- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
12
மூன்று மணியளவில் செந்தூரன்-அன்பழகி வழக்கு ஆரம்பிக்க, “மிஸஸ்.அன்பழகி ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என வக்கீல் அதியன் கேட்க,
“நான் கேட்கலை!” பட்டென அவளிடமிருந்து பதில் வர,
“சரி கேட்கலை. சம்மதித்துக் கையெழுத்து போட்டுருக்கீங்களே ஏன்?”
“கேட்டா போடுவேன்னு சொல்லியிருந்ததால போட்டேன்” என்றாள் அமைதியாக.
“அப்ப உங்களுக்கும் விவாகரத்துக்கு சம்மதம்தானே?”
“அப்படிக் கிடையாது. கேட்டதால கொடுத்துட்டேன்.” திரும்பவும் அதையே சொல்ல,
“அப்ப சேர்ந்து வாழ விருப்பமா?” விடாது அவனும் கேட்டான்.
“அவங்க விரும்பினா எனக்கு விருப்பம். விரும்பலைன்னா விருப்பமில்லை” என தெளிவாகக் குழப்ப,
“ஏன்மா புரியுற மாதிரி சொல்லமாட்டீங்களா?” என்று இடையிட்டார் நீதிபதி.
“இதை விட எளிமையா எப்படிங்க ஐயா சொல்லுறது?” என்றாள் அப்பாவியாய்.
‘இவளைப் பற்றித் தெரிந்தும் கேட்ட என்னை என்ன செய்யுறது?’ என அவளை முறைத்த நீதிபதி இளந்திரையன் சதாசிவத்தின் குரு. சதாசிவம் படித்து முடித்ததும் அவரிடம்தான் உதவியாளராகச் சேர்ந்தது. இன்றோ குடும்ப நண்பர் என்றும் சொல்லலாம். ஒரே இடத்தில் இருப்பதால் இன்னும் பழக்கம் குறையாதிருக்கிறது.
“உங்க பதில் எனக்கு ரொம்ம்பவே புரிஞ்சிருச்சி மிஸஸ்.அன்பழகி” என்ற சதாசிவம் செந்தூரனிடம் வந்து, “உங்க பெயர் என்ன?” என்றார்.
“செந்தூரன்!”
“முழுப்பெயர் இதுதானா? இல்லை வேற பெயர் இருக்கா?”
“இல்லை வக்கீல் சார்” என்றான்.
“என்ன தொழில் செய்யுறீங்க?
“கரண்ட் பொருட்கள், அதாவது ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி இதெல்லாம் பழைய ரேட்டுக்கு வாங்கி சரிபண்ணி செகண்ட் ஹேண்ட் சேல் பண்றேன்.”
“ஓ... என்ன படிச்சிருக்கீங்க?” என்றவர் மருமகன் கண்களையே பார்க்க,
“அ..அது..” என திணற,
“என்ன படிச்சிருக்கீங்கன்னு கேட்டதுக்கு ஏன் இவ்வளவு திணறல். பதில் சொல்லுங்க செந்தூரன்? என்ன படிச்சிருக்கீங்க?” என்றார் குரலில் அழுத்தத்தைக் கொடுத்து.
தன் எதிரே நின்றிருந்த மனைவியை நேராகப் பார்த்து, “டாக்டர்.செந்தூரன் செல்லத்துரை எம்.பி.பி.எஸ் எம்.டி பீடியாட்ரிஷன்” என்றான் கணீர் குரலில்.
திகைத்து விழித்த மனைவியின் விழிகள், ‘உண்மைதானா?’ என கேட்க, அவ்விழிகள் கேட்ட கேள்விக்கு ஆமென்று கண்மூடி ஆமோதித்தான். இன்னும் சில அதிர்ச்சிகள் கணவன் கொடுப்பானென்று அறிவாளோ!
‘பின் ஏன் திருமணத்தன்று அப்படிச் சொன்னாய்?’ என்று பார்வையாலேயே கேட்க, அதையே சதாசிவமும் அவனிடம் கேட்டார்.
“அன்னைக்கு என் மாமனார் என்கிட்ட என்ன வேலை பார்க்குறீங்கன்னுதான் கேட்டார். என்ன படிச்சிருக்கன்னு கேட்கலை. அப்படிக் கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன்” என்றான் நிமிர்வாக.
