- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
1௦
அங்கே சரண், இன்ஸ்பெக்டர் முகிலன், சேகர், ராகவன் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க, ஏற்கனவே நடந்த விஷயங்களை கைபேசி மூலம் பேசிவிட்டதால், அடுத்து செய்யப் போவதை தீர்மானிக்கவே இந்தச் சந்திப்பு.
“சார் என்ன பண்ணலாம்? என்று சரண் பேச்சை ஆரம்பிக்க,
“நீங்க கொடுத்தத தகவல் எவ்வளவு முக்கியமானதுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். யாருக்கும் தெரியாம போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு இருக்கிறவனுங்க, எங்க இருக்காங்க? என்ன வேஷத்துல திரியுறாங்க? யார்கிட்ட வாங்கி யாருக்கு சப்ளை பண்றாங்க. இந்த மாதிரி ஆட்களைக் கண்டுபிடிக்கிறதே பெரிய வேலை. இப்போதைக்கு இவனுங்க நாலு பேர். ஒருத்தனை அரெஸ்ட் பண்ணினா மத்தவங்க அலார்ட் ஆகிரூவாங்க. சோ, நாம நாலு பேரையும் சேர்த்து அரஸ்ட் பண்ற மாதிரி இருக்கணும். இந்த விஷயம் வெளிய லீக்காகிரக் கூடாது.”
“கிரிமினல்ஸ் எப்பவும் நம்மளை விட புத்திசாலித்தனமா யோசிப்பான். அவனுடைய நேரம் சரியில்லன்னா, அவனையும் மீறி விட்டுட்டுப் போற தடயங்களால் தான் அவனைப் பிடிக்க முடியும். இல்லன்னா, வருஷக்கணக்கா தேடினாலும் கண்ணுல சிக்காம தலைமறைவா ஆகிருவாங்க. எனக்கு உங்க மூணு பேருடைய ஒத்துழைப்பும் வேணும்.”
“கண்டிப்பா சார்” என்று மூவரும் சொல்ல, “சரண் நாளைக்கு அவன் ப்ளான் பண்ணின மாதிரி, வடபழனி முருகன் கோவில்ல வச்சே அவனைப் பிடிச்சிரலாம். பர்ட்டிகுலரா இந்தப் பொண்ணை ஏமாத்துறான்னா, எதாவது காரணம் இருக்கனும். அதை அவன் பிடிபட்ட பிறகு விசாரிச்சிக்கலாம்.”
“சார்...” என்று சரண் தயங்கியபடி கூப்பிட,
“என்ன சரண்? ஏன் தயங்குறீங்க?”
“இல்ல சார். தனு... சாரி ஆராதனாவிற்கு எதுவும் ஆகாதுல்ல? எந்தப் பிரச்சனையும் இல்லாம அவளைக் காப்பாத்திரலாம்ல?” என்றான்.
“என்ன சரண் லவ்வா?” என்று முகிலன் நேரடியாக கேட்க,
“சார்!” என்று அதிர்ந்தான்.
“அதான் உங்க கண்ணுல தெரியுதே சரண். அந்தப் பொண்ணுக்காக நீங்க தவிக்கிற தவிப்பு. அந்தப் பொண்ணுக்கு உங்களைத் தெரியுமா தெரியலை. ஆனா, உங்க மனசுக்கு எல்லாமே நல்லபடியாவே நடக்கும். அந்தப் பொண்ணு மேல சின்னதா கீறல் கூட இல்லாம காப்பாத்திரலாம். மிஸ்டர்.சேகர் நீங்க அந்தப் பொண்ணை கோவிலுக்கு கூப்பிட்டு வந்திருங்க. மற்றதை அங்க பார்த்துக்கலாம்.”
“சார் அந்தப் பொண்ணு வருவாளா? ஏமாத்திட்டான்னு தெரிஞ்சும் அவனைப் பார்க்க எப்படி வருவா?” என்றார் கேள்வியாய்.
“கண்டிப்பா வருவாங்க. நீங்க மூணு பேரும் சொல்றதை வச்சிப் பார்த்தா, எதையும் நேருக்கு நேர் பேசித் தீர்க்கிற பொண்ணு அவங்க. அதனால, தன்னை ஏமாத்தினவனைப் பார்க்கக் கண்டிப்பா வருவாங்க. அவங்க சார்புல அவனுக்கு என்ன தண்டனையோ?” என்று சிரித்தான்.
“நீங்க சொல்றது நூறு பெர்சன்ட் உண்மை சார். சரியான திருநெல்வேலி ரௌடி அவ” என்று சற்று முகம் மலர்ந்தான் சரண்.
அவனின் முகமலர்ச்சி அடுத்தவர்களையும் தொற்ற, “ராகவன் நீங்க நாளைக்கு சாதாரணமா வர்ற மாதிரி வந்து, அவன்கிட்டப் பேச்சிக் கொடுங்க. ட்ரக்ஸ் கொடுத்தியே எனக்கு வேணும். எவ்வளவு பணம்னாலும் தர்றேன்னு பேரம் பேசுங்க போதும் .மத்ததை நாங்க பார்த்துப்போம்.”
ராகவன் சரி சொல்லியதும், “அப்புறம் சரண் .அந்தப் பொண்ணுக்குத் தெரியாமல் தான் ரிஜிஸ்டர் பண்றது, தாலி கட்டுறதுன்னு செய்வான். நீங்க அவங்க பின்னாடி, அவங்க கண்ணுல படாம போற மாதிரி பார்த்துக்கோங்க. அதேநேரம் எங்க ஆளுங்களும் குடும்பமா கோவிலுக்கு வர்ற மாதிரி செட் பண்ணிருவோம். இவனுங்க மாட்டினா இந்தப் போதை மருந்து விற்கக் காரணமா இருக்கிறவங்க எல்லாரையும் பிடிச்சிருவோம்.”
“ம்... ஓகே சார். நான் பார்த்துக்கறேன். நான் அருகில் இருக்கும் போது என்னை மீறி அவளை யாரும் தொடக்கூட முடியாது” என்று ஆணித்தரமாக சொன்னான்.
“இப்ப நாம கிளம்பலாம். நடுவில் எதாவது ப்ளான்ல மாற்றம் இருந்தா நான் உங்களைக் காண்டாக்ட் பண்றேன்” என்றான்.
அன்று மாலையே சரண் வடபழனி முருகன் கோவில் சென்று ஒரு காரியம் செய்தான். சரவணன் பதிந்ததில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்துவிட்டு வந்தான்.
இரவு எப்பொழுதும் போல் அனைவரிடமும் சகஜமாகப் பேசி ,தங்கையின் நிச்சயதார்த்த வேலை எந்த அளவில் இருக்கிறது. அதில் தன்னுடைய பங்கு என்ன என்று அப்பாவிடம் விசாரித்துப் பின் சாப்பிட்டதும் தன்னறைக்கு வந்தான்.
அமைதியாக அம்மாவிடம் பேச ஆரம்பித்தான். “அம்மா உங்க மருமகளுக்கு ஒரு பிரச்சனை. அது சின்னதா பெரியதான்னு இப்பவரை தெரியலை. ஆனா, எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அவளை என் உயிரைக் கொடுத்து காப்பாத்துவேன். அம்மா நீங்க என் கூடவே இருக்கணும். எங்கேயும் போகக் கூடாது சரியாம்மா? என்னடா மருமகள்னு சொல்றானேன்னு பார்க்கறீங்களா? என்னைக்கு இருந்தாலும் உங்க மருமகள் அவதான்மா.”
தாயிடம் பேசிக் கொண்டிருந்தவன், பீரோவைத் திறந்து, அதன் உள் அறைப் பகுதியில் இருந்து ஒரு பெட்டி ஒன்றை எடுத்து கதவை மூடினான். தன் தாயின் படத்தருகே அமைதியாக அமர்ந்து பெட்டியைத் திறக்க, அவன் தாயின் தாலி இருந்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சின்ன டப்பாவை எடுத்து அதில் இருந்த செயினை எடுத்தவன், அதில் தாயின் தாலியைக் கோர்த்தான்.
பின்னர் சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் இருந்த மேஜையில் அதை வைத்துவிட்டு யோசனையில் மூழ்கினான். ‘தான் செய்வது சரியா?’ தங்கை சொன்ன ஜாதகம் தேவையில்லாமல் கண்முன் வந்தது. ‘எதாவது நடந்திருமா? இல்லை. என்னை மீறி எதுவும் நடக்காது. நான் அந்த அளவு பலவீனமானவன் கிடையாது.’
‘அப்புறம் ஏன் கோவிலிலும், வீட்டிலும் அந்த ஏற்பாடு செஞ்ச?’ என்று மனசாட்சி கேள்வி எழுப்ப,
‘அது நடக்காது. இருந்தாலும் தற்காப்புக்கு இருக்கட்டுமேன்னு...’
“தற்காப்புக்கு கத்தி, அருவான்னு எடுத்துக்க வேண்டியதுதானே? ஏன் தாலி எடுக்கிற?’ என்று கேட்ட மனசாட்சிக்கு,
‘அ... அது தப்பா ஒண்ணுமில்லை. எதுவும் நடக்காது. இது நடக்காமலே பிரச்சனையை முடிச்சிருவேன்’ என்று மனச்சாட்சிக்கு சொல்வது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
சரணின் குழப்பத்துடனும், ஆராதனாவின் தெளிவுடனும் வெள்ளிக்கிழமை இனிதே விடிந்தது.
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்யருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணியாட
காலை நான்கு மணிக்கெல்லாம் ஆராதனாவின் கைபேசியில் ரிங்டோன் அடித்து ஓய்ந்தது. திரும்பவும் அடிக்க, முதலில் எழுந்த வேதவல்லி தூக்கத்திலேயே ஆராதனாவைத் தட்டி, “ஏய்! போன் அடிக்குது பாரு” என்றாள்.
“ப்ச்... தூங்குடி. நைட்ல போயி நை...நைன்னு எழுப்புற என்று திரும்பிப் படுத்தாள்.
திரும்பவும் கைபேசி இசைக்க வேதவல்லி எழுந்து கண்ணைக் கசக்கிவிட்டு மணி பார்க்க நான்கு ஐந்தைக் காட்டியது. “இந்த நேரத்துல யாரு? ஒரு வேளை வீட்ல யாருக்கும் உடம்பு சரியில்லாம போயிருச்சோ. மை காட்! ஆரு... ஆரு எழுந்திரு” என்று அடித்து எழுப்பி, பெயர் நம்பர் பார்க்காமல் அழைப்பை ஏற்க, “ஆரா நான் சரவணன்” என்றதும் பதற்றத்தில் கைபேசியை நழுவ விட்டுப் பின் விழாமல் பிடித்தவள், ஸ்பீக்கரில் போட்டாள்.
“என்ன ஆரு? ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டியா? நான் உன் அத்தான் தான? சின்னதா ஒரு தப்பு பண்ணிட்டேன். இனிமேல் அப்படிக் கேட்க மாட்டேன்டா ஆரு” என்று அவன் அந்தக் காலை வேளையில் குழைந்தது, ஆராதனாவிற்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.
‘எனக்கு அத்தான் நீயாடா? இதுல ஆரு வேற கருமம். வாலே உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன். ஓவரா குழையுற ராஸ்கல். எனக்கே தெரியாம என் லைஃப்ல விளையாடுறியா? எங்கேயோ உயிரோட இருக்கிற என் அத்தை குடும்பத்தை சாகடிச்சிட்டல்ல? உன்னை ஒரு கை பார்க்கிறேன்டா’ என்று மனதினுள் அவனை கரித்துக் கொட்டினாள்.
“என்னடா ஆரு. அமைதியா இருக்க?” என்றதும், வேதவல்லி தோழியைத் தொட்டு, “எதாவது பேசு” என்று வாயசைத்துச் சொன்னாள். பல்லைக் கடித்துப் பொறுமையாக, “ஒண்ணுமில்ல அத்தான். நீங்க பீல் பண்ண வேண்டாம்” என்று அத்தானுக்கு அழுத்தம் கொடுத்தாள்.
அதைக் கவனிக்காத சரவணன், “நான் உன்கிட்ட கல்யாணம் பற்றி பேசினது மனசை அறுக்குது ஆரு. உன்கிட்ட நேரடியா மன்னிப்பு கேட்கணும். கோவிச்சிக்காம இன்னைக்கு உன்னோட பேவரிட் வடபழனி முருகன் கோவில் வந்துருறியா?”
“இல்ல வரலை” என்று வெளியில் சொன்னாலும், ‘நீ பண்ற ப்ராடு வேலைக்குப் பலிகடா ஆக்க என்னைத் தேடுறியாடா. வர்றேன். வருவேன். உனக்கு ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன். இவளை எதுக்கு ஏமாத்த நினைச்சோம்னு லைஃப் முழுக்க வருந்தணும்டா. என்னதான் மத்தவங்க உன்னைப் பிடிச்சாலும், என் தண்டனைனு உனக்கு தனியா ஸ்பெஷலா இருக்குடா’ என்று பல்லைக் கடித்தாள்.
“இல்ல ஆரு. கண்டிப்பா வரணும்” என்று அவளின் நினைவைக் கலைத்தான்.
“நான் தான் பரவாயில்லைன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன?”
“நீ வரணும் ஆரு. ப்ளீஸ் என் மன திருப்திக்காக. இந்த ஒரு டைம் மட்டும் தான் கடைசி முறையா வந்திரு ஆரு. ஐந்து முப்பதிலிருந்து ஆறுக்குள்ள வந்திரு. கார் அனுப்பவா?” என கேட்டான்.
அவனின் குழைவான பேச்சை சகிக்க முடியாமல், “கார்லாம் வேண்டாம். கடைசியாதான கேட்குறீங்க. கடைசின்னா கண்டிப்பா வந்து தான ஆகணும். நான் வர்றேன்” என்று கைபேசியை வைத்தாள்.