• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687


14



சட்டென்று சிரித்து “ஸீ ஏர்போர்ட் தன்னை விட்டு இன்னொரு பெண்ணை நாடி, வருஷக்கணக்கா அவளோடவே குடும்பம் நடத்தி திரும்பி வந்தவன் எப்படி நல்லவனாவான். திருந்திட்டேன்னு வந்ததும் உடனே ஏத்துக்கிட்டாங்க கண்ணகி. ஒத்துக்கறேன் காவலர்களின் தவறான கணிப்பும், பாண்டிய மன்னனின் அவசரத் தீர்ப்பும் தப்புதான். கண்ணகி கணவன் மேல் தவறில்லைன்னு முழுக்க உண்மையை நிரூபிச்சதும், தவறு தன் மேல்... தன் அவசரத் தீர்ப்பினால்தான்னு உணர்ந்த நிமிடம் பாண்டிய மன்னன் அந்த இடத்திலேயே உயிரை விட்டுட்டார். அவரோட சேர்த்து அவர் மனைவியும். அதுக்குப் பிறகு ஏன் மதுரையை அழிக்கணும்? கணவன் ஒண்ணும் ரொம்ப யோக்யன் இல்லையே?”

“தான் செஞ்ச பாவத்துக்கு உடனடி தண்டனை கொடுத்துக்கிட்ட பாண்டிய மன்னன் க்ரேட்னு சொல்வேன். கணவனுக்கான நியாயம் கிடைச்ச பிறகும் மதுரையை எரித்தது எந்த வகையில் நியாயம்? அந்த உரிமையை யார் அவங்களுக்குக் கொடுத்தது. அடுத்தவங்க உடைமையை அழிக்கிறது தப்புதான? அவங்க புருஷனோடது மட்டும்தான் உயிரா? மத்தவங்கள்லாம்...”

கணவனின் வாதத்திலுள்ள நியாயம் புரிந்தாலும் குரல் தழைய, “நீங்க சொல்ற எல்லாமே நிஜம். கற்பு நெறி தவறாதவங்கன்னு அடுத்தடுத்த ஜெனரேஷன்கு தெரியணும்னு...” என பாதியிலேயே நிறுத்த அவளுக்கே அவளின் வாதத்தில் தொய்வு தெரிந்தது.

“திருட்டுப் பழி சொல்லி, அதை இல்லன்னு ஆக்கி மதுரையை எரிச்சதுக்கும் கற்புக்கரசின்னு சிலை வைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் மொழி? சபையில் யாரும் அவங்க கற்பை சந்தேகப்படலையே? அப்புறம் ஏன் அந்த ஆங்காரம்? அப்படியே அவங்களை மட்டும் கற்பு நெறி தவறாதவங்க சொன்னா, மத்த பெண்களெல்லாம் தவறானவங்கன்னு ஆகிறாதா? அந்தக் காலத்துல அடுத்த ஆண்கள் முகத்துல கூட முழிக்காது தான் தன் கணவன்னு இருந்த பெண்கள் கூட கற்புநெறி தவறாதவர்கள்தான?”

“அதைவிடு. வள்ளுவர் மனைவி வாசுகி... கணவர் அழைத்ததும், கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்த கயிறை அப்படியே விட்டுச் செல்ல, அந்தரத்துல அப்படியே நின்னதுன்னு கதையிருக்கே! அவங்களும் பாப்புலர் பெர்சன்தான. ஏன் அவங்களுக்கு சிலை வைத்திருக்கலாமே? இன்னும் எத்தனையோ பெண்களை உதாரணம் சொல்லலாம். தப்பு பண்ண சந்தர்ப்பம் இருந்தும், தப்பு பண்ணாத பெண்ணைச் சொல்லி கற்புக்கரசின்னு பட்டம் கொடுத்திருந்தா வரலாறும் சரியாயிருந்திருக்கும். என்ன வரலாறோ?”