பழைய செந்தூரன் மரித்து டாக்டர்.செந்தூரன் புத்துயிர் பெருகிறானோ! பொய் என்று நினைப்பதெல்லாம் உண்மையாக! உண்மையென்று நம்பியவை!?
“சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரான நீங்க, செகண்ட் ஹேண்ட் சேலரா மாறுனது எதனால்?” என்றார் காரணம் அறிந்துகொள்ள.
“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இந்த வழக்குக்கு இது தேவையில்லைன்றது என்னோட வாதம். இதனால் நேரத்தையும் வீணாக்குகிறார் எதிர்க்கட்சி வக்கீல்” என்றான் அதியன்.
“என்ன சதாசிவம் வழக்குக்குத் தேவையானதைத்தான் கேட்கறீங்களா?” என்றார் நீதிபதி.
“இப்போதைக்கு இது தேவையில்லைங்க ஐயா” என்க,
“வழக்குக்குத் தேவையானதை மட்டும் கேளுங்க. இன்னொரு முறை இந்தத் தவறு நடக்கக்கூடாது” என்று எச்சரிக்க,
“சரிங்க ஐயா” என்றவர் ஓரப்பார்வையில் மகனை முறைத்தாலும், தன்னையே மடக்கியதில் பெருமைதான் அவருக்கு.
“மிஸ்டர்.செந்தூரன் கல்யாணத்தன்னைக்கே பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டீங்க சரி. அதன்பிறகு சேர்ந்து வாழ முயற்சித்திருக்கலாமே? ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என்றார்.
“நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா என் இரு குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்புப் போடணும் சார்” என அழுத்தமாகவே உரைத்தான் செந்தூரன்.
“போலீஸ் பாதுகாப்பா? விவாகரத்துக்கும் போலீஸ் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் புரியாது.
“ராஜி, வா நாம போகலாம். இவன் நம்மளை மாட்டிவிடப் பார்க்குறான்னு தோணுது” என்று அக்கா தங்கை இருவரும் மெல்ல எழுந்து வெளியே செல்ல,
“ஐயா! அம்மாவும் சித்தியும் வெளில போனா அவங்களுக்கும் ஆபத்திருக்கு. முதல்ல உள்ள வரச்சொல்றீங்களா?” என்றான் நீதிபதியை நோக்கி.
அவனின் பயமும் பதற்றமும் வித்தியாசமாய்ப்பட அவர்களை அமரச் சொல்லிவிட்டார் நீதிபதி.
“நன்றி ஐயா. விவாகரத்துன்னா இரண்டு நபர் மட்டும் சம்பந்தப்பட்டது. இங்க அப்படிக் கிடையாது. இந்த வழக்கால எங்க இரண்டு குடும்பமுமே பாதுகாப்பின்றி நிற்குது” என்றான்.
“இரண்டு குடும்பமா?”
“ஆமாம். திருமணத்திற்குப் பின் மனைவி வீடும் என்னோடதுதானே” என்று நீதிபதியைக் குழப்பி, “ஏன் என் தங்கைக்குக் கூட அடிக்கடி ஆக்சிடெண்ட் நடக்குது” என்று பவானியை நோக்கிக் கைகாட்டினான்.
அவள் எழுந்ததும் நீதிபதி ‘உண்மையா?’ என கேட்க, ஆமென்று சொல்லி உட்கார்ந்த நொடி அன்பழகியின் கைபேசியில் அழைப்பு வர, இரண்டு மூன்று முறை அதிர்வு வந்ததால் எடுத்து குனிந்து அமைதியாக பேசிய பவானி திடீரென, “என்ன சொல்றீங்க? அத்தைக்கு என்னாச்சி?” என்றாள் அதிவேகக் குரலில்.
“சைலன்ஸ்! கோர்ட்டுக்குள்ள செல் ஸ்விட்ஜ் ஆஃப் பண்ணிரணும். இல்லையா சைலண்ட்ல போட்டிருக்கணும்” என்றார் கோபமாக.
அவளோ மிரண்டாலும், “அண்ணி” என்று கைநீட்டி அன்பழகியினருகில் சென்று அழ, “என்ன பவிக்குட்டி? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு. ஏன் அழுற?” என்று நீதிபதி இளந்திரையனை சற்று சங்கடத்துடன் பார்த்தாள்.
