- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
யாசிக்கிறேன் நின் இதயத்தை
1
கோவில் தூணில் சாய்ந்தமர்ந்து சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த குடும்பத்தினரை வெறித்தபடி பார்த்திருந்தவளின் தோளைத் தட்டி, “யாரைப் பார்க்கிற பூரணி? உனக்குத் தெரிஞ்சவங்களா?” என கேட்டாள் சண்முகி.
“இல்ல சண்மு. அந்த சின்னப்பையன் அழகாயிருக்கான். அதான் ரசிச்சிட்டிருந்தேன்.”
“ரசனையா பார்க்கிறதுக்கும், வெறிக்கிற மாதிரிப் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லு?”
“குழந்தையைத்தான் பார்த்துட்டிருந்தேன் சண்மு. அப்படியே யோசனை எங்கெங்கோ போயிருச்சி.”
“வேற எதுவும் இல்லையே?” என்றாள் சந்தேகமாக.
“அட இல்லைன்றேன். திரும்பத்திரும்ப கேட்டா என்னன்னு சொல்றது? வேணும்னா பொய்யா ஒரு கற்பனைக் கதை புனைந்து சொல்லவா?” என்று புன்னகைத்தாள்.
“இப்பதான் என் சந்தேகமே வலுக்குது” என்ற தோழியை முறைத்து, “வா போகலாம்” என்று எழுந்தவள், சண்முகி எழுவதற்கும் கரம் கொடுத்து அவள் எழுந்ததும் இருவரும் கோவில் வாசல் வரும் நேரம், தன்னை யாரோ பார்ப்பதுபோல் தோன்ற வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் பூரணி. அங்கு யாருமில்லை என்றதும் நடக்கவாரம்பிக்க அதே உணர்வு திரும்ப எழ திரும்பிப் பார்த்தாள்.
“யாரும் ஃபாலோ பண்ற மாதிரி ஃபீலாகுதா பூரணி?” என்று தானும் திரும்பிப் பார்த்தபடி கேட்க...
“ம்.. ஆமா சண்மு.”
“ஓ.. சரிவிடு எதாவது பொறுக்கியா இருப்பான். ரோட் சைட் ரோமியோக்களுக்குப் பஞ்சமா என்ன? ஆமா ரோட் சைட் ரோமியோன்னு ஏன் பெயர் வந்தது?” தனது நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ம்.. ரோடு ரோடா பொறுக்குறதாலயா இருக்கும்.” கடுப்பாக பதிலளித்தாள் பூரணி.
“ஹான்! இருக்கும் இருக்கும்” என்றதில் பூரணி முகம் இன்னும் கடுப்பைக் காண்பிக்க, “சரி சரி விட்டுருறேன். நீ இப்படி அடிக்கடி முறைக்கிறது கடுப்பாகுறதுன்னு செய்.. உன் மூஞ்சிக்கு அதான் அழகாயிருக்கு” என்று வாய் கன்னம் தொடுமளவு இழுத்துப் புன்னகைக்க...
“அடங்கவே மாட்டடி நீ.”
“அடக்கதான் வீட்டுல ஆள் தேடிட்டிருக்காங்க. பேரம் படியலைன்றதால அடக்க வர்றவன்லாம் ஐயோன்னு ஓடிருறான்” என்று கண்சிமிட்டிக் கூறினாள்.
“ஹாஹா உன்மேல அவ்வளவு பயம்.”
“இருக்கலாம். நானோ கொஞ்சம் சுமார் மூஞ்சியா இருக்கேன். அழகும், வசதியும் இல்லைன்னா ஒரு பொண்ணோட நிலை? அதைவிட அவளைப் பெத்தவங்க நிலை? ப்ச்..” என சலிப்பாகச் சொல்ல,
“என்ன நிலை நிலைன்ற? அப்பவும் அதிக நகைபோட்டு நீதான் அவனைக் கட்டிக்கப்போற. அவன் கிடையாது. கலர் கம்மியா இருந்தா அழகில்லைன்னு யார் சொல்றது? கருப்புதான்டி அழகே. கருப்பாயிருந்தாலும் உனக்கிருக்கிற முகலட்சணம் யாருக்கு வரும். என்னையே பாரு உன்னோட கம்பேர் பண்ணினா, கலரைத் தாண்டி அழகுன்னா அது நீதான் சண்மு. என் சண்முவோட அழகைப் பார்த்து அடக்க ஒருத்தன் வராமலா இருப்பான்.”
