- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
10
மாலை ஆதிகேசவன் நண்பனுடன் வந்த பொழுது, நேஹாவிற்கு வளைகாப்பிற்கான பொருட்கள் வாங்க மால் செல்ல வேண்டுமென்று தாய் வற்புறுத்தி அழைக்க அங்கு சென்றுவிட்டாள் அன்பழகி.
“ஏன் மீ? எப்பவும் கூட்டம் குறையாமல் இருக்கே எப்படி?” தாயிடம் தன் கேள்வியை ஆரம்பித்தாள்.
“மனுஷனோட தேவைகள் அதிகரிச்சிருச்சி பொம்மு. அதான் தேடித்தேடி அலையுறான்.”
“ம்.. அலையட்டும் அலையட்டும்” என்று நடந்தவள் கண்ணில் எதிரிலிருந்த புத்தக அங்காடி பட அங்கிருந்தவளைக் கண்டு அதிர்ச்சிதான் அன்பழகிக்கு.
“அம்மா அங்க பாருங்க” என்று கைகாட்டிய இடத்தில் ராகினி பார்க்க, பவானி தன் அருகில் சில புத்தகங்களை வைத்திருந்த ஒரு இளைஞனுடன் சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தாள்.
“என்ன பொம்மு? இந்த பவி உலக அதிசயம்லாம் நடத்துறா. வா பார்க்கலாம்” என்று அவளை நெருங்க நெருங்க இருவரின் நெற்றி சுருங்க, பவானியின் நெற்றிக் குங்குமமும், தாலியும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“பவிக்குட்டி!” என அதிர்ச்சி மாறாமல் பவானியை அழைக்க, அக்குரலின் வீச்சில் “அண்ணி!” என்று குரல் வந்த திசையில் பார்த்து ஓடிச் சென்று அண்ணியவள் தோள்சாய்ந்து கொண்டாள்.
அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, “என்ன இதெல்லாம்?” என்று அவளின் சுமங்கலி கோலத்தைக் காட்ட,
“சாரி அண்ணி. திடீர்க் கல்யாணம்ன்றதால யார்கிட்டேயும் சொல்ல முடியலை” என்றாள்.
“திடீர்க் கல்யாணமா? இல்லை திருட்டுக் கல்யாணமா?” என கேட்டு நாத்தனாரை ஆழ்ந்து பார்க்க,
“உங்க சாய்ஸ் அண்ணி. அப்புறம் இவங்க சர்வேஷ்வரன். பேங்க்ல ஒர்க் பண்றாங்க” என்று அருகிலிருந்தவனை அறிமுகப்படுத்தினாள்.
“என்ன பண்ணிட்டிருக்க பவிக்குட்டி? இதையெல்லாம் நான் நம்பமாட்டேன்.”
“சாட்சி இருக்கு அண்ணி” என்றாள் அமைதியாக.
“கடவுளே வந்து சாட்சி சொன்னாலும் நான் நம்பமாட்டேன். உன் அண்ணன் என்ன பண்றாங்க? இந்தளவு எப்படி விட்டாங்க?” என்றவள் குரலில் அடக்கப்பட்ட கோபம்.
“அண்ணன் என்னை விட்டு வருடங்கள் ஆகுது அண்ணி. இப்ப நான் அங்க கிடையாது. உரிமையா உங்க வீட்டுக்கும் வரமுடியலை. சோ, எனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். அவங்க வீட்டிலும் சொல்லலை. படிப்பு முடிச்சதும் சொல்லலாம்னு ப்ளான்” என்றாள் நிதானமாக.
“ஓ.. இப்ப எங்கயிருக்க?”
“படிப்பு முடியுறதுவரை ஹாஸ்டல்தான் அண்ணி.”
“சரி ஹாஸ்டலை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வா” என்றழைத்தாள் அன்பழகி.
“அது சரிவராது அண்ணி” என்று மறுக்க,
“அதை நாங்க பார்த்துக்குறோம். என்மேல அன்பிருந்தா வந்து சேர்” என்றாள் அழுத்தமாக.
“அண்ணி!”
“வான்னு மட்டும்தான் சொன்னேன். என்ன நடந்ததுன்ற விரிவாக்கம் கேட்கலை. முடியுமா? முடியாதா?” என்றாள் உத்தரவாக.