அவரோ வெளியே கடுமையாக முகம் வைத்தாலும், அவளிடம் என்னவென்று கேட்கச் சொல்லி யாருமறியாது அன்பழகிக்கு சைகை செய்ய, “பவிக்குட்டி! யாருக்கு என்ன?” என்றாள்.
“அத்தையை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்” என்றதும் அனைவரும் அதிர, “யாரோ இரண்டு பேர் அத்தையைக் கொல்ல முயற்சி பண்ணினதா அகிலன் அத்தான் சொல்றாங்க. இந்தாங்க உங்க போன்லதான் கால் வந்தது. லைன்லதான் இருக்காங்க. என்னன்னு கேளுங்க” என்றதும் வேகமாக கைபேசியை வாங்கி, அண்ணனிடம் நடந்ததைக் கேட்கக் கேட்க அவள் கண்களில் கண்ணீர்.
“அப்பா!” என்று தகப்பனைப் பார்க்க, அவரோ உள்ளுக்குள் எழுந்த பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்து நீதிபதியைப் பார்த்து ஏதோ கேட்கப்போக, வார்த்தை வரவில்லை அவருக்கு.
அதைப் புரிந்தவரோ, “மிஸ்டர்.செந்தூரன் இந்த வழக்கு தள்ளிப்போறதுல உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்க,
“அவங்க என் உறவும்தான் ஐயா” என்றான்.
“சதாசிவம் நீங்க பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போய் உங்க மனைவியைப் பாருங்க” என்றதும், நன்றி சொல்லிக் கிளம்ப,
“ஐயா எங்க பாதுகாப்பு?” என்றான் செந்தூரன்.
“உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் மணிவாசகம் அதற்கான ஏற்பாடு செய்வார். அடுத்த அழைப்பு உங்களுக்கு வரும்போது வந்தால் போதும்” என, அவனும் நன்றி சொல்லிக் கிளம்ப, அடுத்த வழக்கு ஆரம்பமானது.
மாலைக்கெல்லாம் ராகினியை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, தாயின் கை பற்றி அழுத விழிகளுடன் அன்பழகி அமர்ந்திருக்க, “பொம்மு சின்னப் பிள்ளை மாதிரி அழக்கூடாது. அண்ணன் வந்ததைப் பார்த்ததும் ஓடிட்டாங்க. ரொம்பவே சின்ன அடிதான். இரண்டே நாள்ல சரியாகிரும்.” மகளுக்கு ஆறுதல் சொன்னார் ராகினி.
“எனக்குக் கல்யாணம் நடந்ததாலதானம்மா இவ்வளவு பிரச்சனையும்? என்னால உங்களுக்குத் திரும்பத் திரும்ப எதாவது...” என்கையில் கேவல் எழ அதை அடக்கி, “கல்யாணம்னு ஒண்ணு செய்யப்போய்தான இவ்வளவும். கல்யாணம் ஆகாதப்ப நிம்மதியாயிருந்...”
“இனி உங்க நிம்மதி குழையாது அன்பழகி” என்றபடி வந்து நின்றான் அவளின் கணவன்.
“மாப்பிள்..”
“வேண்டாம் அத்தை. உங்களை வருத்திக்காதீங்க. நிஜமாவே என்னாலதான் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் பிரச்சனைன்னு தெரியும். அப்படியே போயிரலாம்னுதான் பார்க்குறேன். ஆனா, முடியலை. அத்தனை பேர் மத்தியில் வாழலாம் வான்னு ஒருத்தி கூப்பிட்டும் வேண்டாம் சொல்லிட்டேன். அதை சரி பண்ணலாம்னு நினைத்தாலும் முடியாத நிலை. மன்னிப்புன்ற வார்த்தையைத் தவிர என்கிட்ட வேற வார்த்தை இல்லை” என்று அவரின் கால் தொட்டு எழ,
ராகினி அதிர்ந்தாரென்றால், கணவனின் அக்குரலில் ஆறுதலளிக்கத் தன்னுள் எழுந்த எண்ணத்தை மறைத்தாள் அன்பழகி.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க? முதல்ல வெளில போங்க” என கத்தியபடி வந்தாள் பவானி.
“வாங்க தங்கச்சி மேடம். என்னைப் போகச் சொல்றதுக்கு முன்ன நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? கல்யாணம் முடிந்த பொண்ணு புருஷன் வீட்டுல இருக்கணும். இங்க கிடையாது” என்றான் நேரடியாகவே.
