• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 10

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
10



மாலை ஆதிகேசவன் நண்பனுடன் வந்த பொழுது, நேஹாவிற்கு வளைகாப்பிற்கான பொருட்கள் வாங்க மால் செல்ல வேண்டுமென்று தாய் வற்புறுத்தி அழைக்க அங்கு சென்றுவிட்டாள் அன்பழகி.

“ஏன் மீ? எப்பவும் கூட்டம் குறையாமல் இருக்கே எப்படி?” தாயிடம் தன் கேள்வியை ஆரம்பித்தாள்.

“மனுஷனோட தேவைகள் அதிகரிச்சிருச்சி பொம்மு. அதான் தேடித்தேடி அலையுறான்.”

“ம்.. அலையட்டும் அலையட்டும்” என்று நடந்தவள் கண்ணில் எதிரிலிருந்த புத்தக அங்காடி பட அங்கிருந்தவளைக் கண்டு அதிர்ச்சிதான் அன்பழகிக்கு.

“அம்மா அங்க பாருங்க” என்று கைகாட்டிய இடத்தில் ராகினி பார்க்க, பவானி தன் அருகில் சில புத்தகங்களை வைத்திருந்த ஒரு இளைஞனுடன் சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தாள்.

“என்ன பொம்மு? இந்த பவி உலக அதிசயம்லாம் நடத்துறா. வா பார்க்கலாம்” என்று அவளை நெருங்க நெருங்க இருவரின் நெற்றி சுருங்க, பவானியின் நெற்றிக் குங்குமமும், தாலியும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“பவிக்குட்டி!” என அதிர்ச்சி மாறாமல் பவானியை அழைக்க, அக்குரலின் வீச்சில் “அண்ணி!” என்று குரல் வந்த திசையில் பார்த்து ஓடிச் சென்று அண்ணியவள் தோள்சாய்ந்து கொண்டாள்.

அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, “என்ன இதெல்லாம்?” என்று அவளின் சுமங்கலி கோலத்தைக் காட்ட,

“சாரி அண்ணி. திடீர்க் கல்யாணம்ன்றதால யார்கிட்டேயும் சொல்ல முடியலை” என்றாள்.

“திடீர்க் கல்யாணமா? இல்லை திருட்டுக் கல்யாணமா?” என கேட்டு நாத்தனாரை ஆழ்ந்து பார்க்க,

“உங்க சாய்ஸ் அண்ணி. அப்புறம் இவங்க சர்வேஷ்வரன். பேங்க்ல ஒர்க் பண்றாங்க” என்று அருகிலிருந்தவனை அறிமுகப்படுத்தினாள்.

“என்ன பண்ணிட்டிருக்க பவிக்குட்டி? இதையெல்லாம் நான் நம்பமாட்டேன்.”

“சாட்சி இருக்கு அண்ணி” என்றாள் அமைதியாக.

“கடவுளே வந்து சாட்சி சொன்னாலும் நான் நம்பமாட்டேன். உன் அண்ணன் என்ன பண்றாங்க? இந்தளவு எப்படி விட்டாங்க?” என்றவள் குரலில் அடக்கப்பட்ட கோபம்.

“அண்ணன் என்னை விட்டு வருடங்கள் ஆகுது அண்ணி. இப்ப நான் அங்க கிடையாது. உரிமையா உங்க வீட்டுக்கும் வரமுடியலை. சோ, எனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். அவங்க வீட்டிலும் சொல்லலை. படிப்பு முடிச்சதும் சொல்லலாம்னு ப்ளான்” என்றாள் நிதானமாக.

“ஓ.. இப்ப எங்கயிருக்க?”

“படிப்பு முடியுறதுவரை ஹாஸ்டல்தான் அண்ணி.”

“சரி ஹாஸ்டலை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வா” என்றழைத்தாள் அன்பழகி.

“அது சரிவராது அண்ணி” என்று மறுக்க,

“அதை நாங்க பார்த்துக்குறோம். என்மேல அன்பிருந்தா வந்து சேர்” என்றாள் அழுத்தமாக.

“அண்ணி!”

“வான்னு மட்டும்தான் சொன்னேன். என்ன நடந்ததுன்ற விரிவாக்கம் கேட்கலை. முடியுமா? முடியாதா?” என்றாள் உத்தரவாக.

பவானி சர்வேஷ்வரன் முகம் பார்க்க, அவனோ சம்மதிக்கச் சொல்லி தலையசைக்க, இவளோ முடியாதென்று மறுத்துத் தலையசைத்தாள்.

