Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சென்னை சிம்ஹன் பேலஸ்:
"கணவரிடம் போனில் பேசிக்கொண்டே லிப்டில் ஏறிய தேவி,கீழே இருக்கும் கார் பார்க்கிங்கில் வந்து இறங்க,அங்கே டிரைவரும் ரெடியாக இருந்தார்".
"பின்னர்,பின்பக்க கார் கதவை திறந்த தேவி உள்ளே உட்கார்ந்ததும், டிரைவர் வண்டியை வீட்டை நோக்கி ஓட்டினார்".
"ஓஓஓஓ வீட்டிற்கு கிளம்பிட்டியா டார்லிங்கென்று தனா கேட்க, ம்ம்,சரி நான் மெசேஜிற்கு வரேனென்று சொல்ல,வீட்டுக்கு போய் பேசுறேங்கனு அழைப்பை கட் பண்ணினார்".
"அரை மணி நேரம் பயணமோ,டிராபிக் காரணத்தால் மேலும் கால் மணி நேரம் அதிகமானது".இந்த மக்கள் எல்லாம் எங்கே தான் போய் தொலையறாங்கன்னு தெரியலை?.
எப்ப பார்த்தாலும் இந்த ட்ராபிக் உயிரை வாங்குதே என்று கோவமாக தேவி சொல்ல,ஏசியில் உட்கார்ந்திருக்கும் இந்த அம்மாவிற்கு கொடைச்சலா தான் இருக்குமென்று, டிரைவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
மேலும் பத்து நிமிடங்கள் சென்றே, பேலஸிற்குள் கார் வந்து நுழைந்தது.
ச்சூஊஊஊ என்று அலுத்துக்கொண்டு கதவை திறந்து இறங்கிய தேவி,வீட்டின் உள்ளே செல்லும் போதே,அங்கிருந்த வேலையாளிடம்,சுகர் இல்லாமல் ஒரு ஆப்பிள் ஜூஸென்று ஆர்டர் கொடுத்து விட்டு படியில் ஏறி,மேலே இருக்கு தனது அறைக்குள் சென்றார்.
"மாடியில் இருந்த தனது அறைக்கு வந்து,குளித்து முடித்து பிரஷ்ஷாகவும்,வேலையாள் வந்து கதவு தட்டவும் சரியாக இருந்தது".
வாங்க என்று சொன்னதும்,கதவைத் திறந்து கொண்டு கையில் ஜூஸோடு உள்ளே வந்தார்,தேவியின் ஆருயிர் தோழியும், வீட்டின் மேற்பார்வையாளருமான வசந்தி.
"தேவி ஜூஸ்,வா வசந்தி உட்காரு".
"இருக்கட்டும் தேவி,நீ முதலில் இந்த ஜூஸை குடினு தேவியிடம் நீட்டினார்".
"அதை வாங்கிக்கொண்டவர்,நீ இருக்கியேடி என்றபடியே குடித்து முடித்தவர்,உட்காரு வசந்தி".
"இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா?,அதான் உன் முகத்தை பார்த்தாலே நல்லா தெரியுதேனு வசந்தி சிரித்தார்".
"ஆமா வசந்தி,உள்ளுக்குள் இருக்கும் சந்தோஷம் தான் முகத்தில் தெரியுதுடி".
போயும் போயி ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவளா,என் வீட்டு மருமகள்?.
இங்குள்ள பணக்காரவங்கள் இந்த கோடீஸ்வரி விசாலாதேவிக்கு பொண்ணு கொடுக்க, நீ- நானென்று போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க, ".
"அப்படி இருக்கும் போதும்,ஒரு அன்னக்காவடியை போய் என் பையன் கல்யாணம் பண்ணியிருக்கானென்று நினைக்க, ரொம்ப கேவலமா இருக்கு வசந்தி".
"தேவி,இந்த விஷயம் வீராவுக்கு தெரியாமல் பார்த்துக்க வேண்டியது உன்னுடைய கடமையென்று வசந்தி சொல்ல,அவன் இங்கு வர வாய்ப்பே இல்லை".
" இந்தியா வந்தால் தானே,டைவர்ஸ் ஆனது பற்றி தெரியுமென்று, கர்வமாக சொன்னாள்".
"எப்படி சொல்ற தேவியென்று வசந்தி கேட்க,ஆமாடி அவன் கவனம் எல்லாம் இப்போதைக்கு புது பிராஞ்ச் ஓப்பன் பண்ணுவதிலும்,அவனோட தாத்தா பிசினஸிலும் தான் இருக்கு".
"அது நல்லா தெரிஞ்ச பிறகு தான், இதை நான் மூவ் பண்ணுனேன்டி".
"முதன் முதலில் அதை நான் பார்க்கும் போது,எனக்கு அப்படியே பச்சை மிளகாய் அரைச்சி உடம்பெல்லாம் பூசியது போல எரிஞ்சது தெரியுமா?".
"சரி இந்த விஷயத்தை இன்றோடு விட்டு விடுடி.அதான் அந்த பொண்ணுக்கும்,வீராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கோர்ட்டு முடிவு பண்ணிடுச்சு.பிறகு என்னடி, விட்டு தள்ளென்றார்.
"அய்யோ வசந்தி இந்த சந்தோஷத்தை தான் என்னால கொண்டாட முடியலைடி".
"இதை பற்றி யாருக்கும் தெரியாமல், டைவர்ஸ் வாங்க உன்னோட உதவி தான் பெருசா இருந்தது.
"இதுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் உனக்கு தகாது என்று தேவி சொல்ல,அடியேய்,நாம ரெண்டு பேரும் சின்ன வயசு தோழிங்கடி".
"உனக்கு செய்யாமல், வேற யாருக்கு செய்யப் போறேன்.பின்னர்,மேலும் சிறிது நேரம் இருவரும் பேசி விட்டு,கீழே வந்து மதிய உணவை சாப்பிட்டு முடித்தனர்".
"வசந்தி நம்ம ரெண்டு பேரும் வெளியில போலாமா?,அவரும் ஊர்ல இல்லை தானே?,எவ்வளவு நாளாவது நம்ம வெளியில போயினு தேவி சொல்ல,ம்ம் தாராளமாக போலாம்".
"எங்க போகலாம் என்று வசந்தி கேட்க,ம்ம் அப்போ நாம மகாபலிபுரம் போகலாமாடி,ஓகேடி என்றார் வசந்தி".
"பின்னர் இருவரும் சிறிது நிமிடத்தில் தயாராகி வெளியே இருக்கும் காரில் ஏற,டிரைவர் மகாபலிபுரம் நோக்கி காரை ஓட்டினார்".
பொள்ளாச்சி:
" நம்ப அன்பு,அடுத்த மாசம் சிங்கப்பூர்ல இருந்து மூன்று மாசம் லீவுக்கு வரான்மா".
" வயசும் 27 ஆகிடுச்சி".
" என்னதான் நான் தேனு பாலும் ஊற்றி வளர்த்தாலும்,அம்மாவா ஆக முடியாதே?,இந்த முறை அன்புக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பலான்னு,உன் மருமவன் சொல்லிட்டார்".
" நம்ப ஊட்ல பொண்ணு இருக்கும் போது,எதுக்கு வெளியே பாக்கணும்?, போய் அத்தை கிட்ட சொல்லிட்டு வாடினு அனுப்பி வச்சார்மானு தான் வந்த விஷயத்தை மலர் சொல்ல,ஆத்தா மீனாட்சி,உன்னை கும்புட்டதுக்கு,நீ கை விடலைம்மா என்றார் கண்ணம்மா பாட்டி".
"பின்னர்,ஏத்தா மலரு,நெசமா நீ உண்மைய தான் சொல்லுறியா?என்று கண்ணம்மா பாட்டி நம்பிக்கையில்லாமல் கேட்க,அய்யோ அம்மா,நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்ல போறேன்".
"அன்பு என்ன தான் என்னுடைய நாத்தனார் பிள்ளையா இருந்தாலும், பெத்த புள்ளையா தான் நான் வளர்த்தேன்".
"அவன் ரெண்டு வயசு குழந்தையா இருக்கும் போது,என் நாத்தனார் இறந்து போனாங்க.அதிலிருந்து ஆத்தா-அப்பனா இருந்து நானும் அவரும் தானமா வளர்த்தோம்".
"எந்த கெட்ட பழக்கமும் அன்புக்கு கிடையாது.ஐடிஐ படிச்சான். வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைத்தது".
"கடன் வாங்கி அனுப்பி வச்சோம்.அந்த கடனையும் அடைச்சான்.நல்லபடியா வீட்டை கட்டி, இன்னைக்கு சந்தோசமா இருக்கிறோம்மா".
"அந்த பிள்ளைக்கு,ஒரு கல்யாணம் காட்சி செய்து பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதாம்மா?.
"யாரோ ஒருத்தி வந்து,நம்ப வீட்டில் வாழுறதுக்கு,நம்ம தங்கச்சி பொண்ணு வந்தால்,காலத்துக்கும் நல்லா இருக்குமென்று எனக்கும் மனசுக்குள்ள தோணிச்சி".
"இத நான் சொன்னா அவர் பேராசைல சொல்றேன்னு நினைப்பாரு.அதனால் தான் நான் அமைதியா இருக்க,அவர் வாயாலே இந்த வார்த்தை வந்துச்சுமா".
"சொன்னது போதுன்னு நான் உடனே கிளம்பி வந்துட்டேன் என்று மலர் சொல்லி முடிக்க,சரித்தா, சரித்தா.ரொம்ப சந்தோஷம்".
"சரி வா நம்ம உடனே போயிட்டு அங்க ராக்கம்மா கிட்ட சொல்லலாம் என்று கண்ணம்மா பாட்டி எந்திரிக்க,பின்னர் மலரும் எழுந்து கொள்ள,இருவரும் வெளியே வந்தவர்கள்,வாசல் கதவை சாத்தி விட்டு,பத்து வீடு தள்ளி இருக்கும்,ஜனனியின் வீட்டை நோக்கி இருவரும் சென்றனர்".
"போகும் வழியில் சிலர் மலரை பார்த்தவர்கள் வா மலரு,எப்ப வந்த?,நல்லா இருக்கியா?புள்ள குட்டி சௌக்கியமா?என்று விசாரிக்க,மலரும் அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு,நலம் விசாரித்துக் கொண்டே சென்றனர்".
"இருவரும் ஜனனி வீட்டிற்கு வர, அங்கு திண்ணையில் உட்கார்ந்திருந்த மாரியப்பன் இருவரையும் பார்த்தவர்,அண்ணி வாங்க,வாங்க எப்ப வந்தீங்க?என்று விசாரித்தார்".
"இப்ப தாங்க வந்தேன்.
நல்லா இருக்கீங்களா?,என்னங்க கொழுந்தனாரே,கையில அடிபட்டுருக்கு,ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை என்று மலர் வருத்தமாக கேட்க, சின்ன அடி தாங்கண்ணி".
"அப்புறம் அண்ணி,வீட்டில் அண்ணன்,பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?".
"எல்லாரும் நல்லா இருக்காங்க கொழுந்தனாரே.நீங்க,அத்தை, ஜனனி மூணு பேரும் எப்படி இருக்கீங்க?.
இருக்கோம்ணி.ஜனனி நம்ப பெரிய வீட்டுக்கு கணக்கெழுத போயிருக்கு என்று சொல்ல,அப்படியாங்க, பன்னிரெண்டாவது படிக்கும் போது பார்த்தது.
ஆளு நல்லா வளந்துருப்பாள் தானே,ஆமா ஆமா உங்க தங்கச்சி போல மகளும் இருக்கு,மல்லிகா உசுரோட இருந்தால் வருவீங்க.தங்கச்சி இல்லையென்றதும், வரமாட்டீங்கிறீங்களே.
"அய்யோ கொழுந்தனாரே, அப்படிலாம் எதுவும் இல்லைங்க, வேணிய கட்டி குடுத்தது,அடுத்து புள்ள பேறு,வீடு கட்டுனதுனு,வேலைகள் இருந்ததால் இந்த பக்கம் வர முடியலைங்க".
"என் தங்கச்சி உசுரோட இல்லைணு, நான் நினைக்கலைங்க.முதல்ல எனக்கு இது மாமன் வீடுங்க,பிறகு தான்,என் தங்கச்சி வாழ வந்த வீடென்று சொல்லியவர்,தனது சித்தி மகளான மல்லிகாவை நினைத்து கண் கலங்கினார்".
"நடந்து முடிஞ்சத பேசி என்ன ஆகப்போகுதென்ற மாரியப்பான்,அம்மா அம்மா என்று குரல் கொடுத்தார்".
தோட்டத்தில் இருந்த ராக்கமா பாட்டியோ மகன் சத்தம் கேட்டு,இதோ வரேன் தம்பினு சொல்லிக் கொண்டே வந்தவர்,அங்கிருந்து மலரை பார்த்து, ஏத்தா மலரு,வாத்தா எப்ப வந்த?.
"நல்லா இருக்கியா?,பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?".
"எல்லாரும் நல்லா இருக்காங்கத்தை.நீங்க நல்லா இருக்கீங்களா?,எனக்கு என்னத்தா".
"உன் மவள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிறாள்.அவளை ஒருவன் கையில புடிச்சி குடுத்துட்டால், நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்".
ஏங்கத்தை இப்படி பேசுறீங்க என்றவர்,ஒரு நல்லா விஷயமாக தான் பேசிட்டு போலானு வந்திருக்கிறேன் என்று மலர் சொல்ல,என்னத்தா சொல்லுற என்று கேட்கும் போது,மூலையில் பல்லி சத்தம் போடும் சகுனம் கேட்டது.
நல்ல சகுனமா இருக்குத்தா. விஷயத்தை சொல்லு என்று,அந்த திண்ணையிலே ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டு ராக்கம்மா பாட்டி கேட்க,அன்புக்காக பொண்ணு கேட்டு வந்ததை பற்றி சொன்னார்.
ஆத்தா மகமாயி,என் பேத்திக்கு ஒரு நல்ல வழியை காட்டினியே தாயே என்று,கிழக்கே பார்த்து கையை எடுத்து கும்பிட்டார் ராக்கம்மா பாட்டி.
யார் வீட்டுக்கோ மருமகளா போறதுக்கு,உன் தங்கச்சி மவள் உன் வீட்டுக்கே மருமகளா வருவது எனக்கு ரொம்ப திருப்தி தான் ஆத்தா என்று சொல்லிய ராக்கம்மா பாட்டி,தம்பி மாரியப்பா நீ என்னப்பா சொல்லுற என்று மகனிடம் கேட்டார்.
நான் என்னம்மா சொல்லுறது, உங்களுக்கெல்லாம் புடிச்சிருந்தால், தாராளமா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.
பொம்பள புள்ளைய வீட்டுல வச்சிக்கிட்டு இருக்கிறது,வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு சமம் தான் என்றவர், ஆத்தாக்காரி இருந்திருந்தால், இதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாள் என்று சொல்லியவாறு மாரியப்பன் கண் கலங்கினார்.
"ஏங்க கொழுந்தனாரே,பெத்த ஆத்தா தான் இல்லை.பெரிய ஆத்தா இன்னும் உசுரோட தானே இருக்கிறேன் என்று கோவமாக மலர் சொல்ல,ஐயோ அண்ணி,தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க".
"அந்த நேரம் பார்த்து ஜனனியும் வீட்டுக்கு வந்தவள்,திண்ணையில் உட்கார்ந்திருந்தவரை பார்த்து விட்டு, பெரியம்மா என வேகமாய் வந்து மலரை கட்டிக் கொண்டாள்".
"அம்மாடி ஜனனி,நல்லா இருக்கியாடா கண்ணு என்று,தங்கை மகளை கிள்ளி முத்தம் கொடுத்தவருக்கு,நல்லா இருக்கேன்மா.நீங்க எப்படி இருக்கீங்க?,அக்கா,தம்பி பெரியப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா.
எல்லாரும் நல்லா இருக்காங்கடா.உன் அக்காக்காரி தான் குழந்தையோட லோல் பட்டுக்கிட்டு இருக்குறாளாம்.
நகரும் புள்ள இல்லையா,எதாவது எடுத்து வாய்ல வைக்கவும்,உன் மாமா பார்த்துட்டு சத்தம் போடுறாங்கனு, தினமும் புகார் சொல்லவே உன் அக்காகாரிக்கு நேரம் சரியா இருக்கென்று சிரித்தார்.
"கணவரிடம் போனில் பேசிக்கொண்டே லிப்டில் ஏறிய தேவி,கீழே இருக்கும் கார் பார்க்கிங்கில் வந்து இறங்க,அங்கே டிரைவரும் ரெடியாக இருந்தார்".
"பின்னர்,பின்பக்க கார் கதவை திறந்த தேவி உள்ளே உட்கார்ந்ததும், டிரைவர் வண்டியை வீட்டை நோக்கி ஓட்டினார்".
"ஓஓஓஓ வீட்டிற்கு கிளம்பிட்டியா டார்லிங்கென்று தனா கேட்க, ம்ம்,சரி நான் மெசேஜிற்கு வரேனென்று சொல்ல,வீட்டுக்கு போய் பேசுறேங்கனு அழைப்பை கட் பண்ணினார்".
"அரை மணி நேரம் பயணமோ,டிராபிக் காரணத்தால் மேலும் கால் மணி நேரம் அதிகமானது".இந்த மக்கள் எல்லாம் எங்கே தான் போய் தொலையறாங்கன்னு தெரியலை?.
எப்ப பார்த்தாலும் இந்த ட்ராபிக் உயிரை வாங்குதே என்று கோவமாக தேவி சொல்ல,ஏசியில் உட்கார்ந்திருக்கும் இந்த அம்மாவிற்கு கொடைச்சலா தான் இருக்குமென்று, டிரைவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
மேலும் பத்து நிமிடங்கள் சென்றே, பேலஸிற்குள் கார் வந்து நுழைந்தது.
ச்சூஊஊஊ என்று அலுத்துக்கொண்டு கதவை திறந்து இறங்கிய தேவி,வீட்டின் உள்ளே செல்லும் போதே,அங்கிருந்த வேலையாளிடம்,சுகர் இல்லாமல் ஒரு ஆப்பிள் ஜூஸென்று ஆர்டர் கொடுத்து விட்டு படியில் ஏறி,மேலே இருக்கு தனது அறைக்குள் சென்றார்.
"மாடியில் இருந்த தனது அறைக்கு வந்து,குளித்து முடித்து பிரஷ்ஷாகவும்,வேலையாள் வந்து கதவு தட்டவும் சரியாக இருந்தது".
வாங்க என்று சொன்னதும்,கதவைத் திறந்து கொண்டு கையில் ஜூஸோடு உள்ளே வந்தார்,தேவியின் ஆருயிர் தோழியும், வீட்டின் மேற்பார்வையாளருமான வசந்தி.
"தேவி ஜூஸ்,வா வசந்தி உட்காரு".
"இருக்கட்டும் தேவி,நீ முதலில் இந்த ஜூஸை குடினு தேவியிடம் நீட்டினார்".
"அதை வாங்கிக்கொண்டவர்,நீ இருக்கியேடி என்றபடியே குடித்து முடித்தவர்,உட்காரு வசந்தி".
"இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா?,அதான் உன் முகத்தை பார்த்தாலே நல்லா தெரியுதேனு வசந்தி சிரித்தார்".
"ஆமா வசந்தி,உள்ளுக்குள் இருக்கும் சந்தோஷம் தான் முகத்தில் தெரியுதுடி".
போயும் போயி ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவளா,என் வீட்டு மருமகள்?.
இங்குள்ள பணக்காரவங்கள் இந்த கோடீஸ்வரி விசாலாதேவிக்கு பொண்ணு கொடுக்க, நீ- நானென்று போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க, ".
"அப்படி இருக்கும் போதும்,ஒரு அன்னக்காவடியை போய் என் பையன் கல்யாணம் பண்ணியிருக்கானென்று நினைக்க, ரொம்ப கேவலமா இருக்கு வசந்தி".
"தேவி,இந்த விஷயம் வீராவுக்கு தெரியாமல் பார்த்துக்க வேண்டியது உன்னுடைய கடமையென்று வசந்தி சொல்ல,அவன் இங்கு வர வாய்ப்பே இல்லை".
" இந்தியா வந்தால் தானே,டைவர்ஸ் ஆனது பற்றி தெரியுமென்று, கர்வமாக சொன்னாள்".
"எப்படி சொல்ற தேவியென்று வசந்தி கேட்க,ஆமாடி அவன் கவனம் எல்லாம் இப்போதைக்கு புது பிராஞ்ச் ஓப்பன் பண்ணுவதிலும்,அவனோட தாத்தா பிசினஸிலும் தான் இருக்கு".
"அது நல்லா தெரிஞ்ச பிறகு தான், இதை நான் மூவ் பண்ணுனேன்டி".
"முதன் முதலில் அதை நான் பார்க்கும் போது,எனக்கு அப்படியே பச்சை மிளகாய் அரைச்சி உடம்பெல்லாம் பூசியது போல எரிஞ்சது தெரியுமா?".
"சரி இந்த விஷயத்தை இன்றோடு விட்டு விடுடி.அதான் அந்த பொண்ணுக்கும்,வீராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கோர்ட்டு முடிவு பண்ணிடுச்சு.பிறகு என்னடி, விட்டு தள்ளென்றார்.
"அய்யோ வசந்தி இந்த சந்தோஷத்தை தான் என்னால கொண்டாட முடியலைடி".
"இதை பற்றி யாருக்கும் தெரியாமல், டைவர்ஸ் வாங்க உன்னோட உதவி தான் பெருசா இருந்தது.
"இதுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் உனக்கு தகாது என்று தேவி சொல்ல,அடியேய்,நாம ரெண்டு பேரும் சின்ன வயசு தோழிங்கடி".
"உனக்கு செய்யாமல், வேற யாருக்கு செய்யப் போறேன்.பின்னர்,மேலும் சிறிது நேரம் இருவரும் பேசி விட்டு,கீழே வந்து மதிய உணவை சாப்பிட்டு முடித்தனர்".
"வசந்தி நம்ம ரெண்டு பேரும் வெளியில போலாமா?,அவரும் ஊர்ல இல்லை தானே?,எவ்வளவு நாளாவது நம்ம வெளியில போயினு தேவி சொல்ல,ம்ம் தாராளமாக போலாம்".
"எங்க போகலாம் என்று வசந்தி கேட்க,ம்ம் அப்போ நாம மகாபலிபுரம் போகலாமாடி,ஓகேடி என்றார் வசந்தி".
"பின்னர் இருவரும் சிறிது நிமிடத்தில் தயாராகி வெளியே இருக்கும் காரில் ஏற,டிரைவர் மகாபலிபுரம் நோக்கி காரை ஓட்டினார்".
பொள்ளாச்சி:
" நம்ப அன்பு,அடுத்த மாசம் சிங்கப்பூர்ல இருந்து மூன்று மாசம் லீவுக்கு வரான்மா".
" வயசும் 27 ஆகிடுச்சி".
" என்னதான் நான் தேனு பாலும் ஊற்றி வளர்த்தாலும்,அம்மாவா ஆக முடியாதே?,இந்த முறை அன்புக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பலான்னு,உன் மருமவன் சொல்லிட்டார்".
" நம்ப ஊட்ல பொண்ணு இருக்கும் போது,எதுக்கு வெளியே பாக்கணும்?, போய் அத்தை கிட்ட சொல்லிட்டு வாடினு அனுப்பி வச்சார்மானு தான் வந்த விஷயத்தை மலர் சொல்ல,ஆத்தா மீனாட்சி,உன்னை கும்புட்டதுக்கு,நீ கை விடலைம்மா என்றார் கண்ணம்மா பாட்டி".
"பின்னர்,ஏத்தா மலரு,நெசமா நீ உண்மைய தான் சொல்லுறியா?என்று கண்ணம்மா பாட்டி நம்பிக்கையில்லாமல் கேட்க,அய்யோ அம்மா,நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்ல போறேன்".
"அன்பு என்ன தான் என்னுடைய நாத்தனார் பிள்ளையா இருந்தாலும், பெத்த புள்ளையா தான் நான் வளர்த்தேன்".
"அவன் ரெண்டு வயசு குழந்தையா இருக்கும் போது,என் நாத்தனார் இறந்து போனாங்க.அதிலிருந்து ஆத்தா-அப்பனா இருந்து நானும் அவரும் தானமா வளர்த்தோம்".
"எந்த கெட்ட பழக்கமும் அன்புக்கு கிடையாது.ஐடிஐ படிச்சான். வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைத்தது".
"கடன் வாங்கி அனுப்பி வச்சோம்.அந்த கடனையும் அடைச்சான்.நல்லபடியா வீட்டை கட்டி, இன்னைக்கு சந்தோசமா இருக்கிறோம்மா".
"அந்த பிள்ளைக்கு,ஒரு கல்யாணம் காட்சி செய்து பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதாம்மா?.
"யாரோ ஒருத்தி வந்து,நம்ப வீட்டில் வாழுறதுக்கு,நம்ம தங்கச்சி பொண்ணு வந்தால்,காலத்துக்கும் நல்லா இருக்குமென்று எனக்கும் மனசுக்குள்ள தோணிச்சி".
"இத நான் சொன்னா அவர் பேராசைல சொல்றேன்னு நினைப்பாரு.அதனால் தான் நான் அமைதியா இருக்க,அவர் வாயாலே இந்த வார்த்தை வந்துச்சுமா".
"சொன்னது போதுன்னு நான் உடனே கிளம்பி வந்துட்டேன் என்று மலர் சொல்லி முடிக்க,சரித்தா, சரித்தா.ரொம்ப சந்தோஷம்".
"சரி வா நம்ம உடனே போயிட்டு அங்க ராக்கம்மா கிட்ட சொல்லலாம் என்று கண்ணம்மா பாட்டி எந்திரிக்க,பின்னர் மலரும் எழுந்து கொள்ள,இருவரும் வெளியே வந்தவர்கள்,வாசல் கதவை சாத்தி விட்டு,பத்து வீடு தள்ளி இருக்கும்,ஜனனியின் வீட்டை நோக்கி இருவரும் சென்றனர்".
"போகும் வழியில் சிலர் மலரை பார்த்தவர்கள் வா மலரு,எப்ப வந்த?,நல்லா இருக்கியா?புள்ள குட்டி சௌக்கியமா?என்று விசாரிக்க,மலரும் அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு,நலம் விசாரித்துக் கொண்டே சென்றனர்".
"இருவரும் ஜனனி வீட்டிற்கு வர, அங்கு திண்ணையில் உட்கார்ந்திருந்த மாரியப்பன் இருவரையும் பார்த்தவர்,அண்ணி வாங்க,வாங்க எப்ப வந்தீங்க?என்று விசாரித்தார்".
"இப்ப தாங்க வந்தேன்.
நல்லா இருக்கீங்களா?,என்னங்க கொழுந்தனாரே,கையில அடிபட்டுருக்கு,ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை என்று மலர் வருத்தமாக கேட்க, சின்ன அடி தாங்கண்ணி".
"அப்புறம் அண்ணி,வீட்டில் அண்ணன்,பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?".
"எல்லாரும் நல்லா இருக்காங்க கொழுந்தனாரே.நீங்க,அத்தை, ஜனனி மூணு பேரும் எப்படி இருக்கீங்க?.
இருக்கோம்ணி.ஜனனி நம்ப பெரிய வீட்டுக்கு கணக்கெழுத போயிருக்கு என்று சொல்ல,அப்படியாங்க, பன்னிரெண்டாவது படிக்கும் போது பார்த்தது.
ஆளு நல்லா வளந்துருப்பாள் தானே,ஆமா ஆமா உங்க தங்கச்சி போல மகளும் இருக்கு,மல்லிகா உசுரோட இருந்தால் வருவீங்க.தங்கச்சி இல்லையென்றதும், வரமாட்டீங்கிறீங்களே.
"அய்யோ கொழுந்தனாரே, அப்படிலாம் எதுவும் இல்லைங்க, வேணிய கட்டி குடுத்தது,அடுத்து புள்ள பேறு,வீடு கட்டுனதுனு,வேலைகள் இருந்ததால் இந்த பக்கம் வர முடியலைங்க".
"என் தங்கச்சி உசுரோட இல்லைணு, நான் நினைக்கலைங்க.முதல்ல எனக்கு இது மாமன் வீடுங்க,பிறகு தான்,என் தங்கச்சி வாழ வந்த வீடென்று சொல்லியவர்,தனது சித்தி மகளான மல்லிகாவை நினைத்து கண் கலங்கினார்".
"நடந்து முடிஞ்சத பேசி என்ன ஆகப்போகுதென்ற மாரியப்பான்,அம்மா அம்மா என்று குரல் கொடுத்தார்".
தோட்டத்தில் இருந்த ராக்கமா பாட்டியோ மகன் சத்தம் கேட்டு,இதோ வரேன் தம்பினு சொல்லிக் கொண்டே வந்தவர்,அங்கிருந்து மலரை பார்த்து, ஏத்தா மலரு,வாத்தா எப்ப வந்த?.
"நல்லா இருக்கியா?,பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?".
"எல்லாரும் நல்லா இருக்காங்கத்தை.நீங்க நல்லா இருக்கீங்களா?,எனக்கு என்னத்தா".
"உன் மவள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிறாள்.அவளை ஒருவன் கையில புடிச்சி குடுத்துட்டால், நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்".
ஏங்கத்தை இப்படி பேசுறீங்க என்றவர்,ஒரு நல்லா விஷயமாக தான் பேசிட்டு போலானு வந்திருக்கிறேன் என்று மலர் சொல்ல,என்னத்தா சொல்லுற என்று கேட்கும் போது,மூலையில் பல்லி சத்தம் போடும் சகுனம் கேட்டது.
நல்ல சகுனமா இருக்குத்தா. விஷயத்தை சொல்லு என்று,அந்த திண்ணையிலே ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டு ராக்கம்மா பாட்டி கேட்க,அன்புக்காக பொண்ணு கேட்டு வந்ததை பற்றி சொன்னார்.
ஆத்தா மகமாயி,என் பேத்திக்கு ஒரு நல்ல வழியை காட்டினியே தாயே என்று,கிழக்கே பார்த்து கையை எடுத்து கும்பிட்டார் ராக்கம்மா பாட்டி.
யார் வீட்டுக்கோ மருமகளா போறதுக்கு,உன் தங்கச்சி மவள் உன் வீட்டுக்கே மருமகளா வருவது எனக்கு ரொம்ப திருப்தி தான் ஆத்தா என்று சொல்லிய ராக்கம்மா பாட்டி,தம்பி மாரியப்பா நீ என்னப்பா சொல்லுற என்று மகனிடம் கேட்டார்.
நான் என்னம்மா சொல்லுறது, உங்களுக்கெல்லாம் புடிச்சிருந்தால், தாராளமா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.
பொம்பள புள்ளைய வீட்டுல வச்சிக்கிட்டு இருக்கிறது,வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு சமம் தான் என்றவர், ஆத்தாக்காரி இருந்திருந்தால், இதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாள் என்று சொல்லியவாறு மாரியப்பன் கண் கலங்கினார்.
"ஏங்க கொழுந்தனாரே,பெத்த ஆத்தா தான் இல்லை.பெரிய ஆத்தா இன்னும் உசுரோட தானே இருக்கிறேன் என்று கோவமாக மலர் சொல்ல,ஐயோ அண்ணி,தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க".
"அந்த நேரம் பார்த்து ஜனனியும் வீட்டுக்கு வந்தவள்,திண்ணையில் உட்கார்ந்திருந்தவரை பார்த்து விட்டு, பெரியம்மா என வேகமாய் வந்து மலரை கட்டிக் கொண்டாள்".
"அம்மாடி ஜனனி,நல்லா இருக்கியாடா கண்ணு என்று,தங்கை மகளை கிள்ளி முத்தம் கொடுத்தவருக்கு,நல்லா இருக்கேன்மா.நீங்க எப்படி இருக்கீங்க?,அக்கா,தம்பி பெரியப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா.
எல்லாரும் நல்லா இருக்காங்கடா.உன் அக்காக்காரி தான் குழந்தையோட லோல் பட்டுக்கிட்டு இருக்குறாளாம்.
நகரும் புள்ள இல்லையா,எதாவது எடுத்து வாய்ல வைக்கவும்,உன் மாமா பார்த்துட்டு சத்தம் போடுறாங்கனு, தினமும் புகார் சொல்லவே உன் அக்காகாரிக்கு நேரம் சரியா இருக்கென்று சிரித்தார்.