• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
13


ஆராதனாவை, சரண் சந்தித்த அதே நேரம், நியாவின் பொட்டிக்கில் நுழைந்தவனைக் கண்ட நியா ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

‘என்ன பார்வை பார்க்கிற நீ? பார்த்துப் பார்த்து என்னை ஒரு வழி பண்ணிருவ போலிருக்கே’ என மனதில் நினைத்து அவளுக்கு, ‘ஹாய்’ சொன்னான்.

மென்மையாக சிரித்து தலையசைத்து பதில் சொல்ல, ‘ஏன் பதிலுக்கு ஒரு ஹாய் சொன்னா குறைஞ்சா போயிருவா?’ என்று மனதில் மருகினான்.

‘என்ன?’ என்று புருவம் உயர்த்திக் கேட்டவளிடம், “இப்ப வலி பரவாயில்லையா?” என்று அவள் கைபிடித்து பார்த்து, “ம்... பரவாயில்ல ஆறிட்டு வருது” என்றதும் அவனிடம் இருந்து கையை உருவ, வேலை செய்யும் பெண்களின் பார்வை வித்தியாசமாகப் படவும், “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்டர்ஸ். அன்னைக்கு அடிபட்டதுக்கு நான்தான் மருந்து வச்சேன். அதான் வேற ஒண்ணுமில்லை” என்றான்.

கையில் உள்ளக் கவரை அவளிடம் நீட்டி, “இதை எங்க அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. சண்டே மார்னிங் வேணும். எவ்வளவுன்னு கேட்டு அமௌண்ட் பே பண்ண சொன்னாங்க.”

நியாவின் அருகில் இருந்த பெண், “சார் நீங்க ஒரு வாரம் இல்ல ஒரு நாலு நாள் முன்னாடி கொண்டு வந்திருக்கணும். இப்ப கஷ்டம் சார்” என்றாள்.

“ஹலோ! எங்க அம்மா உங்க ஷாப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா?” என்றான் காட்டமாக.

“சார் எங்க ரூல்ஸ் தான் சொன்னேன்” என்றவளைத் தடுத்து அதை வாங்கிய நியா, மேலே கேட்கச் சொல்ல, அந்தப் பெண்ணும், “சார் என்ன டிசைன்ல தைக்கணும்? கட்டிங் எந்த மாடல் வேணும் சொல்லுங்க?” என கேட்டதும்,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.? “ஞாயிறு எனக்கு நிச்சயதார்த்தம். அதுக்கு தைக்கிற மாதிரி தைச்சிருங்க.”

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த நியா, ‘உனக்கும் அன்றைக்குத் தானா?’ என நினைத்தாள். மறந்தும் அவன் இவனா இருப்பானா என்று நினைக்கவில்லை. நோட் எடுத்து எழுதிக் காண்பிக்க, அதைப்பார்த்த அந்தப் பெண், “சார் நாளைக்கு ஈவ்னிங் ஒரு சிக்ஸ் டூ செவன்குள்ள வந்து வாங்கிக்கோங்க. இந்த சண்டே கடை லீவு. உங்க போன் நம்பர் கொடுங்க. ரெடியானதும் போன் பண்றேன்” என்றாள்.

தன் அடையாள அட்டையை எடுத்துக் கொடுத்தவன், “ஏன் உங்க முதலாளியம்மா பேச மாட்டாங்களோ” என சிறிது கடுப்புடனே கேட்டான்.

“சார் கஸ்டமர் டீலிங் எல்லாம் நான் தான் பார்த்துப்பேன்.”

“சரி நான் கிளம்பறேன்” என்று அவன் வெளியே செல்லும் போது, “ஹாய் தான் கிடையாது. ஒரு பை சொல்லக் கூடவா பஞ்சம்” என்று முனகலோடு சென்றாலும், அதைக் கேட்ட நியா பதில் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

நியாவிடம் தைக்கக் கொடுத்து வீடு வந்தவனிடம், “என்னப்பா போனியா? அங்க அந்தப் பொண்ணு இருந்தாளா? பார்த்தியா?” என்றார் ஆர்வமாக.

