• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 12

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
12



மூன்று மணியளவில் செந்தூரன்-அன்பழகி வழக்கு ஆரம்பிக்க, “மிஸஸ்.அன்பழகி ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என வக்கீல் அதியன் கேட்க,

“நான் கேட்கலை!” பட்டென அவளிடமிருந்து பதில் வர,

“சரி கேட்கலை. சம்மதித்துக் கையெழுத்து போட்டுருக்கீங்களே ஏன்?”

“கேட்டா போடுவேன்னு சொல்லியிருந்ததால போட்டேன்” என்றாள் அமைதியாக.

“அப்ப உங்களுக்கும் விவாகரத்துக்கு சம்மதம்தானே?”

“அப்படிக் கிடையாது. கேட்டதால கொடுத்துட்டேன்.” திரும்பவும் அதையே சொல்ல,

“அப்ப சேர்ந்து வாழ விருப்பமா?” விடாது அவனும் கேட்டான்.

“அவங்க விரும்பினா எனக்கு விருப்பம். விரும்பலைன்னா விருப்பமில்லை” என தெளிவாகக் குழப்ப,

“ஏன்மா புரியுற மாதிரி சொல்லமாட்டீங்களா?” என்று இடையிட்டார் நீதிபதி.

“இதை விட எளிமையா எப்படிங்க ஐயா சொல்லுறது?” என்றாள் அப்பாவியாய்.

‘இவளைப் பற்றித் தெரிந்தும் கேட்ட என்னை என்ன செய்யுறது?’ என அவளை முறைத்த நீதிபதி இளந்திரையன் சதாசிவத்தின் குரு. சதாசிவம் படித்து முடித்ததும் அவரிடம்தான் உதவியாளராகச் சேர்ந்தது. இன்றோ குடும்ப நண்பர் என்றும் சொல்லலாம். ஒரே இடத்தில் இருப்பதால் இன்னும் பழக்கம் குறையாதிருக்கிறது.

“உங்க பதில் எனக்கு ரொம்ம்பவே புரிஞ்சிருச்சி மிஸஸ்.அன்பழகி” என்ற சதாசிவம் செந்தூரனிடம் வந்து, “உங்க பெயர் என்ன?” என்றார்.

“செந்தூரன்!”

“முழுப்பெயர் இதுதானா? இல்லை வேற பெயர் இருக்கா?”

“இல்லை வக்கீல் சார்” என்றான்.

“என்ன தொழில் செய்யுறீங்க?

“கரண்ட் பொருட்கள், அதாவது ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி இதெல்லாம் பழைய ரேட்டுக்கு வாங்கி சரிபண்ணி செகண்ட் ஹேண்ட் சேல் பண்றேன்.”

“ஓ... என்ன படிச்சிருக்கீங்க?” என்றவர் மருமகன் கண்களையே பார்க்க,

“அ..அது..” என திணற,

“என்ன படிச்சிருக்கீங்கன்னு கேட்டதுக்கு ஏன் இவ்வளவு திணறல். பதில் சொல்லுங்க செந்தூரன்? என்ன படிச்சிருக்கீங்க?” என்றார் குரலில் அழுத்தத்தைக் கொடுத்து.

தன் எதிரே நின்றிருந்த மனைவியை நேராகப் பார்த்து, “டாக்டர்.செந்தூரன் செல்லத்துரை எம்.பி.பி.எஸ் எம்.டி பீடியாட்ரிஷன்” என்றான் கணீர் குரலில்.

திகைத்து விழித்த மனைவியின் விழிகள், ‘உண்மைதானா?’ என கேட்க, அவ்விழிகள் கேட்ட கேள்விக்கு ஆமென்று கண்மூடி ஆமோதித்தான். இன்னும் சில அதிர்ச்சிகள் கணவன் கொடுப்பானென்று அறிவாளோ!

‘பின் ஏன் திருமணத்தன்று அப்படிச் சொன்னாய்?’ என்று பார்வையாலேயே கேட்க, அதையே சதாசிவமும் அவனிடம் கேட்டார்.

“அன்னைக்கு என் மாமனார் என்கிட்ட என்ன வேலை பார்க்குறீங்கன்னுதான் கேட்டார். என்ன படிச்சிருக்கன்னு கேட்கலை. அப்படிக் கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன்” என்றான் நிமிர்வாக.

பழைய செந்தூரன் மரித்து டாக்டர்.செந்தூரன் புத்துயிர் பெருகிறானோ! பொய் என்று நினைப்பதெல்லாம் உண்மையாக! உண்மையென்று நம்பியவை!?

“சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரான நீங்க, செகண்ட் ஹேண்ட் சேலரா மாறுனது எதனால்?” என்றார் காரணம் அறிந்துகொள்ள.

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இந்த வழக்குக்கு இது தேவையில்லைன்றது என்னோட வாதம். இதனால் நேரத்தையும் வீணாக்குகிறார் எதிர்க்கட்சி வக்கீல்” என்றான் அதியன்.

“என்ன சதாசிவம் வழக்குக்குத் தேவையானதைத்தான் கேட்கறீங்களா?” என்றார் நீதிபதி.

“இப்போதைக்கு இது தேவையில்லைங்க ஐயா” என்க,

“வழக்குக்குத் தேவையானதை மட்டும் கேளுங்க. இன்னொரு முறை இந்தத் தவறு நடக்கக்கூடாது” என்று எச்சரிக்க,

“சரிங்க ஐயா” என்றவர் ஓரப்பார்வையில் மகனை முறைத்தாலும், தன்னையே மடக்கியதில் பெருமைதான் அவருக்கு.

“மிஸ்டர்.செந்தூரன் கல்யாணத்தன்னைக்கே பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டீங்க சரி. அதன்பிறகு சேர்ந்து வாழ முயற்சித்திருக்கலாமே? ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என்றார்.

“நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா என் இரு குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்புப் போடணும் சார்” என அழுத்தமாகவே உரைத்தான் செந்தூரன்.

“போலீஸ் பாதுகாப்பா? விவாகரத்துக்கும் போலீஸ் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் புரியாது.

“ராஜி, வா நாம போகலாம். இவன் நம்மளை மாட்டிவிடப் பார்க்குறான்னு தோணுது” என்று அக்கா தங்கை இருவரும் மெல்ல எழுந்து வெளியே செல்ல,

“ஐயா! அம்மாவும் சித்தியும் வெளில போனா அவங்களுக்கும் ஆபத்திருக்கு. முதல்ல உள்ள வரச்சொல்றீங்களா?” என்றான் நீதிபதியை நோக்கி.

அவனின் பயமும் பதற்றமும் வித்தியாசமாய்ப்பட அவர்களை அமரச் சொல்லிவிட்டார் நீதிபதி.

“நன்றி ஐயா. விவாகரத்துன்னா இரண்டு நபர் மட்டும் சம்பந்தப்பட்டது. இங்க அப்படிக் கிடையாது. இந்த வழக்கால எங்க இரண்டு குடும்பமுமே பாதுகாப்பின்றி நிற்குது” என்றான்.

“இரண்டு குடும்பமா?”

“ஆமாம். திருமணத்திற்குப் பின் மனைவி வீடும் என்னோடதுதானே” என்று நீதிபதியைக் குழப்பி, “ஏன் என் தங்கைக்குக் கூட அடிக்கடி ஆக்சிடெண்ட் நடக்குது” என்று பவானியை நோக்கிக் கைகாட்டினான்.

அவள் எழுந்ததும் நீதிபதி ‘உண்மையா?’ என கேட்க, ஆமென்று சொல்லி உட்கார்ந்த நொடி அன்பழகியின் கைபேசியில் அழைப்பு வர, இரண்டு மூன்று முறை அதிர்வு வந்ததால் எடுத்து குனிந்து அமைதியாக பேசிய பவானி திடீரென, “என்ன சொல்றீங்க? அத்தைக்கு என்னாச்சி?” என்றாள் அதிவேகக் குரலில்.

“சைலன்ஸ்! கோர்ட்டுக்குள்ள செல் ஸ்விட்ஜ் ஆஃப் பண்ணிரணும். இல்லையா சைலண்ட்ல போட்டிருக்கணும்” என்றார் கோபமாக.

அவளோ மிரண்டாலும், “அண்ணி” என்று கைநீட்டி அன்பழகியினருகில் சென்று அழ, “என்ன பவிக்குட்டி? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு. ஏன் அழுற?” என்று நீதிபதி இளந்திரையனை சற்று சங்கடத்துடன் பார்த்தாள்.

அவரோ வெளியே கடுமையாக முகம் வைத்தாலும், அவளிடம் என்னவென்று கேட்கச் சொல்லி யாருமறியாது அன்பழகிக்கு சைகை செய்ய, “பவிக்குட்டி! யாருக்கு என்ன?” என்றாள்.