“ம்க்கும் வந்துட்டாலும் போவியா!” என அலுத்துக்கொள்ள,
“அது எப்படிடா வராமல் இருப்பேன். முருகன் வள்ளியைத் தூக்கின மாதிரி, கூடிய சீக்கிரமே வந்து உன்னைத் தூக்குறேன்டா” என்ற குரலில் நடந்து கொண்டிருந்த தோழியர் இருவரும் சட்டென்று சிரித்தபடி திரும்பிப்பார்க்க, “அவன் உன்னைத் தூக்காமலிருந்தா போதும்டா தினா” என்றபடி இருசக்கர வாகனத்தில் இருவர் செல்ல அவர்களின் பின்பக்கம் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்தது.
“சண்மு டைமிங் டயலாக். சீக்கிரமே வந்து தூக்குறாப்லயாம்” என்று சண்முகியைச் சீண்டினாள்.
“ஆமாமாம் தூக்க விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறாங்க. வீட்டுக்குப் போயி வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி வா” என்ற சண்முகி பூரணியிடமிருந்து விடைபெற்று தன் வீடு நோக்கி நடந்தாள்.
“இவ்வளவு நேரம் கோவில்ல என்ன பண்ணிட்டிருந்த பூரணி? இப்படி ஆடி அசைந்து வந்தா வீட்டு வேலையை யார் பார்ப்பாங்க? அவசர அவசரமா பார்த்துட்டு கடைக்குப் போகணும்னு வேற நிற்ப” என்று அதட்டினார் தாய் மைதிலி.
“அம்மா எப்படியும் எந்நேரமானாலும் நான்தான. பார்க்கப்போறேன். நீங்க அங்கயிங்கன்னு நடமாடாம அமைதியா உட்காருங்க. ஆமா அப்பா எங்க?” என்றாள் அவர் வேறெதுவும் பேசுமுன்.
“கோழிப்பண்ணையில் இருக்காங்க. முட்டை எடுக்க ஆள் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். இப்ப வந்திருவாங்க. அதுக்குள்ள நீ சமையலை முடி.” சாய்ந்து நடக்கும் தன் பாதங்களை மெல்ல நகர்த்தி சுவற்றைப் பிடித்தபடி ஹாலிற்கு சென்று தரையில் அமர்ந்தார்.
அடுத்த முக்கால்மணி நேரத்திற்கெல்லாம் சமையலை முடித்துத் தனக்கு காலைக்கும் மதியத்திற்குமான உணவை டிபன் பாக்ஸில் அடைத்து, சைக்கிள் சாவியையும், கடைச் சாவியையும் எடுத்து வெளியே வர, “என்ன பூரணி கிளம்பிட்டியா? நான் சொன்ன விஷயம் என்னாச்சி? நானே வந்துதான் கேட்கணுமா? நீயா சொன்னா குறைஞ்சி போயிருவியா?” கேள்விகளை அடுக்கியபடி வந்தாள் பூரணியின் அக்கா ஜனனி.
காலையிலேயே தாய் வீட்டில் விடச்சொல்லி கணவனை இழுத்து வந்து, அவனை வீட்டினுள் நுழையவிடாமல் அனுப்பியும்விட்டாள்.
“நீ என்ன சொன்னன்றதே எனக்கு ஞாபகமில்லைக்கா. நைட் வரை காத்திருந்து சொல்ல முடியும்னா சொல்லு. இல்லையா இதோட விட்டுரு” என்று சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டாள்.
“சொந்த சம்பாத்தியம்ன்றதால ரொம்பதான் ஆடுறா உங்க சின்னப்பொண்ணு.” தாயிடம் தன் கோபத்தைக் கொட்டி, “சமையல் முடிச்சிட்டாளா? பசிக்குதும்மா” என சாப்பிடவே வந்தாற்போல் கிச்சனுக்குள் சென்றாள்.
