• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
13


கிளம்பும் நேரம் நெருங்கியதால் அவந்திகாவின் மறுபுறம் ஒரு கையை ஊன்றியிருந்தவன், “ஏய் அழகி. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே அது நிஜமா?” என்றதும் எதைச் சொல்கிறான் என புரியாமல் விழித்தவளிடம், “நான் உரிமை எடுத்துக்கவா?” என்றதும் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகத்தை எங்கு வைப்பதென்று திணறிக் கொண்டிருந்தவளை, ரசித்துக் கொண்டிருந்தவன், “முகம் புதைக்க இடம் தேடுறியா அழகி? உனக்கே உனக்காகன்னு என் மார்பு இருக்கு பாரு” என்று சட்டையை விலக்கி நெஞ்சு நிமிர்த்திக் காட்டினான்.

அந்த அழுக்கனின் கவர்ச்சியில், அந்த அழகியின் மனம் சலனமடைய ஆரம்பித்தது. “ப்ச்... கார்த்திக். என்ன பேச்சிது?” என்று அதட்டினாலும் அவன் மார்பில் விழிமூடி சாய்ந்து கொள்ள, மனம் துடித்தது என்னவோ உண்மைதான். உடலிலும் ஏதோ ஒரு இன்ப உணர்வு ஏற்பட, அந்த அவஸ்தையை கண்மூடி அனுபவித்தாள்.

அவளின் அவஸ்தையை கண்களால் பருகியபடி, தொடத்துடித்த தன் கையை அடக்கி, “அட பார்றா! நீ சொன்னதுல ஒரு பங்காகக் கூட செயல் முறையில் காட்டலதான. அப்புறமென்ன கேள்வி?” என்றதும் இதழோர சிரிப்புடன் கண்திறந்தவளின், நெற்றியில் முத்தமிட்டு, கன்னம் இறங்கிய முத்தத்தை இதழில் தொடரவிடாமல், அவந்திகாவின் கிறங்கல் பார்வை தடுக்க, அவளை அதிகம் சோதிக்க விரும்பாமல், வயிற்றில் இருந்த தையலில் முத்தமிட, அவனையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர் காயத்தில் விழுந்தது.

இந்த ஒரு சொட்டு உப்பு நீரே, அவளின் ஒட்டுமொத்த காயங்களுக்கும், மருந்தானதுதான் விந்தை.

அவனையே பார்த்திருந்தவள் அவனின் காதலில் கரைந்து, “கார்த்திக் ப்ளீஸ் வேண்டாம். நீங்க கண்கலங்குறதை என்னால பார்க்க முடியல. எல்லாத்தையும் மறந்திடலாம் கார்த்திக்.”

“என்னையும் சேர்த்து” என்றான் இறுகிய குரலில்.

“கார்த்திக்” என்று அதிர்ந்து அலறினாள்.

“உனக்கு நான் பொருத்தம் இல்லடா. நீ என்னை மறந்திரு” என்றான் மனதைக் கல்லாக்கி.

“இதுக்கு நீ செத்துப் போன்னு சொல்லியிருக்கலாம் கார்த்திக்” என்றாள் அடிபட்ட மனதுடன் கண்கலங்கியபடி.

“ச்சீ...லூசு என்ன பேச்சி பேசுற?”

“அப்ப நீங்க மட்டும் அப்படி சொல்லலாமா?” என்றவள் கண்கள் கண்ணீரைப் பொழிய,

“ஓகே. நான் இனி அதைப்பற்றி பேசலை” என்று அவளை சகஜமாக்க நினைத்தவன், “நீ இந்த நிலையில இருக்கும்போது தப்பு பண்ணலாம்னு, எந்த தைரியத்துல சொன்ன அழகி” என்றான் கிண்டலாக.

“ப்ச்... கார்த்திக் திரும்பவும் முதல்ல இருந்தா?” என சிணுங்கினாள்.

“ஹ்ம்... எனக்கு கூடத்தான் என்னோட அழகியை கொஞ்சம் அழுக்கு பண்ணனும்னு தோணுது. சரிவிடு இன்னொரு நாள் மாட்டாமலா போயிருவ” என்றதும் செல்லமாக அவனை அடித்தவள் முகம் வெட்கச்சிவப்பைக் கொண்டது.