“உன் ஃப்ரண்ட் உன்னை எங்களோட வரச்சொல்றார். நீ ஏன் யோசிக்கிற?” என்று அவனை அவள் நண்பன் மட்டுமே என்பதாய் உரைக்க, அதிர்ந்து பார்த்த பவானியிடம், “நீ என்னதான் என்னை நம்பவைக்கப் பார்த்தாலும் உன் இந்தக் கோலத்தை நம்பமாட்டேன். அதோட எவ்வளவு நாசூக்கா இவரை அறிமுகப்படுத்துற? முதல்ல வீட்டுக்கு வா சொல்றேன்” என்றாள் கோபத்தை அடக்கியபடி.

அந்த கல்லூரி விடுதியைக் காலி செய்து வீட்டு வாசல் வந்ததும், “அம்மா புதுப்பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கணும்ல? மாப்பிள்ளையே இல்லாம கல்யாணம் செய்த புதுமையான சாதனைக்காகவாவது ஆரத்தி எடுக்கவேண்டாமா” என்றாள் நக்கலாக.

“அண்ணி! எனக்கு கல்யாணமானது நிஜம்” என்று அழுத்தமாக உரைத்தாள்.

“அப்படியா? அப்ப எங்க உன் கணவன்?” சற்று கிண்டலாகவே கேட்டாள் அன்பழகி

“அவங்க யாருன்னு யாருக்கும் சொல்லமாட்டேன்.”

“ஏன் மீ? அன்னைக்கு உங்க சின்ன மகன்கிட்ட தாலிகட்டி விட்டுட்டுப் போகச் சொன்னாளே, ஒருவேளை...”

“அண்ணி போதும் உங்க கற்பனை. உங்க தம்பிக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது” என்றாள் படபடப்புடன்.

“என்னைப் பழிவாங்க எத்தனை நாள் காத்திருந்த உடன்பிறப்பே?” என அக்காவைத் திட்டி, “தேடித்தேடி எனக்கு மூத்தவளா இந்த அழகியைப் பெத்துப் போட்டீங்களேம்மா. ஷப்பா என்னால முடியலை” என்று பவானியைப் பார்த்தவன், “என்னவோ சம்பவம் நடந்திருக்குன்னு புரியுது. என்னன்னுதான் தெரியலை. வீட்டுக்குள்ள வந்து நடந்ததைச் சொல்லுங்க” என்று வீட்டினுள் சென்றான்.

“அடடே நேஹாமா.. சும்மா பேருக்குத்தான் பேசிட்டிருந்தோம். நீ நிஜமாகவே ஆரத்தி எடுத்துட்டு வந்துட்டியா?” என்று மருமகளைப் பார்த்து, “கர்ப்பமா இருக்கும்போது ஆரத்தி எடுக்கவோ பக்கத்துல நிற்கவோ கூடாது. நீ வீட்டுக்குள்ள போ” என்று வாங்கிய ராகினி சூடம் பொருத்தி பவானிக்கு ஆரத்தி சுற்ற, “அத்தை எதுக்கு இதெல்லாம்? வேண்டாமே” என்றாள் தவிப்புடன்.

“தனியா எடுக்குறது எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு. என்ன பண்ணுறது? நீதான் அதுக்குச் சொந்தக்காரன் யாருன்னு சொல்லமாட்டேன் சொல்லிட்டியே. நீ முதல்ல உள்ள வந்து கேள்வி கேளு” என்று ஆரத்தி கொட்ட வெளியே சென்றார்.

சில நிமிடங்களில் ஹாலில் அத்தனை பேர் முன் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்த பவானியிடம், “உன் அண்ணனைப் பழிவாங்க இப்படி செய்தியா பவிக்குட்டி?” என்று கோபமாகக் கேட்டாள் அன்பழகி.

“ஒருசில ஆம்பளைங்களுக்கு நடைமுறை யதார்த்தத்தைப் புரிய வைக்கணும் அண்ணி” என்றாள் நிதானமாக.

“அதுக்காக நான்ல ரிவென்ஜ் எடுக்கணும்? எனக்காக நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்குவியா?” என்றாள் கடுமையாக.

“நீங்க பார்த்துக்குவீங்கன்ற தைரியத்துலதான் அண்ணி” என்று அன்பழகியின் கண்பார்த்து தைரியமாகவே சொன்னாள்.

“நீ செய்திருக்கிற காரியத்துக்கு அப்படியே அடி பின்னணும் போலிருக்கு. ப்ச்.. அடிக்கதான் மனசு வரலை” என்றாள் தன் கோபத்தைக் கொட்ட முடியா ஆத்திரத்தில்.

“அடிக்கணும் போலிருந்தா அடிச்சிருங்க அண்ணி” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அன்பழகியின் முன் தரையிலமர்ந்து அவள் கையை எடுத்துத் தன்னை பட்பட்டென்று அடிக்க வைத்திட, “ஏய்!” என்ற குரல்களின் அதட்டலையோ, கையை உருவ முனைந்த அன்பழகியின் முயற்சியையோ கண்டுகொள்ளாது, “என்னை அடிச்சே கொல்லுங்க அண்ணி. அதுக்காவது உறவுன்னு ஒருத்தர் வேணும்ல” என்றாள் கண்ணீர்க்குரலில்.