‘இந்த அண்ணன் இவ்வளவு.. அதுவும் தன்னிடம் நேராகப் பேசுவாங்களா? இதை முதலில் செய்திருந்தால்...’ என்னென்னவோ எண்ணம் எழ, தன்னுள் எழுந்த ஆச்சர்யம் மறைந்து கோபம் தலைதூக்க, “அதை என் அண்ணி சொல்லட்டும்” என்றாள்.
“பார்றா! அண்ணன் வேண்டாமாம். அண்ணி வேணுமாம். அத்தனை பாசம்.. ம்..” என்றான் சிறிது நக்கல் தொணியில்.
“ஆமா. ஆனா சாருக்குதான் பாசம்னா என்னன்னே தெரியாதே!” என்று எகிற,
“பவிக்குட்டி அமைதியாயிரு” என்று அன்பழகி நாத்தனாரை அடக்க,
“நான் இருக்கிறது இருக்கட்டும் அண்ணி. உங்களை வேண்டாம்னு தூக்கியெறிந்தவருக்கு உங்க வீட்டுல என்ன வேலை? போகச் சொல்லுங்க” என்றாள் கோபத்தில்.
“அதான! உன்னை வேண்டாம்னு சொன்னவனை உன் வீட்டு வாசல்படி மிதிக்க விடலாமா? விரட்டு அன்பழகி” என்றான் அவனும் மனைவியின் கண்பார்த்து.
“மாப்பிள்ளை அவள் சின்னப்பொண்ணு சொன்னாள்னு நீங்களும்...”
“அத்தை! நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது. எனக்குக் கல்யாணமாகிருச்சி” என்றாள் திமிராக.
“அதுவும் திருட்டுக் கல்யாணம்” என்று கிண்டலாய் இடையிட்டான் செந்தூரன்.
“உங்களைப்போல அண்ணன் இருந்தா, என்னை மாதிரி தங்கைகள் திருட்டுத்தனமாய்தான் கல்யாணம் செய்துக்கணும். இல்லை எவனுக்...”
“ஏய்ய்!!” என உச்சபட்ச கோபத்தில் கையோங்கியவன், தங்கையின் பயந்த முகம் பார்த்து, ‘ச்சே..’ என கையை உதறி அங்கிருந்து வெளியேறினான்.
“என்னங்க நில்லுங்க. ஹலோ சாரே! டாக்டர் சார் கொஞ்சம் நில்லுங்க” என்று கத்தியதில் அவன் நிற்க, கணவன் முன் வந்தவள் அவன் கலங்கிய கண்களைக் கண்டு, “பவி குழந்தைங்க. அவள் சார்பா நான்...”
“வேண்டாம் அன்பழகி. அவளுக்காக நீ இறங்கி வரவேண்டாம். அவளுக்காகன்னு இல்லை யாருக்காகவும் நீ இறங்காதே! நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாவே இருந்துட்டுப் போறேன். என்னால நீதான் ரொம்ப கஷடப்பட்டுட்ட, அவளைப் பார்த்துக்க. நீயும், வீட்டில் உள்ளவங்களும் அனாவசியமா வெளில போக வேண்டாம். அப்படியே போனாலும் எங்க போறாங்கன்னு தெரிந்து வச்சிக்கோ. நீ வெளில வந்துட்டாலே எனக்கு மெசேஜ் அனுப்பிரு. உங்க வீட்டுல உள்ளவங்களையும் பழக்கப்படுத்து. சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்தாலோ, பார்த்தாலோ உடனே எனக்கு இன்பார்ம் பண்ணு” என்றான்.
“சரிங்க சொல்றேன். ப்ளீஸ் நீங்க டென்சனாகாதீங்க. அது உங்க உடம்பைப் பாதிக்கும். பவியை நான் பார்த்துக்குறேன்” என்றவள் கண்களில் அக்கறையையும் மீறி என்ன கண்டானோ சிறு புன்னகையுடன், “எனக்கு என் தங்கையைப் பற்றின கவலை எப்பவும் கிடையாது. ஏன்னா அவள் அண்ணி பவர்ஃபுல் கேர்ள். அன்பு வைக்குறதிலும் அவள் அண்ணி அழகிதான். நான் வர்றேன்” என்று நகர, ‘ஹக்’ என்ற விக்கல் சத்தத்தில் நின்றானவன்.