பவானி சர்வேஷ்வரன் முகம் பார்க்க, அவனோ சம்மதிக்கச் சொல்லி தலையசைக்க, இவளோ முடியாதென்று மறுத்துத் தலையசைத்தாள்.
“உன் ஃப்ரண்ட் உன்னை எங்களோட வரச்சொல்றார். நீ ஏன் யோசிக்கிற?” என்று அவனை அவள் நண்பன் மட்டுமே என்பதாய் உரைக்க, அதிர்ந்து பார்த்த பவானியிடம், “நீ என்னதான் என்னை நம்பவைக்கப் பார்த்தாலும் உன் இந்தக் கோலத்தை நம்பமாட்டேன். அதோட எவ்வளவு நாசூக்கா இவரை அறிமுகப்படுத்துற? முதல்ல வீட்டுக்கு வா சொல்றேன்” என்றாள் கோபத்தை அடக்கியபடி.
அந்த கல்லூரி விடுதியைக் காலி செய்து வீட்டு வாசல் வந்ததும், “அம்மா புதுப்பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கணும்ல? மாப்பிள்ளையே இல்லாம கல்யாணம் செய்த புதுமையான சாதனைக்காகவாவது ஆரத்தி எடுக்கவேண்டாமா” என்றாள் நக்கலாக.
“அண்ணி! எனக்கு கல்யாணமானது நிஜம்” என்று அழுத்தமாக உரைத்தாள்.
“அப்படியா? அப்ப எங்க உன் கணவன்?” சற்று கிண்டலாகவே கேட்டாள் அன்பழகி
“அவங்க யாருன்னு யாருக்கும் சொல்லமாட்டேன்.”
“ஏன் மீ? அன்னைக்கு உங்க சின்ன மகன்கிட்ட தாலிகட்டி விட்டுட்டுப் போகச் சொன்னாளே, ஒருவேளை...”
“அண்ணி போதும் உங்க கற்பனை. உங்க தம்பிக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது” என்றாள் படபடப்புடன்.
“என்னைப் பழிவாங்க எத்தனை நாள் காத்திருந்த உடன்பிறப்பே?” என அக்காவைத் திட்டி, “தேடித்தேடி எனக்கு மூத்தவளா இந்த அழகியைப் பெத்துப் போட்டீங்களேம்மா. ஷப்பா என்னால முடியலை” என்று பவானியைப் பார்த்தவன், “என்னவோ சம்பவம் நடந்திருக்குன்னு புரியுது. என்னன்னுதான் தெரியலை. வீட்டுக்குள்ள வந்து நடந்ததைச் சொல்லுங்க” என்று வீட்டினுள் சென்றான்.
“அடடே நேஹாமா.. சும்மா பேருக்குத்தான் பேசிட்டிருந்தோம். நீ நிஜமாகவே ஆரத்தி எடுத்துட்டு வந்துட்டியா?” என்று மருமகளைப் பார்த்து, “கர்ப்பமா இருக்கும்போது ஆரத்தி எடுக்கவோ பக்கத்துல நிற்கவோ கூடாது. நீ வீட்டுக்குள்ள போ” என்று வாங்கிய ராகினி சூடம் பொருத்தி பவானிக்கு ஆரத்தி சுற்ற, “அத்தை எதுக்கு இதெல்லாம்? வேண்டாமே” என்றாள் தவிப்புடன்.
“தனியா எடுக்குறது எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு. என்ன பண்ணுறது? நீதான் அதுக்குச் சொந்தக்காரன் யாருன்னு சொல்லமாட்டேன் சொல்லிட்டியே. நீ முதல்ல உள்ள வந்து கேள்வி கேளு” என்று ஆரத்தி கொட்ட வெளியே சென்றார்.
சில நிமிடங்களில் ஹாலில் அத்தனை பேர் முன் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்த பவானியிடம், “உன் அண்ணனைப் பழிவாங்க இப்படி செய்தியா பவிக்குட்டி?” என்று கோபமாகக் கேட்டாள் அன்பழகி.
“ஒருசில ஆம்பளைங்களுக்கு நடைமுறை யதார்த்தத்தைப் புரிய வைக்கணும் அண்ணி” என்றாள் நிதானமாக.
“அதுக்காக நான்ல ரிவென்ஜ் எடுக்கணும்? எனக்காக நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்குவியா?” என்றாள் கடுமையாக.
“நீங்க பார்த்துக்குவீங்கன்ற தைரியத்துலதான் அண்ணி” என்று அன்பழகியின் கண்பார்த்து தைரியமாகவே சொன்னாள்.