“அடிக்க மனசு வரலைன்னு சொல்றேன்ல. முதல்ல கையை விடு” என்று அவளைத் தன்னோடு அமரவைத்து தோளணைத்து, “என்மேல் அப்படி என்ன கண்மூடித்தனமான பாசம்? நீயா கட்டிக்கிட்ட இந்தத் தாலியைக் கழட்டிரு பவிக்குட்டி” என்றதும் அண்ணியிடமிருந்து விலகியவள், “நிஜமாகவே இது என் ஹஸ்பண்ட் கட்டினதுதான் அண்ணி” என்றாள்.

‘ஹ்ம்..’ என மூச்சை இழுத்துவிட்டு அதை ஜீரணித்தவள், “உன் அண்ணனுக்குத் தெரியுமா? தடுக்கலையா?” என கேட்க,

“என்னை இந்தக் கோலத்துல பார்த்தும் அண்ணனோட ரியாக்ஷன் எப்பவும் போலதான் அண்ணி. நாலு அடிபோட்டு காரணம் யாருன்னு மிரட்டுவாங்க நினைத்தேன். ப்ச்.. எதுவும் இல்லை. ஏன் இப்படி செய்தன்னு கொன்னு போட்டிருந்தால் கூட நிம்மதியா போயிருப்பேன் அண்ணி. ஆனா, ப்ச்..” என உதடு பிதுக்கி அழத்துடித்த இதழ்களை அடக்கி, “வாழ்த்துகள் பவின்னு சொல்லிட்டுப் போறாங்க” என்றதில் அனைவரும் அதிர, “எனக்கு வாழவே பிடிக்கலை அண்ணி” என அழுதவளை பாவமாய்ப் பார்த்தவர்களுக்குக் கண்களும் கலங்கியது.

தான் கலங்குவது பெரிதல்ல என்பதை உணர்ந்த அன்பழகிக்கு பவானியை சமாதானப்படுத்துவது முக்கியமென்பதால், “இப்பதான் கல்யாணம் ஆன பொண்ணு நீ, வாழப்பிடிக்கலை சொல்லலாமா பவிக்குட்டி? அப்புறம் உன்னை நம்பி வந்த ஜீவன் நிலை என்னாகிறது?” என்றாள்.

“அண்ணி!”

“ஹஸ்பண்ட் குழந்தைன்னு வாழ வேண்டாமா? நீ எப்பவும் சந்தோசமாயிருக்கணும் பவிக்குட்டி. அதுதான் எனக்கு சந்தோசம்” என்றாள்.

“ஆனா, உங்க சந்தோஷம்? அதைப் பறிக்க அண்ணனுக்கு எப்படி அண்ணி மனசு வந்தது?” என்றாள் கேவலுடன்.

“உன் அண்ணன் செய்த தப்புக்கு நீ பிராயசித்தம் தேடுறியா? என் சந்தோசம் உன் அண்ணனோட நின்னு போயிராதுடா. என் குடும்பம், என் வேலை இருக்கு. வலிதான் இல்லைன்னு மறுக்கலை. அதுக்காக அந்த இடத்துலயே நிற்க முடியுமா? கொஞ்ச நாள்ல வலி மறைந்து வடுவாகி பின்னொரு நாள் காணாமலே போயிரும்” என்றாள் கண்ணீரை அவளறியாமல் துடைத்தபடி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“வலி வலிதான அண்ணி. ஆனா, என்கிட்ட அப்படிச் சொன்ன அண்ணன் ஏன் அப்படிச் செய்தாங்க? என்னால தாங்க முடியலை அண்ணி” என்றாள் அழுகை குறையாது.

“என்னடா?” என்றவளுக்கு வேறெதுவோ இருப்பதுபோல் தோன்றியது.

“அது டைவர்ஸ் பற்றிப் பேசின அன்றைக்கு நாம மூணு பேரும் ஒண்ணாயிருக்கலாம் சொன்னாங்க. அந்த நோட்டீஸ் அனுப்பினது அண்ணன் கிடையாதாம்” என,

“என்னது?” என அதிர்ந்துவிட்டனர்.

மனதிற்குள் சிறு படபடப்பு எழ, “என்ன சொல்ற பவிக்குட்டி?” என்றாள் அன்பழகி.

“நிஜம் அண்ணி.” அன்று அண்ணனுடன் பேசியதைச் சொல்ல, “நிஜமாகவா?” என்றாள் சந்தேகம் தீராது.

“ரொம்ப ஃபீல் பண்ணிப் பேசினாங்க. உங்களுக்குக் கணவனாயிருக்கிற தகுதி தனக்கில்லைன்ற எண்ணம் இருந்தது. உங்களை விலகியிருக்கேன்.. விலக்கி வைக்க நினைக்கலைன்னு சொன்னாங்க. நான் உன் அண்ணியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றேன். அதுவரை நாம பேசிக்கிட்டது தெரிய வேண்டாம்.. ஆரத்தியோட காத்திருன்னு சொல்லிட்டு, இப்படி மாறிட்டாங்கன்றதை நம்பமுடியலை அண்ணி” என்றாள் அழுகையினூடே.

“என்னாலும்தான் நீ சொன்னதை நம்பமுடியலை. டைவர்ஸ் நோட்டீஸோட வந்தப்ப என்மேல அன்பிருக்கிற மாதிரி ஒரு வினாடி கூட தோணலை. எதாவது பிரச்சனையான்னு கேட்டும் பார்த்துட்டேன். நோ யூஸ்” என அன்று நடந்ததை நினைத்தவள் ஹ்ம்.. என மூச்சை இழுத்துவிட்டு, “அம்மா இவள் என்னோடவே இருக்கட்டும்” என்று தாயிடம் சொல்லி, “ஆமா உன் ஹஸ்பண்ட் போட்டோ இருக்கா? கல்யாணத்துல சாட்சிக்கு ஆட்கள் இருந்தாங்கள்ல? சரி போட்டோ காண்பி” என்ற அன்பழகியின் அக்கறையில் பவானி பெரிதும் தயங்கினாள்.

“நீ தயங்குறதைப் பார்த்தா நான் சொன்னதுதான் உண்மை போல” என்றதும் மறுப்பாகத் தலையசைத்து, அண்ணனுக்குக் காண்பித்த அதே நிழற்படத்தைக் காண்பித்து, “சாரி அண்ணி! இப்போதைக்கு இது போதும்” என்றாள்.

ராகினியும், அன்பழகியும் இன்னும் சந்தேகம் தீராது அதியனை நோக்க, “தெய்வமே! மீ பாவம். அன்னைக்கு சும்மா சொன்னதை வச்சி என்னைக் கோர்த்து விட்டுராதீங்க? என்றான் அலறலாக.

“உங்க தம்பி இல்லை அண்ணி. அவங்களை சந்தேகப்படாதீங்க” என்றாள் பவானி.

“நீ சொன்னா சரிதான்” என்றனர் அம்மா மகள் இருவரும்.

“சார் கால் பண்ணியிருந்தீங்களா? சாரி சார் கவனிக்கலை. என்ன சார் நீங்க கூப்பிட்டிருக்கீங்க? எதாவது அவசர வேலையா?”

“ஏன் அன்பு நான் கூப்பிடக்கூடாதா?” என்றார் சீனியர் டாக்டர்.ரஹ்மான்.

“ஹையோ சார். எனிடைம் கால் பண்ணலாம்.”

“நீ ஒருத்தர் பெயரைச் சொல்லி ரெகமெண்ட் பண்ணியிருந்தள்ல அன்பு. அவரைப்பற்றி பேசலாம்னுதான் கூப்பிட்டேன்.”

“ரெகமண்டா? சார் அவரை யாருன்னே தெரியாது. நட்புக்காகக் கெஞ்சினதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. பெத்தவங்களையே வேண்டாம்னு தூக்கிப் போடுற காலத்துல இது மாதிரியான நட்பு அதிசயம் சார். அதான் உங்களைப் பார்க்க அனுப்பினேன். வந்தாங்களா சார்?” என கேட்டாள்.

“வந்து பார்த்துப் பேசியாச்சி. இங்க அழைச்சிட்டு வந்ததுல கோபம் வந்து நண்பனை அடிச்சிட்டார் அவர்.”

“ஐயோ!”

“அப்புறம் பேசி சமாளித்து கவுன்சிலிங் வரச் சொல்லியிருக்கேன். அந்தப் பையனுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ். தாழ்வு மனப்பான்மை நிறைய. தன்னை நம்பினவங்களை சந்தோசமா பார்த்துக்க முடியலைன்ற குற்றவுணர்வும் இருக்கு.”

“ஓ.. டைம் எடுக்குமா சார்?”

“நீ கூடயிருந்தா இரண்டே முறை போதும். நாளைக்கு நாக்கௌட் டெஸ்ட் எடுக்கணும்னு வரச்சொல்லியிருக்கேன்.”

“அது எதுக்கு சார்? வெறும் கவுன்சிலிங் மட்டும் போதாதா? அது ரொம்ப பாதிக்கப்பட்டவங்களுக்குதான எடுக்கிறது?”

“அந்தப் பையனுக்குப் பாதிப்பு அதிகம்தான் அன்பு. என்ன பிரச்சனைன்னு வாய் திறக்க மாட்டேன்றார். அவர் ஃப்ரண்டுக்கு எந்தளவு சொன்னாரோ அதை மட்டும்தான் திரும்பத்திரும்ப என்கிட்ட சொல்றார். தனக்குள்ளேயே போட்டு அழுத்திக்கிறார். இந்த டெஸ்ட் செய்தால் மட்டும்தான் மன அழுத்தம் குறைந்து இயல்புக்கு வருவார். அவர்கிட்ட சொல்லாமல்தான் ஏற்பாடு பண்ணியிருக்கு. சரி வளைகாப்பு என்னைக்கு?” என்றார்.

“இன்னும் நாலுநாள் இருக்கு சார்.”

“சரி அன்பு. நாளைக்குக் காலையில் பத்து மணிக்கெல்லாம் வந்திரு” என்று அழைப்பைத் துண்டித்தார்.

கட்டிலில் யோசனையாய் அமர்ந்திருந்த அன்பழகியிடம், “தூங்கலையா அண்ணி?” என கேட்க,

“தூங்கணும்டா. நீயும் எதையும் யோசிக்காமல் தூங்கு” என்று தானும் படுத்தாள்.

மறுநாள் மாலை வீடு வந்த பவானியின் தலையில் சிறு கட்டு இருக்க பதறிப்போனார்கள் அன்பழகி குடும்பத்தினர். ஆளாளுக்கு அவளை விசாரிக்க, “அச்சோ ஒண்ணுமில்லை. ஆட்டோவுக்காக நிற்கும்போது பைக் வந்து தட்டிருச்சி. டிரைவர் அண்ணாதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டு வந்து விட்டுட்டுப் போறாங்க” என்றாள் அமைதிப்படுத்தும் விதமாக.

“உனக்கு அடிக்கடி அடிபடுறதைப் பார்த்தா யதார்த்தமா தெரியலை பவிமா. அதுவும் அநேக நேரம் உன் காலேஜ்லதான் நடக்குது.”

“அப்படில்லாம் இருக்காது அத்தை. என்னை பழிவாங்கி என்ன செய்யப்போறாங்க?”

“அந்த ரசிகா வேலையாக இருக்குமோ?” என்றபடி வெளியே செல்லக் கிளம்பி வந்த அதியன் காதில் விழுந்ததைக் கேட்டு தன் கருத்தைச் சொன்னான்.

“அதெப்படி அதி சொல்ற? திரும்ப அதே தப்பைச் செய்தா பிரச்சனை வேற மாதிரி போகும்னு அவளுக்குத் தெரியாதா?” என்றாள் நேஹா.

“சைக்கோக்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய பயமிருக்காது அண்ணி. தன் குறிக்கோள் மட்டும்தான் கண்முன் இருக்கும்.”

“அப்படிப் பார்த்தா அவளோட குறிக்கோள் நீதான? எனக்கென்னவோ வேற யாரோ செய்திருப்பாங்க தோணுது” என்றாள் நேஹா.

“அந்த ரசிகாவை அவ்வளவு எளிதா எடைபோடாதீங்க அண்ணி” என்றான் கோபத்தில்.

“ப்ளீஸ் நீங்க ஏன் சண்டை போடுறீங்க? இதுக்குக் காரணம் ரசிகா சீனியர் கிடையாது. அவங்க அண்ணா ஒருமுறை என்கிட்ட கூட்டிட்டு வந்து மன்னிப்பு கேட்க வச்சி, கவுன்சிலிங் போறதா சொன்னாங்க. இப்ப என்னைப் பார்த்தாலும் ஒதுங்கிருவாங்க. இது தற்செயலா நடந்த விபத்து” என்றாள் பவானி.

“நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு சந்தேகம்தான்” என்றனர் ராகினி, நேஹா, அதியன் மூவரும்.

“அட விடுங்க. எனக்கு நெக்ஸ்ட் எதாவது நடந்தா கன்பார்ம் பண்ணிக்கலாம்” எனவும், “வாயை மூடு” என்றார்கள் மூவரும்.

“சாரி” என்று மன்னிப்பு கேட்டு, “அக்கா உங்க வளைகாப்புக்கு என்னால இருக்க முடியாது. லாஸ்ட் செமஸ்டர் ஆரம்பிக்குது” என்றாள்.

“ஓ.. வேற வழியில்லையா?”

“கஷ்டம் அக்கா. நான் வீடியோவுல பார்த்துக்குறேன்” என்றாள்.

வளைகாப்பு நேரம் பத்திலிருந்து பதினொன்றரை என்பதால், தேர்வுக்குச் செல்லும் முன் பவானி நேஹாவை வாழ்த்திவிட்டுச் சென்றாள்.

விழாவை வீட்டிலேயே வைத்திருப்பதால் அங்கு அன்பழகி, நேஹா வீட்டினருடன் முக்கிய சொந்தங்களும், அண்டை வீட்டினரும் மட்டுமே!

வளைகாப்பு விழா பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தாலும் அன்பழகி வீட்டினரிடம் சிறு முகவாட்டம் இருக்கத்தான் செய்தது. ஏனெனில் மறுநாள்தான் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
வளைகாப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் வாசல் வந்து நின்றவனை முதலில் பார்த்த அதியன், “உன்னைதான் ரொம்ப நாள் தேடிட்டிருக்கேன்” என்றவன் அங்கு வந்த அகிலனையும் அழைக்க, என்னவென்று வந்தவன் அங்கு நின்றிருந்த செந்தூரனைக் கண்டு கோபம் எழுந்தாலும், “இங்க ஏன் வந்தீங்க?” என்றான் அமைதியாகவே.

பெரியவனின் மரியாதையையும் சிறியவனின் மரியாதையின்மையையும் கண்டவன் உதட்டோரப் புன்னகை வெளியிட்டு, “ஏன் நான் வரக்கூடாதா? இப்பவரை நான் உங்க வீட்டு மாப்பிள்ளைதான்” என்றான்.

“ஏய்! மாப்பிள்ளைன்ற வார்த்தை சொல்லாத. என் அக்காவோட கால் தூசிக்கு வரமாட்ட. எப்ப நோட்டீஸ் வந்ததோ அத்தோட உறவு முறிஞ்சிருச்சி. இப்ப நீ போகலாம்” என்று விட்டால் அடித்து விடுவான் போல் நின்றிருந்தான் அதியன்.

“சார் போதும் உங்களாலும் உங்க குடும்பத்தாலும் நாங்க பட்டது. இப்ப வீட்டுல விசேஷம் நடக்குது. பிரச்சனை வேண்டாம்னு நினைக்குறேன். என் தங்கச்சி உங்களைப் பார்த்தா வீண் மனக்கஷ்டம்தான் அவளுக்கு” என்றான் தன்மையாகவே.

“ஏன் நான் பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணக்கூடாதா? உங்க ஒய்ஃப் எனக்குத் தங்கை முறைதான? நானும் வாழ்த்திட்டுப் போறேனே” என அவனும் அசராமல் பதிலளித்தான்.

“ஏய்!” என குரலை உயர்த்திய அகிலன், பின் குரலைத் தாழ்த்தி, “தயவு செய்து போயிருங்க. நிற்க நிற்க மரியாதை தேயுமே தவிர கூடாது” என்றான்.

“இவனுக்கு என்னண்ணா மரியாதை? பழிவாங்க கல்யாணத்தைப் பண்ணி, மண்டபத்திலிருந்தே கட்டின மனைவியை விரட்டினவன்தான இவன். இவனுக்குப்போய் மரியாதையைப் பற்றி க்ளாஸ் எடுக்குறீங்க” என்றான் சத்தமாக.

“அதி! யார்கிட்டடா கத்திக்கிட்டிருக்க? கோபத்தைக் குறைன்னு சொன்னா கேட்குறியா?” தம்பியவனைத் திட்டியபடி வந்த அன்பழகிக்கு செந்தூரனைக் கண்டதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ள, ‘இங்க ஏன் வந்திருக்காங்க?’ என்பதாய்ப் பார்த்து, “வா..வாங்க” என்றழைத்தாள்.

“தேங்க்ஸ் அன்பழகி” என்று உள்ளே வர காலெடுத்து வைக்க, “அங்கேயே நில்லு” என்ற அதியனின் அதிகாரக் குரலில், “அதி என்ன பழக்கமிது? வீட்டுக்கு விரோதியே வந்தாலும் வரவேற்கிறதுதான் பண்பாடு. உன் வக்கீல் படிப்பு இதைக் கற்றுக் கொடுக்கலையா?” என்றாள் சற்றே குரலை உயர்த்தி.

“விரோதியைத்தான்கா சொல்லியிருக்காங்க. துரோகிங்களைச் சொல்லலை” என்றான் பட்டென்று.

“ப்ச்.. அதி! வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல வச்சி இன்சல்ட் பண்ணாத. உள்ள வரவழைத்து என்னன்னு கேட்டுட்டு அனுப்பலாம். நீங்க உள்ள வாங்க” என்றாள் மென்மையாக.

“இதுதான் அன்பழகி! இதெல்லாம் கத்துக்க மாப்ள” என்று அதியனைத் தன் பாதையிலிருந்து நகர்த்திவிட்டு உள்ளே வந்தவன், யாரிடமோ எதோ பேசியபடி வந்த ராகினியைக் கண்டு, “வணக்கம் அத்தை” என்றான்.

அவனின் அத்தையில் அதிர்ந்து மகளைப் பார்க்க, மகள் செய்த சைகையில், “வாங்க” என்று வரவேற்றார்.

“வந்துட்டேன் அத்தை. மாமா எங்க காணோம்? இன்றைய விழா நாயகியையும் காணோம்? ஓ.. ரூம்ல இருக்காரா?” என்று கேள்வி கேட்டு பதிலை அவனே அளிக்க, மகன்கள் இருவரும் தாயை முறைத்தனர்.

நேஹாவின் தாய் அவனை அடையாளம் கண்டு விசாரிக்க வர, “நான் அன்பழகி கணவன். நீங்க?” என்றான் அவரிடம்.

அவர்கள் விவகாரம் கொஞ்சம் தெரியுமென்பதால், “நான் நேஹா அம்மா” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.

“தங்கச்சிக்கு அம்மான்னா, எனக்கும் அம்மாதான். வணக்கம்மா” என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட, ‘இவன் நல்லவனா? கெட்டவனா?’ என்ற எண்ணமே அங்கிருந்தோருக்கு.

“ந..நல்லாயிருப்பா” என்று அவனை எழுப்பினார்.

“சரி எல்லாரும் இங்கயிருக்கீங்க? பங்க்ஷன் எங்க நடக்குது?” என்றான் விடாது மழையாய்.

“அ..து மா..டியில ஷமியானா போட்டு..” என ராகினி உளற,

“மாசமாயிருக்கிற பொண்ணை ஏன் படியேற விடுறீங்க? இங்க ஹால்லயே வச்சிருக்கலாம். இல்லைன்னா கார்டன்ல வச்சிருக்கலாமே” என்றான்.

“அதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். எதுக்கு வந்தீங்கன்னு சொல்ல முடியுமா?” என்றான் அகிலன்.

“சொல்லலாமே!” என சுற்றிலும் பார்த்தபடி, “என் பாசமலரைக் காணோமே எங்கே?” என்றான்.

“அவளுக்கு இன்னைக்கு எக்ஸாம்ன்றதால காலேஜ் போயிருக்கா.” ‘அவளைப் பார்க்கணும்னா காலேஜ் போய்ப் பார்க்கலாமே... இங்க வந்து ஏன் அசிங்கப்படணும்’ என்பதாய்க் கேட்டாள் அன்பழகி. ஏனோ அனைவரும் கணவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ஓ.. மறைமுகமா இங்க வரக்கூடாது சொல்றீங்க இல்லையா அன்பழகி? பரவாயில்லை விடுங்க. சொந்தத் தங்கை இல்லைன்னா என்ன, சொந்தமாகிட்ட தங்கையைப் பார்த்துட்டு வர்றேன்” என்று வேகமாக மாடியேற மேலே மொட்டைமாடி ஏறியவன் நேரே நேஹாவிடம் சென்று இரு தங்க வளையல்களைக் கொடுத்து “வாழ்த்துகள்மா” என்றான்.

நடந்தது.. நடப்பது எதுவுமறியாது திகைப்புடன் அவனைக் கண்டு, “தே..தேங்க் யூ” என்றாள் தடுமாற்றத்துடன்.

“எதுக்கு இந்தப் பதற்றம் தங்கச்சி? வயித்துக்குள்ள உள்ள குழந்தை பயந்திரப் போகுது” என்று ஒன்பதாம் மாதம் பத்தாம் மாதம் செய்ய வேண்டிய மருத்துவம் சம்பந்தப்பட்டதை அவன் சொல்ல, அவளோ கண்விரிய பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“டேய்! யார் உன்னை இங்க விட்டது?” என்ற சதாசிவத்தின் கையை அவசரமாகப் பிடித்துக்கொண்ட அன்பழகி, “எதுவும் பேச வேண்டாம்பா. எனக்காக ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.

“பொம்மு! ப்ச்..” என கோபத்தைக் கட்டுப்படுத்தி, “என்னவாம்?” என்றார் அவனின் வரவிற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள.

“தெரியலைப்பா. கேட்டும் பதிலில்லை” என்றாள்.

“வணக்கம் மாமா. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று குனிந்து அவரின் பாதம் தொடப்போக, “ஏ.. ஏய்” என பதறி விலகி, “உன்.. சாரி உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்றார் சதாசிவம்.