சைக்கிளில் சென்றவளுக்கோ தன் குடும்பப் பிரச்சனைகளுடன் காலையில் பார்த்த சில வேண்டாத முகங்கள் கோபத்தைக் கொடுத்தது. ‘அந்தக் குடும்பம் இங்க எப்படி? ஒரு பெண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு குடும்பமே நிம்மதியாயிருக்கு. ஜெயில்ல களி திங்க வேண்டிய கேஸ்ங்க எல்லாம் கடவுளைத் தேடி வந்திருக்கு. கடவுளே இன்னுமே அவங்களுக்கு ஆசீர்வாதம் செய். இன்னுமின்னும் அடுத்தவங்களைக் கெடுக்கட்டும்.’
மனதிற்குள் புலம்பியபடி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்கள் கடைக்கு வந்து சைக்கிளை ஓரங்கட்டி, பூட்டைத் திறந்து ஷட்டரைத் தூக்க, அந்நேரம் சண்முகி வந்து உதவி செய்ய முதலில் கடையைப் பெருக்கி சுத்தம் செய்து சாமிக்கு அகர்பத்தி காண்பித்து வணங்கி அமர்ந்தார்கள்.
‘பி.எஸ் மருந்தகம்!’ தொள்ளாயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் அது. அருகே பிரபல ரோஜா மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைக்கும் மருந்தகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால், இருவருக்குமிடையே வியாபார ரீதியான தொடர்புண்டு. மருத்துவமனை பில்கள் எல்லாம் வருவது பி.எஸ் மருந்தகத்திற்கே!
இன்னொரு தொடர்பு மருத்துவமனையும், மருந்தகமும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பூரணியும் சண்முகியும் டி.பார்ம் முடித்த கையோடு அரசு வேலைக்கு முயற்சித்தபடி, ஒரு தனியார் மருத்துவமனையிலுள்ள மெடிக்கலில் சண்முகியின் அப்பா சண்முக சுந்தரத்திற்குத் தெரிந்தவர் மூலம் சிபாரிசு பிடித்து சேர்ந்திருந்தார்கள். சிலபல சோதனை நிறைய யோசனைக்குப் பின்னர் இருவரின் முதல் எழுத்திலும் ஆரம்பித்ததுதான் பி.எஸ் மருந்தகம்.
ஒருசில நேரத்தைத் தவிர மற்றைய நேரங்கள் யாவும் சுழலும் பம்பரங்கள்தான் அவர்கள். இரவு பத்துப் பதினோரு மணிவரை மருந்தகத்திலேயே நேரம் போய்விடும். இடையில் பூரணி சென்று சமையல் செய்து திரும்பவும் மருந்தகம் வர என வேலைப்பழு அதிகமானதால், சமீபமாகத்தான் வினோத் என்ற பையனைச் சேர்த்திருக்கிறார்கள்.
அதுவும் மாலை ஆறுமணி முதல் இரவு பதினோரு மணி வரை மட்டுமே அவன் இருப்பான். தனியார் மருத்துவமனை ஒன்றில் இதே வேலையில் வினோத் இருப்பதால் இந்த நேரமாற்றம். அதன்பின் கடையை மூடி பூரணி வீட்டில் சாவி கொடுத்ததோடு அவன் வேலை முடிந்துவிடும். தேவைப்பட்டால் அங்கு விடுமுறை விட்டு இங்கு வருவான். அங்கு விடுமுறையெனில் பகலிலும் இங்கே வருவது அவனின் வழக்கம்.
பூரணி, சண்முகி இருவரும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு செல்வதாக ஏற்பாடு. அதிக வேலை நாளில் பூரணி உடனிருந்து சண்முகியை வீட்டிற்கு அனுப்பிவிடுவாள். இதோ காலை ஒன்பது மணிக்கெல்லாம் மருத்துவமனையும், மருந்தகமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது.