“அத்தையை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்” என்றதும் அனைவரும் அதிர, “யாரோ இரண்டு பேர் அத்தையைக் கொல்ல முயற்சி பண்ணினதா அகிலன் அத்தான் சொல்றாங்க. இந்தாங்க உங்க போன்லதான் கால் வந்தது. லைன்லதான் இருக்காங்க. என்னன்னு கேளுங்க” என்றதும் வேகமாக கைபேசியை வாங்கி, அண்ணனிடம் நடந்ததைக் கேட்கக் கேட்க அவள் கண்களில் கண்ணீர்.

“அப்பா!” என்று தகப்பனைப் பார்க்க, அவரோ உள்ளுக்குள் எழுந்த பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்து நீதிபதியைப் பார்த்து ஏதோ கேட்கப்போக, வார்த்தை வரவில்லை அவருக்கு.

அதைப் புரிந்தவரோ, “மிஸ்டர்.செந்தூரன் இந்த வழக்கு தள்ளிப்போறதுல உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்க,

“அவங்க என் உறவும்தான் ஐயா” என்றான்.

“சதாசிவம் நீங்க பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போய் உங்க மனைவியைப் பாருங்க” என்றதும், நன்றி சொல்லிக் கிளம்ப,

“ஐயா எங்க பாதுகாப்பு?” என்றான் செந்தூரன்.

“உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் மணிவாசகம் அதற்கான ஏற்பாடு செய்வார். அடுத்த அழைப்பு உங்களுக்கு வரும்போது வந்தால் போதும்” என, அவனும் நன்றி சொல்லிக் கிளம்ப, அடுத்த வழக்கு ஆரம்பமானது.

மாலைக்கெல்லாம் ராகினியை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, தாயின் கை பற்றி அழுத விழிகளுடன் அன்பழகி அமர்ந்திருக்க, “பொம்மு சின்னப் பிள்ளை மாதிரி அழக்கூடாது. அண்ணன் வந்ததைப் பார்த்ததும் ஓடிட்டாங்க. ரொம்பவே சின்ன அடிதான். இரண்டே நாள்ல சரியாகிரும்.” மகளுக்கு ஆறுதல் சொன்னார் ராகினி.

“எனக்குக் கல்யாணம் நடந்ததாலதானம்மா இவ்வளவு பிரச்சனையும்? என்னால உங்களுக்குத் திரும்பத் திரும்ப எதாவது...” என்கையில் கேவல் எழ அதை அடக்கி, “கல்யாணம்னு ஒண்ணு செய்யப்போய்தான இவ்வளவும். கல்யாணம் ஆகாதப்ப நிம்மதியாயிருந்...”

“இனி உங்க நிம்மதி குழையாது அன்பழகி” என்றபடி வந்து நின்றான் அவளின் கணவன்.

“மாப்பிள்..”

“வேண்டாம் அத்தை. உங்களை வருத்திக்காதீங்க. நிஜமாவே என்னாலதான் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் பிரச்சனைன்னு தெரியும். அப்படியே போயிரலாம்னுதான் பார்க்குறேன். ஆனா, முடியலை. அத்தனை பேர் மத்தியில் வாழலாம் வான்னு ஒருத்தி கூப்பிட்டும் வேண்டாம் சொல்லிட்டேன். அதை சரி பண்ணலாம்னு நினைத்தாலும் முடியாத நிலை. மன்னிப்புன்ற வார்த்தையைத் தவிர என்கிட்ட வேற வார்த்தை இல்லை” என்று அவரின் கால் தொட்டு எழ,

ராகினி அதிர்ந்தாரென்றால், கணவனின் அக்குரலில் ஆறுதலளிக்கத் தன்னுள் எழுந்த எண்ணத்தை மறைத்தாள் அன்பழகி.

“நீங்க ஏன் இங்க வந்தீங்க? முதல்ல வெளில போங்க” என கத்தியபடி வந்தாள் பவானி.

“வாங்க தங்கச்சி மேடம். என்னைப் போகச் சொல்றதுக்கு முன்ன நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? கல்யாணம் முடிந்த பொண்ணு புருஷன் வீட்டுல இருக்கணும். இங்க கிடையாது” என்றான் நேரடியாகவே.

‘இந்த அண்ணன் இவ்வளவு.. அதுவும் தன்னிடம் நேராகப் பேசுவாங்களா? இதை முதலில் செய்திருந்தால்...’ என்னென்னவோ எண்ணம் எழ, தன்னுள் எழுந்த ஆச்சர்யம் மறைந்து கோபம் தலைதூக்க, “அதை என் அண்ணி சொல்லட்டும்” என்றாள்.