“ஹான். இருந்தா இருந்தா. திங்கள்கிழமை என் கார்ல ஒரு பொண்ணு மோதிட்டாள்னு சொன்னேன்ல அது இந்தப் பொண்ணுதான்.”

“அச்சச்சோ இப்ப எப்படி இருக்கிறா? ரொம்ப அடியெல்லாம் இல்லையே? சரியாகிடுச்சா?” என்று கேள்விகளை அடுக்க,

“ஆமா. ரொம்ப முக்கியம். ஒரு வார்த்தை கூடப் பேசலை அந்தப் பொண்ணு. வேலை செய்யுற பொண்ணை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறா.” அவள் தன்னிடம் பேசவில்லை என்பதால் தாயிடம் கடுகடுத்தான்.

“வேற என்னடா பண்ண முடியும் அவளால. அதைவிடு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா? உனக்கு ஓகேதான?”

ஒரு நிமிடம் சந்தோஷம் மின்னலிட, “அம்மா” என்றழைத்தான். பின், “என்னம்மா விளையாடுறீங்களா? நாளை மறுநாள் பொண்ணு பார்க்கப் போறோம். இப்ப இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா என்ன அர்த்தம்?” ஏதோ தோன்ற, “அம்மா நீங்க பார்த்த பொண்ணு இவளா?” என்றான்.

“ஆமா. அவளேதான்.”

“அம்மா” என்று தாயைத் தூக்கிச் சுற்றினான்.

“டேய்! விடுடா. திடீர்னு ஏன்டா இப்படிப் பண்ற?”

“ஹையோ கொடுமையே. அவன் பொண்டாட்டியைத தூக்கி சுத்த வேண்டிய வயசுல, என் பொண்டாட்டியைத் தூக்கிச் சுத்துறானே” என்று அங்கலாய்த்தபடி வந்தார் ஈஸ்வர்.

தாயைக் கீழே இறக்கிவிட்டு, “போங்கப்பா” என்றவன் தாயிடம், “அம்மா எனக்கு அன்னைக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததும் பிடிச்சிருந்திச்சி. ஆனா, நீங்க ஏற்கனவே பார்த்து முடிவு பண்ணியிருந்தால, என்னால ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா, அவளையும், அவ அண்ணனையும் எங்கேயோ பார்த்ததா நியாபகம்” என்றான்.

“ஏன் பார்த்திருக்க மாட்ட. டேய்! அவள் உன்னோட வெற்றி மாமா பொண்ணுடா. உங்கப்பா ப்ரண்டோட பொண்ணு.”

“அம்மா நிஜமாவா சொல்றீங்க? அதான் அவங்களைப் பார்த்ததும் பழகின உணர்வு தோணிச்சா?”

ஈஸ்வர் மகனின் அருகில் வந்து, “உனக்கு அவளைப் பற்றித் முழுசாத் தெரியும். அவள் பிரச்சனை உள்பட. உன்னால முழு மனசோட அவளுக்காக, அவளை ஏத்துக்க முடியும்னா ஓகே சொல்லு. இல்ல,பின்னாடி எதாவது பிரச்சனைன்னா அவள் ரொம்ப உடைஞ்சி போயிருவா. அதுக்கு நானோ, உங்கம்மாவோ சம்மதிக்கமாட்டோம். எதுவாயிருந்தாலும் நல்லா யோசிச்சிக்கோ. இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவளை, கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சிருக்கோம். முடிவு உன் கையில்” என்றார்.

“வேண்டாம்ப்பா” என்றான் பட்டென்று.

“என்னது வேண்டாமா? டேய்! ஒரு நல்ல பொண்ணை மிஸ் பண்றடா.”

“அச்சோ! அது அந்த வேண்டாம் இல்லப்பா. இது வேற வேண்டாம்.”

“என்னடா குழப்புற?”

“ஒண்ணும் குழப்பல. அவளைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்னு சொல்ல வந்தேன்.”

“ஹப்பாடா. ஒரு செகன்ட் பயந்துட்டேன்டா. தேவி இனி நோ ப்ராப்ளம்.”

“ஆனா, அப்பா எங்களுக்கு நிச்சயம் இப்ப பண்ணிருங்க. கல்யாணம் ஒன் இயர் கழிச்சி வச்சிக்கலாம்.”