“என்னடா பொண்ணு பிடிச்சிருந்ததா? பக்கத்துல வச்சிப் பார்க்க பொண்ணோட அப்பா அனுமதிக்கலை. இல்லைன்னா வீட்டுக்கே போய் நிதானமாப் பார்த்துட்டு வந்திருக்கலாம். இப்ப தேவையில்லாம இருபது கிலோமீட்டர் தள்ளி உள்ள கோவிலுக்கு வரவழைச்சிட்டாங்க. இதுல அப்பாவுக்குத் தூரத்து சொந்தமாம்” என அங்கலாய்த்து, “உனக்கு சம்மதம்னா சொல்லுவியாம். மேற்கொண்டு பேசலாம்னு அம்மா சொல்றாங்க?” என்று தங்களை அலைய வைத்ததற்கு தம்பியிடம் பாய்ந்தான் சுவீகரன்.
“ஏன்? தம்பிக்காக ஒருநாள் அலைய மாட்டியா? அவ்வ்வளவு டைட் பிசினஸ்மேனோ?”
“டைட்டோ, லூஸோ நீ என்ன சொல்ற?” என நிற்க,
“நான் பார்த்த பெண்ணை பிடிச்சிருந்தது” என்று சற்று அழுத்தமாகச் சொன்னான் வசீகரன்.
“நிஜமாவாடா? ஷப்பா!” என ஆசுவாச மூச்சுவிட்டு, “அம்மா என் வேலை முடிஞ்சது. உங்க சின்னப் பையனுக்கு சம்மதமாம்.” அடுப்படியிலிருந்த தாய்க்குக் கேட்கவென்று கத்தி சொன்னான்.
வேகமாக உள்ளிருந்து ஹால் வந்த ஆனந்தி, “எப்படான்னு காத்துக்கிட்டிருக்கேன். கரன் அப்பாவைக் கூப்பிடு. நாளைக்குப் பொண்ணு வீட்டுல போய்ப் பேசிட்டு வர்றோம்” என்றார்.
“வசீ இன்னைக்குப் பார்த்த பெண்ணை நிஜமாவே பிடிச்சிருக்கா?” சுவீகரனின் மனைவி ஐஸ்வர்யா கேட்க,
“நிஜமாவே நான் பார்த்த பெண்ணைப் பிடிச்சிருக்கு அண்ணி” என்றதில் ஐஸ்வர்யாவின் முகம் மாற, அதைக் கவனியாது தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவன் மனமெல்லாம் இன்று பார்த்த பெண் மீதே!
சொர்ணா சந்தனகுமார்
யாசிக்கிறேன் நின் இதயத்தை
1
“இல்ல சண்மு. அந்த சின்னப்பையன் அழகாயிருக்கான். அதான் ரசிச்சிட்டிருந்தேன்.”
“ரசனையா பார்க்கிறதுக்கும், வெறிக்கிற மாதிரிப் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லு?”
“குழந்தையைத்தான் பார்த்துட்டிருந்தேன் சண்மு. அப்படியே யோசனை எங்கெங்கோ போயிருச்சி.”
“வேற எதுவும் இல்லையே?” என்றாள் சந்தேகமாக.
“அட இல்லைன்றேன். திரும்பத்திரும்ப கேட்டா என்னன்னு சொல்றது? வேணும்னா பொய்யா ஒரு கற்பனைக் கதை புனைந்து சொல்லவா?” என்று புன்னகைத்தாள்.
“இப்பதான் என் சந்தேகமே வலுக்குது” என்ற தோழியை முறைத்து, “வா போகலாம்” என்று எழுந்தவள், சண்முகி எழுவதற்கும் கரம் கொடுத்து அவள் எழுந்ததும் இருவரும் கோவில் வாசல் வரும் நேரம், தன்னை யாரோ பார்ப்பதுபோல் தோன்ற வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் பூரணி. அங்கு யாருமில்லை என்றதும் நடக்கவாரம்பிக்க அதே உணர்வு திரும்ப எழ திரும்பிப் பார்த்தாள்.
“யாரும் ஃபாலோ பண்ற மாதிரி ஃபீலாகுதா பூரணி?” என்று தானும் திரும்பிப் பார்த்தபடி கேட்க...
“ம்.. ஆமா சண்மு.”