மூன்று மணியளவில் செந்தூரன்-அன்பழகி வழக்கு ஆரம்பிக்க, “மிஸஸ்.அன்பழகி ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என வக்கீல் அதியன் கேட்க,
“நான் கேட்கலை!” பட்டென அவளிடமிருந்து பதில் வர,
“சரி கேட்கலை. சம்மதித்துக் கையெழுத்து போட்டுருக்கீங்களே ஏன்?”
“கேட்டா போடுவேன்னு சொல்லியிருந்ததால போட்டேன்” என்றாள் அமைதியாக.
“அப்ப உங்களுக்கும் விவாகரத்துக்கு சம்மதம்தானே?”
“அப்படிக் கிடையாது. கேட்டதால கொடுத்துட்டேன்.” திரும்பவும் அதையே சொல்ல,
“அப்ப சேர்ந்து வாழ விருப்பமா?” விடாது அவனும் கேட்டான்.
“அவங்க விரும்பினா எனக்கு விருப்பம். விரும்பலைன்னா விருப்பமில்லை” என தெளிவாகக் குழப்ப,
“ஏன்மா புரியுற மாதிரி சொல்லமாட்டீங்களா?” என்று இடையிட்டார் நீதிபதி.
“இதை விட எளிமையா எப்படிங்க ஐயா சொல்லுறது?” என்றாள் அப்பாவியாய்.
‘இவளைப் பற்றித் தெரிந்தும் கேட்ட என்னை என்ன செய்யுறது?’ என அவளை முறைத்த நீதிபதி இளந்திரையன் சதாசிவத்தின் குரு. சதாசிவம் படித்து முடித்ததும் அவரிடம்தான் உதவியாளராகச் சேர்ந்தது. இன்றோ குடும்ப நண்பர் என்றும் சொல்லலாம். ஒரே இடத்தில் இருப்பதால் இன்னும் பழக்கம் குறையாதிருக்கிறது.
“உங்க பதில் எனக்கு ரொம்ம்பவே புரிஞ்சிருச்சி மிஸஸ்.அன்பழகி” என்ற சதாசிவம் செந்தூரனிடம் வந்து, “உங்க பெயர் என்ன?” என்றார்.
“செந்தூரன்!”
“முழுப்பெயர் இதுதானா? இல்லை வேற பெயர் இருக்கா?”
“இல்லை வக்கீல் சார்” என்றான்.
“என்ன தொழில் செய்யுறீங்க?
“கரண்ட் பொருட்கள், அதாவது ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி இதெல்லாம் பழைய ரேட்டுக்கு வாங்கி சரிபண்ணி செகண்ட் ஹேண்ட் சேல் பண்றேன்.”
“ஓ... என்ன படிச்சிருக்கீங்க?” என்றவர் மருமகன் கண்களையே பார்க்க,
“அ..அது..” என திணற,
“என்ன படிச்சிருக்கீங்கன்னு கேட்டதுக்கு ஏன் இவ்வளவு திணறல். பதில் சொல்லுங்க செந்தூரன்? என்ன படிச்சிருக்கீங்க?” என்றார் குரலில் அழுத்தத்தைக் கொடுத்து.
தன் எதிரே நின்றிருந்த மனைவியை நேராகப் பார்த்து, “டாக்டர்.செந்தூரன் செல்லத்துரை எம்.பி.பி.எஸ் எம்.டி பீடியாட்ரிஷன்” என்றான் கணீர் குரலில்.
திகைத்து விழித்த மனைவியின் விழிகள், ‘உண்மைதானா?’ என கேட்க, அவ்விழிகள் கேட்ட கேள்விக்கு ஆமென்று கண்மூடி ஆமோதித்தான். இன்னும் சில அதிர்ச்சிகள் கணவன் கொடுப்பானென்று அறிவாளோ!
‘பின் ஏன் திருமணத்தன்று அப்படிச் சொன்னாய்?’ என்று பார்வையாலேயே கேட்க, அதையே சதாசிவமும் அவனிடம் கேட்டார்.
“அன்னைக்கு என் மாமனார் என்கிட்ட என்ன வேலை பார்க்குறீங்கன்னுதான் கேட்டார். என்ன படிச்சிருக்கன்னு கேட்கலை. அப்படிக் கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன்” என்றான் நிமிர்வாக.