“ஏய்! என்னடா சொல்ற? ஒரு வருஷம் என்பது ரொம்ப லாங்பா.”

“சொன்னா புரிஞ்சிக்கோங்கப்பா. அவளை அதுக்குள்ள நான் சரி பண்றேன். அப்பத்தான் நான் ஏதோ வாழ்க்கை கொடுத்ததா நினைக்காம, முழு மனசோட என்னோட மனைவியா இங்க இருப்பா.”

“நீ சொல்றதும் சரிதான்டா. நாங்க ஒத்துக்கறோம். எதாவது ஏடாகூடமா ட்ரீட்மெண்ட் கொடுத்திறாதடா.”

“சரிப்பா” என்றான்.

“ஏன்பா நீதான் போட்டோ பார்க்கலை. உனக்கு அவள்தான் பொண்ணுன்னு தெரியாது. ஆனா, அவ பார்த்திருப்பா தான?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“இல்லம்மா. பார்க்கலன்னு தான் நினைக்கிறேன். அப்பா சொல்றதை வச்சிப் பார்த்தா, பொண்ணு பார்க்கிற விஷயத்தைத் தவிர அவள் எதையும் கேர் பண்ணாம இருப்பாள்னு நினைக்கிறேன்.”

“நல்ல ஜோடிப் பொருத்தம் தான் இந்த விஷயத்துல. சரி அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.”

சரண் தங்கையை அழைத்து வந்து இருவரும் சமையல் செய்யும் பொழுது, அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “அண்ணா முகம் பளிச்சின்னு இருக்கு. எதாவது விஷேசமா?” என்றாள்.

“இல்லம்மா. அந்தப் பிரச்சனை தீர்ந்தது. இனி உன்னோட வேலைதான்” என்றான்.

“ஆமா. நான் என்ன கேட்டிட்டுருக்கேன். நீ அங்க இங்க சுத்தி என் கல்யாணத்துல வந்து நில்லு.”

“மாப்பிள்ளை உனக்கு நல்லப் பொருத்தம் குட்டிமா. எல்லா வகையிலும்” என்றவன், “அப்பா வர டைம் ஆகும் போல. நான் சாப்பிட்டு மாடிக்குப் போறேன். காலையில நல்ல அலைச்சல். நீ அப்பா வந்ததும் சாப்பாடு கொடுத்துட்டுத் தூங்கப் போறியா? அப்பா வர லேட்டாகும் போல தெரியுது.” அவனுக்கு அவன் தாயிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும். வேகமாகத் தன்னுடைய அறைக்குச் சென்றவன் உடை கூட மாற்றாமல் தாயிடம் அமர்ந்தான்.

“அம்மா சந்தோஷமான விஷயம். உங்க பையன் பெரியவனாகிட்டான். எப்படின்னு கேட்குறீங்களா? எனக்கு கல்யாணம் ஆகிருச்சிம்மா. அதைத்தான் சொன்னேன். வீட்ல யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையாகிப் போச்சி. சாரிம்மா. தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாங்கல்ல. ஆனா, எனக்கு வேற வழி தெரியலையேம்மா. அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் முடியலை. அப்படி விட்டா அது உங்களையே விடுற மாதிரி இருந்ததும்மா. என்னைப் புரிஞ்சிப்பீங்கல்லமா? ப்ளீஸ்மா. இந்த ஒரு தப்பு தான் இனிமேல் உங்ககிட்ட சொல்லாம ஒரு காரியமும் பண்ணமாட்டேன்.”

“இன்னொரு குட் நியூஸ்மா. நியா குட்டிக்கு நிச்சயதார்த்தம் பண்ணப் போறோம்மா. நீங்க நேர்ல இருந்தா, எவ்வளவு சந்தோஷமா எல்லா வேலையையும் பார்த்து, இந்த வீட்டைச் சுத்தி சுத்தி வந்திருப்பீங்க. ஏன்மா எங்களை விட்டுட்டுப் போனீங்க? ஐ மிஸ் யூம்மா. ஐ மிஸ் யூ” என்று சொல்லிக் கொண்டு தாயின் படத்தை உள்ளே வைத்தான்.