அவளிடமிருந்து எவ்வாறு விடைபெறுவது என்று யோசித்துக் கொண்டிருக்க, தாய் கதவைத் தட்டி உள்ளே வந்து நேரமானதை நியாபகப்படுத்தினார்.

‘அதுக்குள்ள ஒருமணி நேரமாகிருச்சா?’ என தோன்றியது கார்த்திக்கிற்கு.

“அவந்தி ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், அம்மாவோட நம்ம வீட்டுக்குப் போயிடுறியா? நானும் உன்னைப்பற்றின டென்சன் இல்லாமல் இருப்பேன்.”

“ம்கூம்... நான் எங்க வீட்டுக்கே போறேன்.” தாய், மகன் இருவருமே கேள்வியாய் பார்க்க, “நம்ம வீட்டுக்கு வரணும்னா, நீங்க எனக்கு முறைப்படி தாலிகட்டி, உங்க மனைவின்ற உரிமையோட கூப்பிடுங்க. நான் வர்றேன்” என்றாள் தீர்மானமாக.

அவந்திகாவின் வார்த்தையிலுள்ள உணர்வை உணர்ந்த ஈஸ்வரியோ நியாயமென எண்ணி அமைதியாகினார்.

“என்னமா இப்படிச் சொல்ற? இப்ப அம்மாவாலயும் அங்க வரமுடியாதே. அவங்க ஆட்டம் அதிகமாகி, உன்னை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சா, என்ன பண்றது? உங்க மாமாவால எதையும் தடுக்கவும் முடியாது. ஏற்கனவே கல்யாணத்துக்குன்னு டைம் வேற கொடுத்திருக்கான்னு அம்மா சொன்னாங்க. அது நடக்காதுன்றது வேற விஷயம். இருந்தாலும்...”

“அதனாலதான் சொல்றேன். நீங்க வந்து என்னைக் கூப்பிட்டு வாங்கன்னு. அவனுக்கு என்ன தைரியமிருந்தா கழுத்...” முழுமையாக முடிக்க முடியாமல் சட்டென்று அழுதாள்.

மீதி வார்த்தைகளைப் புரிந்தவன், “அவந்தி வேண்டாம். உன்னோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும், அந்த கௌஷிக்கை பதில் சொல்ல வைக்கிறேன். இன்னைக்குத்தான் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு. இவ்வளவு நேரம் உன்னோட பேசிட்டிருந்ததே கில்டியா இருக்கு. இனியும் தையல் பிரிஞ்சி இன்னொரு வலி வேண்டாம். நீ உங்க வீட்டுக்கே போ! நான் கண்டிப்பா வருவேன் உனை மீட்க.”

அந்தோ பரிதாபம் விதியின் வாயில் சிக்கி, கார்த்திக்கால் வரமுடியாமல் போகப்போவதை அறிவானா!

“இப்போதைக்கு நர்ஸ் வச்சிக்கலாம். அதுவும் நம்பிக்கையானவங்களா வேணும். அந்த கௌஷிக்கோட ஆள் யாரும், அவந்தியை அண்டக்கூடாது. என்ன பண்ணலாம்?” என்ற யோசனையில் இருந்தவர்களைக் கலைக்கவென்று இல்லை காப்பாத்தவென்று வந்தது அந்த போன்.

அவந்திகாவின் போனை எடுத்த ஈஸ்வரி, “வைஷ்ணவி யாரு? ஓ... அந்த சிறுவாபுரி பொண்ணா” என்று மருமகளைக் கேட்டார்.

“ஆமா அத்தை அவள்தான்” என போனை வாங்கி நலம் விசாரிக்க, சற்று நேரத்திற்கெல்லாம் அவளிடமிருந்து போனை வாங்கிய கார்த்திக், “ரொம்ப பேசக்கூடாது. ரெஸ்ட் எடு. நான் பேசிக்கறேன்” என்று வைஷ்ணவியிடம், “என்னமா இந்த நேரத்துல போன் செஞ்சிருக்க?” என கேட்டான்.

“நீங்க எப்படி அங்க? அவளோட? உங்களை போலீஸ் தேடுறதா பேப்பர்ல பார்த்தேனே. என்ன சார் நடக்குது அங்க? எனக்கு ஒண்ணும் புரியல? அவந்தி வீட்ல நீங்க எப்படி?” என சந்தேகத்திற்கு மேல் சந்தேகமாக கேட்டாள்.