நீங்க சொல்றது ரொம்ப சரி. என்கிட்ட கூட ஒருத்தர் சொன்னாங்க. “ஏன் இதை குழந்தைகளுக்குப் பாடமா வச்சிருக்காங்க? அதுவும் மூன்றாவது படிக்கிற பிள்ளைங்களுக்கு தேவையான டாபிக்கா. பத்து பனிரெண்டு படிக்கிற பிள்ளைங்களுக்கு என்றால் கூடப் பரவாயில்லை புரிஞ்சிப்பாங்க சொல்லலாம். ஆண் பெண் உறவு பற்றி தெரிஞ்சிக்கிற வயசா? முன்ன நாம படிக்கும்போது கேள்விகள் அதிகமா கேட்கமாட்டோம். ஆனா, இப்ப உள்ள பிள்ளைங்க... கோவலன் ஒய்ப் கண்ணகிதானம்மா. ஏன்மா மாதவி வீட்டுக்குப் போனார்? அங்க என்ன பண்ணினார்? திரும்ப ஏன் வந்தார்னு கேட்கிறாங்க. ஏன் போனார்னா எதையாவது சொல்லி சமாளிக்கலாம். என்ன பண்ணினார்னா என்னத்த சொல்ல. அவங்களுக்குப் புரியுற மாதிரி சொல்றதுக்குள்ள நான் நொந்து போறேன்னாங்க.”

“என்னைக் கேட்டா வரலாறே தப்பு சொல்வேன் மொழி. வரலாறு குழந்தைகளுக்கு வழிகாட்டியா இருக்கணும். ஏன் கோவலனைப் பார்க்கறீங்க. நமக்கு கண்ணகி கேரக்டர்தான் முக்கியம் சொல்லலாம். கோவலன்னு ஒருத்தர் இல்லாமல் இருந்தா வழக்கு சபைக்கு வந்திருக்காதே! நிறைய வரலாறுகளைத் திருப்பிப் பார்த்தா இப்படித்தான் ஒண்ணுமில்லாத வெற்றுக் காகிதமாயிருக்கு. சோ...”

“சரி நான் கண்ணகிய இழுக்கல. எங்கம்மா கூட இப்படித்தான் உங்களைப்போல் பேசுவாங்க. ஒவ்வொரு கதையும் சொல்லி அதற்கான காரண காரியம் அலசி ஆராய்ந்து சொல்வாங்க” என்றவளுக்குள் தாயின் நினைவு வர முகம் வாடியது.

“சரி கிளம்புறியா?” என்று அவளைப் பழைய நினைவிலிருந்து வெளியில் இழுத்தான்.

“ஹேய் ஹலோ! இதுக்காகல்லாம் என் முடிவை மாத்த முடியாது. செய் இல்ல செத்து மடி! இதுதான் என் பாலிஸி.”

“அப்ப அவங்களைப் பழிவாங்காம வரமாட்ட?”

“என் இளா... சாரி. இளா அத்தான் வந்துட்டதா தெரிஞ்சா, யோசிக்காம நான் உங்களோட வந்திருவேன்.”

“சரி மொழி. திரும்பவும் கேட்கிறேன். அவர் வரலன்னா?”

“கண்டிப்பா வருவார். அவர் சொன்ன மறுபிறப்பெடுத்துனாலும் வருவேன்ற வார்த்தை இன்னும் என் காதுல கேட்குது.”

“உன் நம்பிக்கை பலிக்க நானும் ஸ்டெப் எடுக்கிறேன் மொழி. இதை கேஸா ஃபைல் பண்ணி யாருக்கும் தெரியாம விசாரணை நடத்தலாம். சிபிஐக்குப் போனா சீக்கிரம் முடிச்சிருவாங்க.”

“ஹ்ம்.. அதெல்லாம் எப்பவோ சிபிஐக்குப் போயிருச்சி. இருந்தாலும் நோ யூஸ். எதையோ செஞ்சி சிபிஐ வாயை அடைச்சிட்டாங்க.”