பின் எழுந்து சென்று தன்னை சுத்தம் செய்து வந்தவன், ராகவன் தனக்கு அனுப்பிய வீடியோவையும், புகைப்படத்தையும் பார்த்து பின், தன் காருக்குள் இருந்து அவள் அழகாக முகம் மலர சிரிக்கையில் எடுத்த புகைப்படத்தையும் எடுத்துப் பார்த்தான். ‘ஐந்தே கால் அடி உயரம். மாநிறம் தன்னை விட நிறம் கொஞ்சம் தூக்கல். கொஞ்சம் ஒல்லியான உடல்வாகு. அவளின் இருபத்து நான்கு வயதை பதினெட்டாகக் காட்டுது’ என்று நினைத்தவன், “அழகுடி செல்லம். என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா போதும் நான் காலி. இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் தெரியுமா?”

அவன் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் என்று சொல்லும் பொழுது, அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு புரை ஏறியது.”

“நானும், நீயும் தனித்தனியா இருக்கோம். என்னை மிஸ் பண்ணுவியா தனு. பட் ஐ மிஸ் யூ தனு” என்று கைபேசியில் அவளுக்கு முத்தமிட்டு அவளின் நினைவுகளுடன் படுத்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சாப்பிட்டு முடித்து அறைக்குள் வரும் வரையிலுமே ஆராதனாவிற்கு இருமல் நின்றபாடில்லை.

“ஆரு செல்லம். அண்ணா உன்னைக் கன்னாபின்னான்னு நினைக்கிறாங்க போல. அதான் அப்ப ஆரம்பிச்சது இன்னும் நிற்கல” என்றாள் கேலியாக.

ஒருவாறு சமாளித்து வந்தவள், “ஆரம்பிச்சிட்டியா. என்னவோ விழுந்து விழுந்து காதலிச்சி நீ இல்லைன்னா நானில்லைனு கல்யாணம் பண்ணினவங்க மாதிரி பேசுற. போடி போய் தூங்குற வேலையைப் பாரு.”

“எங்க தூங்குறது? ஆமா. சாயங்காலம் ஏன்டி அப்படி நின்ன? நான் கேட்டதுக்கு பழியை அப்படியே என்மேல போட்டுட்டு எஸ்ஸாகிட்ட.”

அவள் கேட்டதும் கையை ஒரு முறை திரும்பப் பார்த்துவிட்டு, “அது ஒண்ணுமில்லயே. நீயே எதோ கற்பனை பண்ணாத. அதென்ன திடீர் அண்ணன் முறை கொண்டாடுற? நான் முறைக்கிறதையும் கண்டுக்காம, பாசமலர் படம் போடுறீங்க ரெண்டு பேரும்?” என்று பேச்சை மாற்றினாள்.

“அதுவா ஆரு.”

“ஏய்! ஆருன்னு கூப்பிடாத. கருமம் அந்தப் பொறுக்கி இன்னைக்கு கூப்பிட்டது தான் நினைவு வருது.”

“ஹேய்! என்ன விளையாடுறியா. நான் குழந்தையில் இருந்து கூப்பிடுறேன். திடீர்னு மாத்திக்க முடியாது. வேணும்னா அவன் கூப்பிட்டதை மறந்திரு. உண்மையைச் சொல்லணும்னா ஆரு, அன்னைக்கு அண்ணன் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணினப்ப எனக்குத் தோணிச்சி. உங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் சூப்பர்னு.”

“தோணும்டி தோணும். கடைசில உனக்கு ஒரு அண்ணன் கிடைச்ச சந்தோஷம். அதனால இதுவும் பேசுவ. இதுக்கு மேலயும் பேசுவ” என்று திட்டினாள்.

“இல்லையா பின்ன” என்று ஆராவின் அருகில் வந்தமர்ந்தவள், “ஆரு இன்னைக்கு உனக்கு ஸ்பெஷல் டே. என்ன முழிக்கிற? காலையில தான் மேரேஜ் ஆகியிருக்கு. இன்றைய இரவை எல்லாரும் என்ன சொல்வாங்க தெரியுமா?”

அதைப் புரிந்து கொண்ட ஆராதனா, “வேண்டாம் எதுவும் பேசாத. பேசினா கொன்னுருவேன். ஓடிப் போயி உன் பெட்ல படுத்துக்கோ. இல்ல மகளே உன்னைக் கொன்னுருவேன்டி.”

“போடி. எங்க அண்ணன் நீயில்லாம தனியா கஷ்டப்படுவாங்களேன்னு சொல்ல வந்தேன். இதுக்கு போயி போடி” என்றாள் அவளும்.

“ஏன் இத்தனை நாள் இருக்கலை. நான் என்ன கூடவேவா இருந்தேன். ரொம்ப தான் சீன் போடாத.”

“அதுவும் இதுவும் ஒண்ணா. இன்னைக்கு பர்ஸ்ட் நைட்டுடி உனக்கு. பர்ஸ்ட் நைட்.

நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

இன்று முதல் இரவு

இ ன் று மு த ல் இ ர வு ஏ ஹே!”



வேதவல்லி ராகத்தோடு பாடும் பாட்டைக் கேட்டு, அவளை தேவைக்கு அதிகமாகவே அடித்து, ‘சே… நாம சும்மா இருந்தாலும் இந்த தோழிங்க கேரக்டர் சும்மா இருக்கமாட்டாங்க போல. எதையாவது நோண்டி விட்டுட்டு, ஹீரோயினை அவஸ்தைப்பட வைக்கிறதே வேலையா போச்சி. அச்சோ! இதுவரை தோணாதது கூட இப்பக் கண் முன்னாடி படமா ஓடுதே. அடிப்பாவி! நல்லா இருந்தவளை இப்படி புலம்ப வச்சிட்டாளே’ என்று படுத்தாள்.

ஆனால், உறக்கம் தான் வரவில்லை. தான் சொன்னதற்கு அவன் அடித்தபடி பேசியவை யாவும் நியாபகம் வந்தது. ‘அம்மாவோட தாலின்னா அம்மா இப்ப உயிரோட இல்லையா? இல்லையே அன்னைக்கு அம்மாகிட்ட பேசுனேன்னு சொன்னாங்களே. அப்ப எப்படித தாலி? கடவுளே ஒருவேளை அப்பா இல்லையா?’ என்று யோசித்தாள். பின், ‘அவங்க தங்கைக்கும் எதோ குறைன்னு சொன்னாங்களே. என்னவா இருக்கும்? சே... என்னை இப்படி புலம்ப வச்சிட்டியே மச்சான். தனு செல்ல பெயர். ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு. இதுவரை என்னை யாரும் கூப்பிட்டிருக்காத பெயர்’ என்று பலவற்றையும் யோசித்தவாறு உறங்கினாள்.

மறு நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் தனலக்ஷ்மி பெண்கள் விடுதி முன்பு காவலருக்கான காரில் வந்திறங்கி, ராணியிடம் வந்த முகிலன், “வேதவல்லியைப் பார்க்கணும் மேம்” என்று அனுமதி கேட்டான்.

“என்ன சார் எதாவது பிரச்சனையா? நல்ல பொண்ணு சார். அவளை ஏன் பார்க்கணும்? நீங்க அவளுக்கு சொந்தமா?”

“சொந்தம் ஆகப் போறவன். எனக்கு பார்த்திருக்கிற பொண்ணு தான் அவங்க. அம்மா சொன்னப்ப வர டைம் கிடைக்கலை. அதனால, இன்னைக்கு வலுக்கட்டாயமா அனுப்பி விட்டுட்டாங்க. டௌட் எதுவும் இருந்தா உங்க மருமகன் சரணைக் கேளுங்க” என்றான்.

“சரணை உங்களுக்குத் தெரியுமா? இப்படி ஒரு ப்ரண்ட் இருக்கிறதா சொல்லவே இல்லையே.”

“இல்ல மேம். மூனு நாள் முன்னாடி தான் ப்ரண்ட் ஆனோம்.”

“இருப்பா. இதோ வரச் சொல்றேன்” என்று அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிவிட, வேலைக்குப் போவதற்காக கிளம்பி நின்றிருந்த வேதவல்லி, யாரது என புரியாது வேகமாக இறங்கி வந்தவள், முகிலனின் முகம் தெரியவும், “ஆத்தாடி இவனா?” என்று அலறியடித்து திரும்ப மேலே செல்லத் திரும்ப,

அவளைக் கவனித்த ராணி, “வேதா இங்க வாமா. இவர்தான் உன்னைப் பார்க்க வந்திருக்காரு. உன்கிட்ட ஒரு பைவ் மினிட்ஸ் பேசணுமாம். எங்க சார் கூப்பிட்டு போகப் போறீங்க?” என்று அவளின் பாதுகாப்புக்காகவும் கேட்டார்.

“எங்கேயும் இல்ல மேடம். எதிர்ல உள்ள பார்க்குக்குத்தான்.”

“என்னது பார்க்குக்கா?” என்று அதிர்ச்சியானாள் வேதா.

“ஆமா. அதுக்கு ஏன் உன் முகம் இவ்வளவு அதிர்ச்சி எக்ஸ்ப்ரஷன் கொடுக்குது?”

“ஒ... ஒண்ணுமில்லையே. ஒண்ணுமே இல்லை” என்று அசட்டு சிரிப்பைக் கொடுத்து, ‘மூணு முறை அந்த பார்க்கிற்கு போன ஆராதனா, இன்றைக்கு திருமதி.ஆராதனாவா நிற்கிறா. அதே பார்க்கிற்கு நானுமா? ஐயோ! இவன் என்னை விடமாட்டான் போலவே’ என்று மனதினுள் நினைத்து புலம்பினாள்.

“என்னமா வேதா? உன் உட்பியைப் பார்த்து ஏன் சங்கோஜப்படுற? எதிர்ல உள்ள பார்க்கிற்கு தான ரெண்டு பேரும் போறீங்க. போயிட்டு வாங்க” என்றார் அவள் நிலை புரியாது.

ராணியிடம் நன்றி தெரிவித்து, அவளருகில் வந்தவன் ‘உட்பி’ என்ற வார்த்தையில் மறு அதிர்ச்சிக்கு சென்றவளை, “ஹேய்! ப்யூட்டி என்ன ஷாக்காகிட்ட? அவங்க முன்னாடி கேஸ் பத்தி பேசினா, உன் ப்ரண்ட் கல்யாணத்தோட அவங்க அண்ணன் பையனைப் பற்றிய வண்டவாளமும், தண்டவாளம் ஏறிடாதா.?”

“என்னது? சரண் அண்ணா ராணி மேடமோட அண்ணன் பையனா?”

“ஏய்! ஏய்! ப்யூட்டி வாயை மூடு. சத்தம் போடாத” என்று அவள் வாயைப் பொத்தினான்.

“ச்சு.. கையை எடுங்க. கையெடுங்க சொல்றேன்ல. நான் கத்தலை” என்றதும் கையை எடுத்தவனை மனதினுள் திட்டியபடியே பூங்காவினுள் நுழைந்து, அவன் ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னதும், மறு அதிர்ச்சியைச் சந்தித்தாள்.

‘சேம் ப்ளேஸ்! ஆள் தான் வேற. ஆரு என்னோட நேரமும் சரியில்ல போலயே. நாம அன்னைக்குப் பேசிட்டிருந்த அதே பெஞ்ச். மை காட்! நான் இப்ப என்ன பண்ணுவேன்? இவன் வேற உட்பின்னு சொல்லி உயிரை வாங்குறான்” என மனதினுள் புலம்பினாள்.

“என்னாச்சி வேதி? உட்காரு உன்கிட்ட பேசணும்” என்றான் அவள் எண்ணம் போகும் போக்கை அறியாது.

‘என்னது வேதியா? இதென்ன புதுசா இருக்கு. ஆஹா! ஆராவுக்குத் தான் சோதனை வரும்னு பார்த்தா, வேதாவுக்கும் சோதனை வருதே. கொஞ்சம் உஷாரா இரு வேதா’ என்று தன்னைத் தேற்றி, “என் பெயர். வேதவல்லி. வேதான்னு கூப்பிடலாம்” என்றாள்.