“பார்றா! அண்ணன் வேண்டாமாம். அண்ணி வேணுமாம். அத்தனை பாசம்.. ம்..” என்றான் சிறிது நக்கல் தொணியில்.

“ஆமா. ஆனா சாருக்குதான் பாசம்னா என்னன்னே தெரியாதே!” என்று எகிற,

“பவிக்குட்டி அமைதியாயிரு” என்று அன்பழகி நாத்தனாரை அடக்க,

“நான் இருக்கிறது இருக்கட்டும் அண்ணி. உங்களை வேண்டாம்னு தூக்கியெறிந்தவருக்கு உங்க வீட்டுல என்ன வேலை? போகச் சொல்லுங்க” என்றாள் கோபத்தில்.

“அதான! உன்னை வேண்டாம்னு சொன்னவனை உன் வீட்டு வாசல்படி மிதிக்க விடலாமா? விரட்டு அன்பழகி” என்றான் அவனும் மனைவியின் கண்பார்த்து.

“மாப்பிள்ளை அவள் சின்னப்பொண்ணு சொன்னாள்னு நீங்களும்...”

“அத்தை! நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது. எனக்குக் கல்யாணமாகிருச்சி” என்றாள் திமிராக.

“அதுவும் திருட்டுக் கல்யாணம்” என்று கிண்டலாய் இடையிட்டான் செந்தூரன்.

“உங்களைப்போல அண்ணன் இருந்தா, என்னை மாதிரி தங்கைகள் திருட்டுத்தனமாய்தான் கல்யாணம் செய்துக்கணும். இல்லை எவனுக்...”

“ஏய்ய்!!” என உச்சபட்ச கோபத்தில் கையோங்கியவன், தங்கையின் பயந்த முகம் பார்த்து, ‘ச்சே..’ என கையை உதறி அங்கிருந்து வெளியேறினான்.

“என்னங்க நில்லுங்க. ஹலோ சாரே! டாக்டர் சார் கொஞ்சம் நில்லுங்க” என்று கத்தியதில் அவன் நிற்க, கணவன் முன் வந்தவள் அவன் கலங்கிய கண்களைக் கண்டு, “பவி குழந்தைங்க. அவள் சார்பா நான்...”

“வேண்டாம் அன்பழகி. அவளுக்காக நீ இறங்கி வரவேண்டாம். அவளுக்காகன்னு இல்லை யாருக்காகவும் நீ இறங்காதே! நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாவே இருந்துட்டுப் போறேன். என்னால நீதான் ரொம்ப கஷடப்பட்டுட்ட, அவளைப் பார்த்துக்க. நீயும், வீட்டில் உள்ளவங்களும் அனாவசியமா வெளில போக வேண்டாம். அப்படியே போனாலும் எங்க போறாங்கன்னு தெரிந்து வச்சிக்கோ. நீ வெளில வந்துட்டாலே எனக்கு மெசேஜ் அனுப்பிரு. உங்க வீட்டுல உள்ளவங்களையும் பழக்கப்படுத்து. சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்தாலோ, பார்த்தாலோ உடனே எனக்கு இன்பார்ம் பண்ணு” என்றான்.


“சரிங்க சொல்றேன். ப்ளீஸ் நீங்க டென்சனாகாதீங்க. அது உங்க உடம்பைப் பாதிக்கும். பவியை நான் பார்த்துக்குறேன்” என்றவள் கண்களில் அக்கறையையும் மீறி என்ன கண்டானோ சிறு புன்னகையுடன், “எனக்கு என் தங்கையைப் பற்றின கவலை எப்பவும் கிடையாது. ஏன்னா அவள் அண்ணி பவர்ஃபுல் கேர்ள். அன்பு வைக்குறதிலும் அவள் அண்ணி அழகிதான். நான் வர்றேன்” என்று நகர, ‘ஹக்’ என்ற விக்கல் சத்தத்தில் நின்றானவன்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவனின் அழகிக்குத் தொடர் விக்கலெடுக்க அவ்வளவு நேரமிருந்த கலக்கம் போய், சற்று உல்லாச மனநிலை எழ, “விக்கல் வந்தால் தண்ணீர் கொடுக்கணுமா? இல்ல தன்னையே கொடுக்கணுமா?” என்று புருவம் உயர்த்திக் கேட்க,

“எ..என்ன சொன்னீங்க?” என்றவளுக்கு விக்கல் போய் திக்கல் வந்திருந்தது.

“நீ சரியாதான் கேட்ட அன்பழகி. எது கேட்டாலும் கொடுக்க நான் தயார்” என்றான் இதழோரப் புன்னகையுடன்.