“ஒண்ணு ரெண்டு சாவு கிடையாது மொழி சிபிஐ வாயை அடைக்கிறதுக்கு. நூல் அளவு தடயம் கிடைச்சா போதும் கூண்டோடத் தூக்கிருவாங்க. இப்போதைக்கு அமைதியா இருக்காங்கன்னா எதாவது காரணமிருக்கும். அப்பறம் ரகசிய போலீஸ்னு எதுக்கு வச்சிருக்காங்க. என்னோட வந்திருமா. நீ இங்கயிருந்தா எனக்கு வேலையே ஓடாது. ஒவ்வொரு நிமிஷமும் உன் நினைவாவே இருக்கும். வேலையில் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது” என மென்மையாக அழைத்தான்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நானா சொன்னேன். நான் உங்களை எதுவும் பண்ணல. எப்பவும் போல இருக்கேன். நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டுக் கிளம்புங்க” என்றாள் அமைதியான குரலில்.

“அப்ப நீ வரமாட்ட?”

“ஆமாம்” என்று அழுத்தமாகச் சொல்ல...

“ரைட். அப்ப எனக்குத் தேவையான ஒண்ணு உன்கிட்ட இருக்கு. அதைக் குடுத்திரு நான் கிளம்பறேன்?”

“என்னது?” என அலறியவளை மெல்ல நெருங்கினான்.

“இ..இங்க பாருங்க உங்களுக்குத் தேவையான எதுவும் என்கிட்ட கிடையாது. பேசாம வெளில போங்க. இல்ல கத்திக் கூச்சல் போடுவேன்.”

“என்னன்னு கத்துவ?”

“அ..அ.. அது...”

“எதுவாயிருந்தாலும் எனக்குத் தேவையானதைக் குடுத்துட்டுக் கத்து. ம்... சீக்கிரம் தா லேட்டாகுது” என்றபடி அவளை நெருங்க...

“ஐயோ!” என்ற அவளின் அலறலில் இளங்கதிர் சத்தமாகச் சிரிக்க அச்சிரிப்பில் சில கணங்கள் சிதறித்தான் போனாளோ!

மனைவியின் ஸ்தம்பித்த நிலையை உணர்ந்தவன் சின்னச் சிரிப்புடன் “ஆர் யூ ரெடி பேபி” என்று இன்னும் நெருங்கினான்.

“ஹான்!” என்ற அதிர்வு அவளிடம். ‘ப..ப..’ என திணற...

“பாம்பா செல்லம்” என்று எடுத்துக் கொடுக்க...

“ப..பக்கத்துல வராதீங்க” என சுவற்றோடு ஒட்டிக்கொண்டு கண்மூடினாள்.

“ஹேய் புருஷனை பக்கத்துல வராத சொல்ற. தப்புமா. உடனே இதுக்காகத்தான் கல்யாணம் பண்ணுனியா கேட்காத. அது ஓல்ட் வெர்சன். பட், இதுவும் சேர்ந்ததுதான் லைஃப்.”

“ம்... நான் விஸ்வாமித்திரரோட கேர்ள் வெர்சன் விஸ்வாமித்திரை. எனக்கு என் லட்சியம் மட்டும்தான் முக்கியம்” என்றாள் பதிலுக்கு.

“ஹா..ஹா அவர் ஒண்ணும் முற்றும் துறந்த முனிவர் கிடையாது. அவருக்கும் பெண்கள் சகவாசம் உண்டு. மேனகை கூட பத்து ஆண்டுகள் வாழ்ந்ததா ராமாயணத்துல படிச்சேன்.”

“ச்சோ! எதைச் சொன்னாலும் ஒரு ஏடாகூட பதில் வருது” என்றாள் எரிச்சலாக.