“ஓ.. சரிவிடு எதாவது பொறுக்கியா இருப்பான். ரோட் சைட் ரோமியோக்களுக்குப் பஞ்சமா என்ன? ஆமா ரோட் சைட் ரோமியோன்னு ஏன் பெயர் வந்தது?” தனது நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ம்.. ரோடு ரோடா பொறுக்குறதாலயா இருக்கும்.” கடுப்பாக பதிலளித்தாள் பூரணி.
“ஹான்! இருக்கும் இருக்கும்” என்றதில் பூரணி முகம் இன்னும் கடுப்பைக் காண்பிக்க, “சரி சரி விட்டுருறேன். நீ இப்படி அடிக்கடி முறைக்கிறது கடுப்பாகுறதுன்னு செய்.. உன் மூஞ்சிக்கு அதான் அழகாயிருக்கு” என்று வாய் கன்னம் தொடுமளவு இழுத்துப் புன்னகைக்க...
“அடங்கவே மாட்டடி நீ.”
“அடக்கதான் வீட்டுல ஆள் தேடிட்டிருக்காங்க. பேரம் படியலைன்றதால அடக்க வர்றவன்லாம் ஐயோன்னு ஓடிருறான்” என்று கண்சிமிட்டிக் கூறினாள்.
“ஹாஹா உன்மேல அவ்வளவு பயம்.”
“இருக்கலாம். நானோ கொஞ்சம் சுமார் மூஞ்சியா இருக்கேன். அழகும், வசதியும் இல்லைன்னா ஒரு பொண்ணோட நிலை? அதைவிட அவளைப் பெத்தவங்க நிலை? ப்ச்..” என சலிப்பாகச் சொல்ல,
“என்ன நிலை நிலைன்ற? அப்பவும் அதிக நகைபோட்டு நீதான் அவனைக் கட்டிக்கப்போற. அவன் கிடையாது. கலர் கம்மியா இருந்தா அழகில்லைன்னு யார் சொல்றது? கருப்புதான்டி அழகே. கருப்பாயிருந்தாலும் உனக்கிருக்கிற முகலட்சணம் யாருக்கு வரும். என்னையே பாரு உன்னோட கம்பேர் பண்ணினா, கலரைத் தாண்டி அழகுன்னா அது நீதான் சண்மு. என் சண்முவோட அழகைப் பார்த்து அடக்க ஒருத்தன் வராமலா இருப்பான்.”
“ம்க்கும் வந்துட்டாலும் போவியா!” என அலுத்துக்கொள்ள,
“அது எப்படிடா வராமல் இருப்பேன். முருகன் வள்ளியைத் தூக்கின மாதிரி, கூடிய சீக்கிரமே வந்து உன்னைத் தூக்குறேன்டா” என்ற குரலில் நடந்து கொண்டிருந்த தோழியர் இருவரும் சட்டென்று சிரித்தபடி திரும்பிப்பார்க்க, “அவன் உன்னைத் தூக்காமலிருந்தா போதும்டா தினா” என்றபடி இருசக்கர வாகனத்தில் இருவர் செல்ல அவர்களின் பின்பக்கம் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்தது.
“சண்மு டைமிங் டயலாக். சீக்கிரமே வந்து தூக்குறாப்லயாம்” என்று சண்முகியைச் சீண்டினாள்.
“ஆமாமாம் தூக்க விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறாங்க. வீட்டுக்குப் போயி வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி வா” என்ற சண்முகி பூரணியிடமிருந்து விடைபெற்று தன் வீடு நோக்கி நடந்தாள்.
“இவ்வளவு நேரம் கோவில்ல என்ன பண்ணிட்டிருந்த பூரணி? இப்படி ஆடி அசைந்து வந்தா வீட்டு வேலையை யார் பார்ப்பாங்க? அவசர அவசரமா பார்த்துட்டு கடைக்குப் போகணும்னு வேற நிற்ப” என்று அதட்டினார் தாய் மைதிலி.
“அம்மா எப்படியும் எந்நேரமானாலும் நான்தான. பார்க்கப்போறேன். நீங்க அங்கயிங்கன்னு நடமாடாம அமைதியா உட்காருங்க. ஆமா அப்பா எங்க?” என்றாள் அவர் வேறெதுவும் பேசுமுன்.