பழைய செந்தூரன் மரித்து டாக்டர்.செந்தூரன் புத்துயிர் பெருகிறானோ! பொய் என்று நினைப்பதெல்லாம் உண்மையாக! உண்மையென்று நம்பியவை!?
“சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரான நீங்க, செகண்ட் ஹேண்ட் சேலரா மாறுனது எதனால்?” என்றார் காரணம் அறிந்துகொள்ள.
“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இந்த வழக்குக்கு இது தேவையில்லைன்றது என்னோட வாதம். இதனால் நேரத்தையும் வீணாக்குகிறார் எதிர்க்கட்சி வக்கீல்” என்றான் அதியன்.
“என்ன சதாசிவம் வழக்குக்குத் தேவையானதைத்தான் கேட்கறீங்களா?” என்றார் நீதிபதி.
“இப்போதைக்கு இது தேவையில்லைங்க ஐயா” என்க,
“வழக்குக்குத் தேவையானதை மட்டும் கேளுங்க. இன்னொரு முறை இந்தத் தவறு நடக்கக்கூடாது” என்று எச்சரிக்க,
“சரிங்க ஐயா” என்றவர் ஓரப்பார்வையில் மகனை முறைத்தாலும், தன்னையே மடக்கியதில் பெருமைதான் அவருக்கு.
“மிஸ்டர்.செந்தூரன் கல்யாணத்தன்னைக்கே பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டீங்க சரி. அதன்பிறகு சேர்ந்து வாழ முயற்சித்திருக்கலாமே? ஏன் விவாகரத்து கேட்டீங்க?” என்றார்.
“நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா என் இரு குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்புப் போடணும் சார்” என அழுத்தமாகவே உரைத்தான் செந்தூரன்.
“போலீஸ் பாதுகாப்பா? விவாகரத்துக்கும் போலீஸ் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் புரியாது.
“ராஜி, வா நாம போகலாம். இவன் நம்மளை மாட்டிவிடப் பார்க்குறான்னு தோணுது” என்று அக்கா தங்கை இருவரும் மெல்ல எழுந்து வெளியே செல்ல,
“ஐயா! அம்மாவும் சித்தியும் வெளில போனா அவங்களுக்கும் ஆபத்திருக்கு. முதல்ல உள்ள வரச்சொல்றீங்களா?” என்றான் நீதிபதியை நோக்கி.
அவனின் பயமும் பதற்றமும் வித்தியாசமாய்ப்பட அவர்களை அமரச் சொல்லிவிட்டார் நீதிபதி.
“நன்றி ஐயா. விவாகரத்துன்னா இரண்டு நபர் மட்டும் சம்பந்தப்பட்டது. இங்க அப்படிக் கிடையாது. இந்த வழக்கால எங்க இரண்டு குடும்பமுமே பாதுகாப்பின்றி நிற்குது” என்றான்.
“இரண்டு குடும்பமா?”
“ஆமாம். திருமணத்திற்குப் பின் மனைவி வீடும் என்னோடதுதானே” என்று நீதிபதியைக் குழப்பி, “ஏன் என் தங்கைக்குக் கூட அடிக்கடி ஆக்சிடெண்ட் நடக்குது” என்று பவானியை நோக்கிக் கைகாட்டினான்.
அவள் எழுந்ததும் நீதிபதி ‘உண்மையா?’ என கேட்க, ஆமென்று சொல்லி உட்கார்ந்த நொடி அன்பழகியின் கைபேசியில் அழைப்பு வர, இரண்டு மூன்று முறை அதிர்வு வந்ததால் எடுத்து குனிந்து அமைதியாக பேசிய பவானி திடீரென, “என்ன சொல்றீங்க? அத்தைக்கு என்னாச்சி?” என்றாள் அதிவேகக் குரலில்.
“சைலன்ஸ்! கோர்ட்டுக்குள்ள செல் ஸ்விட்ஜ் ஆஃப் பண்ணிரணும். இல்லையா சைலண்ட்ல போட்டிருக்கணும்” என்றார் கோபமாக.
அவளோ மிரண்டாலும், “அண்ணி” என்று கைநீட்டி அன்பழகியினருகில் சென்று அழ, “என்ன பவிக்குட்டி? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு. ஏன் அழுற?” என்று நீதிபதி இளந்திரையனை சற்று சங்கடத்துடன் பார்த்தாள்.