“நீ ஏன் சொல்ற? நான் சொன்னதை மட்டும் செய்” என்ற கணவனின் நெருக்கம் இதுவரை ஆண் துணையில்லாது வளர்ந்த திருமொழிக்கு சோதனையாய் நிற்க...

“ப்ளீஸ் கிஸ் மீ?” என்றதில் அதுவரை எதையோ எண்ணிப் பயந்திருந்தவள், சற்று இறுக்கம் தளர்ந்து ஆசுவாச மூச்சுவிட்டு அவனை அடித்து நொறுக்குவது போல் பார்த்தாள்.

“பயந்துட்டியா?” என்றான் கள்ளச்சிரிப்புடன்.

“இ..இல்லையே” என்று கெத்தாய் பார்க்க...

“பயப்படலதான.. அப்ப நான் கேட்டதைக் கொடு.”

“முடியாது போ.”

“கொடு போறேன்.”

“முடியாதுன்றேன்ல. காது கேட்கலையா?”

“முடியும்ன்றதைத்தான் கேட்டேன். நீயா குடுத்தா கிஸ்ஸோட போயிரும். நானா வந்தா வேற எதிர்பார்ப்பேன். எப்படி வசதி?”

‘ஹான்!’ என அதிர்ந்து, “என்ன மிரட்டுறீங்களா? தாலி கட்டிட்டா எல்லா உரிமையும் வந்திருச்சின்னு அர்த்தமில்லை. விரும்பியும் நாம கல்யாணம் பண்ணிக்கல.” படபடவென்று வெடிக்க...

“நீ விரும்பலன்னா என்ன. நான் விரும்பிதான் தாலி கட்டினேன். சோ, வேற காரணம் தேடு.”

“சே... எப்படிப் பேசினாலும் சேம் சைட் கோல் அடிக்கிறதே வேலையா போச்சி. கடவுளே! காப்பாத்து” என அவளறியாமல் வேண்டுதல் வைத்தாள்.

“அவர்லாம் புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்து மாட்டிக்க மாட்டார். நான் கேட்டதை நீ கொடு.”

“நீ விடு!”

“விடவா கல்யாணம் பண்ணியிருக்கேன். ஹேய் அங்க பாரு” என்றதும் அவள் சட்டென்று திரும்ப கன்னத்தில் இதழ் பதித்தான் அழகாய். மங்கையவளோ பதறி கணவன் என்பதை மறந்து கையை ஓங்கினாள். ஓங்கிய கையை உயரத்தில் பிடித்து, “ஹேய் நான்.. உன் புருஷன்தான் ஏர்போர்ட். வேற யாரோ இல்லை” என்று பயந்தாற்போல் நடிக்க...

உள்ளுக்குள் சிரிப்பு வந்தபோதும் முகத்தைக் கடுமையாக்கி, “கிளம்புங்க டைமாகுது” என்றாள்.

“அப்ப நீ வரமாட்டியா? நீ வருவ நினைச்சேன்” என்றவன் முகம் வாடவும், ‘திரும்பவுமா?’ என நினைத்தாலும் கணவனின் முகவாட்டம் குறைக்க என்ன சொல்வதென்று புரியாமல் நின்றிருந்தாள்.

அவள் முகம் நிமிர்த்தி, “உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்மா. என்னைப் பொறுத்தவரை இப்ப நீ என் மனைவி. எங்கயிருந்தாலும் என் மனைவியாதான் இருக்கணும்னு நினைச்சேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். இனி என்னோட வர்றதும் வராததும் உன்னோட விருப்பம்தான். நான் நேரம் கிடைச்சா நேரே என் ஏர்போர்ட் தேடி வந்திருவேன்” என்று அவள்புறம் கைநீட்டி கண்ணடித்துச் சொல்லி, “சரி நான் கிளம்புறேன். அத்தானை நினைச்சி சாப்பிடாம இருந்திராத. உடம்பைப் பார்த்துக்கோ. எதாவதுன்னா உடனே கால் பண்ணு. இவனுக்கு ஏன் பண்ணனும்னு நினைச்சிராத மொழி” என்றவன் அவள் எதிர்பாராத சமயம் கட்டிக்கொள்ள... மூச்சுவிட மறந்து நின்றவள் காதோரம், “ஐ மிஸ் யூ. ஐ லவ் யூ ஏர்போர்ட்” என்று அவள் முகம் பார்த்து கண் நோக்கி நெற்றியில் முத்தமிட, கண்மூடி நின்றவளால் அவனை உதற முடியவில்லை. அதற்கான முயற்சி கூட எடுக்கவில்லையோ!