‘கேட்காததையும் கொடுக்க நீங்களே...’ என விவாகரத்தை நினைத்து மனதினுள் அவள் மறுக,

அதை உணர்ந்தானோ செந்தூரன். மனைவியின் முகம் பார்த்து, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! இல்லைன்னா நான் நடத்திக் காட்டுறேன் அன்பழகி. போயிட்டு வர்றேன்” என்று நகர,

‘அன்னைக்கு விக்கலெடுத்தப்ப முத்தம் கொடுத்தாங்க. இன்னைக்கு கண்டுக்காம கிளம்புறாங்க’ என மனம் சிணுங்கி நிற்க, எதிர்பாத்தது எதிர்பாரா நேரத்தில் கன்னத்து முத்தமாக அவன் இதழ்கள் பதிந்து விலக, உடல் சிலிர்த்து உள்ளம் மகிழ அவனைக் காண, “சரியா வராத அந்தப் பொய் விக்கலுக்கு என்னுடைய இந்த முத்தங்கள் சமர்ப்பணம்” என்று மறுபடியும் கன்னத்தில் முத்தமிட்டு, “கோர்ட்ல சந்திக்கலாம் அன்பழகி” என்று புன்னகையுடன் சென்றான்.

சில நிமிடங்கள் அசைவில்லை அவளிடம். உடலெல்லாம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்க, ஏதோ ஒரு காதல் பாடல் அவள் உதட்டில் இடம்பிடிக்க, கனவுகளில் சஞ்சரித்திருந்தவளை சோன்பப்டி மணிச்சத்தம் நிகழுலகுக்குக் கொண்டு வர, தலையில் தட்டிக்கொண்டு நேரே பவானியிடம் வந்து நின்றாள்.

“யார்கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா பவானி? அவங்களைத் தப்பாப் பேசக்கூடாதுன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேனா இல்லையா?” என்றவள் குரலில் கடுமை அதிகரித்திருந்ததோ!

திரும்பவும் கேட்ட ‘பவானி’யில் மனம் சுணங்க, “அண்ணி” என்றவள் குரல் இறங்கியிருந்தது.

“உன் அண்ணனுக்கும் எனக்குமான உறவா இந்தத் தாலி இல்லைன்னா நான் உனக்கு வெறும் சீனியர் மட்டும்தான். இ...”

“எனக்கு நீங்க அண்ணி மட்டும்தான்” என்று வேகமாக இடையிட்டாள்.

கடுமையைக் கைவிட்ட அன்பழகி, “பாவம்டி அவங்க. அவங்களைப் போய்... ப்ச்.. நடந்ததைக் கேட்ட எனக்கு மனசெல்லாம் பதறுது. கூடப்பிறந்த நீ என்னடான்னா...”

“அவங்க பாவமா? அண்ணன் உங்களுக்கு இவ்வளவு கெடுதல் செய்தும், அவங்களுக்குப் போய் சப்போர்ட் செய்யுறீங்க?” யதார்த்தம் புரியாது பவானி புகார் வாசிக்க,

“என் புருஷனுக்கு நான் சப்போர்ட் செய்யாம யார் செய்வாங்க? உன் அண்ணனுக்கு நீ செய்திருக்கணும். கடைசிவரை அவங்களுக்குத் துணையா இருந்திருக்கணும். நீ விட்டுட்ட” என்றாள்.

“அண்ணன்தான் என்னை விட்டுட்டாங்க” என்று அழுகைக்குத் தயாரானாள் பவானி.

“ஆ..ஊன்னா இதைச் சொல்லிரு. விட்டுட்டாங்க விட்டுட்டாங்கன்னு புலம்புறியே எங்க விட்டுட்டாங்க உன்னை? உனக்காக அவங்க எவ்வளவு செய்திருக்காங்க தெரியுமா? இல்லை உனக்காக அவங்க இழந்தது தெரியுமா? உன்னை அனாதைன்னு சொல்லிட்டிருக்கியே, இதையே உன் அண்ணனும் சொல்லலாமில்லையா?”

“அவங்க ஆண்பிள்ளை அண்ணி. எப்படியும் பிழைச்சிப்பாங்க. நான்...”

“அன்பில்லாத இடத்தில் ஆணென்ன பெண்ணென்ன பவிக்குட்டி? எல்லோரும் ஒரே இனம்தான். எல்லோருக்கும் ஒரே வலிதான். நமக்கு வலின்ற உணர்வு இருக்குதுன்னா, ஆண்களுக்கு இருக்காதுன்னு அர்த்தமா என்ன?”