அவரோ வெளியே கடுமையாக முகம் வைத்தாலும், அவளிடம் என்னவென்று கேட்கச் சொல்லி யாருமறியாது அன்பழகிக்கு சைகை செய்ய, “பவிக்குட்டி! யாருக்கு என்ன?” என்றாள்.
“அத்தையை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்” என்றதும் அனைவரும் அதிர, “யாரோ இரண்டு பேர் அத்தையைக் கொல்ல முயற்சி பண்ணினதா அகிலன் அத்தான் சொல்றாங்க. இந்தாங்க உங்க போன்லதான் கால் வந்தது. லைன்லதான் இருக்காங்க. என்னன்னு கேளுங்க” என்றதும் வேகமாக கைபேசியை வாங்கி, அண்ணனிடம் நடந்ததைக் கேட்கக் கேட்க அவள் கண்களில் கண்ணீர்.
“அப்பா!” என்று தகப்பனைப் பார்க்க, அவரோ உள்ளுக்குள் எழுந்த பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்து நீதிபதியைப் பார்த்து ஏதோ கேட்கப்போக, வார்த்தை வரவில்லை அவருக்கு.
அதைப் புரிந்தவரோ, “மிஸ்டர்.செந்தூரன் இந்த வழக்கு தள்ளிப்போறதுல உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்க,
“அவங்க என் உறவும்தான் ஐயா” என்றான்.
“சதாசிவம் நீங்க பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போய் உங்க மனைவியைப் பாருங்க” என்றதும், நன்றி சொல்லிக் கிளம்ப,
“ஐயா எங்க பாதுகாப்பு?” என்றான் செந்தூரன்.
“உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் மணிவாசகம் அதற்கான ஏற்பாடு செய்வார். அடுத்த அழைப்பு உங்களுக்கு வரும்போது வந்தால் போதும்” என, அவனும் நன்றி சொல்லிக் கிளம்ப, அடுத்த வழக்கு ஆரம்பமானது.
மாலைக்கெல்லாம் ராகினியை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, தாயின் கை பற்றி அழுத விழிகளுடன் அன்பழகி அமர்ந்திருக்க, “பொம்மு சின்னப் பிள்ளை மாதிரி அழக்கூடாது. அண்ணன் வந்ததைப் பார்த்ததும் ஓடிட்டாங்க. ரொம்பவே சின்ன அடிதான். இரண்டே நாள்ல சரியாகிரும்.” மகளுக்கு ஆறுதல் சொன்னார் ராகினி.
“எனக்குக் கல்யாணம் நடந்ததாலதானம்மா இவ்வளவு பிரச்சனையும்? என்னால உங்களுக்குத் திரும்பத் திரும்ப எதாவது...” என்கையில் கேவல் எழ அதை அடக்கி, “கல்யாணம்னு ஒண்ணு செய்யப்போய்தான இவ்வளவும். கல்யாணம் ஆகாதப்ப நிம்மதியாயிருந்...”
“இனி உங்க நிம்மதி குழையாது அன்பழகி” என்றபடி வந்து நின்றான் அவளின் கணவன்.
“மாப்பிள்..”
“வேண்டாம் அத்தை. உங்களை வருத்திக்காதீங்க. நிஜமாவே என்னாலதான் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் பிரச்சனைன்னு தெரியும். அப்படியே போயிரலாம்னுதான் பார்க்குறேன். ஆனா, முடியலை. அத்தனை பேர் மத்தியில் வாழலாம் வான்னு ஒருத்தி கூப்பிட்டும் வேண்டாம் சொல்லிட்டேன். அதை சரி பண்ணலாம்னு நினைத்தாலும் முடியாத நிலை. மன்னிப்புன்ற வார்த்தையைத் தவிர என்கிட்ட வேற வார்த்தை இல்லை” என்று அவரின் கால் தொட்டு எழ,
ராகினி அதிர்ந்தாரென்றால், கணவனின் அக்குரலில் ஆறுதலளிக்கத் தன்னுள் எழுந்த எண்ணத்தை மறைத்தாள் அன்பழகி.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க? முதல்ல வெளில போங்க” என கத்தியபடி வந்தாள் பவானி.
“வாங்க தங்கச்சி மேடம். என்னைப் போகச் சொல்றதுக்கு முன்ன நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? கல்யாணம் முடிந்த பொண்ணு புருஷன் வீட்டுல இருக்கணும். இங்க கிடையாது” என்றான் நேரடியாகவே.