கண்திறந்து பார்க்கையில் அவன் இல்லை. முதல்முறையாக அவளுள் தோன்றிய வெட்கம். அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைத் தானே பார்க்கக் கூட வெட்கம் தடுத்தது.

“திரு நாங்க போயிட்டு வர்றோம். நீ ஹெல்த் பார்த்துக்க?” என்ற சிவகாமியிடம்... “ம்...” என தலையசைத்தாள். அவளின் முகம் வருடி “சீக்கிரம் வந்திருமா. மாமியார் தொல்லை இருக்காது சொல்லமாட்டேன்” என்றதும் மங்கையவள் விழிக்க... சிவகாமி சிரித்து, “நான் வேற லெவல் கொடுமைக்காரி” என்றதும் “அத்தை!” அவரை முறைத்து பின் சிரித்து “போயிட்டு வாங்க” என்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மூவரும் காரில் ஏற குருமூர்த்தி திருவிடமும், காமாட்சியிடமும் சின்னத் தலையசைப்புடன் விடைபெற, மனதுக்குள் ஊருக்குச் செல்வதை எண்ணி மாமழையே பொழிந்தது. ஒரே ஒரு குற்றவுணர்வு அவருக்கு. ‘என்னயிருந்தாலும் அவள் என் மருமகள்தானே! நம் சுயநலத்திற்காக விட்டுச் செல்கிறோமே’ என்பதுதான். எப்படியாவது அவளை ஹைதராபாத்திற்கே வரவழைத்து மகனுடன் வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.

கதிர் காரில் ஏறும் வரை எதுவும் தெரியவில்லை திருமொழிக்கு. அவன் உள்ளே அமர்ந்து கதவை சாத்த இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. கண்களோ கணவனை விட்டு அகலவில்லை. ஏதோ ஒரு உணர்வு மனதை இறுக்கிப் பிசைய கண்கள் கூட கலங்கியதோ!

அவளையே பார்த்திருந்தவன் மனைவியின் வெளிறிப்போன முகம் பார்த்து எதையோ தேடினான்.

“என்னடா மகனே? எதையாவது மறந்து விட்டுட்டு வந்துட்டியா? இல்ல மறந்துட்ட மாதிரி விட்டுட்டு வந்துட்டியா?”

தாயின் கேலியை உணராது “செல்போன் விட்டுட்டு வந்துட்டேன்ம்மா” என்றான்.

“திருமா கதிர் போன் ரூம்ல விட்டுட்டு வந்துட்டானாம். போய் எடுத்துட்டு வா” என்றதும் அவள் உள்ளே செல்ல... இவனோ தாயை முறைக்க அவரோ சிரித்து, “இன்னும் என்னடா உட்கார்ந்திருக்க கிளம்பு” என்றதுதான் தாமதம், “தேங்க்ஸ்ம்மா” என சந்தோஷத்தோடு இறங்கி உள்ளே சென்றான்.

செல்போன் எடுத்துத் திரும்பியவள் கணவன் மேல் மோத, “ஹேய் மொழி பார்த்து. எதுக்கு இத்தனை வேகம்? கார்ல போறதால அவசரமில்லை” என்றான்.

