- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
13
ஆராதனாவை, சரண் சந்தித்த அதே நேரம், நியாவின் பொட்டிக்கில் நுழைந்தவனைக் கண்ட நியா ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
‘என்ன பார்வை பார்க்கிற நீ? பார்த்துப் பார்த்து என்னை ஒரு வழி பண்ணிருவ போலிருக்கே’ என மனதில் நினைத்து அவளுக்கு, ‘ஹாய்’ சொன்னான்.
மென்மையாக சிரித்து தலையசைத்து பதில் சொல்ல, ‘ஏன் பதிலுக்கு ஒரு ஹாய் சொன்னா குறைஞ்சா போயிருவா?’ என்று மனதில் மருகினான்.
‘என்ன?’ என்று புருவம் உயர்த்திக் கேட்டவளிடம், “இப்ப வலி பரவாயில்லையா?” என்று அவள் கைபிடித்து பார்த்து, “ம்... பரவாயில்ல ஆறிட்டு வருது” என்றதும் அவனிடம் இருந்து கையை உருவ, வேலை செய்யும் பெண்களின் பார்வை வித்தியாசமாகப் படவும், “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்டர்ஸ். அன்னைக்கு அடிபட்டதுக்கு நான்தான் மருந்து வச்சேன். அதான் வேற ஒண்ணுமில்லை” என்றான்.
கையில் உள்ளக் கவரை அவளிடம் நீட்டி, “இதை எங்க அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. சண்டே மார்னிங் வேணும். எவ்வளவுன்னு கேட்டு அமௌண்ட் பே பண்ண சொன்னாங்க.”
நியாவின் அருகில் இருந்த பெண், “சார் நீங்க ஒரு வாரம் இல்ல ஒரு நாலு நாள் முன்னாடி கொண்டு வந்திருக்கணும். இப்ப கஷ்டம் சார்” என்றாள்.
“ஹலோ! எங்க அம்மா உங்க ஷாப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா?” என்றான் காட்டமாக.
“சார் எங்க ரூல்ஸ் தான் சொன்னேன்” என்றவளைத் தடுத்து அதை வாங்கிய நியா, மேலே கேட்கச் சொல்ல, அந்தப் பெண்ணும், “சார் என்ன டிசைன்ல தைக்கணும்? கட்டிங் எந்த மாடல் வேணும் சொல்லுங்க?” என கேட்டதும்,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.? “ஞாயிறு எனக்கு நிச்சயதார்த்தம். அதுக்கு தைக்கிற மாதிரி தைச்சிருங்க.”
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த நியா, ‘உனக்கும் அன்றைக்குத் தானா?’ என நினைத்தாள். மறந்தும் அவன் இவனா இருப்பானா என்று நினைக்கவில்லை. நோட் எடுத்து எழுதிக் காண்பிக்க, அதைப்பார்த்த அந்தப் பெண், “சார் நாளைக்கு ஈவ்னிங் ஒரு சிக்ஸ் டூ செவன்குள்ள வந்து வாங்கிக்கோங்க. இந்த சண்டே கடை லீவு. உங்க போன் நம்பர் கொடுங்க. ரெடியானதும் போன் பண்றேன்” என்றாள்.
தன் அடையாள அட்டையை எடுத்துக் கொடுத்தவன், “ஏன் உங்க முதலாளியம்மா பேச மாட்டாங்களோ” என சிறிது கடுப்புடனே கேட்டான்.
“சார் கஸ்டமர் டீலிங் எல்லாம் நான் தான் பார்த்துப்பேன்.”
“சரி நான் கிளம்பறேன்” என்று அவன் வெளியே செல்லும் போது, “ஹாய் தான் கிடையாது. ஒரு பை சொல்லக் கூடவா பஞ்சம்” என்று முனகலோடு சென்றாலும், அதைக் கேட்ட நியா பதில் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
நியாவிடம் தைக்கக் கொடுத்து வீடு வந்தவனிடம், “என்னப்பா போனியா? அங்க அந்தப் பொண்ணு இருந்தாளா? பார்த்தியா?” என்றார் ஆர்வமாக.
“ஹான். இருந்தா இருந்தா. திங்கள்கிழமை என் கார்ல ஒரு பொண்ணு மோதிட்டாள்னு சொன்னேன்ல அது இந்தப் பொண்ணுதான்.”
“அச்சச்சோ இப்ப எப்படி இருக்கிறா? ரொம்ப அடியெல்லாம் இல்லையே? சரியாகிடுச்சா?” என்று கேள்விகளை அடுக்க,
“ஆமா. ரொம்ப முக்கியம். ஒரு வார்த்தை கூடப் பேசலை அந்தப் பொண்ணு. வேலை செய்யுற பொண்ணை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறா.” அவள் தன்னிடம் பேசவில்லை என்பதால் தாயிடம் கடுகடுத்தான்.