“நீ செய்திருக்கிற காரியத்துக்கு அப்படியே அடி பின்னணும் போலிருக்கு. ப்ச்.. அடிக்கதான் மனசு வரலை” என்றாள் தன் கோபத்தைக் கொட்ட முடியா ஆத்திரத்தில்.
“அடிக்கணும் போலிருந்தா அடிச்சிருங்க அண்ணி” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அன்பழகியின் முன் தரையிலமர்ந்து அவள் கையை எடுத்துத் தன்னை பட்பட்டென்று அடிக்க வைத்திட, “ஏய்!” என்ற குரல்களின் அதட்டலையோ, கையை உருவ முனைந்த அன்பழகியின் முயற்சியையோ கண்டுகொள்ளாது, “என்னை அடிச்சே கொல்லுங்க அண்ணி. அதுக்காவது உறவுன்னு ஒருத்தர் வேணும்ல” என்றாள் கண்ணீர்க்குரலில்.
“அடிக்க மனசு வரலைன்னு சொல்றேன்ல. முதல்ல கையை விடு” என்று அவளைத் தன்னோடு அமரவைத்து தோளணைத்து, “என்மேல் அப்படி என்ன கண்மூடித்தனமான பாசம்? நீயா கட்டிக்கிட்ட இந்தத் தாலியைக் கழட்டிரு பவிக்குட்டி” என்றதும் அண்ணியிடமிருந்து விலகியவள், “நிஜமாகவே இது என் ஹஸ்பண்ட் கட்டினதுதான் அண்ணி” என்றாள்.
‘ஹ்ம்..’ என மூச்சை இழுத்துவிட்டு அதை ஜீரணித்தவள், “உன் அண்ணனுக்குத் தெரியுமா? தடுக்கலையா?” என கேட்க,
“என்னை இந்தக் கோலத்துல பார்த்தும் அண்ணனோட ரியாக்ஷன் எப்பவும் போலதான் அண்ணி. நாலு அடிபோட்டு காரணம் யாருன்னு மிரட்டுவாங்க நினைத்தேன். ப்ச்.. எதுவும் இல்லை. ஏன் இப்படி செய்தன்னு கொன்னு போட்டிருந்தால் கூட நிம்மதியா போயிருப்பேன் அண்ணி. ஆனா, ப்ச்..” என உதடு பிதுக்கி அழத்துடித்த இதழ்களை அடக்கி, “வாழ்த்துகள் பவின்னு சொல்லிட்டுப் போறாங்க” என்றதில் அனைவரும் அதிர, “எனக்கு வாழவே பிடிக்கலை அண்ணி” என அழுதவளை பாவமாய்ப் பார்த்தவர்களுக்குக் கண்களும் கலங்கியது.
தான் கலங்குவது பெரிதல்ல என்பதை உணர்ந்த அன்பழகிக்கு பவானியை சமாதானப்படுத்துவது முக்கியமென்பதால், “இப்பதான் கல்யாணம் ஆன பொண்ணு நீ, வாழப்பிடிக்கலை சொல்லலாமா பவிக்குட்டி? அப்புறம் உன்னை நம்பி வந்த ஜீவன் நிலை என்னாகிறது?” என்றாள்.
“அண்ணி!”
“ஹஸ்பண்ட் குழந்தைன்னு வாழ வேண்டாமா? நீ எப்பவும் சந்தோசமாயிருக்கணும் பவிக்குட்டி. அதுதான் எனக்கு சந்தோசம்” என்றாள்.
“ஆனா, உங்க சந்தோஷம்? அதைப் பறிக்க அண்ணனுக்கு எப்படி அண்ணி மனசு வந்தது?” என்றாள் கேவலுடன்.
“உன் அண்ணன் செய்த தப்புக்கு நீ பிராயசித்தம் தேடுறியா? என் சந்தோசம் உன் அண்ணனோட நின்னு போயிராதுடா. என் குடும்பம், என் வேலை இருக்கு. வலிதான் இல்லைன்னு மறுக்கலை. அதுக்காக அந்த இடத்துலயே நிற்க முடியுமா? கொஞ்ச நாள்ல வலி மறைந்து வடுவாகி பின்னொரு நாள் காணாமலே போயிரும்” என்றாள் கண்ணீரை அவளறியாமல் துடைத்தபடி.