“ம்... இந்தாங்க போன்” என்று நீட்டவும், அதை வாங்கியவன் “அவ்வளவுதானா? நான் கேட்டதைத் தரமாட்டியா?” என்றான்.

“நீங்க என்ன கேட்டு நான் தரல?” என்றாள் யோசனையாய்.

அவளின் குழப்பம் பார்த்து தலைகலைத்து, “கிஸ் மீ” என்றான்.

‘அடப்பாவி!’ என்ற முறைப்பை அவள் கொடுக்க...

“நீ என்னை மிஸ் பண்ணமாட்டியா ஏர்போர்ட்?”

“அ..அது தெரியல. உங்களை எனக்கு அதிகம் தெரியாதே. அப்புறம் எப்படி மிஸ் பண்றது?”

கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் சொருகி, “இப்ப தெரிஞ்சிக்கோ!” என தன்னிரு கைகளால் அவள் முகம் ஏந்தி முத்தங்களிட்டு, அவளை இறுக்கி அணைத்துக்கொள்ள, பதிலுக்கு அணைக்க எழும்பிய கைகள் அவனின் உடனடி விலகலில் அப்படியே நின்றது. கணவனவன் அணைப்பில் அவளுள் உடலியல் மாற்றங்கள் நிகழ்ந்ததோ!

காரின் சத்தம் கேட்டு நிஜம் வந்து வேகமாக வெளியே வர, கண் சிமிட்டி பளிச் புன்னகையை அவளுக்குக் கொடுக்கவும் அவன் கரம்பிடித்து சென்றுவிடத்தான் தோன்றியதோ மங்கையவளுக்கு!

கார் தன்னைத் தாண்டி கண் மறையும் வரை பார்த்தவளுக்கு எதையோ இழந்த உணர்வு மேலோங்க, ‘கணவன் மேல் காதலா?’ கேள்வி கேட்டது மனது. ‘அப்ப இளா அத்தான் மேல நான் வச்சிருந்தது?’

‘உன் இளா அத்தான் மேல நீ வச்சிருக்கிறது அன்பு மட்டும்தான். காதல் இல்லை!’ கணவனின் வார்த்தைகள் காதுகளில் ஒலிக்க ‘நிஜம்தானோ! இளா அத்தான் மேல் உள்ளது முறைப்பையன் என்ற பாசம்தானா?’ அப்படியே திண்ணையில் அமர்ந்தவள் கார் சென்ற வழி பார்க்க... தன் மனம் போல் தெருவும் வெறிச்சோடியிருந்தது.

தன் லட்சியத்தையும் விட முடியாமல் கணவனுடனும் செல்ல முடியாமல் என்ன வாழ்க்கையென்று தோன்றிய சமயம்... “அப்புறம் என்ன செய்றதா உத்தேசம்?” பிரஷாந்தின் குரலில் திரும்பியவள் அவனை முறைத்துத் திரும்ப, “கேள்விக்குப் பதில் இல்லையே?” என்றான் யோசிப்பதுபோல்.

“ம்... இத்தனை காலம் என்ன செய்தேனோ அதைச் செய்யுறதா உத்தேசம். ஏன் எதாவது பிரச்சனையா?”

“நோ நோ நீ தாராளமா செய். உன்னைக் கேட்க நான் யாரு?”

“அதான் நீ யார்னு கல்யாணம் செய்து காட்டிட்டியேடா. என் கல்யாணத்தை அவ்வளவு அவசரமா பண்ண என்ன காரணம்?”

“அவசரம்தான்கா. உன்னைக் கல்யாணக்கோலத்துல பார்க்காம நான் செத்துட்டேன்னா...”

“டேய் லூசு! என்ன பேசுற நீ?”

“நிஜம்க்கா. எனக்கு... நீ உன்னோட வாழ்க்கை முக்கியம். லட்சியம் அது இதுன்னு லைஃபைக் கெடுத்துக்கக் கூடாதுன்னுட்டு தான் அப்படிச் செய்தேன்.”