“ப்ச்.. அண்ணி! எதுக்காக இவ்வளவு எமோஷனலாகுறீங்க? எனக்காக என்ன செய்து... என்ன இழந்துட்டாங்க?” என்றாள் எரிச்சல் குரலில்.

“ரொம்ப சாதாரணமா, ரொம்ப அலட்சியமா கேட்குற பவானி. அவங்க வாழ்க்கையையே உனக்காக இழந்திருக்காங்கன்னா நீ நம்புவியா?” என்றாள் கோபத்தில்.

“அண்ணீ...”

“இதோ வார்த்தைக்கு வார்த்தை அண்ணின்னு சொல்றியே, இந்த அண்ணி உன் அண்ணன் வாழ்க்கையில் வந்த இரகசியம் தெரியாதுல்ல உனக்கு?” என கோபமாக கத்தியவள், பவானியின் புரியா நிலை கண்டு தன்னை அமைதிபடுத்தி, “உன்னால உனக்காக மட்டும்தான்! உன்னைக் கொலை செய்துருவேன்னு மிரட்டிதான் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்காங்க” என்று உண்மையைப் போட்டுடைத்தாள்.

“அ..ண்..ணி யா..யாரு?” என்றாள் திணறலாக.

“வேற யாரு, சாமியம்மா போர்வையில் நடமாடும் உன் அம்மா தி கிரேட் ராஜேஸ்வரிதான்” என்றாள் பட்டென்று.

“அவங்களா?” பெற்றெடுத்த தாய் இந்தளவு இறங்கியதை நம்பமுடியாத நிலையிலிருந்தாள் பவானி.

“அவங்களேதான். முன்ன உனக்காக! இப்ப எனக்காகவும் சேர்த்து என்னைப் பிரியத் தயாராகிட்டாங்க” என்றவள் குரலில் அவ்வளவு வருத்தம்.

செந்தூரனின் நண்பன் கேசவ் என்ற ஆதிகேசவன். அன்பழகியைச் சந்தித்துச் சென்ற அன்று மாலை, பவானிக்கு விபத்து நடந்துவிட்டதாகச் சொல்லி நண்பனை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.

அன்று அன்பழகி தாயின் கட்டாயத்தில் நேஹாவின் வளைகாப்பிற்கு பொருட்கள் வாங்கச் சென்றுவிட, டாக்டர்.ரஹ்மானிடம் அன்பழகி அனுப்பியதாகச் சொல்லி அவரின் முன் நண்பனுடன் நின்றிருந்தான் ஆதிகேசவன்.

அதுவரை தங்கைக்கு என்னவோ ஏதோவென்று பயந்திருந்த செந்தூரன், தன் முன் இருந்த பலகையைப் பார்த்தான். அவர் எதற்கான டாக்டர் என்றதைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற நண்பனின் கன்னத்தில் பளாரென்று அடி வைத்து, “எத்தனை நாள் சொல்லியிருக்கேன் கேசவ்.. நான் முழுப்பைத்தியம் ஆனதும் இங்க கூட்டிட்டு வரச்சொல்லி. இப்ப எதுக்கு இங்க?” என்றான் கோபம் குறையாது.

அந்நேரம் டாக்டர்.ரஹ்மான் அங்கு வர, “என்ன மிஸ்டர் ரொம்ப கோவமா இருக்குறீங்க போல? ஒரு நண்பன் இந்தளவு அக்கறை எடுத்துக்குறது ரொம்ப அதிசயம். இப்படிப்பட்ட நட்பு கிடைக்க நீங்க கடவுள்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கணும். முதல்ல அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்றார் அமைதியாக சற்றே அழுத்தமாக.

அவர் சொன்னதின் உண்மை புரிய, “சாரிடா கேசவ்” என்றான் மனதார.

“நான்தான்டா சாரி சொல்லணும். தங்கச்சி பெயரைத் தப்பா பயன்படுத்திட்டேன். அவள் நூறு வருடம் நல்லாயிருப்பா செந்தூர். நீ டாக்டருக்கு ஒத்துழைப்பு கொடு” என்றான்.

“அகெய்ன் சாரிடா. உனக்காக! உன் நட்புக்காக நான் இதைச் செய்யுறேன்” என்று டாக்டரைக் காண,

“உங்க பெயர் என்ன?” என்றவர் அவனின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தார்.

“செந்தூரன்!”

