த்த நொடி முதல் இந்த நிமிடம் வரை உன் கண்விழிப் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் என்னை, உன் கண்கொண்டு காண மனமில்லையா தேவி!’ என சுபாவைக் கண்ட அந்த நிமிடத்திற்கு அவனின் எண்ணங்கள் பயணமானது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top