மாலை ஆதிகேசவன் நண்பனுடன் வந்த பொழுது, நேஹாவிற்கு வளைகாப்பிற்கான பொருட்கள் வாங்க மால் செல்ல வேண்டுமென்று தாய் வற்புறுத்தி அழைக்க அங்கு சென்றுவிட்டாள் அன்பழகி.
“ஏன் மீ? எப்பவும் கூட்டம் குறையாமல் இருக்கே எப்படி?” தாயிடம் தன் கேள்வியை ஆரம்பித்தாள்.
“மனுஷனோட தேவைகள் அதிகரிச்சிருச்சி பொம்மு. அதான் தேடித்தேடி அலையுறான்.”
“ம்.. அலையட்டும் அலையட்டும்” என்று நடந்தவள் கண்ணில் எதிரிலிருந்த புத்தக அங்காடி பட அங்கிருந்தவளைக் கண்டு அதிர்ச்சிதான் அன்பழகிக்கு.
“அம்மா அங்க பாருங்க” என்று கைகாட்டிய இடத்தில் ராகினி பார்க்க, பவானி தன் அருகில் சில புத்தகங்களை வைத்திருந்த ஒரு இளைஞனுடன் சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தாள்.
“என்ன பொம்மு? இந்த பவி உலக அதிசயம்லாம் நடத்துறா. வா பார்க்கலாம்” என்று அவளை நெருங்க நெருங்க இருவரின் நெற்றி சுருங்க, பவானியின் நெற்றிக் குங்குமமும், தாலியும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“பவிக்குட்டி!” என அதிர்ச்சி மாறாமல் பவானியை அழைக்க, அக்குரலின் வீச்சில் “அண்ணி!” என்று குரல் வந்த திசையில் பார்த்து ஓடிச் சென்று அண்ணியவள் தோள்சாய்ந்து கொண்டாள்.
அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, “என்ன இதெல்லாம்?” என்று அவளின் சுமங்கலி கோலத்தைக் காட்ட,
“சாரி அண்ணி. திடீர்க் கல்யாணம்ன்றதால யார்கிட்டேயும் சொல்ல முடியலை” என்றாள்.
“திடீர்க் கல்யாணமா? இல்லை திருட்டுக் கல்யாணமா?” என கேட்டு நாத்தனாரை ஆழ்ந்து பார்க்க,
“உங்க சாய்ஸ் அண்ணி. அப்புறம் இவங்க சர்வேஷ்வரன். பேங்க்ல ஒர்க் பண்றாங்க” என்று அருகிலிருந்தவனை அறிமுகப்படுத்தினாள்.
“என்ன பண்ணிட்டிருக்க பவிக்குட்டி? இதையெல்லாம் நான் நம்பமாட்டேன்.”
“சாட்சி இருக்கு அண்ணி” என்றாள் அமைதியாக.
“கடவுளே வந்து சாட்சி சொன்னாலும் நான் நம்பமாட்டேன். உன் அண்ணன் என்ன பண்றாங்க? இந்தளவு எப்படி விட்டாங்க?” என்றவள் குரலில் அடக்கப்பட்ட கோபம்.
“அண்ணன் என்னை விட்டு வருடங்கள் ஆகுது அண்ணி. இப்ப நான் அங்க கிடையாது. உரிமையா உங்க வீட்டுக்கும் வரமுடியலை. சோ, எனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். அவங்க வீட்டிலும் சொல்லலை. படிப்பு முடிச்சதும் சொல்லலாம்னு ப்ளான்” என்றாள் நிதானமாக.
“ஓ.. இப்ப எங்கயிருக்க?”
“படிப்பு முடியுறதுவரை ஹாஸ்டல்தான் அண்ணி.”
“சரி ஹாஸ்டலை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வா” என்றழைத்தாள் அன்பழகி.
“அது சரிவராது அண்ணி” என்று மறுக்க,
“அதை நாங்க பார்த்துக்குறோம். என்மேல அன்பிருந்தா வந்து சேர்” என்றாள் அழுத்தமாக.
“அண்ணி!”
“வான்னு மட்டும்தான் சொன்னேன். என்ன நடந்ததுன்ற விரிவாக்கம் கேட்கலை. முடியுமா? முடியாதா?” என்றாள் உத்தரவாக.