“செந்தூரன்னா, அன்பழகி செந்தூரன்! கரெக்டா?” என்றவர் குரலில் ஒரு உற்சாகம்.

“டாக்டர்! அன்பழகியை உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றான் புரியாது.

“இந்த ஹாஸ்பிடல்ல எனக்கடுத்து, அன்பழகி, பிரமிளான்னு இரண்டு பொண்ணுங்க இதே கன்சல்டிங்ல இருக்காங்க. உங்களுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் போடச்சொல்லிக் கேட்டது அன்பழகிதான்.”

“அன்பழகிக்கு எப்படி? இது எந்த ஹாஸ்பிடல்?” என்றான் ஒருவித வேகத்தோடு.

“பவானி ஹாஸ்பிடல் செந்தூர். உன் ஒய்ஃப் இங்க ஒர்க் பண்றாங்கன்னு தெரிந்துதான் வந்தேன். எத்தனை நாள் ஓடி ஒழியப்போற? அதான் இங்கே வந்து உன் பெயரைச் சொல்லாம அப்பாய்ண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணினேன்” என்றான் ஆதிகேசவன்.

“ஓ.. பவிக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னதும் எதையும் பார்க்கலை. பிரச்சனை எனக்குன்னு அன்பழகிக்குத் தெரிய வேண்டாம்டா. ஏற்கனவே என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. திரும்பத்திரும்ப அவளை வேதனைப்படுத்த வேண்டாம். ரொம்ப நல்லவள்டா” என்றான் மனைவியின் காதலை உணர்ந்தபடி.

அடுத்த அரைமணி நேரம் டாக்டர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாலும், ஆதிகேசவனுக்கு எந்தளவு தெரியுமோ அதை மட்டுமே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் செந்தூரன்.

அவனின் மனதிடத்தைக் கண்டு அதிசயித்த டாக்டர்.ரஹ்மான் மறுநாள் வரச்சொல்லி அவர்களை அனுப்பிவைத்து, ஆதிகேசவனுக்கு மட்டும் போன் செய்யச்சொல்லி சைகை புரிந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் போன் செய்து தன்னை அறிமுகப்படுத்தியவனிடம், அதீத மன அழுத்தத்துடன், மனதிடமும் இருப்பதால் எத்தனை கவுன்சிலிங் கொடுத்தாலும் அவர் மாற வாய்ப்பில்லை என்றதற்கு, “என்ன செய்யலாம் டாக்டர்?” என்ற ஆதிகேசவனிடம், “நாக்கௌட் டெஸ்ட் பெட்டர்” என்றார்.

அதைப் புரிந்தவனோ, “கண்டிப்பா பண்ணியே ஆகணுமா டாக்டர்?” என்றான்.

அதையேதான் அன்பழகியும் கேட்டிருந்தாள். அவள் அந்நேரம் இருப்பது அவசியமென்று பட்டதால் அன்பழகியை அழைத்து செந்தூரன் பெயரைச் சொல்லாது “கண்டிப்பாக இருக்க வேண்டும்.. அது அவளின் வேலைக்கு உதவும்” என்றிருந்தார்.

மறுநாள் அன்பழகி வர நேரமாகியதால், செந்தூரன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவனிடம் பேசியபடியே அவனை சிகிச்சைக்கு உள்ளிழுக்க, அன்பழகி வரும்பொழுது செந்தூரன் தன் குடும்ப விவரத்தை சொல்லி முடித்திருந்தான். அதனால்தான் அவன் டாக்டர் என்பதை அன்பழகி அறிந்திருக்கவில்லை.

சிகிச்சை அறையினுள் நுழைந்தவள் செந்தூரனைக் கண்டு திகைத்து, பின் சூழ்நிலை புரிந்து அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

சின்ன வயது பற்றி அவனிடம் கேட்கையில், தாய் தகப்பன் சண்டையில் விடிந்து சண்டையில் முடியும் நாட்கள் மட்டுமே அறிமுகம். தன்னையும் தன்னை விட எட்டு வயது சிறியவளான தங்கையையும் கவனிக்க ஆளில்லாமல் கிட்டத்தட்ட தாங்களாகவே வளர்ந்த கதை சொன்னான். ஏன் எதற்கென்ற காரணம் புரியாத தாயின் நிராகரிப்பு, பிரிவு அதன்பின் தந்தையின் இறப்பு, ராஜலட்சுமி குடும்பத்தின் வருகை.. அவர்கள் மேலுள்ள பிடித்தமின்மையால் தங்கைக்குப் பாதுகாப்பாய் அவர்களை வைத்துத் தான் விலகியது. அத்தோடு தங்கைக்கென ஆரம்பித்து ராஜலட்சுமி குடும்பத்தையும் சேர்த்துத் தனியொருவனாகத் தாங்கியதைச் சொன்னான்.