“ஏன்டா? ஏன் என்மேல இத்தனை அன்பு?”

“ஏன்னா நீ என் அக்கா. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்கா. உன்னை நல்லா வாழவைக்கணும்னு நினைக்கிறது தப்பில்லையே?”

“இதை ஏற்கனவே சொல்லியிருக்கடா” என்றவளுக்கு ‘என் அக்கா’ என்றதில் அவன் கொடுத்த அழுத்தம் புரியவில்லை.

“அப்புறம் ஏன்கா அப்படிக் கேட்கிற? உனக்கென்ன அவங்களைப் பழிவாங்கணும் அவ்வளவுதான? நானும் மச்சானும் இருக்கோம்.”

“அவங்க எப்படி? ஷாஃப்ட் கேரக்டர்டா அவங்க. அவங்களை ஏன் இதுல இழுத்துவிடணும் சொல்லு?”

“அமைதியா பொறுமையா பேசுறாங்களேன்னு பார்க்குறியா? உன் விஷயத்துல பொறுமையா இருந்தால்தான் சாதிக்கலாம்னு நினைச்சிருக்கலாம். கோபத்துல போய் அடிச்சி உதைச்சி ஏன் கொலையே பண்றதுக்குப் பெயர் வீரம் இல்லக்கா. யோசிக்கணும் எங்க அடிச்சா எப்படி விழவைக்கலாம்னு. கண்டிப்பா இளா அத்தான் பக்காவா ப்ளான் பண்ணி வருவாங்க. உனக்காக! உனக்காக மட்டும்! அதுவுமில்லாம சின்ன வயசுல நானும் ரௌடிதான் ரேஞ்சல இருந்ததா சொல்றாங்க. உனக்காக இறங்கி அடிக்கவும் தயங்கமாட்டாங்க.”

அக்காவின் ஆச்சர்யப் பார்வையில், “உன்மேல் அவ்வளவு லவ். கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு காலையில கோவில்ல வச்சிதான் கேட்டேன். உடனடி சம்மதம். உடனடி கல்யாணம். செமல்ல. யார் இந்த மாதிரி கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க. அத்தையும் மாமாவும் அங்கதான் இருந்தாலும் தடுக்கக்கூடச் செய்யலையே!”

“அப்ப அவங்களுக்கு முன்னாடியே தெரியாதா?” என்றாள் ஆச்சர்யம் குறையாமல்.

“நான் சொல்லல. மனுஷன் கனவுல பார்த்தே காதலிச்சிருப்பார் போல!” என கிண்டலாக உண்மையைச் சொன்னான்.

“சே..சே சும்மா உளறாதடா. பார்த்ததும் வந்த அட்ராக்ஷனா இருக்கலாம்.”

“ஹேய் யக்கா அவர் இருக்கிறது ஆந்திராவுல. ஆந்திரா பொண்ணுங்க எவ்வளவு அழகு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு...”

“ஏன் தமிழ்நாட்டுப் பொண்ணுங்க அழகில்லையா?” என சண்டையிடத் தயாராக...

“அம்மா தாயே நான் அந்த ஏரியா வரல. உன்னைப் பார்த்துட்டு அந்த வார்த்தையை யாரும் சொல்லமாட்டாங்க. யார் அழகோ இல்லையோ என் அக்கா அழகு. அது போதும் எனக்கு. அதான் சுமாரா இருக்கிற என் மச்சான் லவ்ல விழுந்துட்டாரு.”

“ஏய் சுமாரால்லாம் இல்ல. அவங்க சூப்பர் பெர்சனாலிட்டி தெரியுமா? எதுக்கும் உன் கண்ணைப் செக் பண்ணு” என்றாள் வேகமாக.

“மச்சான் கேட்டுச்சா? நீங்க சுமார் இல்லையாம். சூப்பர் பெர்சனாலிட்டியாம்” என்றான் செல்போனில் அவர்கள் இதுவரை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரைப் பார்த்தபடி.