“இதுவும் உன்னோட நேம் தான்மா.” அவள் அவனை முறைத்ததும், “ஓகே நம்ம பிரச்சனையை ஒதுக்கி வச்சிட்டு, உன் ப்ரண்டைப் பற்றிப் பேசுவோமா?”

பெஞ்சில் அவள் அருகில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தவன், “வேதி சாரி வேதா. அந்த சரவணன் உன் ப்ரண்டை செலக்ட் பண்ணினதுக்கு காரணம், அவங்கப்பா சிட்டிக்குள்ள வச்சிருக்கிற டிபார்ட்மென்ட் ஸ்டோர். போதை மருந்து தெற்கிலும் சேல் பண்ண ஒரு துருப்புச் சீட்டு தான் உன் ப்ரண்ட். அப்பா, அம்மா இல்லன்றதை சொல்லி ஆராதனாவைக் கல்யாணம் முடிச்சி, மாமனாரோட கடையில வச்சி போதைப் பொருள் சேல்ஸ் பண்றது அவன் ஐடியா. மாட்டிக்கிட்டா மாமனார் பேரைச் சொல்லி எஸ்கேப் ஆகிரலாமே. இதான் அவனோட மெய்ன் ப்ளான். உன் ப்ரண்ட் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதும், அவனுக்கு என்ன செய்யன்னு தெரியலை. அதான் அந்த திருட்டுக் கல்யாண ஏற்பாடைப் பண்ணினது. சரணுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவன் மேல சந்தேகம். அந்த சந்தேகத்துல தான் சேகரிடம் விசாரிக்க ஆரம்பிச்சான். அங்க தொட்டு இங்க தொட்டு ராகவன் வந்து சொல்லவும் எல்லா உண்மையும் தெரிஞ்சிது. இல்லன்னா உன் ப்ரண்டோட நிலமை இந்நேரம் நாசமாகிருக்கும்” என்று அன்று சேகர் அவர்கள் பேசியதை கேட்டதைச் சொன்னான்.

“மை காட்!” என்று அதிர்ந்து, “தேங்க் காட்” என்று முடித்தாள்.

“அப்புறம் ப்யூட்டி கிளம்பலாமா? எதாவது நியூஸ் கிடைச்சா வர்றேன்” என்றான்.

‘வர வேண்டாம்’ என்று மனதினுள் நினைக்க,

“புரியுது. வர வேண்டாம்னு நீ நினைச்சது. அது தான?”

அவள் தலை கவிழவும், “ஹேய்! ப்யூட்டி ஒண்ணு சொல்லவா?” என்றதும், வேதவல்லிக்கு இதயம் எகிறிக் குதித்தது.

‘அடப்பாவி! டேய் யப்பா! அந்த வார்த்தையை மட்டும் சொல்லிராதடா. ஏற்கனவே ஒருத்தி அடிச்ச அடி கல்யாணத்துல வந்து முடிஞ்சிருக்கு. நான் நல்ல பொண்ணா இருக்கணும்னு நினைக்கிறேன்’ என்று மனதினுள் அரற்றிக்கொண்டிருந்தாள்.

“என்ன ப்யூட்டி அடிக்கடி கனவுலகம் போயிடுற?” நான் சொல்ல வந்தது என்னன்னா” என்றதும் காதைப் பொத்தி, “வேண்டாம். நான் கேட்கல வாங்க போகலாம்” என்றாள்.

அவளின் செய்கையை நினைத்து சிரித்தபடி, “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். நாம போகலாம்னு” என்றதும் தான் அவளுக்கு சீரான மூச்சே வந்தது.

மறுநாள் ஞாயிறு பரபரப்புடனும், சுறுசுறுப்புடனும் விடிய, தனலக்ஷ்மி இல்லம் திருவிழாக்கோலம் பூண்டது. அனைவரும் காலையிலேயே அங்கு இருந்தனர். கலாட்டாக்களும், சிரிப்புக்களும் நிறைந்திருக்க நியா மட்டும் யாருக்கோ விழா என்பது போல் அமர்ந்திருந்தாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top