- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
14
மணி சென்றதும் நிறைய குழப்பங்கள். “என் பொண்ணு ஹரிப்ரியா” என்று சிவராமன் சொன்னபோது கொஞ்சம் அதிரத்தான் செய்தான். அதன்பின் தங்கள் வேலைகளை முடித்து மதுரைக்கு மணியை அனுப்பிவிட்டு, தீபாவின் திருமணத்திற்கு செல்லும் வழியில் ராசியைச் சந்தித்தது ஒரு இனிய எதிர்பாராத சந்திப்பு. அதைவிட அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த, வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் தன் குடும்பத்தில் ஒருத்தியாகி பத்து வருடங்களாக சிரிப்பையே மறந்துபோன தன் அக்காவை நீர் வர சிரிக்க வைத்தவள் தன்னுள் பெருவெள்ளமாக நுழைவதை உணர்ந்தான்.
என்னதான் வேண்டாமென்று கண்களுக்கு தடைவிதித்த போதும் அவளைவிட்டு கண்கள் நகர மறுத்தன. அவனையும் மீறி ஒரு சக்தி போ அவளிடம் பேசு என்பதுபோல் ஒரு உந்துதல் கொடுத்தது. அவள் எங்கு தப்பாக நினைப்பாளோ என்றெண்ணுகையில் சில வினாடிகளேனும் தன்னையே பார்த்த அந்த விழிகள், ‘எப்படி? எப்படி திருமணமான ஒரு பெண், அதுவும் ராசி.. இன்னொரு ஆணை அந்த மாதிரி அர்த்தப்பார்வை பார்ப்பாள். அவளையும் மீறி என்றாலும் உரிமையாக அடிப்பாளா?’ சரத்தினால் ராசிக்குத் திருமணமானதை நம்ப முடியவில்லை. அதே நேரம் ‘ஹரிப்ரியா’ என்ற பெயர் சற்று தள்ளி நிறுத்தியது. அவள் திருமணமானவள். இனி அவளை வேறு மாதிரி பார்க்கவோ, பேசவோ கூடாது என நினைக்கையிலேயே “டாம்” என்ற பெயர் போனில் ஒளிர கண்கள் விரிந்தது சரத்திற்கு.
‘டாம்!’ இதுதான் ராசிக்கு அவனிட்ட புனைபெயர். அவன் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு வம்பை விலைக்கு வாங்கியவளுக்காக அந்த நிமிடம் தோன்றிய பெயர்தான் இது. முகம் புன்னகையை தத்தெடுக்க, விரல்கள் ஆன் ஆப்சனை தேய்த்து காதிற்கு கொண்டு சென்று, ஹலோ சொல்ல வைத்தது.
“ஹலோ! சரத் சார் பிஸியா இருக்கீங்களா? இல்லன்னா டூ மினிட்ஸ் பேசலாமா?” என்றாள் வேகமாக.
“எதுக்கு நேத்து காலையில நான் லூசுன்னு சொன்னதுக்கு இன்னைக்கு சண்டை போடுறதுக்கா?” தான் நினைத்ததை எல்லாம் மறந்து அவளை வம்பிழுக்க...
“ஐயோடா! எனக்கு வேற வேலையில்ல பாருங்க. என்னை என்ன சண்டைக்கு அலையுறவன்னு நினைச்சீங்களா?” என்றாள் வேகமாக.
“நினைக்கலமா. நிச்சயமாகத்தான் சொல்றேன். நம்மளோட ஒவ்வொரு சந்திப்பையும் யோசிச்சிப் பாரு எதாவது ஒரு கலாட்டா நடந்திருக்கும். மேக்சிமம் நீ பண்ணியிருப்ப, இல்லன்னா வேற யாராவது பண்ணியிருப்பாங்க” என்றான்.
“உங்களை..” என்று ராசி பல்லைக்கடிக்கும் சத்தம் அவனுக்கு கேட்க, சட்டென்று சிரித்தவன் “ரொம்ப நேரம் பல்லைக் கடிக்காத, சரி என்ன விஷயம் சொல்லு?” என்றான்.
“என்ன விஷயமா? இப்படி திடீர்னு கேட்டா என்ன சொல்லுவேன். நீங்க நான் பேசவந்ததை மறக்க வச்சி டாபிக்கை மாத்திட்டீங்க. ஒன்மினிட் வெய்ட் பண்ணுங்க நான் யோசிக்கிறேன், ஹான்.. நியாபகம் வந்திருச்சி தேங்க்யூ.”
“ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
“ஏன்னா... எல்லாத்துக்கும். கலாட்டாவிலிருந்து என்னை காப்பாத்தினதுக்கு! ஒரு நல்ல பேமிலியை அறிமுகப்படுத்தியதுக்கு! எங்க வீட்டுப் பிரச்சனையை சால்வ் பண்ணினதுக்கு! அப்புறம்” என்று இழுத்து, “எனக்கு மதுரை டூ சென்னை டிரைவர் வேலை பார்த்ததுக்கு” என்றாள் குறும்பாக.
“உன்னை.. கையில மாட்டுன பாரு.”
“ஹா..ஹா அதான போன்ல சொல்றோம். இல்லன்னா நேர்ல வருவோம்ல.”
“நல்லா பேசக் கத்துட்டிருக்க.”
“அது கூடப்பிறந்தது.”
தன் கலாட்டாவைக் கைவிட்டவன், “நீ எப்படியிருக்க ராசி” என்று மென்மையான குரலில் கேட்க... அந்த குரலில் சில வினாடிகள் தடுமாறி, “ம்... நல்லாயிருக்கேன். நீங்க?” என்ற கேள்வி அவளையறியாமல் வந்தது.
“நானா.. எனக்கென்ன தனிக்காட்டு ராஜா.”
|ஓ.. டிபன் சாப்பிட்டாச்சா?|
“ம்கூம்... சாப்பிடலை” என்றான் அலட்சியமாக.
“ஏன்?” என்ற அவள் குரலின் இளக்கம் அவனை உருக வைத்ததோ, “ஹ்ம்... எனக்கென்னமா நேரத்துக்கு சாப்பிடு தூங்குன்னு சொல்ல அம்மாயிருக்காங்களா இல்ல ஒய்ஃப் தான் இருக்காளா. பசிச்சா ஏதோ கிடைச்சதை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டிருக்கேன்” என்றான் மனதின் வெறுமையை வார்த்தையில் காட்டி.
ஏனோ அவளுள்ளும் வருத்தம் மேலிட்டு அவன்மேல் இரக்கம் சுரந்தது. “எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும்ங்க” என்றாள் அவனுக்கு ஆறுதலாய்.
“சரியா போயிரும் தான?” என்ற சரத்தின் ஏக்ககுரலில்...
“ம்... சரியாகிரும். நான் வச்சிரவா?” என ஏகத்துக்கும் குரல் இறங்க கேட்டவளிடம்...
“அவ்வளவுதானா?” என்றான் குழைவாக.
“எது?” என புரியாமல் கேட்க,
“இல்ல. பேசுனது அவ்வளவுதானான்னு கேட்டேன்.”
“ம்... வச்சிடுறேன்” என்று போனை காதிலிருந்து எடுத்தும் ஆஃப் பண்ணாமலேயே பார்த்திருக்க... சரத்தும் போனையே பார்த்திருந்தான். திருமணமான பெண்ணிடம் இப்படிப் பேசுவது தனக்கு நல்லதல்ல என்று தோன்றிய போதும், அவளும்தான் ஏன் அப்படிப் பேசினால் என்பது புரியாத புதிராகவே இருந்தது. அப்ப கல்யாணம் நடந்தது உண்மையில்லையோ! மனம் திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே போக, ‘மனம் ஒரு குரங்குன்றது சரியாகத்தான் இருக்கு. ஹ்ம் வேலையைப் பாருடா’ என மனம் சொல்ல, அவளை அவளின் அப்பாவுடன் எப்படி சேர்த்து வைப்பதென்று யோசிக்கலானான். அதிலுள்ள சிக்கலை அறியாமல்.
போனையே பார்த்திருந்த ராசிக்கோ, 'போன் எதற்காக செய்தேன்’ என்ற குழப்பம். முந்தின நாள் இரவு நான்கு நாட்களாக அவன் செய்த உதவிக்கு நன்றி சொல்லவில்லையே என தன்னையே கடிந்தவள், காலையில் நேரில் சென்று சொல்லிவிட எண்ணியிருந்தாள். காலையில் ஆஃபீஸ் கிளம்பி போனை எடுக்கையில் தன்னாலேயே நம்பர் டச் செய்து “ஜெர்ரி” என்ற நேமை தட்டினாள். “ஆம் சரத்திற்கு ராசி டாம் என்றால், ராசிக்கு சரத் ஜெர்ரி.” ‘தான் எதாவது அதிரடியாக செய்யும் போதெல்லாம், அதை தடுக்க வந்து தானாகவே வாங்கி கட்டி எஸ்கேப்பாவதால் அந்த பெயரில் சேவ் பண்ணியிருந்தாள்.’
