• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
10


மத்திய சிறைச்சாலை சென்னை:

நேரடியாக நீதிபதியிடம் ஒப்படைத்ததால், காவல் நிலையம் வாசமில்லாமல், நேரடியாகவே ஜெயிலில் அடைக்கப்பட்டான் கார்த்திக். அவனின் நினைவுகள் அனைத்தும் அவந்திகாவே இடம் பிடிக்க, எப்பொழுதும் அவளைப்பற்றிய நினைவில் யோசனையிலே இருந்தான். எப்பொழுதும் போல் அவள் அன்பை எண்ணி மனதில் சந்தோஷமே எழுந்தது. ‘சே... ஒரு நிமிஷம் நிதானிச்சிருந்தா இன்னும் கொஞ்சநேரம் அவளோட முகத்தையாவது பார்த்துட்டு இருந்திருக்கலாம். லூசுத்தனமா அவள்கிட்ட ஓவரா உரிமையெடுத்ததால, எல்லாம் தப்பாகிருச்சி. கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா, மாட்டியிருக்க மாட்டேனோ என்னவோ!’

‘நீங்க போயிருங்க கார்த்திக்’ கடைசியாக அதிர்ச்சியும் கலக்கமுமாக சொன்னவளின் முகம் நினைவு வந்தது. அதில் தன்னைத்தானே நொந்தவன், “சாரிடா. நான் தப்பான எண்ணத்துல வரல. ஆனா உன்னைப் பார்த்ததும் சித்தம் தடுமாறிட்டேன். இனிமேல் இந்தமாதிரி நடக்காது. எங்க நடக்கிறது நான் பண்ணின வேலைக்கு நீ என் முகம்கூட பார்ப்பியோ என்னவோ! பார்க்காம எங்க போகப்போற” என இன்னொரு மனம் நினைக்க அவனையும் மீறி முறுவல் தோன்றியது.

‘ஆனா, நான் உனக்கு மேட்ச் இல்ல அவந்தி. இந்த தொழில்ல எப்ப எங்க இருப்பேன்னே தெரியாது. உன் ப்ரொபோசலை ஏத்துக்காம இருந்திருக்கணும் அவந்தி. தப்பு பண்ணிட்டேன். அதனால உனக்கு மிஞ்சியது வேதனை மட்டும்தான்.’

‘என்னை விட்டுப்போறியா கார்த்திக்? நீயில்லன்னா நான் என்னாவேனோ!’ அவந்திகாவின் குரல், காதில் நுழைந்து மனதைப் பிசைந்து ரணமாக்கியது. ‘அச்சோ! இந்த நியூஸ் அவளுக்குப் போயிருக்குமே. அவளோட அத்தை அவளை வார்த்தையாலேயே கொன்னுருவாங்களே! என் அழகி அவஸ்தைபடப் போறா. அதுக்கு நானே காரணமாகிட்டேனே. என்னதான் வெளியில தைரியமான பெண்ணா இருந்தாலும் உள்ளுக்குள் குழந்தையாச்சே அவள்’ என்று மனம் பலவற்றையும் எண்ணிக் குழம்பியது.

‘அடுத்து என்ன செய்யலாம்? மாட்டியாச்சி. இனி ஸ்ட்ரெய்ட்டா தண்டனைதான். எத்தனை வருஷம் போடுறாங்களோ தெரியலையே. இல்ல கூடாது நான் தப்பிக்கணும், சீக்கிரமே இங்கிருந்து தப்பிச்சி, அழகியைக் கூட்டிட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிரணும்.’ கண்மூடியபடியே எப்படி தப்பிப்பது என்று தப்பாக யோசிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.

அதுவரை அவனது முகபாவனையை பார்த்திருந்த ஜெயில்மேட், அவன் அருகில் வந்து, “என்ன தம்பி? ரொம்ப யோசிக்கிறபோல. இங்கிருந்து தப்பிக்கலாம்னா?” என கேட்டான்.

திடுக்கிட்டு விழித்த கார்த்திக், அவன் சொன்னதை யாராவது கேட்டுவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தவன் அப்படியில்லை என்றதும், மூச்சை சீராகவிட்டு, “ஏன்ணே யாராவது கேட்டுறப் போறாங்க” என்றவன் “நான் இப்படித்தான் யோசிக்கிறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் திணறியபடி.

