- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
13
தாயின் மிரட்டலில் அதிர்ந்தாலும் தன்னைப் பணிய வைக்கவே அப்படி சொல்கிறாரென்று தன் பயத்தை வெளியே காட்டாது, “அவள் உங்களோட பொண்ணுன்றது ஞாபகமிருக்கும் நினைக்கிறேன். இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு உங்க ஆன்மீகத்துல போய் உட்காருங்க” என்று அலட்சியமாகவே பதிலளித்தான்.
“அந்தளவுக்கு நான் நல்லவள் இல்லை மகனே! வேணும்னா ஒரு சாம்பிள் காட்டவா” என்று தங்கை கணவரின் கைபேசியிலிருந்த வீடியோவை ஓடவிட, அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான் செந்தூரன்.
கல்லூரி முடித்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு நடந்து செல்லும் பவானியை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் கையுறை, முகமூடி என கிட்டத்தட்ட ஆணா பெண்ணா அடையாளம் தெரியா ஒரு உருவம் அவளை வேண்டுமென்றே இடித்துக் கீழே தள்ளிச் செல்ல, “அப்பா” என்ற அலறலுடன் கீழே விழுந்தவள் கையில் சிராய்த்து இரத்தம் கசிய, காலைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள் பவானி.
மனம் துடிக்க அதைப் பார்த்தவனுக்கு, சற்று நேரத்திற்கு முன் நடந்ததென்று தங்கை காலையில் அணிந்த ஆடை காட்டிக்கொடுக்க, அதிகபட்ச கோபம் வந்த போதிலும் சிறிது நிதானித்தவன், “தற்செயலா நடந்த விபத்தை நீங்க செய்ததா பொய் சொல்றீங்கன்னு நான் சொல்றேன்” என்றான்.
“அப்படியா? அந்த ஆக்சிடெண்ட் பண்ணின ஆளே போன் பண்ணினா ஒத்துக்குவியா? அது பெண்கள் படிக்கிற கல்லூரி. அங்க ஆண்களை உள்ளே விடமாட்டாங்க. இருந்தும் ஒருத்தன் தைரியமா போயிருக்கான்னா பாரு” என்றார் தெனாவெட்டாக.
ரசிகா பவானியைப் பழிவாங்க செய்த விபத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. எப்பொழுதும் ஏதோ ஒருவகையில் மகளைத் தொடர ஆள் வைத்திருந்தார். அதில் அவள் பிரிவுப் பெண்கள் சிலரும் உண்டு. அதில் யாரோ அனுப்பிய வீடியோதான் அது. யாராவது கேட்டால் கட்டுப்பாடு என்பார். அதற்குப் பெயர் அடக்குமுறை என்பதை அவர் மட்டுமே அறிவார். குழந்தையே வேண்டாம் என்றெண்ணியவருக்குக் குழந்தைகளாக வந்து பிறந்தார்களல்லவா, அதன் வினையை அறுவடை செய்கிறார்கள்!
“நம்பலைல்ல. இரு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போடுறேன்” என்றவர் யாருக்கோ அழைக்க, எதிரே எடுக்கப்பட்ட நொடி, “அம்மா நீங்க சொன்ன மாதிரியே செய்தாச்சி. இப்ப சந்தோஷமா இருக்கீங்கதான? இல்லை கைகால் எடுக்கிற மாதிரியிருந்தாலும் சொல்லுங்க செய்திரலாம்” என்றான் அவன்.
“இப்போதைக்கு இதுபோதும்டா கண்ணா. தேவைன்னா போன் பண்றேன்” என்று போனை வைத்து மகனைக் கண்டார்.
அந்நேரம் பவானி தன் இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி, முகத்தில் வேதனையுடன் வலது காலை சற்றுத் தாங்கியபடி நடந்து வந்தாள். அருகில் சென்று ஆறுதல் சொல்ல மனம் விளைந்தாலும், பழக்கமில்லா அப்பழக்கம் அவனுக்குத் தடா போட, அருகிலேயே பதில் வேண்டி தாயும் நின்றிருக்க அவளிடம் செல்லவியலாது தங்கையை தூரயிருந்தே ஆராய்ந்தான்.
அவளோ அண்ணனவனை சிறு ஏக்கத்தோடு பார்த்து அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள, தன் மேலுள்ள கோபத்தில்தான் செல்கிறாள் என்றறியாது போனான் செந்தூரன்.