“அதெல்லாம் இப்ப பேச நேரமில்லமா. இப்ப அவந்தியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கு” என்றான்.

“ஏன்? என்னாச்சி?” என்று பதறியவளிடம் நடந்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லி, “இப்போதைக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேணும் அவந்தியைப் பார்த்துக்க.”

“சார் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க. திரும்பக் கூப்பிடுறேன்” என்றவள் சொன்ன நேரத்தில் திரும்ப அழைத்து, “சார் என்னோட தங்கச்சி ஒரு டாக்டர். இப்பதான் ட்ரெயினிங் முடிச்சி போஸ்டிங்காக வெய்ட் பண்ணிட்டிருக்கா. தற்சமயத்துக்கு ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல்ல பார்ட் டைமா ஒர்க் பண்றா. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா அவந்திக்கு துணையா அவளை வச்சிரலாம்.”

“என்னமா நீ. டாக்டருக்கு படிச்ச பொண்ணைப் போய் நர்ஸ் வேலை பார்க்கச் சொல்றதா. அதெல்லாம் வேண்டாம்.”

“நீங்க கேட்ட நம்பிக்கையான ஆள், இப்போதைக்கு அவள்தான் சார். அவகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டுத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.”

“இல்லமா. இருந்தாலும் வயசுப்பொண்ணு” என தயங்கியவன், “அவந்தி சொந்தம் என்கிறதால, அந்த கௌஷிக் அவளிடம் ஒரு லிமிட்குமேல தாண்டமாட்டான். இதுவே அடுத்த வீட்டுப் பொண்ணுன்னா, அவனோட எல்லை எந்தளவுக்கு இருக்கும்னு தெரியாதே. அதுவுமில்லாமல் அவந்தி கூட அனுப்புறதுக்கு அந்த கௌஷிக் சம்மதத்தோட, அவன் மூலமா போறமாதிரி இருக்கணும். அப்பத்தான் அவனுக்கும் சந்தேகம் வராது” என்றான் நிதர்சனத்தை உணர்ந்து.

“அதெல்லாம் அவ சரியா செய்வா. அவ என்னை மாதிரி கிடையாது. நம்பர் மெசேஜ் பண்றேன். பேசிப்பாருங்க. அவளைவிட யாரும் இந்த வேலைக்கு செட்டாக மாட்டாங்கன்னு சொல்வீங்க” என்றாள்.

“ரொம்ப நன்றிமா.”

“எனக்கு நன்றியா! போங்க சார். என் வாழ்க்கையையே திருப்பிக் கொடுத்த அவந்திக்காக, இதைக்கூட செய்யமாட்டேனா” என்று போனை வைத்தாள்.

சில வினாடிகளில் மெசேஜ் வர எடுத்துப் பார்த்தவன் “நேத்ரா எம்பிபிஎஸ்” என்று போன் நம்பரும் சேர்ந்திருக்க, அவளிடம் பேசியவனுக்கு, வைஷ்ணவி சொன்னதுபோல், ‘இந்த வேலைக்கு நேத்ராதான் பெஸ்ட் சாய்ஸ்’ என்று தோன்றியது.

அதன்படி நேத்ராவிற்கும், தன் தாய்க்கும், மனைவிக்கும் சிலபல விஷயங்களை சொல்லி புரியவைத்து கிளம்பத் தயாரானான்.

அதுவரை அவன் சொல்வதை சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவள், கிளம்ப ரெடியாகி எழவும், கைபிடித்து ‘வேண்டாமே’ என்பதுபோல் பார்வையால் யாசித்தாள்.

“கொஞ்ச நாள்தான்டா. நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திருவேன். சந்தர்ப்பம் கிடைச்சா போன் பண்றேன்” என்று தாயிடமும் விடைபெற, அதுவரை பிடித்த கையை விடாமல் இருந்தவளிடம் வந்தவன் தாயைப் பார்க்க, ஈஸ்வரி வெளியே செல்லவும்... “டேக் கேர்டா அழகி” என்று நெற்றியில் முத்தமிட்டு, “இப்பக்கூட நீயா ஒரு முத்தம் கொடுக்கமாட்டல்ல?” என குறைபட்டான்.

அதில் சிரித்தவள் மாட்டேனென்று சொல்ல, அவள் சிரிப்பையே மனதில் பதித்து, வர்கிறேன் என்று கிளம்ப, தன்னை விட்டுச் செல்பவனையே மனதில் நிறைத்தபடி புன்னகையுடன் பார்த்திருந்தாள் அவந்திகா.