பெயரைக் கண்டதும் புன்னகை முகமாக பேச ஆரம்பித்த பொழுது வாயாடியவள், அவனின் ‘எப்படியிருக்க?’ என்ற கிறங்கிய குரலில் இவள் மனமும் இளகியது. அவனின் தனிமை இவளின் மனதை வாட்டியதோ! ‘நான் இருக்கிறேன்’ என சொல்லத் திறந்த மனதை கட்டுப்படுத்தி ‘போனை வச்சிரவா’ என்றாள். ‘அவ்வளவுதானா?’ என்ற ஏக்கக் குரலில் மொத்தமாக அவன்பால் சரிந்த மனதை தடுக்க மனமில்லை ராசிக்கு. எங்கு தன்னை அவன் அடையாளம் கண்டு விடுவானோ, கண்டால் உருகும் தன் மனதை எண்ணியே பயம்.
என்னதான் இல்லை இல்லையென்ற போதிலும் திருமணம் என்று ஒன்று தனக்கு நடந்திருப்பது உண்மைதானே. அதை சரியான கோணத்தில் சிந்திக்க ஒரு ஆணால் முடியுமா? சரத் அப்படியெல்லாம் நினைக்கிற ஆளில்லை என்பது தெரியும். இருப்பினும் சூழ்நிலைகள் தானே மனிதனின் மனதை மாற்றும் வல்லமை வாய்ந்தது. ‘நோ இது தப்பு. இனிமேல் சரத்துடன் பழகுவதை அடியோடு குறைக்க வேண்டும்’ என்றவளுக்குள் ‘குறைத்து விடலாமா? எப்படி முடியும்?’ என்றது அவளின் மனமே அவளுக்கு எதிரியாய்.
அப்படியே கிளம்பி ஆஃபீஸ் செல்லும்பொழுது, சரத்தின் ஆஃபீஸ் பக்கம் திரும்பாதே என மூளை கட்டளையிட்டது. ஆனால் “யுவர்ஸ் ஃப்ரண்ட்” வந்ததும் தன்னாலேயே தலை திரும்பியது ராசிக்கு. அங்கு வெளியே அவனில்லை என்றதும் ஒருபுறம் நிம்மதியாகவும், இன்னொருபுறம் ஏமாற்றமாகவும் இருந்தது.
அதே நேரம் வேலைக்கு கிளம்பிய சரத் அதை கண்டும்கொண்டான். ‘அதென்ன பார்த்துட்டு பார்க்காத மாதிரி போறது.’ யோசனைக்குச் சென்ற மனதை நடைமுறைக்கு இழுத்து வந்து பெருமூச்செடுத்துக் கிளம்பும்போதே, ‘ராசியைப் பற்றி சிவராமனிடம் சொல்லிவிடலாமா அல்லது அவள் மனதில் அப்பாவின் மேலுள்ள அபிப்ராயத்தைத் தெரிந்து அதன்பின் பேசலாமா?’ என யோசனையிலாழ்ந்தான்.
ஆஃபீஸிற்கு வந்த மணி நண்பனின் யோசனை முகத்தை ஆராயச்சியாகப் பார்த்து, “என்ன யோசனை? அதுவும் வாசல்ல வச்சி. இன்னும் கிளம்பலையா நீ?”
“இல்லடா. ராசி கேஸ்தான் குழப்பமா இருக்கு. ராசி கிடைச்சிட்டதை அவங்கப்பாகிட்ட சொல்லவா... இல்ல ராசிக்கு அவங்கப்பா மேல அன்பிருக்கா இல்லை வெறுப்பிருக்கான்னு தெரிஞ்சிட்டு அப்புறம் சொல்லவான்னு யோசிக்கிறேன். இதுவே மத்தவங்கன்னா கண்டுபிடிச்சதும் பைல் க்ளோஸ் பண்ணிடலாம். ஆனா, இதுல ராசிக்கு எதுவும் பிரச்சனை வந்திரக்கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்.”