“டேய் என்னடா பண்ணிட்டிருக்க? நாம பேசுறதைக் கேட்டுட்டிருக்காங்களா? ஏன்டா என் மானத்தை வாங்குற” என தலையிலடித்தாள்.

“உன் புருஷன்கிட்டதான மானம் போகுது. மச்சான் அதெல்லாம் கேர் பண்ணிக்கமாட்டாங்க. அப்படித்தான மச்சான்?”

“ஆமாம்டா மாப்ள” என்ற குரல் அவளைச் சேர ‘ஹையோ அசிங்கப்பட்டாள்டா திரு’ மொமண்டில் அவள் முகமிருக்க வந்த வெட்கம் முகத்தைவிட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்க... “போனை ஆப் செய்” என்றவள் கையில் போனைத் திணித்து, “நான் அத்தைகிட்டப் போறேன்” என சென்றான்.

அவனிடம் எப்படிப் பேசுவதென்று திணறி கட் செய்யப்போக, “ஏய் யக்கா! அது வீடியோ கால். மச்சான் முகம் பார்த்து அவர் போட்டோன்னு நினைச்சி முத்தம் குடுத்துராத” என கேலி செய்தான்.

“உன்னை...” என்று கையில் கிடைத்த ஏதோ ஒன்றை அவன் மேல் தூக்கி எறிய... “ஹேய் ஏர்போர்ட்” என்ற அழைப்பின் மென்மையில் கணவனைக் கண்டாள். “நல்லா பாரு.. இதான் உன் மாமியாரு என் தாயாரு” என்றான் தாயைக் காண்பித்து.

“ஆமாமா இப்பதான் இவனுக்குச் சொல்லிக்கொடுத்தேன். படவா உனக்கு ரைமிங்கா வருது” என இரண்டு அடிகளைப் போட...

“அத்தை வேண்டாம் வலிக்கும்” என்று சொல்லி, சொன்ன நிமிடம் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

கதிர் அவளை ஆச்சர்யமாய் பார்க்க...

“இன்னொரு முறை சொல்லுங்க?” மாமியாரின் ராகத்தில்... “அத்தை” என்று சிணுங்க... “சரிமா ஜாக்கிரதையாயிரு. இந்த கதிர் பயல் சும்மாவே உருண்டுட்டு வர்றான். நீயே பேசிக்கோ” என்று தன் மொபைலில் ஹெட்செட் மாட்டி கண்மூடிக் கொண்டார்.

சின்னச் சிரிப்புடன் கதவோரம் சாய்ந்தமர்ந்து “அப்புறம்? என்றான்.

“என்ன அப்பறம்? அப்புறம் ஒண்ணுமில்லை ஓகே.”

“ஒண்ணுமில்லைன்ற வார்த்தைக்குள்ள ஓராயிரம் அர்த்தம் இருக்கும்னு சொல்வாங்க.”

“நான் ஓராயிரம் அர்த்தம் வர்ற ஒண்ணுமில்லை சொல்லல. நிஜ ஒண்ணுமில்லை சொன்னேன்.”

“ஹா..ஹா அப்புறம்?”

“ஏன் சிரிக்கிறீங்க? நான் என்ன ஜோக்கா சொல்றேன்” என்றாள் முறைப்பாக.

“ஜோக் சொன்னா யாராவது சிரிப்பாங்களா?” என்றதும் அவள் முறைப்பை அதிகமாக்க... “ஆர் யூ ரெடி பேபி” என்று சிரிக்க...

அவளோ “கொன்னுருவேன்” என விரல் நீட்டி மிரட்ட... அவ்விரல்தனைக் கடிப்பது போல் செய்ய... சட்டென கையை மடக்கிட கணவனின் சிரிப்பையும், தன் வெட்கத்தையும் அதனுள் ம(அ)டக்கினாளோ!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top