மகளுக்காக அவர் கொடுக்கும் மரியாதை என்பது செந்தூரனுக்குப் புரிய சிறு புன்னகையுடன், “தங்கை வளைகாப்புக்கு அண்ணன் நான் வந்தால்தான் முடியும்னு தங்கச்சி ஆசைப்பட்டதால வந்தேன் மாமா” என்றவன், “சொல்லுமா தங்கச்சி?” என்று நேஹாவையும் மாட்டி விட,

“ஆ.. இ.. ஆ.. மாமா.. அ..அது” என தாறுமாறாகத் தடுமாறி தலையை இடம் வலமாக அசைக்க, அதைக்கண்ட அன்பழகிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் போக, தண்ணீர் குடிப்பதுபோல் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து பெயருக்கு இரண்டு மடக்குக் குடித்தவள், நேஹாவிடம் சென்று புன்னகையுடன் “குடிங்க அண்ணி” என்றதும், ஏற்கனவே படபடப்பிலிருந்தவள் அதை வாங்கிக் குடிக்க, “உங்க புது அண்ணனை வரச்சொன்னதை சொல்லவே இல்லையே அண்ணி” என்றாள் கிண்டலாக.

“அச்சோ அன்பு! நீ வேற ஏன்? அவர் போன் நம்பர்கூடத் தெரியாது. அவர் போடுற டிராமாவுல எனக்கொரு கதாப்பாத்திரம் கொடுத்திட்டார் போல. உன் அண்ணனுக்குத் தெரிந்தது நான் காலி” என்றாள் சற்றே பயத்துடன்.

“அண்ணி அவங்க சும்மா கலாட்டா பண்றாங்க. உங்களை நம்ம வீட்டுல உள்ளவங்களுக்குத் தெரியாதா?” என்று அமைதிபடுத்தினாள்.

“பார்றா! அண்ணாவுக்குக் கலாட்டா பேச்செல்லாம் வருமா?”

“ம்.. அதெல்லாம் நல்லாவே வரும்” என்றாள் அன்றைய நினைவில்.

“உனக்கெப்படித் தெரியும்?” என்று நாத்தனாரை சந்தேகமாகப் பார்க்க,

“எனக்கா? எனக்கெப்படி? ஹான் பவிக்குட்டி சொன்னா அண்ணி” என்று அடுத்த கேள்வி வருமுன் நழுவி மாடியிலிருந்து படி இறங்குகையில் சட்டென விக்கல் எடுத்தது. நான்கைந்து படிகள் இறங்குவதற்குள் தொடர் விக்கல் வர, சில நொடிகள் படியிலயே நின்றாள்.

“யாரோ அன்பழகியைத் தீவிரமா நினைக்குறாங்க போல?” என்றவாறு அவளருகில் வந்தான் செந்தூரன்.

அவனைக் கண்டதில் சில நொடி நின்றிருந்த விக்கல் ‘ஹக்’ என்று வர, “என்னை நினைக்குறவங்க எங்க வீட்டுல.. ஹக்..” என வார்த்தை தடைபட, “இருக்காங்க. வேற யாரும் என்.. ஹக்.. நினைக்க மாட்டாங்க” என்றாள் விக்கலின் நடுவே.

“ஓ.. அப்புறம் ஏன் என் கனவுல வந்து அப்படிச் செய்த?” என்றான் தீவிர பாவனையுடன்.

கணவனின் பன்மை அழைப்பு விலகியதை உணர்ந்தாலும் எதுவும் சொல்லாது, “உங்க கனவுல.. ஹக்.. நா..னா? என் முகம் கூட முழுசா ஹக்.. நீங்க பார்த்த... ஹக்.. தில்லை. பொய் சொல்லாதீங்க” என்று விடாது விக்கலில் அடாது பேசி முடித்தாள்.

“அதெல்லாம் இந்த முகத்தை நல்லாவே தெரியும்” என்று அவள் முகவடிவை விரலால் கோடிழுத்துக் காட்ட, ‘ஹக்..’ என அவளுக்கு விக்கல் விலகாதிருக்க, “ஏன் அப்படிச் செய்த?” என்றான் திரும்பவும்.

“நான் என்ன ஹக்..” என வந்த விக்கல் தன்போல் நின்றது கணவனிட்ட கன்னத்து முத்தத்தில்.


வலது இடது என மூன்று முறை கன்னத்தில் முத்தமிட்டு அவளின் அதிர்ந்த விழிகளைக் கண்டு புன்னகைத்து, “விக்கலுக்கான ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் போயிருச்சி பாரு. வர்றேன் அன்பழகி. நாளைக்குக் கோர்ட்டுல பார்க்கலாம்” என்று மந்தகாசப் புன்னகையுடன் இறங்கிவிட்டான் செந்தூரன்.
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
30
அட இந்த செந்தூரன் அங்க குழப்பம் உண்டாக்கியதும் இல்லாம படிக்கிற எங்களையும் குழப்புறான். ஆக அழகிக்கு தூக்கம் போச்சு...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அழகிப் புல்லைய அழகா வச்சி செய்யுறான் போல இந்த செந்தூரன்.
 
Member
Joined
Sep 12, 2024
Messages
35
விக்கல் வித்தியாசமா இருக்கா ட்ரீட் மெண்டும் சூப்பர்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top