“ம்... நீ நினைக்கிறதும் சரிதான். செகண்ட் ஆப்ஷன் கரெக்டுடா ஹரி. ஏன்னா மிஸ்டர்.சிவராமன்கிட்ட சொல்லி, அவர் ஆர்வத்துல பேசப்போயி அந்தப் பொண்ணு முகம் காட்டலன்னாலும் வேதனை. ஏற்கனவே அதிரடி பார்ட்டி வேற. இவரோ நாலு வயசுல விட்டவரு கிட்டத்தட்ட இருபத்தோரு வருஷம் கழிச்சி தேடி வந்திருக்காரு. அப்பான்னு ஒரு உறவே இல்லாமல் வளர்ந்த பொண்ணு. அவரது உறவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்கமாட்டா. முதல்ல ராசியோட சூழ்நிலையை தெரிஞ்சிகிட்டா அதுக்கேற்ற மாதிரி அவர்கிட்ட பேசி அவளை அணுகச் சொல்லலாம்.”
“தேங்க்ஸ்டா. நானும் இதைத்தான் நினைச்சேன். இருந்தாலும் ஒரு குழப்பம். நாளைக்கே இல்ல நாளைக்கு வேலையிருக்கு. நாளை மறுநாள் சண்டே. அன்னைக்கே போய் பார்க்கலாம்.”
மறுநாள் வேலையிருக்கு ஞாயிறு ராசியை சந்திக்கலாம் என சரத் நினைத்திருக்க, “டேய் ஹரி! இன்னைக்கு என்னோட ராசி பலன்ல துக்கமான நாளாம்டா” என்றான் சந்தோஷமாக.
“என் தங்கச்சி உன்னை கொடுமை படுத்துறது ஊருக்கே தெரிஞ்சிருச்சா என்று கேலி” செய்தவனை மணி முறைக்க... “சரி தங்கச்சிய இழுக்கல. நீ இதையெல்லாமா நீ நம்புற?”
“நான் நம்பினேன்னு சொன்னேனா. இதுல துக்கம்னு போட்டா சந்தோஷம்னு எடுத்துக்கணும்ன்ற பேசிக் நாலெட்ஜ் கூடவா எனக்கில்ல. இரு உன் ராசிக்கு என்னன்னு பார்க்கிறேன்.”
அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து தலைக்கு மேல் இரு கைகளையும் சேர்த்து, “என் ராசிக்கு என்னடா சூப்பராயிருக்கா!” என்றான்.
முதலில் விழித்தவன் சரத் வார்த்தையின் அர்த்தம் புரிந்து, “உதை படப்போற. இரு படிக்கிறேன்” என பேப்பரில் கவனத்தைத் என்றான் ருப்பி, “டேய் குரு உன் ராசிகிட்ட வர்றதால, உன் ராசிக்கு நல்ல ராசியாம்.”
“அது எவன்டா குரு. என் ராசி பக்கம் வர்றது. கொன்னுருவேன்னு சொல்லு” என்றான் சிரிக்காமல்.
“உன்னை..” என்று முறைத்த மணி, “திருந்தமாட்டியா நீ. நானென்ன சொல்றேன் நீ எங்க போற?”
“நான் எங்கடா போறது. நீ வேற காலையிலிருந்து ராசி ராசின்னு சொல்லி என்னை ஏத்தி விடுற.”
“அதனால..” என்றான் சரத்தின் மேல் பார்வையை பதித்தபடி.
“அதனால ராசியை இப்பவே பார்த்தே ஆகணும்.”
“அடப்பாவி! இன்னும் அந்த பெண்ணோட கல்யாண மேட்டரே சால்வ் ஆகலைடா.”
“ம்... தெரியும். இப்ப அவ கழுத்துல தாலி இருந்த மாதிரி தெரியலடா” என்றான் இறங்கிய குரலில்.
அவனின் குரலில் உள்ள வலியைப் புரிந்தவன், “எனிவே கங்க்ராட்ஸ். உன்னோட லவ் சக்சஸாக. போய் பார்த்துட்டு வா. உனக்கு எதாவது உதவி தேவைப்பட்டா சீனியர்ன்ற முறையில என்னைக் கேளு தம்பி. டிப்ஸ் அள்ளித் தெளிக்கிறேன்” என்றான்.