பவானி சர்வேஷ்வரன் முகம் பார்க்க, அவனோ சம்மதிக்கச் சொல்லி தலையசைக்க, இவளோ முடியாதென்று மறுத்துத் தலையசைத்தாள்.
“உன் ஃப்ரண்ட் உன்னை எங்களோட வரச்சொல்றார். நீ ஏன் யோசிக்கிற?” என்று அவனை அவள் நண்பன் மட்டுமே என்பதாய் உரைக்க, அதிர்ந்து பார்த்த பவானியிடம், “நீ என்னதான் என்னை நம்பவைக்கப் பார்த்தாலும் உன் இந்தக் கோலத்தை நம்பமாட்டேன். அதோட எவ்வளவு நாசூக்கா இவரை அறிமுகப்படுத்துற? முதல்ல வீட்டுக்கு வா சொல்றேன்” என்றாள் கோபத்தை அடக்கியபடி.
அந்த கல்லூரி விடுதியைக் காலி செய்து வீட்டு வாசல் வந்ததும், “அம்மா புதுப்பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கணும்ல? மாப்பிள்ளையே இல்லாம கல்யாணம் செய்த புதுமையான சாதனைக்காகவாவது ஆரத்தி எடுக்கவேண்டாமா” என்றாள் நக்கலாக.
“அண்ணி! எனக்கு கல்யாணமானது நிஜம்” என்று அழுத்தமாக உரைத்தாள்.
“அப்படியா? அப்ப எங்க உன் கணவன்?” சற்று கிண்டலாகவே கேட்டாள் அன்பழகி
“அவங்க யாருன்னு யாருக்கும் சொல்லமாட்டேன்.”
“ஏன் மீ? அன்னைக்கு உங்க சின்ன மகன்கிட்ட தாலிகட்டி விட்டுட்டுப் போகச் சொன்னாளே, ஒருவேளை...”
“அண்ணி போதும் உங்க கற்பனை. உங்க தம்பிக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது” என்றாள் படபடப்புடன்.
“என்னைப் பழிவாங்க எத்தனை நாள் காத்திருந்த உடன்பிறப்பே?” என அக்காவைத் திட்டி, “தேடித்தேடி எனக்கு மூத்தவளா இந்த அழகியைப் பெத்துப் போட்டீங்களேம்மா. ஷப்பா என்னால முடியலை” என்று பவானியைப் பார்த்தவன், “என்னவோ சம்பவம் நடந்திருக்குன்னு புரியுது. என்னன்னுதான் தெரியலை. வீட்டுக்குள்ள வந்து நடந்ததைச் சொல்லுங்க” என்று வீட்டினுள் சென்றான்.
“அடடே நேஹாமா.. சும்மா பேருக்குத்தான் பேசிட்டிருந்தோம். நீ நிஜமாகவே ஆரத்தி எடுத்துட்டு வந்துட்டியா?” என்று மருமகளைப் பார்த்து, “கர்ப்பமா இருக்கும்போது ஆரத்தி எடுக்கவோ பக்கத்துல நிற்கவோ கூடாது. நீ வீட்டுக்குள்ள போ” என்று வாங்கிய ராகினி சூடம் பொருத்தி பவானிக்கு ஆரத்தி சுற்ற, “அத்தை எதுக்கு இதெல்லாம்? வேண்டாமே” என்றாள் தவிப்புடன்.
“தனியா எடுக்குறது எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு. என்ன பண்ணுறது? நீதான் அதுக்குச் சொந்தக்காரன் யாருன்னு சொல்லமாட்டேன் சொல்லிட்டியே. நீ முதல்ல உள்ள வந்து கேள்வி கேளு” என்று ஆரத்தி கொட்ட வெளியே சென்றார்.
சில நிமிடங்களில் ஹாலில் அத்தனை பேர் முன் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்த பவானியிடம், “உன் அண்ணனைப் பழிவாங்க இப்படி செய்தியா பவிக்குட்டி?” என்று கோபமாகக் கேட்டாள் அன்பழகி.
“ஒருசில ஆம்பளைங்களுக்கு நடைமுறை யதார்த்தத்தைப் புரிய வைக்கணும் அண்ணி” என்றாள் நிதானமாக.
“அதுக்காக நான்ல ரிவென்ஜ் எடுக்கணும்? எனக்காக நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்குவியா?” என்றாள் கடுமையாக.
“நீங்க பார்த்துக்குவீங்கன்ற தைரியத்துலதான் அண்ணி” என்று அன்பழகியின் கண்பார்த்து தைரியமாகவே சொன்னாள்.
“நீ செய்திருக்கிற காரியத்துக்கு அப்படியே அடி பின்னணும் போலிருக்கு. ப்ச்.. அடிக்கதான் மனசு வரலை” என்றாள் தன் கோபத்தைக் கொட்ட முடியா ஆத்திரத்தில்.
“அடிக்கணும் போலிருந்தா அடிச்சிருங்க அண்ணி” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அன்பழகியின் முன் தரையிலமர்ந்து அவள் கையை எடுத்துத் தன்னை பட்பட்டென்று அடிக்க வைத்திட, “ஏய்!” என்ற குரல்களின் அதட்டலையோ, கையை உருவ முனைந்த அன்பழகியின் முயற்சியையோ கண்டுகொள்ளாது, “என்னை அடிச்சே கொல்லுங்க அண்ணி. அதுக்காவது உறவுன்னு ஒருத்தர் வேணும்ல” என்றாள் கண்ணீர்க்குரலில்.
“அடிக்க மனசு வரலைன்னு சொல்றேன்ல. முதல்ல கையை விடு” என்று அவளைத் தன்னோடு அமரவைத்து தோளணைத்து, “என்மேல் அப்படி என்ன கண்மூடித்தனமான பாசம்? நீயா கட்டிக்கிட்ட இந்தத் தாலியைக் கழட்டிரு பவிக்குட்டி” என்றதும் அண்ணியிடமிருந்து விலகியவள், “நிஜமாகவே இது என் ஹஸ்பண்ட் கட்டினதுதான் அண்ணி” என்றாள்.
‘ஹ்ம்..’ என மூச்சை இழுத்துவிட்டு அதை ஜீரணித்தவள், “உன் அண்ணனுக்குத் தெரியுமா? தடுக்கலையா?” என கேட்க,
“என்னை இந்தக் கோலத்துல பார்த்தும் அண்ணனோட ரியாக்ஷன் எப்பவும் போலதான் அண்ணி. நாலு அடிபோட்டு காரணம் யாருன்னு மிரட்டுவாங்க நினைத்தேன். ப்ச்.. எதுவும் இல்லை. ஏன் இப்படி செய்தன்னு கொன்னு போட்டிருந்தால் கூட நிம்மதியா போயிருப்பேன் அண்ணி. ஆனா, ப்ச்..” என உதடு பிதுக்கி அழத்துடித்த இதழ்களை அடக்கி, “வாழ்த்துகள் பவின்னு சொல்லிட்டுப் போறாங்க” என்றதில் அனைவரும் அதிர, “எனக்கு வாழவே பிடிக்கலை அண்ணி” என அழுதவளை பாவமாய்ப் பார்த்தவர்களுக்குக் கண்களும் கலங்கியது.
தான் கலங்குவது பெரிதல்ல என்பதை உணர்ந்த அன்பழகிக்கு பவானியை சமாதானப்படுத்துவது முக்கியமென்பதால், “இப்பதான் கல்யாணம் ஆன பொண்ணு நீ, வாழப்பிடிக்கலை சொல்லலாமா பவிக்குட்டி? அப்புறம் உன்னை நம்பி வந்த ஜீவன் நிலை என்னாகிறது?” என்றாள்.
“அண்ணி!”
“ஹஸ்பண்ட் குழந்தைன்னு வாழ வேண்டாமா? நீ எப்பவும் சந்தோசமாயிருக்கணும் பவிக்குட்டி. அதுதான் எனக்கு சந்தோசம்” என்றாள்.
“ஆனா, உங்க சந்தோஷம்? அதைப் பறிக்க அண்ணனுக்கு எப்படி அண்ணி மனசு வந்தது?” என்றாள் கேவலுடன்.
“உன் அண்ணன் செய்த தப்புக்கு நீ பிராயசித்தம் தேடுறியா? என் சந்தோசம் உன் அண்ணனோட நின்னு போயிராதுடா. என் குடும்பம், என் வேலை இருக்கு. வலிதான் இல்லைன்னு மறுக்கலை. அதுக்காக அந்த இடத்துலயே நிற்க முடியுமா? கொஞ்ச நாள்ல வலி மறைந்து வடுவாகி பின்னொரு நாள் காணாமலே போயிரும்” என்றாள் கண்ணீரை அவளறியாமல் துடைத்தபடி.