தான் ஒரு மருத்துவன்! தங்கைக்கு சிகிச்சையளிக்கவாவது அருகில் செல்ல வேண்டுமென்பதை மறந்திருந்தானோ! தங்கையைப் புரியும் இடத்தில் அவனும் அல்ல! புரியவைக்கும் இடத்தில் அவளும் அல்ல!
“இப்பச் சொல்லு? நான் சொல்லுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?” என்று கறாராகக் கேட்டார் ராஜேஸ்வரி.
“இப்படிக் கட்டாயப்படுத்தியேனும் அந்தப் பொண்ணை என் தலையில் கட்டணும்னு என்னயிருக்கு?” கிட்டத்தட்ட கோபத்தில் கத்தினான்.
‘பக்கத்துல இருந்தா அவளை எண்ணம்போல் பழிவாங்கலாமே! அவளுக்குக் கல்யாணம் மட்டும்தான் நடக்கும்’ என மனதிற்குள் நினைத்து, “காரணமெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. அந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. நீ முடிவைச் சொல்லுறியா? இல்லை முடிச்சிரவா?” என்றார் திரும்பவும்.
“சே.. நீங்க பெத்த பொண்ணுன்ற பந்தபாசம் கூடவா இல்லை” என்றான் எரிச்சலாக.
“தொப்புள் கொடிக்கு முன்ன உள்ள தாலிக்கொடி பந்தத்தையே வேண்டாம்னு போனவள் நான். அதை மறந்துட்ட போல. சும்மா பேசி நேரத்தைக் கடத்தாம பதில் சொல்லு?” என்று பிடிவாதமாக நின்றார்.
“சரி நான் சம்மதிக்குறேன். இன்னொரு முறை பவி மேல சின்னதா கீறல் பட்டாலும், அப்புறம் ஒரு பொண்ணு உங்களை உள்ளூரில் நாறடிச்சிருக்கா. நான் அதை உலகத்துக்கேக் காட்டிருவேன். அப்புறம் நீங்க காலம் முழுக்கக் களிதான் திங்கணும்” என்றான் பதில் மிரட்டலாக.
“அந்தப் பொண்ணாலதான்டா உன்கிட்ட இப்படிப் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிப் பழி தீர்க்குறேன்” என்று கிளம்ப, செல்லும் அவரை வன்மமாகவே முறைத்திருந்தான் செந்தூரன்.
“என் தங்கச்சியை இரத்தக் கறையோட பார்த்தப்ப உள்ளுக்குள்ள ரொம்பவே வலிச்சது. ஆனா, அறுதலா பேசக்கூட முடியலை. எதாவது சொல்லுவேன்னு என் முகத்தைப் பார்த்த பிள்ளைக்கு ஏமாற்றம் மட்டும்தான் கொடுத்திருக்கேன். குறைந்தபட்சமா வைத்தியம் பண்ணக் கூட அவள் பக்கத்தில் போகலை. அவளுடைய பார்வைக்கான அர்த்தம் அப்ப எனக்குத் தெரியலை. அப்பன்னு இல்லை நிறைய தடவை என்னைப் பார்க்கிறதுக்கு அர்த்தம் புரியலை. அவள் என்னை விட்டுப் போனதும் நிதானமா யோசிச்சா, எனக்கே என்மேல கோபம் கோபமா வருது. ரொம்ப செல்ஃபிஷh இருந்திருக்கேன்ல?”
அன்பழகிக்குப் புரிந்தது. ரசிகா செய்ததைத் தனதாக்கி மிரட்டியிருக்கும் மாமியாரை என்னவென்று சொல்வாள்.
“அதை விடுங்க செந்தூரன். நடந்ததை மாற்ற முடியாது. நடக்கிறது நல்லதா நடக்கட்டுமே. சரி கட்டாயக் கல்யாணம்னாலும் உங்களுக்கு உங்க மனைவியைப் பிடிக்குமா?” என கேட்டார் டாக்டர்.ரஹ்மான்.
“கல்யாணத்தப்ப பிடிக்காது டாக்டர். ஆனா, அந்த மண்டபத்துல அத்தனை பேர் முன்ன என் கண்ணைப் பாருங்கன்னு அழுத்தமா சொல்லி பார்க்க வச்சா பாருங்க, அந்தக் கண்ணுல ஏதோ இருக்கு டாக்டர். அந்தத் தைரியமும், அந்தக் கண்களும் அவ்வளவு பிடிச்சது. ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன்னு வச்சிக்கலாம்” என்றவன் இதழ்கள் புன்னகையை உதிர்க்க, அன்பழகியோ ஆவென பார்த்திருக்க, உள்ளுக்குள் நாணம் நர்த்தனமாடியது.
“என்னைப் பெத்தவள் செய்த வேலையில் பிடிவாதமா அவளை மறுத்துட்டேன். என் தங்கச்சிக்காக வந்து என்கிட்ட சண்டை போட்டப்ப அன்பழகிகிட்ட முழு சரண்டராகிட்டேன் டாக்டர். அன்பழகி! பெயரே எவ்வளவு அழகாயிருக்குல்ல? அன்பேயில்லாமல் வளர்ந்த எனக்கு அன்போட சேர்த்து அழகியும் கிடைச்சிருக்கா. அவள் மேல தப்பிருக்க வாய்ப்பில்லைன்னு தோன்றியது அப்பொழுதுதான் டாக்டர்” என்றான் ரசனையுடன்.
“வாவ் செந்தூரன்! உங்க மனைவியை ரொம்ப நேசிக்குறீங்கன்னு சொல்லுங்க?” என்று ஊக்கப்படுத்தினார்.
“எனக்கு எல்லாமே அவள்தான் டாக்டர். ஆனா, இதுவரை அவள்கிட்டச் சொன்னதில்லை. தூரத்துல இருந்து பார்த்துக்குவேன்” எனும்பொழுது அன்பழகிக்குக் கண்கலங்கிவிட்டது. ‘இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டுதான் அன்று அப்படி நடந்து கொண்டானா?’ அந்நேரம் தன்னைவிட கணவன் எத்தனை துடித்திருப்பான் என்ற எண்ணமே அவளை வேதனையடையச் செய்தது.
“உங்களுக்கு அன்பழகியைப் பிடிக்கும் சரி. அவங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?”
“பிடிச்சதாலதான் டாக்டர் எல்லாத்தையும் மறந்து வாழக்கூப்பிட்டா. எனக்குதான் அவளோட வாழக் கொடுத்து வைக்கலை” என்றவன் குரலில் கரகரப்பு ஏற அன்பழகியின் கண்களில் கண்ணீர்த் துளிகள்.
“ஓகே ரிலாக்ஸ். இவ்வளவு பிடித்த மனைவியை ஏன் விவாகரத்து செய்யப்போறீங்க செந்தூரன்?”
“முன்ன என் தங்கைக்காகன்னா, இப்ப என் அன்பழகிக்காக சேர்த்தும் டாக்டர்” என்றான் ஒருவித மரத்தகுரலில்.
“புரியலை செந்தூரன்?” என்க, அன்பழகிக்கோ இன்னதென்று புரியா உணர்வு.
“திரும்பவும் அதே கொலை மிரட்டல். அப்ப பவியை சொன்னவங்க, இப்ப அன்பழகியையும் சேர்த்துக்கிட்டாங்க” என்று அனைவரையும் அதிர வைத்தான்.
“நிஜமாவா?”
“என் சார்பா எனக்கே தெரியாமல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. என் தங்கை வந்து சண்டை போட்டப்பதான் விஷயமே தெரியும். என் அன்பழகியை வேண்டாம்னு மனதார நானே சொல்வேனா டாக்டர்? சொல்ல வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தினாங்க. அண்ணி உன்னைக் காதலிக்கிறாங்கன்னு பவி சொல்றா. அது எவ்வளவு பெரிய சந்தோஷம். அதுவரை அப்படியொரு சந்தோஷத்தை அனுபவிச்சதில்லை டாக்டர். ஒரு மனைவி கணவனைக் காதலிக்குறது பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். ஆனா, எங்க விஷயத்தில் எல்லாமே தப்பும் தவறுமா, தகராறா போயிருந்ததே!”
“என் தங்கையை சமாதானப்படுத்தி, அன்பழகியோட சேர்த்து நாங்க மூணு பேரும் ஒண்ணாயிருக்க ப்ளான் செய்தா, என்னைப் பெத்தவள் வேறொரு ப்ளான் செய்து எல்லாத்தையும் உடைச்சிட்டா” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.
தாயின் மிரட்டலில் அதிர்ந்தாலும் தன்னைப் பணிய வைக்கவே அப்படி சொல்கிறாரென்று தன் பயத்தை வெளியே காட்டாது, “அவள் உங்களோட பொண்ணுன்றது ஞாபகமிருக்கும் நினைக்கிறேன். இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு உங்க ஆன்மீகத்துல போய் உட்காருங்க” என்று அலட்சியமாகவே பதிலளித்தான்.
“அந்தளவுக்கு நான் நல்லவள் இல்லை மகனே! வேணும்னா ஒரு சாம்பிள் காட்டவா” என்று தங்கை கணவரின் கைபேசியிலிருந்த வீடியோவை ஓடவிட, அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான் செந்தூரன்.
கல்லூரி முடித்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு நடந்து செல்லும் பவானியை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் கையுறை, முகமூடி என கிட்டத்தட்ட ஆணா பெண்ணா அடையாளம் தெரியா ஒரு உருவம் அவளை வேண்டுமென்றே இடித்துக் கீழே தள்ளிச் செல்ல, “அப்பா” என்ற அலறலுடன் கீழே விழுந்தவள் கையில் சிராய்த்து இரத்தம் கசிய, காலைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள் பவானி.
மனம் துடிக்க அதைப் பார்த்தவனுக்கு, சற்று நேரத்திற்கு முன் நடந்ததென்று தங்கை காலையில் அணிந்த ஆடை காட்டிக்கொடுக்க, அதிகபட்ச கோபம் வந்த போதிலும் சிறிது நிதானித்தவன், “தற்செயலா நடந்த விபத்தை நீங்க செய்ததா பொய் சொல்றீங்கன்னு நான் சொல்றேன்” என்றான்.
“அப்படியா? அந்த ஆக்சிடெண்ட் பண்ணின ஆளே போன் பண்ணினா ஒத்துக்குவியா? அது பெண்கள் படிக்கிற கல்லூரி. அங்க ஆண்களை உள்ளே விடமாட்டாங்க. இருந்தும் ஒருத்தன் தைரியமா போயிருக்கான்னா பாரு” என்றார் தெனாவெட்டாக.
ரசிகா பவானியைப் பழிவாங்க செய்த விபத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. எப்பொழுதும் ஏதோ ஒருவகையில் மகளைத் தொடர ஆள் வைத்திருந்தார். அதில் அவள் பிரிவுப் பெண்கள் சிலரும் உண்டு. அதில் யாரோ அனுப்பிய வீடியோதான் அது. யாராவது கேட்டால் கட்டுப்பாடு என்பார். அதற்குப் பெயர் அடக்குமுறை என்பதை அவர் மட்டுமே அறிவார். குழந்தையே வேண்டாம் என்றெண்ணியவருக்குக் குழந்தைகளாக வந்து பிறந்தார்களல்லவா, அதன் வினையை அறுவடை செய்கிறார்கள்!
“நம்பலைல்ல. இரு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போடுறேன்” என்றவர் யாருக்கோ அழைக்க, எதிரே எடுக்கப்பட்ட நொடி, “அம்மா நீங்க சொன்ன மாதிரியே செய்தாச்சி. இப்ப சந்தோஷமா இருக்கீங்கதான? இல்லை கைகால் எடுக்கிற மாதிரியிருந்தாலும் சொல்லுங்க செய்திரலாம்” என்றான் அவன்.
“இப்போதைக்கு இதுபோதும்டா கண்ணா. தேவைன்னா போன் பண்றேன்” என்று போனை வைத்து மகனைக் கண்டார்.
அந்நேரம் பவானி தன் இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி, முகத்தில் வேதனையுடன் வலது காலை சற்றுத் தாங்கியபடி நடந்து வந்தாள். அருகில் சென்று ஆறுதல் சொல்ல மனம் விளைந்தாலும், பழக்கமில்லா அப்பழக்கம் அவனுக்குத் தடா போட, அருகிலேயே பதில் வேண்டி தாயும் நின்றிருக்க அவளிடம் செல்லவியலாது தங்கையை தூரயிருந்தே ஆராய்ந்தான்.
அவளோ அண்ணனவனை சிறு ஏக்கத்தோடு பார்த்து அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள, தன் மேலுள்ள கோபத்தில்தான் செல்கிறாள் என்றறியாது போனான் செந்தூரன்.
தான் ஒரு மருத்துவன்! தங்கைக்கு சிகிச்சையளிக்கவாவது அருகில் செல்ல வேண்டுமென்பதை மறந்திருந்தானோ! தங்கையைப் புரியும் இடத்தில் அவனும் அல்ல! புரியவைக்கும் இடத்தில் அவளும் அல்ல!
“இப்பச் சொல்லு? நான் சொல்லுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?” என்று கறாராகக் கேட்டார் ராஜேஸ்வரி.
“இப்படிக் கட்டாயப்படுத்தியேனும் அந்தப் பொண்ணை என் தலையில் கட்டணும்னு என்னயிருக்கு?” கிட்டத்தட்ட கோபத்தில் கத்தினான்.
‘பக்கத்துல இருந்தா அவளை எண்ணம்போல் பழிவாங்கலாமே! அவளுக்குக் கல்யாணம் மட்டும்தான் நடக்கும்’ என மனதிற்குள் நினைத்து, “காரணமெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. அந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. நீ முடிவைச் சொல்லுறியா? இல்லை முடிச்சிரவா?” என்றார் திரும்பவும்.
“சே.. நீங்க பெத்த பொண்ணுன்ற பந்தபாசம் கூடவா இல்லை” என்றான் எரிச்சலாக.
“தொப்புள் கொடிக்கு முன்ன உள்ள தாலிக்கொடி பந்தத்தையே வேண்டாம்னு போனவள் நான். அதை மறந்துட்ட போல. சும்மா பேசி நேரத்தைக் கடத்தாம பதில் சொல்லு?” என்று பிடிவாதமாக நின்றார்.
“சரி நான் சம்மதிக்குறேன். இன்னொரு முறை பவி மேல சின்னதா கீறல் பட்டாலும், அப்புறம் ஒரு பொண்ணு உங்களை உள்ளூரில் நாறடிச்சிருக்கா. நான் அதை உலகத்துக்கேக் காட்டிருவேன். அப்புறம் நீங்க காலம் முழுக்கக் களிதான் திங்கணும்” என்றான் பதில் மிரட்டலாக.
“அந்தப் பொண்ணாலதான்டா உன்கிட்ட இப்படிப் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிப் பழி தீர்க்குறேன்” என்று கிளம்ப, செல்லும் அவரை வன்மமாகவே முறைத்திருந்தான் செந்தூரன்.
“என் தங்கச்சியை இரத்தக் கறையோட பார்த்தப்ப உள்ளுக்குள்ள ரொம்பவே வலிச்சது. ஆனா, அறுதலா பேசக்கூட முடியலை. எதாவது சொல்லுவேன்னு என் முகத்தைப் பார்த்த பிள்ளைக்கு ஏமாற்றம் மட்டும்தான் கொடுத்திருக்கேன். குறைந்தபட்சமா வைத்தியம் பண்ணக் கூட அவள் பக்கத்தில் போகலை. அவளுடைய பார்வைக்கான அர்த்தம் அப்ப எனக்குத் தெரியலை. அப்பன்னு இல்லை நிறைய தடவை என்னைப் பார்க்கிறதுக்கு அர்த்தம் புரியலை. அவள் என்னை விட்டுப் போனதும் நிதானமா யோசிச்சா, எனக்கே என்மேல கோபம் கோபமா வருது. ரொம்ப செல்ஃபிஷh இருந்திருக்கேன்ல?”
அன்பழகிக்குப் புரிந்தது. ரசிகா செய்ததைத் தனதாக்கி மிரட்டியிருக்கும் மாமியாரை என்னவென்று சொல்வாள்.
“அதை விடுங்க செந்தூரன். நடந்ததை மாற்ற முடியாது. நடக்கிறது நல்லதா நடக்கட்டுமே. சரி கட்டாயக் கல்யாணம்னாலும் உங்களுக்கு உங்க மனைவியைப் பிடிக்குமா?” என கேட்டார் டாக்டர்.ரஹ்மான்.
“கல்யாணத்தப்ப பிடிக்காது டாக்டர். ஆனா, அந்த மண்டபத்துல அத்தனை பேர் முன்ன என் கண்ணைப் பாருங்கன்னு அழுத்தமா சொல்லி பார்க்க வச்சா பாருங்க, அந்தக் கண்ணுல ஏதோ இருக்கு டாக்டர். அந்தத் தைரியமும், அந்தக் கண்களும் அவ்வளவு பிடிச்சது. ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன்னு வச்சிக்கலாம்” என்றவன் இதழ்கள் புன்னகையை உதிர்க்க, அன்பழகியோ ஆவென பார்த்திருக்க, உள்ளுக்குள் நாணம் நர்த்தனமாடியது.
“என்னைப் பெத்தவள் செய்த வேலையில் பிடிவாதமா அவளை மறுத்துட்டேன். என் தங்கச்சிக்காக வந்து என்கிட்ட சண்டை போட்டப்ப அன்பழகிகிட்ட முழு சரண்டராகிட்டேன் டாக்டர். அன்பழகி! பெயரே எவ்வளவு அழகாயிருக்குல்ல? அன்பேயில்லாமல் வளர்ந்த எனக்கு அன்போட சேர்த்து அழகியும் கிடைச்சிருக்கா. அவள் மேல தப்பிருக்க வாய்ப்பில்லைன்னு தோன்றியது அப்பொழுதுதான் டாக்டர்” என்றான் ரசனையுடன்.
“வாவ் செந்தூரன்! உங்க மனைவியை ரொம்ப நேசிக்குறீங்கன்னு சொல்லுங்க?” என்று ஊக்கப்படுத்தினார்.
“எனக்கு எல்லாமே அவள்தான் டாக்டர். ஆனா, இதுவரை அவள்கிட்டச் சொன்னதில்லை. தூரத்துல இருந்து பார்த்துக்குவேன்” எனும்பொழுது அன்பழகிக்குக் கண்கலங்கிவிட்டது. ‘இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டுதான் அன்று அப்படி நடந்து கொண்டானா?’ அந்நேரம் தன்னைவிட கணவன் எத்தனை துடித்திருப்பான் என்ற எண்ணமே அவளை வேதனையடையச் செய்தது.
“உங்களுக்கு அன்பழகியைப் பிடிக்கும் சரி. அவங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?”
“பிடிச்சதாலதான் டாக்டர் எல்லாத்தையும் மறந்து வாழக்கூப்பிட்டா. எனக்குதான் அவளோட வாழக் கொடுத்து வைக்கலை” என்றவன் குரலில் கரகரப்பு ஏற அன்பழகியின் கண்களில் கண்ணீர்த் துளிகள்.
“ஓகே ரிலாக்ஸ். இவ்வளவு பிடித்த மனைவியை ஏன் விவாகரத்து செய்யப்போறீங்க செந்தூரன்?”
“முன்ன என் தங்கைக்காகன்னா, இப்ப என் அன்பழகிக்காக சேர்த்தும் டாக்டர்” என்றான் ஒருவித மரத்தகுரலில்.
“புரியலை செந்தூரன்?” என்க, அன்பழகிக்கோ இன்னதென்று புரியா உணர்வு.
“திரும்பவும் அதே கொலை மிரட்டல். அப்ப பவியை சொன்னவங்க, இப்ப அன்பழகியையும் சேர்த்துக்கிட்டாங்க” என்று அனைவரையும் அதிர வைத்தான்.
“நிஜமாவா?”
“என் சார்பா எனக்கே தெரியாமல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. என் தங்கை வந்து சண்டை போட்டப்பதான் விஷயமே தெரியும். என் அன்பழகியை வேண்டாம்னு மனதார நானே சொல்வேனா டாக்டர்? சொல்ல வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தினாங்க. அண்ணி உன்னைக் காதலிக்கிறாங்கன்னு பவி சொல்றா. அது எவ்வளவு பெரிய சந்தோஷம். அதுவரை அப்படியொரு சந்தோஷத்தை அனுபவிச்சதில்லை டாக்டர். ஒரு மனைவி கணவனைக் காதலிக்குறது பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். ஆனா, எங்க விஷயத்தில் எல்லாமே தப்பும் தவறுமா, தகராறா போயிருந்ததே!”
“என் தங்கையை சமாதானப்படுத்தி, அன்பழகியோட சேர்த்து நாங்க மூணு பேரும் ஒண்ணாயிருக்க ப்ளான் செய்தா, என்னைப் பெத்தவள் வேறொரு ப்ளான் செய்து எல்லாத்தையும் உடைச்சிட்டா” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.