அடுத்து ஏதோ சொல்ல வாயெடுக்க, “போதும் செந்தூரன். இப்ப உங்க கல்யாண விஷயத்துக்கு வருவோம். பிடிக்காத உங்கம்மா சொன்ன பெண்ணை எப்படி கல்யாணம் செய்தீங்க?” என கேட்டார்.

அவன் சொல்ல வருவதைக் கேட்டிருக்கலாமோ! கேட்டிருந்தால் சிலபல உண்மைகள் அப்பொழுதே தெரிந்திருக்குமோ! டாக்டர்.ரஹ்மான் அப்போதைக்குத் தேவையானதை மட்டும் கேட்டால் போதுமென்று, சொல்ல வந்ததைக் கேட்காமல் விட்டிருந்தார்.

“அது எனக்குப் பிடித்த ஒருத்தரைக் கொலை செய்வதாக மிரட்டி...

“என்ன?” என திகைத்த அன்பழகி எழ,

அவளை இருக்கையில் அமர வைத்தபடி, “அன்பு பேஷன்ட்கிட்ட பேசும்போது உணர்ச்சிவசப்படக்கூடாது தெரியாதா? எமோஷனலைக் குறைச்சிட்டு ஒய்ஃபா இல்லாம டாக்டரா கேளு” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கடிந்து செந்தூரனிடம் திரும்பியவர், “என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க செந்தூரன்?” என்றார்.

“கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல்லி ஒருநாள் என்னை வந்து பார்த்தாங்க அந்த சாமியம்மா. நான் கல்யாணத்துக்கு மறுத்துட்டேன். அப்பதான் உனக்குப் பிடித்த ஒருத்தரை கொலை பண்ணிருவேன்னு மிரட்டினாங்க. சும்மா விளையாடுறாங்கன்னு அசால்ட்டா புரியலைன்னு கேட்டேன். அதுக்கப்புறம்...”

“புரியவைக்கதான் வந்திருக்கேன் செந்தூ. பவாவை தங்கச்சின்னு கொஞ்சலை, கண்டுக்கலைனாலும் அவள் உனக்கு உயிர்னு தெரியும். அந்த உயிர் உனக்கு வேண்டாம்னா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்காத” என்றவர் குரலில் அளவில்லா ஏளனமிருந்ததோ!
 
Member
Joined
Sep 3, 2024
Messages
30
டாக்டர்ஸ்க்கு பொறுமையே கிடையாதா ரகசியத்தை போட்டு உடைக்கிற நேரத்தில் இப்படியா திசை திருப்பி விடுறது... என்ன ஆத்தர் ஜீ டாக்டர் செந்தூரனை ஏசி மெக்கானிக்கா மாற்றி திரும்ப டாக்டர்னு சொல்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் உட்கார வச்சு, படிக்கிற எங்களையும் அங்க அனுப்பிருவீங்க போல ஜீ நியாயமா...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
டாக்டர்ஸ்க்கு பொறுமையே கிடையாதா ரகசியத்தை போட்டு உடைக்கிற நேரத்தில் இப்படியா திசை திருப்பி விடுறது... என்ன ஆத்தர் ஜீ டாக்டர் செந்தூரனை ஏசி மெக்கானிக்கா மாற்றி திரும்ப டாக்டர்னு சொல்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் உட்கார வச்சு, படிக்கிற எங்களையும் அங்க அனுப்பிருவீங்க போல ஜீ நியாயமா...
எதோ என்னால முடிஞ்சது.
 
Member
Joined
Sep 8, 2024
Messages
43
Yov Dr eh muzhusa kettitu thana treat pannanum
Ipo parunga mulusa solama athanala ennalam varapotho
Erkanave intha writer avana sutha vititrukaga mkum

Lovely
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
Yov Dr eh muzhusa kettitu thana treat pannanum
Ipo parunga mulusa solama athanala ennalam varapotho
Erkanave intha writer avana sutha vititrukaga mkum

Lovely
பொறுமை இல்லாத மனுசனா இருக்கார் அவர். அப்பவே சொல்லியிருந்த இந்த அன்பழகி கொஞ்சம் உஷாரா இருந்திருப்பா.
நன்றி.
 
Member
Joined
Sep 12, 2024
Messages
35
மிஸ்டர் ஹீரோ டாக்டரா?
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top