மறுநாள் காலை டாக்டரை நேரில் சந்தித்த ஈஸ்வரி, சில விஷயங்களை பேச, சிறிது நேர மறுப்புக்குப் பின், சம்மதமாக தலையசைத்தார். அதன்படி அன்றே நேத்ரா அந்த மருத்துவமனையில் செவிலி வேலைக்குச் சேர்ந்தாள்.

அதற்கு மறுநாள் வனஜாவும், கௌஷிக்கும் வர அவர்களை கொன்று தின்று விடுவதுபோல் பார்த்த ஈஸ்வரியை, அலட்சியப்படுத்தி அலட்டாமல் அவந்தியினருகில் சென்று நலம் விசாரித்தனர்.

அவந்திகா, ஈஸ்வரியின் ஆச்சர்யப் பார்வையைக் கண்டதும், ‘இதுதானே வேண்டும்’ என்று அந்த ஆச்சர்யத்தை அதிகப்படுத்தினார்கள் தாயும் மகனும். “எங்களை மன்னிச்சிரு அவந்தி” என்று வனஜா கேட்டார்.

‘மன்னிப்பு கேட்கிறது அத்தையா?’ வாயடைத்துப்போய் ஈஸ்வரியைப் பார்த்தாள் அவந்தி.

அவரோ அவர்களை ஒட்டி பேசச்சொல்லி சைகை செய்ததும், “என்னத்தை மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?”

‘உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று எனக்குத் தலையெழுத்தா என்ன. வேறவழியில்லாம கேட்குறேன். இல்லன்னா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டுப்போக முடியாதே. வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாதான, நான் நினைச்சதை நடத்த முடியும். வீடு போறவரைக்கும்தான் இதெல்லாம்’ என மனதில் எண்ணங்கள் ஓட, வெளியே, “இல்லமா நாங்க பண்ணின தப்பாலதான் நீ ஹாஸ்பிடல் வரை வரவேண்டியதா போயிருச்சி” என்று வராத கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்தார்.

“ஐம் சாரி அவந்தி. நான் உன்கிட்ட ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ணிட்டேன். இனிமேல் இதுமாதிரி நடக்காது. நீ நம்ம வீட்டுக்கே வந்திரு” என்றான்.

அதன்பின் தான் இருவருக்குமே புரிந்தது, ‘எலி ஏன், ஹாஸ்பிடல் தேடி வந்து டான்ஸ் ஆடுகிறதென்று.”

“இல்லத்தை நான் வீட்டுக்கு வரலை” என அவந்திகா மறுக்க,

சட்டென்று கோவம் வந்தாலும் அதை வெளிக்காட்ட மனமில்லாமல் அடக்கி, “ஏன்மா கார்த்திக் வீட்டுக்குப் போகப்போறியா?” என்று ஈஸ்வரியின் புறம் பார்த்தார்.

“இல்லத்தை. என்னால எந்த உரிமையில அங்க போக முடியும்னு நினைக்கிறீங்க. அதான் எங்க உறவுக்கான ஆதாரத்தையே இல்லாமல் செஞ்சிட்டானே, உங்க பிள்ளை.” வந்த அழுகையை அடக்கி, “அதனால நான் எதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல போயி தங்கிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.”

மனதினுள் ‘அச்சோ!’ என்றலறிய வனஜா பின் நிதானித்து “எ...என்ன பேசுற அவந்தி? அவன் பண்ணினது தப்புத்தான் அதுக்காக வீட்டைவிட்டுப் போவியா. வேணும்னா இவன் வீட்டைவிட்டுப் போகட்டும்” என்றார்.

கௌஷிக், “அம்மா” என்றலற,

“விடுடா. உன்னை விரட்டுற அளவுக்கு அவந்தி மோசமானவ கிடையாது. நான் அப்படிலாம் அவளை வளர்க்கலை” என்றாரே பார்க்கலாம்,

ஈஸ்வரி வந்த சிரிப்பை அடக்க முடியாது, வகை தொகையில்லாமல் மாட்டிக் கொண்டார்.

“என்ன சிரிப்பு? அவளை நான் வளர்க்காம, நீயா வளர்த்த?” என கேட்டதும், வாய் மூடியபடி, ‘நீங்க பேசுங்க’ என கையசைத்து வெளியே சென்றார்.