‘இந்த அண்ணன் இவ்வளவு.. அதுவும் தன்னிடம் நேராகப் பேசுவாங்களா? இதை முதலில் செய்திருந்தால்...’ என்னென்னவோ எண்ணம் எழ, தன்னுள் எழுந்த ஆச்சர்யம் மறைந்து கோபம் தலைதூக்க, “அதை என் அண்ணி சொல்லட்டும்” என்றாள்.
“பார்றா! அண்ணன் வேண்டாமாம். அண்ணி வேணுமாம். அத்தனை பாசம்.. ம்..” என்றான் சிறிது நக்கல் தொணியில்.
“ஆமா. ஆனா சாருக்குதான் பாசம்னா என்னன்னே தெரியாதே!” என்று எகிற,
“பவிக்குட்டி அமைதியாயிரு” என்று அன்பழகி நாத்தனாரை அடக்க,
“நான் இருக்கிறது இருக்கட்டும் அண்ணி. உங்களை வேண்டாம்னு தூக்கியெறிந்தவருக்கு உங்க வீட்டுல என்ன வேலை? போகச் சொல்லுங்க” என்றாள் கோபத்தில்.
“அதான! உன்னை வேண்டாம்னு சொன்னவனை உன் வீட்டு வாசல்படி மிதிக்க விடலாமா? விரட்டு அன்பழகி” என்றான் அவனும் மனைவியின் கண்பார்த்து.
“மாப்பிள்ளை அவள் சின்னப்பொண்ணு சொன்னாள்னு நீங்களும்...”
“அத்தை! நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது. எனக்குக் கல்யாணமாகிருச்சி” என்றாள் திமிராக.
“அதுவும் திருட்டுக் கல்யாணம்” என்று கிண்டலாய் இடையிட்டான் செந்தூரன்.
“உங்களைப்போல அண்ணன் இருந்தா, என்னை மாதிரி தங்கைகள் திருட்டுத்தனமாய்தான் கல்யாணம் செய்துக்கணும். இல்லை எவனுக்...”
“ஏய்ய்!!” என உச்சபட்ச கோபத்தில் கையோங்கியவன், தங்கையின் பயந்த முகம் பார்த்து, ‘ச்சே..’ என கையை உதறி அங்கிருந்து வெளியேறினான்.
“என்னங்க நில்லுங்க. ஹலோ சாரே! டாக்டர் சார் கொஞ்சம் நில்லுங்க” என்று கத்தியதில் அவன் நிற்க, கணவன் முன் வந்தவள் அவன் கலங்கிய கண்களைக் கண்டு, “பவி குழந்தைங்க. அவள் சார்பா நான்...”
“வேண்டாம் அன்பழகி. அவளுக்காக நீ இறங்கி வரவேண்டாம். அவளுக்காகன்னு இல்லை யாருக்காகவும் நீ இறங்காதே! நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாவே இருந்துட்டுப் போறேன். என்னால நீதான் ரொம்ப கஷடப்பட்டுட்ட, அவளைப் பார்த்துக்க. நீயும், வீட்டில் உள்ளவங்களும் அனாவசியமா வெளில போக வேண்டாம். அப்படியே போனாலும் எங்க போறாங்கன்னு தெரிந்து வச்சிக்கோ. நீ வெளில வந்துட்டாலே எனக்கு மெசேஜ் அனுப்பிரு. உங்க வீட்டுல உள்ளவங்களையும் பழக்கப்படுத்து. சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்தாலோ, பார்த்தாலோ உடனே எனக்கு இன்பார்ம் பண்ணு” என்றான்.
“சரிங்க சொல்றேன். ப்ளீஸ் நீங்க டென்சனாகாதீங்க. அது உங்க உடம்பைப் பாதிக்கும். பவியை நான் பார்த்துக்குறேன்” என்றவள் கண்களில் அக்கறையையும் மீறி என்ன கண்டானோ சிறு புன்னகையுடன், “எனக்கு என் தங்கையைப் பற்றின கவலை எப்பவும் கிடையாது. ஏன்னா அவள் அண்ணி பவர்ஃபுல் கேர்ள். அன்பு வைக்குறதிலும் அவள் அண்ணி அழகிதான். நான் வர்றேன்” என்று நகர, ‘ஹக்’ என்ற விக்கல் சத்தத்தில் நின்றானவன்.
Last edited: