- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
11
தாயிடம், “இவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமாம்மா? கார் மோதப்போகுதுன்னு தெரிஞ்சும் தன்னை மட்டும் காப்பாத்திக்க குனிஞ்சிருக்கான். அந்த நேரம் அவளையும் காப்பாத்த முயற்சித்திருக்கலாம்ல?”
“என்னடா சொல்ற? நான் ஹாஸ்பிடல்ல நடந்ததை வச்சி மட்டும் தான் சொன்னேன். அதுக்கும் முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கா? கல்யாணத்தன்னைக்கு பேசினப்ப கூட சொல்லலையேடா.”
“தேவியே சொல்லாதப்ப நான் எப்படி சொல்றதுன்னு விட்டுட்டேன். அன்னைக்கு அவ என்கிட்ட கேட்கிறா, ஆக்ஸிடண்டான போது ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சிக்காம உங்களை மட்டும் காப்பாத்திக்கிட்டீங்க. உங்க உயிர் முக்கியம், நான் யாரோன்னு விட்டுட்டீங்கதானன்னு. எனக்கு அதை கேட்கும் போது எப்படியிருந்தது தெரியுமா? அப்ப மட்டும் இவன் என் கையில மாட்டியிருந்தான் கொலையே பண்ணியிருப்பேன். ஏன்டா உன்னை நம்பி அனுப்பின பொண்ணை இப்படி அம்போன்னு விட்டுட்டியே. அப்படி என்னடா உன் உயிர் உசத்தி, அவளோட உயிர் மட்டம்? அப்படி என்னத்தை சாதிச்ச? சாதிக்கப் போற?” என்றான் கோவத்தில்.
“ஏய்! கையை எடு நானும் பார்த்திட்டுருக்கேன், ஓவரா பேசிட்டே போற? அந்த டைம் எனக்கு என்ன தோணிச்சிதோ அதைத்தான் செஞ்சேன். அதுக்கு பெயர் சுயநலம்னா இருந்துட்டுப் போகட்டும். நீ கூடத்தான் நான் சுபாவை வேண்டாம்னு சொன்னதும், நான் கட்டிக்கிறேன்டா அவளைன்னு சொன்ன. அதை செஞ்சியா? கண் தெரியாதவளை காலம் முழுக்க சுமக்க நான் தயாராயில்லன்னு நான் சொன்னேன். அவளுக்கு கண்ணா நான் இருப்பேன்டா சொன்ன? இப்ப அவளைவிட சூப்பரா ஒருத்தி கிடைச்சதும் வேற எதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க? இவ்வளவுதான் உன்னோட சகிப்புத்தன்மையா? இல்ல இது தான் உன்னோட வீரமா? நீயெல்லாம் என்னைப்பற்றிப் பேசுற?” என்றான் பதிலுக்கு.
“அம்மாஆஆ... இவனை போகச் சொல்லுங்க. இவன் பேசுறதை தேவி கேட்டுட்டா எல்லாம் தப்பாகிப் போகிரும்மா.”
“நானே போயிருப்பேன் நீ அமைதியா பேசியிருந்தா. நான் வர்றேன் எதுக்கும் உன் தங்கைகிட்ட என்மேல இன்ட்ரஸ்ட் இருக்கா கேளு. அவ எனக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது.”
“அடிச்செருப்பால நாயே! அவளுக்கு உன்மேல இன்ட்ரஸ்டா? பார்க்க லட்சணமா இருந்தா எல்லா பொண்ணுங்களும் உன்னைக்கண்டு மயங்கிருவாங்களா? நீ பத்திரிக்கை அடிச்சி கைபிடிக்கயிருந்தவளும் உன்கிட்ட மயங்கல. நீயா தேடிவந்து கட்டிக்கிறேன்னவளும் உன்கிட்ட மயங்கல. எங்க முடிவுதான் சாதனா முடிவு. அவ அக்கறைப்பட்டது வரச்சொல்லி அசிங்கப்படுத்திட்டோமேன்னு ஒரு ஃபீல்ல தான். கூடிய சீக்கிரமே என் தங்கையோட கல்யாணப் பத்திரிக்கை உன் ஆஃபீஸ் தேடி வரும்” என்றதும் ஒருவிதமாய் பார்த்துச் சென்றான் ஆனந்த்ராஜ்.
அவன் சென்றதும் “அம்மா சாதுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க. நல்ல பையன், நல்ல ஃபேமிலியா இருக்கணும். அவசரத்துல மாப்பிள்ளை தேடினாலும் அவன் நல்லவனா இருக்கணும்.”
“அதுக்கேன்டா தேடணும்? உனக்கு தெரிஞ்ச நல்ல பையன் அன்ட் ஃபேமிலி இருக்கே.”
“எனக்குத் தெரிஞ்ச பையனா? யாரைமா சொல்றீங்க?”
“ப்ரேம்! நல்ல பையன் இல்லையாடா ஜீவா?” என சோகமாய் முகம் வைத்தபடி கேட்க...
“அம்மா” என முகம் மலர தாயை தூக்கிச் சுற்றியவன் கீழே விட்டு “எப்படி எனக்குத் தோணாமல் போச்சி?”
“அதுக்கெல்லாம் மூளை வேணும்டா. உனக்குத்தான் கொஞ்சம் கம்மியாச்சே. மீதியிருக்கிற கொஞ்ச மூளையும் தேவின்ற பொண்ணு பின்னாடி சுத்துது.”
“அம்மா” என பல்லைக் கடித்தவன் பின் சிரித்தான்..
கணவனையே கவனித்துக் கொண்டிருந்த சுபாவிற்கும், அவளையும் மீறி மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. தான் நினைத்ததையே மாமியாரும் நினைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டவளுக்கு, என்னதான் ராஜிடம் தனக்காக கணவன் சண்டையிட்ட போது மனம் ஏற்றுக்கொண்டாலும், அதையும் மீறி அவளின் கோபம் பளிச்சிட்டது.
இதுவரை சாதுவாக இருந்தவள். யாரிடமும் வம்பு, வழக்கென்று செல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டென்று இருந்தவள். கோபமா அப்படின்னா என் பொண்ணுக்கு என்னன்னே தெரியாது என பெற்றவர்களை பெருமை பேச வைத்தவள். இன்றோ முதல் கோபம் அதுவும், கணவன் இவன் தானென்று அறிய முடியாமல் போன கோபம். அதிலும் இன்னொருவனை கணவனாக எண்ணியிருந்த கோபம் அனைத்தும் அவளின் குணத்தை மாற்றியது.
“நான் தேவிகிட்ட பேசுறேன்மா. அவளுக்கு இஷ்டமிருந்தா மேல பேசலாம். சம்மதிச்சா அப்பா இன்னும் ரெண்டு நாள்ல வர்றாங்கள்ல அவங்களோடவே மாமா, அத்தையை வரச்சொல்லி பேசிக்கலாம். காரணம் எதுவாயிருந்தாலும் எப்படியோ அந்த ராஜ் கூட நம்ம வீட்டுப் பொண்ணுங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க. அந்த கோபம் அவனுக்கு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் சாது வேலைக்குப் போக வேண்டாம்மா.”
“அவனால அப்படி என்ன பண்ணிற முடியும்னு பயப்படுற?”
“பயமில்லம்மா. ரெண்டு டைம் தோத்தவனுக்கு இது இன்சல்டிங்கா இருக்கும். நல்லவனா இருந்தா பரவாயில்லை. இல்லன்னா கஷ்டம். சாதுவை அவனால ப்ரெய்ன் வாஷ் பண்ணி அவன் வழிக்கு வரவைக்க முடியாது. அதே டைம் கோபத்துல எதாவது பண்ணினான்னா? இப்பத்தான் தொட்டதுக்கெல்லாம் பழிவாங்குறேன்னு கிளம்புறாங்களே.”
“சரிடா நான் பார்த்துக்கறேன். நீ தேவிகிட்டப் பேசு போ” என மகனை உள்ளே அனுப்ப, அதற்குள் சுபா தங்களறைக்குள் சென்றிருந்தாள். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தவளருகில் வந்தவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைக்க, கண் திறந்தவள் அவனையே பார்க்க, அவளின் பார்வையின் வசீகரிப்பில் பேச வாயெழாமல் ஜீவா பார்த்திருக்க... கையை மெல்ல அவனிடமிருந்து உருவியவள், “என்னாச்சி? யார் அவன்? அந்த ராஜ்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் அவன்மேல?”
மனைவியின் கேள்விக்கு இப்பொழுதாவது உண்மையை சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவன் செய்ததை மறக்க முயற்சி செய்து, சுமூகமாகவாவது பேசியிருப்பாள். ஆனால், இதுதான் நடக்க வேண்டுமென்றிருந்தால், விதியை மாற்ற யாரால் முடியும்.
“தேவி அவன் யார் என்னன்றதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். நமக்கு இப்ப சாதுவோட ப்யூச்சர்தான் முக்கியம். அதுக்கு அம்மா ஒரு ஐடியா சொன்னாங்க. அதான் உன்னோட பெர்மிஷன் கேட்கலாம்னு...”
சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள், “உங்க போன்ல ப்ரேம் அண்ணா நம்பர் போட்டு தர்றீங்களா?”
ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தவன், சொன்னதைச் செய்து மனைவியின் கையில் கொடுக்க, ப்ரேம் ஹலோ சொல்வதற்குள், “அண்ணா நான்தான் குறுக்க பேசாத. இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும், சாதனாவுக்கும் நிச்சயதார்த்தம். அது முடிஞ்சி ஒரு மாசத்துக்குள்ள உங்களோட கல்யாணம். வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமா கிளம்பி வாங்க” என்று போனை வைத்தாள்.
“தேவி எப்படி நான் இதைத்தான் பேச வந்தேன்னு கண்டுபிடிச்ச?” என்றவனுக்கு ஒருவேளை தாங்கள் பேசியதைக் கேட்டுவிட்டாளோ என்ற எண்ணம் வர, அவன் முகம் மாறியது.
கணவனையே பார்த்திருந்தவள், அவனின் எண்ணம் உணர்ந்து, “நான் இதை ஏற்கனவே முடிவு பண்ணியிருந்தேன். நடுவுல இந்த ராஜ் வந்ததாலதான் பேசாம விட்டுட்டேன். அவன் நல்லவனில்லைன்ற பொழுது, இதைப்பற்றிப் பேசுறதுல தப்பில்லைன்னு தோணிச்சி. அதான் உங்களைக் கேட்காமலே முடிவெடுத்துட்டேன். ஒண்ணும் தப்பு பண்ணலையே?”
“நல்ல முடிவு தான். இருந்தாலும், உங்கண்ணன் கிட்ட கேட்காம ஆர்டர் போடுறியே. அவருக்கு இஷ்டமான்னு தெரிய வேண்டாமா?”
“இப்ப சாதனாவுக்கு மேரேஜ் பண்ணப்போறேன்னு அவகிட்ட சம்மதம் கேட்டீங்களா என்ன? இல்லைல? அதுமாதிரி தான் இதுவும். எங்கண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அவனுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னும் எனக்குத் தெரியும். அதனால நீங்க ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை. அத்தை, மாமாகிட்டப் பேசி ஆகிற வேலையைப் பாருங்க.”
“சுப்பு” என கண்கள் பளபளக்க மனைவியை அணைக்கப் போனவனைத் தடுத்து, “உங்க கொஞ்சலை ஓரம்கட்டி, அத்தைகிட்ட போய் பேசுங்க” என விரட்ட...
முகத்தை சோகமாக வைத்து, “ஹ்ம்... அவ்வளவு தானா?” என்றவன் அவளறியாமல் கன்னத்தில் முத்தமிட்டு, “ஓகே செல்லம்” என்று வெளியேறினான்.
“இவங்களை...” என பல்லைக்கடித்தவள் பெருமூச்சை வெளியிட்டு, இந்த உண்மை தெரியாமலோ, இல்லை கடைசிவரை கண் தெரியாமலோ இருந்திருந்தால், ஜீவாவோடான தன் வாழ்வு நன்றாக இருந்திருக்குமென்றே தோன்றியது. கணவன் என்ற உரிமையுடன் சகஜமாக பழக முடியாமல், அவன் செய்த செயலால் தான் செய்யவிருந்த தப்பு கண்முன் தோன்ற முகம் இறுகிப்போனாள்.
திருமணத்திற்குப் பின் கணவனிடம் தன் எண்ணங்களை, ஆசைகளைப் பகிர்ந்து, எப்படி அந்நியோன்யமாக இருக்கவேண்டுமென்ற அவளின் ஆசைகள் அனைத்தும் கனவாகவே போவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது சுபாவால். அண்ணன் திருமணம் வரை மட்டுமே இந்த வீடும், உறவும் தனக்குச் சொந்தம். அதன் பின்னான தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.
தாயிடம், “இவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமாம்மா? கார் மோதப்போகுதுன்னு தெரிஞ்சும் தன்னை மட்டும் காப்பாத்திக்க குனிஞ்சிருக்கான். அந்த நேரம் அவளையும் காப்பாத்த முயற்சித்திருக்கலாம்ல?”
“என்னடா சொல்ற? நான் ஹாஸ்பிடல்ல நடந்ததை வச்சி மட்டும் தான் சொன்னேன். அதுக்கும் முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கா? கல்யாணத்தன்னைக்கு பேசினப்ப கூட சொல்லலையேடா.”
“தேவியே சொல்லாதப்ப நான் எப்படி சொல்றதுன்னு விட்டுட்டேன். அன்னைக்கு அவ என்கிட்ட கேட்கிறா, ஆக்ஸிடண்டான போது ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சிக்காம உங்களை மட்டும் காப்பாத்திக்கிட்டீங்க. உங்க உயிர் முக்கியம், நான் யாரோன்னு விட்டுட்டீங்கதானன்னு. எனக்கு அதை கேட்கும் போது எப்படியிருந்தது தெரியுமா? அப்ப மட்டும் இவன் என் கையில மாட்டியிருந்தான் கொலையே பண்ணியிருப்பேன். ஏன்டா உன்னை நம்பி அனுப்பின பொண்ணை இப்படி அம்போன்னு விட்டுட்டியே. அப்படி என்னடா உன் உயிர் உசத்தி, அவளோட உயிர் மட்டம்? அப்படி என்னத்தை சாதிச்ச? சாதிக்கப் போற?” என்றான் கோவத்தில்.
“ஏய்! கையை எடு நானும் பார்த்திட்டுருக்கேன், ஓவரா பேசிட்டே போற? அந்த டைம் எனக்கு என்ன தோணிச்சிதோ அதைத்தான் செஞ்சேன். அதுக்கு பெயர் சுயநலம்னா இருந்துட்டுப் போகட்டும். நீ கூடத்தான் நான் சுபாவை வேண்டாம்னு சொன்னதும், நான் கட்டிக்கிறேன்டா அவளைன்னு சொன்ன. அதை செஞ்சியா? கண் தெரியாதவளை காலம் முழுக்க சுமக்க நான் தயாராயில்லன்னு நான் சொன்னேன். அவளுக்கு கண்ணா நான் இருப்பேன்டா சொன்ன? இப்ப அவளைவிட சூப்பரா ஒருத்தி கிடைச்சதும் வேற எதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க? இவ்வளவுதான் உன்னோட சகிப்புத்தன்மையா? இல்ல இது தான் உன்னோட வீரமா? நீயெல்லாம் என்னைப்பற்றிப் பேசுற?” என்றான் பதிலுக்கு.
“அம்மாஆஆ... இவனை போகச் சொல்லுங்க. இவன் பேசுறதை தேவி கேட்டுட்டா எல்லாம் தப்பாகிப் போகிரும்மா.”
“நானே போயிருப்பேன் நீ அமைதியா பேசியிருந்தா. நான் வர்றேன் எதுக்கும் உன் தங்கைகிட்ட என்மேல இன்ட்ரஸ்ட் இருக்கா கேளு. அவ எனக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது.”
“அடிச்செருப்பால நாயே! அவளுக்கு உன்மேல இன்ட்ரஸ்டா? பார்க்க லட்சணமா இருந்தா எல்லா பொண்ணுங்களும் உன்னைக்கண்டு மயங்கிருவாங்களா? நீ பத்திரிக்கை அடிச்சி கைபிடிக்கயிருந்தவளும் உன்கிட்ட மயங்கல. நீயா தேடிவந்து கட்டிக்கிறேன்னவளும் உன்கிட்ட மயங்கல. எங்க முடிவுதான் சாதனா முடிவு. அவ அக்கறைப்பட்டது வரச்சொல்லி அசிங்கப்படுத்திட்டோமேன்னு ஒரு ஃபீல்ல தான். கூடிய சீக்கிரமே என் தங்கையோட கல்யாணப் பத்திரிக்கை உன் ஆஃபீஸ் தேடி வரும்” என்றதும் ஒருவிதமாய் பார்த்துச் சென்றான் ஆனந்த்ராஜ்.
அவன் சென்றதும் “அம்மா சாதுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க. நல்ல பையன், நல்ல ஃபேமிலியா இருக்கணும். அவசரத்துல மாப்பிள்ளை தேடினாலும் அவன் நல்லவனா இருக்கணும்.”
“அதுக்கேன்டா தேடணும்? உனக்கு தெரிஞ்ச நல்ல பையன் அன்ட் ஃபேமிலி இருக்கே.”
“எனக்குத் தெரிஞ்ச பையனா? யாரைமா சொல்றீங்க?”
“ப்ரேம்! நல்ல பையன் இல்லையாடா ஜீவா?” என சோகமாய் முகம் வைத்தபடி கேட்க...
“அம்மா” என முகம் மலர தாயை தூக்கிச் சுற்றியவன் கீழே விட்டு “எப்படி எனக்குத் தோணாமல் போச்சி?”
“அதுக்கெல்லாம் மூளை வேணும்டா. உனக்குத்தான் கொஞ்சம் கம்மியாச்சே. மீதியிருக்கிற கொஞ்ச மூளையும் தேவின்ற பொண்ணு பின்னாடி சுத்துது.”
“அம்மா” என பல்லைக் கடித்தவன் பின் சிரித்தான்..
கணவனையே கவனித்துக் கொண்டிருந்த சுபாவிற்கும், அவளையும் மீறி மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. தான் நினைத்ததையே மாமியாரும் நினைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டவளுக்கு, என்னதான் ராஜிடம் தனக்காக கணவன் சண்டையிட்ட போது மனம் ஏற்றுக்கொண்டாலும், அதையும் மீறி அவளின் கோபம் பளிச்சிட்டது.
இதுவரை சாதுவாக இருந்தவள். யாரிடமும் வம்பு, வழக்கென்று செல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டென்று இருந்தவள். கோபமா அப்படின்னா என் பொண்ணுக்கு என்னன்னே தெரியாது என பெற்றவர்களை பெருமை பேச வைத்தவள். இன்றோ முதல் கோபம் அதுவும், கணவன் இவன் தானென்று அறிய முடியாமல் போன கோபம். அதிலும் இன்னொருவனை கணவனாக எண்ணியிருந்த கோபம் அனைத்தும் அவளின் குணத்தை மாற்றியது.
“நான் தேவிகிட்ட பேசுறேன்மா. அவளுக்கு இஷ்டமிருந்தா மேல பேசலாம். சம்மதிச்சா அப்பா இன்னும் ரெண்டு நாள்ல வர்றாங்கள்ல அவங்களோடவே மாமா, அத்தையை வரச்சொல்லி பேசிக்கலாம். காரணம் எதுவாயிருந்தாலும் எப்படியோ அந்த ராஜ் கூட நம்ம வீட்டுப் பொண்ணுங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க. அந்த கோபம் அவனுக்கு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் சாது வேலைக்குப் போக வேண்டாம்மா.”
“அவனால அப்படி என்ன பண்ணிற முடியும்னு பயப்படுற?”
“பயமில்லம்மா. ரெண்டு டைம் தோத்தவனுக்கு இது இன்சல்டிங்கா இருக்கும். நல்லவனா இருந்தா பரவாயில்லை. இல்லன்னா கஷ்டம். சாதுவை அவனால ப்ரெய்ன் வாஷ் பண்ணி அவன் வழிக்கு வரவைக்க முடியாது. அதே டைம் கோபத்துல எதாவது பண்ணினான்னா? இப்பத்தான் தொட்டதுக்கெல்லாம் பழிவாங்குறேன்னு கிளம்புறாங்களே.”
“சரிடா நான் பார்த்துக்கறேன். நீ தேவிகிட்டப் பேசு போ” என மகனை உள்ளே அனுப்ப, அதற்குள் சுபா தங்களறைக்குள் சென்றிருந்தாள். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தவளருகில் வந்தவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைக்க, கண் திறந்தவள் அவனையே பார்க்க, அவளின் பார்வையின் வசீகரிப்பில் பேச வாயெழாமல் ஜீவா பார்த்திருக்க... கையை மெல்ல அவனிடமிருந்து உருவியவள், “என்னாச்சி? யார் அவன்? அந்த ராஜ்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் அவன்மேல?”
மனைவியின் கேள்விக்கு இப்பொழுதாவது உண்மையை சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவன் செய்ததை மறக்க முயற்சி செய்து, சுமூகமாகவாவது பேசியிருப்பாள். ஆனால், இதுதான் நடக்க வேண்டுமென்றிருந்தால், விதியை மாற்ற யாரால் முடியும்.
“தேவி அவன் யார் என்னன்றதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். நமக்கு இப்ப சாதுவோட ப்யூச்சர்தான் முக்கியம். அதுக்கு அம்மா ஒரு ஐடியா சொன்னாங்க. அதான் உன்னோட பெர்மிஷன் கேட்கலாம்னு...”
சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள், “உங்க போன்ல ப்ரேம் அண்ணா நம்பர் போட்டு தர்றீங்களா?”
ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தவன், சொன்னதைச் செய்து மனைவியின் கையில் கொடுக்க, ப்ரேம் ஹலோ சொல்வதற்குள், “அண்ணா நான்தான் குறுக்க பேசாத. இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும், சாதனாவுக்கும் நிச்சயதார்த்தம். அது முடிஞ்சி ஒரு மாசத்துக்குள்ள உங்களோட கல்யாணம். வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமா கிளம்பி வாங்க” என்று போனை வைத்தாள்.
“தேவி எப்படி நான் இதைத்தான் பேச வந்தேன்னு கண்டுபிடிச்ச?” என்றவனுக்கு ஒருவேளை தாங்கள் பேசியதைக் கேட்டுவிட்டாளோ என்ற எண்ணம் வர, அவன் முகம் மாறியது.
கணவனையே பார்த்திருந்தவள், அவனின் எண்ணம் உணர்ந்து, “நான் இதை ஏற்கனவே முடிவு பண்ணியிருந்தேன். நடுவுல இந்த ராஜ் வந்ததாலதான் பேசாம விட்டுட்டேன். அவன் நல்லவனில்லைன்ற பொழுது, இதைப்பற்றிப் பேசுறதுல தப்பில்லைன்னு தோணிச்சி. அதான் உங்களைக் கேட்காமலே முடிவெடுத்துட்டேன். ஒண்ணும் தப்பு பண்ணலையே?”
“நல்ல முடிவு தான். இருந்தாலும், உங்கண்ணன் கிட்ட கேட்காம ஆர்டர் போடுறியே. அவருக்கு இஷ்டமான்னு தெரிய வேண்டாமா?”
“இப்ப சாதனாவுக்கு மேரேஜ் பண்ணப்போறேன்னு அவகிட்ட சம்மதம் கேட்டீங்களா என்ன? இல்லைல? அதுமாதிரி தான் இதுவும். எங்கண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அவனுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னும் எனக்குத் தெரியும். அதனால நீங்க ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை. அத்தை, மாமாகிட்டப் பேசி ஆகிற வேலையைப் பாருங்க.”
“சுப்பு” என கண்கள் பளபளக்க மனைவியை அணைக்கப் போனவனைத் தடுத்து, “உங்க கொஞ்சலை ஓரம்கட்டி, அத்தைகிட்ட போய் பேசுங்க” என விரட்ட...
முகத்தை சோகமாக வைத்து, “ஹ்ம்... அவ்வளவு தானா?” என்றவன் அவளறியாமல் கன்னத்தில் முத்தமிட்டு, “ஓகே செல்லம்” என்று வெளியேறினான்.
“இவங்களை...” என பல்லைக்கடித்தவள் பெருமூச்சை வெளியிட்டு, இந்த உண்மை தெரியாமலோ, இல்லை கடைசிவரை கண் தெரியாமலோ இருந்திருந்தால், ஜீவாவோடான தன் வாழ்வு நன்றாக இருந்திருக்குமென்றே தோன்றியது. கணவன் என்ற உரிமையுடன் சகஜமாக பழக முடியாமல், அவன் செய்த செயலால் தான் செய்யவிருந்த தப்பு கண்முன் தோன்ற முகம் இறுகிப்போனாள்.
திருமணத்திற்குப் பின் கணவனிடம் தன் எண்ணங்களை, ஆசைகளைப் பகிர்ந்து, எப்படி அந்நியோன்யமாக இருக்கவேண்டுமென்ற அவளின் ஆசைகள் அனைத்தும் கனவாகவே போவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது சுபாவால். அண்ணன் திருமணம் வரை மட்டுமே இந்த வீடும், உறவும் தனக்குச் சொந்தம். அதன் பின்னான தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.