“சொல்லு அவந்தி. நம்ம வீட்டுக்கு வர்றதான? வரமாட்டேன்னு சொல்லிராத. இனிமேல் இதுமாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சில வினாடிகள் யோசிப்பதுபோல் பாவனை செய்து, அவர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து, “சரி அத்தை. உங்களை நம்புறேன். ஆனா, இவன் என் விஷயத்துல தலையிடக்கூடாது.”

“ம்கூம்... மாட்டான். மாட்டவே மாட்டான்” என வனஜா வேகமான குரலில் சொல்ல,

“அப்ப சரி. நான் வர்றேன்” என்றபொழுது,

“எக்ஸ்க்யூஸ்மி. மே ஐ கம் இன்” என்ற குரலில் வனஜாவும், கௌஷிக்கும் திரும்பிப் பார்க்க, நர்ஸ் உடையில் அழகுப் புன்னகையுடன் அம்சமாக வந்தாள் நேத்ரா.

கௌஷிக் பார்வையை விலக்காமல் அவளையே பார்த்திருக்க, அவளோ யாரையும் கண்டுகொள்ளாது, “இப்ப வலி பரவாயில்லைங்களா மேம்? நல்லா தூங்குனீங்களா?” கேட்டுக்கொண்டே ப்ரஷர் செக் செய்தாள்.

“வலி பரவாயில்ல சிஸ்டர். ஹேப்பியா தூங்கினேன்.”

“டிபன் சாப்பிட்டாச்சா? ஏன் கேட்கிறேன்னா டேப்லெட் தரணும்.”

“நீங்க தாராளமா டேப்லெட் தரலாம். நான் சாப்பிட்டேன்” என்றதும் மாத்திரை கொடுத்து வெளியே செல்லும் பொழுது, கௌஷிக்கிடம் ஒரு மின்னல் பார்வை வீசிச் சென்றாள்.

கௌஷிக் நேத்ரா சென்ற திசையையே பார்த்திருக்க, அவனை ஒரு கேலிப்புன்னகையுடன் பர்த்திருந்தாள் அவந்திகா.

அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனையில் வனஜாவின் வரவு இருந்ததோ இல்லையோ, கௌஷிக் தவறாமல் ஆஜரானான்.

ஏனென்று கேட்ட அவந்தியிடம் “குற்றவுணர்ச்சியா இருக்கு. அதான் தினமும் உன்னைப் பார்த்தா கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்ணுவேன்னு தோணிச்சி” என்று மழுப்பினான்.

அவந்திக்குத் தெரியாதா என்ன?

டிஸ்சார்ஜ் முன்தினம் “ஹாய் அண்ணி! எப்படியிருக்கீங்க?” என்ற நலவிசாரிப்புடன் உள்ளே நுழைந்தவனை,

“சந்தோஷ்” என்ற மலர்ந்த முகத்துடன் அவந்தி வரவேற்றாள்.

‘யார்டா அந்த புதுவரவு?’ என்று உற்சாகமாய் உள்ளே நுழைந்தவனையே பார்த்திருந்தாள் நேத்ரா.

அவனோ அப்படி ஒருத்தி அங்கிருப்பதையே கவனிக்காதவனாய் அவந்திகாவின் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தான்.

நேத்ராவை சந்தோஷிற்கு, தன்னைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸ் என்று அறிமுகப்படுத்தியதும், இருவரும் சின்ன தலையசைப்பிற்கு பின் அவரவர் வேலையைப் பார்க்க, “அப்புறம் சந்தோஷ், சேர்த்த அன்னைக்கு வந்திருக்கீங்க. திரும்பி வர பாதை மறந்திருச்சா என்ன?”

“பாதையெல்லாம் மறக்கல அண்ணி. நீங்க இங்க அட்மிட்டாக காரணமாக இருந்தவன் இங்க வர்றான்னு கேள்விப்பட்டேன். அவன் இருக்கும் போது நான் வந்தா என்ன பண்ணுவேன்னே தெரியாது. என்னால ஹாஸ்பிடல்ல எந்த அசம்பாவிதமும் ஆகிரக்கூடாதுல்ல? அந்த நல்ல எண்ணம்தான் பார்த்துக்கோங்க.”

“ஓ... ஓகே. வேலையெல்லாம் எப்படி போகுது?”

“அதுக்கென்ன அண்ணி நான் இருக்கிற இடத்துல குறைனு யாராவது சொல்லர முடியுமா? இல்ல சொல்லத்தான் விட்டுருவேனா” என்றான் காலரைத் தூக்கியபடி.

“அப்ப நீங்க ரவுடிஷம்தான் பண்றீங்களா?”

“அச்சோ! இல்லண்ணி என்னோட தொழிலையே மாத்திருவீங்க போல” என்றான் வேகமாய்.

“மேம்! உங்களுக்கு நாளைக்குதான டிஸ்சார்ஜ். அதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போய் அம்மாவை பார்த்துட்டு வந்து, அப்புறம் உங்களோடவே கிளம்பறேன்” என்று சொல்லியபடி திரும்பிய நேத்ரா அப்படியே நின்றாள். என்னவென்று மற்றவர்கள் பார்க்க கௌஷிக் வந்திருந்தான்

சந்தோஷ் அவனை இதுவரை நேரில் பார்த்திராததால், யாரென்று அவந்தியிடம் பார்வையால் கேட்க, “கௌஷிக்” என்று வாயசைத்ததும், சந்தோஷின் முகம் கோபத்தில் இரத்த நிறம் கொண்டது.

அதை உணர்ந்த அவந்திகா, “சந்தோஷ் கண்ட்ரோல்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

திரும்பி அவந்திகாவைப் பார்த்த நேத்ராவிற்கு, சந்தோஷின் கடுகடுத்த முகம்தான் தெரிந்தது. ‘பாசக்கார புள்ளையா இருக்கானே’ என மனதில் தோன்றியது நேத்ராவிற்கு. முதல்முறை வந்த பொழுதே கௌஷிக் சென்றதும், இவன்தான் கௌஷிக் என்று சொல்லியிருந்ததால் அவனை நேருக்கு நேர் பார்த்தாள் நேத்ரா.

உள்ளே நுழைந்தவன் முதலில் நேத்ராவைத்தான் பார்த்தான். பின் அங்கே மூன்றாவதாய் ஒருத்தனைப் பார்த்து புருவம் சுழித்து, அவந்தியிடம் சென்று, “யார் இது?” என்றான் உரிமையாக.

“ம்... என்னோட மச், ம்ஹூம் ஃப்ரண்ட்” என்றாள் ‘மச்சினன்’ என்று சொல்ல வந்த வார்த்தையை விழுங்கி.

“ஓ... புது ஃப்ரண்டா. உனக்கு அந்த விஷ்ணு மட்டும்தான ஃப்ரண்ட்.”

அவனை முறைத்து, “உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எதிர்பார்க்காத கௌஷிக். அது உனக்கு நல்லதில்ல சொல்லிட்டேன்.”

‘எத்தனை பட்டாலும் திருந்தமாட்டல்ல. இரு உன்னை கவனிச்சிக்கிறேன்’ என்று நினைத்தவன் வெளியே, “ஹேய்! கூல் கூல்” என்றவன் பார்வை மட்டும் ஏனோ நேத்ராவை வருடியது.

நேத்ராவோ, ‘அவன் கண்ணை நோண்ட என்ன பண்ணலாம்’ என யோசித்து, அவனின் பார்வையால் வந்த கோவத்தை மறைத்து சிரித்தபடி நின்றாள்.

கண்களில் கோவத்துடனும், உதடுகள் சிரிப்புடனும் இருந்த நேத்ராவைப் பார்த்த சந்தோஷிற்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது. அதே நேரம் அவந்திகா அவளை பார்வையால் சமாதானப்படுத்தியதையும் பார்த்தான். அதன் பின்னே நேத்ராவின் கண்களிலுள்ள கோவம் போய் புன்னகை மட்டுமே அவள் முகத்தில் நிலைத்தது.

‘யப்பா... ஒரே நேரத்துல எத்தனை எக்ஸ்ப்ரஷன் காட்டுறாயா! இவளைப் பார்த்தா நர்ஸ் மாதிரி தெரியலையே. என்னவோ இருக்கு. அண்ணிக்காக வச்ச ஸ்பையோ? அடப்பாவிங்களா! உங்க நாடகத்துல என்னையும் சேர்க்காம தனி கேமா ஆடுறீங்க. நீங்க ஆடுங்க ஆட்டத்துக்கு நடுவுல, நானும் வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன். அப்பத் தெரியும் கௌ... சே... இந்த சந்தோஷோட ஹெல்ப் எவ்வளவு பெருசுன்னு.”

பின் அண்ணியிடம் சொல்லி, நேத்ராவிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்று கிளம்பினான்.

அவன் சென்றதும் நேத்ராவும் வெளியேற, கௌஷிக் டாக்டரைப் பார்த்து நேத்ராவை அவந்திக்கு நர்ஸாக அனுப்பும்படி கேட்க, மறுத்த டாக்டரிடம் பேசி சம்மதமாக தலையாட்ட வைத்தே கிளம்பினான்.

அவனுக்குத் தெரியுமா? அவரின் ரகசிய முறுவல்!

இந்த பத்து நாட்களில் ஈஸ்வரியை, டாக்டர் ரஞ்சன், மேடம் என்றழைப்பது வித்தியாசமாகத் தெரிந்தது அவந்திக்கு. ஏனென்றால் அந்த டாக்டர் மற்றவர்களிடம் மரியாதையாகப் பேசினாலும் ‘ங்க’ என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஈஸ்வரியைப் பார்த்தால், கண்களில் ஒரு மரியாதை தன்னாலேயே வந்தது அவருக்கு. அவரைத் தவிர்த்து பார்த்தால், மற்ற டாக்டர்களும் அப்படியே அழைப்பதைக் கவனித்தவள், அதை நேரடியாகவே ஈஸ்வரியிடம் கேட்டாள்.

அதில் சற்று தடுமாறி, பின் சுதாரித்து, “என்னோட லுக் அப்படியிருக்கும் போல அவந்திமா. இல்லன்னா யாராவது விஐபினு நினைச்சிகூட சொல்லியிருக்கலாம்” என்று கண்ணடித்தார்.

“இந்த இரண்டு காரணமுமே ரொம்ப மொக்கையா இருக்கு. வேற ட்ரை பண்ணுங்க ஈஸூமா.”

“அப்படியாடா! அவ்வளவு மொக்கையாவா இருக்கு” என்றதும் அவந்திகா, ‘ம்’ என தலையசைக்க, “அப்ப பொய்யா எதாவது சொல்லட்டுமா?”

“ம்... சொல்லுங்க சொல்லுங்க. எனக்கும் கொஞ்சம் டைம் பாஸாகவாவது செய்யும். என்னதான் விஐபி கவனிப்புனாலும், பெட்லயே இருக்க போரடிக்குது ஈஸூமா” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

அவளின் தலையை லேசாக கலைத்து, “ஒருவேளை எங்க ஏரியாவுல நானும் ரௌடியா இருப்பேனோ? அதாவது சகுனி படத்துல வர்ற ராதிகா மாதிரி, ரௌடிஷம் ப்ளஸ் அரசியல்வாதியா இருப்பேனோ! நீயே யோசிச்சி சொல்லேன்?” என கேள்வியை மருமகளிடம் தொடுத்தார்.

“ம்... பார்த்தா அப்படித் தெரியலையே?” யோசனையுடன் ஈஸ்வரியை மேலும் கீழுமாகப் பார்த்தாள் அவந்தி.

“அவந்திமா ஒருவேளை பார்க்கப் பார்க்கத்தான் தெரியுமோ, என்னவோ! எதுக்கும் திரும்பத் திரும்பப் பாரேன்” என சிரிக்காமல் கேட்டார்.

“ஈஸூமா... உங்களை...” என பல்லைக் கடித்தபடி, “உங்க கடி தாங்கல. இருங்க எங்க மாமாகிட்ட சொல்லித்தர்றேன்” என்றாள்.

“தாராளமா சொல்லிக்கோ. உங்க மாமாவுக்கு எல்லாம் இங்க யாரும் பயந்துட்டிருக்கல. அஹான்.”

“வாங்க மாமா. இப்பத்தான் வர்றீங்களா?” வாசல்புறம் திரும்பி அவந்தி அழைக்க,

“அச்சோ! நான் பேசினதெல்லாம கேட்டுட்டாங்களா. என்னை கிண்டலடிச்சே நோகடிச்சிருவாங்களே” என்று வேகமாக எழுந்து தானும் வாசல்புறம் பார்தார்.

ஹா..ஹா... அவந்தியின் சிரிப்பு அந்த அறையையே நிறைத்தது. “அச்சோ அத்தை.. மாமாவுக்கு பயப்பட மாட்டேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள, இப்படி பயந்து நடுங்குறீங்களே. எப்படி எப்படி உங்க மாமாவுக்கெல்லாம் இங்க யாரும் பயந்துட்டிருக்கலையா? ஹையோ! ஹையோ! முடியலடா சாமி. நான் நம்ம வீட்டுக்கு வந்ததும் கண்டிப்பா மாமா கூடதான் கூட்டணி வச்சிக்கப்போறேன்.”

அவந்திக்கு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து, “மாமா உன்னை பார்க்க வரலன்னு ஃபீல் பண்ணாதடா. அவங்களுக்கு நிறைய வேலையிருக்கு.”

“அதான் நீங்க கூட இருக்கீங்களே ஈஸூமா. அப்புறம் இந்த சி.என்னுடைய கவிதைத் தொல்லை வேற தாங்கல. இன்னைக்கு என்ன அனுப்பியிருந்தான். ம்...”

அன்பே அழகே என உருகவில்லை.

அவந்திகா அழகப்பன் என்றே உருகுகிறேன்!

அன்பாய் பேச முடியவில்லை.

அழகாய் பேசவே விழைகிறேன்

உன்னிடம் மட்டும்!

“எப்படின்னு பாருங்க ஈஸூமா. இவன் அடிக்கிற லூட்டி தாங்க முடியல” என்று சிரித்தாள்.

“வாவ்! உன்னோட பெயர்லயே கவிதை எழுதுறானே. அவந்திகா அழகப்பன் என்றே உருகுறானாமா! எதுக்கும் அவனைக் கொஞ்சம் கன்சிடர் பண்ண முடியுமா பாரேன்” என்றதும் விரல் காட்டி எச்சரித்தாள்.

“அப்புறம் உனக்கு உடம்பு சரியில்லாததால, ஆஃபீஸ் போக முடியாது. முழுக்க முழுக்க உன் மாமாதான், தினமீனை பார்த்துக்க வேண்டியிருக்கும். அவரால வீட்டை கவனிச்சிக்க முடியுமா தெரியாது. கவனிக்கவும் விடமாட்டாங்க உங்க வீட்ல. எதுக்கும் ரெண்டு பேரும் கேர்புல்லா இருங்க. முக்கியமான வேலையை வீட்ல இருந்தே முடிச்சிரு. அவங்க சொன்ன டைம்கு இன்னும் ஐந்து நாட்கள்தான் இருக்கு. அதுக்குள்ள எது வேணும்னாலும் நடக்கலாம். உன்னால தகவல் தெரிவிக்க முடியாத பட்சத்துல நேத்ராகிட்ட இருக்கிற இன்னொரு செல்போனிலிருந்து மெசேஜ் பண்ணு. மத்தவங்க முன்னாடி நீங்க ரெண்டுபேரும், ரொம்ப நெருக்கமா இருக்கிற மாதிரி காட்டக்கூடாது. புதுசா பார்க்கிற பொண்ணுகிட்ட எந்தளவுக்கு டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ண் பண்ணிவியோ அந்தளவுக்கு நடந்துக்க” என்றார்.

“ஓகே ஈஸூமா நான் பார்த்துக்கறேன். நானும் ரௌடிதான் மாதிரி நானும் தைரியசாலிதான்.”

“ம்... நல்லாவே தெரியும். வீட்டுக்குள்ள போயிட்டா நீ எவ்வளவு பெரிய்ய்ய தைரியசாலின்னு” என இழுக்க,

“நம்பமாட்டீங்களே! அதுவும் என்னை நம்பவே மாட்டீங்களே! ஆனா, நம்பியிருந்தா கார்த்திக் தன்னைப்பற்றி முன்னாடியே சொல்லியிருப்பாங்கள்ல ஈஸூமா” என்று கிண்டலாக ஆரம்பித்து மனம் கலங்க வருத்தத்துடன் முடித்தாள்.

“ப்ச்... அவந்தி. என்னடா நீ” என அவளை சமாதானப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். கடைசிவரை மருத்துவர்கள் ஏன் மேடம் என்றழைக்கிறார்கள் என்றதற்கு மட்டும் விடையளிக்கவில்லை ஈஸ்வரி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top