அவனது பயத்துடன் சேர்ந்த பரபரப்பை கண்களால் அளவிட்டு, “அதான் நவரசத்தையும் முகத்துல காட்டுனியே. அதுலதான் தெரிஞ்சிது. அதுசரி என்ன தப்பு பண்ணின? என்னோட உன்னை போட்டிருக்காங்கன்னா, பெரிய கேஸாதான் இருக்கும். கொலையா? கிட்னாப்பிங்கா என்ன கேஸ்?”

அது ஒண்ணுமில்ல. கடந்த ஆறுமாசமா, சென்னையில் பெரும்புள்ளிங்க வீட்ல திருடினதுக்கான திருட்டு தடயமே கிடைக்கலன்னு இருந்தாங்கள்ல. அது நான்தான். நேத்து என்வரையில கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேனா அதான் மாட்டிக்கிட்டேன்” என்றான்.

“அட அது நீதானா!” என ஆச்சர்யமாக கேட்டு, “நானே யோசிப்பேன் யார்டா அந்த அப்பாடக்கர்? போலீஸ்காரனுக்கே கல்தா குடுக்கிறான்னு. என்ன பொண்ணால மாட்டினியா? உன்னோட தொழிலுக்கு பொண்ணுங்க சகவாசம் இருக்கக்கூடாதே” என கேள்வியாய் முடித்தான்.

“பரவாயில்லையே பொண்ணாலதான்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. நீங்க அனுபவசாலிண்ணே. என்ன பண்றது ஏதோ என்னோட பெர்சனாலிட்டிக்கு நம்மளைத்தேடி ஒரு பொண்ணு வருதேன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரியுது என் மனசுல ஒரு இதை அதான்ணே ஃபீலை உண்டாக்கிட்டா” என வெட்கத்துடன் சொல்ல,

“எவ்வளவு பெரிய திருடன் நீ. ஒரு பெண்ணோட லவ்வுல மாட்டிட்டியேப்பா. இப்ப என்ன பண்றதா இருக்க?”

“என்ன பண்றதுன்னு தெரியல. இங்கேயே இருந்தா எத்தனை வருஷ ஜெயில் வாசமோ. தப்பிக்கலாம்னா சான்ஸ் கம்மியாயிருக்கு. ஆமா “நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க?”

“நானா! நான் போதை மருந்து சேல் பண்ணினேன்னு பிடிச்சிப்போட்டானுங்க. நான் பண்ணலன்னா வேற எவனையாவது வச்சி பண்ணப்போறான். என்னதான் அடிச்சிக் கேட்டாலும் நம்ம சீக்ரெட்டெல்லாம் சொல்லிர முடியுமா?”

“அதுதானண்ணே நம்மள மாதிரி தொழில்காரங்களுக்கு நல்லது. நான் என் லவர்கிட்டக்கூட இதுவரைக்கும் சொன்னதில்ல. இன்னைக்கு பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சிருக்கும்.”

“அதான் கவலையாக்கும். மத்தபடி பிடிபட்டதுல எந்த கவலையும் இருந்த மாதிரித் தெரியலையே?”

‘ஹி...ஹி’ என அசட்டு சிரிப்பொன்றை வெளியிட்டு, “எப்படியும் தப்பிச்சி போயிருவேன்ற நம்பிக்கைதான்ணே.”

“அடப்பாவி! மாட்டும் போதே எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரிஞ்சே வந்திருப்பபோல. அதுசரி நானும் உன்கூட வரலாமா?”

“அட நீங்க வேற. நான் சிங்கிளா தப்பிக்கிறதே பெரிய காரியம். இதுல உங்களை வேற எப்படி கூட்டிட்டு அழையுறது? நீங்க தனி ட்ராகல போங்க. நான் என் ட்ராக்ல போறேன்” என்றான்.

அந்த ஜெயில்மேட் யோசிக்க ஆரம்பித்தான். “பய நல்ல திறமையானவன். இப்படி உருகி வழியிற பொண்ணுகிட்டயே உண்மையைச் சொல்லலன்னா, தொழிலுக்கு நேர்மையானவன். இவனை பேசி கரெக்ட் பண்ணி, நம்ம தொழிலுக்கு இழுத்துக்கலாம். என்ன கொஞ்சம் சென்டிமெண்ட் டைப்பா இருக்கான். அதை சரிபண்ணனும். நாம நினைச்சா நடக்காம போயிருமா என்ன? நடத்திரலாம்’ என்றெண்ணி, “சரி தம்பி என்னோட வர்றியா? நான் உன்னை கூட்டிட்டுப் போறேன். என்ன கொஞ்ச நாளைக்கு, உன் லவரை மறந்துட்டு என்னோட தொழில்ல உன் திறமையைக் காட்டணும். நீ இந்த ஆறுமாசம் சம்பாதிச்சதை நான் ரெண்டே நாள்ல தருவேன்” என்று ஆசை காட்டினான்.

பணத்தைப் பற்றிப் பேசியதும் கார்த்திக்கின் கண்கள் மலர, பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையை உணர்ந்த ஜெயில்மேட் ரத்தன், “இன்னும் இரண்டு நாள்ல கிளம்பறோம்” என்றதும் இருவரும் கைகொடுத்து மர்மமாகப் புன்னகைக்கத்தனர்.

அந்நேரம் தாய், தந்தை, தம்பி, அவந்திகா என அனைவரையும் மறந்தான். அவ்விடத்தில் பணம் என்ற பேய் மட்டுமே ஆட்சி செய்தது. இடம் நேரம் அனைத்தும் வேவு பார்த்து, இரண்டாம் நாள் தப்பிக்கும் பொழுது, தடுக்க வந்த இரண்டு காவலர்களை, கார்த்திக் அடித்து உதைக்க, இருவரும் தப்பித்திருந்தார்கள்.

பணத்தின் மேல் வந்தக் காதலால், தன் மனதில் வந்த சொந்தக் காதலை, தீக்கறையாக்கினான் கார்த்திகேயன்.

மறுநாள் காலையிலேயே ‘போதைமருந்து கடத்தல்காரன் ரத்தனுடன், திருட்டு கேஸில் கைதுசெய்யப்பட்ட, கார்த்திகேயன் தப்பியோட்டம்’ என்ற செய்தி வெளியாக, அவந்திகாவின் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து, அதற்குள் அவந்தியைத் தள்ளியது. வழக்கம்போல் இந்த குட்டையும் கௌஷிக்கே உடைக்க, வனஜா வனபத்ரகாளியானாள்.

ஏற்கனவே கார்த்திக்கினால் குழம்பி, அவனைப்பற்றிய எந்த முடிவுக்கும் வரமுடியாமல், திண்டாடிக் கொண்டிருந்த அவந்திகா, அடுத்தடுத்த அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தாள். அவளுக்குத் தெரியாததா, ஜெயிலிலிருந்து தப்பியவன் திரும்ப மாட்டினால் தண்டனையின் விகிதம் இரட்டிப்பாகி, தண்டிக்கும் விகிதமும் அதிகரிக்கும் என்பது.

“ஏன் கார்த்திக் இப்படிப் பண்ணிட்டீங்க? தப்பு மேல தப்பு பண்றீங்களே? ஐயோ! என்னால இதைத் தாங்க முடியலையே. உங்களைப்பற்றி கேள்விப்படுற எல்லாமே தப்பாகவே இருக்கே” என மனதினுள் குமைந்து கொண்டிருந்தவளிடம்,

“என்ன அவந்தி? உங்காளு ஜெயில்லயிருந்து தப்பிச்சிட்டானாமே. அதுவும் தனியா இல்ல. அங்கிருந்த போதை மருந்து கடத்துறவனோட ஜோடியா. நல்ல ஜோடிப்பொருத்தம்ல” என்று நக்கலாக கேட்டான்.

“வேண்டாம் கௌஷிக். நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன். என்னை மேலும் மேலும் நோகடிச்சி, உன்னோட ஆம்பளைத்தனத்தைக் காட்டாத” என்றாள் கண்டிப்புடன்.

“என்னடி? என் பிள்ளையை பார்த்து ஆம்பளையான்னு கேட்குறியா? அதுக்குத்தான் அவனைக் கல்யாணம் பண்ணி தெரிஞ்சிக்கோன்னு சொல்றேனே” என்று நாக்கில் விஷத்துடன் வார்த்தைகளை வனஜா வீச,

‘ச்சீய்...’ என அருவருத்துப் போனாள் அவந்திகா.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“என்னடி? நான் பேசினா அருவருப்பா இருக்கா?” என அவளை வதைத்துக் கொண்டிருந்த நேரம் வெளியே சென்றிருந்த ஈஸ்வரி வர, ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது அவருக்கு.

“ஏன் அவந்தி? அவன், அதான்மா உன்னோட திடீர்க் காதலன் அந்த கார்த்திக். என்ன ‘கே’யா? “உன்னைக் கூட்டிட்டு ஓடுறதுக்கப் பதிலா, ஒரு ஆம்பளையைக் கூட்டிட்டு ஓடியிரு...” அவன் சொல்லி முடியுமுன் ‘ஆ’ என்றலறினான்.

“ஏய்!” என்றபடி கௌஷிக்கும், வனஜாவும் எகிறியபடி வர,

அவனை அடித்த கையை உதறியபடி, “கார்த்திக் பற்றி எதாவது தப்பாப் பேசின, கொன்னுருவேன். ஜாக்கிரதை” என்றாள் கண்களில் கனலுடன்.

அடி வாங்கியதில் கோவத்தின் உச்சிக்குச் சென்ற கௌஷிக், அவளின் கழுத்தைப் பிடித்து, சுவரோடு சுவராக சாய்த்து அழுத்தி, “என் மேலேயே கை வச்சிட்டு, கொல்லுவேன்னு வேற சொல்வியா நீ? அதுவரைக்கும் நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா?” என்று கர்ஜித்தான்.

“அப்படியே நெறிச்சி சாகடிடா அவளை. என்ன தைரியமிருந்தா கைநீட்டுவா. இத்தனை நாள் நாய் மாதிரி அடங்கி கிடந்தவளுக்கு, இந்த கார்த்திக்னு ஒருத்தன் வந்தபிறகு வந்த, குருட்டுத் தைரியம் தான இப்படி பேசச் சொல்லுது. அன்னைக்கு முதல்ல ஆரம்பிச்சப்பவே வாயில போட்டிருந்தா, இப்படி திமிரா பேசியிருக்கமாட்டா.”

“ஆமாம்மா. அவன்கிட்ட பழக ஆரம்பிச்சதுல இருந்துதான், இவளுக்கு வீட்டுக்குள்ளயே பேசுற தைரியம் வந்திருச்சி. இந்த கௌஷிக் ஒரு லூசு. என்னை என்ன பண்ணவான்னு நினைச்சிட்டு இருந்தல்ல” என கழுத்தில் அழுத்தம் கொடுத்தான்.

‘அவனை லூசுன்னு தப்பா நினைக்காத அவந்தி. எதுக்கும் அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு.’ கார்த்திக் அடிக்கடி சொன்னது இப்பொழுது நினைவு வந்தது. அவனின் கையைத் தள்ளிவிட்டபடி அவந்தி போராட, அதற்குள் அருகில் வந்துவிட்டிருந்த ஈஸ்வரி, அவனைப் பிடித்துத் தள்ளி அவந்திகாவைத் தன்னருகில் இழுத்து அணைத்துக்கொண்டார்.

கீழே விழப்போன கௌஷிக்கை, வனஜா பிடித்து சமாளித்து நிற்க வைத்தார்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டுபேரும்? அவளுக்கு யாரும் இல்லைன்னா. நான் இருக்கேன். என்னை மீறி யாராவது கை வச்சிருவீங்க?” ஐந்தரையடி உயரத்தில், அளவான உடல்வாகில்,தைரியமான பெண்மணி ஈஸ்வரி. தப்பென்று தெரிந்தால் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் தண்டிக்கும் குணமுள்ள பெண்மணி அவர். தன் கண்முன்னே நடக்கும் அநியாயத்தை விட்டு வைப்பாரா என்ன. பெண் ஐயனாராக நின்றிருந்தார் ஈஸ்வரி.

அவந்திகாவின் அரணாக நின்ற, ஈஸ்வரியின் கண்களில் கனலைக்காண தாய்க்கும், மகனுக்கும் சின்ன பயம் வந்தது என்னவோ உண்மைதான்.

அதை மறைத்து, “ஏய்! என்ன? நீ முறைச்சா நாங்க பயந்திருவோமா. ஆஃப்ட்ரால் நீ ஒரு நர்ஸ். வந்தமா மருந்து கொடுத்தோமான்னு இருக்கணும். இது எங்க குடும்ப விஷயம். இதுல நீ தலையிடாத சொல்லிட்டேன்.”

“ஓ... நான் தலையிடாம?” ஈஸ்வரி மேலே ஏதோ சொல்லுமுன்,

“ஈஸூமா! அவங்க பேச வர்றதை பேசி முடிக்கட்டுமென்று அமைதிப்படுத்தி, “சொல்லுங்க அத்தை. உங்க ரெண்டு பேருக்கும் இப்ப என்ன வேணும்? என்னோட சொத்தா? இன்னைக்கே கூட ரெடி பண்ணுங்க. எங்க சைன் பண்ணனுமோ, பண்ணித்தர்றேன். அது போதும்ல?” என கேட்டாள்.

“என்னடி? என்ன பிச்சை போடுறியா? நீ சைன் போட்டா, உடனே எங்களுக்கு சொத்து வந்திருமா. அதுதான் கிடையாது. உன் ஆத்தாக்காரி, உனக்கு கல்யாணம் முடிஞ்சாதான், சொத்து முறைப்படி வரும்னு சொல்லி உயில் எழுதிட்டு செத்துட்டா. அதனால, நீ என்ன பண்ற, என் பையனை கல்யாணம் பண்ணி, அப்புறமா சொத்தை எழுதிக்கொடு. வாங்கிக்கறோம்” என்றார் வனஜா.

“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே. அது உங்க கனவுலகூட நடக்காதுன்னு.”

“கனவுலதான நடக்காது. நான் நிஜத்துல நடத்திக் காட்டுறேன். அதை யார் வந்து தடுக்குறாங்கன்னும் பார்க்கிறேன்.” சவால் விட்டார் வனஜா.

“என்னத்தை நீங்க? கனவுலயே நடக்காதுன்னும் போது, நிஜத்துல சாத்தியப்படுமான்னு யோசிக்க மாட்டீங்களா?” என்றாள் கொஞ்சம் கிண்டலாகவே.

அந்த கிண்டலில் சீண்டப்பட்ட வனஜா, “ஏன்டி நடக்காது? என் பையனுக்கு என்ன குறை?”

“எல்லாமே குறை” என அவந்திகா முணுமுணுக்க,

“பார்க்க அம்சமா ஹீரோ மாதிரி இருக்கான். அவனைக் கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்” என்றார்.

“ஹீரோ மாதிரிதான் அத்தை. நிஜ ஹீரோ என்னோட கார்த்திக் தான். வேற எவனும் எனக்கு ஹீரோவா தெரியமாட்டான்.”

தன் மகனைப்பற்றி தவறாக செய்தி கிடைத்தும், அவன்மேல் அவந்திகா வைத்திருந்த அன்பை எண்ணி, மெய்சிலிர்த்தது ஈஸ்வரிக்கு. அவளின் உடல் நிலையைக் கருதி, “அவந்தி பேசவேண்டாம் வா ரூம்கு போகலாம்” என்று அழைத்தார்.

“இருங்க ஈஸூமா. பேசி முடிக்கட்டுமே. என்னன்னு பார்த்திரலாம்.”

“உனக்கு ரொம்ப எகத்தாளம்டி. சரி கடைசியா எங்க முடிவைச் சொல்றேன் கேட்டுக்கோ” என்றார்.

“ம்... சொல்லுங்க” என்று தைரியமாகவே நின்றாள்.

‘அவ்வளவு தைரியமாகிருச்சா உனக்கு’ என நினைத்து, “இன்னும் பதினைந்து நாள்ல, அதாவது இன்னைக்கு சனிக்கிழமை வர்ற வெள்ளி போய் அடுத்த வெள்ளி கௌஷிக்கும், உனக்கும் கல்யாணம். இன்னையிலிருந்து உன் கண்ட்ரோல் என் கையில. ஓடிப்போன கார்த்திக்கு போலீஸ்கிட்ட இருந்து அவனைக் காப்பாத்திக்கவே நேரம் சரியாயிருக்கும். இதுல உன் கல்யாணத்தை நிறுத்துறது, சாத்தியப்படாத ஒண்ணு.”

“ஹா...ஹா” என சத்தம்போட்டு, கண்ணிலிருந்து தண்ணீர் வரும்வரை சிரித்தவளை, தாய், மகன் தாண்டி, ஈஸ்வரியும், உள்ளே வந்து கொண்டிருந்த சுந்தரேசனுமே வித்தியாசமாகப் பார்த்தார்கள். இந்த சிரிப்பிற்கு அர்த்தமென்ன என்பதுபோல்.

“என்னடி சிரிக்கிற? என்ன என்னால நடத்த முடியாது வெட்டியா பேசுறேன்னு நினைச்சியா? நடத்திக் காட்டுறேனா இல்லையான்னு பாரு.”

வந்த சிரிப்பை அடக்கியபடி, “காமெடி பண்ணினா சிரிக்காம என்ன பண்றது அத்தை.”

“புரியலையே. இப்ப அம்மா என்ன காமெடியா சொல்லிட்டாங்கன்னு இப்படி சிரிக்கிற” என்றான் கௌஷிக் எரிச்சலாக.

“உனக்குப் புரியாதுடா. புரிஞ்சா என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் துடிப்பியா?”

“ஏன்டி கேன்சர் வந்து, சாகப்போறியா என்ன?” என்றான் எள்ளலாகவே.

“கௌஷிக்” என்று சுந்தரேசன் அதட்ட,

“அடப்போங்கப்பா! இப்பக்கூட இவளை அடக்கி எனக்கு கட்டிவைக்க முடியல. அதட்டலுக்கு மட்டும் குறைச்சலில்லை. சொல்லுடி அப்படி எதாவது நோயிருக்கா?” என்று திரும்பவும் கேட்டான்.

“ப்ச்...ப்ச்... ரொம்ப பேராசைப்படுறியே கௌஷிக். அதெப்படி என் கார்த்திக் கூட சேர்ந்து வாழாம, எங்க குழந்தைகளைக் கொஞ்சாமல் சாவேன்னு நினைச்ச?”

“நீ இப்ப என்னதான் சொல்ல வர்ற?” என எரிச்சலில் கத்தினான்.

“நான் சொன்ன வார்த்தையிலேயே கண்டு பிடிச்சிருக்கலாம். கார்த்திக்கூட சேர்ந்து வாழலாம்னு சொன்னேனே, நடுவுல கல்யாணம்ன்ற வார்த்தை இல்லையே, அதைக் கவனிச்சியா?” என்று நக்கலாகப் பார்த்தாள்.

ஈஸ்வரிக்கும், சுந்தரேசனுக்கும் அவள் சொல்ல வந்ததின் அர்த்தம் புரிந்து அதிர்ச்சியாகினர்.

“அப்படின்னா?” என்று புரியாமல் விழித்த கௌஷிக்கிடம்,

“அப்படித்தான்டா. ஆல்ரெடி எங்களுக்கு முடிஞ்சிருச்சி.”

வனஜாவிற்கு விஷயம் பிடிபட ‘ஐயோ சொத்து!’ என மனம் அடித்துக்கொண்டது.

அதுவரை ஒருவித இளகுத் தன்மையில் பேசிக் கொண்டிருந்தவள் முகம் இறுக, “புரியலைல. உன் மரமண்டைக்குப் புரியுற மாதிரி ஃப்ராங்கா சொல்லணும்னா, எனக்கும், கார்த்திக்கும் கல்யாணம் ஆகிருச்சின்னு சொல்றேன். ஆமா. இப்ப நான் மிஸஸ்.அவந்திகா கார்த்திகேயன்” என்று நைட்டியில் பின் செய்து போட்டிருந்த தாலியை வெளியே எடுத்துக் காண்பித்தாள்.

‘எப்ப?’ என்பதுபோல் அனைவரும் அவளைப் பார்க்க,

“அன்னைக்கு சிறுவாபுரி கோவில்ல, கத்திக்குத்து பட்டப்ப” என்றாள் முகத்தில் சந்தோஷத்துடனும், தெளிவுடனும், விஷயம் தெரிவித்துவிட்ட நிம்மதியுடனும்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top