“வேற என்னடா பண்ண முடியும் அவளால. அதைவிடு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா? உனக்கு ஓகேதான?”
ஒரு நிமிடம் சந்தோஷம் மின்னலிட, “அம்மா” என்றழைத்தான். பின், “என்னம்மா விளையாடுறீங்களா? நாளை மறுநாள் பொண்ணு பார்க்கப் போறோம். இப்ப இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா என்ன அர்த்தம்?” ஏதோ தோன்ற, “அம்மா நீங்க பார்த்த பொண்ணு இவளா?” என்றான்.
“ஆமா. அவளேதான்.”
“அம்மா” என்று தாயைத் தூக்கிச் சுற்றினான்.
“டேய்! விடுடா. திடீர்னு ஏன்டா இப்படிப் பண்ற?”
“ஹையோ கொடுமையே. அவன் பொண்டாட்டியைத தூக்கி சுத்த வேண்டிய வயசுல, என் பொண்டாட்டியைத் தூக்கிச் சுத்துறானே” என்று அங்கலாய்த்தபடி வந்தார் ஈஸ்வர்.
தாயைக் கீழே இறக்கிவிட்டு, “போங்கப்பா” என்றவன் தாயிடம், “அம்மா எனக்கு அன்னைக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததும் பிடிச்சிருந்திச்சி. ஆனா, நீங்க ஏற்கனவே பார்த்து முடிவு பண்ணியிருந்தால, என்னால ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா, அவளையும், அவ அண்ணனையும் எங்கேயோ பார்த்ததா நியாபகம்” என்றான்.
“ஏன் பார்த்திருக்க மாட்ட. டேய்! அவள் உன்னோட வெற்றி மாமா பொண்ணுடா. உங்கப்பா ப்ரண்டோட பொண்ணு.”
“அம்மா நிஜமாவா சொல்றீங்க? அதான் அவங்களைப் பார்த்ததும் பழகின உணர்வு தோணிச்சா?”
ஈஸ்வர் மகனின் அருகில் வந்து, “உனக்கு அவளைப் பற்றித் முழுசாத் தெரியும். அவள் பிரச்சனை உள்பட. உன்னால முழு மனசோட அவளுக்காக, அவளை ஏத்துக்க முடியும்னா ஓகே சொல்லு. இல்ல,பின்னாடி எதாவது பிரச்சனைன்னா அவள் ரொம்ப உடைஞ்சி போயிருவா. அதுக்கு நானோ, உங்கம்மாவோ சம்மதிக்கமாட்டோம். எதுவாயிருந்தாலும் நல்லா யோசிச்சிக்கோ. இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவளை, கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சிருக்கோம். முடிவு உன் கையில்” என்றார்.
“வேண்டாம்ப்பா” என்றான் பட்டென்று.
“என்னது வேண்டாமா? டேய்! ஒரு நல்ல பொண்ணை மிஸ் பண்றடா.”
“அச்சோ! அது அந்த வேண்டாம் இல்லப்பா. இது வேற வேண்டாம்.”
“என்னடா குழப்புற?”
“ஒண்ணும் குழப்பல. அவளைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்னு சொல்ல வந்தேன்.”
“ஹப்பாடா. ஒரு செகன்ட் பயந்துட்டேன்டா. தேவி இனி நோ ப்ராப்ளம்.”
“ஆனா, அப்பா எங்களுக்கு நிச்சயம் இப்ப பண்ணிருங்க. கல்யாணம் ஒன் இயர் கழிச்சி வச்சிக்கலாம்.”
“ஏய்! என்னடா சொல்ற? ஒரு வருஷம் என்பது ரொம்ப லாங்பா.”
“சொன்னா புரிஞ்சிக்கோங்கப்பா. அவளை அதுக்குள்ள நான் சரி பண்றேன். அப்பத்தான் நான் ஏதோ வாழ்க்கை கொடுத்ததா நினைக்காம, முழு மனசோட என்னோட மனைவியா இங்க இருப்பா.”
“நீ சொல்றதும் சரிதான்டா. நாங்க ஒத்துக்கறோம். எதாவது ஏடாகூடமா ட்ரீட்மெண்ட் கொடுத்திறாதடா.”
“சரிப்பா” என்றான்.
“ஏன்பா நீதான் போட்டோ பார்க்கலை. உனக்கு அவள்தான் பொண்ணுன்னு தெரியாது. ஆனா, அவ பார்த்திருப்பா தான?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.
“இல்லம்மா. பார்க்கலன்னு தான் நினைக்கிறேன். அப்பா சொல்றதை வச்சிப் பார்த்தா, பொண்ணு பார்க்கிற விஷயத்தைத் தவிர அவள் எதையும் கேர் பண்ணாம இருப்பாள்னு நினைக்கிறேன்.”
“நல்ல ஜோடிப் பொருத்தம் தான் இந்த விஷயத்துல. சரி அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.”
சரண் தங்கையை அழைத்து வந்து இருவரும் சமையல் செய்யும் பொழுது, அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “அண்ணா முகம் பளிச்சின்னு இருக்கு. எதாவது விஷேசமா?” என்றாள்.
“இல்லம்மா. அந்தப் பிரச்சனை தீர்ந்தது. இனி உன்னோட வேலைதான்” என்றான்.
“ஆமா. நான் என்ன கேட்டிட்டுருக்கேன். நீ அங்க இங்க சுத்தி என் கல்யாணத்துல வந்து நில்லு.”
“மாப்பிள்ளை உனக்கு நல்லப் பொருத்தம் குட்டிமா. எல்லா வகையிலும்” என்றவன், “அப்பா வர டைம் ஆகும் போல. நான் சாப்பிட்டு மாடிக்குப் போறேன். காலையில நல்ல அலைச்சல். நீ அப்பா வந்ததும் சாப்பாடு கொடுத்துட்டுத் தூங்கப் போறியா? அப்பா வர லேட்டாகும் போல தெரியுது.” அவனுக்கு அவன் தாயிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும். வேகமாகத் தன்னுடைய அறைக்குச் சென்றவன் உடை கூட மாற்றாமல் தாயிடம் அமர்ந்தான்.
“அம்மா சந்தோஷமான விஷயம். உங்க பையன் பெரியவனாகிட்டான். எப்படின்னு கேட்குறீங்களா? எனக்கு கல்யாணம் ஆகிருச்சிம்மா. அதைத்தான் சொன்னேன். வீட்ல யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையாகிப் போச்சி. சாரிம்மா. தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாங்கல்ல. ஆனா, எனக்கு வேற வழி தெரியலையேம்மா. அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் முடியலை. அப்படி விட்டா அது உங்களையே விடுற மாதிரி இருந்ததும்மா. என்னைப் புரிஞ்சிப்பீங்கல்லமா? ப்ளீஸ்மா. இந்த ஒரு தப்பு தான் இனிமேல் உங்ககிட்ட சொல்லாம ஒரு காரியமும் பண்ணமாட்டேன்.”
“இன்னொரு குட் நியூஸ்மா. நியா குட்டிக்கு நிச்சயதார்த்தம் பண்ணப் போறோம்மா. நீங்க நேர்ல இருந்தா, எவ்வளவு சந்தோஷமா எல்லா வேலையையும் பார்த்து, இந்த வீட்டைச் சுத்தி சுத்தி வந்திருப்பீங்க. ஏன்மா எங்களை விட்டுட்டுப் போனீங்க? ஐ மிஸ் யூம்மா. ஐ மிஸ் யூ” என்று சொல்லிக் கொண்டு தாயின் படத்தை உள்ளே வைத்தான்.
பின் எழுந்து சென்று தன்னை சுத்தம் செய்து வந்தவன், ராகவன் தனக்கு அனுப்பிய வீடியோவையும், புகைப்படத்தையும் பார்த்து பின், தன் காருக்குள் இருந்து அவள் அழகாக முகம் மலர சிரிக்கையில் எடுத்த புகைப்படத்தையும் எடுத்துப் பார்த்தான். ‘ஐந்தே கால் அடி உயரம். மாநிறம் தன்னை விட நிறம் கொஞ்சம் தூக்கல். கொஞ்சம் ஒல்லியான உடல்வாகு. அவளின் இருபத்து நான்கு வயதை பதினெட்டாகக் காட்டுது’ என்று நினைத்தவன், “அழகுடி செல்லம். என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா போதும் நான் காலி. இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் தெரியுமா?”
அவன் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் என்று சொல்லும் பொழுது, அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு புரை ஏறியது.”
“நானும், நீயும் தனித்தனியா இருக்கோம். என்னை மிஸ் பண்ணுவியா தனு. பட் ஐ மிஸ் யூ தனு” என்று கைபேசியில் அவளுக்கு முத்தமிட்டு அவளின் நினைவுகளுடன் படுத்தான்.