“கோழிப்பண்ணையில் இருக்காங்க. முட்டை எடுக்க ஆள் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். இப்ப வந்திருவாங்க. அதுக்குள்ள நீ சமையலை முடி.” சாய்ந்து நடக்கும் தன் பாதங்களை மெல்ல நகர்த்தி சுவற்றைப் பிடித்தபடி ஹாலிற்கு சென்று தரையில் அமர்ந்தார்.
அடுத்த முக்கால்மணி நேரத்திற்கெல்லாம் சமையலை முடித்துத் தனக்கு காலைக்கும் மதியத்திற்குமான உணவை டிபன் பாக்ஸில் அடைத்து, சைக்கிள் சாவியையும், கடைச் சாவியையும் எடுத்து வெளியே வர, “என்ன பூரணி கிளம்பிட்டியா? நான் சொன்ன விஷயம் என்னாச்சி? நானே வந்துதான் கேட்கணுமா? நீயா சொன்னா குறைஞ்சி போயிருவியா?” கேள்விகளை அடுக்கியபடி வந்தாள் பூரணியின் அக்கா ஜனனி.
காலையிலேயே தாய் வீட்டில் விடச்சொல்லி கணவனை இழுத்து வந்து, அவனை வீட்டினுள் நுழையவிடாமல் அனுப்பியும்விட்டாள்.
“நீ என்ன சொன்னன்றதே எனக்கு ஞாபகமில்லைக்கா. நைட் வரை காத்திருந்து சொல்ல முடியும்னா சொல்லு. இல்லையா இதோட விட்டுரு” என்று சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டாள்.
“சொந்த சம்பாத்தியம்ன்றதால ரொம்பதான் ஆடுறா உங்க சின்னப்பொண்ணு.” தாயிடம் தன் கோபத்தைக் கொட்டி, “சமையல் முடிச்சிட்டாளா? பசிக்குதும்மா” என சாப்பிடவே வந்தாற்போல் கிச்சனுக்குள் சென்றாள்.
சைக்கிளில் சென்றவளுக்கோ தன் குடும்பப் பிரச்சனைகளுடன் காலையில் பார்த்த சில வேண்டாத முகங்கள் கோபத்தைக் கொடுத்தது. ‘அந்தக் குடும்பம் இங்க எப்படி? ஒரு பெண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு குடும்பமே நிம்மதியாயிருக்கு. ஜெயில்ல களி திங்க வேண்டிய கேஸ்ங்க எல்லாம் கடவுளைத் தேடி வந்திருக்கு. கடவுளே இன்னுமே அவங்களுக்கு ஆசீர்வாதம் செய். இன்னுமின்னும் அடுத்தவங்களைக் கெடுக்கட்டும்.’
மனதிற்குள் புலம்பியபடி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்கள் கடைக்கு வந்து சைக்கிளை ஓரங்கட்டி, பூட்டைத் திறந்து ஷட்டரைத் தூக்க, அந்நேரம் சண்முகி வந்து உதவி செய்ய முதலில் கடையைப் பெருக்கி சுத்தம் செய்து சாமிக்கு அகர்பத்தி காண்பித்து வணங்கி அமர்ந்தார்கள்.
‘பி.எஸ் மருந்தகம்!’ தொள்ளாயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் அது. அருகே பிரபல ரோஜா மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைக்கும் மருந்தகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால், இருவருக்குமிடையே வியாபார ரீதியான தொடர்புண்டு. மருத்துவமனை பில்கள் எல்லாம் வருவது பி.எஸ் மருந்தகத்திற்கே!
இன்னொரு தொடர்பு மருத்துவமனையும், மருந்தகமும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பூரணியும் சண்முகியும் டி.பார்ம் முடித்த கையோடு அரசு வேலைக்கு முயற்சித்தபடி, ஒரு தனியார் மருத்துவமனையிலுள்ள மெடிக்கலில் சண்முகியின் அப்பா சண்முக சுந்தரத்திற்குத் தெரிந்தவர் மூலம் சிபாரிசு பிடித்து சேர்ந்திருந்தார்கள். சிலபல சோதனை நிறைய யோசனைக்குப் பின்னர் இருவரின் முதல் எழுத்திலும் ஆரம்பித்ததுதான் பி.எஸ் மருந்தகம்.
ஒருசில நேரத்தைத் தவிர மற்றைய நேரங்கள் யாவும் சுழலும் பம்பரங்கள்தான் அவர்கள். இரவு பத்துப் பதினோரு மணிவரை மருந்தகத்திலேயே நேரம் போய்விடும். இடையில் பூரணி சென்று சமையல் செய்து திரும்பவும் மருந்தகம் வர என வேலைப்பழு அதிகமானதால், சமீபமாகத்தான் வினோத் என்ற பையனைச் சேர்த்திருக்கிறார்கள்.
அதுவும் மாலை ஆறுமணி முதல் இரவு பதினோரு மணி வரை மட்டுமே அவன் இருப்பான். தனியார் மருத்துவமனை ஒன்றில் இதே வேலையில் வினோத் இருப்பதால் இந்த நேரமாற்றம். அதன்பின் கடையை மூடி பூரணி வீட்டில் சாவி கொடுத்ததோடு அவன் வேலை முடிந்துவிடும். தேவைப்பட்டால் அங்கு விடுமுறை விட்டு இங்கு வருவான். அங்கு விடுமுறையெனில் பகலிலும் இங்கே வருவது அவனின் வழக்கம்.
பூரணி, சண்முகி இருவரும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு செல்வதாக ஏற்பாடு. அதிக வேலை நாளில் பூரணி உடனிருந்து சண்முகியை வீட்டிற்கு அனுப்பிவிடுவாள். இதோ காலை ஒன்பது மணிக்கெல்லாம் மருத்துவமனையும், மருந்தகமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது.
“என்னடா பொண்ணு பிடிச்சிருந்ததா? பக்கத்துல வச்சிப் பார்க்க பொண்ணோட அப்பா அனுமதிக்கலை. இல்லைன்னா வீட்டுக்கே போய் நிதானமாப் பார்த்துட்டு வந்திருக்கலாம். இப்ப தேவையில்லாம இருபது கிலோமீட்டர் தள்ளி உள்ள கோவிலுக்கு வரவழைச்சிட்டாங்க. இதுல அப்பாவுக்குத் தூரத்து சொந்தமாம்” என அங்கலாய்த்து, “உனக்கு சம்மதம்னா சொல்லுவியாம். மேற்கொண்டு பேசலாம்னு அம்மா சொல்றாங்க?” என்று தங்களை அலைய வைத்ததற்கு தம்பியிடம் பாய்ந்தான் சுவீகரன்.
“ஏன்? தம்பிக்காக ஒருநாள் அலைய மாட்டியா? அவ்வ்வளவு டைட் பிசினஸ்மேனோ?”
“டைட்டோ, லூஸோ நீ என்ன சொல்ற?” என நிற்க,
“நான் பார்த்த பெண்ணை பிடிச்சிருந்தது” என்று சற்று அழுத்தமாகச் சொன்னான் வசீகரன்.
“நிஜமாவாடா? ஷப்பா!” என ஆசுவாச மூச்சுவிட்டு, “அம்மா என் வேலை முடிஞ்சது. உங்க சின்னப் பையனுக்கு சம்மதமாம்.” அடுப்படியிலிருந்த தாய்க்குக் கேட்கவென்று கத்தி சொன்னான்.
வேகமாக உள்ளிருந்து ஹால் வந்த ஆனந்தி, “எப்படான்னு காத்துக்கிட்டிருக்கேன். கரன் அப்பாவைக் கூப்பிடு. நாளைக்குப் பொண்ணு வீட்டுல போய்ப் பேசிட்டு வர்றோம்” என்றார்.
“வசீ இன்னைக்குப் பார்த்த பெண்ணை நிஜமாவே பிடிச்சிருக்கா?” சுவீகரனின் மனைவி ஐஸ்வர்யா கேட்க,
“நிஜமாவே நான் பார்த்த பெண்ணைப் பிடிச்சிருக்கு அண்ணி” என்றதில் ஐஸ்வர்யாவின் முகம் மாற, அதைக் கவனியாது தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவன் மனமெல்லாம் இன்று பார்த்த பெண் மீதே!